Tag: பாஸ்கர்

  • வாட்சப்

    வாட்சப்

    பாஸ்கர்

    எல்லோரும் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
    யார் எவரென்று பலரும் அறிகிலர்.
    முகமேயில்லை இங்கு நட்பு மட்டுமே உண்டு.
    கடுகு எண்ணெய் மூட்டு வலி நிவாரணி என்பார் ஒருவர்.
    கற்பகம் காபி ஒரே கசடென்பார் அடுத்தவர் உடனே.
    காபி குடிக்காதவன் தனுஷ் பக்கம் ஞாயம் என்பான்.
    ஒரு வருஷம் போகாத கோவில் என்பார் மற்றொருவர்.
    பேத்தியின் படத்தைக் காட்டி இவள்தான் உலகமென்பார்.
    எல்லோரும் சந்தோஷத்தையே காட்டிக்கொள்கிறார்கள்.
    காலை இரண்டு மணிக்கே தூக்கம் தொலைக்கிறார்கள்.
    கேட்டால் கொசுத்தொல்லை என நழுவுகிறார்கள்.
    ஆதரவாய் அருகமர்த்தித் தோள்தொட்டு நாளாச்சு
    யாருமில்லை அருகினில், கண்கொண்டு பேச இங்கு.
    கடைசி வரை இயந்திரம் இயந்திரத்துடனே சினேகமிங்கு.

    Share
  • சங்கர மடம் போட்ட சோறு

    சங்கர மடம் போட்ட சோறு

    பாஸ்கர்

    அது சுமார் எழுபதுகளின் தொடக்கம். எங்கள் குடும்பத்தில் வறுமை நர்த்தனம் ஆடிய நேரம். என் தந்தைக்குச் சின்ன அரசாங்க வருமானம். முழி பிதுங்கி நின்ற நேரம். ஐந்து பேரைக் கொண்ட குடும்பம். சின்ன வாடகை வீடு. கடைசி வரை பரிதாபம் காட்டாத வீட்டுக்காரர். காலையில் என்ன உண்டு பள்ளிக்குச் சென்றேன் என்றே நினைவில்லை. ஆனால்  எனக்கு மதியச் சாப்பாடு பள்ளியில் தான். கொஞ்சநாள் மனம் கூசி உண்டேன். சின்ன வயது வேறு. அவமானம் பெரிதாகத் தெரியவில்லை.

    அறிவு வளரத் தன்மானம் முறுக்கேறும் போல். என்னை யாரும் இந்தச் சூழல்களுக்காக ஒதுக்கவில்லை. நல்ல மனிதர்கள் நடமாடிய அந்த மயிலாப்பூர் ஆபிரகாம் தெரு  குந்துமணி பங்களா எங்கள் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது. மாலையில் எங்கள் உணவகம் சங்கர மடம். அங்குக் கிடைக்கும் சோற்றுக்கு நான் பலமுறை நின்றதுண்டு. வீடு சொன்னது . நான் செய்தேன்.

    அப்படி ஒரு நாள் நான் மிகவும் பயந்த இரவு. ஏழு மணிதான் இருக்கும்.  இந்தியா  பாகிஸ்தான்  போர்  மூண்ட நேரம். ஊரடங்கு அமலில் இருந்த சமயம். செய்திகளில் சொன்னது போல், எல்லா விளக்குளும் அணைக்கப்பட்டு ஊரே இருள். அப்போது கலங்கரை விளக்கம் நீதிமன்றம் உள்ளே. அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. மிக வேகமாக ஒரு விமானம் மேலே செல்ல, நான் வாழ்வில் பயந்த நேரம் அது. நான் பயந்த அந்த இடம் சங்கர மடம். சித்திரைக் குளம் பக்கம்.

    இப்போதும் அந்த வழியாகச் செல்லும்போதெல்லாம் எனக்கு அந்த  வறுமை நாட்கள் உள்ளே புகும். உண்மையான வறியவன் எந்த உயர்விலும் தனது ஏழ்மையை மனசளவில்  விடமாட்டான் என்றே நினைக்கிறேன். வறுமை கொடியது என்பது ஒன்று. வளர்ந்த நிலையில்  ஒருவர் அதனை மறக்க முயல்வது அதனை விடக் கொடியது. மனத்தில் கர்வமும் திமிரும் ஓடும் போது அந்தச் சோற்றுக்காக வரிசையில் நின்ற நாட்கள் வந்து போகும்.

    இதைப் பதிவிட அவமானம், அசிங்கம் இல்லை. ஒரு வேளை, கஷ்டப்படும் மக்களுக்குச் சின்ன உபகாரமாவது செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் இங்கு தான் விதைந்து எழும்பி இருக்க கூடும். இந்த ஊரடங்கு இருட்டில் சில சமயம் இரவில் பயணிக்கும்போது அண்மையில் பல சமயம் இந்த விஷயம் நினைவுக்கு வந்தது.

    என் உடம்பில் ஓடும் உதிரம், கொஞ்சம் கொடுத்தது சங்கர மடம். அன்றைக்குச் சங்கராலயம்.

    சென்ற வாரம் நண்பர் ரமேஷ் என் இல்லம் வந்து என்னிடம், இது சங்கர மடம் பொங்கல், சாப்பிடுங்கோங்கோண்ணா என்று சொன்னார்.

    அவரின் அன்பு, நெகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து நினைவுகளில் தள்ள, இப்போது மனம் விம்முகிறது. வாழ்க்கையில் அழுகை பெரிய வரம். அதுவும் தனிமையில் அழும்போது மனம் சுத்தமாகிறது. என் வெப்பம் என்னை மேம்படுத்தட்டும்.

    Share
  • Faces of Mylapore – Alwar Kadai

    Faces of Mylapore – Alwar Kadai

    Baskar Seshadri

    Nammaalwar who reached Chennai at the age of thirteen in late Twenties never had even thought that this Chennai is going to give him his life for the hard work. He came from Vizhuppuram and settled down in Luz corner Junction and started doing the errand works around this area. It was tough to earn even a “Kaalanaa” and the life was too a Hardship and when he was struggling for the food he developed the habit of reading the books. This became his passion and he and any of us would not have even thought that only these books are going to be his real bread winner. By now you could have guessed our Alwar of Mylapore . He is jocularly called as Luz Azhwaar. Initially he had his pavement shop in front of the Old Murudis Hotel and probably as per the information received through various sources he was the first person to set up a shop In Luz corner. Many may not know that he was a small time actor featured mostly in Kalaignar’s Films. But he did not like the profession as he did not get any big opportunity and decided that his life to settle in books and Books alone .He started collecting all the old books from various houses which were about to be discarded and started his Sale of Books. Within a short span he collected plenty of books in various cartons and sacks which he decided to display on the road for a normal Fee.

    Azhwar now had set in and his Business grew slowly. He had faced severe hardship in maintaining the books since there is always a possibility of books being stolen. The roads were not lit with all such brightness Like now and it was only later after years Sodium Vapour Lamp came into being. Then it’s the rains which is a normal botheration since he could not afford to buy even a big Tarpaulin.

    But all changed when his name became big. Local Newspapers and few journals had done some stories and it elevated the name and fame of Alwar. It was Mary his wife who was very supportive all through the life and after all the struggle to attain the success with no formal education he breathed his last in 2018 and months later his wife also passed away.

    It’s now his daughters who are looking after the shop. They are bit worried about the Metro rail Project and they wonder how they could survive if that place is taken over. Julie his daughter recollects that everyone enquires about Ayya , Our Alwar . Such is the name he had gained here in the hearts of many people including political leaders and writers. Till his end Alwar never wore slippers and hardly he wore a shirt. He was Ninety five when he passed away. Azhwar is a brand and an Identity of Mylapore. Can we say He Ruled our Heart?

    Share
  • இன்னும் இருக்கிறது

    இன்னும் இருக்கிறது

    பாஸ்கர்

    இன்னும் இருக்கிறது இந்த வாழ்க்கை
    ஓட வேண்டிய தூரம் மேலும் உண்டு
    வசை பாட இன்னும் பலர் வரிசையில்
    பற்களை கடிக்க சந்தர்ப்பம் பல உண்டு
    தனித்து நின்று பேச வேண்டியதும் உண்டு
    பழிக்க வேண்டிய பட்டியல் பெரிதாய் போய் விட்டது
    அந்த காலத்தில் என புலம்பும் நேரம் அருகில் நிற்கிறது
    பெருசு என்றால் மரியாதை போய் கோபம் வருகிறது
    எதையும் மறுக்கவே பிறந்தது போலவே வாழ்க்கை
    சந்தேகங்கள் பெரிதாகி கேள்வியே மறந்து விட்டது
    ஆனாலும் என்ன, தூக்கமும் மயக்கமும் உடன் உண்டு
    இடையிடையே வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன்.
    மூச்சு விட மறக்காமல்.

    Share
  • Kamakshi Paatti

    Kamakshi Paatti

    Baskar Seshadri

    It was a wonderful Evening. It was too chill and i was almost near the Beach Front. But my Visit was not to be in the Seashore. It was a Visit and a meeting i have been longing for long Years and it happened few days back. Yes, it was a meeting with Kamakshi Paatti of Besant Nagar. People who live in adayar and Besant nagar Belt will surely know who she is.

    She is a fighter and stands first when it comes to a civic Issue. Stake holders of the Governments are all well aware how she is straight forward and strong in handling an issue. Whether it’s the Besant Nagar Karl Schmidt Memorial or a storm water drain erection she stands in the Forefront to talk to officials over phone and handles effectively to get the issue redressed. She was on High Praise of the top officials like Rajesh Lakhoni, Vijay Pingle, Bedi of GC , Iraiyanbu and few more.

    Years ago the officials of GCC were in a Process of axing few trees on Avenue road which was not called for. The purpose was enlarging the pavement. Since it was felt that Trees would be affected she went to the spot and protested against the act of the Officials. People realized her concern and the officials stopped the action immediately

    Sample one More – She found a Policeman near her House some time back sipping a tea and discarding the cup on the road. She went straight to him and told to take it and drop it in the Dust bin. And he did it immediately, it’s just because of not a civic sense alone but the boldness and the age matters too. She has a lot of stories to share as she has been doing for almost three decades since she came to Chennai from New Delhi. She says she loves to do what she is meant for. If i don’t act i will die. This was exactly what she told during the one hour tete e tete . When our society has little care of the environment and civic sense her courage and determination is a classic example of how a Social Activist should be. She was of a Great praise on Vincent D Souza of Mylapore Times and Sridhar Venkatraman of Mylapore.

    When i feel too tired to handle an issue i get dejected sooner but Kamakshi Patti is never tired and she is an energizer and a role model to everyone. Our salutes to Paatti, Atthai Pattti, Old Lady as being called by the officials and the residents of that area.

    Thanks to Sridhar Venkatraman to make her reach me and i was glad that i could make it make it to her after long months of Conversation.

    Thank you Paatti for the Lovely Hot coffee and Biscuits which added my energy further more after the meeting. And she was active, brisk to do everything on her own and was communicating perfectly with no Aid .

    You should believe this to see her and she is ninety Four Years Young.

    My Respects and Namaskaram to you. You are an asset to this Community and i Bow my head to what all you do to one and all around us.

    Share
  • ஏகாந்தம்

    ஏகாந்தம்

    பாஸ்கர்

    அதே இடத்தில் இன்றும் அமர்ந்திருக்கிறேன்
    தபால்காரர் உதட்டை சுழித்து ஏதுமில்லை என்கிறார்
    புறா ஒன்று வெறுமெனே அமர்ந்து இருக்கிறது
    சப்தம் போடாமல் இலைகள் விழுகின்றன
    கோவில் மணி சப்தம் அடங்கியும் எதிரொலிக்கிறது
    விமானத்தின் சப்தமும் அதிர்வும் அடங்கவில்லை
    சட்டென உதித்த நிசப்தம் கலவரம் செய்கிறது
    நான் மட்டுமே உயிருடன் எனும் நினைவே நிற்கிறது
    சுயமெதிரில் அமர்ந்திருக்க விழிப்பே பிரமிப்பாகிறது
    உறைந்த மனம் கடக்காமல் காலமே தள்ளி நிற்கிறது
    கண்களும் மனதும் விரிந்தே கிடக்கிறது மூலையில்
    ஏகாந்தம் இனிதெங்கே என்றும் இந்த வாழ்வினில்
    விழிப்பொன்றே நிஜம்- நிஜமே என்றும் விழிப்பு .
    கனிந்து போய் கிடந்து பாரும் -காலமே இல்லையங்கு.

    Share
  • பார்கின்சன்

    பார்கின்சன்

    பாஸ்கர்

    இப்போது இடுக்கு நினைவுகளைத் தேடவேண்டி உள்ளது
    மனமெங்கோ நிலை குத்திக்கொண்டிருக்கிறது
    யாரைப் பார்த்தாலும் சிரிக்க மட்டும் தெரிகிறது
    அந்த ஆரம்பமே சட்டென முடிவாகப் போகிறது
    எப்போதோ மெல்ல எழுந்து நிற்கிறேன்
    உடன் முடியாமல் உட்கார்ந்து கொள்கிறேன்
    பேசவே முனைப்பில்லை, எவரிடமும்
    ஏதோ வாசம் மட்டும் அவ்வப்போது வருகிறது
    மூளைக்கு வேலை கொடுக்க முனைவதில்லை
    விலகும் வேட்டி பிரக்ஞை மட்டும் போகவில்லை
    என்னைத் தாண்டி என் உலகம் எவருக்குமில்லை
    கயிறு கட்டிய காலைப் பார்த்துக்கொள்கிறேன்
    இன்னொரு காலில் பிணைக்கும் கயிறில்லை
    எதற்கும் எதிர்ப்பின்றி இருந்தபடி இருக்கிறேன்
    விழிகளில் எட்டிப் பார்க்கும் கண்ணீர் இதமாய் இருக்கிறது
    அந்த வெப்பத்தை வைத்துக் கண்களை மூடிக்கொள்கிறேன்
    எனக்கு இரவும் பகலும் ஒன்றே.

    Share
  • Safety Tips During the Seasonal Rains

    Safety Tips During the Seasonal Rains

    Baskar Seshadri 

    Please ensure dry hands before switching on any gadgets particularly Lights and Fans

    Please wear rubber slippers when you switch on Geysers.

    Avoid Ironing in the House during this period

    Inverter users have to restrict usage only to Lights as Power Disruption may get extended sometimes in some Areas as the reason is Regional Specific.

    Store Potable water

    Please avoid jogging and walking for few Days

    Let children wear Thick Dresses and socks if needed be.

    Please Ensure that rain water do not get stagnated on the Terrace.

    Frequently remove the water from the plant pots as it may lead to seepage at a later stage.

    Please stay in Touch With Family whenever and wherever you are since they may not be able to Get Connected with you.

    Pregnant Women – Please be careful and watch your Movements and be very slow in actions .Engage Assistance if needed be wherever you Move.

    Charge Mobile Regularly and if needed have a spare Battery.

    Keep candles and Matchsticks handy

    Rains are the boon for our life and plants. Let’s Welcome it now and always

    Share
  • ராமன் எத்தனை  ராமனடி

    ராமன் எத்தனை ராமனடி

    பாஸ்கர்

    அந்தக் காலத்தில் லாயிட்ஸ் சாலையில் வக்கீல் வீ பீ ராமன், பெரும்புகழ் பெற்றவர். எல்லா அரசியல் மற்றும் திரையுலகப் புள்ளிகள் அவரைச் சந்திக்க வருவார்கள். பெரும்பாலும் வழக்கு அல்லது அரசியல் அபிப்ராயம் பகிர்ந்துகொள்ள இந்தக் கூட்டம் சேரும். அந்தக் குடும்பமே சட்டத்தைக் கரைத்துக் குடித்த குடும்பம். எல்லாப் பெயரும் ஒரு ராமனில் முடியும். கல்யாணராமன் முதல் கிட்டத்தட்ட ஜானகிராமன் வரை.

    கண்ணதாசன் மேல் அப்போது பலர், பல வழக்குகளைத் தொடுத்த நேரம். கவிஞர் வந்து வீ பீ ஆரைப் பார்த்த பின் வெளியே வந்த வீட்டு வாசலில் உள்ள பெயர்ப் பலகைகளைப் படித்து, என்ன படித்த குடும்பம் எனச் சொல்லி, காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

    போன இடம் ஏ எல் எஸ் புரோடக்க்ஷன் அலுவலகம். அங்கிருந்து பாடல் இயற்றும் தளத்திற்குச் சென்றவர் (சாரதா படப்படிப்புத் தளம்) விசுவைப் பார்த்து என்ன சிச்சுவேஷன் என வினவ அவர், கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலம் என்றார். நிர்மலா பாடற சீன் அது என்றார்.

    கணேசு வராரா ஸீன்ல என வினவினார். அவர் தான் அண்ணன் என்றார் விசு.

    கவிஞர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட பாடல், ராமன் எத்தனை ராமனடி. படம். லக்ஷ்மி கல்யாணம். வெளி வந்த ஆண்டு 1968.

    Share
  • ஜெய் பீம் – ஒரு பாமரனின் பார்வையில்

    ஜெய் பீம் – ஒரு பாமரனின் பார்வையில்

    பாஸ்கர்

    சினிமா ஒரு விஷூவல் மீடியா என்ற விஷயம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த முறை இதைச் செய்தது ஜெய் பீம்.

    ஒரு திரைப்படத்தை எப்படி வடிவம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உத்தி இந்தப் படத்தில் அழகாக வெளிப்பட்டு இருக்கிறது. நலிந்தவர், ஏழை, படிப்பு இல்லை என்ற வேறுபாடுகள் ஒரு பக்கம். ஜாதி, வகுப்பு என்று இன்னொரு பக்கம். எல்லாவற்றிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி போன ஒரு வகுப்பினரின் கதை இது. எல்லாவற்றிற்கும் அடிப்படை, கோலோச்சும் அதிகார வர்க்கம், அரசு ஊழியர்கள், காவல் துறை, வன்மம் ஊறிப் போன மக்களின் வாழ்க்கைத் தரம் எனப் பட்டியல் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் காணாமல் போன நகைகளைக் கண்டுபிடிக்க முடியாமல், நலிந்த இருளர் மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு காவல் துறை ஒரு குடும்பத்தைச் சிதைய வைப்பது மூலக்கதை இதன் பின்னணி, அரசியல். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் இல்லை. காவல் துறை, ஏவல் துறை எனக் காலம் காலமாய் நடக்கும் ஒரு விஷயம் எனக் கடந்து போக முடியாது. அதன் வீர்யம், வன்மம் பல தலைமுறைகளுக்கு வலியைக் கொடுக்கும். இது உண்மைக் கதையா இல்லையா என்பது ஒரு பக்கம். ஆனால் நம் நாட்டில் இன்னும் நடந்துகொண்டு இருக்கிறது. அலங்காரமான காவல் நிலையத்தின் பின்னால் நடக்கும் பல அவலங்கள் நமக்குத் தெரியாது.

    விரைப்பான உடை அணிந்து ஒரு சல்யூட் அடிக்கும் அழகுக் காவலரின் முகம்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்த விரைப்புக்குப் பின் இருப்பது ஒரு பெரும் வெறுப்பு/வன்மச் சிந்தனை. இதைத்தான் ஜெய் பீம் சொல்கிறது.

    தனி மனித ஒழுக்கம், பிசகிவிட்ட வாழ்க்கை தான் இன்றைய நிலை என்றாகிவிட்டது. இது கலியுகம் எனச் சாக்குபோக்குச் சொல்லி நகர்ந்து போகலாம். அந்தச் சிந்தனையே சுயம் சார்ந்த ஒன்று தான். வழக்கறிஞராக வரும் சந்துரு அப்படி யோசிக்காமல், மக்கள் நலன், நீதி முக்கியம் என இறங்கிப் போராடுவதுதான் இந்த ஜெய் பீம்.

    சத்தியம் வெல்லும் என்று உரக்கச் சொல்லி இருக்கும் படம்.

    ஒவ்வொருவரின் நடிப்பும் மஹா அற்புதம் . அந்தக் கதாநாயகி, அவனது குடும்பத்தினர், சூர்யா, பிரகாஷ் ராஜ் என்ற பட்டாளம் இந்தப் படத்தை உச்சத்திற்குக் கொண்டு போய் உள்ளது.

    தவறுக்கு எதிராய்ப் போராடும் குணம், நேர்மை, இரக்க உணர்வு, அடுத்தவர்க்கு உதவி செய்யும் குணம், தட்டிக் கேட்கும் தைரியத்தை எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

    என்ன தான் பொய் சொல்லி, பித்தலாட்டம் செய்து உண்மைக்கு மாறாய் இருந்தால் கூட சத்தியம் முன் எதுவும் செல்லாது என்ற நீதி அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது .

    வசனம், ஒளிப்பதிவு, அந்த லைட்டிங் எப்பெக்ட். எடிட்டிங் உத்தி எனப் பல பரிமாணத்தில் இந்தப் படம் மிளிர்கிறது.

    இது தான் சினிமா. இப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்று உலகத்திற்குச் சொல்லி இருக்கிறது ஜெய் பீம்.

    சிங்கம் ஒன்னு, இரண்டு போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து இது போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். அவருக்குச் சமூக அக்கறை உள்ளது. நிறைய தான தர்மங்களைச் செய்பவர்.

    இந்தப் படத்தில் பாடல்களை அகற்றி, கருப்பு வெள்ளையில் சர்வதேச அளவில் திரை இடப்பட்டால் தமிழ் சினிமா பெரும் உச்சம் தொடும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, பாதிக்கப்பட்டோருக்குக் கடைசிப் பாதுகாப்பு நீதி மன்றங்கள் தான் எனச் சொல்லி இருப்பது மிக்க இதமான விஷயம். இந்த நம்பிக்கை மக்களுக்கு இருந்தால் அதுவே ஒரு வெற்றி தான்.

    இந்தத் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். எல்லாக் காவலர்களும், நீதிமான்களும் இதனைப் பார்க்க வேண்டும். இந்தத் திரைப்படம் நேர்மை, ஒழுக்கம், நியாயம் என்ற நல்ல சிந்தனை உள்ள வாழ்க்கை முறைமையைத் தொட்டு இருக்கிறது.

    இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் நாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு பாமரனின் பாராட்டு. வாழக ஜெய் பீம்.

    Share
  • மல்லீ

    மல்லீ

    பாஸ்கர்

    அந்தப் பூ விற்கும் பெண்மணியிடம் நேற்று வழக்கம் போல் சென்றேன் .

    கொஞ்சம் சாமந்தி கொடும்மா என்றேன்.

    பண்டிகை நாளுப்பா, விலை ஜாஸ்தி

    சரி , இருபது ரூபாய்க்கு எவ்வளவு வருமோ கொடு என்றேன்.

    கொஞ்சம் எடுத்துப் பையினுள் போட்டுக் கொடுத்தாள்.

    மல்லி வாங்கிக்கோ என்றார்கள் அந்த அம்மா.

    இல்லை. காசு கம்மியா இருக்கு. நாளைக்குப் பார்க்கலாம் என்றேன்.

    உன்னைக் காசா கேட்டேன். இந்தா எடுத்துண்டு போ என ஒரு முழம் கொடுத்தார்கள்.

    எனக்கு உங்கிட்ட இலவசமா வாங்கிக்கக் கஷ்டமா இருக்கு என்று ஜோபியை துழாவி, சில்லறையைக் கொடுத்தேன்.

    அவர்கள் அந்தச் சில்லறையை எண்ணிப் பார்க்க அவர்களிடம் காசு தான் வேணாம்னு சொன்னியே, இப்ப ஏன் எண்ணின்டு இருக்க எனக் கேட்டேன், தப்பாகக் கேட்டு விட்டோம் என்ற உறுத்தலை மீறி.

    பத்து ரூபாய்க்கு மேல இருந்தா உங்கிட்ட கொடுத்துடலாம்னு தான் எண்ணறேன் என்றாள்.

    நல்லவர்கள் ஏமாறக்கூடும். ஆனால் ஏமாற்ற மாட்டார்கள்.

    Share
  • Indira Gandhi

    Indira Gandhi

    Baskar Seshadri

    When I was working in a Private company in Nungambakkam our accountant came to me and expressed a news which was shocking and I was not too sure whether it was correct.

    It was in 1984 October and I had joined that company only in September. My work was to fetch coffee and go to bank and come to do sundry works for a meagre pay of Rs 275/pm. The matter is not about the Money or employment.

    This news is different and to confirm the news of the accountant I came out from the office Near josier Street in Nungambakkam and pedaled towards Gemini.

    The situation was chaotic and there were unrest here and there. There were fearful places allover and the news was confirmed that Indira Gandhi fell to the Bullets by her own security Guards on the fateful day of October 31. Had a strong opposition towards opposition since I was a serious reader of Thuglak and it remained for long the way till the death of Indira. She had done lots of Blunders from the days of Emergency and had done favoritism to many known people a typical approach any Powerful Politician could always do.

    The Allahabad Judgement came as a jolt and ended her Big Political aspiration and the Emergency was to scuttle the opposition. All had come to an end on that morning of October 30th When she was about to start her day in the palatial House of Prime Minister.

    Beant Singh with his accomplice shot her at the Point blank range and even before she could be rushed to AIIMS She was pronounced dead. The death was more of a shock since it was at PB Range. Finally she won all her opposition and enemies in and out with her death.

    It was a cowardice act, the world can never forget. She was a tall leader with grit quicky and Energetic throughout. But other attitudes took her to a fathom. The Blue star operation was all the basic fact for this end to come at an age of 67 . The trigger at Golden temple ended in a Trigger at her own residence.

    Her Bold decision to curb the violence ended in a tragedy when she lost her life. In fact she exercised her best powers after winning in 1980.  Violence is not in the weapon but in the of People who hold it

    Share
  • Please follow few tips for all our welfare

    Please follow few tips for all our welfare

    Baskar Seshadri

    Please avoid long hours of shopping

    Make Purchases Locally and avoid travel

    Spend not more than one Hour or so

    Go well with Mask and hold sanitizer on Hand

    Avoid Group shopping

    Avoid Joints if possible and Cool Drinks

    Make a quicky buy and rush back

    Avoid Public Transport

    Don’t stay long out.

    If Not vaccinated avoid outing

    Wear Gloves if you can

    Filter Visitors of all Kinds in Premises

    —————————————–

    Let’s Drive Covid Out soon

    Share
  • Let’s be safe

    Let’s be safe

    Baskar Seshadri

    Someone who called on my mobile yesterday used one of my Facebook Friend’s name and said he had wrongly transferred some money to my account and he wished to get it Refunded.

    I checked all these two days and found no such credit in my account.

    Since the money he said was big and my balance was low i did not attempt to transfer the fund or Gpay the same. Plus He was too friendly and well-mannered on Phone and made me believe that he was genuine. Since i am convalescing on some ailment i was too low and that had saved me in not being Proactive to send the money even a bit.

    How hard it today to earn a rupee and how coolly the conman are on the Prowl all over?

    Let’s be Safe

    Share
  • A Blind Alley Ahead?

    A Blind Alley Ahead?

    Seshadri Baskar

    ADMK which was started fifty years ago (17th October 1972) is starting the Golden Jubilee Year. It was a big storm when the Famed MGR Started this party and it almost brought a death knell to the DMK. Karunanidhi started his downfall almost after this and due to misrule and other factors DMK Got the Power back after several years. Jaya who took the mantle took it to a big stride and she developed the party to its peak even bettering MGR. But all came became Topsy Turvy after corruption and adamancy became the order of the day. Then comes to the massive corruption and Emergence of Sasikala as a power centre.

    The rest is known to all. Till last month the seizure of the properties and Benami assets of sasi had totally wiped out her amassed wealth but she still holds a say in the party. After almost ten years the party is now routed and with all the party squabbles and greed among the party members at top level had razed it to ashes.

    Now sasi is attempting to make an entry and cases on top echelon is hanging like a Damocles sword. Unless OPS and EPS Join hands with a real seriousness and cope up with Sasi there is no way they can emerge successful. If its not done ADMK May be wiped out well before the next elections. And going by the present happenings their emergence back is highly doubtful. Its end of the road of the ADMK almost. There is no one there for a soul searching at this stage in the party but their strong Volunteer base is amazing which if kept alive can help to kick back to life some time later.

    But who will bell the cat? Is there any one there is a million dollar Question. Its time they have to wake up from the slumber.

    Share