ராமன் எத்தனை ராமனடி

பாஸ்கர்

அந்தக் காலத்தில் லாயிட்ஸ் சாலையில் வக்கீல் வீ பீ ராமன், பெரும்புகழ் பெற்றவர். எல்லா அரசியல் மற்றும் திரையுலகப் புள்ளிகள் அவரைச் சந்திக்க வருவார்கள். பெரும்பாலும் வழக்கு அல்லது அரசியல் அபிப்ராயம் பகிர்ந்துகொள்ள இந்தக் கூட்டம் சேரும். அந்தக் குடும்பமே சட்டத்தைக் கரைத்துக் குடித்த குடும்பம். எல்லாப் பெயரும் ஒரு ராமனில் முடியும். கல்யாணராமன் முதல் கிட்டத்தட்ட ஜானகிராமன் வரை.

கண்ணதாசன் மேல் அப்போது பலர், பல வழக்குகளைத் தொடுத்த நேரம். கவிஞர் வந்து வீ பீ ஆரைப் பார்த்த பின் வெளியே வந்த வீட்டு வாசலில் உள்ள பெயர்ப் பலகைகளைப் படித்து, என்ன படித்த குடும்பம் எனச் சொல்லி, காரில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

போன இடம் ஏ எல் எஸ் புரோடக்க்ஷன் அலுவலகம். அங்கிருந்து பாடல் இயற்றும் தளத்திற்குச் சென்றவர் (சாரதா படப்படிப்புத் தளம்) விசுவைப் பார்த்து என்ன சிச்சுவேஷன் என வினவ அவர், கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் படலம் என்றார். நிர்மலா பாடற சீன் அது என்றார்.

கணேசு வராரா ஸீன்ல என வினவினார். அவர் தான் அண்ணன் என்றார் விசு.

கவிஞர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட பாடல், ராமன் எத்தனை ராமனடி. படம். லக்ஷ்மி கல்யாணம். வெளி வந்த ஆண்டு 1968.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *