Tag: கீதா மதிவாணன்

  • படக்கவிதைப் போட்டி – 223

    படக்கவிதைப் போட்டி – 223

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (09.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 217

    படக்கவிதைப் போட்டி – 217

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 177

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (169)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கண்ணீரும் புன்னகையும் – நூலறிமுகம்

    கீதா மதிவாணன்

     index

    தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் முகில் அவர்கள். ‘பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையைத் தேடித் தொகுப்பது என்பது பாலைவனத்தில் மினரல் வாட்டரைத் தேடி அலைவதற்கு சமம்’ என்ற வரிகளின் மூலம் இந்நூலாக்கத்துக்கான தன் சிரமங்களைத் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.

    முன்னுரையே நமக்கு சந்திரபாபுவைப் பற்றிய முன்னறிமுகத்தைத் தந்துவிடுகிறது. சந்திரபாபு பற்றிய இந்நூலைத் தொகுக்கும்போது தனக்கேற்பட்ட உணர்வுகளை இவ்வாறு விவரிக்கிறார் ஆசிரியர். “திங்கள்கிழமை கிடைக்கிற தகவல்களின்படி சந்திரபாபு ‘செம ஜாலி ஆளுப்பா’ என எண்ணத் தோன்றும். செவ்வாய்க்கிழமை ‘மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி’ என்று நினைப்பேன். புதன்கிழமை, யாரிடமாவது பேசிவிட்டு வரும்போது ‘அய்யோ பாவம் சந்திரபாபு’ எனப் பரிதாபப்படுவேன். வியாழக்கிழமை, வேறொரு நபருடன் பேசும்போது ‘ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்’ என்று மனம் நினைக்கும். வெள்ளிக்கிழமை, ‘அட, இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரே’ என்று வியப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிகைகள் எதையாவது புரட்டினால், ‘என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படிச் சொல்லுவாரு’ என்று தோன்றும். ஞாயிற்றுக்கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்துவைத்து யோசிக்கும்போது, நாயகன் ஸ்டைலில் ‘சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா? என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.”

    நூலாசிரியருக்கு ஏற்பட்ட அத்தனை உணர்வுகளும் வாசிக்கும் நமக்கும் உண்டாகும் வகையில் வெகு சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூலில். ஆசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். “சந்திரபாபு போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் வாழ்க்கை அடுத்த தலைமுறைகளுக்கும் பாடமாக இருக்கும் தகுதி பெற்றது”. வழிமொழியும் பதிப்பாசிரியரும் “இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் இவர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்தான், ஆகவே படியுங்கள்’ என்று பரிந்துரைக்கிறார்.

    உண்மைதான். சந்திரபாபுவின் வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் ஒரு பாடம்தான். எப்படி வாழவேண்டும் என்பது ஒருவகை பாடம் எனில் எப்படி வாழக்கூடாது என்பது இன்னொருவகையான பாடம்தானே.

    பிறப்பு வளர்ப்பு திருமணம் இறப்பு என்ற வரிசைக்கிரமப்படி அல்லாமல் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது என்பதே புத்தகத்தின் சுவாரசியம் கூட்டும் ஒரு விஷயம். முதல் அத்தியாயமே அவரது தற்கொலை முயற்சியில்தான் துவங்குகிறது. இவ்வுலக வாழ்வின் முடிவை நோக்கிய அவரது பயணமே அவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமாக அமைந்திருக்கிறது.

    சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மகனாய்ப் பிறந்து திரைத்துறையில் கால்பதிக்கத் துடித்த அந்தக் கலைஞனின் வாழ்க்கையில்தான் எவ்வளவு மேடுபள்ளங்கள்… திருப்பங்கள்… உப்பு சத்தியாக்கிரகம் செய்ததற்காக அவரது தந்தை சிறை சென்ற வேளையில் தீரர் சத்தியமூர்த்தியின் இல்லத்தில் விடப்பட்ட பதினொரு வயது பாபுவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாரிடம் விடப்பட்டது தெரியுமா? பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம்தாம்.

    நாற்பத்தாறு வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்ட மகத்தான கலைஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை புத்தகத்திலிருந்து இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

    நடிப்பின் மீதான மோகமும், கலையார்வமும், தொழில்பக்தியும், எதையும் தனித்துவத்துடன் செய்யவேண்டுமென்னும் தீராத ஆர்வமும் அவரை உச்ச நிலைக்குக் கொண்டுபோயின என்றால் குடிப்பழக்கமும், பெண்மோகமும், அதீத தற்பெருமையும், மற்றவர்களைப் பற்றி தன் மனத்தில் நினைப்பதை எல்லாம் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் தன்மையும் அவரை படு பாதாளத்தில் வீழ்த்தின. திருமண வாழ்வில் அவருக்கு உண்டான தோல்வியே அவரது தீவிர குடிப்பழக்கத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது திருமணவாழ்வு குறித்த செய்திகள் இதுவரை நான் கேள்விப்பட்டதிலிருந்து மாறுபட்டவையாக இருப்பதை இப்புத்தகம் வாயிலாகவே அறியமுடிந்தது.

     

    பேசும் படம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது…

    பெயர் – சந்திரபாபு

    செய்யும் தொழில் – நடிப்பது

    தெரிந்த வேறு தொழில் – செல்ஃப் ஷேவிங்

    என்னைப் பற்றி நான் கொண்டிருக்கும் எண்ணம் – உலகத்திலேயே வாழும் மிகப்பெரிய மனிதன் நான், நானேதான்.

    என்னைப் பற்றி எனக்கே உள்ள மாறான கருத்துகள் – நான் அழகின் அடிமை. அழகு என்னை வசியப்படுத்தி விடும். மற்றவர்கள் அழகை ரசிப்பதற்கும் நான் அழகை ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கற்பாறையை சிலையாக வடித்தால் பலர் ரசிப்பார்கள். நான் கற்பாறையையே ரசிப்பேன். மறைந்து கிடக்கும் இயற்கையின் அழகை நான் அதில் காண்பவன்.

    உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்கள் யார்? – என் வாழ்க்கையில் மூன்று பேரை நான் மறக்கமாட்டேன். ஆமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன், எனது மாமனார், ஜெமினி கணேசன் ஆகியோர்.

    (அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் விசித்திரம்.)

    நீங்கள் ஊரோடு ஒத்து வாழ்ந்தால் என்ன என்ற கேள்விக்கு இப்படி விடைதருகிறார்.

    ‘ஊரோடு ஒத்து வாழ். கேட்பதற்கு இனிமையாகதான் இருக்கிறது. என்னைவிட, அறிவில் குறைவானவர்களையே அதிக எண்ணிக்கையில் இங்கு நான் சந்திக்கிறேன். என் பார்வைக்கு அவர்கள் பைத்தியக்காரர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் பார்வைக்கு நான் பைத்தியக்காரனாகத் தெரிகிறேன். ஏதோ ஒரு சிலர்தான், அத்திப்பூவைப் போல் அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஓரளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?’

    1951 முதல் 1971 வரையிலான இருபது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையின் முன்னும் பின்னும் முரண்களின் மூட்டையாகிப் போனார் சந்திரபாபு. எப்படியெனில்.. விருந்தோம்பும் பண்பால் கலையுலகத்தையே அசரவைத்த அவர்தான் பின்னாளில் ஒரு பிரியாணிக்காக அலையாய் அலைந்திருக்கிறார். ராஜா அண்ணாமலைபுரத்தில் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு காரிலேயே போகும்படியாக ஒரு பங்களா கட்டிக்கொண்டிருந்த சந்திரபாபுதான், வாடகை தரவும் வழியில்லாமல் வீட்டை அமீனா வந்து காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

    சிவாஜி கணேசன், எம்ஜியார், ஜெமினி கணேசன், கண்ணதாசன் போன்ற பிரபலங்களுடன் நடிகர் சந்திரபாபு முரண்பட்ட தருணங்களை விவரிக்கும் அதே வேளை, பாலாஜி, தேங்காய் சீனிவாசன், எம் எஸ் விஸ்வநாதன் போன்றோருடன் அவருக்கிருந்த அந்நியோன்னிய நட்புறவையும் ஒருங்கே பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.

    எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பேசுகிறது இப்புத்தகம். ஜெயகாந்தன் சொல்கிறார், “பாபுவுக்கு இயற்கையாகவே நடிப்புத்திறமை, பாட்டுத்திறமை ஆகியவை எல்லோரும் விரும்பும் வகையில் அமைந்திருந்தன. அவற்றையெல்லாம் ஓர் ஊதாரியைப் போல் இந்த சினிமா உலகுக்கு வாரி இறைத்ததன் விளைவாக, அவருக்கு அதீதமான ஏற்றத்தையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்த சினிமா உலகமே கொண்டுவந்துவிடும் என்று நான் அஞ்சினேன். எனது அச்சத்தை உரிமையோடு பலமுறை அவரிடம் கூறினேன். மிகவும் உருக்கமான நேரங்களில் அவர் திடீரென்று சிரிப்பார். அதேபோல சில நேரங்களில் அழுவார். இப்படிக் கண்களில் கண்ணீர் வருகிற அதே மனிதன், சில சமயங்களில் சட்டைக் காலரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “I am Babu” என்று வல்லமை பேசுகிற காட்சி இன்னும் ரசமாக இருக்கும்.”

    ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சகோதரி என்ற திரைப்படத்தைப்போட்டுப் பார்த்த ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லையாம். படம் எடுபடாது என்று நினைத்த அவர் படத்தை ஓடவைக்க சந்திரபாபுவை அழைத்துப் பேசியிருக்கிறார். நல்ல காமெடியை பத்து நாட்களில் படமாக்கிப் படத்துடன் சேர்த்து ஒரு கோர்வையாக்கிக் கொடு என்றாராம் செட்டியார். சந்திரபாபு ஒருநாள் யோசித்து முடிவைச் சொன்னாராம். அவரது முடிவைக் கேட்ட செட்டியார் அசந்துபோய்விட்டாராம். அப்படி என்ன சொன்னார்?

    “ஏழு நாட்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கித் தருகிறேன். எனக்கு லட்ச ரூபாய் தாருங்கள்” என்றாராம். முதலில் மறுத்த செட்டியார் சந்திரபாபு மீது கொண்ட நம்பிக்கையால் பிறகு ஒத்துக்கொண்டாராம். அன்றைய நாட்களில் ஒரு முழுப்படத்துக்கே முன்னணி நடிகர்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு நகைச்சுவைக் காட்சிக்காக ஒரு லட்ச ரூபாய் வாங்கியது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதாம்.

    தமிழ் சினிமா உலகில் நடிப்பாகட்டும், பாடலாகட்டும், நடனமாகட்டும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற பலரும் அறிந்திராத உச்சத்தருணங்களையும் வீழ்ச்சித் தருணங்களையும் அற்புதமாய்ப் படம்பிடித்துக்காட்டும் புத்தகம் இது.

    நூலின் பெயர் – கண்ணீரும் புன்னகையும்

    நூலாசிரியர் – முகில் அவர்கள்

    பக்கங்கள் – 200

    விலை – ரூ. 125

    சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

    முதல் பதிப்பு டிசம்பர் 2012

    Share
  • “பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!

    கீதா மதிவாணன்.

    நாடறிந்த ஒரு நல்லவரைப் பற்றி என்ன எழுதுவது? என்ன எழுதாமல் இதுவரை விட்டுப்போயிருக்கிறது? காமராஜர் என்னும் கம்பீரத் தோற்றத்துள் அடங்கிக் கிடந்த எண்ணற்ற ஆளுமைகளுள் எதைப்பற்றிப் பேசுவது? பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்தம் புகழ்பாடும் நாவுகளிலிருந்து அன்னாரது தனிப்பட்ட குணநலன்கள் பற்றியும் அவருடைய தன்னிகரில்லா சேவையைப் பற்றியும் அறியமுடிகிறது. கட்சி பேதமற்று அனைவரும் அவர் ஆட்சியைப் போற்றுவதிலிருந்தே அம்மாமனிதரின் தீர்க்கமான அரசியல் வாழ்வைப் பற்றியும், ராஜதந்திர காய்நகர்த்தல்கள் பற்றியும் ஏராளமாய் அறியமுடிகிறது… இவற்றுள் எதைச்சொல்ல? எதை விட?

    வெற்றுப்பேச்சும் வீராப்பும், போலி அலங்கார வார்த்தை ஜாலங்களும் அறியாத வெள்ளந்தி மனிதர் அவர். ஓட்டுகளைக் குறிவைத்து மக்களை மடமையாக்கும் வஞ்சகம் அறியாத மக்கள் தலைவர். தான் படிக்காத போதும் தலைமுறைகளைப் படிக்கவைத்த மாபெரும் கல்விப் புரட்சியாளர். குலக்கல்வித்திட்டத்தை ஒழித்து குடும்பங்கள்தோறும் அறிவொளியை ஏற்றிவைத்த அன்பின் சுவாலை. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்றார் வள்ளுவர். அந்த சிறிதளவு உணவும் இல்லாமல் சோர்ந்துபோய்ச் சரியும் ஏழைக்குழந்தைகளுக்கு சோறு போட்டு நிமிர்த்திய தாயுள்ளம்.

    1903 ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் 15 ஆம் நாளில் தாங்கள் பெற்றெடுத்த தனயனுக்கு காமாட்சி என்று குலதெய்வத்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர் சிவகாமி அம்மாளும் குமாரசாமி அய்யாவும். பின்னாளில் நாடாளப்போகும் ஒரு உத்தமனைப் பெற்றிருக்கிறோம் என்று அந்த நாளில் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க, சிறுவனாயிருந்த காலத்திலிருந்தே நேர்மையும், ஒழுக்கமும், சமயோசிதமும், சகாயகுணமும், பொறுமையும், நிதானமும், துணிவும், தேசபக்தியும் போட்டி போட்டுக்கொண்டு காமாட்சியிடத்தில் நிறைந்திருந்தன.

    பேரனின்பால் பிரியமுள்ள பாட்டி, ‘காமாட்சி’ என்றழைக்க, தாய் ‘ராஜா’ என்றழைக்க, தந்தை ‘காமாட்சிராஜா’ என்றழைக்க… பின்னாளில் அனைவராலும் ‘காமராஜர்’ என்றழைக்கப்பட்டார். தந்தையோடு கல்வி போம் என்பது அவர்தம் வாழ்வில் உண்மையாகிப்போனது. காமராஜரின் தந்தை இறந்ததன் காரணமாக, குடும்பப்பொறுப்பை ஏற்கும் நிர்ப்பந்தம் அவரை ஆறாம் வகுப்போடு முடக்கியது. தாய்மாமன்மார் கடைகளில் வேலைபார்த்து குடும்பக் கடமையை ஆற்றினார். ஆனாலும் நாட்டுக்காற்ற வேண்டிய கடமை குறித்த எண்ணம் அவர் உள்ளத்துள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருந்தது.

    சுதந்திரப்போராட்டக்கனல் நாடெங்கும் தீவிரமாய் தன் அக்னிச்சுவாலையை வீசிக்கொண்டிருக்க, அதில் ஈர்க்கப்பட்டு களத்தில் இறங்கினார் வாலிப வயதிலிருந்த காமராஜர். இளமைக்கனவுகளில் ஈடுபடும் வயதில் அவர் இலட்சியக்கனவில் ஈடுபட்டிருந்தார். அரசியல் அவரது முழுநேரப் பணியாகிப் போனது. கள்ளுக்கடை மறியல், நாக்பூர் கொடிப் போராட்டம், வெள்ளையனின் சிலையகற்றுப் போராட்டம், சைமன் கமிஷனுக்கு எதிர்ப்புப் போராட்டம் என்று நாடு தழுவிய பல போராட்டங்களில் கலந்துகொண்டார். பலவற்றை முன்னின்று நடத்தினார். பலமுறை கைதுசெய்யப்பட்டார்.

    காமராஜர், தம் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்தார். இன்றைய அரசியல்வாதிகளின் சிறைவாசம் போல அன்றைய அரசியல்கைதிகளின் சிறைவாசம் அத்தனை சொகுசானதன்று. அப்படியிருந்தும் தண்டனைக்காலத்தைக் குறைத்துக்கொள்ள அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தன்னோடு கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையில் இருக்கையில் தான் மட்டும் வெளிவருவது அவர்களுக்கும் நாட்டுமக்களின் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம் என்றார்.

    பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்பார் பாரதி… ஆனால் காமராஜருக்கோ… பெற்ற தாயை விடவும் பிறந்த பொன்னாடே பெரிதெனத் தோன்றிற்று. அதனால்தான் தன் தாயை விட்டு விலகிவந்து தாய்நாடே கதியென்று கிடக்க அவரால் இயன்றிருக்கிறது. தாய்நாட்டின் மக்களின் உயர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் உயிரைக்கொடுத்துப் போராட முடிந்திருக்கிறது.

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என்னும் குறளை அவர் தாய் அறிந்திருப்பாரா, தெரியவில்லை. ஆனால் தன்னை வந்து காணவும், தன் கையால் ஒருவாய் சோறுண்ணவும் நேரமில்லாது, நாட்டுமக்களின் நலனையே தன் உயிர்மூச்சாய் எண்ணி இரவும் பகலும் பாடுபடும் மகனை எண்ணி நிச்சயம் பெருமைப்பட்டிருக்கும் அந்த தாயுள்ளம்.

    மயில் ஆடுவதைக் கண்டு அது குளிரால் நடுங்குகிறதென்று நினைத்து, அது கேளாமலேயே தன் போர்வையை வழங்கினானாம் வள்ளல் பேகன். ஆனால் உண்மையிலேயே குளிரால் நடுங்கிய காமராஜரின் தாய், ஒரு போர்வை தேவைப்பட்டபோது அதைக்கூட அவர் தன் மகனிடம் கெஞ்சிக் கேட்டுத்தான் பெறமுடிந்திருக்கிறது. இது என்ன பெரிய செய்தியா என்று யாரும் கேட்கலாம். அப்போது காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்தார் என்பதுதான் விசேடம். தான் மட்டுமல்லாது, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் எந்த சலுகையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு முதலமைச்சரின் தாயென்ற எண்ணம், அவருடைய தாய்க்கு ஒருநாளும் உண்டாகியிருக்க வாய்ப்பே இல்லை. பெற்றத் தாயையும் நாட்டிலுள்ள மற்றத் தாய்மார்களையும் ஒன்றாக மதித்தார். ஒன்றுபோலவே நடத்தினார். அவர்களுக்கில்லாத வசதியும் வாய்ப்பும் தன் தாய்க்கு மாத்திரம் தருவதை தேசத்துரோகமாகவே மனத்தில் எண்ணிய மகான் அவர். நாட்டுப் பிள்ளைகளையெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளாக எண்ணி மகிழ்ந்தார். அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு கல்வியென்னும் அடித்தளத்தை அமைக்க அயராது பாடுபட்டார்.

    அரசியலின் அடிப்படிக்கட்டில் கால்வைத்தவன் கூட அமோகமாய் சம்பாதிக்கும்போது ஒரு முதலமைச்சராய் இருந்தும் அவர் எந்த ஆடம்பரத்தையும் நாடவில்லை என்பது எவ்வளவு பெரிய செய்தி. அது மட்டுமா? ஒரு முதலமைச்சருக்கு முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனங்களைக் கூட மறுத்து, சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டவர் அந்த சீரிய மனிதர்.

    முதலமைச்சர் பதவி என்பதை நாட்டு மக்களுக்கு சேவைசெய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே எண்ணியவர் அவர். பதவிக்கும் பொருளுக்கும் புகழுக்கும் ஆசைப்படாத அவரது நெஞ்சம் ஏழை எளிய மக்களின் வளமான வாழ்வுக்காகவும் நாட்டின் நலனுக்காகவுமே பேராசைப்பட்டது. முதலமைச்சர் என்னும் பதவியைக் கொண்டு நாட்டை வளப்படுத்தும் பணியில் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். தேவை ஏற்பட்ட ஒருநாளில் அப்பதவியையும் துச்சமெனத் துறந்தார். முதலமைச்சராய் மட்டுமல்ல, பதவியில் இல்லாத ஒரு தொண்டனாகவும் பொதுமக்களுக்கு சேவை செய்யமுடியும் என்பதை செயலில் காட்டியவர். தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்த தார்மீகத் தலைவர் அவர்.

    தனிமனித வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி, கறை படியாத கரங்கள் காமராஜரின் கரங்கள்… தன்னிடம் இருப்பதையும் இல்லாதவர்க்கு தாரை வார்த்த செங்கரங்கள்… தன்னலம் பாராது, தனக்கென எதையும் ஒதுக்காது, பிறர்நலனே பெரிதென்று உழைத்தார்.

    பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஒதுங்கிச் செல்வதால்தானே பிரச்சனைகள் பூதாகரமாய் உருவெடுக்கின்றன. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் வண்ணம் தீர்வுகண்டுவிட்டால்? வாய்ச்சொல் வீரர்களாயிருப்பவர்களுக்கு மத்தியில் செயல்வீரராய்த் திகழ்ந்த காமராஜர் அதைத்தான் செய்தார். அதனால்தான் அவர்தம் அமைச்சர்களுக்கு சொன்னார், “பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுங்கள். “

    பகைவனுக்கருள்வாய் – நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்ற பாரதியின் வாக்கை மெய்யாக்கிய நன்னெஞ்சு காமராஜருடையது. கட்சியில் அவருக்கெதிராக செயல்பட்டவர்களையும் தன் அமைச்சரவையில் இருத்தி அழகுபார்த்த பரந்த உள்ளம் அவருடையது. தொண்டர்களை அடிமைகள் போலெண்ணி தங்கள் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் அரசியலில் அவர்களை உண்மையான பாசத்தோடும் அக்கறையோடும் அணைத்து செயல்பட்டவர் காமராஜர். தொண்டர்களின் தலைவரான அவர், தன்னுடைய பண்பாலும் நன்னடத்தையாலும் கட்சியின் தலைவரானார்… கடமையின்மீதான சிரத்தையாலும் சீரிய செயல்திறத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனத்தில் நிறைந்தார்… கட்சிபேதமற்று மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் தனிப்பெருந்தலைவரானார்.

    மனிதனை சிந்திக்கவைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை என்பது அவருடைய கருத்து. “கடவுள் இருக்கிறது, இல்லை என்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. செய்யும் காரியம் நல்ல காரியமாக இருந்தாலும் போதும். கோயில், சாமி என்று பணத்தை உண்டியலில் கொட்டுபவன், அந்தக் காசைக் கொண்டு சாலைவசதி செய்துதந்தால் என்ன? பள்ளிக்கூடம் கட்டினால் என்ன? மதம் மனிதனை பயமுறுத்தி வைத்திருக்கிறதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறதா?’ என்று கேள்விகளையெழுப்பி சிந்திக்கத் தூண்டுகிறார். அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கும் பிடித்தமான தலைவராகிப் போனார்.

    விடுதலை பத்திரிகையில் எழுதிய தலையங்கம் ஒன்றில் பெரியார், “காமராசரைப் போன்ற தன்னலமற்ற ஒருவரை அரசியலில் இனி நாம் காணவே முடியாது. காமராசர் தமிழர்களுக்குக் கிடைத்த நிதி போன்றவர். அவரது ஆட்சி தமிழகத்தில் மேலும் நீடிக்கவும் அவருடைய ஆட்சிக்கு இடையூறு எதுவும் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.” என்று எழுதியுள்ளார்.

    காமராஜரை தென்னாட்டு காந்தி என்பார்கள். ஆனால் காந்திக்கும் இவருக்கும்தான் எவ்வளவு வேறுபாடு. வளரும்போது கோணலாய் வளர்ந்து பின் தானே நிமிர்ந்து நேராகி நின்று கிளைவிட்டுத் தழைத்த மரம் அது. இதுவோ… முளை விட்ட நாளிலிருந்தே நெஞ்சுநிமிர்த்தி நெடுநெடுவென்று நேர்வழியில் வளர்ந்து நின்று செழித்த மரம். எளிமையும் நேர்மையும் அவரிரு கண்கள்… சீரிய சிந்தனையும் செயல்பாடும் அவரிரு கரங்கள்… மக்கள் நலனே அவரது நாடித்துடிப்பு.

    படிக்காதை மேதை என்று இவரைக் குறிப்பதும் சரியா என்று யோசித்துப் பார்க்கிறேன்… படிக்காதவர் என்று எதன் அடிப்படையில் சொல்லப்படுகிறார்? படிப்பு என்பது எதைக் குறிக்கிறது? பள்ளிப்படிப்பை மட்டும்தானா? வாழ்க்கைப் படிப்பைக் கற்றுத்தேர்ந்த வல்லான் அல்லவா அவர்? பள்ளிப்படிப்பை விட்டாலும் அன்றாடம் நூலகம் சென்று உலகநடப்பையும் நாட்டுநடப்பையும் வாசித்தறிந்துகொண்டாரே… உலகளவில் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகளைப் பற்றியும், தங்கள் நாட்டு விடுதலைக்காக போராடிய அயல்நாட்டுத் தலைவர்களைப் பற்றியும் படித்தறிந்தாரே… அவையெல்லாம் படிப்பு என்னும் வரையறைக்குள் வாராதா என்ன? பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும் வாழ்க்கைப் பாடத்தை முழுவதும் கற்றுத்தேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றவரன்றோ காமராஜர்?

    தலைமைப் பண்புகளான நேர்மை, நாணயம், சேவை மனப்பான்மை, தியாகம், நம்பிக்கை, தெளிவு, திட்டமிடல், முடிவெடுத்தல், வழிநடத்தல், சூழ்நிலையை சாதுர்யமாகக் கையாளுதல், மற்றவர்களை தம் கருத்துக்கு இணங்கவைக்கும் தன்மை, மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல், எதிரிகளையும் மன்னிக்கும் பெருந்தன்மை, தோல்வியிலும் துவளாத மனம் போன்ற அனைத்துப் பண்புகளும் இயல்பிலேயே கைவரப் பெற்றவர் காமராஜர். ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, தானே ஒரு உதாரண புருஷனாய் வாழ்ந்துகாட்டியதால்தானே அவர் பெருந்தலைவர் காமராஜர் என்றழைக்கப்படுகிறார்.

    அரைநூற்றாண்டுகால பொதுவாழ்க்கைக்குப் பிறகு, தன்னிகரற்ற அந்த தாயுள்ளம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மீளாத்துயிலில் ஆழ்ந்தது. 1975 அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் காமராஜர் நம்மைவிட்டு மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே துக்கம் அனுசரித்தது. கட்சிபேதமற்று அனைத்துத் தலைவர்களும் அன்னாரது மறைவுக்காய் வருந்தினார்கள். அவருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ தலைவர்கள் நாடாள வந்தார்கள்.. போனார்கள்… வாழ்கிறார்கள்… ஆனாலும் காமராஜரின் ஆட்சிக்காலம் மட்டுமே தமிழக வரலாற்றில் பொற்காலம் என்னும் பதிவுசெய்யத்தக்கப் பெருமை கொண்டது என்பது என்றும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை.

    Share
  • கவிதைக் கைமாற்று!

    -கீதா மதிவாணன்

    அன்றொருநாள் அவசர நிமித்தம்
    கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக்
    கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்!              pencil-notebook

    உன் கையறுநிலையைக் காணச் சகியாது
    என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப்
    பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை!

    காயமுற்ற என் கவிதைப் புத்தகம்
    நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
    சுயமிழந்து தவிக்கிறேன் நான்!

    விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
    என்விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
    தூசுபடிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகிக்
    கணகாலமாகிவிட்டதை உணராது
    விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
    விம்மலும் விசும்பலுமாய்!

    உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
    கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது!
    பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
    என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
    விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்!

    இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
    முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லிக்
    கரைந்து கொண்டிருக்கின்றன காக்கைகள்!

    கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
    கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப்
    படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 9, 2014 

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருமிகு. கீதா மதிவாணன்  அவர்கள்

    geetha mathivaanan

    சென்ற வாரம் வல்லமை வாசகர்களுக்காக இவர் வழங்கிய “உன்னைப் போலவே…” என்ற கவிதைக்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

    ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழரான கீதா மதிவாணன் தமிழிலக்கியங்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆர்வம் மிக்கவர்.  மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார் பாடிய பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான “நெடுநல்வாடை“யின் இலக்கிய  நயத்தில் தன்மனதினைப் பறிகொடுத்தவர். அதன் விளக்கத்தை எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் இக்காலத் தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்;  அதனை அவர் தளத்தில் படித்து மகிழலாம் (http://geethamanjari.blogspot.com/2013/05/blog-post.html).  பல சிறுகதைகளும், கவிதைகளும், விமர்சனங்களும்  எழுதியுள்ள கீதா “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?”  என்ற 30 அத்தியாயங்களுக்கும் மேற்பட்ட நெடுங்கதையையும் (http://geethamanjari.blogspot.com/2011/06/1.html) எழுதியுள்ளார்.

    வல்லமை இதழிலும் சற்றேறக் குறைய மூன்று ஆண்டுகளாக கீதா தனது படைப்புகளை  வழங்கி வல்லமை வாசகர்களை மகிழ்வித்து  வருகிறார்.  கவிதை, சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, இலக்கியம், விமர்சனம் என இவரது எழுத்தாற்றல் பல வகைகளிலும் பரந்து விரிந்திருப்பது மட்டுமல்லாமல் அவற்றிற்காக பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.  வல்லமையின் கடித இலக்கியப் போட்டி முதற்கொண்டு,  பிற இதழ்கள் நடத்திய தைப்பொங்கல்  கட்டுரைப் போட்டிக்கான  பரிசு, சிறுகதை விமர்சனப் போட்டிக்கான பரிசு, சிறந்த வலைதள எழுத்தாளருக்கான  பரிசுகள் என்று பல பரிசுகள் வென்றுள்ளார். இவர் கவிதைகள் பெரும்பாலும் மனித நேயத்தை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு அமைந்துள்ளன. பெண்களின் நிலை, தன்னம்பிக்கை, மாற்றுத் திறனாளிகளின்பால் காட்டும் நேயம், ஒற்றுமை போன்ற கருத்துகளை உள்ளடக்கியவை இவரது கவிதைகள்.  இவ்வார வல்லமையில் இவர் எழுதிய கவிதை தனக்கெனப் போராட வழியற்ற, தனக்காக வாழும் உரிமை கேட்கத் திறனற்ற, கருவிலேயே அழிக்கப்படும் உயிர்களுக்காகக் குரல் கொடுக்கிறது….

    அந்தக் கவிதை வரிகள் இங்கே…

    உன்னைப் போலவே…

    (http://www.vallamai.com/?p=46228)


    ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை
    ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
    பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
    ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

    உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
    உயிர்க்குடத்தில் கருவானது!
    உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
    உடுத்தவும் உரிமையுடையது!
    உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
    சிந்திக்கவும் கூடியது!

    உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
    அணைக்கவும் தலைப்பட்டது!
    உன்னைப் போலவே உணரவும் புணரவும்
    மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

    சாமான்யமாய் எண்ணிவிடாதே…
    சாபத்துக்கு ஆளாகிவிடும்
    சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

    மனிதநேயத்திற்காக, கருச்சிதைவினை எதிர்த்து பிறக்காத குழந்தைகளும் உயிர் வாழவேண்டிய நியாயத்திற்காகக் கவிதை வடித்த கீதா மதிவாணன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    — கீதா மதிவாணன்

     

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasanதிரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்த ஒரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து  வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.

    தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே  இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர்  வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.

    இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?

    நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை. பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள் மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.

    நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்,
    செம் புலப் பெயல் நீர் போல,
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
    என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?

    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

    இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.
    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    நம் கவிஞர் என்ன சொல்கிறார்?
    உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே

    இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…
    இருநோக்கு    இவளுண்கண் உள்ளது    ஒருநோக்கு    
    நோய்நோக்கொன்    றந்நோய் மருந்து.

    ‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…

    இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
    ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
    பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
    எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

    தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.

    ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

    பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
    மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
    நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
    நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
    தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
    யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
    சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

    “மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.

    ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ…
    இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..

    மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
    பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
    காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
    வேர்த்தளைக் காணென்றான் வேந்து.
    புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே… ஆம், அதேதான்.

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற…
    கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

    புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….
    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.

    இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…
    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே

    கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,
    கலவிக் களியின் மயக்கத்தால்
    கலைபோய் அகலக் கலைமதியின்
    நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
    நீள்பொற் கபாடம் திறமினோ

    கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….
    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்

    இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.

    நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்     
    தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று    
    நனந்தலை யுலகமுந் துஞ்சும்     
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
    ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை….

    கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று,  “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
    பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
    விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்.

    இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்
    நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றமில்லை
    விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?
    என்று அழகிய பாடலாய் விரியும்.

    கண்ணில் தெரியும் பொருளினைக்
    கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
    மண்ணில் தெரியுது வானம்,
    அதுநம் வசப்பட லாகாதோ?
    என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!
    கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?

    என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச்சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப்பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப்பரணியையும் கம்பராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.

    Share
  • உன்னைப் போலவே…

    -கீதா மதிவாணன்

    ஆகாயம் பிளந்துதித்த அண்டரண்டப் பட்சியுமில்லை             small baby for geetha kavithai
    ஆவென்று வாய்பிளந்து ஆராதித்துத் தொழுவதற்கு!
    பூமி கிளர்ந்து வெளிப்பட்ட புழு பூச்சியுமில்லை
    ’ப்பூ’வென்று புறந்தள்ளிப் புழுதியிற் புரட்டுவதற்கு!

    உன்னைப் போலவே ஒற்றைத் துளியில் உருவாகி
    உயிர்க்குடத்தில் கருவானது!
    உன்னைப் போலவே உண்ணவும் கழிக்கவும்
    உடுத்தவும் உரிமையுடையது!
    உன்னைப் போலவே சிரிக்கவும் அழவும்
    சிந்திக்கவும் கூடியது!

    உன்னைப் போலவே ஆக்கவும் அழிக்கவும்
    அணைக்கவும் தலைப்பட்டது!
    உன்னைப் போலவே உணரவும் புணரவும்
    மரணிக்கவும் வாய்த்த சக மானுடம் அது!

    சாமான்யமாய் எண்ணிவிடாதே…
    சாபத்துக்கு ஆளாகிவிடும்
    சாத்தியத்துக்கு ஆளாகிவிடக்கூடும்!

    Share
  • அன்புள்ள மணிமொழி!…

     கீதா மதிவாணன்

     

    மகனே மணிமொழி!

    அன்புமகன் மணிமொழிக்கு,

    அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

    நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

    நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்… எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு “கடன்பட்டார் நெஞ்சம்போல” என்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

    எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

    யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

    நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோ… இந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்…

    “வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

    நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

    சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்… கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

    நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதே” என்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

    மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போது… மகனுக்குப் பொருந்தாதா?

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பார் இலானும் கெடும்

    என்னும் குறளின் விளக்கம் நீ அறியாததா?

    உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

    உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீ… செய்து தருகிறேன்” என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

    இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

    சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

    வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

    வைத்தூறு போலக் கெடும்

    அல்லவா?

    எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

    சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்று… தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

    வருமுன் காப்பவன்தானே அறிவாளி?

    வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

    நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்… ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்… மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

    உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

    என்றும் அன்புடன்,

    உன் அம்மா.

    Share
  • அவளுக்கும் ஒரு பெயருண்டு!

    கீதா மதிவாணன்

    old-indexபட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
    அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
    ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
    அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
    அவள் நினைவுக்கு வருவதேயில்லை.
    தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
    கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
    அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
    ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
    அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
    பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
    கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்
    தன்பெயர் புழங்கப்படாததில் அவளுக்குப் பெருவருத்தம்.
    பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
    அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
    வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
    ஏக்கத்தவிப்போடு ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
    காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
    காலத்தே வருவானாவென்ற காத்திருப்போடு!

    http://www.shunya.net/Pictures/NorthIndia/Bishnupur/Bishnupur.htm

    Share
  • மணிமொழியாம் தமிழுக்கொரு மடல்

    கீதா மதிவாணன்

    என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழுக்கு,

    என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது!

    பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் மடி தந்து தயை புரிந்தாய். கதைகளாய், கவிதைகளாய், தேன்சுவைப் பாடல்களாய், அலமாரிப் புத்தகங்களாய், பேச்சாய், மூச்சாய் என்னைச் சூழ்ந்து, என்னுள் இறங்கி, கரைந்து என்னை நானாக வாழவைத்துக்கொண்டிருக்கும் தண்டமிழே, உன் தாள்பணிந்து வணங்குகிறேன்.

    பிறந்தமண்ணில் இருந்தபோது உன்மேல் எனக்குதான் எவ்வளவு உதாசீனம்! ஒருவரிக் கடிதம் எழுதவும் சோம்பிக்கிடந்த நான் இன்று பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். நிழலின் அருமை போல தமிழே.. உன் அருமையும் தாமதமாகத்தான் புரிகிறது.

    தாய்மண்ணைவிட்டு என் கால்கள் பலகாத தூரம் விலகி நடந்தாலும், தாய்மொழியே, செல்லுமிடமெல்லாம் உன்னை என் நாவில் சுமந்தே செல்கிறேன். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஏற்றாலும் எப்போதும் மனம் ஏங்குவதென்னவோ உன்னைப் பார்க்கவும் கேட்கவுமே.

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

    தேன்வந்து பாயுது காதினிலே

    என்று அன்று பாடிய முண்டாசுக்கவிஞனின் பாடலை முழுவதுமாய் அனுபவிக்கிறேன் இன்று. எங்காவது பொது இடத்தில் “நீங்க தமிழா?” என்று கேட்பதிலும் கேட்கப்படுவதிலும் உள்ள சுகம்… அதை அனுபவிப்பதுதான் இதம். கன்னற்தமிழே, உன் சுவையைக் காதுகுளிரக் கேட்கும்போது என்னை மறந்துபோகிறேன். என் காதல்மனைவியின் பிரிவையும் மறந்துபோகிறேன்.

    பயிலுறும் அண்ணன் தம்பி — அக்கம்

    பக்கத்துறவின் முறையார்

    தயைமிக உடையாள் அன்னை — என்னைச்

    சந்ததம் மறவாத் தந்தை

    குயில்போல் பேசிடும் மனையாள் — அன்பைப்

    கொட்டி வளர்க்கும் பிள்ளை

    அயலவராகும் வண்ணம் — தமிழ் என்

    அறிவினில் உறைதல் கண்டீர் !

    என்னும் பாவேந்தரின் பாடலை இன்று அனுபவத்தால் உணர்கிறேன். தாய் தந்தையை இழந்த எனக்கு ஒற்றைச் சொந்தமான, என் மனையாளின் பிரிவையும் தாங்கும் மனத்திடத்தைத் தந்த மகோன்னதத் தமிழே நீ வாழி!

    என்றுமில்லாத வழக்கமாய் எதற்கித்தனை பீடிகையென்று உனக்குள் ஐயம் தோன்றியிருப்பதில் வியப்பில்லை. விவரமாய்ச் சொல்கிறேன். என்னை வாழவைக்கும் நீ, என் மனையாளையும் வாழ்விப்பாயென்ற நம்பிக்கையோடு வரையப்படுகிறது இம்மடல்.

    நாராய் நாராய் செங்கால் நாராய்

    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

    பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

    நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

    வடதிசைக்கேகுவீராயின்

    எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

    நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

    பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

    “எங்கோன் மாறன்வழுதி கூடலில்

    ஆடையின்றி வாடையின் மெலிந்து

    கையது கொண்டு மெய்யது பொத்திக்

    காலது கொண்டு மேலது தழீஇப்

    பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

    ஏழையாளனைக் கண்டனம் எனுமே”

    என்று தன் வறுமை நிலையைப்பாடி, வடதிசையில் வாடிக்கிடக்கும் தன் மனைவியிடம் நாரையைத் தூதனுப்பிய சத்திமுத்தப் புலவரைப் போன்று, இன்றுன்னை நான் தென்திசைக்குத் தூதனுப்புகிறேன். காதற்தலைவனின் பிரிவால் நலிந்து, தனிமைத் துயருற்றுத் தவித்திருக்கும் என் தலைவியிடம் செல்வாய் செந்தமிழே! பிரிவாற்றாமையால் தவிக்கும் பேதை நெஞ்சம் அமைதிகொள்ளும் வண்ணம் அவள் மனத்துயரைப் போக்குவாய் பைந்தமிழே! என்னை மடியிருத்தி தாலாட்டி மனத்துயர் ஆற்றினாற்போல் அவளையும் ஆற்றுப்படுத்துவாய் என் அன்னைத்தமிழே!

    அலம்பலும் சலம்பலுமாய் அக்கறையற்று வாழ்க்கை நதியின் போக்கில் போகவிருந்த என்னை அக்கறையாய் கரை சேர்த்தவள் என் அன்புக் காதற்கிழத்தி. இன்று அக்கரையில் புலம்பலுடன் கழிகிறது என் வாழ்க்கை, அவளை என் நெஞ்சகத்தில் இருத்தி. காற்றும் புகமுடியாவண்ணம் காதலுடன் வாழ்ந்திருந்த எங்கள் இருவருக்கிடையில் கடல் புகுந்த கதையைக் கேட்கவிரும்புவாயாயின் சொல்கிறேன், கேள்!

    வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

    பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;

    நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?

    ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

    என்று நானும் அவளும் காதலால் கலந்து களித்துக்கிடந்த உன்மத்த வேளையொன்றில் தன் உள்ளக்கிடக்கையொன்றைத் தெரிவித்தாள். என் கண்மணியின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, அவள்வழி உறவொன்றின் விழாவுக்காக, அழையாத வாயிலை மிதித்தோம். அவமானமுற்றுத் திரும்பினோம்.

    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

    எல்லாரும் செய்வர் சிறப்பு

    என்னும் குறளுக்கேற்ப பொருள் இல்லாதவர்களை ஏளனம் செய்வதும் இருப்பவர்களைப் போற்றுவதும்தான் உலக இயல்பு என்பதை அறிந்திருந்தும் ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்னும் ஒளவையின் வாக்கை மதியாது சென்ற காரணத்தால் மனமுடைந்துபோனோம்.

    காதற்பித்து தலைக்கேறி, கால்காசுக்கு வழியில்லாதவனைக் கட்டிக்கொண்டுவிட்டாளென்று தூற்றும் ஊரின் வாயை அடைக்க ஒரு உபாயம் சொன்னேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தொரு அருமையான வாய்ப்பு அழைப்பு விடுத்திருக்கிறது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட, உன்னிடம் அனுமதி கேட்கும் துணிவின்றி அவதியோடு காத்திருக்கிறேன் கண்ணாட்டி என்றேன். என் வெற்று மார்பைச் சுட்டன அவளது பெருமூச்சும், சில கண்ணீர்த்துளிகளும். நெடிய மெளனத்திற்குப் பின் ‘உம்’மென்றாள் உம்மென்ற முகத்தினளாய்.

    இதோ, சொடக்குப் போட்டாற்போல் ஓடிவிடும் மூன்றுவருடங்கள் என்று பொய் சொல்லிப் புறப்பட்டுவிட்டேன். என்  பொருளிலா வாழ்க்கையின் இன்னல் களைய கடல் கடந்து கண்காணா தேசம் புகுந்துவிட்டேன். அலைபேசியின் நல விசாரிப்புகளிடையே அவ்வப்போது எழும் அவளது விசும்பல்களும் அவற்றை அடக்க அவள் படும் பாடும் என் உள்ளத்தை உருக்கி கண்ணீரை உகுக்கவைக்கின்றன. எவ்வளவு தேறுதல் சொன்னாலும் பேதையவள் நெஞ்சம், பிரிவாற்றாமையினின்று விடுபடும் வழியறியாது பித்தாய்க் கரைகிறது. என்னை அயல்தேசம் செல்ல அனுமதித்ததன் மூலம் தான் தவறிழைத்தாற்போன்று குமுறிக் குறுகும் அவள் நெஞ்சுக்கு நான் எங்ஙனம் ஆறுதலளிப்பேன்? ஆதலால்தான் உன்னைத் துணைக்கழைக்கிறேன் தீந்தமிழே!

    பொருள்வயின் பிரிதல் பற்றி நீ அறியாததா? பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என கற்பு வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஆறுவகையான பிரிவுகளை சங்க இலக்கியம் பகர்வதைச் சொல்லி பொருள்வயிற்பிரிதலொன்றும் ஆடவர்க்குப் புதிதல்ல என்று அவளிடம் எடுத்துரைப்பாய் தங்கத்தமிழே!

    ‘நன்று” எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;

    செயல்படு மனத்தர் செய்பொருட்கு

    அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

    என்னும் சங்கத் தோழி போன்று, ‘உன் கணவன் பொருளீட்டச் செல்லும்போது அதைத் தடுக்காமல், சென்றுவாருங்கள் என்று மலர்ந்த முகத்தினளாய் வழியனுப்பிவைத்தாய்… தலைவி, நீ செய்தது சரிதான்’ என்று அவளுக்கு ஆறுதல் மொழி சொல்லத் தக்க அருந்தோழியரும் அருகில் இலர். ஆகவே என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் அழகுத்தமிழே, உன்னையே அவளுக்கு உற்ற துணையாக தூதனுப்ப விழைகிறேன். அதற்கு அச்சாரமாகவே இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் அருந்தமிழே!

    என் காதல் கனிமொழியாளைப் பிரிந்துவந்து ஆறு திங்கள் ஆகின்றன. புதிய பணியும், சூழலும், புதிய நண்பர்களோடு முத்தமிழே நீயும், காலத்தைக் கடத்தும் முயற்சியில் எனக்குத் துணைபுரியும் இவ்வேளையில் அங்கு அவளது ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ள அவள் படும் பிரயத்தனங்கள் மனக்கண்ணில் விரிந்து வேதனை தருகின்றன.

    இன்பத்தை விடவும் கடமையே கரம்பற்றியவனுக்கு அழகென்று காட்டுதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உன்னிடம் உண்டல்லவா? ஆயினும் இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கோடிட்டுக் காட்டினால் அவள் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளலாம்.

    வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்  

    குளவி மொய்த்த வழுகற் சின்னீர்  

    வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்  

    வருகதில் லம்ம தானே  

    அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

    பாலைவழிச்செல்லும்போது குடிக்க நீர் கிடைக்காது. வேட்டையாடிக் களைத்த செந்நாயொன்று காலால் மண்ணில் தோன்றிய சிறுபள்ளத்தில் ஊறும் நீரைக் குடிக்கும். நாய் குடித்தது போக மீந்திருக்கும் குறையளவு நீரில் அருகிலிருக்கும் மரத்தின் காட்டுப்பூக்கள் விழுந்து அழுகி நாறிக்கிடக்கும். என்னுடைய தாகத்துக்கு அந்த நீரை நான் பருகலாம். ஆனால் அழகிய வளைக்கரத்தால் நீ அந்நீரைப் பருகிட என் மனம் எப்படி இசையும்? எண்ணிப்பார்க்கவே வேதனை மிகுகிறதே என்று அரற்றுகிறான் பொருட்வயிற்பிரிதலின்போது தானும் அவனுடன் வருவதாய் சொன்ன தலைவியிடம். தனக்காக தன் உற்றார் உறவுகளை விட்டுவந்த காதல் மனைவியை இன்பமுற வைத்திருப்பதுதானே முறை? அதைச் செய்யத்தவறுதல் அன்றோ குறை? என்று எடுத்துரைப்பாய் சங்கத்தமிழே!

    பிரிவுழிக் கலங்கல் வேண்டாம் கண்ணே… வந்துழி மகிழ்ச்சிக்கான காலம் விரைவிலேயே கைகூடிவரும், உன் எண்ணம் போல் ஊரும் உறவும் மெச்ச உன்னத வாழ்க்கை வாழுங்காலம் ஓடிவரும் என்று நல்வாக்கு சொல்லி அவளை நலமோடு வாழ்விப்பாய் நற்றமிழே! நான் மீண்டும் அவளைச் சேருங்காலம் வரையிலும் அவளை உன்பால் ஈர்த்து இணக்கமாக்கி இன்புறச் செய்வாய் இன்தமிழே!

    வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;

    வந்தமத வேழம் வணங்கிடுமே; – சந்தமெழப்

    பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு

    நீடுலகில் உண்டோ நிகர்?

    என்னும் கவிமணியின் பாடலுக்கேற்ப இசையாய், பாடலாய் அவள் இதயத்துக்கு இதமூட்டி, கவியாய், காவியமாய் அவள் கருத்தினில் நுழைந்து, எழுத்தாய், எண்ணமாய் அவளைச் சேர்ந்து, உன் கரங்களுக்குள் அவளைக் கோர்த்து சற்றே என்னை இளைப்பாற்றுவாய் இயற்றமிழே! கன்னற்சுவையும் கற்கண்டுப்பாகும் தோற்கும் நல்லிலக்கியச்சாற்றினை அவள் பருகச் செய்வாய் தேன்மொழி! என் கண்மணியின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் இனி உனதே! அவள் பிரிவுத்துயராற்றும் வல்லமை, வண்டமிழே… உனையன்றி வேறெவருக்குண்டு?

    உன் பொறுப்பில் அவளை ஒப்படைத்துவிட்டு முழுச்சிரத்தையோடும் உத்வேகத்தோடும் என் கடமையில் கண்ணாவேன். காலநீட்டிப்புக்கு இடங்கொடாமல் செவ்வனே பணிக்காலம் முடித்து என் பாரியாளைப் பார்க்கப் பரவசத்தோடு வீடு திரும்புவேன்.

    பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த     

    வெண்புறக் களரி விடுநீ றாடிச்     

    சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்     

    பாரம் மலிசிறு கூவலின் தணியும்     

    நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ   

    எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்     

    கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட     

    விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்   

    சிறுநுண் பல்வியர் பொறித்த     

    குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே

    பசிய கண்களையுடைய யானை தன் பருத்தக் காலால் உதைத்துப் பொடியாக்கிய பாழ்நிலத்தின் புழுதியில் நடந்து களைத்த வருத்தமெல்லாம் பருத்திச்செடிகள் சூழ்ந்த கிணற்றால் தணியும். அதுபோல் தலைவன் படும் துயரமெல்லாம், வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டிப் பின்னர், உன்னோடு இனிதே இல்லறம் நடத்துதற்பொருட்டன்றோ? இரவுநேரத்திலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு, அடுப்பூதிப் புகைபடிந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, நெய் மணக்கும் ஊண்சோற்றை குறுநடையுடன் நீ பரிமாறும் அழகில் மயங்கி நிற்பாரன்றோ? என்று அன்றைய தோழி, தலைவியைத் தேற்றியது போல் நீயும் என் தலைவியைத் தேற்றி இன்புறச் செய்திடுவாய்.

    எங்கள் உயிருக்கு நிகராய், எங்கள் உயர்வுக்கு வானாய், எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேனாய், எங்கள் பிறவிக்குத் தாயாய், எங்கள் வளமிக்க உளமுற்ற தீயாய்… தமிழே என்றென்றும் நீ வாழீ!

    இங்ஙனம்,

    உன்னால் உயிர்வாழ்பவன்.

    Share
  • குளிரவன் போவதெங்கே?

    கீதா மதிவாணன்

    images

    அதோ… குளிரவன்!
    தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
    மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

    வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
    ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
    வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
    வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
    திரும்பிப் பாராமல் போகிறான்.

    ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
    அவன் சென்ற வழி எதுவென்று…
    அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
    எவரும் முயன்றாராவென்று…

    இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
    மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
    சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
    சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

    அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
    உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
    காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
    ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
    விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

    சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
    நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
    எவருமறியாப் பொழுதுகளில் சென்று
    கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

    தன் வெளிர்வண்ண ஆடையுடன்
    தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
    கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
    “என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
    மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
    என்றெண்ணி மருகுகிறானோ?

    ஐயோ… குளிரவனே…
    என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
    உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
    ஒரு குழந்தையின் கண்ணீர்?
    வசந்தம் தொலைவில் வரும்போதே
    உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
    உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
    உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
    உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
    தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

    ஓ…. என்னால் பாட இயலாது…
    குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
    வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

    (Where does the Winter go? By Ethel Turner)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpapergang.com/Winter/cold-winter-morning-frost-leaves_11066.html

    Share
  • ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

     கீதா மதிவாணன்

    “சக்களத்தி சண்டைன்னா என்ன, தாத்தா?”

    சுவாரசியமாய் நெய்யப்பட்டுக்கொண்டிருந்த கதையின் இழைகள் பதினொரு வயதுப் பாலகன் அகிலின் கேள்வியால் பட்டென்று அறுபட்டன. உம் கொட்டிக்கொண்டிருந்த பிள்ளைகள் கெக்கேபிக்கேவென்று சிரித்தனர்.

    பக்கத்தில் உட்கார்ந்திருந்த வளர்மதி அகிலின் புறங்கையில் சுள்ளெனக் கிள்ளினாள். ஸ்ஸ்… என்றவாறே கையை வெடுக்கென்று இழுத்துக்கொண்டு அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தூரத்தில் வேப்பமர நிழலில் மினுக்கிடும் மின்மினிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கட்டாந்தரையில் ஓரம் கிழிந்த கோரைப்பாயில் ஒய்யாரமாய் சாய்ந்திருந்த ரங்கலட்சுமி, சிரிப்பை அடக்கநினைத்தும் முடியாமல் ஆஹாவென சிரித்தாள். சிரிக்கும் அளவுக்கு தான் என்ன கேட்டோம் என்று புரியாவிட்டாலும் கேலிக்குரியதை எதுவோ கேட்டுவிட்டோம் என்றுமட்டும் புரிந்தது.

    வைத்திலிங்கம் தாத்தா சிரிக்கவில்லை. நிலவொளியில் இவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். பின் ஏதோ யோசிப்பது போல் தாடையைச் சொரிந்தபடி அண்ணாந்து பார்த்தார்.  இதற்கு போய் ஏன் இவ்வளவு யோசனை என்பதுபோல் பிள்ளைகள் தாத்தாவை அதிசயமாய்ப் பார்த்தனர். தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் கிசுகிசுத்தபடி எதையோ சொல்லி மீண்டும் கெக்கலித்தனர்.

    நிலவின் தயவால் பாலை ஊற்றி மெழுகியதுபோல இருந்தது கண்ணுக்கெட்டிய இடமெல்லாம். பசுஞ்சாணித் தரையிலிருந்து எழுந்த வாசம் இதமாய் மனத்தை நிறைத்திருந்தது. முதன்முதலாய் இந்த ஊருக்கு வந்த நாளில் சாணவாடையும் ஆட்டாம்பிழுக்கை வீச்சமும் புழுதிமண்ணும் புழுக்கமுமாக ஊரே அந்நியப்பட்டுக் கிடந்தது இவனுக்கு. போதாதென்று காட்சிப்பொருள் போல அத்தை வீட்டு வழியே போவோர் வருவோரெல்லாம் வீட்டுக்குள் தலையை நீட்டி, “இதுதான் அந்த டவுனுப் பிள்ளையா?” என்ற கேள்வியுடன் இவனை ஒரு விநோதப்பார்வை பார்த்துப்போவது மகா எரிச்சலைத் தந்தது. எதிலும்  ஒட்டாமல் எவருடனும் பழகாமல் ஒதுங்கியே இருந்தவனை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று ஊரோடு ஒட்டப் பழக்கப்படுத்தியவர்கள் வளர்மதியும் ரங்கலட்சுமியும்தான். அமுதா அத்தையின் பெண்கள். அவர்கள் தயவால்தான் ஊரின் அழகு கண்ணுக்குப் புலப்பட்டது. வயலின் வரப்புகளில் விழாமல் நடக்கவும், கையைக் காலை உதைத்து நீச்சல் பழகவும், வேப்பமரக்குயிலுக்கு எதிர்ப்பாட்டு பாடவும் கற்றுக்கொண்டான்.

    இன்னும் சில நாட்களில் மாடு கறக்கவும், மேய்ச்சலுக்கு ஓட்டிப்போகவும், பருத்திக்கொட்டை அரைக்கவும், களையெடுக்கவும், கடலை பிடுங்கவும்  கற்றுக்கொள்வான். அதற்கான பயிற்சியை ஆர்வத்துடன் ஆரம்பித்துவிட்டான் வைத்திலிங்கம் தாத்தாவிடம். அமுதா அத்தையின் வீட்டில்தான் வைத்திலிங்கம் தாத்தா இருந்தார். மாடுகளைப் பராமரிக்கும் வேலை அவருடையது. எப்போது தாத்தா வேலைகளை முடித்து படுக்கவருவார் என்று அத்தை வீட்டு வாசலில் காத்திருக்கும் ஒரு சிறுவர்  பட்டாளம். கொஞ்ச நேரத்தில் இனிப்பை ஈ மொய்ப்பதுபோல் பிள்ளைகள் தாத்தாவை மொய்த்துக்கொண்டிருப்பர்.

    தாத்தாவிடம் கதை கேட்பதென்றால் பிள்ளைகளுக்குக் கொள்ளைப் பிரியம். தாத்தாவுக்கோ கதை சொல்வதில் அதைவிடவும் பிரியம் அதிகம். நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போயிருந்தாலும் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவர் களைப்பெல்லாம் போன இடம் தெரியாது. விக்கிரமாதித்தன் கதைகளைப் போல தாத்தாவும் ஏராளமான கதைகளை ஒன்றுக்குள் ஒன்றாகப் பின்னிக்கொண்டிருந்தார். சில ஊடுபாவு இழைகளைப் போல மாறிமாறி வந்து வித்தை காட்டும். சில ஊடுபயிர் போல இடையிடையே தலைகாட்டி வளரும். வண்டித்தடத்தைப் போல இணைந்தே வந்து இருவேறு திசையில் பிரியும் சில கதைகள். இறுதியில் ஒரு புதிரில் வெட்டுப்பட்டு முடியும் சில கதைகள். தாத்தாவின் கதையுலகத்திலிருந்து முற்றிலுமாய்த் தன்னை விடுவித்துக்கொள்வதென்பது எவருக்குமே சாத்தியமானதில்லை.

    இன்றைய கதையின் நாயகி அம்புஜவல்லியைப் பற்றி தாத்தா அமோகமாய் சிலாகித்துக்கொண்டிருந்தார். “அம்புஜவல்லி அழகுன்னா அழகு… அப்படியொரு அழகு.. அவ பாடினா குயிலெல்லாம் ஊரைவிட்டு ஓடிடுமாம்.  ஆடினா மயிலெல்லாம் அவமானம் தாங்காம தன் தோகையை கழட்டி வச்சிடுமாம்.  அபாரமா கத்திச் சண்டை போடுவாளாம், ஒரே வீச்சில ஒன்பது தலைகளைக் கொய்வாளாம். அற்புதமா ஓவியம் வரைவாளாம், அவ ஓவியத்தைப் பாத்தா உயிரோடு இருக்கிறமாதிரியே இருக்குமாம். பரோபக்காரியாம். அம்மா தாயே பசிக்கிதுன்னு அரண்மனை வாசலுக்கு வார பிச்சக்காரனுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவாளாம்….”

    அரண்மனை வாசலில் எந்த பிச்சைக்காரனாவது பிச்சையெடுப்பானா என்று எவருக்கும் குறுக்குக்கேள்வி கேட்கத்தோன்றாது. கதையை கேட்கிற பெண்பிள்ளைகள் தங்களை அந்த இளவரசியாய் கற்பனை செய்து மகிழ, பையன்களுக்கோ அப்படியாகப்பட்ட இளவரசியையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். தாத்தா தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

    “அந்த இளவரசியைக் கட்டிக்கிடுறதுக்கு ரொம்பநாளா ஒரு மந்திரவாதிக்கு ஆசை. ஆனா… அவனால் கோட்டையை நெருங்கமுடியல. அதனால் அவன் என்ன பண்ணுனான்… கோணங்கின்னு ஒரு பூதத்தை ஏவி அவளைக் கடத்திகிட்டு வரச் சொல்லுறான். பூதமும் போச்சு…. ஆகா….என்னா அழகு… இவளக் கொண்டுபோய் மந்திரவாதிக்குக் குடுக்கிறதுக்குப் பதிலா நாமளே கட்டிகிட்டா என்னன்னு அதன் மனசில ஆசை வந்திட்டுது. இளவரசியைக் கடத்திகிட்டுப் போற வழியில அவ மயக்கத்தில இருக்கும்போதே தாலியைக் கட்டிப்புடுது. இளவரசி கண்ணு முழிச்சதும் தன் கழுத்தில் தொங்குற தாலியைப்பாத்து அழுவுறா… இப்படி என் வாழ்க்கையைக் கெடுத்துபுட்டியேன்னு ஒப்பாரி வக்கிறா…. அப்புறம் மனச தேத்திகிட்டு கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு இருக்கும்போது பூதமானாலும் புருசன்னுதான் ஏத்துக்கணும்னு சொல்லி ஒண்ணுஞ்சொல்லாம தாலியை எடுத்து கண்ணில ஒத்திகிட்டு பூதத்தோட  வீட்டுக்குப் போறா… அங்கதான் இருக்கு வேடிக்க…. என்னாங்கிறியா… இந்தப் பூதத்துக்கு முன்னாடியே கல்யாணமாயி ஒரு பொண்டாட்டி இருக்கா…. மகா ஆத்திரக்காரி… பேரே ஆங்காரி. இளவரசியப் பாத்ததும் ஆங்காரமாயி புருசனை அடாபுடான்னு வையிறா…இளவரசியைக் கொல்லாமவிடமாட்டேன்னுட்டு அவ மேலப் பாயுறா… அம்புஜவல்லி சும்மா இருப்பாளா…அவதான் எல்லா வித்தையும் கத்தவளாச்சே… இடுப்புல சொருவியிருந்த கத்திய சடார்னு உருவி பத்ரகாளியாட்டம் நிக்கிறா. அதப் பாத்து ஆங்காரிக்கு கொஞ்சம்போல பயம் வந்திட்டுது. இருந்தாலும் வீராவேசமா சொல்றா…இருடி இரு… நீ அசந்தநேரம் உன்ன வெங்கலப்பானையில வெச்சி வெவிச்சு எம்புருசனுக்கே விருந்து வச்சிடறேன்னு சபதம் போடறா… அம்புஜவல்லியும் பதிலுக்குச் சொல்றா… உன்னய துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு இந்தக் காட்டவிட்டே ஓட ஓடத் தொரத்தலே…. எம்பேரு அம்புஜவல்லி இல்லைங்கறா…. அன்னியிலேந்து ரெண்டுபேருக்கும் சண்டதான். ஒரு பக்கம் மந்திரவாதி… பூதத்தைப் புடிச்சி குடுவயில அடைக்கத் தேடுறான்… இவளுங்க ஒருபக்கம் படுத்துறாளுக… சக்களத்தி சண்டையில மாட்டிகிட்டு முடியப் பிச்சிகிட்டுது கோணங்கி பூதம்.”

    தம்மை மறந்து சிறுவர்கள் கதை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அகில் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

    “சக்களத்தி சண்டைன்னா என்ன, தாத்தா?”

     தாத்தாவின் கதையுலகுக்குள் சஞ்சரித்துக்கொண்டிருந்தவர்களை பலாத்காரமாய் வெளியில் இழுத்துப் போட்டது அகிலின் அந்தக் கேள்வி.  கேள்வி எழுப்பிய சிரிப்பிலிருந்து ஒவ்வொருவராய் மெல்ல விடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒட்டுமொத்தமாய் சிரிப்படங்கிய தருணத்தில் தாத்தா சொன்னார்.

    “நீ பெரிய மனுசனானதும் உனக்கு உன் அத்த மவளுவ ரெங்கலட்சுமி, வளர்மதி ரெண்டு சிறுக்கியையும் கட்டிக் கொடுத்தோம்னு வைய்யி….உனக்காக இவளுக போட்டுக்குவாளுக பாரு…. குடுமிப்புடி சண்ட…. அதுக்குப் பேருதான் சக்களத்திச் சண்ட….”

    அகிலுக்குக் கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது.

    “குடுமிப்புடி சண்டைபோட்டா… அதான் சக்களத்திச் சண்டையா…?”

    அடங்கியிருந்த சிரிப்பு மறுபடியும் வெடித்துக்கிளம்பியது. அகில் மேலும் ஏதோ கேட்க வாயைத் திறக்குமுன் மறுபடியும் வளர்மதி கிள்ளினாள். இந்த முறை குறிப்பு புரிந்தது. வாயை மூடிக்கொண்டான். இப்போது எல்லாருக்குமே தாத்தா விட்டக் கதையை தொடர்ந்து கேட்கும் ஆர்வம் போய்விட்டிருந்தது. அகிலுக்கு மட்டும் இந்தக் கதையின் முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆவல் மிஞ்சியது. ஆனால் தாத்தாவோ சக்களத்திக் கதைகளுக்குத் தாவிவிட்டிருந்தார்.

    அகில் ரங்கலட்சுமியும் வளர்மதியும் குடுமியைப்பிடித்து சண்டையிட்டுக்கொள்ளும் காட்சியை நினைத்து சிரித்தான். அகிலுக்கு ரங்கலட்சுமியையும் பிடித்திருந்தது, வளர்மதியையும் பிடித்திருந்தது. அத்தைக்கு ஆண்பிள்ளைகள் இல்லாத குறையை ரங்கலட்சுமி தீர்த்துவைத்தாள். விடுவிடுவென்று மரம் ஏறி புளியங்காய் பறித்துப் போட்டாள். குளத்துப் படிக்கட்டில் இவனை உட்காரவைத்துவிட்டு தாமரைப் பூக்களைப் பறித்துவந்து தந்தாள். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டி அதில் காற்றை நிரப்பி குளத்துநீரில் படகுபோல் வலம்வந்தாள். சட்டென்று பாவாடை இறுக்கம் தளர, காற்று வெளியேறி ப்ளக்கென்று தண்ணீருக்குள் மூழ்கித் திணறி வெளிவந்து இவனைப் பார்த்துச் சிரித்தாள்.

    வளர்மதி ரொம்ப சாது. தின்னக் கொடுப்பதில் தன் பங்கையும் கொண்டுவந்து இவன் கையில் திணிக்கும் அந்தப் பாசம் இவனை வியப்பிலாழ்த்தும். மிஞ்சிப் போனால் அகிலைவிடவும் ஒரு வயது பெரியவளாய் இருப்பாள். ஆனால் அவள் காட்டும் பரிவு…. தாயிடத்தும் கண்டிராதது… தாத்தா சொன்னதுபோல் பெரியவனாகி இருவரையும் கல்யாணம் செய்துகொண்டால் இருவருக்கும் சண்டை வருவது நிச்சயம் என்பதும் புரிந்தது.

    அன்று கனவில் அம்புஜவல்லியும், ஆங்காரியும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு அழகான இளவரசன் குதிரையில் வந்து அம்புஜவல்லியைத் தூக்கிக்கொண்டு போனான். குதிரை ரொம்ப தூரம் போனதும் களைத்து நின்றபோதுதான் தெரிந்தது, அந்த இளவரசன் தான்தான் என்பதும் அம்புஜவல்லியென்று நினைத்து ஆங்காரியைத் தூக்கிவந்திருப்பதும். ஐயையோ என்று பதறும்வேளை,

    “எந்திரிங்க…. எந்திரிங்க… சாணி கரைச்சிப் போடணும்…. ஐயா… அகிலு… எந்திரிச்சி திண்ணயில போய் படுய்யா…” அத்தை இதமாக எழுப்பினாள். துணுக்கிடச் செய்த கனவிலிருந்து விடுபடாமலேயே எழுந்து திண்ணை நோக்கிப் போனான்.

    அத்தை கூரை வீட்டில் குடியிருந்தாலும் இவனை ஒரு இளவரசனைப் போல்தான் கவனித்துக்கொண்டாள்.  எப்போதும் எதையாவது தின்னக்கொடுத்துக்கொண்டே இருந்தாள். எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறதென்று தெரியாது. ஆனால் நித்தமும் கொய்யாப்பழம், மாங்காய், வெள்ளரிப்பழம், நுங்கு,  அவிச்ச கடலை, சுட்ட பனங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பலாச்சுளை என்று இவன் கண்ணில் காட்டிக்கொண்டே இருந்தாள். இளங்காலையில் புளிப்பும் இனிப்பும் துவர்ப்புமாய் பதமாய் தொண்டை நனைக்கும் பதநீரின் ருசிக்கு இப்போது அடிமையாகியிருந்தான். அமுதா அத்தை மட்டுமில்ல, மாமாவும் இவன் மேல் அத்தனைப் பிரியம் வைத்திருப்பது ஆச்சர்யமாயிருந்தது.

    இரவு சாப்பிடும்போது மாமா வந்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார். அவரிடமிருந்து விரும்பத்தகாத வாடை அடித்தது. சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். மாமா இன்னும் நெருங்கி அமர்ந்தார்.

    அத்தை இவனுக்கென்றே பிரத்யேகமாய் சுதேசிப் பாத்திரக்காரனிடம் சொல்லிவைத்து வாங்கிய பளபள எவர்சில்வர் தட்டில் ரசஞ்சோறு பிசைந்து வைத்து பருப்புத் துவையலையும் வைத்திருந்தாள். அவனது இடது கையில் சுட்ட அப்பளமொன்றைச் செருகிவிட்டுச் சென்றாள்.

    வளர்மதியும் ரங்கலட்சுமியும் எதையோ கிண்ணத்தில் கரைத்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள். என்னவென்று சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இவன் தட்டில் இருப்பதை விடவும் உசத்தியாய் இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

    “மருமவனே… நல்லா அள்ளித்தின்னு என்னத்துக்கு வெக்கப்படுறே…. வேணும் வேணாம்னு வளைச்சுக்கட்டுவியா… அத விட்டுபுட்டு புதுப்பொண்ணு மாதிரி கொறிக்கிறே… நல்லா சாப்புடு…” சொல்லிக்கொண்டே மாமா இவன் தட்டிலிருக்கும் சோற்றை பெரியப் பெரியக் கவளங்களாக உருட்டி இவன் வாய்க்குள் திணிக்க முற்பட்டார். அகில் நெளிந்தான். வளர்மதியும் ரங்கலட்சுமியும் சிரித்தார்கள்.

    “நானே சாப்புடறேன் மாமா…” தலையை இன்னும் குனிந்துகொள்ள… மாமா சிரிக்க… “சங்கோஜப்படுதில்ல… பிள்ளையை விடுங்க.. தானே அள்ளித்தின்னட்டும்” அத்தை மாமாவிடம் சொன்னாள்.

    அம்மா அத்தையையும் அவள் குடும்பத்தையும் பற்றி எப்போதுமே நல்லவிதமாகப் பேசியதேயில்லை. இவ்வளவு நல்ல மனிதர்களை ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று அகிலுக்கு வியப்பாக இருந்தது. அம்மாவுக்கு யாரைத்தான் பிடித்திருந்தது? எல்லோரோடும் எப்போதும் பூசல்தான். அவள் ஆசையாய் அன்பாய் பேசிய தருணங்களை எண்ணிவிடலாம்.

    “அகிலு…. சித்தப் பொறுமையா சாப்புடு…. கருவாடு சுட்டு எடுத்தாறேன்…” அடுப்புக்குப் பக்கத்திலிருந்து அத்தை குரல் கொடுத்தாள்.

    சுட்டக் கருவாட்டின் மணம் நாசியை விடைக்கச் செய்தது. அம்மாவுக்கு கருவாட்டு வாசம் ஆகவே ஆகாது. அப்பாவுக்கோ அதுதான் பெரும்பிரியம். அம்மா சண்டை போட்டுக்கொண்டு ஆச்சி வீட்டுக்குச் சென்றுவிடும் சமயங்களிலெல்லாம் ஒரு அதிசயம் நிகழும். சொர்ணலதா என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு சில்வர் சம்புடம்  எங்கிருந்தோ வந்து அடுக்களை மேடை மீது அமர்ந்திருக்கும். அப்பா அதைத் திறந்தநொடி மணம் மூக்கைத் துளைக்க அகில் எங்கிருந்தாலும் அடுப்பங்கரை வந்துவிடுவான். நன்றாய் சுத்தம் செய்யப் பட்டு உப்பும், மஞ்சளும் தடவி பதப்படுத்தப்பட்ட நெத்திலிப்பொடியைப் பார்த்ததுமே நாவூற ஆரம்பித்துவிடும்.

    எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொடுத்தால் ரசச் சோற்றுடன் தேவாமிர்தமாய் இறங்கும். கடைவாயில் வழிவது கூடத் தெரியாமல் அப்பா தலையைத் தலையை இடமும் வலமுமாய் ஆட்டி ஆட்டி சாப்பிடுவார். அப்பா என்றுமே அப்படி ரசித்து ருசித்து சாப்பிட்டு அவன் பார்த்ததே இல்லை. இந்தக் கருவாட்டுக்காகவே அம்மாவிடம் சண்டை போட்டு அடிக்கடி ஊருக்கு அனுப்புகிறாரோ என்று கூடத் தோன்றும்.  அம்மா வருவதற்குள் சொர்ணலதா சம்புடம் மறுபடி மாயமாய் மறைந்திருக்கும். ஒருநாள் பேச்சுவாக்கில் சொர்ணலதா சம்புடத்தைப்பற்றி இவன் அம்மாவிடம் சொல்லிவிட அம்மா சாமியாட ஆரம்பித்துவிட்டாள்.

    அம்மாவுக்குக் கோவம் வந்தால் வீடு வீடாகவே இருக்காது. சாமான்களை எறிவதும் உடைப்பதும்…. அப்பா தலையைக் குனிந்தபடியேதான் உட்கார்ந்திருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் அப்பா அம்மாவைக் கட்டுப்படுத்த முயன்றதே இல்லை. அகிலுக்கு இப்போது அவர்கள் கோணங்கியும் ஆங்காரியுமாக தோன்றினார்கள். சொர்ணலதா தான் அம்புஜவல்லி என்பதும்  அவள் நிமித்தமாய்த்தான் அவர்களுக்குள் அடிக்கடி வாதம் உண்டாகிறது என்பதும் புரிந்தது. அவன் அம்மாவும் ஆங்காரி மாதிரிதான் சபதம் போட்டிருந்திருப்பாளோ…?

    என்றும்போல்தான் அன்றும் அம்மா வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். அப்பா அதை லட்சியம் செய்யாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அம்மா தன் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதைக்காட்ட அவள் கையாண்ட வழிமுறைதான் மற்றப் பெண்களிலிருந்து அவளை வேறுபடுத்திக் காட்டியது. அப்பாவின் மெளனமான உதாசீனம் அவளுடைய இயலாமையை இன்னும் தூண்டிவிட அவள் ஆங்காரியாக அவதாரமெடுத்தாள். இல்லை, இல்லை…. அப்படி ஆங்காரியாக அவதாரமெடுப்பதற்காகவே தூண்டிவிடப்பட்டிருக்கிறாள்.

    தாத்தாவின் கதையில் வந்த ஆங்காரி, அம்புஜவல்லியைக் கொன்றாளோ, அம்புஜவல்லி ஆங்காரியைக் கொன்றாளோ அல்லது சமரசம் செய்துகொண்டு கோணங்கியுடன் வாழ்ந்தார்களா தெரியவில்லை. ஆனால் அம்மா என்னும் ஆங்காரியோ கோணங்கியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கிவிட்டாள்.

    அகிலின் வாழ்க்கை நாடகத்தில் பெற்றோர் வேடம் ஏற்றவர்கள் விரைவிலேயே தங்கள் பாத்திரத்தை முடித்துவிட்டு வேற்றுலகம் சென்றுவிட…. கண்முன் விரிந்து கிடக்கும் இந்தப் பரந்த உலகம் அவனைப் பயமுறுத்துகிறது, முன்னே விட்டுப் பின்னே கிசுகிசுத்துப் பரிகசிக்கிறது அல்லது கண்ணில் பரிதாபம் தேக்கி அவனைப் பலவீனமாக்குகிறது. இவை போதாதென்று அத்தையின், மாமாவின் அன்புக்குப் பின்னால் ஒரு ஆதாயத்தின் எதிர்பார்ப்பு இருப்பதும் மெல்லத் தெரிய வந்தபோது உலகம் வெறுத்துத்தான் போனது. ஆனாலும் அவர்களது ஆதாயம் நிறைவேறும் வரையிலான காலம் அவனுக்கு ஆதாயமாக இருந்தது. காற்றடிக்கும்போதே தூற்றிக்கொள்ளவேண்டும். கற்பிக்க முனைப்பாயுள்ளது காலம். கற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டான் அகிலும்.

    *****************************************************

    Share