Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180120 - Yadava 04 -Vasudeva - lr 1. As instructed by Krishna, Vasudeva crosses the Yamuna, who gives way. The turbulent waves of Yamuna gave the impression that she was anguished that the Supreme was in the guise of a mortal.  2. It appeared as though Vasudeva crossed the sea of birth, Jananasindhu, for being blessed with Krishna as his son.
    180120 – Yadava 04 -Vasudeva – lr
    1. As instructed by Krishna, Vasudeva crosses the Yamuna, who gives way. The turbulent waves of Yamuna gave the impression that she was anguished that the Supreme was in the guise of a mortal.
    2. It appeared as though Vasudeva crossed the sea of birth, Jananasindhu, for being blessed with Krishna as his son.

    ”வசுதேவர் மைந்தர் வாசுதேவர் ஆனார்
    நிசியில் யமுனை நதிநீர் -கசிந்திட(வழிவிடக் கசிந்தது)
    அப்பன் தலையமர்ந்து ஆண்டவா ஆயர்தம்
    குப்பம் விழைந்தவரே காப்பு’’….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 20

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் பரத்தையின் மனையிலேயே தங்கிவிட்டதனால் தலைவிகொண்ட வருத்தத்தையும் வேதனையையும் கண்ட தோழி தலைவனின் கூடா ஒழுக்கத்தைத் தலைவியிடம் கடிந்துபேசத் தொடங்கினாள்.

    ”அழகு மனைவியும் அருமைப் புதல்வனும் அகத்திருக்க, அவர்கள்பால் அன்போ அக்கறையோ சிறிதுமின்றி ஒரு குடும்பத் தலைவன் மனையறம் மறந்து புறத்தொழுக்கம் மேற்கொள்ளும் செயலின் திறத்தை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை” என்றாள் வஞ்சப் புகழ்ச்சியாய்! அவள் முகம் சினத்தில் சிவந்திருந்தது.

    இதே தலைவனின் குணநலன்களைப் புகழ்ந்து, இவனுக்காகப் பரிந்துபேசி இவனைக் காதலிக்க வைத்த அருமைத் தோழி இன்று கடுஞ்சினத்தோடு தலைவன் குறித்துக் கொடுஞ்சொற்கள் கூறியது கூரிய முள்ளெனத் தலைவியின் உள்ளத்தில் பாய்ந்தது. எனினும் அதனைச் சமாளித்துக்கொண்டு தோழியைச் சமாதானப்படுத்த முற்பட்ட தலைவி,

    தோழி! சமீபத்தில் குழவியீன்ற பெரிய கொம்பையுடைய
    பெண்ணெருமையானது, உழவனால் கட்டப்பட்ட buffaloதன்னுடைய இளங்கன்றிடமிருந்து அகலாமல் பக்கத்திலுள்ள பசிய பயிர்களை மேய்வதற்கு இடமாகிய ஊரினனான நம் தலைவனின் திருமனையில் வாழ்கின்ற, வயதில் முதிய பெண்டிராகிய, நமக்குச் செய்யவேண்டிய கடமைகள் எத்தனையோ இருக்க, அவனோடு ஊடியிருக்கும் இவ்வேளையில் அவனைப் பற்றிக் குறைகூறிக்கொண்டிருப்பதால் என்ன பயன் விளையப்போகின்றது?” என்றாள்.

    இதுமற்  றெவனோ  தோழி  துனியிடை
    இன்ன
     ரென்னும்  இன்னாக்  கிளவி
    இருமருப்
     பெருமை  யீன்றணிக்  காரான்
    உழவன்
     யாத்த  குழவியின்  அகலாது
    பாஅற்  பைம்பயிர்  ஆரும்  ஊரன்
    திருமனைப்  பலகடம்  பூண்ட
    பெருமுது
     பெண்டிரே  மாகிய  நமக்கே.  (குறுந்: 181 – கிளிமங்கலங்கிழார்/ கிள்ளி கிழார்)

    நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. எனினும் அதுபற்றியே பேசி இனி ஆகப்போவதென்ன…? நமக்கிருக்கும் வேறு வேலைகளைப் பார்ப்போம் என்று சொல்வதன் வாயிலாகத் தான் ஒன்றும் தலைவனின் அன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதைப் புலப்படுத்த முற்படும் தலைவி, நாம் பிள்ளைபெற்று வயதில் மூத்தவராய் ஆகிவிட்டோம்; அதற்கேற்ற வகையில் பக்குவத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பது அவளுடைய மனமுதிர்ச்சியின் வெளிப்பாட்டைக் காட்டுகின்றது எனலாம்.

    வாழ்வில் ஏற்படும் வலிகளும் துன்பங்களும் மனிதர்களுக்குப் பல பாடங்களைக் கற்பிப்பத்தோடு பக்குவத்தையும் கற்றுக்கொடுத்துவிடுகின்றது என்பதற்குத் தலைவியின் மொழிகள் தக்கதோர் சான்று.

    மாதங்கள் சில சென்றன. பரத்தையுடனான வாழ்வில் தலைவனுக்கு நாட்டம் குறையலாயிற்று. மனையாளுடனும் மலர்க்கண் புதல்வனுடனும் தன் மனையின்கண் மீண்டும் மகிழ்ந்துவாழ விரும்பினான்.

    ஆயினும் மனை மறந்து, தலைவி தனைத் துறந்து போற்றாவொழுக்கம் புரிந்த தன்னைத் தலைவி மன்னித்து ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்னும் ஐயம் உள்ளத்துள் ஊடாடியதால் தானே நேரடியாகச் சென்று தலைவியைக் காண நாணினான். ’வாயிலாக’ வேறுயாரையேனும் தலைவிபால் அனுப்ப வேண்டும் என்று சிந்தித்தான். அவ்வாறே தானறிந்த பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூதனுப்பினான்.

    இவ்விடத்தில் வாயில்கள் குறித்துச் சில வார்த்தைகள் கூற விழைகின்றேன்.

    வாயில்கள் என்போர் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் ஏற்பட்டுப் பிரிவு நேர்ந்திருக்கும் காலத்து, அவர்களை மீண்டும் இணைத்துவைக்கத் தூதுசெல்லும் மக்களாவர்.

    தோழி  தாயே  பார்ப்பான்  பாங்கன்
    பாணன்  பாட்டி  யிளையர்  விருந்தினர்
    கூத்தர்  விறலியர்  அறிவர்  கண்டோர்
    யாத்த
     சிறப்பின்  வாயில்க  ளென்ப(தொல். பொருள். கற்பியல். 52)

    எனும் தொல்காப்பிய நூற்பா கற்புக்காலத்துத் (திருமணத்துக்குப் பின்) தலைவன் தலைவியரிடையே தூதாகச் சென்று அவர்களிடையே உள்ள ஊடலைத் தீர்ப்பவர்கள் யாவர் எனும் பட்டியலை நமக்கு அறியத் தருகின்றது.

    தலைவியின் தோழி, செவிலி/நற்றாய், தலைவனின் உடனிருந்து அவனை நெறிப்படுத்தும் நூல் வல்லோனாகிய பார்ப்பான், தலைவனின் தோழனாகிய பாங்கன், பண்ணில் வல்லவனாகிய பாணன், பாடினி (பாட்டி என்பது பண்ணொடு பாடும் மகளிரைக் குறிக்கும்), இளையோர், புதியவர்களாகிய விருந்தினர், கூத்தர், விறல்பட ஆடும் நாடக மடந்தையராகிய விறலியர், அறிவிற்சிறந்தோர்/கணிவர், பரத்தையர் பிரிவின்கண் தலைவன் தலைவியரைக் கண்டோர் ஆகிய பன்னிருவரும் தலைவன் தலைவியர்க்கிடையே தூதுசெல்லும் வாயில்களாகும் தகுதியுடையோர் என்கின்றது தொல்காப்பியம்.

    தலைவன் அனுப்பிய பாணன் தலைவியின் இல்லம்வந்து நின்றான். வாயிலில் நிழலாடுவது கண்டு உள்ளிருந்து வெளியே வந்தாள் தோழி. அவளைப் பின்தொடர்ந்து தலைவியும் வந்தாள். தலைவியிடம் நேரடியாகப் பேசத் தயங்கிய பாணன், தோழியிடம் தலைவனின் கல்யாண குணங்களைப் (!) புகழத் தொடங்கினான்.

    ”தலைவன் யாருக்கும் தீங்கு நினையாத உத்தமன்; இனியவே பேசும் நன்மொழியன். அவன் இம்மைச் செய்தன யானறி நல்வினைகளே. ஆதலால் அறியாமல் அவன் செய்த பிழையை மறந்து அவனை ஏற்றுக்கொள்ளுதல் தலைவிக்கு நலம் பயக்கும்” என்று கூறினான்.

    தோழியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

    யாரினும்  இனியன்  பேரன் பினனே
    உள்ளூர்க்
     குரீஇத்  துள்ளுநடைச்  சேவல்
    சூன்முதிர்  பேடைக்  கீனில்  இழைஇயர்
    தேம்பொதிக்
     கொண்ட  தீங்கழைக்  கரும்பின்
    நாறா
     வெண்பூக்  கொழுதும்
    யாணர்
     ஊரன்  பாணன்  வாயே.  (குறுந்: 85 – வடமவண்ணக்கன் தாமோதரனார்)

    பாண! ஊரிலிருக்கும் குருவியின் துள்ளிய நடையுடைய ஆண்பறவையானது கருத்தரித்திருக்கும் தன் sparrow nestபெண்குருவி முட்டையீனுதற்கு ஏற்ற இல்லம் அமைத்தற்கு வேண்டி, தேன்பொதிந்த இனியகோலையுடைய கரும்பின் மணமற்ற வெண்பூவைக் கோதியெடுக்கும், புதுவருவாயை உடைய ஊருக்குத் தலைவன், உன் சொல்லளவில் மட்டுமே அனைவரினும் இனியன்; தலைவியின்மாட்டுப் பேரன்புடையன். ஆனால் உண்மையில் அவன் அங்ஙனம் இலன்!” என்றாள் சீற்றத்தோடு.

    கரும்பின் வெண்முகைகளைப் பிரித்து அறிவிற்சிறந்தsugarcaneflowers துக்கணங்குருவியானது செய்த கூட்டினைப் பற்றி நற்றிணையும் வியந்து பேசுவது இப்பாடலோடு வைத்தெண்ணத் தக்கது.

    ………….கரும்பின்
    வேல்போல்
    வெண்முகை பிரியத் தீண்டி
    முதுக்குறைக்
    குரீஇ முயன்றுசெய் குடம்பை… (நற்: 366: 7-9)

    தோழியின் சீற்றமொழி கேட்ட பாணனின் முகம் பேயறைந்ததுபோல் மாற்றம் கண்டது. இனி இவர்களிடம் தன் பசப்பு மொழிகள் பயன்படா என்றுணர்ந்த அவன் அங்கிருந்து விரைந்து நடையைக் கட்டினான். தலைவனிடம் நடந்தவற்றை விவரித்தான்.

    பிறரை நம்பிப் பயனில்லை என்றுணர்ந்த தலைவன், தானே சென்று தலைவியின் பிணக்கைத் தீர்ப்பதே சிறந்தது என்ற முடிவோடு தன் இல்லம் நோக்கிச் சென்றான்.

    வழக்கம்போல் தோழியே எதிர்ப்பட்டாள் முதலில். தலைவன் அவளைக் கண்டு நட்போடு புன்னகைத்தான். தோழி அதனைக் காணாதவள்போல் வேறுபக்கம் பார்த்தாள்.

    ”நீங்கள் அனைவரும் நலந்தானே?” என்று பேச்சைத் தொடங்கினான் தலைவன்.

    “எங்கள் நலத்திற்கு என்ன குறை?” என்றாள் தோழி வெடுக்கென்று.

    ”புரிகிறது…என்மீது உங்களுக்கெல்லாம் கடுங்கோபம்; அதனால்தான் வார்த்தைகளிலும் அனல் பறக்கிறது” என்றான் தலைவன் செயற்கையான புன்னகை ஒன்றை வரவழைத்துக்கொண்டு!

    ”ஐயா! உங்களுக்குப் பழைய நிகழ்வுகளெல்லாம் மறந்தேபோய்விட்டது. அவற்றைச் சற்றே நினைவுடுத்த விரும்புகின்றேன்” என்றாள் தோழி.

    அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்ற அச்சத்தோடும் மருட்சியோடும் அவளை நோக்கிக் கொண்டிருந்தான் தலைவன்.   

    [தொடரும்]

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    Yadavabhyudayam 03 180119 -yadavabhyudayam 03 - lr #watercolour #24x32cms Devaki was having Krishna on her lap, not as a child but in his divine form.  Vasudeva became free from his shackles, as though released from an unbearable debt.   He prays to Krishna that he disguise his divine form, fearing for his safety from the wrath of Kamsa.   Garuda, the personification of the scriptures, circles above to keep away all evil forces.   Krishnavathara was to lighten the burden of the earth, and on Adisesha, who held the earth (Bhoodara).   All the anxieties in the minds of all the people joined together like rivers and gushed into the mind of Kamsa, who was severely agitated.
    Yadavabhyudayam 03
    180119 -yadavabhyudayam 03 – lr #watercolour #24x32cms
    Devaki was having Krishna on her lap, not as a child but in his divine form.
    Vasudeva became free from his shackles, as though released from an unbearable debt.
    He prays to Krishna that he disguise his divine form, fearing for his safety from the wrath of Kamsa.
    Garuda, the personification of the scriptures, circles above to keep away all evil forces.
    Krishnavathara was to lighten the burden of the earth, and on Adisesha, who held the earth (Bhoodara).
    All the anxieties in the minds of all the people joined together like rivers and gushed into the mind of Kamsa, who was severely agitated.

    ’’தேவகித் தாயார் திடுக்கிடத் தாய்மாமன்

    காவலில் தோன்றியக் கண்ணபிரான் -தேவனவர்(வசுதேவர்)கட்டவிழ்த்தான்,கம்ஸனின் கஷ்டமானான்,வாகனத்துப்(கருட வாகனர்)பட்டாவில் வந்த பரம்’’….!

    ’’நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
    விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
    வெட்டுநீ துண்டிரெண்டு நாம்’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • நன்றும் தீதும்!

    பவள சங்கரி

    மனிதர்களில் 100% உத்தமர் அல்லது 100% தீயவர் என்றெவரும் இலர்.
    காலமும் சூழலும் அவரவர் அனுபவமுமே அதை நிர்ணயிக்கின்றது!

    மகாபாரதத்தில் கர்ணனுடன் கொண்டிருந்த உண்மையான நட்பின் மூலமாக மட்டுமே சிறப்புக்குரியவனாகப் பாராட்டப்பட்டவன், கொடூர குணமும், தீய எண்ணமும் கொண்டவனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளவன் துரியோதனன். அப்படிப்பட்டவனுக்கும் கோவில் கட்டி இன்றளவிலும் வழிபட்டு வருகிறார்கள் என்பதே இதற்குச் சான்று.

    மண்ணாசையால் பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பிய துரியோதனன் திரௌபதியின் துகிலுரித்தவன் என்று தூற்றப்பட்டவன். இவனுக்கும் உத்தரகண்டிலும், கல்வி அறிவு நிறைந்த மாநிலமான கேரளாவிலும் கோயில் கட்டி வழிபடுகிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

    03-1509696297-3

    உத்தரகாசியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்
    உத்தரகாசியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள கோவில்

    உத்தரகாசியின் சவுர் கிராமத்தில் துரியோதனனுக்கு கோயில் கட்டி வழிபட்டாலும், இந்தக் கோவிலில் கோபுரம் கிடையாது . இந்த அழகிய கோயிலின் கட்டுமான அமைப்பு அந்த மாநிலத்தின் சிறப்பு கட்டுமான வடிவத்தை ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    கேரளா மாநிலம், பொருவழி எனுமிடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    thuriyothanan-temple-kerala
    பாண்டவர்களைத் தேடிக்கொண்டு பல காடுகள், மலைகளில் அலைந்தவன், கடுத்தம்சேரி கொட்டாரம் என்றழைக்கப்பட்ட தென்பகுதியிலிருக்கும் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அப்பகுதி தாழ்த்தப்பட்ட குரவா வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்துவந்த பகுதி. நெடுந்தூரம் அலைந்துத் திரிந்து வந்த களைப்பில் தாகம் நாவை வறட்ட, அங்கிருந்த ஒரு வீட்டின் முன் சென்று பருக நீர் கேட்கிறான். அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்த வயதான பெண்மணி, அவனுக்குத் தண்ணீர் தர மறுத்தாள். காரணம் கேட்டதற்கு, உயர் வகுப்பினரான துரியோதனனுக்கு, தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த தான் தண்ணீர் கொடுத்தால், தனக்குத் தண்டனை கிடைக்கும் என்பவளிடம், பசியும் தாகமும் சாதியற்றவை, சக மனிதரின் உயிர் காப்பது மனிதரின் கடமை, தான் அஸ்தினா புரத்து அரசன், இப்பகுதி என்னுடைய பேரரசின் கீழ் செயல்படும் குறுநில மன்னர்களிடம்தான் இருக்கிறது. அதனால் உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பலவாறு பேசி சம்மதிக்க வைத்து தண்ணீர் கிடைக்கப்பெறுகிறான்.

    தாகத்தில் சுவை ஏதும் அறியாத நாக்கு, தாகம் அடங்கியபின் அது புளித்துப் போன நீராக இருப்பதை உணர்ந்தது. துரியோதனனும் அந்த மூதாட்டியைப் பார்த்து, அது என்ன நீர் என்று வினவினான். அதற்கு அந்த மூதாட்டியும்,
    “அரசே! நீங்கள் தாகத்தால் மிகவும் களைத்துப் போய் வந்தீர்கள். தங்களுக்கு, முதலில் தண்ணீர் கொடுக்கலாமென்றுதான் நினைத்தேன். ஆனால் நாட்டின் அரசரான தங்களுக்குச் சாதாரணமான தண்ணீர் தருவது எனக்குச் சரியாகப்படவில்லை. அதனால் எங்கள் வீடுகளுக்கு வரும் முக்கியமான விருந்தினர்களுக்கு நாங்கள் வழக்கமாகக் கொடுக்கும் கள் எனும் ஒரு பானத்தைத்தான் தங்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்”என்றாள்.

    துரியோதனனும், அது புளித்துப் போன ஒரு விதமான பானமாகயிருந்தாலும், அதைக் குடித்தவுடன் எனக்கு உற்சாகமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது. உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், தருகிறேன் என்றான்.

    அந்த மூதாட்டியும், இறை வழிபாட்டிற்குத் தங்களுக்குத் தனியாக ஒரு கோவில் வேண்டும் என்று வேண்டினாள். துரியோதனனும் அதற்குச் சம்மதித்து, அந்தப்பகுதி தலைவரிடம், அவர்கள் விரும்பும்வண்ணம் கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்ளவும், அந்தக் கோவில் கட்டுமானத்துக்கும், பயன்பாட்டுக்கும் தேவையான நிலங்களையும் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துவிட்டுச் சென்றான். இதையடுத்து அப்பகுதி மக்களின் வழிபாட்டிற்கு ஏற்றதாக ஒரு புதிய கோவிலைக் கட்டி, அக்கோவிலில், துரியோதனனையேத் தங்களது முதன்மைக் கடவுளாக நினைத்து வழிபடுகின்றனர். இன்றளவிலும் தினசரி வழிபாட்டுப் பணிகள் அனைத்தையும், குரவா வகுப்பினர்தான் செய்கின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்வில் வளமான மாற்றம் அமையும் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம் நெல் அறுவடை செய்யும் முன்பாக இந்த ஆலயத்தில், ‘மலக்குடா மகோத்சவம்’ மிகச்சிறப்பாக நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

    இணையப்படங்களுக்கு நன்றி.

    Share
  • தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

    -ஆ. அந்தோணிசாமி

    முன்னுரை

         இலக்கியம் என்பது வாழ்க்கையை வழிமொழிந்து சொல்வது தான் இலக்கியம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பா். தமிழ் இலக்கியங்கள் தனிமனிதனை   சுத்திகரிக்கும் ஆக்கப்பணியை செய்து வருகிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியங்களை வாழ்வில் இலக்கியங்கள் என்றும் கூறலாம். மனிதனின் சமுத்திரம் உணா்ச்சிகளைச் சின்னச் சின்ன சிப்பிகளில் வைத்துக் காட்டுகிறது. இலக்கியங்களின் கருத்துக்குவியல்கள் வாழ்வை உயா்த்தும் வாழ்வியல் கருத்துக்களைக் கூறி அவனை வாழ்வாங்கு வாழச் செய்கிறது.

         மனிதப் பண்புகளும் வாழ்வியல் அறங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கும் வேகம் நிறைந்த வாழ்க்கைச் சூழல் இன்றைய சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மனிதப் பண்புகளைத் திரும்பிப் பார்க்கக்கூட நேரமற்ற நிகழ்வுகளால் மட்டுமே நகா்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம் இதனை நெறிப்படுத்த மேம்பாடடையச் செய்ய தமிழ் இலக்கியங்களின் பங்கு இன்றியமையாததாகும். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வாழ்வியல் சிந்தனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    தனிமனிதஒழுக்கம்

         வாழ்வியல் ஒழுக்கம் என்பது நற்பண்பாகும். நன்நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதராக வாழ முடியும். தனிமனித ஒழுக்கமே சமூகம் மேம்பட அடிப்படை காரணமாக இருக்கும். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தை அனைத்து அற இலக்கியங்களும் முதன்மைப்படுத்துகின்றன. பழமொழி நானூறு ஒழுக்கத்தை விட உயா்ந்தது ஒன்றுமில்லை என்பதை

         “கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓா்
         பொல்லாதது இல்லை ஒருவருக்கு – நல்லாய்
         ஒழுக்கத்தின் மிக்க இழவு இல்லை இல்லை
         ஒழுக்கத்தின் மிக்க உயா்வு”     (64-பழமொழி நானூறு)

    எனக்கூறும் நல்லொழுக்கமே செல்வம் என்கிறது நான்மணிக்கடிகை. அதே வேளையில் ஒழுக்கம் தவறியவா்களிடத்துச் செல்வம் தங்காது என்று

         “திருவும் திணை வகையான நில்லார் பெருவலிக்
         கூற்றமும் கூறுவசெய்து உண்ணாது ஆற்ற
         மறைக்க மறையாதாம் காமம் முறையும்
         இறை வகையான் நின்றுவிடும்” (39 – நான்மணிக்கடிகை)

    எனப் பகா்கிறது. கல்வி கற்றால் ஒழுக்கம் வரும் என்று அனைத்து இலக்கியங்களும் கூறுகிறபோது முதுமொழிக்காஞ்சி ஒழுக்கம் கல்வியை விட சிறந்தது என்கிறது.

         “ஆா்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
         ஓதலின் சிறந்தன்று. ஒழுக்கம் உடைமை”    (1-முதுமொழிக்காஞ்சி)

    அறம்

         மனித இயக்கத்தின் வாழ்வியல் அடிப்படைப் பண்புகளே அறமாகும். அறம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களுள் பல இடங்களில் வந்துள்ளது அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது. அறம் என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல், அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம் பொதுவாக நல்லொழுக்கமும், நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும். அறம் மனிதனில் வாழ்வியல் கூறுகளில் ஒன்று தமிழ் இலக்கியங்கள் அறம் பற்றி அதிகம் பேசுகின்றது.

    இல்லறம்

         அறநெறியில் இல்வாழ்க்ககையை அமைத்துக் கொண்டவா்கள் பெற்றிடும் பயனை வேறு நெறியில் சென்று பெற்றிட இயலாது.

         ”அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
          போஒய்ப் பெறுவ தெவன்”   (குறள் – 46)  என வள்ளுவர் கூறுகிறார்.

    இல்லறம் என்பது இல்வாழ்க்கையைக் குறிப்பதாகும். இது ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதாகும். திருமணம் என்பது உடற்சோ்க்கையன்று அது உணா்வுகளின் சோ்க்கை. திருமணம் புரிந்து இல்லறத்தை நடத்துவது இன்பத்திற்காக மட்டுமல்ல அறத்திற்காகவும் என்பது பழந்தமிழ்க் கொள்கையாகும். இல்லறம் துறவறத்திற்கு முரண்பட்டதன்று. இளமையில் முதிர்ச்சி மூப்பதல் போல இல்லறத்தின் முதிர்ச்சி துறவெனக் கொள்ளல் வேண்டும்.

         இல்லறம் நடத்திய இறுதிக் காலத்துத் தமக்குக் காவலாக அமைந்த மக்களோடு கூடியிருந்து அறத்தை விரும்பும் சுற்றத்தோடு சிறந்த பணிகளைச் செய்தல் இல்லற வாழ்வு நடத்தியதன் பயன் எனத் தொல்காப்பியம் கூறியுள்ளதை காணலாம்.

         “காமம் சான்ற கடைக்கோட் காலை
         ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
         அறம்புரி சுற்றமோடு கிழவனும் கிழத்தியும்
         சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (51-தொ.பொ.கற்பு)

    மனத்தூய்மை உடையவா்க்கே நன்மக்கள் வாய்ப்பா். அதனால் கணவன் மனைவி பண்பினராய் இருத்தல் வேண்டும். நன்மக்களை பெற்ற தந்தை அவா்களை அவையத்து முந்தியிருப்பச் செய்தல் வேண்டும். சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்று புறநானூற்றுப் பாடல் புகழும். இல்லறம் பற்றிய இல்லாத கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை.

    பிறனில் விழைதல்

         பிறனுடைய மனைவியை விரும்பாமையே பிறன் இல்விழையாமை என்று வள்ளுவா் சுட்டுகிறார். இல் என்றால் இல்லறத்திற்குரிய இல்லாளை இங்குச் சுட்டுகிறது. விழைவு என்றால் விரும்புதல் என்று பொருள். பிறன் மனைவியை விரும்பாதவா்களின் சிறப்பும். பிறன் மனைவியை விரும்புபவா்களின் இழிவும் பற்றி வள்ளுவா் பல கருத்துக்களை வழங்கியுள்ளார்.

         ”எனைத் துணையா் ஆயினும் என்னாம் திணைத்துணையும்
         கோரன் பிறன் இயல்புகல்”

    எவ்வளவு பெருமையுடையவனாக இருந்தாலும் சிறிதும் ஆராய்ந்து பார்க்காமல் பிறன் மனைவியை விரும்புதல் என்ற தீய செயலைச் செய்யும் ஒருவனது பெருமைகளால் எந்தவிதப் பயனும் இல்லை.

         பழங்காலத்திலிருந்து வரன்முறையற்ற உறவுகள் நிலையிலும் இன்னும் சில இனக்குழு மக்களிடம் முறையற்ற பால் உறவுகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூகம் வரன்முறையான உறவுகளைப் பழங்காலந் தொட்டே பின்பற்றியுள்ளது. சங்காலம், சங்கம் மருவிய காலத்திலும் முறையற்ற உறவுகள் இருந்திருக்கின்றன. நகர நாகரீகம், கடல் தாண்டிய அயல் நாட்டவா் வரவு அருகிலுள்ள வேற்று நாட்டுப் பயணிகளின் கலப்பு ஆகியன பால் உறவுச் சீா்கேட்டிற்குக் காரணங்களாகும். துறவு நெறி வற்புறுத்தப் பெறும்போதும் ஆணும் பெண்ணும் தமக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தடை கோரும் போது பிறனில் விழைதல் நடைபெறும்.

         பிறன்மனை விழைதலை நரகத்திற்குச் செல்லும் வழி என இழிந்து பேசுகிறது ஆசாரக் கோவை.

    பிறா்மனை கட்களவு சூது கொலையோ
         பிறனறிந்தா ரிவ்வைந்து நோக்கார் – திறனிலரென்
         றெள்ளப் படுவதூஉ மன்றி நிரயத்துச்
         செல்வழி யுய்த்திடுத லால்     (37 – ஆசாரக் கோவை)

    நல்லொழுக்கமில்லாதவரென்று இகழப்படுவதல்லாமல் நரகத்துக்குச் செல்லும் வழியில், செலுத்துதலால், ஒழுக்கம் அறிந்தவா் பிறருடைய மனையாளும் கட்குடிப்பதும், களவுசெய்தும், சூதாடுதலும், கொலை செய்தலும் மனத்தாலும் நினையார். 

    விருந்தோம்பல்

         சங்ககால மக்கள் ஈதலையும் விருந்தோம்புதலையும் இரு கண்களாகக் கருதி அவற்றை வாழ்வில் பின்பற்றி வந்தனா். விருந்து என்பதற்குப் புதுமை என்று விளக்கமளிக்கிறது தொல்காப்பியம். முன்பின் அறியாத புதியோர்க்கு எளிய உணவாயினும் அதனைப் பகிர்ந்தளித்து உண்ணும் குணம் சங்கத்தமிழா்களிடைய மிகுந்து இருந்தது.

         நல்லியக்கோடன் தன்னை நாடி வந்த பாணா்களுக்குப் பரிசில் கொடுப்பது மட்டுமன்றி விருந்தோம்புதலிலும் குறைவில்லாதவன் தான் அரசனாக இருந்தபோது விருந்தளிக்கும் போது முன்னின்று செய்யக் கூடியவன்.

         ”பல்வேறு அடிசில்
         விளங்கப் பொற்கலத்தில் விரும்புவன பேணி
         ஆனா விருப்பின் தான்நின்று ஊட்டி .(.244-245 சிறுபாணாற்றுபடை)     என்னும் அடிகள் இதற்குச் சான்று.

         தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல் விரும்பி தொடா்ந்து கடைப்பிடித்து வந்த வாழ்வியல் நிகழ்வு ஆகும். தமிழா் விருந்தினா் உண்டபின் எஞ்சிய உணவையே மகிழ்வுடன் உண்டனா். இதனை

         “விருந்து உண்டு எஞ்சிய மிச்சம் பெருந்தகை
         நின்னோடு உண்டலும் புரைவது”     என்னும் அடிகள் மூலம் அறியலாம்.

    ஈகை

         ஈகை என்பது எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றித் துன்புற்ற ஒருவர்க்கு அளித்தலாகும். பொருள் ஈட்டினால் மட்டுமே போதாது அதை ஈதலும் வேண்டும் அதனால்தான் புறநானூறு,

         “செல்வத்துப் பயனே ஈதல்” (8-புறநானூறு)  என்கிறது.

         “ஆற்றுதல் என்பது அலந்தவா்க்கு உதவுதல்” எனக் கலித்தொகை சுட்டுகிறது. தோண்டத் தோண்ட நீா் ஊறுவது போலக் கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகும் என்ற கருத்தும் நிலவியது. சான்றோரின் நெறியிலே வாழ்ந்தவன் ஆய் அண்டிரன் புறநானூற்றிலே அவனைப் பற்றி ஒரு செய்தி,

         ”இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
         அறவிலை வாணிக னாயலன் பிறகும்
         சான்றோர் சென்ற நெறியென
         ஆங்குப் பட்டன் றவன் கைவண்மையே”   (134-புறநானூறு)

         அடுத்தவா்க்கு கொடுத்தல் என்பதை வாழ்வில் தலையாயக் கடமையாக மதித்துள்ளனா் அக்கால மக்கள். கபிலா் பாரியின் ஈகையைப் பின்வருமாறு சுட்டுவா்.

         ”முந்நூறு ஊறும் பாசிலா் பெற்றனா்
         யாமும் பாரியும் உளமே
         குன்றும் உண்டுநீா் பாடினீா் செலினே” (110-புறநானூறு)

    தமக்கென எதையும் சோ்த்து வைக்காது ஈகை செய்து இன்புற்று மகிழ்ந்தனா் என்று மன்னா் தம் கொடைப் பண்பினைக் குறிப்பிடுகின்றது. இதைத்தான் பின்னால் வந்த ஒரு திரைப்படக் கவிஞன்

         “அள்ளிக் கொடுத்து
         வாழ்பவா் நெஞ்சம்
         ஆனந்தப் பூந்தோப்பு” என்றான். எனவே ஈகை வாழ்வில் நிகழ்வில் முக்கியத்தவம் பெற்றது என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.

    கல்வி

         கல்வியின் மகத்துவத்தை உணா்ந்தவர்களே சான்றோர்கள். கல்வி கற்க வேண்டுமெனில் ஆசிரியா்க்கு உரிய மரியாதைசெலுத்தி கற்ற வேண்டும். ஆசிரியா்களைக் காப்பதும் மாணவா்களின் இன்றைய கடமையாகக் கூறப்படுகிறது. கல்வியானது தாயின் மனதையும் மாற்றும் ஆற்றல் பெற்றது. சாதி வேறுபாட்டைக் கூட மாற்றவல்ல சக்தி வாய்ந்தது கல்வி, அதனால் தான் ஔவையாரும் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறுகிறார்.

         “கண்ணுடையோர் என்போர் கற்றோர்” என்று வள்ளுவரும். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா விடு” என்று புரட்சிக் கவிஞன் பாரதிதாசனும் எழுத்தறிவின் அவசியத்தை பாடினார்.

         “எழுத்து
         விதைகள்
         இதயங்களில்
         தூவப்படும்
         போது
      செழித்து
         வளா்வது
         ஒரு
         தனி மனிதன்
         அல்ல
         சமுதாயம்”

    என்று கவிஞா் மு.மேத்தா கல்விச் சிந்தனைகளை கல்வெட்டாய்ப் பதித்து வைத்துள்ளார்.

    மது பற்றிய விழிப்புணா்வு

         இன்றைய இளைய சமுதாயம் அறிவில் மனத்தைச் செலுத்தாது மதுவில் மயங்கி வாழ்வைச் சீரழித்து விடுகிறது. இத்தீய பழக்கம் அவா்தம் மதிப்பை இழக்கச் செய்யும். மது அருந்தியவனைக் கண்டால் ஈன்ற தாயின் முகமே வெறுபப்டையும். மதுவுண்டு மயங்கியவன் செத்தவனாகவே ஆளாவான். தனது பொருளை மதுவாங்கி மயங்குவது அவனது அறியாமையே ஆகும்.

         “கைஅறி யாமை உடைத்தே பொருள் கொடுத்து
         மெய் அறி யாமை கொளல்”    (குறள் – 925) என்பார் வள்ளுவர்.

         எண்ணத்தையே அழிக்கும் மதுவினைத் தூக்கி ஏறி என்று இளைய வாலிப உள்ளங்களுக்கு கவிஞா் மேத்தா விழிப்புணர்ச்சி ஊட்டுகின்றார்.

         “கிண்ணத்தைத் தூக்கிஎறி – மதுக்
         கிண்ணத்தைத் தூக்கி எறி
         எண்ணத்தை விறகாக்கி
         இதயத்தைக் கரியாக்கும் – மதுக்
         கிண்ணத்தைத் தூக்கி எறி”

    இங்ஙனம் மதுவினால் ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞா். தமிழ் இலக்கியங்களில் மது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல சமூகத்தின் வளா்ச்சியைப் பாதிக்கும் என்பதை காட்டுகிறது.

         ”புகைப் பிடித்தால் இறப்பாய்
         மது குடித்தால் இறப்பாய் இரண்டும்
         விட்டால் வாழ்வில் சிறப்பாய்”  தமிழன்பன்

    புகை, மதுப்பழக்கம் உள்ளவா்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

    அரசியல் விழிப்புணர்வு

         மக்கள் வாழ்வு மேம்பட நல்ல தொலைநோக்குள்ள நல்ல தலைவா்கள் உருவாக வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டி தோ்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் இன்று சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் பந்து எரியும் போட்டியைப் போன்று செருப்பு வீசும் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ”கோயில் செய்குவோம்” என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில் கவிஞா் வைரமுத்து இதனை நகையாடுகிறார்.

         ”இன்னும் கொஞ்சம் நாளில்
         அத்தனை சட்டக்கலைகளும்
         ஆலயங்கள் ஆகலாம்
         அங்கும்
         செருப்போடு நுழைவது
         தடை செய்யப்படலாம்”.     (இன்னொரு தேசியகீதம்)

    தோ்தல் முறை மாறினாலும் ஜனநாயகம் மட்டும் மாறாமலே இருக்கிறது. அதனால் தான் அரசியல்வாதிகள் கட்சி மாறிகளாக மாறிவிட்டனா்.

         “எங்கள் ஊா் எம்.எல்.ஏ
         ஏழு மாதத்தில்
         எட்டுதடவை
         கட்சி மாறினார்”   (மீரா.ஊசிகள்)

    என்ற மீராவின் வரிகள் மக்கள் சிந்தனைக்கு விடப்பட்டதாக அமைகின்றன. அரசியல் விழிப்புணா்வு இன்றைய தமிழ் இலக்கியம் சுட்டிகாட்டுகிறது.

    அறிவியல் விழிப்புணா்வு

         இன்றைய வாழ்வில் அறிவியலில் வளா்ந்த நாடுகளே வளா்ந்த நாடுகளாக அறியப்படுகின்றன. அறிவியல் விழிப்புணா்வு இன்றைய வாழ்வில் அடிப்படையான ஒன்றாக உள்ளது. மேலைநாடுகளில் அறிவியல் வளா்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நம் மக்கள் அறிவியல் என்ற சொல்லையே இப்போதுதான் கண்டறிந்திருக்கிறார்கள்.

         முடங்கி கிடக்காதே! விரைவில் முன்னேற
         வழிபார்! முயன்றால் முன்னேற முடியும்.
         மூச்சு விட்டுக்கொண்டிருந்தவன் எல்லாம்
         மனிதன் இல்லை
         முயற்சி செய்து கொண்டிருப்பவன்
         மட்டுந்தான் மனிதன்        (பா.விஜய் சிந்தனைச் சிறகுகள்.) என்பார் பா.விஜய்

    பொதுவுடமை

         இயற்கையின் மூலம் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறார் கவிஞர் வைரமுத்து ”வானம்” பற்றி கவிதையில்

    ”குனிந்து குனிந்து
    கூன் விழுந்த மனிதா!
    வான் பார்க்கநிமிர்
    வானம் முழுக்க
    உனக்கு
    நீ ஏன்
    வரப்புக்குப் போராடுகிறாய்?”

    என்ற வரிகள் தொழிலாளர்களின் நிலையைச் சுட்டி, அவர்களுக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்துவது போல் அமைகிறது. இன்றைய வாழ்வில் அடிமைத்தனத்தை நீக்கி, சுய சிந்தனையோடு வாழவேண்டும் என்பதைநினைவூட்டுகிறது. குனிந்தே பழக்கப்பட்டவனுக்குத் திடீரென நிமிர முடியவில்லை. அதனால் குனிந்து கொண்டே செல்லாதே, உன் வாழ்கைத் தரத்தை உயர்த்தப்பார், இந்த வானம், பூ, எல்லாம் உனக்கு பிறகு எதற்குப் போராடுகிறாய் என்று கேள்விக்கேட்டு அவனைச் சிந்திக்க வைக்கிறார். 

    முடிவுரை

         நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க விரும்புகின்றோம். உயர்ந்த இலட்சியமுறை மனிதர்களை உருவாக்குவதன் மூலமாகத்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்; மனிதர்களை உருவாக்குவதற்குப் பெருமளவு தமிழ் இலக்கிங்களில் உள்ள வாழ்வியல் சிந்தனைகள் உதவும். பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஊட்டி மனிதம் காக்கப் பயன்படுகிறது இலக்கியங்கள். 

         தமிழ் இலக்கியங்களில் குவிந்துகிடக்கின்ற மனித வாழ்வியல் கருத்துகளான, அறம், தனிமனித ஒழுக்கம், இல்லறம், பிறனில் விழைதல், விருந்தோம்பல், ஈகை, கல்வி, மது பற்றிய விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு, அறிவியல் நம் வாழ்க்கை பயணங்களில் கையாண்டால் நமது வாழ்வு ஒளிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

         இக்கட்டுரையானது தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகளை அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது. நம் இலக்கியங்களைப் பயின்றுவிட்டால் வாழ்க்கையைப் பயின்றுவிட்டதாகப் பொருளாகும், வாழ்வியல் சிந்தனைகளைக் கற்போம். இப்புவியில் இன்பமான வாழ்க்கையை வாழ்வோம்.

    *****

    பார்வை நூல்கள்

    1. பழமொழி நானுாறு – 64
    2. நாண்மணிக்கடிகை – 39
    3. முதுமொழிக்காஞ்சி – 1
    4. திருக்குறள் – 46, 144, 925
    5. தொல்காப்பியம் – 51
    6. ஆசாரக்கோவை – 37
    7. சிறுபாணாற்றுப்படை – 244-245
    8. கலித்தொகை – 133
    9. புறநானூறு – 8.
    10. பாரதிதாசன் கவிதைகள்
    11. இன்னொரு தேசியகீதம் – வைரமுத்து – 49
    12. வானம் – கவிதை – வைரமுத்து

    *****

    கட்டுரையாளர்
    பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
    அரசு கலைக்கல்லூரி
    சேலம் – 07

     

     

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) – 2

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    what men live by picture 2

    ஆகவே சைமன் திரும்பி அந்த உருவத்திடம் சென்றான். அருகில் சென்று பார்த்த போது ஒரு திடகாத்திரமான இளைஞன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பில் ஒரு காயமும் இல்லை. சைமன் இன்னும் அருகில் சென்ற போது அவன் மெதுவாகத் தலையை உயர்த்திச் சைமனைப் பார்த்தான். அந்தப் பார்வை சைமனின் உள்ளத்தைத் தொட்டது. சைமன் அவன் முழங்கைகளைப் பிடித்து எழும்ப உதவி செய்தான். அவன் கைகளும் கால்களும் திடமாகவும், முகம் அமைதியாகவும் கருணை நிரம்பியிருப்பதையும் சைமன் கவனித்தான். பின் தன்னுடைய மேல் கோட்டையும், கையிலிருந்த பழைய செருப்புகளையும் அணிய உதவி செய்தான். *உன்னால் நடக்க முடியுமா?’ என்று சைமன் கேட்டதற்கு அவன் பதில் கொடுக்காமல் மெதுவாக எழும்பி சைமனைக் கனிவாகப் பார்த்தான். சைமன் தன் கையிலிருந்த ஊன்று கோலை அவன் கையில் கொடுத்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த மனிதன் இலகுவாகவும் சைமனுக்கு இணையாகவும் நடந்தான். வழியில் அந்த மனிதன் ஒன்றும் பேசவில்லை.

    சைமன் அவனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டதற்கு அவன் “ நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்.

    “எப்படி இந்த ஆலயத்திற்கு வந்தாய்?” “என்னால் சொல்ல முடியாது?”

    “உன்னை யாராவது துன்பப்படுத்தினார்களா”?

    “இல்லை. ஒருவரும் என்னைத் துன்பப்படுத்தவில்லை, இறைவன் எனக்குத் தண்டனை கொடுத்தார்”.

    “ஆம். இறைவன்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார். சரி, உனக்கு உணவு, ஆடை, தங்க இடம் வேண்டும். நீ எங்கே போக வேண்டும்?”

    “எனக்கு எல்லாம் ஒரே இடம்தான்”.

    சைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்ப்பதற்கு நல்லவனாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு என்ன நடந்ததோ தெரியாது, என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் “சரி, அப்படியானால், என் வீட்டிற்கு வந்து குளிருக்கு ஒதுங்கிக் கொள்” எனறான்.

    சைமன் வேறு கேள்விகள் கேட்கவில்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. தன்னுடைய மனைவியை நினைத்தான். ஒரு புதிய மனிதனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதை அவள் விரும்பமாட்டாளென்று அவனுக்குத் தெரியும். அவளை நினைத்த போது அவன் மனம் வேதனைப் பட்டது. ஆனால் அந்த மனிதன் தன்னை முதல் தடவையாகக் கனிவுடன் பார்த்த பார்வை நினைவில் தோன்றியதும் மகிழ்ச்சியடைந்தான்.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180118 - Yadavabhyudayam 02 -lr watercolour 24x32cms  On Bhoodevi’s plea, Krishna decides to descend on earth to re-establish dharma.  1. During her pregnancy, Devaki ate the mud, symbolic of the earth, as if to show that the one who devoured the earth is inside her. 2. She dreamt that she was lying on Anantha and transported by Garuda. It was as though they served Krishna inside her womb.
    180118 – Yadavabhyudayam 02 -lr
    watercolour 24x32cms
    On Bhoodevi’s plea, Krishna decides to descend on earth to re-establish dharma.
    1. During her pregnancy, Devaki ate the mud, symbolic of the earth, as if to show that the one who devoured the earth is inside her.
    2. She dreamt that she was lying on Anantha and transported by Garuda. It was as though they served Krishna inside her womb.

    ”தேவகி மண்ணுண்டாள் தெய்வம் சுமக்கையில்,
    காவலில் கண்ணயர்ந்தாள், கண்ணனின் -சேவகன்
    நாகப் படுக்கையில், நந்தன்சேய் தோன்றினன்
    ரோகிணி ரேவதியில் ரங்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கருணையும் சட்டமும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்க இல்லினாய் மாநில சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான எல்ஜினில் கருணை வடிவான க்ரெக் ஷில்லெர் என்பவர் சென்ற வாரம் கடுமையான குளிர் நிலவியபோது வீடற்ற ஏழைகளைத் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் (basement) தங்குவதற்கு அனுமதித்தார்.  சென்ற வாரமும் இப்போதும் நிலவிவரும் குளிர் சாதாரணமானதல்ல. பல வருடங்களின் ரிக்கார்டை மாற்றியிருக்கும் குளிர்.  உடம்பின் எலும்புகளைக்கூட துளைக்கும் குளிர்.  அமெரிக்காவில் வீடற்றவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.  இந்தியாவில்போல் எப்போதுமே தெருவில் குடியிருப்பவர்கள் அமெரிக்காவில் குறைவு.  இப்படி வீடற்றவர்களில் பலர் நிரந்தரமாக வீதிகளில் குடியிருப்பவர்கள் இல்லை.  எல்ஜினில் வாழும் 1,10,000 பேரில் 100 பேர்தான் இப்படித் தற்காலிக வீடற்றவர்கள்.  இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றுவிட்டு விடுதலையாகித் திரும்பும்போது அவர்கள் தங்குவதற்கு உறவினர்கள் யாரும் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் போதைப் பொருள் உபயோகத்திற்கு அடிமையாகி அதனால் வேலையை இழந்து அதனால் வாழ்வாதாரத்தை இழந்து தற்காலிகமாக இரவு தங்குவதற்கு இடம் இல்லாமல் இருக்கலாம்; அல்லது அவர்கள் பார்க்கும் வேலையில் கிடைக்கும் பணத்தில் வீட்டு வாடகையும் கொடுத்து மற்றச் செலவுகளையும் சமாளிக்க முடியாமல் இருக்கலாம்.

    இவர்கள்தான் வீடற்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.  இப்படி இரவில் தங்க இடம் இல்லாதவர்களுக்குப் பெரிய நகரங்களும் சிறிய நகரங்களும் இரவில் தங்கத் தங்குமிடங்கள் (shelters)  கட்டிக் கொடுத்திருக்கின்றன.  ஆனால் வீடற்றவர்களில் சிலர் இங்கு தங்கப் பிரியப்படுவதில்லை.  அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.  இரவு பத்து மணிக்கு அந்த விடுதிகளின் கதவுகள் மூடப்பட்டுவிடும்.  அதன் பிறகு வருபவர்களுக்கு அவை திறக்கப்படுவதில்லை.  மேலும் அங்கு போதைப் பொருள்கள் சாப்பிடுவது, மதுபானங்கள் குடிப்பது ஆகியவை தடைசெய்யப்படுகிறது.  சிலர் அங்குள்ள நடைமுறை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை விரும்புவதில்லை.

    இவர்களுக்கு இரவில் தங்க இடம் கொடுத்த ஷில்லரை எல்ஜின் ஊராட்சி கண்டித்திருக்கிறது; இந்தச் சேவையை நிறுத்தவும் ஆணை இட்டிருக்கிறது.  அவர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் தேவையான வெளிச்சம் இல்லையென்பதும் தீ விபத்து போன்ற சமயங்களில் (அமெரிக்காவில் வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை; எளிதாகத் தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையவை) தப்புவதற்குத் தேவையான வாசல்கள் இல்லையென்பதும் ஊராட்சியின் கண்டனத்துக்குரிய காரணங்கள்.

    ‘ஷில்லருக்கு மிகவும் இளகிய மனம்.  அதை மறுப்பதற்கில்லை; அதை நாம் போற்ற வேண்டும்.  ஆனாலும் சில விதிகளை அவர் மீறியிருக்கிறார்.  அதனால் அவர் வீடற்றவர்களை இரவில் தன் வீட்டில் தங்கவைப்பதை நாம் தடுத்தே ஆக வேண்டும்.  மேலும் நகரில் மூன்று விடுதிகள் இருக்கின்றன.  அவை சட்டத்திற்குட்பட்டவை’ என்று ஊராட்சி அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவில் மனிதர்கள் தங்குவதற்குச் சில சட்ட திட்டங்கள் இருக்கின்றன.  பல அளவுகளிலான அப்பார்ட்மென்ட்களில் எத்தனை பேர் தங்கலாம் என்பதற்கு வரைமுறைகள் இருக்கின்றன.  அதேபோல் மேலே குறிப்பிட்ட வகையான விடுதிகள் எங்கு கட்டப்பட வேண்டும், எப்படிக் கட்டப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன.  இந்த விதிகளைப் பின்பற்றாத வீடுகளில் மனிதர்களைத் தங்கவைப்பது சட்டத்திற்குப் புறம்பானதாகக் கருதப்படுகிறது.

    பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், தனிமனித சொத்துரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர் ஊராட்சி தன் வரம்பிற்கு மீறி ஷெல்லர் விஷயத்தில் தலையிட்டிருக்கிறது என்று நினைக்கிறார்.  ‘ஷில்லர் வீடற்றவர்களுக்கு உதவ விரும்புகிறார்.  வீடற்றவர்களுக்கு இரவில் தங்குவதற்கு இடம் தேவைப்படுகிறது.  இதில் தலையிட ஊராட்சிக்கு உரிமை இல்லை’ என்று வாதாடுகிறார்.  ‘உதவி தேவைப்படும் அவசர காலங்களில் மட்டும்தான் ஷில்லர் தன் வீட்டில் இவர்களுக்கு அடைக்கலம் தருகிறார்.  ஆண்டு முழுவதும் இதைச் செய்வதில்லை’ என்கிறார் அவர்.  உண்மை நிலையை உணராது விதிகளைத் திணிப்பது அவ்வளவு சரியல்ல என்பதும் இவரது அபிப்பிராயம்.

    ஷில்லர் ஏற்கனவே மற்றவர்களோடு சேர்ந்து ‘மேத்யூ 25:40’ என்ற அவசரகால விடுதி ஒன்றைத் திறந்திருக்கிறார்.  பைபிளின் புதிய ஏற்பாட்டின் மேத்யூ 25:40-இல் ‘என் சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் செய்யும் எந்த உதவியும் எனக்குச் செய்ததற்குச் சமம்’ என்று யேசு கூறியிருப்பதன் அடிப்படையில் இந்த விடுதிக்கு மேத்யூ 25:40 என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெப்பநிலை பாரன்ஹீட் 15 டிகிரிக்குக் கீழ் சென்றால்தான் இந்த விடுதி திறக்கப்படும்.  ஷில்லர் வெப்பநிலை 15 டிகிரிக்குக் கீழே செல்லும்வரை தன் வீட்டில் இவர்களுக்கு இடம் கொடுக்கக் காத்திருப்பதில்லை.  15 டிகிரிக்கு மேலேயும் குளிரைத் தாங்க முடியாது என்பது இவருடைய வாதம்.  ‘என்னுடைய வாழ்வாதாரத்திற்கு நான் மெக்கானிக் வேலை பார்த்தாலும் என் உள்ளம் இந்த வீடற்றவர்களுக்கு உதவுவதைத்தான் விரும்புகிறது’ என்று ஒரு வானொலிப் பேட்டியில் கூறியிருக்கிறார் 53 வயதான ஷில்லர்.

    ‘நான் இரவில் தங்க இடம் கொடுத்து உதவுபவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.  இதை நான் ‘சினிமா இரவுகள்’ என்று அழைப்பேன்.  அப்போது அவர்களுக்கு நான் சூடான பானங்கள், தின்பண்டங்கள் வழங்குவேன்.  அதிக பட்சம் 15 பேர் தங்கியிருந்திருக்கிறார்கள்.  அவ்வப்போது அவர்களை நான் கவனித்துக்கொள்வேன்’ என்கிறார் ஷில்லர்.  (அமெரிக்காவில் நண்பர்கள் சேர்ந்து இரவில் சினிமா பார்ப்பது வழக்கம்.  இதை movie nights என்பார்கள்.)   தன் வீட்டில் வீடற்றவர்களைத் தங்கவைப்பதற்கு முன் தன்னுடைய கார் ஷெட்டில் இவர்களைத் தங்கவைத்திருக்கிறார்.  தேவையான ஹீட்டர் வசதிகள் எல்லாம் செய்துகொடுதிருக்கிறார்.  ஒரு முறை ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டு அவசர மருத்துவ உதவியை நாட வேண்டியதாயிற்று.  அப்போது வீட்டுக்கு வந்த அந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்ததால் அப்போதைக்கு கார் ஷெட்டில் அவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதை நிறுத்த வேண்டியதாயிற்று.  இப்போது இவர் வீட்டில் அவர்களைத் தங்கவைப்பதைப் பற்றியும் யாரோ புகார் கொடுத்திருக்கிறார்கள்.  அவர்கள் தன்னுடைய பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார் ஷில்லர்.  தனக்கு வேண்டாதவர்கள் செய்த வேலை இது என்கிறார்.

    மனிதனின் மனதில் ஊற்றெடுக்கும் இம்மாதிரியான இரக்க உணர்வுகளுக்கும் – இவை மனிதர்களால் வியந்து பாராட்டப்பட்டாலும் –  அரசு விதிக்கும் விதிகளுக்கும் – இவையும் மனிதர்களால் மதிக்கப்பட்டாலும் – இடையே மோதல் ஏற்படுவதுண்டு.  இம்மாதிரி சமயங்களில் சிலவற்றில் நீதிமன்றங்கள் தலையிட்டு இரண்டில் எது மனித நலத்திற்குச் சிறந்தது என்று தீர்மானிக்கும் உரிமையைப் பெறுகின்றன.

    ஷில்லர் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் வீடற்றவர்களைத் தங்கவைப்பது தடைசெய்யப்பட்ட பிறகு ஊராட்சி அதிகாரிகளும் ஷில்லரும் சந்தித்து வீடற்றவர்களுக்கு இரவில் மிகக்குளிர் காலத்தில் தங்க வசதிசெய்து கொடுப்பது பற்றி பல விவாதங்கள் நடத்தினர்.  காவல்நிலையங்களின் வராந்தாக்களில் அவர்களைத் தங்கவைப்பது பற்றியும் ஒரு யோசனை இருக்கிறது.  தன்னுடைய உரிமைகளில் தலையிடுவதாகக் குறைகூறி ஊராட்சியின் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்த ஷில்லர் இப்போதைக்கு அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டார்.  ‘ஊராட்சியின் விதிகளை நான் மதிக்கிறேன்.  ஆனால் சில நேரங்களில் சில விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்’ என்கிறார் ஷில்லர்.

    இல்லினாய் மாநில எல்ஜின் நகரில் இப்படி நடந்துகொண்டிருக்க, நியூயார்க் நகரில் யாருக்கும் தெரியாமல் கேண்டிடோ அர்கேஞ்சல் என்பவர் ஒரு விடுதியை நடத்தி வருகிறார்.  ஷில்லர் வீட்டின் அடிமட்டத் தளத்தில் விடுதி இரவு பத்திலிருந்து காலை எட்டு மணிவரை திறந்திருக்கும் என்றால் இவருடைய கடையின் அடித்தளத்தில் 24 மணி நேரமும் வீடற்றவர்கள் தங்கலாம்.  ஒரே ஒரு கண்டிஷன்.  இரவு பத்து மனிக்குக் கடையை மூடிவிட்டால் அதன் பிறகு யாரும் உள்ளே வர முடியாது.  வேண்டுமானால் வெளியே போகலாம், ஆனால் மறு நாள் எட்டு மணிக்குக் கடை திறக்கும்வரை உள்ளே வர முடியாது.  (அமெரிக்காவில் பல கட்டடங்களில் கதவை சாவி இல்லாமல் உள்ளேயிருந்து திறக்கலாம்; ஆனால் வெளியேயிருந்து திறக்க முடியாது.) பக்கத்து பார்க்குகளில், தெருக்களில் தங்க இடம் இல்லாமல் இருந்தவர்களை இவர் தன் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கவைத்திருக்கிறார்.  இதில் பல மன நோயாளிகளும் சிறை சென்று மீண்டவர்களும் உண்டு.  இவர் இப்படிச் செய்வதற்கு முக்கிய காரணம், அவர் சொல்வதுபோல், இவரிடம் வசதி இருக்கிறது, அவர்களிடம் இல்லை.

    டொமினிகன் ரிபப்ளிக் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அர்கேஞ்சல்.  ஒரு கால்பந்து ஆட்ட வீரராக வேண்டுமென்று விரும்பி பல ஆட்டங்களில் கலந்துகொண்டார்.  ஆனால் ஒரு முறை தோள்பட்டையில் அடிபட்டு ஆட முடியாமல் போன பிறகு 1989-இல் அமெரிக்காவிற்கு வந்துவிட்டார்.  டீம்களில் பல தரப்பட்ட பையன்களோடு விளையாடியபோது ஒருவருக்கொருவர் உதவுவதன் அர்த்தத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார்.  இது ஒவ்வொருவரும் சமூக நலனுக்காகச் செய்ய வேண்டிய காரியம் என்கிறார்.

    அமெரிக்காவிற்கு வந்த பிறகு நியுயார்க் நகரில் ஒரு சிறிய கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.  சாமான்களை ஷெல்புகளில் அடுக்குவது, காலை உண்விற்காக சாண்ட்விச் தயாரிப்பது என்று ஆரம்பித்து பதினான்கு வருடங்களில் அந்தக் கடையையே விலைக்கு வாங்கினார்.  கடையை வாங்கும் முன் இலவசம் கேட்டு வருபவர்களைக் கடையில் தங்கவைக்கலாமா என்று தன் முதலாளியிடம் கேட்டபோது, ‘எப்போதுமா, உனக்கு என்ன பைத்தியமா?’ என்று கேட்டாராம் இவருடைய முதலாளி.  கடையை வாங்கிய முதல் மாதத்திலேயே வீடற்ற ஏழை ஒருவரை தன் கடையில் தங்குமாறு இவர் அழைத்தாராம்.

    எப்போதும் பத்துப் பேராவது இவர் கடையின் அடிமட்டத் தளத்தில் தங்கி இருப்பார்களாம்.  அடிமட்டத் தளத்தின் தரை கரடு முரடாக இருப்பதால்  சாமான்கள் கட்டிவரும் அட்டைகளைப் படுக்கைகளாக உபயோகிக்கிறார்கள். ஒரு தெருவில் கிடந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, தேவையென்றால் உணவைச் சூடுபடுத்திக்கொள்ள ஒரு சிறிய மின்சார அடுப்பு, விளக்குகள் இவைதான் அங்குள்ள சாதனங்கள்.  இதற்காகும் மின்சாரக் கட்டணமான 400 டாலரை அர்கேஞ்சல் செலுத்துகிறார்.   மூலையில் ஷவர் போன்ற ஒரு சாதனம்.  இந்த வசதிகளோடுதான் அங்கு தங்கியிருப்பவர்கள் நாட்களைக் கழிக்கிறார்கள்.  அங்கு வசிப்பவர்களிடம் அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

    நிறைய வசதிகள் அற்ற இந்த இடத்தில் தங்குபவர்களுக்கு இதைத் தற்காலிக இடமாகத்தான் அர்கேஞ்சல் கருதுகிறார்.  தினமும் காலையில் கடை திறந்ததும் அங்கிருப்பவர்களை வெளியே போய் வேலை தேடும்படி ஊக்கப்படுத்துகிறார்.  ‘பறவைகள்போல் வெளியே பறந்து செல்லுங்கள்.  உங்கள் வாழ்க்கையை நீங்களே அமைத்துக்கொள்ளும் வழி புலப்படும்.  நான் இறந்த பிறகு எங்கு போவீர்கள்?’ என்கிறார் அவர்களிடம்.  சிலர் அவருடைய இந்த யோசனையைப் பின்பற்றாவிட்டாலும் சிலர் அதைப் பின்பற்றி வேலை தேடிக்கொண்டு இவரைத் தேடிவந்து தங்கள் புதிய வாழ்க்கையைப் பற்றி இவரிடம் கூறுகிறார்கள்.

    அர்கேஞ்சல் கடையில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியில் கிடைக்காத ஒன்று இங்கு நிறையக் கிடைக்கிறது: அது அன்பு கலந்த கருணை.  நியுயார்க் மாநகர ஊழியர்கள் இவரைக் கண்டுகொள்ளாதவரை இவர்களுக்கு இது கிடைத்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    YAdavAbhudayam 01: Swamy Desika. watercolour 24x32 cms-wm Narayana, seated on white snake Anantha seems like a black cloud is ensconsed in a white cloud. Bhoodevi, along with the devas headed by Brahma, appeals to Narayana to save her from the unrighteous conduct of the kings. The bees swarm around her hair attracted by its fragrance, forming a parasol made of peacock feathers. The tears form a necklace around her neck.
    YAdavAbhudayam 01: Swamy Desika.
    watercolour 24×32 cms-wm
    Narayana, seated on white snake Anantha seems like a black cloud is ensconsed in a white cloud.
    Bhoodevi, along with the devas headed by Brahma, appeals to Narayana to save her from the unrighteous conduct of the kings.
    The bees swarm around her hair attracted by its fragrance, forming a parasol made of peacock feathers. The tears form a necklace around her neck.

     

    image1

    ’’கண்ணீர் துளிகள் கழுத்தில் அணிகலனாய்,
    மண்நீர்(பூமாதேவி) மகளழைப்பு மாதவரை: -மன்னர்கள்,
    சூது கவ்வினர், சூஷ்ஷம நாரணா
    யாதவனாய் பூமிதனில் ஏள்’’….கிரேசி மோகன்….!

    துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
    படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
    தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழியெனைப்(பூமாதேவி)
    பாரா திருப்பதேன் பகர்….!

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 44

    க.பாலசுப்பிரமணியன்

    இறைவனை அடைய எந்த வழி சிறந்தது ?

    திருமூலர்-1-3

    பற்றற்ற நிலையை அடைய மனம் எவ்வளவோ துடிக்கின்றது. ஆனால் முடியவில்லையே. எவ்வளவோ முயற்சி செய்தும் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற மொழிக்கேற்ப நமது மனம் மீண்டும் மீண்டும் தேவையற்ற சிந்தனைகளில் அடைக்கலம் கொள்ளுவதேன்? இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? மனதை ஒருநிலைப் படுத்த எந்த விதமான யோகத்தை அல்லது பயிற்சியை  நாம் பின்பற்றலாம்? மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறந்த வழியென்ன? கீதையில் கண்ணன் கூறிய மூன்று வழிகளான – அறிவுப் பாதை (ஞான யோகம்)  செயல் பாதை (கர்ம யோகம்) மற்றும் பக்திப் பாதையில் சிறந்து எது? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

    இந்தக் கேள்விகளால் துயரத்தில் வீழ்ந்த பட்டினத்தாரோ இவ்வாறு சொல்லி வருந்துகின்றார் :

    வாயார வாழ்த்தி மகிழ்ந்துன்னைதான் போற்றாமல்

    காய மெடுத்துக் கலங்கினேன் பூரணமே.

    இதே துயர் நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்

    பலவிடத்தே மனதை பாயவிட்டுப் பாராமல்

    நிலவரையி னூடேபோய் நேர்படுவதெக்காலம் ?

    இவ்வாறு பலவிதமாக துயரப்பட்ட அடியார்களில் சிலர் ஞான மார்க்கத்தையும் சிலர் கர்ம யோகத்தையும் சிலர் பக்திப் பாதையைம் பின்பற்றி அந்தப் பேரறிவாளனை அறிந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். எந்த முறையாக இருந்தாலும் சரி முழுவதுமாக அவனிடம் சரணடைந்து நம்முடைய ஆணவ மலத்தை விலக்கிநின்றால் அவனுடையதரிசனம் நிச்சயமாகக் கிடைக்கும். அவன்காட்டும் ஒளியும் நமக்குத் தென்படும்.

    திருமூலர் கூறுகின்றார் :

    காண்டற்கு அறியான் கருத்திலன் நந்தியும்

    தீண்டற்கு சார்தற்கும் சேயெனத் தோன்றிடும்

    வேண்டிக் கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்

    ஈண்டிக் கிடந்தது அங்கு இருள் அறும் ஆமே.

    ஒளிப்பிழம்பாய் உள்ளத்துள் வருகின்ற அந்த இறைவனை மனதில் ஏற்று உள்ளே  நிறுத்தி பக்தியுடன் போற்றினால் அவனுடைய அருளுக்குத்  தடையேது? அதனால்தான் அடியார்களெல்லாம் அவன் தங்களுடைய மனத்தை விட்டு விலகாத்திருக்கவும் அவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர். இதே கோரிக்கையை திருநாவுக்கரசர் இறைவன் முன் வைக்கின்றார்‘

    புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

    உன்அடி என்மனத்தே

    வழுவாதிருக்க வரம் தர வேண்டும்

    இவ்வையகத்தே.

    தன்னுடைய பதவி பொருள் அத்தனையும் ஒதுக்கித்த தள்ளி  ஊரார்கள் கேலிக்கு ஆளாகி இருந்தும் இறைவனை மட்டும் மனதில் நிறுத்தி அந்தப் பரவச நிலையில் தன்னையே மறந்த மாணிக்க வாசகர் கூறுவதென்ன?

    உத்தமன் அத்தன் உடையான்

    அடியே நினைந்து உருகி

    மத்த மனதோடு மால் இவன்

    என்ன மன நிலையில்

    ஒத்தன ஒத்தன சொல்லிட

    ஊர் ஊர் திரிந்து எவரும்

    தம் தம் மனத்தன பேச

    எஞ்ஞானறுகொல் சாவதுவே

    ஞான மார்கத்திலோ, பக்தி மார்கத்திலோ அல்லது கர்மவழியிலோ நம் சிந்தையை நிறுத்தி நாம் செயல்பட்டாலும் பல நேரங்களில் அறிந்து அறியாமலும் தவறுகள் செய்கின்றோம். ஆணவ மலத்தில் சிக்கி “நாம்” என்ற மாயையில் நமது சிந்தனையும் தவமும் சிதறிப் போகின்றது. ஆகவே, இதையெல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றானா? நமக்கு நியாயமும் அருளும் முழுதாகக் கிடைக்குமா ? அது எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று மனம் சந்தேகிக்கின்றது. இதற்கு விடையளிப்பது போல் அமைந்துள்ளது திருநாவுக்கரசரின் கீழ்கண்ட பாடல்,

    தொழுது தூமலர் தூவி துதித்து நின்று

    அழுது காமுற்று அரற்றி நின்றாரையும்

    பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

    எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

    அவனுடைய அருள் நமக்குக் கோவிலில் கிடைக்குமா? குன்றத்திலே கிடைக்குமா? குளங்களில் நீராடி கொய்தமலர் தூவிப் போற்றிடவே கிடைக்குமா? ஊழ்வினையால் வறுமையில் அவதிப்படுவோருக்கு உதவுவதில் கிடைக்குமா? அத்தனையும் துறந்து காட்டிலே கண்மூடி அமர்ந்தால் கிடைக்குமா? தெளிவு வேண்டுமே .. எங்கு செல்ல?

    திருமூலர் எங்கெல்லாம் இறைவனைக் கண்டார்? இறைவன் அவருக்கு எப்படியெல்லாம் தரிசனம் தந்தான்? இதற்கு அவரே சொல்லும் பதில் நம்மை உண்மையில் சிந்திக்க வைக்கும்.

    பூதக்  கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்

    வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படும்

    நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்

    கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே

    (தொடருவோம்)

    Share
  • A TREATEMENT OF VINAIYECCAM IN TAMIL GRAMMATICAL WORKS

    A TREATEMENT OF VINAIYECCAM IN TAMIL GRAMMATICAL WORKS

    -Dr. HEPSY ROSE MARY. A

    Tolkappiyam the earliest extant grammatical work in Tamil deals with the vinaiyeccam or verbal participle in vinaiyiyal section of collatikaram.  Further it speaks about the Vinaiyeccam of various ending in eluttatikaram and discusses the miscellaneous aspects of vinaiyeccam in ‘ Eccaviyal’.  Viracoliyam of 11th century A.D treats the vinaiyeccam in tatuppatalam’ in two karaikas.  Neminatam of 12th century and Nannul of 13th centuru A.D deal with it in vinaiyiyal.  Prayokavivekam of 17th century A.D. treats it in tinnuppatalam in two  karikas .  Ilakkana Vilakkam and Ilakkana Kottu of 17th century A.D deals with it in collatikkaram.  Muttuviriyam and Saminatam 19th century A. D treats it in vinaiyiyal and vinaimarapu.  An evaluation of the description of vinaiyeccam by these different grammatical works in attempted here.

    Definition:-

              The term vinaiyeccam refers to a set of verbal forms that includes the infinitive, the adverbial participle, the conditional and other.  What all members of the category of vinaiyeccam share in common is that they lack oppositions of tense, person, number and gender; that they are subordinate verb forms incapable of constituting a complete predication by themselves; and that they must combine with other verb forms to make up a coherent sentence.1   This is how Stanford B. Steever defines Vinaiyeccam.

    1. “On the Semantic properties of Vinaiyeccam” – Selected papers on Tamil and Dravidian Libguistics- Sanfor B -0 Steever. P:64, 1981.

    Classification of vinaiyeccam:-

    Tamil Grammatical works do not define the vinaiyeccam explicitly but they classify it in to so many types or patterns in the form of a formula.  Tolkappiyam lists nine primary patterns of vinaiyeccam.  They are as follows:\

    1. Ceytu, 2. Ceyyuu, 3. Ceypu, 4. Ceytena, 5. Ceyyiyar, 6. Ceyyiya, 7. Ceyin, 8. Ceya, 9. Ceyarku.

    These nine patterns and the six terminations of adverbial participles listed and two other types ( ati, ceyya) of the same, referred to in Toilkappiyam may be classified into sub-groups according to their different usages.2

              Viracoliyam speaks about the two formulas ‘tumanta’ and tuvanta’ pratyams following Sanskrit model.  Tumanta pratyam includes participles with the following terminations poruttu, ka, paan, tarku, vaan, aa.  Tumanta pratyam includes participles with the terminations such as aa, ittu, tu, u, i.  Tonnull vilakkam talks about fourteen termination such as i, u, ena, u, pu, a , il, in, iya, iyar, van, paan, paakku.

              Tolkappiyam and Muttuviriyam talks about fifteen patterns of vinaiyeccam.  Neminatam and Nannul talk about twelve formulas.  Ilakkana vilakkam lists eighteen formulas and Saminatam has thirteen formulas.  Ilakkana kottu does not talk about this.  Neminatam, Ilakkanavilakkam, Tonnul vilakkam and Saminatam added the vinaiyeccam with the suffixes paan, paakku etc to the list which are not found in Tolkappiyars pattern.  The vinaiyeccam vaan mentioned by Nannul Ilakkanavilakkam, Muthuviriyam, Tonnul vilakkam and saminatam is not at all found in Tolkappiyam and Neminattam but Viracoliyam mentions vaan and paan.   These participles are latter developments in the language.

    1. “Non – finite verbs” – The trteatment of Morphology in Tolkappiyam : Dr. M. Israel. P: 210 – 1973

    Table of Vinaiyeccam patterns enumerated by the Tamil Grammatical works

    Tolkappiyam does not mention the pattern ‘Ceyyaa’ in the nine primary patterns in vinaiyiyal.  But in Eluttatikaram, this is mentioned in 223 sutra.

    “Ceyya ennum vinaiyencu kilaviyum

    Avviyal tiriya tenmanar pulavar ” ( Tol.223)

              Cenavaraiyar opines that ‘ceyya’ is the later varient  from of ceyyuu. But Nannul, prayokavivekam,IIakkana Vilakkanam and Saminatam considers these two as  separate.

          (ex.)      unna vantan,              unnu vantan

    Prayokavivekam introduces ‘tuva’ and ‘tumun’ as two types of vinaiyeccam patterns. The author- commentator includes nine patterns in the commentary in addition to whose referred to above.  They are,

                       tuva            –         ceytu

    tumun            –          ceya

    Kamun          –           ceyya

    namul           –          ceyyu

    yap              –          ceypu

    iti                –          ceytena

    aticet            –           Ceyin, ceytal

    nuvil             –           Ceyyiya

        He employs the Sanskrit technical terms to the designate each of vinaiyeccam types.  But Viracoliyam which is   considered to be a Sanskrit based work. Like Prayokavivekam doesn’t talk about these patterns. It seems that Prayokavivekam follows Tolkappiyam in the classification but adopts Sanskrit technical terms to designate them.

    Morphological  analysis :-

    Dr. Caldwell classifies the verbal participles in to,

    1. Verbal participle patterns – Ceytu,Ceyyu ,Ceypu, Ceyya
    2. Purpose participle patterns – Ceyyiya,Ceyyiyar,Ceyarku
    3. Conditional participle patterns – Ceyin
    4. Infinitive participle patterns – Ceya
    5. Adverbial participles – Pin , mum , kaal , katai, vali, itattu3

    Ceytu pattern:-

              This pattern of the form may be segmented as Cey-t-u.  ‘ Cey’ verbal stem. ‘t’ – past tense marker and ‘u’ may be identified as verbal participle marker.  Viracoliyam and Prayokavivekam employs the word ‘tuva’ instead ‘ Ceytu’.  The tense of this participle pattern possess a difficult problem.  Tolkappiyanar says that the pattern ‘Ceytu’ which denotes past tense may also occur in the future tense.  Nannul, Ilakkana Vilakkam and Saminatam say that the pattern denotes only past tense.  But prayokavivekam says that it denotes three tenses.  Ilakkana Kottu and Muttuviriyam are of the opinion that there is no tense signification in the vinaiyeccam.

                       (ex.)   untu   –        vantaan

    Untu  –        Varukiraan

    Untu  –        Varuvaan

    Ceypu Pattern:-

              This pattern of form may be segmented into cey, -pu.  ‘Cey’ verbal stem ‘pu’ participle termination.  Nannuul , Ilakkanavilakkam and Saminatam mention that the pattern ‘ Ceypu’ denotes only past tense.  But Prayokavivekam says that it denotes three tenses.  Naccinarkiniyar points out that it denotes an action done previous to that of the following verb and rarely the future tense.

    Ceyyuu and Ceyyaa patterns:-

              Tolkappiyanar includes ‘ ceyyuu’ in the list of adverbial participle patterns but only refers to the pattern ‘ ceyyaa’ in Ezhutatikaram, while dealing with the external Sandhi changes of words with final ‘a’.  These patterns ceyyuu and ceyyaa may be segmented as ‘ cey-uu and cey- aa, ‘ cey’ verbal stem uu and aa participle markers.  According to Cenavarayar, the forms of the pattern ‘ceyyu’ denote the past tense.  Teyvacilaiyar mentions that they denote either past or present.  According to Naccinarkiniyar and Nannular they denote past tense.  Ilakkanakottu and Saminatam also say that it denote past tense.  As there is no tense marker in the above two patterns of forms they may be taken to denote different tenses.

    Ceytena pattern:-

              This pattern consists of the verbal participle pattern ‘ ceytu’ and the infinitive participle pattern ‘ena’.  The form ‘ena’ may be analysed into ‘en-a’,  en – verbal stem a infinitive participle marker.  Nannul and Ilakkanavilakkam say that it denotes past tense.

              (ex) Unnena

    Ceyyiya and Ceyyiyar patterns:-

              These patterns consist of the verbal stem cey and the suffixes ‘iya’ and ‘iyar’ Ilampuranar is silent regarding the tense of these patterns of these forms.  All the other commentators and authors are agreed in attributing the future tense signification to them.  There is no overt marker to denote the tense in them.

    Ceyarku pattern:-

              This pattern is used to denote a purposive significate.  This consists of the verbal noun ceyal and dative marker ‘ku’.  According to Cenavaraiyar and Teyvaccilaiyar the forms of this pattern but it does not talk about its tense signification.   Viracoliyam , Nannul, Prtayokavivekam, Ilakkana kottu and Saminitam do not include this in the list of adverbial participle patterns.

    Ceyin pattern:-

              This participle pattern consists of the verbal stem and the suffix ‘n’.  According to Cenavaraiyar, the form of this pattern denotes three tenses but according to Teyvaccilaiyar, Naccinarkiniyar, Nannular and Vaitianatatecihar denote only the future tense.

    Ceya Pattern:-

              The Dravidian Linguistics Dr. Caldwell, L.V. Ramaswamy Aiyar and others also consider ‘ ceya’ as the pattern of infinitive participles4.  The form ceya consists of verbal stem ‘ cey’ and the suffix’a’.  The ‘ceya’ is called as ‘tuman’ in Viracoliyam and ‘ tumun ‘ in Prayokavivekam.  It is evident that tense is not marked in this form and it say that the pattern ‘ceya’ denote only present tense, but the commentator of Nannul and prayokavivekam say that it denotes three tenses.

    (ex)    ter tara vantan, ter tara vrukiran, ter tara varuvan

    Neminathan and Ilakkanavilakkam do not elaborate this aspect.

    Adverbials:-

    Tolkappiyam and Ilakkana vilakkam list six forms as terminations of adverbial participles and Neminatam lists two forms ( pin, mun).  Viracoliyam, Nannul Prayokavivekam and Saminatam do not talk about this.

    Muttuviriyam list four or ( Pin, mun, kal, and katai) .  The commentators cite following examples as adverbial participles.

    (ex)    vanta – pin, varu- mun, vanta-k-kaal, vanta-ka-katai, vanta-vazhi, vanta- idattu

              The above are the patterns of some of the adverbial expressions.  On investigation it is found that the forms are not terminal suffixes but are real free forms.  They are nous denoting place or time.  This will be alternative analysis to this type of Vinaiyeccam.  Hence it will a case of relative participle + noun.  It seems that Nannul and Ilakkanal vilakkam are of this view.

    For example,

              Neer poy kuriyapin mey kuruvaar yaar

              Cenavaraiyar comments that ‘kuriyapin’ is taken as one word meaning kurinal ‘if you utter’ and that is labeled vinaiyeccam.  Whilst others taken as two words kuriya and pin where kuriya is labeled as peyareccam.  The commentary of Cenavariyar gives these views and one should examine it in detail.

    Syntax and Semantics of vinaiyeccam:-

              Nannular elaborately explains that vinaiyeccam shows the tense.  He also explains ceytu, ceyya, ceypu, ceyyu and ceytena show past tense.  Ceya shows present tense and ceyin, ceyyiya, ceyyiyar, vaan, paan and pakku show future tense.  Tense signification of vinaiyeccam is elaborately explained in Morphological analysis shown above.  The six patterns in ‘tumanta’ pratyam ( ceya) explained in viracoliyam denote the meaning of dative case or fourth case

    (ex)    Unnutar poruttu – poruttu

    Karkat tarpariyattaan – ka

    Unpaan vantaan – tarku

    Arivan Karuttuntu – vaan

    Unna vallan- a

    All the tuvanta pratyam in viracoliyam expect a shows the past tense.

    (eg)    Untittup ponan – ittu

               Pukuntup ponan – u

               Pukkup ponaan – u

               Colli ninraan – i

              Prayokavivekam states that ‘ tuman’ as called ceya and ceyin can be changed.  Neminatam and Nannul explain that one vinaiyeccam becomes another vinaiyeccam in deep structure ( ceya – ceytu) .  Eventhough they are formally different, the meaning is same.

    (ex)    nayiru pattu vantaan – nayiru pata vantaan

    Kolikuvip polutu pularnthatu – kolikuvap polutup pularntatu

    ‘ pattu’ and ‘kuvi’ are the verbal participle of the ceytu pattern.  Tamil scholars interpret this verbal participle as verbal infinitive ‘ceya’.  In both cases according to them ceya form has become ceytu form.  Cenavaraiyar and Naccinarkkiniyar also explain these usages under the two sutras. ( Tc.Vi 34,35).  Prayokavivekam mentions seven characteristic features of verbal participle of the pattern ceytu, ceyya, ceyu and ceypu (Pv,39) .  There are,

    1. Manner adverbial clauses
    2. Negative verbal participle clauses
    3. Reduplication of participles
    4. Interpretation of three tenses
    5. Inversion
    6. Samaana Karta as against pinna karta
    7. Verbal participles in the form of finite verb

    1. Manner adverbial clauses:-

    The verbal participles clause occurs also as manner adverbial clause.  It occurs as the first part of the compound root.  But in some cases the first member of this compound root is in the pattern of ceytu, the verbal participle.  Ordinarily when a verbal participle and another verb come together, it means that the action of the verbal participle occurs first and then the action of the verb,

    (ex)         Kan mutic cirittan

    Here the closing of the eyes and laughter occur togethers.

    2. Negative verbal participle clauses:-

    The verbal participle and predicate which complete it my negute each if there is a verbal participle and the predicate (a).  The first may be negative and the second positive.

    (ex) unnatu vantan .

    The first may be positive and the second negative.

    (ex) untu varan

              Tolkappiyam does not illustrate the Negative verbal participle pattern.  But the commentator of Tolkappiyam and Tonnul Vilakkam cited the following negative verbal participle (with the following suffixes aamal, aatu aamai, aa

    (ex):   ceyaamal      –        aamal

              Ceyaatu       –        aatu

              Ceyaamai     –        aamai

    Ceyyaa        –        aa

    3. Reduplication of Verbal Participles

    The verbal participle occurring as predicate of verbal participle clause with verbal complement, casual adverbial, an manner adverbial function can be reduplicated.  Verbal participles consisting of the same words are repeated.

    (ex) Vantu vantu

    Verbal participles consisting of different word may be piled up.

    (ex) Kantu  kettu untu uyirttu urrariyum

    Tolkappiyam, Viracoliyam and Nannul explain this pattern.

    4. Interpretation of three tenses:-

    The verbal participles of the ‘ceyty’ pattern comes with of three tenses.

    (ex)    untu vantaan – past

    Untu varukiran – present

    Untu varuvaan – future

    Thus it is concluded that untu can occurs in three tenses.

    5. Inversion;-

      1. The verbal participles sometimes inverted.
      2. (ex) Kolunnar tolutezhuvaal

    According to the author ‘ tolutezhuval’ as an inversion of Elunthu tozhuval.  Ezhutal is to wake up’. ‘tolutal’ is to worship’ because he feels one cannot offer physical worship before waking up from sleep.  Only the Prayokavivekam explains this point.

    6. Samana Karta as against pinna kartaa:-

    Verbal participles of the pattern ceyyuu and ceypu take samana karta the predicate of their own subject.

    (ex) Untu vantaan caattan

    7. Verbal Participles in the form of finite verb;-

    The verbal participle ‘ceytu’ changes its form to that of finite verb, but that finite verb has to be interpreted as a verbal participle.

         Moyinal uyirtta kalai – Montu uyitta kaalai’ moyinal which is the finite form has to be interpreted as the verbal participle ‘montu’.

         Tolkappiyam , Neminatam, Nannul, Prayokavivekam, Ilakkana Vilakkam, Muttuviriyam and saminatam state that verbs may occurs as the verb of the whole.  Sometime as a verb of the whole becomes verb of the part.  But Viracoliyam Ilakkana kottu and tonnul Vilakkam do not talk about it.

    (ex)         Untu vantaan, Unnu vantan, Unkupu vantaan  – verb of the whole

    Kai irru viluntan, kai irru viluntaan, Kai irupu viluntaan – verb of the whole becomes verb of the part.

    Conclusion:-

         While going through the treatment of vinaiyeccam in Tamil Grammatical works we can see that generally Neminatam, Nannul, Ilakkana vilakkam, Muttuviriyam and Saminatam follow Tolkappiyam.  But the Nannul and Saminatam do not talk about adverbial markers like kaal, katai, vali and itattu.  For them it is a case of relative participle + Noun.  Neminatam and Muttuviriyam accept the view of Tolkappiyam and Neminatam include mun and pin only and Muttuviriyam include pin, mun, kaal and katai.  Tonnulvilakkam illustrates Negative verbal participle marker.  Eventhough Viracoliyam and prayokavivekam follow the Sanskrit models, Prayokavivekam in most cases follows Tolkappiyam.  Viracoliyam classifies vinaiyeccam into two types that is tuva and tuman.  Viracoliyam Neminatam and Muttuviriyam do not talk about the tense signification of vinaiyeccam.  The others differ in their interpretation of tenses.  The syntactic aspects of vinaiyeccam are also elaborated in these works except vinaiyeccam, where there is only a brief remark is fond.  Prayokavivekam is unique that it gives a nine way classification with Sanskrit terms.  It also summaries the syntactic aspects of vinaiyeccam under seven heads.

    Bibliography

    • Gunavirapandithar – Neminatham, S.I.S.S.W Publishing society, Tirunelveli ltd, 1956.
    • M, Treatment of Morphology in Tolkappiyam , DLA, Trivandrum, 1973.
    • Meenakshi Sundaram. T.P – Foreign Models in Tamil Grammar – D.L.A, 1974.
    • Muthuvira Appaiya Thedshidhar – Muthuviriyam , Appar Achakam, Chennai , 1972.
    • Pavananthimunivar- Nannul, Triplicane, 1951.
    • Subramania Thedshithar – Prayokavivekam, Madras the S.I.S.S.W Publishing society, Tirunelveli ltd, 1973.
    • Thomas Lehman – A Grammar of Modern  Tamil, PILC , Publication, 1993.
    • Vaithiyanada Desikar – Ilakkanavilakkam, Thiruvarangam Achakam, Madras, 1973.

    *****

    The writer is an Assistant Professor
    Department of Tamil, University of Kerala.

     

     

     

    Share
  • இன்றைய இளைய தலைமுறையினரின் பரிதாப நிலை ..

    பவள சங்கரி

    இந்தியாவில் 14 முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களில் 25% பேர் தங்களுடைய சொந்தத் தாய்மொழியில் படிக்க முடியாதவர்கள். இதில் 76% பேர் பணத்தைக்கூட கணக்குப் பார்க்கத் தெரியாதவர்கள். இதில் 36% பேருக்கு தங்கள் நாட்டின் தலை நகர் எது என்று கூடத் தெரியவில்லை என்று 2017 ஆம் ஆண்டுக்கான கல்விக் கணக்கெடுப்பு (Annual status Education report) அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை ..

    Share
  • ’’ரமண வசனாம்ருதம்’’….!

     

    “பசிதாகம் மூப்பு பிணிசாவு எல்லாம் –
    ருசிகண்ட பூனைச ரீரம்: -நசிகேத –
    ஞானமது, பெற்றோர்க்கு நானகந்தை ஏதடா; –
    வானமதற்(கு ) ஏது வரை “….கிரேசி மோகன் ….வரை -எல்லை….!

    Share