Blog

  • மயங்குகிறாள் ஒரு மாது

    கவிஞர் காவிரி மைந்தன்.
    hqdefault

    இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
    திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
    மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
    பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
    உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
    உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!

    தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
    அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
    பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
    தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
    சொல்லும்?  எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
    கலைதனில் ஒன்று!  மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்!

    வண்டின் தேவையை..   மலரா அறியும்?
    அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
    தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
    தோன்றலின் ரகசியம் தானே!
    ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!

    அன்பே.. அன்பே..   பெண்மையும் சொல்லும்
    பதில் .. அத்தான்.. அத்தான்..
    பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
    கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
    பி.சுசீலா குரலால் இனிக்கும் பாட்டு!
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!
    மயங்குகிறாள் ஒரு மாது!!

     

     

    http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
    காணொளி: http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk

    ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
    ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
    படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    அஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
    ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

    படம்: பாசமலர்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: பி. சுசீலா

    05V&Rpsuseelasavithri

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”புள்ளி மயில்சூடி, புள்ளாழ்வான் போலிறகை,
    புள்ளாண்டான் போர்த்திப் பறப்பது, -மல்லாண்டு,
    மாமனைக் கொல்லல், மகாபா ரதம்செய்தல்,
    பூமனையாள் இட்ட பணி’’….கிரேசி மோகன்….

    பூமனையாள்- மனைவி பூமாதேவி….
    புள்ளாழ்வான் -கருடாழ்வார்….

    Share
  • இசை அரசி M.S 99 வது ஜெயந்தி வருடம்16 செப், 2014

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    எத்தனையோ பேர் கர்நாடக இசை உலகில் பாடி உலாவந்தாலும், இவரது குரலில் மட்டும் அப்படி என்ன விசேஷமான ingredient கலந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது என்று வியக்காதவர் இல்லை.

    கர்நாடகக் கீர்த்தனைகளோ, மீரா பஜன் பாடல்களோ, வடமொழி ஸ்லோகங்களோ, தமிழ்ப் பாசுரங்களோ- அக்காலத்தில் இவர் பாடிய திரை இசைப் பாடல்களோ- இசையின் எந்த வடிவத்திலும் தன்னிகரற்றுக் கோலோச்சிய இசை அரசி M.S சுப்பலக்‌ஷ்மி அவர்களின் தேனிசைக் குரலுக்கு அடிமை ஆகாதார் எவர்?

    உயர்தர இசையும், உன்னதமான பக்தியும் இரண்டறக் கலந்து ஒரு வடிவாக இலங்கிய இவர் பிறந்து 98ஆண்டுகள் நிறைந்து 99 வது ஆண்டு தொடங்கும் இத்தருணத்தில், அன்னாரது நினைவாக வரைந்த கருப்பு வெள்ளை மற்றும் நீர்வண்ண ஓவியங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பார்க்க, ரசிக்க…

    as

    as1

    சு.ரவி

    Share
  • புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு

    a1

    புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு :
    பன்னாட்டுக் கணினி, இணைய அறிஞர்கள் வருகை

    புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வரும் செப்டம்பர் 19, 20, 21(வெள்ளி,சனி,ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் (Cultural Complex) இந்த மாநாடு நடைபெற உள்ளதாக மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்(உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பு ஆகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகின்றது.

    இதன் தொடக்க விழா 19-09-2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். உத்தமம் அமைப்பின் தலைவரும் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வாசு. அரங்கநாதன் அனைவரையும் வரவேற்க உள்ளார். சுவிசர்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.

    புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் சிறப்புரையாற்ற உள்ளார். புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருட்டிணன், காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் எல். இராமமூர்த்தி வாழ்த்துரை வழங்க உள்ளனர். உலகத் தமிழ் இணைய மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவரும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப் பேராசிரியருமான மு.இளங்கோவன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.

    புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்சு, செர்மனி, ஹாங்காங்கு, செகோஸ்லேவியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தர உள்ளனர். ஆய்வறிஞர்கள் 100 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்க உள்ளனர். ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை ஒட்டிச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

    உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் நடைபெறுகின்றது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை படைக்க உள்ளனர். பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டினன், அ.இளங்கோவன், பேராசிரியர் செல்வகுமார்(கனடா) ஆகியோர் சிறப்பு உரையரங்குகளில் பேச உள்ளனர். அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக்கூடத்தில் கணினித்திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும் மக்கள் அரங்கமும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் முன்னணிக் கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை மக்களுக்குப் பார்வைக்கு வைக்க உள்ளன.

    மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு(பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்.

    மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகின்றது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் www.infitt.org என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “இஞ்சி இடுப்பழகன், இம்மை கொடுப்பழகன்,
    மஞ்ச உடுப்பழகன், மாதரார், -துஞ்சும்,
    நடுப்பகல் நேரம், பொடிப்பயல்க ளோடு,
    அடுக்களையில் செய்வான் அதம்(ஹதம்)” ….கிரேசி மோகன்….

    மஞ்ச உடுப்பழகன் – பீதாம்பரதாரி….
    துஞ்சும் -தூங்கும்….

    Share
  • பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.

    .

    Europa -1

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rJtkPzShN3Q

    http://www.space.com/17820-europa-jupiter-s-icy-moon-and-its-underground-ocean-video.html

    http://www.nbcnews.com/science/space/jupiters-moon-europa-may-have-plate-tectonics-ice-n198796

    பூதக்கோள் வியாழன் துணைக்கோளில்
    பீறிட்டெழும் நீர் எழுச்சிகள்,
    பூமியின் நில நடுக்கம்போல்
    பூகம்பம் சீறியெழும்
    அடித்தட்டு ஆட்ட நகர்ச்சியால் !
    நீர்முகில் ஆவி, வாயுக்கள்,
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    அடித்தட்டு நகர்ச்சி  அவசியம்
    உயிரின விருத்திக்கு !
    நீர் எழுச்சி வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    சனிக்கோளின்  துணைக்கோளில் நீர்முகில்,
    பனித்தூள்கள், அமோனியா
    வாயுக்கள் வெளியேறும் !
    பனித்தட்டுகள் உருகித்
    தென் துருவ  ஆழத்தில்
    திரவக் கடல்  இருப்பது  எப்படி ?
    ஊற்று வெளியேற
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை யான நீர் எழுச்சி !
    புரிந்தும் புரியாது கோளில் நீர்
    உருவான முறை  !

    +++++++++++++

    Galileo Spacecraft

    பூதள அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] பூமிக்கு மட்டும் உரிய ஒரு தனித்துவ அடித்தள நிகழ்ச்சி இல்லை.   கடற் பகுதி அரங்குகளில் ஓர் அடித்தளத் தட்டுக்கு அடியில் மறோர் அடித்தட்டு புகுந்திடும் போது, பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் மேற்தளப் பரப்பை பிளக்குவது போல், துணைக்கோளான ஈரோப்பா பனிக் கோளில் நிகழ்கிறது. இதுபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் நேர்ந்ததற்குப் புதன், வெள்ளி, செவ்வாய்க் கோள்களில் தெளிவாகத் தடங்கள் காணப் படுகின்றன.  ஆனால் இம்மாதிரி நிலப்பிளவுப் பிழைகள் [Faults and Rift Valleys] நேர்வது பாறைக் கோள்களில் மட்டுமே.  விந்தையாக ஒரு பனிக்கோளில் நிகழ்கிறது.

    மிஸ்ஸெல் செல்வான்ஸ் [Nature Geoscience, Smithsonian National Air & Space Museum]

    பெரிய பரிமாணமுள்ள பனிக்கட்டுத் தட்டுகள் ஈரோப்பாவின் பனிக் கவசத்தில் ஒன்றுக்கு இடையே ஒன்று மேல் /கீழ் நுழைகிறது என்ற புதிய கருத்து, சமீபத்தில் [செப்டெம்பர் 9, 2014] வெளியாகி வந்துள்ளது.  நமது சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடி ஈரோப்பா துணைக் கோளில் மட்டுமே அடித்தட்டு நகர்ச்சி  அமைப்பாடு   இருந்துள்ளது.  இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானக் கண்ணோக்குப்படி ஒரு மகத்தான நிகழ்ச்சி என்று மதிப்பீடு அளிக்கப் படுகிறது.  பூமி ஒன்று மட்டுமில்லை.  பனித்தளத் துணைக்கோள் ஈரோப்பாவும் அடுத்தோர் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாக உள்ளது என்பது புதியதாய்த் தெரிய வருகிறது.

    சைமன் கேட்டஹார்ன் [University of Idaho]

    Jupiter and Europa

    பூமியைப் போல் துணைக்கோள் ஈரோப்பாவில் நிலநடுக்க அடித்தட்டு நகர்ச்சி கண்டுபிடிப்பு

    2014 செப்டம்பர் 9 இல் வானியல் விஞ்ஞானிகள் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் பூமியைப் போல் நிலநடுக்கம் உண்டாக்கும் ஆழ்தளப் பனிக்கட்டி அடித்தட்டு நகர்ச்சிகள் [Plate Tectonics] இருக்கக் கூடும் என்று அழுத்தமாக அறிவித்துள்ளார்கள்.   அண்டக்கோள்களில் இவ்வித அடித்தட்டு நகர்ச்சிகள் இருப்பு உயிரின விருத்திக்கு அவசியம் என்று ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டயானா வாலன்சியா கூறுகிறார்.

    துணைக்கோள் ஆழ்தளத்தில் நிகழும் கனத்த பெரும் அடித்தட்டு நகர்ச்சிகள் உயிரினக் குடியிருப்புக்கு வழி வகுக்குகின்றன.  காரணம் அந்த நகர்ச்சியால், கார்பன்டையாக்சைடு போன்றவை சிக்கலான இரசாயன இயக்கத்தில் பொருள்கள் கலந்து கொள்வதை ஏதுவாக்கின்றன.  பனிக்கட்டிப் பாறைகள் உருகி அதிலிருந்து கார்பன் டையாக்சைடு எரிமலைகள் மூலம் வெளியேறி முக்கியமான மீள்சுற்று இயக்கத்தைத் தூண்டுகிறது. வானியல் ஆய்வாளர் தொலைநோக்கிகள் மூலம் நேரடியாக ஈரோப்பா துணைக்கோளில், பழைய பனிக்கட்டு திட்டுகள் அழிந்து புதியதாய்ப்  பனிக்கட்டித் திட்டுகள் [Icy Crust] எழுந்து நீட்சி அடைவதைக் கண்டுள்ளார்கள்.

    Tectonic Faults on Europa

    துணைக்கோள் ஈரோப்பா நமது சந்திரனை விடச் சிறியது.  அதன் விட்டம் : 3100 கி.மீ. [சுமார் 2000 மைல்]. பனிக்கட்டியாய் உறைந்து நீர்மை மேவிய அதன் மேற்கவசம் : 100 கி.மீ. [60 மைல்] ஆழமுள்ளது.  அதன் கீழ் நீர்க்கடல் நீராகவே உள்ளது.  ஈரோப்பாவின் நீர்வளம் பூமியின் நீர்வளத்தை விடப் பெரியது.  காலிலியோ விண்ணுளவி அனுப்பிய ஈரோப்பாவின் தளப் படங்கள் எல்லாவற்றையும் திரட்டி ஆய்வு செய்த இரு வானியல் விஞ்ஞானிகள் 20,000 சதுர கி.மீ. [12.000 சதுர மைல்] பரப்பளவு, அடித்தட்டு நகர்ச்சியால் காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார்.  மேலும் பனி எரிமலைகள் [Icy Volcanoes] மேல் எழும் தட்டுகளில் உண்டாகி உள்ளன என்றும் கூறியுள்ளார்.

    2020 ஆண்டில் ஈரோப்பா துணைக்கோளை நோக்கி ஒரு விண்ணுளவியை ஏவிடத் திட்டமிட்டு நாசா 25 மில்லியன் டாலர் நிதித் தொகையை ஒதுக்கி வைத்துள்ளது.   அது மூன்று ஆண்டுகளில் [2023] பனிக்கோள் ஈரோப்பாவைச் சுற்றிவரும்படி தேர்வு செய்யப் பட்டுள்ளது.  அந்த விண்ணுளவி ஈரோப்பாவின் நீர்க்கடலை ஆழ்ந்து நெருங்கி ஆராயும்.   பீச்சிடும் நீர் எழுச்சியில் உள்ள இரசாயனங்களைப் பதிவு செய்யும்.    அடித்தட்டு நகர்ச்சியால் நேர்ந்த தளப்பிளவுகளைப் படமெடுத்து, பூமியோடு ஒப்பிட்டு ஆராயும்.

    Europa's Tectonic Interior Section

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது.  கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது  மாபெரும் கண்டுபிடிப்பு.  இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்..

    ஸிந்தியா ஃபிலிப்ஸ் [SETI Institute in Mountain View, California] [December 12, 2013]

    முதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது.   அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம்.

    fig-1c-europa-internal-structure

    1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது.  ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை.   இப்போது  நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது.  மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது.   இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது.   கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    ajay

    முந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார்.  அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர்.  பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ்.   தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி  7 மணிநேரம்  நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.

    ஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம்.   தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO]  திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும்.   தரைக்கடியில் நீர் இருந்தால்,  அடியில் தோண்டாமலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.

    Huge Geisers in Europa

    சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    “சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டியுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்திலிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. “

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    Fig 1E Jupiter & its Satellites

    2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்

    ​ ​

    முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானிகளுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்

    ​ ​

    கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக்கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால்,  பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன:  நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம்.   மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது.

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    Encyladus

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    Fig 1B Galileo Spaceship Launch

    பூதக்கோள் வியாழனுக்கு நாசா ஏவிய காலிலியோ விண்ணுளவி

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] “

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] “

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகிய

    ​ ​

    வற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    Fig 5 Jupiter Exploration

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்

    ​ ​

    கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.Cassini Space Probe -1

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்

    ​ ​

    கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.Cassini Image of Water

    fig-3-water-springs

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?

    இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?fig-3-greenland-ice-cold-land

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்

    ​ ​

    கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை

    ​ ​

    நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.Water in Europa

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்

    ​ ​

    படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

    Juno Space Probe

    [Juno Spacecraft Travels to Orbit Jupiter]  
    (2011 – 2016)

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.  ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

    Eye on Europa

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.  எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்

    ​ ​

    படும்.  வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.Future Plans for Europa

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html

    (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]

    33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]

    34.http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html [September 13, 2013]

    35. http://www.lpi.usra.edu/education/explore/ice/background/iceSolarSystem/  [October 9, 2009]

    36. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/spectacular-water-plumes-reaching-heights-of-200-kilometers-discovered-on-europa-.html  [December 13, 2013]

    37.  http://www.newscientist.com/article/dn24743-first-water-plume-seen-firing-from-jupiter-moon-europa.html?full=true&print=true#.Ur9Kr6i_gsU  [December 12, 2013]

    38.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/nasa-captures-1st-natural-color-images-of-saturn-and-organic-rich-enceladus-one-of-the-most-accessib.html  [December 30, 2013]

    39.  http://en.wikipedia.org/wiki/Galileo_(spacecraft)  [September 9, 2014]

    40.  http://www.clarksvilleonline.com/2014/09/09/nasas-galileo-spacecraft-images-give-scientists-evidence-plate-tectonics-jupiters-moon-europa/  [September 9, 2014]

    41. http://www.ancient-code.com/jupiters-moon-europa-may-plate-tectonics-just-like-earth/  [September 9, 2014]

    42. http://www.dailymail.co.uk/sciencetech/article-2748960/Europa-sliding-continents-ice-Jupiters-moon-plate-tectonics-like-Earth.html [September 9, 2014]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [September 14, 2014]

    Attachments area
    Preview YouTube video 364. Jupiter Moon Europa Could Have Plate Tectonics Like Earth

    364. Jupiter Moon Europa Could Have Plate Tectonics Like Earth
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 15, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. எம். ஜெயராமசர்மா அவர்கள்

     

    எம்.ஜெயராமசர்மா

     

    சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு  நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டும் பணியில்  ஈடுபட்டிருக்கிறார்  திரு. எம். ஜெயராமசர்மா.  இவர் வல்லமை இதழில் சென்ற வாரம், மதக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கில் எழுதியக் கட்டுரைக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    சமயம் என்றால் என்ன, மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை   போன்ற  சமயத்தின் தேவையின் அடிப்படையை  மக்கள் மறந்து வெகுகாலமாகிவிட்டது. வெறும் சடங்கு சம்பிராதயங்களில் மூழ்குவதும், மதத்தின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வதும் இன்று நேற்று என்று இல்லாமல் தொடர் கதைகளாக நடந்து வருகிறது. அது மனித குலமே மதம் பிடித்து  ஒன்றை ஒன்று தங்களை  அழித்துக் கொள்ளும் நிலையாக  உலகத்தில் பரவியிருக்கிறது.

    உலக மதங்கள்  அனைத்திலுமே இன்று காணப்படும் இந்த  தடம் மாறிய நிலைக்கு  இந்து மதமும் விதிவிலக்கல்ல.  இந்து மதத்தின் தாய்நாடான  இந்தியாவில் பிறந்து வளந்தவர்களுக்கும் தங்கள் இந்து  மதத்தின்  சமுதாயப் பங்கு பற்றிய தவறானக் கருத்துகள் வேரூன்றிவிட்ட  நிலையில், வரும் தலைமுறையினரை, அதுவும் தாய்நாட்டிற்கு வெளியே வாழும் அடுத்த தலைமுறையினரை, அறிவில் சிறந்து பல்நோக்கும் கொண்டு வளரும் சிறார்களை, இந்து மதம் காட்டும் உண்மை நல்வழியை உணரச் செய்வது எப்படி என்ற கேள்விகள் புலம் பெயர்ந்த பெற்றோர்கள் மனதில் எழுந்த வண்ணம்தான் உள்ளன.

    இந்து மதத்தின் பண்பு, மிகப் பண்டையத் தோற்றத் தொன்மையின் காரணமாகவே காலத்திற்குப் பொருந்தாத சில கருத்துக்களையும் கதைகளையும் உள்ளடக்கியிருப்பது.  கைபேசி வழியே உலகத்தையே அறிந்து தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கும் இக்கால சிறுவர்களிடம், நடப்புலகிற்குப் பொருந்தாத அந்தக் கதைகளே சமயக்கல்வி கொடுத்து வழிநடத்தும் முயலும் பெற்றோர்களுக்கு  மேலும் சவாலை முன் வைத்து விடுகிறது.  சமயக் கல்வியினை  சரியான முறையில் வழங்க இக்காலத் தேவைகள் யாவை? புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்ல  வழியென்ன?  இதற்கு யாரால் சரியான வழியைக் காட்ட இயலும்? என்ற கேள்விகள் நம்மிடையே தோன்றிய வண்ணம் உள்ளன.

    இந்தத் தேவையை சரியான முறையில் எதிர் கொண்டு  தீர்வு காணும் பின்புலத்தைக் கொண்டிருக்கிறார் வல்லமையாளர்  ஜெயராமசர்மா.  தமிழ்நாட்டின்  தாராபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமசர்மா வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்.  தற்போது  ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்று அங்கு மெல்பேண்னில் வசிக்கிறார்.

    பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல் துறையில் டிப்ளமா, சமூகவியல் துறையில் டிப்ளமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தமிழ், இந்துகலாச்சார  விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சமயப் பணிகளில், 2008ல் மதுரை மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் பங்கேற்றமையும்; அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று தமிழ், கலாச்சாரம், இந்து சமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளவையும் அடங்கும்.  சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாக பேட்டி கண்டு நேரடியாக வானொலி ஒளிபரப்புகளையும் வழங்கியுள்ளார். தற்பொழுது தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவருக்கு, சமயக் கல்வி பற்றிய வழிமுறைகளை வகுத்துத் தர  இவரது கல்வித்துறை மற்றும் சமயத்துறை அறப்பணிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன எனக் கொள்வது மிகையாகாது.

    வல்லமையில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பகிர்ந்து வரும் இவரை வல்லமை வாசகர்கள் ஒரு சிறந்த கவிஞராகவே அறிவார்கள்.  இவர் எழுதிய பற்பல கவிதைகள் பல கருத்துகளையும் உள்ளடக்கியவை. வல்லமையின் ஆண்டுவிழா வாழ்த்து முதற்கொண்டு, சில இறைவணக்கப் பாடல்களும் வழங்கியுள்ளார்.  பொதுவாக கவிதைகள் பாடப்பெறாத இக்கால பிரபலங்கள் பலரைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார்.  அவரால் பாடப்பெற்றவர்கள் வரிசையில் நெல்சன்மண்டேலோ, பாலு மகேந்திரா, உ வே சா, வாரியார், அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், சிவாஜி, வாலி, வைர முத்து, பாலமுரளி கிருஷ்ணா,  பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர்.

    அம்மா, அப்பா , குழந்தை, பெண்ணினம் போன்ற உறவுகளைப் போற்றும் கவிதைகளுடன், சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதைகள் அழகு தமிழ் பேசிட, பக்குவத்தை அடைய, தலைவனாய் உயர, தாய்ப்பால் கொடுத்திட,  பெண்ணினைக் காத்திட என்ற வகையில் விரிகின்றன.   சற்றே வித்தியாசமான கவிதைக் கருக்களைக் கொண்ட சர்க்கரை வியாதி, ஆலமரம், குருவிக்கூடு, விஞ்ஞான வளர்ச்சி, புத்தாண்டு, மாடிவீட்டு ஏழைகள், நூலகம் போன்ற கவிதைகளும் இவரது கவிதைக் களத்தில் அடங்கும்.

    எடுத்துக்காட்டாக, யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக…

    “சூறை ஆடி விட்டார்கள்!”(http://www.vallamai.com/?p=46342) என்ற கவிதையில்

    […]
    யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
    வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
    தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
    சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

    எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
    அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
    சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
    சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

    கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
    கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
    பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
    பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்
    […]

    என அந்த நிகழ்ச்சிக்கு வருந்தி கவிதை  வடித்துள்ளார்.

    இவரது படைப்புகள் வல்லமையில் மட்டுமின்றி திண்ணை, தமிழ் ஆஸ்திரேலியன், தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு, நெற்றிக்கண், தேனீ, ஜியோ தமிழ், மாற்றம்,  ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன.  பிற கலைத் துறைகளிலும் இவர் பங்களிப்பு அதிகம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய இவர்,  10க்கு மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப் பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து வெளியிட்டுள்ளார்.

    பல்துறை வித்தகரான ஜெயராமசர்மா வல்லமையில் பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளினால் ஏற்படும் கருத்து பேதங்கள், சமையக் கல்வியின் முக்கியத்துவம் போன்ற வகைகயில் அமைந்தவை.

    சென்ற வாரக் கட்டுரையான ,

    “புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்”  என்ற கட்டுரையில்  முன்னாள் கல்விப்பணிப்பாளரான இவர் தனது சிந்தனைகளையும் அனுபவத்தையும் முன்னிறுத்தி பலருக்கும் பயன்தரும் வகையில் அதை  எழுதியுள்ளார்.  சிறந்த விளக்கங்களுடன், தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும்  சான்றாகக் காட்டி இவர் அளித்தக் கட்டுரை முழுமையாக வாசிக்க வேண்டிய ஒன்று.  அக்கட்டுரையின் முக்கியக் கருத்து கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

    “சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

    […]

    புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

    1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
    2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
    3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
    4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
    5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
    6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
    7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
    8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
    9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
    10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

    சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”

    என்று கூறி செயல்முறை நடவடிக்கையாக சமயக்கல்வியை  இந்த  வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்றுக்  காட்டிய ஜெயராமசர்மா அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு

    வணக்கம் வாழியநலம்

    ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் அற்புதமான ஆளுமை பெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினப் பகிர்வு இக்கோட்டோவியம்.

    அமைதியாக புத்தகம் படிக்கும் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

    உங்களுக்கும் பிடிக்கும் என்று பகிர்கிறேன்.

    பார்க்க, ரசிக்க.

    சு.ரவி.

    2AF87934-9E19-4099-927F-B59DFE82D10B

     

     

    Share
  • மக்கள் தொலைக்காட்சி வழங்கும் “பண்ணிசை வித்தகர்கள்” நிகழ்ச்சி

    அன்புடையீர்!

    வணக்கம்!

    மக்கள் தொலைக்காட்சி வழங்கும் “பண்ணிசை வித்தகர்கள்” நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி காலை 7.00 மணிக்குக் காணத் தவறாதீர்கள்!

    அதன் முன்னோட்டத்தை, இதோ காணலாம்:

    நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • வீரனுக்கு வீரன்!

    -ஒரு அரிசோனன்

    (மகாபாரதத்தில் யுத்தபர்வத்தில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோழுது, அவரை வணங்கி ஆசிபெற, கர்ணன் யுத்தகளத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்தச் சந்திப்பு எப்படி இருந்திருக்கும் என்ற எனது கற்பனையே இது.)

    Bhishmar“பீஷ்மப் பாட்டனார் களத்தில் வீழ்ந்து விட்டாராம். இனி, தாங்கள் களமிறங்கத் தடை ஏதும் இல்லை!” என்ற செய்தியைக் கேட்டு ஒரு கணம் அதிர்ந்துவிட்டான் கர்ணன். அவனுள் மகிழ்வும், துயரமும், மாறிமாறி அலை பாய்ந்தன. தன் நண்பன் துரியோதனனுக்காகக் களமிறங்கி, செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவும், தலையான எதிரியான அர்ஜுனனைப் பழிதீர்க்கும் வாய்ப்பும் கிட்டியதற்கு மகிழ்ந்தாலும், தன்னை ‘அரைத் தேர்வீரன்’ (அர்த்த ரதன்) என்று இகழ்ந்த பீஷ்மப் பாட்டனாரின் சரிவு ஏனோ அவனுக்கு மகிழ்வைத் தரவில்லை. உண்மை வீரரான அவர் தனக்கு வரவிருந்த அரசைத் தனது சிற்றன்னையின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, தனது இல்வாழ்வையும் தியாகம் செய்துவிட்டிருந்தார்.. அது மட்டுமா? தன் சுக துக்கங்களை மறந்து தனது வாழ்க்கையையே அத்தினாபுர அரசின் நலத்திற்காகவும் அர்ப்பணித்து விட்டார். தன் அருமைப் பேரர்கள் பாண்டவர்களுக்கு எதிராகக் அரசுக் காவலனாகக் களம் இறங்கி, தனக்குப் பிடிக்காத கெளரவர்களுக்காக அக்களத்திலேயே வீழ்ந்து பட்டதையும் குறித்துச் சிறிது கழிவிரக்கம் கொண்டான்.

    “எப்படி பீஷ்மப் பாட்டனார் இறந்தார்? அந்த மாவீரரை வீழ்த்தியது யார்?” என்று வினவினான்.

    “அரசே! அவர் இன்னும் இறக்கவில்லை. அம்புப் படுக்கையில் கிடக்கிறார்!” என்று பகர்ந்த தூதுவன் மேலே தொடர்ந்தான். “கர்ணப் பிரபுவே! இணையற்ற வீரரான அவரை யார் கொல்ல இயலும்? ஆண்மையற்ற சிகண்டி அவரைப் போருக்கு அழைத்து, கணைகளைத் தொடுத்தான். சிகண்டியைப் பெண் என்று கருதும் பீஷ்மப் பாட்டனார் ஒரு பெண்ணுடன் போரிடுவது க்ஷத்திரியனுக்கு அழகல்ல என்று வில்லில் நாணேற்றி அம்பைப் பொருத்த மறுத்து விட்டார். சிகண்டியை முன்னிருத்தி, பின்னாலிருந்து அவர் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிட்டான் அர்ஜுனன். ‘சிகண்டியுடன்தான் நீங்கள் போரிட மாட்டீர்கள், அர்ஜுனனுடன் போரிடலாமே!’ என்று துரோணாச்சாரியார் முதல் பலரும் எடுத்துச் சொல்லியும், ‘சிகண்டி முன்னிருக்கும்வரை யாரிடமும் போரிட மாட்டேன்!’ என்று மறுத்துவிட்டார். நூற்றுக்கணக்கான அம்புகள் உடம்பில் தைத்து, முள்ளம்பன்றியைப்போலக் காட்சி அளித்த அவர், ஒவ்வொரு அம்பையும் தடவிப் பார்த்து, ‘இது சிகண்டியின் அம்பு அல்ல; அந்தப் பேடியின் அம்பு என் நகக்கண்களைக்கூடத் துளைக்காது. இவை அனைத்தும் அர்ஜுனனின் கணைகள்தான். என் கவசத்தைக்கூட அவை பிளந்துவிட்டனவே?’ என்று ஒரு உண்மையான வீரனாக, அர்ஜுனனின் போர்த்திறமையை மெச்சினார்.

    “எவ்வளவுதான் அவராலும் தங்க இயலும்? துளைப்பதற்கு வேறு இடம் ஒன்று இல்லை என்னும் அளவுக்கு உடலைக் கணைகள் துளைத்தவுடன் நிற்கத் திறனற்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டார். இருந்தபோதும், அவர் உடல் மண்ணில் விழவில்லை பிரபோ! அம்புகள் அவரைத் தாங்கி நிற்கின்றன. மேலும், அவராகத் தன் உயிரை விட்டால்தானே உண்டு? அப்படிப்பட்ட வரத்தை அல்லவே அவர் பெற்றிருக்கிறார்! தட்சிணாயணத்தில் உயிரை விடக்கூடாது என்று உத்திராயணத்தை எதிர்நோக்கி, அம்புப் படுக்கையில் நோன்பிருக்கிறார்.” என்று முடித்தான் தூதுவன்.

    “அர்ஜுனனா இத்தகைய பேடித்தனமான செயலைச் செய்தான்? அவனது வீரம் எங்கு போயிற்று?” என்று உறுமினான் கர்ணன். தன்னை இழிவு செய்தவர்தானே, எப்படியாவது தொலைந்து போகட்டும் என்ற எண்ணம் இல்லை அந்த மாவீரனுக்கு. பீஷ்மரைக் கொல்வதற்காக வீரத்திற்கு இழுக்கு வரும் செயலையா அர்ஜுனன் போன்ற மாவீரன் செய்தான் என்ற மனக்குமுறல்தான் இருந்தது.

    “பிரபோ! அர்ஜுனனாக மனமுவந்து அச்செயலைச் செய்யவில்லை. மிகவும் தயங்கிய அவரைக் கபட நாடக சூத்திரதாரியான கண்ணன்தான் இத்தகைய இழிசெயலுக்குத் தூண்டினார். ‘பீஷ்மப் பாட்டனாரை போரில் வெல்ல உன்னால் இயலாது. சிகண்டியால்தான் சாவு என்ற வரம் கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, சிகண்டியை முன்னிருத்தி, அவனுக்கு உதவுவது போலப் போரிடு. இதுதான் ஒரே வழி.’ என்று கள்ள வழி காட்டினார். பலமுறைப் பாட்டனார் மீது பாணம் செலுத்தப் பார்த்திபன் மனம் தளர்ந்து நின்றபோதும், அவரை இடைவிடாது ஊக்குவித்ததும் கண்ணன்தான்!”

    “அப்படியா? தவறான வழியில் சென்றதற்காக, மார்பில் கணை ஏற்று மடியும் வீரச் சாவை அர்ஜுனனுக்கு நான் தரமாட்டேன். வெற்றிக்காக அறம் தவறிய அப்பேடியின் தலையை என் நாகாஸ்திரத்தால் துண்டித்து, அவன் உடலை முண்டமாக்கி, அழியாப் பழியை அவனுக்கு ஏற்படுத்துவேன்! இது உறுதி!” என்று வீர முழக்கமிட்டான் கர்ணன். பீஷ்மப் பாட்டனாரின் மீது இருந்த சிறிதளவு மனக்கசப்பும் நீங்கி, அர்ஜுனனைப் பழிவாங்கவேண்டும் என்ற வெறியே பெரிதாக அவனுள் எழுந்து நின்றது.

    “என் உயிர் நண்பன் துரியோதனனிடம் தெரிவி, நான் அவனைப் போர்க்களத்தில் சந்திக்கிறேன் என்று.” என்று தூதுவனை அனுப்பிய கர்ணன் சிறிது சிந்தித்தான். என்னதான் தன்னை இகழ்ந்து பேசியிருந்தாலும், மாவீரரான பீஷ்மப் பாட்டனாரிடம் வாழ்த்துப் பெற்ற பின்னரே போரை வழிநடத்த வேண்டும் என்ற அவா அவனுள் எழுந்தது. தவிரவும், தன் மனதில் புழுவாகக் குடைந்து கொண்டிருக்கும் ஒரு கேள்விக்குப் பதிலை அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற விருப்பமும் அவனை அம்புப் படுக்கையில் கிடக்கும் பீஷ்மப் பாட்டனாரிடம் நடத்திச் சென்றது.

    ***************************

    அம்புப் படுக்கையில் அயர்ந்து கிடந்தார் பீஷ்மப் பாட்டனார். அவரது தலையை மூன்று அம்புகள் தலையணையாகத் தாங்கி நின்றன. அந்த நிலையிலும் அவரது முகத்தில் அமைதியான வீர ஒளி மிளிர்ந்து கொண்டிருந்தது. கௌரவர்களும், பாண்டவர்களும் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் சொல்லொணாச் சோகம் குடி கொண்டிருந்தது. கர்ணனின் வரவைக் கண்டு துரியோதனனின் முகம் சற்று மலர்ந்தது. நண்பனை மார்போடு சேர்த்து ஆரத் தழுவி வரவேற்றான்.

    “பீஷ்மப் பாட்டனாரே! ராதையின் மகனும், துரியோதனனின் உயிர் நண்பனும், அங்க நாட்டு அதிபனுமான கர்ணன், தங்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது வீர சாகசங்களை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பில்லாமல் போனது எனது துர்பாக்கியம்!” என்று பணிவுடன் வணங்கினான் கர்ணன்.

    “நலமுண்டாகட்டும். நல்வீரனாகத் திகழ்வாயாக!” என்று அவனை வாழ்த்தினார் பீஷ்மர். கர்ணனின் முகத்தில் ஊடாடிய உணர்ச்சிகளை ஊன்று நோக்கிய பீஷ்மர், “நான் கர்ணனிடம் சிறிது தனியாகப் பேச வேண்டும். நீங்கள் சற்று விலகி இருப்பீர்களாக!” என்று அனைவருக்கும் அன்புக் கட்டளை விடுத்தார். அரை மனதுடன் அனைவரும் அகன்று நின்றனர்.

    “என்னால் இயன்ற அளவுக்கு கௌரவர்களுக்கும், அத்தினாபுர அரசுக்கும், காவலனாகவும் படைத் தலைவனாகவும் இருந்து என் கடமையைச் செய்துவிட்டேன். அறியாச் சிறுவனான துரியோதனனுக்கு இனி நீ காவலனாக மட்டுமல்லாமல், உயிர் நண்பனாகவும் அறிவுரை சொல்ல வேண்டும்!” என்று மெலிந்த குரலில் அன்புக் கட்டளை இட்டார் பீஷ்மர்.

    “பாட்டனாரே! அப்படியே செய்கிறேன். இந்தப் போரில் வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னை வாழ்த்துங்கள்!” என்று வேண்டினான் கர்ணன்.

    சற்று அமைதியாக இருந்த பீஷ்மர், “கர்ணா! ஒருவர் போரில் வெல்ல வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும். பாண்டவர்களும், கௌரவர்களும் எனது பேரர்கள். அப்படி இருக்கையில், அவர்களில் யார் மடிந்தாலும் எனக்குச் சம்மதமாகுமா? பாண்டவர்கள் இறந்தால்தான் நீ வெற்றி வீரனாகத் திகழ்வது திண்ணமாகும். நீ வெற்றி வீரனாகத் திகழ வேண்டும் என்று என்னால் எப்படி வாழ்த்த இயலும்? இந்தப் போர் நடக்காமல் இருக்க எத்தனையோ முயற்சி செய்தேன். தோல்வியையே தழுவினேன். உனக்கே தெரியும், பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று. துரியோதனன் உன் உயிர் நண்பன். நீ ஒருத்தன்தான் அவனுக்கு அறிவுரை செய்து இப்போரை நிறுத்திக் குருதிப் புனல் பெருக்கிடா வண்ணம் தடுத்து நிறுத்த முடியும்!” இறைஞ்சியது அவர் குரல்.

    “பீஷ்மப் பாட்டனாரே! நான் ஒருவன் மட்டும் இறந்தால்தான் இப்போரை நிறுத்த இயலும் என்றால் அதைக்கூட மகிழ்வுடன் செய்வேன். நீங்கள் சொல்லும் அறிவுரையை – துரியோதனனிடம் நன்றிக் கடனும், நட்புக் கடனும் பட்டிருக்கும் என்னால் எடுத்துரைக்க இயலுமா? இப்போர் நடந்துதான் தீரும்.” என்று தன் இயலாமையைத் தெரிவித்தான் கர்ணன்.

    “இப்போர் நடந்தால் அறமே வெல்லும். நீ, துரியோதனன், துரோணாச்சாரியார் உட்பட நிறையப்பேர் வீர சுவர்க்கம் எய்துவீர்கள். எனவேதான் வெற்றிவீரனாகத் திகழ்வாயாக என்று உன்னை வாழ்த்த முடியாது போய்விட்டது. இருப்பினும், உனது வீரம் இவ்வுலகம் உள்ளவரை அனைவராலும் புகழப்படும் என்று நான் வாழ்த்துகிறேன்.” என்ற பீஷ்மரிடம், “நான் அதை அறிந்து கொண்டேன்!” என்று பதிலிறுத்துவிட்டுத் தயங்கி நின்றான் கர்ணன்.

    “கர்ணா! கடைசியாக உன்னிடம் சொல்லவேண்டியது இன்னுமொன்றும் இருக்கிறது! பாண்டவர்கள் அணியில் அர்ஜுனன் ஒருவன்தான் உனக்கும், எனக்கும் இணையான வில்லாளியாவான். அவனை எதிர்த்துப் போரிட ஒரு பீஷ்மனோ, அல்லது ஒரு கர்ணனோதான் கௌரவர்கள் அணியில் இருக்க வேண்டும். அதுதான் யுத்த தர்மமாகும். ஒரே சமயத்தில் நம் இருவரையும் எதிர்த்துப் போராடும் நிலைக்கு அர்ஜுனனை உட்படுத்துவது அதர்மமாகும். கௌரவர்களின் படைத்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் – யுத்த தர்மத்தை என்றுமே மீறாத நான் – எப்படி அதைச் செய்ய இயலும்? இந்த விளக்கத்தை அனைவரின் முன்னரும் சொல்லி, போரில் கலந்துகொள்ளாதே என்று, கௌரவர்களின் படைத்தலைவனாக உனக்கு நான் எப்படி ஆணை இட முடியும்?

    “எனவேதான், என் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, பெரும் தேர்வீரனாகிய (அதிரதன்) உன்னை, அரைத் தேர்வீரன் (அர்த்த ரதன்) என்று இகழ்ந்தேன்! நீயாகவே, ‘இந்தப் பீஷ்மர் போர்க்களத்தில் இருக்கும்வரை நான் போரிடமாட்டேன்!’ என்று சூளுரைக்கச் செய்துவிட்டேன். அதற்காக, இந்தக் கிழவனைக் கடைசிவரை வீரனை இனம் கண்டுகொள்ள இயலாத கயவன் என்று முடிவு செய்துவிடாதே கர்ணா!” என்று தழுதழுத்த குரலில் வேண்டினார் பீஷ்மர்.

    அப்படியே நெகிழ்ந்து போனான் கர்ணன். “பீஷ்மப் பாட்டனாரே! என் மனதைப் புழுவாகக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை அளித்துவிட்டீர்கள். எப்பொழுது என்னைத தங்களுக்கு இணையான வீரன் என்று சொன்னீர்களோ, அப்பொழுதே என் மனம் பெருமிதத்தில் திளைத்து, மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடுகிறது. தங்களிடமிருந்து இதைவிடச் சிறந்த வாழ்த்து வேறென்ன கிடைக்கக் கூடும்? வீரனுக்கு வீரனாக என்னை நீங்கள் உயர்த்தியது, இப்பிறவியில் எனக்குக் கிட்டிய பெரும் பேறே ஆகும். நான் புகழோடு வீர மரணம் எய்தும்படி வாழ்த்துங்கள்!” என்று வேண்டி நின்றான் கர்ணன்.

    இரு கரங்களையும் உயர்த்தி அவனை வாழ்த்தினார் பீஷ்மப் பாட்டனார்.

    அவரை வணங்கிவிட்டு, தான் வீழப் போகும் போர்க்களத்தை நோக்கித் தெளிந்த மனத்துடன் நடந்தான் மாவீரன் கர்ணன்.

     *************************

    Share
  • காற்று வாங்கப் போனேன் – (41)

    கே. ரவி

    பாடல் பதிந்தும், பதியாத கதை சொல்கிறேன். ஆனால், அதற்குமுன், ஒரு செய்தி, அதைச் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது, ஒரு கருத்து அல்லது நோக்கு, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    வரலாற்று நிகழ்ச்சிகளை விட, அவை நமக்கு உணர்த்தும் கருத்து அல்லது கதை முக்கியம் என்று பல முன்னணி வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். எனவே, என் கவிதையின் வரலாறாகவே அமைந்து விட்ட என் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைக் காட்டிலும், அந்த நிகழ்ச்சிகளின் உந்து சக்தியாகவும், அவற்றை முந்து சக்தியாகவும் அமைந்த அக நெகிழ்ச்சிகள் மிக முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு, நான் சில எண்ணங்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    அலையலையாய் விரிந்த கூந்தல் மேகக்கூட்டம் போல் இருப்பதாகச் சொல்லும் உவமை புதியதில்லை. ஆனால், வானத்தைப் பார்த்ததும், அதன் சுருள்சுருளான மேகங்களுக்கிடையில் நிலாப்பிறையைக் கண்டதும், அப்போது மின்னல் வானத்திரையைப் பிளந்து கொண்டு பளிச்சிட்டதும், இவையெல்லாம் பிறைசூடிய பித்தனை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது வெறும் உவமையாகவோ, உருவகமாகவோ மட்டும் இல்லை. அது ஓர் அனுபவக் களம். ஆகாசத்தையே பிறவா யாக்கைப் பெரியோனாகப் பார்த்த பிரமிப்பில்தான், போன பகுதியில் படித்த “நிலவை அணிந்து கொண்டு” என்று தொடங்கும் கவிதையின் உயிர்வீச்சே இருக்கிறது. “விழிநிறைந்தது வானம்” என்ற சொற்றொடரே அதன் ஜீவ நாடி. நிலவும், மேகமும், மின்னலுமாக இரவில் தொடங்கி, பனிப்புகையின் நடுவே வெள்ளி முளைத்துச் சிவன் கையில் காயழலாய்க் கதிரவன் உதிக்கும் காலை வரை அந்தக் கவிதை நகர்ந்து அல்லது படர்ந்து செல்வதே அந்தக் கவிதை வெறும் அசையாப் பொருள் இல்லை, அதற்கு இயக்கம் உண்டு என்று அதன் உயிர்மூச்சை அடையாளம் காட்டுகிறது. “மெல்லப் படர்ந்தது வெள்ளி” என்ற வரியில், ‘மெல்ல’ என்ற சொல்லின் ஆதிக்கமே அதன் இயக்க நிலைக்குத் தக்க சான்று. அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யமே, ப்ரளயமாகி உலகைப் புசிக்கும் காலதேவனாகவும் அமைந்து, கடைசியில் சலனமற்ற சதாசிவமாகவும் நிலைத்து விடும் அனுபவம், ஆங்கிலத்தில் ‘மிஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்லப்படும் ஒரு புதிரான அனுபவம். நாம் சிற்றறிவால் சட்டெனப் புரிந்து கொள்ள முடியாத பேருண்மையை, ஏன், பேரழகை, அல்லது பேரானந்தத்தை உள்ளுணர்வில் ஏற்படுத்தும் அனுபவம். இப்படிப்பட்ட அகநெகிழ்ச்சியே அந்தக் கவிதையின் அனுபவக் களம் அல்லது சூழல். அந்தக் கவிதையைக் கேட்கும் போது, அதுவும் இன்னிசையோடு எஸ்.பி.பி. போன்ற நல்ல குரலுடையவர் அதைப் பாடக் கேட்கும் போது, கேட்பவரையும் அந்த அனுபவக் களத்திற்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அந்தச் சொற்களுக்கு இருந்தால், அதுவே மந்திரமாகி விடுகிறது. ஒரு கவிதையில் இந்தச் சொல் நன்றாக உள்ளது, அந்த உவமை அற்புதம், என்றெல்லாம் நயம் வியப்பது பேச்சாளர்களின் பணி. ஆனால், ஒரு கவிதை எந்த அனுபவக் களத்துக்குப் படிப்பவனை அல்லது கேட்பவனைக் கடத்திச் செல்கிறதோ, அந்தக் களத்தில் ஆழ்ந்து அதை அனுபவிப்பதோ ஒரு ரசிகனின் பணி. ஒரு கவிதை வாசகனை அனுபவக் கடத்தல் செய்வதற்கு நல்ல இசை எப்படி உதவுகிறதோ, பாடகர் எப்படி உதவுகிறாரோ, அப்படியே கவிதையின் நயம் வியக்கும் பேச்சாளர்களும் அதே விதத்தில் உதவக் கூடும். ஆனால், மிக முக்கியம், அல்லது இலக்கு என்ன தெரியுமா? களமும் அதில் மூழ்கித் திளைக்கும் ரசனையும் மட்டுமே.

    ஒரு கவிஞன் தன் கவிதையையே வியந்து, விரித்துரைக்கலாமா என்ற கேள்வியும், அப்படிச் செய்வது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா என்ற கேலியும் எழக்கூடும். என் படைப்புகளை நானே ரசிக்கவில்லை என்றால், யார் ரசிப்பதற்கு நான் அதை வெளியிடுவது? ரசிக்கத் தக்கதுதான் என்று நான் ஒரு முடிவுக்கு வராமல், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள முன்வரலாமா? விருந்தினர்களுக்குப் படைக்கும் முன், உணவை நாம் சோதித்துச் சுவை பார்ப்பதில் தவறில்லையே. சபரி மூதாட்டி சொல்லிக் கொடுத்த பாடம் இல்லையா? என் கவிதை என்பது என் குழந்தை போன்றது. என் குழந்தையின் படைப்புக்கு நானே முழுப்பொறுப்பா? நான் அதன் படைப்புக்கு ஒரு கருவியானேன். ஆனால், அதன் கர்த்தாவோ, கடவுளாகிய இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி இல்லையா? என் குழந்தையை நான் ரசித்துக் கொஞ்சுவது தவறா? மற்றவர்கள் அதை மெச்சிப் புகழும் போது என் மேனி சிலிர்ப்பது இயற்கைதானே? பாரதி பாடவில்லையா:

    உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி

    மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

    இந்தக் கவிதை பிறக்க என்னைக் கருவியாகத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றியில்லையா அது!

    “தன்னைப் புகழ்தல் தகும் புலவோர்க்கே” என்று ஓர் இலக்கண சூத்திரம் உண்டு. என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் அதைத் தம் இல்லத்தின் சுவரில் பெரிதாக எழுதி மாட்டியிருப்பார். அதன் மெய்ப்பொருள் இப்பொழுதுதான் விளங்குகிறது. ஒரு புலவனாக நீயிருக்கும் பட்சத்தில், நீ உன்னைப் புகழ்ந்து கொள்ளலாம். ஏனென்றால், நீ எப்பொழுதும் உன் உள்ளத்தில் பொங்கிவரும் கவிதையையே சுவைத்துக் கொண்டிருப்பாய். அந்தக் கவிதை வெள்ளத்தை மற்றவர்களும் பருகத் தருவதற்கு உனக்கு அனுமதியுண்டு என்பதோடு, அப்படிப் பருகத் தருவது உன் கடமையும் ஆகும் என்பதை நினைவிற்கொள். அப்போது நீ உன்னைப் புகழ்வது என்பது உனக்குள் ஊற்றெடுக்கும் கவிதையை, அதைத் தரும் பிரபஞ்ச சக்தியை, இறைவனைப் புகழ்வதாகத்தான் பொருள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    சரி, இப்பொழுது நான் சொன்னது ஏதோ என் கவிதையில் மட்டுமே கிட்டும் அனுபவம் என்று எண்ணிவிட வேண்டாம். போன பகுதியில் ரமணன் எழுதிய சிவாஷ்டகத்தையும் படித்துக் கேட்டோம் இல்லையா? அதில் வரும் ஒரு வரி, அமர வரி, அதுவே போதும். “புஜம் போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்”. அடாடா, அதைப் பற்றி வியப்பதற்கு முன், அந்த வரியையே நாலைந்து முறை படித்துச் சொல்லி அனுபவிக்க வேண்டும். புஜம் அல்லது தோள், மலை போல் இருந்தது, மூங்கில் போல் இருந்தது என்றெல்லாம் உவமை சொல்வதுண்டு. புஜத்தையே வேறொன்றுக்கு உவமை சொல்ல முடியுமா? முடியலாம், அந்த வேறொன்று தோள் போல ஒரு பருப்பொருளாக அல்லது திண்பொருளாக, வடிவமுடையதாக இருந்தால். சரி, மெளனம் போன்ற வடிவற்ற ஒரு கருத்தீட்டுக்கு புஜத்தை எப்படி உவமை சொல்ல முடியும்? இது என்ன குழப்பம்? கொஞ்சம் உள்ளுக்குள் போய் உற்றுப் பாருங்கள். மெளனம் என்பதன் வடிவம் மெல்ல ஒரு திரைக்குப் பின்னால், பனித்திரைக்குப் பின்னால் வானம் போல் தெளிவின்றிப் புலப்படக் கூடும். அது மிகப் பெரிதாகத் தோற்றம் கொடுக்கும். அம்மாடியோவ், மெளனம் என்பது இவ்வளவு பெரிசா? வானம் எவ்வளவு விரிந்து, பரந்ததோ, அவ்வளவு விரிந்து, பரந்த பெரிய விஷயம் மெளனம்! சிவனுடைய தோள்களைப் போல! “தோள்கண்டார் தோளே கண்டார்” புரிகிறதா? “தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பலக் கழியுமாம்” என்ற கம்ப சூத்திரத்தின் மர்ம முடிச்சு அவிழ்கிறதா? துயரமோ, கவலையோ மனத்தை அழுத்தும் போது, மனம் சாய்ந்து கொள்ளத் தோள்கொடுப்பது அல்லது தோளாகவே அமைவது மெளனம்தானே! மெளனத் தோளில் மனம் சாய்ந்து கொண்டு ஆறுதல் காணும் அற்புதமான அகக்காட்சியை உள்ளுக்குள் தரிசிக்க முடிகிறதா?

    பாரதி எந்த ஞான ஆகாசத்தில் நின்று கொண்டு யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தானோ, அந்த ஆகாசத்தின் சமாச்சாரங்கள் இல்லையா இதெல்லாம்!

    ‘புஜம்போன்ற மெளனம்’ என்ற சொற்றொடர் ஏற்படுத்தும் மலைப்பிலிருந்து நாம் மீள, மெல்ல விசிறி விசிறிக் காற்று வரவழைக்கும் சொற்களே, “ஆரங்கள் கீதம்”. அது சாதாரண விசிறி இல்லை. சபரி மலைக்குச் செல்பவர்களுக்கு, அதுவும், பெரிய பாதையில் செல்பவர்களுக்குத் தெரியும். மிகவும் சிரமப்பட்டுக் கரிமலை ஏறி வருபவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, ஏற்கனவே உச்சியை அடைந்தவர்கள், துண்டால் விசிறும் போது கிடைக்கும் ஆசுவாசம்; நிம்மதி; ஆனந்தம்! அதை அனுபவித்து உணர வேண்டும். அப்படியொரு காற்றை வீசும் விசிறியே அந்த ஆரங்களின் கீதம். மன்னிக்கவும், ஆரங்களின் கீதம் இல்லை, “ஆரங்கள் கீதம்”. ஆரங்களில் இருந்து, அவற்றின் அசைவுகளில் இருந்து உண்டாகும் கீதம் இல்லையாம். ஆரங்களே கீதமாம். மெளனம் என்ற தோளில் கீதம் கூட ஒலியெழுப்பக் கூடாது. வெறும் அசைவுதான். உஸ்….! கீதம், இசை கூட அங்கே நிசப்தம்தான்.

    விட்டு விடுங்கள், இதற்குமேல் தாங்காது. இதைவிட ஒரு போதை, இதைக் காட்டிலும் உடற்சிறையை உடைத்துக் கொண்டு உயிர் திமிறிக் கொண்டு வரும் ஒரு பாதை உண்டா? சொல்லுங்கள். நான் ஏன் கவிதைப் பித்துப் பிடித்துத் திரிகிறேன் என்று புரிகிறதா? தலையாட்டிப் பயனில்லை, என்னோடு பயணம் செய்ய, இல்லை, இல்லை, என்னோடு எனக்குள் ஊடுருவிச் செல்ல, அங்கே கண்டறியாதன காண, கேட்டறியாதன கேட்கத் துணிய வேண்டும். தயாரா?

    அது எப்படி ஒருவருக்குள் இன்னொருவர் செல்வது? இதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதோ? அட, ஒதுக்கி வையுங்கள் அறிவை. புத்தி சிகாமணி, ஓர் ஓரமாகக் கைகட்டிக் கொண்டு நில்.

    1970-களில் வந்த ஒரு கவிதை இப்பொழுது உள்ளத்தில் ஒலிக்கிறது:

    தென்றலே சற்று நில் – நீ

    சென்றிடும் பாதையை மாற்றிக் கொள்

    கனவிதழ் கூப்பிக் கவிதை மலராள்

    கடுந்தவம் செய்கின்றாள் – நீ

     கவனம் இழந்து மோதி விடாதே

    கண்ணீர் உகுத்திடுவாள்

    ஞானமே எச்சரிக்கை – உன்

    ஆணவப் பேச்சை நிறுத்திவை

    ஸ்வரங்களின் தேவி சுடர்ரதம் ஏறி

    ஊர்வலம் வருகின்றாள் – நீ

    அவசரப் பட்டுப் பரபரக் காதே – உன்

    சிறகை முறித்திடுவாள்

    மெளனமே இதழ்விரி – பனி

    மகுடங்கள் அசைய நீசிரி

    மானஸ தேவதை ஊர்வலம் வரும்வழி – பொன்

    மகரந்தங்க ளால்நீ மழைபொழி – அவை

    பொலபொல வென்று விழும் ஒலியே – அவள்

    புன்னகையாம் கோயில் மணி

    அப்படியானால் ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து பார்க்க முடியுமா? ஏன் முடியாது? நான் வேறு, நீ வேறு என்ற பிரிவினைத் தோற்றத்தைப் புலப்படுத்தும் உடற்கூடுகள் வெறும் குறுக்குச் சுவர்களே. பானைக்குள் இருக்கும் வெளியும், பானைக்கு வெளியில் உள்ள வெளியும் வேறு வேறா? ஒரே வெட்ட வெளியை, உள்ளென்றும், வெளியென்றும் பிரிக்கும் மண் ஓடுதானே பானை?

    1984-85 என்று நினைக்கிறேன். சபரி மலைக்கு எங்கள் குழுவினரோடு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்ததாம். போன பகுதியில், என் கனவுப் பாடலைத் தொலைபேசியில் எனக்கு டாக்டர் ஞாபகப் படுத்திய செய்தியை வல்லமை இதழில் படித்து விட்டு, நண்பன் சு.ரவி எனக்கு அந்த நிகழ்ச்சியை நினைவூட்டினான். அதை இப்பொழுது சொல்கிறேன். அந்தப் பேருந்துப் பயணத்தின் ஒரு கட்டத்தில், சு.ரவியும் நானும் பாடிக் கொண்டே இருந்தோம். மற்றவர்கள் உறங்கிவிட்ட பிறகும் சிறிது நேரம் பாடி விட்டு நாங்கள் இருவரும் அப்படியே மெளனத்தில் ஆழ்ந்தோம். நான் த்யானத்தில் ஆழ்ந்து விட்டேன். சு.ரவியும் அப்படியே. என் த்யானத்தில் சாயிபாபா ஒளி வடிவமாகக் காட்சி தந்து என்னைப் பேரானந்தத்தில் மூழ்கச் செய்தார். சுமார் ஒருமணி நேரம் இந்த நிலை நீடித்தது. த்யானத்தில் இருந்து புறவுணர்வு நிலைக்கு நான் திரும்பியதும், சு.ரவியிடம், யாராவது காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டேன். அவன் ஆச்சரியப் பட்டான், அவன் அந்த ஒரு மணி நேரமும் காயத்ரி மந்திரத்தை மனத்துக்குள்ளேயே ஜெபித்துக் கொண்டிருந்த செய்தி எனக்கு எப்படித் தெரிந்தது என்று. அப்போது அவனுடைய புருவ மத்தியில் சாயி பாபா அமர்ந்திருந்த தரிசனத்தையும் சொன்னான். நான் அந்த ஒரு மணி நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவன் கேட்டதும் நானும் த்யானத்தில் இருந்ததாகவும், சாயி தரிசனமே பெற்றதாகவும் சொன்னேன். த்யானத்தில் எப்படி எனக்குள் அவனும், அவனுக்குள் நானும்…?

    எங்கள் உரையாடல் த்யான நிலை பற்றித் தொடர்ந்தது. நான் முதன் முதலாக டாக்டர் முன்னிலையில் த்யானம் செய்ய நேர்ந்த கதையைச் சொன்னேன். அப்போது பனிமலையுருகி வழிவது போல் என் தலை குளிர்ந்து போனதைச் சொன்னேன். உடனே சு.ரவி, செளந்தர்ய லஹரியிந் 20-ஆவது செய்யுளைச் சொல்லிக் காட்டினான்.

    கிரந்திமங்ஞேப்யஹ கிரண நிகுரும்பம்ருத ரஸம்aravi

    ஹ்ருதித்வா மாதத்தே ஹிமகரசிலா மூர்த்திம் இவ யஹ

    ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்ததிப இவ

    ஜ்வர ப்லுஷ்டான் த்ருஷ்ட்ய சுகயதி சுதாதாரஸிரய

    இந்தக் கவிதையின் பொருள் த்யானத்தில் பனிமலை உருகுவது போல உள்ளுக்குள் அமுதம் பொழியும், அப்போது மாயையின் சின்னங்களான பாம்புகள் பட்சிராஜனைக் கண்டது போல் ஓடி மறையும் என்பதாம். “ஹிம கர சிலா மூர்த்திம்” என்பது பனிப்பாறையில் செதுக்கப் பட்ட அல்லது அமர்நாத்தில் தெரிவது போல் பனியில் தானே தன்னை வடித்துக் கொண்ட மூர்த்தி அல்லது வடிவம் என்று பொருள்படுகிறது. “கிரண நிகுரும்பம்ருத ரஸம்” என்ற சொற்றொடர் அமுதப் பெருக்கையும், “சகுந்ததிப” என்பது பறவைகளின் ராஜனான கருடனையும் குறிக்கின்றன. கருடனே த்யான அனுபவத்துக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறான் என்று சு.ரவி சொன்னதுமே எனக்கு மெய் சிலிர்த்தது. காரணம், டாக்டரின் முன்னிலையில் நான் முதன்முறையாக த்யானம் செய்த போது எனக்குள் பனிமலை உருகி அமுதம் பொழிந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். அதை அவர் கண்டு கொள்ளாமல், அருகில் இருந்த இன்னொரு நபரிடம், “இன்று காஞ்சிபுரத்தில் கருட சேவை இல்லையோ?” என்று கேட்டார். அதன் உட்பொருளை அன்று நான் உணரவில்லை என்றாலும், பிறகு மேற்சொன்னவாறு பேருந்தில், செளந்தர்ய லஹரியின் 20-ஆவது ஸ்லோகத்தை சு.ரவி விளக்கியதும் புரிந்து கொண்டு சிலிர்த்தேன்.

    யாருக்குள் யார்? நான் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன:

    யார்மாயை யார்நிஜம் யார்சாயை யார்நிழல்

    என்மாய வட்டத்தில் நீமாயையா – அல்லது

    என்மாய வட்டமே உன்சாயையா

    கவிதையும், மந்திரமும் வேறு வேறு இல்லை. வேத மந்திரங்கள் சிலவற்றைத் தமிழில் பாரதி எழுதி வெளியிட்ட போது, அதற்கு, “வேத ரிஷிகளின் கவிதை” என்றுதான் பெயர்சூட்டினான்.

    என் கனவுக்குள் நுழைந்து அங்கே என்னைப் பாட வைத்து, நான் அதை மறந்து விட்ட போது மீட்டுத் தந்த குருவின் அருளை நினைந்து நெகிழ்கிறேன்.

    அந்தப் பாடலை வெகு நாட்கள் பதிவே செய்யவில்லை. அது வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து, என் நண்பர், இசையமைப்பாளர் ரெஹான் தான் இசையமைத்து ஒரு கேஸட், (அப்படியொரு பொருள் ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது, தம்பி!), அதாவது, இசைநாடா தயாரிக்கப் போவதாகவும், அதுவும் திருவேங்கடநாதன் பற்றிய பாடல்களாக இருக்க விரும்புவதாகவும், அதற்கு என் பாடல்களைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் சில பாடல்கள் தந்தேன். அதில் அந்தக் கனவுப் பாடல், “ஆதி சேஷன் ஆகவா” என்ற பாடலும் ஒன்று. பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து ரெஹான் போட்டுக் காட்டியதும், பாட்டின் சொற்களுக்கும், மெட்டுக்கும் ஒரே போராட்டமாக இருந்ததை அவனிடமே சொல்லி விட்டு, அதே மெட்டுகளுக்கு ஏற்ப வேறு பாடல்களும் அப்போதே எழுதித் தந்தேன். குரல் இழை மட்டும் புதிய வரிகளோடு மாற்றிப் பதிவு செய்யப்பட்டு, “திருவேங்கடநாதன்” என்ற பெயரில் அந்த இசைநாடா வெளியானது. “ஆதி சேஷன் ஆகவா” பாடல், “ஏழு மலை ஏறவா” என்று மாறிய கதை இதுதான்.

    அந்தப் பாடலை இங்கே படிக்கலாம், கேட்கலாம்:

    ஏழுமலை ஏறவா கேட்கலாம் இங்கே:

    ஏழு மலை ஏறவா கோவிந்தன் புகழ் கூறவாasr

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    பாட்டுப்பாடி பஜனை செய்து பக்தியோடு தேடவா

    பாரிஜாத மாக நெஞ்சைப் பாதங்களில் போடவா

    கூட்டமாகக் கூடிவந்து சன்னிதிக்குள் சேரவா

    கோடியிலே நானொருவன் குரெலெடுத்துப் பாடவா

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    நான் உருகிப் பாடுவதுன் காதில் விழவில்லையா

    நான் ஒருவன் தேடுவதுன் கண்ணில் படவில்லையா

    கானமழை முடிவிலுந்தன் ஞானவொளி தோன்றுமே

    காண வேண்டும் என்று நெஞ்சம் மீண்டும் மீண்டும் ஏங்குமே

    ஶ்ரீநிவாஸா கோவிந்தா வெங்கட ரமண கோவிந்தா

    ஶ்ரீதர கேஸவ கோவிந்தா ஶ்ரீஹரி நாதா கோவிந்தா

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    புரிந்ததா? பதிந்தும் பதியாத பாடல்! பள்ளியில் படித்த பாடப் புத்தகத்தின் பக்கங்களைப் போல் ……! குருநாதனால் தீட்சை பெற்ற பிறகும், மீண்டும் உலக விவகாரத்தில் உழன்று திரியும் பேய்மனம் போல் ……! ஏன், வேண்டுதல் வேண்டாமையிலாத நிலையடைந்த பிறகும், சில காலம் உடற்கூட்டில் இருந்தாக வேண்டிய ஜீவன் முக்தனைப்போல் …! அப்பப்பா, எத்தனைப் போல், போல், போல்! கவிதைக்கு அழகே உவமைதானே சாமீ! புரிந்ததா, இல்லை புரிந்தும் புரியாதது போல்.. !

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(40)

    -செண்பக ஜெகதீசன்

    சொல்வணக்க மொன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான். (திருக்குறள்:827 – கூடா நட்பு)

     

    புதுக் கவிதையில்…                              solvanakkam

    நல்லதல்ல
    வில்லின் பணிவு,
    அது
    விடப்போகும் அம்பிற்காகத்தான்…

    அதுபோல்
    பகைவர்தம்
    பணிவான சொற்களும்
    பயன்தராது நல்லதாகவே…!

    குறும்பாவில்…

    வில்லின் பணிவும்,
    வயவர்தம் சொல்லின் பணிவும்
    வழங்கிடாது நற்பயனையே…!

    மரபுக் கவிதையில்…

    வில்லது பணிவாய் வளைந்தாலும்
       விரைந்தே வந்திடும் அம்பாலே
    நல்ல பயனைத் தந்திடாத
       நம்மை யழிக்கும் படைதானே,
    நல்லார் போலே மிகப்பணிந்து
       நல்ல சொல்லாய்ச் சொன்னாலும்
    பொல்லாப் பகைவர் பேச்செல்லாம்
       பயனாய் நல்லதைத் தாராதே…!

    லிமரைக்கூ…

    பணிவுடனே வளைந்தாலும் தீங்கேதரும் வில்,
    பணிவாய்த்தான் வந்தாலும்
    நற்பயனைத் தருவதில்லை பகைவர்தம் சொல்…!

    கிராமிய பாணியில்…

    வில்லு வளஞ்சா
    மரியாதண்ணு
    மனசுலதான் எண்ணாத,
    அது ஆபத்து-
    அம்பு வந்து
    தொளச்சிருமே நம்மளத்தான்…

    அதுபோல
    நம்பாத நம்பாத
    எதிரி பேச்ச நம்பாத,
    மருவாதயா பேசுனாலும்
    மனசாற நம்பாத-
    அம்புபோல வந்து
    ஆளத்தான் அழிச்சிருவான்,
    நம்பாத நம்பாத
    அவம்பேச்ச நம்பாத…!

    Share
  • எனக்குள் நானே..!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    பெண்ணுக்குச் சிறப்பு பொறுமை!
    ஈரமாகும் மன மெல்லாம் 
    சிரிப்பு!

    உன்னில் கண்டேன் 
    அந்த மதிப்பு!

    இரட்டைத் தாயின் 
    ஒற்றைக் குழந்தை போல!

    பொறாமையில்லாப் பொறுமையினை 
    உன்னில் கண்டேன் 
    அந்த மதிப்பு!

    பெண்ணைத் தூற்றி வசைபாடும் உலகத்தில் 
    பொறுமையோடு 
    பெருமை தேடும் 
    ஒருத்தி நீ !

    கவியாற்றலை 
    வரமாய் வாங்கி வந்த நீ
    பொறாமை பிடித்தவர்கள் மத்தியில் 
    பொறுமையை வரமாய்ப் பெற்றுக் கொண்டாய்!

    சிந்தனைக் கிணற்றைத் தோண்டின் 
    மரியாதை ஊற்று உறைந்து போகுமோ??

    மானம் மரியாதையாய் 
    நீ 
    இருந்தாலும் – வாழ்ந்தாலும் 
    போட்டி, பொறாமை, சூது, வாது இல்லாத 
    மனசு உன்னிடம்!

    உன் நட்பினைப் பின்தொடர 
    என் மனசோ ஏங்கித் தவிக்கும்!

    ஒரு நதியாய்ப் பாய்ந்தோடுவாய்…
    பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய் 
    என்னை மூழ்கடிப்பாய்…!

    தாகமெடுக்கின்ற நேரத்தில்
    வறட்சியாய் இருப்பாய்!
    வறட்சியாய் இருக்கும் நேரத்தில்
    குளிர்ச்சியாய் இருப்பாய்!

    உன் மௌனம் 
    வெளியேறிச் செல்லக் காத்திருந்து
    மனசு உருகித் தவிக்கையிலே…
    உன் சிந்தனைத் துளிகளால் 
    ஒவ்வொரு நாளும் 
    நான்
    குளிர்த்துக் கொண்டிருக்கின்றேன்…!

    மழைக்காலத்தில் துளிர்க்கும்
    புல் பூண்டாய்
    எனக்குள் நானே
    மீண்டும் மீண்டும்
    உயிர்த்தெழுகிறேன்!

    Share
  • சக்கரக்கட்டி ராசாத்தி…

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    பெற்றால்தான்

     

    மனம் ஒரு பறவை!  விரும்பும் திசையெல்லாம் பறந்துகொண்டேயிருக்கும்!  மனிதனுக்குத்தான் இறகுகள் இல்லை!  உடலால் பறக்க முடியாவிட்டாலும் உள்ளத்தால் பல தூரம் கடந்து விடுகிறான்.  நனவில் அல்ல!  கனவில்!!  எதார்த்தங்களை வாழ்வில் பார்த்துச் சலித்துப்போன பிறகு  நமக்கும்கூட அப்படிப் பறந்திட எண்ணம் வரும்!  அதுவும் காதல் கொண்ட பருவத்தில் என்றால் எல்லைகள் அங்கே இல்லவே இல்லை!

    பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படும் திரைச் சித்திரங்களில் இந்த எதார்த்தங்களை மீறி கொஞ்சம் மாய ஜாலம் கலந்து மக்களுக்குத் தர தொன்றுதொட்டு இயக்குனர்களுக்குக் கூட ஒரு வேட்கை இருந்து வருகிறது!

    ஒரு ‘கார்’ தரையிலிருந்து விண்ணோக்கி கிளம்பி சென்னை நகரை.. அதன் முக்கிய சாலைகளை வலம் வருவது போன்ற காட்சியமைப்பு! மக்கள் திலகத்துடன் கன்னடத்துப் பைங்கிளி  அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களும் தோன்றிடும் வெற்றிப்படைப்பு!  எத்தனையோ பாடல்களை மனம் விரும்பிக் கேட்கும்போதும் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் ஏதோ உற்சாக கங்கை உள்ளத்துள் ஊற்றெடுக்கும்!

    முழுக்க முழுக்க மெலோடியும் இல்லாமல் அதே நேரம் முழுமையான ஜன ரஞ்சகப் பாடலாகவும் இல்லாமல் ஒருவிதக் கலவையாய் உருவாக்கித் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்!  கவி வண்ணம் வாலி கணை தொடுத்திருக்கிறார்!  திரு கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் இயக்கத்தில் ‘பெற்றால்தான் பிள்ளையா’ திரைப்படத்தில் அமைந்த பாடலிது!

    tms-susila-vaali-msv

    மக்கள் திலகமும் அபிநய சரஸ்வதியும் இணைந்து தமிழ்த் திரையில் வழங்கிய காதல் பாடல்களின் பட்டியல் நீளும்..  என்றாலும் உயிரோட்டமான இப்பாடல் எப்போது கேட்டாலும் .. டி எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா குரல்களில் தெவிட்டாத தெள்ளமுதம் என்கிற வகையில் ஆண்டுகள் பல தாண்டி நம் மனதை ஆண்டு வருகிறது!

    http://www.youtube.com/watch?v=Tjwxq4Vh4a0
    காணொளி:   http://www.youtube.com/watch?v=Tjwxq4Vh4a0

    படம்: பெற்றால்தான் பிள்ளையா
    பாடல்: வாலி
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல்: டி எம் சௌந்தரராஜன், பி சுசீலா

    சக்கரைக்கட்டி ராஜாத்தி –
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே –
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

    பட்டுப் போன்ற உடல் தளிரோ –
    என்னைப்பார்க்கையிலே வந்த குளிரோ
    தோகை மயிலின் தோளை அணைத்து
    தோகை மயிலின் தோளை அணைத்து
    பழகிக்  கொள்வது சுகமோ

    தொட்டுக் கொள்ள விரல் துடிக்கும் –
    விழிதூரப் போகச் சொல்லி நடிக்கும்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆளை மயக்கும் பாளைச் சிரிப்பில்
    ஆசை பிறந்தது எனக்கும்

    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    கேள்வி  என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்

    அத்தை மகனே அத்தானே –
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே –
    நான்பூத்திருக்கும் முல்லை மொட்டானேன்….

    உறவைச் சொல்லி நான் வரவா
    என் உயிரை உன்னிடம் தரவோ
    [உன் உதட்டில் உள்ளதைப் பெறவோ]
    மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
    மாலை மயக்கம் தீரும் வரைக்கும்
    வாரி கொடுப்பேன் வா வா

    மடியைத் தேடி வந்து விழவோ –
    இந்தமாப்பிள்ளை அழகுக்கு அழகோ
    காலை வரையில் சே(சோ)லை நிழலில்
    காலை வரையில் சே(சோ)லை நிழலில்
    கண்கள் உறங்கிட வா வா

    கொடுத்த மனசுக்கும் எடுத்த மனசுக்கும்
    கேள்வி  என்ன ஜாடை என்ன
    தேவை இல்லை வெட்கம்

    அத்தை மகனே அத்தானே –
    உன்அழகைக் கண்டு நான் பித்தானேன்
    தென்றலடிக்கும் தோட்டத்திலே –
    நான்பூத்திருக்கும் முல்லை மொட்டானேன்….

    சக்கரைக்கட்டி ராஜாத்தி –
    என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
    சந்தனக்கட்டி மேனியிலே –
    நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி

    இந்த வரிகளில் “உன் உதட்டில் உள்ளதைப் பெறவோ” என்கிற வார்த்தை தணிக்கைக் குழுவினரால் நீக்கப்பட்டு.. “என் உயிரை உன்னிடம் தரவோ” என்றும் ‘சேலை நிழலில்’ என்கிற வார்த்தை.. ‘சோலை நிழலில்’ என்றும் மாற்றப்பட்டு ஒலிப்பதிவானது!  காலத்தின் கோலத்தைப் பாருங்கள்..  சேலை என்பதும் உதட்டில் என்கிற வார்த்தைகள் கூட தணிக்கை செய்யப்பட்ட காலம் என்பதை இன்று நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது!

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 21

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 21

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 81Mukkonakkilikal - 82Mukkonakkilikal - 83Mukkonakkilikal - 84

     

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

    Share