Blog

  • பாடம்…

    செண்பக ஜெகதீசன்

    Rice field in early morning. Takasaki, Japan.

    இயற்கையும்

    இப்போது கற்றுக்கொண்டது,

    இந்த மனிதனைப் பார்த்து..

     

    இரவெல்லாம் காத்திருந்து

    கையேந்தி

    இலைகள் சேகரித்த பனித்துளிகளை,

    இந்தக்

    கதிரவன் வந்து

    கவர்ந்து சென்றுவிட்டானே…!

     

    படத்திற்கு நன்றி: http://blog.jasonweddington.com/2012/08/rice-field-sunrise/

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -1

     

    சு. கோதண்டராமன்

    பாரதியின் குயில் பாட்டு அவருடைய படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தது. முதலாவதாக, இது செய்யுள் வடிவிலான கதைப் பாட்டு. பாரதி பல தலைப்புகளில் மரபுக் கவிதைகளும் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். பல கதைகளும் உரைநடை வடிவில் எழுதியுள்ளார். ஆனால் இது ஒன்று தான் பாடல் வடிவில் சொல்லப்பட்ட கதை.

    பாரதியின் ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது சமூகத்திற்கான ஒரு செய்தி வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இக்கதையில் நீதிகளை வெளிப்படையாகத் தெரிவிக்காதது மட்டுமல்ல. முடிவில் ஒரு மர்மமான முடிச்சையும் வைத்திருக்கிறார்.

    சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், 
    மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
    தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். 
    ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,

    வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க 
    யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

     

    எனவே ஏதோ செய்தி மறைந்துள்ளது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன என்று அறிய, அந்தப் பாடலை முழுமையாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் பாரதியின் மற்ற படைப்புகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்ல இருக்கும் விளக்கம் நம் கற்பனையில் பிறந்ததாக இருக்கக் கூடாது. பாரதியின் பிற படைப்புகளில் காணப்படும் அவரது உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் குயில் பாட்டில் மறைந்துள்ள செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம். முதலில் அந்தக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

    கவிஞர் ஒரு நாள் ஒரு மாந்தோப்பில் உலவிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குயில்களில் ஒன்று மட்டும் மற்றவற்றை விடச் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தது. கானத்தால் ஈர்க்கப்பட்டு அதன் மேல் காதல் கொண்டார் கவிஞர். தனக்கு ஏற்ற ஒரு காதலரைத் தேடிக் கொண்டிருந்த குயிலும் கவிஞருடன் இன் மொழிகள் பேசி, நான்காம் நாள் வருமாறு கேட்டுக் கொண்டது.

    காதல் நினைவால் பித்துப் பிடித்தவர் போல் ஆன கவிஞர், மறு நாளே தோப்பிற்குச் சென்றார். அங்கு அந்தக் குயில் ஒரு குரங்குடன் காதல் வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவிலிருந்து காண்கிறார். வஞ்சகக் குயிலையும் குரங்கையும் கொல்லக் கருதி வாளை வீசுகிறார். அவை தப்பி விடுகின்றன.

    காதல் நினைவு வாட்டவே மறு நாளும் தோப்பிற்குச் செல்கிறார். அங்கு அந்த வஞ்சகக் குயில் ஒரு மாட்டுடன் காதல் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பதைக்கிறார். மாட்டைக் கொல்ல வாளை வீச, அது தப்பிவிடுகிறது.

    நான்காம் நாள் குயில் இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. கவிஞர் தான் கண்ட அதன் வஞ்சக நடத்தைகளைக் கூறி அதைக் கொல்லக் கருதுகிறார். குயிலோ தன் கதையை முழுவதும் கேட்டு விட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிறது. குயில் தன் பூர்வ ஜன்மக் கதையைக் கூறுகிறது.

    வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர நாட்டில் ஓர் மலையில் பிறந்து சின்னக் குயிலி என்னும் பெயருடன் வளர்ந்தாள் அவள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவளை மணக்க விரும்பினான் அவளது மாமன் மகனான மாடன் என்பான். பொன்னை, மலரை, புதுத் தேனைக் கொண்டு வந்து நித்தம் கொடுத்து நினைவெல்லாம் அவளாக அவன் சித்தம் வருந்தியதால், அவள் மாலையிட வாக்களித்தாள்; மையலினால் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள்.

    இதை அறியாத அவளுடைய தந்தை அவளுக்கு நெட்டைக் குரங்கன் என்னும் இளைஞனைக் கணவனாக்க நிச்சயித்தான்.   இந்நிலையில் அவள் ஒரு இளவரசனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனும் “நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பிற பெண்ணை  நினையேன். இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம், நின் வீட்டிலுள்ளோர்பால் என் மனதைச் சொல்வேன். எனது நிலை உரைப்பேன், வேத நெறியில் விவாகம் உனைச் செய்து கொள்வேன்” என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்ட அவளை அவன் அணைத்து இதழ் பருகும் நேரத்தில் குரங்கனும் மாடனும் பார்த்துப் பதைபதைத்து இளவரசனை வாளால் வெட்டினர். அவனும் இவர்களைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான்.

    சின்னக் குயிலி குயிலாகப் பிறந்தாள். அவள் ஒரு முனிவரைச் சந்தித்த போது அவர் அவளது முற் பிறப்புக் கதையையும் கூறி வருங்காலத்தையும் உரைத்தார். மாடனும் குரங்கனும் பேயாகப் பிறந்து அவளைப் பின்தொடர்வார்கள் என்றும் அவளது நெஞ்சம் கவர்ந்த இளவரசன் தொண்டை நாட்டில் ஒரு மாந்தோப்பில் அவளது பாட்டால் கவரப்பட்டு அவளைச் சந்தித்து மணப்பான் என்றும் அவர் கூறினார்.

    முனிவர் கூறியபடியே, அவளுடைய முற்பிறப்புக் காதலனே கவிஞராக வந்துள்ளதைத் தான் உணர்ந்ததாக அவள் உரைக்க, கவிஞர் அக் குயிலை அணைத்து இன்பவெறி கொண்டு முத்தமிட்டார். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கு நின்றாள்; பெண்ணவளைக் கண்டு பெருங்களி கொண்டார் அவர். இப்படி மகிழ்ச்சியாக முடிகிறது கதை.

     

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 4

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    சைவ சமயம் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இச்சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது? சைவத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்குமா? இருக்கிறதா?… இப்படி ஆயிரம் கேள்விகள்….

    சைவ சமயத்தின் மையத்தில் இக்கால அறிவியல் உண்மைகள் உள்ளன. சைவ சமயத்தின் ஒவ்வொரு தத்துவமும் விஞ்ஞானத்துடன் பிணைந்துள்ளது. இதனை நம் நாட்டார் மட்டுமல்லாமல் மேனாட்டாரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இதோ சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி கூறுவதைக் கேட்போம். பெயரை பார்த்ததும் இது நம்ம ஊர் சாமி என முடிவு கட்ட வேண்டா! சாமி அச்சு, அசல் அமெரிக்கர் ; கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்தில் பிறந்தவர். இளமையிலேயே சைவத்தின் பால் ஈர்க்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தீட்சை பெற்றுத் துறவி ஆனவர். இவர் என்ன சொல்கிறார் :

    “வருங் காலத்துக்கும் வளம் கூட்டும் சமயம் சைவம். தொழில் நுட்ப யுகமாகிய இந்தக் கால கட்டத்துக்கு வேறெந்த மதத்தையும் விட மிகப் பொருந்தி வரக்கூடிய ஒரே மதம். இது, முழுக்க முழுக்க இக்கால அறிவியலோடு ஒத்துப் போகும் தன்மை உடையது.”

    இன்னோர் அமெரிக்கர் : பெயர் – Theos Casimir Bernard சமய வல்லுநர், திபெத்திய புத்தமத ஆய்வாளர், யோகா வல்லுநர். இவருடைய கருத்து : “அறிவியல் அடிப்படையில், தர்க்க ரீதியில் பிரபஞ்சத்தை அலசி ஆயும் பண்பு சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமே உண்டு.”

    சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற மலேசிய இளைஞர் சிவ.பரமசிவம் என்பவர் எழுதுகிறார் :

    “சைவ சமயமும் அறிவியலும் நட்புறவாகவே உள்ளன ; ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இருக்கின்றன. சைவ சித்தாந்தம் உரைக்கும் உண்மைகளை அறிவியல் ஆய்வாளர்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்துகின்றனர்.”

    பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மேலே சோற்றுப் பருக்கைகள் மூன்று கொடுத்துள்ளேன். போதும் அல்லவா! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அடுக்குவதை விட நாமே நேரே சென்று காண்பது நல்லது தானே! எப்பொருள் யார், யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

    சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும்.

    இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்
    “அண்டத்தி லுள்ளதே பிண்டம்
    பிண்டத்தி லுள்ளதே அண்டம்
    அண்டமும் பிண்டமும் ஒன்றே
    அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.

    சைவ சமய ஞானிகளும் பலர் உளர் ; அத்தனைப் பேர்களையும் இங்குக் கொண்டுவரும் வல்லமை ‘வல்லமைக்கும்’ இல்லை ; அடியேனுக்கும் இல்லை. ஆகவே அவர்களுள் இருவரை மட்டும் தேர்ந்தெடுப்போம். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? அண்டம், பிண்டம் பற்றி அதிகமாக யார் பேசி இருக்கிறார்களோ அவர்களை! அவர்கள்: திருமூலர் என்னும் திருமூல நாயனார் (திருமூல சித்தர். என்றொருவர் 16 -ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்க) ; மற்றவர் : மாணிக்கவாசகர். முன்னவர் பிண்டம் பற்றிப் பேசுகிறார் ; பின்னவர் அண்டத்தைப் பற்றி அழகாகக் கூறுவார். இக்கருத்தை முக்கோணமாகக் கற்பனை செய்து பார்க்கலாம்.

    முக்கோணத்தின் அடிப்படை : சைவசமயம் – அறிவியல் இணைந்த படுக்கைக் கோடு ; இடப்பக்கச் சாய் கோடு : திருமூலர் காட்டும் பிண்டம் ; வலப்பக்கச் சாய் கோடு : மாணிக்கவாசகர் விளக்கும் அண்டம். இவ்விரு சாய் கோடுகளும் மேல் நோக்கிச் செல்லுகின்றன. அவை இணையும் போது சைவ சமயம், அறிவியல் மையம் என்ற உச்சி கிடைக்கும்.

    Triangle

    இவ்விருவரும் நமக்குத் தெரிந்தவர்கள்தாம். இருப்பினும் அவர்களைப் பற்றிச் சில தகவல்கள் .

    திருமூலர் :

    5 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல்களில், திருமந்திரம் தலையாயது எனினும், திருமூலர் அறுநூற் றொன்று, திருமூலர் வைத்தியம்,
    திருமூலர் ஞானம், திருமூலர் வழலைச் சூத்திரம், திருமூலர் பல திரட்டு,
    திருமூலர் வாதம் இருபத்தொன்று போன்ற மேலும் பல அரிய நூல்களையும் எழுதியுள்ளர். ‘திருமந்திரம்’ என்னும் இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை. காண்க :

    பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. (தி.10 பா.25)

    இவர் 63 நாயன்மார் வரிசையிலும் வருவார் ; 18 சித்தர்கள் வரிசையிலும் இடம் பெறுவார்! அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்திப் பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். இரண்டே இரண்டு பேரைத் தான் ‘பிரான்’ என்ற சொல்லைச் சேர்த்து அவர் பெருமைப் படுத்துகிறார். வேறு எந்த அடியார்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு. அந்த இருவருள் ஒருவர் பிள்ளையார்(சம்பந்தர்) இன்னொருவர் திருமூலர்.

    சம்பந்தரை எம்பிரான் என்றும், திருமூலரை நம்பிரான் என்றும் திருத்தொண்டத்தொகையில் போற்றியுள்ளார் :

    “`நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” (தி.7 ப.35. பா.5)

    நம்பிரான் என்றால் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாதவன் என்று பொருள்.

    திருமூலர் 28 ஆகமங்களின் சாரமாகத் திருமந்திரத்தைச் செய்தருளினார். இது உண்மையென உணர்த்தும் விதத்தில், பெரியபுராணத்தில் திருமூலர் வரலாற்றை 28 பாடல்களில் அமைத்தார் சேக்கிழார் .

    இப்படிப்பட்ட பெருமைக்குரிய திருமூலரைப் பற்றிய கதைகள் பல. கூடுவிட்டுக் கூடு பாயும் கலையில் வல்லுநர் என்பர். ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற கணக்கில் இவர் 3000 பாடல்கள் எழுதியதாகச் சொல்வர். அதாவது இவர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தவராம்! இக்கட்டுக் கதைகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் இவர் எழுதிய 3000 பாடல்களும் கிடைத்துள்ளன என்பதே பெரிய செய்திதான். இவை கலி விருத்தத்தில் அமைந்தவை. நாலே அடிகள் ; ஒவ்வொரு அடியிலும் நாலே சீர்கள்! ஆனால் அவற்றில்தான் எத்தனை எத்தனை அரிய பெரிய கருத்துகள்!

    இக்கால மருத்துவ இயல் கூறும் கருவியல் (emriology) முதல் யோக சாத்திரங்கள், சைவ சித்தாந்தத் தத்துவங்கள், அறிவியல் கருத்துகள்… எனப் பலவும் இதில் பரந்து விரிந்து கிடக்கின்றன. காட்டாக ஒன்றைக் காட்டுகின்றேன் :

    அட்சரேகைகளை முதல் முதலில் எகிப்திய வானநூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். அவர் கி.பி. 150 -இல் வாழ்ந்தவர். ஆனால் தீர்க்கரேகைகளையோ 18 -ஆவது நூற்றாண்டில் தான் காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது குறித்துத் திருமூலர் அறிந்திருக்கிறார். அவர் இரண்டு திருமந்திரப்பாடல்களில் (2701,2708) மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் (தீர்க்கரேகை) இருப்பதாகப் பாடுகிறார்! கற்பனைக் கதை இல்லை இது. அறிவியல் (புவியியல்) உண்மை. சிவன் இருக்கும் கைலாய மலை மேரு. இதில் இருந்து கீழ் நோக்கி நேர்க் கோடு வரைந்தால் அது சிதம்பரம் (சிவத்தலம்) வழியாகச் செல்லும். இக்கோட்டின் வலப்பக்கம் மேரு (கைலாய) மலை இருக்கும் ; இடப்பக்கம் (எக்காலத்தும்) சிவ பூமியாக (விளங்கும்) இலங்கை இருக்கும்.

    படம் காண்க :

     Meru-Chidambaram-Ceyon map

    இடைபிங் கலையிம வானோ டிலங்கை
    ஈடுநின்ற மேருநடுவாஞ் சுழுனை
    கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
    படர்வொன்றி யென்னும் பரமாம் பரமன்றே
    – திருமந்திரம் 2708

    இந்தப் பாட்டில் இடகலை (இடப்பக்க நாசி) இமயத்திற்கும் பிங்கலை (வலப்பக்க நாசி) இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நடுநாசி தில்லைக்கு ஒப்பாகும் (நாசி = மூக்கு). இக்கருத்தையே உணர்த்தும் இன்னொரு பாடல் :

    மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
    கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
    சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
    மேலுஞ் சுழுனை இவை சிவபூ மியே. (2701).

    இப்படிப்பட்ட கருத்து வளம் மிக்க நூல் திருமந்திரம்.

    வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில் சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனாரே ஆவர்.

    ” ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (2104)
    ( ‘உம்’மைக் கவனிக்க : ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இல்லை!)

    ” என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம் 81)

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (திருமந்திரம் 147).

    இவை திருமூலர் திருவாய் மலர்ந்தருளியவை.

    மாணிக்கவாசகர் :

    திருவாதவூரார், மணிவாசகர் மாணிக்கவாசகர்.. என்றெல்லாம் பெயர் பெற்றவர்; அரிமர்த்தன பாண்டியன் அவைக்களத்தில் முதல் அமைச்சர் பதவி வகித்தவர்; “போருக்கு வேண்டும் அரபுப் புரவிகள், வாங்கி வாருங்கள்” என்று அரசன் பெரும்பொருள் கொடுத்து இவரை அனுப்பத் திருப்பெருந்துறை ஊரில் குருந்த மரத்தடியில் இருந்த ஈசன் இவரைத் தடுத்தாட்கொண்டான். குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளை எல்லாம் ஆண்டவன் திருப்பணிக்குத் திருப்பிவிட்ட புரட்சிக்காரர். ‘மாணிக்கவாசகன்’ என இறைவனாலேயே பெயர் சூட்டப்பட்டவர். இறைவனே குருவாக அமையத் தீட்சை பெற்றவர். ஆதி காலம் முதலே சிவ பூமியாக விளங்கிய ஈழத்தில் புத்தமத ஆதிக்கம் ஏற்பட்டது. அதனைத் தடுக்க அங்கே சென்று புத்த பிக்குகளை வாதங்களில் வென்று சைவ சமயத்தை மீண்டும் நிலை நாட்டியவர் ; ஈழ அரசனின் ஊமை மகளைக் குணமாக்கிப் பேசவைத்தவர்… இவருக்காகவே ஈசன் பிட்டுக்கு மண் சுமந்தான், பிரம்படி பட்டான்…. நரிகளைப் பரியாக்கிப் பரிகளை நரியாக்கித் திருவிளையாடல் புரிந்தான், திருவெம்பாவை இவர் பாடக் கேட்டு மகிழ்ந்த இறைவன் “பாவை படிய வாயால் கோவை பாடு” என்று கேட்கத் திருக்கோவை பாடினாராம்….என ஏராளமாகக் கதைகள் உண்டு. இவர் இயற்றிய திருவாசகத்தைப் படித்து உருகியவர் பலருண்டு. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மேனாட்டவரான ஜி யு போப். தன் மதத்தைப் பரப்பத் தமிழகம் வந்த இவர் திருவாசகத்தைப் படித்துத் திளைத்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். விளைவு, இவர் மேலதிகாரிகள் இவரைத் திரும்ப அழைத்துக்கொண்டதோடு நில்லாமல் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்தனர். (திருவாசகத்தைப் படித்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதிய கடிதத்தில் கண்ணீர்த் துளி விழுந்தது, தன் கல்லறையில் ‘இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என எழுதச் சொன்னது… எல்லாம் கற்பனையின் பிற்புலத்தில் எழுந்த கதைகளே!) எப்படி இருப்பினும் திருவாசகத்தின் பெருமைக்கு இரண்டே இரண்டு சான்றுகள் போதும் : ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என இன்றும் வழங்கி வரும் (பழ) மொழி ; வள்ளலார் பாடிய வரிகள் : ,

    “வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்….ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!”.

    இத்திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் எழுதிய ஒவ்வொரு சொல்லையும் இக்கால அறிவியல் உண்மையே என உறுதிப்படுத்துகிறது.

    எப்படி இக்கால அறிவியல் கருத்துகள் சைவத்தின் நடுவில் கொலு இருக்கின்றன என்பதைக் காணலாம் அடுத்த பகுதியில். சைவ சமயத்தின் மாபெரும் ஞானிகள் இருவர் வழி காட்ட வருகிறார்கள்.

    Share
  • புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 3

     

    -மேகலா இராமமூர்த்தி

     

    (அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி)

    மதிய உணவிற்குப்பின் சற்றே ஓய்வாக அமர்ந்திருந்தார் ’பிசிர்’ என்னும் அழகிய ஊரிலே வாழ்ந்துவந்த நற்றமிழ்ப் புலவரான ’ஆந்தையார்’. அவ்வூர் பாண்டிய நாட்டைச் சேர்ந்ததாகும்.

    தன் உயிர்நண்பனும் சோழ அரசனுமாகிய கோப்பெருஞ்சோழனைப் பற்றிய நினைவுகள் மனத்திரையில் ஓட, தன்னை மறந்தவராய் அமர்ந்திருந்த ஆந்தையாரைக் கண்ட அவர் மனைவி அவரைநோக்கி, ”உங்களைக் காண ஊர்மக்கள் சிலர் வந்திருக்கிறார்கள்; சென்று காணுங்கள்” என்றுகூறச் சிந்தனை கலைந்து எழுந்திருந்த புலவர்பெருமான் தன்னைக் காண வந்தோரை வரவேற்று அவர்கள் வந்த காரணத்தை வினவினார். அவர்களோ, ”ஐயா! நாங்கள் வசதி படைத்தச் சீமான்களோ, செல்வந்தர்களோ அல்லர். மிகச் சாதாரணமான வாழ்வு நடத்தும் எளியோரே. நம் அரசனின் ஆட்சியில் வரி கட்டியது போக எங்களுக்குக் கட்டுவதற்குத் துணியும் மிஞ்சாது போலிருக்கிறதே! எதற்கெடுத்தாலும் வரி…வரி என்று குடிமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஓர் கொள்ளைக்காரனாகவே அல்லவா மாறிவருகிறான் நம் அரசன் அறிவுடை நம்பி! எங்கள் துன்பத்திற்கு ஓர் விடிவே இல்லையா? தங்களைப் போன்ற சான்றோர்தான் இந்த அக்கிரமத்திற்கு ஓர் முடிவுகட்ட வேண்டும்” என்று வேதனையோடு தங்கள் நிலையை விளக்கிவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.

    இதையெல்லாம் அருகிருந்தவாறே கவனித்துக் கொண்டிருந்த ஆந்தையாரின் மனைவி தம் கணவரை நோக்கி, ”ஏழைமக்கள் படும்பாட்டைக் கவனித்தீர்களா? இவர்களுக்காகவாவது நீங்கள்  நம் மன்னனை அவசியம் போய்ப் பார்க்கத்தான் வேண்டும்” என்றார்.

    ”நீ சொல்வது சரிதான்……நம் மக்கள்படும் துன்பம் என் மனத்தையும் வாள்கொண்டு அறுக்கின்றது. ஆயினும், இதுவரை நான் நம் மன்னன் அறிவுடை நம்பியோடு தொடர்போ, நட்போ கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், உறையூரிலிருந்து ஆட்சி செய்யும் கோப்பெருஞ்சோழனின் உயிர்நண்பனாகவேறு விளங்கிவருகிறேன். இவையெல்லாம் அறிவுடை நம்பிக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்; அவனை விடுத்துச் சோழ அரசனோடு நட்புப் பூண்டிருக்கும் என்னை அவன் வரவேற்பானா? நான் சொல்வதைக் கேட்டு நடப்பானா? என்ற ஐயம் என் மனத்தில் எழுகின்றது” என்றார் ஆந்தையார்.

    ”இந்த ஐயமே தேவையற்றது. இன்னொரு அரசனே உங்களிடம் நட்பாகப் பழகுகிறான் எனும்போது நம் அரசனும் உங்கள் நட்பை விரும்பவே செய்வான்; நீங்கள் சொல்லும் புத்திமதிகளைக் கேட்பான். ஆகவே தயங்காமல் நம் அரசனைச் சென்று காணுங்கள்” என்று ஆந்தையாருக்குத் தைரியமளித்தார் அவர் மனைவி.

    “அப்படியா சொல்கிறாய்? நல்லது…..நாளை நம் மன்னனைப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை” என்றார் பிசிராந்தையார்.

    மறுநாள் பொழுது இனிதே புலர்ந்தது. செங்கதிரோன் தன் ஒளிமுகத்தைக் காட்டிப் புன்முறுவல் பூத்தவாறே வானவீதியில் தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான். அவ்வேளையில் அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டார் புலவர். வழக்கம்போலவே அரண்மனை வாயிலில் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அரசனைக் காண வந்திருப்பதாக ஆந்தையார் காவலர்களிடம் தெரிவிக்க, அவர்கள் அரசனின் அனுமதி பெறுவதற்காக உள்ளே சென்றனர். தன் அமைச்சர்களோடு ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த அறிவுடை நம்பி, பிசிராந்தையார் வெளியில் காத்திருக்கின்றார் என்பதைக் காவலர் வாயிலாய் அறிந்தவுடன் அவரைக் காணும் விருப்பம் கொண்டவனாய் உடனே அவரைக் காணச் சம்மதித்தான்.

    மன்னன் தன்னை உடனே காண விரும்புகிறான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த பிசிராந்தையார் உள்ளே சென்று கொலுமண்டபத்தில் வீற்றிருந்த மன்னனையும், அமைச்சர் பெருமக்களையும் வணங்கினார். இன்னும் சற்று நேரத்தில் அங்கே ஆடல், பாடல் நிகழ்வுகள் அரங்கேறவிருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக மகளிர் குழாம் ஒன்று ஒப்பனையோடு அம்மண்டபத்தின் ஒரு பக்கத்திலே காத்திருந்தது. அரசன், மக்கள் நலனைவிடக் கேளிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறான் என்பதனை இவையெல்லாம் புலவருக்குத் தெளிவாய் உணர்த்தின.

    நாட்டு நலன் பற்றியும், மக்களின் நல்வாழ்வு பற்றியும் அரசனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்ட பிசிராந்தையார், தாம் சொல்லவேண்டிய செய்திகளை அரசன் நன்கு விளங்கிக்கொள்ளும் வகையில் உரைக்க விரும்பியவராய், “மன்னா! அடியேனின் வணக்கம்! உம்மைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை என் பாக்கியமாய்க் கருதுகிறேன்” என்றார்.

    அறிவுடை நம்பி புன்னகைத்தவாறே, ”இல்லை புலவரே! உம்மைச் சந்திப்பதை நான்தான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சாதாரணப் புலவரா நீர்…! கோப்பெருஞ்சோழனையே உற்ற நண்பராகக் கொண்ட ஒப்பற்ற புலவரல்லவா!” என்று கூறிவிட்டு, என்னைத் திடீரென்று காணவந்ததன் காரணத்தை நான் அறியலாமா?” என்று வினவினான்.

    ”திடீர்ச் சந்திப்பு ஒன்றுமில்லை அரசே! நீண்ட நாட்களாகவே உம்மைக் காணவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன்; அதற்கான சமயமும், வாய்ப்பும் இன்றுதான் கிடைத்தன.”

    ”அப்படியா, தங்கள் வருகைக்கு நன்றி! என்னிடம் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?”

    ”ஆம் மன்னா! உனக்கு ஓர் கதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்; கேட்க உனக்கு அவகாசம் இருக்கிறதா?”

    “கதையா…என்ன கதை?”

    ”இது யானைக் கதை மன்னா! யானை எவ்வாறு உணவு உண்ணவேண்டும் என்பதை விளக்கும் கதை.”

    கட கடவென்று சிரித்த நம்பி, ”வேடிக்கையான புலவரய்யா நீர்! கதை கேட்பதற்கு நானென்ன குழந்தையா?”

    ”இல்லை அரசே! இஃது குழந்தைகளுக்கான கதையில்லை; அரசனாகிய உனக்கான கதைதான். சொல்லட்டுமா….கேட்கிறாயா?”

    ”அப்படியானால் சரி! சொல்லுங்கள். கேட்கச் சித்தமாக இருக்கிறேன்.”

    ”மன்னா! விளைகின்ற நெல்லின் அளவு ஒரு மாவிற்கும் (இது நிலத்தின் அளவைக் குறிப்பது) குறைவாக இருப்பினும், அந்த நெல்லை முறையாக அறுவடை செய்துக் கவளம் கவளமாக யானைக்குக் கொடுத்தால், அஃது யானைக்குப் பலநாள் உணவாகும். மாறாக யானையையே வயலில் புகுந்து மேயவிட்டால் என்னவாகும்…? யானையின் வாயில் புகும் நெல்லின் அளவைவிட அதன் காலில் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவுதானே அதிகமாக இருக்கும்? அதனால் வயலும் நாசமாகும்; யானைக்கும் பயனில்லை.

    நாட்டை ஆளுகின்ற அரசனும் இந்த யானையைப் போன்றவன்தான். அவனுடைய குடிமக்களோ விளைந்த பயிர்களையுடைய வயலைப் போன்றவர்கள். எனவே அரசன் குடிமக்களிடம் அளவாகவும், முறையாகவும் வரி வசூலிக்கவேண்டும். அப்போதுதான் இருவருக்குமே பயன் விளையும்; நாடும் செழிக்கும். அதைவிடுத்து, மக்கள்நலனில் சிறிதும் அக்கறையில்லாத அமைச்சர்கள், ஏனைய அரசியல் சுற்றத்தினர் ஆகியோரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மக்கள்பால் சிறிதும் அன்போ, பரிவோயின்றி அவர்களின் உழைப்பையும், பொருளையும் சுரண்டினால் அச்செயல் ‘யானை புகுந்த வயல்’ போல அல்லவா ஆகிவிடும்! விளைவு….? மக்களும் துன்புறுவர்; நாடும் அழிந்துவிடுமே! இதனை உனக்கு விளக்குவதற்காகவே இந்த யானைக் கதை” என்று மடைதிறந்த வெள்ளம் போல் பேசி நிறுத்தினார் பிசிராந்தையார்.

    புலவரின் பொருள்பொதிந்த உரையைக் கேட்ட அறிவுடை நம்பி வாயடைத்துப் போனான். மக்களிடம் பரிவுகாட்டாத தன் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தான். சற்று நேரம் அவையே அமைதியில் மூழ்கியிருந்தது. பின்பு, புலவரை நோக்கித் தணிந்த குரலில் பேசிய நம்பி, “என் அறிவுக் கண்களைத் திறந்துவிட்டீர்கள் புலவரே! இனி நான் குடிமக்களிடம் அதிக வரி வாங்க மாட்டேன்; அவர்தம் நல்வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே என் இலட்சியம்!” என்று முழங்கினான்.

    பிசிராந்தையாரும், ’வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது’ என மகிழ்ந்து மன்னனை வணங்கி விடைபெற்றார்.

    அவர் இயற்றிய காலத்தால் அழியாத காவியமான அப்பாடலை நாமும் காண்போமா?

    ”காய்நெல்   லறுத்துக்   கவளங்   கொளினே
    மாநிறைவு   இல்லதும்   பன்னாட்கு   ஆகும்
    நூறுசெறு   வாயினுந்   தமித்துப்புக்கு   உணினே
    வாய்புகு   வதனினுங்   கால்பெரிது   கெடுக்கும்
    அறிவுடை   வேந்தன்   நெறியறிந்து   கொளினே
    கோடி   யாத்து   நாடுபெரிது   நந்தும்
    மெல்லியன்   கிழவன்   ஆகி   வைகலும்
    வரிசை   யறியாக்   கல்லென்   சுற்றமொடு
    பரிவுதப   வெடுக்கும்   பிண்டம்   நச்சின்

    யானை   புக்க   புலம்போலத்
    தானும்   உண்ணான்   உலகமுங்   கெடுமே”  (புறம்: 184) என்பதே அப்பாடல்.

    நம் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பொய்யாமொழியும்,

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும். (குறள்: 448) என்றல்லவா கூறுகின்றது!

     அஃது உண்மைதான் போலும். அரசன் அறிவுடை நம்பியை நன்னெறிக்கண் செலுத்தாது அவன் விரும்பிய வழியிலெல்லாம் போக அனுமதித்தனர் அவன் அரசியல் சுற்றத்தார். ஆகவே அவனைத் திருத்தும் பொறுப்பைத் தாம்ஏற்று அவனை பெயருக்கேற்றபடி ’அறிவுடைய நம்பியாக’ மாற்றிய பெருமை நற்றமிழ்ப் புலவரும், சோழ அரசனின் உற்ற நண்பருமாகிய பிசிராந்தையாரையே சாரும்.

    பிசிராந்தையாரின் பாடல்போலவே, வட மொழியில் எழுதப்பட்ட ’சுக்கிர நீதி’ என்ற நூலும் அரசன் மக்களிடம் வரி வாங்கவேண்டிய முறை பற்றிச் சிறப்பாய்ச் சொல்கின்றது. ”வண்டு மலரில் அமர்ந்து எப்படி அழகாகவும், அளவாகவும் தேனை உறிஞ்சுமோ, அதுபோல் அரசனும் மக்களிடம் அளவாகவும், அவர்களைத் துன்புறுத்தாமலும் வரி வாங்கவேண்டும். தேனைப் பருகி மகிழும் வண்டு அத்தோடு நில்லாமல் எப்படி ஒரு மலரின் மகரந்தத்தை இன்னொரு மலருக்கு எடுத்துச் சென்று மலர்களின் ’இனவிருத்திக்கும்’ உதவுகின்றதோ, அதுபோல் ஓர் நல்லரசன் மக்களிடம் வாங்கும் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காகவே பயன்படுத்தவும் வேண்டும்” என்பதையும் வலியுறுத்துகின்றது இந்நூல்.

    இங்கு நாம் கண்ட செய்திகள் கால வேறுபாட்டைக் கடந்து எக்கால அரசியலுக்கும் பொருந்தக்கூடியவையே அல்லவா?

    அடுத்து, ஒரே குடியில் தோன்றிய இரு அரசர்களுக்குள் தீராத கடும்பகை; அதனைத் தீர்த்துவைக்க விழைகின்றார் நல்லெண்ணம் கொண்ட புலவர் பெருந்தகை ஒருவர். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா…?

    (தொடரும்)

    Share
  • சிக்கு புக்கு ரயிலு

     

    ரமணி பிரபா தேவி

    என்னுடைய பயணங்களில் பெரும்பாலானவை, நீண்ட நெடிய ரயில் பயணங்களாகத்தான் இருக்கும். சில சமயங்களில் நிகழும் உள்ளூர் ரயில் பயணங்கள், இரண்டு மூன்று நிறுத்தங்களோடேயே முடிவடைந்திருக்கிறது. அதனுள் மக்கள் வெள்ளம் அலைமோதும். சுவாரசியம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா எனக்காணும் முன்பே மறைந்து போகும் பயணமது. ஆனால் இந்நீள் பயணத்தில் நான் சந்தித்த‌ மானுடங்கள் ஏராளம். ஒவ்வொருவரும், தத்தம் வலிகளையும், பிணிகளையும், நிராசைகளையும் தாண்டி, ஏதோவொரு நம்பிக்கையினைப் பிடிப்பாய்க் கொண்டு வாழ்கிற‌வர்கள்.

    இக்கட்டுரையினைக் கூட, ரயில் தன் தண்டவாளத் தாளங்க‌ளால் தாலாட்ட, கலங்களோடு கலங்கித் தவிக்கும் காவிரித்தாயைக் கடந்த படியே எழுதுகிறேன். அருகிலொரு புதுமணத் தம்பதியைக் காணமுடிகிறது. ஒரு இளைஞன்கூட என்னைக் கவனித்தபடியே இருப்பது புலனாகிறது. மேலே ஒருவர் படுக்கையிலிருந்தபடியே கை பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டிய ஒருபெண், தன் தலையலங்காரத்தில் மும்முரம் கொண்டிருக்கிறார்.

    ஒரு ரெயில்வண்டி, இதுவரை எத்தனை விதமான மனிதர்களைக் கண்டிருக்கும்? எவ்வளவு பேரைத் தன் வசப்படுத்தியிருக்கும்? பிறப்புமுதல் இறப்புவரை அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்குமல்லவா..!!

    தன் நெடும்பயணத்தின் போது, புவி தீண்டாச் சிசுவின் பூவுடலையும், முதிர்ந்து சருகாய்ப் போன பெரியவர்களின் உடலையும் கூட ஏந்தியிருக்கும். தற்கொலை ,கொலை, இறப்பு, பிறப்பு ,கடத்தல், வழிப்பறி எனவொரு பெரும்பட்டியல் கண்டிருக்கும்.

    எத்தனையோ ரயில் வண்டிப் பெட்டிகள், கோச்சுகள், கழிவறை, முகம் கழுவ, பணியாட்களின் அறைகள், பயணச்சீட்டுப் பரிசோதகருக்கான அறை, உடனடிச் சமையலறை எனச் சின்னஞ்சிறு உலகத்தையே தன்னுள் அடக்கியுள்ள, ரயில்வண்டி ஓட்டுநரின் மனநிலை எவ்வாறானதாயிருக்கும்? இத்தனை நீளம் பெட்டிகளைப் பொருத்தி, பயணிகளைச் சுமந்துவரும் ரயில்வண்டியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஓட்டுனர் ஒரு கணம் நிலைகுலைந்தால் என்னவாகும்?

    மனித வாழ்க்கை எப்பொழுதும் சுவாரசியங்களைத் தேடுகிறது. அதற்காகவே நிறையப் பயணிக்கிறது. தவறு,வேண்டாத இடர்வரவு என மண்டைக்கு உறைத்தாலும் புதிதாய் ஒரு விஷயத்தைப் புரிந்து, அதன் போக்கிலே பயணிக்க முயல்கிறது. மனிதன் எப்பொழுதும் கூரவாவுடைய, அடக்கமுடியா ஆர்வத்தால் தூண்டப்பட்ட உயிர்க் கூறினைக் கொண்டவன்.

    இப்படித்தான் நான், அடுத்தடுத்து வேறு உலகங்களினுள் பயணிப்பதுண்டு. இது பெரும்பாலும், என் தேர்வு சமயங்களில் ந‌டக்கும். படிப்பின் மீதுள்ள கவனம், வேறெதாவது ஒன்றிற்குத் தாவி, அதிலிருந்து வேறொன்று, மற்றொன்று என முற்றிலும் தொடர்பே இல்லா இடத்தில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கும். தலை உதறித் தன்னிலை வரும்போது, சமயங்களில் ஐந்து, பத்து நிமிடத்துளிகள் கடந்துவிட்டிருக்கும்.

    எனக்கு எதிரிலிருக்கும் இரு யுவதிகள் கூட, இப்போது என்னைப் பார்த்தபடியே குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றனர், இந்தக் காலை வேளையில், என்ன பதிவு செய்கிறேன் என்பதனை அறியும் ஆவலாகவும் அது இருக்கலாம்.

    இன்னும் இரண்டு மூன்று சந்திப்புகளில் ரயில், எனது நிறுத்தத்தை எட்டிவிடுமெனத் தோன்றுகிறது. கட்டுகடங்கா சிந்தனை, என் உள்ளக் குதிரையைக் கட்டவிழ்க்கிறது. நானும் என் மனத்தினில் தோன்றுவதையெல்லாம் பதிவு செய்திட முனைகிறேன். உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையும் எழுத்தாக்க இயலாமல் கை தேங்குகிறது. உட்தெறிக்கும் சிந்தனைக் கோவைகள், தானாகவே இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கின்றன.

    தோன்றுவதையெல்லாம் எழுதிப் பதிவுசெய்து, ஓர் வடிவங்கொடுத்தாலே,உலகில் எண்ண‌ற்ற படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதோ, நான் இறங்கவேண்டிய இடம் வந்தானது. தனக்கே உரிய நாதத்துடன் ரயில் வண்டி, தனது சக்கரங்களின் ஓட்டத்தைச் சற்றே நிறுத்தி, இளைப்பாறுகிறது.

    சில துளிகளில் என் போல அனேகப் பயணிகள், தங்களின் நீடுநிகழ் பயணத்தை முடித்து, இல்லம் நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர். பலரின் பயணத்தைப் பூர்த்தி செய்து, இறங்குமிடம் அறியாப் பயணி போல, தன் வழி நோக்கி எதிர்பார்த்து, தீராப் பயணப்பசி கொண்டு பயணிக்கத் தொடங்குகிறது ரயில் வண்டி.

    படத்துக்கு நன்றி: http://realhdwallpaper.com/wp-content/uploads/2013/05/Train-HD-Wallpaper-Free-Download.jpg

    Share
  • தர்மாம்பாள் குறம்

    ஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா

    சமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆ க, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.

    தமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.

    “கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
    ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” தொல்.கள.நூ.25: 3-4

    குறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.

    “அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே” குறுந். பா. 23

    மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.

    “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்
    திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே”

    “குறத்திப் பாட்டும் அதனோடற்றே”

    பத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.

    கலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.

    குறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறமும் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.

    ஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.

    தர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.

    தர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் – தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.

    இக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.

    அக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.

    இக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.

    கடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

    “…………………………………………………………………..
    உயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    குயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்
    கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    ………………………………………………………………….
    வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்.”

    காவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.

    கல்யாணி தேவியோ, “சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்” என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.

    சாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.

    குறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.

    தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.

    “……………………………………………………………………
    ஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்
    சாம்ப பரமேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    அப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    குச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    ………………………………………………..”

    “உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,

    “இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,
    ஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்”

    என்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது? இதோ:

    “மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்!”

    அவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.

    சரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.

    அவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.

    (ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

    Share
  • தமிழ் படும் பாடு

    ஆர். எஸ். மணி

    நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Grid Zawadski என்னும் பெண் என்னுடைய ‘பேனா தோழி’ யாக இருந்தாள். அவளுக்கு கடிதம் மூலம் தமிழ் சொல்லித்தர முயன்றபோது, தமிழின் ஒலிகளைப் பற்றி விளக்க முயன்றேன். அதன் விதிகளை விளக்கிச் சொல்ல எனக்கு யாரும் இல்லாததால் நானே எழுத்துக்களையும் வார்த்தைகளையும் உச்சரித்துப் பார்த்து, பார்த்து விதிகளை எழுதினேன். ஆறு வல்லினங்களும் ஆறு மெல்லினங்களை மணந்து இல்லற வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். அவைகளுக்கு ஒன்றுக்கும் மேலே உச்சரிப்பு இருப்பதையும், அவை ஒரு விதியின்படி நடப்பதால், ஆங்கிலம் போலில்லாமல், இன்னொருவர் சொல்லிக் கேட்காமலேயே வார்த்தைகளை உச்சரிக்க முடியும் என்பதையும் பார்த்தேன். மனைவியுடன் வரும் கணவன் இனிமையாக நடந்துகொள்வதைப் போல, தான் மணந்த மெல்லினத்தை அடுத்துவரும் வல்லினங்கள் மென்மையாவதையும், தமிழின் இனிமையே ‘ழ’வில் இருப்பதையும், அதை மொழியின் பெயரிலேயே வைத்திருக்கும் ‘அழகை’ வியந்தேன்.

    சமீப காலத்தில் தமிழின் உச்சரிப்பைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தெலுங்கு பாடகர்கள் தமிழ் திரைப்படத்தில் பாடத்தொடங்கியதிலிருந்து, ‘சொல்லு’ என்பது ‘ஸொல்லு’ என்றும் ‘சம்மதமா’ என்பது ‘ஸம்மதமா’ என்றும் பரவலாக உச்சரிக்கப்படுவதும், ழ/ள, ல/ள, ன/ண வித்தியாசமில்லாமல் பேசுவதும் வேதனை தருகிறது.

    சில வருடங்களுக்கு முன்னே, “தமிழ்ப் பேச்சு, என் மூச்சு” என்று ஓர் இயக்கம் தொடங்கலாமா என்றுகூட நினைத்தேன். இப்போது யாரோ அப்படி ஒன்று துவங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

    இப்பொழுது போகும் திசையில் சென்றால் தமிழ் எப்படி மாறும் என்பதை கற்பனை செய்து ஒரு சிறு கட்டுரையைப் சில வருடங்களுக்கு முன்னால் எழுதினேன். நகைச்சுவைப் போர்வையில் இருந்தாலும் மன வேதனையில் பிறந்த எழுத்துகள் இவை. அதை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    “How Hamilton became a barber”

    or “வாழ்க வழமுடன்”

    I have always been concerned about the future of Tamil. Not in the field

    of literature – because there are quite a number of extremely capable

    scholars taking care of it – but rather Tamil’s future in the field of

    Phonetics. Although not apparent now, the problems lie in wait.

    In fact, I have already seen a glimpse of these problems, and if we do not

    immediately take the necessary steps, we will no longer recognize our

    language as it is heard or written now.

    Let me first recount a true-life story which has a lot in common with

    my concern mentioned above.

    Those of you, who lived in Madras a few decades ago, may know the story

    of the strange transformation of Hamilton into a barber. For those who

    do not, the story goes as follows:

    Hamilton was a prominent Englishman who lived in India during the

    British Raj. He was so well known that ‘Hamilton Bridge’ was named in his

    honor.

    Over the many years since the dedication, local Tamils repeated the

    name of ‘Hamilton bridge’ enough number of times to distort it

    to “அம்பட்டன் ப்ரிட்ஜ்” (Ambattan bridge). This in no way is meant

    to blame the Tamils for the metamorphosis. After all, both ‘Hamilton’

    and ‘bridge’ are foreign words to Tamil language. If the British

    could have the audacity to change திருவனந்தபுரம் to

    Trivandrum or வாராணசி to Benaras, we Tamils have every right to take

    liberties with the pronunciation of Hamilton.

    In any event, as time passed on, the city grew and with it, Madras’s

    public transport system. In fact, Ambattan bridge became one of the

    destinations for bus routes. When the transport authorities decided to name the

    bus stop, they knew enough English to translate “அம்பட்டன்” as “barber”.

    Remember that they were not acquainted with Sir (or Lord) Hamilton. As time

    had removed him from the scene, Hamilton was not present to object to the

    change of his profession either. And so, the name board on the

    front and rear of the bus read as “அம்பட்டன் வாராவதி”.

    Years later, someone in the transportation department decided to

    translate the name back into Engish. The name was promptly changed to

    “Barber’s Bridge”.

    More years passed, and a curious researcher wanted to know about

    the famous barber in whose memory the bridge had been named. It was then

    that the name Hamilton re-surfaced. Now all is well and Hamilton has been

    reinstated to his rightful place, and the barber is gone.

    Now let us turn our attention to the problem on hand.

    If you glance at the heading to this article, you will read two Tamil

    words: வாழ்க வழமுடன். ‘வாழ்க’ is fine. What is ‘வழமுடன்’? As

    we are all familiar with this famous greeting/blessing, we know that it should

    read ‘வளமுடன்’. Then why is it written differently? I initially

    thought it was a misprint. However, upon reflection, I realized the reason behind

    the grand “blessing.”

    The person who wrote the pamphlet always pronounced the letter ‘ழ’ as ‘ள’. If he were to say the words “பழுத்த பழம் பள்ளத்தில் விழுந்தது”,

    He will say, “பளுத்த பளம் பள்ளத்தில் விளுந்தது”.

    If he sits down to write the sentence, some of the ‘ள’s in his spoken words

    would be written as ‘ழ’s and some as ‘ள’s. If one is not careful, things could

    get mixed up. That was what happened in the case of “வாழ்க வழமுடன்”.

    When the word ‘Hamilton’ turned into ‘barber’, it followed this path:

    ‘Hamilton’ (English) to ‘ambattan’ (Tamil) to ‘barber’ (English).

    The changes occurred because of the corrupted pronunciation.

    There was an exchange between two different languages.

    In case of the transformation of ‘வளமுடன்’ to `வழமுடன்’, it was

    done within Tamil language itself. The reason is again, corrupted pronunciation.

    There are other persons that do not make any distinction between

    ‘ள’ and ‘ல’. I knew a man who ran a school for children in Madras.

    My children studied there for a few years. Every year, during the

    annual school day celebration, he would get up and begin his address

    invariably with the words:

    ” எங்கல் பல்லியில் படிக்கும் பில்லைகலே!”

    And it is also not uncommon to hear people getting mixed up with the

    letters ‘ண’ and ‘ன’.

    The other day, I started picturing a person having trouble with all

    these sounds. When I went to bed that night, I had an unusual dream in

    which a proud looking Tamil gentleman led me through a long corridor.

    At the end of the passage stood a large crystal ball. The gentleman

    asked me to gaze intensely into the ball, and I slowly realized that I could

    see the words: கி.பி. 2153.

    As I continued to gaze at the crystal ball, the following Tamil words appeared:

    கள் தோண்றி நின்ற காழத்திலேயே புகலோங்கி செலித்த

    நம்மொளி வால்க! வழர்க!!

    The gentleman said that if I continued to gaze at the crystal, it would

    allow me to time travel another century more into the future. There,

    I was told, I would have the rare opportunity to witness a much more

    refined form of Tamil writing. Before I could respond, I woke up from my dream.

    I am glad that it was only a dream!

    ——————————————————————————–

    Note: The above article was written in a lighter vein to emphasize

    the importance of correct pronunciation to preserve the beauty and

    integrity of our mother tongue. If it has hurt anyone even slightly, please

    forgive me.

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    Share
  • காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்!

    சுவாமிநாதன்

    அன்புடையீர்,

    நமஸ்காரம்.

    Cd release group

    ‘காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்’ மற்றும் காஞ்சி மகா பெரியவாளும் அன்னதான மகிமையும்’ என்கின்ற இரண்டு ஆடியோ சி.டி-க்கள் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் கடந்த 12.9.2013 வியாழன் அன்று இறையருளாலும் குருவருளாலும் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன.

    திருவாளர்கள் ஏ.எம். ராஜகோபாலன் (ஆசிரியர், குமுதம் ஜோதிடம்), ஒய். பிரபு (ஸ்ரீகிருஷ்ண கான சபா), டெக்கான் மூர்த்தி (வாணி மஹால்), சுகி. சிவம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, மகா அவதார் பாபாஜி பக்தர் பெங்களூரு ஹரி, இசைக்கவி ரமணன், கண்ணன் விக்கிரமன், ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆர். தியாகராஜன் (ஓய்வு சீஃப் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்) உட்பட பல பிரபலங்கள் வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னைப் பெருமைப்படுத்தினார்கள். இவர்கள் தவிர, மகா பெரியவாளின் அத்யந்த பக்தகோடிகள், என் நலம் விரும்பிகள் மற்றும் ஏராளமான அன்பு உள்ளங்களை அன்றைய தினம் அரங்கில் பார்த்தேன். அனைவரையும் ஒரு சேர அரங்கில் பார்த்தபோது என் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு அன்பருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

    எல்லாம் மகா பெரியவாளின் குருவருள் அன்றி வேறில்லை என்பதை நான் அறிவேன். முதல் இரண்டு சி.டி-க்கள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் ‘அடுத்த சி.டி. ரிலீஸ் எப்ப?’ என்று இப்போதில் இருந்தே கேட்கத் துவங்கி விட்ட மகா பெரியவா பக்தகோடிகளுக்கு என் பணிவான நன்றிகள்.

    அடுத்த ரிலீஸ் அநேகமாக அக்டோபரில் இருக்கலாம். எல்லாம் பெரியவா அருள்தான்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

    குறிப்பு: சி.டி. தேவைப்படும் அன்பர்கள் மணியார்டர் அனுப்புவதைத் தவிர்க்கவும். அக்கவுண்ட்டில் பணம் கட்டுவது, செக், டிராப்ட் போன்றவற்றை கையாளவும். செக் அல்லது டிராப்ட் எடுப்பவர்கள் sree media works என்ற பெயருக்கு எடுத்து அனுப்பவும்.

    இரண்டு சி.டி-க்களும் ரூபாய் 198/-

    * சென்னைக்குள் இருப்பவர்களுக்கு துவக்க கட்டத்தில் மட்டும் கூரியர் செலவு இலவசம்.

    * தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் ரூபாய் 198 உடன் ரூபாய் 35-ஐ கூரியர் செலவாக சேர்த்து அனுப்பவும்.

    * பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரத்தில் இருப்பவர்கள் ரூபாய் 198-உடன் ரூபாய் 55-ஐ கூரியர் செலவாக சேர்த்து அனுப்பவும்.

    * தமிழகம் மற்றும் மேலே குறிப்பிட்ட நகரங்கள் தவிர இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் ரூபாய் 198 உடன் கூரியர் செலவாக ரூபாய் 65 சேர்த்து அனுப்பவும்.

    kumudam jothidam CD

    ‘காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்’ மற்றும் ‘காஞ்சி மகா பெரியவாளும் அன்னதான மகிமையும்’ என்கிற இரு தலைப்புகள் நான் சொற்பொழிவாற்றி வெளியிட்டுள்ள இரண்டு சி.டி-க்களைப் பற்றி ‘குமுதம் ஜோதிடம்’ வார இதழில் என் மரியாதைக்குரிய ஸ்ரீமான் ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் மதிப்புரை வழங்கி உள்ளார்கள்.

    அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

    Share
  • குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

    பவள சங்கரி

    DSC09812-167x300ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

    இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.

    அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.

    தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

    இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.

    ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,

    பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.

    இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.

    “நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.

    —————-

    நன்றி : திண்ணை

    Share
  • தொட்டுப் போகும்

    —ஆர்.எஸ்.மணி

    நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.

    எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

    அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.

    அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.

    —ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    காணொளி: http://youtu.be/JgArHotZTPE

    திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:

     

    “தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”

    குரல் மின்னிடும் இசை உன்னதம்
    உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
    கரு வண்டினம் வலம் வந்திடும்
    அரு மலர்வனம் அதன் நறுமணம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    அருள் தூறிடும் அமுதூறிடும்
    பொருள் மீறிடும் புதையல் தடம்
    தலையாட்டிடும் மழலை மனம்
    தாலாட்டெனும் தனி மந்திரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    சிலை சித்திரம் நடை நாடகம்
    ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
    உரு மாறிடும் நிழல் ஓவியம்
    கலை மேவிடும் மலை மாருதம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    கரை யாவையும் கரைத்தே எழும்
    சிறை யாவையும் மறுத்தே எழும்
    குறை யாவையும் அறுத்தே எழும்
    நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
    சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
    மனம் ஆடிடும் குடை ராட்டினம்
    களி காதலின் துளிப் பாற்கடல்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    ——————————————————————————-

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சமூக அக்கறை என்பது நம் மக்களிடம் மிகவும் குறைந்து போய்விட்டது என்பது கவலையான செய்திதான்.. நாம் வாழும் இக்காலம்தான் இப்படியா.. அல்லது வருங்காலம் இன்னமும் மோசமாக இருக்குமா என்பது இன்னமும் கவலையாக உள்ளது.

    ஆந்திராவில் கடந்த பத்து வருடங்களாக நான் கவனித்து வரும் விஷயம் இந்த ஆரம்ப நிலைக் கல்விக்கூடங்கள் எப்படியெல்லாம் குழந்தைகளைக் கஷ்டத்தில் உள்ளாக்குகின்றன என்பதைத்தான். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் கல்வி அந்தக் குழந்தையை இரவு 8 மணி வரை அங்கேயே உட்கார வைத்து பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் (லீவு நாட்கள் கூட). இது ஒரு விதத்தில் அந்தப் பிள்ளைக்கு பாடத்திலே மட்டும் கவனம் செய்ய உதவுகிறது என்றாலும் அந்தக் குழந்தைக்கு வெளி உலக அனுபவம் இல்லாமலே செய்கின்றன என்ற மாபெரும் உண்மையை பெற்றவர்களும் மறந்துவிடுகிறார்கள்.

    gurujiஇன்றைக்கு ஐ.ஐ.டி போன்ற வெகு கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஆந்திர மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்று தகுதி பெறுகிறார்கள் என்பதற்கு இந்த கடினமான படிப்பு முறை ஒன்றே முறையானது என்று கல்வி கற்பிப்பவர்கள் இங்கே அறைகூவலிட்டு பெற்றோர்களையும் ‘கன்வின்ஸ்’ செய்து விடுகிறார்கள். ஐ.ஐ.டி யில் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இளமையில் வாழ்க்கையின் பல சுவையான கட்டங்களை இழந்த மாணவனுக்கு எதிர்காலம் என்பது எப்படிப்பட்ட சுவையான வாழ்வைக் காண்பிக்கும்? எப்படி அவன் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளப் போகிறான். ஐ ஐ டி படிப்பு ஒன்றே அவன் வாழ்வில் எல்லா நிறைவுகளையும் கொடுத்து விடுமா? கேள்விக்கு யார் விடை சொல்வது என்று புரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் வல்லமையில் ஒரு அழகான கட்டுரை ஒன்று வந்துள்ளது!! இக் கட்டுரையை எழுதியவர் திரு. குரு பிரசாத்.

    ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

    ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போ​தே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

    எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிற​தோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

    நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான், தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

    கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

    ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.

    இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.

    சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள், துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.

    வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

    வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!

    சிந்திக்கவைக்கும் அர்த்தமுள்ள கட்டுரையை எழுதிய திரு குரு பிரசாத் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமையாளர் குரு பிரசாத்திற்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு. சு. கோதண்டராமன் எழுதி வரும் மாணிக்கவாசகர் பாடல்:

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

     Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • வடமுல்லைவாயில் பதிகம் 2

    SivakaamaSundhari
    வணக்கம், வாழியநலம்,

    பொன்னோ,பொருளோ, பெயரோ, புகழோ- எதிலும் நாட்டமில்லமல், அவளையே நினைந்த தினங்களில்
    அவளோடு ஒரு உரையாடல்…

    இணைப்பில், சிவகாமசுந்தரி கோட்டோவியம்

    பார்க்க,  படிக்க, ரசிக்க…

    ராகம்: ஆபேரி

    பொருள்தேடி வாழாமல்  பொழுதெலாம் வாழ்க்கைக்குப்
    பொருந்துமோர் பொருள்தேடினேன்
    பொன் தேடி அலையாமல், பெயர்,பேறு விழையாமல்
    புரியாமல் உனைநாடினேன்!
    இருள்மூடும் இகவாழ்வில் எனைஆழ்த்த முடியாமல்
    இதமான ஒளிதேடினேன்
    இதமான ஒளிகாண முடியாமல் மனமெங்கும்
    துயர்சூழ மிக வாடினேன்!
    சுருளோடும்  சடையோனின் இடபாக வடிவே உன்
    சுந்தரப்   பாதங்களில்
    சுவையான கவிகோடி மலர்தூவ நீமகிழும்
    சுகமெனக் கருளுவாயே!
    அருள்கூடும் விழிகளாம் ஆனந்த வாரிதியில்
    ஐயனை ஆழ்த்தும் அழகே!
    வடமுல்லைவாயிலில் படர் முல்லையே எனை
    வாழ்விக்க வரும் அன்னையே!

    சு.ரவி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : (7)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இன்று நாம் நமது அருங்காட்சியகப் பயணத்தில் மேலும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறோம். நான் வசிக்கும் ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரிலிருந்து தமிழகத்திற்கு 7545 கிமீ தூரம் விமானம் மூலம் செல்கிறோம். எதற்கு விமானத்தில் பறக்க வேண்டும்? தமிழகத்தில் தானே இருக்கிறேன் என்று குறிப்பிடுவோருக்கு…, ஏதாவது ஒரு வகையில் பேருந்தோ, ரயிலோ எடுத்து தென் தமிழகம் வந்து விடுங்கள். அடுத்து உங்களை நான் அழைத்துச் செல்லவிருப்பது தென் தமிழகத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகே இருக்கும் நகரங்களில் ஒன்றான ஒட்டப்பிடாரம்!

    தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என ஒரு நகரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை. வ.உ.சி எனும் பெயரும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர் என்பதும் மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த நான் அதுவரை அறிந்த செய்திகள். அதற்கு மேல் இவரைப் பற்றி அவ்வப்போது வரும் சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததில் செக்கிழுத்த செம்மல் என்பதும் ஆங்கிலேய காலணித்துவ ஆதிக்கத்தில் கல்வி கற்ற சுதந்திர தாகம் மிக்க இளைஞராக இருந்ததோடு பலரையும் தனது ஆளுமையால் வசீகரித்து சுதந்திரச் சிந்தனைகளை ஆழமாக தமிழர் மனதில் பதிய தொண்டாற்றியவர் என்பதும் இவரைப் பற்றி நான் அறிந்திருந்த கூடுதல் செய்திகள்.

    2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி செய்வதற்காக 2 வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது எனது நண்பர் திரு.மாலன் அவர்களை அணுகி திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன் வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இது நல்ல யோசனையாக இருக்க நான் ஒட்டப்பிடாரத்திற்குச் செல்ல வேண்டும் என்று என் பயணக்குறிப்பில் இணைத்துக் கொண்டு தயாரிப்புக் காரியங்களில் ஈடுபட்டேன். திருநெல்வேலியில் திரு.மாலனின் இளைய சகோதரர் திரு.ஜெயேந்திரனின் இல்லத்தில் தங்கி அங்கிருந்து அவர் என்னுடன் துணைக்கு அனுப்பிய மூன்று ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டப்பிடாரம் பயணித்தேன்.

    ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் ஓர் அருங்காட்சியகம் மட்டுமன்று; ஒரு நூலகமாகவும் இது இயங்குகின்றது என்பது தனிச்சிறப்பு. உள்ளூர் மக்கள் வந்து பயன்படுத்தும் நிலையில் இந்த நூலகம் சிறப்புடன் இயங்கி வருவது பாராட்டுதலுக்குரிய விஷயம்.

    வ.உ.சி. நினைவு இல்லம் (2009)
    வ.உ.சி. நினைவு இல்லம் (2009)

    ஒரு வீடாக இருந்த இந்த கட்டிடத்தை அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்கத் திட்டம் எழ, 7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர் 12.12.1961ல் அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி அவர்கள் பெயரிலேயே ரூ 80 லட்சம் செல்வில் 2005ம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு மணிமண்டபம் ஒன்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி.

    இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின் சிறு வாழ்க்கைக் குறிப்பு செய்திகள். அதில் உள்ள குறிப்பினைத் தருகிறேன்.

    op2

    1872 செப்டம்பர் 5 வியாழன். பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
    1895 திருமணம்
    1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
    1908 ‘சுதேசிக் கம்பெனி’ எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
    1907 சூரத் காங்கிரசில் புரட்சி
    1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
    1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
    1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

    இவை வாசலில் இருந்த சிறு குறிப்பு மட்டுமே. உள்ளே நுழைந்ததும் நமக்கு வ.உ.சி .அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிமுகம் செய்யும் தகவல்கள் பல படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதையும் காண முடியும்.

    சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்த்தவர் இவர்.

    காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை. பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிகக் குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்றுவிடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெரும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

    வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)
    வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)

    அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாது அவரது குடும்பச் சொத்துகளையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்த இந்த மகான் தன் இறுதி நாட்களில் பொருளாதார நிலையில் மிகவும் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை அறியும் போது நம் மனம் கலங்கத்தானே செய்யும்.

    இத்தொடரின் அடுத்த பதிவில் இந்த அருங்காட்சியகத்தில் நான் அறிந்து கொண்ட குறிப்பிடத்தக்க தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
     
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர் – முடிவுரை

     ராமஸ்வாமி சம்பத்

    images alex‘உத்தமன் அலெக்சாண்டர்’ குருந்தொடரை மிக்க விரும்பியும் உன்னிப்பாகவும் படித்ததோடு மட்டும் அல்லாமல் தங்கள் உயர்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அலெக்சாண்டரைப் பற்றி பல கருத்துகள் (நல்லதும் கெட்டதும்) புழக்கத்தில் உள்ளன. அவன் ஒரு போர் வெறியன், முரடன், எதிரிகளை கொடுமைக்கு ஆளாக்கியவன், ஓரினச்சேற்கையாளன் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அவனுடைய சில சற்குணங்களும் அவ்வப்போது வெளிபட்டதாகவும் பதிவுகள் உள்ளன.

    அவன் கீழை நாடுகள்மீது தொடுத்த போர்களில் எளிதாக வெற்றி பெற்றதும் பரதகண்டத்தின் எல்லையில்தான் அவன் புருஷோத்தமனின் வீர பராக்ரமத்தைக் கண்டு வியந்ததும் வரலாற்று குறிப்புகளே. மாசிடோனிய வரலாற்று ஆசிரியர்கள் அவன் புருஷோத்தமனை தோற்கடித்ததாகவும், பவுரவ நாட்டு மன்னனின் வீரத்தை மெச்சி அவனைக் கொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் இதனை கிரேக்க வரலாற்று அறிஞர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த மார்ஷல் ஜுகோவும் ஒப்புக்கொள்ளவில்லை. மார்ஷல் ஜுகோவ் அவர்கள், அலெக்சாண்டர் ஜீலம் நதிக்கரையிலும் நெப்போலியன் வாடர்லூவிலும் மாபெறும் தப்புக் கணக்கு போட்டுவிட்டதாக கருதுகிறார். இந்திய வரலாற்று அறிஞர்களும் ஜீலம் போரில் வென்றது யார் என்பதனை திட்டவட்டமாகக் கூறவில்லை.

    அலெக்சாண்டரைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்துள்ள காப்டன் அஜித் வடகயில் (அவர் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவர்) என்பவர் அவனது யுத்த தந்திரங்களை புருஷோத்தமன் முறியடித்து வெற்றி பெற்றதாகவும், யவன மன்னனை மன்னித்து பரிசுகள் அளித்து நாட்டுக்குத் திரும்பச் செய்ததாகவும் கூறுகிறார். மாசிடோனிய வீரர்களின் கலகம் ஒரு ஜோடனை என்றும் அபிப்பிராயப்படுகிறார்.

    ஜீலம் போர் இருபக்கங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி எவர்க்கும் வெற்றி தோல்வியின்று முடிந்திருக்க வேண்டும் என்பது எளியேனின் ஊகம். எது எப்படியானாலும் ஜீலம் போர்க்குப் பின்னர்தான் அலெக்சாண்டர் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதனாகத் திகழ்ந்தான் என்பது வெள்ளிடை மலை.

    அடியேனின் ஆன்மீக ஆசான், திருப்பெருந்திரு ஸமர்த்த ஸத்குரு ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்கள், “அலெக்சாண்டர் பரத கண்டத்திற்கு வந்ததின் நோக்கம் இம்மண்ணின் ஆன்மீகப் பலத்தைப் புரிந்து கொள்ளவே” என்பார். கீழை திக்விஜயத்திற்கு முன் அவன் தன் ஆசானான அரிஸ்டாடில் அவர்களிடம் ஆசி கோரியபோது அவர் அவனுக்கு பரத கண்டத்தினரின் ஆன்மீக பலத்தைப் பற்றி அறிந்து வருமாறு பணித்தார் என்றும் பாபுஜி மஹராஜ் சொல்லுவார். இந்த ஒரு உன்னதமான கருத்தே இந்த குருந்தொடருக்கு அடிப்படை.

    அண்மையில் குண்டூர் (ஆந்திரா) அருகில் நடந்த ஒரு சாது சம்மேளனத்தில், ஹைதரபாத்தைச் சேர்ந்த வியாசாஸ்ரம பீட்த்தின் அதிபதியான பரிசுத்தானந்த சுவாமிகள் உரையாற்றும் பொழுது, அலெக்சாண்டரின் அன்னை தன் மகனிடம் பரத கண்டத்திலிருந்து தனக்கு மூன்று பரிசுகளை கொண்டுவருமாறு கேட்டார் என்று குறிப்பிட்டார். “அக்கண்டத்தில் பகவத்கீதை எனும் ஒரு ஒப்பற்ற ஆன்மீக நூல் உள்ளதாம். அது எனக்கு வேண்டும். இரண்டாவதாக அங்கிருந்து ஒரு நல்ல ஆசார்யரை இங்கு அழைத்து வா. மூன்றாவதாக புனிதமான நதி என்று புகழ்பெற்ற கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வா” என்று ஆணையிட்டார் என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

    ஆக மாவீரன் அலெக்சாண்டர் உத்தமனாக மாறியதற்கு இச்சான்றுகளே போதுமானது..

    துரதிருஷ்டவசமாக அலெக்சாண்டர் ஜீலம் போருக்குப் பின் மூன்று ஆண்டுகளே வாழ்ந்து தனது முப்பத்து மூன்றாவது வயதில் (கி.மு. 323) நோய்வாய்ப்பட்டு பாபிலோனில் காலமானான். பிறரை நம்பும் நற்பண்பைப் பயன்படுத்தி அவனது விரோதி ஒருவன் நஞ்சு கலந்த பானத்தைப் பருகச்செய்ததால் அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டான் என்பது ஒரு வரலாற்று குறிப்பு. அவன் இறந்த சில மாதங்களுக்குப்பின் ரொக்ஸானா ஒரு ஆண்மகவை (நான்காம் அலெக்சாண்டரை) ஈன்றெடுத்தாள். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவனான காசெண்டர் என்பவன் அவளையும் அவள் மகனையும் ஓட ஓட விரட்டியடித்து கொன்று உத்தமன் அலெக்சாண்டரின் வம்சத்தை அடியோடு அழித்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

    எது எப்படியாகிலும் அலெக்சாண்டர் எனும் உத்தமனின் பாரத வருகை அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம்தானே?

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/commons/0/05/Alexander_Hamilton_portrait_by_John_Trumbull_1806.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/Alexander_Hamilton&h=3000&w=2532&sz=2264&tbnid=IQ-qkEXijuxBkM:&tbnh=101&tbnw=85&zoom=1&usg=__q0gvqoYcbsQBIdtDZPSyN1X0rk0=&docid=t_-Kv5gKJWCBKM&sa=X&ei=fyU_Uo-EN8jorQfwioDgBQ&ved=0CDYQ9QEwAw&dur=4835

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 90!…

    மலர் சபா 

    silambu (1)

     

     

     

     

     

     

    “புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை”

     

    கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்*

    அப்போது அங்கே ஓடி வந்த

    ஒரு பணிப்பெண் கூறினள்:

    “நங்கையே!

    பெருமையுடைய அரசன் போன்ற ஒருவர்

    நம் வாயிலிடத்தே வந்து கொண்டிருக்கிறார்;

    அவர் நம் கோவலன் தான்…”

     

    விரைந்து வந்த கோவலனும்

    கண்ணகியின் பெருமைவாய்ந்த

    பள்ளியறையில் நுழைந்தான்.

    தன் காதலியின் வருத்தமுற்ற முகமும்

    வாட்டமுற்ற மேனியும் கண்டான்.

     

    “வஞ்சமுடைய கொள்கையுடன்

    பொய்மை பேசுபவளோடு

    கூடி உறவாடியதால்

    நம் குலத்தில் உள்ளோர் தேடித்தந்த

    மலை போன்ற பெரிய

    செல்வக்குவியலை எல்லாம் இழந்தேன்.

    வறுமையுடையவன் ஆகிவிட்டேன்.

    இச்செயல் யாவும் என்னை

    நாண வைக்கிறதே”

    எனக் கூறி வருந்தினான்.

     

    *கண்ணகியின் விடை*

    (மாதவிக்குக் கொடுக்கப் பொருள் *

    *ஏதும் இல்லாததால்

    வருந்துகிறான் கோவலன் என்றெண்ணிய)*

    கண்ணகி,

    தன் அழகிய ஒளி பொருந்திய முகத்தில்

    புன்முறுவல் காட்டி,

    “இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன;

    அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்”

    எனக் கூறினாள்.

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64 – 73

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    படத்துக்கு நன்றி:

    Kannagi’s Last Resort, Siruvachur

    Share