செண்பக ஜெகதீசன்

இயற்கையும்
இப்போது கற்றுக்கொண்டது,
இந்த மனிதனைப் பார்த்து..
இரவெல்லாம் காத்திருந்து
கையேந்தி
இலைகள் சேகரித்த பனித்துளிகளை,
இந்தக்
கதிரவன் வந்து
கவர்ந்து சென்றுவிட்டானே…!
படத்திற்கு நன்றி: http://blog.jasonweddington.com/2012/08/rice-field-sunrise/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நல்லதொரு கற்பனையில் தந்த பனித்துளி கவிதை அருமை.
எங்கே குறளின் கதிர்கள்?
மிக நுணுக்கமான ஒப்பீடு. வாழ்த்துக்கள்
திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோரின்
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி..
குறளின் கதிர்கள் விரைவில் வரும்…!