Blog

  • திருவாசகமும் அரவாணியரும்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

        விளிம்பு நிலை மனிதர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட பெண்கள், குழந்தைகள்,தலித்துகள் இவர்களோடு அரவாணியர்களையும் இருபத்தியோராம் நூற்றாண்டு மைய நிலைக்கு கொண்டு வந்து, அவர்களின் வாழ்க்கையை நடுநிலையோடு அணுகக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் குறித்த ஆய்வுகளும்> படைப்புகளும் வெளிவரும் சூழலில், மரபிலக்கியங்களில் இவர்களைப் பற்றிய புரிதலை ஆராய வேண்டியுள்ளது.

    தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்திலிருந்து தொடங்கி, அரவாணியர்களைப் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.ஆண்மை திரிந்தமனிதர்கள் பேடி என்றும், பெண்மை திரிந்த மனிதர்கள் அலி என்றும்  அழைக்கப்பட்டுள்ளனர்.

                 தொல்காப்பியர், உயர்திணையில் இவர்களை கூறியபின் பால்வகையில் அலி, பேடி, தெய்வம் என்ற இம்மூவரையும் முதலில் மூன்றுபாலிற்குள்ளும் அடக்குகிறார்

    அலி வ்நதான் அலி வந்தாள் அலி வந்தார்.( இதுபோல் பேடிக்கும் தெய்வத்திற்கும் வரும்)

                  .மற்றொரு நூற்பாவில் உயர்திணையில் பெண்பாலிற்குள் தான் இவர்களை அடக்குவது சிறந்தது  என பெரும்பான்மை அடிப்படையில் இவர்களை பெண்பாலுக்குள் வரையறுக்கிறார். ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதே பெரும்பான்மை. பெண்ணாக இருந்து ஆணாக மாறுவது சிறுபான்மை ஆகும்.

    ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி
    ஆண்மை அறிசொற்கு ஆகிடனின்றே.

    என்ற நூற்பா, ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பெரும்பான்மையினரைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு மாறியவர்களை (பெண்பாலாகக் கருதி) பேடி என்றழைக்கவேண்டும் என்கிறது.ஆணாகப் பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாறியவர்ளை பெண் என்றே அக்காலச் சமூகம் கருதியதாக இதன் மூலம் உணரலாம்.

                  இவ்வாறு உயர்திணையில் பெண்பாலாக கருதப்பட்ட இவர்கள், வயிற்றுப்பிழைப்பிற்காக, கூத்துக்கலையினை பொதுமக்கள் கூடும் இடத்தில் நிகழ்த்தி வாழ்ந்துள்ளனர் என்று அகநானூறு தெரிவிக்கிறது.தமிழகத்தில் பெண்பாலாகக் கருதி ஓரளவு மதிக்கப்பட்ட இவர்கள்,  துறவற நெறியைப் போதித்த புற சமயங்களான சமணமும் பௌத்தமும்,  தமிழகத்தில் நுழைந்தநிலையில்  இழிவானவர்களாகக் கருதப்பட்டனர். பெண்ணாகக் காட்டிக் கொள்வதற்காக மிகுதியான ஒப்பனையும் கூடுதலான அணிகலனும் அணிந்து பொது மக்கள் கூடுமிடத்தில், பிறரை கவர்வதற்காக இவர்கள் நடத்திய கூத்தினைக் கண்டு, இவர்களைப் பாவம் செய்தவர்களாகச் சித்திரித்தன.

    ஒழுக்கத்தைப் போதித்த அறஇலக்கியங்கள் இவர்களை இழித்துரைத்தாலும், தமிழ்ச்சமூகம் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைத்தே இவர்களையும் நடத்திய செய்தியை முதற்காப்பியங்கள் காட்டுகின்றன. சிலம்பில் பாண்டியனின் மனைவிக்கு பணிப்பெண்ணாகவும் (சிலம்பு-  )சீவகசிந்தாமணியில் காந்தர்வதத்தையின் தோழியாகவும் (சீவக  ) அரவாணிகள் அரண்மனை வாழ்வியலோடும் இணைந்துள்ளனர்.மணிமேகலையில் பொதுமக்கள் கூடுமிடத்தில் இவர்கள் கூத்து நிகழ்த்திய செய்தி பதிவாகியுள்ளது. சமண சமய காப்பியமான நீலகேசி(76) அரவாணியரின் அக்கால நிலை ,அவர்கள் படும் துன்பம்,மக்கட்பேறற்ற நிலை,பிறரால் இழிவாகப் பார்க்கப்படல் போனறவற்றை கூறுகின்றது.எனினும், முற்பிறவியில் இவர்கள் செய்த பாவமே இப்பிறவியில் அரவாணியாகப் பிறக்கக் காரணம் என்று தண்டனைப் பிறவிகளாகச் சித்திரித்துள்ளது.இவ்வாறு தமிழர் சமயமல்லாத புற சமயங்கள் இழிபிறவிகளாக் கருதி இழிவுபடுத்திய இவர்களை, தமிழர் சமூக மரபினை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற வைதீக சமயங்கள் இறைநிலைக்கு உயர்த்த  முயன்றுள்ளன.

                இறைவன் ஒருவனே ஆண் என்றும், உலக உயிர்கள் அனைத்தும் பெண் எனவும் கொண்டு, இறைவனாகிய ஆணைச் சரணடைவதே உலகஉயிர்களாகிய பெண்ணின் வீடுபேற்றிற்கு ஒரே வழி என்ற அடிப்படையில் இவை செயல்பட்டன.இதனடிப்படையிலேயே நாயக-நாயகி பாடல்கள் புனையப்பட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் கண்டு மகிழ்கின்றார்.பெணகளாகப் பிறந்தவர்களுக்கு இறைவனை ஆணாகக் கணடு சரணடைவதில் சிக்கலில்லை. ஆண்களைவிட பெண்கள் இறைப் பற்றினை கூடுதலாக பெற்றிருப்பதனால்தான் ஆழ்வார்களில் மற்ற ஆழ்வார்களை விட மிக எளிதில் இறைவனைச் சரணடைந்து இறைப் பிரேமையில் மூழ்கிவிடுகிறாள் ஆண்டாள்.

     எனவே, ஆண்களைவிட பெண்களுக்கு இறைப்பற்றும் சரணடைதல் திறமும் எளிதில் கூடிவிடுகின்ற தன்மையை உணர்ந்தே பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக, இறைவனையே முதலில் ஆணாக இருந்து, பெண்தன்மை பெற்று,அதன் பின் இரண்டும் கலந்த அலி நிலைக்கு உயர்ந்து ஆகாசமாகிறான் என்கிறார் மாணிக்கவாசகர்.

    காரைக்காலம்மையாரும் இறைப்பற்றினை எளிதில் பெற்றுவிட்ட காரணத்தினால் தான், இறைவனுக்கு முன் அமரும் வாய்ப்பினைப் பெறுகின்றார். இறைவனே அவரை ‘அம்மையே’ என்றழைக்கும் பேறும் பெறுகின்றார்.

                       “ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29)

    ஆணின் இயல்பையும் பெண்ணின் இயல்பையும் அறிந்த ஒருவரே அனைவரையும் அரவணைத்து காக்கவும் முடியம். எனவே தான், இறைவனை ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டும் இணைந்த அலியாகவும் சமயங்கள் உருவகிக்கின்றன.

    சைவத்திலும் வைணவத்திலும் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் காணுகின்ற நிலையை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பதிவுசெய்துள்ளனர்.

    திருவாசகத்தில்,

    “பெண்ணாளும் பாகன்” (.திருஅம்மானை.10)
    “ஆண் எனத் தோன்றி அலி எனப் பெயர்ந்து”(திருவண்டப்பகுதி.138)

    “பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றவனே”(நீத்தல்விண்ணப்பம்.பாடல்.22)
    “ஆணோ அலியோ அரிவையோ”(திருப் பொன்னூசல்.பாடல்.5)
    தேவாரத்தில்,
    “ஓருடம்புக்குள்ளே உமையொரு பாகம்”(சம்பந்தர்.100-3)
    “பெண்ணுறுமுடலினர்”(சம்பந்தர்.343.2)
    “பெண்தமாம் உருவத்தான்”(சம்பந்தர்.176-5)
    “பெண்ணற நின்றவர் தம்முருவம்”(சம்பந்தர்136-3)
     “பெண்நயங்கொள் திருமேனியன்”(சம்பந்தர்211-1)
     என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை மூன்று கோலத்திலும் கண்டு பாடியுள்ளனர்.

            இப்பாடல்கள் ஆணாக இருந்து பெண் உணர்வு பெற்றதால் பெண்ணாகி பின் இரண்டும் இணைந்த அலி உருவம் பெற்ற இறைவனின் தன்மைகளை சுட்டுகின்றன. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்களைக் குறிக்கும் சொல் பேடி என்பதாகும். அது போல பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களைக் குறிக்கும் சொல் அலி என்பதாகும். தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்த இச்சொற்கள், மாணிக்கவாசகர் காலத்தில்  அருகி இருதன்மையுடையவரையும் அலி என்ற  ஒரு சொல்லாலே குறிக்கும் வகையில் குறுகிவிட்டது. மாணிக்கவாசகர் இவ்விரு தன்மையுடையவர்களையும் அலி என்ற ஒரு சொல்லாலே தான் குறிக்கின்றார்…

    “ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29) என்ற பாடல் வரிகள் ஆணாக இருந்து இறைவன் பெண்ணாகி அலியாகிய தன்மையையும்,

    “பெண் அலி ஆணென” (திருப்படையாச்சி.பாடல்.5) என்ற பாடல்
    பெண்ணாக இருந்து ஆணாக மாறிய இறைவியின் தன்மையையும் சுட்டி நிற்கின்றன.

    என்ற பாடல் இறைவனின் அலிகோலத்தை காட்டுகிறது. இப்பாடலில் வரும் தோல், குழை, நீறு, சூலம் முதலானவை சிவனுக்குரியவை.தோடு,சாந்து,கருவளை முதலானவை இறைவிக்குரியவை.இவை இரண்டும் இணைந்த கோலத்தைப் பாடியிருக்கும் இப்பாடல் அர்த்தநாரீசுவரர் கோலத்தை கண்முன் நிறுத்துகிறது.      சிவன் ஆணாக இருந்து பெண்தன்மை பெற்று அலியாக மாறுவதைப் போல, பார்வதியும் பெண்ணாக இருந்து ஆண்தன்மை பெற்று அலியாக மாறுகிறாள். சிவன், தன் உடலில் சக்திக்கு இடம் கொடுத்தது போல, சக்தியும் சிவனுக்கு தன் உடலில் இடம் கொடுத்ததால் உண்டானதே அலி என்னும் அர்த்தநாரீஸ்வரக் கோலம்.

    “தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ் சாந்தும் பைங்கிளியுஞ்
    சூலமும் தொக்க வளையு முடைத் தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி”(திருக் கோத்தும்பி.18)

              ஆணாக இருந்து பெண்ணாகி அலியாக மாறியவர்களே மிகுதி. பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் குறைவு. எனினும் இவ்விரு தன்மைகளும் உலகில் உண்டு என்பதைக் காட்ட உருவானதே அலி என்னும்கோலம் எனலாம்.

     “அர்த்தநாரீஸ்வரர் ஆணுக்கு பெண்ணை ஒளிக்க முடியாமல் அம்பலப்பட்டு நிற்கம் அரவாணித் தன்மையின் பருண்மையான மறு உள்ளீடுதான் ” என்று இத்தோற்றத்தை மு.இராமசாமி குறிப்பிடுகிறார்.(மகாராசன்.2007.17)

               கிருத்துவ சமயத்தில் திருநங்கைகளான அரவாணிகளை ஆயராக நியமிக்கலாமா என்ற கேள்விக்கு,ஜோ.தமிழ்ச்செல்வன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்.“கடவுளை ஆணாகவும் பெண்ணாகவும், தாயாகவும் தகப்பனாகவும், அம்மை அப்பனாகவும் விசுவசிப்பவர்கள் கடவுளை ஒரு திருநங்கையாக ஏற்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். திருநங்கைக்கு மட்டும்தான் ஆண்பால்(அவன்), பெண்பால்(அவள்), மூன்றாம்பால்(அவர்) ஆகிய முப்பால்களை அறியவும் உணரவும் முடியும். அனைத்தையும் அறிந்தவரும் உணர்ந்தவரும்தான் கடவுளாக இருக்க முடியும். கடவுள் ஒரு திருநங்கை என்று சொன்னால் அதில் தவறொன்றும் இல்லை. திருநங்கை ஆயராக நியமிக்கப்படுவதில் பிழையொன்றும் இல்லை.”

    ஆணாக பிறந்த ஒருவன் உள்ளத்தளவில் தன்னைப் பெண்ணாக நினைக்கும் பொழுது, உடலளவிலும் உள்ளத்தளவிலும் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பித்துப் பிடித்தாற்  போன்ற நிலைக்கு செல்லும் இவர்கள், மரபு வழிப்பட்ட வாழ்க்கை முறையோடு ஒத்துப் போக முடியாமல் தடுமாறுகின்றனர் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெகு சிலரே இதிலிருந்து மீண்டு குடும்பத்தினரோடும் சமூகத்தோடும் ஏன் தன் உள்ளத்தோடும் உடலோடும் போராடி மீள்கின்றனர்.

    பெரும்பாலும் பருவவயதில்தான் இவ்விரு மாறுபட்ட தன்மையை உணர்வதால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வீட்டைவிட்டே ஓடிவிடுகின்றனர். பெண்களை விட ஆண்களே இதில் பெரிதும் பாதிப்படைகின்றனர். “பெண்கள் பூப்படைகிற அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கிற பருவத்தில்தான் மிகப்பெரிய சிக்கல்கள் அவர்களுக்கு எழுகின்றன.பைத்தியம் பிடிப்பது மாதிரி உணர்வதும்,வாழ்வதே சரியில்லை எனப் புலம்பிக் கொள்வதும்,என்னவோ ஆகப்போகிறது என்ற பயமும் அவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். பெரும்பாலான அரவாணிகள் அந்தப்பருவத்தில் பைத்தியம் ஆகியிருக்கவேண்டும் அல்லது தற்கொலை செய்திருக்க வேண்டும்.”என்று மகாராசன் குறிப்பிடுகிறார்.(2007.11)

    இருவேறுபட்ட சூழலில் காணப்படும் இந்நிலையை ஒரு பாடலில் மாணிக்கவாசகர் வெளிப்படுத்துகிறார்.

    “நான் யார் என் உள்ளம்யார் ஞானங்களார் என்னை யாரறிவார்?”
                                                           (திருக்கோத்தும்பி.1)

    இந்தப் புரிதல் ஏற்பட்ட பிறகு ஆண் பெண் பேதங்களோ அதன் மீதான ஈர்ப்போ ,உளவியல் உணர்வு நிலையில் ஏற்படும் வெறுப்போ அவர்களை விட்டு நீங்கி விடுகின்றன.இவ்வுலகம் ஆண்மையநோக்கில் கட்டமைத்துள்ள படிநிலைகள் தேவையற்றதாகி விடுகின்றன.            நான் என்பது உடலா?அல்லது உள்ளமா? நான் இதுவரை பெற்ற ஞானங்கள் என்ன? என்னை யாரறிவார்? என்று புலம்பி அறிவு தடுமாறி நிற்கும் நிலையை, பருவவயதில் அரவாணிகள் பெறுகின்றனர். நான் என்பது உடலல்ல.உள்ளம். உடலை இயக்கும் உள்ளம்தான் ஆன்மா. உடல் இவ்வுலகில் வாழ்வதற்கான ஒரு கருவியே தவிர வேறில்லை. அதனால் இந்த உடலில் உள்ள உறுப்புகளைப் பற்றி நினைத்து பெருமைப்படவோ,சிறுமைப்படவோ ஏதுமில்லை.உள்ளம் தான் இயக்கம்.அதுதான் உண்மை. அதன்வழியே நடப்பதே உயர்நிலை.முற்றும் துறந்த முனிவர்களும் உண்மையான ஆன்மீகவாதிகளும் தெளிவதைப்போல அரவாணிகளும் ஒரு கட்டத்தில் தெளிகின்றனர்.

    உடலுக்குத்தான் பால் பேதம் உள்ளத்திற்கு இல்லை.ஞானம் பெற, உடற்கூறுகள் ஒரு பொருட்டே இல்லை.இறைவன் படைப்பில் அனைவரும் சமம்.அவரவர்க்குரிய இயல்புகளுடனும் குணங்களுடனும் தனித்துவம் மிகுந்தவர்களாக இவ்வுலகில் வாழமுடியும் என்ற ஞானத்தை அரவாணிகள் பெறுகின்றனர். அதற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களின் நிலையில் நின்றுதான், நான் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேட முயல்கிறார் மாணிக்கவாசகர்.

    ஆணாக பிறந்து, பெண்ணாக உணர்ந்து பெண்ணாகவே மாற விரும்பும் அரவாணிகளுக்கு, தன் உடல் உறுப்புகள் ஒரு குறையாகத் தோன்றுகிறது.வெளித்தோற்றத்தில் மிகுதியான ஒப்பனைகளால் தங்களைப் பெண் போலவே மாற்றிக் கொள்கிற அரவாணிகள்,ஆண் உறுப்பை ஊனமாகக் கருதுகின்றனர்.அதை நீக்கிய பின்னரே தங்களை பெண்ணாக முழுமையாக உணரமுடியும் என்ற நிலையில் அதனை நீக்கி விடுகிறார்கள். மாணிக்கவாசகர் இதனை,

    “ஊனந்தன்னை ஒருங்குடனறுக்கும்
    ஆனந்தம்மே ஆறா அருளியும்
    மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்”(கீர்த்தி.105)

     அவ்வாறு நீக்கிய பின்தான், முழுமையான ஆனந்தத்தை அடைகிறார்கள். 6666அதற்கு வழிகாட்டியாக இருப்பவன் மாதிற்கூறுடை மாப்பெருங்கருணையன் என்கிறார்.

    “முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்
    துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
    இந்தந்திரத் திற் காண்டும் என்றிருந்தோர்க்
    கத்தந்திரத் னவ்வயி னொளித்தும்
    முனிவற நோக்கி நனிவரக் கவ்வி
    ஆணைனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
    வாணுதற் பெண்ணெண ஒளித்தும்,சேண்வயின்
    ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த்
    துற்றவை”

    என்ற இப்பாடல், திருமாலும் பிரம்மனும் அடியையும் முடியையும் காணவியலாத வகையில், தன் உருவத்தைத்  தந்திரத்தினால் மறைத்தபடி, ஆணைனத்தோன்றி பின் அலிக்கோலமாக  நெருப்புக் கோலம் கொண்ட இறைவனைப் பற்றிக் கூறுகிறது.          அரவாணிகளின் நிலையோடு இப்பாடல்ஒத்துப்போகிறது. ஆணெனப் பிறந்து, பெண்தன்மை உணர்ந்து, அதை பிறர் அறியாமல் ஒளித்து வாழ்ந்து, இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆணாகவும் வாழமுடியாமல் பெண்ணாகவும் வாழ முடியாமல், தந்திரத்தினால் பெண்தன்மையை முதலில்  மறைத்து வாழ்கின்ற மனப்போராட்டம் மிகுந்த சூழலில்,நடுநிலையோடு தன்நிலை குறித்து ஆராய்ந்து மிகுதியான பெண்தனமையை மறைக்க முடியாது என்று பெண்ணாகவே வாழ்ந்துவிட அரவாணிகள் முடிவெடுக்கின்றனர்.

               அவ்வாறு முடிவெடுத்த பின் இவ்வுலக வாழ்வின் நிலையாமை உணர்ந்து, உடலின் தன்மை அழியக்கூடியது, ஆன்மா ஒன்றே அழியாதது .ஆண் உடல் உண்டு. ஆனால், ஆண்தன்மை இல்லை என ஐயுற்று குழம்பி முன்பு பழகிய நிலைக்கும் தற்போதுள்ள தெளிந்த நிலைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்த பின், அலியான இறைவனைப் போல அவன் திருவடியைத் தொடருங்கள் என்கிறார் மாணிக்கவாசகர். தன்னை உணரத் தனக்கொரு கேடில்லை என்கிள திருமூலரின் வாக்கிற்கேற்ப தன்னை உணர்ந்த பின் ஆணாக இருப்பதை விரும்பாமல் முழுவதும் பெண்ணாக மாற முயல்கின்றனர்.

                     “எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும் 
                    அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி”   (கீர்த்தி.125-226) 

           ஒருவரைப் பற்றி நன்கறிய அவர் நிலையில் நின்று அவரை அறிய முயல வேண்டும்.அவரவர் நிலையில் நின்று அவரது இன்பத்தையும் துன்பத்தையும் அறிய முயலும் போதுதான் முழுமையாக ஒருவரின் நிலை பற்றி அறிய முயலும். அப்போதுதான் உலக உயிர்களின் மீது அன்பு தோன்றும்.அன்பு தோன்றிவிட்டால் யாரையும் தூற்றவோ இழிவாகக் கருதி ஒதுக்கவோ இயலாது.அதுதான் இறைநிலை. இறைவன் காட்சிக்குரியவன் அல்லன் உணர்வதற்கு உரியவன்.இறைவன் உயர் பிறவியான மனிதப் பிறவி கொடுத்திருப்பது போல ஒருஉடலில் ஆண் பெண் அலி என்ற மூன்று தன்மைகளையும் கொடுத்திருக்கிறான். அது இறைவன் கொடுத்த பரிசாகும். அப்பரிசனை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

               “உண்டொரு ஒண்பொருள்  என்றுணர்       வார்க்கெல்லாம்
               பெண்டிர் ஆண் அலி என்றறியொண்கிலை”(திருச்சதகம்.42)
            

                  இப்பாடலின் முதலிரண்டு அடிகள் ஒரு பெண் வினா எழுப்புவது போலவும் அடுத்த பெண் அதற்கு பதி் தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பெண், சிவன் எதற்காக ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினான்.அவ்வாறு மாறிய அவன் பித்தனல்லாமல் வெறென்ன? என்கிறாள். அதற்கு விடைதரும் பெண்,ஆணாகப் பிறந்து பெண்தன்மை பெற்று மாவில்லையெனில் யோக நிலை பற்றி அறியாமல் உலகத்தார் வீணே அழிவர் என்கிறார்.

    இறைவனை உணர்வால்,அனுபவத்தால்,தவத்தால் உணர நினைப்பவர்களுக்கு இறைவன், ஆண் பெண் அலி என்கிற மூன்று நிலையிலுமிருக்கிறான் என்பது புரியும் என்பதை இத்திருவாசகப்பாடல் எடுத்துரைக்கின்றது.ஆனால் இத்தத்துவத்தை அறியாதவர்கள் அலிக் கோலத்தை தூற்றுகின்றனர்.குடும்பத்தினரே வெறுக்கின்றனர்.அவமானச் சின்னமாக் கருதுகின்றனர்.தாயும் தந்தையுமே புறக்கணிப்பதால் பெரும்பாலானோர் வீட்டை விட்டே வெளியேறுகின்றனர். தாய் இருந்தும் தந்தை இருந்தும் நாடோடிப் பாடல்களாக மாறி அனாதையாகின்றனர்.ஆணாதிக்க சமூகமும் இவர்களை எள்ளி நகையாடுகின்றது. சித்தர்களையும் பித்தர்களாகக் கருதி எள்ளி நகையாடிய இறைநிலை எய்தவியலாத இச்சமூகம் இவர்களை உணர முடிவதில்லை.

    இறைவனின் படைப்புகளில் அலிகளின் படைப்பு எதற்கு என்ற கேள்விக்கு மாணிக்கவாசகர் ஒரு பாடலில் விளக்கமும் தருகிறார்.

    “தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
    பெண்பால் உகந்தாடும் பெரும்பித்தன் காணேடீ
    பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தார்
    விண்பாலியோ கெய்தி வீடுவர் காண் சாழலோ”(திருச் சதகம்.9)

    ஆண்மை எனில் வீரம் . வீரத்தின் விளைவு  அழித்தல். பெண்மை எனில் அன்பு. அன்பின் விளைவு காத்தல்.முற்றுந்துறந்த முனிவர்களும்,சித்தர்களும், உலகத்தவர்களும்  விரும்புவது    அன்புநிலைதான். அன்பின் வழிபட்டது உயிர் நிலை என்கிற திருவள்ளுவரின் கூற்று இவண்நோக்கத்தக்கது.தூய அன்புநிலைக்கு  மனதைப் பழக்குவதே  உண்மையான யோகநிலையாகும்.அந்நிலைப் பெற்றவர்களிடம் பெண்மையின் தன்மை மிகுந்திருக்கும். அவர்களே உலகில் வெற்றியாளர்களாகத் திகழமுடியும்.

      “மக்களைப் பெரிய அளவில் கவர்ந்திடும் ஆண் நடிகர்,பாடகர்,தலைவர்,சாமியார் போன்றோரின் உடல்கள் கணிசமாகப் பெண் தன்மையில் தோய்ந்திருக்கும். சமூகத்தில் பிரபலமான பெண்ணுடலில் ஆண்தன்மை மெலிதாகப் பொதிந்திருக்கும்”(காவ்யா,செப் 2012.49)என்கிற முருகேச பாண்டியனின் கூற்று கருதத்தக்கது. ஆணுக்குரிய தோற்றம், உடல் வலிமை போன்ற குணங்களிலிருந்தாலும், பெண்மைக்குரிய அன்பு, தாய்மை முதலான குணங்களும் இருப்பவரையே உலகம் விரும்புகிறது.

    மாணிக்கவாசகர் இறைவனை அடையும் வழிமுறைகளைப் பற்றி கூறுமிடத்து, மகளிர் விளையாடல்களின. வழியே நின்றுரைக்கும் தன்மை பிற ஆழ்வார்களிடமும்  நாயன்மார்களிடமும் காண முடியாத ஒன்றாகும்.ஆழ்வார்களில் ஆணடாள் கூடல் விளையாடல் பற்றி கூறியிருந்தாலும் அவர் பெண்ணாக இருப்பதால் அவ்வாறு மகளிர் விளையாடல்களைப் பற்றிக் கூறவது இயல்பானதாகும். ஆனால் ஆணாக இருக்கும் மாணிக்கவாசகர்,பெண்நிலையில் நின்று தன்னைப் பெண்ணாகவே பாவித்து மகளிர் விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வது சிறப்பானதாகும். திருவெம்பாவை திருத்தெள்ளேனம் திருச்சாழல் திருக்கோத்தும்பி திருப்பவல்லி திருஉந்தியார் திருத்தோணோக்கம் திருப்பொன்னூசல் போன்ற பத்து மகளிர் விளையாட்டுக்களில் மனந்தோய்ந்து பெண்ணாகவே மாறி விளையாடுகிறார்.

    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவந்திரள்தோள்
    கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
    ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
    தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்(திருஅம்மானை.17)

     தலையில் பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு, இறைவனின் தோளைத் தழுவிடுவேன் . சில சமயம் அவரோடு ஊடல் கொள்வேன். ஊடிய பின் அவருடைய செவ்வாய்ச் சுவைக்காக ஏங்கி உருகுவேன். உள்ளுருகி வாடிய பின்னர் பெண்மைக்குரிய நாணத்தை கைவிட்டு அவரைத் தேடுவேன்.தேடி கிடைத்த பின,அவருடைய கழலே கதியென்று சிந்திப்பேன் என்று இறைவன் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தியின் நிலையில் நின்று மாணிக்கவாசகர்  பாடுகிறார்.

    கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    செம்பவள வாய்தான் தித்திருக்குமோ”(நாச்சியார் திருமொழி )என்ற  பாடலிலுள்ள ஆண்டாளின் ஏக்கம் மாணிக்கவாசகர் பாடலிலும் பொதிந்துள்ளது.

    முத்து நல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக் குடந் தூபம் நல் தீபம் வைம்மின்(திருப் பொற்.1)

                      இப்பாடலில்,பெண்கள் மேற்கொள்ளும் இறைநோன்புகளில் தானும் ஒரு பெண்ணாக மாறி கலந்து கொண்டு, சக பெண்களுடன்   உரையாடி மகிழ்கிறார்.

         இறைத்தன்மை என்பது பாலியலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறையாகும்.எனவேதான,சராசரியான  பாலுறவு,குழந்தைப்பேறு,   இரத்த உறவு கொண்ட குடும்பம், இவற்றைக் கடந்த வாழ்க்கை  வாழும் அரவாணிகள் ஆன்மீகமே தனக்கு உகந்தது என்று நம்புகிறார்கள்.வடநாட்டில் அரவாணிகளை தெய்வத்திற்கு இணையாகக் கருதி ஆசி பெறகிறார்கள்.  “நாங்கள் தெருவில் நடந்து சென்றால் வயது முதிர்ந்த பெரியவர்கூட எங்கள் கால்களைத்தொட்டு வணங்குகின்றனர் என வடநாட்டில் வாழும் ஒரு அரவாணி கூறுகிறார். ”மகாராசன்.236)

          பழங்குடி இன மக்கள் அரவாணிகளைக் கடவுளின் தூதுவர்கள் என்று கருதுகின்றனர்.எனவேதான்,“அமெரிக்காவில் சிகப்பிந்திய பழங்குடியினர் இந்த கடைபாலின குணமுள்ள குழந்தைகளை ஆணுக்கும் பெண்ணக்கும் நடுநிலையான இக்குழந்தை இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் தொடர்பு சாதனம் என நம்பியதால் இவர்களை பர்தாஷ் என சிறப்பு பெயரால் அழைத்து மருத்துவம்,மாந்திரீகம்,ஆன்மீகம் ஆகியவற்றைப் போதித்து பூசாரி ஸ்தானத்திற்கு உயாத்தினார்கள்”(மகாராசன்.197)என்கிறார் டாக்டர் ஷாலினி.இந்தியாவில் லடநாட்டிலும் அவ்வாறான ஒரு நம்பிக்கை உள்ளதால்தான் அரவாணிகள் தொடங்கி வைக்கும் எந்த ஒரு செயலும் சிறப்பாக இருக்கும் எனக் கருதி, அவர்கள் மூலம் எந்த தொழிலையும் தொடங்குகிறார்கள்.

    ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ். இவர்களை இழிவாக் கருதி மிக மோசமான சொற்களால் எள்ளி நகையாடுகிறார்கள் இவர்களை ஒன்பது என்று கேலி செய்பவர்கள் அதிகம். ஒவ்வொரு மனிதனும் ஒன்பதுதான் என்பதை அவரகள் உணர்ந்தால் அவ்வாறு அரவாணிகளை இழிவுபடுத்த மாட்டார்கள்.

    புறந்தோல்போர்தெங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ் சொரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” (சிவபுராணம்)

             இப்பாடல் மனித உடல் ஒன்பது வாயிற் கொண்ட ஒரு கூடு என்கிறது. செவி இரண்டு, கண் இரண்டு ,மூக்கு இரண்டு,வாய் ஒன்று., கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று என்ற ஒன்பது வாயிலை உடைய மனிதர்கள், தம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அவ்வாறு கூறுவது தன்னையே தான் இழிவுபடுத்திக் கொள்வது போலத்தான் ஆகும்.

    Share
  • ’’காரடையான் நோன்பு’’….

    கிரேசி மோகன்
    —————————————————-

    maxresdefault

    ”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
    பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்
    சீரடைவு கொண்டு சுமங்கலியாய் வாழ்ந்திட
    காரடையான் நோன்பில்கால் கட்டு”….

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்…..

    Share
  • நடுவன் அரசு முழுமையாக செயல்படுமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அப்பழுக்கற்றவர் என்று ஆளும் கட்சியினரும் மற்றும் அவர் சார்ந்த காங்கிரசு கட்சியினரும் தெரிவித்து, தலைவர் திருமதி சோனியா காந்தியின் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அவருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். திரு மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்தபோது அந்தத் துறைக்கும் பொறுப்பானவராக இருந்தபோதும் நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி தெரிவித்துள்ளது. அப்போது இதே காங்கிரசு கட்சியினர் இல்லை என்று மறுத்தனர். நடுவர் நீதிமன்ற ஆணைப்படி நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடுகளை ரத்து செய்து புதிய ஒதுக்கீடும் செய்யப்பட்டு அதன் மூலமாக அம்மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்தது. இதில் பிர்லாக்கள் குற்றம் சாட்டப்பட்டனர். நிலக்கரித் துறை மத்திய செயலாளரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முன்னாள் பாரதப் பிரதமர் குற்றம் சாட்டப்படவில்லை. விசாரணைக்காக மட்டுமே அழைக்கபட்டுள்ளபோதும், காங்கிரசு கட்சியினர் ஏன் பொங்கியெழ வேண்டும் . அவர் பிரதமராக இருந்தபோதுதான் இந்த முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளை செய்தது நிலக்கரித்துறை செயலாளரா, இந்தப் பொறுப்பில் இருந்த பிரதமரின் அலுவலகமா, இவைகளெல்லாம் தம் கண் முன்னால் நடந்ததை தடுக்காமல், கண்டிக்காமல் இருந்த பொருளாதார மேதையான திரு மன்மோகன்சிங் அவர்களின் நிர்வாகத் திறமையின் குறைபாடுதான் காரணமா என்பதுதான் இப்போதைய கேள்வி. இப்படியொரு பூதாகரமான பிரச்சனையைத் தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் தலைமைப் பதவியில் இருந்த ஒருவருக்கு இல்லையென்றால் அந்த அதிகாரம் யாரிடம் இருந்தது. அந்த பிர்லாக்களை வளரவிட்டதுதான் யார். நாட்டின் வளத்தை அழிக்கக்கூடிய கறையான் புற்று போன்ற பிரச்சனையை வேரறுத்து, முறைப்படுத்த முடியாத சூழ்நிலையென்றால், அவர் தம்முடைய பதவியிலிருந்து விலகியல்லவா இருக்கவேண்டும். நடந்த தவறுகளுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் மன்மோகன் சிங் அவர்களே என்பது சிறு பிள்ளையும் அறியும் உண்மை.

    இன்று கோல்கேட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பு அலைக்கற்றை ஒதுக்கீடும் பரபரப்பாக பேசப்பட்டது. அதனுடைய இன்றைய நிலை என்ன? அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் இன்றைய நிலவரப்படி அரசிற்கு வருமானம் 1 இலட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இன்னும் பகிர்மானம் முடியவில்லை. இதன் மூலம் மொத்தமாக 2 இலட்சம் கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் முன்னால் ஏற்பட்ட இழப்பின் வீரியம் எவ்வளவு.. யார்யாரெல்லாம் இதில் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வரவேண்டிய உண்மைகள். இதற்கும் நடுவர் மன்ற ஆணைகள்தான் விடை சொல்லுமோ தெரியவில்லை.

    இயற்கை எரிவாய்வு கிணறுகள் இதுவரை எத்தனை ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை உற்பத்தியில் உள்ளன. உற்பத்தி செய்யப்படாத மற்ற கிணறுகளின் நிலை என்ன. ஓஎன் ஜிசி இதனை எடுத்து ஏன் செயல்படுத்த முனையவில்லை. இந்தியாவில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவிற்கு இந்தியக் குடிமகனான அம்பானிக்கு எதற்காக டாலரில் பணப்பரிமாற்றங்கள் நடக்க வேண்டும். அதன் உற்பத்தி செலவாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ஏன் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது? இதற்கெல்லாம் விடை சொல்லப்போகிறவர் எவர்? இதனால் அரசிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பீடு பல இலட்சம் கோடி. அமெரிக்காவில் செல் கேஸ் மூலமாக உலகப் பொருளாதாரத்தையே மாற்றியமைத்துள்ளார்களே அதை ஏன் நாம் கருத்தில் கொள்ள முடியவில்லை. இந்த இயற்கை எரிவாயுவை பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவந்தால் அதன் விலை லிட்டருக்கு 12 அல்லது 13 ரூபாய் மட்டுமே வரும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கும்போது, அதை செயல்படுத்தி மக்களின் சுமையைக் குறைக்க ஏன் முன்வர முடியவில்லை. இப்போதைய நடுவன் அரசும் இதன் அடிப்படையில் செயல்படுத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன என்பதும் இந்த கோல்கேட் ஊழல் போல எப்போது வெளிச்சத்திற்கு வந்து மத்திய அரசிற்கும் மக்களுக்கும் பயன் கிடைக்க வழிவகுக்கப்போகிறது என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. நிலக்கரி புதிய ஒதுக்கீட்டின் மூலமாக மின்சார உற்பத்தி பெருமளவில் செலவினம் குறைந்து, அதனுடைய பயன் கடைநிலை மக்களைச் சென்றடையும் என்பதும், அதுபோல அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயால் பயன்பாட்டாளர்களுக்கு உரிய கட்டணமும் குறையும் என்பதும், இயற்கை எரிவாயுவின் மூலமாக செலவினம் கணிசமாகக் குறைந்து மக்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும் என்பதும் நடுவன் அரசு கண்களில்பட்டும் இன்னும் செயல்படாமல் இருப்பதன் காரணமும் புரியவில்லை.

    வாழ்க பாரதம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy


    ”பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
    கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
    புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாயில்
    முகுந்தனுக்கு முப்பத்தி ரெண்டு”…

    ”இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
    பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
    விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
    விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….

    ”காமியானாய் ராதைக்கு நேமியாவோய் ராட்சசர்க்கு
    பூமியாவாய் போற்றும் அடியார்க்கு -மாமியானாய்
    சாமிநாத ஸ்வாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்
    ஏமிரா நீயார் எனக்கு”…

    ”கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
    தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் -பின்னமுறான்
    முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு”….

    ”கவிதை வருவது கண்ணன் அருளா ?
    செவியுண்ட செய்யுள் செயலா ?-புவியத்தா
    காவிய வாழ்க்கையா? கைவல்ய வேட்கையா?
    சாவியுன் கையில் செப்பு”….

    ”பெற்றதோர் வெற்றி பொறாமைக் கிடமாகும்
    உற்றிடும் தோல்விக்கோ கேலிமிஞ்சும் -பற்றிலாது
    காரியம் யாவையும் காரணன் கண்ணனின்
    பேரினில் போடப் பழகு”….

    ”பொய்கையில் பூத்தபக்தி பூதமதைக் காத்தது
    பொய்கலந்த போதுபேய் ஓட்டியது -தெய்வமே
    மூன்றாழ்வார் மீதமுள்ள சான்றோர்கள் போலாக
    தான்தோன்றி மாலே தயவு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஸ்ரீ பகவான் உவாச:
    ———————————-

    crazy

    ”உன்னுள் இருப்பதுவும் என்னுள் இருப்பதுதான்
    கண்ணுள் இருப்பவனே காண்பவன்: -மண்ணுள்ளே,
    கேலியாய் பேசுவர் காண்டீபன் கோழையென்று,
    நூலில் சிடுக்ககந்தை ‘’நான்’’….கிரேசி மோகன்….

    Share
  • E-Scams and Women

    B.E.George Dimitrov

    DSCF0512

    “I measure the progress of a community by the degree of progress which women haveachieved.” – B.R. Ambedkar

    Introduction

    reportingescams

    Nowadays a fastest growing and everlasting mode of communication couldbe done only with the help of media. Media has done a wider extend of providingbasic information, knowledge, reality, socialization, shaping the perception of theindividual and upgradation. This is the period of “Information Explosion” and this age is considered as the “Age of Information” this growing trend has made theinvolvement of youth, men, women, children in shaping their life patterns as wellas providing a better outlook of socialization pattern.In this concern, Internet and Technology is being used worldwide whichcontributes huge users in social media like Face book, Twitter and others. Internetis viewed to be a source of valuable information which are often used as a sourceof making money or obtain services using illegally or fraudulently which affectsthe Internet Economy worldwide. In many conditions fraudulent activities aretargeted on women and they always fall as victims of these kinds of E-scams it isvery common where they are spied by various hackers in viewing their accounts,emails, identity, etc.

    nigerian_scam_15_t180

    E-Scam:

    E-scams have been discussed from the starting stages of internet which ishighly related with e-business,e-commerce and e-banking activities it has been reported from the early years of 1970’s where these kinds of fraudulent or illegalactivities started out which is also called as Advance Fees Fraud(AFF). It has been reported that more than 51,761 scammers are there worldwide, where it is mostlyoperated from Nigeria and other 69 countries. In 2009 alone victims lost around9.3 billion dollars to 419 scammers, this has been a huge loss worldwide wheremore than 41 billion dollars has been lost till date which shows an annual increaseof 5% every year which affects the Internet Economy.

    Social Engineering:

    Social Engineering is very commonly used by e-fraudsters by normal scamartists in the name of famous personalities or most reputed member in the societywho may be a famous magazine seller, car seller, oil corporations, governmentagencies, banks, etc. When we speak about social engineering it is a usage ofnumerous techniques through which it intends to manipulate the “victim” by athreat or kindness and creating pressure. “Your Account will be closed in 24 hours if you don’t click the link below to update your account information” you willreceive an email to your mailbox or an text message to your mobile phones whichis very often used by these scammers.

    Women and E-scams:

    Women are one of the easiest ways of exploitation in all sorts of media,whether it is business, employment, education and others, they are all used as theweaker side through which their bodies are considered as commodity which hasbeen trusted worldwide. Women are always portrayed as an innocent, kind, love,affection, emotional, cultural, etc. When looking from the west these activities arenot very common it is highly depicted in a country which is being developing with cross culture like India and other third world countries. Women are the easiestsectors of exploitation were she is used as a weapon of destruction.

    E-Scammers mainly target women where a country which is highlyunemployed of 14 Crore people in India, there is a huge competition foremployment and other activities for their daily bread. When these kind ofscammers they spy out lonely women who are in search of jobs or those who areinterest in business opportunity where they send messages through e-mails, mobile phones, bank accounts, matrimonial proposals,dating,etc. These kinds of messages carry out you have won a lottery your e-mail has been selected as the only winnerworldwide and stating out one of our agents are arriving with your consignmentand you should pay customs duties to receive your consignment kindly deposit the money in this account no. When women who view these messages she is not ready to share this news to their friends or relatives where the problem arises.

    She doesn’t knows that she is going to be exploited were these scammersmake them believe by calling their mobile numbers often that they have receivedwith their consignment and wish to meet you in this order we would like you todeposit the money in their account as soon as possible and take your consignment. Many of the scammers who have better knowledge about various country theychoose India and other countries were women could be easily cornered throughtheir networks in these situations women are pressurized to intended in easy waysof earning money where they are exploited by these groups in depositing theirmoney to these scammers.

    Indian women are very much sensitive, emotional, kind hearted, they receive emails which shows sensitivity and emotional stating out “I lost my husband and Iam suffering alone with my kids please help me by transferring my amount to your account” showing an emergency which makes women to show kindness over them. When they reply or contact them problem arises they give their account no anddetails to them sometimes send money to their accounts. Very often they spyaccounts and others as soon as possible and earn money in seconds, women arebeing mesmerized soon to earn money somehow to become rich in status are verymuch target by these fraudsters. They make them believe it’s true through theirphotographs, award letters, promo lottery, bank accounts, etc.

    On the other side we find mails that comprising of employmentopportunities which brings out “Are you at home just typing work and you canearn more than 20,000/- monthly”, where they target women who are at home who are easily victimized in these kind of fake jobs opportunity on the internet. Manywomen are not aware about the work which is given to them, where their work isfixed with time and according to the work done the amount is being credited but in most conditions they are not paid instead they are been exploited a lot by thesekinds of fraudsters.

    According to the Internet Crime Complaint Center (IC3) says that they have received 262,813 Complaints Reported in the year 2013. Which comprises of 45.5 percent (119,457 complaints) reported with huge financial losses. In 2013, therewas a increase in complaints reported by men compared to the complaints reported by women in 2012.

    2013 Complainant Demographics

    DSC00638

    DSC00640

    Romance/Dating Scam

    Some of the scammers post the profile of famous women and men modelsusing their stolen photographs which are depicted asking for men or women tocontact them. E-mails, letters, photograhs are exchanged between these scammersand the victim till the scammer feels that they have mesmerized the victim enough to ask for money. In most common cause they ask for expenses that might be forrequests for airplane tickets, medical expenses, education expenses, monthly expenses, laptops, mobile phones, etc. They usually promise the victim that theywill one day join them in their country. These scams usually end when the victimrealizes that they are being exploited and stops sending money. Men and womencan be highly traumatized by these dating and romance scams and are often feelvery embarrassed and ashamed when they learn they have become a victim of ascam.

    Romance Scam Demographics

    DSC00642

     Apart from this there are various scams which affect the internet economy of each and every country. When it comes to the top most five countries which arehighly affected through scams are United States, Canada, U.K., India andAustralia. It is shocking that India is also under these kinds of internet scams werehigher number are women. Women due to their weakness they fall prey to theinternet fraudsters.

    DSC00644

    DSC00647

    Table.3-Victim Countries by Complaint Total Loss 2013

    DSC00649

    DSC00651

    Some of the ways to prevent E-Scams:

    Do not respond to unsolicited (spam) e-mail.

    Do not click on links contained within an unsolicited e-mail.

    Be cautious of e-mail claiming to contain pictures in attached files, as thefiles may contain viruses. Only open attachments from known senders. Scan the attachments for viruses if possible.

    Avoid filling out forms contained in e-mail messages that ask for personalinformation.

    Always compare the link in the e-mail with the link to which you aredirected and determine if they match and will lead you to a legitimate site.

    Log directly onto the official website for the business identified in the e-mail, instead of “linking” to it from an unsolicited e-mail. If the e-mailappears to be from your bank, credit card issuer, or other company you dealwith frequently, your statements or official correspondence from thebusiness will provide the proper contact information.

    Contact the actual business that supposedly sent the e-mail to verify if the e-mail is genuine.

    If you are asked to act quickly, or there is an emergency, it may be a scam.Fraudsters create a sense of urgency to get you to act quickly.

    Verify any requests for personal information from any business or financialinstitution by contacting them using the main contact information.

    Remember if it looks too good to be true, it probably is.

    Notes:

    1.Victims lost $9.3 billion to 419 scammers in 2009.It’s hard to believe that people are still falling for advance-fee fraud …by Jacqui Cheng – Jan 30 2010, 0:03am -550.2.

    http://www.shadowserver.org/wiki/pmwiki.php/Main/HomePage/ – Information – EFraud.mht, October 2012.3.

    E-Payments & Security – E-retail fraud rate hits a record low in 2011 – “Internet Retailer Social Media 2012”.mht, February 2, 2012, 11:25 AM4

    .“Nigerian Scams” Crime Branch Criminal Investigation Branch, Tamilnadu,India,2012.5.

    http://mashable.com/2012/08/21/how-to-identify-a-scam-e-mail/6.

    FBI (2013) Internet Crime Report.

    By

    B.E.George Dimitrov,

    Research Scholar,

    Dept of Political Science and Development Administration,

    Gandhigram Rural Institute – Deemed University,

    Gandhigram-624302. Tamil Nadu,India.

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ?

    unnamed

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    அகிலவெளி அரங்கிலே
    முகில் வாயுவில் மிதக்கும்
    காலாக்ஸிகள் இரண்டு மோதினால்
    கைச்சண்டை புரியாமல்
    கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் !
    கடலிரண்டு கலப்பது போல்
    உடலோடு உடல்
    ஒட்டிக் கொள்ளும் !
    வாயு மூட்டம்
    கட்டித் தழுவிக் கொள்ளும் !
    கர்ப்பம் உண்டாகி
    காலாக்ஸிக்கு
    குட்டி விண்மீன்கள் பிறக்கும் !
    இட்ட எச்சத்திலே
    புதிய கோள்கள் உண்டாகும் !
    ஈர்ப்புச் சக்தியால்
    விண்மீனைச் சுழல வைக்கும்
    காலாக்ஸி !
    கோள்களை நீள்வட்டத்தில்
    சீராய்ச் சுற்ற வைக்கும்
    விண்மீன்கள் !
    காலாக்ஸி ஒளி மந்தைகளைப்
    படகுகள் போல்
    காலவெளியில் உந்தச் செய்வது
    கருமைச் சக்தி !

    ++++++++++++++++

    “நமது பால்வீதி காலாக்ஸி பக்கத்தில் நெருங்கும் ஆன்ரோமேடா காலாக்ஸியுடன் ஐந்து பில்லியன் ஆண்டுகள் கடந்து மோதப் போகிறது !  (எதிர்பார்க்கப்படும்) அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிக்குப் பிறகு வான மண்டலம் இரவில் எப்படித் தோன்றும் என்பது யாருக்கும் தெரியாது !”

    ஆப்ரஹாம் லோப் வானியல் பேராசிரியர், ஹார்வேர்டு பல்கலைக் கழகம் (Abraham Loeb)

    விண்மீன்களின் மூர்க்கத்தனமான வாயுத் தூசி இயக்க விண்வெளியில் பெரும்பானமையான காலாக்ஸிகள் மோதிக் கொந்தளித்து, ஒற்றை வடிவத்தில் முழுவதும் சேர்ந்து கொள்கின்றன !  பெரிய காலாக்ஸி சிறிய காலாக்ஸியுடன் பின்னிக் கொள்வது பொதுவாக விண்வெளியில் நேரும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே !

    டேனியல் கிறிஸ்ட்லைன் (Daniel Christlein, Astronomer Yale University)

    “காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப் பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங்களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.”  (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    டாக்டர் ஆன்ரூ பங்கர் (Dr. Andrew Bunker Anglo-Australian Observatory)

    “கடந்த பத்தாண்டுகளில் வானியல் விஞ்ஞானம் மூன்று முறைகளில் முற்போக்கு ஆகியுள்ளது. முதலாவது முன்னேற்றம் : விண்வெளியில் வெகு ஆழமாக நோக்கிக் காலாக்ஸிகளின் பூர்வீக நிலையை உளவ முடிகிறது !  வடிவில்லாத வாயுவாக இருந்து பிரபஞ்சம் எப்படிப் படிப்படியாக விருத்தியடைந்து பிரமாண்ட தோரணமாக விரிந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது !  இரண்டாவது முன்னேற்றம் :  பேபி பிரபஞ்சம்  எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு எண்ணிக்கை மிக்கச் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன ! என்ன விதமான கலவைக் கூறுகளைப் (Ingredients) பிரபஞ்சம் கொண்டிருந்தது, எப்படி அது விரிந்து கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.  மூன்றாவது முன்னேற்றம் :  பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது நாம் நோக்கும் இரவு வானம் மிக்க ஆர்வத்தைத் தூண்டும் ஓர் அற்புதக் கொடையாகத் தெரிகிறது !

    ராயல் மார்டின் ரீஸ், வானியல் நிபுணர் (Royal Martin Rees) (Jan 2007)

    ஒளியில்லாத, காலாக்ஸிகள் உண்டாகாத, விண்மீன்கள் தோன்றாத ஒரு பிரபஞ்சத்தைக் கற்பனை செய்து பார்ப்போமா ?  மூல வாயுக்கள் கொந்தளித்து கண்ணுக்குப் புலப்படாத பிண்டத்தில் மூழ்கிய கால வெளிக் கருங்கடல் இது !  பெரு வெடிப்பு நேர்ந்து பேரொளி வீசி ஒருசில நூறாயிரம் ஆண்டுகள் கடந்து பிரபஞ்சம் அரை பில்லியன் வருடங்களாக இருள் யுகத்தில் (Dark Age) மூழ்கிக் கிடந்தது !  அதற்குப் பிறகு ஏதோ ஒன்று நிகழ்ந்து எல்லாமே மாறிவிட்டது !  அந்தப் புதிரான ஒன்று விண்மீன்களை உண்டாக்கியது !  காலாக்ஸிகளைப் படைத்தது !  மேலும் கோள்களை உருவாக்கியது !  புல், பூண்டு, விலங்கினம், மனித இனத்தைப் படைத்தது !  அந்த மகத்தான ஆதிச்சக்தி யாது ?  அகியவியல் புதிரான (Cosmology Puzzle) அந்த மூல காரணியை அறிய பல சிக்கலான கணனி மாடல்களை (Computer Models) விஞ்ஞானிகள் இப்போது வடித்து வருகிறார்கள் !

    ரான் கோவன் (Ron Cowan, National Geographic Magazine)

    “(பரிதிபோல்) கோடான கோடி விண்மீன்கள் கொட்டிக் கிடக்கும் வாயு, தூசி மயமான பால்வீதி காலாக்ஸியில் நாம் வசித்து வருகிறோம் !  சுமார் 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் (நமது காலாக்ஸியை) நெருங்கி வரும் ஆன்ரோமேடா என்னும் காலாக்ஸி அசுர அளவிலும், சுருள் வடிவிலும் (Spiral Galaxy) பால்வீதியை ஒத்துள்ளது !  (இடைவெளியைக்) கணித்து வரும் போது சுமார் 3 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு காலாக்ஸிகளும் மோதிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள் !  அப்படியானால் அந்த நிகழ்ச்சியில் என்ன நேரிடும் ?  பரிதியைப் போன்ற விண்மீன்கள் (ஒவ்வொன்றுக்கும் வலுவான ஈர்ப்புச் சக்தி இருப்பதால்) ஒன்றோடு ஒன்று அவை மோதிக் கொள்ள மாட்டா என்று சொல்லலாம்.  ஆனால் காலாக்ஸிகளின் பூத ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து, சுருள் வடிவைத் திரித்து மாற்றி ஒரு பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு புதிய பெரிய நீள்வட்ட காலாக்ஸியாக (Elliptical Galaxy) உருவாகிவிடும் !”

    ஜான் டொபின்ஸ்கி (John Dubinski, University of Toronto, Canada)

    “பூதக்கணனிப் போலி இயக்கத்தில் (Supercomputer Simulation) நமது பால்வீதி-ஆன்ரோமேடா மோதலை இட்டுப் பார்த்த பல ஊகிப்பு நிகழ்ச்சிகளில் ஓர் எதிர்பார்ப்பு மோதல் காட்சி (Possible Collision Scenario) இது : அந்தக் காட்சி அரங்கில் ஒவ்வொரு சுருள் காலாக்ஸியும் விண்மீன்கள் நிரம்பிய தட்டாக வைத்துச் சுற்றிலும் கோள வடிவுக் கூண்டில் கருமைப் பிண்டம் உள்ளதாக (Disk of Stars Surrounded by a Spherical Dark Matter Halo) எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்தப் போலி இயக்கத்தில் 10 கோடிக்கும் மேற்பட்ட போலித் துகள்கள் (Virtual Particles) இடம் பெற்றன.  பால்வீதி காலாக்ஸி கீழிருந்து மேலே எழுந்தது !  ஆன்ரோமேடா சாய்வாக மேலிருந்து கீழ்நோக்கி நெருங்கியது.  காணப்படும் தளத்தின் அகலம் : ஒரு மில்லியன் ஒளியாண்டு தூரம்.  நிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட காலம் : ஒரு பில்லியன் ஆண்டுகள்.  மோதலின் கொந்தளிப்பில் ஈர்ப்பு விசைகளும், அலையடிப்புகளும் பூமியின் கடல் கொந்தளைப்பு போல் சிக்கலான விளைவுகளை உண்டாக்கி காலாக்ஸியை மாற்றி அமைத்தன !  ஒவ்வொரு காலாக்ஸி விண்மீன்களின் ஈர்ப்பு விசைகளும், கருமைப் பிண்டமும் பின்னி, ஊடுருவி, பெயர்த்து, திரித்து இறுதியில் ஒரு புதிய நீள்வட்ட காலாக்ஸி படைக்கப் பட்டது.”

    கார்டன் மையர்ஸ் (Gordon Myers’ Supercomputer Simulation)

    பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி

    பால்வீதி மந்தையின் மில்லியன் கணக்கான விண்மீன்க¨ளைத் தனது பூர்வீகத் தொலைநோக்கியில் முதன்முதல் கண்டவர் இத்தாலிய விஞ்ஞானி காலிலியோ !  இப்போது பால்வீதி மந்தையில் 200 பில்லியனுக்கும் மேலாக விண்மீன்கள் சுற்றிக்கொண்டு வருகின்றன !  மேலும் பால்வீதியில் பரிமாணம் கூற முடியாத பேரளவில் அகில மீனின வாயும் தூசியும் (Interstellar Gase & Dust) மண்டிக் கிடக்கின்றன.   பூமியிலிருந்து இரவில் வான்வெளியை நோக்கினால் பால்மய வண்ணத்தில் தூரிகையில் வரைந்தால் போல் தெரிவதால் அந்தப் பெயர் அளிக்கப்பட்டது !  சுருள் காலாக்ஸியான (Spiral Galaxy) நமது பால்வீதியின் ஒரு கரமான ஓரியன் வளைவில் (Orion Arm) நமது சூரிய மண்டலம் சுற்றி வருகிறது !

    18 ஆம் நூற்றாண்டில் வானியல் விஞ்ஞானிகளான வில்லியம் ஹெர்செல் அவரது சகோதரி கரோலின் ஹெர்செல் (William Herschel & Caroline Herschel) இருவரும் பல்வேறு விண்மீன்களின் இடைத் தூரங்களைப் பல்வேறு திசைகளில் கணித்தனர்,  பால்வீதி காலாக்ஸி தட்டு போல் அமைந்த விண்மீன் முகில் என்றும் நமது பரிதி பால்வீதி மையத்தில் இருப்பதாகவும் கூறினார்.  1781 ஆம் ஆண்டில் சார்லஸ் மெஸ்ஸியர் (Charles Messier) வான வெளியில் மங்கல் பொட்டு ஒளிகளான (Faint Patches of Light) பல்வேறு நிபுளாக்களை பதிவு செய்து அவற்றை எல்லாம் சுருள் நிபுளாக்கள் (Spiral Nubulae) என்ற வகுப்பில் பிரித்தனர்.  20 ஆம் நூற்றாண்டில் வானியல் நிபுணர் ஹார்லோ ஸேப்லி (Harlow Shapely) கோள் வடிவில் உள்ள விண்மீன் கொத்துக்கள் (Globular Star Clusters) பரவி இருப்பதையும், அவை இருக்கும் தளங்களையும் அளந்து பால்வீதி மந்தையின் மையம், பூமியிலிருந்து 28,000 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்றும், விண்மீன் தோரணங்களான ஸாகிட்டாரியஸ், ஸ்கார்ப்பியோ (Constellations Sagittarius & Scorpio) இரண்டுக்கும் அருகில் உள்ளது என்றும், பால்வீதி மையம் தட்டாக இல்லாமல் ‘ஆப்பம் போல்’ (Pan Cake) நடுவில் தடித்த தென்றும் அறிவித்தார்கள் !

    மெஸ்ஸியர் கூறிய சுருள் நிபுளா பிரபஞ்சத் தீவுகள் அல்லது காலாக்ஸிகள் (Island Universe or Galaxy) என்று பின்னால் ஹார்லோ ஸேப்லி தர்க்கம் செய்தார்.  1942 இல் வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) தனது புதிய மிகப் பெரும் 100 அங்குலத் தொலைநோக்கி மூலம் உளவித் தர்க்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

    பேபி பிரபஞ்சத்தில் நேர்ந்த காலாக்ஸிகளின் மோதல்கள் !

    பிரபஞ்சத்தில் நேரும் காலாக்ஸி மோதல்கள் பலவற்றைக் கண்கவரும் வண்ணப் படங்களில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது !  அந்த ஹப்பிள் படத்தொகுப்பில் (Hubble Atlas) சில காலாக்ஸிகள் மோது கின்றன !  சில காலாக்ஸிகள் பங்கெடுத்துப் பேரளவில் பின்னிச் சேர்ந்து கொள்கின்றன !  காலாக்ஸிகள் முட்டிக் கொள்ளும் போது ஈர்ப்புச் சக்தியால் பாதிக்கப்பட்டுச் சிக்கலான ஒரு புதிய வடிவத்தில் உருவாகி விடுகின்றது.  முதலில் அவை இரண்டும் ஒன்றை ஒன்று சுருள் வடிவத்தில் சுற்றி வருகின்றன !  வாயுவும், தூசியும் பலவிதங் களில் பிணைந்து கருந்துளைகள் தோன்றவும், குவஸார்களைத் (Black Holes & Quasars) தூண்டவும் வழி வகுக்குகின்றன.” (Quasar is a Quasi-Steller Object which appears Starlike but emits more energy than 100 Giant Galaxies).

    காலாக்ஸிகள் பின்னிச் சேர்ந்து கொள்ளும் போது விண்மீன்கள் வெடித்துப் பிறக்கின்றன !  அப்போது நீண்ட வாயு முகில் அலை வால்கள் (Tidal Tails of Gas & Dust) காலாக்ஸிகளைச் சுற்றி முளைக்கின்றன !  காலாக்ஸியில் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளதால் அவை மோதிக் கொள்ளும் போது சிதைவடைவதில்லை.  பூர்வீக காலத்தில் பேபி பிரபஞ்சத்தில் பக்கத்தில் இருந்த காலாக்ஸி களிடையே சேர்ப்புகள், கலப்புகள் பல நூறு மில்லியன் ஆண்டுகளாய் நிகழ்ந்து வந்துள்ளன.  இப்போது வானியல் நிபுணர் சுமார் ஒரு மில்லியன் காலாக்ஸிகளின் மோதலை அருகில் உள்ள பிரபஞ்சத்தில் காண்கிறார்கள்.

    ஆன்ரோமேடா காலாக்ஸி (Andromeda Galaxy or Messier Object # M31) பால்வீதி மந்தைக்கு அருகில் பூமிக்கு அப்பால் 2.2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  பொதுவாக வானியல் நிபுணர் விண்வெளித் தூரங்களை “மெகாபார்செக்ஸ்” (Megaparsecs – Mpc) (One Mpc = 3.26 Million Light Years) (One parsec = 3.26 Light Years = Unit Distance Between Earth & Sun) அளவீட்டில் குறிப்பிடுகிறார்கள்.

    நமது பால்வீதியும் கடந்த பல பில்லியன் ஆண்டுகளாய்ப் பல சிறு காலாக்ஸிகளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துப் பின்னிக் கொண்ட ஒரு சேர்க்கை காலாக்ஸிதான் !  அதுபோல் நமது பூத அண்டை காலாக்ஸி ஆன்ரோமேடா பின்னொரு யுகத்தில் நமது பால்வீதியைப் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்று நம்பப் படுகிறது !  ஆன்ரோமேடா காலாக்ஸி நமது பால்வீதி காலாக்ஸியை மணிக்கு 216,000 மைல் வேகத்தில் (348,000 Km/Hr) நெருங்கி வருகிறது !  இன்னும் 2 பில்லியன் ஆண்டுகள் கடந்து இரண்டும் பூத நீள்வட்ட வடிவத்தில் புதிய காலாக்ஸியாக “மில்கோமேடா”  (Milky Way + Andromeda =Milkomeda) என்னும் பெயரில் நடமாடி வரும் !

    காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரண்டு நிபந்தனைகள்

    ஒன்றை ஒன்று நெருங்கும் இரண்டு காலாக்ஸிகள் சேர்ந்து கொள்ள இரு நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் !

    1.  அவை இரண்டும் பக்கத்தில் இருந்து ஒப்புமை நிலையில் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்து நெருங்கி வரவேண்டும் !

    2.  அவை இரண்டும் ஒப்புமை வேகத்தில் மெதுவாகப் பயணம் செய்து ஒன்றை ஒன்று நெருங்கி வரவேண்டும் !

    காலாக்ஸிகள் வெகு தூரத்தில் இருந்தால் அவற்றின் ஈர்ப்பாற்றல் விசை நலிந்து போய் ஒன்றை ஒன்று இழுத்துக் கொள்ள வலு இருக்க முடியாது.   அவை நெருங்கும் போது விரைவாகச் சென்றால் பற்றிக் கொள்ள முடியாது கப்பல்கள் இரவில் கடப்பது போல் நழுவிச் செல்லும்.

    ஒரே பரிமாணத்தில் இல்லாது வெவ்வேறு அளவில் உள்ள இரு காலாக்ஸிகள் மெதுவாக நெருங்கி வந்தால்,  பெரிய காலாக்ஸி, சிறு காலாக்ஸியைத் தன்வசம் இழுத்துக் கொண்டு தன்னுரு சிதைந்து மாறாமால் பார்த்துக் கொள்கிறது !  அதாவது பெருங்காலாக்ஸி சுருள் காலாக்ஸியாக இருந்தால் அதன் வடிவம் மாறுவதில்லை !

    ஏக அளவுள்ள, ஒரே மாதிரியான இரண்டு காலாக்ஸிகள் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கும் போது, ஒளி வேடிக்கைகள் கிளம்பி ஏராளமான வாயுப் பிண்டம் சிதறி வால்களாய் நீண்டு வெளியே எறியப் படுகின்றன !  பிறகு அவையெல்லாம் ஈர்ப்புச் சக்தியால் வாயு முகிலாய் இழுத்துச் சுருக்கிப் புதிய விண்மீன்கள் பிறக்கின்றன !  அலங்கோலமான கொந்தளிப்புக்குப் பிறகு புதிய காலாக்ஸியில் சீரொழுக்கம் மீண்டும் (Re-order After Chaotic Condition) நிலைபெறுகிறது !

    பால்வீதிச் சீரமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறிந்த விபரங்கள்

    நமது காலாக்ஸி பால்வீதி பல்வேறு சிறு காலாக்ஸிகள் சேர்ந்த ஓர் இணைப்புக் காலாக்ஸியாக விஞ்ஞானிகள் கருதுகிறார்.  பேபி பிரபஞ்சத்தில் முதலில் காலாக்ஸிகள் உருவாகும் போது பலச் சிறு பூர்வாங்க காலாக்ஸிகளைப் (Proto-Galaxies) பின்னிக் கொண்டு வடிவாகின என்று தெரிகிறது.  பால்வீதி காலாக்ஸி முதல் சில பில்லியன் ஆண்டுகளில் 100 உட்பட்ட சிறு பூர்வாங்க காலாக்ஸி களைப் பிடித்து உருக்குலைத்துச் சேமித்து உண்டானது என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  மேலும் கடந்த சில மில்லியன் ஆண்டு களாக 5 முதல் 11 சிறு காலாக்ஸிகளைப் பின்னிக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் சான்றுகள் காட்டுகிறார்.  இம்மாதிரி காலாக்ஸி சேர்ப்புகள் பிரபஞ்ச விண்வெளியில் பெருத்த வான வேடிக்கைகளை நிகழ்த்துவதில்லை என்றும் கவனித்துள்ளார் !

    (தொடரும்)

     ++++++++++++++++++++++++++

     தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Happens When Galaxies Collide ? & Will the Milky Way Merge with Another Galaxy (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine – All About Galaxies [March 2008]
    23 Astronomy Magazine – Our Galaxy’s Collision with Andromeda -5 Billion Years A.D. Our Galaxy’s Date with Destruction By : Abram Loeb & T.J. Cox [June 2008]
    24 Milky Way – Andromeda Galaxy Collision By : John Dubinski (University of Toronto)
    25 Galaxies in Collision (http://spacescience.spaceref.com/

    26 The Merger of the Milky Way & Andromeda Galaxies By : John Dubinski (University of Toronto) (Jan 2001)

    27 On a Collision Course or Uniting as an Intergalatic Super System By : Chee Chee Leung [April 25, 2008]

    ******************

    Share
  • எப்படியும் வாழ்கிறான்!

    மணிமுத்து.

     

    இன்று வழக்கத்தை விட நேரமாகிவிட்டது, ஆகவே மிதிவண்டியை வேகமாக அழுத்திக் கொண்டிருந்தாள் அவள். சிக்னல் கூட தன் பங்கிற்கு உதவி செய்தது அவளுடைய நேரத்தை நீட்டிக்க.

    எனவே சுற்றி இருப்பவர்களிடம் பார்வையை ஓட்டினாள். சுறுசுறுப்பான காலைவேளை என்பதால் அனைவரும் கைகடிகாரத்தை பார்ப்பதும் மீண்டும் சிக்னலையும் பார்த்தபடி இருந்தனர்.

    அருகில் இருந்த ப்ளாட்பாரத்தில் வரிசையாக கடைகளும், செருப்பு தைப்போரும் அமர்ந்திருந்தனர், யாராவது காலில் செருப்பு பிய்ந்திருக்கிறதா என்ற பார்வை அங்கு போவோர் வருவோரின் காலையை தேடிக் கொண்டிருந்தது.

    நல்லவேளை சிக்னல் விழுந்து விட்டது, அப்பாடா என்று கூறிக்கொண்டே சைக்கிளை அழுத்தினாள் அவள்.

    பஸ்நிலையத்தை நெருங்கியதும் அங்கு அமர்ந்து இருந்த ஒருவரிடம் பையிலிருந்த பார்சலை நீட்டினாள். அவனுடைய முகம் எப்போதும் போல் மலர்ந்தது, ஒரு நிமிடம் அந்த முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தவள் நிரந்தரமான சந்தோஷத்தை உண்டாக்க விரும்பினாள்.

    பார்சலை வாங்கியவன் அவளுடைய மிதிவண்டி கடந்ததும் அதிலிருந்த உணவை உண்பதில் முற்பட்டான், அவன் இரு கால்களையும் இழந்தவன்.

    அவனை பார்த்தால் அவள் மனதில் ஏனோ ஒரு பரிதாபம் . எனவே தினமும் அவனுக்கு ஒரு வேளை உணவு அவளுடைய பொறுப்பாய் எடுத்துக்கொண்டாள், அதுவும் அவளுடைய உணவை பாதியாக குறைத்து தான்.

    அவன் பெயர் கோடிஸ்வரன். ஆனால் பெயர் மிகவும் பொருத்தம் தான் என்று அவன் பெயரை கேட்ட போது எண்ணினாள்.

    அவள் பெயர் தீபா. வெளிச்சம் என்ற அர்த்தத்தை எடுத்து கொண்டு யாருக்காவது துன்பம் என்றால், அவளால் முடிந்த உதவி செய்வாள்.

    இவள் கஷ்டம் என்று நினைத்து செய்த பல உதவி கள் இறுதியாக நகைச்சுவையாக முடிந்துவிடும்.

    ஒரு நாள் கடைக்கு சென்றவள் வழியில் ஒரு பாட்டி வாயை அசைத்து கொண்டே இருப்பதற்காக அருகில் பூந்தொட்டியிலிருந்த மண்ணை வாயில் போட, உடனே வீட்டிற்கு சென்று தாயிடம் கூட சொல்லாமல் பத்து ரூபாய்க்கு இரண்டு பீஸ்கட் பாக்கெட்களை வாங்கி அந்த பாட்டியின் கைகளில் திணித்தாள். அந்த பாட்டிக்கு, கண்ணோ அறை குறை, காதோ முழு குறை, எனவே அமைதியாக வாங்கி கொண்டார்.

    பிறகு வீட்டிற்கு திரும்ப, பக்கத்துவீட்டு வாண்டு “YOU ARE GREAT!” என்றது அவளை பார்த்து, உடனே பூரிப்பில் வீட்டிற்கு சென்றாள்.

    தன் தாயிடம் “அம்மா வெளியில ஒரு வயசானவங்களை பார்த்தேன் மா, எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றவள். உடனே தன் மாமாவிடம் தொடர்பு கொண்டு முதியோர் இல்லத்தையே விசாரிக்க சொல்லி விட்டாள்.

    பிறகு தான் தெரிந்தது அந்த பாட்டி பொழுது போகாமல் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று!.

    தாயின் குரல் கோபமாக ஒலித்தது ”அடி பாவி சட்டினி அரைக்க வைச்சிருந்த காசை இப்படி பண்ணிட்டு வந்திட்டியே! இன்னிக்கு ரசத்துல சாப்பிட்டு படு அப்பதான் திருந்துவ என்று!”ஓசை படாமால் மாடிக்கு சென்று விட்டாள்.

    மற்றொரு சமயம், இரண்டு செங்கல் ரோட்டில் கிடக்க தூக்கி தூரப் போட்டாள் அது உடைந்து சிதறியது.

    அப்போது அருகே வந்தவர் “ஏன்மா செங்கல் தூக்க முடியலேனு வைச்சுட்டுப்போன இப்படி உடைச்சிட்டியே எங்கிருந்து வந்து சேர்றிங்க எனக்குன்னு என்று பொறிந்து விட்டு போனார்”.  அவளோ சுற்றிலும் பார்வையை ஒட விட்டாள் “அப்பாடா யாரும் பார்க்கலை!” என்றபடி அங்கிருந்து அகன்றாள்.

    அன்றுடன் அவளுக்கு கடைசி நாள், இனி அவள் வேலைக்கு செல்ல போவது இல்லை எனவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.

    இனி அந்த கோடிஸ்வரனின் ஒரு வேளை சாப்பாடு என்ற எண்ணம் தான் அவள் மனதில். எனவே அன்று அவரிடம் பேசினால் “நீங்க எதாவது வேலை பார்க்கறிங்களா, நான் வேணா எங்க அண்ணன் கிட்ட சொல்லி எதையாவது செய்றேன்” என்றாள். இந்த ஒரு மாதமாக உணவு கொடுத்த மரியாதைக்காக கோடிஸ்வரன் அவளை திட்டவில்லை.

    மெளனமாக மறுத்துவிட்டான். அவளும் இப்பொழுது வெளியூர் சென்றுவிட்டாள். ஆனாலும் கோடிஸ்வரன் வாழ்கிறான், வேறுயாரோருவர் பரிதாபத்துடன் செய்யும் உதவியால்.

    எப்பொழுதாவது பஸ்சில் செல்லும் போது மீண்டும் அவனை சந்திக்க நேரும் “பரிதாப பார்வையை செலுத்திய படி பஸ்ஸுடன் அவளும் நகர்ந்து விடுவாள்”

    வாழ்க்கை இப்படித்தான் என்று பழக்க படுத்தி கொண்டால் மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கும்.

    முயற்சி செய்து பழக்கத்தை மாற்றிவிட்டால் மற்றவர்கள் பரிதாபத்தில் வாழ நேராது.

    begger
    அவள் முயற்சி செய்தால்…
    அவன் வாழ்வதற்கு!
    பரிதாபத்துடன் அல்ல….!

    பரிதாபம் !!!……
    மோசமான வார்த்தை
    மற்றொருவர் சொல்லும்போது கேட்க நேருவது !

    இப்படியும் மனதில் தோன்றும்
    “அவன் என்ன உசத்தி!
    யார் அவனுக்கு உரிமை கொடுத்தா
    என்னை பார்த்து பரிதாபப்பட!..
    ஏனோ இந்த எண்ணம்
    அவனுக்கு மட்டும் எதிர்மறையாக அமைந்துவிட்டது!

    Share
  • அவள் அப்படித்தான்

    ஆர்.எஸ் கலா.

    IMG_148177015739141

    வாணி… கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை
    கூடி விளையாடுவதோ ஏழை வீட்டு பசங்களுடன்
    அதட்டிப் பார்த்தார் தந்தை பரமசிவம்
    அடித்துப்பார்த்தாள் தாய் பாக்கியம்
    தன் மகள் மாறவில்லை பிடிவாதம்
    கொண்ட சிறுமி அவள்.

    சரி விட்டு விடுவோம் வளர்ந்ததும் ஏழை பணம்
    என்ற வேற்றுமை அறிந்து நிறுத்தி விடுவாள்
    என்று முடிவு செய்த பெற்றோர் மௌனம்
    காத்தனர். ஆனால் வாணி மாற வில்லை.
    அவள் வளர்வது போல் அவள் பரிவும்
    பாசமும் ஏழைகள் மேல் வளர்ந்தே வந்தன.

    பகட்டு வாழ்வை வெறுத்தாள்
    நாகரீக உடையை நிராகரித்தாள்
    சமுதாய சிந்தனையில் தினமும் முழ்கிப் போனாள்
    நாகரீக உச்சியில் நின்று ஆடும்
    பெற்றோருக்கு ஏமாற்றம் அதிகம்தான்
    மிஞ்சியது.

    பல தரப்பட்ட பட்டப் படிப்புக்களைப்
    படிக்கச் சொல்லி அவர்கள் கேட்டுக் கொண்டும்
    வாணி அதை ஏற்றுக் கொள்ளாது தமிழ்
    ஆசிரியராக வர வேண்டும் என்னும் இலட்சியத்தில்
    படித்து இறுதி ஆண்டு பரீட்சையும் எழுதி விட்டாள்
    தற்போது வீட்டிலேயே இருந்தாள் பரீட்சை
    முடிவு வரும் வரை.

    பெற்றோர் ஏதேதோ நாட்டின்
    பெயர்களை கூறி அழைத்தனர்
    அழகை ரசிக்க வரும் படி அதை எல்லாம்
    மறுத்து விட்டு தன் தோழியுடன் பேசி
    ஒரு முடிவுக்கு வந்தாள். தான் வீட்டில்
    இருக்கும் வரை அந்த நாளை ஒரு
    நல்ல முறையில் கழிக்க விரும்பிய வாணி
    தன் தோழி ராணியிடம் கேட்டாள்.

    நீயும் நானும் மண்டபம் சென்று அங்கே உள்ள
    இலங்கை அகதிகளின் மழலைகளுக்கு
    பாடம் கற்றுக் கொடுப்போமா தங்கும்
    விடுதியில் தங்கி, செலவுகள் அத்தனையும்
    என்னுடையது என்றாள். ராணி ஏழை வீட்டுப்பிள்ளை
    ஆனால் அறிவாளி அவளும் ஒப்புக்
    கொண்டாள்.

    இருவரும் புறப்பட்டனர் வாணியின்
    பெற்றோர் பாரட்ட மனம் இன்றி முறைத்தனர்
    கண்டு கொள்ள வில்லை சென்று விட்டாள் வாணி
    மண்டபத்தை அடைந்ததும் அங்கே உள்ள அகதிகளின்
    பார்வை பல கேள்விகளை எழுப்பியது அவர்கள்
    இருவரும் தங்களை அறிமுகம் செய்ததும் சில
    பெற்றோர் கண்ணீர் சிந்திய படியே நன்றி கூறினர்.

    தங்கள் பிள்ளைகளும் நாலு எழுத்து கற்றுக்
    கொள்ளப்போவதை எண்ணி.
    ராணி வாணி இருவரின் இதயமும் கனத்தன
    அன்று முதல் ஆசிரியர்களானார்கள்
    அகதி மழலைகளுக்கு கண் மூடி திறப்பதுக்குள்
    மூன்று மாதம் ஓடி மறையவே விடை பெற வேண்டிய
    கட்டாயம் .

    மழலைகளின் அன்பில் நனைந்த அவர்களின்
    கண்களும் கலங்கின அகதிகளின் அன்பையும்
    கண்டு பெருமிதம் கொண்ட வண்ணம் வீட்டை
    வந்து அடைந்தார்கள். வீட்டில் பல உறவுகள்
    இருப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்
    அவர்கள் ஆங்கில மொழியில் நலம்
    விசாரித்தனர் வாணி அழகாய் தமிழ்
    மொழியில் வணக்கம் நான் நலம் என்றாள்.

    உறவுகளின் முகம் சற்று மாறியது வாணியின்
    பெற்றோர் சமாதானம் செய்தனர் அவள் அப்படித்தான்
    தமிழ் பற்று அதிகம் என்றனர் இவைகளை கண்டு
    கொள்ளாமலே தன் அறையின் உள்ளே நுழைந்த
    வாணி தன் மடி கணினியைத் தட்டுகிறாள்
    அரசு பாடசாலைக்கு தமிழ் ஆசிரியர் விண்ணப்பம்
    கொடுக்க தயாரானாள், அவள் மாறமாட்டாள்
    அவள் அப்படித்தான் வாழ்க்கை எல்லை வரை
    இருப்பாள் இது உறுதி…!

    கவிக்குயில் ஆர் எஸ் கலா
    மலேசியா

    Share
  • உன் மேலே கொண்ட ஆசை….

    காவிரி மைந்தன்

    காதல் ஜோதி திரைப்படத்திற்கான கதை பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களுடையது!  இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு சுப்பு ஆறுமுகம் பாடல் எழுதியிருக்கிறார் என்பது சுவையான தகவல்! அதிலும் இளம்பெண் விதவையாகிறபோது.. அவளுக்கு மீண்டும் வாழ்வுதர.. மனைவியாக ஏற்க..  நாயகன் தன் கருத்தை வெளிப்படுத்துவதாய்..

    unnamed

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாலென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

    அவளுக்கு ஏற்கனவே அமைந்த வாழ்வு நீடிக்கவில்லை! மஞ்சள் குங்குமம் நிலைக்கவில்லை!  கன்னிப்பெண் போகாட்சி தரும் அவள்  வாழ்வு  முடிந்ததாய்கருத வேண்டியதில்லை  என்கிற பகுத்தறிவுக்  கருத்தைத்  தன்  பாடல்  வரிகளிலும் முத்திரை பதித்தாற்போல்  பதித்திருக்கிறார்!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    unnamed (1)

    தன் இனத்தின் தலைவன் என்று பேரறிஞர் ஏற்றுக்கொண்ட வெண்தாடி வேந்தர் பெரியாரை நினைவூட்ட ஈரோட்டையும்.. தான் பிறந்த காஞ்சியைநினைவூட்ட அங்கே பிரபலமான சேலையையும் இணைத்து பாட்டுவரிக்குள் புகுத்திவைத்த பக்குவம் தெரிந்த பண்பாளர்.. நம் அண்ணாவன்றோ?

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    நடிகர் ரவிச்சந்திரன் கையில் ஒரு டேப்பை வைத்துக்கொண்டு சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடும்போது.. நமக்கே  அவ்விருவர் சேர்ந்துவிடக் கூடாதா என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது!

    தத்ரூப நடிப்பால் ரவிச்சந்திரனும் M. பானுமதியும்  (தொலைக்காட்சிப்புகழ்) இப்பாடல் காட்சியை மெருகூட்டியிருக்கிறார்கள் என்றால் அதுமிகையில்லை!  இசையில் நம்மை கட்டி இழுத்துவைக்கிறார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி

    உன் மேலே கொண்ட ஆசை…

    உன் மேலே கொண்ட ஆசை..

    உத்தமியே மெத்த உண்டு

    சத்தியமா சொல்லுறேண்டி தங்கரத்தினமே!

    தாள முடியாது கண்ணே பொண்ணுரத்தினமே..

     

    சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிபோல்

    முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே!

    மூணுமுடிச்சு போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே!

    நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

    மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

    என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

    ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

    காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

    தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே!

    கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாளென்ன..

    கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

    நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

     

    https://www.youtube.com/watch?v=SXDzICClM4U

    Share
  • தாய்மை

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    24653
    மன்மதன் கரந்தனில்
    தாய்மையின் வில்
    ரதிதேவி வரமிட்டாள்
    தாய்மையே வெல்..!

    தாயுமானவன் அவன்
    விதைத்த வித்துக்கள்
    புவியெங்கும் பூ
    மரங்களாகி விதை தூவி
    தாய்மைக்கனி தாங்கி
    புவிதாங்கும் சுமைதாங்கி..!

    கார்மேகம் தாங்கும் மழைநீராக
    மங்கையரின் மனந்தனில்
    தாய்மை உறங்கும்..!

    பெற்றெடுத்துத் தாயான
    நிமிடம் முதலாய் தியாகத்தின்
    உறைவிடமே தாய்மை..!

    பெண்மையின் பூரணம்
    தாய்மையே தலையாயம்
    தேசம் கடந்தும்
    புரியும் தாய்மொழி ..!

    அன்பின் முகவரி
    அன்னையே
    தராசு முள்ளென
    தாய்மைக்கு
    ஆண் பெண்
    பேதங்களில்லையே..!

    ஏங்கும் மனமெங்கும்
    தாய்மையின் சங்கமம்
    பெண்ணவளின் கடமைகளுள்
    தாய்மையே குங்குமம்..!

    தன் பசி துறந்து
    பெற்ற மக்களின் வயிறு
    நிறைக்கும் அட்சய பாத்திரம்..!

    ஆயிரம் ஜென்மங்களும்
    நீயே எந்தன் தாயாக வேண்டும்
    வேண்டும் மனம் தான்
    தாய்மையின் வெற்றி…!

    இறைவனின் பிரதிநிதியாகி
    வீட்டுக்கு வீடு
    வாழும் காமதேனு..!

    தாய்மைக்கில்லை
    வேலியும் விலங்கும்
    நஞ்சையும் அமுதையும்
    சமமாக்கி நிறுத்தும்
    துலாக்கோல் தாய்மையே ..!

    பூலோகப் உயிரினங்களுக்கு
    இறைவன் கொடுத்த
    உயிர் உரம் தாய்மை….!

    தாய்மை ஒரு வரம்
    அதுவே மங்கையரின்
    சிந்தாமணி மகுடம்..!

    ஏழ்மையிலும் தாய்மை
    பெருமையையே தாங்கும்
    ஊமை நெஞ்சங்களும்
    தாய்மைக்கே ஏங்கும்..!

    உருவைத் தாங்கி உணர்வில் ஏங்கி
    உயிரை வைத்து உயிரைப் பிரித்து
    வாழும் அதிசய அன்னம்….அம்மா..!

    ஆயிரம் கோடி யுகங்கள்
    பிறந்தாலும் அழிந்திடாது
    வளரும் உறவு தொப்புள்கொடி..!

    ஜனன மரண கணக்குக்குள்
    விடையாக விதையாகி
    மறைந்து மலரும்
    தாய்மைக் கிளைகள்..!

    காந்தம் மட்டும் ஈர்ப்பதில்லை இரும்பை
    தாய்மையின் காந்தமும்
    இளக்கும் இரும்பு மனத்தை..!

    தாய்மை என்றொரு பிம்பம்
    மனித இதயங்களின் பிரதிநிதியாய்
    பேதங்களின்றி அழகு காட்டும்
    மாயக் கண்ணாடி..!

    தாய்….அன்பின் ஆதிக்கத்தால்
    உள்ளம் நிறைத்து
    அள்ளிக் கொடுக்கும்
    அன்புச் சுரங்கம்…!
    இதயங்கள் ஒட்டி
    உறவாடும் நந்தவனம்..!

    எல்லையில்லா அன்பு கொண்டு
    அன்னையாய் நிற்பவள்
    தாய்மையின் வாஞ்சையால்
    பிரபஞ்சத்தையும் வசமாக்குவாள்
    பராசக்தி வடிவானவள்
    இப்பரத்தில் தாய்மையே வெல்லும்….!

    ஜெயஸ்ரீ ஷங்கர்
    ஹைதராபாத்

    Share
  • வெண்பாக்கள்

    VSP (வெத்திலை ,சீவல் ,புகையிலை) வெண்பா….

    Image0720

    “வெற்றிலை பச்சைமால் , வெள்ளைசுண் ணாம்புசிவம்
    முற்றியபாக் கேநான் முகனாராம் -உற்றிட
    தாம்பூ லவாய்சிவக்கும் தாயம்பாள் வண்ணத்தில்;
    பான்முலம் பேரின்பம் பார் “….

    “மாலே டிகாக்ஷனாம் மையிருள் வண்ணத்தில் ,
    பாலோ அரனின் பளிச்வெண்மை, -நாலும்
    படவுலகைப் பார்ப்போன் பிரவுன் சுகராம்;
    கடவுளைக் காப்பியில் காண்”….கிரேசி மோகன்….

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 48

    சு. கோதண்டராமன்.

    வேதம் – மனித குல வரலாறு

    619px-Rigveda_MS2097

    வேதம் அநாதி, அதாவது அது உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. வேதத்தை ஒரு நூல் என்று கருதினால் அதை அநாதி என்று கூற முடியாது. மனித இனம் தோன்றி நாகரிகம் வளர்ந்து மொழி வளர்ந்து அதற்கு இலக்கணம் ஏற்பட்ட பிறகு தான் வேதம் இயற்றப்பட்டது.

    ஆனால் வேறு ஒரு வகையில் வேதத்தை அநாதி என்று கூறலாம். இது அநாதி காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதை விவரிக்கிறது. மனித குலம் ஏற்பட்டு நாகரிகம் வளராத காலத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனுக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய நிலையைக் கூறுகிறது. வழிபாட்டு முறை ஏற்பட்ட காலத்தைத் தெரிவிக்கிறது. எனவே வேதத்தைப் பிரபஞ்ச வரலாற்றுச் சுவடி என்று கூறலாம். விரிவாகப் பார்ப்போம்.

    ரிக் 10 வது மண்டலம் 129வது சூக்தம் நாஸதீய சூக்தம் எனப்படுகிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory) ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வினால் அறிந்து சொன்னது நமக்குப் பெரு வியப்பைத் தருகிறது. அங்கு தெளிவில்லாத இருளான சூன்யம் மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

    அப்பொழுது இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை. காற்று இல்லை, வானமும் இல்லை. எது எதை மூடியிருந்தது? எங்கே மூடியிருந்தது? ஆழம் காண முடியாத நீர் இருந்ததா?

    மரணம் இல்லை, மரணமின்மை இல்லை. இரவையும் பகலையும் பிரிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. மூச்சில்லாத ஒன்று தன் சொந்த வலிமையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

    இருட்டு இருந்தது. அது இருளால் மூடப்பட்டிருந்தது. எல்லாமே இனம் புரியாத அந்தகாரம். இருந்ததெல்லாம் சூனியம். எதற்கும் உருவமில்லை. தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

    அதன் பின் இச்சை பிறந்தது. அதுவே மனதின் முதல் விதை. தங்கள் இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டார்கள்.

    ஒளி பக்கவாட்டில் பரவியது. அதற்குக் கீழே என்ன இருந்தது? மேலே என்ன இருந்தது? வலிமையுள்ள அவர்கள் தோற்றுவிப்போர் ஆயினர். சுதந்திரச் செயல் கீழேயும் சக்தி மேலேயும் இருந்தது.

    இதை உண்மையில் அறிந்தோர் யார்? இதைக் கூறவல்லோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? எங்கிருந்து இந்த சிருஷ்டி வந்தது? தேவர்கள் சிருஷ்டிக்குப் பின் தோன்றியவர்கள். எனவே அவர்களாலும் இதைச் சொல்ல முடியாது.

    படைப்பின் முதல்வனாகிய அவன் எல்லாவற்றையும் படைத்தானா? அல்லது அவன் படைக்கவில்லையா? அவனது கண் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. அவனும் அறிவானோ மாட்டானோ?

    (இருள் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக விரிவடைகிறது. ஒரு காலத்தில் மீண்டும் சுருங்கத் தொடங்கி மீண்டும் இருள் புள்ளி நிலையை அடைகிறது. இவ்வாறு மாறி மாறி விரிதலும் சுருங்குதலும் ஏற்படுவதை வேத இலக்கியம் கூறுவதாக விவேகானந்தர் கூறுகிறார். ரிக் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக என் கண்ணில் படவில்லை.)

    பெரு வெடிப்புக்குப் பிறகு எல்லாமே விரைவில் நடந்தேறின. நிலம் உண்டாயிற்று. உயிரினங்கள் தாவரங்கள் தோன்றின. மனிதன் தோன்றினான். மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தான். இந்நிலையில் அவனது வாழ்வில் பெரும் மாறுதலைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனிதன் தீயைக் கண்டுபிடித்த அந்த நிகழ்ச்சி மனித குல வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். அது பற்றி வேதம், மாதரிச்வான் என்னும் காற்று ப்ருகுவிடம் அக்னியைக் கொண்டு வந்து கொடுத்தது, ப்ருகவர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டத் துவங்கினர் என்று கூறுவதிலிருந்து கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

    கற்களை எறிந்து மிருகங்களை வீழ்த்தும் அறிவில் மட்டுமே மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டிருந்த காலம் அது. வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

    அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

    தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

    மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.

    பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

    கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

    த்வஷ்டா என்பவர் மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். ரிபு சகோதரர்கள் அதைச் சீர்திருத்தி மெல்லிய ஆனால் உறுதியான மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். வேதத்தில் இவர்கள் போற்றுதலுடன் நினைக்கப்படுகின்றனர்.

    மனித குல வரலாற்றின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியில் அங்கிரஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

    அங்கிரஸ் காலத்துக்கு முன்னரே மனிதர்கள் இயற்கையை உற்று நோக்கி அதில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதையும், மனிதனுக்கென்று ஒரு ருதம் இருப்பதையும் அறிந்து கொண்டனர். அங்கிரஸும் அந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தார். ஆனால் அவரது சிந்தனை இதைத் தாண்டி அப்பால் சென்றது. இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டு இருப்பது யார் எனச் சிந்தனை செய்தார். அவரது கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து ஆராய்ந்தனர். பல மாதங்கள் தவம் செய்தனர். ஒரு கூட்டம் ஒன்பது மாத முடிவில் கண்டு பிடித்த உண்மையை மற்றொரு கூட்டம் பத்து மாதத்தில் தெரிந்து கொண்டது. அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள்?

    ருதத்தை இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதற்கு தோற்றம் இறுதி இல்லை என்பது தான் அவர்கள் கண்ட உண்மை. அது என்றைக்கும் இருப்பது என்னும் பொருளில் அதற்கு ஸத் என்று பெயரிட்டனர். இப்படியாக அவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைந்தனர். அந்த ஸத்யத்தை வழிபட்டால் ஆனந்தம், கால உணர்வற்ற அமரத்துவ நிலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர். அதைச் சாமானிய மனிதர்கள் அடைய முடியாது தடுக்கும் தீய சக்தி எது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.

    நமக்கு உரிமையான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் யாரோ திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே எனச் சிந்தித்தனர். கடைசியில் நம்முடைய மனம் தான் நமக்கு எதிரி. நம்முடைய மனதில் உள்ள பகைவர்களை அழித்தால் ஆனந்தமாகிய பசுக்கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என அறிந்தார்கள். அந்த ஸத்தியத்தைத் தியானம் செய்யுங்கள் என்று சொன்னது அங்கிரஸ் கூட்டத்தினர் மனித குலத்துக்குச் செய்த ஒரு பேருபகாரம். வழிபாட்டின் சிறப்பை முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அங்கிரஸ்கள் என்கிறது வேதம். 10.67.2

    கண்ணுக்குத் தெரியாத ஸத்தியத்தைத் தியானம் செய் என்றால் அது எல்லோராலும் சாத்தியமா? அந்த நிலையில் தான் மனிதர்களுக்குத் தெய்வத்தைத் தொழுவதற்கான ஒரு எளிய முறையைக் கண்டுபிடித்த அதர்வன் தோன்றினார். அவர் தான் யக்ஞம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர். அக்னியைக் கண்ணால் பார்க்கலாம். மற்ற தேவர்களைக் கண்ணால் காண முடியாது. எனவே மற்ற தேவர்களுக்கான உணவை அக்னியில் சேர்த்து விடுங்கள். அவர் அதை அந்தந்தத் தேவர்களிடம் சேர்த்து விடுவார் என்று சொன்னார். தேவர்கள் பலரானாலும் எல்லோரும் ஒரே ஸத்யத்தின் பிரதிநிதிகள் தானே. அதனால் ஸத்தியத்தைத் தொழ விரும்பினால் உங்களுக்குப் பிடித்த தேவருக்கு அக்னி மூலமாக அவியுணவைக் கொடுத்து வழிபடுங்கள் என்று விளக்கினார். வேள்வி பிறந்தது.

    ப்ருகு, அங்கிரஸ், அதர்வன் ஆகிய இந்த முப்பெரும் மனித குல முன்னோர்களும் வேதத்தில் பல இடங்களில் போற்றப்பட்டு இன்றும் நம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படுகிறார்கள்.

    தர்ப்பணத்தின்போது இரண்டாவது ரிக்காகச் சொல்லப்படும் மந்திரம் இதற்கு ஓர் உதாரணம்.

    எங்கள் முன்னோர்களாகிய, ஒன்பது மாதம் தவம் செய்த அங்கிரஸ்கள், அதர்வாணர்கள், ப்ருகுக்கள் ஸோமபானம் தந்து வழிபடுவதற்கு உரியவர்கள். போற்றத் தகுந்த அவர்களது நல்லாசிகளில் நாம் வாழ்வோமாக. 10.14.6

    அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் யக்ஞியானாம் அபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம: 10.14.6

    இவ்வாறு பிரபஞ்சத் தோற்றம், தீயைக் கண்டுபிடித்தது, பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது, வேள்வி மூலம் வழிபடும் முறையை ஏற்படுத்தியது ஆகிய மனித நாகரிக வளர்ச்சியின் சில முக்கிய மைல் கற்களைத் தொட்டுக் காட்டும் வேதத்தை மனித குல வரலாற்றுச் சுவடி என்று சொல்வது பொருத்தமே.

     

     

    படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(143)

    — சக்தி சக்திதாசன்.

     

    val143
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் இளமாலைப் பொழுதினிலே உங்களுடன் மடலூடாக உறவாட உட்கார்ந்து கொண்டே முன்னே இருக்கும் சாரளத்தினூடாகப் பார்க்கிறேன்.

    இங்கிலாந்தின் காலநிலையின்படி மார்ச் மாதக் குளிர் தனக்கேயுரித்தான சில்லென்ற குளிரை வீசினாலும் கதிரவனும் தன் ஒளிக்கதிர்களை அள்ளி வீசிக்கொண்டுதானிருக்கிறான்.

    வாயிற்கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினால் குளிருமோ எனும் அச்சத்தில் வீட்டினுள் கதகதப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் எனும் நினைப்பில் அழகான ஒரு நாளை அனுபவிக்காமல் விட்டு விடுபவர்களில் சிலசமயங்களில் நானும் அடங்குவேன்.

    இன்று என் சிந்தையில் இப்படி எத்தனை நாட்களை தவற விட்டு விட்டேன் ! ஐயைய்யோ ஜம்பதுகளின் அடிப்பகுதிக்கு வந்து விட்டோமே இந்த அழகான நாட்கள் வாழ்க்கையில் இனி குறைந்து கொண்டே போகுமே ! எனும் ஒருவகை அச்சம் குடி கொண்டிருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

    பொதுவாக நம் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் காரியங்களைத் தள்ளிப் போடுவதேயாகும்.

    இப்பழக்கத்தினால் நாம் எத்தனையோ நாட்களின் அருமையை உணர்ந்து கொள்ளாமல் அது அப்படியே நம்மைக் கடந்து செல்ல விட்டிருக்கிறோம்.

    உண்மையில் வாழ்க்கையில் நாம் சுகமாக கண்விழிக்கும் ஒவ்வொருநாளுமே நமது வாழ்க்கையில் ஒரு உன்னதமான நாள் என்பதை உணரத் தவறி விடுகிறோம்.

    ஒரு சிறிய கதை ஒன்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் சிறிய ஒரு நிகழ்வை உருவாக்கிக் காட்டுகிறார். அந்நிகழ்வு அவரின் ஒன்று விட்ட அக்காவின் வாழ்க்கையில் நிஜமாக நடந்தது என்று விவரிக்கிறார்.

    அவரை விட பத்து வயது மூத்தவரான அவரது ஒன்று விட்ட அக்கா மிகவும் கெட்டிக்காரியானவர். அவர் நன்றாகப் படித்து முன்னேறியவர். ஒரு பெரிய கம்பெனியின் பிரதான நிர்வாக இயக்குனராக பதவி வகித்தார்,

    திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது அல்ல எனும் நிலைப்பாட்டில் தனக்கு மனதுக்குப் பிடித்தவருடன் மேலைநாட்டு வழக்கப்படி ஒன்றாகக் குடித்தனம் நடத்தி வந்தார்.

    திடீரென ஒருநாள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். சரியாக அவர் இறந்து மூன்று நாட்களின் பின்னர் அவரது பிரிவால் வாடிய அவரது வாழ்க்கைத் துணைவர் (கணவரல்ல) அவரது அறையிலிருந்த பொருட்களை பார்த்து தன் துணையின் பிரிவை ஆற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவர் கையில் ஒரு அழகிய பரிசுப் பெட்டியினுள் பெண்கள் அணியும் அழகான பட்டு ஸ்கார்ப் ஒன்று அகப்பட்டது.

    ஆமாம் அது அவ்வாழ்க்கைத்துணைவரால் அவரது துணைவியாருக்கு 7 வருடங்களின் முன்னால் பரிசளிக்கப்பட்டது. அதை துணவர் பரிசளித்த போது அதைக் கண்டு மகிழ்ந்த அந்த மறைந்த பெண்மணி அதன்மீது அளவில்லாத பற்றுக் கொண்டு அதனை அணைத்தபடி தூங்கி விட்டு இதை ஒரு சிறப்பான நாளில் தான் அணிந்து கொள்வேன் என்று என்று சொன்னார்.

    ஏழுவருடங்களுக்குப் பின்னர் சொன்ன அந்தப் பெண்மணி மறைந்து போனார், ஆனால் அந்த ஸ்கார்ப் . . . . அணியப்படாமலே இருந்தது..

    அப்படியாயின் அந்தப் பெண்ணின் வாழ்வினில் கடந்த ஏழுவருடங்களில் எந்த ஒரு நாளுமே சிறப்பான நாளாக இல்லை என்றாகி விட்டது இல்லையா ?

    அன்பினிய வாசக உள்ளங்களே நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுமே இறைவனால் நமக்குத் தரப்பட்ட சிறப்பான பரிசாகும். வாழ்க்கை நம் எல்லோருக்கும் எப்போதும் நியாயமானதாக இல்லாதிருந்தாலும் மனவருத்தம், தடைகள் , முட்டுக்கட்டைகள் என்பன எமது வாழ்க்கைத் திட்டங்களையும், ஒவ்வொருநாளையும் அதற்கேயுரிய கெளரவத்துடனும் அனுபவிப்பதை தடை செய்ய அனுமதிக்கக் கூடாது.

    நமது நிலை மீது நாமே பரிதாபம் கொள்ளும் மனப்பான்மை என்றுமே நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லாது. முக்கல்களும், முனகல்களும் எப்போதும் வெற்றியின் சந்தர்ப்பங்களை பயமுறுத்தித் துரத்தி விடும்.

    எப்போதும் நாம் மகிழ்ச்சிகரமான நாளைத் தேடிக்கொண்டு இன்றைய நாளைத் தொலைத்து விடுவதில் வல்லவர்கள்.

    வாழ்க்கை நம்மீது வீசும் சவால்களை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அவைகளை நமக்குச் சாதகமான வழியில் மாற்றிக் கொண்டு வாழ்வதே புத்திசாலித்தனமான செயலாகும். நமது ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அதனை நாம் செப்பனிடும் விதத்திலேயே தங்கியுள்ளது.

    நமது பொறுப்புகளை நாம் தட்டிக் கழித்துக்கொண்டு விதி, சந்தர்ப்பம், சூழ்நிலை எனும் பொய்க்காரணங்களின் மீது பழியைப் போட்டுவிட்டு எமது இயலாமையை மறைத்து விடுவதில் நாம் அனைவரும் திறமைசாலிகளே !

    வாழ்வில் நாம் உயிருடன் வாழும் ஒவ்வொருநாளும் சிறப்பான நாட்களே ! எனது உற்ற நண்பன் ஒருவன் அடிக்கடி எனக்குக் கூறுவது ” சீரற்ற காலநிலை என்று ஒன்று இல்லை அக்காலநிலைக்கு உகந்தவாறு நாமணியும் உடை சீரற்று இருப்பதால் தான் காலநிலை நம்மைப் பாதிக்கிறது “

    என் ஜன்னலின் வழியே நான் கண்ட பகல் பொழுது என் மனதில் விரித்த சிந்தனை எனும் தாமரையில் துளிர்த துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    அடுத்தவாரம் சந்திக்கும் வரை கிடைக்கும் ஒவ்வொருநாளையும் இறுகப்பற்றி மகிழ்வுடன் வாழுங்கள்.

    val143.1
    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share