crazy


”பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாயில்
முகுந்தனுக்கு முப்பத்தி ரெண்டு”…

”இல்லா ததைத்துரத்தி செல்லா ததைச்சேர்த்து
பொல்லா தவனென்ற பேர்வாங்கி -நில்லாது
விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழாது
விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….

”காமியானாய் ராதைக்கு நேமியாவோய் ராட்சசர்க்கு
பூமியாவாய் போற்றும் அடியார்க்கு -மாமியானாய்
சாமிநாத ஸ்வாமிக்கு(வேலர்க்கு), நாமிருவர் சந்தித்தால்
ஏமிரா நீயார் எனக்கு”…

”கண்ணபிரான் காயாம்பூ வண்ணபிரான் வெண்ணைமண்
தின்னபிரான் நற்கீதை சொன்னபிரான் -பின்னமுறான்
முன்னவனாம் தென்மதுரை அன்னையவள் அண்ணனையே
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு”….

”கவிதை வருவது கண்ணன் அருளா ?
செவியுண்ட செய்யுள் செயலா ?-புவியத்தா
காவிய வாழ்க்கையா? கைவல்ய வேட்கையா?
சாவியுன் கையில் செப்பு”….

”பெற்றதோர் வெற்றி பொறாமைக் கிடமாகும்
உற்றிடும் தோல்விக்கோ கேலிமிஞ்சும் -பற்றிலாது
காரியம் யாவையும் காரணன் கண்ணனின்
பேரினில் போடப் பழகு”….

”பொய்கையில் பூத்தபக்தி பூதமதைக் காத்தது
பொய்கலந்த போதுபேய் ஓட்டியது -தெய்வமே
மூன்றாழ்வார் மீதமுள்ள சான்றோர்கள் போலாக
தான்தோன்றி மாலே தயவு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.