உன் மேலே கொண்ட ஆசை….

காவிரி மைந்தன்

காதல் ஜோதி திரைப்படத்திற்கான கதை பேரறிஞர் அண்ணாத்துரை அவர்களுடையது!  இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் காட்சிக்கு சுப்பு ஆறுமுகம் பாடல் எழுதியிருக்கிறார் என்பது சுவையான தகவல்! அதிலும் இளம்பெண் விதவையாகிறபோது.. அவளுக்கு மீண்டும் வாழ்வுதர.. மனைவியாக ஏற்க..  நாயகன் தன் கருத்தை வெளிப்படுத்துவதாய்..

unnamed

கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாலென்ன..

கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

அவளுக்கு ஏற்கனவே அமைந்த வாழ்வு நீடிக்கவில்லை! மஞ்சள் குங்குமம் நிலைக்கவில்லை!  கன்னிப்பெண் போகாட்சி தரும் அவள்  வாழ்வு  முடிந்ததாய்கருத வேண்டியதில்லை  என்கிற பகுத்தறிவுக்  கருத்தைத்  தன்  பாடல்  வரிகளிலும் முத்திரை பதித்தாற்போல்  பதித்திருக்கிறார்!

நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

unnamed (1)

தன் இனத்தின் தலைவன் என்று பேரறிஞர் ஏற்றுக்கொண்ட வெண்தாடி வேந்தர் பெரியாரை நினைவூட்ட ஈரோட்டையும்.. தான் பிறந்த காஞ்சியைநினைவூட்ட அங்கே பிரபலமான சேலையையும் இணைத்து பாட்டுவரிக்குள் புகுத்திவைத்த பக்குவம் தெரிந்த பண்பாளர்.. நம் அண்ணாவன்றோ?

ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

நடிகர் ரவிச்சந்திரன் கையில் ஒரு டேப்பை வைத்துக்கொண்டு சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடும்போது.. நமக்கே  அவ்விருவர் சேர்ந்துவிடக் கூடாதா என்கிற எண்ணம் தோன்றிவிடுகிறது!

தத்ரூப நடிப்பால் ரவிச்சந்திரனும் M. பானுமதியும்  (தொலைக்காட்சிப்புகழ்) இப்பாடல் காட்சியை மெருகூட்டியிருக்கிறார்கள் என்றால் அதுமிகையில்லை!  இசையில் நம்மை கட்டி இழுத்துவைக்கிறார் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி

உன் மேலே கொண்ட ஆசை…

உன் மேலே கொண்ட ஆசை..

உத்தமியே மெத்த உண்டு

சத்தியமா சொல்லுறேண்டி தங்கரத்தினமே!

தாள முடியாது கண்ணே பொண்ணுரத்தினமே..

 

சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிபோல்

முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே!

மூணுமுடிச்சு போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே!

நேற்று நீ போட்ட கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சு

மாக்கோலம் போட்டுக்கலாம் தங்கரத்தினமே!

என்னை மச்சான்னு கூப்பிடடி பொண்ணு ரத்தினமே!

ஈரோட்டுச் சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்குசேலை தங்கரத்தினமே

தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே!

கனவிலே வந்தவளே.. கதவுதாண்டி வந்தாளென்ன..

கதையாகப் போக வேணாம்.. தங்கரத்தினமே

நானே கதவாகத் துணையிருப்பேன் பொண்ணு ரத்தினமே!!

 

https://www.youtube.com/watch?v=SXDzICClM4U

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *