Blog

  • மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” கதை

    —  பிச்சினிக்காடு இளங்கோ.

    அண்மையில் என் கைக்கு ஒரு கனமான கதை கிடைத்தது. நான் படித்ததும் என்னை அழவைத்த கதை அது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஒளவையின் வாய்மொழியில் கதையின் தலைப்பைக்கொடுத்தது நுண்ணறிவின் எடுத்துக்காட்டு. அப்பொழுதுதான் அதன் கனத்தை, உட்பொருளை உணர உணர வலி அதிகமானது.

    சாதி என்னும் பேய் இன்னும் நம்மை விடுதலைசெய்யவில்லை. நாமும் விடுதலைபெறவில்லை. ஆனால் அன்றைக்கு அதற்கு விடுதலை தேடிய காலகட்டத்தில் ஒரு கருவியாக இந்தக்கதை அமைந்திருக்கிறது. மனதைப்பரிமாறிப் பழகும் நெஞ்சங்கள் சாதியைப்பார்ப்பதில்லை. இதைத்தான் கண்ணதாசன் மிக எளிதாக “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்று பாடல்வழி சொன்னார்.

    ஆனால் எல்லாம் எழுத்தாகவே இருக்கிறது. ஹரிசன இளஞன் அர்த்தநாரி சேலம் ஜில்லா கோக்கலையைச்சேர்ந்தவன். அகில இந்திய ஹரிசன சேவா சங்கத்தின் காரியதரிசி தென்னாட்டுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது அர்த்தநாரியைக்கண்டு சந்தோசப்பட்டு தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே தன்வீட்டில் தங்கவைத்துப் படிக்கவைத்து வேலையும் வாங்கிக்கொடுக்கிறார். பின்பு அர்த்தநாரி பெங்களூரில் அதே கம்பெனியைச்சேர்ந்த பெரிய நெசவுமில்லில் வேலைக்குவருகிறார். மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    அவருக்குமேல் பணியில் இருந்தவர் கோவிந்தராவ். இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் பயிற்சிபெற்றுவந்தவர். இருவரும் நண்பர்களானார்கள். அர்த்தநாரி கோவிந்தராவ் வீட்டுக்குவரும்போது அவரின் தங்கை பங்கஜமும் நன்றாகப் பழகினார்கள். பங்கஜம் தாய் தந்தையைப் பத்து வயதிலேயே இழந்தவர். எல்லாமே கோவிந்தராவ்தான். இருவரும் பழகுவதைக்கண்டு மகிழ்ந்த கோவிந்தராவ் தங்கையிடம் சம்மதம் கேட்கிறார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? அனால், அவர் மனம் எப்படியோ?” என்கிறார் பங்கஜம்.

    இதை அர்த்தநாரியிடம் சொன்னபோது அவரடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. திடீரென்று அர்த்தநாரியின் முகம் மாறிவிட்டது. “நான் என்ன சாதி? நீங்கள் எந்தச் சாதி? என்றார் அர்த்தநாரி. “சாதியைப்பற்றி என்ன பேச்சு?” முதலியார் என்ன? பிராமணனென்ன? என்கிறார் கோவிந்தராவ். இதையெல்லாம் தள்ளிவைத்து ரொம்ப நாளாயிற்று என்கிறார். அர்த்தநாரியும் பங்கஜமும் மனம்விட்டுப்பேசி சம்மதம் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் அர்த்தநாரி தொடக்கத்தில் தன்னை முதலியார் என்று சொல்லிவைத்துவிட்டார். இப்போது மனம் குடைகிறது. சொல்லிவிடலாம் என்றால் திருமணம் தடைபடுமோ என்ற அச்சம் ஒருபக்கம். ஆசை ஒருபக்கம்.

    பங்கஜம் எதார்த்தமாக உங்கள் பெற்றோரைப்பார்க்க நாம் போகலாம் என்கிறார். கோக்கலை கிராமத்தில் காலரா நோய் வந்துவிட்டது. இப்பொழுது போகமுடியாது என்று பொய்சொல்கிறார் அர்த்தநாரி. மிக இயல்பாக பங்கஜம் பயந்து உங்கள் பெற்றோரை வேறு இடத்திற்கு அனுப்பி வையுங்கள் அல்லது இங்கே அழைத்துவிடுங்கள் என்கிறார். அர்த்தநாரி தன்சாதியை பங்கஜம் தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு ஒரேவழி திருமணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்வதுதான் என முடிவெடுத்திருந்தார். சொன்னதுபோலவே அப்போது அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ஊரில் விஷபேதி பரவியிருப்பதாக. முப்பது ரூபாய் அனுப்பினால் சேலத்திற்குப்போய்விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அர்த்தநாரியின் அப்பா முனியப்பன் குடிகாரர். தாய் குப்பாயி. அண்ணன் ரெங்கன் ஆசிரியர். அப்பாவின்மேல் வெறுப்பிலிருந்தார் அர்த்தநாரி. பணம் அனுப்பச்சொல்லியும் அர்த்தநாரி அனுப்பவில்லை. அடுத்து ஒரு மடல். அதில் அம்மாவுக்கும் பேதி நோய் கண்டிருப்பதாக எழுதியிருந்தார். அன்றிரவே சேலம் போனார். உடனே ஊருக்குப்போகாமல் சேலத்தில் நான்குநாளை கழித்துவிட்டு கோக்கலை கிராமத்திற்குச்செல்கிறார். அப்போது தாயும் அண்ணனும் இறந்துவிட்டார்கள். தந்தை தன்னைப் பெங்களூருக்கு அழைத்துச்செல்லுமாறு அர்த்தநாரியிடம் கெஞ்சி அழுகிறார்.

    தந்தையின் கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டைக்கொடுத்துவிட்டு சேலம் வந்துவிட்டார். தாயையும் அண்ணனையும் கொன்ற குற்ற உணர்வு அர்த்தநாரியைப் பிடிங்கித் தின்கிறது. பெங்களூர் வருகிறார். யாருக்கும் சொல்லாமல் மீண்டும் ஊருக்குச்செல்கிறார். சேலம் போனதும் கோக்கலையில் ஓர் ஆதித்திராவிடர் கிணற்றில் விழுந்து இறந்தாகச்சொல்கிறார்கள். கோக்கலைசென்று இறந்தது தன் தந்தைதான் என்பதை உறுதிசெய்துகொண்டு சேலத்திலிருந்து பெங்களூருக்கு வந்து பங்கஜத்திடம் நடந்த்தைச்சொல்லி தன்னை மறந்துட வேண்டிக்கொண்டார். ஜுரத்தில்சிக்கிவிடுகிறார் .

    பங்கஜமும் கோவிந்தராவும் நன்குகவனித்துக்கொள்கிறார்கள். குணமானபின்பு “நான் பறையன், பாதகன், உண்மையில் தீண்டத்தகாதவன், பொய்யன், எனக்கு விவாகம் வேண்டாம். என்னை நீங்கள் மறந்துவிடவேண்டும்” என்கிறார் அர்த்தநாரி. பங்கஜம் “நீர் எந்தசாதியாய் இருந்தால் என்ன?” எனச் சமாதானப்படுத்தினார். காதல் உள்ளத்தைக்காட்டினார். கடுகளவும் வேற்றுமையில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

    “நான் கொலைப்பாதகன், தகப்பனாரையும் தாயையும் கொன்றவன்” என்று நடந்தையெல்லாம் சொல்லிவிட்டு, வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோக்கலைக்குப்போய்வுடுகிறார் அர்த்தநாரி. கோக்கலைச்சேரியில் மாரியம்மன் கோயிலில் பள்ளிக்கூடம் வைத்திருக்கும் சாமியார் அர்த்தநாரிதான் எனக் கதை முடிகிறது.

    சிறுகதைக்கேயுரிய யுத்திகள், மொழிநடை, திருப்பம் அனைத்தும் கையாளப்பட்டு எழுதப்பட்ட கதைதான் “அன்னையும் பிதாவும்”. கதையின் தொடக்கத்தில் பங்கஜத்தின் அண்ணன் கோவிந்தராவ் “நீங்கள் இருவரும் பிரியமாயிருக்கிறிர்களே. நாம்தான், சாதி குலம் கவனிப்பதை விட்டுவிட்டோமே. ஏன் அர்த்தநாரியை நீ விவாகம் செய்துகொள்ளக்கூடாது? என்றார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? ஆனால், அவர் மனம் எப்படியோ?” என்றாள் பங்கஜம். இங்கே அடிப்படையில் சாதி முக்கியமல்ல திருமணத்திற்கு மனஒப்புதல் மிக முக்கியம் என்பதை பெண்ணின் குரலாக பதிவுசெய்கிறார்.

    சாதியைச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்த அர்த்தநாரி “நாம் இருவரும் பிரியப்பட்டிருக்கும்போது இந்தச்சாதிப்பிரச்னைக்கு என்ன இடம்? இந்த அநியாயத்தை நாம் ஏன் இடம்கொடுத்து வளர்க்கவேண்டும்? இந்தச்சாதியை யார் நிர்மாணித்தார்கள்? அது சுத்தப்பொய்யல்லவா? அவளிடம் நான் ஏன் அதை பொருளாகக்கருதிச் சொல்லவேண்டும்? அதைச்சொல்லிக் காரியம் முழுதும் கெட்டுவிடவா செய்வது! அவர்களும் சாதியைப்பற்றிக் கவலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் நான் ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும்? “ என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு உண்மையை மறைக்கத்தீர்மானித்தார்.

    “பங்கஜம், உண்மையில் உனக்கு இஷ்டமா? நாமிருவரும் கூடிவாழலாமா?” என்றுமட்டும் கேட்டார். “உங்களுக்கு இஷ்டமா?” என்றாள் பங்கஜம். பங்கஜத்தை விரும்பிய அர்த்தநாரி சாதியை மறைத்துவிடுகிறார். அர்த்தநாரியை விரும்பிய பங்கஜம் சாதியை மறந்துவிடுகிறாள். அர்த்தநாரியின் மனவிருப்பத்தைமட்டுமே அவள் எதிர்பார்க்கிறாள். அவரும் அதைத்தான் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவள்முன் சாதியை மறைத்து வாழநினைத்தது தவறு. கட்டிக்கொண்டு டெல்லிக்கு ஓட நினைத்தது தவறு. பெற்றோர் வாழ பணம் அனுப்பினால் போதும் என்று நினைத்ததும் தவறு. இப்படித் தவறுகளின் வடிவமாக அர்த்தநாரி காட்டப்பட்டிருக்கிறார்.

    அர்த்தநாரி நன்றாகப்வெளிப்படையாக சாதியைச்சொல்லி பங்கஜம், கோவிந்த்தராவ் எப்படி நடந்தாலும் கவலையில்லை என்று வாழ்ந்திருக்கவேண்டிய அர்த்தநாரி சாதியை மறைக்க தாய் தந்தையை இழந்த்ததாக கதைமுடிகிறது. “நீர் எந்தச்சாதியாக இருந்தால் என்ன?” என கதையின் இறுதியில் பங்கஜம் பேசியும் குற்ற உணர்வாளனாக அர்த்தநாரியை ஆக்கி கதையை முடிக்கிறார். அது உண்மையும்கூட. எல்லா குற்றமும் அர்த்தநாரிக்கே உரியது. ஒருவகையில் இது அனைவருக்கும் பாடம்.

    ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பெறுவதில் நன்மை இருந்தாலும் இழப்பது நிம்மதி எனபதை எச்சரிப்பதாகவே உணரமுடிகிறது. ஓரிடத்தில் “உன்கூட நாங்களும் வந்துவிடுகிறோம் “ என்பார் தகப்பன். “முடியவே முடியாது. உன்னைக்கண்டால் என்னை வேலையிலிருந்துநீக்கிவிடுவார்கள்” என்பார் அர்த்தநாரி. பெற்றோரை மறைத்து, பெற்றோர் இல்லாமலேயே வாழ நினைக்கும் இளஞனே அர்த்தநாரி. இவரிடம் தாழ்வு மனப்பான்மையும் ஆசையும் கூடிவிளையாடுவதை உணரமுடிகிறது. தனக்குக்கிடைத்த வாழ்க்கையை ஒருமுறை உணர்ந்திருந்தால் இப்படிப்பொய்யில் வாழ்க்கையை இழந்திருக்கத்தேவையில்லை.

    கடிதமுறை, உரையாடல், திருப்பம் எனச்சேர்ந்து கதையை வலுவாக எழுதியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். இங்கே தாழ்த்தப்பட்ட இளஞனைத் தாழ்வுமனப்பான்மையுடையவனாகவும் மேல்சாதிக்காரர்களைப் பெருந்தன்மை படைத்தவர்களாகவும் திட்டமிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர் என ஒரு குற்றச்சாட்டைவைக்கலாமா? எனவும் யோசித்தேன். கதையில் அதற்கு இடமில்லை. கதையின் போக்கின்படி எல்லாக்குற்றமும் அர்த்தநாரி தலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் மனச்சாட்சியைக்கொன்றுவிடுகிறார்.

    மேல்சாதிப்பெண்ணோடு வாழ்வதற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையின் அடிநாதத்தை இழந்த பாவியாகிறார் அர்த்தநாரி. ஆனாலும் அர்த்தநாரி எதையும் மறைத்து வாழவில்லை. உண்மையைச்சொல்லி உணர்ந்து மனச்சாட்சியுடன் வாழும் மனிதனாக மாறிவிடுகிறார். இப்படி அனைவரையும் இழந்து எதையும் பெற யாரும் எண்ணக்கூடாது. தாழ்வு மனப்பான்மை எந்த நிலையிலும் கூடாது என்பதே பொதுச்செய்தியாகிறது. பங்கஜம் அவருடைய அண்ணன் கோவிந்தராவ் போன்றவர்கள் கதாபாத்திரமாக அமையாமல் சமூகத்தின் பாத்திரமாக விளங்கவேண்டும் என்பதே நம் ஆசை.

    ஆக, ஆசிரியரின் கோணம் சரியானது என்பதில் ஐயமில்லை. அதன் ஓட்டம் இயல்பானது. பழுத்த நுட்பமான அரசியல்வாதியிடம் மறைந்திருக்கும் இலக்கியவாதியைக்காட்டும் கதை ‘அன்னையும் பிதாவும்.’

    அழவைத்த கதை மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்”

    (பிச்சினிக்காடு இளங்கோ- 24.05.2015 5.30மாலை)

    Share
  • கல்யாண வளையோசை கொண்டு …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    kalayana valaiyosai
    கல்யாண வளையோசை கொண்டு … ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் ஒரு காதல் பாடல்.

    கிராமத்துக் கதையென்பதால் இயற்கையின்
    எழிலெல்லாம் ஆங்காங்கே பாய் விரிக்கும்!
    வயல்களுடன் வரப்புகளும்
    வகிடெடுத்து வைத்தது போலிருக்கும்!

    பச்சை ஆடை கட்டிய பருவப் பெண்ணைப்போல
    பார்க்குமிடமெல்லாம் பசுமை நிறைந்திருக்கும்!
    வீசும் தென்றலுமே அங்கே விளையாட வந்திருக்கும்!
    விழி பேசும் காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!
    மொழி பேச நினைத்தாலோ காதலர்களுக்கு ஏற்ற இடமிருக்கும்!

    வாலியின் பாட்டு நினைவுக்குள் வந்து நிற்கும்!
    இசையோடு இணைந்து வந்து டி.எம்.சௌந்தரராஜன்
    மற்றும் பி.சுசீலா குரல்கள் நம்மை வசப்படுத்தும்!
    திருமணம் என்பது நிச்சயிக்கப்பட்ட வேளை
    இரு மனங்களிலும் இன்பநதி ஓடும்!
    இளமை சுகம் தேடும்! இனிமை நிறைந்தாடும்!

    இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ தந்து உள்ளம் தொடும் பாடல்! கிராமத்து மண்வாசனையோடு வயல்களிலே விளைந்திருக்கும் நெற்கதிர்கள் தலைசாய்த்தது கூட இந்தக் காதலர்கள் செய்கை பார்த்துதானோ? வாலி எண்ணத்தில் உழவு செய்து இன்பப்பயிர் விளைவித்திருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் நடிகை லதாவும் இணைசேர்ந்து நடிக்க மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை ஆபரணம் பூட்ட, இதோ கல்யாணன் வளையோசை கேட்கிறது!

     

    கல்யாண வளையோசை கொண்டு
    காற்றே நீ முன்னாடிச் செல்லு
    கல்யாண வளையோசை கொண்டு
    காற்றே நீ முன்னாடிச் செல்லு
    பின்னாடி நான் வாரேன் என்று
    கண்ணாளன் காதோடு சொல்லு

    மாமன் என் மாமன்
    மாமன் என் மாமன்
    கஞ்சி வரக் காத்திருக்க
    கண்ணிரண்டும் பூத்திருக்க
    வஞ்சி வரும் சேதி சொல்லு
    வந்த பின்னால் மீதி சொல்லு

    கல்யாண வளையோசை கொண்டு
    காற்றே நீ முன்னாடிச் செல்லு
    பின்னாடி நான் வாரேன் என்று
    கண்ணாளன் காதோடு சொல்லு

    பாய் விரிக்க புன்னை மரமிருக்க
    வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க
    கையோடு நெய் வழிய
    கண்ணோடு மை வழிய
    அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ
    ஆசை இருக்காதோ

    கல்யாண வளையோசை கொண்டு
    கஸ்தூரி மான் போல இங்கு
    வந்தாளே இள வாழம் தண்டு
    வாடாத வெண்முல்லை செண்டு

    ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
    ஆஆ இடை பிடிக்க
    நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
    நெஞ்சு நெகிழ்ந்திருக்க
    ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க
    நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க
    பொன்னான நெல் மணிகள்
    கண்ணே உன் கண்மணிகள்
    தண்ணீரிலே செவ்வாழை போல்
    தாவிச் சிரிக்காதோதாவிச் சிரிக்காதோ

    கல்யாண வளையோசை கொண்டு
    கஸ்தூரி மான் போல இன்று
    வந்தாளே இள வாழம் தண்டு
    வாடாத வெண்முல்லை செண்டு

    காணொளி: https://www.youtube.com/watch?v=soJrnRKr6-4

    https://www.youtube.com/watch?v=soJrnRKr6-4

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”காலாட் படைபோலக் கண்ணனைப் பின்தொடர்ந்து,
    கால்ஆட் கொளத்துள்ளும் கன்றுதன், -வாலாட்ட,
    வாள்விழி ராதை வெயிடிங்கே ஆனாலும்,
    தாள்கொடுப்பான் தோழமைக்கு தாமு”….கிரேசி மோகன்….

    Share
  • கு. க

    கிரேசி மோகன்

    அட, ஒரு பேச்சுக்கு… ஒருவேளை அன்று போலவே இன்றும் வியாசர் விருப்பத்தின் பேரில் மகாபாரதம் மீண்டும் ஒரு தபா நடந்தால்..! அட ஒரு பேச்சுக்கு… அன்று போலவே இன்றும் தர்மபுத்திரர் “நச்சுப்பொய்கையில்” நீர் அருந்த சென்றால்…! அன்று போலவே இன்றும் கண்களுக்குப் புலப்படாத அருவமான அசரீரி யட்சதேவனுக்கும் அரசர் தர்மபுத்திரருக்கும் இடையே கேள்வி – பதில் பகுதி ஆரம்பித்தால்…!

    கேள்வி கேட்டுக் குடைய நினைத்த அசரீரிபுரத்து யட்சத்தேவசாமியை அசர வைக்கும் அளவுக்குத் தர்மபுத்திர ராஜா பதில்கள் இன்றைய சூழ்நிலைக்கேற்ப ஏக்குத்தப்பான ரூட்டில் கீழ்க்கண்டவாறு செல்லும்…

    அசரீரி: “தர்மபுத்திரா… நச்சுப் பொய்கையில் மயங்கிக் கிடக்கும் உன் தம்பிமார்கள் பிழைக்க வேண்டுமென்றால் நான் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறு… உலகிலேயே பெரியது எது?”

    தர்மர்: “யட்சதேவா… யாம் அறிந்த வரையில் தற்சமயம் உலகிலேயே பெரியது திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெரு ஒண்டுகுடித்தனத்தில் வசிக்கும் கே.எஸ். சந்தானகோபாலனின் குடும்பம் தான்..!

    அசரீரி (வழக்கத்துக்கு விரோதமான பதிலால் குழம்பினார் அசரீரி!): “குந்தியின் புதல்வா… என்ன குழப்புகிறாய்…?

    தர்மர்: “குழப்பவில்லை தேவா… சத்தியம் பகிர்கிறேன்… கே.எஸ். சந்தானகோபாலனின் குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பத்துநான்கு!”

    அசரீரி: “என்ன… இன்று இருக்கும் விலைவாசியில் முப்பத்துநான்கு நபர் அடங்கிய குடும்பத்தை சந்தானகோபாலன் குடும்பத்தில் முப்பத்துநான்கு பேரா? தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, வெட்டியான சித்தப்பா, விதவை அத்தை, வேலூரிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்ட மாமா என்று பட்டியல் போட்டால் கூட முப்பத்துநான்கு தேரவில்லையே… சொல்ல வந்ததை நேரடியாக சொல்…”

    தர்மர்: “உம்… மொத்தம் முப்பத்துநான்கு பேர்… சந்தானகோபாலன்… சகதர்மி சகுந்தலா… இவர்கள் இருவரது இருபது வருட மனைமாட்சியின் மகத்தான சாதனையாக முப்பத்திரெண்டு மக்கட் செல்வங்கள்…! கணக்கு சரியா…?

    அசரீரி: என்னது! சந்தானகோபாலன் – சகுந்தலா தம்பதிக்கு முப்பத்திரெண்டு குழந்தைகளா…?

    தர்மர்: “ஆம் தேவா… அந்த முப்பத்திரெண்டு குழந்தைகழில் பதினாறு ஆண் குழந்தைகள்… பதினைந்து பெண் குழந்தைகள்…”

    அசரீரி: “நீ சொல்வதை பார்த்தால் முப்பத்தொன்றுதானே வருகிறது… எப்படி முப்பத்திரெண்டு என்று கூறினாய்…?

    தர்மர்: “முப்பத்திரெண்டாவது குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதற்கு நாம் இன்னும் ஏழு மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆம் சகுந்தலாவுக்கு இது மூன்றாவது மாதம்!”

    அசரீரி: (தர்மபுத்திரரை மடக்க வந்த அசரீரிக்கு சந்தானகோபாலன் – சகுந்தலா குடும்பப் புள்ளிவிவரக் கணக்கில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கியது…): அப்போ… இனிமேல்தான் முப்பத்திரெண்டாவது குழந்தை பிறக்க போகிறதா…? தர்ம புத்திரா, ஒரு சந்தேகம் சந்தானகோபாலன் – சகுந்தலா தம்பதி மனித இனத்தை சேர்ந்தவர்களா… இல்லை… முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இனத்தை சேர்த்வர்களா…? எனக்கு நேரமாகிறது… எங்கே மளமளவென்று சந்தானகோபாலனின் குழந்தைகளின் பெயர்களை வரிசையாகச் சொல்லிவிட்டு… மயங்கிகிடக்கும் உன் தம்பிமார்களை அழைத்துச் செல்…”

    தர்மர்: “யட்சதேவா… இந்தக் கேள்விக்கு சரியான பதிலை கூற குழந்தைகளைப் பெற்ற சந்தானகோபாலனே திணருவான்…”

    (இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஒரு குடும்பமா என்ற ஆச்சரியத்திலும்… இனிமேலும் சந்தானகோபாலன் சகுந்தலா சம்பந்தபட்ட குடும்ப விஷயத்தில் மாட்டிக்கொண்டு தர்மபுத்திரரிடம் தான் தவிப்பதைத் தவிர்க்கவும்… யட்சதேவன் இந்தப் பதிலைச் சாக்காக வைத்து மயங்குவது போல் நடித்து, தான் உருவாக்கிய நச்சுப் பொய்கையில் தானே தொப்பென்று விழுகிறான்…)

    தர்மர் (தம்பிமார்களை எழுப்பிவிட்டு… தனக்குதானே…): இருபது வருட தாம்பபத்யத்தில் முப்பத்திரெண்டு குழந்தைகள் எப்படிப் பொறந்ததுன்னு கேக்கத் துப்பில்லை… இவன்லாம் ஒரு அசரீரி…வாங்கடா..! (தம்பிமார்களோடு தர்மபுத்திரர் செல்கிறார்).

    அசரீரி -தர்மர் சம்பாக்ஷிணையை வேண்டுமானால் சந்தானகோபாலன் சகுந்தலா தம்பதியை அறிமுகப்படுத்த எழுதிய கற்பனை உரையாடலாகக் கொள்ளலாம். ஆனால், சந்தானகோபாலன்- சகுந்தலா தம்பதி செய்த இந்த சிசுப்புரட்சி உலகப் பிரசித்தமில்லாவிட்டாலும் உள்ளூர் திருவல்லிக்கேணியில் மிகவும் பிரபலம்! திருவல்லிக்கேணியில் ஒரு சிறு குழந்தையைக் கேட்டால்கூடச் சந்தானகோபாலன் வீட்டை அடையாளம் காட்டும். பாதி சமயங்களில் நாம் அட்ரஸ் கேட்ட அந்தக் குழந்தையே சந்தானகோபாலனின் வம்சவிருட்சத்தில் ஒரு கிளையாக இருக்கும்!

    ‘அது சரி… எப்படி இருபது வருடத்தில் முப்பத்தோரு குழந்தைகள்…? ஒன்பது மாசக் குழந்தை போல் கணக்கு உதைக்கிறதே…’ என்று அசரீரி சார்பாக நீங்கள் கோரஸாக அலறுவது காதில் விழுகிறது. ஆரம்பத்தில் வருடத்துக்கு ஒரு பிரசவம், பிரசவத்துக்கு ஒரு குழந்தை என்ற நியாயமான விகிதாசாரத்தில் வம்சவிருத்தி செய்ய ஆரம்பித்த சகுந்தலா, ஐ.ந்தாவது ஆண்டிலிருந்து உற்சாகமடைந்து உற்பத்தித் திறனை உயர்த்த ஆரம்பித்தாள். அடுத்த சில ஆண்டுகள்… ஆண் – ஆண், பெண் -பெண், ஆண் -பெண், பெண் – ஆண் என்று பல காம்பினேசன்களில் ப்ளஸ் டூ பிரசவத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள். ரெட்டை என்ற பெயரில் ஒரு குழந்தையோடு இரண்டாவதை இலவச இணைப்பாகக் கொடுத்து அலுத்தவள் அதன் பிறகு ஆவேசமடைந்து ஒரே பிரசவத்தில் பவுண்டரி, சிக்ஸர் என்று ஸ்ரீகாந்த் கணக்காக வேகமாக ஆட ஆரம்பித்தாள்.

    சென்ற பிரசவததின்போது சகுந்தலாவை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த டாக்டர் வெலவெலத்துவிட்டார்! ஸ்கேனிங்கில் கிடைத்த படம் காமிரா ட்ரீக் ஷாட் போல் இருந்தது. ஆம்.ஐந்தாறு குழந்தைகள் அடங்கிய குரூப் போட்டோ. இந்த இருபதாவது பிரசவத்தில் புள்ளிவிவரக் கணக்குப்படி பார்த்தால் சகுந்தலாவிடமிருந்து குறைந்தபட்சம் ஏழு குழந்தை
    களாவது எதிர்பார்க்கப்படுகிறது! (கணக்கு வாத்திியார்களா இருக்கும் வாசகர்களே! குழைந்தைகளைக் கூட்டி நம் மீது தவறு கண்டுபிடிக்கவேண்டாம். சந்தானகோபாலனே குழந்தைகள் கணக்கைத் தப்பும் தவறுமாகச் சொல்வது சர்வசாதாரணம்.

    இந்த இருபது வருடத்தில் சகுந்தலா மசக்கையாக ஒரு மாமரத்தையோ சாப்பிடிருக்கிறாள்! சந்தானகோபாலன் வீட்டுப் பின்புறம் வளர்ந்த அந்த மாமரம் அடையாறு ஆலமரம் போல் திருவல்லிக்கேணி மாமரம் என்று பெத்த பெயர் வாங்கியது..குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இப்போது அரசமரத்தைச் சுற்றுவதை ஓல்டு ஃபாஷன் என்று விட்டு விட்டு சந்தானகோபாலன் வீட்டு மாமரத்தைச் சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதிக்கு வேட்டி புடவை கொடுத்து வேண்டிக்கொண்டு அந்த மாமரத்தில் தூளி கட்டித் தொங்கவிட்டால் ஆண்களுக்கே கர்ப்பம் உண்டாக்கிக் குழந்தை பிறக்கும் என்ற அளவுக்கு நம்பிக்கை வளர்ந்தது!

    இத்தனைக்கும் சந்தானகோபாலனும் சரி, சகுந்தலாவும் சரி… அவர்களது பெற்றோருக்கு ஒரே வாரிசு! சந்தானகோபலனைப் பெறுவதற்குக் குடந்தை சீனிவாசன் பட்டபாடு ‘கொஞ்சநஞ்சமல்ல… காசி, ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து நாகூர் தர்கா, அன்னை வேளாங்கண்ணி என்று ஒரு கோயில் விடவில்லை…

    அவரது நாற்பதாவது வயதில் சந்தானகோபாலன் வாராது வந்த மாமணியாக உதித்தான். நாற்பது வயது வரை மலடன் என்ற பெயரில் தந்தை பட்ட கஷ்டத்தை, தன் சார்பாகப் பழிவாங்க ‘ரிவெஞ்ச்’ எடுக்கும் தமிழ் கதாநாயகன் போல் சந்தானகோபாலன் முப்பத்தோரு குழந்தைகளைப் பெற்றுவிட்டான். ஆரம்பத்தில் சந்தானகோபாலன் ஆபீஸில் தன் பெயரைக் குடந்தை சந்தானகோபாலன் என்றுதான் எழுதுவான். நாளாவட்டத்தில் நண்பர்கள் குடந்தை சந்தானகோபலனைக் குழந்தை சந்தானகோபாலன் என்று கூப்பிட ஆரம்பிக்க, தனது இனிஷியலை கெ.எஸ். என்று சுருக்கிக் கொண்டுவிட்டான்.

    திருமணத்தன்று “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதியைப் பலபேர் தெரியாத்தனமாக வாழ்த்திவிட, இருவரும் அதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு, தலா பதினாறு என்று கணக்கு வைத்துப் பெற்றுத்தள்ளி இந்தப் பிரவசத்தோடு முப்பத்திரண்டைத் தொட்டு விழி பிதுங்குகிறார்கள்!

    குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் விஷயத்தில் சந்தானகோபாலன் சினிமாவுக்குத் தலைப்பு வைக்கும் கதாசிரியன் போல் மண்டையைப் பீய்த்துக் கொள்வான்! எந்தப் பெயர் வைத்தாலும் அந்தப் பெயரில் ஏற்கெனவே ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அலுத்துப் போன சந்தானகோபாலன், சில குழந்தைகளுக்கு ஐந்து வயதாகியும் இன்னமும் பெயரே வைக்கவில்லை!

    மாலையில் வீடு திரும்பியதும் எல்லாக் குழந்தைகளும் வந்துவிட்டதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள அட்டெண்டன்ஸ் எடுக்க வேண்டிய நிலை, சாப்பாட்டு நேரத்தில் குழந்தைகள் சத்துணவுக்கூடம் போல க்யூவில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம். இரவு படுக்கும் நேரம்… இரண்டு குழந்தைகளுக்கிடையே இடைவெளி இல்லாமல் முப்பத்தோரு குழந்தைகளும் மூச்சுத் திணற ஒன்றன்மீது ஒன்று உருள வேண்டிய கட்டாயம்!

    ஒரு நாள் இரவு… ஓய்ந்துபோன சந்தானகோபாலன் ‘என்ன செய்தால் வசதியாக வாழலாம்’? என்று யோசித்தபடி வெளியே வர…எதிர்ச்சுவரில் ‘கு.க’ விளம்பரம் கண்ணில் பட்டது. வீட்டுக் குள்ளிருந்து சகுந்தலா வாந்தியெடுக்கும் சத்தம்.. வெறுத்த்துப்போனவன் விறுவிறுவென்று பார்த்தசாரதி கோயிலை அடைந்தான்.

    கோயில் பிராகாரத்தில் சந்தானகோபாலனின் புராண கால பார்ட்னர் குசேலர் கதை உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது.

    “ஒரு பிடி அவல் கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் குசேலன் குபேரனானான்!” – உபன்யாசகர் உரைத்தது இவன் மனத்தில் உரைத்தது! எதிரே உள்ள மளிகைக் கடைக்கு ஓடி உபன்யாசகர் கையால் அபிநயித்துக் காட்டிய ஒரு பிடி அவலை வாங்கிக்கொண்டு சந்நிதிக்கு விரைந்தான்…

    அந்த ஒரு பிடி அவலைத் துண்டில் முடிந்து அர்ச்சகர் பார்க்காத சமயம் பெருமாள் பாதத்தில் போட்டுவிட்டு ‘கிருஷ்ணா, உன் கூடப் படிச்சாத்தான் குசேலனா? குழந்தைங்க பெத்தா குசேலன் இல்லையா…? நான் சூப்பர் குசேலன்… என்னைக் குபேரனாக்கமாட்டியா… கரெக்டா ஒரு பிடி அவல் போட்டுட்டேன்… அப்புறம் உன் சௌகரியம்’ – மனசுக்குள் வேண்டிக் கொண்டு வீடு திரும்பினான்.

    சந்நிதியில்… ருக்மணி தாயார் பெருமாளைப் பார்த்து “பிரபோ… இது என்ன உங்கள் காலடியில் டவல் நிறைய அவல்?” என்று கேட்டாள். பேசாமலிருந்த பெருமாளின் கண்களில் குசேலன் எபிஸோட் ஃப்ளாஷ்பாக்காக ஓடியது. குசேலன் கதையை ஆக்ஷன் ரீப்ளே செய்து பார்க்கும் ஆர்வம் அவரது நீல நயனங்களில் தோன்றியது.

    “வேண்டாம் இந்த விபரீதம். கலி அழகு என்று ருக்மணிதேவி எச்சரித்தாள். அவள் சொல்வதைக் கேட்காமல் தான் எடுத்த முடிவை நிறைவேற்றிப் பார்க்கும் ஆசையில் பெருமாள் சிலையிலிருந்து பிரிந்து மனித வடிவில் சந்நிதியை விட்டு வெளியே வந்து, ‘பெரிய தெரு சீவல் ஸ்டோர்ஸ்’ கடையில் புகையிலை குதப்பும் கலியுகக் குசேலன் சந்தானகோபலனை நோக்கி நடந்தார். சந்தானகோபாலனுக்கு தெரியாமல் அவன் ஜிப்பா பாக்கெட்டில் குலுக்கலில் நீட்சயம் முதல் பரிசு பெறப்போகும் அரியானாவில் ஆரம்பித்து அமிஞ்சிக்கரைவரை உள்ள அத்தனை பம்‌பர் லாட்டரி டிக்கெட்டுகளையும் சொருகி விட்டு வந்த சுவடு தெரியாமல் கிருஷ்ண பரமாத்மா சந்நிதிக்குத் திரும்பினார்.

    முன்னேற்றம் எதுவும் இல்லாமல் முப்பது ஆண்டுகள் ஓடியது. பிரகாரத்தில் அதே குசேலர் கதையை அதே திரைக்கதையில் வேறு யாரோ ஓர் உபன்யாசகர் கூறிக் கொண்டிருந்தது சந்நிதிக்குள் இருந்த கண்ணன் காதில் விழுந்தது. கூடவே குசேலன் பார்ட்-டூ – அதாவது சந்தானகோபாலன் நினைவும் வந்தது. தான் அளித்த செல்வத்தால் சந்தானகோபாலன் சௌக்கியமாய் இருப்பதைப் பார்க்கும் ஆசையில் மூலவர் உற்சவராகிச் சந்நிதியைவிட்டு வெளியே வந்தார்.

    சந்தானகோபாலன் கூடியிருந்த ஒண்டுக்குடித்தனம் இருந்த இடத்தில் இப்போது ஏழு மாடி ஃப்ளாட் இருப்பதைப் பார்த்தார். வாசலில் ‘சகுந்தலா அபார்ட்மென்ட்ஸ் பலகை தொங்கியது. கீழ் போர்ஷன் வாசலில் வயதான சந்தானகோபாலன்-சகுந்தலா தம்பதி சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க… அவர்களைச் சுற்றிப் பேரக் குழந்தைகள்.

    ‘பரவாயில்லை… கிடைத்த செல்வத்தை வீணாக்காமல் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வாழ்கிறானே’ என்ற சந்தோஷத்துடன் பெருமாள் அவர்களைப் பார்த்து விட்டுக் கட்டடத்துக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிடியை எழுப்பி விசாரித்தார்.

    “ஏம்பா… இந்த ஏழு மாடிக் கட்டடத்துல எத்தனை பேர் குடியிருக்கலாம்…?”

    “அம்பது குடும்பம் குடியிருக்கலாம். ஆனா, இப்போ ஒரு குடும்பம்தான் குடியிருக்கு.”

    “ஏன்…சாந்தானகோபாலன் மீதி போர்ஷனையெல்லாம் வாடகைக்கு விடலையா…?

    “விடறதுக்கு ஏது சார் போர்ஷன்…? அம்பது போர்ஷன்லயும் அய்யா குடும்பம் தான் கீது…!”

    “ஏன்…?!”

    “ஏனா… அவர் மூத்த் புள்ளைக்கு முப்பது குழந்தைங்க…ரெண்டாவது புள்ளைக்கு இருபத்தாறோ இருபத்தேழோ புள்ளைங்க… மூணாவது புள்ளைக்கு அப்பன் மாதிரியே முப்பத்திரண்டு. நாலாவது புள்ளைக்கு நேத்து பொறந்ததோட சேத்தா நாப்பத்தொண்ணு… மொத்தம் கணக்குப் போட்டுப் பார்த்தா கிட்டதட்ட முந்நூறு பேர்… ஐயா குடும்பமே மொத்த எல்லா ஃப்ளாட்லேயும் இருக்காங்க. சாமி… சாமி, எங்கே போற…?”

    தலையை தொங்கவிட்டபடி சந்நிதிக்குள் நுழைந்த பெருமாளைப் பார்த்து ருக்மணி தாயார் “என்ன ஆச்சு?” என்று வினவ…

    “சே… பேசாம விட்டுருந்தா அப்பன் பட்ட கஷ்டத்தைப் பார்த்துப் பசங்களாவது புத்தி வந்து ஒண்ணு ரெண்டோட நிறுத்தியிருப்பாங்க… பணம் வந்த தெம்புல பசங்களும் அப்பன் மாதிரி ஆளுக்கு அம்பது அறுபதுன்னு கூறுகட்டிப் பெத்திருக்காங்க ருக்மணி இனிமே யாராவது குசேலன்னு சொல்லிக்கிட்டு வந்தா தயவுசெஞ்சு தடுத்து நிறுத்து… இனிமே நானும் கு.க.வைக் கடைப்பிடிக்கப் போறேன்.”

    “கு.க.வா…? சுவாமி, என்ன சொல்கிறீர்கள்…? கு.க. என்றால் குடும்பக் கட்டுப்பாடு…!”

    “நான் சொன்னா கு.க. எனக்கு… குசேலர் கட்டுப்பாடு.”

    அர்ச்சகர் நுழைய… இருவரும் மௌனமாகச் சிலையாகிறார்கள்…

    “எது?”

    போட்டுக் கொண்டிருக்கும் புதிய வேடம்” என்று கூறிவிட்டு அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள்.

    “தொடக்கத்தில் செய்து கொண்டிருந்த தொழில் துலங்கவில்லை போலிருக்கிறது. இந்தத் தொழிலை எப்போது தொடங்கினீர்கள்?” என்று இடக்காகக் கேட்டாள்.

    “தொழிலா?” என்று விவரம் புரியாமல் கேட்ட கிள்ளி, அவள் எத்தனை பெரிய ஆபத்தில் தன்னை இழுத்து விடப் பார்க்கிறாள் என்பதை அப்போது அறியவில்லை.

    வேண்டுமென்றே அவள் சத்தமாகப் பேசினாள்:

    “குதிரைகளைத் திருடுவதில் வருவாய் குறைந்து விட்டதா? அடடா… அதனால் தான் குழந்தைகளைத் திருட ஆரம்பித்து விட்டீர்களாக்கும்..” என்று அவள் வழக்கம் போல் கிண்டல் செய்வதா.கத் தான் கிள்ளி நினைத்தான்.

    ஆனால், அவளுடைய வார்த்தைகள் எப்படிப்பட்ட விபரீதத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு அறிவித்தன.

    உரத்த குரலில் பேசியதால் – அருகில் போய் கொண்டிருந்தவர்ளும் அவளுடைய வார்த்தைகள் அரைகுறையாகக் கேட்க நேர்ந்தது. சிலர் அவர்களைத் திரும்பி பார்த்தார்கள். ஒரு சிலர் அவனை நெருங்கி வந்தனர்.

    வேலேந்தி .சென்று கொண்டிருந்த காவல் வீரன் ஒருவனும் அவர்களைத் கவனிக்க தொடங்கினான்.

    ஆபத்தை உருவாக்கி விட்டாள் அழகி என்பதை அறிந்துகொண்ட கிள்ளி, தோளிருந்த குழந்தையை தூக்கி அவளிடம் நீட்டினான்.

    குழந்தையை வாங்கி கொள்ள அவள் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

    கிள்ளி, குழந்தையை இறக்கி அவள் அருகில் விட்டுவிட்டு அங்கிருந்து நழுவ முயன்றான். குழந்தையோ அவனை விட்டு போகமாட்டேன் என்று அடம் பிடித்தது.

    ஆட்கள் நெருங்கி கொண்டிருந்தார்கள். வேலேந்திய வீரனும் அவர்களை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தான்.

    “உமக்குக் குழந்தை வெண்டுமா?” என்று கிள்ளியைப் பார்த்துக் கண்களைக் சிமிட்டியபடி கிண்டலாய்க் கேட்டாள் அவள்.

    குப்புறத் தள்ளியதோடு குதிரை குழியையும் பறித்துவிட்டதென்பதை உணர்ந்து கொண்ட கிள்ளி, தப்பி செல்ல வழியறியாது தவித்தான்.

    Share
  • மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 3

    ஒரு அரிசோனன்

     … ஆழ்உறக்கநிலையில் அப்பரம்பொருளுடன் ஒன்றிவிடுகிறோம்.

    அப்பொழுது நமக்கு எதுவும் தேவைப்படுவது இல்லை.  அளவிட இயலாத ஆனந்த நிலையில் இருக்கிறோம்.

    அந்த ஆழ்ந்த உறக்க நிலையில் கிடைக்கும் ஆனந்தத்தை ஆயிரம்கோடி பொற்காசுகளாலும் அடைய இயலாது.  உறக்கம் வராமல் விழித்திருக்க நம்மால் இயலுமா?  ஆயிரம் கோடி பொற்காசுகள் தருகிறேன், ஒரு ஆண்டு உறங்காமல் இரு என்றால் இருக்க இயலுமா?  அந்த ஆழ் உறக்க நிலையில் நாம் இறைவனுடன் ஒன்றுகிறோம்.  இறைவனாகவே ஆகிவிடுகிறோம்…

     mu 7

      — 7

    நாந்த:ப்ரக்ஞம் ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் நோப4யத:ப்ரக்ஞம் ந ப்ரக்ஞானக4னம் ந ப்ரக்ஞம் நாப்ரக்ஞம் |

    அத்3ருஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதே3ஸ்யமேகாத்மப்ரத்யயஸாரம் பிரபன்ஜோபஸ’மம் ஸா’ந்தம் சிவமத்3வைதம் சதுர்த்த2ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விக்ஞேய: || 

                                                                                                          —  7

    உள்ளறிவு உள்ளவனும் அல்ல, வெளியறிவு உள்ளவனும் அல்ல, இடைப்பட்ட அறிவுள்ளவும் அல்ல, அறிவுக்குவியலானவனும் அல்ல, விழிப்புணர்வுடையவனும் அல்ல, விழிப்புணர்வு இல்லாதவனுமல்லன். 

    காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பிடிக்கமுடியாதவன், ஊகித்தறியமுடியாதவன், நினைத்துப்பார்க்க இயலாதவன், விளக்கமுடியாதவன், ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன்,  அண்டமே அடங்கும் தன்மையன், அமைதியானவன், மங்களமானவன், இருமையற்றவன், நான்காவதாகக் கருதப் படுபவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன்.

                                    –7

    பதவுரை: சதுர்த்த2ம் – நான்காம் பகுதியான [துரீயன்]; நாந்த:ப்ரக்ஞம் – உள்ளுணர்வு அற்றவன்; ந ப3ஹிஷ்ப்ரக்ஞம் – வெளி உணர்வு அற்றவன்;  நோப4யத:ப்ரக்ஞம் – இடைப்பட்ட நிலை உணர்வுகளும் இல்லாதவன்; ந ப்ரக்ஞானக4னம் – அறிவுக் குவியில்களும் அல்லன்; ந ப்ரக்ஞம் –  அறிபவனு அல்லன்; ந அப்ரக்ஞம் – அறியாதவனும் அல்லன்.

    அத்3ருஷ்டம் – காண முடியாதவன்;  அவ்யவஹார்யம் – வெளிச் செயல்களால் [அறிபவன்] அல்லன்;  அக்ராஹ்யம் – பிடியில் அடங்காத[வண்ணம் நழுவிச் செல்ப]வன்;  அலக்ஷணம் – ஊகித்து அறியமுடியாத[அளவுக்கு உயர்ந்திருப்ப]வன்; அசிந்த்யம் – நினைத்துப்பார்க்க முடியாதவன்;   அவ்யபதே3ஸ்யம் – [சொற்களால்] விளக்க முடியாதவன்; ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம் –   ஒரே ஆத்ம நுண்ணறிவின் உட்பொருளானவன் பிரபஞ்ச உபஸ’மம் – அண்டத்தையே [தன்னுள் அடக்கி] ஒடுக்குபவன்;  ஸா’ந்தம் – அமைதியே உருவானவன்;  சிவம் – மங்களமானவன்; அத்3வைதம் – இருமை நிலையற்றவன் [என்று]; ஸ ஆத்மா – அந்த ஆத்மன்;  மந்யந்தே – கருதப்படுகிறான்; ஸ விக்ஞேய: – அவன் அறியத் தகுந்தவன்.  

    விளக்கம்என்ன இப்படிக் குழப்பம் செய்யப்படுகிறது? முன்னால் ஆத்மனின் மூன்று பகுதிகள் என்று சொல்லி —  வெளி உணர்வு, உள்ளுணர்வு, எல்லாம் அறிந்தவன் என்று சொல்லிக்கொண்டே வந்து – இப்பொழுது அதுவுமில்லை, இதுவுமில்லை, அறிவாளி, அதுவும் அல்ல, நினைத்துப் பார்க்க இயலாதவன் காணமுடியாதவன் என்றும் சொல்லி — முன்சொல்லிய மூன்று பகுதிகளும் இல்லாத பகுதியே நான்காம் பகுதி என்று குழப்பினால் —  நாங்கள் என்ன, எப்படிப் புரிந்து கொள்வது என்பதுதான் அனைவரின் மனதிலும் எழும்பும் கேள்வி.  அது நியாயமானதுகூட.

    ஆதி சங்கரரும் இதே கேள்வியை எழுப்பியே விளக்கத்தையும் அளிக்கிறார்  அதை என் புரிதலின்படி பகர்கிறேன்…

    … இருட்டான இடம்.  நாம் நடந்து செல்லும்போது எதோ ஒன்று சுருண்டு படுத்திருக்கிறது. இது இலேசாகவும் ஆடுகிறது.  உடனே நாம் அதிர்ந்து போகிறோம்.  இவ்வளவு பெரிய பாம்பு நமது வழியில் சுருண்டு படுத்துக்கிடப்பதோடு மட்டுமல்லாது தலையையும் இளசாக ஆட்டுகிறதே!

    நா உலர்கிறது, மதி மயங்குகிறது, அச்சம் நம்மைச் சூழ்கிறது.  “பாம்பு! பாம்பு!” என்று பதறுகிறோம்.

    நம் அருகில் உள்ள ஒருவர், “இல்லை, இல்லை! அது ஒரு மாலை!  நீங்கள் தலை என்று நினைப்பது மாலையின் கீழ்ப்பகுதியில் உள்ள பூப்பந்து!” என்கிறார்.

    இதற்கிடையில், “பாம்பா!  எங்கு?” என்றபடி வருகிறாள் ஒரு மூதாட்டி.  அவள் கையில் ஒரு விளக்கு இருக்கிறது.

    old lady with lamp

    “பா.. பா..  பாட்டி!  அதோ!” என்று பாம்பு இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறோம்.

    இலேசாக வீசும் காற்றில் விளக்கின் சுடர் அணைந்து போகாதவாறு பிடித்துக்கொண்டிருந்த கையை எடுக்கிறாள் மூதாட்டி.  அங்கே இருப்பது..

    … நம்மையும் அறியாமல் நம் உதடுகள் பிரிந்து சிரிப்பு வெலிவருகிறது.  அங்கு இருப்பது பாம்பல்ல!  சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு.  பாம்பின் தலையென்று நாம் நினைத்து கயிற்றில் போடப்பட்டிருந்த முடிச்சு.  முடிச்சு உள்ள அந்த நுனி காற்றில் ஆடவே, அதை பாம்பு தலையை ஆட்டுகிறது என்று தவறாக எடையிட்டிருக்கிறோம், நாம்!

    ஆக, மூதாட்டியின் விளக்கு ஒளி இல்லாவிட்டால், அது பாம்பாகத்தானே நம் கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும்!

    கயிற்றைப் பாம்பாக நினைத்தது நமது வெளி அறிவு.  மூதாட்டியின் விளக்கின் ஒளி என்ற ஞானம் நம் மன இருட்டை அகற்றியவுடன் உண்மை தெரிகிறது.

    எனவே, பாம்பும், மாலையும்  கயிறும் ஒன்றுதான்.  அதைப் பாம்பாகவும், மாலையாகவும், கயிறாகவும் பார்ப்பது நமது பார்வையின் கோணங்களே!  இன்னும் கூர்ந்து கவனித்தால், அங்கு சிதறிக்கிடக்கும் தேங்காய் நார்களால் பின்னப்பட்டதே அந்தக் கயிறு என்றும் அறிவோம்.  அப்படியானால் தேங்காய் நாரும், கயிறும் ஒரே பொருளின் இரண்டு தோற்றங்கள்தானே!

    அதைத்தான் வேதமும், “தத்துவம் அஸி! அதாவது, அது நீயாக இருக்கிறாய்!” என்று எடுத்துரைக்கிறது.

    துரீயன் நான்காம் பகுதியில் சொல்லப்படும்படி இல்லாவிட்டால், வேதங்கள் சொல்வதெல்லாம் [தத்வமஸ்ஸி] என்பது பொருளற்றதாக அல்லவா ஆகிவிடும்!

    கயிறு பாம்பாகவும், முடிச்சு தலையாகவும், காற்றில் அது ஆடுவது பாம்பின் அசைவுபோலத் தோற்றமளிப்பதும், அதுவே இன்னொருவர் கண்ணுக்கு மாலையாகத் தோன்றுவதும் அவரவர் அறிவுக்குத் தகுந்த மயக்கம்தானே!

    அதுபோலத்தான் ஆத்மனும் விழிப்பு, கனவு, ஆழ்உறக்க நிலைக்குத் தகுந்தவாறு தோற்றத்தைத் தருகிறான்.

    பாட்டியின் விளக்கு ஒளி இருவிதப்பட்ட தோற்றங்கள் [பாம்பு, மாலை] தானாக அழிந்தொழிந்துபோவது போல, துரீய நிலையில் ஆத்மனின் மற்ற மூன்று தோற்றங்களும் தானாகவே மறைந்துபோகின்றன.  துரீய நிலையில் [அந்நிலையை அடைந்தவுடன்] வேறெந்த அறிவோ, முயற்சியோ தேவைப்படுவதில்லை —  ஏனெனில் அனைத்தும் தெளிவாகி விடுகிறது.

    இத் துரீய நிலை பற்றி அடுத்துக் காண்போம்…

     … இருப்பினும் ஐயம் எழுகிறது.

    “பாம்பு, மாலை, கயிறு, தேங்காய் நார் எல்லாம் ஒன்றே என்று சொல்லிவிடலாம்;  ஆயினும் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அறிந்த எல்லாம் மறைந்து போகின்றனவே!  அப்படியென்றால் ஆழ் உறக்கநிலைக்கான ப்ராக்ஞனைப் பற்றி  ஒன்றும் சொல்லவில்லையே!  ஆழ்உறக்கநிலையை யார் அறிவார்?” என்ற கேள்வி வைக்கப்படுகிறது.

    இல்லவே இல்லை என்கிறார் ஆதி சங்கரர்.  எப்படி?  ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குவோம்.

    தொலைகாட்சி அலறிக்கொண்டிருக்கிறது.  குழந்தைகள் விளையாட்டில் ஒருவரோடொருவர் அடித்துக்கொண்டு உரக்க ஒலி எழுப்புகிறார்கள்.  வீட்டில் இருப்பவர்கள் உரக்கப் பேசிக்கொண்டிறிருக்கிறார்கள்.

    இதை எவற்றையும் பொருட்படுத்தாது கனவற்ற ஆழ்உறக்க நிலையில்  ஒருவர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி பேரிரைச்சலில் சோஃபாவில் உறங்குகிறாரே, படுக்கையில் படுத்து நிம்மதியாக உறங்கட்டும் என்று கரிசனத்துடன் எழுப்புகிறாள் அவரது மனைவி.

    “இந்த இரைச்சலில் எப்படி உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது?  படுக்கையில் போய்ப் படுங்கள்!” என்று அன்புடன் கடிந்துகொள்கிறாள்.

    “நான் அசந்து, ஆனந்தமாகத் தூங்கிவிட்டேன்.  இகலோகமோ, பரலோகமோ, எதுவுமே எனக்குத் தெரியவில்லை.” என்று பதில் வருகிறது.

    தன்னுணர்வு இல்லாவிட்டால் —  தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமலும், உறங்கும்போது தான் என்ற உணர்வு இல்லாமல் இருந்தும் —  ஆழ்ந்து தூங்கினோம் என்று எப்படி உணரமுடியும்?  அந்தத் தன்னுணர்வு – ஆத்மனின் மூன்றாம் பகுதியான ப்ராக்ஞன்தானே – அந்த “ஆழ்ந்து உறங்கினேன்” என்ற முடிவை, ஒரு சாட்சியாக இருந்து கூறமுடியும்!

    ஆனால் நான்காம் பகுதியான துரியனை அப்படி உணர முடியாது.  அங்கு நான் என்ற உணர்வே இல்லை.  அதனால்தான் அவர் காண முடியாதவன், எண்ணங்களால், நாம் வெளியுலகில் கண்டு அறிந்து, செயல்களால் உணர்ந்து அறியமுடியாதவன் [அவ்வியவஹார்யம்], வாதங்கள் மூலமோ, கல்வி மூலமோ அறிய இயலாதவன்.  அதே ஆத்மன்தான் விழித்திருக்கும்போது வைச்வாநரனாகவும், கனவுலகில் ஒளிபொருந்திய தைஜஸனாகவும், ஆழ் உறக்கத்தில் எண்ணக்குவியலான, அனைத்தையும் அறிந்த ப்ராக்ஞனாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட துரீயனாக [ஒரே பரம்பொருளின் – பரமாத்வாவின் — பிரம்மனின் {பிரம்மா அல்ல} — பொழிப்பாக, கருத்துரையாக, சாரமாக இருக்கிறான் [ஏக ஆத்ம ப்ரத்யய ஸாரம்].  இது மறை கூறும், “அஹம் ஏவ ப்ரஹ்மன்; ப்ரஹ்ம ப்ராஹ்மைவ அஹமஸ்மி [நானே பரம்பொருள்; பரம்பொருளுக்கும் பரம்பொருளாக நான் இருக்கிறேன்]” கூற்றை உறுதி செய்கிறது.

    எல்லாவிதமான பண்புகளும், குணங்களும், கற்பிதங்களும், ஆத்மனின் மூன்று நிலைகளும், அவற்றின் “உணர்வுகளின் நிலைப்பாடுகளும்” துரீய நிலையில் மறுக்கப்படுவதால், துரீயனிடம் புலன்களால் உணரத்தக்க அனைத்தும் முடிவுறுகின்றன.  அதைத்தான் நிர்குணப் பிரம்மம் என்று ஆன்றோர் சொல்கிறார்கள்.

    இந்நிலை அமைதியானது [சாந்தம்], இந்நிலை மங்கலமானது [சிவம்],

    இந்நிலை உண்டு, இல்லை,  இடைப்பட்டது என்ற நிலைகள் எதுவும் இல்லாததால் “இரண்டற்றது [அத்துவைதம்] என்று பகரப்படுகிறது.

    அதனாலேயே இந்நிலை நான்காம் நிலை [துரீய, சதுர்த்த] என்று அறியப்படுகிறது. இந்நிலை மற்ற மூன்று தோற்ற {தோற்றம் அளிக்கும்] நிலைகளிலிருந்து தனித்தன்மை வாய்ந்தது.  இதுவே ஆத்மன் [பரமாத்மா]!

    இப்படிப்பட்ட ஆத்மனை, பரம்பொருளை, பிரம்மனை அறியவேண்டும் என்று நிறைவு செய்கிறது.

    அடுத்து என்ன?

    mu 8

    — 8

    சேஅயமாத்மாஅத்4யக்ஷரமோங்காரோ அதி4மாத்ரம் பாதா3 மாத்ரா மாத்ராஸ்’ச பாதா3 அகார உகாரோ மகார இதி ||                                                                                            

      8

    அந்த ஆத்மனே ஒரு அழிவற்றதே [சொல்லே] ஓங்காரம், அதன் மூலப்பொருளே [தனித்தனி எழுத்துக்களே] கால்கள்;  அகாரம் உகாரம் மகாரமேன்னும் எழுத்துக்களே கால்கள்.            

    8

    பதவுரை: அயம் இந்த[இப்படிப்பட்ட]; ஸ: – அவன்; ஆத்மா – ஆத்மன்;  அத்4யக்ஷரம் – மேற்சொன்ன அழிவற்ற [சொல்லான]; அதி4மாத்ரம் – மேற்சொன்ன எழுத்துக்களான; ஓங்காரம் – ஓம் என்னும் ஒலி; மாத்ரா பாதா3: – எழுத்துக்களே பாதங்கள்;  அகார உகார மகார இதி – அ, உ, ம் என்னும் ஒலிகளான ; மாத்ராஸ்’ச – எழுத்துக்களும் ; பாதா:3 –  கால்கள்.

    விளக்கம்இப்பொழுது ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கும் ஆத்மனுக்கும் உள்ள தொடர்பு சுட்டப்படுகிறது.  நான்கு பகுதிகளாகத் தோன்றும், பிரிக்கவே முடியாத {அத்துவைதமான], ஆத்மாவே ஓங்காரம், அது அ, உ, ம என்ற மூன்று எழுத்துகளை உடையது.  இந்த எழுத்துக்களே அதன் கால்கள்.  என்று முடிக்கிறது.

    அதாவது ஓம் எனப்படும், அ, உ, ம் அடங்கிய சொல்லே ஆத்மன், அதுவே பரம்பொருள் என்று ஓங்காரத்தின் நிலைப்பாட்டையும், அது என்ன என்பதையும் சுருக்கமாகச் சொல்கிறது.  ஓம் எந்த எழுத்துக்களைத் தனது கால்களாகக் கொண்டிருக்கிறது என்றும் காட்டுகிறது…

    … ஓம் என்னும் இந்தப் பிரணவ மந்திரத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்பதைக் கண்ணுறுவோம். 

    ஓம் என்னும் இந்த மந்திரமே மற்றபிற மந்திரங்களுக்கு மூலமாகும்.  இதுதான் எதற்கும் தோற்றுவாய்.  இதை வடமொழியில் பீ3ஜ[விதை] மந்திரம் என்று சொல்வார்கள்.  இது வேதங்களாயினும், தந்திரங்களாயினும் சரி, அனைத்துக்கும் மூலமானது.

    ஆன்மீகத்திற்கு வருமுன் அறிவியல்கொண்டு ஓம் ஏன் அனைத்துக்கும் மூலமாக அமைகிறது என்று எண்ணிப்பார்ப்போம்.

    ‘அ’ என்ற ஒலியை எழுப்புவதற்கு நமது வயிற்றிலிருந்து எழும் ‘உதானன்’ என்னும் காற்று, கழுத்தை அடைந்தவுடன் வாய் மெல்லத் திறக்கிறது.  உதானனான காற்று சிறிது வெளியேறியவுடன் ‘அ’ என்ற ஒலி பிறக்கிறது.  அதுவே முதல் ஒலி.  அதைத்தான் மாண்டூக்கிய உபநிஷத்து ஓங்காரத்தின் முதல் கால் என்று இயம்புகிறது.

    முயற்சியுள் அஆ அங்காப் புடைய – (நன்னூல்: பா 76)

    அடுத்தபடியாக ‘உ’ என்ற ஒலியை உன்னிப்பாகக் கவனிப்போம். அதற்கும் வயிற்றிலிருந்து வரும் காற்று உதடுகள் குவிந்து வாய் வழியாக வெளியேறுவதனால் அவ்வொலி பிறக்கிறது.

    உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவே   (நன்னூல்: பா 78)

    ‘ம்’ என்ற ஒலி எழும்போது வாய் திறப்பதில்லை;  மாறாக மூடிக்கொள்கிறது.  தலையில் ஒருவித அதிர்வு உண்டாகிறது.  அது ஒங்காரத்தின்  மூன்றாவது கால் ஆகிறது.

    மீ கீழிதழுறப் பம்மப் பிறக்கும்   (நன்னூல்: பா 81)

    அகர முதல எழுத்தெல்லாம்’ என்னும் குறள் கூறுவதுபோல எந்த ஒரு மொழியை எடுத்துக் கொண்டாலும், அதனை ஒலிக்கும் முதல் முயற்சிக்கு நமது உயிர்க்காற்றான உதானன் நமது வயிற்றிலிருந்து வெளியேறி, திறந்த வாயின் மூலம் வெளிவருவதாலே ‘அ’ பிறக்கிறது.  ‘அ’ வுக்கும் ‘உ’வுக்கும், ‘ம்’மிற்கும் இடைப்பட்ட ஒலிகளே எந்த ஒரு மொழியின் ஒலிகளாக இருக்க இயலும்.

    ‘ம்’ என்று வாயை மூடியபின் ஒலிகள் இல்லை. ஒலிகள் இல்லையேல் மொழிகள் இல்லை.  மொழிகள் இல்லையேல் கருத்துப் பரிமாற்றம் இல்லை.  கருத்துப் பரிமாற்றம் இல்லையேல் எந்தச் செயல்பாடும் இல்லை.

    இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மட்டுமல்ல, இவ்வண்டத்தில் இயங்கும் எதற்கும் பொதுவானதே.  இயந்திரங்கள் இயங்கும்போது எழும் ஒலி, சக்கரங்கள் சுழலும்போது எழும் ‘ம்’ என்ற பேரொலி,  எப்படிப்பட்ட மொழியில் இருந்து பேசினாலும் தூரத்தில் இருந்து கேட்கும்போது இரைச்சலாகக் காதில் விழும் ஒலி ‘ம்’ ஆகத்தான் இருக்கும்.

    புயற்காற்று சுழற்றி அடிக்கும்போது நாம் கேட்கும் ‘உய்’ என்ற ஒளியின் முதலெழுத்து ‘உ’.

    தனிமையில் அமர்ந்து நாம் நம்மைச் சுற்றிக் கேட்கும் ஒலி ஓங்காரத்தின் முடிவாகவே இருக்கும்.

    அதற்கும் மேலே சென்று உள்ளினால், ஓம் என்பது ஒரு ஒலியோ, மொழிகளின் சுருக்கமான வடிவமோ, எல்லா மந்திரங்களிக்கும் மூலமோ மட்டும் அல்ல, இதற்கும் மேலான ஒன்று.  அது தனித்து நிற்பது, தானாக இருப்பது, அது இயலுலக அண்டத்தின் அதிர்வாகும் [cosmic vibration].

    நாம் எதையும், எவற்றையும், அனைத்தையும் பெயரிட்டே அழைக்கிறோம். இறைவனுக்கும் பலவிதமான பெயர்களைச் சூட்டியே துதித்து வழிபடுகிறோம்.

    அதுபோலவே ஓம் என்னும் சொல்லும், இறைவனின் பெயரைப்போலவே, இறைவனை விளக்குகிறது. அதன் தனித் தன்மையால் இறைவனை ஆழ்ந்து நினைக்க, தியானம் செய்ய சக்திகொடுக்கிறது.

    உபநிஷத்தின் முதலில் ‘ஓம்’தான் எல்லாம் — அதுவே ஆனது, ஆக்குவது, ஆகப்போவது எல்லாமே, –முக்காலத்தையும் கடந்தது — ஓம்தான் இறைவன் [பரம்பொருள், பிரம்மம்] என்று சொல்லப்பட்ட்டது. எனவே ஓம் பரம்பொருளின் பெயர் என்று அறியப்பட்டது.

    பின்னர் பரம்பொருளான இறைவனே ஆத்மன் என்றுரைத்து, ஆத்மன் நான்கு பகுதிகளாக இருக்கிறான் என்றும், அவை என்னென்னவென்றும் விளக்கப்பட்டது.  ஓம்தான் ஆத்மன் என்று பொருள்கொண்டதால்,  ஆத்மனைப் பற்றிய விளக்கம் தரப்பட்டது.

    இப்பொழுது ஓம் என்பதைச் சொல்லாக எடுத்துக் கொண்டு அந்தச் சொல்லின் வடிவம் எந்த எழுத்துக்களால் ஆகியது எனக் காட்டப்பட்டது.

    மிகவும் உள்ளி அறியும் உண்மைகளை — ஒன்றன்மேல் ஒன்றாக மூடிமறைக்கும் புலனறிவாலும் நனவு, கனவு, ஆழ்உறக்க நிலைகளால் ஏற்படும் மயக்கத்தாலும் உள்ள இயலாது என்ற காரணத்தாலேயே ஓம் என்று அழிவற்ற ஒன்றை மட்டுமே யாவுங்கடந்த மெய்மையின் வடிவமாக உள்ளவேண்டும் என்று உரைக்கப்படுகிறது…

     mu 9

    —  9

     ஜாக்ரிதஸ்தா2னோ வைஸ்’வாநரோஅகார: ப்ரத2மா மாத்ரா ஆப்தேராதி3மத்வாத்3வாப்வாப்னோதி ஹ வை ஸர்வான் காமானாதி3ஸ்ச ப4வதி ய ஏவம் வேத ||                                              

      —  9

     [எங்கும்] நிறைந்திருப்பதாலும், முதலிலிருப்பதாலும், விழித்திருக்கும் நிலையிலுள்ள வைஸ்வாநரனே முதலெழுத்தான [ஒலியான] அகாரமாகிறான்.    எவன் இதை அறிகிறானோ அவன் எல்லா விருப்பங்களையும் அடைந்து, முதன்மையானவன் ஆகிறான்.                                    

      – 9

     பதவுரை: ஆப்தே: [எங்கும்] நிறைந்திருப்பதாலும்;; ஆதிமத்வாது3முதன்மையாக இருப்பதாலும்; ப்ரதமா மாத்ரா – முதல் ஒலியான [எழுத்தான];  அகார: – ஆகாரமாக [அ என்னும் ஒலியாக]; ஜாக்ரிதஸ்தா2ன; – விழிப்பு நிலையிலிருக்கும்; வைஸ்வாநர:  – ஓவைஸ்வாநரன் [ஆகிறான்]; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஸர்வானு காமானு – அனைத்து விருப்பங்களையும்; ஹ வை ஆப்நோதி – நிச்சயம் அடைகிறான்; ஆதி3ஸ்’ச – முதன்மையானவனும்; 4வதி –  ஆகிறான்..

    விளக்கம்ஓம் என்னும் மந்திரத்தின் முதல் ஒலியான ‘அ’வுக்கும் ஆத்மனின் முதல் பகுதிக்கும் உள்ள தொடர்பு இங்கு சொல்லப்படுகிறது.  உபநிஷத்தின் மூன்றாவது சொற்றொடரில் ஆத்மனின் முதல் பகுதியான – விழித்திருக்கும் — அதாவது நனவு நிலையில் செயல்படும் வைஸ்வாநரனே ‘அ’ என்னும் ஒலி என்று தெரிவிக்கப்படுகிறது.

    எதனால்?

    ‘அ’காரம் ஓமின் முதல் எழுத்து.  வைஸ்வாநரன் ஆத்மனின் முதல் பகுதி.avaisvanaaran

    அதுசரி, முதல் எழுத்து, முதல் பகுதி என்பதெல்லாம் சரிதான்.  இதைத்தவிர வேறென்ன விளக்கம் எனற கேள்வி நமது மனத்தில் எழுகிறது.

    உடனே அதற்கு விடை கொடுக்கப்படுகிறது:

    எங்கும் நிறைந்திருப்பதாலும் என்பதே அது.

    அது எப்படி?

    நாம் [ஆத்மன்] விழித்திருக்கும்போது எங்கும் நிறைந்திருக்கும் இவ்வண்டம் நமக்குப் புலப்படுகிறது.  எல்லா அறிவுகளும் நமது ஐம்பொறிகளாலும் [கண், காதும், மூக்கு, வாய், தொடும் உணர்வைத்தரும் உடற்பகுதி], ஐம்புலன்களாலும் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்] நமக்கு வந்து சேருகின்றன.  தனி மனிதராக நம்மால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும், அண்டத்தில் இங்கேங்கெனாதாடி எங்கும் பரவி இருக்கும் திட, திரவ காற்றுப் பொருள்களாக இருக்கும் அனைத்தையும், பலகோடி, நூறுகோடி உயிரினங்களாக இருந்து அறிந்து கொள்கிறோம்.

    மேலும், ஒலியே அறிவு.  அந்த ஒலி மொழியாகப் பரிணமிக்கிறது.  மொழி தோன்றுவதற்குக் காரணமாக நாம் வாயைத் திறக்கும்போது முதலில் கிளம்பும் ஒலி ‘அ’ தான்.  அதுதான் முதல் உயிர் ஒலி, முதல் உயிரெழுத்து.  அதைத்தான் வள்ளுவர் பெருமான் “அகர முதல எழுத்தெல்லாம்” என்று திருக்குறளைத் துவங்குகிறார்.

    sivasakthi

    காளிதாசனும் “சொல்லும் பொருளும்போல இணைந்திருப்பவர்கள் [வாக3ர்த்தா2விவ சம்ப்ருக்த்தௌ]” என்று இறைவனையும், இறைவியையும் வணங்கித் தனது ரகுவம்ச மகாகாவியத்தைத் துவங்குகிறான்.

    இப்படிச் சொன்னவுடனேயே இதை எவன் அறிகிறானோ, அவன் எல்லா விருப்பங்களையும், முதன்மை நிலையையும் அடைகிறான் என்றும் உபநிஷத்து சொல்கிறதே, இப்பொழுது நாம் அகாரம்தான் வைஸ்வாநரன் என்று அறிந்துகொண்டோமே.  நமது விருப்பங்கள் நிறைவேறுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

    இப்படிக் கேட்பதும், “நிலத்தை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும், அதை அறிபவனுக்கு எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்!”.என்று எழுதியிருப்பதைப் படித்துவிட்டு, “எங்கே செல்வம்?” என்று கேட்பதைப் போலத்தான்.

    குழப்பமாக இருக்கிறதா?  இதில் குழப்பம் எதுவும் இல்லை.

    நிலத்தைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும்.  எனவே, முதலில் எங்கு தோண்டினால் தண்ணீர் நிறையக் கிடைக்கும் என்று அறியவேண்டும்.  அதற்குப் பிறகு தோண்டுவது எப்படி, அதற்கு என்ன கருவிகள் தேவை, எவ்வளவு ஆழம் தோண்டவேண்டும், தோண்டியபிறகு கிடைக்கும் தண்ணீரை எப்படி வெளிக்கொணர்வது, அதை எப்படிச் சேமிப்பது, அதனால் எவற்றை விளைவிக்கலாம் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

    அதன் பிறகும் தண்ணீரின் இதர பல பயன்களை அறிந்து அதற்கேற்பப் பயன் படுத்தினால், பயிர்கள் விளையும், விடுகளைக் கட்டத் தண்ணீர் பயன்படும், நாம் உணவு சமைக்கத் தண்ணீர் உதவும் என்று பலப்பல விஷயங்களைத் தெரிந்து அதன்படி செயல்படுத்தினால் எல்லாச் செல்வங்களையும் அடையலாம்.

    அதைப்போலத்தான், அகரத்தை அறிபவன் அனைத்து விருப்பங்களையும் அடையலாம் எனபது.

    நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!

    அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!

    அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

    ***

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 169

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி அடிகள் மாதரிக்கு உரைத்தல்

    தவத்தோர் தரும் அடைக்கலமானது
    எளிமையாகச் சிறியதாகத் தோன்றினாலும்  garden 1
    அது பேரின்பம் தரும்
    அதை நான் விவரிக்கிறேன்
    நீ கேட்பாயாக!

    தோட்டங்கள் பல உள்ள
    காவிரிப்பூம்பட்டினத்திற்குள்
    மலர்கள் விரிந்த அசோக மரத்தின்
    பொதுத்தன்மை நீங்கிய நிழலிடத்தில்
    நோன்பிருக்கும் பலரும்
    ஒன்றுசேர்ந்து அமைத்திட்ட
    ஒளிபொருந்திய காந்தக்கல்
    மேடை ஒன்று இருக்கும்
    அதன்மேல் எழுந்தருளி
    அறவுரைகள் கூறும்
    சாரணர் முன்பாக…

    வானவில் போன்ற ஒளிதரும்
    வண்ணமேனியை உடையவனாய்,
    பூமாலைகள் மணிமாலைகள் அணிந்தவனாய்,
    பொன் அணிகளும் பூண்டவனாய்,
    இவ்வுலக மக்கள் யாரும் காணாதவனாய்,
    தேவர் மட்டுமே கண்டு தொழும்
    தெய்வத்தின் வடிவம் உடையவனாய்த்
    தேவமகன் ஒருவன் வந்து நின்றான்.
    அவனுடைய ஒருபாகத்துக் கை
    கரிய விரல்களை உடைய
    குரங்கின் கை போலக் காணப்பட்டது.

    உலக நோன்பிகள் சாரணரை வணங்கி
    “இவ்விடத்தில் இத்தேவன்
    வருகை தந்தது எதற்காக?”எனக் கேட்க,
    சாரணர் தலைவனும் பின்வருமாறு கூறலானான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 149 – 162

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

     படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    மாடத் திலேகண்ணன், மாடத் திலேமழைக்கு,
    மாடத் தனையும் மிரளாது, -கூடஸ்த்தன்,
    கால்கனி உண்ண கறவைக்(கு) இடம்கொடுத்த,
    பால்கனிகோ வர்த்தனன் காண் ….கிரேசி மோகன்….

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 8, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு செல்வி ராதிகா கண்ணன் அவர்கள்

    Radhika Kannan

    அன்பு, அக்கறை, ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழவேண்டும் என்ற கொள்கையை உடையவர் செல்வி ராதிகா கண்ணன். இந்த ஆண்டு அமெரிக்காவின் பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California, Berkeley) பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும், இயற்கைவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை சிறப்புப் பாடமாகவும் படித்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் பட்டதாரி ராதிகா. இவர் இந்த ஆண்டு பட்டம்பெறும் மாணவர்களில் பல்கலைக்கழத்தின் தலைசிறந்த இளங்கலைப் பட்டதாரி (the most distinguished graduating senior on campus) என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும், பதக்கமும், பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றும் மிகப்பெரிய கவுரவத்தையும் பெற்றார். இத்தகுதி வெறும் முதன்மை மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதல்ல. கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதுடன், திறமைசாலியாகவும், சமூக அக்கறை கொண்ட ஒருவரே இந்தச் சிறப்பைப் பெறுவார். இந்த ஆண்டு ராதிகா உட்பட மேலும் இரண்டு மாணவரும், இரண்டு மாணவியரும் இந்த சிறப்பிற்காகப் பல்கலைக் கழகத்தின் சிறப்பு விருதுப் போட்டியில் இடம் பிடித்திருந்தார்கள். இவரைப் பரிந்துரைத்த ஆசிரியர்கள் யாவருமே இவர் அறிவாளி மட்டுமல்ல, திறமையும் மனஉறுதியும் கொண்டவர், தான் வாழும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புபவர், பிறர் நலனில் அக்கறை கொண்டு உதவும் குணம் நிறைந்தவர் என்று பாராட்டி எழுதியிருந்தார்கள். எனவே, அவர்களின் பரிந்துரைக்கேற்ப பல்கலைக்கழகத்தின் சிறந்த பட்டதாரி என்று ராதிகாவே தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பட்டமளிப்புவிழா சிறப்புரையில் கல்வியில் வெற்றி பெறுவதில் மட்டும் மகிழ்ச்சி கிட்டிவிடாது.படித்து முடித்து பட்டம் பெறும் பொழுது அடையும் மகிழ்ச்சியை விடவும் சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் உதவி வாழ்வதே மகிழ்ச்சி தருவது என்று உரையைத் துவக்கிய ராதிகா, பட்டம் பெறும் நாம் நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு, சமுதாயத்திற்கு உதவும் அமைப்புகளை உருவாக்க வேண்டும், நாம் வாழும் சமுதாயத்திற்கு நமது கடமையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி சிந்திப்போம் என்று குறிப்பிட்டு சொற்பொழிவை நிறைவு செய்தார். இவரது சாதனையைப் பாராட்டி இவ்வார வல்லமையாளராக செல்வி ராதிகா கண்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரும் கவிஞருமான திரு. ஜெயபாரதன் அவர்கள், அவருக்கும் வல்லமைக் குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

    இருபத்தியொரு வயதாகும் ராதிகா கண்ணன் மும்பையில் பிறந்த தமிழ்மக்கள். மென்பொருள் துறையில் ஒரு தொழிலதிபரான திரு. கண்ணனுக்கும், ஆசிரியையான தாய் கீதாஞ்சலிக்கும் இவர் ஒரே மகள், இவரது மூன்று வயதிலேயே குடும்பம் சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தது. பிறகு குறைந்தது ஆறுமுறையாவது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் மாறி மாறி குடி பெயரும் சூழ்நிலை இவர் குடும்பத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொருமுறையும் புதிய பள்ளி, புதிய நண்பர்கள், வாழும் சூழ்நிலை என இவர் எதிர்கொண்ட மாற்றங்கள் இவரை சூழ்நிலைக்கேற்ப விரைவில் தன்னை மாற்றிக் கொண்டு வாழும் முறைக்குப் பழக்கப்படுத்தியது. ராதிகா தனது தாயைப் போலவே பாரத நாட்டியமும் கற்றார். தாயும் மகளும் ஒரே நடன ஆசிரியரிடம் பயின்றவர்கள்.

    Radhika Kannan2

    இவரது கலை ஆர்வம், கல்வியில் சாதனைகள், பலதுறைகளிலும் பங்களிப்பு, சமூக அக்கறை என யாவற்றுக்கும் காரணம் இவரது அன்னையே. இவர் தாயை தனது தோழி போன்று உணரும் உறவின் நெருக்கம் கொண்டவர். ராதிகாவும் அவரது அன்னையும் கலந்தாலோசித்து ராதிகாவின் ஆர்வம் திறமைகளின் அடிப்படையில் இவரது எதிர்காலத் திட்டத்தை வகுத்தனர். பொருளாதாரம், சூழலியலின் பொருளாதாரக் கொள்கைகள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டம் பயிலுதல் என்று திட்டமிடப்பட்ட பாதையைக் காட்டினார் தாய் கீதாஞ்சலி. பள்ளிக்கல்வியைத் தவிர பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கவும் இவரது அன்னையால் ராதிகா ஊக்குவிக்கப்பட்டார்.

    பள்ளியில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு, முதன்மை மதிப்பெண்கள், ஐக்கியநாடுகளின் சபையில் மாதிரி பயிற்சியில் ஈடுபாடு, என ராதிகாவும் பலதுறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டு டிசம்பரில் தேர்வுகள் எழுதும் பொழுது இவரது அன்னை தனக்கு ஃப்ளு போன்ற காய்ச்சலினால் உடல்நலக் குறைவு என தொலைபேசியில் தெரிவித்தார். கவலையுடன் உடனே வரவா எனக் கேட்ட இவரிடம் தேர்வு முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். ஒரு புதன் கிழமை பேசியவர், என்ன உடல்நலக்குறைவு என்று கண்டறியும் முன்னர் மூன்று நாட்களுக்குள், ராதிகா ஞாயிறன்று சென்னை சென்று சேர்வதற்குள் 45 வயதில் எதிர்பாராதவிதமாக கீதாஞ்சலி இறந்துவிட்டார். பயணத்தில் வழியில் இணைப்பு விமானத்திற்காக ஆர்ம்ஸ்டர்டாம் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுது, நண்பர் ஒருவர் அனுப்பிய இரங்கல் செய்தியின் மூலம் தாய் மறைந்த செய்தி அறிந்து இடிந்து போனார். திரும்பி அமெரிக்கா வர ஆர்வமற்று போனவரை குடும்பத்தினர் வற்புறுத்தி படிப்பைத் தொடர அனுப்பி வைத்தார்கள். ஆசிரியர்களும், உடன் பயிலும் மாணவர்களும் இவர் நிலையில் அக்கறைகொண்டு மிகவும் உதவிசெய்துள்ளார்கள்.

    தனது தாய் மறைந்த துயரத்தில் இருந்து மீண்டுவர ஒரேவழி தனது தாய் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிப்பதுதான் என்ற உறுதி கொண்டு கல்வியில் சிறந்த மாணவியாகவே தொடர்ந்து பயின்று வெற்றி பெற்றுள்ளார். தான் பங்கு பெற்ற சங்கங்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டி பிற மாணவர்களை அவற்றிற்கு அறிமுகப்படுத்துவதும், தானே ஒரு முன்மாதிரியாகவும் விளங்கி அவர்களை ராதிகா வழிநடத்துவதும் இவரது ஆசிரியர்களைக் கவர்ந்தது. தனது பாடத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய முற்பட்டார். தென்னிந்திய உழவர்கள் பருவமழைக்கேற்ப தக்க பயிர்களை பயிரிடத் தவறுகிறார்கள். அதனால் இயற்கைக்கு ஏற்ப பயிரிடாத காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கட்டுரையை சமர்ப்பித்தார். இக்கட்டுரை இவரது ஆசிரியரால் பொருளாதாரத்தில் முனைவர் ஆய்விற்கான சிறந்த ஆய்வுக் கருத்தினைக் கொண்டது என்று பாராட்டப்பட்டது. தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வெற்றிகரமாக படிப்பைமுடித்த ராதிகா, தனது அன்னையைப் போற்றும் எண்ணத்தில் அவரது அன்னையின் நீலவண்ண சேலையை பட்டமளிப்பு நாளன்று அணிந்து பட்டமும் பெற்றுள்ளார்.

    Radhika Kannan graduating

    தனது குறிக்கோளைத் தொடரும் இவர் அடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் சுற்றுச்சூழல் கொள்கைகள் பற்றிய முதுகலைப் படிப்பும், பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் பற்றிய சட்டக்கல்வியும் பயில திட்டமிட்டுள்ளார். நாடுகளின் நிலையான தன்னிறைவு வளர்ச்சிக்கு பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகநிலை ஆகிய மூன்றையும் ஒன்றாக நோக்கி கொள்கைகள் வகுக்கவேண்டும் என்பதை நாட்டின் நலம் கருதுவோர் அறிவர். ராதிகாவும் அதே சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தனது பங்கையாற்ற தனது பயிற்சியையும் கல்வியையும் முன்னெடுத்துச் செல்வது பாராட்டிற்குரியது. ராதிகா ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்கும் தகுதிகளைப் பெற்றிருக்கிறார் என்பதை பெர்க்லி பல்கலைக்கழகமும் கண்டுணர்ந்து அவரைப் பாராட்டியுள்ள வேளையில் வல்லமைக் குழுவினரும் ராதிகாவை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    குறிப்பு:
    தகவல்களும் படங்களும் கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் கீழ்காணும் தளங்களில் இருந்தும், பல்கலையகழகத்தின் பட்டமளிப்பு விழா காணொளியில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.
    http://www.dailycal.org/2015/05/07/university-medal-winner-announced/
    http://newscenter.berkeley.edu/2015/05/04/medalist2015/
    https://www.youtube.com/watch?v=aB0Ku9J6jHg
    &
    https://www.linkedin.com/pub/radhika-kannan/93/aa0/b70
    http://abc7news.com/news/radhika-kannan-wins-uc-medal-as-top-graduating-senior/699929/

    Share
  • ஆட்டுக்குட்டி

    -ராதா மரியரத்தினம்

    நிறைந்த பசியெனக்கு
    அங்கொன்று இங்கொன்றாய்
    நுனிப் புல் மேய்கிறேன்
    வயிறு நிறையவில்லை
    சிறிது நேரம் இரை மீட்கலாம் என
    அமர்கிறேன் ஒரு மரத்தடியில்
    அமர்ந்தது என்ன மரம்
    எனத் தெரியாத நிலையில்
    சட்டென்று முதுகில் விழுகிறது
    அரச மரத்தின் சருகு ஒன்று
    ”எத்தனை ஞானிகளைக் கண்டேன்
    வா! உனக்கு ஞானத்தைப் போதிக்கிறேன்” என்றது

    இந்த அகண்ட பிரபஞ்சத்தில்
    ஏதுமறியா ஆட்டுக் குட்டியாய் நான்
    கூட்டத்தின் பின்னே செல்பவன் நான்
    பரிணாம வளர்ச்சியில் கூர்ப்பின் மூலம்
    இந்த ஆட்டுக் குட்டியின் உருவம் மாறிவிடப் போகிறதா என்ன?
    எனக்கு என்ன ஞானம் உண்டோ
    அது எனக்கு இருக்கிறதா என்று
    நினவுகளை அசை போட்டது ஆட்டுக் குட்டி
    பச்சயத்திலுள்ள மூலக் கூறுகள் பற்றியோ
    இல்லை இலையில் பச்சயம் உண்டு என்றோ
    அறிந்திருக்கத் தேவையில்லை
    ஞானம் என்பது அவரவர் இலக்கு, தேவை
    ஆற்றலைப் பொறுத்ததோ…
    அசை போட்ட நினைவுகளுடன்
    தூங்கிவிட்ட ஆட்டுக் குட்டிக்கு
    கையில்  அரிவாளுடன்
    மாலை அணிந்த பூசாரி
    கனவில் வர
    விழித்தது ஆட்டுக் குட்டி
    அதற்கு ஞானம் பிறந்து விட்டது!

    Share
  • “அவரிருதாள் போதாதோ”

          

                                   மீ.விசுவநாதன்

    சிறுவயது முதற்கொண்டு சிவனையும் மாலனையும்

    சிறுகாலைப் பொழுதுமுதல் சிந்தையிலே வைத்ததனால்

    சிறுமையாம் பேதங்கள் சேராத மதிகொடுத்து

    சிறுவநெனை நெறிசெய்த சிதம்பரனை மறப்பேனோ !     (4)

     

    குருடனாகிக் குலவழியைக் கொள்ளாத வீணான

    திருடநெனை,  திருத்திடவே தெளிந்தவோர் நல்ஞான

    குருதாளில் விழவைத்துத்  தொடர்பிறப்பை துண்டிக்க

    அருள்செய்த அம்மையப்பன் அவனின்றி யாரெனக்கே !   (8)

     

    சங்கரநா ராயணனைச்  சரியாகப் புரியவைத்த

    பங்கிற்கு குருபாதப் பரம்பரையைத் தொழவேண்டும் !

    எங்கிருந்து நினைத்தாலும் எளியனிவன் பரம்பரையை

    அங்கிருந்தே காத்தருள்வார் ! அவரிருதாள் போதாதோ!   (12)

     

    நெல்வயலில் இளங்காற்று நெற்றிதொட்டு வாழ்துதல்போல்

    பல்முளைக்கும் முன்னேயே பாலுடனே பண்பூட்டி

    நல்வயலாய்ப் பிறப்பினையே நற்பயிராய்ச் செய்தவளை

    எல்லையிலா பராசக்தி என்பதிலே பொய்யுண்டோ?             (16)

    (வாய்பாடு: காய், காய், காய், காய்….”.தரவு கொச்சக் கலிப்பா” )

                                          (08.06.2015)

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (16)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11422691_844431505611050_742462370_n

    133641499@N02_rதிரு. ஜபீஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • உள்ளம்

    -சரஸ்வதி ராசேந்திரன்

    எழில்   பாடும்   இளமங்கை  எழுந்தோடி   வந்தாள்
    எனைப்   பார்த்து    இனிமையுடன்   இதைக்  கேட்கலானாள்
    புனல்   பாடும்    பொய்கையில்  நீராடச்    சென்றேன்
    புரியாத   ஓர் ஒலியை  நான்  கேட்டு   நின்றேன்
    புனல்   பாடும்   பாட்டென்று  நீர்கூறி வந்தீர்
    புணர்ச்  சியையே  பாட்டாக்கித் தருகிற  தென்றீர்
    புரியாமல்  விழித்திட் டேன் புன்மை  அறி வால்
    புதிருடனே  சிரித்திட்  டீர்  பெரும்   புலவர்  நீரே

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    நெற்கதிர் தாழும்தரை நோக்கிச் செறிவுடைத்து
    நாளும் அறிவுடையர் ஆவரதுவொப்ப; பண்பில்
    பிறர்போற்றும் வல்லமையும் வாய்க்கும் – திருக்குறள்
    ஏகிநிற்பர் என்றும் துணை!                                                   valluvar

    துணைவரும் தெய்வம் தெரிவதில்லை ஊனுக்குத்
    தூயநல் எண்ணம் திருக்குறள் ஏகிடின்
    சாலவும் காணுனைக் காக்கும் வள்ளுவம்
    சேர்த்திடும் கோவில் உறை!

    உறையுள் யாரெனறிந் திட்டால் வரும்
    நிறைமதி காணறிவும் வாழ்வில் உயர்வும்
    தீந்தமிழ் பெற்றனள் வள்ளுவம் போலொரு
    சோதியும் உண்டு பெற!

    பெறவேண்டும் மானுடம் ஞாலத்தில் வேண்டுவன
    தேடிடும் சொர்க்கமும் கண்ணெதிர் வாழ்வாகச்
    சூளுரை வள்ளுவம் சொல்வழி அன்பினைக்
    கொண்டிட மாறும் உலகு!

    உலகுக்கு நீதிசொல் ஒப்பிலா நன்னெறியாம்
    மூலவரே முன்னின்று வார்த்தெடுத்த வள்ளுவம்
    போற்றிடக் காண்வரும் இன்பம் நிலைத்திட்டுச்
    சான்றுதர வாழும் மொழி!

    ​  

    Share
  • சிந்தையை மாற்றும் சினம்!

    -துஷ்யந்தி

    எனக்குள் இருக்கும்
    உன்னையும்
    உனக்குள் இருக்கும்
    என்னையும்                                                         anger
    பிரிய நினைத்தும் கூட
    இயற்கையெம்மை
    பிரிய விட்டதே இல்லை!

    உணர்வுகளில் ஓர்
    உந்தம்…
    நரம்புகளில் ஓர்
    கதிர்த் தாக்கம்…
    வார்த்தைகளில் ஓர்
    வன்மை…
    என் தோற்றத்தில்
    ஓர் கடுமை…
    மொத்தத்தில் ஓர்
    அந்நியனாய்!

    எதனால் என்னில்
    தோன்றினாய்…?
    எப்படி என்னை
    இயக்குகின்றாய்…?
    இதனைத் தேடி
    ஓய்ந்தவனாய்…
    இருக்கின்றேன் நானும்
    மண்ணிலே!

    மாற நினைக்கிறேன்
    மீண்டும் வருகிறாய்!
    என் முயற்சிகளில்
    முற்று வைக்கிறாய்!
    போதும் உன்னால்
    விளைந்தவை!

    உன்னால் எனக்கு
    அழிவே…
    உன் பிரிவால் கிடைக்கும்
    தெளிவே…
    மாற்றம் கண்டது என்
    அறிவே…
    புதுத் தோற்றம் பெற்றது என்
    உடலே!

    மறையோன் என்னில்
    இருக்கிறான்…
    உன் மாய வலைக்குள்
    விட்டிடான்…
    புத்தம் புதிதாய் என்னை
    மாற்றுவான்…
    அதனால்,
    மறந்துங்கூட என்னில்
    மீண்டும்
    மலர்ந்திடாதே கோபமே!

     

    Share
  • கறையான் நச்சரிப்பு!

    கவிஜி

    காலத் துருவை
    அகற்றும்
    அமிலக் கண்ணீரென
    ஒரு விவாகரத்தும்,
    மாற்றி யோசிக்கும்
    அடுத்த நூற்றாண்டின்
    மானுடப் பரிணாமமென
    ஒரு சேர்ந்து வாழ்தலும்,
    இரண்டிலும் இலைமறையாய்
    வளர்ந்து
    வரலாற்றுப் பிழையாகிக்
    கறையான் நச்சரிப்பில்
    ஊர்ந்து கிடக்கிறது
    மனதைச் சிதைத்த
    குழந்தைகள்!

     

    Share