-சரஸ்வதி ராசேந்திரன்

எழில்   பாடும்   இளமங்கை  எழுந்தோடி   வந்தாள்
எனைப்   பார்த்து    இனிமையுடன்   இதைக்  கேட்கலானாள்
புனல்   பாடும்    பொய்கையில்  நீராடச்    சென்றேன்
புரியாத   ஓர் ஒலியை  நான்  கேட்டு   நின்றேன்
புனல்   பாடும்   பாட்டென்று  நீர்கூறி வந்தீர்
புணர்ச்  சியையே  பாட்டாக்கித் தருகிற  தென்றீர்
புரியாமல்  விழித்திட் டேன் புன்மை  அறி வால்
புதிருடனே  சிரித்திட்  டீர்  பெரும்   புலவர்  நீரே

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *