சுரேஜமீ​​

நெற்கதிர் தாழும்தரை நோக்கிச் செறிவுடைத்து
நாளும் அறிவுடையர் ஆவரதுவொப்ப; பண்பில்
பிறர்போற்றும் வல்லமையும் வாய்க்கும் – திருக்குறள்
ஏகிநிற்பர் என்றும் துணை!                                                   valluvar

துணைவரும் தெய்வம் தெரிவதில்லை ஊனுக்குத்
தூயநல் எண்ணம் திருக்குறள் ஏகிடின்
சாலவும் காணுனைக் காக்கும் வள்ளுவம்
சேர்த்திடும் கோவில் உறை!

உறையுள் யாரெனறிந் திட்டால் வரும்
நிறைமதி காணறிவும் வாழ்வில் உயர்வும்
தீந்தமிழ் பெற்றனள் வள்ளுவம் போலொரு
சோதியும் உண்டு பெற!

பெறவேண்டும் மானுடம் ஞாலத்தில் வேண்டுவன
தேடிடும் சொர்க்கமும் கண்ணெதிர் வாழ்வாகச்
சூளுரை வள்ளுவம் சொல்வழி அன்பினைக்
கொண்டிட மாறும் உலகு!

உலகுக்கு நீதிசொல் ஒப்பிலா நன்னெறியாம்
மூலவரே முன்னின்று வார்த்தெடுத்த வள்ளுவம்
போற்றிடக் காண்வரும் இன்பம் நிலைத்திட்டுச்
சான்றுதர வாழும் மொழி!

​  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.