-துஷ்யந்தி

எனக்குள் இருக்கும்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும்                                                         anger
பிரிய நினைத்தும் கூட
இயற்கையெம்மை
பிரிய விட்டதே இல்லை!

உணர்வுகளில் ஓர்
உந்தம்…
நரம்புகளில் ஓர்
கதிர்த் தாக்கம்…
வார்த்தைகளில் ஓர்
வன்மை…
என் தோற்றத்தில்
ஓர் கடுமை…
மொத்தத்தில் ஓர்
அந்நியனாய்!

எதனால் என்னில்
தோன்றினாய்…?
எப்படி என்னை
இயக்குகின்றாய்…?
இதனைத் தேடி
ஓய்ந்தவனாய்…
இருக்கின்றேன் நானும்
மண்ணிலே!

மாற நினைக்கிறேன்
மீண்டும் வருகிறாய்!
என் முயற்சிகளில்
முற்று வைக்கிறாய்!
போதும் உன்னால்
விளைந்தவை!

உன்னால் எனக்கு
அழிவே…
உன் பிரிவால் கிடைக்கும்
தெளிவே…
மாற்றம் கண்டது என்
அறிவே…
புதுத் தோற்றம் பெற்றது என்
உடலே!

மறையோன் என்னில்
இருக்கிறான்…
உன் மாய வலைக்குள்
விட்டிடான்…
புத்தம் புதிதாய் என்னை
மாற்றுவான்…
அதனால்,
மறந்துங்கூட என்னில்
மீண்டும்
மலர்ந்திடாதே கோபமே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.