Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • பொங்கும் கடலோசை – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    பொங்கும் கடலோசை..

    கேளுங்கள் அன்பர்களே!

    hqdefaultஒரு பாடல் நம்மை அழைக்கிறது! தேவசுகம் தருகிறது! நாயகன் மனதளவில் சரிந்திருக்கும் நேரத்திலே நாயகி துணைவருகிறாள்! அவனை தூக்கிநிறுத்துகிறாள்! அவன் நெஞ்சம்நோக்கி ஒரு பச்சைக்கிளி பாட்டுப் பண் இசைக்கிறது! ஓ.. அந்த அழைப்பில்தான் எத்தனை உற்சாகம் ஊற்றெடுக்கிறது?

    ஜலதரங்கம் கலகலக்கத் தொடக்கம் பெறும் பாடலிது! அலைகளிடையே இசை ஒன்று உருவானால் அது எப்படிப் பேசுமோ.. அப்படிப் பேச வைத்திருக்கிறார்.. மெல்லிசை மன்னர் ம.சு.விஸ்வநாதன்.. மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுடன் லதா திரையில் தோன்ற.. இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர் மீனவ நண்பனுக்காக!

    கவிதை வரிகளை காற்றலையில் தவழவிடும் வித்தை அறிந்த கவிஞர் வாலியின் வார்த்தை முத்துக்கள்! அலைகளையேக் கடந்து வந்தால்தான் அமைதியான பயணம் வரும்! அன்புடனே அழைப்பு என்றால் அங்கேதான் காதல்வரும்!

    இத்தனை அற்புதக் கூட்டணியில் தானும் சேர்ந்து நாத லயத்தைத்தான் வழங்கியிருப்பவர் திருமதி.வாணி ஜெயராம்! துள்ளியெழும் வேகத்தை நம் உள்ளம்பெற வைக்கும் ஓர் இன்பப்பாடல்!

    அழகிய ஒளிப்பதிவுடன் அருமையாக திரையில் வந்த காதல் விருந்து! உள்ளம் துவண்டுவிழும் நேரத்தில் உங்கள் காதுகளில் விழுந்தால்.. மெல்லிசை மன்னர் இசையுடன் வீசிடும் கவிதை சாமரம்!

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை

    பச்சைக்கிளி ஒரு தோணியில்
    பக்கம் வரும் அதிகாலையில்
    மன்னவன் ஓடம் பார்த்ததோ
    மயக்கம் கொண்டு ஆடுதோ
    சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
    மயங்குவதேனோ –
    பொங்கும் கடலோசை

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை
    வெள்ளி அலை வந்து மோதலாம்
    செல்லும் வழி திசை மாறலாம்
    பொன் மலை காற்று வீசினால்
    படகு தாளம் போடலாம்
    நீரலை… மேடையில்… மீனவன் …
    நாடகம் நடிப்பதும் ஏனோ
    பொங்கும் கடலோசை

    தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
    கொஞ்சும் தமிழோசை

    பொங்கும் கடலோசை
    கொஞ்சும் தமிழோசை

    PONGUM KADALOSAI – MEENAVA NANBAN
    Share
  • தேசிய விருது பெறுகிறாய்.. தங்க மீன்களுக்காக..

     

    கவிஞர் காவிரி மைந்தன்

    kaviri

    எழுத்தை நீ சுவாசிக்கிறாய்… தமிழை நீ நேசிக்கிறாய்..kavir

    எனவேதான் எப்போதும் தமிழன்னை உன்னை மெச்சுகிறாள்!

    தமிழ்ப்பால் அருந்திடும் வாய்ப்பினை தவறாமல் தருகின்றாய்!

    தாய்ப்பாலுக்கு நிகராக தமிழினைக் கருதுகிறாய்!!

    இசையின் மடியில் தலை வைக்கும் இனிய நல்ல பல்லவிகள்!

    இமைபோல் கண்ணைத்தான் காக்கும் சுகம் சுகமான சரணங்கள்!

    பழகும் தமிழும் உன் பக்கம் வந்து பாக்கள் எழுதும் அழகைப் பார்க்கும்!

    பௌர்ணமி நிலவும் அங்கிருந்து பார்க்கும் இனிய தருணங்கள்!!

    அசையும் இசைதான் உன் பாதை.. அதில் நீ நடப்பது அழகுதான்!

    இசையும் வசப்படும் உன்னிடம் நீ எழுதிக் குவிக்கும் கவிதைதான்!

    உயரம் அதிகம் உள்ளவனே.. உன் உள்ளமும் அப்படி உயரம்தான்!

    விருதுகள் உன்னிடம் சரண்புகும்.. அவற்றுக்கும் உன்னைப் பிடிக்குமே!

    வாழ்த்துகள்…

    காவிரிமைந்தன்

    Share
  • முத்தமிழில் பாட வந்தேன்….

    கவிஞர் காவிரி மைந்தன்

    முத்தமிழில் பாட வந்தேன்….கவிஞர் பூவை செங்குட்டுவன்.. குன்னக்குடி வைத்யநாதன் வாணி ஜெயராம்…. ஏ.பி.நாகரஜன்

    மேல்நாட்டு மருமகள் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகரஜன் இயக்க.. இசையமைக்க குன்னக்குடி வைத்தியனாதன் பொறுப்பேற்க.. சங்கீதத்தில் கர்நாடக வித்வானாக.. விளங்கிய குன்னக்குடிக்கு இப்படம் எப்படி பொருந்தும் என்கிற வினாவை வில்முறித்த கதையாக்கி.. முத்திரை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். இசையில் மேல்நாட்டு மருமகள் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

    திரைக்கதையில் வருகின்ற கதாநாயகி ஆங்கில நாட்டிலிருந்து தமிழகம் வந்து நம் தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து பாடகியாய் மேடையில் தோன்றி தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்க்கடவுள் முருகனது சிறப்பையும் ஒருசேர பாராட்டி பண்ணிசைக்கும் பாடலாக..

    முருகன் Specialist என்று பட்டயம் தரலாம் என்னுமளவிற்கு சிறப்புற பாடல்கள் வழங்கி வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு மனதை மயக்கும் இசை குன்னக்குடி வைத்தியனாதன். சங்கீதக்கலாவாணி என்று சபைகளெல்லாம் புகழப்படும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரலில் இந்தப் பாடல் கந்தன் கருணையும் காட்டுகின்றது பாருங்கள்!

    மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலைப் பாடிய அதே குரல்.. முத்தமிழில் பாட வரும்போது கேட்டு மகிழாத உள்ளங்கள் ஏது? பூவையாரின் வரிகளில் உள்ள பொருள் யாவும் தமிழுக்குப் பெருமையும் கந்தனின் கருணையுமாய் தவழ்கின்ற கானமிது!

    வரம்பெற்ற மா கவிகள் வரைந்தளித்த பல்லாயிரம் செய்யுள்கள்.. மக்கள் மனதில் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை 16 வரிகளிலே வரையப்படும் ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தி விடுகிறது. எப்படி தெரியுமா? அதுவே இசையுடன் இணைந்த கவிதையின் பெருமை!!

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுமுகம்கொண்டுஆறுதல்தந்து
    கோடிநலம்காட்டும்குருபரனே

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்

    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    நாளும்முறையோடுநன்மைபலதேடி
    வாழவழிகூறும்திருக்குறளே முத்தமிழில்பாடவந்தேன்


    Muthamizhil Paada Vandhen – Melnattu Marumagal.flv
    Share
  • காதல் சிறகை காற்றினில் விரித்து

    கவிஞர் காவிரி மைந்தன்

    sddefault

    எண்ணிய வண்ணமெல்லாம் இதயம் பறக்க நினைக்கும் பருவம் இந்தக் காதல் பருவம்! வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதைப்போல் மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க உயிர்ப்பூ சிலிர்க்கும்! இன்னுமிதைப் பற்றி எத்தனையோ புலவர்கள்.. கவிஞர்கள்.. படைப்பாளிகள் கொட்டிக் கவிழ்த்தபின்னும் கொள்ளையாய் கிடக்கிறது இந்தக் காதல் சுரங்கம்! இதய அரங்கிலிருந்து துவங்கும் இந்த ரகசியப் பாதையில் இருவரின் சந்திப்பு.. இமைகளின் படபடப்பு! இயற்கையின் படைப்பில் ஜீவன் உள்ளது என்பதற்கு காதல் மட்டும்தான் சத்திய சாட்சி!!

    இளமையின் அரசல் புரசலான விஷயமல்ல.. இதயங்களின் பரிவர்த்தனை! ஆலாபனை! அன்பில் இருமலர்கள் ஒரே நேரத்தில் மலரும் விசித்திரம்! ஆனால் உண்மை!! கண்கள் நான்கும் கவிதை பாடும்! இமைகள் இருப்பது அப்போதுதான் இருவருக்கும் தெரியவரும்!! ஒரு முறை பார்வை நேரடியாய் விழுந்துவிட்டால் ஒரு கோடி கிடைத்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும்! மறுபார்வை பார்ப்பதற்குள் தடைகள் வந்துவிட்டால் மனமிரண்டும் தத்தளிக்கும்! மறு ஜென்மமே எடுக்கும்!

    எனக்காகப் பிறந்தவள் நீ என்றே பல்லவி பிறக்கும்!
    உனக்காகவே வாழ்கிறேன் நான் என்றே சரணம் தொடரும்!

    அன்பின் பிணைப்பை அப்படியே அர்த்தப்படுத்த எந்த மொழியிலும் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும் வலிமையில்லை! அனுபவத்தில் கண்டபின்னும் சொல்லச் சொன்னால் அனுபவித்துப் பார் என்றே வார்த்தை வரும்! சர்வ மதங்களின் கூட்டுப்பிரார்த்தனை நடத்த வேண்டுமென்றால் முதலில் காதல் மாநாடு போடுங்கள் – சர்வ மனங்களையும் இணைத்துவிடலாம்!

    கல்லால்.. சிமெண்ட்டால்.. இரும்பினால் எல்லாம் பாலங்கள் கட்டுவார்கள்.. காதலில் மட்டும்தான் எண்ணங்களால் பாலம் அமைத்திடலாம் என்கிறார் கண்ணதாசன் எனச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

    ஒரு முறை கவிஞர் வைரமுத்து வானொலியில் வழங்கிய தேன் கிண்ணத்திலிருந்து வார்த்தெடுத்த வார்த்தை முத்துக்கள் இதோ..

    “உன் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால்.. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு அனைவரும் விலகிச் சென்றுவிடுங்கள் என்றே கேட்பேன்!”

    அது என்ன? இப்பாடலை ஒலிபரப்பும்போது அந்த முள் ஒலித்தகட்டின்மீது சுற்றுகிறதா? இல்லை.. இதயத்தின் மீது சுற்றுகிறதா? அன்பர்களே.. ஒரு கவிஞனின் ரசனையில் இப்பாடல் பெற்றுள்ள இடம் பார்த்தீர்களா? காதல் ரசம் அல்ல! அன்பின் மழை! காம ஊற்றல்ல! பரிவின் உச்சம்!!

    எண்ணங்களாலே பாலம் அமைத்து

    இரவும் பகலும் நடக்கவா

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இரு கை கொண்டு வணங்கவா

    கண்ணதாசனே.. இன்றும் என்றும் உன்னை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஏன் தெரியுமா?

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

    அழுதால் கொஞ்சம் நிம்மதி

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    அதுதான் காதல் சன்னதி

    யாரிடமிருந்து வரும் இவ்வார்த்தைகள்? கடல் வானம் உள்ள வரை என்பார்கள்.. உறவும் பிரிவும் உள்ளவரை உன் பாடல்கள் உலா வரும் என்றே போற்றி மகிழ்கிறேன்!

    தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா

    ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ

    இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே

    சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    எண்ணங்களாலே பாலம் அமைத்து

    இரவும் பகலும் நடக்கவா

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இரு கை கொண்டு வணங்கவா

    இரு கை கொண்டு வணங்கவா

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்

    முகத்தை மறைத்தல் வேண்டுமா

    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

    பரம்பரை நாணம் தோன்றுமா

    பரம்பரை நாணம் தோன்றுமா

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

    அழுதால் கொஞ்சம் நிம்மதி

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    அதுதான் காதல் சன்னதி

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    பாலும் பழமும் திரைப்படம் 1961 – கவியரசு கண்ணதாசன் –
    விஸ்வநாதன் ராமமூர்த்தி – ஏ.பீம்சிங் –
    சிவாஜி கணேசன் – பி.சரோஜாதேவி (சரவணா பிலிம்ஸ்)..


    http://www.youtube.com/watch?v=ZHwf36cAmK4

    Share
  • மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ?

    கவிஞர் காவிரி மைந்தன்

    மூன்றுதமிழ் தோன்றியதும் உன்னிடமோ? கவிஞர் வாலி

    தமிழக வரலாற்றில் அரசியலும் சினிமாவும் அளவின்றிப் பின்னிக் கிடக்கிறது. திரைத் துறையில் தடம் பதித்து மக்களுக்கு அறிமுகமானவர்கள் அரசியலிலும் கோலோச்சியது உலக வரலாற்றில் வேறெங்கும் கண்டிராத புதுமை! அதுபோலவே.. அரசியலில் வெற்றிகளை ஈட்டியவர்கள் – திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் பரிணாமம் காட்டினார்கள். இதிலே ஆச்சரியம் என்னவென்றால், அரசியிலில் எதிரும் புதிருமாக விளங்கிய இருபெரும் தலைவர்களுமே – தாங்கள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் எழுத ஒப்பந்தம் செய்தது ஒரே கவிஞரைத்தான்! அவர் கவிஞர் வாலி என்பது நிதர்சனமான உண்மை! ஒற்றை வரியில் கவிஞர் வாலி பாணியில் சொன்னால் “எனது தமிழ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது!”

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கவியரங்கம் ஒன்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் கவிஞர் வாலி பங்கேற்று தனது கவிதையில் “கூலிங்க்ளாஸ் போட்ட குறுந்தொகையே” என்று விழித்தபோது கலைஞரே ஆனந்தப் பரவசம் அடைந்தார். இப்படியெல்லாம் சொற்களைத் தொடர்பு படுத்தி பொருட்செரிவூட்ட முடியும் என்கிற வித்தகம் தெரிந்த வாலி அவர்களின் திரையுலக வெற்றி என்பது சத்தியமாக சாதாரண ஒன்றல்ல.. சரித்திர சாதனைதான்!

    கலைஞர் அவர்களின் மகன் மு.க. முது அவர்கள் நடித்து அணையா விளக்கு.. பூக்காரி… பிள்ளையோ பிள்ளை முதலான படங்கள் திரைக்கு வந்தன. அவற்றில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி அவர்களே! கலைஞரின் பிள்ளை நடிக்கும் படமோ – பிள்ளையோ பிள்ளை – பாடல்கள் எழுதித் தரும்படி கலைஞர் சொன்னபோது – காதல் பாடலின் பல்லவி ஒன்று இப்படி பிறக்கிறது.

    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீ
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ?

    இதிலுள்ள உள்ளடக்கம் கலைஞரைப் பெருமிதத்தில் ஆழ்த்தியதைச் சொல்லவும் வேண்டுமோ?

    மக்கள் திலகத்துடன் மிக நெருக்கமான கவிஞர் வாலியிடம் ஒருமுறை எம்.ஜி.ஆர். அவர்களே .. இப்பாடலைக் குறிப்பிட்டு இதுபோன்ற பாடல் எனக்கு எழுதித் தரக் கூடாதா? என்று கேட்டார் என்கிற அளவு இப்பாடல் ஈர்ப்பு தந்தது என்பதைவிட வேறு சிறப்புகள் எதற்கு?

    கவித்துவம் பாடல் முழுவதும் சலங்கை கட்டி ஆடுவதைப்போல் காதல் பாடலில் வேண்டும் சுகங்கள் அனைத்தும் டி.எம்.சௌந்தரராஜன் – பி. சுசீலா குரல்களில் – மெல்லிசை மன்னரின் இன்னிசையில் – மு.க.முத்து – லக்ஷ்மி திரைதனில்!

    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ – நீhqdefault
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ – நீ
    மூவேந்தர் வழி வந்த மன்னவனோ

    நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ – அது
    நடை பழகி வந்ததென்ன என்னிடமோ –
    அது நடை பழகி வந்ததென்ன என்னிடமோ என்னிடமோ (நான்கு)

    உதித்தது பார் செங்கதிர்தான் கீழ்த்திசையில் – அதன்
    ஒளிவெள்ளம் பாய்ந்தது பார் வான்வெளியில்
    கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் – அதன்
    ஒளியாலே மலரும் நான் செங்கமலம் செங்கமலம் (மூன்று)

    பனிமழையில் நனைந்ததென்ன மலர் விழிகள் – உன்னைப்
    பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்
    இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில் – அது
    விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் –
    அது விருந்தெனவே தவழ்ந்ததென்ன என் மடியில் (நான்கு)

    இள நகைதான் நீ எழுதும் சிறுகதையோ – அதன்
    இடை தோன்றும் நாணம்தான் முன்னுரையோ
    இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ – அந்த
    இலக்கியத்தில் விடிந்தால்தான் முடிவுரையோ (நான்கு)

    Moondru thamil – Pillayo pillai
    Share
  • அந்தப்புரத்தில் ஒரு மகராணி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    ilayaraja

    சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற பாடல்!  டி.எம்.சௌந்தரராஜன்  எஸ். ஜானகி பாடியிருக்க இராகதேவன் இளையராஜா இசையை வார்த்தெடுக்க.. புலவர் புலமைப்பித்தன் வரிகள் மின்னுகின்றன!..

    வழக்கமான காதல் பாடல் என்றாலும் கதகதப்பில் வார்த்தைகளைவிட கவித்துவங்கள் விளையாடிக்கிடக்க.. கலிங்கத்துப்பரணிகண்ட காட்சிக்கு வார்த்தைகள் வழங்கியதுபோல.. இன்பத்தின் மத்தளங்கள் இனிதாய் முழங்க.. மூன்றாம் பால் மோகனத்தை இப்பாடல் முழுவதும் காணலாம்!

    கவிஞர் ஒருவர் திரைப்பட ஊடகத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமை இருக்கும்போது எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு புலவர் இலக்கணம் வகுக்கிறார்.

    ஏதோ சரித்திர காலத்திற்கு தள்ளப்பட்டவர்களாய் நாம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கடத்தப்படுகிறோம்!

    காதலன் தோளில் காதலி சாய்ந்து காதலைப் பாடிடச் சொன்னால்.. அந்தப்புரமும் தெரியும் அதன் அந்தரங்கமும் புரியும் என்கிறாரோ புலமைப்பித்தன்!

    http://www.youtube.com/watch?v=e2c8c1LAZbY

    அந்தப்புரத்தில் ஒரு மகராணி

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

    அந்தப்புரத்தில் ஒரு மகராணி

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    சாமந்தி பூக்கள் மலர்ந்தன

    இரு சந்தன தேர்கள் அசைந்தன

    சாமந்தி பூக்கள் மலர்ந்தன

    இரு சந்தன தேர்கள் அசைந்தன

    பாவை இதழ் இரண்டும் கோவை

    அமுத ரசம் தேவை

    என அழைக்கும் பார்வையோ

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்

    அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

    சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

    அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

    சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

    அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

    குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை

    அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை

    அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

    மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

    முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

    மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

    பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு

    அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு

    அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

    அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

    அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

    கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

    காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

    ஆராரிரோ…ஆராரி…ராராரிரோ

    ஆரிராரோ ஆராரிரோ

    ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

    Share
  • அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் – ரோஜாவின் ராஜா – கவியரசர் கண்ணதாசன் – டி.எம்.எஸ்.- பி.சுசீலா – எம்.எஸ்.விஸ்வநாதன் – சிவாஜி, வாணிஸ்ரீ

    இன்பலஹரியில் நம் இதயம்தொடும் இன்னொரு காதல் பாடலிது! கவியரசர் கண்ணதாசனின் கற்பனைக் களஞ்சியத்தில் பூத்த பூவிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விரல்களில் வருடப்பட்ட திரையிசைப் பொக்கிஷமிது! ரோஜாவின் ராஜா என்கிற திரைப்படத்தில்.. டி.எம்.எஸ். பி.சுசீலா பாடிய பாடலுக்கு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் வாணிஸ்ரீ நடிப்பில்..

    மங்கல வார்த்தைகளை மழைபோல பொழிந்திருக்கும் கவிஞர், இயற்கையின்மடியில் வைத்து இதயங்களைத் தாலாட்டுகிறார்.

    பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
    பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
    நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
    நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

    பொற்காலப்பாடல்கள் என்று போற்றும் தமிழ்த்திரைக்குத் தன் முத்தான தமிழால் மோகனப் பண் பாடிவைத்திருக்கிறார்.

    உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
    இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
    எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
    கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

    இலக்கியத்தமிழையும் திரைத்தமிழாக்கித் தந்து கல்யாணத் தமிழ்ப்பாடல் பாடுகின்றார்! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடலாய் அது இன்னுமின்னும் காதினில் .. காதலைச்சொல்கிறது கேளுங்கள்!

    தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
    அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
    தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
    திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

    ஆன்மீகத்தின் அடிநாதம் தன் மனதில் எப்போதும் அலங்காரம் செய்வதனால்.. தேன்சிந்தும் காதல்பாடலிலும் தெள்ளுத்தமிழில் ஆண்டாள் வருகிறாள் பாருங்கள்..

    கண்ணதாசனின் கவிதைக்கரும்பில் எந்தப்பக்கமும் இனிக்கவே செய்கிறது அதிலும் காதலைப்பிழியும்போது இதயத்தின் மென்மையும் அ்னுபவங்களின் அடர்த்தியும் சங்கமம் ஆகிறது.

    பலர் கவிதை எழுதுகிறார்கள் சிலர் கவிதையாய் வாழ்கிறார்கள். வாழ்வையே கவிதையாக்கும் நோக்கம் கவிஞரின் வெற்றி!

    எழுதும் எல்லாக் கவிதையும் இணையற்றவைகளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை

    ஏதேனும் ஒன்று நம்மை உரசிச் சென்று இதயத்தில் தீப்பிடிக்கச்செய்தால் போதும்.

    கண்ணதாசனின் கவிதைகளோ அனைத்துமே இதயத்தைப் பற்றிக்கொள்கிறது!

    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்

     

    அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
    ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

    பொட்டோடு பூக்கண்ட பன்னீர் மரம்
    பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும்
    நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல்
    நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்
    நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும்

    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
    அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
    ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

    உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ
    இல்லாயின் இல்லென்று நான் செல்லவோ
    எங்கேனும் பூப்பந்தல் மேளங்களோடு
    கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்
    கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம்

    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
    அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
    ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

    தன் சூடி மலர் தந்த ஆண்டாளிடம்
    அழகான மலர் மாலை நாம் வாங்குவோம்
    தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி
    திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்
    திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்

    அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
    அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
    ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன்
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே
    அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே

    படம் : ரோஜாவின் ராஜா
    குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
    பாடல் : கண்ணதாசன்
    இசை : எம்.எஸ்.வி.
    நடிகர்கள் : சிவாஜி, வாணிஸ்ரீ

    http://www.inbaminge.com/t/r/Rojavin%20Raja/Alangaram%20Kalaiyana.eng.html

    Share
  • இறைவா உன் மாளிகையில்!…

     

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    kavingar vaali

     

     

     

     

     

     

     

    இறைவா உன் மாளிகையில்…

     

    வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது.  அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர்.  இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும்.  ஆனால்,  நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. மட்டுமின்றி மக்கள் நெஞ்சிலும் நிலைத்து வாழ்கின்ற பேறு பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் – திரைத் துறையில் தனக்கென்று தனியிடம் பெற்று திகழ்ந்ததோடு.. அரசியலிலும் ஈடுபட்டு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவனாக உயர்ந்து – முதல் அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் பதவி வகித்தமை உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.

     

    எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு..  பாத்திரப்படி கள்வனாக இருந்தாலும் – ஏழைகளுக்கு உதவுகின்றவராக – ஊரில் பரவிய கடும் நோயின் காரணமாய்.. அனைத்து மக்களும் ஊரைவிட்டு ஓடிடும்போது.. உடல்நிலை குன்றிய நிலையில் உள்ள ஒரு விதவையை மட்டும் வெறுத்து ஒதுக்கி.. அவ்வீட்டிலேயே விட்டுச்செல்லும் காட்சியில் கள்வனாக அவ்வீட்டில் திருடவந்த கதாநாயகன் அவளைக் காப்பாற்றி புகலிடம் கொடுக்கிறான்.

     

    பின்னர் ஒரு கட்டத்தில் ஏழைக்குடிசைகள் தீக்கிரையாகையில் – ஒரு குழந்தையைக் காப்பாற்றிடும்போது தன் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு  உயிருக்குப் போராடும் உணர்வுமிகுந்த கட்டத்தில் .. அவனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் அவனது உயிருக்காக கடவுளிடம் வேண்டுவதை காட்சியமைப்பு..  தனக்கு பாதுகாப்பு தந்து காத்த அந்த நாயகனை எமனின் பிடியிலிருந்து காப்பதற்காக அந்த நாயகி பாடுகின்ற பாடல்.  வாலி அவர்களின் இந்த வரிகள் தமிழகத்தின் ஒரு வரலாற்றுப் பதிவன்றி வேறென்ன?

     

    வார்த்தைகளை கவிஞர் வாலி அவர்கள் வரைந்தெடுத்தபோது ஒவ்வொரு வரியும்.. ஒவ்வொரு வார்த்தையும் என்னை எடுத்துக் கொள்.. என்னை எடுத்துக் கொள் என்று சொல்லியதோ..  உள்ளம் உருக.. மெல்லிசை மன்னர் அமைத்த இசையில்  இது வெறும் பாடல் அல்ல..  பி. சுசீலாவின் குரலில் இழையோடும் சோகம்.. நம் இதயங்களை நனைக்கிறதே!

     

    பிற்கால வரலாற்றின் முன்பதிவு என்பதை சூசகமாய் சொல்லி வைத்தாரோ?

     

    இறைவா உன் மாளிகையில்

    எத்தனையோ மணிவிளக்கு

    தலைவா உன் காலடியில்

    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன்

    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை

    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்

    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

    உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்

    மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

    இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

     

    http://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ

     

    பாடல்: இறைவா உன் மாளிகையில்

    திரைப்படம்: ஒளிவிளக்கு

    பாடியவர்: பி. சுசீலா

    இயற்றியவர்: கவிஞர் வாலி

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ஆண்டு: 1968

     

    Share
  • எளியோரைத் தாழ்த்தி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்….

    (கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி)

    ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி.  இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் – ஏழை – பணக்காரன் – ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் வகுத்த வைத்த பாவிகள் சுயநலம்தேடி சமுதாயத்தில் உலவும் பேய்கள் – இவர்களால் ஏழை வர்க்கம் இன்னுமின்னும் இன்னல்களுக்கு ஆளாவதும் வசதியுள்ளவர்கள் மட்டுமே வாழத்தக்கதாய் இந்த உலகம் மாறிவருவதும் கொடுமையென கொதித்தெழும் கவிஞரின் நெஞ்சம் வடித்த பல்லவியைப் பாருங்கள்!

    வஞ்சம், சூது, களவு இவைகளால் ஆட்படும் இதயத்தல் பொங்கிவரும் உணர்வுகளை கவி வடிவம் தந்திருக்கிறார் கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    தடைகள்மீறி நடைபோட எண்ணும் எழுவததைக்கூட வரிகளில் பதிய வைத்துள்ள பாங்கு இதோ..

    டி.எம்.செளந்திரராஜன் அவர்களுடன் பாலசரஸ்வதி இணைந்து பாடிய பாடல்!  கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கவிஞர் கு.ச.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னெழுத்துக்கள் மின்னும் பல்லவியும் தொடரும் சரணங்களும் பாத்திரப்படைப்பாய் கவிஞன் கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதியதை பறைசாற்றுகிறது!

    அர்த்தமுள்ள பாடல்கள் அன்றைக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும் காலங்களைக் கடந்தும் ஏதோ கல்வெட்டுக்களாய் பொறிக்கத்தக்கதாய் முத்தான வரிகளைத் தாங்கியிருப்பதால்.. இப்பாடல்களின் ஆயுசு அதிகமென்பதில் ஆச்சரியமில்லை!

    மானுட தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது நிச்சயமாக ஏழையை அது கைவிடுவதில்லை.. மாறாக நீதியின் குரலாய் எழும்பி இந்த நித்திலம் முமுவதும் ஒலிக்கிறது!

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    !

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வுபறி போவதோ

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வு பறி போவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    சிறகே இல்லாத கிளி போல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடை போடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடைபோடுதே

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

     

     

    Share
  • முத்தான முத்தல்லவோ!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ

    அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை.  அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது.  பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன.  காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?

    ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம்.  கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு!  இதோ.. இந்தப் பாடல்..  இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!

    தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்!  எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்..  திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!

    வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன!  எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ!  தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம்  – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..

    முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ

    கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

    (முத்தான)

    சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

    மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

    (முத்தான)

    வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

    தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

    மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

    (முத்தான)

    பாடல் : முத்தான முத்தல்லவோ

    குரல் : P.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c

    Share
  • அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி!

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

    அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி!

    காதலின் மொழி ஒன்று நம்மிடையே கலந்திருப்பதால் காலமெல்லாம் சுகம்! சுகமே!!  அன்பின் நெருக்கத்தால் என்னுள் அணுக்களாகி என்றும் கலந்திருக்கும் இனியவளே.. உனக்கான மடல் எழுதுவதென்பது எத்தனை சுகம் தெரியுமா? அது ஒன்றும் ஏட்டினில் எழுதுகோல் செய்திடும் அசைவுகள் அல்ல.. என் இதயத் துடிப்பின் பதிவுகள்!  மட்டிலா மகிழ்ச்சி பொங்க என் மனராணிக்கு இடம்பெயர்ந்து வாழுகின்ற இவ்வாழ்க்கையின் பக்கங்களிலிருந்து நான் வீசுகின்ற சாமரம்!  பிரிவு என்பது சுகமான வேதனைதான்!  உறவின் பெருமையை பறைசாற்ற பிரிவு வேண்டும் என்றுகூட நான் நினைப்பதுண்டு!  அருகில் இருக்கும் போது தெரியாத அருமையெல்லாம் அன்பே உன்னருகே நான் இல்லாதபோதே பெரிதும் உணர்கிறேன்!  கண்ணே.. மணியே.. அன்பே.. அமுதே என்று ஆயிரம் முறை எழுதினாலும் அனைத்தும் என் மனதில் நின்றிருக்கும் மணிமொழி உனக்கானது என்பதை நீ அறிவாயல்லவா?

    நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்கிற கவியரசு கண்ணதாசன் பாடல் மொழிந்திருக்கும் அத்தனை வரிகளையும் வாழ்ந்து காட்ட வேண்டுமடி! கற்பனைகளில் மட்டும் இந்த மடல் பூத்துவிடுவதில்லை!  கனவுகளில் மட்டும் இந்த உலா நின்றுவிடுவதில்லை! சொந்தம், பந்தம், நேசம், பாசம் என்று பல சொற்களால் அழைக்கப்படும் அன்பிற்கு இலக்கெல்லாம் நீயென்கிற உரிமையிருக்கிறதே.. அதைத்தானே இப்பிறவியின் பெரும்பாக்கியமாய் கருதுகிறேன்!  சிரபுஞ்சிமழைபோல சில்லென்று பொழியும் அந்த இன்பநினைவுகள் என்னை எந்நாளும் உன்னோடு இணைத்துவைக்கும்! குற்றாலத் தென்றலோடு நாம் நடந்துபோன அந்தப் பாதை நினைக்கும்போதெல்லாம் இன்பக்கதைகள் சொல்லும்!  பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மறைவதில் லாபமென்ன?  கட்டாயம் நாம் அதைத்தாண்டி வாழ்ந்துகாட்டுவோம் என்கிற உன் வார்த்தைகள் என்னை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகாட்டச் சொல்கிறதே!!

    புரிதல் என்பதன் முழு அர்த்தமும் புரிந்தவள் நீ என்பதால் வாழ்க்கை எனக்கு சொர்க்கமானது என்று நான் சொல்லிய நாளில் என் தோள்மீது வந்து சாய்ந்து “போதுமடா.. இந்த ஒரு வாக்கியம்” என்றாயே.. மறப்பதில்லை! நீண்ட நெடிய வாழ்க்கையில்.. நீயும் நானும் சந்தித்தது இடையில்தான் என்கிற ஒரு குறையைத்தவிர.. நமக்கென்ன குறை என்று நான் கேட்க.. எதற்கு அந்த குறையும்.. என்று குழந்தைபோல் இருவரும் விளையாடிவிட்டால் போகிறது என்றாய் நீ!  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்கிற வள்ளுவன் குறள்விளங்க வாழ்ந்துகாட்டுகிற உன்னை.. அடைந்தது என்பது என்றைக்கோ நான் செய்த தவம் என்பேனா? இல்லை.. இறைவன் எனக்குத் தந்த வரமென்பேனா?

    ஒரு நாள் என்பது மறுநாள் போல் இல்லை என்கிற நியதியை மாற்றி.. முதல்நாள் போலவே நீ என்றும் என்னுடன் என்பது என் அதிர்ஷ்டமன்றி வேறென்ன?  பிறந்தாய்.. வளர்ந்தாய்.. கனிந்தாய்.. இனிதாய்.. என்னை மணந்தாய்.. என் வாழ்வில் புதிதாய் இணைந்தாய்! அமிழ்தாய் மொழிந்தாய்! அன்பைப் பொழிந்தாய்! இன்பம் சுரந்தாய்! இதயம் திறந்தாய்! சுகம் தந்தாய்! சொந்தம் என்றாய்! சொல்லி மகிழ்ந்தாய்! ஸ்வரம் பாடினாய்!  உள்ளம் இனித்தாய்!  தொட்டுக் களித்தாய்! தொடர்ந்து சுவைத்தாய்! தேகம் தீண்டினாய்!  தேன் கலந்தாய்! நாணத்தில் நகைத்தாய்! பூமுகம் சிலிர்த்தாய்!  புன்னகை உதிர்த்தாய்! அன்பே என்றாய்! அள்ளி அணைத்தாய்! அடுத்து எடுத்தாய்! உச்சி முகந்தாய்! உள்ளம் குளிர்ந்தாய்! என்னில் நீயும் இத்தனைத் தாயானாய்! உன்னையே எண்ணியே நானுமே வாழ்கிறேன்! உள்ளங்கள் நெருங்கியே நித்தமும் சாய்கிறேன்!  கவிதைமலர்களால் காலம் முழுவதும் அர்ச்சனை செய்கிறேன்! காலையோ மாலையோ.. நாளும் பொழுதுமே.. உன்னில்தானே இரண்டறக் கலக்கிறேன்!!

    சித்திரம்போல் சிரிக்கின்ற என் முத்தழகே! என் இதயத்தில் விழுந்த உன்னை நான் எப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் தெரியுமா? பிறகென்ன.. நாளும் பொழுதும் உன்னுடனே உறவுமலர் பூத்தது!  உள்ளத்தில் சந்தோஷ சாம்ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது! தினம்தோறும் இன்பவிழா நடந்தது! இதயம் மகிழ்ச்சியிலே மிதந்தது! என் வானம் வண்ணமயமாய் விடிந்தது. ஒற்றைச் சொல் என்றாலும் உந்தன் சொல் என்றால் உயிர்ச்சொல்லானது!  கட்டிமுடித்த காதல் மாளிகையில் உன்னோடு என் காலம் கழிந்தது! யார் கண் பட்டதோ.. பிரிவின் வலியில் நெஞ்சம் துடித்தேன்! அப்போதுகூட அன்பே உன்னைத்தான் நினைத்தேன்! உடலின் ஏதோ ஒரு பாகத்தில் வலி ஏற்படும்போதும் கண்கள் கலங்குவதுதானே இயற்கை! அப்படித்தான் உனக்கும் இதயம் வலிக்குமே என்று எண்ணியபோதே நான் கலங்கிப்போனேன்!

    பாத்திரப்படைப்பின்படி நீ எனக்கு என்றும் நான் உனக்கு என்றும் படைக்கப்பட்டிருந்தாலும் இந்த உறவை எப்படி நடிப்பென்று நாம் கொள்ள முடியும்? வந்துபோவதுதான் வாழ்க்கை என்கிற வறட்டுத்தத்துவங்களை வழங்கிக் கொண்டிருக்காமல்.. வாழ்ந்துகாட்டுவது என்கிற வைராக்கியம் கொண்டு வா! வசந்தம் வானவில்லில் மட்டுமல்ல.. வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை நெஞ்சத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைத்து எழுதிவை!  மனதிற்குள் உள்ள ஆசைகளை மறைத்து வைத்துக்கொண்டு மெளனத்தோட்டத்தில் நீ செய்யும் ஒத்திகைகள் அம்மாடி.. அங்கேயே நான் தொலைந்துபோகிறேன்.. மெல்லமாய் நீ வந்து “ஊடல் என்பதும் உங்களுக்குப் பிடிக்குமே என்றுதான்” என்று.. என்னிடம் கதையளப்பாயே..  எங்கே சொல்ல அந்த சாதுர்யத்தை!

    மாற்றுவழியேதும் மனதில் வந்துவிடக்கூடாதென்று மளமளவென்று அனைத்துக் கதவுகளையும் அடைத்துவிடுவதும் நீயன்றோ? “பார்த்துக்கொள்கிறேன் என்று வாசகம் உச்சரிக்கப்படாமல்” உன்னுள்! எப்படி கண்டுபிடித்தேன் என்று பார்த்தாயா? அதுதான் உன் கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறதே!!  மறுபடி எப்போது என்று மனம் வருந்தி நான் கேட்டபோது.. வாய்ப்பில்லை இன்னும் சில திங்களுக்கு என்று ஒரு திங்கள் என்னிடம் சொல்ல.. அதைக்கேட்ட நான் அதிர்வில் துள்ள.. வருகிறேன் என்று சொல்லி வாரதிருத்தலைவிட.. வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி வந்துவிடும்போது இன்பம் பன்மடங்கல்லவா என்று எனைப் பரிகாசம் செய்தாய்!  ஆம்.. அப்படித்தான் எங்கே வரப்போகிறாய் என்று ஏங்கிக்கிடந்தபோது.. என் விழிகளை உன் கரங்கள்கொண்டு மூடிவிளையாடினாய்!

    அந்த மென்மையான கைகளின் உஷ்ணரேகைகள் என் உள்ளத்திற்கு தந்த உற்சாக வெள்ளத்தை எந்த அளவுகோலாலும் அளந்துவிடமுடியாது என்றேன்! அப்படியா என்றாய்! இன்றைக்கு இதுபோதுமா என்று வேறு கேள்வி!!  என்றைக்கும் தீராத தாகமடி காதல்..  படியளந்ததற்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாமே தவிர.. இன்னும் ஒரு பிடி கிடைக்குமா என்கிற ஏக்கத்திற்கு குறைவில்லை என்றேன்!   இன்பத்தின் அகராதியை எப்படி எழுதி முடிக்க முடியும்?

    எண்ண அலைகளில் சிக்கிய எந்த மனமும் இதுவரை அதன் எல்லைகளைச் சந்தித்ததாய் வரலாறில்லை!  சந்திக்க வேண்டும் என்கிற ஆசையும்.. சங்கமிக்க வேண்டும் என்கிற தேடலும் இயற்கையாய் ஆனபின்பு நாம் மட்டும் இதற்கென்ன விதிவிலக்காக ஆக முடியுமா?  ஆசை வழிந்தோடி வருகிற வழியில் எல்லாம் மகிழ்ச்சியின் அலைகள் கவிதை பாட.. இதயக்கடலில் எழுகின்ற அலைகள்.. அங்கே சுகராகம் பாட.. மாலையிளங்கருக்கல் இதமாய் மையலைக் கொண்டாட.. சேலைகட்டிய சிங்காரி உன்வசம் நான் என்னைத் தந்தாக.. முத்துச்சிரிப்பை கொட்டிக் கவிழ்த்து மோகனப் பண்பாடும் உன்னை முற்றிலும் கவர்ந்த கள்வன் என்பதில்தான் எத்தனைப் பெருமையோ எனக்கு!!

    கள்ளச்சிரிப்பில் உள்ளம்திருடிய உங்கள் செயலில் எனக்கும் பங்குண்டு என்பதாலே நடந்திட்ட திருட்டில் பாருங்கள் உங்கள் இதயம் என் வசம் என்று ரகசியமாய் காட்டினாய்! இன்பக்கனல் மூட்டினாய்! நாளை சந்திப்போம் என்று நகர முயன்றாய்! நல்லது.. நாளைவரை.. என்று நானிழுக்க.. நாணத்தில் உன் பார்வை போர்தொடுக்க.. ஏனத்தான் என்று சொல்லி இறுக அணைத்தாய்! போதும் எனும்வரை போவோமா என்றேன்.. போகக்கூடாது என்பதற்கு இப்படி ஒரு பொருளா என்றாய் நீ!  தேவை அறிந்த நீ எந்தன் தேவதையாய் தெரிந்தாய்!

    அன்பெனும் யாழ்மீட்டி இன்பராகங்கள் கூட்டுகின்ற இதயம் கொண்டவள் நீயென்பதால் எனக்கென்ன .. நான் ஒரு ராகமாளிகையில் வசிக்கிறேன் என்பதாக உணர்கிறேன்! நீ அழைக்கும் போது கூட ஒரு இன்பலயம் பிறக்கும்! ஸ்ருதிபேதமில்லாத பயணம் என்பதால் என் மனதில் என்றென்றும்  தென்றலடிக்கும்!  கவலைகள் ஏதும் என்னை அண்டுவதில்லை.. காரணம் உன் நாமாவளிகள்!  உதடுகள் அதையே முணுமுணுப்பதால் இதயதேசத்தில் ஆனந்த பைரவி..  ஆளப்பிறந்தவள் நீ என்பதால் அடிமையாகவும் நான் சம்மதிக்க.. அன்பில் சிறந்தவள் நீ என்பதை நிரூபித்து என்னை ஆதரிக்கும் உன்னை என்ன வார்த்தை சொல்லிப் பாராட்ட? நெஞ்சக்கமலத்தில் நீ வீற்றிருக்கும் பேரழகை.. எந்தக் கவிதையில் முழுமையாக நான் பதிவுசெய்யப் போகிறேன்? அது சாத்தியமா? சொல்லிலே அடங்கிடாத அழகு அது.. சொல்லத்தான் முயன்றாலும் கொஞ்சம்தான் என்றாக.. பார்வையின் பதிவுகளே பக்கம் பக்கமாய் நீள.. வேறெதை நான் இங்கே எழிலென்று கூற? 

    ஒரு பார்வை சொல்லும்.. மொழியை உள்வாங்கி உயிர்மெய் எழுத்துக்களில் உலவ வைத்து ஊர்வலம் போகின்றேன் பாரடி நீ!  காதலின்பம் யாது என்று அறிந்த நாள் முதல் கண்ணருகே ஓவியமாய் நீ தெரிந்த நாள் முதல்.. வேறு மனச் சிந்தனைகள் ஏதுமில்லையே? கொள்ளையிட்ட உன் மனதைக் கொஞ்சும் கோலங்கள்.. கோடையிலும் என் மனதில் குளிர்காலங்கள்! ஆவியிலே கலந்துவிட்ட ராகபாவங்கள்.. அனுதினமும் எனைவந்து சூழும் நினைவு மேகங்கள்!!   தொட்டவுடன் துள்ளல்தரும் பவளமல்லிகை.. நீ கிட்டவந்து கட்டிக்கொண்டால் நித்தம் புன்னகை! அடிமனதில் குடியிருக்கும் அன்புத்தாரகை.. நீ ஆதரித்தால் என்றும்தானே ராஜபேரிகை!!

    மொட்டவிழும் நேரம் நோக்கிக் காத்திருக்கவா.. பின்பு தொட்டணைத்தல் போதுமென்று பார்த்திருக்க வா.. விட்டுவிட்டு நீ சென்றால் விழிகள் வலிக்குமே! விரசமின்றி சரசம்பயில நெஞ்சம் துடிக்குமே!! மனக்கதவை திறந்து வைத்த கள்ளி யாரடி?  நீ மறுபடியும் மறுபடியும் என்னைப் பாரடி!!  மோகனங்கள் கூடுவது தாகம் தீரவா? தேகமது வீணையென இங்கு மாற வா!!  கார்குழலில் வெள்ளைமாளிகை கட்டுகின்றாயே.. அது மல்லிகையின் மற்றுமொரு பரிமாணமா? துள்ளிவரும் என் மனதை நீயும் அள்ளிக்கொள்ளடி! நீ தொட்டவுடன் ஆறுமந்த அனலைப் பாரடி!!

    உன் கால்சலங்கை சொல்லுகின்ற ஜதியில்தானடி.. நான் எழுதும் கவிதையிது நடந்து பார்க்குமே! தேனளந்து தருகின்ற இதழ்கள்கூடவே தித்திக்க வேண்டுமெனில் இங்கு வருகவே என்று தாமாகத் தேடி எனை நாடி அழைக்குமே!! போர்க்களத்தில் வீரமது வெற்றிகொள்ளலாம்!  உன் புன்னகைபூத்த முகத்தின் முன் அதுவும் தோற்குமே!!  கேட்ட வரம் தருவதற்கு நானும் வரட்டுமா? நீ கேட்காத சுகங்களையும் அள்ளித்தரட்டுமா?  சுற்றிவரும் பூமியினை நிற்கச் செய்வதும்.. சுழல்க என மறுபடியும் அருளச் செய்வதும் சத்தியமாய் நீ தரும் வாசகத்தில்தான் என்னுலகம் இருப்பதனைச் சுட்டிக்காட்டினேன்!  கட்டழகு தேவதையே.. கருணையதன் பூமழையே..  இனியுந்தன் விருப்பம்போல் இதயத்தைக் கொண்டுவா! இன்பப்பயிர் விளையட்டும்!! இருவர் உயிர் ஒன்றட்டும்! இமைமூடும் நாள்வரையில் இருவரல்ல ஒருவரென வளர்காதல் நாம் வளர்ப்போம்!

    இந்தப் பிறவியில் உந்தன் உறவிது ஒன்றுதான் உள்ளத்தின் கொண்டாட்டம் என்று உணர்கிறேன்!  ஒருவேளை உன்னை நான் சந்திக்காதிருந்திருந்தால் என் வாழ்க்கை சஹாரா பாலைவனம் போலன்றோ இருந்திருக்கும்!  மீட்டும் ஸ்வரஸ்தானம்.. மகிழ்ச்சியலை.. மாறாத புன்னகை.. உள்ளம்தொடும் உயிரின் வாசம், உங்களுக்காக என்று காத்திருக்கும் உன்னதம்.. எதை நான் இன்னும் பெரிதாகக் கருதமுடியும்?  வரிவரியாக.. எழுதிக் குவித்தாலும் மாளாத காதல் நாம் கொண்டது!  ஆதாம் ஏவாள் காலம் தொடங்கியே இந்த பரிமாற்றம் தொடர்ந்தாலும் ஒவ்வொரு காதலிலும் அது புதுப்பிக்கப்படுகிறது!  நம்மைப் பொறுத்தவரை ஒவ்வொரு நொடியிலும் அது உணரப்படுகிறது என்பதுதான் பெருமையே!

    இத்தனை நீளமாய் நான் மடல் எழுதியபின் நான் வேறென்ன எதிர்பார்க்கப் போகிறேன்.. அன்பின் அளவீடு என்று நாம் எதையும் சொல்லிவிட முடியாது என்றாலும் இந்த மடல்கள் அன்பிற்கு குறியீடுகளாய் காலத்தால் கணக்கில் கொள்ளப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு! எங்கே நீ எழுதும் மடல் எப்போது என்னை வந்தடையப்போகிறது என்கிற கனவில் இப்போது நான் மூழ்குகிறேன்!!

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்.

    வள்ளுவன் தந்த குறள்கள் ஆயிரமே இருந்தாலும் நாம் வாய்மொழிய வேண்டிய குறள் இதுதானே என்றொரு குரல் கேட்கிறதே.. உனக்குக் கேட்கிறதா?

    அன்புடன் கவிச்சந்திரன் 

    மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)

    பி.கு:  அன்பே, ஆருயிரே, என் கண்ணின் மணியே.. மொழியில் தமிழமுதே, இடைத் தேர்தலை  ஏதோ  எடைத்  தேர்தல் போல்   ஆக்கிவிடாதே   என்  மெல்லிடையாளே!

    இது உன் இடைத் தேர்தலில் என் காதல் சின்னம்  வெற்றி முத்திரை இடுவதற்கான ஒத்திகை என்பேன் …..)

    Share
  • அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!

    ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல்..

    அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!

    என்ன இது? போட்டியெல்லாம்!!  மாறிவரும் உலகமிதில் மாறாத காதல் என்பதை நிரூபிக்கும் வழியா? சரி.. பார்க்கலாம்இந்த சுயவரத்தில் மற்றுமொரு முறை வெற்றிகொண்டு எனக்கு மாலையிடுங்களேன் என்று நீ அழைத்தபின் அதுவும் மனதைத் தொடும் ஒரு மடல்தான் வேண்டும் என்று அறிந்தபின்.. கரும்பு தின்னக் கூலியா? இன்றைய உலகில் எழுத்து என்பது எப்படியிருக்கும் என்கிற ஆராய்ச்சி நடக்கிறதுஏதோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏதோ கடமைக்காக எழுதியவர்கள்.. வாழ்க்கை என்று வந்தவுடன் எழுத்தைக் கைகழுவி விட்டார்கள்! பாவம் அவர்கள் என்பதைவிட வேறு என்ன சொல்வது? குற்றால அருவியை ஏதோ குறுஞ்செய்திக்குள் அடக்கிவிட்டதாய் கற்பனையில் வாழ்கிறார்கள்!

    bird honey animation

    பொங்கிப் பெருகிவரும் உற்சாக கங்கையை உள்ளத்துள் உணர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் உனக்காக.. இது உனக்காக என்று தேர்ந்தெடுத்து தொடுக்கின்ற ஆரமல்லவா மடல்! இந்த ஆனந்தம் அறிந்தவர்கல்லவா தெரியும்? ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல் முதல் அடைக்கலம் கொள்ளுதல் என்று அடடா.. பக்கம் பக்கமாய் பரவிக்கிடக்கும் காதலை.. யார் இவர்கள் ஏதோ மின்னஞ்சலில் அனுப்பிவைப்பார்களாம்! அலைபேசியில் ஆழ்ந்துகிடப்பார்களாம்! சேட்டிங்கில் செத்துவிழுவார்களாம்! ஒரு மடல் என்பது ஒரு மடல் அல்ல.. அது உள்ளப் பதிவு! ஒவ்வொரு முறையும் அதைப் படிக்கின்ற போது கிடைத்திடும் ஆனந்தம் அளவிடற்கரியது! ஆழ்கடல் மனது.. அதில் அலைகள்போல் உன் நினைவு!! ஓர்நொடியும் ஓய்வதில்லை.. ஒய்யாரம் குறைவதில்லை!! வா அதிலே நீந்தலாம் என்று உன்னைத்தான் அழைக்கிறேன்!

    உறவின் பெருமைகளை உணர்ந்தவர்களால்மட்டுமே காதலின் உயரத்தை அறியமுடியும்போது.. அந்த உயரத்தைத் தொடும்போது மட்டுமே வாழ்க்கையின் பொருளை உணரமுடியும்போது.. நாம்தானே அங்கே ராஜாங்கம் நடத்துபவர்கள்! பிரிவு என்று வருகிறபோதும்.. மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்கும்போதல்லவா கலம்பகங்கள் பிறக்கின்றனஇத்தனை அன்பா என்மீது என்று ஒருவர் மற்றொருவரை இன்னும் நேசிக்க முடிகிறது

    உயிரோடு ஒன்றியிருக்கும் காதலை உள்ளத்தால் தொடுகிற கலைதான் எழுத்துஅதைவிடுத்து.. எந்த வகையில் எடுத்துப் பார்த்தாலும் குறைப்பிரசவங்களாகவே அவை தோன்றுகின்றன! வாழ்வில் வாட்டம் வந்து சூழும்போதுகூட இதுபோன்ற மடல்கள் எடுத்துப்படித்தால் மனம் துன்பத்திலிருந்து மீளும்! ஒன்றிரண்டல்ல.. உனக்காக நான் வரையும் மடல்கள்.. வாழ்க்கையில் நடந்த வசந்தவிழாக்கள் எல்லாம் இன்னும் நம் மனத்தோட்டத்தில் பூத்துக்குலுங்குவதற்கு இந்த மடல்கள்தானே சாட்சி!! வெறும் சதைப்பிண்டம் நரம்பு மண்டலம் எலும்புவடிவம் அல்ல இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை! இவற்றையெல்லாம் தாண்டி.. எங்கிருக்கிறது என்பதை அறிய முடியாத மனம்.. அந்த மனதில் நாம் இணைந்து எழுப்பிய காதல் மாளிகை.. அதை வரவேற்று வரைந்துவைத்த எண்ண மடல்கள்! சொல்லப்போனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் போல ஒவ்வொருவருக்குள்ளும் இயங்கும் மனம்.. அது என்னென்ன சொன்னது..சொல்கிறது என்று இதயம் சொல்ல விரல்கள் எழுத இதோ உனக்காக நான் வரைந்த கவிதை ஒன்று!

    ஆசைநதியில் ஆடிப்பெருக்காம்!!

    இதயம்வழியும் கருணைமழையில் என்னைஅணைத்திருந்தாய்!

    கனவோ நனவோ காலம்முழுதும் உன்னைநினைத்திருந்தேன்!

    எதுகை மோனை இரண்டும் வேண்டும் எந்த கவிதைக்கும்!

    துணைதான் வேண்டும் சிறகைவிரிக்கும் எந்த பறவைக்கும்!

    உறவின்சுகங்கள் உள்ளதுகோடி உலகம் அறிவதில்லை!

    உயிரே உந்தன் நினைவேயன்றி என்னிடம் ஏதுமில்லை!

    வண்ணம்சிதறா வடிவழகெல்லாம் உந்தன் முகம்தானே?

    கனிவாய் திறந்து சொல் ஒன்று சொல்லேன்செல்லக்கிளிபோலே!

    விழிமலர்மூடி விடைகள்தேடும் வித்தையைக் காட்டட்டுமா?

    உன்பனிமலர்க் கன்னம் பக்கத்திலிருந்தும் பஞ்சாங்கம் பார்க்கலாமா?

    ஆசையைக் கொஞ்சம் ஆற்றிட வேண்டும் அன்பே நீ அருகில்வா!

    ஆற்றங்கரையும் அதற்குத் தோதாய் அழைப்பு விடுக்கிறதே!

    பூங்குயில்கூட்டம் கூவும்மொழிக்கு அர்த்தம் நானறிவேன்!

    புரியும்வரையில் உனக்கும் அதையே நானே எடுத்துரைப்பேன்!

    கொட்டும் அருவி கொள்ளை அழகு கொஞ்சம் குளிக்கலாமா?

    சாகசத் தென்றல் மேனிதழுவி சரசங்கள் நடத்தலாமா?

    பேசும் சித்திரம் பெண்மை என்றால் உன்னைக் காட்டட்டுமா?

    வீசும்காற்றாய் மூங்கில்  துளைகளில் வழிந்து ஓடட்டுமா?

    பெளர்ணமி வெளிச்சம் பாயுமிடத்தில் பஞ்சணை போடட்டுமா?

    உன்பட்டுவிரல்கள் கட்டுப்படவே மெத்தையில் மூழ்கலாமா?

    தேவைகள் எல்லாம் தீரும்வரைக்கும் கார்குழல்விரிக்கட்டுமா?

    பார்வையில் தருகின்ற போதைமதுவில் மறுபடி நீந்தலாமா?

    ஆசைநதியில் ஆடிப்பெருக்காம் அள்ளிக் கொள்ளலாமா?

    அன்பில் அணைத்து அல்லும்பகலும் இன்பம் சேர்க்கலாமா?

     

    உன்னைப் பற்றிய நினைவு வரும்நேரமெல்லாம் ஏடெடுத்து எழுதிவைப்பேன்.. அவை உன் உள்ளம்நோக்கி ஓடிவரும் அன்புவெள்ளம்! மோகமலர் சூடிவரும் ஆரணங்கின் அழகை.. ரகசியமாய் காணும் அதிசயம்தான் என்ன? நாதமணி ஓசையுடன் நடந்துவரும் போது நான் மயங்கிக் கொஞ்சம் உன்னில் சாய்கின்றேன் கண்ணேபாவிரித்துப் பாடுவது பாவலனின் வேலை.. நாவிரித்து நாளுமே போற்றுகிறேன்.. உன்னை! தேனெடுத்து கொஞ்சம் தீண்டுதலைத் தொடங்கு! தெள்ளுத்தமிழ் பண்ணில் துள்ளிவரும் நெஞ்சு!! யாழினிசை போலவரும் காதலியின் குரலில் ஏழுஸ்வர ராகங்கள் வேண்டுகிறேன் கண்ணேநீ அசைந்து வருகின்ற சோலையில் தென்றலுக்குக் கூட தெம்மாங்கு பிடிக்கும்! உனைக் காணும்நேரத்தில் பூத்திருக்கும் மலர்களெல்லாம் புன்னகையால் வரவேற்கும்! பச்சைப் பசும்புல்கூட நீ இங்கே வந்து அமர மாட்டாயா என்றேங்கும்! பறந்துசெல்லும் கிளிகளெல்லாம் ஏதோ பாடம்படிக்க அருகில் வரும்! நடுவில் உள்ள தடாகத்தில் நீந்தும் வெள்ளை அன்னங்கள் உன்னை விழுங்குவதைப் போல் பார்க்கும்!

    இவைகளுக்கெல்லாம் காட்சிதந்தபடி.. நீ என் மார்மீது சாய்ந்தாயடி.. கொள்ளை அழகு அங்கே கொட்டிக்கிடக்க.. நான் எந்த இடத்தை மெல்லத் தீண்ட என்று திண்டாட.. சொல்லுங்கள் என்று ஒரு புல்லாங்குழல் போன்ற குரலில் வருடினாய்அப்படியே என் மனதைத் திருடினாய்மைதீட்டிய விழிகளிரண்டும் மன்மதராகம் பாட.. மையலின் பல்லவிகள் மனதிற்குள் ஓட.. உன் கூந்தலில் மறைந்திருந்த மல்லிகைப்பூக்கள் தம் பங்கிற்கு மயக்கத்தைக் கூட்ட.. நான் என்ன கதியானேன் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ?

    நான்கு குணங்களும் ஒருங்கே அமைந்த பெண்ணே.. நீயும் நாணத்தில் நலம் பாடினாய்.. வெட்கத்தில் கொஞ்சம் மூழ்கினாய்அச்சத்தில் மீண்டும் தவித்தாய்! ஆசையில் என்னைத் தேடினாய்! அன்பே என்று பாடினாய்! அல்லிவிழி மூடினாய்! துள்ளும் கயலாகினாய்! சொல்லில்வரா உணர்வலையில் சுற்றிக்கிடந்தாய்! உன் பட்டுக்கன்னங்களை என் விரல் தொட்டு விளையாட.. ‘ம்என்னும் போதையூட்டி என்னைத் தள்ளாட வைத்தாய்! இடையிடையே உன் காதருகே நான் ஏதோ சொல்ல.. கலகலவென்றே சிரித்தாய்! கட்டிமுத்தம் கொடுத்தாய்துடியிடையால் துவண்டாய்இலைமறையாய் இருந்ததை எல்லாம் எனக்கு மட்டும் தனிமறையாக்கினாய்நகங்களைக் கொஞ்சம் பற்களால் கடித்து நளினம் காட்டினாய்! நல்ல பழக்கமில்லை என்றே நானும் சொல்ல.. அந்த நகங்களைக் கொண்டு என்னைக் கொஞ்சம் கிள்ளினாய்! இல்லை.. இல்லை.. உன் மனதோடு அள்ளினாய்! இதழ்மருந்து பெறவேண்டி உன் இசைவுபெற துடித்திருந்தேன்மாலையது மறைந்து செல்ல.. இரவது வந்தது மெல்ல.. வாரிக்கொடுப்பதற்கும் வள்ளலாவதற்கும் வஞ்சி நீ காத்திருக்க.. வற்றாத தாகங்கள் வளைந்தோடும் நதிபோல.. உனை நோக்கி ஆசையின் அலைகளை அள்ளித்தெளித்தபடி.. அங்கே நான்! பேசும் சித்திரத்தோடு பெறும்விருந்து இதுவென்றே.. அரவணைக்க நானெழுந்தேன்.. அதிகாலை தூக்கத்தில்!!  

    அன்பு மனிமொழியே… என் ஆசைப் பைங்கிளியே ..- பேராசிரியர் கல்கியின் ஒரு பாடல் – “மாலைபொழுதினிலே ஒரு நாள் மலர் பொய்கையிலே …” என்ற பாடலில் முருகனே தன் கைபிடிக்க வந்ததாக எண்ணி உவகை பெற்ற காதலி “கண் விழித்தே எழுந்தேன், துயரக்கடலிலே விழுந்தேன்; கண்கள் மூடா தோ,  அக்குறை கனவினை நான் காணேனோ ..” என்று  கதறுவது போல் என் மனம் உனக்காக ஒவ்வொரு மடல் எழுதிடும்போதும் உயிர் பெறுகிறது!

    காதலியே.. என் இதயம் நுழைந்தவள் நீ என்பதால்தான் எனக்குள் இத்தனை மாற்றங்கள்! ஒருமுறை உன் பார்வை வேண்டும் என்றுதான் கேட்டிருந்தேன்.. இப்படி உன் பார்வையிலேயே என்னை முற்றுகையிடுவாய் என்று எண்ணிப்பார்க்கவில்லை! மாலையிலே சந்திக்கலாம் என்கிற விருப்பம் ஒருபக்கமிருக்க.. நாள்முழுவதும் நினைவுகளால் என்னுடன் இருக்கிறாயே அது என்ன கணக்காம்? கலாபக் காதல் என்கிறார்களே.. அது என்ன.. கண்டவுடன் காதல் என்கிறார்களே அது என்ன.. காதலிலே இத்தனை வகைகள் இருந்தாலும் நம் காதல் எந்த வகை?

    அன்பின் பரிபாஷையை அடுத்தவர் கேட்காமல் உந்தன் காதில் வந்து ஓதும் நிமிஷம் மறக்க முடியுமா? என் வருகைக்காக காத்திருந்த உன் கண்களைப் பார்.. கதைகள் சொல்லும்!  படபடப்புடன் இயங்கிக்கொண்டிருந்த உன் இதயத்தைக் கேள்.. பதில்கள் சொல்லும்!  நேற்றா இன்றா.. நெஞ்சம் நெருங்கியது எப்போது என்பதை எப்படிக் கண்டெடுக்க முடியும்?  சுவாசக்காற்றில் கலந்து உச்சரிக்கப்படும் உன் பெயர் என்றானபின் சொந்தமில்லாமல் போகுமா?  கதை இன்றோடு தீருமா?  அளவுகளால் அடங்கிப்போகாதது அன்பு மட்டும்தான் என்று நீ சொன்னபோதும்.. காதலும் பக்தியும் தராசுத்தட்டில் இருபக்கங்களில் சமநிறையுடன் இருக்கும் என்கிற உன் தர்க்கமும் என்னை சற்றே புரட்டிப்போட்டன.

    எங்கேயிருந்தாய் இத்தனை நாள் என்று நான் கேட்டபோது.. உங்களை நோக்கி நகர்ந்துகொண்டு என்று பதில் அளித்தாய்! சரிந்தேன்..விழுந்தேன் என்றேன்.. நான்.. எங்கே என்றாய் நீ! உன்னுள்ளத்தில் என்பதே என் பதில்! உள்ளமே பூவாய் மலரும் உன்னதம் காதல் என்றேன்.. நம்பமாட்டேன் என்றாய்..  உயிர்ப்பூவைக் கிள்ளிப்பார்ப்பது உனக்குப் பிடிக்கும் என்றால் என் காதலை பரிசோதனை செய்துகொள் என்றேன்!  பற்றியிருக்கும் பாசத் துடிப்பை பாதியில் நிறுத்த முடியாது!  பக்குவப்பட்ட மனதால்கூட காதலை அடக்க முடியாது! தப்போ சரியோ .. காதலுக்கு கண்கள் கிடையாது! அன்பிற்கும் அறிவிற்கும் போட்டிவைத்தால் ஆரம்பக்கட்டத்திலேயே.. அறிவு சரணடைந்துவிடும்! அன்பே அங்கு வெற்றியுறும்!  போதும் என்று சொல்கிற எந்த மனமும் போதும் என்று நினைப்பதில்லை.  வேண்டாம் என்று சொல்லும் பெண்மனம் இப்பூமியில் இருக்கவே நியாயமில்லை!  யாரிங்கே யார்வசம் யார் சொல்லக்கூடும்? தத்துவங்கள் எல்லாம் தவிடுபொடியாகும்.. அத்துமீறல்கூட அவசியமாய் தோன்றும்!

    இன்றுவரை இந்த பூமியில் காதலில் விழுந்தவர்கள் கணக்கை எண்ணிப்பார்க்க முடியுமா?  பரஸ்பரமாய் நெஞ்சில்பூக்கும் இந்தப் பவளமல்லிகையை.. உள்ளம் உள்ள எவரும் மறுப்பதில்லை..  உன்னில் நானும் என்னில் நீயும் என்றாகும் ஒரு நிலை என்பதை நீ உணரத்தொடங்கிய அந்த நொடியில்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது!  இது வெறும் உடற்கூறு அல்ல.. உள்ளத்தின் கூறு என்பதை உணரும்படி கூறவா? சொந்தம் என்பதும் பந்தம் என்பதும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அன்பு நிலவும்.. ஆசை தவழும்.. இன்பம் தழுவும்.. இதயம் மலரும்! அக்கறை என்று எப்போது ஏற்பட்டுவிடுகிறதோ..  இனி நாளெல்லாம் அப்படித்தான்!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)

    115  24வது தெரு  சங்கர் நகர்

    பம்மல் சென்னை 600 075

    தற்போது – அபுதாபி – ஐக்கிய அமீரகக் கூட்டமைப்பு

    0091 9444236999

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

    www.thamizhnadhi.com

    Share
  • அன்பே மணிமொழி!

    சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது!

     

    அன்பே மணிமொழி!

    காலமெல்லாம் நம் காதல் மலர்ந்த நாள்முதல் வரைந்த கடிதங்கள் – தமிழால் உன்னை அளந்த கடிதங்கள்.. நம் அன்பைப் பொழிந்த கடிதங்கள்.. இலக்கியத் தமிழால் இதயம் நனைக்கும் கடிதங்கள்.. ஒன்றா இரண்டா.. அப்படி நம் காதல் பொக்கிஷத்தைப் புரட்டிப் பார்த்தேன்.. பிடித்தப் பக்கங்களை இங்கே உன் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்!

    கற்றாரும் கல்லாரும் காதலை மறந்தார் எவருமில்லை என்கிற வகையில் உற்றாரும் உறவினரும் உயிர்கொண்டோர் அனைவருமே பெற்றிடும் பேரின்பம் இவ்வுலக வாழ்க்கையிலே இதற்கு ஈடு இணை இல்லை என்பதாக.. முற்றாத கனியிதுமூன்றாம்பாலிது! மோகன ராகமிதுமூழ்கிக் கரையேறுவது! அச்சாரமிது!  ஆனந்தப் பாடலிது! அணைகளிட்டாலும் கரைகளை மீறுவது! உதட்டளவில் நில்லாமல் உள்ளத்தளவில் புரளுவது! உயிரோடு உயிராக உலவி வருவது! கற்பனைக் கடலிது! காதலின் நிலையிது! வற்றாத ஜீவனிது! வழிந்தோடி வருகிறது! அறிவினால் அறியப்பட்டாலும் அன்பினால் ஆளப்படுவது! ஐம்புலன்களையும் ஆட்சிபுரிவது

    அலைகள்போலவே அடங்க மறுப்பது! ஆற்றின்நீர்போல் பாய்ந்து வருவது! மேடுபள்ளங்கள் யாவும் கடப்பது! ஜாதிமதங்களையும் கேள்வி தொடுப்பது! முப்போதும் எப்போதும் உள்ளம் கேட்பதுதப்பாது உயிர்தன்னில் தாமாக முளைப்பது! கடும்குளிரில் நடுங்காதது! சுடும்வெயிலில் சுருளாதது! சட்டங்களால் மிரளாததுகஷ்டங்களால் கலங்காதது! காதல் ஒன்றே உயிரானதுபேதங்கள் பாராதது! எண்ணங்களில் நீராடுது! ஏக்கங்களில் கரைமோதுது! சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது! இன்பத்தைப் பொழிகிறதுஇதயத்தை நனைக்கிறதுபிரிவென்று வந்தாலும் உயிரீந்து காக்கிறது! அன்பிற்குப் பொருளை அழுத்தமாய் சொல்கிறது!

    அவளுக்கு நான் தான் என்றெண்ணி வாழ்கிறது! அவனுக்கு நான்தான் என மறுபிறவி எடுக்கிறது! அனுதினமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! வாழ்க்கைக்கு பொருள் எல்லாம் இதிலிருந்தே தொடங்குகிறது! இதைவிடுத்து கணக்கிட்டால் வறட்சிதான் வளர்கிறது! மலர்கின்ற பூக்களெல்லாம் இதழ்விரித்து சிரிப்பதுவும்.. மழைகூட இம்மண்ணில் தவறாமல் பெய்வதும்.. இதுவெல்லாம் காதலைத்தான் வாழவைக்க என்று உறுதிமொழி எடுக்கிறது! வசந்தகாலம் வருவதுவும் வைகறையில் சூரிய உதயம் என்று எதையெடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் காதலுடன் மானிடரை வாழ்த்திடவே வைக்கிறது! தோல்வியெனும் பள்ளமதில் தான்வீழ்ந்த பலரையும் வெற்றியெனும் சிகரம்நோக்கி படையெடுக்க வைக்கிறது!

    நான் என்னும் தத்துவத்தை தானாக அறியாமல்.. தன்னுடனே இன்னொரு உயிர்சேரும்போது புரிகிறது! வீணான மனக்குழப்பம்  யாதாக இருந்தாலும் காதலியின் கடைக்கண்ணில் கற்பூரமாகிறது! தேடும்பொருள் கையில்கிடைக்க.. தேவியருள் நித்தமென வாழ்வதிலே அர்த்தமிருக்கிறதுவிண்ணிலிருந்து விழுந்தமழை மண்ணில்வந்து சேர்ந்தவுடன் நிறம்மாறிக் காட்டுவதுபோல் நம் மனதில் புத்தம் புதியதாய் காதல் கொடி பறக்கிறது!  சங்கீத மேகங்கள் சதிராடும் நேரங்கள்.. நம் காதல் சந்தங்களை ஸ்ருதியோடு பாடுகிறது! இமைக்காமல் உனைப் பார்க்க ஏகாந்தம் தான்பிறக்க.. வளர்காதல் நிலையாக வந்துவிட்டேன் என்கிறது! எழுதாத வார்த்தை எங்கே .. இன்னும்கூட இருக்கிறதா என்று நீ என்னைக் கேட்க.. உன் கண்கள் பேசும்நாள்வரை புதிய அகராதி வந்துகொண்டே இருக்கும் என்றேன்!!

    மனக்கோவில்சிலையாய் நீயும் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் மகராணியே! மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய்!  புத்தம் புதியதாய்.. உன் புகழ்பாடிடவே.. கற்பனை மேகங்களில் கொஞ்சம் தவழ்ந்து.. காற்று, மழை இவை யாவிலும் ஊர்வலம் கண்டு நீ போற்றும்வகையில் கவிமடல்கள் வரைந்திட நானும் கற்றுக் கொண்டேன்!!

    சுகமும் சோகமும் சொந்தம் கொள்ளும் மனித மனம் காதலிலே விழுந்துவிட்டால் இந்தக் கலவை வந்து பற்றிக்கொள்ளும்!  இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும்!  வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன?  இதயத் தாமரையில் இதழ்கள் விரிப்பு எல்லாம் சிறப்பாய் நடப்பது எப்போது தெரியுமா.. உன் முகம் பார்த்து உறவாடி.. உயிரின் சுமையை உள்ளம் மறந்து உன் மடியில் தலைசாய்ப்பேனே அப்போது!!

    தேவ சுகம் என்பதெல்லாம் இதுதான் என்று தேவியே உன்னிடம் நான் கண்டேன்!  அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா? வாய்திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும்! வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும்!  எதையோ சொல்ல வாய்திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல?  வற்றாத ஜீவநதிபோல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன?  விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும்! அம்மம்மா.. என்று நீ மூச்சுவிடுவது ஆனந்தலஹரியாக.. அங்கேதான் தோன்றும் இன்பம் எப்படி வார்த்தையில் சொல்ல?

    கயல்விழி ஜாலம் கிடைத்திடும்போது கவிதைக்கு ஊற்று பெறுவேனே!  புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே!!  அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே!  கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன்!  அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன்!  இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன்!  இனித்திடும் இரவுகள் இன்றுமுதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன்!!  எதுவரை இன்பம் எனக்கேட்டால்.. நம் உயிர்வரை பயணம் தொடருட்டுமே!!

    அன்றொரு நாள் நீ… கார்குழலைக் கலைந்தாடவிட்டபடி..  கன்னி நீயும் காத்திருந்த கணத்திலேதான் கவிதை சொல்ல உன் அறையில் நான் நுழைய, எத்தனையோ அலைகளடி எந்தன் பின்னே.. எல்லாமே உன்னை வந்து சேரும் முன்னே! அட.. என் ஆசைகளைச் சொன்னேன்!  உன் கண்ணசைவில் நூறுவித அர்த்தங்கள்.. களிநடனம் காட்டுகின்ற பெண்மயில்!  என் மடியில் கண்ணுறங்க வேண்டுமென்று ஏகாந்த வேளைதனில் ஏங்கிநிற்க.. மையலுடன் மையல்கொண்டு நானுமங்கே மலர்க்காற்றின் தாலாட்டில் மயங்கிநின்றேன்!  எண்ணத்தில் வந்த பல ஆசைகளும் உன் வண்ணத்தைக் கண்டு அங்கே சொக்கிநிற்க.. சந்தங்களைச் சொல்லிச் சொல்லி காட்டு கண்ணே.. சரணங்களாய் வந்து நிற்பேன் உந்தன் முன்னே!  அந்திபகல் இரண்டிலுமே தொடர்ந்திருக்கும் உன்னுடைய நினைவுகளே எந்தன் சொர்க்கம்!

    கண்விழித்தால் மட்டுமல்ல உந்தன் பூமுகம்! கனவுகளிலும் தொடருகின்ற விந்தை அற்புதம்! சந்தனத்தால் செய்துவைத்த சிற்பம் நீயடி.. உனைச் சாய்ந்தபடி பாடுகிற இன்பம் நூறடி!!  உன் தேகமது வீணைபோல எந்தன் மடியிலே வந்ததொரு வசந்தகால பூக்கள் தூவவே..  விரல்களினால் மீட்டுகின்ற ஸ்வரங்கள் கேளடி.. இதயமது வழியுமின்ப கலசம்தானடி!!  விடியும்வரை தொடருமின்பக் கதைகள் பாரடி என்று உன்னை எடுத்தணைத்த போதுவந்த இன்பங்கள் கோடி!  முத்தமிழில் மூன்றாம் தமிழ் போதுமென்று உன் முகபாவணைகள் சொல்ல..  முதல் தமிழால் அதை நான் அலங்கரித்து வார்த்தையில் சொல்ல.. இடையில் உள்ள தமிழ் மட்டும் சும்மா இருக்குமா? ‘ம்’ என்னும் ஸ்வரமெடுத்து பாடியதே!!   அள்ளும்கரம் அணைக்கவரும் என்றபடி அங்கங்கள் அங்கங்கே சுபலாலி பாடுதற்கு நாங்கள் தயார் என்று சொல்ல.. முத்துச்சரம் தத்தையிடம் நித்தம்வளர் சுகங்களென முத்திரையிட்டதே!

    நீ இட்ட அடி நோகுமென்று அடுத்த அடி எடுத்துவைக்க.. மலரணைகள் விரித்திடுவேன்.. சித்திரமே.. செந்தமிழே.. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் சீர்கொண்டுவரும் சேயிழையே.. அன்னம்போல் நடைநடக்கும் என்னவளே.. அழகுதாமரைபோல் இதழ்விரிக்கும் சின்னவளே.. உன் கன்னங்களில் விழுகின்ற குழிகளில் என்னைக் கொஞ்சம் தடுமாற வைப்பவளே.. ஆருயிரே.. ஆயிழையே.. ஆனந்தப்  பூங்காற்றே! நேரிடையாய் என் நெஞ்சத்தைக் குறிவைத்துத் தாக்கும் உன் போர்முறையை கொஞ்சம் மாற்றேன்! கொள்ளையிடுவதற்கு பல்வேறு வழிகள் கொண்டுதிகழும் காதல்பொதுமறையைக் கற்று சொல்லெடுத்து கொஞ்சம் சுழற்று!  கள்ளவிழிபேசும் மொழியை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு!!

    ஓர் நொடிக்குள் ஓராயிரம் பரிபாஷை பேசும் உன் கண்கள் மட்டும்தானடி என் கவிதைக்கான களன்!  மறுபார்வை பார்ப்பதென் வழக்கம் என்றாலும் முதல்பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல்.. சில நேரம் மலைத்துப்போகிற சங்கதிகள் நிரம்ப உண்டு! வெட்கித்தலைகவிழும்நேரம்கூட உன் கண்கள் ஓரப்பார்வை பார்ப்பதால் அந்த நிமிடமும்கூட அந்தரங்கத் தொடரெழுதும் அழகென்ன!  ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கே அணிவகுத்து வருவதென்ன? பேசும்விழிகள் அங்கே பேசாதிருப்பதென்ன?  ஓசைகொண்டெழுதும் உள்நாட்டு விவரங்களை ஆசைகொண்டெழுதும் அற்புதம் நடப்பதென்ன?

    உன் மைவிழிக்கூடு செய்கின்ற ஜாலத்தில் என் மெய்மறந்து போகிறேன் நான்! சொல்லுதிரும் வாயோ சொல்லாமல் போக.. உன் பொல்லாத கண்கள் எனை ஆள்வதைக் காண்என்னுயிரில் பாதி ஏந்திழையாள் கொள்ள.. அரைகுறையாய் ஆனவன்தான் நான்.. இதில் நிறையென்று கொள்வது நின்னிடம்தான்!   ஏட்டினில் எல்லாம் எழுதிட முடியுமா.. ‘மனது’.. தனக்குள் எப்போதும் வைத்துக்கொண்டே.. மீதியைத்தான் தருகிறதுஇருந்தாலும் என்ன.. தினசரி அதிலே ரகசியக் கொள்ளை அவசியம் செய்து வரைகின்ற மடல்கள்இன்னும்கூட சொல்லப்போனால், உன் அழகெனும் முதலுக்கு.. அன்பெனும் வங்கிக்கு.. நான் கட்டும் வட்டிதானிதுவென்று வைத்துக் கொள்ளலாமா? அதை இனி ஊருக்கும் சொல்லலாமா?

    மோக அலைகள் கூடும் நிலையில் பாடும் கவிதை பாரடியோ! ஆசைக்கடலில் பேசும் அலைகள் அதுபோல் நெஞ்சம் தானடியோ! கோடி கதைகள் பேசும் விழிகள் கற்றுத்தந்தது யாரடியோ? தேவை எதுவோ தீரும் வரையில் தாகம் எடுப்பது எங்ஙனமோஊடல் வந்தால் உள்ளம் முழுவதும் உருகிவிடுவது எப்படியோ? உனக்கும் எனக்கும் கணக்கு எதற்கு என்று கேட்பது விசித்திரமோ? கேட்டுப் பெறுவது சுகம்தான் எனிலும் கேளாமல் தருவது பெருமையன்றோ? பார்த்துக் களிப்பதில் பரவசம் வருமே பாவை நீதான் அறியாததோ? சேர்ந்து நடப்பதில் இருவரின் நெஞ்சம் இடம் மாறித் துடிப்பது உண்மைதானே! ஒருமித்த எண்ணங்கள் ஊர்வலம் போகும் பாதை காதல் வழிதானே! உன்வசம் என்னை ஒப்படைத்தபின் உரிமை கொள்வது சுகம்தானே! மறுமுறை வரும்வரை மனம் படுகின்ற பாடு கொஞ்சமல்லவே தேன்மொழியே! உறவின் பெருமைகள் உள்ளம் உணர்வதால் உண்டாகும் உயிரெனப் போற்றிடும் நிலையதுவேமாலையிடுவதும்.. மஞ்சம் தொடுவதும் மரபினில் வருகின்ற முறைதானே! நிறைகுடம் போலவே நீயங்கு வந்து நெஞ்சம் தொடுகிற கோலமென்ன? என் இருவிழியரங்கிலும் நீயே நிறைகிறாய் என்றதும் வருகிற வெட்கமென்ன?

    தன்னிலை மறக்கும் என்னிலை பற்றி உன்னிடம் சொல்லிட ஓடிவந்தேன்அங்கு பெண் நிலை என்ன என்பதை அறிய இன்னமும் நானும் ஆவல் கொண்டேன்என்னிடமிங்கு நானே இல்லை என்பதால் உன்னிடம் என்னைத் தேடுகின்றேன் என்று மெய்யகம் காட்டி என் தோள் சாய்ந்தாய்என்னடி இதுவென உன் விழியிமை திறந்து உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு சொன்னது பதில் ஒரு சொல்தான் அதுவே காதல்என்று! நாளும் பொழியும் உங்கள் சொல் மழையில் நான் மட்டும் நனைகிறேன் அல்லவா பாழும் இதயம் வாழும் வரையில் தேவை உங்கள் செந்தமிழ் என்றாய்! என் எண்ணத்திரையில் என்றுமே உனை நான் பொங்கும் தமிழினில் வரைந்திருப்பேன் .. கண்ணே என்பேன்! கண்மணியே என்பேன்! காலம் முழுவதும் உன்பேர் சொல்வேன்!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    Share
  • அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..

    எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..

    எண்ணங்களில் உனைச் சுமந்து.. ஏட்டளவில் அதை வரைந்து.. எழுதிவைக்கும் கடிதங்கள் எல்லாமே உன் திசை நோக்கி ஏற்றிய தீபங்களே!!  அன்பின் அடர்த்தியை அன்றாடம் எனக்களித்து ஆதாரம் நீ என்பதை என் நெஞ்சில் நிலைநிறுத்தியவளே! கண்துயிலும் நேரம்கூட கனவுகளில்தான் கலந்து ஒன்றாகி இருக்கின்ற உறவே! மண்மூடும் நாள்வரையில் மறக்காத உன்னை நான் ஒரு நாளும் எண்ணிடவே மறவேன்! இதயத்தில் எழுதிவைத்த உன் பெயரில் இம்மியளவும் மாற்றமில்லை பார் என்றே இரவுபகல் துடிக்கின்ற இதயமது சொல்வதை நீ வந்து கேள் கண்ணே!  நாட்கள் கழிகின்றன! வாரங்கள் வருகின்றன! மாதங்கள் செல்கின்றன! வருடங்கள் உருள்கின்றன! மங்கையே நீ எங்கே சொல்? 

    பிரிவென்னும் இருளினிலே தவிக்கின்ற என்னை நீ மறந்தாயோ என்றுமட்டும் என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை! கண்களால் பேசும் கலையினைக் கற்றுத்தந்தாய்!  காதல் என்னும் பல்கலைக்கழகத்தைக் கண்களிலே திறந்துவைத்தாய்! கவிஞன் என்கிற அடையாளத்தை உனக்காக வரைகின்ற ஒவ்வொரு வரியிலும் நிச்சயித்தாய்! ஆழ்மனதில் உன்னைமட்டும் பத்திரமாய் வைத்திருப்பேன் என்று நீ சொல்லிய சொற்கள் இன்னும் என் காதுகளில்! அன்பின் நீலாம்பரியாய் நீ அனுதினமும் என்னில் வந்தாய்! தினமும் காலையிலே பூபாளம் பாடி எனைத் துயிலெழுப்ப வருகின்றாய்! அனுதினமும் அமிர்தவர்ஷினியாக அன்புமழை பொழிகின்றாய்! இமைப்பொழுதும் நீங்காதிருக்க இரவிலும் நீலாம்பரி நீயாகின்றாய்! இத்தனை சுகங்களிருக்க.. ஏனடி முகாரி தந்து பிரிவில் என்னைத் தள்ளுகிறாய்? திகட்டத்திகட்டப் பேசியிருந்த காலங்கள்.. திசைமறந்து போனது இக்கணமோ?

    கவிதைவழி உறவே.. கனிந்துருகும் நினைவே.. நீ எனக்காக எழுதிய மடலொன்று உன் மனதின் பிரதிபிம்பமாய் இதோ என் நினைவுப்படலத்தில் நித்தம் நிழலாடுகிறது!

    மாயம் செய்தவனே!!

    ஒன்றா இரண்டா உன் மடல்கள்

    ஒவ்வொன்றும் எனக்கானதன்றோ?

    தேனா கள்ளா நானறியேன்

    திசைகள் மறந்து நான்பறந்தேன்!!

     

    கவிதைப் பாற்கடல் வார்க்கிறாய்

    காதலில் நூதனம் சேர்க்கிறாய்

    களவியில் வாழ்க்கைப் பாடத்தை

    கரும்பென வார்த்தையில் வடிக்கிறாய்!!

     

    தலைப்புகள் தருவதில் மன்னனாய்

    தலைப்புக்குள் நீயொரு கண்ணனாய்

    மயக்கம் தருபவன் நீயன்றோ?

    மலர்ந்தேன் நானும் பெண்ணன்றோ?

     

    காவிரி என்கிற பெயர்கொண்டு

    கரைபுரண்டு ஓடும் தமிழ்கண்டு

    ஆவலைத் தூண்டும் அலைகடலே – நான்

    காவலைத் தாண்டும் நாள்வருதே!!

     

    எழுதும் ஒவ்வொரு சொல்லிலும்

    ஏகாந்தம் கலப்பது எப்படி?

    ஏட்டினில் பதியும் மடல்களில்

    எத்தனை எத்தனை சுகமடி??

     

    உறக்கம் மறக்க வைக்கிறாய்

    உள்மனதில் எப்போதும் நிற்கிறாய்

    உலகம் முழுக்க சொர்க்கமாய்

    உடனே மாற்றிக் காட்டுகிறாய்!!

     

    முத்தம் மோகம் மோகனம்

    பித்தம் பிடிக்கவே வைக்கிறாய்

    நித்தம் இதுபோல்நீ தொடர்ந்தால்

    சித்தம் என்னடா ஆகிடும்??

     

    நீ பொழியும் கவிமழையில்

    நான் நனைந்தபிறகுதான்

    என்னிருவிழிகள் மெளனமாய்

    தூக்கம் கொள்ளச் செல்லுமே!!

     

    செந்தமிழில் தொட்டில்கட்டி

    என்தலைவன் பாடும்போது

    உன்மடியில் தலைவைத்தே

    கண்ணயர்வேன் கண்ணாளா!!

     

    சிந்துகவிச் சரம்யாவும்

    வந்துவந்து மோதுகையில்

    என்வசத்தில் நானின்றி

    உன்வசமாய் ஆகின்றேன்!!

     

    அன்புமழை தினம்பொழிந்து

    ஆனந்தத் தேனில்நனைந்து

    இன்பமதை அணுஅணுவாய்

    இதயம்வழியத் தருபவனே!!

     

    உன்னிதயம் நான் வசிக்கும்

    பள்ளியறை ஆனதடா!!

    ‘ம்’என்ற ஒற்றைச் சொல்லும்

    உன்வரையில் நாதலயம்!

     

    கண்மலர்ந்து கவிதைசொல்ல

    காதலனே நீ வருக!!

    என்னிடத்தில் உள்ளதெல்லாம்

    உனதென்று உரிமை கொள்க!!

     

    பெண்மையினை பேசவைக்கும்

    உன்மடல்கள் ஆயுதமா?

    உன்னை நான் களவாட..

    என்னுள்ளம் எங்கும் நீயாட

    உன்னடிமை ஆனதனை

    உரிமையோடு கூறிடுவேன்!”

    மறக்குமா நெஞ்சம்? மறந்தால் உயிர் நிலைக்குமா இன்னும்!!  எழுதிவைத்த ஓவியம்போல் என் நெஞ்சில் குடிகொண்ட உன் வார்த்தைகள் எத்தனை இன்பமடி!!

    செவ்வாய் கனிந்து அவ்வாய் மலர்ந்து அருளிய முத்தங்கள் தித்திக்க.. பெண்மையின் மென்மையில் பேசமறந்த நான் உன்னை எண்ணியே வாயசைக்க.. இன்னுமா என்று நீ கேட்டாய் கண்ணசைவால்!  ரத்தத்தில் கலந்தினிக்கும் முத்தத்தைக் கொண்டு சித்தத்தைக் குளிரவைக்கும் கலையினையே காதல் புத்தகத்தில் எல்லாப் பக்கங்களும் பக்கம் பக்கமாக விவரிக்க.. கண்ணே.. உன்னிடம் நான் சொல்லவந்த சேதி என்ன தெரியுமா? அக்கம் பக்கம் யாரும் இல்லை.. வெட்கம்விலக்கி இங்கே வா! முன்னுரை எழுத முகம் மட்டும் தா! கன்னங்கள் இரண்டும் கடன்கள் கேட்கும்.. நமக்குள் என்ன கணக்கா? 

    வண்ணம்சிதறாமல் வந்துவிழும் முத்தங்களை ஒன்றுவிடாமல் சேர்த்துவைக்க கன்னங்களைவிட ஏற்ற இடம் எங்கே சொல்? கலகலவென நீ சிரிக்க.. உன் கெண்டைக் கொலுசுகள் ஜதிசொல்ல.. வாயாடி வளையல்கள் சிணுங்க.. அப்பப்பா.. எத்தனை சப்தஸ்வரங்கள்.. இதற்கிடையில் சத்தமிடாமல் முத்தமிடுவது எப்படி? புதிதாய் ஏதோ வரம்கேட்பதுபோல்.. புன்னகைப் பூவே.. உன்னிடம் நான்.. ஒன்று என்கிறேன்.. வேண்டாம் என்கிறாய்! ஆவல் தீரவே அள்ளி அணைக்கிறேன்.. அதற்குள் என்ன அவசரம் என்கிறாய்! கிடைக்கும்பொழுதை இனிக்க வைப்பதற்கு இதுபோல் சேவைகள் வேண்டும் என்றேன்! தேவைகளுக்கு புதிய பெயர் சேவைகளா என்று செல்லமாய் கிள்ளினாய்! ஏதோ கோர்வையாய் வருகிறதே என்று சொல்லிவைத்தேன் என்றேன்! கவிஞருக்கு எதுகையும் மோனையும் கைவந்த கலைதானே என்றாய்! ஒருபக்கம் நீயும் உன் பக்கம் நானும் இருந்தால் முப்போதும் நான் கவிஞன்தானே!

    நேற்றிரவு ரகசியமாய் உன் நெஞ்சம் தொட்டு எழுதிய வரிகளிவை..  பார் கண்ணே!  இன்பக் காதல்!  இலக்கியக் காதல்!  நினைக்கும்போதே இனிக்கும் காதல் என்பதில் வியப்பென்ன?

    அசைந்தாடும் அழகிய வண்ணங்கள்.. நீர் அள்ளித்தெளித்து அங்கே புள்ளிவைத்து நீ வரைந்த கோலங்கள்.. வைத்த கண் வாங்காமல் அதை நான் பார்த்த காலங்கள்! காலையிளந் தென்றல் போகும் வழிதனிலே மங்கை நீ நடைபோட்ட மாயங்கள்! ஊரணியை நோக்கி நீ நடந்து ஓர்குடத்தைச் சுமந்து நீர் கொண்டுவர.. காதலியைத் தேடி நானும் பின்தொடர்ந்து பல்லவியைத் தொடரும் சரணம்போல! உன் பாதக்கொலுசொலி சொல்லிய ஜதியைக் கேட்டு என் திசைகள் திரும்பிக்கிடந்தன!  ஓரவிழிப்பார்வையால் ஒரு பார்வை பார் என்றே என் உள்ளம் உன்னை நோக்கித் தவமே கிடந்தது! மண்ணை நோக்கிய உன் பார்வை என்னை நோக்குவது எப்போது என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல்..

    தன்னையே உன்னிடம் தந்தவனாய்.. தாகம் உன் மேல் கொண்டவனாய்.. பெண்மையே வரம்தர வேண்டுமென்று நித்தமும் காத்திருக்கும் என் நெஞ்சம்! தும்பைப்பூ மலர்காட்டும் நிறம்தன்னை தூய நின் உள்ளத்திற்கு உவமையிட்டு.. சொல்லவிரும்பும் காதலை சொல்வதற்கு வார்த்தைக்கு வலிமையின்றி.. நான் தவித்த கதைதன்னை நீயறிவாய்!  ஏதோ விக்கல் வந்தவனாய் நான் நடிக்க..  அதையும் அறிந்தே நீ வந்து நீர்கொடுக்க.. கண்சிமிட்டும்நேரத்தில் நம் கண்கள் ஒன்றோடு ஒன்று கலந்துகொள்ள.. தீராத தாகமங்கே தீர்ந்ததென்பேன்! ஆறாத காயமங்கே ஆறியதாய்.. அன்பே நான் உணர்ந்தேன் அக்கணமே! போராட்டம் நடத்திய உன் இமைச்சிறகுகள் தாமாக தாழ்ந்தனவே வெட்கத்தால்!

    யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள் என்கிற பதட்டம் மட்டும் உன்னில்! மாலைக்கருக்கலென்றாலும் மலர்வனமே.. சோலைக்குள் நாம் கொஞ்சம் ஒதுங்கிநிற்கலாம்! காலைக் கதிரவனின் கடமையாற்றலிலே இவ்வுலகம் வெளிச்ச இதழ்களின் விரிப்பில் மலர்கிறதே!  நீர்த்துறையிலிருந்து நிறையவே பெண்கள் யார் கண்ணில் யாரென்று கணக்கெடுத்து வருகின்றார் பாரும் என்று உன் கண்ணசைவில் சொல்லிவிட்டுச் சென்றாய்! நீ அவசரத்தில் அள்ளியதால் குடத்தில் நிறைவுக்கு வழியின்றி நீரும் தள்ளாடித் தள்ளாடி நடத்தும் சங்கீதம் கேட்டபடி நானும்.. உன் வழியே நடைபோட்டுப் போனேன்! தொட்டுவிடத் தோதின்றி தொடர்ந்துவந்த உறவில்.. கண்பட்டுவிட்டால் போதுமென்று காத்திருந்த காலம்!

    மாலை வருகிறேன் என்று மலர்க்கூந்தல் தனைப்பின்னி மகராணி காட்டிவிட்டாய் கோலம்! மனக்கதவைத் திறந்துவைக்க.. அங்கே எனக்கான ராஜ்ஜியங்கள்.. மையல்காலத்தில் மெளன ராஜாங்கம்! உந்தன் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ள நினைக்கும் மனம்! எண்ணத்தை எழுதிவைத்ததுபோல் எப்படி நீயும் அப்படியே நினைக்கிறாய்? கற்பனைக் கலப்பில்லை.. கவிதைக்கு இடமில்லை.. சொற்களின் கூட்டணிகள் ஒருதுளியும் அங்கில்லை!  கண்கள் நான்கு  கலந்தபடி.. காதலின்பம் பொழிந்ததடி!  இந்திரசபை போல இதயம் திறந்ததடி!  மந்திரம் செய்தாயோ மாற்றம் நிகழ்ந்ததடி!! வார்த்தைகளைவிட அங்கே மெளனமே சிறந்ததடி! என்றும்  இருதயத்தின் அடித்தளத்தில் குடியிருப்பு நடத்தும் பெண்ணே.. நீ எந்தன் காதலி என்கிற பந்தம் கர்வம் தந்ததடி!

    உன் பெயரைச் சொல்வதிலே உள்ள சுகம் என்றைக்கும் குறையாது என்பேனே! உயிர்சுமந்து செல்கின்ற வழியெல்லாம் உன் பார்வைதான் வேண்டும் பொன்மானே! கண்வழியே நீ நடத்தும் காதல்  பாடங்கள் காலமெல்லாம் நான் படிக்கும் நூலாகும்! தேன்சிந்தும் மோகனங்கள் உன்னிலுண்டு.. அவைதானே நான் விரும்பும் அச்சகங்கள்!! மறுபிறவி வரை உனை விரும்பும் என் மனம் மாற்று இங்கே கொள்வது எவ்விதம்? மனசுக்குள் மழைபொழியும் காதலியே.. மெளனத்தால் எனை அழைக்கும் காதலியே.. ரகசிய பாஷைகள் போதாதா பரிமாற.. அவை உன் கண்வழியே பிறந்து எனைத் தாக்க!!  இதழ்திறந்து பேசடி நீ என்றேனே.. அப்போது இதயம்திறந்து காட்டுவாய் என்பதால்தானே!! ஒவ்வொரு வார்த்தையிலும் இனிப்பிருக்கும் என் அஞ்சுகமே.. நீ எப்போதும் என்னருகே இருக்கும்போது!!  மலர்வாய் மொழிசொல்லும் மரகதமே!  இன்பயாழ்மீட்டும் விதம்போலன்றோ உன் குரலே! கண்ணாடி முன்நிற்கும்போது நீ உன்னழகில் மயங்கிவிடாதே.. எந்நாளும் எனக்கான ராணி நீ!  எனைக் களவாடிய கணம் முதலாய் மறவாதே!  பிடிவாதம் எதை நீ செய்தாலும் அடியேனை அணைத்துக்கொள் என்றுதானே கேட்கிறேன்!  ஊடலுக்கும் கூடலுக்கும் நடுவினிலே அடடா.. எத்தனை ஆழமான பள்ளமது சொல்லவா? தப்பித்தால் கரையேறிச் செல்லலாம்!  தடுமாறி விழுந்தால் நான் என் செய்வேன்?  கோபம் நீ கொள்வதெல்லாம் சரிதான்!  என் மீது வேண்டாம் என்றுதானே சொல்கிறேன்!  கரைதொடவே வரும் அலைகளை நீ பாரடி.. கதறுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மகிழ்ச்சியிலே புரளுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மனம் எதை எடுத்துக் கொள்கிறதோ சொல் நீ!  காதலுக்கு இலக்கணங்கள் என்ன உண்டோ கண்ணே அதை நீ கடைப்பிடி!  மாறாய்.. வேதனையை பரிசளிக்க நீ விரும்பினாலும் மறுப்பில்லை.. வாழ்வியலில் வகைகளில் அதுவும் ஒன்று என்று  கொள்வேன்!  ஆதலினால் காதல் செய்யும் லீலை இது!

    ஒரு நாள் ஏதோ உனது உதடுகள் உச்சரித்த உஷ்ண வார்த்தைகளில் என் உள்ளம் நொறுங்கிக் கிடந்தேன்! எந்தச் சூழலில்.. எந்தத்தருணத்தில்  இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன என்பது இதயத்திற்கு மட்டுமே தெரியும்!  மனதிடம் உள்ள குறைகள் ஆயிரம் இருந்தாலும் மனது அதை ஒப்புக்கொள்வதில்லை.. எந்த விகிதத்திலும் இதயங்கள் துடிக்கலாம் என்பது தெரிந்திருந்தும்.. உடன்பட முடியாமல் விலகும் பந்தமாக நான்! எங்கே இதன் தொடக்கம்.. எங்கே இதன் அடக்கம்.. என்பது உயிருக்கேப் பொருந்தும்போது உறவுக்கு அது இன்னுமல்லவா மிகப் பொருந்தும்?  இந்த நிலை தெரிந்திருந்தும்.. இதயம் ஏன் இப்படி அல்லலுறுகிறது? இது அன்பின் அதீதம் என்பது உனக்குத்  தெரியாதவரை.. என் வரையில் நான் எங்கே துயில்வது?  பேசிக்கொள்வது பல நேரங்களில் சரியாக இருக்கும்!  பேசிக் கொல்வது கூட சில நேரங்களில் நடக்கும்.. இது கூட காதல்பாடம் என்பதே காலம் சொல்லிக் கொடுக்கும்!  எல்லாம் இந்த மனம் என்னும் சிற்றிடம் படுத்தும் பாடு என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால்.. இதன் விளைவுகள் அலைகளாய் தொடர்கின்றனவே!

    எந்தப் பாதையில் நடந்து சென்றோமோ.. அதே பாதையில் தனியாக நடந்துவர நேரும்போது.. இதயம்  எதையெதையோச் சொல்லியழும்!  மறந்துவிடு என்று நீ சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. மண்ணுலகில் எத்தனையோ பேர் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய் என்று விட்டிருப்பேன்.. அட..மறப்பதற்கே என்னை நினைத்திடு என்றாயே.. எப்படி?   கவிதையோடு கவிதை இணையவில்லையே என்கிற கவலை இன்றோடு போகட்டும்! அது எப்படி இரண்டு ஒரேவிசை துருவங்கள் இணைசேர முடியும்.. இந்த இயற்கை நியதியைப் புரிந்துகொள்ள இத்தனை ஆண்டுகள் ஆனதோ? எதையோ தேடிக் கொண்டிருந்தோம்.. இன்று இனம் கண்டுகொண்டோம் என்று நமது சந்திப்பின் துவக்கத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான்! ஆனால்.. அதன் கனபரிமாணங்கள் என்னவென்று காலம் அல்லவா தீர்ப்பு சொல்கிறது!!

    ஏதோ ஒரு நிழல்போல என்னுடன் வந்தாய் என்கிற சுகம் அலாதியாகத்தான் இருந்தது. புதிதாய் அமைகின்ற எதுவும் புரியாத இன்பத்தைத் தரும் என்கிற பழைய நியதிதான் நமக்குப் புரியாமலிருந்திருக்கிறது.  சொந்தம்  சொல்கிற ஒரு பந்தம் கிடைத்துவிட்டதாய் பெருமிதம் கொண்ட மனம்.. தன் ராஜ்ஜியத்தை உறுதிசெய்ய நினைத்தபோது.. ஏற்படும் கேள்விகளுக்கான விடைகள் பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.  எத்தனை முறை வலித்தாலும் காதலை மட்டும் மனிதன் அனுபவித்துத் தெரிந்துகொள்வதுதான் சாத்தியம் என்று சாசனம் எழுதிவைத்திருக்கிறான் போலும்!!  அறிவுநலம் சூழ்ந்திருந்தாலும்.. அன்பின் ஆழத்தில் பயணிக்கிறபோது.. அங்கே உள்ள சுழல்களும் சூறாவளிகளும் அல்லவா அந்தப் பயணத்தை தீர்மானிக்கின்றன.. நான் கவிஞனாக.. இருக்கிற வரை கடலலைகளோடு கொண்டிருக்கிற உறவு மாறப்போவதில்லை.. நான் புலவனாக இருக்கின்ற வரையில் விண்ணில் நிலவோடு வேறுபடப்போவதில்லை.. கண்ணே.. உன்னோடு மட்டும்தானே.. காரணம் நீ பெண்ணல்லவா?  எந்த ஆணும் இதுவரை தான் காதலித்த பெண்ணை முழுமையாக மறந்ததில்லை.. எனவேதான் மறக்க முடியாத உன்னை மனதில் வைத்துக்கொண்டு.. நான் உன்னை மறப்பதற்கே நினைக்கிறேன் என்று பல்லவி பாடுகிறேன்! இங்கே எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    Share
  • அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் -மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் – நடிகை பாரதி – குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

    ஒரு காதல் பாடல் மனதை வருடிக் கொண்டே இருக்குமா? இன்பரசத்தை இதயம் முழுவதும் அள்ளித்தெளிக்கும் வண்ணக் கோலமிதோ! கவிஞர் வாலியின் கரங்களில் முளைத்து வந்த வசந்த கீதமிது!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் நடிகை பாரதி இணைந்து திரையில் தோன்றிய கோலமிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

    காதலியிடம் காதலன் சொல்ல நினைக்கும் வார்த்தைகளைப் பட்டுமெத்தையிட்டு பக்குவமாய் பந்தி விரிப்பதுபோல் – மென்மை கலந்து வினாக்களாய் எடுத்த விழா.. இந்தப் பாடல்.

    அன்பின் மிகுதியால் தனது காதலன் விடுத்த வினாக்களுக்கு தக்க விடைகளும் அதே தரத்தோடு இன்பம் குறையாமல் எடுத்து வழங்குகின்றாள் – அன்புக் காதலி! இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இப்படியோர் காதல் செய்ய எந்த இதயம் விரும்பாமலிருக்கும்?

    பெண்மையின் மேன்மைகள் எல்லாம் பெருமைக்குரியவனவாக ஆராதிக்கப் படும்பொழுது எழுந்துவரும் மோகனமாய் இந்தப் பாடல் நம் இதய வாசலில் வந்து விழுகிறது! அலங்கார வார்த்தைகளாய் அணி வகுக்காமல் இயல்பான எழுத்துக்களால் எழுதிவைக்கப்பட்ட காதல் சாசனம் இதுவென்றே கலங்களை வென்று நிற்கிறது!

    கண்ணும் கண்ணும் கலந்து காதல் என்னும் விருந்து..
    கவிதை வடிவில் வரைந்து.. இனிய இசையும் கலந்து..
    திரையில் ஓவியமாய் மலர்ந்து.. நம் இதயங்களில் குடியிருக்கும் பாடல்!

    சந்தோஷம் தருகிற சங்கீதம் என்பதை சர்வ சாத்தியமாக்க .. இப்பாடலை இன்னொரு முறை கேட்டு மகிழலாமே!

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
    நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…
    அன்புள்ள மன்னவனே …ஆசையில் ஓர் கடிதம்…
    அதை கைகளில் எழுதவில்லை…
    இரு கண்களில் எழுதி வந்தேன்…

    நலம் நலம்தானா முல்லை மலரே…
    சுகம் சுகம்தானா முத்து சுடரே…
    இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
    எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ..
    வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ
    வாடை காற்றிலே வாடி நின்றதோ…

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
    நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…

    நலம் நலம்தானே நீ இருந்தால் \
    சுகம் சுகம்தானே நினைவிருந்தால்…
    இடை மெலிந்தது இயற்கை அல்லவா
    நடை தளர்ந்தது நாணம் அல்லவா..
    வண்ணப்பூங்கொடி பெண்மை அல்லவா..
    வாட வைத்ததும் உண்மை அல்லவா…

    அன்புள்ள மான்விழியே…

    ஆசையில் ஓர் கடிதம்…
    அதை கைகளில் எழுதவில்லை…
    இரு கண்களில் எழுதி வந்தேன்…

     

    Share