கவிஞர் காவிரி மைந்தன்

முத்தமிழில் பாட வந்தேன்….கவிஞர் பூவை செங்குட்டுவன்.. குன்னக்குடி வைத்யநாதன் வாணி ஜெயராம்…. ஏ.பி.நாகரஜன்

மேல்நாட்டு மருமகள் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகரஜன் இயக்க.. இசையமைக்க குன்னக்குடி வைத்தியனாதன் பொறுப்பேற்க.. சங்கீதத்தில் கர்நாடக வித்வானாக.. விளங்கிய குன்னக்குடிக்கு இப்படம் எப்படி பொருந்தும் என்கிற வினாவை வில்முறித்த கதையாக்கி.. முத்திரை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். இசையில் மேல்நாட்டு மருமகள் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

திரைக்கதையில் வருகின்ற கதாநாயகி ஆங்கில நாட்டிலிருந்து தமிழகம் வந்து நம் தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து பாடகியாய் மேடையில் தோன்றி தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்க்கடவுள் முருகனது சிறப்பையும் ஒருசேர பாராட்டி பண்ணிசைக்கும் பாடலாக..

முருகன் Specialist என்று பட்டயம் தரலாம் என்னுமளவிற்கு சிறப்புற பாடல்கள் வழங்கி வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு மனதை மயக்கும் இசை குன்னக்குடி வைத்தியனாதன். சங்கீதக்கலாவாணி என்று சபைகளெல்லாம் புகழப்படும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரலில் இந்தப் பாடல் கந்தன் கருணையும் காட்டுகின்றது பாருங்கள்!

மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலைப் பாடிய அதே குரல்.. முத்தமிழில் பாட வரும்போது கேட்டு மகிழாத உள்ளங்கள் ஏது? பூவையாரின் வரிகளில் உள்ள பொருள் யாவும் தமிழுக்குப் பெருமையும் கந்தனின் கருணையுமாய் தவழ்கின்ற கானமிது!

வரம்பெற்ற மா கவிகள் வரைந்தளித்த பல்லாயிரம் செய்யுள்கள்.. மக்கள் மனதில் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை 16 வரிகளிலே வரையப்படும் ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தி விடுகிறது. எப்படி தெரியுமா? அதுவே இசையுடன் இணைந்த கவிதையின் பெருமை!!

முத்தமிழில்பாடவந்தேன்
முருகனையேவணங்கிநின்றேன் –

முத்தமிழில்பாடவந்தேன்
முருகனையேவணங்கிநின்றேன்
தித்திக்கும்குமரன்பெயரில்
தெய்வீகஅழகைக்கண்டேன
தித்திக்கும்குமரன்பெயரில்
தெய்வீகஅழகைக்கண்டேன

முத்தமிழில்பாடவந்தேன்
முருகனையேவணங்கிநின்றேன் –

வேலனேன்றால்வீரம்வரும்
கந்தனென்றால்கருணைதரும்
வேலனேன்றால்வீரம்வரும்
கந்தனென்றால்கருணைதரும்
ஷண்முகனைசரணடைந்தால்
சங்கீதம்பாடவரும்
ஷண்முகனைசரணடைந்தால்
சங்கீதம்பாடவரும்
ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
சுவாமிநாதனேசரவணனே
ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
சுவாமிநாதனேசரவணனே
ஆறுமுகம்கொண்டுஆறுதல்தந்து
கோடிநலம்காட்டும்குருபரனே

முத்தமிழில்பாடவந்தேன்
முருகனையேவணங்கிநின்றேன்
தித்திக்கும்குமரன்பெயரில்
தெய்வீகஅழகைக்கண்டேன
முத்தமிழில்பாடவந்தேன்
முருகனையேவணங்கிநின்றேன்

பாரதத்தாய்மடியினிலே
பண்புடனேதவழுகிறேன்
பாரதத்தாய்மடியினிலே
பண்புடனேதவழுகிறேன்
பழமையெல்லாம்நினைவூட்டும்
பைந்தமிழில்பாடுகிறேன்
பழமையெல்லாம்நினைவூட்டும்
பைந்தமிழில்பாடுகிறேன்
காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
கவிதையாவுமேதனித்தமிழே
காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
கவிதையாவுமேதனித்தமிழே
நாளும்முறையோடுநன்மைபலதேடி
வாழவழிகூறும்திருக்குறளே முத்தமிழில்பாடவந்தேன்


Muthamizhil Paada Vandhen – Melnattu Marumagal.flv

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *