சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து

0

–நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.

 

oru koottu kiliyaga song

கவிஞர் வைரமுத்து அவர்கள் 1985 ஆம் ஆண்டு , ‘படிக்காதவன்’ திரைப்படத்திற்காக ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்ற பாடலை எழுதினார். அன்று மகாகவி பாரதியார் ‘குயில்’ பாட்டை எழுதினார். இன்று, கவிஞர் வைரமுத்து ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு’ என்று கூறியுள்ளார்கள். இசை ஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடினார்.

நாம் செல்லும் வழியில் பல்வேறு இன்னல்கள், தடைகள், பள்ளங்கள் வரலாம். நமது உள்ளத்திலும் சலனங்கள், கவலைகள், பயம் போன்றவை வரலாம். கவிஞர் வைரமுத்து அவர்கள் நேர்மையாகவும், தர்மத்தை மீறாமலும் இருக்க வேண்டும் என்று நயம்படக் கூறுகின்றார்.

‘சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களைக் காத்திருக்கும்’ … கவிஞர் வைரமுத்துவின் சத்திய வரிகள் நிச்சயமாக நமது வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இதோ கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் …

 

ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண் பாடு
இரை தேடப் பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

காணொளி: https://youtu.be/wJ9AnV-yjeA

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.