அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி

0

கவிஞர் காவிரி மைந்தன்

அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் -மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் – நடிகை பாரதி – குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

ஒரு காதல் பாடல் மனதை வருடிக் கொண்டே இருக்குமா? இன்பரசத்தை இதயம் முழுவதும் அள்ளித்தெளிக்கும் வண்ணக் கோலமிதோ! கவிஞர் வாலியின் கரங்களில் முளைத்து வந்த வசந்த கீதமிது!

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் நடிகை பாரதி இணைந்து திரையில் தோன்றிய கோலமிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

காதலியிடம் காதலன் சொல்ல நினைக்கும் வார்த்தைகளைப் பட்டுமெத்தையிட்டு பக்குவமாய் பந்தி விரிப்பதுபோல் – மென்மை கலந்து வினாக்களாய் எடுத்த விழா.. இந்தப் பாடல்.

அன்பின் மிகுதியால் தனது காதலன் விடுத்த வினாக்களுக்கு தக்க விடைகளும் அதே தரத்தோடு இன்பம் குறையாமல் எடுத்து வழங்குகின்றாள் – அன்புக் காதலி! இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இப்படியோர் காதல் செய்ய எந்த இதயம் விரும்பாமலிருக்கும்?

பெண்மையின் மேன்மைகள் எல்லாம் பெருமைக்குரியவனவாக ஆராதிக்கப் படும்பொழுது எழுந்துவரும் மோகனமாய் இந்தப் பாடல் நம் இதய வாசலில் வந்து விழுகிறது! அலங்கார வார்த்தைகளாய் அணி வகுக்காமல் இயல்பான எழுத்துக்களால் எழுதிவைக்கப்பட்ட காதல் சாசனம் இதுவென்றே கலங்களை வென்று நிற்கிறது!

கண்ணும் கண்ணும் கலந்து காதல் என்னும் விருந்து..
கவிதை வடிவில் வரைந்து.. இனிய இசையும் கலந்து..
திரையில் ஓவியமாய் மலர்ந்து.. நம் இதயங்களில் குடியிருக்கும் பாடல்!

சந்தோஷம் தருகிற சங்கீதம் என்பதை சர்வ சாத்தியமாக்க .. இப்பாடலை இன்னொரு முறை கேட்டு மகிழலாமே!

அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…
அன்புள்ள மன்னவனே …ஆசையில் ஓர் கடிதம்…
அதை கைகளில் எழுதவில்லை…
இரு கண்களில் எழுதி வந்தேன்…

நலம் நலம்தானா முல்லை மலரே…
சுகம் சுகம்தானா முத்து சுடரே…
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ..
வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடை காற்றிலே வாடி நின்றதோ…

அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…

நலம் நலம்தானே நீ இருந்தால் \
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்…
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா..
வண்ணப்பூங்கொடி பெண்மை அல்லவா..
வாட வைத்ததும் உண்மை அல்லவா…

அன்புள்ள மான்விழியே…

ஆசையில் ஓர் கடிதம்…
அதை கைகளில் எழுதவில்லை…
இரு கண்களில் எழுதி வந்தேன்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.