கவிஞர் காவிரிமைந்தன்

ilayaraja

சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற பாடல்!  டி.எம்.சௌந்தரராஜன்  எஸ். ஜானகி பாடியிருக்க இராகதேவன் இளையராஜா இசையை வார்த்தெடுக்க.. புலவர் புலமைப்பித்தன் வரிகள் மின்னுகின்றன!..

வழக்கமான காதல் பாடல் என்றாலும் கதகதப்பில் வார்த்தைகளைவிட கவித்துவங்கள் விளையாடிக்கிடக்க.. கலிங்கத்துப்பரணிகண்ட காட்சிக்கு வார்த்தைகள் வழங்கியதுபோல.. இன்பத்தின் மத்தளங்கள் இனிதாய் முழங்க.. மூன்றாம் பால் மோகனத்தை இப்பாடல் முழுவதும் காணலாம்!

கவிஞர் ஒருவர் திரைப்பட ஊடகத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமை இருக்கும்போது எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு புலவர் இலக்கணம் வகுக்கிறார்.

ஏதோ சரித்திர காலத்திற்கு தள்ளப்பட்டவர்களாய் நாம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கடத்தப்படுகிறோம்!

காதலன் தோளில் காதலி சாய்ந்து காதலைப் பாடிடச் சொன்னால்.. அந்தப்புரமும் தெரியும் அதன் அந்தரங்கமும் புரியும் என்கிறாரோ புலமைப்பித்தன்!

http://www.youtube.com/watch?v=e2c8c1LAZbY

அந்தப்புரத்தில் ஒரு மகராணி

அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

அந்தப்புரத்தில் ஒரு மகராணி

அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன

இரு சந்தன தேர்கள் அசைந்தன

சாமந்தி பூக்கள் மலர்ந்தன

இரு சந்தன தேர்கள் அசைந்தன

பாவை இதழ் இரண்டும் கோவை

அமுத ரசம் தேவை

என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்

அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை

அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை

குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை

அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை

அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து

பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு

அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு

அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்

அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்

காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

ஆராரிரோ…ஆராரி…ராராரிரோ

ஆரிராரோ ஆராரிரோ

ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *