Tag: கவிஞர் காவிரி மைந்தன்

  • உனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    kav1

    உனக்கென்ன குறைச்சல்..
    கடந்த காலமோ திரும்புவதில்லை..
    நிகழ்காலமோ விரும்புவதில்லை..
    எதிர்காலமோ அரும்புவதில்லை..
    இதுதானே அறுபதின் நிலை..

    வெள்ளிவிழா திரைப்படத்தில் வாலி + விஸ்வநாதன் கூட்டணியில் விளைந்த விளைச்சல்! ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என இளமைக்குப் பரிந்து வரிகள் தந்த கவிஞர், முதுமைக்கும் கவிஞர் வாலி தந்திருக்கும் முத்தான வரிகள் – இப்பாடலிலா பிறப்பில் தொடங்கி இறப்பில் அடங்கும் இவ் வாழ்க்கையில் இடையே நடக்கும் பருவ மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தே வரும்!

    ‘காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்’ என்னும் பழமொழி இன்றைய இளைஞர்தாம் நாளைய முதியவர்களாக உருமாறப் போகிறார்கள் என்பதை உள்ளடக்கியதன்றோ? உறவுகளுக்குள் உள்ள பாசப் பிணைப்புகள் முழுமையாக இருக்கும் பட்சத்தில் முதியவர்கள், புறக்கணிக்கப்பட மாட்டார்கள். 60 வயதுக்கு மேல் அவர்களும் குழந்தைகளாகவே மாறிவிடுகின்றனர். அவர்களை அனுசரித்து ஆதரித்து வாழ வே்டிய இளையவர்கள், அதற்கான பக்குவம் பெறாமல் பரபரப்பு வாழ்க்கையையே பெரிதாகக் கருதி, ஓடிக்கொண்டிருக்கும் அவலங்கள் நம்மைச்சுற்றி நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!

    சகோதரத்துவம், பெரியோரைப் பேணுதல் இவை எல்லாம் வாழ்க்கையில் முக்கியமானவை என்பதை மறந்து மனம்போன போக்கிலே நாகரீக உலகம் நடைபோட்டுவருகிறது என்றாலும் வயதில் மூப்படையும்போது உணரத்தான் செய்கிறார்கள்.

    kav

    ‘தலைமுறை இடைவெளி’ என்று தலையங்கம் எழுதிட ஏராளம் இருந்தாலும் உறவுக்குள் ஏற்படும் பரிதவிப்பினை பாசத்தை – கவிஞர் தன் தத்துவ சிந்தனையால் புடம்போட்ட தங்கம்போன்ற வார்த்தைகளை வழங்கி உருவாக்கியிருக்கிறார். இப்பாடலை தன் தனித்துவக்குரலால் வழங்கி மெருகேற்றியிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் வி.குமார்! இப்பாடலை இதயத்தின்மீது தவழவிடுங்கள்! சுமையான வாழ்க்கை கூட சுகமாக மாறக்கூடும்!

    உனக்கென்ன குறைச்சல்.. நீயொரு ராஜா
    வந்தால் வரட்டும் முதுமை!

    https://www.youtube.com/watch?v=DcgjJZgrUdk

    உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..
    வந்தால் வரட்டும் முதுமை!
    தனக்குத்தானே துணையென நினைத்தால்
    உலகத்தில் ஏது தனிமை?

    கடந்த காலமோ திரும்புவதில்லை..
    நிகழ்காலமோ விரும்புவதில்லை..
    எதிர்காலமோ அரும்புவதில்லை..
    இதுதானே அறுபதின் நிலை..

    எதையோ தேடும் இதயம்
    அதற்கு இன்பம்தானே பாலம்
    அந்த நினைவே இன்று போதும் – உன்
    தனிமை யாவும் தீரும்

    Share
  • யாரடி வந்தார்.. என்னடி சொன்னார்?

    –கவிஞர் காவிரி மைந்தன்

    வானம்பாடி
    வானம்பாடி பாடல்கள் அனைத்தும் என்றைக்கும் கேட்டாலும் தேன்மழைதான்! கவிஞரின் பூரணம் காணலாம் இப்படத்தில்! வங்கமொழியில் வாங்கிய கதைக்கு வார்த்தைப்பூச்சரம் சேர்த்துக் கொடுக்க… இசையை வழங்கியிருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் இதோ இந்தப் பாடல் முழுதும் சொல் விளையாட்டு நடத்தியிருக்கிறார் கண்ணதாசன்!

    நடனமங்கை ஒருத்தி ஆடும் நாட்டியமும் அதை ரசிக்க வந்த செல்வந்தன் ஒருவனும் காட்சிப் பொருளாக… இசையும் கவிதையும் கூட இணைந்து ஆடுகின்றன!

    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?

    மங்கையரின் கூந்தல் ஆறடியாக இருந்திருக்கிறது என்கிற வரிகள் ஏதோ சரித்திரம் சொல்கிறதல்லவா?
    நிலா…நிலா… என்று வரிகள் தந்தவர் …
    காய் காய் என்று கவிதை சொன்னவர் …
    தேன் தேன் என்று நம் நெஞ்சை அள்ளியவர் …
    வண்ணம் வண்ணம் காட்டி வசீகரித்தவர்…
    இங்கே ஒவ்வொரு வரியிலும் அடி மேல் அடி எடுத்து வைக்கிறார். அந்த அழகைப் பாருங்கள்!

    எல்ஆர்.ஈஸ்வரியின் குரலில் இனிமை தவழும் பாடல்!

    காணொளி: http://www.youtube.com/watch?v=Z12Xa2R_BmE

     

    கவிஞர்: கண்ணதாசன்
    படம்: வானம்பாடி (1963)
    இசை: கே.வி. மகாதேவன்
    ரல்: எல். ஆர். ஈஸ்வரி

    kannadasnK.-V.-Mahadevan-Songslr-eswariVanampadi2

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
    ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
    ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
    ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
    பாரடி வந்து பக்கத்திலே – காதல்
    காவடி தூக்கும் கண்களிரண்டை
    வேலடி போலடி போடி வராமல்
    காவடி தூக்கும் கண்களிரண்டை
    வேலடி போலடி போடி வராமல்
    ஏனடி நின்றாய் வெட்கத்திலே?

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஓஓஓஓஓஓ
    என்னடி என்னடி சொல்லடியோ ஓஓஓஓஓ
    நில்லடி நில்லடி கண்ணடியோ
    என்னடி என்னடி சொல்லடியோ
    முன்னடி பின்னடி போடடியோ – இங்கு
    அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
    என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
    அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
    என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி

    என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!

    யாரடி வந்தார்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    Share
  • என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ.. நெஞ்சில் ஓர் ஆலயம் கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    நெஞ்சில் ஓர் ஆலயம்

    ans
    இயக்குனர் =தரின் இயக்கத்தில் நம் நெஞ்சில் நிற்கும் ஓர் ஆலயம் என்றைக்கும் நெஞ்சில் ஓர் ஆலயம்தான்! முக்கோணக் காதலை முழுமையான காவியமாய் திரையில் வடித்து வெற்றி பெற்றவர் இயக்குனர் =தர்! இந்தப் பாடல் உருவான கதை இனிமையானது! கதையின்படி இந்தக் காட்சி உணர்ச்சிகரமானது! திரைப்படம் முழுமையாக எடுத்தாகிவிட்டது! படம் முடிவதைக் குறிப்பதற்காக பூசணிக்காய் எல்லாம் சுற்றியாகிவிட்டது! அன்றிரவு இயக்குனர் =தருக்கு திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒரு பாடல் முழுமையாக இல்லையென்றாலும் ஒரு நான்கு வரிகளேனும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிட உடனே, கவிஞருக்கு தொலைபேசி அழைப்புவிடுத்து வேண்டுகோள் வைக்கிறார்.

    கவிஞரோ.. அடுத்த நாள் காலை வெளிநாடு பயணத்தை முன்னிட்டு விமான நிலையம் செல்லவிருப்பதாக சொல்கிறார். அப்போதும் இயக்குனர் =தர் – கவிஞரை, விமான நிலையம் செல்லும் வழியில் அலுவலகத்திற்கு வந்து நான்கே வரிகள் வழங்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிடுகிறார். கண்ணதாசன் வருகிறார்.. இயக்குனர் காட்சியினை விளக்குகிறார்.. மற்றுமொரு முறை கவிதை கங்கை வழிகிறது.. ஆம்.. நான்கு வரிகளில் நின்றுவிடாமல் முழுப் பாடலும் எழுத்தில் வந்து விழுகிறது..

    என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..ans1
    ஏனிந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ..
    முன்னம் இருந்த நிலை மறந்தாயோ..
    முகத்தைக் காட்டிக் கொள்ள துடித்தாயோ..

    வாழ்க்கைக் கனவுகளைக் கலைத்தாயோ ஒரு
    வாசல் திறந்ததென்று நினைத்தாயோ
    மாயப்பறவை ஒன்று வானில் பறந்துவந்து
    வாவென்று அழைத்ததைக் கேட்டாயோ..

    பறவை பறந்து செல்ல விடுவேனா அந்தப்
    பரம்பொருள் கேட்டாலும் தருவேனா
    உன்னை அழைத்துச்செல்ல எண்ணும்
    தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனோ?

    கவியரசர் கூடுவிட்டு கூடுபாய்ந்து தேவிகா பாத்திரமேற்று எழுதினாரோ.. பவித்ரமான அன்பை இதைவிட எப்படி பறைசாற்றமுடியும்??

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கண்ணதாசன் எழுதிய கவிதைக்கு மகுடம் சூட்டப்படுகிறது பி.சுசீலா அவர்களின் குரலில்!!

    உங்கள் இதயப்பரப்பை அகலமாக்கி இதோ இந்தப்பாடலை வழியவிடுங்கள்! சுமைதாங்கிவரும் சுகம் என்றால் என்ன என்பது புரிந்துவிடும்!

    இயக்குனர் ஸ்ரீதர் போன்ற கலாரசிகர்களால் உருவாக்கப்பட்ட காவியங்களில் நெஞ்சில் ஓர் ஆலயமும் ஒன்று!!

    Share
  • புத்தம் புதிய புத்தகமே.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    jaya

    சமுதாயத்திற்காக ஆண், பெண் என்கிற உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் தொடர்ந்து வருகின்ற காதலைப் பற்றி எழுதிக் குவித்த கவிஞர் பெருமக்கள், புலவர் பெருமக்கள் தொகை கணக்கிலடங்காது! இன்னும் இன்னும் எழுதிடவு இனிப்பானது காதலைத்தவிர வேறில்லை! அந்தக் காதல்பற்றிய பாடல்கள் திரைப்படங்களில் இல்லாமலிருக்கவும் வழிகளிலில்லை. ஆனால், கற்பனைகளின் உயரம், கவித்துவச் சொற்களின் தன்மை, புதிய கோணத்தில் தான் வைக்கும் வார்த்தைகள் – அதுவும் இசைக்கோர்வைக்கும் பொருந்திடும் வண்ணம் வரைந்திடும் திறம்.. என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டு இதோ வருகிறது. .. ‘அரச கட்டளை’ பாடல் ஒன்று! கவிஞர் வாலி அவர்களின் ஈடிலாச் சொற்களின் கூட்டணி நம்மைக் காதல் உலகத்திற்குள் கூடிச்செல்கிறது காணுங்கள்!

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே

    வாலிப ராகத்தின் ஆலாபனைகள் அடுத்தடுத்து தொடுக்குக் கவிஞரின் சாதுரியத்தில் சிக்கிடாத மானுட இனமேது? கவிதைச் சரமெடுத்து.. காதல் அம்பெய்து.. எவரும் மயக்கும் வண்ணம் எழுதிக் குவித்திருக்கும் இவரின் வரிகளிங்கே.. அழகு மங்கையைப்போல் அன்னநடை போட்டு வருகிறதென்பேன்! கவிஞனே! உன் எழுதுகோல் கொண்ட மயக்கன்களைக் கூட எப்படித் தெளிய வைக்கிறாயோ தெரியவில்லை! திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இன்னிசை மழையில் இதோ காதல் இதயங்களை நனைப்பதற்கென்றே பிரத்யேக கலவையாய் பாடலும் இசையும் இதம்தரும் டி.எம்.சௌந்தரராஜன் .. பி. சுசீலா குரல்களில்!! களவியல் இன்பத்தை இப்படிக் கவிதையோடு கலந்து அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! மனமகிழும் இன்பம் என்றும் உம்மைத் தொடர்ந்து வரும்!!

    arasa

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    பொதிகை வளர்ந்த செந்தமிழே
    உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே
    இன்று புதிதாய் வந்த மாணவி நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    பள்ளியறை என்னும் பள்ளியிலே

    அஞ்சு விரல் பட்டால் என்ன
    அஞ்சுகத்தை தொட்டால் என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    தொட்ட சுகம் ஒன்றா என்ன
    துள்ளும் உள்ளம் பந்தா என்ன
    செவ்விதழை கண்ணால் என்ன
    தேனெடுத்து உண்டால் என்ன
    கொத்து மலர் செண்டா என்ன
    கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே

    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    கையணைக்க வந்தால் என்ன
    மெய்யணைத்து கொண்டால் என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
    முத்தமழை என்றால் என்ன
    சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    வெட்கம் வரும் வந்தால் என்ன
    வேண்டியதை தந்தால் என்ன
    இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
    இன்பம் இன்பம் என்றால் என்ன

    புத்தம் புதிய புத்தகமே
    உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
    ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
    வீட்டு புலவன் நாயகி நான்
    புத்தம் புதிய புத்தகமே

    http://www.youtube.com/watch?v=vLP73tr8x8M

    Share
  • நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – புலவர் புலமைப்பித்தன்

    நீங்கநல்லாஇருக்கோணும் …..

    தமிழக வரலாற்றில் திரைத்துறையும் அரசியலும் இரண்டறக் கலந்திருப்பதற்கு இந்த பாடலும் சாட்சி சொல்லும்! புரட்சித்தலைவர் என்கிற பொன்மனச்செம்மல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது இந்தப்பாடல் மக்களின் பிரார்த்தனை கீதமானது! இன மதங்களைக் கடந்து எல்லோரும் ஒருமித்த குரலில் இறைவனைத் தொழுதுநின்றார்கள் என்பது ஒன்றிரண்டு அல்ல.. தமிழகமெங்கும்! திரையரங்குகளில் இந்தப்பாடல் எந்தத்திரைப்படம் அங்கே ஓடினாலும் முதலில் இப்பாடல் ஒருமுறை ஒலித்தபின்தான் என்கிற சரித்திரம் எவருக்கு வாய்த்தது.. எம்.ஜி.ஆரைத் தவிர!

    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்தtms
    நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
    நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
    என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
    நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
    என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
    நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே

    · பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று பாராட்டப்பெற்ற அவர் நடித்த இத்திரைப்படத்திற்கும் இதயக்கனி என்றே பெயரிட்ட பேறும் அண்ணா அவர்களின் குரலில் இப்படத்திற்கான முன்னுரையும் இடம்பெற்றது.

    · தமிழகத்தைச் செழிப்பாக்க ஓடிவரும் காவிரி நதியின் ஒய்யார அழகை ஒரு திரைப்பாட்டில் தொகையறாவைக் கொண்டு இப்படி வர்ணிக்க முடியும் என்று புலவரின் கைவண்ணம் ஓங்கி ஒலித்திட.. காவிரியின் பெருமைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிவருவதைப் பாருங்கள்.. அதன் உச்சமாய்.. வாரி வழங்கும் வள்ளல் புகழை ஒப்பிட்டு திரையில் தோன்றிய திருமுகத்தைக் காட்டிய இயக்குனரின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது!

    தென்னகமாம்இன்பத்திருநாட்டில்மேவியதோர்
    கன்னடத்துக்குடகுமலைக்கனிவயிற்றில்கருவாகி
    தலைக்காவிரிஎன்னும்தாதியிடம்உருவாகி
    ஏர்வீழ்ச்சிகாணாமல்இருக்கசிவசமுத்திர
    நீர்வீழ்ச்சிஎனும்பேரில்நீண்டவரலாறாய்
    வண்ணம்பாடியொருவளர்த்தென்றல்தாலாட்ட
    கண்ணம்பாடிஅணைகடந்துஆடுதாண்டும்காவிரிப்பேர்பெற்று
    அகண்டகாவிரியாய்ப்பின்நடந்து
    கல்லணையில்கொள்ளிடத்தில்காணும்இடமெல்லாம்
    தாவிப்பெருகிவந்துதஞ்சைவளநாட்டைத்
    தாயாகிக்காப்பவளாம்தனிக்கருணைகாவிரிபோல்
    செல்லும்இடமெல்லாம்சீர்பெருக்கித்தேர்நிறுத்தி
    கல்லும்கனியாகும்கருணையால்எல்லோர்க்கும்
    பிள்ளையெனநாளும்பேசவந்தகண்மணியே
    வள்ளலேஎங்கள்வாழ்வேஇதயக்கனி
    எங்கள்இதயக்கனிஇதயக்கனி

    · டி.எம்.செளந்திரராஜன்.. சீர்காழி கோவிந்தராஜன்.. எஸ்.ஜானகி மற்றும் குழுவினரின் கூட்டணியில் மெல்லிசை மன்னர் ஈன்றெடுத்த வெற்றிச்சித்திரமிது!

    · உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்sj
    உலகம்நமதுஎன்றுசிந்துபாடுங்கள்
    மேடுபள்ளம்இல்லாதசமுதாயம்காண
    என்னவழிஎன்றுஎண்ணிப்பாருங்கள்
    அண்ணாசொன்னவழிகண்டுநன்மைதேடுங்கள்

    நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
    நாடெங்கும்இல்லாமைஇல்லையென்றாக

    சமத்துவ சமுதாய சிந்தனையை.. தன் பாட்டு வரிகளால் ஒருமிக்க.. அதற்கேற்ற காட்சியை இயக்குனர் அமைத்துத் தர ஒட்டுமொத்தமாய் எம்.ஜி.ஆருக்கு புகழை மட்டுமல்ல.. ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளித்தந்த பாடலிது என்றுகூட சொல்லலாம்!

    பாடுபட்டு்ச்சேர்த்தபொருளைக்கொடுக்கும்போதும்இன்பம்
    வாடும்ஏழைமலர்ந்தமுகத்தைப்பார்க்கும்போதும்இன்பம்
    பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
    சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
    பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
    சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
    அமைதிஎன்றும்இல்லை
    காற்றும்நீரும்வானும்நெருப்பும்பொதுவில்இருக்குதுமனிதன்
    காலில்பட்டபூமிமட்டும்பிரிந்துகெடக்குது
    பிரித்துவைத்துப்பார்ப்பதெல்லாம்மனிதர்இதயமேஉலகில்
    பிரிவுமாறிஒருமைவந்தால்அமைதிநிலவுமே .. அமைதிநிலவுமே
    நதியைப்போலநாமும்நடந்துபயன்தரவேண்டும்
    கடலைப்போலேவிரிந்தஇதயம்இருந்திடவேண்டும்
    வானம்போலப்பிறருக்காகஅழுதிடவேண்டும்
    வாழும்வாழ்க்கைஉலகில்என்றும்விளங்கிடவேண்டும்

    ஒற்றைத்திரைப்பாடலில் இத்தனைக் கருத்துக்களா? விழிகள் விரிகின்றன! இதயக்கனிக்காக புலவரின் இதயம் வார்த்த வார்ப்புகளிது!

    http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA

    Share
  • வான் நிலா நிலா அல்ல.. – உன் வாலிபம் நிலா..-

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா..

    கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல. அவற்றுள் பட்டிணப்பிரவேசமும் ஒன்று! கவிதையும் இசையும் கைகுலுக்கும்! தரமான பாடல்கள் விருந்தாய் ரசிகர்களுக்குக் கிடைக்கும்! பாலச்சந்தர் அவர்களே பலமுறை சொன்னதுபோல் பாலச்சந்தரின் படங்கள் ஒருவேளை தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், திரைப் பாடல்கள் எப்போதுமே வெற்றியடைந்திருக்கின்றன! அந்த வரிசையில் இதோ பட்டிணப்பிரவேசம்! பாலச்சந்தர் அவர்களுக்காகப் பாடல் எழுதுவதென்பது – தனி அலாதி! கண்ணதாசன் – ஒவ்வொரு முறையும் தேர்வினைச் சந்திப்பது போலிருக்கும் என்பார்! புதுமை, யுக்தி, அர்த்தங்கள்..ஆழங்கள்.. இவை யாவும் முத்திரை பதித்த பாடல்கள் பல நாம் கேட்டிருக்கிறோம். அவை உருவாகிடும் கட்டங்கள் எத்தனை சுவையானவை தெரியுமா?

    இயக்குனரும் இசை அமைப்பாளரும் அமர்ந்து பாடலின் பின்னணி பற்றிச் சொல்லி மெட்டமைக்கத் தொடங்குவார்கள். இதோ மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் கே. பாலச்சந்தர். கதையின் சூழல், பாத்திரங்களின் பின்னணி இவை கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வலிமையான சாதனம் பாடல் என்கிற அடிப்படையில்.. உருவாக்கம் தொடங்குகிறது. சையின் வலிமை என்னவென்று அந்த இறைவனுக்கும் தெரியும் என்பார்! விஸ்வநாதன் விரல்கள் ஆர்மோனியத்தில் நர்த்தனமாட பிறக்கிறது ஒரு புதிய மெட்டு! அடடா.. அடடா.. என்றே அதை ஆமோதிக்கிறார் இயக்குனர் பாலச்சந்தர். இதற்கு அப்படியே வார்த்தைகளை இன்று கவிஞரிடம் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் கவிஞரும் வந்து சேர்கிறார்! தானமைத்த மெட்டை எம்.எஸ்.வி. (M – Stands for MUSIC, S – Stands for Sound and V – Stands for Voice) பாடிக்காட்டுகிறார்!

    நா..ந..ந..ந..ந..நன்னா.. நா..நா..நா..நா..
    நா..ந..ந..ந..ந..ந… நன்னா நன்னா..
    இப்படிப் போகிறது மெட்டு! கவிஞர் கேட்டுக்கொள்கிறார். என்னடா நீ பாட்டுக்கு நா.. நா.. என்று இழுத்துக் கொண்டே போறே.. என்ன அர்த்தம்? சரியா சந்தம் கொடு என்கிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் தங்கள் நிலையில் இருந்து மாறாமல்.. பாட்டுக்கிடைக்கவில்லையே என்கிற அவஸ்தையில்.. கவிஞரை சீண்டிவிட்டாவது.. பாட்டு எழுதி வாங்கிவிட வேண்டுமென .. என்ன கவிஞரே..இந்த மெட்டுக்கெல்லாம் பாட்டெழுதிடலன்னா.. நீயெல்லாம் ஒரு கவிஞரா? எனத் தூண்டி விடுகிறார் மெல்லிசை மன்னர்.

    கவிஞர் சந்தத்தை மாற்றிக் கேட்டபடி.. ‘நா’ என்பதற்குப் பதிலாக..
    ‘ல’ என மாற்றிப் பாடிக் காட்டுகிறார். அவ்வளவுதான்..
    வான் நிலா.. நிலா.. அல்ல.. உன் வாலிபம் நிலா..
    பாடல் முழுவதும் உருப்பெறுகிறது .. கங்கை வெள்ளம் போல..

    கட்டிலா .. தொட்டிலா.. மொட்டிலா..
    எண்ணிலா ஆசைகள் கொண்டதே அதைச் சொல்வாய் வெண்ணிலா!
    பம்மலில் நடைபெற்ற கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழாவில் 11.07.1993 அன்று முதல் முறையாக ‘கண்ணதாசன் விருது’ பெற்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வழங்கிய ஏற்புரை.. முக்கனி விருந்தைப்போல் இனிப்பானது! ஆம்.. அவர் ஏற்புரையை மட்டும் வழங்கவில்லை.. அதனை இசையுரையாய் அமைத்துத் தந்தார்! மக்கள் வெள்ளம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது!

    அப்போது இந்தப் பாடல் பிறந்த கதைபற்றி (மேலே குறிப்பிட்ட விஷயத்தைப் பகிர்ந்தார்) முன்னுரை தந்து இந்தப் பாடலை மேடையில் வழங்கினார்.
    மேலும்.. இப்பாடலில் Father in law, Mother in law, Sister in law மட்டும்தான் இல்லை என்று நயமாக குறிப்பிட்டார்.
    எந்தப் பாடலையும் தன் சொந்தப்பாடலாக்கும் வல்லமை கொண்ட எஸ்.பி.பால சுப்பிரமணியம் குறிப்பாக இந்தப் பாடலைக் கொஞ்சியபடி பாடும் விதம் அசத்தலானது! அருமையானது! ஒவ்வொரு மேடைநிகழ்ச்சியிலும் இந்தப் பாடல் அனைவரது விருப்பப்பாடலாய்! ஆம் .. இன்றைக்கும் நமக்கான நேயர் விருப்பமாய் ஒலிக்கிறது!

    பாடல் பிரபலமான சமயம்.. மறைந்த ஆந்திரமுதல்வர் என்.டி.ராமாராவ் அவர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போக .. அவர் நடித்த தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இதே இசைக் கோர்வையோடு இடம்பெற்ற செய்தியும் உண்டு!ள

    வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
    தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
    நீயில்லாத நாளெல்லாம் – நான் தேய்ந்த வெண்ணிலா
    மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
    பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

    (வான் நிலா நிலா அல்ல)

    தெய்வம் கல்லிலா? – ஒரு தோகையின் சொல்லிலா?
    பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
    அவள் காட்டும் அன்பிலா?
    இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
    தீதிலா காதலா ஊடலா கூடலா?
    அவள் மீட்டும் பண்ணிலா?

    (வான் நிலா நிலா அல்ல)

    வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
    ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
    அவள் நெஞ்சின் ஏட்டிலா?
    சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
    எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
    அதைச் சொல்வாய் வெண்ணிலா!

    (வான் நிலா நிலா அல்ல)

    படம்: பட்டிணப் பிரவேசம்
    இசை: M.S.விஸ்வநாதன்
    பாடல்: கண்ணதாசன்
    பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

    Share
  • தென்றல் உறங்கிய போதும்…!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    petramaganaivittraannai’பெற்ற மகனை விற்ற அன்னை’ என்பது திரைப்படம். எதுகை மோனையுடன் தலைப்பைச் சூட்டியிருக்கும் இயக்குனருக்குக் கவித்துவ ஈடுபாடு அதிகம்போலும்! மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்!

    தாலாட்டுப் பாடல்போல இசையும் கவிதையும் காட்சி தந்த போதிலும் இது ஒரு காதல் பாடல் என்பதில் மாற்றமில்லை! எத்தனை முறை இந்தப் பாடலைக்கேட்டிருப்போம் என்கிற கணக்கு மட்டும் என் வசம் இல்லை! அத்தனை முறை கேட்கும்போதும் இசையின்பம் பொழிய…இனிய குரல்கள் செவியில் வந்து மோதிய அதிசயம் நடந்துகொண்டுதானிருக்கிறது!

    நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா?
    ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
    அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?

    தென்றல் உறங்கிய போதும்… என்று ஒரு அதீதக் கற்பனையை எழுப்பிm a r u t h a k a s i-1 அதைப் பல்லவியாக்கி… கவிஞர் கானமழை பொழியக் கவிதையொன்றை யாத்திருக்கிறார். செந்தமிழில் தோய்ந்த வார்த்தைகள் சிங்காரமாய்க் கண்சிமிட்ட … பொருள் பொதிந்த பாடலாய் காதலைக் கண்முன்னே காட்டுவதில் வெற்றி மேல் வெற்றியே!

    அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
    ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?

    திரைப்படத்தின் தலைப்பைப் போலவே தாள ஜதி சொல்லும் வண்ணம் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் மறுக்க முடியுமா?

    படம்: பெற்ற மகனை விற்ற அன்னை

    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி                 V&R

    பாடியவர்கள்: A.M. ராஜா, P. சுசீலா

    பாடலாசிரியர்: மருதகாசி

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
    கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
    ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?

    நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப் போலவே
    வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே…வந்தபோதிலே
    நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
    ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
    நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
    ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
    அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?

    ஆ…ஆ….ஆ…ஆ…….

    இதய வானிலே இன்பக் கனவு கோடியே …கனவு கோடியே
    உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே…ஆடும் போதிலே
    வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
    வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
    வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
    வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
    அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
    கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?

    ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?

     

     

    Share
  • நீல நிறம்.. வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்..

    கவிஞர் காவிரிமைந்தன்

    மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!

    ஆணும் பெண்ணும் இணைந்து பாடும் ஜோடிப் பாடல் என்பது ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம்பெறுவது இயல்புதான். கவிஞர்களின் கற்பனைத் திறம், சொல்லாட்சி இவைகளுக்கு களமாக அமைவதும் இப்பாடல்கள்தான்! அதுவும் இயல்பான காட்சியமைப்புகளையும் மீறி.. கனவுக்காட்சிகளாக அமையும்போது பாடலில் ஏற்படும் ஈர்ப்பு அதிகமே!!

    குறிப்பாக.. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் இதுபோன்ற கனவுக்காட்சிகளும் பாடல்களும் மிகப் பிரபலமான காலக்கட்டத்தில் அவர்தம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் தேனாமிர்தம்! கானாமிர்தம்! ‘என் அண்ணன்’ திரைப்படத்தில் கண்ணதாசன் வார்த்தைகள் வழங்க.. கே.வி.மகாதேவன் இசையில் முகிழ்த்து வரும் பாடலிது!

    காதலில் நடக்கும் இந்த ஆராய்ச்சிகள் கற்பனையின் உச்சங்களா? இயற்கையை உவமித்து இவர் காட்டியிருக்கும் எழில் ஓவியங்கள் இன்பத்தமிழ் நாட்டியங்களா?

    இலை மறை காய் விஷயங்களை நயமாய் எடுத்துரைக்கும் கவிஞரின் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது! விரசமில்லாமல் நடக்கும் காதல் விருந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!

    கண்ணனின் நீலம் கடல் நீலம் என்று கார்மேகவண்ணனைப் பாடிய கண்ணதாசன்.. காதலியின் கண்களிலும் நீலத்தைக் கண்டுபிடித்ததை அப்பட்டமாகச் சொல்லும் அட்டகாசமான பாடல்!

    டி.எம்.செளந்திரராஜன் எஸ்.ஜானகி கூட்டணியில் காலங்களைத் தாண்டி இன்றும் நம் காதுகளை கெளரவப்படுத்தும் பாட்டு!
    kanna
    கோயிலின் சிலைகள்.. நதியின் வளைவுகள் எல்லாமே கவிஞர் கைவண்ணத்தில் மிளிருகின்றன.. மொத்தத்தில் இந்தப்பாடல் முத்தமிழ் விருந்து!!

    நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்kaviri
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
    வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

    தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
    வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
    அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
    உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
    (நீல நிறம் )

    இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
    அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
    அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
    இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
    (நீல நிறம் )

    கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
    கோபுரக் கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
    இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
    அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா
    (நீல நிறம் )

     

    Share
  • மயங்குகிறாள் ஒரு மாது

    கவிஞர் காவிரி மைந்தன்.
    hqdefault

    இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
    திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
    மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
    பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
    உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
    உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!

    தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
    அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
    பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
    தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
    சொல்லும்?  எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
    கலைதனில் ஒன்று!  மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்!

    வண்டின் தேவையை..   மலரா அறியும்?
    அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
    தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
    தோன்றலின் ரகசியம் தானே!
    ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!

    அன்பே.. அன்பே..   பெண்மையும் சொல்லும்
    பதில் .. அத்தான்.. அத்தான்..
    பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
    கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
    பி.சுசீலா குரலால் இனிக்கும் பாட்டு!
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!
    மயங்குகிறாள் ஒரு மாது!!

     

     

    http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
    காணொளி: http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk

    ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
    ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    திருவாய் மொழியாலே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
    துணிவில்லையா பயம் விடவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    நாழிகை செல்வதும் நினைவில்லையா?
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
    படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
    அன்பே அன்பே அன்பே அன்பே
    அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
    ஆஆஆஆஆஆஆஆ

    மயங்குகிறாள் ஒரு மாது தன்
    மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
    மயங்குகிறாள் ஒரு மாது

    அஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
    ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

    படம்: பாசமலர்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்: பி. சுசீலா

    05V&Rpsuseelasavithri

    Share
  • மேரே நாம் அப்துல் ரஹ்மான் …

    — கவிஞர் காவிரி மைந்தன்.

    SIRITHU VAZHA VENDUM

    BSAதிரைக்கடலோடியும் திரவியம் தேடு என்கிற பழமொழியை தலையில் ஏற்றி பலத் தலைமுறைகளாக ஏற்றம்பெற்று வளர்கின்ற குடியில் வந்துதித்த திருப் பெயரே.. அப்துல் ரஹ்மானாம்! நவரத்தினங்கள் முதலாக தங்க வணிகத்திலும் தழைத்தோங்கிய குடும்பத்தில் பிறந்தவர் இவர்! கீழக்கரை என்று சொன்னால்.. அதன் மேலத் தெரு நினைவில் வர.. அதில் வாழும் கனவான்கள் – பொருள் தேடி கடல்கடந்து ஈட்டிய பெரும்செல்வம் கீழக்கரை பெயரதனைக் காலமெல்லாம்  சொல்லும்!  சொல்லும்!!

    வளைகுடா நாடுகளில் வசீகரிக்கும் நாடான துபாயில் ஈ.டி.ஏ. நிறுவனமும் இவர்தம் இனியபெயரை என்றென்றும் உரக்கவே உச்சரிக்கும்!   அறுபது ஆயிரத்திற்கும் மேலான பணியாளர்களைக் கொண்டு குறிப்பாக தமிழர்களுக்கு இடம் தந்து ஆலமரமாய் விரிவு பெற்று விளங்கும் நிறுவனத்திற்கு வித்தூன்றி.. விளைய வைத்து விந்தை புரிந்த பெருமகனார்!  இவரோடு தோளோடு தோள் நின்று தன் கூறிய மதியால் வளர்ச்சிக்கு வழிவகுத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனக் குழுமத்தை நடத்திவந்த மேலாண்மை இயக்குனர் திருமிகு. சையது எம். சலாவுதீன் ஆகிய இருவரும் வாழுகின்ற வரலாறாய் திகழ்கின்றனர்.

    pulamaipithanமக்கள் திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள்.  இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.  ஒரு முறை தான் நடித்து வெளியான சிரித்து வாழ வேண்டும் என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்து, ஒரு பாடலை உருவாக்கும்போது.. தனது நண்பரின் பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள..  புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை.. டி எம். சௌந்தரராஜன் குரலில்  மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்..  ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்

    எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
    அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும் !!!

    எம்.ஜி.ஆர். திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும் திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?  பகுத் அச்சா என்பதைவிட!! இது இறைவனின் சித்தமே!  திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

    நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!

    http://youtu.be/3FEOtAlu7Mo

    காணொளி: http://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo

    பாடல்: புலமைப்பித்தன்
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    நடிப்பு: எம். ஜி. ஆர்.
    பாடியவர்: டி. எம்.எஸ்.
    படம்: சிரித்து வாழ வேண்டும்

    எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
    அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
    இரண்டும் உலகில் தேவை
    ஆடும் போதும் நேர்மை வேண்டும்
    என்றோர் கொள்கை தேவை
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
    ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
    ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
    ஒருவன் அறிவான் எல்லாம்
    காலம் பார்த்து நேரம் பார்த்து
    அவனே தீர்ப்பு சொல்வான் !
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்

    உள்ளகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும் !!!

    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம் !
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான்
    மேரா நாம் அப்துல் ரஹ்மான் !

    Share
  • ஆகிராவின் பிறந்தநாள் வாழ்த்து!!

     

    அன்பிலே பூக்கின்ற எந்த உள்ளமும்
    நன்மையே செய்திடும் நானிலத்தில்!
    அவ்வழி நடந்திடும் ஆகிராவும்..
    அரும்பல செயல்கள் புரிகின்றார்!

    மழலைகள் புகழ்பாட இணையதளம்
    மகிழ்வோடு நடத்துகின்ற நண்பரிவர்!
    தினமொரு பாடல் எனும்பகுதி..
    இவரிடம் சேர்த்தது எனைத்தானே!!

    தமிழிசை மேல்கொண்ட காதலினால்
    அமுதெனப் பரிமாறி நிற்கின்றார்!
    திரையிசை அறிஞர்கள் வரிசையிலும்
    சரியான பார்வையை செலுத்துகின்றார்!!

    கோவையில் வாழ்கின்ற கொங்குநாட்டார்..
    கொள்கையில் வழுவாமல் நடைபோட்டார்!
    தேவைகள் பெரிதெனக் கொள்ளாமல்.. பிறர்
    வாழ்விற்கும் அர்த்தங்கள் தருகின்றார்!!

    இலக்கணம் எல்லாம் தெரிந்தாலும்
    தலைக்கணம் இல்லாம் வாழுகின்றார்!
    தலைமுறை நலனைக் கருத்தில்கொண்டு
    தக்கதோர் செயல்புரிய இணைகின்றார்!!

    இவருக்கு அகவை அறுபத்து ஒன்றாம்!
    இல்லை இல்லை எண்கள் மாற்றி வைப்போம்!
    பதினாறு வயது இளைஞர்போல்.. பகலிரவு
    உழைக்கின்றார் பாருங்கள்!!

    பிறந்தநாள் தனதையும் பொருளாக்கி..
    சிறந்தநாள் அதையே சீர்படுத்த..
    தமிழ்மகள் கலைமகள் அருள்கேட்டு..
    தாள்பணிகின்ற திருமகன் வாழ்க!! வாழ்க!!

    அன்புடன்
    காவிரிமைந்தன்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல், சென்னை 600 075.

    Share
  • கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    என் சின்ன வயதில் நெஞ்சுக்குள் சுழன்று கொண்டிருந்த பாட்டு.. எம். எஸ். ராஜேஸ்வரி குரலில் ஒரு தென்றல் வந்து தவழும்..

    Nehruநேரு மாமா அங்கு ஒரு நாள் வந்திருந்தாராம் .. வார்த்தைகளில் கவிஞர் தஞ்சைவாணன் ஒரு பாடல் வழியாக ஒரு சரித்திரத்தை… எழுதி வைக்க..

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையும் நம்மை ஈர்க்க … இப்போதும் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது மனம்.

    பண்டிதர் ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்திய தேசம் கண்ணீர் வடித்தது.. அந்த சோகம் ஒவ்வொரு நெஞ்சிலும் அப்பியிருந்தது.

    அன்றைய நாளில் வெளியான பொன்னான வாழ்வு என்கிற திரைப்படத்திலும் இந்தப் பதிவு அழகாக .. நேர்த்தியாக.. இனிமையாக.. அமைத்திருந்தார்கள்

    என்பதுதான் சிறப்பு. ரோஜா மலருடன் நேருவின் பிணைப்பு.. அதனை கவிஞர் கையாண்டிருக்கிற விதம்.. பாருங்கள்…

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்

    குழந்தைக் குரலெடுத்து கூட்டும் இன்பத்தைத் தன் பாடல்களில் தரும் எம்.எஸ்.ராஜேஸ்வரி..

    ஒவ்வொரு வார்த்தையோடும் உள்ளத்தைப் பறிகொடுத்து.. பாவங்களுடன்.. பாடிய பாடலிது..

    சுகத்தையும் சோகத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள … இது போன்ற பாடல்களின் பங்களிப்பு அலாதி..

    அதுவும் காலத்தின் ஒரு பதிவாய் .. கவிஞர் தஞ்சைவாணன் இயற்றிய வரிகளுக்கும் இறப்பில்லையே…

    மதுரையில் ஒரு தியேட்டரில் சிறு வயதில் பார்த்தபோது.. இந்தப் பாடல் காட்சியில் என் கண்களில் மழை.. இன்னும் நெஞ்சத்தை ஈரமாக்கி வைத்திருக்கிறது.

    படம் : பொன்னான வாழ்வு
    குரல் : M.S.ராஜேஸ்வரி..

    கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
    அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்

    ( கதை)

    வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே – ஒரு
    சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
    நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
    ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
    நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே – தன்
    உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

    ( கதை )

    மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
    அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
    தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
    திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.

    அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
    நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
    அவர் முன்னே சென்றதாம்..
    அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
    கண்ணீர் விட்டதாம்..
    தேம்பித் தேம்பி அழுததாம்..

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
    அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
    அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

    ( கதை )

    http://www.mediafire.com/?ujnkznzymyd

    Share
  • மதுரையில் பறந்த மீன்கொடியை.. – கவிஞர் வாலி…

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞர்களின் கற்பனையில் பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும் புதிய யுக்தி, புதிய சிந்தனை, புதிய பார்வை – இவைதான் மக்களின் கவனத்தை ஈர்க்கும். காதலைப் பற்றியும், காதலியின் அழகைப் பற்றியும் பாடாத கவிஞர்கள் இல்லை! இது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒன்றுதான் என்றாலும், கவிஞர்கள் தங்கள் கற்பனையை பலநூறு முறை கொட்டிக்கவிழ்த்தாலும், இன்னுமின்னும் மிளிர்கிறதே! அதுதான் நம் தமிழ் மொழியின் மேன்மை! சொல்லாட்சி! கற்பனா வளம் மிக்க கவிஞர்களின் கையில் தமிழ் கிடைத்துவிடும்போது எத்தனை அற்புதமாய் கவிதை பிறந்துவிடுகிறது! திரைப்பாடலென்பது ஒரு பல்லவி – மூன்று சரணங்கள் என்கிற அளவுகோலுக்குள் அடடா ஒரு ஜீவசிற்பத்தை செதுக்குவதுபோல் கவிஞரின் பேனா நகர்கிறது! நாம் விரும்பி நனையும் கவித்துவமழையும் பொழிகிறது! இதோ கவிஞர் வாலியின் புகழ்க்கொடி பறக்கிறது!

    பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
    திரைப்படம்: பூவா? தலையா?
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1969

    sddefault
    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
    தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
    தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை
    மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
    உன்னை தமிழகம் என்றேனே

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
    குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
    சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
    தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
    பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
    புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
    கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
    குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
    இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
    உன்னை தமிழகம் என்றேனே

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    ஒரு பெண்ணை வர்ணிக்க இவர் ஒட்டுமொத்த தமிழகத்தையே தனது உவமைக் களமாக்கியிருக்கிறார்! இப்படியெல்லாம்கூட வர்ணிக்க முடியுமா என்று நம் உள்ளத்திலும் உயர்கிறார்! பொருத்தமான வார்த்தைகளை எடுத்து அதற்கான அங்கங்களோடு அழகுபார்த்து சேர்த்திருக்கும் கவிஞரின் திறன் போற்றத்தக்கது! புகழத்தக்கது! டி.எம்.செளந்திரராஜன் குரலில் கம்பீரமாக ஒரு காதல் ஆலாபானை கற்பனைக் கொடி பறக்க காற்றில் தவழ்கிறது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பூவா தலையா – இது இயக்குனர் கே.பாலச்சந்தர் படம்! காதல் பாடல்கள் வரிசையில் ஒரு கானாமிர்தம்! கவிதை வகையில் சொன்னால் தேனாமிர்தம்! அண்மைக் காலத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற பா.விஜய் அவர்களின் கற்பனையிலும் இந்த யுக்தி எதிரொலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..- தஞ்சாவூரு மண்ணை எடுத்து… ..

    கலைஞரும் கவிஞரும்

    இத்திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருதுகள் வழங்கிய பெருமகனார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். வாழ்த்துரை வழங்க கலைஞரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணதாசன் கண்களில் கலைஞரின் தலைப்பாகம் பட்டிருக்க, தனது பேச்சின்போது.. கண்ணதாசன், நான் பின்னிருந்து பார்க்கையிலே கலைஞரின் தலை பூவா.. தலையா என்றே சந்தேகம் எழுந்தது என்றார். கலைஞர் தனது சிறப்புரையில்.. இதைக் குறிப்பிட்டு.. நல்லவேளை நண்பர் கவிஞர் கண்ணதாசனுக்கு எந்தன் தலை பூவா.. தலையா என்று சந்தேகம் மட்டும் வந்தது. பூ என்று நினைத்து பறிக்க வந்துவிடவில்லை என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார் என்பது ஒரு சுவையான தகவல்!

     

    http://www.youtube.com/watch?v=1Px2HmGehSM

     

     

    Share
  • பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.. வருவான் வடிவேலன்.. கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    muruga

    இறையருள் இயக்குனர் கே.சங்கர் அவர்களின் இயக்கத்தில் எத்தனையோ தமிழ்த்திரைப்படங்கள் வெற்றியடைந்தது மட்டுமின்றி சரித்திரம் படைத்திருக்கின்றன. ஆலயமணி, இது சத்தியம், ஆண்டவன் கட்டளை, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில் என பட்டியல் நீளும். இதுதவிர, எடிட்டிங் துறையில் இவரின் திறமை அடிமைப்பெண் திரைப்படத்தில் சிங்கத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டையிடும் காட்சியென – பல படங்களில் பளிச்சிடுகிறது. மேலும் பொன்மனச்செம்மலுக்கு இவர் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவலாகும்.

    தமிழகத்தில் திருமுருகன் குடிகொண்ட திருத்தலங்கள் எல்லாம் தைப்பூசம் என்கிற உற்சவம் உற்சாகம் கரைபுரள லட்சக்கணக்கான பக்தர்கள் படைவீடுதோறும் படையெடுப்பதோடு, காவடிகள் பலவகையென எங்குபார்த்தாலும்,அணிவகுத்துச்செல்லும் அழகிற்குப் பஞ்சமில்லை. கடல்கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் கூட கந்தன் பெருமை ஓங்கார நாதம் முழங்க பரவசநிலையுடனே பக்தர்களின் அலைகளாக வியாபித்திருக்கிறது என்பது தமிழர்தம் வாழ்வியலில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தலையாய இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறதே!

    மேற்கண்ட நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அங்குள்ள பச்சைமலை, கதிர்கிராமம் போன்ற முருகன் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக இந்த மூன்று ஸ்தலங்களில் தான் கண்ட இக்காட்சியை (தைப்பூச விழாவை) தமிழக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே வருவான் வடிவேலன் என்கிற திரைப்படம் எடுத்து அதில் இக்காட்சியை இணைத்ததை எம்மோடு (கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தினரோடு)2001ஆம் ஆண்டு இயக்குனர் கண்ணதாசன் விருது பெற்ற தருணங்களில் பகிர்ந்தார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம், எண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இத்தகு நல்லெண்ணம் கொண்டவராய் நம் இயக்குனர் கே. சங்கர் – தைப்பூச நாளொன்றில் இம்மூன்று ஸ்தலங்களில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தனி விமானம் அமர்த்தி ஒரே நாளில் சிறப்புக்குழு அமைத்து சீர்மிகு வண்ணம் தங்கரதம் வரை முழுக்க முழுக்க படம்பிடித்து சென்னை திரும்பினாராம்.

    கிட்டத்தட்ட 20000 அடிகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருந்த அக்காட்சியை அப்படியே மக்களுக்குத் தருவததெப்படி என்கிற சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். அப்படித் தருவது டாக்குமெண்ட் படம்போல ஆகிவிடுமே என்கிற ஐயமெழ, அனைவரையும் பொறுமையுடன் பார்க்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், புதிய யுக்தியொன்றை அமைத்திட மெல்லிசை மன்னரை அணுகினாராம். தனது எண்ணத்தை எடுத்துரைத்து, தான் எடுத்துவைத்திருந்த படக்காட்சியை போட்டுக்காட்டி, இதற்காக ஒரு முழுநீளப் பாடல் ஒன்றையும் எழுதி அதற்கான இசையையும் அமைத்திடக் கேட்டிருக்கிறார்.

    எப்படியிருந்தாலும் பாடல் என்பது ஒரு சில நிமிடங்களே அமைக்க முடியும் என்கிற நிலையில் அதற்கேற்ப பல்லாயிரம் அடிகள் எடுத்து வைத்த படக்காட்சியை .. தைப்பூச நிகழ்வுகளை சில ஆயிரம் அடிகளாக தனது எடிட்டிங் திறமையால் சுருக்கித்தந்த பெருமைக்கு உரியவரானார். ஒரு சில சரணங்கள் மட்டுமே கொண்டு வரும் பாடலுக்கு பதிலாக பல வரிகளுடன் அமைக்கப்பட்ட இப்பாடலை.. முற்றிலும் புதுமையாக.. அன்றைய நாளில் பிரபலமாகயிருந்த பாடக பாடகியர்கள் தவிர பக்தியிசைப் பாடகர்களையும் சேர்த்து ஒரு அசுர சாதனையாக .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் வழங்கிய அற்புதப் பாடலிது!

    டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களுர் ரமணியம்மாள், என ஓரு பாட்டுப் பட்டாளம் பாடும் கந்தன் பாடலிது. வருவான் வடிவேலனுக்காக.. இது வெற்றி பெற்றது என்பது அடிப்படையில் ஒரு நல்லெண்ணம், அதற்கான விடா முயற்சி, கடும் உழைப்பு, கூட்டணி வெற்றி.. எல்லாம் அமைந்திட இறைவன் ஆசி வேறென்ன சொல்ல?

    எந்தப் பாடல் ஆனாலும் கண்ணதாசனின் முத்திரை வரிகள் காணலாம் அல்லவா? இதோ இந்தப்பாடலில்..

    தங்கத்தேரை வடம்பிடிக்க மலேசியா நாட்டு அமைச்சர் வரும்காட்சியில்..

    அழகப்பன் மேனிக்கு அழகுசெய்ய அரசாங்கம் வருகின்றது.. என்று சொல்லாட்சி செய்துள்ளார்.

    கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்.. அவன்
    கோவிலுக்கென்றே செலவழிப்போம்

    என்கிற வரியில் செட்டிநாட்டு மக்கள் முருகன் கோவிலுக்கு செய்யும் சேவையை நிலைநாட்டுகிறார்.

    3 Attachments

    varuvan vadivelan.jpg

    Pathu Malai

    Share
  • வாடிக்கை மறந்ததும் ஏனோ…

    — கவிஞர் காவிரி மைந்தன்
     
    வாடிக்கை மறந்ததும் ஏனோ… பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

    vadikai

    மழை பொழிந்தது என்பது செய்தி. ஓருவரைக் கேட்டால் வெளுத்து வாங்கியது என்றார்.. அவர் சலவைத் தொழிலாளி! மற்றொருவரைக் கேட்டால் அடிச்சு சொல்றேன்.. இதுபோல் மழையை நான் பார்த்ததில்லை என்றார்.. அவரோ ஆசிரியர்! தன் உள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் வார்த்தைகள்தான் வாயில் வெளிப்படும்.. அதே போல் – பட்டுக்கோட்டையின் இந்தப்பாட்டு அவரைமட்டுமே சுட்டிக்காட்டுகிறது!

    வெறும் புரட்சியில் இறங்கிடலாமோ? என்கிற வரி என்னை பிரமிக்க வைத்தது.

    காதல் பாடலில் புரட்சியை இணைத்து பாடலைத்தர முடியும் என்கிற சிந்தனை எப்படிப் பிறந்தது தெரியுமா.. உள்ளமெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தம் கொடிகட்டிப் பறப்பதால் காதலிலும்கூட புரட்சி பூத்துவிடுகிறது!

    ஈரிதயங்களின் ஈர்ப்புவிசையில் மனித வாழ்க்கைச் சுற்றிச் சுழன்றிருக்க.. கருத்தொருமித்த காதலர்தம்மில் கனிந்துருகும் வார்த்தைகளின் கூட்டு இந்தப் பாட்டு! என்ன பாத்திரம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற பொருள் அள்ளி வழங்கும் வள்ளல் அல்லவா கவிஞர்கள்? இளமையின் உச்சத்தில் இவர் இருந்தபோது எழுதியபாடல்கள் என்றாலும் இதய அறைகளில் எல்லாம் சமுதாயம் பற்றிய சிந்தனைகளே திடமாக.. தீர்க்கமாக.. நிறைத்திருந்த கவிஞர் அந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவராய்.. பாட்டாளிகள் படும் பாட்டிற்கான ஒரு சமத்துவ விடியல் எங்கே என்று குரல் கொடுக்கும் கவிஞர்.. இத்தனைச் சிந்தனைகளுக்கிடையே இதயத்திலிருந்து இறங்கிவந்த பாட்டு என்பதால் ‘புரட்சியைக் கைவிடாமல் புதிய பொருள்தருகிறார்..

    அன்பின் வயப்படும் ஆனந்த நிலை காதல் என்பது உண்மையெனில் எந்த மனதிலும் இன்பத்துப்பால் வழியும். இலக்கணம் நன்றாய் புரியும்! ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா இணைந்தளித்த பாட்டில் இசையமைப்பு.. ஏ.எம்.ராஜா!

    http://youtu.be/lvuKXddIXBE
    காணொளி: -http://youtu.be/lvuKXddIXBE

     

    பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ?

    வாடிக்கை மறந்ததும் ஏனோ? – என்னை
    வாட்டிட ஆசை தானோ – பல
    கோடி மலரழகை மூடி வைத்து மனதை
    கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை)

    வாடிக்கை மறந்திடுவேனோ? – என்னை
    வாட்டிடும் கேள்விகள் ஏனோ? – புது
    மங்கை எந்தன் மனதில்,பொங்கிவரும் நினைவில்
    மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை)

    அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
    அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
    அமுத விருந்தும் மறந்து போனால்
    உலகம் வாழ்வதும் ஏது? – பல
    உயிர்கள் மகிழ்வதும் ஏது? – நெஞ்சில்
    இனித்திடும் உறவை இன்பமெனும் உணர்வைத்
    தனித்துப் பெறமுடியாது

    அந்தி நேரம் போனதால்
    ஆசை மறந்தே போகுமா?
    அன்புக் கரங்கள் சேரும்போது
    வம்பு வார்த்தைகள் ஏனோ?
    இன்ப வேகம் தானோ..? (வாடிக்கை)

    காந்தமோ இது கண்ணொளிதானோ?
    காதல் நதியில் நீந்திடும் மீனோ?
    கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ..?

    பொறுமை இழந்திடலாமோ? – பெரும்
    புரட்சியில் இறங்கிடலாமோ? – நான்
    கருங்கல்லுச் சிலையோ காதலெனக் கில்லையோ
    வரம்பு மீறுதல் முறையோ..?

    சைக்கிளும் ஓட மண் மேலே – இரு
    சக்கரம் சுழல்வது போலே – அணை
    தாண்டிவரும் சுகமும்,தூண்டிவிடும் முகமும்
    சேர்ந்ததே உறவாலே…

     
     
    பாடல்: வாடிக்கை மறந்ததும் ஏனோ
    திரைப்படம்: கல்யாணப்பரிசு (1959)
    இசை: A.M.ராஜா
    வரிகள்: கவிஞர் கல்யாணசுந்தரம்
    பாடியவர்கள்: A.M.ராஜா – P.சுசிலா

     

     

     

    Share