கவிஞர் காவிரி மைந்தன்

என் சின்ன வயதில் நெஞ்சுக்குள் சுழன்று கொண்டிருந்த பாட்டு.. எம். எஸ். ராஜேஸ்வரி குரலில் ஒரு தென்றல் வந்து தவழும்..

Nehruநேரு மாமா அங்கு ஒரு நாள் வந்திருந்தாராம் .. வார்த்தைகளில் கவிஞர் தஞ்சைவாணன் ஒரு பாடல் வழியாக ஒரு சரித்திரத்தை… எழுதி வைக்க..

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையும் நம்மை ஈர்க்க … இப்போதும் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது மனம்.

பண்டிதர் ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்திய தேசம் கண்ணீர் வடித்தது.. அந்த சோகம் ஒவ்வொரு நெஞ்சிலும் அப்பியிருந்தது.

அன்றைய நாளில் வெளியான பொன்னான வாழ்வு என்கிற திரைப்படத்திலும் இந்தப் பதிவு அழகாக .. நேர்த்தியாக.. இனிமையாக.. அமைத்திருந்தார்கள்

என்பதுதான் சிறப்பு. ரோஜா மலருடன் நேருவின் பிணைப்பு.. அதனை கவிஞர் கையாண்டிருக்கிற விதம்.. பாருங்கள்…

பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்

குழந்தைக் குரலெடுத்து கூட்டும் இன்பத்தைத் தன் பாடல்களில் தரும் எம்.எஸ்.ராஜேஸ்வரி..

ஒவ்வொரு வார்த்தையோடும் உள்ளத்தைப் பறிகொடுத்து.. பாவங்களுடன்.. பாடிய பாடலிது..

சுகத்தையும் சோகத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள … இது போன்ற பாடல்களின் பங்களிப்பு அலாதி..

அதுவும் காலத்தின் ஒரு பதிவாய் .. கவிஞர் தஞ்சைவாணன் இயற்றிய வரிகளுக்கும் இறப்பில்லையே…

மதுரையில் ஒரு தியேட்டரில் சிறு வயதில் பார்த்தபோது.. இந்தப் பாடல் காட்சியில் என் கண்களில் மழை.. இன்னும் நெஞ்சத்தை ஈரமாக்கி வைத்திருக்கிறது.

படம் : பொன்னான வாழ்வு
குரல் : M.S.ராஜேஸ்வரி..

கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்

( கதை)

வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே – ஒரு
சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே – தன்
உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

( கதை )

மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.

அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
அவர் முன்னே சென்றதாம்..
அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
கண்ணீர் விட்டதாம்..
தேம்பித் தேம்பி அழுததாம்..

பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

( கதை )

http://www.mediafire.com/?ujnkznzymyd

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *