அன்பிலே பூக்கின்ற எந்த உள்ளமும்
நன்மையே செய்திடும் நானிலத்தில்!
அவ்வழி நடந்திடும் ஆகிராவும்..
அரும்பல செயல்கள் புரிகின்றார்!

மழலைகள் புகழ்பாட இணையதளம்
மகிழ்வோடு நடத்துகின்ற நண்பரிவர்!
தினமொரு பாடல் எனும்பகுதி..
இவரிடம் சேர்த்தது எனைத்தானே!!

தமிழிசை மேல்கொண்ட காதலினால்
அமுதெனப் பரிமாறி நிற்கின்றார்!
திரையிசை அறிஞர்கள் வரிசையிலும்
சரியான பார்வையை செலுத்துகின்றார்!!

கோவையில் வாழ்கின்ற கொங்குநாட்டார்..
கொள்கையில் வழுவாமல் நடைபோட்டார்!
தேவைகள் பெரிதெனக் கொள்ளாமல்.. பிறர்
வாழ்விற்கும் அர்த்தங்கள் தருகின்றார்!!

இலக்கணம் எல்லாம் தெரிந்தாலும்
தலைக்கணம் இல்லாம் வாழுகின்றார்!
தலைமுறை நலனைக் கருத்தில்கொண்டு
தக்கதோர் செயல்புரிய இணைகின்றார்!!

இவருக்கு அகவை அறுபத்து ஒன்றாம்!
இல்லை இல்லை எண்கள் மாற்றி வைப்போம்!
பதினாறு வயது இளைஞர்போல்.. பகலிரவு
உழைக்கின்றார் பாருங்கள்!!

பிறந்தநாள் தனதையும் பொருளாக்கி..
சிறந்தநாள் அதையே சீர்படுத்த..
தமிழ்மகள் கலைமகள் அருள்கேட்டு..
தாள்பணிகின்ற திருமகன் வாழ்க!! வாழ்க!!

அன்புடன்
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல், சென்னை 600 075.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.