திருமால் திருப்புகழ் (135)
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
———————————————————
”கண்ணன் வெண்பாக்கள்’’
—————————————————
வந்தனம் கேசவா, நந்த குமாரனே,
உன்தன மங்கை உடனிருக்க, -வந்துநம்,
வீட்டில் எழுந்தருளி, ஊட்டியதை உண்டுநான்
காட்டியக் கீக்கிடத்தில் குந்து….(326)
ஏகமே ஏராள, போகமே எண்ணாதோர் ,
தாகமே, தீர்க்கும்மால் மேகமே, -நாகம்மேல்,
தூங்கும் விழிப்புணர்வே, தேங்கும் எனக்குள்ளே,
ஓங்கிப் புலனளந்து ஓட்டு….(327)
சொல்லாகத் தோன்றி, சுவைபொருளாய் ஊன்றியிக்,
கல்லாத மூடனுக்குக் கற்பித்தாய், -எல்லாமும்,
ஆனாலும் தேறாத, நானாளும் சிந்தையை,
மீனாளின் அண்ணனே மாற்று….(328)
உய்யும் அறிவின்றி, பையப் பதுங்கினேன்,
கையைப் பிடித்திழுத்துக் காட்டினாய், -அய்யா,
திருவிண் நகராளும், தாத்தன் உனதருளால்,
பெருவிண் நகராளப் பேணு….(329)
கனவினில் ஈன்று, நனவினில் காத்து,
உணவாய் உலகேழை உண்டு, -பணஅரவில்,
பள்ளிகொண்ட ரங்கா, பதுமைகளாய் எங்களை,
எள்ளிநகை ஆடுவது ஏன்….(330)
ஊது வேய்ங்குழல், ஒய்யாரக் கொண்டையதன்,
மீது மயிற்பீலி மருங்கில்,- பீதகம்,
காது விரித்திளங், கன்றுகள் சூழ்ந்திட,
போது பரம்பொருளின் போக்கு”….(331)
————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2012_06_01_archive.html