Tag: வெ. திவாகர்

  • பல்லழகன் – பகுதி 10

    திவாகர்

     

    “சார்.. நீங்க ‘பை’ன்னு சொன்னா போதும்.. எதுக்கு சிரிக்கணும்.. வாயை மூடிண்டு எப்படிப் பேசறதுங்கிறதை நீங்க பழகணும்..”

     

    ஸீரியஸாகப் பேசிவிட்டு அவள் நடந்து போகிறாள். அவன் தன்னைத் தானேக் கேட்டுக்கொள்கிறான். ‘வாயை மூடிண்டு பேசணுமா..? ம்ம்.. என் பல்லைக் கண்டா நிறைய பேருக்குப் பொறாமை’.. என்று சமாதானம் சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறான்.

     

    அதே சமயம் அனாதை ஆசிரமத்திலிருந்து சுந்தர் கிளம்பிச் செல்வதைப் பார்த்த ரவி ஆசிரமத்துக்குள் நுழைகிறான். அங்கே அந்த வயதானவர் இவனைப் பார்த்து உள்ளேக் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். ரவி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அவரிடம் சாதாரணமாகப் பேசுகிறான்.

     

    ‘நான் இங்க டொனேஷன் விஷயமா விசாரிக்க வந்தேன். இதெல்லாம் இங்க யார் பாக்கறது? நீங்கதானா.. இல்லே வேற யாராவது டீல் பண்ணுவாங்களா.. பணமெல்லாம் கொடுத்தா இந்தக் குழந்தைகளுக்கு எப்படி செலவழியும்னு அதாவது சரியா அவங்களுக்குப் போகுமா.. ஏதாவது அக்கௌன்ட் கொடுப்பீங்களா?’

     

    ‘ஐய்யோ.. என்ன இப்படி கேட்டுட்டிங்க.. நாங்க இப்படி டொனேஷன் பணத்தைச் சரியா செலவழிக்கறதுக்கு ரொம்ப நியாயமா நடவடிக்கை எடுப்போம் சார்.. கணக்கு வழக்கெல்லாம் ரொம்ப ஒழுங்கா இருக்கும். எங்க ஆசிரமத்துக்கு எல்லா இடத்துலயும் நல்ல மரியாதை இருக்கு.’

     

    ‘அப்படியா..’ ரவி அவரைப் பார்த்து கேட்டவன்.. நீங்களே இதையெல்லாம் கவனிக்கிறீங்களா?’

     

    ‘இல்லே சார்.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் போட்டுருக்கோம்.. அவர் பேரு சுந்தர். இப்போதான் வெளியே போனார்.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்ன அவரைப் பார்த்திருக்கலாம்.. கொஞ்சம் இருங்க.. அவருக்கு ஃபோன் பண்றேன்.. அவர் உடனே வந்துடுவாரு.. இப்பதானே போனாரு.. ‘ என்று கைபேசியை எடுத்தார்.

     

    ரவி அமைதிப்படுத்தினான். ‘இருக்கட்டும் சார்.. நான் விசாரிக்கதான் வந்தேன். நான் டொனேஷன் வாங்கித் தர்ரேன். ஆனா அது சரியா போகறதா தெரியணும் இல்லையா.. இந்த ஆசிரமம் பத்திச் சொல்லுங்க..’

     

    ‘இது ஆந்திரக்காரங்க குடும்பத்தோட தயவுல போகறது சார். இப்போ பதினைஞ்சு சின்னப் பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க அத்தனை பேரும் அனாதைப் பசங்கதான். வேற புதுசா ஒண்ணுமில்லேங்க..

     

    இப்போ வெளியே போனவர்தாம் எல்லாம் பாத்துக்கிறாரா?

     

    ;இல்லே சார்.. சொன்னேனே.. அவர் பேர் சுந்தர், இங்கே அக்கௌன்ட் ஒண்ணுதான் பாக்கறார். மிச்ச வேலை எல்லாம் நான் பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன வேணும்? என்ன பதில் வேணும்னாலும் நான் சொல்லறேன் சார்.’

     

    ‘அதுக்கு முன்னாடி உங்க இன்மேட்ஸ்லாம் அதாவது இங்க உள்ளவங்களை நான் பாக்கலாமா?’

     

    அதே நாள் மாலை நேரம் கல்யாணியின் வீடு.

    முரளி வந்திருக்கிறான். அதே சமயம் கோம்டியும் உள்ளே வருகிறாள்.  ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைக்கிறான் கல்யாண். கோம்டி அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்.

     

    “உங்களை இந்த வீட்டு வாசல்ல ஒரு தடவை பார்த்திருக்கேன். இப்ப ஞாபகம் வரீங்க.. ஒரு மாசம் முன்னாடி ஆட்டோ டிரைவர்கிட்டே சண்டை போட்டீங்க.. அவன் திட்ட நீங்க திருப்பித் திட்ட கொஞ்சம் கும்பல் வந்ததும் ரெண்டு பேரும் சண்டை போடாம போயிட்டீங்க.. ரைட்டா?”

     

    “நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.. ஆமாம்.. கும்பல் கூடாம இருந்ததுன்னா நாலு சாத்து சாத்தியிருப்பேன்.”

     

    “முரளி இங்கே டெய்லி வருவாரோ?” கல்யாணைப் பார்த்துக் கேட்டாள்.

     

    முரளியே சொன்னான். “டெய்லி இல்லைன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒருதடவையாவது ராத்திரி நேரத்துல ஒரு ரெண்டு மணி நேரம் மாமா கூட இருந்துட்டு சாப்பிட்டு போவேன்”.

     

    “சாப்பாடுன்னா எடுப்புச் சாப்பாடுதான் இல்லையா.. பொன்னம்மாவோட டெய்லி வேலை இது. சமயத்துல பொன்னம்மா கூட சமைச்சுப் போடுவா இல்லையா?”

     

    “அதுவும் சரிதான்.”

     

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்லையா.. உங்க மனைவியோட வருவீங்களா இல்ல தனியா வருவீங்களா மிஸ்டர் முரளி..”

     

    முரளி ஆச்சரியமாகப் பார்த்தான் அவளை.

    “என்னங்க நீங்க வந்ததும் வராததுமா கோர்ட்ல வக்கீல் மாதிரி கேள்வி கேக்கறீங்க?”

     

    “ஸாரி,, உங்களுக்குத் தெரியாதா? மிஸ்டர் கல்யாண் என்னை அவரோட பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்டா நியமிச்சிருக்கார்.. ஏன் கல்யாண்.. சொல்லலியா இன்னும் மிஸ்டர் முரளிகிட்டே?”

     

    “யெஸ் முரளி.. போலீஸ் ரொம்ப மெதுவா இன்வெஸ்டிகேட் பண்ணுது. கொஞ்சம் நாமும் நம்மளால முடிஞ்ச அளவு உதவி பண்ணலாமேன்னு பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்ட் அதுவும் போலீஸ் ஒப்புதலோடதான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இவங்க எதிர் வீட்டிலேயே இருந்து செய்யறதுன்னாலே எனக்கும் கொஞ்சம் சௌகரியமா இருக்கு.”

     

    “ஓ.. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான். சீக்கிரம் இந்த கேஸ் முடியணும்.. ரொம்பவும் எதிர்பார்க்காத துரதிருஷ்ட நிகழ்ச்சி இது. நீங்க கேட்காமயே ஒரு விஷயம் சொல்லறேன். எனக்கு ஆறு வயசு.. இதோ இவனுக்கு மூணு வயசு. இவனோட அப்பாவும் அம்மாவும் ஒரே நாள்ல அசம்பாவிதமா இறந்துட்டாங்க.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா  ஒரே கதறல். ரொம்ப நாள் அழுதாங்க.. இவனைக் காமிச்சு ‘அடேய் முரளி இனிமே வாழ்க்கைல இவனைப் பாத்துக்கவேண்டிய பொறுப்பு வந்துடுத்துடா.. அவனை நல்லா பார்த்துக்கோடா’ன்னு சொல்லிச் சொல்லி அழுதாங்க. இவனோட பெரியப்பாவை நான் அப்போலேர்ந்தே மாமா’ன்னு கூப்பிட்டுப் பழக்கம். என் சின்ன சித்தி பிள்ளை சுந்தரும் அப்பப்ப எங்கள்ட்ட ரொம்ப நெருக்கமா இருப்பான். மாமாவும் ரொம்ப ஃபீல் ஆயி யார்கிட்டயும் பேசாம ரொம்ப நாள் அப்படியே இருந்தாரு. இவனைப் பார்த்தா அவருக்கும் அழுகை வரும். இப்படி எமோஷனலாவே இத்தனை வருஷமா நாங்க வளர்ந்தோம். இப்படியே போகிற வாழ்க்கைல இப்போ அந்த அன்பு மாமாவும் போயிட்டாருன்னா எங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் இந்த மாதிரி சாவு ஏன் வரணும்? புரியலே..”

     

    “புரியுது” கோம்டி அவனைப் பார்த்தாள். எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அவள். “இவர் பெரியப்பாவோட ரொம்ப நெருக்கமா நீங்க இருந்தது அவரோட தனிமையான வாழ்க்கைல அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையா..?”

     

    “அதுவும் உண்மைதான்” முரளி ஒப்புக்கொண்டான்.

     

    “அதேபோல உங்களுக்கும் ரொம்ப ஆதரவா எப்பவுமே இருந்தார் இல்லையா”

     

    “ரொம்ப கரெக்ட்ங்க”.

     

    “உங்க வீட்டுக்கு சமீபத்துல அவர் எப்போ வந்தார் மிஸ்டர் முரளி.”

     

    “இல்லங்க.. அவர் யார் வீட்டுக்கும் போகமாட்டார். என்னவோ தெரியலே.. அவர் அப்படியே பழகிட்டார்”.

     

    “நீங்க ரொம்ப நெருக்கங்கிறச்சே நீங்க எப்பவாவது ‘வாங்க மாமா என் வீட்டுக்கு’ன்னு அழைச்சிருக்கீங்களா?”

     

    முரளி விழித்தான். என்ன சொல்வதென்பது தெரியவில்லை என்பது போல கல்யாணைப் பார்த்தான். கல்யாண் உதவிக்கு வந்தான்.

     

    “அது வேற ஒண்ணும் இல்லே கோம்டி.. அவனுக்கு ரொம்ப மரியாதை பெரியப்பா மேலே. அவருக்குத் தெரியும் எப்ப வரணும்னு விட்டிருக்கலாம்! அப்படித்தானே முரளி?”

     

    “ஆமாண்டா.. அதுதான் சரியான பதில் கூட. நான் அவரை எதிர்த்துக் கூட பேசினதில்லே. அவர் சொல்லற வேலையெல்லாம் செய்யறது.. அவ்வளவுதான்”.

     

    முரளியை மறுபடியும் முதலில் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தினாள். “நான் முதல்ல ஒரு கேள்வி கேட்டேனே.. நீங்க எப்பவாவது உங்க மனைவியையும் கூட அழைத்து வருவதுண்டா? அல்மோஸ்ட் டெய்லி வரீங்க இல்லையா.. உங்க மனைவி எப்பவாவதும் ஒரு தடவையாவது கூட வந்தாங்களா..  ஜஸ்ட் கேக்கறேன்.. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா பதில் சொல்லவேணாம்.”

     

    “இல்லை.. மனைவி வரமாட்டா. முதல் காரணம் நான் ஆஃபீஸ்லேர்ந்து போகற வழியிலே கிண்டி இருக்கறதுனாலே நேரா இங்கதான் வருவேன். ரெண்டாவது காரணம் மூணு வருஷமாவே.. இப்படி பெரியப்பாவை பாக்கறதுங்கிறது அப்படியே பழகிப் போச்சு.. ஜஸ்ட் லைக் தட்.”

     

    “இல்லை.. நான் ஏன் கேட்டேன்னா ஒவ்வொரு தடவை பெரியப்பாவைப் பாக்க வரச்சே நீங்க எடுப்புச் சாப்பாடை பங்கு போட்டு சாப்பிடுவீங்க இல்லையா.. வீட்டுக்குப் போனா மனைவியும் எதிர்பார்ப்பாங்க உங்களோடு சாப்பிடணும்னு.. ஆனா நீங்க சாப்பிடறதில்லே.. இல்லையா.. உங்க மனைவிக்கு அதுவும் ‘ஒரு வருஷம் புதுசு’ மனைவிக்கு வருத்தம் இருக்குமே..”

     

    “என்னங்க நீங்க என் பெர்சனல் விஷயம்லாம் கேட்டுண்டு.. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பலே..”

     

    என்று சொன்ன முரளி கொஞ்சம் கண்ணைத் துடைத்தபடி இருந்தான். கல்யாணிடம் முறையிட்டான், “அடேய்! போலிஸ் கூட இப்படியெல்லாம் கேட்டதில்லே.. இவங்க சொந்த விஷயம்லாம் கேட்கலாமாடா.. இதோ பார்.. என் மேலே ஏதாவது சந்தேகம் இருந்தா டைரக்டா சொல்லுடா.. நான் ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டேன். ஆனா இவங்க மூலமா இதெல்லாம் கேக்க வைக்காதே.”

     

    “முரளி.. என்னடா நீயே இப்படில்லாம் சொல்லலாமா.. இதோ பார். இதையெல்லாம் ஏன் உங்கிட்டே கோம்டி கேக்கறாங்க தெரியுமா.. உன் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னுதான், நீ ரொம்ப எமோஷனல்.. ஆனா அந்த எமோஷன் உணர்ச்சி உன்னை ஆபத்துல மாட்டக்கூடாதுன்னுதான் இத்தனை கேள்வியும்.. உனக்கொரு விஷயம் சொல்லறேன்.. என்னைக் கூட இப்படியெல்லாம் பெர்சனல் விஷயம்லாம் கேட்டாங்க.. நான் அசராம பதில் சொன்னேன். ஏன்னா இது கொலை வழக்குடா.. உண்மையான கொலைகாரனை விட்டுட்டு உன்னை மாதிரியான அப்பாவியை போலீஸ் மாட்டிவிடுமேன்னு ஒரு அக்கறைதான்.. நீ எமோஷனல் ஆகாம பதில் சொல்லுடா..”

     

    “ஸோ.. இவங்க என் பெர்சனல் விஷயம் கேட்டாங்கன்னா கூட என்னைக் காப்பாத்தத்தான்னு சொல்லறே.. ஓகேடா.. “மிஸ் கோம்டி.. இங்க பாருங்க.. என் மனைவிக்கு நான் எங்க மாமாவோட பிரியமா இருக்கறது ஆரம்பத்துலேர்ந்து பிடிக்கலே. எதுக்குன்னு கேட்டா என்ன சொல்ல முடியும். மாமியார் மருமகள் எதிரிங்க மாதிரி.. மாமனார் மருமகள்’ன்னு கூட வெச்சுக்கலாம்.”

     

    “வெரிகுட் மிஸ்டர் முரளி.. மாமனார் உங்க மனைவி மேலே மதிப்பு வெச்சுருக்காரா இல்லே அவரும் உங்க மனைவியை எதிரியாப் பார்த்தாரா?

     

    “அப்படில்லாம் பொய் சொல்லக்கூடாதுங்க.. அவர் ஒருவார்த்தை சொல்லமாட்டார்.”

     

    “அப்போ உங்க மனைவி மேலேதான் தப்பு இல்லையா? அவங்கதான் இவரை தப்பா புரிஞ்சுண்டாங்க இல்லையா? நான் அவங்ககிட்ட இதைப் பத்தி பேசலாமா உங்க அனுமதியோடதான்.”

     

    “கோம்டி மேடம் இது பிள்ளையார் பிடிக்க குரங்கா முடியுது. என் பொண்டாட்டியோட விசாரணைக்கெல்லாம் நான் ஒப்புக்கமாட்டேன், ஆமாண்டா கல்யாண் ஐ வில் நாட் அக்செப்ட். ஏன்னா நிச்சயம் எங்க குடும்ப விரிசல்லதான் முடியும். பிரியாவுக்கு கோபம் வந்தா அவ ராட்சஸியா மாறிடுவா”

     

    “ஓ.. ஒருவேளை அப்படி ராட்சஸியா மாறவிடக் கூடாதேங்கிற நல்ல எண்ணத்துலதான் நீங்க உங்க மாமாவை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டதில்லே.. இல்லையா சார்?”

     

    “நீங்க என்னதான் சொல்ல வர்றிங்க?”

     

    “ஆறு மாசம் முன்னாடி ஒரு சித்ரா பௌர்ணமி நாள்ல இங்க பொன்னம்மா அதான் இந்த வீட்டு வேலைக்காரி மூலமா சித்ரான்னங்கள் பலவகைப்பட்ட ருசியில் செஞ்சிண்டு அதை எடுத்துண்டு உங்க வீட்டுக்கு உங்க மாமா கார்ல வந்தாரு.. அப்போ உங்க வீடு பக்கத்துத் தெருவுலதான் இருந்தது. அதனால பொன்னம்மாவையும் அங்க பாத்திரம் கழுவணும்னு சொல்லி நடந்து வரச் சொன்னாருங்கறதாலே அவளும் கொஞ்சம் லேட்டா வந்தா. அப்போ உங்க மனைவி அழுதுண்டே கிச்சன் உள்ளே இருந்தாங்க.. நீங்க சமாதானப்படுத்தி ஹால் உள்ளே அழைச்சுண்டு போனீங்க.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டீங்க.  பொன்னம்மா எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டு தான் போகலாமா’ன்னு உங்க மாமாவைக் கேட்டுட்டு வெளியே போனா. அப்போ பிரியாவும் வெளியே வந்து அவளைத் தடுத்து நிறுத்தி வெளியேயே ‘பொன்னம்மா என்னையும் அழைச்சுண்டு போ.. இல்லைன்னா நீயும் இங்க நைட்டெல்லாம் இருந்துடணும்’னு அவ காலப் பிடிச்சுக் கெஞ்சினாங்க உங்க மனைவி.. பொன்னம்மாவுக்கு என்ன செய்யறதுன்னுத் தெரியலே.. அவ என்ன பண்ணாள்னா உங்க பொண்டாட்டியை கீழே மயக்கமா விழச் சொல்லியிருக்கா.. அந்தம்மா விழுந்தவுடனே குய்யோ முய்யோன்னு சப்தம் கூட்டி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போய் உங்க மனைவிக்கு குளுகோஸ் ஏத்தி அடுத்த நாள் காலைல ஜாக்கிரதையா அழைச்சுட்டு வந்தா. இதுல வேடிக்கை என்னன்னா தன் பொண்டாட்டியைப் பாக்கறதுக்கு ஆஸ்பத்திரிக்கு முரளியோ இல்லே மாமாவோ போகவே இல்லை. அடுத்த வாரமே நீங்க உங்க வீட்டையே இங்க கிண்டியிலிருந்து கொஞ்சதூரம் தள்ளி அதாவது நங்க நல்லூர் பக்கம் மாத்திட்டீங்க.. மிஸ்டர் முரளி.. நான் சொன்னது இப்போ எல்லாம் உண்மைதானே.. இதோ பாருங்க.. பொய் பேசாம நிஜத்தைச் சொல்லுங்க.. அது உங்களைக் காப்பாத்தும்.. இல்லைனா அனாவசியமா உங்க பொண்டாட்டியை போலீஸ் அழைச்சுட்டுப் போய் கேள்வி கேட்கும். அந்தம்மா உண்மையத்தான் சொல்லும். சாட்சிக்கு பொன்னம்மாவும் இருக்கா இல்லையா.. அதனால பயப்படமாட்டாங்க.. இப்போ மாமா வேற உயிரோட இல்லை. சொல்லுங்க மிஸ்டர் முரளி!”

     

    கல்யாண் அவளைப் பார்த்துக்கொண்டே வியப்பின் உச்சத்தில் சென்றான் என்றால் முரளி அழ ஆரம்பித்து விட்டான்.

     

    “கல்யாண்.. நம்ம குடும்ப மானம் போகணும்னு நீ டிசைட் பண்ணிட்டே போலிருக்கு!” என்று சொல்லி விட்டு ஓவென அழுதான். ஆனால் கல்யாண் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஒரே வார்த்தைதான் சொன்னான்.

     

    “நமக்குத் தேவை இப்போ எமோஷனல் இல்லை.. உண்மை.. உண்மையைச் சொல்லு. இல்லைனா என்ன நடந்ததுன்னு என்னாலே உன் பொண்டாட்டியிடம் பயமுறுத்திக் கேட்டு பதில் வாங்கமுடியும்.”

     

    “இல்லே என்னால எந்தப் பதிலயும் தரமுடியாது. ஐ டிக்ளைன் டு ஆன்ஸ்வர். நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ.”

     

    “இங்க நடந்தது ஒரு கொலை மிஸ்டர் முரளி..  எனக்குக் கொஞ்சம் விவரம்தான் கிடைச்சுது. ஆனா இந்த விஷயம்லாம் போலீஸுக்கு வெல்லம் மாதிரி. போலீஸ்க்காரங்க துருவித் துருவி அவங்க பாணில கேட்டு, உங்களைத் துன்புறுத்தி இருட்டு ரூம்ல  வெச்சு உங்களை விசாரிச்சாங்கன்னா அப்போ எல்லா விடைகளும் டக் டக்னு சொல்லிடுவீங்க.. இது போலீஸ்கிட்ட போகறதா இல்லே நம்மோடேயே இருந்து சால்வ் பண்ணப் பாக்கலாமா?” கோம்டி அவனைப் பயமுறுத்தினாள்.

     

    “அப்படின்னா போலீஸ் வரைக்கும் போகாது.. இல்லையா?”

     

    கல்யாண் பட்டும் படாமல் சொன்னான். “சொல்லு முரளி.. நீ சொல்றதப் பொறுத்து எல்லாமே இருக்கு.”

     

    கல்யாணிடம் நெருங்கி வந்தான் முரளி. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் குரலில் துயரம் அதிகம் இருந்தது.

     

    “கல்யாண்.. நீ நினைக்கிற மாதிரி அவ்வளோ நல்லவரில்லே மாமா.. ஐ மீன் உங்க பெரியப்பா. அவருக்குக் கல்யாணம் ஆகலேயே தவிர அவர் இப்போவரைக்கும் பல பொண்ணுங்க வாழ்க்கைல மோசடி பண்ணி ஏமாத்தி இருக்கார். அதுல ஒருத்திதான் என் பொண்டாட்டி.”

     

    “என்னடா சொல்லறே?” கல்யாண் அதிர்ந்து போனான். முரளி தன் தலையில் கைவைத்துக்கொண்டே சோகமாக சொன்னான்.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 9

    திவாகர்

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..”

     

    “கோமதி..”

     

    “ஸார் நான் கோம்டி சார்..”

     

    “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..”

     

    “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    “ஸார்.. இதைக் கொஞ்சம் தீர்க்கமா யோசிச்சா புரியும். பெரியப்பா எத்தனையோ பேருக்கு இந்த மாதிரி உதவி பண்ணியிருக்கிறார். அதுல ஒருத்திதான் இந்த சுமதி.. இன்னும் உதவி பண்ணக்கூட இல்லே.. அதுக்குள்ளே அவர் போயிட்டார். சுமதியை இதுக்காக எப்படி சந்தேகப்படமுடியும்.?” ஆனால் கோம்டி குறுக்கிட்டாள்.

     

    “நீங்க எதுக்காக அவளுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி பேசணும்? முரளி சொன்னாருன்னா இதுல ஏதோ விஷயம் இருக்குன்னுதான் அர்த்தம். அவளோட அட்ரஸ் கொடுங்க.. நானே போய் விசாரிக்கிறேன்..”

     

    “கரெக்ட் கோமதி.. சாரி….. கோம்டி..  உங்களுக்கு சுமதி அட்ரெஸ் மெஸ்ஸேஜ் பண்ணிடறேன்.. பார்த்துட்டு வந்து எனக்கும் விவரம் சொல்லுங்க.. இவரோட பார்வை வேற.. உங்க பார்வை வேற இல்லையா..”

     

    அதே சமயத்தில் ஒரு அனாதை ஆசிரமம்.. பாலபாலிகா என்று பெயர்ப் பலகை இருந்தது.  அருகே தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். இவன் அங்கு நுழைந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே தொடர்ந்து வந்த  ரவியும் தன் வண்டியை வெளியேயே நிறுத்தி விட்டு சுந்தர் உள்ளே சென்றதைப் பார்த்து பின் தொடர்ந்தான். சுந்தர் அங்கே உள்ளே சென்றதும் அங்குள்ள ஒரு வயதானவரிடம் பேசிவிட்டு அவர் அழைத்துச் செல்ல உள்ளே சென்றான்.

     

    இங்கே போலிஸ் ஸ்டேஷனிலிருந்து கோம்டியும் கல்யாணும் கிளம்பினார்கள். காரில் போகும்போது முதலில் ரவிக்கு ஃபோன் செய்தாள். ஸ்பீகர் வாய்ஸ் இல் ஃபோனை வைத்துக்கொண்டாள். அதனால் காரை டிரைவ் செய்துகொண்டிருந்த கல்யாணும் கேட்கமுடிந்தது. சாலை ஓரத்தில் இருந்த ரவி ஃபோனை எடுத்தான்.

     

    ‘கோம்டி! நீ சொன்னது சரி, இப்போ இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்குள்ளே சுந்தர் நுழைஞ்சிருக்கான். இனிமேதான் நான் உள்ளே போய் விசாரிக்கணும். அவனுக்கு இங்கே என்ன வேலைன்னு தெரியலை.’

     

    ‘நான் எதிர்பார்த்தேன் ரவி.. சரி, நான் அவனுக்கு ஃபோன் பண்றேன்.. நீ அவன் வெளியே வந்தப்பறம் உள்ளே நுழைஞ்சு எதுக்கு அவன் வந்தான்னு கேட்டுக்கோடா.. அவன் உன்னை பாக்கக்கூடாது..’

     

    ‘சரி.. கல்யாண் என்ன பண்றான்..?’

     

    ‘ம்ம்.. பல்லைக் காட்டிக் காட்டி வெறுப்பேத்திண்டிருக்கார்.. வைடா ஃபோனை..’

     

    ‘நீதானே ஃபோன் பண்ணே.. நீயே ஆஃப் பண்ணு..’

     

    சுந்தருக்கு ஃபோன் போட்டாள்..

     

    “மிஸ்டர் சுந்தர்! சாரி.. ஆஃபீஸ்லதானே.. உங்களை டிஸ்டர்ப் பண்றேனா?”

     

    “நிச்சயமா ஆஃபீஸ்லதான்.. ஆஃபீஸ்லதான் இருக்கேன்.. .. எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்குன்னு சொன்னேனே.. இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.. என்ன விஷயம்..?

     

    ‘எனக்குத் தெரியும் சார்.. இப்போதானே உங்களை அங்கே பார்த்தேனே.. மீடிங்க் கீடிங்க் போயிட்டீங்களோன்னுதான் கேட்டேன்.’

     

    ‘ஆமாங்க.. உங்க கால்னவுடனே மீடிங்க்லேர்ந்து நடுவுல வந்திருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.. திரும்பவும் நான் மீடிங்க் போகணும். எல்லோரும் காத்துண்டிருக்காங்க.. என்னோட ப்ரெஸெண்டேஷன் வேற இருக்கு. என்ன விஷயம்?”.

     

    “சார்.. உங்களை கேக்க மறந்துட்டேன்.. உங்க அங்கிள் கொலை செய்யப்பட்ட அன்னிக்கி நீங்க ஊர்ல இல்லே.. முரளி ஃபோன் செய்த உடனே நாலு நாலரை மணி நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்க இல்லையா? சுந்தர் நீங்க எந்த ஊர்லேர்ந்து புறப்பட்டு வந்தீங்க?”

     

    அவன் கோபம் அவன் குரலில் தெரிந்தது. “என்னங்க என் மேல ஏதாவது சந்தேகமா? டைரக்டா சொல்லுங்க.. நான் நேரே கல்யாண்கிட்டயே பேசறேன்.. இல்லே போலீஸ்கிட்ட சொல்லிக்கிறேன்.. இல்லே ஒரு வக்கீல் மூலமா கூட பேசுவேன்.”

     

    “ஐய்யய்யோ.. என்னங்க நீங்க இவ்வளோ கோபப்படறிங்க.. விவரம் சேகரிக்கறச்சே நான் சரியா கலெக்ட் பண்ணணுங்க.. இப்போ நான் முடிவுல கல்யாண்கிட்டே ரிப்போர்ட் தரணும்.. மிஸ்டர் சுந்தர்னு வரச்சே நான் சரியா எழுதணும்.. கொலை நடந்த அன்னிக்கி விவரம் கேட்டவுடனே சுந்தர் இந்த ஊரிலேர்ந்து இத்தனை நேரத்துல புறப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்தார்னு சரியா எழுதணுமா இல்லையா.. இன்ஸ்பெக்டர் மோகன் அதான் அந்தப் போலிஸ் இன்ஸ்பெக்டர் கூட இப்பல்லாம் எங்கிட்டே சும்மாச் சும்மா விவரம் கேட்கிறார். கொஞ்சம் கோஆபரேட் பண்ணுங்க சுந்தர். “

     

    போலீஸ் இன்ஸ்பெக்டர் எனும் வார்த்தையைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள் கோம்டி. அது வேலையும் செய்தது. சுந்தரின் குரல் சாந்தமாக வந்தது.

     

    “இப்போ நான் அன்னிக்கு எங்கேயிருந்து கிளம்பி வந்தேங்கிறது வேணும் இல்லையா.. எனக்கு முரளி ஃபோன் பண்ணது ராத்திரி எட்டு மணிவாக்குலதான்.. அப்போ சரியா வைத்தீஸ்வரன் கோயில் மேற்கு வாசல் வீதிலே ஒரு ஓட்டல்ல டிபன் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்போ கிடைச்ச செய்தி என்னை உடனடியா கிளம்ப வெச்சது.  ராத்திரி அரௌண்ட் பன்னிரண்டரை ஒண்ணுக்கெல்லாம் பெரியப்பா வீட்டுக்கு வந்துட்டேன். இவ்வளவுதான்.. இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. நான் மீடிங்க் போகணும்.. ஆனா உங்களுக்குப் பதில்சொல்லிட்டே போறேன். போதுமா..?”

     

    “வைத்தீஸ்வரன் கோயில்ங்கிறது சிதம்பரம் தாண்டினா வரும் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அன்னிக்கு நான் சிதம்பரம் கூட போயிருந்தேன்.”

     

    “சிதம்பரம் போனீங்களா?” கோம்டி சாதாரணமான குரலில்தான் கேட்டாள்.

     

    “சிதம்பரம்…” என்று சொல்லிவிட்டு அவன் குரல் நிதானித்தது.. “ஆமாங்க..  மத்தியானம் லஞ்ச் டைம்ல அங்க சாமி தரிசனம் பண்ணிட்டு அப்படியே இங்க வைத்தீஸ்வரன் கோயில் போயிட்டு கூடவே..”

     

    “நாடி ஜோஸ்யம் பார்த்துட்டு டிபன் சாப்பிடப் போயிட்டீங்க.. அப்போ கால் வந்தது.”

     

    “எப்படிங்க நாடி ஜோஸ்ய விஷயம்லாம் தெரிஞ்சுண்டீங்க.. கரெக்ட்தான்..”

     

    “ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் சுந்தர்.. இப்போ நீங்க உங்களோட மீடிங்க் போங்க.. அப்புறமா தேவைப்பட்டா கூப்பிடறேன். வெச்சுடட்டுமா?”

    அவன் திரும்ப பதில் சொல்லாமல் கட் செய்தது அவர்களுக்குத் தெரிந்தது.

     

    “எங்கேயோ அனாதை ஆசிரமத்துலேர்ந்து பேசிண்டு தன்னோட ஆஃபீஸ் மீடிங்க்னு சொல்றான் கல்யாண்.. கேட்டீங்களா.. இந்த சுந்தர் சொல்றது எல்லாமே சுத்தப் பொய்! இவன் சிதம்பரத்துக்குப் போனது மட்டும் உண்மை. சிதம்பரத்துல அந்த ரஞ்சிதாவைப் பார்த்திருக்கிறான் என்பது என் ஊகம்…”

     

    சட்டென காரை பிரேக் போட்டு சாலைப் பக்கத்தில் நிறுத்தினான் கல்யாண். அவன் குரலில் ஆச்சரியம் அதிகமாக இருந்தது.

     

    “எப்படி சொல்லறீங்க கோம்டி?.. சுந்தர் இந்தக் கொலைல இன்வால்வாகி இருப்பாங்கிறிங்களா?”

     

    “அது எனக்கு எப்படித் தெரியும்? அதைக் கண்டுபிடிக்கவேண்டியது போலீஸ். ஆனா அவங்களாலே சிதம்பரத்துல விலாசம் இருந்தும் ரஞ்சிதா’ங்கறது யாருன்னே கண்டுபிடிக்கமுடியலியே..”

     

    “அப்போ நீங்க மட்டும் எப்படி சிதம்பரம் விஷயத்துல அவன் பொய் சொல்லறான்னு சொல்லறீங்க?..

     

    “அவன் எங்கிட்டே பேசின விதம் கேட்டீங்களா? சிதம்பரம்ங்கிற வார்த்தையை ரொம்ப கவனமா நிதானிச்சு யூஸ் பண்ணான். ஒருவேளை அவன் சிதம்பரத்துக்குள்ளே போகலே, பைபாஸ்ல வைத்தீஸ்வரன் கோயில் ரோட்ல போனேன்னு சொன்னான்னு வெச்சுக்குங்க.. நானோ இல்லே போலீஸோ சிதம்பரத்துல ரஞ்சிதாவைப் பிடிச்சுட்டோம்னா இவனுக்கு டேஞ்சர் இல்லையா.. அவ நிச்சயமா இவன் பேரைச் சொல்லுவான்னு அவன் பயந்திருக்கலாம். ஆனா சரியா யோசிக்காம தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டான் உங்க சித்தி பையன்.”

     

    “என்ன தப்பு?”

     

    “லஞ்ச் டைம்ல கோயில்ல போயி தரிசனம் பண்ணிட்டு’ன்னு சொன்னான் பாருங்க.. அது தப்பு. கரெக்டா பன்னெண்டு மணிக்கு சிதம்பரம் கோயில் க்ளோஸ் பண்ணிடுவாங்க. ஆனா இவன் சிதம்பரம் போனதும் அந்த பத்து லட்சம் பணத்தைப் பட்டுவாடா பண்ணியதும் உண்மையா இருக்கலாம்.. நாம நிறைய இன்னும் இதுல கண்டுபிடிக்கணும், இதை நாம் இப்போதைக்கு இன்ஸ்பெக்டருக்கு சொல்லவேணாம்!”

     

    “ஹைய்யோ.. உங்களுக்கு எப்படித் தெரியும் கோயில் சரியா க்ளோஸ் பண்ற டைம்லாம்..”

     

    “நாங்க ஒருவாட்டி பன்னிரெண்டு மணி வாக்குல நடராஜர் தரிசனத்துக்காக போயிருக்கோம். கோயில்ல ‘மூடற  நேரம்..’னு சொல்லிட்டு தரிசனத்துக்கு கடகடவென ஓடச் சொன்னாங்க.. இல்லேன்னா சாயங்காலம் நாலு மணி வரைக் காத்திருக்கணும்.. நல்ல வெய்யில் காலத்துல அந்தக் கோயில் வடக்கு வாசல்லேர்ந்து கனகசபை வரைக்கும் வேகவேகமா ஓடிப்போயி பன்னெண்டு மணி அடிக்கறதுக்குள்ள நடராஜரைப் பார்த்துட்டோம். அப்போதான் பூஜை முடிஞ்சு நல்ல அலங்காரத்துல கற்பூர தீபாராதனைப் பார்த்தது எங்க நெஞ்சுல அப்படியே பதிஞ்சுருக்கு. தரிசனம் பண்ணிட்டு இப்படி வந்தோம். சொன்னபடி கோயில் சபையை மூடிட்டாங்க.”

     

    “நீங்க கச்சிதமா சொல்லறதையெல்லாம் பார்த்தா எனக்கு எல்லார் மேலயும் சந்தேகம் வருது கோம்டி. சரி, நீங்க சொல்றபடியே இன்ஸ்பெக்டர்கிட்டே அப்புறமா சொல்லிக்கலாம். ஆனா எங்க பெரியப்பா இந்த பண மேட்டருக்கெல்லாம் முரளியைத்தான் அதிகம் ஹெல்ப் எடுத்துக்குவாரு, முரளியை நீங்க விசாரிங்க.. நான் விசாரிச்சா அவன் என்கிட்டே அழுதுடுவான், கொஞ்சம் வெகுளி. வெளிப்படையா பேசுவான்,, அவனை நான் போய் ஏதாவது கேட்டா என்னை சந்தேகிக்கிறாயாடா’ ன்னு நேரடியா கேட்பான். அத்தோட போலீஸ் கூட அவன் பேருல ரொம்ப சந்தேகம் காட்டுது. ஏன்னா அவன் மட்டும்தான் பெரியப்பாவுக்கு ரொம்ப க்ளோஸ். அதனாலெல்லாம் அவனை சந்தேகப்படலாமா? ஆனா, சுந்தரை நேரா பார்த்து நானே கேட்கிறேனே.. உண்மை எனக்குப் பாதி தெரியுங்கிறப்போ மீதியையும் அவன் சொல்லியாகணும் இல்லையா.. கொலைக்கு இந்த விஷயம் சம்மந்தமில்லேன்னா நிச்சயமா அவன் நடந்ததைச் சொல்லுவான். இல்லேன்னு முழு பூசணிக்காயை மறைச்சான்னா நாம் போலீஸ் வெச்சே டீல் பண்ணுவோம்.. என்ன சொல்லறீங்க.”

     

    “ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் சிதம்பரம் அட்ரஸ்ல யாரும் அப்படி ஒரு பேருல இல்லேன்னு சொல்றதையும் நாம கணக்குல எடுத்துக்கணும். சுந்தரை நீங்க விசாரிக்கவேணாம்.. உங்கள்ட்ட பேசறச்சே உரிமை எடுத்துக்கலாம். ஆனா நானே பேசறேன். ஒருவேளை இந்த ரஞ்சிதாங்கிற பேரை வெச்சு சுந்தர் ஏதேனும் கோல்மால் பண்ணியிருந்தா?.. ஒரு பேச்சுக்குச் சொல்லறேன். உங்க பெரியப்பாவையே பண விஷயத்துல சுந்தர் மோசம் பண்ணியிருக்கமாட்டாருன்னு என்ன நிச்சயம்? கொலைக்கு இது சம்பந்தப்படாதுதான், ஆனா உங்க பெரியப்பா ஏன் இப்படி இதுதான் கடைசி.. இனிமே கேக்காதேங்கிற மாதிரி எழுதணும்?”.

     

    “அப்போ இது ஒரு தனிக் கேஸா இல்லே மாறும்.  நோ நோ இப்படி நாம திசை மாறக்கூடாது.. இப்போ நம்ம ரூட்டே கொலை ஏன் நடந்தது. யார் கொலைகாரன்.. அவ்வளவுதான். ஒருவேளை ஏதாவது பணமோசடியை சுந்தர் எங்க பெரியப்பாகிட்டே பண்ணான்னா அது அவங்க தலையெழுத்து. எப்படி வேணா போகட்டும் அவங்க..”

     

    எரிச்சலுடன் சொன்னவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

     

    “அப்படியே பணமோசடின்னு தெரிஞ்சாதான் இந்த மாதிரி வேற எங்கயாவது பண்ணியோ அல்லது இவரு ஏமாந்தோ அந்த வஞ்சம் தீர்க்கறதுக்காக இவரை கொலை பண்ணியிருக்கலாம். சுந்தர் ரஞ்சிதா மேட்டர் ஒரு சின்ன லீட் விஷயம். இதை இப்படித்தான் டீல் பண்ணனும் கல்யாண்.”

     

    அவன் ஒப்புக்கொள்வதைப் போல தலையாட்டினான். “சரி,  இப்போ நாம சுந்தரைப் பார்க்கப் போகணுமா? அவன் ஆபீஸ் மீடிங்க்னு அடாவடியா பொய் பேசினானே.. நம்மளைப் பார்க்க வருவானா?”

     

    “சுந்தரை இன்னிக்கு விட்டுப் பிடிக்கலாம். ரவி இப்பவும் அவனோட பின்னாலதான் இருக்கான்? அவனைப் பத்தி ரவி என்ன விஷயம் கொண்டு வர்ரான் என்பதைப் பொறுத்துதான் நாம் டீல் பண்ணியாகணும். நாம ஏதோ சந்தேகப் படறோம்னு அவனுக்குப் புரிஞ்சு போச்சு. அவன் ஃபோன் நம்பரை ட்ராக் பண்ணனும். எங்கிட்டே பேசினதலேர்ந்து அவன் யார்கிட்டயெல்லாம் பேசினான்.. நாளைக்குக் காலை வரைப் பேசப் போறான்னு விவரம் எனக்குத் தெரியணும். இந்த ட்ராக்கிங்க் விஷயத்துல எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்றவர் ஒருத்தர்கிட்ட  மெஸேஜ் அனுப்பிக் கேட்கிறேன்.. அவர் எனக்கு இதுமாதிரியெல்லாம் நிறைய உதவி செய்யறவர்தான். பொதுவா இந்த விவாகரத்துக்காக எங்கிட்டே நிறைய பேரு வரச்சே இவர்தான் குறிப்பிட்ட கல்பிரிட் ஃபோனையெல்லாம்  ட்ராக் பண்ணி கேஸை ரொம்ப சீக்கிரம் முடிச்சுக் கொடுக்க உதவியிருக்கார்.”

     

    “உங்க பிரதாபங்களையெல்லாம் கேட்கக் கேட்க பிரமிப்பாதான் இருக்கு. பேசாம பல் கிலினிக் மூடிட்டு நிரந்தரமா பெரிய அளவுல இன்வெஸ்டிகேடிவ் ஏஜென்ஸி வெச்சுடலாம். இந்த கேஸ் முடிச்சுக் கொடுங்க.. நானே பெரிய ஆஃபீஸ் வெச்சுக் கொடுக்கறேன்.”

     

    அவர்கள் வீடு இருக்கும் வீதி முனையிலேயே வண்டியை நிறுத்தச் சொல்கிறாள்.

     

    “எதுக்குங்க? நீங்க எனக்காக வேலை பண்ணறிங்க.. உங்களை உங்க வீட்டுல இறக்கி விடறதுதான் முறை.”

     

    “இந்த முறை கிறை எல்லாம் வேண்டாமே.. எங்க வீட்டுல நான் உங்களுக்காக வேலை பண்றது அவங்களுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலே.. நீங்க என்ன பண்ணுங்க உங்க பெரியம்மா பையன் முரளிக்கு ஃபோன் பண்ணி சாதாரணமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க.. நானும் அப்போ வரேன்.  ஓகே.. பை.,”

     

    “பை.”. என்று சொல்லிவிட்டு தன் எத்துப்பல்லு தெரிய சிரிக்கிறான்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 8

    திவாகர்

     

    “மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.” சாந்தியிடம் திரும்பினாள்.

     

    ‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

     

    “அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள். கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

     

    “ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

     

    கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

     

    “உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

     

    என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

     

    கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

     

    “அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..”

     

    ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள்.

     

    “ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

     

    அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

     

    “நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

     

    சுந்தர் அலுவலகம்.

     

    காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

     

    “எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

     

    “தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

     

    “அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

     

    “அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

     

    ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு..

     

    அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி?

     

    தலயாட்டினான் சுந்தர்.

     

    “நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

     

    ரவி குறுக்கிட்டான்.

     

    “ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

     

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

     

    கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள்.

    “சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

     

    “நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

     

    என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

     

    “நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

     

    “போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

     

    “அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

     

    “அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு.. ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

     

    “கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..”

     

    “நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”

     

    “இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

     

    “இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

     

    ரவி அவளைப் பார்த்தான்.

     

    சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

     

    அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

     

    “என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

     

    ‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

     

    ‘அவன் ஆஃபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’

     

    இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

     

    அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

     

    “இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

     

    அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

     

    “ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

     

    விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா,, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

     

    “சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

     

    “விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

     

    “ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

     

    இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

     

    “அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

     

    “சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..” கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.

     

    “என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

     

    “தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

     

    “என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

     

    “சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 7

    திவாகர்

    “மிஸ்டர் கல்யாண் எனக்கு நீங்க ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். நீங்க எனக்கு இந்த கேஸ் ஹாண்டில் பண்ற அதிகாரத்தை ஒரு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் மூலமா தரணும். சில பேருகிட்டே விசாரிக்கறச்சே என்னை ‘நீ யாருன்னு’ கேக்கறச்சே ஒரு ப்ரூஃப் தேவைப்படுது. அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல நான் உங்க சார்பா வேலை செய்யறேன்னு ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்துடுங்க.. அது போதும். மிச்சதை நான் பாத்துக்கறேன்.”

    சாந்தியிடம் திரும்பினாள். ‘இல்லடி சாந்தி.. இந்த கேஸ் நாம எடுத்தே ஆகணும்.. எடுக்கறேன்.. இவருக்கு நியாயம் செஞ்சு காமிக்கறேன்.. எனக்குக் கூடவே ரவி வேற இருப்பான்.. அதுக்கப்பறம் அமெரிக்கா விஷயம் பார்த்துக்கலாம். என்னோட கிளையண்ட் வேலை முக்கியம்.”

     

    “அப்போ நான் சொன்னதை கேக்கப்போறதில்லே” என்று கோம்டியைக் கேட்டுவிட்டு கல்யாணைப் பார்த்தாள்.

    கல்யாண் அவளைப் பார்த்து சின்னதாக சிரித்தான். அவன் தெத்துப் பல் அவளைப் பயமுறுத்தியது.

     

    “ஏய் கோம்டி.. என்னைக் கேட்டா நீ இவருக்கு கிளையண்டா இருக்கறதை விட இவரை முதல்ல உன் மெடிகல் க்ளையண்டா மாத்தி அவரோட இந்த ரெண்டு பல்லையும் ஆபரேஷன் பண்ணி எடுத்துடுடி பாக்கலாம். என்ன கல்யாண்.. நீங்க பயப்படறீங்களா.. சார்.. எங்க காலேஜ் ஆஸ்பத்திலேயே பல் ஆபரேஷன் விஷயத்துல இவ கோல்ட் மெடல் வாங்கினவ. பெர்ஃபெக்ட்டா பண்ணுவா.. இன்னொண்ணு சொல்லட்டுமா சார்.. தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”

     

    கல்யாண் பதில் எதுவும் சொல்லவில்லையென்றாலும் சாந்தி கவலைப் படவில்லை. அவளே பதில் சொன்னாள்.

     

    “உங்க ரெண்டு பல்லையும் எடுத்துட்டு அங்க ரெண்டு புதுப்பல் கட்டினீங்கன்னா சார்..  சூபரா ஆயிடுவீங்க.. பொண்ணுங்க கூட கிடைப்பாங்க.. அப்பறம் கல்யாணம் கூட சீக்கிரம் ஆயிடும் சார்..”

     

    என்று சொல்லிவிட்டு ‘பை, வரேண்டி கோம்டி, என்று பை சொன்னவள் திடீரென அவள் காதருகே ஏதோ சொல்ல கோம்டியும் தலையாட்ட சாந்தி போகிறாள்.

     

    கல்யாண் சற்று பயப்படுகிறான்.. “என்னங்க அந்த சாந்தி என்னைப் பத்தி என்ன சொல்றா.. ஏற்கனவே ரவி எனக்கு பயமுறுத்தல் பண்ணியிருக்கான் இவளைப் பத்தி.. அவ பல் கிலினிக் ஆரம்பிச்சா நான் அவளோட ஃபர்ஸ்ட் க்லயண்ட்ன்னு’

     

    “அதல்லாம் ஒண்ணும் இல்ல.. ஏன் மிஸ்டர் கல்யாண் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஸெல்ஃபீ எடுத்துக்கலாமா..” ஓ.. தாராளமா..” என்றவன் அவளருகே வந்து உதட்டைத் தன் கையால் மூடிக்கொண்டு போஸ் கொடுக்க, உடனே கோம்டி கிண்டல் செய்தாள். “ஏன் மிஸ்டர் கல்யாண்.. ஒரு பொண்ணோட நின்னு போஸ் தரச்சே சிரிக்கத் தெரிய வேணாமா? சிரிங்க சார்.. உங்க அழகான அதிர்ஷ்டப் பல்லை நல்லா காமிங்க.. பரவா இல்லே.”

     

    அப்படியே சிரித்து போஸ் கொடுத்துவிட்டு அவளிடம் விடை பெறுகிறான். அவன் போனவுடன் தன் ஃபோனில் பதிந்த படத்தை எடிட் செய்து தன் உருவத்தை அதிலிருந்து எடுக்கிறாள். இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தாள். தெத்துப்பற்கள் இரண்டும் நன்றாகத் தெரிய போஸ் கொடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.

     

    “நம்ம கிளினிக்ல இந்தப் படத்தைப் பெரிசா ஃப்ரேம் பண்ணி நாளைக்கே வெச்சுடலாம். பல் ஆஸ்பத்திரிக்கு பல்லழகன் படம் நல்ல விளம்பரம்தான்.  சாந்தி சொல்லறது கரெக்ட்.”

     

    சுந்தர் அலுவலகம்.

     

    காலை நேர வேளையில் சென்னை அண்ணாசாலையின் கட்டடம் ஒன்றில் இயங்கும் அலுவலகத்தின் காண்டீன் உள்ளே சுந்தர் காத்திருக்க அவன் எதிரே இருந்த இருக்கையில் கோம்டியும் ரவியும் உட்காருகிறார்கள். சுந்தர் கொஞ்சம் எரிச்சலைக் குரலில் காட்டி அவளிடம் பேசுகிறான்.

     

    “எதுக்கு அவ்வளோ அவசரமா என்னைப் பாக்கணும்னு ஃபோன்ல சொன்னீங்க? அங்கிள் சாவுக்கு மூணு நாள் லீவு போட்டதாலே வேலை நிறைய பெண்டிங்க். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் வேலையைப் பாக்கப் போயிடுவேன். அஃப்கோர்ஸ்.. கல்யாண் உங்களைப் பத்தி சொன்னான். நீங்கதான் அவனோட சார்பா இந்த கொலை விவகாரத்தை விசாரிக்கிறீங்கன்னு..”

     

    “தேங்க்ஸ் சுந்தர்.. நான் கூப்பிட்டவுடனே வந்ததுக்கு. நீங்க எப்படி உறவு அதாவது உங்க மாமாவுக்கு?”

     

    “அதாவது எங்கம்மாவுக்குக் கூட பிறந்தவங்க ரெண்டு ஸிஸ்டர்ஸ். அதுல எங்கம்மாதான் கடைசி.  அக்கா அதாவது மூத்த பெரியம்மாவோட பையன் முரளி.. என்னோட ரெண்டாவது பெரியம்மாவோட பையன் கல்யாண்..”

     

    “அதாவது கல்யாணுக்கு நீங்க சித்தி பையன். முரளி பெரியம்மா பிள்ளை, ரைட்டா?”

     

    ரவி அவளிடம் முணுமுணுக்கிறான். ~ஆஹா.. எவ்வளோ சரியா கண்டுபிடிச்சே.. நேரா விஷயத்தைக் கேளு.. அது சரிங்க! உங்க மூணு கஸிங்களுக்குள்ளே நெருக்கம் எப்படி? தலயாட்டினான் சுந்தர்.

     

    “நாங்க மூணு பேரும் கிட்டத்தட்ட சினேகிதங்க மாதிரிதான் இருப்போம்.  ஆனா நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அப்படியே வளர்ந்துட்டேன். . ஆனா முரளி சின்னப்பலேர்ந்து கல்யாண் வீட்டிலியே இருப்பான். கல்யாண் பெரியப்பாவும் சரி, தாத்தா பாட்டியும் சரி, அவனையும் அன்போடு பார்த்தாங்க. முரளியோட அம்மாவுக்கு தன் தங்கை அதாவது கல்யாணோட அம்மா துர்மரணமும் அவன் அப்பா இறந்ததும் ரொம்ப துக்ககரமா இருந்ததுன்னாலே அவங்களும் முரளியை அடிக்கடி கல்யாண் வீட்டுக்கு அனுப்பி கொஞ்சம் ஆதரவும் ஆறுதலும் தருவாங்க. ஆனா நான் கொஞ்சம் சின்னப் பையன் அப்படிங்கிறதனாலே என்னை அவ்வளவா சம்பந்தப்படுத்தலே. அதுக்காக நான் தூரமால்லாம் விலகிடலே.. அதே சமயத்துல கொஞ்சம் டிடாச்டா இருப்பேன்.”

     

    ரவி குறுக்கிட்டான்.

     

    “ஓ.. அப்போ நீங்க கந்தசாமி கூட அவ்வளவா பழகமாட்டீங்களா?”

     

    “அப்படில்லாம் ஒண்ணுமில்லே.. என்னையும் சமமா ஒரு மகனைப் போலத்தான் கந்தசாமி மாமா பார்த்தார். நானும் அப்பப்ப அவர் வீட்டுக்குப் போயிண்டு இருப்பேன். நிறைய பாசத்தை எங்கிட்டே காமிப்பார்.”

    கோம்டி கொஞ்சம் விறைப்பாக கேட்டாள். “சரி, முரளி அவருக்கு கார் ஓட்டுவாரு.. அவருக்காக ஷேர் மார்க்கெட் பார்த்துக்குவாரு. அவரோட பேங்க் விவகாரமெல்லாம் கூட பார்ப்பாரு, அந்தளவு நெருக்கம் உங்களுக்கு இல்லே.. சரியா?”

     

    “நீங்க எந்த ஆங்கிள்ல கேக்கறீங்கன்னு தெரியலே.. ஆனா உண்மை அதுதான். நான் அவன் அளவுக்கு அவரோட நெருக்கம் இல்லை. அதனால மாமாவுக்கு அன்பு என் மேல இல்லைன்னு கிடையாது. அவருக்கு என் மேலயும் அன்பு ஜாஸ்திதான்.”

    என்று சொன்னவன் தன் கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

     

    “நீங்க கடைசியா எப்போ கந்தசாமியைப் பாத்தீங்க? அவரோட என்ன பேசினீங்க?”

     

    “போன வாரம்.. அதாவது கொலை செய்யப்பட்டதுக்கு நாலு நாள் முந்திதான் பார்த்தேன். அவரோடு பேசிண்டிருந்தேன்..”

     

    “அவர் கூப்பிட்டு போனீங்களா.. இல்ல நீங்களா போனீங்களா?”

     

    “அவர்தான் கூப்பிட்டார். டின்னர் சாப்பிடலாம்னார். அதை அப்பப்ப செய்வார். முக்கால்வாசி யார் கூடவாவது சேர்ந்து சாப்பிட அவருக்குப் பிடிக்கும். அவர் கூட அடிக்கடி முரளி சாப்பிடுவான். முரளி இல்லாத சமயம் என்னைக் கூப்பிட்டுக்கொள்வார். ரொம்ப காலமா எடுப்புச் சாப்பாடுதானே.. பங்கு போட்டு சாப்பிடறதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. ரொம்ப லேட்டாப் போச்சு..

     

    ‘என் காரை எடுத்துண்டு போடா’ன்னார்.. கல்யாண் வரதுக்குள்ளே திருப்பித் தரலாம்னு நினைச்சு நான் அவர் காரை நான் யூஸ் பண்ணிண்டிருந்தேன். இது வழக்கம்தான். அப்பப்ப வந்து அவர் காரை எடுத்துண்டு போகறது வழக்கம்தான்.”

     

    “கார் விஷயம் இருக்கட்டும்.. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா இந்த கொலை வழக்குல..” “நிச்சயமா அப்படி இல்லே. யாரன்னு எப்படின்னு சொல்லமுடியும்? அவருக்கு எதிரிங்களே இல்லன்னுதான் இப்போவரைக்கும் நினைச்சுண்டுருக்கேன்,”  “இந்த ஷேர்மார்க்கெட் விஷயம்லாம் எப்பவாவது உங்ககிட்டே கந்தசாமி பேசியிருக்காரா?”

     

    “இல்ல மாடம்.. பிசினஸ் விஷயம்லாம் முரளிகிட்டே பேசற மாதிரி எங்கிட்டே பேசமாட்டாரு. அதோட ஷேர்மார்க்கெட்ல அவர் புலி. அவரோட கணிப்பு எல்லாமே சூப்பர்னு முரளி சொல்லியிருக்கான்.  நான் போகட்டா? ஆபிஸ் வேலை நிறைய பாக்கி இருக்கு. தேடுவாங்க.” சுந்தர் சொல்லிவிட்டு எழுந்தான்.

     

    ரவி அவளைப் பார்த்தான்.

     

    சரி மிஸ்டர் சுந்தர்.. நான் உங்கள்ட்ட மொபைல்ல விஷயம் ஏதாவது தேவைப்பட்டா கேட்பேன்.. உங்களுக்குத் தெரிஞ்சா எங்ககிட்ட ஷேர் பண்ணிக்குங்க..

     

    அவள் எழுந்து கிளம்பினாள். அதே சமயம் அவன் மொபைல் கால் வந்ததும் எடுத்து வரும் கால் நம்பரைப் பார்த்து பதில் சொன்னான். “நீங்க எனக்கு ஃபோன் செய்தபோதே கல்யாணுக்கு சொன்னேன். அவன் இப்போ ஃபோன் செய்யறான்.”  அவளெதிரே அவனிடம் பேசினான். “இதோ கிளம்பறாங்க.. எதனாச்சும் சொல்லணுமா.. ஒரு நிமிஷம்.. “ என்றவன் தன் கையிலிருந்த மொபைலை அவளிடம் நீட்டினான். “கல்யாண் லைன்ல இருக்கான் மேடம்.. பேசணுமாம்.”

     

    “என்ன கல்யாண்?” என்று கேட்டாள். அவன் அவளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறும் இன்ஸ்பெக்டர் மோகன் அவனை அழைத்திருப்பதாகவும் இவளும் அங்கு இருந்தால் நல்லது என்றும் சொன்னான். அவன் பதிலைக் கேட்டுவிட்டு அந்த மொபைலையும் சுந்தரிடம் உடனடியாக கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். ரவி பைக்கில் பின்னால் ஏறியதும் ரவியிடம் சொன்னாள்.

     

    ‘ரவி! நீ என்னை இந்தத் தெருக்கோடியிலேயே இறக்கிவிடு. நான் ஆடோவில் ஸ்டேஷனுக்கு போகிறேன். நீ என்ன பண்றேன்னா இப்போ இந்த சுந்தரை ஃபால்லோ பண்ணு.’

     

    ‘அவன் ஆபீஸுக்குள்ள போறான்.. சாயங்காலம் ஆகும் வெளியே வரதுக்கு. அதுவரைக்கும் காத்திருக்கச் சொல்லறியா?’ இல்லே.. இவன் நம்மளை ஏமாத்தறான்.. எப்படியும் கொஞ்ச நேரத்துல வெளிய வருவான் பாரு.. அவன் எங்க போறான்னு பாரு. விசாரி..

     

    அவள் அந்த சாலை முனையிலேயே இறங்குகிறாள். ரவி தன் பைக்கைத் திருப்புகிறான். கோம்டி அங்கே வரும் ஆட்டோவை நிறுத்துகிறாள்.

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    உள்ளே இன்ஸ்பெக்டர் அறையில் கல்யாண், கோம்டி இருவரும் அமர்ந்திருக்க இன்ஸ்பெக்டர் மோகன் ஒரு ஃபைலுடன் வருகிறார். அந்த ஃபைலிலிருந்து ஒரு கசங்கிப்போன பேப்பர் ஒன்றை உருவி அவனிடம் காண்பிக்கிறார்.

     

    “இது உங்க பெரியப்பா கையெழுத்துதானே மிஸ்டர் கல்யாண்?. இது உங்க வீட்ல வேலை செய்யற வேலைக்காரி பொன்னம்மா குப்பைத் தொட்டிலேர்ந்து எடுத்து வந்தா.. அவள் காலைல வந்து ரெண்டு மணி நேரம் வேலை செய்வா இல்லையா.. விசாரிக்கறச்சே அவளிடமிருந்து இது ஒண்ணுதான் உபயோகமுள்ளதா கிடைச்சுது. ஆனா குப்பைக் கூடைல போட்டது கூட முதல் நாள்தான் இருக்கணும். கொலை நடந்த அன்னிக்குக் காலைல இவ பெருக்கறச்சே உங்க பெரியப்பா இன்னும் எழுந்திருக்கலேன்னு பொன்னம்மா சொல்லறா. இன்னொண்ணு என்னன்னா முதல் நாள்தான் இவர் இதை எழுதியிருக்கணும். தினம் குப்பைத் தொட்டியை க்ளீன் பண்ற வழக்கம் உண்டாம். இதை அவளை அடுத்த நாள் விசாரிக்கறச்சே கொண்டு வந்து கொடுத்தா.. கசங்கிக் கிடந்தாலும் அது தேவை இருக்குமோ என்னவோன்னு எடுத்து வெச்சிருந்தாளாம். ஆனா இந்த விவரம் எதையோ சொல்லுது.. ”

     

    அவர்கள் இருவருமே சேர்ந்து படிக்கிறார்கள்.

     

    “ரூ பத்து லட்சம் அனுப்பியிருக்கிறேன்.. இனி இதற்கும் மேலே நமக்குள் ஒன்றுமில்லை – கந்தசாமி.”

     

    விலாசம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பேனாவால் அடிக்கப்பட்டிருந்தது. ரஞ்சிதா, கீழ வீதி, சிதம்பரம், அதையும் படித்தான் கல்யாண்.

     

    “சார், இது எங்க பெரியப்பா கையெழுத்துதான். கொஞ்சம் சாய்வா எழுத்து எழுதுவது சின்னப்போலேர்ந்து அவருக்குப் பழக்கம். இதை எழுதிட்டு கசக்கி குப்பைக் கூடைல எறிஞ்சிருக்காரா இல்லே வேற யாராவது எறிஞ்சிருப்பாங்களா.. இந்த ரஞ்சிதா யாரு சார்.. நீங்க விசாரிச்சா தெரியுமே.”

     

    “விசாரிச்சாச்சு கல்யாண்.. அப்படி யாருமே அந்த விலாசத்துல இல்லேன்னு சிதம்பரம் போலீஸ் சொல்லியிருக்காங்க. இது எதுக்காக இப்படி ஒரு தப்பான விலாசம் கொடுக்கணும்.. அத குப்பைக் கூடைல கசக்கி ஏன் போடணும்?”

     

    “ஸார்.. இதை எப்படி விசாரிச்சா இந்த ரஞ்சிதா சிக்குவான்னு தெரியலியே. ஒருவேளை எங்க பெரியப்பா மொபைல்ல ஏதாவது ரஞ்சிதா பேருல இருக்கா? உங்ககிட்டதான் சார் அந்த மொபைல் இருக்கு, துருவிப் பார்த்தா கிடைக்குமே ஸார்.”

     

    இன்ஸ்பெக்டர் வெறுப்போடு பேசினார்.

     

    “அந்த மொபைல்ல உள்ள காண்டாக்ட்ஸ் எல்லாம் அழிச்சிருக்காங்க.. உங்க பெரியப்பா லேடஸ்ட் மாடல் ஃபோன் வெச்சிருந்தா பரவாயில்லே.. ஆனா பழைய கால நோகியா ஃபோன் வெச்சிருந்தார். ஆனாலும் கைரேகையை செக் பண்ணச் சொல்லியிருக்கேன்.. அத்தோட இந்த ஃபோன்லேர்ந்து ஒரு பத்து நாளைக்கு இன்கம் அவுட்கோய்ங்க் கால்ஸ் கேட்டுருக்கேன்.. நாளைக்கு வரும்.  அந்த நம்பர்ல செக் பண்ணச் சொல்லி ஒரு கான்ஸ்டபிளைப் போட்டுருக்கேன்.  பார்ப்போம்.”

     

    “சார் அந்த லிஸ்ட் வந்தா எனக்கும் ஒரு காபி கொடுங்க சார்..”

     

    கோம்டி இன்ஸ்பெக்டரைக் கேட்டதும் சரியென தலையாட்டினார். அவளைப் பார்த்துக் கேட்டார்.   “என்ன மேடம் உங்களுக்குத் தகவல் ஏதேனும் கிடைச்சுதா?”

     

    “தேடிண்டிருக்கேன். இப்போ கூட இவரோட சித்தி பிள்ளை சுந்தரை அவரோட ஆஃபீஸ்ல பார்த்துட்டு வந்தேன்.”

     

    “என்ன சொல்றாரு. அவரு எங்ககிட்டே என்ன சொன்னாரோ.. அதையேதான் உங்ககிட்டயும் சொல்லியிருப்பாரு.”

     

    “சுந்தரை நான் கொலை விஷயமா விசாரணை பண்ணலே சார், இன்னும் கேட்டா அவர் கொஞ்சம்தான் டைம் கொடுத்தார். பெரிசா ஒண்ணும் தெரியலே. அவரோட குடும்பத்தோட தான் கொண்ட டிடாச்மென்ட் பத்தி மட்டும் பெரிசா பீத்தினார். இன்னொருவாட்டி பாக்கணும்.. அப்பறம்தான் எதுவும் சொல்லமுடியும்.”

     

    “சரியா சொல்லறீங்க. இந்த கேஸுலேர்ந்து தப்பிக்கற வழிக்காக அடிக்கடி தன்னை ரிசர்வ்டு டைப்’ன்னு சொல்லறாரோ என்னவோ..

     

    “அதுவும் கரெக்ட்தான் சார்..” “கோமதி..” “ஸார் நான் கோம்டி சார்..” “சரி  கோம்டிதான். கொஞ்சம் இந்த சுமதி விஷயமும் பாருங்களேன்.. எனக்கு ரொம்பவே ஏதோ இங்கே இடிக்குது. அந்தப் பொண்ணு மேலே சந்தேகம் இன்னும் தீரலே.. கல்யாண் ரொம்பவே இரக்கம் காட்டி சப்போர்ட் பண்றார்..”

     

    கல்யாண் நெளிந்தான்.. “அது அப்படியெல்லாம் இல்லே சார்..”

     

    கோம்டிக்கு கோபமே வந்தது.

     

    “யார் சார் இந்த சுமதி.. எனக்குத் தெரியாத விஷயமா இருக்கு.. எனக்கு கல்யாண் இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலே..” “சுமதியை சரியா விசாரிங்கன்னு எனக்கு சிபாரிசு பண்ணதே முரளிதான். காரணம் இல்லாம முரளி எனக்கு இவ பேரைக் கொடுத்திருக்கமாட்டாரு. எதுக்குன்னா அன்னிக்கு சுமதி வீட்டுக்கு உங்க பெரியப்பாவை கார்ல டிரைவ் பண்ணிப் போனதே முரளிதான்..”

     

    குழப்பமாகப் பார்த்தாள் கோம்டி. அவளுக்கு அன்று தான் இன்ஸ்பெக்டரோடு சென்றபோது நடந்ததை விவரித்தான். முடிவில் அவள் எப்படி இந்தக் கொலையில் சம்பந்தப்படுத்தமுடியும் என்று கேள்வியும் எழுப்பினான்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 6

    திவாகர்

     

    ரவியும் கலந்துகொண்டான்.

    ஆமாம் சார்.. பாக்கறதுக்கு பரிதாபமா பட்டாலும் தீர விசாரிச்சா பலன் கிடைக்கும்.

     

    காவல் நிலையம் வருகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பத்தி விசாரிக்கிறார்

    ‘என்னய்யா ஆச்சு.. அந்த கந்தசாமி PM ரிப்போர்ட் வந்தாச்சா? ‘வந்தாச்சு சார்.. இப்ப கூட அந்த பொண்ணு பேரு கோம்டி.. என்கிட்டே வந்து உங்க ரெண்டு பேரையும் சொல்லி கந்தசாமி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காப்பி வாங்கிண்டு போச்சு..’ ‘வாங்கிண்டு போச்சா.. நானே இன்னும் பார்க்கலே.. அதுக்குள்ளே அந்த பொண்ணுக்கு என்ன அவசரம்?’ ‘சார்.. நாங்க ஒரிஜினல் கொடுக்கலை சார்.. ஜெராக்ஸ் காப்பித்தான் கொடுத்திருக்கோம்.. உங்க பேரையும் கல்யாண் பேரையும் சொல்லி கேட்கறச்சே இல்லே’ன்னு சொல்ல முடியுமா சார்..’

    கோம்டி வீடு.

    கோம்டியின் பல் மருத்துவ மனையில், சாந்தி, அவளது தோழி மற்றும் நர்ஸ்.

     

    பல் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணை அப்படி சுத்தப்படுத்தி முடித்த நர்ஸ்பெண் வெளியே செல்ல அனுமதி கேட்டாள்.

     

    “மேடம், இன்னிக்கு ரெண்டு பேர்தான்.. நாளைக்கு நாலு கேஸ் புக் ஆகியிருக்கு.. இன்னிக்கு வேற எந்த கேசும் இல்லே.. என் வேலை முடிஞ்சுடுச்சு. நான் போவட்டா?” “சரி, நீ நாளைக்கு மறக்காம வந்துடு.. டெண்டல் செக்கிங்க் கேஸ்ங்க வந்தா நீயே பார்த்துடு.. சீரியஸ் கேஸ்ன்னா அப்பாயிண்ட்மென்ட் ரெண்டு நாளைக்கப்பறம் கொடு. அப்போ பாக்கறேன். எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்கு.. நீதான் எல்லாம் பார்த்துக்கணும்.”

    தலையாட்டிவிட்டு போகிறாள் நர்ஸ். சாந்தியும் கோமதியும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டனர். சாந்தி வேடிக்கையாகக் கேட்டாள்..

    ‘ஏய்.. இப்படியா டென்டல் கிலினிக்கை வெச்சுருப்பே. கிளாஸ்ல நீதான் முதல்ல வருவே. ஆனா என்ன பிரயோசனம்? கோம்டி.. நீ நல்லா பெரிய கிலினிக் வெச்சு கொஞ்சம் தீவிரமா இந்த பிசினஸ் எப்போ நடத்தபோறியோ? விஸாதான் கிடைச்சுடுச்சு இல்லே.. என்னோட அமெரிக்க வந்துடுடி.. நமக்கெல்லாம் அங்கதான் மௌசு..”‘ ‘எங்கம்மா மாதிரி ஆரம்பிக்காதே.. நான் சொன்னேன் இல்லே? எனக்கு இந்த டெண்டலை விட முக்கியமான வேலை இருக்கு. இந்த கந்தசாமி கொலை கேஸை நான் தீவிரமா கையிலஎடுத்திருக்கேன் இல்லையா.. மேலும் கந்தசாமியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எப்படியோ ஒரு காப்பி வாங்கிட்டேன்.. என்ன விசேஷம்னா இது தற்கொலை ஆ கூட இருக்கலாம்னு ரிமார்க் பண்ணியிருக்காங்க.”  ‘எப்படி போனா என்னடி, அவன் போயிட்டான்.. நாசமா போகணும்னு தினம் சாபம் போட்டோம்.. அப்படியே போயிட்டான்.. அது சரி, போலீஸ் இந்த பக்கம்லாம் இந்த கேஸ் விசாரிக்க ஏன் வரல்லே? ஆச்சரியம்தாண்டி. ஏய் சாந்தி, உனக்கு ரவி மூலம் இவனைத் தெரியணுமே?’  ‘தெரியுமே.. ரவியும் பல்லழகனும் பார்ட்னர்ஸ்னு நல்லாவே தெரியும்.’ ‘என்னா ஆச்சரியம்னா, நம்ம ரவி இவனுக்கு ஃப்ரெண்ட்’ந்னு வைசாக்கில தெரியறச்ச எப்படி இவன் நம்மளுக்கு தெரியாம போயிடுச்சுன்னு பார்த்தேன்’.  சாந்தி புன்னகைத்தாள். ‘வைசாக்ல இவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ். எனக்கு இவனை நம்ம காலேஜ் காலத்திலயே தெரியும். ஆனா ரவிக்கு எவ்வளவோ ஃப்ரெண்ட்ஸ்.. அதனால ஆச்சரியமா படலே. வைசாக்’ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பிக்கறச்சே ஒரு தடவை எங்க வீட்டுக்கு ரவியோட வந்துருந்தான். அப்பவே இவன் நம்ம கிளாஸ்’ல பல்லைக் காட்டி டிஷ்யூ பேப்பர் தின்ன வெச்சது ஞாபகம் வந்தது. ஆனா மரியாதைகாக அவன் முன்னாடி எதுவும் காமிச்சுக்கலே. ஆனா அவன் போனப்பறம் ரவிகிட்ட பல்லழகனோட பல்லைக் காமிச்சு கலாய்ச்சினது கூட இப்போ ஞாபகத்துக்கு வருது’ ‘அதை விடு.. அது எப்படி இந்த கேஸ் தற்கொலை வழக்குன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சந்தேகமா கூட சொல்லமுடியும்? ரெண்டு குண்டு உடம்புல பட்டுருக்கு. ஒண்ணு நெத்தில.. இன்னொண்ணு மார்புல.. சரி, தற்கொலைன்னே வெச்சுக்குவோம். ஒரு கையாலே அவன் மார்புல சுட்டுருக்கான்? ஆனா உடனே உயிர் போகலேதான்.. இன்னொருவாட்டி அதே துப்பாக்கியாலே அவனே அவனோட  நெத்திப் பொட்டுல குறி வெச்சு சுட்டுருக்கான்.. சரி.. உடனே உயிர் போயிடறது.. இந்த தியரி எப்படி ஒத்து வரும்? ஒருவாட்டி தன்னைச் சுட்டுண்டவுடனே அவன் கீழே விழறதுக்குதான் சான்ஸ் அதிகம்.. அதெப்படி அவன் ரெண்டாவது முறை சுட்டுக்கமுடியும்.. அதுவும் முதல்ல மார்புல அதுக்கப்பறம் சரியா அவன் நெத்திபொட்டுல.. பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறை எப்படி வந்துச்சு.. இதெல்லாம் தற்கொலைக்கு நோ சான்ஸ்.” ‘ஆமாமா.. தற்கொலை பண்றவனா அவன்? நாலு பேரை அப்படி பண்ணிக்க வெச்சு சந்தோஷமா பாத்துட்டுருப்பான். தற்கொலைன்னு முடிவா சொல்லறதா அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?’ சாந்தி ஆச்சரியத்தோடு கேட்டாள். ‘இல்லே. துப்பாக்கில அவன் கைரேகையில இருக்கு.. ட்ரிக்கெர் பிடில அவன் விரல் இருக்கு.. ஆனா அவனோட ரத்தக்கறை தரையிலயும் பீரோ கைப்பிடியிலும் இருக்கு. அவன் உடம்பு மேல எந்தத் தடயமும் இல்லை, அந்த ரூம்ல யாருமே இல்லாத சமயம் . இதெல்லாம் பாக்கறச்சே தற்கொலைக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.. ஆனா இது ஒரு நிச்சயமான கொலைன்னு எந்த ஆங்கிள்ல்ல சொல்லமுடியும்னு தெரியலே.. அப்படின்னு ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்காங்க போஸ்ட்மார்ட்டத்துல.’ ‘உன்னோட பல்லழகர் என்ன சொல்லப் போறாரோ?’ ‘எதுக்குடி அந்த ஆளை என்னோட ஆள்னு சொல்லறே? அவனால் எனக்கு என்ன யூஸ்? அவனோட கேஸ் நான் எதுக்கு ஹாண்டில் பண்றேன்னா என்னோட ஒரே நோக்கம் இந்த கேஸ் மூலமா அந்தக் கந்தசாமியோட லீலைகள் வெளியே தெரியணும்னுதான். என்னோட டிரெயின்ல டிராவல் பண்றச்சே என்னமா அவன் பெரியப்பா பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துண்டு பீத்திண்டு வந்தான் தெரியுமா.. நானும் உண்மை தெரியாம அம்போ’ன்னு ஆனந்தமா காது கொடுத்துக் கேட்டுட்டு அவன்கூட சேர்ந்து நாலு எக்ஸ்ட்ரா புகழ் வார்த்தைங்களை கந்தசாமின்னு தெரியாமயே சொல்லி வெச்சேன்.. இல்லல்ல.. இந்த பல்லழகன் ஒரு பாசக்கார ஆசாமி.. இவனுக்கு இவன் பெரியப்பா பெரிய நோபிள் பெர்சன்னு நினைப்பு. இந்த கேஸை விசாரிக்க தெய்வமே நமக்கு ஒரு சந்தர்ப்பமா கொடுத்துருக்கு. நாம் சரியா இதை ப்ரூவ் பண்ணி அந்த கந்தசாமி மகா பெரிய அயோக்கியன்னு அட்லீஸ்ட் இந்த வளர்ப்பு மகனாவது தெரிஞ்சுக்கணும்டி, பார்ப்போம். இவ்வளோதான் இவனால எனக்கு உபயோகம்.. வேறென்னடி இவனால எனக்கு பிரயோசனம். வேணுமின்னா இவன் எத்துப்பல்லை அழகா ஒரு க்லிக் பண்ணி ஃப்ரேம் போட்டு இந்த க்லினிக்’ல மாட்டலாம். விளம்பரத்துக்கு உபயோகப்படும்.’ திடீரென எதையோ நினைத்துக்கொண்டவள் போல சாந்தியைக் கேட்டாள். ‘ஏண்டி சாந்தி.. ரவிக்கு கந்தசாமி விஷயம், நாம சம்பந்தப்பட்டது எல்லாம் தெரியுமா? நீ எதுவும் சொன்னியா? ஐய்யய்யோ.. இதெயெல்லாம் வீட்டுல சொன்னா அன்னிக்கே என்னை பேக் பண்ணி அமெரிக்கா அனுப்பியிருப்பாங்க.. ஏண்டி.. உங்கப்பாவும் உங்க அம்மாவும்தானே இத்தோட விட்டுருங்க இந்த விஷயத்தைன்னு சொல்லி நமக்கு அட்வைஸ் பண்ணினாங்களே.. மறந்துட்டியா? ரவிகிட்டே சொன்னா சும்மா இருந்திருப்பானா? இல்லே அவனுக்கும் தெரியாது.. கம்முனு இருப்போம்.. இப்போ கூட நாம் எதுவும் இவங்ககிட்ட அதைப் பத்திச் சொல்லப்போறதில்ல..

    அந்த சமயத்துலே கல்யாண் கதவைத் தட்டுகிறான்

    ‘உள்ளே வரலாமா?’ கல்யாண் குரல் கேட்கிறது. ஒரு சிரிப்பை வேண்டுமேன்றே வரவழைத்துக்கொண்டு அவனை உள்ளே வரவேற்கிறாள். ‘வாங்க வாங்க.. அட, நீங்க எப்படியும் என்னோட டென்டல் கிலினிக் என்னிக்காவது ஒரு நாள் வரவேணும்தான்.. வாங்க உட்காருங்க!!’ ‘இது சாந்தி.. ஹேய்.. எப்படி இருக்கே.. .’ என்று சாந்தியைப் பார்க்கிறான். ‘ஓ.. ரவியோட தங்கை உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லையா.. எனக்குதான் இதெல்லாம் தெரியாம போயிடுசு.. இவள் என்னோட கிளாஸ்மேட் கூடவே க்லோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு எங்க கிளாஸ்ல நான் அந்த டிஷ்யூ பேப்பரை உள்ள தள்ளறச்சே கூடவே இருந்து அது உங்க வாய்க்குள்ள நல்லா போகறதா’ன்னு பார்த்தவ.. அத்தோட இவளோட அண்ணன் உங்க ஃப்ரெண்ட்ங்கிற விஷயம் இப்போதான் சொன்னா.. இவ சீக்கிரமே யுஎஸ் ல டென்டல் கிளினிக் வெக்க போறா,. எனக்கும் வேலை வாங்கி தர்ரேன்னு அங்க வர சொல்லறா. ஆனால் நான் இன்னும் ஒண்ணும் சொல்லலே..’ ‘ஆமாங்க.. நான் உங்களுக்குப் பெரிய பொறுப்பு கொடுத்திருக்கேன், அதை முடிச்சுட்டு நீங்க எங்க வேணும்னாலும் போகலாம்.’ சாந்தி ஆச்சர்யமாக பார்க்கிறாள். “என்ன பொறுப்பு கல்யாண்?” “ஓ.. உனக்கு இன்னும் சொல்லலியா?” கோமதி சட்டென குறுக்கிடுகிறாள் “சாந்தி, இவர் என் கூட டிரெய்ன்ல வரச்சே எனக்கு சாதாரணமா ரவியோட பார்ட்னர்ன்னுதான் தெரியும். இவங்க பெரியப்பாதான் எதிர்வீட்டுக்காரர்னு தெரியாது. உனக்கு சொன்னேன் இல்லையா எதிரிவீட்டுல கொலை ஒண்ணு விழுந்துடுச்சுன்னு. இப்போ இவரோட பெரியப்பா கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல நானும் ஒரு பங்கு எடுத்துண்டிருக்கேன்..”

    “உனக்கு எதுக்குடி இந்த பெரிய மர்டர் கேஸெல்லாம்?” வேண்டுமென்றே கேட்டாள் சாந்தி.

     

    கல்யாண் குறுக்கிடுகிறான்.

    “சாந்தி! உன் ஃப்ரெண்ட் இந்த மாதிரி இன்வெஸ்டிகேஷன் நல்லாவே பண்றாங்க.. உங்கண்ணனோட வைசாக்’ல சாகஸ வேலைல்லாம் செஞ்சு ஒரு நல்ல குடிமகனை பிரிச்சு வெச்சிருக்காங்க.. ரவியைக் கூட கொஞ்ச நாள் இங்கயே இருந்து உன் ஃப்ரெண்ட்க்கு உதவும்படி சொல்லியிருக்கேன். பாரு சாந்தி.. எங்க இன்ஸ்பெக்டர் பாக்கறதுக்கு முன்னாடியே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட பார்த்துட்டாங்க.. கோம்டி! பி எம் ரிப்போர்ட்ல எங்க பெரியப்பா தற்கொலை பண்ணியிருக்காராம். ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் நம்பறார். அப்படி ஒரு சந்தர்ப்பம் அதிகம் இருக்குங்கிறார்.” “நான் நம்பலே கல்யாண். பி எம் ரிப்போர்ட்ல கூட ஒரு சந்தேகமாதான் தற்கொலையைப் பத்தி சொல்லியிருக்கு. சான்ஸ் இருக்குன்னு சொல்லிச்சே தவிர தற்கொலைதான்னு முடிவாச் சொல்லலியே.. நீங்க என்ன ஃபீல் பண்ணறீங்க?” “எனக்கும் அவர் தற்கொலை பண்ணியிருப்பார்னு தோணலீங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி முதல்ல அவர் கோழை இல்ல.. தற்கொலைக்கான மோடிவ் கூட அவரைப் பொறுத்தவரை கிடையாது”. “சரியா சொன்னீங்கதான். ரெண்டு குண்டும் வெவ்வேற இடத்துல பாய்ஞ்சுருக்கறதை வெச்சே இதை ஒரு கொலைன்னு நிரூபிக்கலாம். ஆனா கொலைகாரன் யாரு? மோடிவ் என்னங்கறதைத் தெரிஞ்சுண்டாகணும்.”  “ஆமாங்க.. பொட்டுல பாய்ஞ்ச குண்டு ரொம்ப ஆழமா பாய்ஞ்சிருக்கறச்சயே அவர் உயிர் போயிருக்கணும். ஆனா போஸ்ட்மார்ட்டம் ஒரு சின்ன குறிப்பு சொல்றது பார்த்தீங்களா..?” “என்ன குறிப்பு?” “மார்புல உள்ள குண்டுதான் முதல்ல பாய்ஞ்சதுன்னும் அதுக்கடுத்த ரெண்டாவது குண்டு மினிமம் அரை மணி நேரம் கழிச்சுதான் பாய்ஞ்சிருக்குன்னு சொல்றது. அந்த டாக்டர் குழப்பி இருக்காரான்னு தெரியல.. இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருன்னா தற்கொலைன்னு வரப்போ இவரே துப்பாக்கியை எடுத்து  முதல்ல தன் மார்புல சுட்டுண்டு இருப்பார். ஆனா அதுல உயிர் போகாம வலியால அவதிப்பட்டிருக்கலாம்.. மயக்கம் வந்திருக்கலாம் அல்லது அரை மணி நேரம் கழிச்சு கொஞ்சம் தெளிஞ்சுபோய் எங்க இந்த துப்பாக்கி குண்டு சரியா பாயலையோன்னு நினைச்சு திரும்பவும் துப்பாக்கியைத் தேடித் துழாவி எடுத்துத் தன் பொட்டுல அழுத்திச் சுட்டுருக்கலாம். அந்த குண்டு கொஞ்சம் ஆழமா உள்ளே போனதாலே உயிரும் உடனடியாக போயிருக்கும்.. இப்படியெல்லாம் வாய்ப்பு இருந்தாலும் அந்த துப்பாக்கி அவரோட கையிலேதான் இருந்ததே தவிர கைவிரல் ரேகை முழுசா இருந்தாலும் அதை யாராவது அவரு கையில கொடுத்திருக்கலாம்னும் ரிப்போர்ட் சொல்றது.. உயிர் போகல்லேன்னு தெரிஞ்சுதும் மார்புல சுட்டவன் மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு வந்து இவர் பொட்டுல வெச்சுச் சுட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னும் ரிப்போர்ட் சொல்லுது. கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை உற்றுப் பார்த்துக் கேட்டாள்..

    “அந்த அரை மணி நேரம் அங்க ஒரு குழப்பம் நிலவியிருக்கு. அதுக்கப்பறம்தான் அதாவது மார்புல சுட்ட அரை மணி நேரம் கழிச்சுதான் கொலைகாரன் பொட்டுல அழுத்தி வெச்சு சுட்டுருக்கான். யாரா இருக்கும் அவன்?. அப்படின்னா மார்புல சுட்டுட்டு சினிமாவுல வர்ர மாதிரி வசனமெல்லாம் பேசி கேள்வி கேட்டு அதுக்கு அவர் பதில் கொடுத்தவுடனே அதுக்கப்பறம் கோபம் வந்து பொட்டுல துப்பாக்கியை வெச்சு அழுத்தி சுட்டுருக்கான் அந்த வில்லன். சரியா கல்யாண்?..” “இப்போ டோடல் கன்ஃபூஷன்.”

    கோம்டி அவனை சாந்தமாகப் பார்த்தாள்.

    “கல்யாண்.. துப்பாக்கியால சுட்டது உங்க பெரியப்பாவா அல்லது இன்னொருத்தனா என்பதை ஒரு பக்கம் வையுங்க.. ஆனா அதுக்கு முன்னாலே இந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியணும்.. ஆனா ஒரு குண்டுக்கும் இன்னொரு குண்டுக்கும் உள்ள இடைவெளியே இது தற்கொலை இல்லேன்னு நிச்சயமா சொல்லலாம். போலீஸ் எப்பவுமே கேஸை முடிக்கறதுக்குதான் பாக்கும். அவங்க தற்கொலைன்னு சொன்னாலும் நாம எப்படியும் கொலைங்கற ஆங்கிள்ல பார்த்தாதான் கொலைகாரனைப் பிடிக்கமுடியும். அதனாலே மிஸ்டர் கல்யாண்.. உங்க பெரியப்பா நிச்சயமா கொலை செய்யப்பட்டிருக்கார்.”

    கல்யாண் அவளையே பார்த்துக்கொண்டு தலையசைத்தான். சாந்தி மட்டும் அவளைத் திருப்பிக் கேட்டாள்.

    “கோம்டி.. இது ரொம்ப பெரிய கேஸா போகறமாதிரி தெரியுதுடி.. இந்த கேஸை எடுத்தேன்னா நீ எப்போ அமெரிக்கா வர்றதுடி?.. இதைப் பேசாம போலீஸ் கையிலே விட்டுடு.. அவங்க பார்த்துக்கட்டும்.”  இல்லை என தலையசைத்தாள் கோம்டி.

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 5

    திவாகர்

    கோம்டி இன்ஸ்பெக்டர் போவதை எரிச்சலுடன் பார்க்கிறாள். கோபம் கூட வருகிறது.

    ‘இந்த போலீஸ்காரங்களுக்கே இந்த புத்தி போகாதுதான், அவங்களும் செய்ய மாட்டாங்க. யாரவது ஹெல்ப் பண்ண வந்தா அவங்களையும் பயமுறுத்தி வேலை செய்ய விடமாட்டாங்க.’ ‘சரி விடுங்க கோம்டி.. நீங்க எதிர்வீடுதானா? தெரியாம போயிடுச்சு. இல்லே.. நானே இந்த இடத்துக்கு கொஞ்சம் புதுசு மாதிரித்தான். எப்பவாவது வருவேன்.. இந்த வீட்ல எனக்குத் தெரிஞ்சவங்க ரெண்டு பேர்தான். ஒண்ணு எங்க பெரியப்பா.. இன்னொண்ணு இந்த வீட்ல வேலை செய்யற பொன்னம்மா.. தோட்டத்து பக்கம் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்.. நம்ம ரவி மாதிரி சென்னைல ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் எனக்கு இங்கே கிடையாது.. எல்லாரும் எங்கம்மா வழியில உறவுக்கார பசங்கதான்.. எங்க  அம்மாவோட அக்கா, தங்கை அதான் என் சித்தி பிள்ளை பெரியம்மா பிள்ளைன்னு ரெண்டு பேர் முரளியும் சுந்தரும் இருக்காங்க. அவங்கதான் இன்னிக்குக் காலைல செண்ட்ரல் ஸ்டேஷன் வந்தாங்க. ஆனா பெரியப்பாவுக்கு நெருக்கமான பசங்க.. அதுல எங்க பெரியம்மா பிள்ளை முரளி கொஞ்சம் கூடவே நெருக்கம். ரொம்ப கலங்கிட்டான் அவன். எனக்கே எப்படி அவனை சமாதானப்படுத்தறதுன்னு தெரியலே..’ ‘அதனாலேதான் நான் உங்களை இந்த வீட்டிலே எப்பவுமே கவனிக்கலே.’ ரவியைப் பார்க்கிறாள்.  ‘நீ எப்படா வந்தே?’  ‘மத்தியானம் வந்து நேரா எங்க வீட்டுக்குப் போனேன்.. அங்க சாந்தியும் நீயும் விஸா கலக்ட் பண்ண அமெரிக்கன் எம்பாஸி போயிருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க. உடனே இங்கே கிளம்பி வந்துட்டேன். கல்யாண் வீட்டுக்கு இப்போ வரைக்கும் வந்தது இல்லே. உன் வீட்டுக்கு எதிரேதான்னு கல்யாண் வீடுன்னு அம்மாகிட்ட சாந்தி இன்னிக்கு சொன்னதை எனக்குச் சொல்லி அனுப்பினாங்க. ’அது சரி, கல்யாண், உங்ககிட்ட ஒரு கேள்வி.. இவர் கொலைபட்டு விழறச்சே சப்தம் போடலியா? துப்பாக்கி கிடைச்சதுன்னு டி வில சொன்னாங்களாம்.. அப்படினா கை விரல் ரேகை வெச்சு கொலைகாரனைத் தேடலாமே..’ ‘எங்க பெரியப்பா லைசென்ஸ் துப்பாக்கி வெச்சுருக்கார். சைலன்ஸர் துப்பாக்கி. அதை எடுத்துத்தான் அவன் சுட்டுருக்கான். ஆனா அந்த துப்பாக்கில கைரேகைன்னுப் பார்த்தாங்களான்னு இல்லையான்னு இன்னும் தெரிய வரலே.. துப்பாக்கி கூட எங்க பெரியப்பா அவரோட  கையிலதான் இருந்ததுன்னும் ஒரு விரல் ட்ரிக்கர்ல மாட்டிக்கிச்சுன்னும் இன்ஸ்பெக்டர் சொல்லறாரு. கொலைங்கிற கோணத்துல இந்த கேஸைப் பார்த்தா கொலைகாரன் அவர் கையிலே வெச்சுட்டு எஸ்கேப் ஆகியிருக்கான்னு சொல்றாரு. இது பொதுவாவே எல்லா கொலைகாரங்க இந்த மாதிரி கொலைசெய்யறச்சே அப்படி விக்டிம் கையில வெச்சுட்டுப் போவாங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு. அதனாலேதான் இது தற்கொலைன்னு ஒரு சந்தேகம் கிளப்பமுடியும்னு.. ஆனா பெரியப்பா ஒண்ணும் கோழையுமில்லே அதுக்கான காரணமும் இல்லே…” “இல்லை இல்லை… நாம  எல்லா கோணத்துலயும் பாக்கணும்தான்..” கோமதி அவனை மறுத்தாள். ‘அப்படியெல்லாம் பாக்கணுங்கிறதுக்கு முன்னாடி மோடிவ் ஏதாவது இருக்கான்னு பார்க்கணும். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. அவர் ஜாலி மனுஷனாதான் எனக்கும் என் கஸின் கண்களுக்கும் பட்டாரு. எதுக்கும் நாளைக்கு வரப் போகிற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நிறைய க்ளூ கொடுக்கணும்னு நினைக்கிறேன்..”  “ம்ம்.. இந்த போலீஸ்லாம் இங்க பக்கத்து வீட்டுக்காரர்களை கூப்பிட்டு விசாரிச்சாங்களா?” ‘போலீஸ் கான்ஸ்டபிள் கொஞ்சம் பேரு போனாங்க.. ஆமா உங்க வீடு எதிர்வீடாச்சே.. விசாரிக்க யாரும் வரலியா? ‘ ‘இதோ இப்போ உங்க முன்னாடியே ஒரு கேள்வி கேட்கலை?.. அவ்வளவுதான் இவங்க விசாரணை. இப்படியெல்லாம் விசாரிச்சா போலீஸ் ஒண்ணும் கண்டுபிடிக்க மாட்டாங்க. இப்போ எல்லாம் ப்ரைவேட் இன்வெஸ்டிகேஷன்தான் போலிஸ் விசாரணையை விட பெஸ்ட்னு பேசறாங்களே. சரி. இந்த வேலையை நான் தீவிரமாக எடுத்துச் செய்யறேன்.. நீங்க உங்களை பத்தி சொல்லுங்க..”

     

    அவன் அசையாமல் அப்படியே அவனைப் பார்க்கிறான்.

    ‘என்னங்க.. உங்களுக்கு வேலை கொடுத்த என்னையே விசாரிக்கிறீங்க. நீங்க இங்கே உள்ளே எல்லாம் பாருங்க.. எங்க பெரியப்பா வெளியில எப்படி இருப்பார்னு விசாரியுங்க. எல்லா கொலைங்களுக்கும் ஏதாவது ஒரு மோடிவ்’ன்னு ஒண்ணு இருக்கணும்.. அந்த மோட்டிவ் என்னன்னு பாருங்க. எனக்குக் கூட சாதாரணமா பாக்கறச்சே ஒண்ணுமே தெரியலேதான். ஆனா உங்க பார்வை ஒரு இன்வெஸ்டிகேடரோட பார்வை.. அதனாலே வித்தியாஸமா ஏதாவது படலாம்.”

    கோமதி ஆச்சரியமாகப் பேசினாள்..

    “அப்போ இது தற்கொலைங்கிற கோணத்துல கூட நான் கொஞ்சம் ஆராயணும். அதே சமயத்துல ரெண்டு குண்டு வேற வேற இடத்துல பாய்ஞ்சி இருக்குன்னாங்க.. அதையும் பார்க்கணும்..’ ‘ஓ.. ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்கீங்க. ரெண்டு குண்டுன்னு எப்படி தெரியும்..’ ‘என்ன சார்.. அதான் ஊரே பேசுதே.. அத வுடுங்க. உங்களைப் பத்தி சொல்லுங்க.’

    கல்யாண் சோகத்துடன் சிரித்தான்.

    ‘என்னை பத்தி என்னங்க சொல்றது? நான் சுதந்திரமானவன். அப்பா இல்லை அம்மா இல்லே.. எங்க பெரியப்பா மேல அன்பு உள்ளவன். அவரும் அப்படித்தான். ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் மதிப்பும் மரியாதையும் வெச்சிருந்தோம். அவர் இப்போ இல்லே. அவர் சாதாரணமா செத்திருந்தா காலைல அழுதேனே, அத்தோடு போயிருக்கும். அவ்வளவுதான். ஆனா அவரை ஏன் கொலை பண்ணி சாகடிக்கணும்’னு எப்படியும் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்படி என்ன வெறி அந்த கொலைகாரனுக்கு,, யார் அந்த கொலைகாரன்?’ ‘அது சரி, அவருக்கு ஏதாவது வித்தியாசமான பழக்கம், யாராவது வித்தியாசமான ஃப்ரெண்ட்ஸ், ஏதாவது அவுட்சைட் பிரெஷர், அல்லது யாராவது அடிக்கடி ஃபோன் செஞ்சு பயமுறுத்தறது அல்லது யாரோடையாவது தகராறு, அல்லது சூதாடறது மாதிரி கெட்ட பழக்கம்.. ஏதாவது பெரிய.. நோய்..  இல்லே..?’

     

    அவள் கேள்விகளைத் தடுத்து நிறுத்தினான்.

    “நிறுத்துங்க கோம்டி.. இதெல்லாம் கண்டுபிடிக்கறதுக்குதான் உங்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் எனக்குத் தெரிஞ்சிருந்தா நீங்க எதுக்கு? நானே கொலைக்கான காரணம் என்ன, கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சுடுவேனே..’

    அவன் மௌனம் சாதித்துவிட்டு மறுபடியும் பேசினான்.

    ‘மனுஷன் எனக்குத் தெரிஞ்சு கடைசி வரைக்கும் நோய்’னு ஒரு நாளும் படுத்தது இல்லே. அவரு டாக்டர்கிட்டே போனதா எனக்குத் தெரியலே..  தினசரி அஞ்சு கிலோமீட்டர் நடப்பார்.. ஏன், நேத்திக்குக் கூட காலைலே வாக்கிங்க் போனார்.. கூடவே எங்க முரளியும்  நடப்பான்.  நேத்துதான் அவங்கிட்டே பெரியப்பாவே சொன்னாராம்.  இந்த தடவை நான் சென்னை வந்தவுடனே அவரோட உயில் என் பேருக்கு எழுதி பதிவு பண்ணிடனும்னு சொன்னாராம்.. சொன்னவர் இன்னிக்கு உயிரோட இல்லை..’ ‘அது எப்படிங்க? உங்க தாத்தா பாட்டி சொத்துதானே இது எல்லாம். அவர் உயில் எழுதினாலும் எழுதாமப் போனாலும் இதெல்லாம் உங்களுக்கு சொந்தம்தானே..’

    அவன் மீண்டும் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்

     

    ‘எப்படிங்க இவ்வளோ தூரம் விசாரிச்சீங்க.. நீங்க எப்படியும் இந்த கொலைல துப்பு துலக்கறதுன்னு இங்க வரத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டீங்களா?.

     

    சிறிது நேரம் யோசித்தான். பின்னர் அவனே பேசினான்.

    ‘கரெக்ட்தான்.. முக்காவாசி தாத்தா பாட்டி சொத்து.. மீதி இவரு சுயமா சம்பாதிச்சதுதான். ஆனாலும் நான் இவங்க பணத்தைத் தொடறது இல்லேன்னு முடிவு பண்ணிட்டேனுங்க..’ ‘என்னங்க? ஏன் இப்படி?’ ‘ஏன் பயப்படறீங்க. உங்க ஃபீஸ் கிடைக்குமான்னு பாக்கறீங்களா? இவர்கிட்டே இருக்கற பணத்தை விட என்கிட்டே நிறைய இருக்கு..’

    அவன் முதல் முதலாக தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

    ‘ஐய்யய்யோ.. நான் அப்படிலாம் யோசிக்கவே இல்லை. நீங்க கொடுக்கற பணத்துக்காக நான் இந்த விசாரணை எடுக்கலை. எனக்கு இது ஒரு விருப்பமான சப்ஜெக்ட்.. இப்போ விசாகப்பட்டினம் வந்தது கூட இந்த மாதிரி ஒரு வழக்குக்காகத்தான்.. என்னடா ரவி.. நீ எதுவும் பேசாம இருக்கே.. ’ ரவி வழக்கமான மூடுக்கு வந்தான்.. ‘அம்மா தாயே.. உன்னோட எனக்கென்ன பேச்சு?. நீயாச்சு, இந்த கேஸாச்சு.. இது ஒரு மர்டர் கேஸ்.. உன்னால எடுத்து விசாரிக்க முடியும். யம்மா.. நேத்துக் காலைல நான் உயிருக்கு பயந்துண்டு அந்த வீடியோவை எடுத்தேனே.. அப்பவே நினைச்சேன்.. உன்னாலே எந்த கேஸையும் ஈஸியா எடுத்துக்கமுடியும். அந்த மாதிரியெல்லாம் தைரியசாலி நீ ஒத்திதான்னு இந்த மடையனுக்குச் சொல்லிடறேன்.. என்னை மட்டும் இந்த கேஸுக்கு உதவி அது இதுன்னு இழுக்காதே.. சொல்லிட்டேன்’. ‘ஓ! அது கூட கொலை வழக்கா? ஐயோ! என்னாங்க நீங்க பயங்கரமான ஆளா இருக்கீங்க..?’ ‘ஐய்யய்யோ.. கொலை வழக்கெல்லாம் இல்லீங்க. ஒரு விவாகரத்து வழக்கு.. இங்கே ஒரு குடும்பம் அங்கே ஒரு குடும்பம்.. அவனோட முதல் மனைவி இங்கத்தான் இருக்கா.. அவளுக்கு சந்தேகம் வந்துச்சு. என்கிட்டே வந்து சொன்னா.. விலாசம் விசாரிச்சேன். நீங்க இப்போ இருக்கற வைசாக் வீட்டு சொந்தக்காரிதான் அவனோட ரெண்டாவது குடும்பம், வீடியோ ஆதாரம் எல்லாம் கொண்டு வந்து இன்னிக்கு அவகிட்டே கொடுத்துட்டேன்.. அவ நிம்மதியா கேஸ் போட்டு விவாகரத்து வாங்கிடுவா.. இப்போ இந்த மாதிரி ரெண்டு கேஸ்ங்க வேற வெயிட் பண்றாங்க, நான் பெண்டிங்க்ல வெச்சிருக்கேன்.. ம்ம்ம்.. கொலை கேஸ்ன்னா நீங்க கொடுத்ததுதான் இன்னிக்குதான் என் முதல் கேஸ். கவலைப் படாதீங்க.. நான் ஒரு டெடிகேடிவ் டிடெக்டிவ்.’

    அவன் அவளை வெறித்துப் பார்த்தான்.

    ‘அப்போ அந்த டெடிகேட்டிவ் டென்டல் பிராக்டீஸ்?.. கஷ்டப்பட்டு படிச்சு டாக்டரேட் வாங்கி இருக்கீங்களே.. க்லினிக் வெச்சிருக்கீங்க,, அது என்னாகும்.?’ ‘அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது.. சரி வரேங்க.. கிலினிக் திறந்து வெக்க சொன்னேன்.. போகணும்..’  “யாராவது நோயாளிகள் வராங்களா என்ன?’ என்று முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் கேட்டான். ‘அதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே. பல்லு கிளீனிங்னு நிறைய பேரு வருவாங்க. அதுக்குன்னு ஒரு நர்ஸ் வெச்சிருக்கேன்.. அதுலேயே காசு வந்துடும்..  அது பாட்டுக்கு அது போகும்.. இது வீட்டில் முன்னாடி ரூம்லேயே கிளினிக் இருக்கு.. நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்.. நான் வரட்டுமா?’ என்று சொன்னவள் ரவியைப் பார்த்தாள். ‘டேய்.. போகறச்சே வீட்டுக்கு வந்துட்டு போடா.. சாந்தியும் இப்போ அங்க வருவா..’

    அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் போனதும் கல்யாண் காதில் கிசுகிசுக்கிறான்.

    ‘இவ கையிலே இந்தக் கேஸைக் கொடுத்திருக்கியா.. பயங்கரமான சுறுசுறுப்பு.. நேத்து பாக்கணுமே.. நம்ம வீட்டுக்கார அக்காவை கிடுக்குப்பிடி போட்டு கேள்வி கேட்க அந்தக்கா எப்படா இவகிட்டயிருந்து ஒதுங்கலாம்னு என்னை அடிக்கடிப் பாக்க ஆரம்பிச்சுடுத்து. கல்யாண தேதி, கல்யாணம் எங்க நடந்தது.. உறவுக்காரங்கள்லாம் வந்தாங்களான்னு ரெண்டு மூணு தடவ கேட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வெளியே வந்தா..’ ‘நல்லதுதானே.. ‘ ‘என்னடா நல்லது? நாளைக்குள்ள பாரு.. எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என்னையும் தன்னோட சேர்த்துக்குவா.. நான் வைசாக் போனா மாதிரிதான்..’ ‘நீயும் சேர்ந்திட்டியானா ரொம்ப நல்லதா போச்சு’.

    கல்யாண் அந்த சோகத்திலும் சிரித்தான்.

     

    இடம்: காவல் நிலையம்:

     

    அடுத்த நாள் காவல் நிலையத்தில் கல்யாணும் ரவியும் இன்ஸ்பெக்டருடன் அமர்ந்திருந்தபோது இன்ஸ்பெக்டரின் மொபைலுக்கு ஒரு போன் வந்தது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர், ‘தகவலுக்கு நன்றி’ என்று சொல்லிவிட்டு மூடினார்.

     

    ‘கல்யாண்! இந்த கேஸ் விஷயமா சுமதிங்கற  நர்ஸ் பத்தி ஒரு தகவல் கிடைச்சிருக்கு.. நீங்க ரெண்டுபேரும் என் கூட வாங்க போகலாம். ஆனா உங்க பெரியப்பா உறவு எதுவும் காமிக்காதீங்க. சாதாரணமா வாங்க.’

     

    கல்யாண் ரவி இன்ஸ்பெக்டர் மோகன் மூவரும் போலீஸ் காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு சென்றனர். பல வீடுகள் கொண்ட ஒரு சிறிய சாலை அது, அவர்கள் போலீஸ் வண்டியை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு ஒரு வீட்டிற்குச் சென்றார்கள், அங்கு ஒரு வயதான பெண்மணி வராண்டாவுக்கு வெளியே அமர்ந்து சில வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அது சரியாக செவி வரை கேட்கவில்லை. எனினும் உற்றுக் கேட்டான் ரவி.

     

    ‘வரலியே இன்னும்னு பார்த்தேன்.. வந்துட்டாங்க.. இந்த இழவோடு இந்தப் பொம்பளை எப்போதும் கஷ்டப்பட்டே இருக்கணும் போல..’

     

    சட்டென ரவி இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். ‘சார்.. அந்த அம்மா பாவம் சார் ஏதோ வேணும் போல.. நான் அந்தம்மாகிட்ட பேசிண்டிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க சார்.’

    ‘சரி மிஸ்டர் ரவி..’

    கல்யாண் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஆனால் இன்ஸ்பெக்டர் அவளைப் பொருட்படுத்தாமல் அறைக்குள் சென்றார். இருபது இருபத்திரெண்டு வயதுடைய பெண் ஒருவர் சமையலறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​ஆச்சரியத்துடன் போலிஸாரைப் பார்த்தாள்.

    ‘எதுக்குங்க வந்தீங்க?.. போலீஸ்லாம் வீட்டுக்குள்ள வரலாமா?.. ஊருல என்ன நினைப்பாங்க. சார்.. ஏற்கனவே இங்கே இருக்கற நாங்க மூணு பேரும் பொம்பளைங்க.. இருக்கற வீட்டையும் காலி பண்ணச் சொல்லிட்டா எங்கேன்னு போவோம் நாங்க?’ ‘போலீஸ்ன்னா என்னம்மா ராட்சஸங்களா?  விசாரணைக்கோசரம் எங்கே வேணும்னாலும் வரத்தானே வேணும் சுமதி.. அதானே உன்னோட பேரு?’ ‘ஆமா சார்.. உங்களுக்கு என்ன வேணும்? எதைப் பத்தி பேசணும்?’ ‘கந்தசாமியைப் பத்தி’ ‘எந்த சாமி?’ ‘கந்தசாமி… சுமதி.. உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவரே.. அவரைப் பத்தித்தான்’. ‘கொஞ்சம் இருங்க.. (அவள் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்) சார் அடிக்கடி இங்கே ஆம்பளைங்க யாரும் வந்தது இல்லே.. நீங்க சொல்றதைப் பார்த்தா ஒருவேளை இவரைச் சொல்றீங்களா.. ஒரு பெரியவர் ஒருத்தர் நாலு மாசம் முன்னாடி இங்கே வந்தார். இரவு நேரமா மாலையான்னு ஞாபகம் இல்லே. என் தங்கைக்கு கொஞ்சம் மூளைப் பிரச்சனை.. அவளுக்கு நிறைய செலவு பண்ணி ஹாஸ்பிடல்ல சேர்த்து குணம் ஆக்கிடலாம். இந்தப் பெரியவர் இந்த மாதிரி விஷயங்களுக்கு நிறைய பணம் கொடுப்பார். தெரிஞ்சவங்கதான் சொன்னாங்க. இத்தனைக்கும் நான் கேட்கலே.. எனக்குச் சொன்னவங்களே அவங்ககிட்டே போயி ஹெல்ப் கேட்டாங்க.. ஓஹோ அவரு பேரு கந்தசாமியா? தெரியாதுங்க.. நோயாளியை பார்க்க வந்தேன்மா ன்னு சொல்லிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டாங்க.. நான் உதவி கேட்டது உண்மையான்னு சோதனை பண்ணிருக்காருன்னு அப்போ தோணித்து அவ்வளவுதான்.. எனக்கு இவங்க யாரும் உதவி செய்யலைன்னா என்னங்க. தெய்வம் நம்மகிட்டே கூடவே இருந்து எல்லாம் செய்யும்.. அந்த நம்பிக்கைல தான் சொல்றேன். என்னாச்சு சார் அந்த கந்தசாமிக்கு?’

    கல்யாண் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இன்ஸ்பெக்டர் மோகன் அவனைப் பார்க்கிறார். மெதுவாக அவன் காதில் பேசுகிறார், ‘என்னய்யா.. பொம்பளை அழகா இருக்குதேன்னு அவளையே உத்துப் பார்க்கறியா?.” கிண்டலாகச் சொன்னவர் மறுபடியும் அந்தப் பெண்ணிடம் கேட்கிறார்.

    ‘சுமதி.. உனக்கு விஷயம் தெரியாதா? அந்த கந்தசாமியை யாரோ முந்தா நாள் சாயங்காலம் கொலை பண்ணிட்டாங்க.’ அவள் ஆச்சரியப்பட்டாள். ‘கடவுளே’ இது என்ன சார் இப்படிச் சொல்லறீங்க.. அடப் பாவமே.. அவரே வந்தாரு.. ஹெல்ப் பண்றேன்னு சொன்னாரு.. அப்புறம் எந்தத் தகவலும் இல்லே. நாங்களும் மறந்துட்டோம்.. இப்போ அவரு மேல போயிட்டாரா?’ ‘என்னம்மா.. இவ்வளோ ஈஸியா சொல்றே? உனக்கு ஷாக்கிங்கா இருக்கணுமே..’ ‘எனக்கு எதுக்கு சார் ஷாக்கடிக்கணும்..?  அன்னிக்கு அரை மணி நேரம் அவரைப் பார்த்திருப்பேன். இருந்தாலும் மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.’ ‘ஆனா அந்த மனக் கஷ்டம் மூஞ்சில தெரியலியே.. சரி, வேற எந்த விஷயமும் அவரைப் பத்தி உனக்குத் தெரியாதா?’ ‘எந்த விஷயமும்னா?.. புரியலை சார்.. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்..’

    இன்ஸ்பெக்டர் மோகன் சற்று கோபமாக பேசினார்

    ‘இதோ பாரு சுமதி.. எனக்கு ஒரு செய்தி கிடைச்சது.. கந்தசாமி உனக்கு ஏதோ கெடுதல் பண்ணியிருக்காருன்னு ஒரு இன்ஃபார்மர் சொன்னாரு.. உனக்கு என்ன விஷயத்துல கெடுதல் பண்ணியிருக்கார்னு எனக்குத் தெரியணும்.’

    சட்டென்று அழ ஆரம்பித்தாள்.

    ‘என் சார், எனக்கு அந்த ஆளை அறிமுகமே இல்லைன்னு சொல்லறேன். நீங்க எனக்கும் அந்த கொலைக்கும் லிங்க் பண்ணப் பாக்கறீங்களே.. இது என்ன நியாயம் சார்.. போலீஸ்ன்னா என்ன வேணா சொல்லலாமா சார்?’

    கல்யாண் திடீரென்று இடையில் வந்தான்.

    ‘சார்.. எனக்கும் அப்படித்தான் படறது சார்.. அவங்களுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும்போது அவங்களை கன்ஃப்யூஸ் பண்ணி ஸ்டேட்மென்ட் வாங்கறது தப்பு இல்லயா சார்..’

    “இன்ஸ்பெக்டர் அவனை அனுதாபத்துடன் பார்த்தார். மெதுவாக அவனிடம் பேசினார். ‘என்னய்யா.. பொம்பளைன்னா கொஞ்சம் இரக்கம் காட்டறியா? பார்த்தா தெரியலே இது பொய் சொல்லுதுன்னு.”

     

    கல்யாண் அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

     

    ‘ஏம்மா.. உங்க ஸ்டேட்மென்ட்லாம் வேணாம். ஆனா இந்த விஷயத்துல என்னவெல்லாம் தெரியும்னு கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். அவ்வளவுதான்.’ ‘நன்றி சார், உங்களைப் பாத்தா நல்ல மாதிரியாத்தான் தெரியுது. இருந்தாலும் சொல்றேன் சார்.. எனக்கும் அந்த பெரிய மனுஷனை அரை மணி நேரம் தான் தெரியும்.’ ‘சரிம்மா.. யார் மூலமா இந்தப் பெரிய மனுஷரை பிடிச்சீங்க?’ ‘சார், நான் என் தங்கையை ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டு வெளிய காத்திருந்தப்ப ஒரு ஏஜண்டும் இன்னொரு குடும்பமும் அங்கே பேசிண்டு இருந்தாங்க.. பெண் குழந்தைங்க 16 வயதுக்குள்ள இருந்தாங்கன்னா அவங்க ஆபரேஷனுக்கு இந்த மனுஷர் பண உதவி பண்ணறாராம். அந்த குடும்பம் அவங்களுக்காக அன்னிக்கு அவர்கிட்டே போய் ஹெல்ப் கேட்க போறதா சொன்னாங்க. அப்படியே என் தங்கை விஷயத்தையும் சொல்லி ஹெல்ப் கேளுங்க, கிடைச்சா நல்லது.. அதுக்காக உங்க குழந்தை கேஸ் ஐ வுட்டுடாதீங்க.. கடவுள் அருள் இருந்தா என் தங்கைக்கும் கிடைக்கட்டுமே’ அப்படின்னேன்.. அவரு நான் சொன்ன விஷயமெல்லாம் கரெக்டான்னு செக் பண்ணிக்க அன்னிக்கு இங்க வந்தாரு. அவ்வளவுதான். ஆனா இப்படி பொசுக்குன்னு போயிடுவார்ன்னு ஊகிக்கலே.”  கல்யாண் இன்ஸ்பெக்டர் ஐ பார்த்தான். மேலும் விஷயம் அறிய அவனை ஊக்கப்படுத்தினார். “கல்யாண்.. நீங்க கேரி ஆன் பண்ணுங்க.. நீங்க பேசிண்டு இருங்க,, எதுவாவது விஷயம் கிடைக்குதான்னு பாருங்க.. நான் இங்க சுத்துவட்டாரத்துல கொஞ்சம் விசாரிக்கறேன்.. இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே ரவி அந்த அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அருகே வந்தார். ‘என்ன மிஸ்டர் ரவி, இவங்களுக்கு ஏதேனும் தெரியுமா?’.  இல்லே சார்.. இவங்க இந்த சுத்துவட்டார வீடுகள் இவங்களைக் கொஞ்சம் ஏளனமா பாக்கறாங்களாம்.. இதுல போலீஸ் வேற வந்து விசாரிச்சா எப்படின்னாங்க? ஏதுக்கு ஏளனமாம்? அவங்க வீட்டுல ஒரு சின்னப் பொண்ணுக்குக் கொஞ்சம் மன வளர்ச்சி இல்லையாமே..  ‘ஆமாமா.. சம் டைம் க்ரூயல் மனசு உள்ளவங்கதான் ஜனங்க..’

    இருவரும் வெளியே வருகிறார்கள்.

     

    வெளியே இருந்த சிலரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்தார். கடந்த நாட்களில் ஒரு கருப்பு கார் இந்த சாலையில் வந்து இங்கு நின்றதை யாராவது பார்த்தீர்களா என்று இன்ஸ்பெக்டர் அங்கே அருகில் இருந்தவர்களிடம் கேட்டார்.

     

    ஞாபகம் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். அங்கே எதிர் வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், ‘என் அப்பா கருப்பு கார் மட்டுமே வைத்திருப்பார், ஆனா அவர் ரெண்டு மாதமா அதையே கொண்டு வருவதை நிறுத்திட்டார். ‘என் பொண்டாட்டிக்கு அந்த கருப்பு கார் வேணும்னு அவ டைரக்டா கேட்டதாலே அவர் இங்கே  வர்ரது கிடையாது.’

     

    கொஞ்ச நேரம் கழித்தவுடன் கல்யாண் வெளியே வந்து இவர்களுடன் சேர்ந்தான்.

     

    ‘சார், அது அப்பாவி பொம்பளை’ன்னு தெரியறது. இவள் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் நர்ஸா வேலை செய்யறா. தன்னோட தங்கை ஆடிஸ்டிக் பொண்ணுன்னவுடனே குணப்படுத்த எல்லா முயற்சியும் எடுக்குறா. அவ்வளவுதான்,  இவளைப் பத்தி யார் இன்ஃபார்ம் கொடுத்தாங்கன்னு நான்  சொல்லட்டுமா?’ ‘சொல்லுங்க’ ‘இந்தப் பெண்ணுக்கு உதவி பண்றேன்னு முதல்ல ஒரு குடும்பம் சிபாரிசுக்கு வந்ததுன்னு சொன்னீங்க இல்லே. அவங்கதான் போன்ல இவங்க நியூஸ் கொடுத்திருப்பான்.’ ‘நீங்கள் கூறியது கொஞ்சம் சரிதான்.. நாங்க கந்தசாமி உதவி செஞ்ச எல்லா ஆட்களையும் விசாரிச்சிருக்கோம் மிஸ்டர் கல்யாண், அதுல சில விஷயம் கிடைச்சுது. உங்க பெரியப்பா கொஞ்சம் டெஸ்ட் பண்ணி உண்மையானவங்களான்னு பார்த்து அப்புறமா பணம் கொடுப்பாரு. அவர் ஆடிட்டர் இதை ஸ்டேட்மென்ட்ல சொல்லி இருக்காரு. ஆனா இன்னொரு ஆளும் இவளைப் பத்திச் சொன்னான். அதனாலதான் கொஞ்சம் ஹார்ஷா பேசினேன். சரி வாங்க ஸ்டேஷனுக்கு போவோம்.. போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் வந்துருக்கும். ஏதாவது தகவல் தெரியுதான்னு பார்ப்போம்.’  ‘சரி சார்.. ஆனா இந்த பொம்பளை கேஸ் ரொம்ப பாவம் சார்.. பதினாலோ பதிமூணோ வயசுள்ள ஆடிஸ்டிக் தங்கை இருக்கு.. நான் பார்த்தேன் எத்தையோ பறிகொடுத்த மாதிரி எல்லாரையும் பாக்கறா.. நல்ல டாக்டர் கிடைச்சு சிகிச்சை பண்ணினா அந்த பொண்ணுக்கு சரியாயிடும்’. ‘உங்களை அப்பவே கவனிச்சேன்.. அந்த பொம்பளையை ஒரு மாதிரியாத்தான் பார்த்தீங்க.. ஜாக்கிரதையா இருங்கப்பா.. பொம்பளை, அதுவும் அவ எப்பிடி எதிர்த்து பேசினா பாரு,  உடனே ஒரு அழுகையும் வேற. அவ அழுதுட்டதால நாம இரக்கம் காமிக்க முடியாது மிஸ்டர் கல்யாண். ஆனா எதுக்கு நம்ம ஆளு இந்தப் பொம்பளையைப் பத்தி சரியா விலாசத்தோடு சொல்லணும்? நான் இன்னும் இந்தப் பெண்ணை விசாரணை லிஸ்ட்லயே வெக்கிறேன். மறுபடியும் தேவைப்பட்டா விசாரிக்கலாம்.’ “யார் சார் அந்த இன்ஃபார்மர்.. சொல்லணும்னு அவசியம் இல்லே.. ஒருவேளை கோம்டிகிட்டே சொல்லி இன்னும் ஆழமா என்னால இவகிட்டே அனுப்பி விசாரிக்கமுடியும். லேடீஸ்ங்க்கிறதனாலே கொஞ்சம் விஷயம் ஏதாவது இருந்தா வெளியே வரலாம்”.  “இன்ஃபார்மர் பேருதானே.. சொல்லிட்டா போச்சு. மிஸ்டர் முரளி.. உன்னோட கஸின் முரளி.. ரவி ஆச்சரியமாக கேட்டான். ‘இவன் கஸின் முரளியா?’  ‘அவனேதான். அவன் உங்க பெரியப்பாவை இங்கே அழைச்சிட்டு வந்திருக்கான்யா.. திடீர்னு ஞாபகம் வந்தது சார், எதுக்கும் அங்க போயி நீங்க அவளை விசாரிங்க சார்’னு இப்போதான் உன் முன்னாடியே போலீஸ் ஸ்டேஷன்ல  இருக்கறச்சே என் மொபைல்ல பேசி அட்ரஸ் மெஸேஜ்ல கொடுத்தான்”.  “முரளிகிட்டே நானும் பேசறேன் சார்.. என்னை விட பெரியப்பாவை கரைச்சுக் குடிச்சவன். ஆனா நல்லவன் சார். எங்க சொத்து மேல எல்லாம் அவனுக்கு ஆசை இல்லேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.” “போலீஸைப் பொறுத்தவரை எல்லாமே சந்தேகம்தான். முரளி என்ன ஒழுங்கா.. அவனுக்கு ஆசை சொத்துமேலே இல்லேன்னு வெச்சுண்டா கூட அவன் அதிகம் கந்தசாமியோட பழகினான். என்னவேணா நடந்திருக்கும். ஆனா முரளி சுடலேன்னு எனக்குத் தெரியும். அவன் அன்னிக்கு சாயங்காலம் பூரா அவன் ஆபிஸ்லதான் இருந்தான். அதை எல்லாம் விசாரிச்சுட்டோம். ஆனா வெளியாள் வெச்சு கொலை பண்ணி இருக்கலாம்தான்.. என்ன அப்படி பாக்கறே? சான்ஸ் இருக்கா இல்லையா? அந்த சுந்தர், உன்னோட இன்னொரு க்லோஸ் கஸின்.. அவனையும் விசாரிச்சுட்டேன். அவன் ஊரிலேயே இல்லே.. கார்ல புறப்பட்டு அன்னிக்கு நடுராத்திரி வந்தான். எல்லாத்தையும் விசாரிக்கிறோம் கல்யாண்.. எங்கேயாவது எதிலாவது க்ளூ கிடைக்காம போகாது.. பிடிச்சுடுவோம் அந்தக் கொலைகாரனை.’.

     

     

    தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 4

    திவாகர்

    ‘அவனும் இந்த எதிர்வீட்டுலதான் இருக்கான்.. அவனோட பெரியப்பாவைத்தான் நேத்து சாயங்காலம் கொலை பண்ணி இருக்காங்க..’ “கொலையா?” “ஆமாண்டி.. பகல்லயே கொலை பண்ணியிருக்கான். கொடுமைதான். ஆனா அவனுக்கு ஆண்டவனாப் பாத்துதாண்டி இந்த தண்டனைக் கொடுத்திருக்கார்.” ‘அடக் கடவுளே.. ஆனா அவனை அதான் கல்யாணை இங்கே நான் பார்த்தது கிடையாதே..’ ‘அவன் எப்போவதுதான் வருவான்.. இந்த பெரியப்பா அவனை வேற ஊருலதான் வெச்சு படிக்கவெச்சாரு. அவன் கூட வைசாக்லத்தான் காலேஜ் முடிச்சான். அங்கயே இருக்கான்னு தெரியும்.. அவனைத்தான் நீ பார்த்துருக்கே.. தெத்துப்பல்லன்’னு எல்லாரும் கூப்பிடுவாங்கன்னு அந்த பொன்னம்மா, அவங்க வீட்டு வேலைக்காரி சொன்னாடி.’ ‘அப்படியா.. அப்போ இவன் இங்கேதான் வீடா? கரெக்ட்தான். இந்த கந்தசாமி கூட மூணு  வருஷம் முன்னாடித்தானே இந்த பங்களா வாங்கினான்!.’ ‘ஏம்மா.. அவன் என்கிட்டே பேசறச்சே எங்க பெரியப்பா ரொம்ப அன்பானவரு, ரொம்ப ரொம்ப நல்லவருன்னு பேசினான்.. அவனுக்கு இந்த ஆளைப் பத்தி சரியா தெரியாதா?’ ‘அடி கோமதி, நீ ரொம்ப வெச்சுக்காதே அவங்ககிட்டே.. அந்த கிழவனும் போயிட்டான்.. கொலையோ தற்கொலையோ.. ஒழிஞ்சான் விடுன்னு போவியா.’ ‘அம்மா.. நான் ஒருவாட்டி அந்த தெத்துப்பல்லனைப் பார்த்துட்டு வரட்டுமா.. நம்ம ரவியோட ஃப்ரெண்ட்மா.. நல்லா ஜோவியலா பேசினான்மா. என் கிளாஸ்லாம் மாடலிங் பண்ணிருக்கான், ஒரு ஆறுதல் சொல்லிட்டு வரேனே..’ ‘தறுதல போனதுக்கு ஆறுதல் சொல்லப்போறியா?  அந்த அயோக்கியன் வீட்டுக்குள்ள உன் கால் படக் கூடாது, சொல்லிட்டேன். இப்பகூட அந்தப் பாவியோட பொணம்  எடுக்கலியாம். உங்கப்பா சொன்னார். அவரும் போய். சும்மா பார்த்துட்டு வரேன்னார். ‘ஒண்ணும் வேணாம்’னு சொல்லி நிறுத்தினேன். ‘

     

    அப்பா அவர்களை நோக்கி வருகிறார்.

     

    ‘நான் ஏன் போகணும்னு சொன்னேன் தெரியுமா கோம்டி?. கடைசி நேரத்துல அவன் முகம் எவ்வளோ கோரமா இருக்கும்னு பாக்கற ஆசைதான். இவனுக்கெல்லாம் நல்ல சாவே கிடைக்காது நான் சாபம் விட்டுருக்கேன்.. என் சாபம் பலிச்சுடுச்சி.’ அம்மா தலையில் அடித்துக் கொள்கிறாள். ‘ஏய் கோமதி, இவரோட திருவாயை கொஞ்சம் மூட சொல்லுடி. இந்த ஓட்ட வாய் எத்தையாவது உளறிக்கொட்டுமோன்னு பயந்துதான் நான் இவரை போகவேணாம்னு சொன்னேன். கொலைகாரன் யாருன்னு போலீஸ்க்கு தெரியலை. தேடிக்கிட்டுருக்காங்க. உங்கப்பா அங்க போயி எத்தையாவது உளறினாருனு வெச்சுக்கோ…சந்தேகத்தின் பேரிலேயே அரெஸ்ட் பண்ணி உள்ளே வெச்சுடுவாங்க.’ ‘அது எப்படி வெப்பாங்க?  நாம என்ன கொலையா பண்ணோம்? எவன்கிட்டயாவது செமையா ‘மாட்டியிருப்பான்.. சுட்டுத் தள்ளிட்டான்…’ கோமதி அவனை அமைதிப்படுத்தினாள். ‘அப்பா.. நீ கொஞ்சம் திருவாயை மூடிண்டு சும்மா இருக்கணும். உன்னோட கமெண்ட், கோபம்லாம் மூட்டைகட்டி ஓரமா போடு. எப்படியோ போயிட்டான். திருப்தி! அவ்வளவுதான். இனிமே நமக்கு அதுவும் சம்பந்தமில்லாத விஷயம் கூட. ஒருவேளை எதிர்வீடு விசாரணைன்னு உன்னை போலீஸ் விசாரிச்சா கூட அந்தாளு ஏரியாவுக்கே இப்போதான் வந்தான்.. புதுசு.. எனக்கு ‘ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்லிடு.’ ‘அம்மா.. சாயங்காலமா வீடெல்லாம் அமைதியாயிடும் இல்லியா.. அப்போ போறேன்மா. நான் ஒரு இன்வெஸ்டிகேடிவ் ப்ரொஃபெஷன்ல இருக்கேன். என்னதான் ஆச்சுன்னு, எப்படி போனான்’னு எனக்குத் தெரிஞ்சிக்க ஆசைதான். ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இதை கையாளணும். அவன்கிட்டேயே கேட்கிறேன்.. சரி.. எனக்கு பசிக்குது.. இன்னிக்கு உஷா வீட்டுக்கு போயிட்டு அவ விஷயத்தை முடிச்சுக்கொடுத்துட்டு சாந்தி வீட்டுக்கு போகணும். எங்களோட அமெரிக்கா விசா க்ளியர் ஆயி வந்துடுச்சு.. அதை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துபோய் கலெக்ட் பண்ணிக்கணும்.’ ‘ஆமா.. உனக்கு விஸா வந்து என்ன யூஸ்? உன்கூட படிச்ச சாந்தி புத்திசாலித்தனமா யோசிச்சு அவங்க சொந்தக்காரங்க மூலமா அமெரிக்கா போயி பல் டாக்டரா வேலை பண்ணப்போறா. நீதான்.. விசாரணை.. விவாகரத்து சர்வீஸ்ன்னு சொல்லிட்டு ஊர் சுத்தறே.. பேசாம உங்கப்பா சொல்றமாதிரி கல்யாணம் பண்ணிக்கோடி..’ ‘அட போம்மா.. எதிர்வீட்ல ஒரு கொலையே விழுந்திருக்கு.. இப்போ நீ கல்யாணத்தைப் பத்திப் பேசறே.. போயி டிஃபனை எடுத்து வையு.’

     

    அந்த நாள் மாலை – கல்யாணின் வீடு

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மெதுவாக கல்யாணுடன் பேசிக்கொண்டிருந்தார். கல்யாணும் ரவியும் அங்கே இருந்தனர்.

     

    ‘கல்யாண்.. நாங்க எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பலமான பகை இருக்கற ஆள் யாருமே இல்லே. ஆனா ஷேர் மார்க்கெட்ல பயங்கரமா பிசினஸ் பண்ணிண்டு இருந்தார். ஒருவேளை ஷேர் மார்க்கெட் பிசினஸ்ல நஷ்டம்ன்னு தற்கொலை ஏதாவது பண்ணியிருக்கலாம்னா அதுவும் அப்பிடி இருக்கமுடியாதுன்னு அவர் ஆடிட்டர் சொல்றார். நல்ல லாபம் பார்த்துதான் பணம் போடுவாராம்.’ ‘ஆமாம் சார், நானும் யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டேன்.. அவரோட ஷேர் எல்லாம் ரொம்ப காலமா பெரிய கம்பெனிங்கள்ல இருக்கு. ரிஸ்க் இல்லாத முதலீடு. அத்தோட தற்கொலைன்னு ஏன் பண்ணிக்கணும் அவரு? காரணம் இல்லையே.’ ‘நீங்க சொல்றது சரிதான்.. ஆனா நாங்க அந்த ஆங்கிள்லயும் பார்த்துட்டுதான் சார் விசாரணையை ஆரம்பிக்க முடியும். தற்கொலையா இருந்தா இந்த வழக்கு உடனடியா க்ளோஸ் பண்ணிடலாம்.. ஆனா நாங்க அப்பிடி நினைக்கலே.. எப்படி அவரோட கொலைக்கு மோட்டிவ் கிடைக்கலியோ அவர் தற்கொலைக்குக் கூட மோட்டிவ் இல்லே.’ ‘சார், காலைல வந்ததுலேர்ந்து அவரை நெருப்புல வெக்கற வரை நான் அவரையே பார்த்துண்டு இருந்தேன். சிரிப்பு முகம் சார்.. அவருக்கெல்லாம் கோவம் கூட வராது சார்.. அத்தோட அவர் ரொம்ப தைரியசாலி சார்.. வாழ்க்கைல எதிர்நீச்சல் போட்டு முன்னேறணும்னு சொல்லுவார். என்னை அப்படித்தான் வளர்த்தார்.’ ‘சார் இன்னொரு விஷயம் கவனிச்சேன்..’ ‘சொல்லுங்க கல்யாண்..’ ‘அவரோட பொட்டுல துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச இடத்துல பெரிய பள்ளம் இருக்கு. இது ஒருவேளை தன் கையாலேயே தற்கொலை பண்ணினால் வரலாம். ஆனா அவர் மார்புலயும் குண்டு பாய்ஞ்சிருக்கு.. ஒருவாட்டி தன் மேலேயே குண்டு போட்டுண்டு சுட்டா கூட கை தடுமாறாதா சார்? மார்புல சுட்டாலும் கை தடுமாறும் அல்லது உயிர் போகிற நிலையிலே ஞாபக சக்தியே போய்டும். அவர் எப்படி பொட்டுலே வெச்சு சுட்டுக்கமுடியும் சார்? எப்படி சார் நடந்துது.. புரியவே இல்லையே சார்.’ ரவி நடுவில் புகுந்தான். ‘ரெண்டு வாட்டி சுட அப்படி என்ன வன்மமோ.. இதை தீர விசாரிக்கணும் சார்.. இது கொலையாதான் என் மனசுக்குப் படுது’. ‘எக்ஸாக்ட்டா எனக்கும் அதுதான் தோணிச்சு கல்யாண். அத்தோட அந்த பீரோ ஹேண்டில்ல ரத்தக் கறை.. அங்க தரையிலயும் ரத்தக் கறை இருக்கு. ஒருவேளை திருட்டுப் போச்சான்னு அதுவும் இல்லே.. காஷ், கொஞ்சம் நகைங்க எல்லாம் அப்படியே இருக்கு. முரளி சொன்னது என்னன்னா அவரோட சொந்த லைசென்ஸ்ட் ரிவால்வர் பீரோலதான் வெச்சிருக்கார்ன்னாரு. எதுக்கும் அந்த ரத்தக் கறையெல்லாம் எடுத்துட்டுப் போயிருக்காங்க.. போஸ்ட் மார்ட்ட்ம் ரிசல்ட் எப்படியும் நாளைக்கு வந்துடும்.. அப்போ பார்த்துக்கலாம், இது கொலையா இல்லே தற்கொலையான்னு. இப்போ நீங்க சொல்லுங்க. உங்க பெரியப்பா எப்படிப்பட்டவரு? யார்கிட்டயாவது தகராறு பண்ணிண்டே இருப்பாரா? அவருக்கு உங்கப்பா ஒரே தம்பியா இல்லே அவருக்கு வேற யாராவது உறவுக்காரங்க இருக்காங்களா? இன்னிக்கு எத்தனை உறவுக்காரங்க வந்தாங்க?.. தூக்கம் விசாரிச்சாங்க?.’ ‘எங்க சொந்த ஊர் திருச்சி சார்.. எங்கப்பாவும் பெரியப்பாவும் சிநேகிதர் மாதிரி பழகினாங்களாம். எங்கப்பா எங்கம்மா ரெண்டு பேருமே நான் குழந்தையா இருக்கறப்பவே ஒரே நாளில் செத்துப்போனாங்க. ஆனா இது நடக்கறச்சா எங்க தாத்தா பாட்டி இருந்தாங்க. வீட்லேயே ஒரு சின்ன விபத்துல போயிட்டாங்கன்னு பாட்டியும் தாத்தாவும் சொன்னாங்க. நான் அப்போ. பள்ளிக்கு கூட போக ஆரம்பிக்கலே. ஆனா எங்க பெரியப்பா ரொம்ப தைரியமா என்னை வளர்த்து வந்தாரு. அப்பா அம்மா இல்லாத குறையை பாட்டி தாத்தா கொஞ்ச வருடம் போக்கினாங்கன்னா அதுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பான்னு ஆகி போயிடுச்சு..’ ‘அப்போ பெரியப்பா கல்யாணம் பண்ணிக்காமயே இருந்துட்டாரா?’ ‘சார். எனக்கு தெரிஞ்சு அவருக்கு கல்யாணம் ஆகலை. எங்கப்பா கல்யாணத்துல சந்தோஷமா ஆடி ஓடி வேலை செஞ்சதை எங்க பாட்டி சொல்லிருக்காங்க. நான் பள்ளில படிக்கறச்சே என்னை ஜாக்கிரதையா கொண்டு விட்டு கொண்டு வருவார். நான் வேற ஊருக்கு காலேஜ் படிக்கப் போனதும்தான் அவருக்கு திருச்சில நான் இல்லாம ஊரே பிடிக்கலேன்னு சொல்லிண்டுருப்பார். வைசாக்ல நான் பிஜி படிச்சு முடிச்சேன். சென்னைக்கு என்னை வரவழைச்சு என்னோட இருக்கணும்கிறதுக்காக இந்த வீட்டையே வாங்கினார். ஆனா நான், என் படிப்பு, என் வேலைன்னு வைசாக்லேயே இருந்துட்டு எப்பவாவதுதான் பெரியப்பாவை இங்கே வந்து பார்ப்பேன்.  ஆனா எனக்கு பெரியப்பாவை வந்து சரியா கவனிக்க முடியலே.. இனிமேயாவது நம்ம பக்கத்துலேயே அவரை வெச்சுக்கணும்னு அப்பப்ப நினைப்பேன் சார்.. ஆனா அதுக்குள்ளே…’

     

    கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன். ரவியும் சேர்ந்து கொண்டான்.

     

    “வைசாக்ல இருக்கறச்சே கூட அப்பப்போ பெரியப்பா பத்திதான் பேசுவான். பெத்த அப்பாவை விட பெரியப்பா மேல இப்படிப் பாசம் வெச்சிருக்கானேன்னு ஆச்சரியப்படுவேன். ஆனா இவங்கப்பா இவன் குழந்தையா இருக்கறச்சயே போயிட்டாரு இல்லையா.. வளர்த்த பெரியப்பா மேல வெச்சிருக்கற பாசம் சரிதான்னு தோணும்”.

     

    கல்யாண் ரவியை கையை ஆறுதலுக்காக பற்றிக்கொண்டான். ‘இப்படியெல்லாம் நடக்கும்னு யாருக்குத் தெரியும்டா ரவி, . இப்படி அநியாயமா என்னை விட்டுப் போயிட்டாரேடா..’

     

    அப்போது அங்கே கோம்டி வருகிறாள்.

     

    திடீரென்று கல்யாண் எழுந்தான். ரவியும் கூடவே ஆச்சரியத்துடன்.

     

    ‘காலையில நான் உங்ககிட்டே எதுவும் பேச முடியலே கோமதி.. ஸாரி கோம்டி.. இதோ ரவியும் காலைல ஃப்ளைட் பிடிச்சு வந்துட்டான். ஆனா என் வீடு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? ஓ.. டி.வில கூட இதைப் பத்தி நியூஸ் இன்னிக்கு மார்னிங் பார்த்தேனே.. நீங்களும் பார்த்திருப்பீங்கதான். சென்ட்ரல்ல போகறச்சே சொல்லிக்கொள்ளாம போகறது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா அதிர்ச்சியான செய்தி இல்லையா?’ ‘பரவாயில்லே! உங்களை இந்த சமயத்துல இப்படி ஒரு நிலைமைல பார்க்கிறோமேன்னு வருத்தம்…. எவ்வளோ அன்பா உங்க பெரியப்பா பத்தி என்கிட்டே ட்ரெயின்ல நேத்து பூரா பேசிட்டு வந்தீங்க? ச்சே.. உலகம் தலைகீழா மாறிப் போன மாதிரி இருக்கு.’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தார்.

     

    ‘கோம்டி! நீங்களா.. நீங்க எப்படி இங்கே வந்தீங்க?’ ‘சார்,  நான் எதிர்வீட்டுக்காரி சார்.. கந்தசாமிதான் இவரோட பெரியப்பான்னு எனக்கு தெரியாதுதான். வைசாக்லேர்ந்து நானும் இவரும் பேசிண்டே ஒரே கம்பார்ட்மெண்ட்ல வந்தோம். இன்னிக்குக் காலைலதான் வண்டில இறங்கறச்சே இவரோட பெரியப்பா பத்தி நியூஸ் வந்தது. அதான் பார்த்துட்டுப் போகலாமேன்னு வந்தேன்.” வந்தவள் கல்யாணிடம் திரும்பினாள். “இன்ஸ்பெக்டர் மோகன் எனக்குத் தெரிஞ்சவர்தான். நிறைய விஷயங்களுக்காக அவர்கிட்டே உதவி கேட்பேன். ஆனா உங்க பெரியப்பாவைப் பத்தி எத்தனை அருமையாப் பேசினீங்க.. அவருக்கு இப்படி ஆயிடுச்சே..” ‘கோம்டி.. நீங்க எதிர்வீடுதானே.. கந்தசாமியைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்.’ “சார்.. என்னோட ப்ரொஃபெஷன் டென்டிஸ்ட்.. வீட்லேயே கிலினிக் வெச்சுருக்கேன்,  ஆனா ஃப்ரீ டைம் நிறையா இருக்கறதுனாலே பார்ட் டைம் ஜாப்ல இன்வெஸ்டிகேடிவ் வேலையை எடுத்துண்டு இருக்கேன் சார்.” “அதுதான் ஏற்கனவே எனக்குத் தெரியுமே.. நான் கேட்டது இவங்க பெரியப்பாவைப் பத்தி என்ன தெரியும்னு?”  “மிஸ்டர் கந்தசாமியைப் பத்தி எனக்கு, எங்க எதிர்வீட்டுக்காரர் என்கிற அளவுலதான் தெரியும். அவரு யார்கிட்டேயும் அவ்வளவு அதிகமா பழகறவர் இல்லேன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க…’. எனக்கு அவரைப் பத்தி பர்சனல் விஷயம் எதுவுமே தெரியாது சார்.”

     

    திடீரென கோமதியைப் பார்க்கிறான் கல்யாண்.

     

    ‘கோம்டி, நீங்க ஏதோ இன்வெஸ்டிகேஷன் தொழில் பாக்கறேன்னு சொன்னீங்களே.. இது.. இந்த வழக்கை ஒரு சவாலா எடுத்து செய்யுங்க.. எவ்வளோ பணம் செலவானாலும் நான் தரேன். இதோ நம்ம ரவியும் கூடவே இருப்பான். அத்தோட நம்ம இன்ஸ்பெக்டர் மோகன் நான் பழகினவரைக்கும் தங்கமானவர். அவரு உங்களுக்கு ஃபுல் கோஆபரேஷன் தருவார்..’

     

    இன்ஸ்பெக்டர் மோகன் மட்டும் கோமதியை ஒரு மாதிரி பார்த்தார்.

     

    ‘ஆகட்டும்.. செய்யலாம்.. ஆனா இவங்க சாதாரணமா இந்த விவாகரத்து கேஸுங்களுக்கு உதவி கேட்டுதான் வர வழக்கம்.. ஆனா இது கொலை கேஸ்.  போலீஸ்தான் உண்மையான விசாரணை செய்து சட்டப்படி பண்ணணும். இல்லையா கோம்டி?’ “ஆனா எங்களை மாதிரி உள்ளவங்கதான் சார் சரியான வழியிலே போய் விசாரிக்கமுடியும். உங்க சட்டப்படி போகறச்சே கொஞ்சம் இடைஞ்சல் வரலாம் இல்லையா.. நான் இதை எடுத்துச் செய்யறேன் சார்..” “இங்க பாருங்க கோம்டி.. இந்தக் கொலை வழக்குல ஏதாவது தகவல் தெரிஞ்சா நீங்க என்கிட்டே உடனடியா சொல்லணும். சட்டம் உங்களைப் பாதுகாக்கும் எப்போன்னா நீங்க சட்டத்துக்கு மதிப்புத் தரவரைக்கும்.. புரிஞ்சுதா..” என்றவர் கல்யாண் பக்கம் திரும்பினார். ‘சரி.. மிஸ்டர் கல்யாண்.. நான் இன்னும் இரண்டு நாள் கழிச்சு பாக்கறேன். ஏன்,  நீங்களே கூட என்னை ஸ்டேஷன்ல வந்து பாக்கலாம். என் மொபைல் நம்பர் உங்ககிட்டே இருக்கு இல்லே. சி ஐ டி அம்மா.. உங்களுக்கும்தான்.. இது கொலை கேஸுன்னு கொஞ்சம் ஞாபகம் வெச்சுக்கணும். மர்ம ஆசாமியால இவரோட பெரியப்பா கொல்லப்பட்டிருக்கலாம்னு சந்தேகம் இருக்கு. அது மட்டும் நிஜமா இருந்தா அந்த ஆள் எப்படியோ.. நீங்க இதுல தலையிடறதுல கோபம் வந்து உங்களையும் போட்டு தள்ளினா?. எங்களுக்குத் தான் ஒரு வழக்கு எக்ஸ்ட்ரா ஆகும்.. ஜாக்கிரதை..!’

     

    அவளை எச்சரித்து விட்டு வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    தொடரும்

     

     

    Share
  • பல்லழகன் – பகுதி 3

    திவாகர்

    அவள் புன்னகைக்கிறாள்.

    ‘உங்க பொட்டி பத்திரமா இருக்கு சார்! நான் மட்டும் இல்லே.. இதோ (எதிர் சீட்டில் அம்ர்ந்திருப்பவரைக் காண்பித்து) இவரும், யாரோ இருந்தாலும் கூட என்னை விட ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துண்டே இருந்தார்.’

    ‘ஆமாங்க.. யாரா இருந்தாலும் யாரோ ஒத்தர்னு சும்மா யார்தான் விடுவாங்க? அதனாலதான் நீங்க யாரோன்னாலும் கூட அப்பப்ப உங்க பொட்டி மேல கண்ணப் போட்டுண்டுதான் இருந்தேங்க. அவள் காதருகே வந்து கிசுகிசுத்தான் ‘ரொம்ப தேங்க்ஸ்ங்க..பணம் நிறைய வெச்சுருக்கேங்க. எல்லாம் இந்த பல்லால சம்பாதிச்சது.. போய் எங்க பெரியப்பாகிட்டே காமிக்கணும். அவரு முன்னாடி கவுரமா தலை நிமிர்ந்து நிற்கணும். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாருங்க’. ‘ஓ. பெரியப்பான்னா அவ்வளோ பாசமா?’ ‘இருக்காதா பின்னே.. அன்பா அக்கறையா வளர்த்தவர்.. அத்தோட அவரோட சொத்துக்கெல்லாம் நான் வாரிசு. ஆனா இப்போ வரைக்கும் ஒரு பைசா கூட வேணாம்னு சொல்லிண்டுருக்கேன். பணம் என்னங்க பெரிசு?  மரியாதையா மானத்தோடு வாழணும்.. இல்லீங்க?..’ அவள் புன்னகைக்கிறாள்.‘உங்க பல்லுதான் உங்களுக்கு இடைஞ்சலே தவிர உங்க கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. ஆமாம்.. என்ன சாப்பிட்டீங்க?’ ‘இல்லீங்க.. திருவேங்கடகிருஷ்ணமூர்த்திதான் ‘பிரியாணிக்கு ஆர்டர் பண்ணேன்.. சித்த இருடா’ ன்னான்.. ஆனா அதுக்குள்ள இந்தப்பொட்டி விசயம் தெரிஞ்சு ஓடி வந்துட்டேன். பயங்கர பசி.. வண்டியும் கிளம்பிடுச்சு.. அவனைப் பாக்கறதுக்குன்னா திருப்பியும் அத்தனை பெட்டியையும் க்ராஸ் பண்ணிண்டு போகணும்..”’ ‘சரி.. நான் தயிர்சாதம் கொண்டு வந்துருக்கேன்.. மேல பெர்த்ல வெச்சுருக்கேன்.. அதை முதல்ல எடுங்க.. சாப்பிடலாம்..’

    கல்யாண் எழுந்து அவள் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்தான். பிலாஸ்டிக் பை முடிச்சு பலமாக இருந்தது. சட்டென அப்படியே வாயில் வைத்து தன் தன் தெத்துப்பல்லால் கிழித்து அவசர அவசரமாக அந்த முடிச்சை கழற்றிவிட்டு அதே அவசரத்தில் சாப்பிட ஆரம்பித்தான். அவள் காணச்சகியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ‘அவ்வளோ பசியா? காணாததை கண்டமாதிரி சாப்பிடறீங்க.. எனக்கும் சேர்த்துதான் இந்த தயிர்சாதங்க..’ ‘ஓ ஸாரி.. எச்சில் பண்ணிட்டேன்.. வேற ஏதாவது கொண்டு வந்தீங்களா?’

    அவள் எரிச்சலுடன் பதில் சொன்னாள்.

    “நான் ஒருத்தி சாப்பிட நாலஞ்சு பாக்கெட் சாப்பாடு கொண்டு வருவாங்களா? பரவாயில்லே.. சாப்பிட்டு முடிங்க.. நான் வாழைப் பழம் வெச்சுருக்கேன். சாப்பிட்டுக்கறேன்.” ‘அடடா.. விஜயவாடா தாண்டினப்புறம் வர்ற ஸ்டேஷன்ல இனிமே சாப்பாடு கிடைக்காதுங்க.. இதோ பாருங்க.. உடம்பு ஃபிட்னெஸ்க்கு வாழைப்பழம் நல்ல வேலை செய்யணும். நல்லதுதான்!’ ‘போனா போகறதுன்னு பசியோட இருக்கீங்களே.. ன்னு உங்களுக்கு சாப்பாடு கொடுத்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்.” ‘என்ன அப்படி சொல்லிட்டீங்க? தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம்’னு எங்க பெரியப்பா அடிக்கடி சொல்லுவார். நாளைக்குக் காலைல போனவுடனே நீங்க கொடுத்த இந்த அருமையான தயிர்சாத தானம் பத்தி எங்க பெரியப்பாகிட்டே கண்டிப்பா சொல்லுவேன்’

    சாப்பிட்டு முடித்துவிட்டு, அவள் வெறுப்போடு பார்க்க ஒரு ஏப்பமும் விட்டு, இருவரும் எழுந்து உறங்க மேல் பெர்த்துக்கு சென்றனர். படுத்துக்கொண்டே கல்யாண் பேச ஆரம்பித்தான்.

    ‘என்னங்க.. நீங்க பல் டாக்டர்தானே.. எதாவது கிலினிக் பிலினிக் வெச்சிருக்கீங்களா?’ ‘பிலினிக் இல்லே கிலினிக் வெச்சுருக்கேன்’ ‘ஆமாம் நீங்க சென்னைல எங்க தங்கறீங்க?’ ‘சென்னைல.. அது சரி! நீங்க எங்க தங்கறீங்க..?’ ‘எங்க பெரியப்பா வீட்டுலதான். ஆக்சுவலா அந்த வீட்டை என் பேருலதான் வாங்கினார்.’

    அவளுக்கு எரிச்சல் வந்தது.

    ‘அதைத்தான் நூறு தடவ சொல்லிட்டீங்களே.. சென்னைல எந்த இடத்துல உங்க பெரியப்பா வீடு இருக்கு?’

    அப்போது லோயர் பெர்த்திலிருந்து.. ‘ஏன்பா.. எங்களைத் தூங்க வுடுங்க..’ என்ற எரிச்சல் குரல் கேட்டது..

     

    தாழ்ந்த குரலில் கல்யாண் அவளிடம் ‘இந்தப் பெரிசுங்களுக்கே கொஞ்சம் பொறாமை அதிகங்க.. கொஞ்சம் சுமாரான அழகிய பொண்ணு நல்ல அழகான வாலிபன்கிட்டே பேசினா போதும்,

    நொய் நொய்யுன்னு வந்துடுவாங்க..’ என்றான்.

     

    ‘நீங்க எப்பவுமே உங்களை கண்ணாடியிலே பாத்துக்க மாட்டீங்களா?’ என்று தாழ்ந்த குரலில் கேட்டாள்.

    ‘ஏனுங்க?’ ‘உங்களை ரொம்ப அழகானவர் ன்னு சொல்லிக்கிறீங்களே.. அதுதான் கேட்டேன்.. அது சரி, அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்திகிட்டே அவ்வளோ நேரம் என்னதான் பேசினீங்க?’.. ‘அதுவாங்க.. அது வேற ஒண்ணும் இல்லீங்க.. அவன் சின்னப்போ பண்ண சேஷ்டையெல்லாம் ஞாபகம் வெச்சு சொன்னான். நானும் ரசிச்சு கேட்டேன்.. அப்புறம்…’

    அவள் கையைக் குவித்து வாயில் வைத்து ஒரு கொட்டாவி  விட்டு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தவள் அப்படி திரும்பும்போது.. ‘நீங்க பாட்டுக்கு அப்படியே நிதானமா சொல்லுங்க. நான் ஃபுல்லா கேட்டுட்டு படுத்துடுவேன்’.

    ‘ஓ.. சின்னப்போ விஷயம்லாம் உங்களுக்கும் பிடிக்குமா? இப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டே போக, சடாரென அவளைப் பார்த்தான்.

    அவளிடமிருந்து மெதுவாகவும் சீராகவும் சுவாசம் வந்தது என்று புரிந்தது.. அவள் ஏற்கனவே தூங்கிவிட்டாள். அவன் பேச்சு வீண் என்று புரிந்து கொண்ட கல்யாண் நிறுத்தினான்.

    ‘அடிப்பாவி.. கதை சொல்லி கேட்டு தூங்கற பழக்கம் போல.. அதை எங்கிட்டயே காமிச்சுட்டியா..’

    அவனும் வேறு பக்கம் திரும்பினான். அதி வேகத்தில் அந்த ராத்திரியில் அசைந்துகொண்டே அந்த ரயில் சென்று கொண்டிருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருவரும் இறங்கத் தயாரானார்கள்.

     

    அவள் அவனிடம் கேட்டாள்,

    “தூங்கினீங்களா.. நான் நல்லா தூங்கினேன். உங்க திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி கதை ஃபுல்லா கேட்டேன்.. ரொம்ப சிரிப்பா இருந்தது.. செம்ம காமெடி மனுஷன் இல்ல அந்த திருவேங்கடகிருஷ்ணமூர்த்தி?

    அவன் முறைத்தான்.

    ‘காலங்காத்தாலே ஒரு புத்தம்புது நாளை எதுக்குங்க இப்படி பொய்யோட ஆரம்பிக்கிறீங்க?  நான் பேச ஆரம்பிச்சதுமே நீங்க தூங்கிட்டதை நான் பார்த்தேன்!’

     

    அவள் பேய்முழி முழிக்க ரயில் நிலையம் வர ஆரம்பிக்கும் நிலையில் தன் பெட்டியை எடுத்துக் கொள்கிறான். இறங்கத் தயாராகிறான்..

    ‘ஹெல்லோ நில்லுங்க.. இவ்வளோ தூரம் சிநேகிதமா பழகினோமே.. ஒரு பெண்ணோட சூட்கேஸ் எடுத்துட்டு வெளிய வெக்கலாமுன்னு உங்களுக்குத் தோணலியா?’

    ‘ஆஹா.. எவ்வளோ பெரிய சிநேகிதம்!.. அப்படியே உங்க பெட்டியை தூக்கறேங்க.. ஆமாம் ரயிலில் வரும் சிநேகம் எல்லாம் ரயிலை விட்டு இறங்கினாலே போயிடும்னு சொல்லுவாங்களே… நீங்க யாரோ.. நான் யாரோ.. இதோ இவர் யாரோ’ என தன்னுடை சக பயணியைச் சுட்டிக் காண்பித்தான்.’

     

    ‘அட என்னங்க இப்பிடி சொல்லிட்டீங்க.. நம்மளது சாதாரண ரயில் சினேகமாங்க? எங்க ரவியோட பெஸ்ட் ஃப்ரெண்ட். பெர்சனலா பார்த்தா நம்ம ரெண்டு பேரோட சினேகம் மூணு வருஷத்து சிநேகம். எங்க காலேஜ் கிளாஸ்ல டிஷ்யூ பேப்பர்ல ஆரம்பிச்சுது இல்லயா..?’ ‘ஓ.. அப்படி வரீங்களா? இருங்க! இந்தப் பொட்டியை கீழ வெச்சுட்டு உங்க பொட்டியை வாங்கறேன்.. வேண்டாம்.. இந்த பொட்டியிலே பணம் இருக்கு.. நீங்க உங்க பெட்டியையும் கொடுங்க.. ரெண்டுத்தையும் சேர்த்து எடுத்து வரேன். ‘ ‘நான் கோம்டி..’ ‘என்ன டீஈஈ?’ ‘டீஈஈ இல்லங்க.. டி.. கோம்டி.. ஜிஓஎம்டிஐ..  சரியா சொல்லணும்னா கோமதி’ன்னு எங்க அப்பா பேரு வெச்சாரு.. நான் கொஞ்சம் சிம்பிளா மாடர்னா கோம்டி’ன்னு வெச்சுகிட்டேன், நல்லா இருக்கா..’

    அவன் அவளை பார்த்து சிரிக்கிறான்.. ‘ஆஹா,, பேஷா ரொம்ப நல்லா இருக்கு..’ என்றவன் அவள் பெட்டியைத் தூக்குகிறான்.

     

    ‘சரி வாங்க கோமதி.. சாரி.. கோம்டி. ‘

     

    இருவரும் சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலில் இருந்து வெளியே வந்தனர். திடீரென சிலர் அவனைத் தேடிப் பதற்றத்துடன் வந்தனர். கல்யாணின் கையைப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.

    ‘அடேய், நம்ம பெரியப்பா போயிட்டாருடா… உனக்குச் சொல்லலாம்னு மொபைல்ல ட்ரை பண்ணினோம்.. ஹவுரா மெயில்லதான் வரான்னு உன் வைசாக் ஃப்ரெண்ட் ரவி’ன்னு ஒத்தன் சொன்னான்.. உன் மொபைல் நம்பர் ராத்திரி பூரா ட்ரை பண்ணினா கூட கம்ப்ளீட்டா எடுக்கலை டா..’

    இன்னொருவன் அவனிடம் அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்.. ‘அடேய்.. நேத்து காலைலதான் பெரியப்பா சொல்லிண்டு இருந்தாருடா.. இந்த வாட்டி கல்யாண் வரச்சே இந்த சொத்து விஷயம்லாம் பேசி உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணப்போறேன்னு.. ஆனா இப்படி சடார்னு அவரோட வாழ்க்கை முடிஞ்சுடுச்சேடா…”

     

    அதிர்ச்சியுடன் பிளாட்பாரத்திலேயே முட்டிப் போட்டு அமர்ந்தான் கல்யாண். பின் அதே முட்டியில் தன் தலையைக் குனிந்து வைத்துக் கொண்டான். . அந்த பெண் தன் பெட்டியை எடுத்துக்கொண்டு தன் இன்னொரு கையால் அவனது முதுகில் தட்டினாள், அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள், ஆனால் இறுதியில் இருவரும் தங்கள் வழியில் சென்றனர்தாம்.

     

    கோமதியின் வீடு, அதே நாள்

     

    கோமதி குளித்து முடித்து ஒரு டவலால் தலைமுடியை உலர்த்திக்கொண்டு கிச்சனில் அம்மாவிடம் வந்தாள்

    ‘யாராவது என்னை தேடி வந்தாங்களாம்மா?’ ‘ஆமாண்டி, உன் க்லையண்ட் அந்த உஷாவாமே.. அவ வழக்குக்காகத்தானே நீ வைசாக் போனே? அவ நேத்து உன்னைத் தேடி இங்க வீட்டுக்கே வந்துட்டா.. நீ போன காரியம் என்னாச்சு?’ ‘சக்ஸஸ்மா.. உஷாவுக்கு ஈஸியா விவாகரத்து கிடைச்சுடும். அவ புருஷன் அங்க வைசாக்ல ஒரு சின்ன வீடு,  ஓ இல்லே இல்லே பெரிய வீட்டையே வெச்சுருக்கான். நம்ம சாந்தியோட அண்ணன் ரவி கூட அவங்க வீட்டுலதான் கீழே குடி இருக்கான்.   உஷாவோட இந்த ஊர் புருஷன் வைசாக்ல ஒரு பெரிய பணக்கார பொண்ணைக் கல்யாணம் கூட பண்ணிண்டு வீட்டு மாப்பிள்ளையா சந்தோஷமா வாழறான். போட்டோஸ் வீடியோலாம் எடுத்துண்டு வந்திருக்கேன்..   நிச்சயமா உஷாவுக்கு இது ஹேப்பி நியூஸ்தானே.. உடனடியா விவாகரத்து கிடைச்சுடும். போகட்டும் நம்ம மூலமா நாலு பேருக்கு நல்லது நடந்தா போதும்.’ அம்மா அலுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘கோமதி, உன்னை வைசாக் அனுப்பிச்சு பல் டாக்டருக்குப் படிக்கவெச்சு, வீட்டுக்கு முன்வாசல்லயே ஒரு கிளினிக் வெச்சு கொடுத்தா,  உனக்கு எதுக்குடி இந்த அனாவசிய வேலை எல்லாம்! அதுவும் உனக்கு வரும் வேலையெல்லாம் விவாகரத்து பண்ற கேஸாவே வருதா.. அப்புறம் பிராண்ட் விழப் போகுது.. இவகிட்டே விவாகரத்து கேஸ்க்கு போனா அந்தக் கேஸ் சக்சஸ் ஆகிடும்னு’ ‘அம்மா,  நான் என்ன விவாகரத்து வக்கீலா.. இதுதான்மா ஒரு இன்வெஸ்டிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்டோட வேலை. இதோ பார்.. கிலினிக்ல சாயங்காலம் மூணு மணி நேரம்தான் வேலை பாக்கறேன்.. மீதி நேரத்தை இப்படி உருப்படியா செலவழிக்கறேன். பணத்துக்கு பணமும் வருது.. மனசுக்குத் திருப்தியும் கிடைக்குது..’

    இப்படிச் சொல்லிக்கொண்டே பால்கனியில் வருகிறாள். எதிர்வீட்டில் இருந்த கூட்டம் பார்த்து அம்மாவை ஆச்சரியமாக கேட்கிறாள்.

    ‘என்னம்மா.. எதிர்வீட்ல ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு? அந்த கந்தசாமி போயிட்டானா?‘ ‘சாதாரணமா அவன் போகலடி.. யாரோ ஒருத்தன் கொலை பண்ணிட்டானாம்’.. ‘கொலையா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. ‘கடவுளே.. எப்படிம்மா?’ ‘ஆமாண்டி.. கொலைதான்.. இப்போ காலம் ரொம்பவே மாறிப்போச்சு. மனுஷனுக்கு சாவு கூட நிம்மதியா வராது இல்லே..’ ‘காலையிலேர்ந்து இது ரெண்டாவது சாவு கேஸ் கேட்கறேன்.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல வந்து கால் வெக்கறேன்.. என் கூட வந்தவனோட பெரியப்பா  நேத்து சாயங்காலம் போயிட்டாருன்னு இந்த ஆள் வண்டியை வுட்டு இறங்கறச்சேயே வந்து சொன்னாங்க.. பாவம் ரொம்ப. நல்ல மனுஷன்..’ ‘அப்படியாடி.. யாருடி அவன்?’ ‘அம்மா.. அந்த ஆள் நம்ம ரவியோட பார்ட்னர்தான்மா.. அத்தோட எங்க காலேஜ்’ல ஒரு ஆளு பல் மாடலிங் பண்ண வருவாரும்மா.. என் கூடத்தான் வண்டி ஏறினாரு..’ ‘பல் மாடலிங்ன்னா என்னம்மா? ‘அப்நார்மல் பல் உள்ளவங்களை பிடிச்சி எங்க கிளாஸ்ல பிராக்டிகல்ஸ் பண்ணுவோம். இந்த ஆளுக்கு தெத்துப்பல்லு ரெண்டு.. அதை வெச்சு எங்ககிட்ட காமிச்சு மாடலிங் நிப்பான். ஒரு மாடலிங்க்கு பத்தாயிரம் சார்ஜ் பண்றாம்மா.. பல்லைக் காட்டி பொழைக்கிறான்னு பொதுவாச் சொல்லுவாங்க.. ஆனா. இவன் கில்லாடி.. தனக்கு வந்த தெத்துப்பல்லை வெச்சே ஆயிரம் ஆயிரம் சம்பாதிக்கிறான்மா’ ‘இருடி.. அப்போ அவன் பேரு கல்யாண் தானே?’ ‘ஆமாம்மா..’ கோம்டி ஆச்சரியப்பட்டாள்.

     

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 2

    திவாகர்

    “சார்.. சார்.. அப்படியெல்லாம் சொல்லலாம்மா.. நீங்க உங்க லெவலே வேற.. கொஞ்சம் டிக் பண்ணிக் குடுங்க சார்.. நான் என் ஃப்ரெண்டைப் பார்க்க போய்டுவேன்.”

     

    TTE பரிதாபமான உணர்வுடன் அவனைப் பார்த்தார். அவனிடம் இருந்து டிக்கெட்டை பறித்து.. சரி பார்த்தார்.

     

    “சரி! அடையாள அட்டை ஆதார்.. ஆதார் அட்டை காமி?”

     

    “அந்தப் பொண்ணுகிட்டே கேக்கலியே” என்று சொல்லிக்கொண்டே தன் பர்ஸைக் கழற்றி கார்டைக் காட்டினான்.  அதைக்கூட அவர் பார்க்காமல் அலட்சியம் காட்டினார்.

     

    “இருக்கு இல்லே?.. நான் என் கடமை ஐ செய்யணும்.. சரி சரி, நீ போய் உன் சீட்டுல உட்கார்ந்துக்கோ..”

     

    “தேங்க்ஸ் சார்!”

     

    கல்யாண் கம்பார்ட்மெண்ட் உள்ளே சென்று அந்தப் பெண் எதிரில் அமர்ந்தான். அவள் அவனை ஒரு மாதிரியாக லேசாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் சிரித்தான். சட்டென்று அந்தப் பெண் அவனது தெத்துப் பற்களைக் கண்டு பயந்து, கைகளைக் கூப்பிக் கேட்டாள்.

    “சார்.. நீங்களும் சென்னைதான் வரீங்க இல்லயா?”

    “ஆமா”

    “சார்.. நாம ரொம்ப தூரம்  சேர்ந்து டிராவல் பண்ணியாகணும். கொஞ்சம் சிரிக்காம..“

    “கொஞ்சம் கஷ்டம்தாங்க.. ஆனா கவலையே படாதீங்க.. வண்டி கிளம்பினதும் நான் என் நண்பன்….”

     

    அவள் உடனே பதிலளித்தாள்.

    திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி. S1 கோச்..

    “ஹய்யோ! நீங்க கவனீச்சங்களா..”

     

    “நான் எதுக்கு கவனிக்கணும்? அதான் ஊரே கேக்கறமாதிரி ரெண்டு பேரும் கத்தி பேசினீங்களே..”

    “ஆமாமாம்.. அவன் குரல் கொஞ்சம் பெரிசு..”

     

    “அது சரி, ரவியை எவ்வளவு நாளா தெரியும்.. என் ஃப்ரெண்டோட அண்ணன் அவன்.. சென்னைக்கு வாடான்னு சொன்னா வரவே மாட்டேங்குறான்..”

     

    “ஓ.. ரவி என் ஃப்ரெண்ட். என் தொழில்ல கூட பார்ட்னர்.  அவனும் நானும் ஒரே வீட்லதான் இருக்கோம்..”

     

    “காலைல அவன் வீட்டுக்கு வரச்சே நீங்க இல்லே.. ஒருவேளை நீங்க இருந்தீங்கன்னா எங்களோட வேலை முடிஞ்சிருக்குமான்னு சொல்லமுடியாது. நல்லகாலம் நீங்க இல்லே..” அவள் புன்னகைத்தாள்.

     

    “இந்த திருவேங்கடகிருஷ்ண மூர்த்தி கூட..” அவன் சொல்லும்போதே இடைமறித்தாள்.

     

    “அவர் இருக்கட்டும்ங்க.. ஆனா உங்களை ஏன் தெத்துப்பல்லன்’னு கிண்டல் பண்ணி கூப்பிடறாரு? ஒருத்தர் குறையை சொல்லி அப்படி கூப்பிடறது தப்பு..”

     

    “அய்யய்ய.. சின்ன வயசுலேர்ந்து இது இருக்கு.. அப்பவே எல்லா ஃப்ரெண்ட்ஸும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. ஒருவாட்டி நான்  திருவேங்கட கிருஷ்ணமூர்த்தியை ‘நொண்டி’ன்னு கூப்பிட்டுட்டேன். அதை எங்க பெரியப்பா ஒருதடவை பார்த்துட்டாரு., அவருதான் எங்க பள்ளிக்கு தினசரி வந்து அழைச்சுண்டு போவாரு, அவரு அப்போ எனக்கு புத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. நீங்க இப்போ சொன்ன மாதிரியே ‘உடம்புல குறை உள்ளவங்களை அப்படியெல்லாம் கிண்டலா சொல்லிக் கூப்பிடக்கூடாதுடா”ன்னு சொன்னாரு. ஆனா இந்தத் தெத்துப் பல்லுங்க எனக்குக் குறை இல்லையே..”

     

    “பெரியப்பா நல்ல பெரியப்பா..”

     

    ‘ஆமாங்க எனக்கு அவர்தான் எல்லாமே. எங்க அப்பாவும் அம்மாவும் என் சின்ன வயசுலேயே மேல போனதுக்கப்புறம் எனக்கு எல்லாமே எங்க பெரியப்பாதான்.’ “ஓ! ஸாரி, ஆனா சுவாரஸ்யமா பேசறீங்க.. அது சரி, நான் உங்களை எங்கேயோ பார்த்துருக்கேனே.. எங்க எப்படி பார்த்தேன்னு ஞாபகம் இல்லே.. நீங்க வைசாக்ல இருக்கீங்களா?” “இப்போ இல்லே.. சென்னைதான். ஆனா வைசாக்’லதான் பிஜி படிச்சேன்..?” “எங்கே? கீதம் காலேஜ்லயா?  நான் கீதம்தான் படிச்சேன்” “கீதம் காலேஜ்?… ம்.. எனக்கும் பிடிக்கும்.. ஆனா அங்கே இல்லே”. “நான் அப்போ உங்களை எங்கே பார்த்திருக்கேன்?” “கீதம் காலேஜ்லேயே பார்த்திருக்கலாம். எனக்கு அங்கே ஒரு விருது கிடைச்சுது. அதுக்கு வந்திருக்கேன்.. அங்க நிறைய கேர்ள்ஸ் என் கையைப் பிடிச்சுக் குலுக்கிப் பாராட்டினாங்க.. நீங்க கூட அப்படி கையைக் குலுக்கியிருக்கலாம்… அப்போ பார்த்திருக்கலாம்” “ஊம்ஹும்.. ஆஹா.. ஞாபகம் வந்துடுச்சு. நீங்க நான் என் ஃபைனல்ஸ் முடிக்கறபோது என் கிளாஸ்க்கு வந்து இருக்கீங்க. உங்களை நிக்க வெச்சு எங்க ப்ரொஃபசர் பிராக்டிகல்ஸ் சொல்லிக் கொடுத்தாரு”

    //அவள் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. கீதம் காலேஜ் மெடிகோஸ் வகுப்பறையில், கல்யாண் மாணவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். பேராசிரியர் கையில் தடியுடன் கல்யாணிடம் கேட்டார்.

    “தம்பி வாயை நல்லா திறந்து வெச்சுக்கோ..”பின்னர் மாணவர்களிடம் பேசினார். “இங்கே நல்லா பாருங்க.. இவரோட ரெண்டு பல்லுங்க அசாதாரணமா முன்னாடி வந்துருக்கு. இதுக்கு இங்க்லீஷ்ல மிஸ்-அலைன்னுட் டூத்.. அல்லது க்ரூகெட் டூத்ன்னுமாங்க ஆனா அது ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் ஆகியிருக்கு பார்த்தீங்களா. குழந்தையா இருக்கறச்சயே இந்த மாதிரி பல்லுங்களை  வெளியே எடுத்தா அவருக்கு ஒரிஜினல் பல்லுங்க மறுபடியும் ஈஸியா வளர்ந்துடும். ஆனா குழந்தையா இருக்கறச்சே இந்தப் பல் வளர்ச்சி ரொம்ப ஸ்லொ இல்லையா.. அத்தோட தினம் குழந்தைகளை நாம பார்த்துண்டே வளர்க்கறதுனாலே அந்தத் தெத்துப்பல்லு குறையெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனா வயசு வந்தவுடனே இந்த தெத்துப் பல்லுங்களை எடுக்கணும்னா அது ரொம்ப ரொம்ப கஷ்டமான ஆபரேஷனா மாறி சில சமயம் கண்ணுக்கே அது அபாயமாயிடும்.. அத்தோட வலுவான அடிப்பாகம் இருக்கறதினாலே இந்த ரெண்டு பல்லை எடுக்கும்போது மீதி உள்ள பல்லெல்லாம் ஆட்டம் காண்பிக்கும். இந்த மாதிரி பல்லு அதுவும் தெத்துப் பல்லு  ஆபரேஷன் பண்றது அதாவது க்ரூக்கட் டூத் ஆபரேஷன் எப்படின்னு அடுத்த கிளாஸ்ல பாக்கலாம்  மாணவர்களே!.. வாங்க எல்லாரும் வரிசைல நில்லுங்க. ஒரு வலுவான தெத்துப் பல் எவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்கும்னு நேர்லயே பார்த்து நீங்கள்லாம் தெரிஞ்சுக்கணும்னுதான் இவரே வந்துருக்கார்.   இதோ டிஷ்யூ பேப்பர் நிறைய வெச்சுருக்கேன். இந்த பல்லுங்களை கொஞ்சம் ஆட்டிப் பாருங்க. எவ்வளோ ஸ்ட்ராங்குன்னு தெரியும்”

    அனைத்து மாணவர்களும் முன்னால் வந்தனர்.  ஒரு மாணவன் கேட்டான்.

    ‘சார், அந்த ஆளு இன்னிக்கு பல்ல தேச்சாரா’ன்னு கேளுங்க சார்!’

    எல்லோரும் சிரிக்க, பேராசிரியர் அவங்களை ‘சைலண்ட்’ன்னு சொல்லிவிட்டு பேசுகிறார்.

    “ஸ்டூடன்ட்ஸ்,  நம்ம ப்ரொஃபெஷனல்ல மாஸ்க் போடணும்கிறது ரொம்ப கட்டாயம். எல்லாரும் அவங்கங்க மாஸ்க் போட்டுண்டு இவரோட பல்ல ஆட்டிப் பாக்கலாம்.”

    எல்லோரும் வருகிறார்கள். இந்த பெண் கோம்டியும் கூடவே அவள் தோழியும் சேர்ந்தே வந்து ஒருத்தி டிஷ்யூ பேப்பரை எடுத்து அவன் பல்லைக் கையால் ஆட்டும்போது இன்னொருத்தியும் சேர்ந்து அதைத் தொடும்போதுதான் டிஷ்யூ பேப்பரின் ஒரு பகுதி அவன் வாய்க்குள் போய்விடுகிறது. அவன் சற்று இருமுகிறான்.

    “ஓ.. மன்னிக்கவும்!”  கோம்டி பரிதாபமாகப் பார்த்து சொல்லிவிட்டுப் போக, மற்ற மாணவர்கள் சிரிக்க கல்யாண் வருத்தப்பட்டுகொண்டே பேராசிரியரிடம் வருகிறான்.

    “பிச்சைக்காசு பாத்தாயிரம் ரூபாய்க்கு எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு.. டிஷ்யூ சாப்பிட வைக்கிறாங்க சார்!”

    பேராசிரியர் அவனை உரிமையுடன் பார்க்கிறார்.

    “இதோ பார் கல்யாண்.. அஞ்சு நிமிஷ வேலை. உனக்குப் பத்தாயிரம் வருது.. இன்னும் நிறைய வகுப்பு எடுக்கணும்.. உனக்கு நிறைய பத்தாயிரம் வரும் இல்லே.?. டேக் இட் ஈஸி மை டியர் பாய்!!”

    காட்சி இப்போது ரயில் பெட்டிக்கு மாறுகிறது.

    “ஆஹாங்.. ஞாபகம் வந்துடுத்து. மூணு வருஷம் முன்னாடி நான் ஃபைனல்ஸ் பண்றச்சே எங்க கிளாஸ்ல நீங்க உங்க அழகான பல்லைக் காட்டி மாடலிங் பண்ணீங்க இல்லே.. டிஷ்யூ பேப்பரை உங்க வாயில போட்டவ நான்தான் சார்..” “எனக்கு கூட இப்ப நினைவு வர்றதுங்க.. என் பொழப்பை பாத்தீங்களா.. எங்க பெரியப்பா பெரிய பணக்காரருங்க.. அப்படியும் நானே சுயமா சம்பாதிச்சு என் செலவுக்குப் பாத்துக்கணும்’னு ஒரு ஒரு..கொள்கைங்க.” “ஏன் சார்.. இப்போதான் மாடர்ன் எக்யூப்மென்ட்ஸ்லாம் வந்தாச்சே.. நீங்க சென்னைல என் கிளினிக் வாங்க.. நானே சுத்தமா இந்த ரெண்டு பல்லையும் எடுத்துடறேன்.. அதே சைஸ்ல புதுப்பல்லு ரெண்டும் பெர்மனென்ட்டா கட்டித் தர்றேன்..” “ஐய்யய்யோ.. அது மட்டும் முடியாதுங்க.. இன்னும் ரெண்டு வருஷம் இந்த பல்ல இப்படியே வெச்சேன்ன என்னை மகாலட்சுமி தேடி வருவாள்ன்னு வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்துல சொல்லியிருக்கு.. அப்படி வந்த மகாலஷ்மி ஒரு அதிர்ஷ்ட தேவதையை என்னோடயே இருக்கவெப்பான்னு சொல்லியிருக்கான் மேடம். அப்படி அதிர்ஷ்டம் கொடுக்கப்போற பல்லை எவனாவது எடுப்பானா? நீங்களே பாத்தீங்களே.. இந்த பல்லை நான் பல் காலேஜ்ல போயி மாடலிங் ஒரு தடவை காமிச்சா சுளையா பத்தாயிரம் வருது.”

    ரயில் பின்பெட்டியில் யாரோ ஒருவர் ‘அனகாபள்ளி ஒஸ்துந்தி’ எனப் பேசும் குரல் மட்டும் கேட்கிறது. உடனே அவள் சிரிக்கிறாள்.

    “இந்த அனகாபள்ளிங்கிற வார்த்தை மாத்திரம் ரவியும் நீங்களும் ஆயிரம் தடவை இன்னிக்கு சொல்லிட்டீங்க. ரவி கூட அனகாபள்ளி வந்திருப்பான்னு நினைக்கிறேன்.”

    “ஓ!அனகாபள்ளி வந்துடுத்தா?” கல்யாண் ஜன்னல் வழியாகப் பார்க்கிறான்.

    ரயில் அனகப்பள்ளி நிலையத்தை நெருங்குகிறது. சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் சொன்னான்.

    “ஏங்க,, கொஞ்சம் இந்த பெட்டியை பாத்துக்குங்க.. நான் இந்த எஸ்1 கோச்ல” “திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை பாக்க போறீங்க.. போங்க சார்.. உங்க பொட்டியை நான் பாத்துக்கறேன்..”“தேங்க்ஸ்ங்க!”

    அனகபள்ளி வந்ததும்  அவன் அவன் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், வண்டி அதிக நேரம் நிற்காமல் கிளம்பியது. அவள் கையில் ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டுப் படிக்க ஆரம்பித்தாள்.. கல்யாண் உடனே வரவில்லை.

    ரயில் போய்க்கொண்டிருக்கிறது. நேரம் போகிறது. பக்கத்தில் இருந்த ஆசாமி இந்தப் பெண்ணிடம் பேசுகிறான்.

    “ஏம்மா நம்ம ஆள் இன்னும் வரல்லே.. பொட்டியை மட்டும் பார்த்துக்கச் சொல்லிட்டு இத்தனை நேரமா?” “நம்ம ஆளா?.. அது சரி, உங்களுக்கு ஏன் சார் அந்தக் கவலை.. பெட்டியைப் பாத்துக்கச் சொல்லியிருக்காரு.. பொட்டி பத்ரமா இருக்கான்னு பாக்கறது மட்டும்தான் நம்மோட பொறுப்பு.. எப்போ வேணாம்னாலும் வரட்டுமே.”. “அதுவும் சரிதான்மா.. மெட்ராஸ் வந்தா நாம பாட்டுக்கு இறங்கிடுவோம்.. உங்க சினேகிதரோட அந்தப்  பொட்டிதான்..”  “யார் சார் சினேகிதர்? இந்த தெத்துப் பல்லு ஆளா? ரயில் சினேகிதம்லாம் ரயில்ல இறங்கற வரைக்கும்தான்..” “ஓ.. அதுவும் சரிதான்” “ஸார் நியாயமா மெட்ராஸ் வரைக்கும்தான் நம்மாலே பாத்துக்கமுடியும்.. அப்பறம் இந்த பொட்டியைப் பத்தி நமக்கென்ன அக்கறை? அது யார்கிட்டே போனா நமக்கென்ன?” ‘ஆமாம்மா! நீங்க யாரோ.. நான் யாரோ.. அவர் யாரோ.. இந்த டிரெயின்ல வர்ர பாஸெஞ்சர்லாம் யார் யாரோ…. ஏதோ ரயில்ல இப்படி கொஞ்சநேரம் உட்கார்ந்து ஒத்தரை ஒத்தர் பாத்துக்கறோம்.. ஸ்டேஷன் வந்ததா.. நாம யாரோ.. அப்படியே இறங்கிப் போய்க்கொண்டே இருப்போம்..’

    ரயில் வேகம் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கோம்டி தன் புத்தகத்தைப் பிரித்து அதில் மூழ்கி  விடுகிறாள். விஜயவாடா வந்ததும், அதுவும் ரயில் நகர ஆரம்பித்ததும்தான் கல்யாண் பதற்றத்துடன் அங்கே வருகிறான்.

    “எங்க,  என் பெட்டி இருக்கா?.. நான் அப்படியே அங்கயே பேசிண்டு இருந்துட்டேன். விஜயவாடா ஸ்டேஷன்ல எனக்காக திருவேங்கிடகிருஷ்ணமூர்த்தி பிரியாணிக்கு ஆர்டர் போட்டான். அப்போதான் பெரிய சப்தம்.. அங்கே யாரோ திருடன் ஒத்தன் யாரோட பெட்டியையோ தூக்கிட்டாங்களாம்.. அப்போதான் இன்னோர்த்தன் சொன்னான்.. இப்போதான் ஏசி கம்பார்ட்மென்ட்ல கூட ஒரு பெட்டியை யாரோ பறி கொடுத்தாங்க’ன்னு சொன்னான். அவ்வளவுதான்.. ஓடி இங்கே வந்துட்டேன்” அவன் மூச்சு வாங்குகிறது.

    தொடரும்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 1

     

    திவாகர்

     

    இடம் – வைசாக் கடற்கரை சாலை

     

    இரண்டு அந்தஸ்துள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடி, அந்த மாடியின் விளிம்புச் சுவரில் ரவி எனும் அந்த இளைஞன் மேலே ஏறுகிறான். அவனருகே அந்தப் பெண் கோம்டி கோபத்துடன் ஆனால் பல்லைக் கடித்தபடி நிதானமாக பேசுகிறாள்.

    “டேய் என்னடா பண்றே.. தற்கொலை பண்ணிக்கப் போறியா.. அடச்சீ.. கீழே இறங்கிக் குனிஞ்சு அந்த வேலையைப் பண்ணு..”

    “ஆஹா.. என்ன கரிசனம்.. நான் பண்ற வேலைக்கு தற்கொலை எவ்வளவோ பெட்டர்.!’

    “சரி.. அதை அப்புறமா யோசிக்கலாம்.. வேணும்னா நானே உனக்கு அதுக்கு உதவி பண்றேன். இப்போ முதல்ல அந்தப் பக்கம் குனிஞ்சு ஸெல்ஃபி ஹேண்டில் மொபைல் கேமரா ஆன் பண்ணி சரியா வர்ரா மாதிரி வெச்சுக்கோ, விழுந்துத் தொலைக்காதே”

    “என் காலை சுவத்தோட சாய்ச்சு சரியா கெட்டியா பிடிச்சுக்கோ.. நீ கைவிட்டாதான் நான் கீழே விழுவேன்.”

    வெளிப்பக்கம் குனிந்து கீழே பார்க்கிறான். அவன் காலைக் கீழே பிடித்தபடி அந்தப் பெண் அவனைப் பார்க்கிறாள்.

    “சரி.. அந்தக் காமராவை சரியா ஸெல்ஃபி ஹாண்டில்ல வெச்சுக்கோ.. நல்லகாலம் ஜன்னலைத் திறந்து வெச்சிருக்காங்க.. அவங்க வர்ர டைம்தானே..”

    “உஷ்.. குரல் கேட்குது.. வந்துட்டாங்க போலருக்கு. சத்தம் கேட்குது..”

    அதே சமயம் அவர்கள் இருந்த மொட்டை மாடியின் கீழே இருந்த அந்த அறையில்..

    கணவன் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள மனைவி ஆடி அசைந்தபடி அறைக்குள் வந்து அவனுக்கு காபி கொடுக்கிறாள்.

    “ஏமண்டி! ரோஜு லேட்டேனா? கெட் ரெடி.. ஜி யார் டி ஜெவெல்லர்ஸ் கொத்த ஷோரூம் ஓபன் சேசியாரண்டா.. கம் ஆன்.”

    ‘போலாம் டார்லிங்க்.. கொஞ்சநேரம் இப்படி இங்கே கூர்ச்சு..’

    “நாகு டைம் லேது.. நவ் நோ ரொமான்ஸ்..”

    அவன் பக்கத்தே அமர்ந்தபடி அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளுகிறாள். அவன் அவளை அணைக்கிறான்.

    அதே சமயம் மொட்டை மாடியில் இருந்த பெண் வெளியே இருந்தவனைப் பார்த்து கேட்கிறாள்.

    “டேய்.. என்னடா நடக்குது.. அவ்வளோ உன்னிப்பா கேட்கிறே?”

    “ரொமான்ஸ் டைலக் ஓடுது.. ஓன்லி ஆடியோ லைவ்தான்.. என்னால கேட்கமுடியுது. மொபைல் வீடியோல எடுத்ததைப் பாக்கலாம்… புருஷன் பொண்டாட்டி சிருங்கார லீலை போல இருக்கு.. என்ன? ஃபுல்லா பிடிக்கணுமா.. இல்லே எடுத்துடட்டுமா..”

    முகம் சுளிக்கிறாள் அவள்.

    “முதல்ல காமிராவை வெளியே எடு.. அந்த அசிங்கமெல்லாம் நமக்கெதுக்கு?’

    அவன் வெளியே இருந்து நிமிர்ந்தவன் அந்த ஸெல்ஃபி ஸ்டாண்டில் இருந்த காமிராவை எடுத்துப் பார்க்கிறான்.

    “அடச்சீ.. இதெல்லாம் ஒரு ரொமான்ஸா? இந்தா உன் மொபைல்.. பாவம் இந்த ஆள்..”

    அவளிடம் காமிராவைக் கொடுக்கிறான்.. அவளும் பார்க்கிறாள். முகம் மலர்கிறது.

    “இது ரொம்பவே போதுமே.. இவங்க புருஷன் பொண்டாட்டிதான்னு ப்ரூவ் பண்ணனும்.. அதுக்கு இது போதும்.”

    “இரு.. இப்போ அந்த வீட்டுக்குள்ளே நாம போறோம்.. இல்லேனா நம்மளை தப்பா நினைச்சுப்பாங்க.. நீ எப்படியோ மேலே வந்துட்டே.. அவங்க பார்க்கலை.. நீ மறுபடியும் கீழே போகறச்சே பார்த்துட்டா எனக்குதான் கஷ்டம்.. சரி சரி வா..”

    அவனும் அவளும் கீழே இறங்கி முதல் மாடியில் உள்ள வீட்டின் கதவைத் தட்டுகிறான். அறையில் பார்த்த பெண் கதவைத் திறக்கிறாள். இவர்களைப் பார்த்ததும் சிரிக்கிறாள்.

    “ஓ.. கிந்த இண்டி ரவி.. லோனிகி ரா ரவி, ஈவிட எவரு?” என்று அந்தப் பெண்ணைக் காண்பித்துக் கேட்டாள்.

    “அக்கா.. இது என் கஸின், சென்னைல இருக்கா..”

    “ஓ.. தமிளா.. எனக்கும் தமிள் தெரியும்.. எங்க வூட்டுக்காரரு மெட்ராசுல படிச்சு வலர்ந்தவரு.. உல்லே வாங்க..”

    அந்த ரவியின் காதில் கூட வந்த பெண் கிசுகிசுக்கிறாள். “டேய்.. எனக்கும் தெலுங்கு தெரியும்னு சொல்லுடா.. இவளோட தமில் எனக்குப் பயமாயிருக்கு..”

    கொஞ்சநேரம் பேசிவிட்டு வெளியே வரும்போது அந்தப் பெண் அந்த வீட்டை முழுவதும் சுற்றி ஒரு பார்வை விட்டு விட்டு அந்த வீட்டுப் பெண்மணியிடம் சொல்கிறாள்.

    “அக்கா! உங்க வீடு சூபரா இருக்கு. நான் ஒருதடவை கீழே போய் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா.. இஃப் யூ பெர்மிட்..”

    “அட எதுக்கும்மா பர்மிட்.. ஃபேஸ்புக்ல போடு.. இன்ஸ்டாகிராம்லயும் போடு.. ஒன்னு எதுக்கு என்ன ஏளு எட்டு வேணும்னாலும் எடுத்துக்கோ.. பை பை..”

    ரவியும் அந்தப் பெண்ணும் கீழே வரும்போது வீட்டுப் பெண்மணி மேலேயிருந்து பார்க்கும்போதே மொபைல் மூலம் அந்தப் பெண் நிற்பதையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கிறாள். பிறகு அவனோடு காரில் ஏறிக் கிளம்புகிறாள்.  கார் சென்று கொண்டிருக்கிறது.

    “டேய்.. பேசாம வைசாக் விட்டுட்டு சென்னை வாடா.. சாந்தி எங்கிட்டே அடிக்கடி சொல்வா.. எப்படியாவது ரவியை கன்வின்ஸ் பண்ணி சென்னைக்கு அழைச்சுட்டு வரணும்டின்னு. உன் தங்கை அமெரிக்கா போகறதுக்குள்ளே உன்னை சென்னையில குடியேற வைக்கிறேண்டின்னு சொன்னேன். இதோ பார்.. எனக்கு கூட ஒரு நல்ல அஸிஸ்டென்ட் தேவையா இருக்கு.. அங்க வந்துடு.. எங்கிட்ட கொஞ்ச நாள் வேலை கத்துக்கோ.. அப்புறம் நீயே சொந்தமா இதைப் பண்ணலாம்..”

    “அம்மா.. தாயே.. நானும் சாந்தியும் படிச்சது வேற வேற..  நீ அவளோட க்ளாஸ்மேட்..  உனக்கும் சாந்திக்கும் எந்த வேலையும் சூட் ஆகலாம்.. ஆனா எனக்கு அப்படில்லாம் இல்லை தாயி.. என்னோட ஃப்ரெண்டும் நானும் சேர்ந்து ஸேண்ட் ப்ளாஸ்டிங்க் கப்பலுக்குப் பண்றோம்.. அதுல வர்ர வருமானமே போதும்.. ஆளை விடு.”

    “அது எப்படி அவ்வளோ சீக்கிரம் விடறது? சாந்தியும் நானும் ரெண்டு கண்கள்னு சொல்லுவே.. அதெல்லாம் முடியாது.. இப்போ ருஷிகொண்டா ஹாஸ்டல்ல இறக்கிவிடு.. கொஞ்சம் பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் வரேன்னு சொன்னாங்க.. அப்புறம் சரியா ஒரு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பி மத்தியானம் ஹவுரா மெயிலுக்கு என்னை வைசாக் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டா உனக்கு எங்கிட்டேயிருந்து விடுதலை..”

    “வேற வழியே இல்லையா.. இதோ பார்.. எனக்கு என் ஃப்ரெண்டோட வேலையா மத்தியானம் பூராவும் பிஸியாயிடுவேன்.. அனகாபள்ளி போகணும்.. என்னை இப்பவே விட்டுடேன்..”

    “அதெல்லாம் முடியாது.. என்னை ஸ்டேஷன்ல விட்டுட்டு எங்க வேணுனாலும் சுத்து..”

    “அவ்வளவுதானா?”

    “அவ்வளவேதான். ஒரு அன்புத் தங்கை, கஸின்.. ஆசையா கேட்டா செய்யணும் பிரதர்”

    “ம்..” என உறுமிக்கொண்டே காரை வேகமாக ஓட்டுகிறான்..

    அவள் சிரிக்கிறாள்.

    மத்தியான வேளையில் மழை பெய்வதால் ஆட்டோ ஏதும் கிடைக்காமல் கல்யாண் ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே காத்திருக்கிறான். கை காட்டினாலும் எந்த வண்டியும் நிற்கவில்லை. அப்போது ஒரு கார் வந்து அவனருகே நிற்கிறது.

    காலையில் பார்த்த ரவியும் அந்தப் பெண்ணும் இருக்கிறார்கள். ரவியைப் பார்த்ததும் காத்திருந்த கல்யாண் கோபத்துடன் கத்துகிறான்.

    “எங்கடா போய்த் தொலைஞ்சே? யாரோ கஸினோட பிஸி”ன்னியே, அந்தப் பொண்ணுதானா அது?

    ரவி உடனடியாக அவன் கைப்பெட்டியை பின் டிக்கியில் வைத்துவிட்டு அவனை பின்சீட்டில் உட்காரச் சொல்கிறான்.. முன்சீட்டில் உள்ள கோம்டி  ரவியை முறைக்கிறாள்.

    காலைல என் வீட்டுக்கு வரச்சே நீ பாக்கமுடியலே.. இவன் என் ஃப்ரெண்ட் கம் பார்ட்னர். நானும் இவனும் அந்த வீட்டுல ஒண்ணா இருக்கோம்.

    கல்யாண் கோபமாக பார்க்கிறான். “எதுக்குடா இதெல்லாம்.. இப்போ நீ சீக்கிரம் போகணும். அப்புறமா அனகாபள்ளி போகணும்..”

    ரவி கோடியை கல்யாணுக்கு அறிமுகப்படுத்திகிறான். “இவள்தான் அந்த கஸின்..  இவளும்  ஸ்டேஷனுக்குதான் போறோம்.. உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் அனகாபள்ளி போயிடுவேண்டா..”

    “அனகாபள்ளி போகணும்..”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்..”

    அவள் திட்டுகிறாள்.

    “அனகாபள்ளி அப்புறமா போய்க்கலாம்.. முதல்ல வண்டியை சீக்கிரமா ஓட்டுடா..”

    ஸ்டேஷன் வந்ததும் இறங்குகிறார்கள். நடுவில் ஏறியவன்

    சொல்கிறான்..’

    “ரவி, நீ வண்டியிலயே இரு..  நாங்க இறங்கிக்கறோம். நீ அனகாபள்ளி போகணும்.”

    “ஆமா.. அனகாபள்ளி போகணும்.. ரைட் பை பை டாடா சீரியோ..”

    இருவருக்கும் சொல்லிவிட்டு அவன் காரை கிளப்புகிறான்.

    விசாகப்பட்டினம் ரயில் நிலையம்

    முதல் நடைமேடை.

    சென்னையை நோக்கி ஹவுரா மெயில் புறப்படத் தயாராகிறது. இரண்டாவது ஏசி பெட்டியின் வெளிப்புற மேடையில் TTE இடம் அந்தப் பெண் கோம்டியும் அவள் கூட வந்த கல்யாணும்.

    கோம்டி TTE-யிடம் தனது டிக்கெட்டை சரிபார்க்கும்படி கேட்டாள். TTE தனது டிக்கெட்டை  சரிபார்த்து அதையே டிக் செய்தார்.

    “அடடா, ஏன்மா மேல் பெர்த்ல இருக்கீங்க.. வேணும்னா கீழ் பெர்த்ல அங்க இருக்கற பாசஞ்சர்கிட்டே பேசி மாத்தி தரட்டுமா?”

    “வேண்டாம் சார்.. எனக்கு டாப் பெர்த் தான் சௌகரியம். யார் தொந்தரவும் இல்லாம தூங்கலாம். தேங்க்ஸ் சார்!”

    இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் டிக்கெட்டைக் காண்பித்தான்.

    “சார்.. என் பெயர் கல்யாண்.. என் டிக்கெட்டையும் சரி பாருங்க சார்..”

    அவனுடைய இரண்டு தெத்துப் பற்கள் மட்டும் வெளியே தெரிய TTE ஐ பார்த்து சிரித்தான். அவன் பற்களைப் பார்த்துப் பயந்து இரண்டடி பின்னால் போனார் டிடிஈ..

    அதே நேரத்தில், காலைச் சற்று சாய்த்துச் சாய்த்து நடந்து வேதனையில் சாமான்களை சுமந்துகொண்டிருந்த மேலும் ஒரு இளைஞன்  மெதுவாக ஆனால் பதட்டமாக தனக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

    திடீரென்று கல்யாண் அவனை அழைத்தான்.

    “டேய் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, என்ன ஞாபகம் இருக்காடா?”

    நிறுத்தி அவனைப் பார்த்துவிட்டு “அட, தெத்துப் பல்லன்” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தான்.

    “நீ எப்டி இருக்கே? உன்னை எல்லாம் மறக்க முடியுமாடா.. டேய்.. நான் S1 கோச் போகணும். வண்டி கிளம்பற நேரம். அப்பறம் பாக்கறேன்டா.”

    “டேய்.. எஸ்1 தானே.. வண்டி கிளம்பியதும் நானே அங்கே வரேன்.. எவ்வளோ விஷயம் பேசணும் நாம.. நீ என்ன பண்றே திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி, இங்கேயே இந்த கோச்சுக்குள்ளே ஏறி வண்டி உள்ளேயிருந்தே போடா.. ரொம்ப தூரம்டா”.

    “அப்படியேடா.. நான் உனக்காக அங்க வெயிட் பண்றேண்டா..”

    அவன் அந்த இடத்தை விட்டு தான் கிளம்பினான்.

    இன்னும் கோம்டி தனது டிக் செய்யப்பட்ட டிக்கெட்டை திரும்பப் பெற வேண்டும். அவள் TTE யிடம் கேட்கிறாள்.

    “சார்.. என் டிக்கெட்டை டிக் பண்ணிட்டீங்க இல்லே. கொடுங்க சார்.. நான் வண்டிக்குள்ளே போறேன்.”

    அவள் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு தன் பெட்டியை நோக்கி நகர்ந்தாள்.

    கல்யாண் TTE யிடம் தனது டிக்கெட்டையும் அங்கீகரிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

    “சார்.. எனக்கும் செக் பண்ணி கொடுத்துடுங்க.. ஏன்னா நீங்க என்கிட்டே வந்து செக் பண்ற வரைக்கும் நான் காத்திருக்க வேண்டியது இல்லே பாருங்க.  என் நண்பன் திருவேங்கட கிருஷ்ணமூர்த்தி கூட அவன் கோச் ல வெயிட் பண்ணிண்டுருக்கான்.”

    TTE அவனை நிராகரித்தார்..

    “போங்க சார் உங்க சீட்டுக்கு.. அனகாப்பள்ளில வந்து செக் பண்ணறேன். எல்லா ஏசி கோச்சுக்கும் நான் ஒருத்தன்தான் டிடிஇ.. அதனால  உங்க சீட்டுக்கே வரேன்.. போங்க,,.”

    “சார் இது நியாயமா. அந்தப் பொண்ணு டிக்கெட்டை எண்டார்ஸ் பண்ணிட்டீங்க.. என் டிக்கெட்டை எண்டார்ஸ் பண்றதுலே என்ன கஷ்டம்.. சும்மா செக் பண்ணி சரிபாக்கணும். அவ்வளவுதானே?”

    “ஓ.. என் வேலயை எனக்குச் சொல்லித் தர்ரியா? அந்த பொண்ணுக்கு செஞ்சா உனக்கும் செய்யணுமோ.. போய்யா..போ.. நான் அப்பறமா வரேன்..”

    கல்யாண் அவனை முறைத்துப் பார்த்தான் ஆனால் தன் தொனியை மாற்றிக் கொண்டான். அவரிடம் கெஞ்சினான்.

    தொடரும்

    Share
  • காதல் என்பது..

                                                      

                                                                            திவாகர்

     

    என் மனம் பூராவும் குழப்பத்தாலும் பயத்தாலும் தயக்கத்தாலும் இழுபட்டது. இவள் இப்படி இத்தனை வெளிப்படையாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லைதான். சட்டு புட்டென்று பதில் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டிய சூழ்நிலை.. ஆனால் ஓட முடியுமா?

    ”ம்.. பரவாயில்லே.. உண்மையைத் தானே சொல்லறோம்.. உன் வைஃப் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.. என்ன சாரதா.. நான் சொல்லறது சரிதானே.. ம்.. பாருங்க எங்க மோகன் எவ்வளோ ஆவலா எதிர்பார்க்கிறார்ன்னு. கம் ஆன் ஆனந்த்.. நாம் ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதானே.. பத்தோ பன்னிரெண்டோ காதல் கடிதம் எழுதிண்டோமே.. உண்மைதானே’

    ”ஆமாம் சார் ஆமாம்.. இவள் சொல்வது சரிதான்.. இவள் என் காதலி.. இரண்டு பேரும் உயிருக்குயிராக காதலித்தோம்.. ஆனால் கலியாணம்தான் செய்துகொள்ளவில்லை..” என்று சொல்லமுடியுமா.. அதுவும் யார் எதிரில் குறுகுறுவென அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி சாரதாவின் எதிரில்..

    எனக்குதான் இத்தனை பயமே தவிர அந்த மோகன் மட்டும் அவள் சொல்வது போல ஆவலாக இருந்தான் என்பது என்னவோ உண்மைதான்.. சித்ராவே மறுபடியும் ஆரம்பித்தாள்.

    ”உனக்குத் தெரியாது ஆனந்த்.. நான் எத்தனையோ தடவை சொன்னாலும் இவர் ஒப்புக்கவே மாட்டார்.. நான் விளையாட்டுக்குச் சொல்றேன்னு கிண்டல் பண்ணுவார்.”

    அந்த மோகன் சிரித்தான்.. “ஹே சித்து.. இவர் முழிக்கற முழிலேர்ந்து தெரியறது.. இப்ப உன்னை நம்பறேன்.. டோண்ட் கம்பெல் ஹிம்.. மிஸ்டர் ஆனந்த்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இவ நிறைய தடவை உங்களைப் பத்தி சொல்லறச்சே நான் கிண்டல் பண்ணுவேனா.. இவ கொஞ்சம் சீரியஸ் டைப்.. அவ்வளவுதான்.. வாங்க ஸ்டார்பக்ஸ் போகலாம்.. ஒரு காபி சாப்பிட்டாதான் இவளுக்கு டென்ஷன் தீரும்.’

    லண்டன் ஐ எனும் அந்த சிறப்புமிக்க டூரிஸ்ட் இடத்தில்தான் இத்தனை குழப்பமும் நடந்தேறிக் கொண்டிருந்தன. மோகன் ஏதோ சுமுகமாக தீர்த்து வைப்பது போல பாவனை செய்தாலும் காபி அருந்தும்போதும் சித்ராவே மெதுவாக கேட்டாள்.

    ’ஆனந்த்.. போகட்டும். உனக்குதான் என் லவ் லெட்டர்லாம் ரொம்ப பிடிக்கும் இல்லையா? உங்கிட்டே என்னோட லவ் லெட்டர் ஏதானும்  இருந்தா கொடேன்.. இவர்கிட்டே காண்பிக்கணும்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இந்த லவ் லெட்டர் கான்செப்ட்டே இப்பல்லாம் கிடையாதா?.. நானும்  எழுதியிருக்கேன்னு சொன்னா இவர் சிரிக்கிறார்.. நீயா.. அப்படி என்ன எழுதுவே.. என்ன இருக்கு எழுத..?’ அப்படின்னு அப்பப்ப கேட்பார்.. இந்தக் காலத்து லவ்வோட கம்பேர் பண்ணறச்சே நாம் எவ்வளோ டீசெண்டா காதலிச்சோம்’னு இவர்கிட்டே சொன்னா இவருக்கு எதுவும் புரியாது. அப்படி என்ன இருக்கு அந்த டீசெண்டான லவ்வுல’ன்னு கேட்டு சிரிப்பார். உங்கிட்டே இப்போ என்னோட லெட்டர் ஏதுனா இருக்கா.. இவருக்குக் காண்பிச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்.. சொல்லேன் பிளீஸ்..’

    பன்னிரெண்டு வருடங்கள் கழித்து நான் இவளைப் பார்க்கிறேன்.. அதுவும் அவளுக்குப் பிடித்த லண்டன் மாநகரத்தில்.. அதே குரலினிமை.. அதே அழகு மயில்.. அதே சிரிப்பு.. அதே படபடப்பு..

    இல்லையென தலையாட்டினேன். அவளுடைய காதல் கடிதங்களெல்லாம் படிக்கப்பட்டதால்தான் இந்தக் காதலே நிறைவேறவில்லை.. அவை யாவையும் கருணை காட்டப்படாமல் கொளுத்தப்பட்டன என எப்படி இவளிடம் சொல்வேன். என் மௌனம் அந்த மோகனுக்குப் பிடிக்கவில்லை போலும். பேச்சை மாற்றினான். தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான். எங்களைப் பற்றி கேட்டான். வீட்டுக்கு ஒரு வார இறுதியில் வந்து இரண்டு நாள் தங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வைக்கப்பட்டது. கொஞ்சநேரம் கழித்து லண்டனையும் சென்னையையும் கம்பேர் செய்த பேச்சுக்குப் பிறகு கிளம்பினோம். அவர்கள் கை குலுக்கி விடை பெற்றார்கள். கையை குலுக்கும்போது சித்ராவின் கை வேகமாக அழுத்தியதோடு ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று சொல்லவும் சொல்லி விட்டு சென்றார்கள்.

    சாரதா என்னைப் போலவே அதிகம் பேசவில்லை. விந்தையாகப் பார்ப்பது போல பார்த்தாலும் இத்தனை நேரம் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாளோ.. வீட்டுக்குத் திரும்பும்போது கூட மௌனமாகத்தான் திரும்பினோம். ‘மாமா, பசங்ககிட்டே நாம் இவங்களையெல்லாம் பார்த்தோம்னு பெருமையா ஏதும் பீத்திக்காதீங்க.. அப்புறமா நாம பேசிக்கலாம்’, சாரதா காரை விட்டு இறங்குமுன் சொன்னவள்தான். அந்த அப்புறமா என்ற வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

    என் சொந்த அக்காவின் ஒரே பெண்தான் சாரதா.. என் அக்காவை எங்கள் வீட்டின் எஜமானியாகத்தான் சிறிய வயதிலிருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் என் அக்காவுக்கும் பதினான்கு வயது வித்தியாஸம். பெரிய பெண்ணாகவே நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துப் பழகினாலும் என் மீது ஏகப்பட்ட பாசம் வைத்திருப்பவள். அம்மாவை விட அக்காவிடம்தான் அதிகம் வளர்ந்தேன். அவள் கல்யாணம் ஆகி அடுத்த தெருவில்தான் குடித்தனம் போனதால் அவள் வளர்ப்புக்கு எவ்வித பஞ்சமும் ஏற்பட்டதில்லை. அவள் பெண்ணான சாரதாவோடு அதிகம் பழகவிடமாட்டாள். ஏன் என்று எனக்கும் புரியவில்லை அப்போது ஆனால் இனம் புரியாத ஒரு பயம் மட்டும் அவளிடம் உண்டு. என்னை கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பாள். சிகரெட் பிடித்துவிட்டு இரண்டு சாக்லெட் வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாலும் கண்டுபிடித்து விடுவாள்.. அக்காவின் ஆணையே இந்த இரண்டு வீடுகளில் செல்லுபடியாகுமென்பது  இன்னொரு விஷயம். . இப்படிப்பட்ட அக்காவிடம்தான் சித்ரா ஒருமுறை சரியாக மாட்டிக்கொண்டு சிக்கினாள்.

    இஞ்ஜினீரிங் கல்லூரியில் சித்ரா எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். அழகு மயில். ஆமாம்.. ஒருமுறை அவள் மயில்நடனம் ஆடியபோதுதான் அந்த அழகில் மயங்கி விழுந்தேன்.. தைரியமாக அவளிடம் என் காதலைச் சொன்னபோது முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டவள் பிறகு என்ன நினைத்தாளோ.. முறுவலித்து ஏற்றுக் கொண்டாள். எத்தனையோ நண்பர்களுக்குத் தெரிந்தாலும் எங்கள் காதல் விவகாரம் என் வீட்டுக்குத் தெரியாதுதான். ’கல்லூரி காலத்து பருவ காதலாக இல்லாமல் நம் காதல் காலாகாலத்துக்கும் இனிக்கும் பரிபூரணக் காதல்’ என இவளே ஒவ்வொரு கடிதத்திலும் எழுதுவாள்தான். பளிச்சென இருக்கும் எழுத்துகள் எத்தனை முறை படித்தாலும் சுகமானது. ஒவ்வொரு சமயம் மனப்பாடமாக அப்படியே அவளிடமே சொல்வேன். அவளுக்கு ஆவல் அதிகம் பிறக்கும். அடுத்த கடிதம் இன்னமும் ஆழமாக இருக்கும். கல்லூரி படிப்பு முடிந்து  மேல்படிப்பும் முடித்து நான் வேலைக்குச் சென்றபின்னரும் அவள்தான் என் ஜீவநாடியாக இயங்கிவந்தவள். அவள் அருகே இல்லாத தருணத்தில் அவள் கடிதங்களோடு பேசிக்கொண்டு பைத்தியமாக மாறியிருந்த காலங்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகி என் அக்கா. வில்லன் நான்.. அகப்பட்டு மாட்டிக்கொண்டு பலியானது சித்ராதான்.

    அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். அலுவலகத்தில் என்னை லண்டன் மாற்றியிருப்பதாக கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். இது கூட சித்ராவின் நீண்டநாள் கனவை நனவாக்கத்தான்.. அவளுக்கு லண்டன் மீது கொள்ளை ஆசை. ஆங்கில புதினங்களில் வரும் லண்டன் வர்ணனைகள் அவளை மிகவும் கவர்ந்தவை. ஷேக்ஸ்பியரின் பரம ரசிகை. 221பி, பேகர் ஸ்ட்ரீட் அவளது பிறந்த வீடாக நினைத்துப் பெருமை கொள்ளுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தின் நினைவு வீடான அந்த இடத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பது அவள் ஆசை.  கல்யாணம் ஆனபின்னர் லண்டனில் செட்டில் ஆவது என்பது அவள் வாழ்வின் லட்சியம் கூட. அவளுக்காகவே என் அலுவலகத்தில் கொஞ்ச காலமாக கஷ்டப்பட்டு லண்டன் அலுவலகத்துக்கு வேலை செய்ய அனுமதி பெற்றவன். அன்று அந்த அனுமதி கிடைத்த மகா சந்தோஷத்துடன் இல்லம் வந்து சேர்ந்தவனுக்கு அங்கே நான் நேசிக்கும் சித்ராவும், என் பாசத்துக்குரிய அக்காவும், கையில் கடிதங்களுடன் காணப்பட்டார்கள். சித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தன. அக்காவோ அவனைப் பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் உலகத்தையே அழிக்கப்போகும் இராட்சஸி போல நடுக்கூடத்தில் நின்றிருந்தாள்.

    இந்தக் கோலத்தில் அங்கே என்ன நடந்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஒரு ஓரமாக ஏதுமறியாத குழந்தை போல என் அம்மா நின்றிருக்க அவள் பக்கத்தில் இருந்த சித்ராதான் முன்னால் வந்தாள். ஒரே வார்த்தை.. ஒரு வார்த்தைதான் பேசினாள். ‘குட் பை ஆனந்த்.. இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது..” அழுதுகொண்டே சொல்லிவிட்டு வெளியே வேகமாக சென்று எங்கள் காரில் அமர்ந்துகொண்டு சென்று விட்டாள்.

    என் அக்கா உடனடியாக ஏதும் பேசவில்லை. அம்மாதான் ஏதோ சமாதானப்படுத்தினாள். வீட்டுக்குள்ளேயே குதிர் போல ஒரு அழகான பெண் எனக்காகக் காத்துக்கொண்டிருக்க ஏன் இன்னொரு பெண்ணை நாடினேன் என்று அம்மா கேட்கும்போது முதலில் புரியவில்லை. பிறகுதான் சாரதாவைப் பற்றிப் பேசுகிறாள் என்பது புரிந்தது. நான் அப்பாவியாக அக்காவைப் பார்த்தேன். காதலைப் பற்றியும் காதலி பற்றியும் எரிச்சல் கொண்டிருந்த அக்காவிடம் எந்தக் கருணையும் இல்லை. கடகடவென சமையலறை சென்றவள் நான் கத்தக் கத்த எந்த இரக்கமும் காட்டாமல் அத்தனைக் கடிதங்களையும் எரியும் ஸ்டவ்வின் நீல நெருப்புக்கு இரையாக்கி தன் எரிச்சலைத் தணித்துக் கொண்டாள். பிறகு என்னிடம் வந்தாள்.

    “சரி, இது இத்துடன் போகட்டும்.. இந்த விஷயம் அப்பாவுக்கும் தெரியவேண்டாம், சாரதாவுக்கும் தெரியவேண்டாம். யாருக்குமே சொல்லக்கூடாது. எம் மேலே சத்தியம்.. சரியா.. அம்மா, இதோ பார்.. நான் என் வீட்டுக்காரரிடம் பேசி நல்ல முகூர்த்தம் பார்க்கிறேன். செய்யவேண்டிய சீர் எல்லாம் குறையில்லாமல் செய்கிறேன்.. உன் பையனை இந்தக் கலியாணம் வரைக்குமாவது நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்..’ சொன்னவள் என்னை ஒரு முறை குரோதத்துடன் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். அம்மாதான் சொன்னாள். முதல்நாள் அவள் வீட்டுக்கு வந்த போது என்னிடம் ஏதோ பேசவந்தாளாம். ஆனால் நான் கவனிக்காமல் ஏதோ கடிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தேனாம். கொஞ்சநேரம் கோபமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். காலையில் நான் ஆஃபீஸ் சென்றவுடன் வந்தவள் என் அறையில் நுழைந்து நான் என் பீரோவில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் படித்து விட்டு கோபத்துடன் காரில் ஏறி என் நண்பர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக சித்ராவின் வீட்டுக்குப் போய் சண்டை போட்டு அவளைப் பயமுறுத்தி தன்னுடன் அழைத்துக் கொண்டு  இதோ இப்படிச் சொல்லவைத்துவிட்டாள்.

    வாழ்க்கையே சுக்கு நூறாகி உடைந்துவிட்டதை அன்றுதான் உணர்ந்தேன். அம்மாவிடம் அழுதேன். லண்டன் பயண கடித விவகாரத்தை சொன்னேன். கலியாணம் செய்துகொண்டு சாரதாவுடன் ஜாலியாகப் போயேன்’ என்று அப்பாவித்தனமாகப் பேசினாள் அம்மா.

    அடுத்த சிலநாட்களில் சித்ராவை நான் சந்திக்க எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சே.. என்ன பைத்தியக்காரத்தனம் இது.. ஒரு அக்காக்காரி முறைத்தால் காதல் முறிந்துவிடுமோ. காதல் என்பது என்ன இத்தனை பலவீனமான உணர்ச்சியா? காதல் என்பது எத்தனை பலம் வாய்ந்தது என்பதை எப்படி உணர்த்துவது? அந்த காதல் உணர்வு இல்லையென்றால் கஷ்டப்பட்டு காதலிக்காக லண்டன் பயணம் வரை நான் ஏற்பாடு செய்திருப்பேனா? என் அக்காவுக்குப் பயந்துபோய் சித்ரா இப்படிச் செய்யலாமா.. எவ்வளவு ஆசை ஆசையாக லண்டன் வாழ்க்கையை ஊகித்து வந்தோம்? ஏய் சித்ரா பதில் சொல்லு.. ஒருமுறை என்னிடம் பேசு என்றெல்லாம் அவள் தோழிகள் மூலமாக செய்தி அனுப்பினாலும் அவள் வரவில்லைதான்.

    அடுத்த மாதத்தில் சாரதாவின் கழுத்தில் நான் கட்டிய தாலியுடன் லண்டன் பயணம் செய்யும்போது சாரதா மட்டுமே உண்மையான மகிழ்ச்சியில் இருந்தாள். அம்மாவும் அக்காவும் வெளியே மகிழ்ச்சியைக் காண்பித்தாலும் உள்ளுக்குள் ஏதோ பய உணர்வுடன் இருந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். நான் ஏதாவது எதிர் ஏற்பாடு செய்துவிடுவேனோ என்ற பயம் கடைசி வரையில் அக்காவுக்கு இருந்தது. நான் அப்படித்தான் தயார் நிலையில் இருந்தாலும் சித்ரா அசைந்து கொடுக்கவே இல்லையே.. இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்.

    ஆனால் அன்றிலிருந்து அக்கா தம்பி உறவு முறை முறிந்து போய்விட்டது என்பது வாஸ்தவம்தான்.. ஒரு புதிய மாமியாரைப் போலத்தான் பழகினேன்.. அக்காவும் அந்த தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பினாள் போலும். இந்த இலண்டனில் கடந்த பன்னிரண்டு வருட வாழ்க்கையில் இரண்டு முறை பிரசவத்துக்காக உதவி செய்யவும், ஒருமுறை கணவருடனும் இன்னொருமுறை அம்மா அப்பாவுடன் வந்திருந்தாள். ஒவ்வொரு முறையும் நான்கைந்து மாதங்கள் இருந்தாலும் இருவரும் ஏதோ மாமியார் மருமகன் உறவில் மட்டுமே இருப்பது போல நடந்துகொண்டாமே தவிர பழைய தம்பி நான் என்பதை போகப் போக மறந்துதான் போனேன். ஆனால் சாரதா மட்டும் என் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றவள். அவள் கூட இரண்டு முறை எங்களிடையே இருந்த தூரத்தைப் பற்றிக் கேட்டவள்தான். ‘என்ன இருந்தாலும் எங்கம்மா உங்களுக்கு சொந்த அக்காதானே மாமா, ஏன் இப்படி வித்தியாஸமா விலகிப் போய் பழகறீங்க’ என்று கேட்டதற்கு நான் சிரித்து மழுப்பி விடுவதால் அவளும் நாளாக நாளாகக் கண்டு கொள்வதில்லைதான். ஆனால் அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் சித்ராவின் நினைவு தவிர்க்கமுடியாதது என்பதை அக்கா அறிவாள்.. அவள் பெண் அறியமாட்டாள் இல்லையா..

    அதே போல நானாக என் அக்காவைக் கூப்பிட்டு இங்கே அழைத்துக் கொள்ளவும் விருப்பப்படவில்லை. அவளேதான் வருவாள். போவாள். இந்த விஷயத்தில் சாரதாவுக்கு ஏராளமான கோபம் கூட என் மீது உண்டு. அந்த கோபத்தையும் எப்போதாவது என் மீது பிரயோகிப்பாள். நான் கண்டு கொள்வது இல்லை கூட.

    அன்றிரவு பிள்ளைகளுக்கு வழக்கப்படி ஏதோ கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தேன். காத்திருக்கிறாள்.. தூங்காமல் காத்திருப்பாள் அவள் என்பது எனக்கும் தெரியும்தான்.

    கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவளே ஆரம்பித்தாள்.”மாமா, நமக்கு இந்த முதலிரவு இரண்டாவது இரவுன்னு மூவாயிரம் நாலாயிரம் இரவு வந்தாச்சு.. ஒருநாளாவது அந்தப் பெண்ணைப் பத்திப் பேசலையே ஏன்.. எனக்கு அது மட்டும்தான் பிடிக்கலே.. எங்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா.. என்கிட்டே சொல்றதிலே ஏன் பயப்பட்டீங்க.. இப்ப பாருங்க.. அந்த சித்ரா புருஷன் ஹாயா சிரித்துக் கொண்டே எவ்வளோ ஈஸியா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணினான். நீங்க அங்க தவிச்ச தவிப்பு இருக்கே.. நல்லா கவனிச்சேனே..  எனக்கு பயங்கர கோபம் வந்து நானே ஏதாவது சொல்லிடலாம்னு கூட நினைச்சேன்..”

    அவளைப் பார்த்தேன்.. அவளுக்கு என் மேல் பூரண அன்பு சற்றும் குறையவில்லை என்பதும் புரிந்தது. அவள் முன்நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டே கேட்டேன்.

    ‘உன்கிட்டே இதெல்லாம் சொல்லாதது என்கிற வரையில் நீ கேட்டது சரிதான். சாரு, நான் இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?” அவள் தலையை அழகாக அசைத்தாள்.

    “நீ யாரையாவது கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருக்கியா?”

    ”ஓ! இந்த மாமாவைத்தான் சின்னப்பலேர்ந்து மனசுக்குள்ளே காதலிச்சிருக்கேன்.” என்று என்னை இடித்தாள்.. ”ஆனா அது காதல் அது இதுன்னு சொல்லத் தெரியாது. சின்னப்பலேர்ந்து எங்கம்மா  எங்கிட்டே ‘உன் மாமாதான் உன்னைக் கட்டிக்கப் போறான்.. அதனால அடிக்கடி நீ அவனோட கிட்டக்கப் போய்ப் பழகக் கூடாது.. ந்னு ஒரு பயத்தை உருவாக்கிட்டா.. அதனால காதலா உங்ககிட்டே பழகறதுங்கறது என்னால அப்ப முடியலே.. காரணம் எங்கம்மாதான்.. அவ சொல்றதும் சரிதானே.. கல்யாணத்துக்கப்பறம் உங்க மாமா உன் கையிலதானடின்னு அடிக்கடி சொல்வாள். நீங்களும் நானும் ஒருவர் கையில் ஒருவர்தானே..”

    அவள் பேசுவதை ரசித்தேன். ’காதலை வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம் அவள் அம்மாவாம். பைத்தியக்காரி, அதே அம்மாதான் என் காதலையும் உன்னிடம் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம்’ என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் சாரதா பாவம், மென்மையான மனசு அவளுக்கு.

    ‘சாரதா! இப்போ காலம் எவ்வளோ மாறிப் போச்சு பார்த்தியா.. ஒரு காலத்துல இப்படியெல்லாம் காதல் விவகாரம் இன்னிக்கு ஏற்படற மாதிரி வெளிப்பட்டால் உடனே குடும்பத்துல பெரிய குழப்பம்லாம் வரும்.. ஆனால் நீ எளிதா எடுத்துக்கற.. ஒருவேளை உன் மனசைப் புண்படுத்தக்கூடாதே’ன்னு நான் சொல்லலே’ன்னு இந்த விஷயத்தை எடுத்துக்கோ.. அவ்வளோதான்.”

    “அதெல்லாம் போகட்டும்.. ஆசை ஆசையா உங்களுக்கு ரொம்ப பிடிக்கறாமாதிரி லெட்டர்லாம் எழுதினாளாமே.. நான் சாயங்காலம் வந்ததும் உங்க பீரோவைக் கூட தேடினேன்.. கிடைச்சா அவளுக்கு போன் பண்ணி ரிடர்ன் பண்ணலாம்னு.. போன் நம்பர்லாம் ஷேர் பண்ணிண்டோமே.. ஆனா எதுவும் கிடைக்கலே”

    அடிப்பாவி, இவள் என்னை நம்பவே இல்லை. “என்ன சாரு இது… விட்டுடு’ன்னு சொன்னேன் இல்லே.. விட்டுடேன்..”

    அவள் விடவில்லை. “ஆமா.. அப்படி என்னதான் எழுதிப்பீங்க.. என்ன இருக்கு எழுத?” அந்த மோகன் கூட இதையே சொன்னான். சாரதா கொஞ்சநேரம் ஆழமாக யோசிப்பது போல பார்த்தாள்.

    ”ஆங்.. எனக்கு புரிஞ்சுபோயிடுச்சு மாமா.. இது கணவன் மனைவிக்குள்ள இருக்கற ஒரு ஈகோ பிரச்னை மாமா.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. எத்தனைதான் காலம் மாறினாலும், சொசைடி’ல ரொம்ப முன்னேற்றம்னு பேசினாலும் யாருமே தன்னோட பழைய காலத்து காதல் தோல்விக் கதையை சொந்தப் புருஷன்கிட்டேயே இப்படி பிரம்மாண்டமா பெருமை அடிச்சுக்க மாட்டாங்க.. அதுவும் பாருங்க சித்ரா அதைப் பத்தியே பேசினாளே தவிர இப்ப இருக்கறவிதத்தையோ என்ன செய்யறேங்கறதையோ எதுவும் பேசலே . எல்லாமே அவ புருஷன் சொன்னதுதான். அதனால சித்ரா உங்களை இன்னைக்கு சந்திச்சதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கா. அதாவது ஒரு பாயிண்ட் புருஷனை விட ஸ்கோர் பண்ணியே ஆகணும்னு வீம்பு.  இப்படி ஒருவேளை இருக்கலாம். சித்ராவின் பழைய காதல் கதையை அந்த மோகன் எப்பவும் கொஞ்சம் கீழ்ப்படுத்தி பார்த்திருக்கலாம். ஒரு வீம்புக்காக இவளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இந்தக் கால நாகரீகம்ங்கறதே கல்யாணத்துக்கு முன்னாடி பழகி இருக்கணும்’னு பேசறதுதானே. ஓருவேளை இந்த விஷயத்துல மோகன் இவளைப் புண்படுத்தி இருக்கலாம். அல்லது வேற ஏதாவது சொல்லி நோக அடித்திருக்கலாம். இதை ஒரு சவாலா எடுத்துண்டு சித்ரா சமாளிச்சே ஆகணும்ங்கிற மனநிலைல இருக்கணும். வாழ்க்கைல காதல் என்பது ஒரு வயசுல வருவது சகஜம்தான்.. அதை டீசெண்ட் லவ் இண்டீசெண்ட் லவ் நு எப்படி பிரிக்கிறாங்களோ..  ஆனா ரொம்ப ரொம்ப பிராக்டிகல் வாழ்க்கையா மாறிப்போன இந்த கால கட்டத்துல இந்த கல்யாணத்துக்கு முன்னாடி வந்த காலேஜ் காதல்லாம் ஒரு பெரிய பிரச்னையா மாமா? மக்கு மாமா.. இன்னிக்கு நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்”. அவள் என் தலையை கலைத்துக் கொண்டே சிரித்தாள்..

    ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்தான் அறிவாளோ.. இந்த பெண்கள்தான் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்கள். இவள் மட்டும் இப்படி ஒரு கோணத்தில் சொல்லாமலிருந்தால் நான் ஏதேதோ பைத்தியக்காரத்தனமாக நினைத்துக்கொண்டு இந்த இரவெல்லாம் முழித்துக் கொண்டிருப்பேனோ என்னவோ.. காதல் என்பது ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு வகையில் உதவுகிறதோ.. அன்றைய தினம் அக்காவுக்கு இந்த காதல் என்பது எரிச்சலாகப் பட்டது. ஆனால் அதையே சாக்காக வைத்து எங்கள் கல்யாணத்தையும் உடனடியாக நடத்திவிட்டாள்., இதோ இன்று அவள் வயிற்றில் பிறந்த பெண் மிக அழகாக காதல் என்பதைப் பற்றி காலத்துக்கேற்றவாறு எடுத்துச் சொல்கிறாள். காதலில் விழுந்த சித்ராவோ அதே காதலை வைத்து தன்னைத் தூக்கிக் கொள்ளப் பார்க்கிறாள்.. ஆமாம்.. காலம் அது கழியக் கழிய காதலைப் பற்றிக் கூட ஒரு முதிர்ச்சியான அனுபவத்தைத் தருகிறதுதான். அன்று காதலை மறுத்த அக்கா செய்தது தவறுதான் ஆனால் இன்று அதன் பரிகாரமாக அவள் இப்படி ஒரு அருமை மகளைத் தனக்குப் பரிசாக அளித்திருக்கிறாள் என்றல்லவா படுகிறது.  ஏனோ அக்காவைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றியது.

    ”சாரு.. இப்பவே அக்காவுக்கு போன் பண்ணி விசாவுக்கு அப்ளை போட்டு இங்கே சீக்கிரம் வரவழையேன்.. ஒரு ஆறு மாசம் இருக்கட்டுமே. எனக்கு என்னவோ எங்க அக்காவிடம் பழைய தம்பியா இருக்கணும்னு ஆசை”

    என் திடீர் மாற்றம் சாரதாவுக்குப் புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் தன் அம்மாவைக் கூப்பிடச் சொல்லும் என்னை ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள். ஆனால் அவள் எழுந்த துள்ளலில் அவள் மகிழ்ச்சியும் ஏராளமாக இருந்ததை கவனிக்கத்தான் செய்தேன்.

    Share
  • காதறுந்த ஜோசியம்

                                                                                  திவாகர்

    ’அறுபது வயது வந்தபின்னர்தாம் நாய் படாத பாடு படுவீர் அதுவரை உமது ராஜ்ஜியம்தான்’ என்று ஒரு உருப்படாத ஒரு காது பாதியாக அறுபட்ட ஜோசியன் ஒருவன் அவரது சின்ன வயதில் சொல்லிவிட்டு தன்னிடம் அடியும் வாங்கிக் கொண்டு ஓடியதை இப்போதெல்லாம் நினைத்துப் பார்த்து உருகி உருகிப் போனார் மாத்ருபூதம். இந்த இரண்டு வருடமாக தான் கஷ்டப்படுவது போல எந்த நாயும் கஷ்டப்படாதுதான்.. அவைகளுக்கு என்ன சுதந்திரமாக உலாவும் ஜீவன்கள். சௌகரியமாக வாழ்க்கைப் படவே பிறந்த ஜன்மங்கள். இருந்தாலும் அந்த ஜோதிடனுக்கு இந்த நாய்கள் மேல் என்ன வெறுப்போ.. நான் படும் வேதனையை நாய் மட்டுமே பட்டிருக்கும் என்பது போல அல்லவா சொன்னான்..

    ஆனாலும் அவன் சொன்னது உண்மைதானே.. தான் வேலை செய்து ரிடைர் ஆகும்வரை நம்மை யாராலும் அசைக்க முடிந்ததா.. ஆனால் இப்போது..

    ஆமாம். மாத்ருபூதம் தன் கடைசி மூன்று எழுத்துக்கு ஏதுவாக மற்றவர் கண்களுக்கு பூதமாகத்தான் காட்சி அளித்து வந்தார். பிறந்ததிலிருந்தே அழுது கத்தி புரண்டு தலையைத் தரையில் அடித்துக் கொண்டாவது எதையும் சாதித்துவிடுவான் இவன் என்று அவர் அம்மா தன்னைச் சிறு வயதில் புகழ்ந்தாளா இல்லை வயிற்றெரிச்சல் தாங்காமல் இகழ்ந்தாளா என்பதெல்லாம் அவர் அப்போது பெரிதாக நினைக்கவில்லைதான். பள்ளியிலும் கல்லூரியிலும் கூட பெரிதாக அப்படி ஒன்றும் சாதித்தவர் இல்லைதான். சதா கடிந்துகொண்டே இருக்கும் தன்னை அவர் நண்பர்கள்  இவரைச் சேர்த்துக் கொள்ளத் தயங்குவதைக் கூட அவர்கள் தன்னைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்று பெருமையாக நினைத்துக் கொண்டு அந்த அச்சத்தை மேலும் வளர்த்து வந்தவர்தான்.

    ஆச்சரியம் என்னவென்றால் இவருக்கு  வாழ்க்கையில் இதுவரை அமைந்த அத்தனை பேரும் இவரைக் கண்டு அச்சப்படுகிறார்கள் என்றே நினைத்து மகிழ்ந்தவர்தாம். இந்தச் சமயத்தில்தான் அவருடைய ஜாதகத்தைப் பார்க்கவந்த அந்த காதறிந்த  ஜோதிடன் இவருக்குக் கல்யாணமும் வேலையும் அமோகமாக அமையும் என்றும் ஆனால் அறுபது வயது வந்தபின்னர் நாய் படாத பாடு படவேண்டி வரும் என்றும் அதற்குப் பரிகாரம் செய்தால் இவருக்கு நல்லது விளையும் என்றதோடு அந்தப் பரிகார விஷயம் தான் மட்டுமே அறியும் விஷயம் என்று பீற்றிக் கொண்டு சொன்னவனைத்தான் கோபத்தோடு கடிந்ததோடு மட்டுமல்லாமல் கையை வீசி ரெண்டு தட்டி விட்டு ஓடவைத்தவர்.

    கல்யாணி அந்த சங்கீத ராகத்துக்கு இணையாக இனிமையாக பேசக்கூடிய திறமை பெற்றவள். நல்ல பாடகி. பட்டி மன்ற பேச்சுகள் பல இடங்களில் கலந்து கொண்டு வாலி நல்லவனா இல்லை சுக்ரீவன் நல்லவனா என்று தலைப்புகளிலெல்லாம் இடத்துக்கேற்றவாறு மாறி மாறிப் பேசி இருவரையும் நல்லவராக்கிய கெட்டிக்காரி என்று பெயர் வாங்கியவள். அரசாங்கப் பள்ளியில் ஆசியையாக நல்ல உத்தியோகமும் பெற்றவள்தான்.  சக ஆசிரியைகளிடம் அவள் பேச்சுக்கு பெரிய மதிப்புண்டு. அப்படிப்பட்ட கெட்டிக்கார பேச்சுக்காரி ஸ்ரீமதி கல்யாணி மாத்ருபூதம் ஆனதும் அவரெதிரே மட்டும் ஊமையாக மாறிப் போனதுதான் மாத்ருபூதத்தின் ஜாதக விசேஷம்.

    கல்யாணம் ஆன முதல் நாளே மாத்ருபூதம் தன் சுய ரூபத்தை அவளிடம் காண்பித்தார். அவள் வேலைக்குச் செல்லக்கூடாது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவள் தன்னிடம் எதிர்பேச்சு பேசக்கூடாது என்ற சத்தியத்தைக் கேட்டார். இவர் என்ன விளையாடுகிறாரோ என்று நினைத்தவள் வேண்டுமானால் எதிர்ப்பேச்செல்லாம் பேசாமல் இருக்க சத்தியம் செய்கிறேன் ஆனால் அரசாங்க வேலைக்குச் செல்லும் உரிமையைப் பறிக்கவேண்டாம் என்று கெஞ்சியதால் அவளிடம் பச்சதாபப்படுவது போல பட்டு அவளை மன்னித்துவிட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக பெரிய மனது பண்ணுவது போல சொன்னதும் இந்த கல்யாணி அசட்டுத் தனமாக எதிர்ப்பேச்சே பேசமாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்துவிட்டாள்.  அந்த நிலையில் அவளுக்கு தன் அரசாங்க உத்தியோகமும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் பட்டி மன்ற அவகாசங்கள், பாட்டுக் கச்சேரிகளும் பறிபோகக் கூடாதே என்ற அச்சமும்தான் அப்படி செய்ய வைத்தது. அவ்வளவுதான் அடுத்த நாள் முதல் சதா பேசிக்கொண்டிருக்கும் கல்யாணி அவரைக் கண்டாலே பேச்சே வராதது போல நடந்து கொள்ள ஆரம்பித்தாள். இப்படிப்பட்ட அன்னியோன்யத் தம்பதிகள் இரண்டு பிள்ளைகளைக் கூடப் பெற்றுக் கொண்டது இன்னொரு ஆச்சரியம்தான்.

    கல்யாணிதான் வேறு வழியில்லாமல் இவருக்கு வாழ்நாள் முழுதும் வாழ்க்கைப் பட்டோமே என்ற வகையில் இப்படி நடந்துகொண்டாள் என்றால் இந்த ஆபீஸ் காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று என்றே புரியவில்லை. அவர் ஆடும் ஆட்டத்துக்கு அவர் பாஸ் வளைந்துகொடுக்க அவர் கீழ் செய்யும் ஆட்களும் அப்படியே நடந்துகொள்ள மாத்ருபூத ராஜ்ஜியம் எந்தக் குறையுமில்லாமல் அலங்காரமாக அட்டகாசமாக அரங்கேறிக்கொண்டிருந்ததுதான். வீடு போனால் ஆபீஸ் இல்லையென்றால் மறுபடியும் வீடு.. யாரும் தொல்லை இல்லாமல் டி.வி. பார்ப்பது, நாவுக்குப் பிடிக்த பண்டங்களை நன்றாக சுவைத்துச் சாப்பிடுவது, அப்படி இப்படி வீட்டிலுள்ளோரை மிரட்டிக் கொண்டே இருப்பது, அவர்கள் பயத்தை ரசிப்பது, குறட்டை விட்டு தூங்குவது எப்போதாவது சினிமா டிராமா என்பது போல மிக ஜாலியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

    எங்கும் எல்லாமே இவர் இட்ட கட்டளைக்காகக் காத்திருப்பது போல நடந்தால் யாருக்குத்தான் அகங்காரம் வராது.. மாத்ருபூதத்துக்கு சற்று அதிகமாகவே வந்தது.. இதனால் கல்யாணிக்கும் பிள்ளைகளுக்கும் பல மனக் கஷ்டங்கள் வந்தாலும் வேறு வழியே இல்லாமல் பொறுத்துக் கொண்டனர். அட, அந்த அறுபது வயது நிறைவு முடிந்த அந்த நாளில் விழா எடுத்த நிலையில் கல்யாணியும் அழைக்கப்பட்டிருந்தாள். எத்தனை அட்டகாசமாக அரங்கேறியது அந்த விழா..

    மாத்ருபூதத்துக்கு அந்த நாள் பூதாகரமாக நினைவில் வந்து கொண்டே இருந்தது. அந்த நாள் தன் அலுவலக வாழ்க்கைக்கும் இல்லாமல் தன் அகங்காரத்துக்கும் சேர்த்தே கடைசி நாளாக அமைந்துவிட்டதுதான்.

    விழாவில் ஏதோ ஒரு பேச்சுக்காக கல்யாணியை ஒரு வார்த்தை பேசுமாறு கேட்டுக் கொண்டோரிடம் சிரித்துக் கொண்டே தன் கணவரைக் கை காட்டினாள். ‘ஆவர் ஒப்புக் கொண்டால் மட்டுமே தான் பேசுவதாக’ தைரியமாக அவரைக் காண்பித்து அனுமதி கேட்பது போல கேட்டாள். தலையில் அதுவரை சபையினரால் வைக்கப்பட்டிருந்த ஐஸானது இன்னமும் உருகாத நிலையில் தாராளமாகத் தலையை அசைத்து அவளிடம் நெருங்கி அவள் காதில் அனுமதி கொடுப்பதாக உளறியதும்தான் அவள் மேலும் மெதுவாகப் பேசினாள் அவரிடம்.

    ‘அது சரி, நான் சத்தியம் செய்திருக்கிறேனே நான் எதுவும் எதிர்வார்த்தைப் பேசறதில்லேன்னு.. பட்டிமன்ற பேச்சுக்காரி நான். கூட்டத்துல பேசறதுனா அப்படி இப்படின்னுதான் பேசிப்பழக்கம். உங்களை என்னையறியாம பேச்சோடு பேச்சா ஏதாச்சும் எதிர்வார்த்தைப் பேசிட்டா.. ஐயய்யோ நான் சத்தியத்தையெல்லாம் மீறமாட்டேன்?”

    ”ஐய்யய்ய.. அந்த சத்தியமெல்லாம் இப்போ ஒண்ணும் இல்லேம்மா.. நான் வாபஸ் வாங்கிட்டேன்னு நினைச்சுக்கோ..  நீ பாட்டுக்கு ரெண்டு மூணு வார்த்தை பேசு. என்னை ஒரு வார்த்தை சும்மா திட்டினாலும் சரி, பரவாயில்லே. இவங்க எல்லாம் ஜோக்கா நினைச்சு சிரிப்பாங்க பாரேன்..”

    மாத்ருபூதம் சாதாரணமாக சொல்லியிருக்கலாம்.. அல்லது பேசு என்று அனுமதி கொடுப்பது போல தலையசைத்திருக்கலாம்.. நீ திட்டினாலும் சரிதான் என்று நாவில் யாரோ புகுந்து சொல்வது போல சொல்லிவிட்டதுதான் அவருக்கு எதிரியாகப் போயிற்று.

    இத்தனைக்கும் இரண்டு வார்த்தைதான் பேசுவேன் என்று கூச்சமாகச் சொல்வது போல பாவனை செய்த அந்த பட்டிமன்ற பேச்சாளி முதல் இரண்டு வார்த்தைகளிலேயே சபை முழுவதையும் கல கலவென சிரிக்க வைத்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தித் தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள். மாத்ருபூதம் கூட வருந்திப்போனார்தான். இத்தனைநாள் இவள் பேச்சுக்களைக் கேட்காமல் போனோமே.. எத்தனை அற்புதமாகப் பேசுகிறாள் என்று ஆச்சரியம் கூட வந்தது அவருக்கு. இத்தனை பேசினாலும் தன்னைப் புகழ்கிறாள் இவள்.. ஒருவார்த்தை கூட திட்டாமல் பேசுகிறாள் என்பதிலும் அந்தக் கடினமனதுக்காரருக்குக் கண்ணில் கொஞ்சம் கண்ணீரும் வருவது போல கலங்கியதுதான். அரைமணி நேரம் கணவரைப் புகழ்ந்து தள்ளிய கல்யாணி தன் கணவருக்கு குழந்தை மனது என்றும் எப்போதும் அவருக்கு வாழ்க்கையின் கஷ்டம் தெரியாமல் வளர்த்து விட்டோம் என்றும் இனியும் அவர் கஷ்டத்தைக் காணவே கூடாது என்றும் மனமுருகி மாத்ருபூதத்தையும் உருக்கியவள் பேச்சு மயக்கத்திலிருந்த சபையைப் பார்த்து ஒரு கோரிக்கையை வைத்தாள்.

    ”தன் கணவருக்கு சொற்பக் கஷ்டம் வரக்கூட தன் மனம் சம்மதிக்கவில்லை என்றும், இனி என் கணவருக்கு வரும் நிதிகள் அனைத்தையும் தானே சரிபார்த்து சேவை செய்யப் போவதாகவும் அதற்குத் தன் கணவர் சம்மதத்துடன் அவர் வேலை செய்யும் இந்த நிறுவனமும் இன்று கொடுக்கும் தொகையுடன் இனி மாதா மாதம் அனுப்பும் பணத்தையும் தன் பேருக்கு அனுப்பி வைத்தால் தானே கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் தன் கணவரைத் தன் கடைசி காலம் வரைக் காப்பாற்றும் பெரிய பொறுப்பைத் தான் ஏற்பதாகவும் கண் கலங்கச் சொன்னதை அந்தச் சபை ஆரவாரித்து ஏற்றுக் கொண்டது. மாத்ருபூதம் கண்கள் கலங்க எழுந்து நின்று கை தட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒரு கடிதமும் கொடுக்க ஒப்புக் கொண்டார். உடனடியாக நிறுவனமும் அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்வதாக ஒப்புக் கொண்டதோடு ஆதர்ச தம்பதியாக மாத்ருபூதம் தம்பதி விளங்குவதாகவும் கல்யாணியின் பதிபக்தி பார் போற்றவேண்டும் என்றும் அந்த அதிகாரிகள் போற்ற விழா இனிதே நிறைவேறியதுதான்.

    மாத்ருபூதம் நிஜமாகவே தான் அதிர்ஷ்டக்காரன் என்றுதான் நினைத்துக் கொண்டார். கல்யாணி சபைமுன்பாக இத்தனை பேசுவாள் என்று எதிர்பார்க்கவில்லைதான் அவர். ஆஹா கல்யாணி, என் இன்ப ராகமே, என் இனிய தேவதையே.. என் வாழ்வில் ஒளிவீசும் மாணிக்கமே என்றெல்லாம் கூவ வேண்டும் போலத்தான் இருந்தது அப்போது.. அந்த இன்பக் கனவோடுதான் அன்றிரவெல்லாம் கல்யாணி கல்யாணி என்று உளறிக்கொண்டே தூங்கவும் செய்தார்தான்.

    அடுத்த நாளும் இனிமையாகவே கழிந்தது. நிறுவனம் சென்று கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்து கல்யாணியின் பேரில் வந்த செக்கையும் பெற்றுக்கொண்டு அப்படியே கல்யாணியிடம் கொடுத்தவர்தாம். கல்யாணியின் வாயில் வந்த அத்தனை புகழ் வார்த்தையையும் மறுமுறைக் காதாரக் கேட்டு மகிழ்ந்தார், ஆஹா.. வயது அறுபதானால் மனுஷனுக்கு இந்த ஓய்வு கொடுக்கவேண்டும் என முதல் முதல் சட்டம் போட்ட அந்த முகம் தெரியாத வெள்ளைக்காரனுக்கு முதல் வணக்கம். இனி என்ன.. ஜாலியோ ஜாலிதான்.. கால் மேல் கால் போட்டுக் கொண்டு இனி பர்மெனண்டாக ஏஸி ரூமில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டே அதாரிடி செய்ய வேண்டியதுதான்.. அப்படிச் செய்வதில் கூட கூடுதல் சுகம் இருக்கின்றதே. நினைத்தவுடனே தோன்றிய  அந்த மகிழ்ச்சி எனும் உணர்ச்சிக்கும் அதுவே கடைசி நாள் என்பதை அப்போது அவர் உணரவில்லைதான்..

    மறுநாள் அவரின் இனிய கல்யாணி காலையில் காபியைத் தராமல் கொஞ்சம் கடினமாக உலுக்கி எழுப்பினாள். கண்ணை விழித்துப் பார்த்தவரை அப்படியே உட்கார வைத்தாள். “ஏன்னங்க.. இன்னையிலேர்ந்து உங்களுக்குப் புது வாழ்வு.. நேத்து வரைக்கும் எப்படி இருந்தோம்னு இப்பவே மறந்துடுங்க.. உங்க உடல்நலன், மனநலன் இரண்டையும் பாத்துக்கறது என் பொறுப்புன்னு சபையிலே எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.. நான் என் கடமையைச் செய்யறேன்.. நீங்க எதுக்கும் கோபப்பட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க..” என்றவள் அவர் முகத்தைப் பார்த்தாள். அவர் சந்தோஷமாகத் தலையை அசைத்து ;சேச்சே நான் எதுக்குக் கோபப்படப் போகிறேன்.. உன் மேலயா?.. சத்தியமா வரவே வராதுன்னா.. உன் இஷ்டம்’ முகத்தில் ஏகப்பட்ட அசடு வழியப் பார்த்தவரைப் பார்த்து முறுவலித்தாள்.

    அந்த நாளில் ஆரம்பித்தது அவருக்கான சிரமதசை. ஏற்கனவே மாத்ருபூதத்துக்கு  சாதாரணமாக இருந்த ரத்த அழுத்தம், சுகர் போன்றவை பூதாகாரமாக ஆக்கப்பட்டு  அவருடைய சாப்பாட்டில் காண்பித்து நாக்கின் ருசியை ஒரேயடியாக அடக்கினாள் கல்யாணி. இதுவரை அவர் போய்க்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் நிறுத்தப்பட்டு அவரே அந்தப் பதவியையும் ஏற்கவேண்டும் என்று நயமாக வேண்டிக் கொண்டாள். வீட்டு வேலைக்காரி கூட ஒரு பொழுது வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டதோடு அவள் வேலையையும் அவருக்குப் பிரித்துக் கொடுத்தாள். அவர் உடல்நிலையைப் பாதுகாத்து வைப்பது தன் கடமை என்றும் குனிந்து குனிந்து ஒரு சில வேலைகள் செய்வதால் உடல்நலம் காக்கப்படும் என்றும் தினமும் அவரை உட்கார்த்தி வைத்து அரை மணி நேரம் லெக்சர் தரப்பட்டது. பேரம் பேசி வாங்குவது ஒரு கலை என்றும் வாழ்க்கை முடிவதற்குள் இந்த கலையை அவர் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தினம் காலையில் காய்கறி மார்க்கெட் செல்லும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள். தான் இதுநாள் வரை பள்ளிக்கு பஸ்ஸில் சென்று வருவது அன்றோடு நிறுத்தப்பட்டதை ஒரு பெருமையாக அறிவித்தவள் அன்றுமுதல் தன்னைக் காரில் உட்கார்த்தி வைத்து அழைத்து வருவது இனி தன் கணவர் பொறுப்பாக ஏற்றுக் கொள்வதை தான் மகிழ்ச்சியோடு அங்கீகரிப்பதாக அவள் தலையை நிமிர்த்திக் கூறியது மாத்ருபூதத்தின் வயிற்றைக் கலக்கியது. வீட்டு வேலை போக இந்த பயம் தெளிந்த பிள்ளைகளும் போதாதற்கு மருமகப்  பெண்களும் கூடச் சேர்ந்து கொண்டு ஏகப்பட்ட சில்லறை வேலைகளைக் கொடுக்க அந்த வேலைகளை எப்படி இன்முகத்துடன் செய்யவேண்டும் என கல்யாணியே அறிவுரை கூறினாள். மதிய தூக்கம் சோம்பலைத் தரும் என்று சொல்லியதோடு அவர் ஈஸி சேரையும் குப்பையில் போட ஏற்பாடு செய்தாள். உட்கார்ந்து டி வி பார்க்கக் கூட நேரமில்லாமல் போவது கொஞ்சம் கொஞ்சமாக வலிக்கத் தொடங்கியது. சுவைக்காக அடக்கப்பட்ட நாக்கு போகப் போக எதிர்ப்பேச்சு பேசக்கூட இதமாகச் சொல்லிப் பதமாக அடக்கப்பட்டதாக உணர்ந்தார்.

    எத்தனைதான் கல்யாணத்தன்று அவள் கொடுத்த சத்தியம் வாபஸ் பெறப்பட்டாலும் அந்த சத்தியத்தை கல்யாணி இன்னமும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்தான். எதையுமே மெல்லமாக அழுத்தமாகச் சொல்லியதோடு அதைச் செய்யத்தான் வேண்டுமென்று சொல்லாமல் சொல்லி கண்ணால் சைகை செய்வதை அடியோடு வெறுத்தார் மாத்ருபூதம்.. அத்துடன் வெளியே ஒய்யாரமாக காரில் இறங்கும்போது தெரிந்தவர் கண்ணில் பட்டால் அவரை விடாப்பிடியாக அழைத்து இவர்தான் என் கணவர் ஆனால் மற்றவரிடம் ரொம்பக் கூச்சப்பட்டு பேசுவார் என்றும் அசாதாரணமாகச் சொல்லி இவரையும் அங்கேயே ஊமையாக்கி தன்னையும் உயர்த்திக் கொள்ளும் கல்யாணியை அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாட்டுக் கச்சேரிகளில் கல்யாணியின் இனிய கானத்தைக் கூட சரியாக இவரால் கேட்டு ரசிக்கமுடியவில்லை. பாட்டு முடியும்போது இவளுக்கு பாலோ அல்லது வென்னீரோ கொடுக்கவேண்டும்.. எந்தப் பாட்டின் முடிவில் சைகை செய்வாளோ என்றறியாமல் ஃப்ளாஸ்க்கோடு டென்ஷனோடு காத்திருக்கவேண்டும். தானாகப் போய் கொடுக்கவும் முடியாது. இப்படித்தான் ஒரு பாட்டுக்கச்சேரியின் மத்தியில் சற்று இடைவெளி கிடைக்க, ’ஐய்யோ பாவம்.. இத்தனை நேரமாய்ப் பாடுகிறாளே’ என இவரே மேடைக்குப் போய் பால் கொடுக்க அத்தனை பேர் மத்தியில் அதுவும் மைக்கில் கெட்டியாக ‘இப்படி மத்தியில் பால் சாப்பிட்டால் இவர்களெல்லாம் தப்பா எடுத்துப்பாங்க.. நான் கூப்பிடறேனே” என பவ்யமாக அவள் சொல்ல, அங்கே வந்திருந்த சபையோர் கேட்டு சிரிக்க இவருக்கு அவமானமாகப் போயிற்று. வேண்டாம் இனி அவளே கைநீட்டிக் கூப்பிடட்டும்.. இதே போல இன்னொருநாள் மாலைநேரத்தில் ஒரு பட்டிமன்ற பேச்சின் இடையில் தன்னை கைநீட்டிக் கூப்பிட்டு தண்ணீரை வாங்கிக் குடித்தவள். பத்தே நிமிட பேச்சு என்பதால் ஓடோடிப் போய்க் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் உடல் கொஞ்சம் வேர்த்துக் கூட போயிற்றுதான்… கல்யாணியின் கணவனின் பொறுப்பான இந்த செயலை சபையிலேயே ஒவ்வொரு சமயம் இவளே பாராட்டி இவருக்கு கைதட்டல் வாங்கிக் கொடுத்தது கூட உண்டு. எதையும் வெளியே சொல்லாமல் உள்ளுக்குள்ளே அழுது வெளியே புன்னகை செய்யும் கலையை அன்றுமுதல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

    அவள் பள்ளியில் கூட மாலை வேளைகளில் இவர் காத்திருக்கும் நேரத்தில் வேறு சில ஆசிரியைகள் இவரைக் கண்டு சிரித்து விட்டுப் போனாலும் இவருக்கு மட்டும் ஏனோ அந்தச் சிரிப்பு சற்று நக்கலாகவே பட்டது. இருந்தும் வேண்டுமென்றே நேரம் எடுத்துக் கொண்டு வந்த கல்யாணி, ’ஐயைய்யோ நான் உங்களை மறந்தே போய் அநாவசியமாக பிரின்ஸிகிட்டே பேசிக்கொண்டே நேரம் வேஸ்ட் பண்ணிவிட்டேன்.. ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ’ என்று அப்பாவித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டும் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டு ஒய்யாரமாக பின்சீட்டில் ஏறி உள்ளே மகாராணி போல உட்கார்ந்து தன்னைப் போகச் சொல்லி சைகை காட்டுவது அவருக்கு உள்ளுக்குள் எரிய வைக்கும்தான். வீட்டுக்குப் போனால் மறுபடியும் வீட்டு வேலை.. நேற்று அந்த லேடிஸ் டெய்லர் சரியாக ரவிக்கை தைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதைச் சரி செய்ய வேண்டி தன்னை அனுப்பினாலும் அனுப்புவாள். வேலைக்காரி வேறு இரண்டு நாட்கள் லீவு வேண்டுமென கேட்டபோது மூன்று நாள் வேண்டுமானால் எடுத்துக்கோ, என் கணவர் சமாளித்துக் கொள்வார் என்று பெருமையாகச் சொல்வது போல அனுப்பி வைத்தவள். அத்துடன் விட்டாலும் பரவாயில்லை.. இதையெல்லாம் செய்தால் தன் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது என்பதாக இவள் தினமும் ஒரு அரை மணி நேரமாவது கட்டாயப்படுத்திச் சொல்லும் உபன்யாசமும்.. தம்மால் ஒருவார்த்தை எதிர்த்துப் பேசாமல் இருக்கவைக்கும் அவள் சாமர்த்தியமும்.. சே.. என்ன லைஃப் இது.. ஜாலியாக வீடு, ஜாலியாக வேலை, டி.வி.. சுவையான சாப்பாடு, சுகமான தூக்கம் இவையெல்லாம் இனி எப்போது கிடைக்கும்?

    உண்மையாகப் பார்த்தால் அறுபதிலிருந்து ஓய்வு உடலுக்கும் மனதுக்கும் கட்டாயத் தேவை என்றுதானே எல்லா நிறுவனங்களும் வீட்டுக்கு அனுப்புகின்றன, ஆனால் காலையிலிருந்து இரவு வரை ஓய்வில்லாத இந்த அலைச்சல்.. இதற்கு விடுதலையே கிடையாதா?.. ஓடிவிடலாமா.. சேச்சே.. காசுக்கு எங்கே போவது.. எல்லாவற்றிற்கும் காரணமே இந்தக் காசு என்ற மாயாவிதான். நம்மிடம் மட்டும் இந்தக் காசு விளையாடிக் கொண்டிருந்தால் யாராவது ஒரு வார்த்தை பேசமுடியுமா..  நைச்சியமாகப் பேசி மாதாமாதம் வரும் பணத்திலிருந்து எல்லாவற்றையும் இவள் பேருக்கு மாற்றி விட்டாளே.. நிறுவனத்திடம் சொல்லி தன் பேருக்கு மாற்றிக் கேட்போமா.. முடியாது.. அவமானமாகப் போகும். அன்று சபையில் தன்னையும் சேர்த்து எல்லோரையும் கட்டிப்போட்டவள் பற்றி என்னவெனக் காரணம் சொல்வது.. அவர்களும் இதுதான் சாக்கு என்று பதவியில் இல்லாத தனக்கு ஒருமணிநேரம் நல்ல புத்தி சொல்கிறேன் பேர்வழி என நமக்கே சொல்லிக் காண்பிப்பார்கள். இந்தக் கல்யாணிதான் வெளிப்படையாக எனக்கு மாறாகப் பேசுவதும் செய்வதும் இல்லையே.. எல்லாமே என் நன்மைக்குதானே என்று சொல்லி மயக்கிவிடுவாளே..

    ஆஹா.. இப்போதுதான் புரிகிறது.. தான் மற்றவர்களை துன்புறுத்தி வேலை பெற்றோம், இவள் மயக்கிப்பேசியே தன்னைத் துன்புறுத்துகிறாள். அந்த காதறுந்தவன் ஏதோ பரிகாரம் செய்தால் நல்லது என்று சொன்னானே..  அப்போது அநாவசியமாக அவனையும் துன்புறுத்தி விட்டோம்.. பரிகாரம் செய்திருக்கவேண்டும்.. அவன் இப்போது எங்கே கிடைப்பான்..

    ஏன் சார்.. வலது காது பாதி அறுந்துருக்கும், கண் கொஞ்சம் குறுகலா இருக்கும். அடிக்கடி இமைகள் படபடவென துடித்துக் கொண்டே பேசுவார்.. குண்டு முகம்.. அப்பவே மீசை வெக்கலை.. நல்ல ஜோசியம் தெரிஞ்சவர்.. என்னா ஒரு அறுபத்தைஞ்சு வயசு இருக்கும்.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்.. ஒரு பரிகாரம் பண்ணனும் சார்..

                                                                ==================

    Share
  • தி ஐடல் தீஃப்

    புத்தக விமர்சனம்: திவாகர்

     

    தி ஐடல் தீஃப், ஆசிரியர் விஜயகுமார்

     

    தெய்வமென்றால் அது தெய்வம்

    வெறும் சிலை என்றால் அது சிலைதான்

    கவியரசரின் தத்துவார்த்தமான உயிர்வரிகள். நம் கண்களுக்குத் தெய்வமாகப் பட்டது, திருடர்கள் கண்களுக்கு சிலையாகத் தென்பட்டு. அது சிலையே ஆனாலும் அது தெய்வம், அழகு என்று நாம் கொண்டாடுவதால் விலையே மதிக்கமுடியாத அந்த சிலைக்கென ஒரு விலையை நிர்ணயித்து வெளிநாடுகளில் கொள்ளை கொள்ளையாக பணம் பறிக்கும் ஒரு நீசக் கூட்டத்தின் நாற்பதாண்டு காலச் செய்கை ‘தி ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் அப்படியே ஒரு திகில் திரைப்படம் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என்பது  சாதாரணமாக மற்றவர்களின் போற்றுதலை பாராட்டைப் பெறும் செயல் அல்ல. இப்புத்தகத்தின் மூலம் ஏற்படப்போகும் பயன்கள் நம் நாட்டின், போற்றுதலுக்குரிய பண்பாட்டின் கலைச் சிற்பங்களை நாம் திரும்பப் பெறவேண்டுமே என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது என்பது கண்கூடு. இந்த ஒரு விஷயத்துகாகவே ஆசிரியரான விஜயகுமாரை நான் மனமாறப் போற்றுகிறேன்.

     

    விஜயகுமாரின் எழுத்து நம்மை வசீகரம் செய்கிறதென்றால் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்துக்குமாக அவர் உழைத்திருக்கும் உழைப்பு, அடேயப்பா, மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. ஏறத்தாழ வீரதீர சாகஸம் செய்தால் மட்டுமே இன்று வரை அவர் மூலம் நம் மண் திரும்பப் பெற்ற சிலைகள் நம்மை அடைந்திருக்கமுடியும். ஐடல் விங் புத்தகத்தில் அவர் விவரித்த ஒவ்வொரு அத்தியாயமும் அவர் பட்ட கஷ்டங்களை உணரவைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் அவரின் மிகப் பெரிய உழைப்பையும், சிலைகள் மீது கொண்ட பற்றினையும், அவற்றை எப்பாடுபட்டாவது திரும்பக் கொணரவேண்டுமே என்ற கவலையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

     

    இந்தப் புத்தகத்தின் ஹீரோ ’இண்டி’ என்ற பெயர் கொண்ட அந்த அமெரிக்க சிலைத் தடுப்புக் காவல் அதிகாரிதான் என்றாலும் அவருக்கு பக்கபலமாக செயல்பட்ட நம் தமிழகத்து வீரரான விஜயகுமாரை இண்டியுடன் சேர்த்தே கொண்டாடவேண்டும். சிலை கொள்ளையன் சுபாஷ் கபூர் இன்று புழல் சிறையில் களி தின்று கொண்டிருந்தாலும் அவனால் ஆயுளுக்கும் சிறை தண்டனையில் இருந்து மீளவே முடியாத வகையில் அவன் செய்த சிலை திருட்டு செயல்கள் இருந்திருக்கின்றன என்பதை ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் விஜயகுமார் குறிப்பிட்டிருந்தாலும், இந்த தண்டனைகள் எல்லாம் அவனுக்குப் போதுமா அல்லது அவன் அடைந்திருக்கும் இந்த தண்டனைகள் அடுத்த சிலை கொள்ளைக்காரனுக்கு ஒரு பாடமாக அமையுமா என்பதெல்லாம் காலம் செல்லச் செல்லத்தான் தெரியும். ஏனெனில் சுபாஷ் கபூர் இன்னமும் கோர்ட்டில் நிரூபிக்கப்படாத ‘அக்யூஸ்ட்’ என்ற நிலையில்தான் இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு நாம் இன்னமும் விழிப்புடன் இருந்து அவனை முழுமையாக தண்டிக்க உழைக்க வேண்டும்.

    ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ‘ஐடல் தீஃப்’ என்கிற இந்த ஒரு புத்தகமே ‘எந்த ஊர் நீதிமன்றத்திலும்’ சாட்சிப் புத்தகமாகப் பயன்படும் என்பதுதான்.

    சிங்கப்பூரில் உள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் ‘உமாதேவி’யின் சிலையை நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்து ரசித்து அவள் எப்படி இங்கு கொண்டு வரப்பட்டாளோ என்று வருந்தியவர்களில் நானும் ஒருவன். இந்த சிலை எப்படி திருடப்பட்டது என்பதையும் எப்படி நம் தேசத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டது என்பதை மிக ஆழமாக விவரிக்கிறார் விஜயகுமார். நான் செல்லும் இடங்களில் குறிப்பாக அயல்நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள நம் கோயில் சிலைகளில் எல்லாம் பார்த்துக் கண் கலங்கி வணங்கியதை நான் மட்டுமே உணர்வேன்.  நம் கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிற்பி தன் கலைத் திறன் முழுவதையும் காண்பித்து சிலை வடித்து அந்த சிலைகள் அத்தனைக்கும் நம் சாத்திரப்படி மந்திரம் ஓதி பிராணம் கொடுத்து அவைகள் தெய்வம் என்று உணரப்பட்டு நாம் வணங்குவதற்காக ஏற்பட்ட சிலைகள் அவை என்பது நான் ஒவ்வொரு சிலையைப் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். இவரைக் களவாடி, கஸ்டம்ஸை ஏமாற்றி கடல் தாண்டி கண்டெய்னரில் வெளியூர் கொண்டுவந்து மிகப் பெரிய கட்டடங்களில் கண்ணாடிச் சிறைக்குள் சிறைப்படுத்தி இருக்கிறார்களே! எங்கள் ஊர்க் கோயிலில் மட்டும் இவர் களவாடப்படாமல் இருந்திருந்தால் இவருக்கு தினம் அலங்காரம் செய்து மாலை அணிவித்து மந்திரம் ஓதி பூசித்து மனமெல்லாம் ஆனந்தக் களிப்போடு வீதிகளில் ஊர்வலம் எடுத்துச் சென்று ஊர்மக்கள் அனைவரையும் சொல்வதறியா ஒரு ஆத்ம திருப்தியில் ஆழ்த்தும் இந்தச் சிலைகளா இங்கு சிறையிலிருப்பது என்றுதான் தோன்றும்.

     

    பொதுவாக நம் தெய்வச் சிலைகள் எல்லாமே மந்திரசக்தியால் உயிர்க்கப்பட்டு வணங்கத்தக்கவை. சாட்சி பூதம் என்பார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருக்கிறது. தவறு செய்தால் தண்டனையும் நல்லதைக் கேட்டால் நல்லதையும் தரும் அன்புத் தெய்வங்கள். அவைகளைத் துன்புறுத்தினால் அவதிப்படப்போவது சிலைகள் அல்ல. நம் தேசமும் இந்த தேசத்தில் வாழும் மக்களும்தான். இது ஒரு யதார்த்தமான உண்மை.

     

    நம் மக்கள் ஒன்றை ஞாபகம் வைத்திருக்கவேண்டும். உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள நம் தெய்வச்சிலைகள் அத்தனையும் ஒவ்வொன்றும் களவாடப்பட்டதுதான். நமக்கு ஆத்ம திருப்தியைத் தரும் தெய்வச்சிலைகளை நாம் யாருமே ”சும்மா எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி இருக்கவே முடியாது. எந்தக் கோவிலிலும் அப்படித் தூக்கிக் கொடுத்திருக்கவும் முடியாது. பின் எந்த தைரியத்தில் அந்தந்த அருங்காட்சியகங்கள் ‘இவரிடமிருந்து வாங்கப்பட்டது அல்லது இன்னாரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்டது என எழுதுகிறார்கள்?.. உள்ளூர் கொள்ளையர்களை ஊக்குவித்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் இவை. உலகத்து அருங்காட்சியகங்கள் மூலம் திருடப்பட்ட நம் தெய்வச் சிலைகள் வெளியுலகப் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பது என்பது அவர்கள் வெளிப்படையாகவே தைரியமாகவே அந்தந்த அரசாங்கங்கள் ஆதரவுடன் செய்யும் குற்றப்பணி. இதுதான் உண்மை.

     

    இந்த உண்மையை இந்த ’ஐடல் தீஃப்’ புத்தகத்தின் மூலம் ஆதாரத்துடன் உலக அரங்கத்துக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் விஜயகுமார். இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியது மிகவும் பொருத்தம் என்று கூடச் சொல்வேன். இந்தப் புத்தகம் உலகத்தில் உள்ள அத்தனை மியூசியங்களுக்கும் சென்றாக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அவர்கள் மனம் மாறவேண்டும். தங்களிடம் உள்ளவை தெய்வீகச் சிலைகள். அவைகள் வணங்குவதற்காக வடிக்கப்பட்டவை. அலங்காரத்துகாகவோ அல்லது அழகு பார்க்கவோ அல்லது ரசித்து மகிழ்வதற்காகவோ செய்யப்பட்டவை அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்து தாமாக முன்வந்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும். சாதாரணமாகப் பார்த்தால் களவு போன பண்டம் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அதை உரியவர்களிடம் சேர்ப்பிப்பது என்பது தார்மீகச் செயல். தர்மம் வெல்லவேண்டும். நம்மைச் சேர்ந்த சிலைகளெல்லாம் திரும்பவரவேண்டும்.

     

    விஜயகுமார் இந்தப் புத்தகம் எழுதியதன் மூலம் இந்தப் பணி நிறைவேறினால் அதைவிடப் பெரிய வெற்றி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அந்தப் பெரிய வெற்றியை இறைவன் விஜயகுமாரின் ’ஐடல் தீஃப்’ புத்தகம் மூலம் பெற்றுத்தரவேண்டும் என வேண்டுகிறேன்.

     

    விஜயகுமார் எழுதிய முதல் அத்தியாயத்தின் கடந்த கால சிற்பி மறுபடி திரும்பி வந்து இவரை வாழ்த்துவான். வாழ்த்தவேண்டும். இப்புத்தகத்தைப் படித்து முடித்தபின் இப்படித்தான் நான் நினைத்தேன்.. நான் மட்டுமல்ல, படித்த அனைவருமே அப்படித்தான் நினைப்பார்கள். நம் கடவுள், நம் சிற்பி, நம் நாடு நம் நாட்டின் பண்பாடு உயர்ந்தது என்ற பூரண உணர்வோடு நாம் இருந்தால் அத்தனை சிலைகளும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இப்புத்தகத்தைப் படித்தபின் பிறக்கிறது.

     

    தி ஐடல் தீஃப் (ஆங்கிலம்)

    ஆசிரியர் : விஜயகுமார்

    விலை ரூ 499.

    Jaggernaut Books, KS House, 118, Shapur Jat,

    New Delhi 110049

     

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே!

    திவாகர்

    c1241a91-cbbc-41d0-ab7b-cdaf29b6e745

    அமுதகீதம்போல என்பெயரை எப்படியோ

    குமுதா குமுதாவென இனிமையாய்நீ

    பேசினாலும் என்னுள்பொங்கும் இன்பத்துக்கு

    ஊசியளவும் உன்பேச்சு இணையாகுமோடி

    நேற்றுவந்த கிள்ளைமொழிக் கிளியே

    சற்றே குமுதாகுமுதா எனக்கூவாமல்

    நடந்தகதை அத்தனையும் கேளடி

    தொடர்கதையாய் ஆயிரம் நாட்களடி

    நான்கண்டேன் வேதனையும் சோதனையும்

    அன்றொருநாள் அல்லிக்குளத்திலே அடியாள்

    நீராடும்போது மன்னரவர் பார்த்துவிட்டாரடி

    சீரும்சிறப்புமாய் என்னைக் கல்யாணம்

    செய்வேனெனச் சொன்னவரை சீண்டவில்லையடி

    வாய்பேச்சு வேண்டாம் வந்துஎம்தந்தையைப்

    பாருமென பொல்லாமன்னரை புறக்கணித்தேனடி

    பாரிலேநல்ல பெயருமில்லைதான் பார்க்கும்

    ஊர்ப்பெண்களிடம் பாதகம்வேறு செய்பவராம்

    கர்வமே தலைக்கொண்டு மாமல்லனாய்

    யாருக்கும் தொல்லையாய் இருப்பவராம்

    யார்தான் முன்வருவாரடி இவரைமணம்செய்ய?

    ஆனாலும் அவருமென்னைக் கவர்ந்ததனால்

    முன்வைத்தேன் ஒருகோரிக்கை அவரிடம்

    நான்வணங்கும் நாரணனை அவர்வணங்கி

    தானதர்மங்கள் அன்னமிடலென ஆயிரம்நாட்கள்

    ஏதுதுன்பம் வரினும் தொடர்ந்துசெய்துவந்தால்

    பேதைநான் மாலையிடுவேன் அவர்க்கேயென

    வீம்பாகச் சொன்னேனடி செல்லக்கிளியே

    நம்பினார் அவரென்னை அதுமுதலாய்

    நாளுமிந்த ஊரிலே விருந்தோம்பல்தான்

    ஆளும்அரசனெனும் பேற்றையும் மறந்து

    பிள்ளை மனங்கொண்டு விருந்திட்டாரடி

    நாளாகநாளாக அவர்விருந்தும் அதன்சுவையும்

    நாடுதோறும் வீடுதோறும் பெரும்பேரானதடி

    கடுகத்தனை சிரமமுமிலாமல் வந்தவர்க்கெலாம்

    பசியாற மனமகிழ்ந்துவிருந்திட்டார் வந்தவரும்

    ருசித்து உண்டாரடி ரசித்துமகிழ்ந்தாரடி

    காலமிது காலமடி கலியாளும்காலமடி

    சீலமிகு அடியவர்கள் நாள்தோறும்

    அதிகமானோரடி, விருந்துண்டால் கலியன்

    அதிமதுர விருந்தொன்றே உண்டாமென்றாரடி

    ஓராயிரம்நாட்களென ஏன்கேட்டேனோகி்ளியே

    வருவோர்க்கெல்லாம் விருந்தோம்பி விருந்தோம்பி

    ஏராளமாய் அவர்செல்வம் கரைந்துபோனதே

    அரசராயிருந்தவர் ஆளும்பதவி போனதே

    கடன்வாங்கினாரடி கிளியே காசுவேண்டியதால்

    உடனிருந்தோரை தனைவிடுத்து ஓடவைத்தாரடி

    கலங்கவில்லையடி கிளியே விருந்தினர்மனக்

    கலக்கம் விரும்பவில்லையடி கிளியேஅதனால்

    விருந்துச்செலவுக்குப் பொன்வேண்டி நாளும்

    பெரும்பொருள்வாங்க வழிஏதும் இல்லாது

    கொடும்கள்வனாகிப் போனாரடி கிளியேநான்

    படுகின்ற தொல்லைகளை நாரணனும்கண்டானோ

    ஏழைஇவள் சொல்லொன்றினால் மாமல்லன்

    பாழும் கொள்ளையில் ஈடுபட்டானென

    நேற்றிரவு அவனேஇவரெதிரே இவர்மேல்

    பற்றுமிகக்கொண்டு செல்வந்தன்போல வந்தானடி

    ’கலியனே! உன்பலங்கொண்டு முடிந்தாலென்

    கால்கழலினை எடுத்து விருந்துச்செலவுக்கு

    உன்னிஷ்டம்போல பயன்படுத்துக’ என்றானடி

    நாராயணனென அறியாத என்மன்னவர்தாம்

    கார்வண்ணன் கால்வளையம்கழற்ற முயன்றாரடி

    பாரளந்த பரமனவன் சீரடியில்தலைவைத்து

    கூர்பல்கொண்டு கழல்கடிக்கும் வேளையில்

    வாய்தவறி பல்லொன்று பாதத்தில்பட்டதுவே

    பாய்விரித்த பாம்பணையில் பள்ளிகொண்டவன்

    நேர்வந்து நின்று என்னவரை ஆட்கொண்டான்

    ’சீர்பெற்ற தமிழால்எனை எந்நாளும் பாடுக!

    உனைஉணர்வாய் கலியாஉலகுக்கே ஒப்பாவாய்

    திருமகள்போல் உள்ளவளாம் குமுதாவோடு

    திருமங்கைமன்னனாய் இனிதாயிரு’ என்றான்.

    சொல்லவல்லாயோ கிளியே! பசித்தவர்

    எல்லோர்க்கும் ஆயிரம்நாளாய் மனமகிழ்ந்து

    விருந்தளித்த என்னவர்க்கு நாராணனேமுன்வந்து

    விருந்துக்குவிருதாக தன்னையே அவர்க்களித்தான்

    தெள்ளியதமிழாய் நாவினிக்க அவர்பாடுவதைக்கேள்

    கிள்ளைமொழியால் நீயும்கற்பாய் அவர்தமிழை.

    குமுதாகுமுதா எனவென்பெயரைப் பேசாமல்

    அமுதமாய் கலியாகலியா எனசொல்லநீவல்லாயோ!!

    *************************************************************************************

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
    பருவந்து பாழ்படுதல் இன்று. (திருக்குறள் – 83)

    நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

    தித்திக்குதே திருக்குறள் – 9

    (விருந்தோம்பல் என்றதும் ஏனோ குமுதாவும் திருமங்கை ஆழ்வாரும் எங்கள் சொந்த ஊர் திருநகரியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட படைப்பு இது. திருவள்ளுவர் எல்லா விஷயங்களுக்கும் ஒரு குறள் வைத்திருப்பதால் இதற்கும் ஏற்ற ஒரு குறளை வைத்து எழுதப்பட்டது.)

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 7

     

     

    மூன்று கேள்விகள்

    திவாகர்

    நன்றி: ஹிண்டு.காம்
    நன்றி: ஹிண்டு.காம்

    சோறுடைத்த சோழநாட்டில் பஞ்சமோபஞ்சம்
    அறிவுக்குப் பஞ்சம்வந்தததாம் சொல்கின்றான்
    ஆக்கியாழ்வான்; அவனடி பணியவேண்டுமாம்
    போக்கற்ற பண்டிதனாய் பிதற்றுகிறானென
    அவன்போக்கில் அவனை விட்டுவிட்டால்
    அவனேயனைத்தும் அறிந்தவனாய் ஊர்சொல்வர்
    பண்டிதன்கேள்விக்கோ பதில்சொல்வார் இல்லை
    பண்டையகாலத்து வேதமெல்லாம் அறிந்தவனாம்
    சாத்திரங்கள் ஓதியோதி நாத்தழும்பானவனாம்
    தோத்திரங்களெல்லாம் அவனுக்கே சொந்தமாம்
    கற்றோருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லைதான்
    கற்றோரே இங்கில்லையென இவன்கூவுகையில்
    கற்றாரொருவர் உளரேல் கொண்டுவாருமென
    கொற்றவன் கோபத்துடன் ஆணையிட்டான்
    ‘ஈசுவரமுனியே உமக்குமிஞ்சிய கற்றவர்தாம்
    காசினியிலுண்டோ வாதுசெய்ய வாரீர்
    சோணாட்டுத் திறமையெலாம் ஊருலகம்
    காணுமாறு உம்பாண்டியத்தியம் தெரியவேணும்’

    ‘ஆண்டவனையன்றி வேறேதும் நானினையேன்
    பாண்டித்தியமெல்லாம் பரமனுக்கே வெளிச்சமாம்
    அரசனிட்ட ஆணையென்றீர் அரசனிடம்சொல்லும்
    சுரம்வந்தவன்போல ஈசுவரமுனி ஆகிவிட்டேன்
    ஊரெல்லாம் போற்றுகின்றார் அவன்புகழை
    பாரினிலே பலகலைகள் பயின்றபண்டிதனாம்
    ஆக்கியாழ்வானிடம் வாதம்செய்வது கொடும்
    நாக்கைநீட்டும் தீப்பிழம்பில் வீழ்வதுபோலாம்
    வாழும்போதே ஊருக்குள் தலைகுனிவதைவிட
    பாழும்கிணற்றில் எனைத்தள்ளுவதே மேலாம்’
    ஈசுவரமுனியின் மகனாம் யாமுனன்கேட்டான்
    ‘பாசமுள்ள தந்தையே தலைகுனியவேண்டாம்
    ஆட்டமாடும் குழந்தையாய் வளர்க்காமலெம்
    பாட்டனிடம் பலகலைகள் பயிற்றுவித்தீர்
    பால்மணம்மாறா பாலகனாய் பார்க்கவேண்டா
    காலம் கனிந்திருக்க நாலுமறிந்தவனாய்
    கற்றவித்தையைக் காண்பிப்பேன் ஊரார்
    போற்றும்விதமாய் ஆக்கியாழ்வானை வென்று
    தந்தைக்கு மகனாற்றும் கடமையென
    சிந்தையிலே கொண்டெனை அனுப்பிவீரே’

    குழந்தையே தெய்வமாய் வந்ததெனத்தன்
    குழந்தையோடு தந்தைசென்றான் வாதுசெய்ய
    தேசத்து நல்மக்களெல்லாம் அதிசயித்து
    பாசத்தால் அவர்பின்னால் சென்றனரே
    கற்றாரும் சுற்றாரும் கலங்கியவராய்
    பற்றுடனே சபையினிலே பார்த்திருக்க
    யாமார்க்கும் அஞ்சோம் நமனையஞ்சோமென
    யாமுனனும் கலங்காமல் பதிலளித்தானே
    சுள்ளென சூட்டிகையாய் சொன்னவிதமும்
    பிள்ளையின் பதில்களத்தனையும் சரியேயென
    சுவையான சொற்கூட்டமென கண்டுகளித்து
    அவையோரும் சான்றோரும் பிரமித்தனராம்
    யாமுனனும் தன்முறைவந்ததும் சொன்னான்;
    யாம்கேட்கும் மூன்றே மூன்றுகேள்விக்கும்
    ஆக்கியாழ்வானோ மறுத்துப் பேசவேணும்
    ஆக்கியாழ்வான் அப்படி மறுக்கவில்லையெனில்
    எம்மறிவின்முன் அவரென்றும் தோற்றவரே
    சம்மதமெனில் செவிமடுப்பீர் எம்வார்த்தைகளை!

    உம்மைப் பெற்றதாய் ஒருமலடியல்லள்
    சிம்மமாய் அரசாளும் எம்ராஜன் ஓர்தர்மவான்
    அம்மையாய் அமர்ந்திருக்கும் அரசியும்பத்தினி
    உம்மால் மறுக்கமுடிந்தால் மறுத்துச்சொல்லும்

    முன்வந்ததே கோபம் ஆக்கியாழ்வானுக்கு
    சின்னஞ்சிறுவனே எப்படியிவைகளை மறுப்பதாம்
    என்னால்மட்டுமல்ல யாராலும் முடியாது
    உன்னால்முடியுமோ முடிந்தால் மறுத்துச்சொல்

    அன்பிலே அனைவருக்கும் மூத்தவளாம்
    அன்னையெனவே உலகம்செல்லும் வழக்குப்படி
    உம்மைப் பெற்றதாய் ஓர்மலடியென்பேன்
    இன்னொன்று பெற்றாளில்லை உமக்குப்பின்
    ஒன்றுபின்னொன்றாய் ஓரிரண்டு பெற்றிருந்தால்
    ஒன்றின் ஆயுள்முடிந்தாலும் அடுத்ததுமீறும்
    விதியின்செய்கை யார்தான் அறிவார்
    விதிவினை விளைவால் நீவிர்மறைந்தால்
    அன்னையவள் பிள்ளைஇல்லாமல் அழுவாள்
    பின்னை நினைக்கையில் இன்னொன்றினை
    பெற்றிருந்தால் பேறடைந்த பெருமையை
    பெற்றிருப்போம் ஆறுதல் அடைந்திருப்போம்
    ஒன்றேபெற்று மலடியாகிப் போனோமெனும்
    தொன்றேவரும் வழக்கை சொல்லிமாள்வாள்

    அரசனென்பவன் அனைவருக்கும் தலைவன்
    அரசனெவ்வழியோ மாந்தர் அவ்வழிதான்
    பொதுவாய் மாந்தரென்போர் நல்லோர்தீயோர்
    அதுபோல் தீயோர்செய்கை அதர்மத்தின்வழியே
    நல்லரசனென்போன் எத்தனைதான் தடுத்தாலும்
    பொல்லாதவர்தாம் பொழுதும் தோன்றுவரே
    மாந்தரிலே அதர்மங்கள் இருக்குமிவ்வுலகில்
    வேந்தன்மட்டும் தர்மவானாக இருப்பதெப்படி?

    உயர்பண்பின்சிகரமாம் மாதரசியார் அவர்தம்
    உயிருக்குயிராம் மன்னவர்தம் கரம்பற்றி
    மந்திரம்படித்து தீவலம்வந்து மணம்செய்தாரே
    மணம்செய்யுமுன் வரும்மந்திரங்கள் அறிவீரோ
    குணவதியாம் இம்மணமகளை தேவர்களாம்
    இந்திரன் சந்திரன் கந்தர்வன் இவர்களிடம்
    வந்தனம்செய்து பெற்றுக்கொள்கிறேனென்றே
    மந்திரம்சொன்னதே அதன்படி பார்க்கையில்
    சொந்தமனைவியே எப்படி பத்தினியாவாள்?

    அரசவைகலகலத்தது மாதரசி எழுந்தாள்
    கரகோஷம்விண்ணைப் பிளக்க மன்னவனும்
    வாதித்த ஆக்கியாழ்வானும் எழுந்துயாமுனன்.
    பாதம்பற்றி தூக்கினர்; கொஞ்சிமகிழ்ந்தனர்
    ‘யாமுனன்வாய் எம்மையாளவந்தவாய்
    பாமரனும் பார்மன்னரும் போற்றும்வாய்
    வாதினில் வென்ற ஞானக்குழந்தையானாய்
    ஏதினிக் குறையெமக்கு வேதவித்தகனே
    பெற்றவர்தம் பெரும்புகழைக் காத்தவனே
    கற்றபயன் இன்னதென்று காண்பித்தாய்
    சோழவளநாட்டுப் பெருமை காத்தவனே
    வாழ்நாள்முழுதும் இனி ஆளவந்தானாக
    அறிவில்பெரியோனாய் ஆற்றல்மிகுந்தவனாய்
    பெரும்பேறுபெற்று பெருவாழ்வு வாழ்வாயே’

    மகவை ஈன்றபொழுது கிடைத்தவின்பத்தைவிட
    மிகமகிழ்ச்சி தந்தாய் எந்தன்மகனேயென
    யாமுனனை அந்தஅவையை ஆளவந்தானை
    தம்மோடணைத்து உச்சிமுகர்ந்தாரே ஈசுவரமுனியே

    —————————————————————————————-

    தித்திக்குதே திருக்குறள் – 7
    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனுஞ் சொல். (குறள் – 70)

    மகன் தந்தைக்குச் செய்யும் கடமை ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.

    (மேலே உள்ளது வைணவ ஆச்சாரியாரான யாமுனாச்சாரியர் (ஆளவந்தார்) சரிதத்திலிருந்தகருத்து)

    Share