திவாகர்

 

ரவியும் கலந்துகொண்டான்.

ஆமாம் சார்.. பாக்கறதுக்கு பரிதாபமா பட்டாலும் தீர விசாரிச்சா பலன் கிடைக்கும்.

 

காவல் நிலையம் வருகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பத்தி விசாரிக்கிறார்

‘என்னய்யா ஆச்சு.. அந்த கந்தசாமி PM ரிப்போர்ட் வந்தாச்சா? ‘வந்தாச்சு சார்.. இப்ப கூட அந்த பொண்ணு பேரு கோம்டி.. என்கிட்டே வந்து உங்க ரெண்டு பேரையும் சொல்லி கந்தசாமி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் காப்பி வாங்கிண்டு போச்சு..’ ‘வாங்கிண்டு போச்சா.. நானே இன்னும் பார்க்கலே.. அதுக்குள்ளே அந்த பொண்ணுக்கு என்ன அவசரம்?’ ‘சார்.. நாங்க ஒரிஜினல் கொடுக்கலை சார்.. ஜெராக்ஸ் காப்பித்தான் கொடுத்திருக்கோம்.. உங்க பேரையும் கல்யாண் பேரையும் சொல்லி கேட்கறச்சே இல்லே’ன்னு சொல்ல முடியுமா சார்..’

கோம்டி வீடு.

கோம்டியின் பல் மருத்துவ மனையில், சாந்தி, அவளது தோழி மற்றும் நர்ஸ்.

 

பல் சுத்தப்படுத்திக்கொள்வதற்காக வந்த ஒரு பெண்ணை அப்படி சுத்தப்படுத்தி முடித்த நர்ஸ்பெண் வெளியே செல்ல அனுமதி கேட்டாள்.

 

“மேடம், இன்னிக்கு ரெண்டு பேர்தான்.. நாளைக்கு நாலு கேஸ் புக் ஆகியிருக்கு.. இன்னிக்கு வேற எந்த கேசும் இல்லே.. என் வேலை முடிஞ்சுடுச்சு. நான் போவட்டா?” “சரி, நீ நாளைக்கு மறக்காம வந்துடு.. டெண்டல் செக்கிங்க் கேஸ்ங்க வந்தா நீயே பார்த்துடு.. சீரியஸ் கேஸ்ன்னா அப்பாயிண்ட்மென்ட் ரெண்டு நாளைக்கப்பறம் கொடு. அப்போ பாக்கறேன். எனக்கு நிறைய வேலை பாக்கி இருக்கு.. நீதான் எல்லாம் பார்த்துக்கணும்.”

தலையாட்டிவிட்டு போகிறாள் நர்ஸ். சாந்தியும் கோமதியும் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டனர். சாந்தி வேடிக்கையாகக் கேட்டாள்..

‘ஏய்.. இப்படியா டென்டல் கிலினிக்கை வெச்சுருப்பே. கிளாஸ்ல நீதான் முதல்ல வருவே. ஆனா என்ன பிரயோசனம்? கோம்டி.. நீ நல்லா பெரிய கிலினிக் வெச்சு கொஞ்சம் தீவிரமா இந்த பிசினஸ் எப்போ நடத்தபோறியோ? விஸாதான் கிடைச்சுடுச்சு இல்லே.. என்னோட அமெரிக்க வந்துடுடி.. நமக்கெல்லாம் அங்கதான் மௌசு..”‘ ‘எங்கம்மா மாதிரி ஆரம்பிக்காதே.. நான் சொன்னேன் இல்லே? எனக்கு இந்த டெண்டலை விட முக்கியமான வேலை இருக்கு. இந்த கந்தசாமி கொலை கேஸை நான் தீவிரமா கையிலஎடுத்திருக்கேன் இல்லையா.. மேலும் கந்தசாமியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எப்படியோ ஒரு காப்பி வாங்கிட்டேன்.. என்ன விசேஷம்னா இது தற்கொலை ஆ கூட இருக்கலாம்னு ரிமார்க் பண்ணியிருக்காங்க.”  ‘எப்படி போனா என்னடி, அவன் போயிட்டான்.. நாசமா போகணும்னு தினம் சாபம் போட்டோம்.. அப்படியே போயிட்டான்.. அது சரி, போலீஸ் இந்த பக்கம்லாம் இந்த கேஸ் விசாரிக்க ஏன் வரல்லே? ஆச்சரியம்தாண்டி. ஏய் சாந்தி, உனக்கு ரவி மூலம் இவனைத் தெரியணுமே?’  ‘தெரியுமே.. ரவியும் பல்லழகனும் பார்ட்னர்ஸ்னு நல்லாவே தெரியும்.’ ‘என்னா ஆச்சரியம்னா, நம்ம ரவி இவனுக்கு ஃப்ரெண்ட்’ந்னு வைசாக்கில தெரியறச்ச எப்படி இவன் நம்மளுக்கு தெரியாம போயிடுச்சுன்னு பார்த்தேன்’.  சாந்தி புன்னகைத்தாள். ‘வைசாக்ல இவங்க ரெண்டு பேரும் காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ். எனக்கு இவனை நம்ம காலேஜ் காலத்திலயே தெரியும். ஆனா ரவிக்கு எவ்வளவோ ஃப்ரெண்ட்ஸ்.. அதனால ஆச்சரியமா படலே. வைசாக்’ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பிக்கறச்சே ஒரு தடவை எங்க வீட்டுக்கு ரவியோட வந்துருந்தான். அப்பவே இவன் நம்ம கிளாஸ்’ல பல்லைக் காட்டி டிஷ்யூ பேப்பர் தின்ன வெச்சது ஞாபகம் வந்தது. ஆனா மரியாதைகாக அவன் முன்னாடி எதுவும் காமிச்சுக்கலே. ஆனா அவன் போனப்பறம் ரவிகிட்ட பல்லழகனோட பல்லைக் காமிச்சு கலாய்ச்சினது கூட இப்போ ஞாபகத்துக்கு வருது’ ‘அதை விடு.. அது எப்படி இந்த கேஸ் தற்கொலை வழக்குன்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சந்தேகமா கூட சொல்லமுடியும்? ரெண்டு குண்டு உடம்புல பட்டுருக்கு. ஒண்ணு நெத்தில.. இன்னொண்ணு மார்புல.. சரி, தற்கொலைன்னே வெச்சுக்குவோம். ஒரு கையாலே அவன் மார்புல சுட்டுருக்கான்? ஆனா உடனே உயிர் போகலேதான்.. இன்னொருவாட்டி அதே துப்பாக்கியாலே அவனே அவனோட  நெத்திப் பொட்டுல குறி வெச்சு சுட்டுருக்கான்.. சரி.. உடனே உயிர் போயிடறது.. இந்த தியரி எப்படி ஒத்து வரும்? ஒருவாட்டி தன்னைச் சுட்டுண்டவுடனே அவன் கீழே விழறதுக்குதான் சான்ஸ் அதிகம்.. அதெப்படி அவன் ரெண்டாவது முறை சுட்டுக்கமுடியும்.. அதுவும் முதல்ல மார்புல அதுக்கப்பறம் சரியா அவன் நெத்திபொட்டுல.. பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறை எப்படி வந்துச்சு.. இதெல்லாம் தற்கொலைக்கு நோ சான்ஸ்.” ‘ஆமாமா.. தற்கொலை பண்றவனா அவன்? நாலு பேரை அப்படி பண்ணிக்க வெச்சு சந்தோஷமா பாத்துட்டுருப்பான். தற்கொலைன்னு முடிவா சொல்லறதா அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்?’ சாந்தி ஆச்சரியத்தோடு கேட்டாள். ‘இல்லே. துப்பாக்கில அவன் கைரேகையில இருக்கு.. ட்ரிக்கெர் பிடில அவன் விரல் இருக்கு.. ஆனா அவனோட ரத்தக்கறை தரையிலயும் பீரோ கைப்பிடியிலும் இருக்கு. அவன் உடம்பு மேல எந்தத் தடயமும் இல்லை, அந்த ரூம்ல யாருமே இல்லாத சமயம் . இதெல்லாம் பாக்கறச்சே தற்கொலைக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.. ஆனா இது ஒரு நிச்சயமான கொலைன்னு எந்த ஆங்கிள்ல்ல சொல்லமுடியும்னு தெரியலே.. அப்படின்னு ரிப்போர்ட் எழுதி கொடுத்திருக்காங்க போஸ்ட்மார்ட்டத்துல.’ ‘உன்னோட பல்லழகர் என்ன சொல்லப் போறாரோ?’ ‘எதுக்குடி அந்த ஆளை என்னோட ஆள்னு சொல்லறே? அவனால் எனக்கு என்ன யூஸ்? அவனோட கேஸ் நான் எதுக்கு ஹாண்டில் பண்றேன்னா என்னோட ஒரே நோக்கம் இந்த கேஸ் மூலமா அந்தக் கந்தசாமியோட லீலைகள் வெளியே தெரியணும்னுதான். என்னோட டிரெயின்ல டிராவல் பண்றச்சே என்னமா அவன் பெரியப்பா பத்தி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துண்டு பீத்திண்டு வந்தான் தெரியுமா.. நானும் உண்மை தெரியாம அம்போ’ன்னு ஆனந்தமா காது கொடுத்துக் கேட்டுட்டு அவன்கூட சேர்ந்து நாலு எக்ஸ்ட்ரா புகழ் வார்த்தைங்களை கந்தசாமின்னு தெரியாமயே சொல்லி வெச்சேன்.. இல்லல்ல.. இந்த பல்லழகன் ஒரு பாசக்கார ஆசாமி.. இவனுக்கு இவன் பெரியப்பா பெரிய நோபிள் பெர்சன்னு நினைப்பு. இந்த கேஸை விசாரிக்க தெய்வமே நமக்கு ஒரு சந்தர்ப்பமா கொடுத்துருக்கு. நாம் சரியா இதை ப்ரூவ் பண்ணி அந்த கந்தசாமி மகா பெரிய அயோக்கியன்னு அட்லீஸ்ட் இந்த வளர்ப்பு மகனாவது தெரிஞ்சுக்கணும்டி, பார்ப்போம். இவ்வளோதான் இவனால எனக்கு உபயோகம்.. வேறென்னடி இவனால எனக்கு பிரயோசனம். வேணுமின்னா இவன் எத்துப்பல்லை அழகா ஒரு க்லிக் பண்ணி ஃப்ரேம் போட்டு இந்த க்லினிக்’ல மாட்டலாம். விளம்பரத்துக்கு உபயோகப்படும்.’ திடீரென எதையோ நினைத்துக்கொண்டவள் போல சாந்தியைக் கேட்டாள். ‘ஏண்டி சாந்தி.. ரவிக்கு கந்தசாமி விஷயம், நாம சம்பந்தப்பட்டது எல்லாம் தெரியுமா? நீ எதுவும் சொன்னியா? ஐய்யய்யோ.. இதெயெல்லாம் வீட்டுல சொன்னா அன்னிக்கே என்னை பேக் பண்ணி அமெரிக்கா அனுப்பியிருப்பாங்க.. ஏண்டி.. உங்கப்பாவும் உங்க அம்மாவும்தானே இத்தோட விட்டுருங்க இந்த விஷயத்தைன்னு சொல்லி நமக்கு அட்வைஸ் பண்ணினாங்களே.. மறந்துட்டியா? ரவிகிட்டே சொன்னா சும்மா இருந்திருப்பானா? இல்லே அவனுக்கும் தெரியாது.. கம்முனு இருப்போம்.. இப்போ கூட நாம் எதுவும் இவங்ககிட்ட அதைப் பத்திச் சொல்லப்போறதில்ல..

அந்த சமயத்துலே கல்யாண் கதவைத் தட்டுகிறான்

‘உள்ளே வரலாமா?’ கல்யாண் குரல் கேட்கிறது. ஒரு சிரிப்பை வேண்டுமேன்றே வரவழைத்துக்கொண்டு அவனை உள்ளே வரவேற்கிறாள். ‘வாங்க வாங்க.. அட, நீங்க எப்படியும் என்னோட டென்டல் கிலினிக் என்னிக்காவது ஒரு நாள் வரவேணும்தான்.. வாங்க உட்காருங்க!!’ ‘இது சாந்தி.. ஹேய்.. எப்படி இருக்கே.. .’ என்று சாந்தியைப் பார்க்கிறான். ‘ஓ.. ரவியோட தங்கை உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயம் இல்லையா.. எனக்குதான் இதெல்லாம் தெரியாம போயிடுசு.. இவள் என்னோட கிளாஸ்மேட் கூடவே க்லோஸ் ஃப்ரெண்ட். உங்களுக்கு எங்க கிளாஸ்ல நான் அந்த டிஷ்யூ பேப்பரை உள்ள தள்ளறச்சே கூடவே இருந்து அது உங்க வாய்க்குள்ள நல்லா போகறதா’ன்னு பார்த்தவ.. அத்தோட இவளோட அண்ணன் உங்க ஃப்ரெண்ட்ங்கிற விஷயம் இப்போதான் சொன்னா.. இவ சீக்கிரமே யுஎஸ் ல டென்டல் கிளினிக் வெக்க போறா,. எனக்கும் வேலை வாங்கி தர்ரேன்னு அங்க வர சொல்லறா. ஆனால் நான் இன்னும் ஒண்ணும் சொல்லலே..’ ‘ஆமாங்க.. நான் உங்களுக்குப் பெரிய பொறுப்பு கொடுத்திருக்கேன், அதை முடிச்சுட்டு நீங்க எங்க வேணும்னாலும் போகலாம்.’ சாந்தி ஆச்சர்யமாக பார்க்கிறாள். “என்ன பொறுப்பு கல்யாண்?” “ஓ.. உனக்கு இன்னும் சொல்லலியா?” கோமதி சட்டென குறுக்கிடுகிறாள் “சாந்தி, இவர் என் கூட டிரெய்ன்ல வரச்சே எனக்கு சாதாரணமா ரவியோட பார்ட்னர்ன்னுதான் தெரியும். இவங்க பெரியப்பாதான் எதிர்வீட்டுக்காரர்னு தெரியாது. உனக்கு சொன்னேன் இல்லையா எதிரிவீட்டுல கொலை ஒண்ணு விழுந்துடுச்சுன்னு. இப்போ இவரோட பெரியப்பா கேஸ் இன்வெஸ்டிகேஷன்ல நானும் ஒரு பங்கு எடுத்துண்டிருக்கேன்..”

“உனக்கு எதுக்குடி இந்த பெரிய மர்டர் கேஸெல்லாம்?” வேண்டுமென்றே கேட்டாள் சாந்தி.

 

கல்யாண் குறுக்கிடுகிறான்.

“சாந்தி! உன் ஃப்ரெண்ட் இந்த மாதிரி இன்வெஸ்டிகேஷன் நல்லாவே பண்றாங்க.. உங்கண்ணனோட வைசாக்’ல சாகஸ வேலைல்லாம் செஞ்சு ஒரு நல்ல குடிமகனை பிரிச்சு வெச்சிருக்காங்க.. ரவியைக் கூட கொஞ்ச நாள் இங்கயே இருந்து உன் ஃப்ரெண்ட்க்கு உதவும்படி சொல்லியிருக்கேன். பாரு சாந்தி.. எங்க இன்ஸ்பெக்டர் பாக்கறதுக்கு முன்னாடியே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட பார்த்துட்டாங்க.. கோம்டி! பி எம் ரிப்போர்ட்ல எங்க பெரியப்பா தற்கொலை பண்ணியிருக்காராம். ஆனா இன்ஸ்பெக்டர் மோகன் நம்பறார். அப்படி ஒரு சந்தர்ப்பம் அதிகம் இருக்குங்கிறார்.” “நான் நம்பலே கல்யாண். பி எம் ரிப்போர்ட்ல கூட ஒரு சந்தேகமாதான் தற்கொலையைப் பத்தி சொல்லியிருக்கு. சான்ஸ் இருக்குன்னு சொல்லிச்சே தவிர தற்கொலைதான்னு முடிவாச் சொல்லலியே.. நீங்க என்ன ஃபீல் பண்ணறீங்க?” “எனக்கும் அவர் தற்கொலை பண்ணியிருப்பார்னு தோணலீங்க. நான் ஏற்கனவே சொன்னமாதிரி முதல்ல அவர் கோழை இல்ல.. தற்கொலைக்கான மோடிவ் கூட அவரைப் பொறுத்தவரை கிடையாது”. “சரியா சொன்னீங்கதான். ரெண்டு குண்டும் வெவ்வேற இடத்துல பாய்ஞ்சுருக்கறதை வெச்சே இதை ஒரு கொலைன்னு நிரூபிக்கலாம். ஆனா கொலைகாரன் யாரு? மோடிவ் என்னங்கறதைத் தெரிஞ்சுண்டாகணும்.”  “ஆமாங்க.. பொட்டுல பாய்ஞ்ச குண்டு ரொம்ப ஆழமா பாய்ஞ்சிருக்கறச்சயே அவர் உயிர் போயிருக்கணும். ஆனா போஸ்ட்மார்ட்டம் ஒரு சின்ன குறிப்பு சொல்றது பார்த்தீங்களா..?” “என்ன குறிப்பு?” “மார்புல உள்ள குண்டுதான் முதல்ல பாய்ஞ்சதுன்னும் அதுக்கடுத்த ரெண்டாவது குண்டு மினிமம் அரை மணி நேரம் கழிச்சுதான் பாய்ஞ்சிருக்குன்னு சொல்றது. அந்த டாக்டர் குழப்பி இருக்காரான்னு தெரியல.. இன்ஸ்பெக்டர் என்ன சொல்றாருன்னா தற்கொலைன்னு வரப்போ இவரே துப்பாக்கியை எடுத்து  முதல்ல தன் மார்புல சுட்டுண்டு இருப்பார். ஆனா அதுல உயிர் போகாம வலியால அவதிப்பட்டிருக்கலாம்.. மயக்கம் வந்திருக்கலாம் அல்லது அரை மணி நேரம் கழிச்சு கொஞ்சம் தெளிஞ்சுபோய் எங்க இந்த துப்பாக்கி குண்டு சரியா பாயலையோன்னு நினைச்சு திரும்பவும் துப்பாக்கியைத் தேடித் துழாவி எடுத்துத் தன் பொட்டுல அழுத்திச் சுட்டுருக்கலாம். அந்த குண்டு கொஞ்சம் ஆழமா உள்ளே போனதாலே உயிரும் உடனடியாக போயிருக்கும்.. இப்படியெல்லாம் வாய்ப்பு இருந்தாலும் அந்த துப்பாக்கி அவரோட கையிலேதான் இருந்ததே தவிர கைவிரல் ரேகை முழுசா இருந்தாலும் அதை யாராவது அவரு கையில கொடுத்திருக்கலாம்னும் ரிப்போர்ட் சொல்றது.. உயிர் போகல்லேன்னு தெரிஞ்சுதும் மார்புல சுட்டவன் மறுபடியும் அரை மணி நேரம் கழிச்சு வந்து இவர் பொட்டுல வெச்சுச் சுட்டிருக்கவும் வாய்ப்பிருக்குன்னும் ரிப்போர்ட் சொல்லுது. கன்ஃபூஷன்.”

கோம்டி அவனை உற்றுப் பார்த்துக் கேட்டாள்..

“அந்த அரை மணி நேரம் அங்க ஒரு குழப்பம் நிலவியிருக்கு. அதுக்கப்பறம்தான் அதாவது மார்புல சுட்ட அரை மணி நேரம் கழிச்சுதான் கொலைகாரன் பொட்டுல அழுத்தி வெச்சு சுட்டுருக்கான். யாரா இருக்கும் அவன்?. அப்படின்னா மார்புல சுட்டுட்டு சினிமாவுல வர்ர மாதிரி வசனமெல்லாம் பேசி கேள்வி கேட்டு அதுக்கு அவர் பதில் கொடுத்தவுடனே அதுக்கப்பறம் கோபம் வந்து பொட்டுல துப்பாக்கியை வெச்சு அழுத்தி சுட்டுருக்கான் அந்த வில்லன். சரியா கல்யாண்?..” “இப்போ டோடல் கன்ஃபூஷன்.”

கோம்டி அவனை சாந்தமாகப் பார்த்தாள்.

“கல்யாண்.. துப்பாக்கியால சுட்டது உங்க பெரியப்பாவா அல்லது இன்னொருத்தனா என்பதை ஒரு பக்கம் வையுங்க.. ஆனா அதுக்கு முன்னாலே இந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பிச்சதுன்னு தெரியணும்.. ஆனா ஒரு குண்டுக்கும் இன்னொரு குண்டுக்கும் உள்ள இடைவெளியே இது தற்கொலை இல்லேன்னு நிச்சயமா சொல்லலாம். போலீஸ் எப்பவுமே கேஸை முடிக்கறதுக்குதான் பாக்கும். அவங்க தற்கொலைன்னு சொன்னாலும் நாம எப்படியும் கொலைங்கற ஆங்கிள்ல பார்த்தாதான் கொலைகாரனைப் பிடிக்கமுடியும். அதனாலே மிஸ்டர் கல்யாண்.. உங்க பெரியப்பா நிச்சயமா கொலை செய்யப்பட்டிருக்கார்.”

கல்யாண் அவளையே பார்த்துக்கொண்டு தலையசைத்தான். சாந்தி மட்டும் அவளைத் திருப்பிக் கேட்டாள்.

“கோம்டி.. இது ரொம்ப பெரிய கேஸா போகறமாதிரி தெரியுதுடி.. இந்த கேஸை எடுத்தேன்னா நீ எப்போ அமெரிக்கா வர்றதுடி?.. இதைப் பேசாம போலீஸ் கையிலே விட்டுடு.. அவங்க பார்த்துக்கட்டும்.”  இல்லை என தலையசைத்தாள் கோம்டி.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.