Tag: கவிஞர் காவிரி மைந்தன்

  • தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

    –கவிஞர் காவிரி மைந்தன்

     

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

     

     

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்சுதந்திரம் என்பது ஒரு மந்திரச் சொல்லாய் முழங்கிய காலம் இந்தியாவில் உண்டு! வந்தே மாதரம் என்றும் மக்கள் தெருவெங்கும் உரக்கக்குரல் கொடுத்த உரிமைக்குரல்கள் கண்ட விடியல்தான் நாம் பெற்ற சுதந்திரம்!

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கவிஞர் முத்துலிங்கம் கற்பனையில் உருவானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது கவிஞரின் உள்ளத்தில், அடிமனதில், குடிகொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாய் காணலாம்!

    புரட்சிப்பாடலில் இடையே பூத்திருக்கும் கற்பனையைப் பாருங்கள்! கவித்துவச் சிந்தனையின் செழுமை முழுமைபெற்ற கவிஞருக்கு வாய்க்கும் அரிய வரிகளிவை!
    தென்பாங்குத் தென்றல் பண்பாடும்நாட்டில்..

    அடக்கு முறைக்கு அடங்க மறுத்த புரட்சியாளனாய்.. கதையின் நாயகன் புறப்பட்டு வருகையில்.. கண்ணில்படும் அவலங்கள் அவன் கருத்தில் நிறைகின்றன சொல்லும் பொருளும் ஒன்றையொன்று இங்கே ஆள்கின்றன. அதனால் கவிதை வாழ்கிறது!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் அளித்த தேவகானங்கள் – பல்விதமானவை என்பதற்கு இப்பாடலும் தக்கதோர் சாட்சியாகும்.
    டி.எம்.எஸ். குரலில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களில் இதுவும் ஒன்று!
    இதில் புலவர் முத்துலிங்கம் பங்களிப்பு கணிசமானது! அதுவே கவிதையானது!!

    http://youtu.be/bMKijer7fZg
    காணொளி: -http://youtu.be/bMKijer7fZg

    திரைப்படம் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா
    இசையமைப்பு – மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி.
    பாடலாசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடல்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடைமைச் சமுதாய் மலர்ந்திட வேண்டும்

    கண்கவரும் கலைகளெல்லாம் வளர்ந்தது இங்கே
    களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
    நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் எங்கே
    நிமிர்ந்தெழுந்தால் தடைகளெல்லாம் உடைந்திடும் இங்கே

    வீரமுண்டு வெற்றியுண்டு.. விளையாடும்களம் இங்கே உண்டு
    வா வா என் தோழா..
    பூனைகள் இனம்போல பதுங்குதல் இழிவாகும்
    புலியினம் நீயெனில் பொருதிட வாராய்.. (வீரமுண்டு)

    தென்பாங்குத் தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
    நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
    நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ வா. வா.. என் தோழா..

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

     

     

    Share
  • நாடு அதை நாடு….

    கவிஞர் காவிரி மைந்தன்

    காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு வேட்டையில் நாட்டம்! அன்று தொடங்கிய நாட்டம் வேட்டையில் மட்டும்! நாட்டில் வாழும் மனிதர்களுக்கோ ஆயிரம் நாட்டங்கள்! அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடுதல் தேவையே!

    நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நமக்கெனப் பொதுவான நாட்டம் இருக்க வேண்டும்!

    சுதந்திர வேட்கை உருவானதும் அப்படித்தான்! மொழியின்மீது நாட்டம்.. தாய்மொழியென்றும் தமிழ்வழியென்றும் நாடுதலும் இஃதே!

    நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவது அத்தியாவசியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பென்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே உணர்வில்.. உரத்த குரலில் எழுந்து நின்றால்.. பகை திசைமறந்து ஓடும்! எங்கெல்லாம் ஒரு இனம் நசுக்கப்படுகிறதோ.. அங்கெல்லாம் இப்பாடல் தலைமை தாங்கும்!

    வீரம், பண்பாடு, நெறிகள் என அனைத்திலும் தழைத்திடும் நம் பாரத தேசம் – அதன் மாண்புகள் இவையணைத்தையும் ஒற்றைப்பாடலில் கவியரசர் வரைந்துள்ளார் பாருங்கள்!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அற்புத விளைச்சல்!
    டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா குரல்களில் நாடோடி படப்பாடல்!

    ”நாடு அதை நாடு”
    நாடு அதை நாடு
    அதை நாடாவிட்டால்
    ஏது வீடு?

    பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
    மானம் பெரிதென்று வாழும் பண்பாடு”

    பாலைவனம் என்ற போதும் நம் நாடு
    பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
    ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
    வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

    வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
    வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
    வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
    வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

    பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
    பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
    நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
    எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

    திரைப்பாடல் என்பது எப்படி மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்கு இலக்கணமாய் இப்பாடலை வையுங்கள்! ஏதோ எழுதுபவர்களை சற்றே வையுங்கள்! ஒதுக்கி வையுங்கள்!!

    Share
  • ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!

    கவிஞர் காவிரி மைந்தன்

    மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., 1965ம் ஆண்டில் நடித்து வெளியான, ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் நவீன மயமாக்கப்பட்டு, (14.03.2014) தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், 110 திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., மறைந்து, 37 ஆண்டுகள் ஆனாலும், அவரது செல்வாக்கு குறையவே இல்லை என்பதை, இந்த படம் நிரூபித்துள்ளது.

    சென்னையில், 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள், மலரும் அனுபவங்களில் மூழ்கினர். அவரது பல படங்கள், ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ‘சத்யம்’ திரையரங்கில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர். தேர்தல் நேரத்தில் படம் வெளியானதால் அ.தி.மு.க.,வினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    “புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்துக்குள் ஒளித்து வைத்திருக்கிற மயில் இறகை, ஒரு புதையலை பார்ப்பது போல் புத்தகத்தைத் திறந்து பார்த்து மகிழ்ந்து போகும் பள்ளிச் சிறுவர்களைப் போல, ஒரு சில காவியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது, மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.”

    2014ல் திருமதி.சாந்தி சொக்கலிங்கம் அவர்களின் முயற்சியில்.. தயாரிப்பில்.. மறு உருவாக்கத்தில் 1965ல் வெளியான பத்மினி பிக்சர்ஸாரின் பிரம்மாண்டப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் நவீன தொழில்நுட்பவடிவம் பெற்றது! மார்ச்சு 14.03.2014ல் தமிழகம் முழுவதிலும் புதிய திரைப்பட வரவேற்பை விட அதிகம் பெற்று மறுவெளியீடு செய்யப்பட்டது! எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்து திரையரங்குகளில் குவிந்திட திருவிழாக் கோலம் ஒவ்வொரு ஊரிலும்! என்ன இது சாத்தியமா என்கிற கேள்வி பிறக்கிறது! ஆம்! நண்பர்களே.. ஒரு வரலாறு புதிய வரலாற்றை எழுதியது!!

    எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!

    திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?

    உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

    கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?

    மக்கள் திலகம்

    கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

    பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

    கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

    மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

    என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

    அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

    நன்றி – பூங்குழலி – http://mgrsongs.blogspot.ae/

    எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!

    வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!

    அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 27 ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!

    எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!

    ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!

    அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.

    பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!

    பருவம் எனது பாடல்..

    இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

    கருணை எனது கோயில்.. கலைகள் எனது காதல்!

    முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

    கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

    50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

    பருவம் எனது …

    பருவம் எனது பாடல்paruvam enathu paadal
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்
    கருணை உனது கோயில்
    கலைகள் உனது காதல்

    இதயம் எனது ஊராகும்
    இளமை எனது தேராகும்
    மான்கள் எனது உறவாகும்
    மானம் எனது உயிராகும்
    மான்கள் உனது உறவாகும்
    மானம் உனது உயிராகும்
    தென்றல் என்னைத் தொடலாம் –
    குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
    மலர்கள் முத்தம் தரலாம் –
    அதில்மயக்கம் கூட வரலாம்
    (பருவம்)

    சின்னஞ்சிறிய கிளி பேசும்
    கன்னங்கரிய குயில் கூவும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை எனக்குத் துணையாகும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை உனக்குத் துணையாகும்
    பழகும் விதம் புரியும் –
    அன்பின்பாதை அங்கு தெரியும்
    பயணம் அதில் தொடரும் –
    புதுவாழ்க்கை அங்கு மலரும்

    ஏன் என்ற கேள்வி ?
    பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவைப்பெற்ற மனிதர்கள் நாம்! எது சரி.. எது தவறு? ஏன் இப்படி? என்னும் வினாக்களின் அணிவகுப்பு நெஞ்சில் எழுந்துகொண்டேயிருக்கும்! இதற்கான விடையை அறிந்து அதில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து, அல்லவனவற்றை துறந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? இதோ கதையின் நாயகன் அடிமைப்பட்ட வீரர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய சூழலில் அவர்கள் மனதிற்கு தேவையான பாடங்களை.. அறநெறிகளை.. தர்ம சிந்தனைகளை, புரட்சி விதைகளை.. பொறுமையின் அவசியத்தை.. பொங்கும்தமிழில் எடுத்துவைக்க.. அதற்கேற்ற இசையும் தன் சிம்மக்குரலால் இப்பாடலுக்கு சிறப்பு சேர்த்திட்ட டி.எம்.செளந்திரராஜன் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகுதியானவராக.. வீறுகொண்ட கர்ஜனை விவேகத்துடன் அரங்கேறும் காட்சியிது! மக்கள்திலகத்தின் வாழ்க்கைப்பாதையில் இதுபோன்ற பாடல்கள்தான் அவரின் வெற்றிப்படிகள் என்பது மறைக்கப்படாத ரகசியமாகும்!

    ஏன் என்ற கேள்விen endra kelvi
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

    கேள்விகள் கேட்டதனாலே
    பகுத்தறிவு பிறந்ததெல்லாம்

    கேள்விகள் கேட்டதனாலே
    உரிமைகளை பெறுவதெல்லாம்

    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    உரிமைகளை பெறுவதெல்லாம்

    உணர்ச்சிகள் உள்ளதனாலே
    ஏன் என்ற கேள்வி

    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்

    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
    இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
    நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
    இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
    புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
    இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருப்பது ?

    ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

    ஏன் என்ற கேள்வி

    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்

    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
    எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
    சந்தேகம் என்ன ?
    நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
    ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

    நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
    மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்

    நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
    மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
    நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
    அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
    முன்னேற்றம் என்பதெல்லாம்

    உழைப்பவர் உழைப்பதனாலே
    கடமைகளை புரிவதெல்லாம்
    விடுதலை வேண்டுவதாலே

    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
    ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
    நான் என்ற எண்ணம்
    கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

    http://www.youtube.com/watch?v=qAHlMihcxzU

    படத்தில் வரும் ஒரு திரைப்பாடல் என்று விட்டுவிடக்கூடிய பாடலா இது? பள்ளியில் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு உணர்த்தப்படவேண்டிய பாடமிது! அடிமைகளின் வாழ்வில் பரவ வேண்டிய வெளிச்சக்கீற்று இந்தப்பாடலில் தெரியவில்லையா? அவர்களின் வாழ்க்கையில் தன்னலம் இல்லாத தலைவனைப் பெற்றுவிட்டால்.. சுதந்திரப் போராட்டம் வெற்றியைத் தொடுவது நிச்சயம்தானே! அருமையான சூழ்நிலைக்கு ஏற்ப.. எழுதப்பட்ட வரிகள்.. கவிஞர் வாலியைச் சார்ந்தது! பாடலின் இடையே வருகின்ற வசனங்கள் ஆர்.கே.சண்முகம் அவர்களுடையது. எத்தனைப் பொருத்தமாய்.. இந்தப்பாடலில் வசனங்கள்!! மறக்க முடியாத மாணிக்க வரிகள் மனதில் பதித்துக்கொண்டால் புதுமை உணர்வுகள் வளரும்! புரட்சியின் பூரண அர்த்தங்கள் விளங்கும்!!

    Share
  • நான் உன்னை அழைக்கவில்லை

    கவிஞர் காவிரி மைந்தன்

    நான் உன்னை அழைக்கவில்லை…- கவியரசு கண்ணதாசன்

     

    அன்பின் சங்கமம் – ஆண், பெண் இருவரது உறவில் அடிப்படையானது. தன்னை நேசிக்கும் நெஞ்சமது என்கிறபோது, தாமாக ஊற்றெடுக்கும் கங்கையாகிறது! ஊண், உறக்கம் யாவும் மறந்து உறவை நினைக்கிறது! ஏன்? எதற்கு?? என்கிற கேள்விகள் எழுகின்றன! படபடக்கும் நெஞ்சத்தோடு பார்வை தேடி அலைகிறது! துடிதுடிக்கும் இதயத்தில் தூவானம் போடுகிறது! அவனுக்கு அவளென்பதும் – அவளுக்கு அவனென்பதும் ஆனந்தப் புதையலாகிறது! இந்த நிலை தொடர்கிறதா? பிரிவு வந்து சேர்கிறதா? பாதிப் பாதியென இருவருமே பரிதவிக்கும் நிலைதானே பிரிவு வரும் வேளைதன்னில்.. அழுவது கூட ஆனந்த சுகமென்றே அடிமனம் நினைக்கும்!

    காரணம் தெரியாமல் கதறும் நிலைதன்னில்.. கதாநாயகன் பாடுகிறான்! கதையின் ஓட்டத்தில் கதாநாயகி.. அவனைப் பிரிகின்றான்! எங்கிருந்தோ வந்தால் என்கிற திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் மகோன்னத நடிப்பில் – பிரிவுக்கு ஆயிரம் பொருள் சொல்லும் முக பாவனைகளுடன் .. புலம்பலின் வெளிப்பாடுகளுக்கு வார்த்தைகள் வழங்கிய கவியரசு கண்னதாசன்!

    தத்தளிக்கும் மனதின் தவிப்புகள் இதுவா? இதயத்தின் வழியை உணர்த்தி நிற்கும் வரிகளா? கண்களிரண்டும் கலங்கித் ததும்பும்! சொல்லும் வார்த்தையில் துயரம் வழியும்! உயிரூட்டியிருக்கிறார்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். உணர்வூட்டியிருக்கிறார் டி.எம்.சௌந்தரராஜன்..

    திரைப்பாடலில் பாவங்கள் காட்டி நடிக்க.. ஒரு நடிகர் திலகமும்.. பாடி கொடுக்க ஒரு டி.எம்.எஸ்ஸும் மெட்டமைக்க ஒரு எம்.எஸ்.வியும் .. பாடல் வடித்துத் தர .. ஒரு கண்ணதாசனும் – தேவன் தந்த வரங்களா?

    இதைப் போன்ற பாடல்கள் எத்தனை தந்தாலும் ரசிப்பதற்கு கோடான கோடி இதயங்களும் – பிரிவு என்கிற கடலில் தள்ளப்படும் ஒவ்வொரு உள்ளத்திலும் அலை மோதும் பாடலிது!

    ஒருமுறை டி.எம்.எஸ். அவர்களை சந்திக்கச் சென்றிருந்தபோது.. எனக்காக இந்தப் பாடலை பாட முடியுமா என்று கேட்டேன். எந்த இசைக் கருவிகளும் பக்கம் இல்லாமல் பாவம் மாறாமல் பாடிய அந்த மேதையை நன்றியுடன் இன்றும் நினைக்கிறேன்.

    நான் உன்னை அழைக்கவில்லை.. என் உயிரை அழைக்கிறேன்!hqdefault

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா………… விவரம் புரியாதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
    இரக்கம் பிறக்காதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    பாடல் : நான் உன்னை அழைக்கவில்லை
    பாடியவர் : டி.எம். சௌந்தர்ராஜன்
    வரிகள் : கண்ணதாசன்
    இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
    திரைப்படம் : எங்கிருந்தோ வந்தாள்

    நான் உன்னை அழைக்கவில்லை – Naan Unnai Alaikavillai – Engirundho Vandhaal – MS Viswanathan – YouTube
    Share
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. கவியரசு கண்ணதாசன்

    படம்: அவளுக்கென்று ஒரு மனம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    எழுதியவர்: கண்ணதாசன்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்hqdefault
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
    வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
    ஆசையில் விழுந்தேன் அங்கே
    ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. பல்லவியில் உள்ள சுகம் அனுபவிக்க இன்னுமொரு பிறவி வேண்டுமோ? இந்த வரியை வாசிக்கும்போதும், பாடலைக் கேட்கும்போதும் உள்ளத்தில் சுகம் ஆறாகப் பெருகி வருகிறது! இசையின் கோர்வை பாடலை உச்சத்திற்கு இட்டுச் செல்ல.. குரலின் இனிமை நம்மை ஏதோ இன்பத்தீவிற்கு கடத்திச் செல்கிறது.

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது

    சரணமா? இது சரம் சரமா? வாரத்தைகளில் உள்ள எளிமை.. இசையில் விளையும் இனிமை.. ரசித்துக் கேளுங்கள்.. ஆனந்த பைரவியா அல்லது மோகனமா? நானறியேன்..

    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ…. தடுத்தால் கூட தருவேன்

    மொத்தத்தில் இங்கே பெண்மை பேசுகிறது! வன்மையைத் தொட்டு ஒரு பெண்மையை பேச வைக்கும் கவிஞரின் திறமெண்ணி வியக்கிறேன்!

    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

    எத்தனை எளிமையான சொற்கள்.. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே.. கவி ஆட்சி நடத்துகின்றார்! பாடலை உணர்ந்து கேளுங்கள்.. காதலின் பவித்ரம் புரியும்!

    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது

    கனகச்சிதமான வார்த்தைகள் நெருக்கமாய் தொடர்ந்துவர.. கவித்துவம் ததும்பி காதலைச் சொல்லி நமக்கு மயக்கம்தர..

    என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
    ஆசையில் விழுந்தேன் அங்கே
    ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

    கனவா நனவா.. கவிதைச் சுவையா? பாட்டு ஒன்றுக்குள் பல்சுவை தருகின்ற பல்கலைக்கழகம் கண்ணதாசன் எனலாமா?

    கவிஞர் எழுதிய திரைப்பாடல்களின் பல்லவிகள் பல நேரங்களில் திரைப்படங்களாய் வெளியாகின என்பதற்கு சான்றுகள் பல உண்டு! இதோ அவ்வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..

    -கவிஞர்.காவிரிமைந்தன். துபாய். 

     

    http://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q

     

    Share
  • முத்தமிழில் பாட வந்தேன்….

    கவிஞர் காவிரி மைந்தன்

    முத்தமிழில் பாட வந்தேன்….கவிஞர் பூவை செங்குட்டுவன்.. குன்னக்குடி வைத்யநாதன் வாணி ஜெயராம்…. ஏ.பி.நாகரஜன்

    மேல்நாட்டு மருமகள் என்கிற திரைப்படத்தை இயக்குனர் ஏ.பி.நாகரஜன் இயக்க.. இசையமைக்க குன்னக்குடி வைத்தியனாதன் பொறுப்பேற்க.. சங்கீதத்தில் கர்நாடக வித்வானாக.. விளங்கிய குன்னக்குடிக்கு இப்படம் எப்படி பொருந்தும் என்கிற வினாவை வில்முறித்த கதையாக்கி.. முத்திரை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். இசையில் மேல்நாட்டு மருமகள் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

    திரைக்கதையில் வருகின்ற கதாநாயகி ஆங்கில நாட்டிலிருந்து தமிழகம் வந்து நம் தமிழ் மொழியைக் கற்றுத்தேர்ந்து பாடகியாய் மேடையில் தோன்றி தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ்க்கடவுள் முருகனது சிறப்பையும் ஒருசேர பாராட்டி பண்ணிசைக்கும் பாடலாக..

    முருகன் Specialist என்று பட்டயம் தரலாம் என்னுமளவிற்கு சிறப்புற பாடல்கள் வழங்கி வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதிய வரிகளுக்கு மனதை மயக்கும் இசை குன்னக்குடி வைத்தியனாதன். சங்கீதக்கலாவாணி என்று சபைகளெல்லாம் புகழப்படும் திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரலில் இந்தப் பாடல் கந்தன் கருணையும் காட்டுகின்றது பாருங்கள்!

    மல்லிகை என் மன்னன் மயங்கும் என்கிற பாடலைப் பாடிய அதே குரல்.. முத்தமிழில் பாட வரும்போது கேட்டு மகிழாத உள்ளங்கள் ஏது? பூவையாரின் வரிகளில் உள்ள பொருள் யாவும் தமிழுக்குப் பெருமையும் கந்தனின் கருணையுமாய் தவழ்கின்ற கானமிது!

    வரம்பெற்ற மா கவிகள் வரைந்தளித்த பல்லாயிரம் செய்யுள்கள்.. மக்கள் மனதில் ஏற்படுத்த இயலாத தாக்கத்தை 16 வரிகளிலே வரையப்படும் ஒரு திரைப்பாடல் ஏற்படுத்தி விடுகிறது. எப்படி தெரியுமா? அதுவே இசையுடன் இணைந்த கவிதையின் பெருமை!!

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன் –

    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    வேலனேன்றால்வீரம்வரும்
    கந்தனென்றால்கருணைதரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஷண்முகனைசரணடைந்தால்
    சங்கீதம்பாடவரும்
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுபடைவீட்டில்ஓடிவிளையாடும்
    சுவாமிநாதனேசரவணனே
    ஆறுமுகம்கொண்டுஆறுதல்தந்து
    கோடிநலம்காட்டும்குருபரனே

    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்
    தித்திக்கும்குமரன்பெயரில்
    தெய்வீகஅழகைக்கண்டேன
    முத்தமிழில்பாடவந்தேன்
    முருகனையேவணங்கிநின்றேன்

    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பாரதத்தாய்மடியினிலே
    பண்புடனேதவழுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    பழமையெல்லாம்நினைவூட்டும்
    பைந்தமிழில்பாடுகிறேன்
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    காலவரலாறுபோற்றி, புகழ்பாடும்
    கவிதையாவுமேதனித்தமிழே
    நாளும்முறையோடுநன்மைபலதேடி
    வாழவழிகூறும்திருக்குறளே முத்தமிழில்பாடவந்தேன்


    Muthamizhil Paada Vandhen – Melnattu Marumagal.flv
    Share
  • காதல் சிறகை காற்றினில் விரித்து

    கவிஞர் காவிரி மைந்தன்

    sddefault

    எண்ணிய வண்ணமெல்லாம் இதயம் பறக்க நினைக்கும் பருவம் இந்தக் காதல் பருவம்! வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதைப்போல் மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க உயிர்ப்பூ சிலிர்க்கும்! இன்னுமிதைப் பற்றி எத்தனையோ புலவர்கள்.. கவிஞர்கள்.. படைப்பாளிகள் கொட்டிக் கவிழ்த்தபின்னும் கொள்ளையாய் கிடக்கிறது இந்தக் காதல் சுரங்கம்! இதய அரங்கிலிருந்து துவங்கும் இந்த ரகசியப் பாதையில் இருவரின் சந்திப்பு.. இமைகளின் படபடப்பு! இயற்கையின் படைப்பில் ஜீவன் உள்ளது என்பதற்கு காதல் மட்டும்தான் சத்திய சாட்சி!!

    இளமையின் அரசல் புரசலான விஷயமல்ல.. இதயங்களின் பரிவர்த்தனை! ஆலாபனை! அன்பில் இருமலர்கள் ஒரே நேரத்தில் மலரும் விசித்திரம்! ஆனால் உண்மை!! கண்கள் நான்கும் கவிதை பாடும்! இமைகள் இருப்பது அப்போதுதான் இருவருக்கும் தெரியவரும்!! ஒரு முறை பார்வை நேரடியாய் விழுந்துவிட்டால் ஒரு கோடி கிடைத்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும்! மறுபார்வை பார்ப்பதற்குள் தடைகள் வந்துவிட்டால் மனமிரண்டும் தத்தளிக்கும்! மறு ஜென்மமே எடுக்கும்!

    எனக்காகப் பிறந்தவள் நீ என்றே பல்லவி பிறக்கும்!
    உனக்காகவே வாழ்கிறேன் நான் என்றே சரணம் தொடரும்!

    அன்பின் பிணைப்பை அப்படியே அர்த்தப்படுத்த எந்த மொழியிலும் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும் வலிமையில்லை! அனுபவத்தில் கண்டபின்னும் சொல்லச் சொன்னால் அனுபவித்துப் பார் என்றே வார்த்தை வரும்! சர்வ மதங்களின் கூட்டுப்பிரார்த்தனை நடத்த வேண்டுமென்றால் முதலில் காதல் மாநாடு போடுங்கள் – சர்வ மனங்களையும் இணைத்துவிடலாம்!

    கல்லால்.. சிமெண்ட்டால்.. இரும்பினால் எல்லாம் பாலங்கள் கட்டுவார்கள்.. காதலில் மட்டும்தான் எண்ணங்களால் பாலம் அமைத்திடலாம் என்கிறார் கண்ணதாசன் எனச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.

    ஒரு முறை கவிஞர் வைரமுத்து வானொலியில் வழங்கிய தேன் கிண்ணத்திலிருந்து வார்த்தெடுத்த வார்த்தை முத்துக்கள் இதோ..

    “உன் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால்.. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு அனைவரும் விலகிச் சென்றுவிடுங்கள் என்றே கேட்பேன்!”

    அது என்ன? இப்பாடலை ஒலிபரப்பும்போது அந்த முள் ஒலித்தகட்டின்மீது சுற்றுகிறதா? இல்லை.. இதயத்தின் மீது சுற்றுகிறதா? அன்பர்களே.. ஒரு கவிஞனின் ரசனையில் இப்பாடல் பெற்றுள்ள இடம் பார்த்தீர்களா? காதல் ரசம் அல்ல! அன்பின் மழை! காம ஊற்றல்ல! பரிவின் உச்சம்!!

    எண்ணங்களாலே பாலம் அமைத்து

    இரவும் பகலும் நடக்கவா

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இரு கை கொண்டு வணங்கவா

    கண்ணதாசனே.. இன்றும் என்றும் உன்னை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஏன் தெரியுமா?

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

    அழுதால் கொஞ்சம் நிம்மதி

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    அதுதான் காதல் சன்னதி

    யாரிடமிருந்து வரும் இவ்வார்த்தைகள்? கடல் வானம் உள்ள வரை என்பார்கள்.. உறவும் பிரிவும் உள்ளவரை உன் பாடல்கள் உலா வரும் என்றே போற்றி மகிழ்கிறேன்!

    தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா

    ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ

    இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே

    சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    எண்ணங்களாலே பாலம் அமைத்து

    இரவும் பகலும் நடக்கவா

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

    இரு கை கொண்டு வணங்கவா

    இரு கை கொண்டு வணங்கவா

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்

    முகத்தை மறைத்தல் வேண்டுமா

    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

    முறையுடன் நடந்த கணவர் முன்னாலே

    பரம்பரை நாணம் தோன்றுமா

    பரம்பரை நாணம் தோன்றுமா

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது

    அழுதால் கொஞ்சம் நிம்மதி

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    பேச மறந்து சிலையாய் இருந்தால்

    அதுதான் தெய்வத்தின் சன்னதி

    அதுதான் காதல் சன்னதி

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    காதல் சிறகை காற்றினில் விரித்து

    வான வீதியில் பறக்கவா

    கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    கண்ணீர் கடலில் குளிக்கவா

    ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

    பாலும் பழமும் திரைப்படம் 1961 – கவியரசு கண்ணதாசன் –
    விஸ்வநாதன் ராமமூர்த்தி – ஏ.பீம்சிங் –
    சிவாஜி கணேசன் – பி.சரோஜாதேவி (சரவணா பிலிம்ஸ்)..


    http://www.youtube.com/watch?v=ZHwf36cAmK4

    Share
  • நாளை நமதே… இந்த நாளும் நமதே

    கவிஞர் காவிரி மைந்தன்

    மக்கள் திலகம் என்னும் அடைமொழி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கல்கண்டு தமிழ்வாணன் அவர்களால் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பாடல்கள் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர் கவிஞர் வாலி அவர்கள் என்பதை வரலாறு சொல்கிறது.

    திரைப்படப் பாடலாசிரியர்கள் பல நூறு பேர்கள் வந்தாலும் தங்கள் தடங்களைப் பதித்துவிட்டுப் போனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை மட்டுமே காலம் இன்று கணக்கில் வைத்திருக்கிறது. ஏன்.. எப்படி.. எண்ணிப்பார்த்தால், திரைப்பாடல்கள் என்கிற வரையறைகளை வகுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையின் எல்லைகளை.. இன்ப துன்பங்களை பல்வேறு கூறுகளை.. அப்பாடல்களில் இலகுவாக பக்குவமாய் பதித்து வைத்திருப்பதே அடிப்படைக் காரணம் ஆகும் என்பது புலனாகும்.

    குறிப்பாக, புரட்சித் நடிகர் பொன்மனச் செம்மல் என்கிற அடைமொழிகளைத் தாங்கிநின்ற சாதனை சரித்திரமம் எம்.ஜி.ஆர். என்கிற கதாநாயகனின் பாத்திரப் படைப்புகள் எல்லாம் மக்கள் மனதில் நிச்சயமாக, சத்தியமாக, பலமாக பெரியதோர் தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை – வசனங்களைத் தாண்டி.. இது போன்ற பாடல்களின் மூலமே சாத்தியமாகும் என்பதை கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல்வேறு பாடல்கள் சாட்சியம் கூறும். இதோ இவ்வரிசையில் நாளை நமதே திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் .. திரையில் இருமுறை மலரும் அன்பு மலர்களே.. நம்பி இருங்களேன். நாளை நமதே..

    அன்பு மலர்களே நம்பி இருங்களே
    நாளை நமதே இந்த நாளும் நமதே
    தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
    நாளை நமதே எந்த நாளும் நமதே

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே…

    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
    நமக்கென வளர்ந்து

    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

    பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
    ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

    மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
    பாடவேண்டும் காவியச் சிந்து

    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
    அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

    நாளை நமதே, நாளை நமதே

    வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
    நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

    நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
    எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

    நாளை நமதே நாளை நமதே

    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
    ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
    நாளை நமதே…

    காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
    நமக்கென வளர்ந்து

    நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

    படம் : நாளை நமதே (1974)
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

    http://www.youtube.com/watch?v=pY-kqvZr070

    இத் திரைப்படம் பார்த்தபோது.. குறிப்பாக இந்தப் பாடலில் இந்த வரிகள் தந்த உற்சாகம், வைராக்கியம் .. இன்று நான் பெற்றுள்ள வெற்றிகளுக்கெல்லாம் முதற்படி என்றால் அது மிகையன்று.

    திரு. தர்மேந்திரா அவர்கள் இந்தியில் நடித்த யாதோங்கி பாரத் என்னும் இந்திப்படத்தின் தழுவல் இந்தப் படம் எனினும் பாடல்கள் மெல்லிசை மன்னரால் அதீதமானதவையாகவும் அற்புதமாகவும் மலர.. கவிதை இதழ்கள் விரிவது போல் பாடல் வரிகள் அமைத்தவர் கவிஞர் வாலி என்பதில் இருவேறு கருத்தில்லை.

    நாளை நமதே இந்த நாளும் நமதே…

    Share
  • தமிழில் அது ஒரு இனிய கலை

    கவிஞர் காவிரி மைந்தன்

    தமிழில் அது ஒரு இனிய கலை – சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்

    காதல் பாடல்கள் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்! மனித ஜாதியின் மகத்துவம் காதலிலே புதைந்து கிடக்கிறது என்பதும் காதலைப் பற்றி எழுதத் தொடங்கும்போதுதானே கவிஞனே பிறப்பெடுக்கிறான் என்பதும் உண்மைதானே!

    இதமான சங்கதிகளை பதமாக சொல்லிடவே
    நிதந்தோறும் நீ வேண்டுமே!!
    இளமாலைத் தென்றலுடன் சுகராகம்தினம்பாட
    மகராணி உனை நாடுவேன்!!
    கனவோடு பலநாட்கள் கழிந்தாலும் கவலையில்லை
    கவிதைக்கு உணவாகிறேன்!!
    நனவோடு நாம்வாழும் நாட்கள்தான் வரவேண்டும்
    நங்கையிடம் நான் கேட்கிறேன்!!
    அன்போடு நடைபோடும் அவளுக்குத் தெரியாதா
    என்பாடு என்ன என்பது?
    கண்ணோடு கண்வைத்து காதலைச் சொல்லுவது
    கன்னிக்குத் தெரியாததா?
    உன்னோடு உறவாடும் உள்ளத்தின் நிலைபற்றி
    உனக்கிங்கு நான் சொல்வதா?
    பழகத்தான் துடிக்கின்ற பாசத்தின் தவிப்பென்ன
    பாவை நீ அறியாததா?
    பண்ணோடு இசைபோல பாவை உனைப்பற்றி
    பருவத்தில் பல ராகங்கள்!
    என்னோடு இணைந்தபடி என்தோளில் சாய்ந்தபடி
    என்றைக்கு வரும் கீதங்கள்?

    கண்ணதாசன் கவிதைகளிலும் திரைப்பாடல்களிலும் மூழ்கிய நமக்கே இப்படி எழுத வருகிறதென்றால்.. கவியரசு கண்ணதாசன் எழுதிய மற்றுமொரு காதல் பாடலிது.. இசை அமைத்திருக்கிறார்.. தென்னகத்து நெளஷத்.. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்பாடலைக் கேட்பதற்கும் தனிமை வேண்டும்! இருகுயில்கள் பாடியது போல் டி.எம்.எஸ்.. பி.சுசீலா இணைந்து தந்திருக்கும் இந்த அமுதத்தை அள்ளிப் பருகுங்கள்.. இனிய செவிகளால்.. அகமெல்லாம் நிறைந்துவிடும் ஆனந்தத்தால்!

    தமிழில் அது ஒரு இனிய கலை..
    சங்கே முழங்கு – கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்
    டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா – ப.நீலகண்டன் – எம்.ஜி.ஆர் – லட்சுமி

    தமிழில் அது ஒரு இனிய கலை
    உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
    அழகில்நீ ஒரு புதிய கலை
    உன்னை அணைத்துக் கண்டேன் இன்பக் கனவுகளை.. தமிழில்

    பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம்
    ஒரு பெண்ணாக உருவானதோ.. ( 2 )
    பூமீது விளையாடும் பொன் வண்டுகள் – உன்
    கண்ணாக உருவானதோ.. (2)
    அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள்
    எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ.. (2) தமிழில்

    பாராத பார்வைக்கு பரிசல்லவோ – உந்தன்
    மார்போடு நான் வந்தது (2)
    பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
    நல்ல நாள் பார்த்து நான் வந்தது (2) தமிழில்

    நெய்வாசக் குழல்மீது கைபோட்டு விளையாடும்
    கலையுந்தன் கலையல்லவோ (2)
    நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும்
    நீ தந்த விலையல்லவோ (2) தமிழில்

    தமிழில் அது ஒரு இனியகலை-Thamizhil adhu oru iniaya kalai

    Share
  • கன்னி நதியோரம் மின்னி விளையாடும்..- கவிஞர் வாலியின் கைவண்ணம்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    நீர்க்குமிழி என்னும் திரைப்படத்தை யாரும் மறக்கத்தான் முடியுமா? நகைச்சுவைத்திலகம் நாகேஷ் தான் ஒரு நவசர நாயகன் என உறுதிசெய்த படமாகும். முதல் பாதியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து.. பிற்பாதியில் உள்ளம்கலங்கி அழவைத்துவிடுகிற அவரது நடிப்பை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பெற்றுத்தந்தார் என்றே சொல்ல வேண்டும். ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்கிற பாடலையும் இந்தப் படம் தாங்கி வந்தது.

    தான் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் உரிமையாளரின் புதல்வி வெளிநாடு செல்லும் முன் நடக்கின்ற ஒரு இனிய விழாவில் .. ஆடலும் பாடலும் உற்சாகம் கரைபுரள இடம்பெறுகிறது. உடல்நலிவுற்றிருக்கும் நாகேஷ் இத்தனை ஆட்டம் ஆடும்போதும் அவரைக் கண்காணிக்கும் மருத்துவர் மனவேதனையுடன் அக்காட்சியைக் காண்பதாக திரையோட்டம்!

    மேடையில் நாட்டியம் ஒரு ஆடவன் ஆடும்போது அசந்துபோக வைத்தவர்கள் ஒரு சிலரே.. அவ்வரிசையில் நாகேஷ் முன்னணியில்! இணை சேர்ந்து ராஜஸ்ரீ பாடவும் ஆடவும் வருகிறார். கன்னிநதியோரம்.. மின்னி விளையாடும்.. பாடல்!

    கவிஞர் வாலியின் கைவண்ணம்! இசையமைத்திருக்கிறார்.. வி.குமார்.. அர்த்தபுஷ்டியான வார்த்தைகள் அலங்காரம் செய்துகொண்டு வருகின்றன..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    எண்ணிப் பார்த்தால் எத்தனை சொர்க்கம் என்கிற விதத்தில் ரசிக்கப்பட்ட பாடல்! காதல் பாடலாய் இருந்தாலும் கவிஞரின் பேனா நகரும்போது கதையின் முடிவை அவரால் தவிர்க்க இயலாமல்.. முடிவுரையோ.. தூங்க வேண்டுமோ என்றுதானே எழுதிவைத்திருக்கிறார்..

    கன்னி நதியோரம் மின்னி விளையாடும்
    உன்னழகு மேனி என்ன கதை கூறும்
    வண்ண விழிமேடை வந்த இளம்பேடை
    சின்ன இடையோ.. ஜோ..ஜோ.. சேர்ந்து இசை பாடும்!

    கன்னங்கள் கோடி பெறுமோ.. கைகளில் ஆடிவருமோ..
    எண்ணங்கள் பொங்கி வருமோ.. இன்பத்தில் பங்கு தருமோ
    தாளாமல் ஓடிவருமோ.. தழுவாமல் ஆசை தீருமோ..
    நாணத்தை பெண்மை விடுமோ.. நானின்னும் சொல்ல வேண்டுமோ..

    முந்தானை முகவுரையோ.. முக்கனிக்கு ஒன்று குறையோ
    செந்தேனில் தெளிவுரையோ.. சேர்ந்ததும் முடிவுரையோ
    பொன்மேனி ஊஞ்சல் வேண்டுமோ.. பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
    பாலாற்றில் நீந்தவேண்டுமோ.. பசியாறி தூங்க வேண்டுமோ..

    நீர்க்குமிழி திரைப்படத்திற்காக டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..

    நாகேஷ் திரையில்.. ராஜஸ்ரீயுடன்..

    Kanni nathiyoram-Neerkumizhi

    Share
  • கண்போன போக்கிலே கால் போகலாமா?

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஐம்புலன்கள், ஆறாம் அறிவு என மனித ஜாதியை மகத்துவமாய் படைத்த இறைவன் ‘மனம்’ என்கிற ஒன்றையும் மறைமுகமாய் சேர்த்தனுப்பிவிட்டனன்றோ? பகுத்தறியும் குணும் மனிதனுக்கு இருந்தும் ‘ஆசை’ என்னும் வலைதனில் அகப்பட்டு அவன் படும் அவஸ்தைகள் பலவன்றோ?

    கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நம்மில் வாழும் மனிதர்களைக் காணுகின்றோம். அனுபவ ரீதியாக ஒருவன் பட்டுத் தெரிந்து கொள்கிற பகிரங்க விஷயங்கள் பல உண்டு! அந்தப் பாடங்கள் அவன் மட்டுமே அறிந்தவையாகின்றன! ஆனால், திரைப்பாடல்களில் – கவிஞர்கள் தங்கள் சொல்லாற்றலால், இதுபோன்ற அனுபவ முத்திரைகளை, வாழ்க்கைப் பாடங்களை மெட்டுக்குள் கட்டிவைக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மக்களின் இதயங்களில் இமயமாய் வீற்றிருந்த எங்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுகின்ற போது இதுபோன்ற முத்தான வரிகள் வந்து கொத்துக் கொத்தாக விழுந்தனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது! தத்துவத்தின் தடாகமாய்..இப்பாடல் காட்சியளிக்கிறது! பணம் படைத்தவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இசை தலைமை தாங்குகிறது. டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் நடித்த இந்தக் காட்சி – ஒரு நாகரீக விடுதியில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் போது இப்படிக் காட்சியமைப்பு வெற்றி பெறுமா என்கிற வினாவிற்கு இப்பாடலில் உள்ள வரிகளின் வீரியம், வார்த்தைகள் தாங்கி வரும் அர்த்தங்கள், பின்னணி இசை என்கிற கூட்டணி மந்திரம் வெற்றியை விண்முட்டச் செய்திருக்கிறது. மகாத்மா காந்திஜி கையில் தடியடன் ஒற்றைப் பாதையில் நடந்துசெல்வதை நினைவூட்டிப் பாடல் தொடங்குகிறது!

    இந்தப் பாடலை பெரும்பாலோர் கவியரசு கண்ணதாசனின் பாடல் என்றே கருத.. அந்தக் கருத்தை ஆச்சி மனோரமா அவர்கள் கவிஞர் வாலி அவர்களை முன்னிறுத்திய மேடையிலேயே எடுத்தியம்ப.. பின்னர் நிறைவுரை ஆற்றிய கவிஞர் வாலி அவர்கள்.. கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நான் இயற்றியது.. ஆச்சி கூட.. இந்தப் பாடலை கண்ணதாசன் பாடல் என்றே கருதியிருக்கிறார்கள்.. அதிலே எனக்குள்ள சந்தோஷம் என்ன தெரியுமா.. என் பாடலைத் தங்கத்தட்டோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர, தகரத்தட்டோடு அல்ல என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.

    கண்போன போக்கிலே கால போகலாமா..
    கால் போன போக்கிலே மனம் போகலாமா..
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

    நான்கு வரிகளுக்குள் இங்கே சொல்லப்படாத இலக்கியம் என்ன என்றே அறைகூவலிடத் தோன்றுகிறது!

    நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
    நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
    ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
    உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிடவா எவரும் சொல்லிவிட முடியும்? எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இந்த வரிகளில் உள்ள பொருள் மாறிவிடக்கூடுமா?

    புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
    புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
    முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

    நாகரீகத்திற்கு அர்த்தம் தெரியாத மனிதர்களுக்கான சவுக்கடி இந்த வரிகள்! இன்னும் என்ன சொல்ல என்று நினைத்த கவிஞர் அடுத்தவரிகளில் மேலும் சொல்லாட்சி நடத்துகிறார்!

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

    இதுபோல பாடல் புனைந்தோர்.. எல்லோருக்கும் பொருந்தும் இந்தவரிகள்.. கதையின் நாயகன்.. மக்கள் திலகத்தின் வரலாற்றில் பொன்னாய் மின்னுகிற வரிகளில் சேர்ந்து காட்சியளிக்கின்றன!

    3 Attachments

    kanpona pokkile.jpg

    kanpona.jpg

    MGR & Sowckar Janaki – Kanpona Pokkile – Panam Padaithavan

    Share
  • ஒரு தரம்.. ஒரே தரம்.. -கவிஞர் வாலி….

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு தரம்.. ஒரே தரம்..

    ஒரு தரம் ஒரே தரம் .. என்று தொடங்குகிறது.. பல்லவி.. சுமதி என் சுந்தரிக்காக.. காதல் சுகம் என்னவென்று அறியவிரும்புவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்! ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள்.. அது சரி .. காதல் என்பது எந்தக் கலை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்குத் தெரியாத பந்தம் வளர்த்து.. கணநேரப் பிரிவைக்கூடத் தாங்கமுடியாமல் வலிக்கிறதே.. அது எப்படி? இருவேறு உடல்களுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இதயங்கள் இடம்மாறித் துடிக்கிறதே அது எப்படி? சுகமான வேதனை இது என்றுகூட துணிவோடுக் கூறிவிடலாம்! மனதுக்குள் தென்றல் வீசுகிறதா? புயல்வீசுகிறதா? கேட்டுச்சொல்லுங்கள் சிலநேரம்!!

    எத்தனை எத்தனையோ காதல்பாடல்கள் கணக்கின்றி வந்து கொண்டுதானிருக்கின்றன! கவிஞர்கள் எழுதிக்கொண்டு தானிருக்கிறார்கள்! காலங்களைக் கடந்து சிலபாடல்கள் மட்டும்தானே முணுமுணுக்கப்படுகின்றன. அந்த ரகம்.. ஒரு தரம்.. ஒரே தரம்.. மெல்லிசை மன்னர் இசையின் அணுக்களை சுகம்பிரித்து நம் இதயங்களுக்கு ஏற்றுமதி செய்துவைத்த பாடல்! டி.எம்.எஸ். பி.சுசீலா கூட்டணியில் கொள்ளையின்பம் கொண்டுவரும் பாடல்!

    இந்தத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் கவியரசு கண்ணதாசன்.. இந்த ஒரு பாடல் மட்டும் கவிஞர் வாலி!!
    காதல் சுகத்திற்கும் மயக்கத்திற்கும் தகுந்த பாடலிது!!
    முதல் முறை மட்டுமே முன் அனுமதி வேண்டும்
    பின் உன் முனகல்கூட முழுஅர்த்தம் தந்திடும் என்று நான் எழுதிய கவிதை நினைவில்..

    அன்பின் ஆலாபனையா இது? காதலின் உச்சக்கட்டமா? காமதேவன் வாசல் திறப்பு விழாவா? கற்பனைக் கொடிகட்ட.. கவிஞரின் எண்ண ரதத்தில் எழுத்துப் படையல்! பெண்மை லாவகம் காட்ட.. ஆண்மை அதை ஆமோதிக்க.. வண்ணக் கவிதை வந்துவிழுகிறது!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்? (2)
    ஒருதரம்.. ஒரே தரம்..
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    பெண்மை என்றால் கண்மறைவாய்
    மூடிவைத்தால் சுவை இருக்கும்
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    உள்ளதெல்லாம் அள்ளித்தந்தால்
    காலமெல்லாம் சுவையிருக்கும்!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உறவு தேடும் கண்கள் பாவம்
    தனிமையில் உருகிடும்
    பார்வையின் என்னென்ன பாவம்
    உதவி செய்தால் என்ன பாவம்

    வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
    கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
    தொட்டுக் கொள்ள தடை செய்வாளோ
    தத்தித் தத்தி மெல்ல செல்வாளோ..
    தங்க வளைத் தளிர் கையோடு
    வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
    முத்துப் பந்தல் நகை தன்னோடு
    மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு..

    சித்திரத்தின் முகம் கண்டேனே..
    செம்பவளம் நிறம் என்றேனே..
    உண்ண உண்ண இதழ் செந்தேனே..
    உன்னிடத்தில் என்னைத் தந்தேனே..
    இல்லை எனும் இடை தள்ளாட
    மெல்ல மெல்ல உன்னை மன்றாட
    சொல்லச் சொல்ல தொட வந்தாயோ
    என்ன என்ன சுகம் கண்டாயோ

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்?

    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ
    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ

    திரைப்படம் – சுமதி என் சுந்தரி (1971)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்கம் – சி.வி. இராஜேந்திரன்
    நடிப்பு – சிவாஜி, ஜெயலலிதா
    பாடல் – கவிஞர் வாலி

    ஒரு தரம் ஒரே தரம் – Oru tharam ore tharam

    Share
  • அத்திக்காய் காய் காய்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து, அப்பாடல்களின் பொருளுணர்ந்து, புளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றி, பலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கி, தமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

    காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

    ‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயை தீர்த்தாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்’ என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் வியந்த கண்ணதாசன், 25 முறை காய் என்னும் சொல்லை வைத்து விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

    காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

    பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டு,எழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் ‘என்னய்யா? கொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது..

    அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.

    தமிழின் அழகு கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
    அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
    (கன்னிக்காய்..)
    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
    (இரவுக்காய்..)
    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
    (ஏலக்காய்..)
    சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

     
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

     

    காவிரிமைந்தன்

    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075.

    தற்போது – அபுதாபி  (அமீரகம்)

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

     

    Website: thamizhnadhi.com

    அத்திக்காய் காய் காய் – Athikkaai kaai kaai aalankaai vennilave
    Share
  • ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    கவிஞர் காவிரி மைந்தன்

    கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை.

    புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள வெற்றி!! அனைத்துப் பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா!!

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு அத்தை மடி மெத்தையடி..
    மன்னவனே அழலாமா? பக்கத்துவீட்டு பருவமச்சான்..

    2004ஆம் ஆண்டு கவிஞர் வாலி அவர்களுக்கு பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் விருது வழங்கி பாராட்டு நடத்தியபோது இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட செய்தியை இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவிஞர் வாலியின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட நேரமில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.. ஒன்று தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. மற்றொன்று கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

    என்ன சொன்னார் தெரியுமா.. இந்தக் கவிஞர் ஒருவர்தான்.. பாட்டுவரியின் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு அதன் அடுத்த வார்த்தையை சொல்லாமல் .. ஆனால் அந்த வார்த்தையையே நினைக்க வைத்தவர்.. என்றார். ஆம்.. இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் .. விளக்கம் கிடைக்கும்!

    முதல் இரவின் முன்னதாக நடக்கும் இந்தக் காட்சியில் நாயகியைத் தோழி துவள வைக்கிறாள்.. இன்பத்தை எண்ணித் துடிக்க வைக்கிறாள்.. வஞ்சியின் நெஞ்சம் வெட்கத்தில் தவித்திருக்க.. வேடிக்கை அல்லாமல்.. அனுபவக் கதையைப் பாட்டில் வைக்கிறாள்.. இன்பத்தின் அரிச்சுவடி இது என்று சொல்லி வைக்கிறாள்.. அதையும் முழுதாய் சொல்லிவைக்காமல்.. அங்கங்கே புள்ளிவைக்கிறாள்.. கேளுங்களேன்..

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் இரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் உறவு

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    வயதில் வருவது ஏக்கம்
    அது வந்தால் வராது….
    வந்ததம்மா மலர் கட்டில்
    இனி வீடினில் ஆடிடும்…..

    ஆயிரம் …

    வருவார் வருவார் பக்கம்
    உனக்கு வருமே வருமே ஊஹும்
    தருவார் தருவார் நித்தம்
    இதழ் தித்திக்க தித்திக்க….
    ஆயிரம் …

    யாரோ சொன்னார் கேட்டேன்
    நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
    நானாய் சொன்னது பாதி
    இனி தானாய் தெரியும் மீதி
    ஆயிரம் …

    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM
    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – Aayiram iravugal varuvathundu

    Share
  • இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தஞ்சை ராமையாதாஸ் – பாடல் 

     

    கோபதாபங்களின் உணர்ச்சிக் குவியலாக மனித மனம்! அதுவும்கவிஞர்கள் உணர்வுகளின் சூறாவளியோடு தங்கள்வெளிப்பாடுகளை தருகின்றவர்களாக! வால்மீகிராமாயணத்தை வாசித்த கம்பன் – அதனைத் தமிழில்மொழிபெயர்க்கிறான் என்றால் அதுவும் 12000 செய்யுள்களாக..அவன் அந்தந்தப் பாத்திரங்களாய் மாறி அல்லவா சந்தக்கவிதைகளாக தந்த தமிழ் அமுதம் கம்பனின் உள்ளத்தைஉணரவைக்குதன்றோ?

    பாட்டுக்கொரு புலவன் பாரதியார் – வெகுண்டெழுந்துவெஞ்சினம் கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திர கீதமுழக்கங்களைத் தந்தானே.. அதுவும் உணர்வுகளின்உச்சக்கட்டம்தானே!

     

    பாவேந்தர் பாரதிதாசன் – தூங்கிக்கிடந்த தமிழினத்தைத்தட்டியெழுப்பி புரட்சிக் கருத்துக்களை உத்வேகத்துடன்ஊட்டிவளர்த்து மொழி, இன உணர்வுகளின் முன்னணித்தூதுவனாய் காட்சி தந்தானே – மறுப்பவர் உண்டோ?

     

    மலைக்கள்ளன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதத்தொடங்கிய போது.. இசையமைப்பாளருக்கும்பாடலாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் தஞ்சைராமையாதாஸ் இயற்றிய பல்லவி மட்டுமே நமக்குக் கிடைக்கப்பெற, வேற்று வழியின்றி அங்கிருந்த கோவை ஐயா முத்துஎன்னும் மற்றொரு கவிஞரைக் கொண்டு சரணங்கள்வரையப்பட்டதை என்ன சொல்வது? முன்னர் அமைந்த பல்லவிஇதோ..

    தொடரும் சரணங்கள் பாணி தனி..

     

    இரண்டையும் இணைத்து இசையமைக்கப்பட்ட பாடல்!

     

    காலங்கள் மாறி வந்த போதும் இந்தப் பாடலில் உள்ளகருத்துக்கள் சோடை போகாமல்.. அதுவும் பல்லவி இந்தசமூகத்தின் புரையோடிக்கிடக்கும் அயோக்கியர்களின் மீதுசாட்டையடியாய் விழுகிறது!

     

    அரசியல் செய்யும் கபளீகரங்களைப் பட்டவர்த்தனமாய் கேட்கும்கேள்வி.. காலங்களைத் தொடர்ந்து எதிரொலியாய் நம்காதுகளில் விழுகிறது!

     

    அடுத்து எழுதிய ஐயா முத்து அவர்களின் வரிகள்ஆட்சியிலிருப்பவர் செய்ய வேண்டிய திட்டங்கள் எவை என்றுபட்டியலிட்டுக்காட்டுகிறது! தேர்தல் அறிக்கையைநினைவூட்டும் சரணங்கள்.. எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில்..கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெற்றிபெற்ற திரைப்படம் -மலைக்கள்ளன்!

     

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்……

    படம : மலை கள்ளன்
    இசை : SM. சுப்பையாஹ் நாய்டு
    பாடல் : ராமையாஹ் தாஸ்
    பாடியவர் : T.M.S.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) –
    கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) –
    குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) –
    அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

     
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec

     
     
     
     
     
     
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
    Share