Tag: சச்சிதானந்தம்

  • வலையில் சிக்கிய வளநாடு

     

    சச்சிதானந்தம்

     

    அரசாளும் வல்லமை இல்லாத அரசு,

    விரசமாய் ஊழலை எங்கெங்கும் விதைத்து,

    உரசல்கள் நாடெங்கும் உண்டான போதும்,

    விரிசல்கள் உண்டாகி இரண்டாகும் போதும்,

    தரிசாகித் தாய்மண்ணின் தரம்தாழும் போதும்,

    பரிசாக மௌனத்தை மட்டுமே தருமோ?

     

    அண்டை நாடுகள் எல்லாம் துணிந்து,

    சண்டை நாடுகள் ஆகின்ற போதும்,

    இண்டைபோல் இதழ் இளித்துக் காட்டிப்பூச்,

    செண்டைக் கொடுத்துக் கைகுலுக் குவதேன்?

     

    ஊக்கம் தொலைக்கும் வேகத்துடன், பண

    வீக்கம் தொடர்ந்து ஏறும் போதும்,

    தேக்கம் அடைந்து பொருளா தாரம்,

    தூக்கம் அழிக்கும் போதும், ஆளும்

    நோக்கம் மறந்து நொண்டிச் சாக்குகள்,

    பூக்கும் அரசின் பொல்லா வாயில்!

    ஆக்கம் நிறைந்த அறிவிப் புகளை,

    வாக்காய்க் கொடுத்து வாக்குகள் பெற்று,

    ஏக்கம் மட்டும் கொடுக்கிறதே நம்மரசு!

    Share
  • குறவன் பாட்டு – 7

    
    சச்சிதானந்தம்
    
    
    முள்ளம்பன்றி வேட்டை ஆடுதல்

     

    முள்ளம் பன்றிகள் இரண்டு கண்டு,

    உள்ளம் துள்ளிக் குதித்துக் குறவன்,

    துரத்திப் புலிபோல் பின்னே தொடர,

    பன்றிகள் பயந்து வங்கில் மறைந்தன!                                                                                       52

     

    கங்குல் படரும் மங்கிய பொழுதில்தீக்,

    கங்கின் துணையுடன் பொங்கிய புகையை,

    வங்கின் உள்ளே செலுத்திக் குறவன்,

    அங்கம் தாழ்த்திக் காத்திருந் தானே!                                 53
    
    

    சீரான தம்சுவாசம் புகையாலே தடுமாற,

    கூரான முள்கொண்ட பன்றிகளும் தடுமாறி,

    நேராக வெளிவந்து குறவனெனும் கூற்றுவனோடு

    போராடிப் பயனின்று இன்னுயிரைத் துறந்தனவே!                     54

     

    மயிரை வேருடன் களையும் சமணத்,

    துறவியைப் போல முட்களைப் பிடுங்கிச்சிறு,

    மூட்டை சுமக்கும் மனிதனைப் போல,

    முதுகில் பன்றியைச் சுமந்து நடந்தான்!                                                              55

     

    பாம்புக் கறி உண்ணுதல்
    
    

    அரவம் ஒன்று அருகில் வந்து,

    குறவன் காலைத் தீண்டத் துணிந்து

    வருமுன் வருமோர் ஒசை செய்து

    பரவும் படமெடுத் தருகில் வந்தது!                               56

     

    இரவின் வரவை எதிர்பார்த் திருந்த,

    குறவன் பாம்பின் வரவைக் கண்டு,

    ஒருகண் கொண்டு தலையைப் பார்க்க,

    மறுகண் கொண்டு வாலைப் பார்த்தான்!                                                                       57

     

    நொடியில் நகர்ந்து கடியைத் தவிர்த்துக்கா

    லடியில் கிடந்த பாம்பின் வாலைப்,

    பிடித்துக் கையில் சுருட்டிப் பிடித்து,

    அடித்துத் தரையில் உயிரை எடுத்தான்!                                                                        58

     

    உரித்துத் தோலை எடுத்துப் பிரித்து,

    விரித்து உடலின் கொழுப்பை எடுத்து,

    மரித்த பாம்பை நறுத்துத் தறித்து,

    வறுத்துத் தின்று குறவன் கொழுத்தான்!                                                                     59

    Share
  • குறவன் பாட்டு – 6

    
    சச்சிதானந்தம்
    
    
    பூனைப் புனுகு சேகரித்தல்

     

    நாய்போல் வளர்ந்த புனுகுப் பூனை,

    நரிவால் போன்ற அடர்வால் சுருட்டி,

    நாள்முழுதும் மரத்தில் பதுங்கித் தூங்கி,

    நன்முன் னிரவில் உணவைத் தேடும்!                                                                                                       45

     

    உணவைக் கூடத் தவிர்த்துத் தனித்து,

    மினுக்கும் கண்களை மூடித் தூங்கும்,

    புனுகுப் பூனை பதுங்கும் புதரை,

    அணுகிப் புனுகுப் பூனை பிடித்தான்!                                                                                                            46

     

    அஞ்சிப் பதறிய அந்தப் பூனை,

    அட்ரினலின் போல் அதி வேகத்தில்,

    ஆசன வாயின் அருகில் இருக்கும்,

    அமுதச் சுரப்பியில் புனுகைச் சுரந்தது!                                                                                                     47

     

    அடர்ந் திருக்கும் புனுகின் நெடியை,

    நுகர்ந் திடாமல் தவிர்த்திட வேண்டி,

    முகமூடிக் கொள்ளையன் போலக் குறவன்,

    முகத்தைத் துணியால் மூடிக் காத்தான்!                                                                                  48

     

    புனுகை எடுத்துப் பத்திரப் படுத்தி,

    பூனையை மீண்டும் மரத்தில் விடவே,

    புழுவைப் போலத் துடித்த பூனை,

    பாம்பைப் போல உடனே மறைந்தது!                                                                                                        49

     

    அமிலம் போன்று அடர்ந்த புனுகை,

    அமுதம் போன்று ஆக்கும் பொருட்டு,

    அதிலே நீரைக் கலந்து குழைத்து,

    அரும் பொருளாக மாற்றி விட்டான்!                                                                                                          50

     

    ஆசன வாயில் சுரந்த புனுகு,

    வாசனை மிக்க திரவிய மாகி,

    ஈசனை மிக்கப் போற்றிட ஏற்ற,

    பூசனைப் பொருளாய்ப் பூத்து விட்டதே!                                                                                                   51

    Share
  • குறவன் பாட்டு – 5

    சச்சிதானந்தம்
    
    காட்டுப் பன்றிகளும் முரட்டுக் குறவனும்

     

    கால்கள் சிறுத்து முகமது நீண்ட,

    காட்டுப் பன்றிக் கூட்டம் ஓன்று,

    சுத்தியில் தலையின் வடிவுடை மூக்கால்,

    குத்திப் பெயர்த்தன நிலத்தடிக் கிழங்கை!                                                                                                39

     

    பூண்டும் புழுவும் வேரும் கிழங்கும்,

    கூம்பிய முகம்கொண்ட பன்றியின் உணவுகள்!

    தோண்டும் நிலத்தைக் கூம்பிய மூக்கால்,

    வேண்டும் உணவை நுகரும் வரை!                                                                                                            40

     

    கறுநொச்சி இலைபோல உடல் எங்கும்,

    வரிகொண்ட புலி ஓன்று பதுங்கி,

    கறுத்தி ருக்கும் உடல் கொண்ட,

    காட்டுப் பன்றிக் கூட்டத்தில் பாய்ந்தது!                                                                                                   41

     

    காத்துத் தன்னுயிர் ஓம்பிக் கொள்ள

    காக்கும் கடவுளை மனதில் வேண்டி,

    காற்றில் வாலைக் கொடிபோல் உயர்த்தி

    காட்டுப் பன்றிகள் ஓட்டம் பிடித்தன!                                                                                                       42

     

    புலியைத் தொடர்ந்து பூனை போல,

    ஒலி செய்யாமல் நடந்த குறவனின்,

    வலிமை மிகுந்த கைகளில் சிக்கி,

    உயிரை இழந்தது பன்றி யொன்று!                                                                                                           43

     

    கட்டுச் சேவலின் கணுக்கால் போன்ற,

    முரட்டு விரல்களில் இறுக்கிப் பிடித்து,

    முட்டப் பாய்ந்த காட்டுப் பன்றியின்,

    மூர்க்கக் கொம்பை முறித்து எடுத்தான்!                                                                                                44

    
    
    Share
  • குறவன் பாட்டு – 4

    
    
    சச்சிதானந்தம்
    கானகம் செல்லுதல்

     

    
    அரும்பொருள் சேகரிக்கக் கானகம் செல்லுதல்
     
    
    

    மனிதனின் வாடை அண்டாக் காட்டில்,

    தன்னந் தனியாய்ச் செல்லும் குறவன்,

    கடவுளும் கூடக் காணாக் காட்சியைக்,

    காணும் வாய்ப்பைப் பெற்றிருந் தானே!                                                                                                           31

     
    புலியைப் பின் தொடர்ந்து செல்லுதல்
     
    
    

    கடமான் ஒன்றை உணவாய்ப் பிடிக்கத்,

    தவறாய்ப் பின்னால் பதுங்கிப் பாய்ந்த,

    கிழட்டுப் புலியைப் பலமாய் உதைத்து,

    உயரத் துள்ளிப் பாய்ந்தது மானே!                                                                                                                      32

     

    உதைபட்ட புலியின் இரண்டு பற்கள்,

    சிதைவுற்று மண்ணில் சிதறிக் கிடக்க,

    பதைப்புற்ற புலியும் பசியில் மறைய,

    அதைக்கண்ட குறவன் பலசேக ரித்தான்!                                                                                                        33

     

    புலிநடந்த கால்தடத்தை வைத்ததனின் வயதறிந்து,

    தனிமையிலே நடமாடும் முதுமைப்புலி என்றுணர்ந்து,

    தொடர்ந் ததனைத் தொடர்ந்து சென்று,

    அது வசிக்கு மிடமறிந் தான்!                                                                                                                                   34

     

    அடர்ந்த் திருக்கும் கானகத்தில், உடல்

    தளர்ந் திருக்கும் புலியைத்தேடி, தோள்

    வளர்ந் திருக்கும் வாலிபக் குறவன்,

    துணிந்து தினம் பின் தொடர்ந்தான்!                                                                                                                   35

     

    மானடிக்கும் பலமிழந்துமெல்லப் பின்னர்

    முயலடிக்கும் திறனிழந்து, நாட்கள் செல்லச்செல்ல

    உயிர்வாழும் மனமிழந்து,  ஊன்வளர்க்கும் உணவிழந்து,

    நீர்பருகும் வழிமறந்து, உயிர்துறந்த புலி!                                                                                                       36

     

    உயிர்துறந்த புலிசுமந்து,  பல்நகங்கள் பிளந்தெடுத்து,

    உடல் கிழித்துக் கறி எடுத்து,  

    தோல் தனித்துப் பிரித்தெடுத்து,  அள்ளி

    நீர் தெளித்து சுத்தம் செய்தான்!                                                                                                                          37

     

    துறவறம் பூண்ட முனிவனைப் போலக்,

    குறவனும் புலித்தோல் தனிலே அமர்ந்தான்,

    அறநெறி ஆகம விதியினும் உயர்ந்த,

    அன்பெனும் நெறியினில் தினம் நடந்தான்!                                                                                                38

    Share
  • குறவன் பாட்டு – 3

    
    சச்சிதானந்தம்
    அறைகூவும் கானகமும் அதில் வாழும் குறவனும் 

     

    சூரியன் ஊடுருவா வீரியக் காட்டில்,

    மாரியின் ஆதிக்கம் மீறிய காட்டில்,

    யாரினும் இறங்காத மரமடர் காட்டில்,

    குறவனும் குறத்தியும் எளிமையாய் வாழ்ந்தனர்!                                                                            22

     

    முறைசாராத் தொழில்தனை முதன்முதலில் செய்தவன்,

    கறைசாரா மனதோடு கானகத்தில் வாழ்பவன்,

    நரைசேரா இளமையோடு குறத்தியோடு களிப்பவன்,

    முறைசார்ந்து வாழ்க்கையினை முழுமையாக வாழ்பவன்!                    23

     

    சமவெளிகள் புல்வெளிகள் கடந்தாக வேண்டும்,

    சலசலக்கும் காட்டாற்றில் நடந்தாக வேண்டும்,

    பாதைகள் பலவுண்டு காட்டுக்குள் செல்ல,

    தடம்மாறிப் போகாமல் நடமாட வேண்டும்!                                                                                          24

     

    காட்டாற்றின் ஆழத்தை அறிந்தாக வேண்டும்,

    கடக்கின்ற முறைதன்னில் கடந்தாக வேண்டும்,

    தினந்தோறும் உருமாறும் காட்டாற்றின் ஆழம்,

    யுகந்தோறும் உயிர்வாழும் குறவனே அறிவான்!                                                                              25

     

    இரவுநேரப் பறவைபோலக்  கூர்செவி கொண்டு,

    ஒலிவரும் திசையும் தொலைவும் அறிந்து,

    புலிவரும் போதும் புலன்களில் உணர்ந்து,

    விலங்கினைப் போல விழிப்புடன் வாழ்வான்!                                26

     

    காட்டாற்றில் நீர்பருக   வருகின்ற விலங்கினுக்கு,

    இடையூறு செய்யாமல் நடையூற வேண்டும்,

    சேற்றாற்றில் முதலைகள் உயிர்வாழக் கூடும்,

    காற்றோடும் வேகத்தில் கடந்தாக வேண்டும்!                                                                                      27

     

    ஏவுகணை வேகத்தில் தாவுகின்ற மான்கூட்டம்,

    கூவுமிசைக் குரலாலே பாடுகின்ற குயில்கூட்டம்,

    தீவுகளின் கூட்டம்போல் வாழுகின்ற களிற்கூட்டம்,

    மேவுமனம் கொண்டிடுவர், கண்டுகேட்டுக் குறவர்கூட்டம்!                                                       28

     

    வாழையடி வாழையாய் வழித்தடம் மாறாத,

    யானையடிப் பாதையாய், மாறாமல் தொடர்ந்து,

    ஏழையுடன் ஏழையாய், யுகம் கடந்து யுகம்யுகமாய்,

    நானிலத்தில் வாழுகிறான் கானகத்துக் குறவன்!                                                                                29

     

    துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

    கலவரம் பூணும் கானுருக் கண்டு!

    குலவறம் காக்கும் குறவனின் மனமோ

    இலகுறக் கண்டு கானினை வெல்லும்!                                                                                                      30

     

    Share
  • குறவன் பாட்டு – 2

    குறவர் நாகரிகம்-அறிமுகம் 

     

    அவதார இராமனுக்கும் வனவாசம் தண்டனை,

    அழகான பாண்டவர்க்கும் வனவாசம் நிந்தனை,

    அகிலத்தை ஆண்டவர்கள் கொள்ளாத சிந்தனை,

    அன்புற்ற குறவர்க்குக் கானகமே அரண்மனை!                                                                                   11

     

    ஆழிசூழ் அகிலம் காத்து நிற்க,

    ஆண்டவன் படைத்தான் அடர் கானகம்,

    ஆதிநாள் முதற்கொண் டதனைத் தொழுது,

    ஆலயமாய்க் காக்கும் குறவர் கூட்டம்!                                                                                                   12

     

    இயற்கை வகுத்த இலக்கணம் காத்து,

    இலக்கை வகுக்கும் இன்னலை நீத்து,

    இரைப்பை நிறைத்து இலகுவாய் வாழ்ந்து,

    இரண்டற இயற்கையில் கலந்த நல்வாழ்க்கை!                                                                  13

     

    ஈரிதழில் புன்னகையை இன்புற்று ஏந்தி,

    ஈசனுக்கு மந்திரத்தை மனமாரச் சொன்னவனின்,

    ஈடற்ற திருவடியைப் பற்றோடு பற்றி,

    ஈகைகுணம் மேலோங்க வாழ்ந்திடுவர் குறவர்!                                                                 14

     

    உமிழ்நீரைச் சிலநேரம் உணவாகக் கொண்டாலும்,

    உதிர்ந்திலைகள் சருகாகிக் கானகமே வறண்டாலும்,

    உதிக்கின்ற கதிரவனால் உதிரமது உலர்ந்தாலும்,

    உழைக்கின்ற எண்ணத்தைத் தொலைக்காத குறவர்!                                                                      15

     

    ஊழ்வினைபோல் தொடர்ந்த வறண்டகாலம் நீங்கி,

    ஊனம் கொண்டிருந்த கானகமும் மாறும்,

    ஊறும் செவ்வுதிரம் உடலுக்குள் ஏறும்,

    ஊழியம் செய்திடுவான் குறவனவன் மீண்டும்!                                                                                  16

     

    எளிமையான வாழ்க்கையை ஏக்கமின்றி வாழ்பவன்,

    எதிர்மறையாய் வறுமையிலும் எண்ணிடாத எளியவன்,

    எண்ணிலாத கானமுதைக் கண்ணில் கண்டபோதிலும்,

    என்றுமதனை அபகரிக்க எண்ணிடாத தூயவன்!                                                                                17

     

    ஏர்பிடித் துலகம் பழகும் முன்னே,

    ஏற்பது இகழ்வென் றேற்றுக் கொண்டவன்,

    ஏற்ற இறக்கங்கள் எதிர்வரும் போதும்,

    ஏமுற மறவா திதயம் கொண்டவன்!                                                                                                          18

     

    ஐய மென்னும் தீ இன்றி,

    ஐம் புலனும் நோ யின்றி,

    ஐய னென்னும் அறு முகனை,

    ஐங்கரனின் இளையவனைத் துணைகொண்ட குறவர்!                                                  19

     

    ஒல்லாமை வரும்போதும் நில்லாமல் உழைப்பவன்,

    ஒவ்வாமை ஏதுமின்றிக் கானோடு வசிப்பவன்,

    ஒருபானைக் கூழையும் ஓர் நொடியில் குடிப்பவன்,

    ஒரு நாளும் உழைக்காமல் உண்ணாத குறவன் !                                                                            20

     

    ஓமெனும் மந்திரத்தைச் சொன்னவனின் தோழன்,

    ஓங்கிநிற்கும் கானகத்தைக் காக்கின்ற வீரன்,

    ஓரிரு மணித்துளியும் ஓயாது தினமும்,

    ஓடோடி உயிர்வளர்க்கும் காடோடிக் குறவன்!                                                                                     21

    Share
  • குறவன் பாட்டு – 1

    
    சச்சிதானந்தம்
    
    இறை வணக்கம் 
    

     

    ஐயமற்று உள்ளத்தில் மைய மிட்ட,

    ஐங்கரனுக் கன்பொழுகக் கவிதை யிட்டு,

    வையகத்தைக் காத்து நிற்கும் கானகத்தை,

    மையமாக வைத்தினிய கவிதை செய்வோம்!                                    1

     

    எளிதினும் எளிய கவிதை சொல்லி,

    இனிதினும் இனிய குறவன் கதையைப்,

    புதிதினும் புதிய முறையில் சொல்லப்

    புதியவன் முயற்சிக்கு முருகன் துணை!                                                  2

     

    நன்றியைச் சொல்லி நெகிழ்வ தற்காக,

    ஒன்றியென் மனதில் உன்னை நினைத்தேன்,

    இன்றியுன் கருணை, கவிதைகள் ஏது?

    சண்முகன் உன்னால் பண்களைச் செய்தேன்!                                  3

     

    பரமனை வணங்கிக் குறவனைப் பாடப்,

    பாமரன் செய்யும் முயற்சி இது,

    ஓமெனும் மந்திரம் பயின்றவன் அருளால்,

    பாவெனும் மந்திரம் பழக வந்தேன்!                                                         4

     

    குறிஞ்சி வணக்கம்

    நானிலத்தில் முதல் நிலம்,பொங்கும்

    பாநயத்தைத் தரும் நிலம்,உயர்

    மாமலைகள் அதன் பலம்,அடர்

    கானகமாய் வளர்ந்திடும்,குறிஞ்சிக்கு வணக்கம்!                               5

     

    குமரன் முகமெனக் குளிர்ந்த குறிஞ்சியை,

    விமலன் சடையென விரிந்த குறிஞ்சியை,

    கமழும் நறுமணம் நிறைந்த குறிஞ்சியை,

    மமனம் குவித்து வணங்கிடு வோமே!                                                      6

     

    ஓரறிவு உயிர்கள் முதல், உயர்

    ஆறறிவு மனிதன் வரை, வாழப்

    பேருருவம் எடுத்து நின்று காக்கும்

    கானகத்தைக் கரம் கூப்பித் தொழுவோமே!                                        7

     

    தமிழ் வணக்கம்

    பயிற்சி இல்லாதவன் செய்திடும் முயற்சியில்,

    முயற்சியின் பலனாய் நவின்றிடும் நவிற்சியில்,

    பிழை இருந்தால் பெரும்பிழை பொறுத்தருள்க,

    பைந்தமிழே செந்தமிழே காத்தருள்க!                                                        8

     

    சொற்பிழை பொருட்பிழை இன்சுவை கெடுக்கும்,

    தளை தட்டும் கவிப் பிழை,

    இலக்கண விதிகளை மீறிடும் பெரும்பிழை,

    எப்பிழை இருப்பினும் பொறுத்தருள் தமிழே!                                    9

     

    முன்னோர் வடித்த நூல்களில் இருந்து,

    மேன்மை பொருந்திய கற்பனை நயங்களை,

    மென்மை நிறைந்த சொற்றொடார் வழங்களை,

    மனமறியாமல் கையாண்டிருந்தால் ஏற்றருள் தமிழே!            10

    Share
  • அறுமுகநூறு (20)

     

    சச்சிதானந்தம்

    murugaimages

    பாடிப் பணிந்து தொழுதிட மனமின்றி,

    ஊடித் துணிந்து உன்னை மறந்தவன்,

    தேடித் தொடர்ந்து மலரென உன்னை,

    சூடிக் கனிந்த மனங் கொண்டேனே!                                                                                  96

     

    மூடிய மனதுக்குள் முடிவற்று மலர்ந்து,

    ஓடிய மனதினை ஒருநிலைப் படுத்தித்

    தேடிய அமைதியைத் தெளிவுறக் கொடுத்துப்

    பாடிய எனக்குள் பரவசம் கொடுத்தான்!                                                                           97

     

    ஓரிச்சை பேரிச்சை உள்ளத்தில் ஆடும்,

    மூவிச்சை கடக்கும்முன் முருகனில் கலக்கும்,

    சீரிச்சை செவ்விச்சை ஆறாக ஓடும்

    பேரின்பப் பெருவிச்சை நிறைவேற்று வேலா!                                                               98

     

    நாவடியில் நாதன் பாவைச் சுமந்து,

    காவடியில் மயிலின் தோகை சுமந்து,

    ஈரடிகள் சிவக்கும் படியாய் நடந்து,

    இறைவனடி நாடி இன்பம் அடைவோம்!                                                                          99

     

    அசைவற்றுக் கிடக்கும் முதலை போல,

    ஆடிச் சலனம்கொள்ளா இதயம் கொண்டு,

    அகமும் அங்கமும் குகனில் ஒடுங்கி,

    அறுமுக ஒளியில் ஐக்கிய மாவோம்!                                                                              100

     

    (நிறைவுற்றது)

     

    Share
  • அறுமுகநூறு (19)

     

    சச்சிதானந்தம்

     

    நெடுவெண் நிலவின் ஒளியின் சுடரே,

    சுடுவெங் கதிரோன் சுடரும் நீயே,

    இடுகண் ணொடுங்க அருளும் கடலே,

    கடுகின் அளவும் உமையாம் அறியோம்!                                                                        91

     

    விண்மீன்கள் பலகோடி விளையாடும் நேரத்திலும்,

    ஒருமீனது சுடர்வீசிச் சிரிக்கின்ற வேளையிலும்,

    அறுமீன்கள் தோள்களிலே தவழ்ந்த தமிழுள்,

    நதிநீரில் மீன்போல நீங்காமல் மூழ்கிடுவோம்!                                                              92

     

    காமுகனாய் வாழ்ந்திருந்த காலங்கள் போதும்,

    அறுமுகனின் அரவணைப்பில் இனிவாழ வேண்டும்,

    ஆகமங்கள் அறியாத பாமரன் என்றாலும்,

    அன்புநெறி தவறாமல் உயிர்வாழ வேண்டும்!                                                               93

     

     

    பாலையாய்த் திரிந்த வாழ்க்கைப் பாதையை

    குறிஞ்சியென் றமைத்துத் திருத்திடும் தலைவன்,

    ஏழையாய்ப் பிறந்த எளியவர்க் கெல்லாம்,

    பார்வையால் அருளினை வழங்கிடும் முருகன்!                                                          94

     

    மெய்யென என்னை நினைக்கவு மில்லை,

    பொய்யென நெஞ்சம் வருந்தவு மில்லை,

    எய்தவன் உந்தன் எண்ணப் படியே,

    வையகக் கடைமை செய்கின் றேனே!                                                                              95

     

    Share
  • அறுமுகநூறு (18)

     

    சச்சிதானந்தம்

    ஆற்றல்நிறை ஆதவனும் வணங்கி நிற்க,

    ஆலயமாய்க் கானகமே அமைந்து நிற்க,

    ஆற்றங்கரை நாகரிகம் பிறக்கும் முன்னே,

    ஆறுமுகன் அவதரித்து அகிலம் காத்தான்!                                                                     86

     

     

    வெட்டிரும்பின் விசையுடனே உள்ளத்தில் பாய்ந்து,

    உட்செருக்கைக் கட்டறுத்து, நற்குணத்தின் மொட்டவிழ்த்து,

    பற்றறுக்கும் பணியேற்று, எக்கணமும் துணையிருக்கும்,

    தண்டபாணி கொண்டிருக்கும், காக்குந் தனிவேல்!                                                        87

     

    சிற்றின்பக் கோட்டுக்குள் கட்டுண்ட உலகை,

    மற்றின்ப மாயைக்குள் மூழ்கிடும் மனதை,

    அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,

    கற்ற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை!                                                                 88

     

    நிறமற்ற நீருக்கு நிறம்தரும் அருவியைப்போல,

    உயிருக்கு நிறம்தந்து நிரந்தரமானவன் நாதன்,

    மணமற்ற நிலத்துக்கு மணம்தரும் மழைத்துளிபோல,

    மனதுக்குள் நறுமணம் பரவிடச்செய்வான் நாதன்!                                                        89

     

    நிலவின் தனித்துவம் இரவில் உதிப்பது,

    இரவின் தனித்துவம் நிலவைச் சுமப்பது!

    உயிரின் தனித்துவம் குகனைத் துதிப்பது,

    குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது!                                                                      90

    Share
  • காவிரி

    குடகில் பிறந்து குன்றுகள் கடந்து,

    குதித்துத் துள்ளிச் சமவெளி அடைந்து,

    கயல்கள் சுமந்து கனிவுடன் தொடர்ந்து,

    கதிர்தரு நெல்லுடை வயல்களில் நடந்து,

    கடைமடை வரையிலும் கருத்துடன் புகுந்து,

    கரையிரு மருங்கிலும் வாழும் மக்களைக்,

    கடவுள் போலக் காத்தநற் காவிரி,

    கருணை வறண்டு கவினை இழந்து,

    கடலைக் காணா நிலையை அடைந்து,

    கலியுக அரசியல் சூழ்ச்சியில் வீழ்ந்ததோ?

    Share
  • அறுமுகநூறு (17)

     

    சச்சிதானந்தம்

     

    அறுமுகன் என்னும் ஆழ்ந்த பொருளை,

    அழகுற அகிலம் சூழ்ந்த பொருளை,

    அகமுக மிரண்டும் காணும் பொருளை,

    அடிபணிந் துணர்ந்து அன்பை உணர்வோம்!                                                                   81

     

    சிக்கலில் வேலுற்றுச் செந்தூரில் வீறுற்றுச்

    சூரனைக் கூறிட்ட பின்னாலும் அருளுற்றுச்,

    செங்கொண்டைச் சேவலாய்ப் பூங்கொண்டைப் பீலியாய்ச்

    செய்தவனைக் காத்திட்ட சிங்கார வேலனே!                                                                   82

     

    குடிக்கும் தண்ணீரைக் குடித்திட முடியாமல்,

    துதிக்கை துண்டாகித் துடிக்கும் யானையாய்,

    துதிக்கும் உன்னைநான் துதித்திட முடியாமல்,

    தடுக்கும் நெஞ்சத்தின் மயக்கம் நீக்கிடுவேலா!                                                               83

     

    அகவும் மயிலது அரவம் தாக்கும்,

    அறுமுகன் அருளது அகந்தை நீக்கும்,

    அலறும் ஆந்தை இரவில் தாக்கும்,

    அலையும் மனத்தைக் கரவேல் காக்கும்!                                                                        84

     

    ஒளியில் நிறைந்த இறைவனின் அழகைக்,

    கண்டவர் மனதின் களங்கம் நீங்கும்,

    விழியில் நிறைந்த அவனது எழிலால்,

    மனதில் நிறையும் அமைதியின் தோற்றம்!                                                                    85

    Share
  • நடுங்கும் நடுத்தரங்கள்

     

    சச்சிதானந்தம்

     

    வறுமையில் வாடுபவன் கூட,

    வெறுமையின் எல்லைக்குச் சென்றாவது

    வெற்றியின் மடியை அடைகிறான்,

    பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதவன்

    சிந்தனையிலும் சிக்கல்கள் இருப்பதில்லை!

    சிகரங்கள் அவனைச் சரணடைகின்றன!

    ஆனால்,

    நடுத்தரக் குடும்பங்கள், என்றும்

    நடுங்கும் தரத்துடனேயே இருக்கின்றன!

    அன்றாடத் தேவைகளுக்காக

    மன்றாடித் திரிந்து,

    இலட்சியக் கனவுகளைப் பணயம் வைத்து,

    வாழ்க்கைப் பயணத்தைத்

    தொடர்ந்திடும் பரிதாப நிலை!

    உணவுத் தேவைகளே அவன்

    உழைப்பின் எல்லையாய்

    அமைந்துவிடும் பாவக்கோலம்!

    உணர்வுத் தேவைகளான

    இலட்சியங்களும்,கனவுகளும்

    நடைமுறைத் தேவைகளின்

    நச்சுச் சூட்டில் உலர்ந்துபோகின்றன!

    உலர்ந்து போன கனவுகளுடனும்

    உறைந்துபோன உற்சாகங்களுடனும்

    அவன் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றான்!

    தன் பிள்ளையாவது சாதிப்பான் என்று!

    Share
  • அறுமுகநூறு (16)

     

    சச்சிதானந்தம்

    நாநில மெங்கும் பேதங்கள் இன்றி,
    அறுபடை வீடுகள் அமைத்து நின்று,
    நாவள மிக்க சான்றோர் சொல்லைக்
    காவல னாகக் காத்திடு வான்!                                                76

    அகவல்கள் படைத்து அறுமுகனைப் பணிந்து,
    அகவை மாறா அவனெழிலில் திளைந்து,
    அகவும்மயில் வாகனன் அருளை அடைந்தால்,
    அகமும்மயில் தோகையென அழகாய் விரியும்!        77

    அருகில் வரவர ஆற்றல் பெருகி,
    அலையென அரகர ஓசை பரவி,
    அறுமுகத் தருதரு அருளைப் பருகி,
    அன்பர்கள் சிரமிரு தாளைப் பணியும்!                               78

    கோடிட்ட இதழ்களும், மேடிட்ட கன்னங்களும்,
    நீறிட்ட நெற்றியும், வேலுற்ற கரமும்,
    நாவுற்ற தமிழும், நிறைவுறக் கண்டு,
    நீருற்றுக் கண்களில் நாதனைத் தொழுவோம்!             79

    வெஞ்சினம் கொண்டு, வெண்டெனத் தனக்குள்,
    வெற்றிடம் கண்டு வீழ்ந்திடும் நெஞ்சின்
    வன்மமும், வாட்டிடும் துன்பமும் நீங்கும்,
    வெண்முகில் வேலனின் இன்னடி பணிந்தால்!             80

    Share