நாராய ணாவென்னா நாவென்ன நாவே?
நாமந்தான் சொல்லா நாவென்ன நாவே? ()
கன்றினத்தைத் தன்வசமாய் அமுதூட்டும் நாமம்
குன்றினத்தைக் குடையாக்கி அடைகாக்கும் நாமம்
கொண்டை மயிற்சிறகை அணியாக்கும் நாமம்
தண்டை மணிசிணுங்க அரவடக்கும் நாமம் ()
குழலூதி மெய்மறக்கச் செய்கின்ற நாமம்
அழலேகா வண்ணமே அருளூற்றும் நாமம்
உறியிருந்த மனம்திருடிச் சுவைக்கின்ற நாமம்
அறியாமல் செய்யவைத்து அறிகின்ற நாமம்()
தேனுக்கும் மேலாகத் தெவிட்டாத நாமம்
வானுக்கும் மண்ணுக்கும் வளங்கூட்டும் நாமம்
கோவிந்தா எனும்போது குழைகின்ற நாமம்
கோபாலா என்றாலோ குடியேறும் நாமம்()




