சத்திய மணி
நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்
ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்
பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி
பரவசம் காட்ட வேண்டும்
சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்
தேவைகள் சேர்க்க வேண்டும்
தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்
தரணியில் முருகவேலே
மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி
விளையாடும் வேலகுகனே
துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்
முகங்காட்டும் சக்திமகனே (6)

Leave a Reply