சத்திய மணி

 

நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்

ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்

பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி

பரவசம் காட்ட வேண்டும்

சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்

தேவைகள் சேர்க்க வேண்டும்

தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்

தரணியில் முருகவேலே

மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

விளையாடும் வேலகுகனே

துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

முகங்காட்டும் சக்திமகனே  (6)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “திருமுருகன் துதிமாலை (6)

  1. அருமை! அருமை! வாழ்த்துக்கள் திரு.சத்தியமணி அவர்களே!

  2. ////தாயிடம் கேட்டுத்தான் பெறவேண்டுமோ சொல், தரணியில் முருகவேளே!!////

    மனம் உருகியது. சேயின் தேவையை ,தாயன்றி வேறு யாரறிவார்?. தொடர்ந்து துதிக்கக் காத்திருக்கிறேன்.

  3. தமிழ் கடவுளாம் கந்தனைத் துதித்த ‘திருமுருகன் துதிமாலை’  படித்து மகிழ்ச்சி தெரிவித்த அனைத்து வல்லமையாள‌ர்களுக்கும் நன்றி.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *