Tag: வல்லமையாளர்

  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    நம் செந்தமிழை நினைத்து நினைத்து நாம் வியக்காத நாள் இருக்கமுடியாது. காரணம் அத்தனை புதியதாக ஒவ்வொரு நாளும் தோன்றும் அதிசயம் இம்மொழியுள் உள்ளது. அதே சமயத்தில் ‘ஆதிசிவன் பெற்றான்’ என்று பாரதியால் புகழப்பட்ட இறைமொழி அல்லவா நம் மொழி.. அப்படிப்பட்ட இறைமொழி பழையதும் புதியதும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருப்பதில் என்ன விசேஷம் இருக்கமுடியும்.. என்ற வேதாந்தக் கருத்தில் மனம் போய்விட்டு சமாதானமும் செய்து கொள்வதையும் தடுக்கமுடியவில்லை.

    photoதமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யர் நமக்குத் தேடி எடுத்துப் பரிசளித்த சங்கப்பாடல்களின் மூலம் எத்தனையோ நவீன கருத்துகளையும் அறிவியல்பூர்வமாகவும் எடுத்துரைத்துவருகிறார்கள் நம்மவர்கள். இப்படித்தான் இந்த வாரத்தில் சங்க இலக்கியத்தில் அறிவியல் கோட்பாடு என்று ஒரு கட்டுரையை ஆரம்பித்துள்ளார் சிங்கையைச் சேர்ந்த திரு கிருஷ்ணன். இதோ அவர்தம் கட்டுரையின் ஒரு சில பகுதிகள்:

    ”இன்றைய மேனாட்டு அறிவியல் சிந்தைனையின் சுவடுகூடப் படாத சங்க காலத் தமிழர் சமுதாயத்தில் இருந்த அறிவியல் அறிவும் உணர்வும், அதிலும் குறிப்பாக வானவில் பற்றிக்கொண்டிருக்கும் கருத்தும் சிந்தனையும் சில நம்மை வியக்க வைக்கிறது.”! இன்றைய நிலையில் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்,மருத்துவ இயல் என்று பல்துறைகளாகப் பல்கி பெருகியுள்ளன. இவ்வறிவியல் சிந்தனைகளை நோக்கும் முன்பு அறிவியல் பார்வை தமிழ் சமுதாய இலக்கியத்தில்பெற்ற நிலையினை உணர்தல் இன்றியமையாததாகும்.

    அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்றகொள்கை தோன்றியது. பின்னர் ஒளவையார் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார்.அணுவைப் பிளப்பதின் மூலம் அதிக ஆற்றலை உருவாக்க முடியும் என்பதை அறிந்தார்கள். அணுவைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், காற்றாலைகள் மூலம் அணுக்களைச் சிதைத்து மின் உற்பத்தி செய்யவும், ஹைட்ரஜன் அணுக்களை அதிவேகத்தில் சேர்ப்பதின் மூலம் ஆற்றல் பெறமுடியும் என்பதையும் ஹைட்ரஜன் அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்றும் அறிய நேரிட்டது. இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை பண்டைய நமது சமுதாயத்தில் நாம் காணலாம்.

    ” அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் ” என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார் இரணியன்,

    ” இறைவன் எங்கு உள்ளான் ” என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன் ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான் என விடை கூறுகிறான்.” சாணினு முளனோர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினு முளன்….. ” [கம்பராமாயணம்.253] — என்றபாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.

    தமிழ் இலக்கியத்தில் ” ஒப்புநோக்குக் கொள்கை” உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடைய சமுதாயமாக விளங்கினர் என்பதற்குத் தொல்காப்பியரைச் சான்றாகக் காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள் என்பதனை ” முதல் எனப் படுவது நிலம்பொழுது இரண்டின் இயல்பென மொழி இயல்புணர்ந்தோரே ” என்ற நிலமும் காலமும் என இரு வகையாகப் பிரித்துள்ளன

    நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை. நீர்ப்ப இருளின் இச் சுருங்கா இயல்பை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துக் கூறியவர் ‘ பாஸ்கல் ‘ என்னும் அறிஞர்.இப் பாஸ்கல் விதிக்குச் சான்றாக, ” ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது ” என்று ஒளவையின் பாடல் கூறுகிறது. ஆழத்தைப் பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற மற்றொரு அறிவியல் உண்மையும் எடுத்துரைக்கின்றார்.

    சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்தவர் இளங்கோ அடிகள். ஆதலின், ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும் ,– – ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்..,- காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்தரின்…” — என்று ஞாயிறைப் போற்றினார்

    உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதைத் தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகி பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை. இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,

    ”ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
    இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
    ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
    நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே …’ { ..தொல் பொருள் மரபியியல்:29.]

    உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின் 10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வராக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவதாரங்கள்.

    நல்லதொரு கட்டுரையை அளித்து தீந்தமிழுக்கு பெருமைத் தேடித் தரும் திரு சிங்கை கிருஷ்ணன் அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்தம் பணி செம்மையாகத் தொடர வாழ்த்துகள்..

    கடைசி பாரா: இன்னம்பூராரின் கனம் கோர்ட்டார் அவர்களே – வல்லமை கட்டுரையிலிருந்து..

    எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Pasupathy_1தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.

    உரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பதை இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.

    இத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக

    ‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது! அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்! ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!

    பேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.

    இவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    கடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.

    பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
    உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
    மற்றவர் நலனதுக் கெடாது – யாதும்
    அற்றவர் நிலை யிலாதுச் செய்
    கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த பாழாய்ப்போன மனித ஜன்மத்துக்குத்தான் எத்தனை ஆசைகள். குழந்தையிலிருந்து இந்த ஆசை உணர்ச்சி ஆரம்பித்து விடுகின்றது. எதைப் பார்த்தாலும் அதைப் பெற முயற்சிக்கின்றது. தீபத்து ஒளியில் ஆசைப்பட்டு திரியில் கைவைத்து தீ சுடும் என்று தெரிந்தவுடன் அங்கே ஆசை அந்தக் குழந்தைக்குப் பயமாய் மாறுகிறது. ஆசை இப்படி குழந்தையாய் இருக்கும்போதே விஸ்வரூபமாய் மாறி பயமுறுத்தும் அந்த விந்தையையும் அந்த ஆசை என்கிற உணர்ச்சியையும் ஏன் படைத்தானோ ஆண்டவன்.

    ஆசைப்படாதே.. அவஸ்தைப்படுவாய், ஆசையே அத்தனை துன்பத்துக்கும் காரணம் என்று ஒருவர் சொல்கிறார்.. இன்னொருவரோ ‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.. அப்போதுதான் உன் இலக்கை எட்டுவாய்’ (இலக்கு என்ன என்பது இப்படிச் சொன்னவரைத்தான் கேட்கவேண்டும்) என்கிறார். ஆசை இங்கே குழப்பத்தையும் கூடவே உண்டாக்கி விடுகின்றது. எதை எடுத்துக்கொள்வது நாம். ஆசைதான் நன்மைக்கும் தீமைக்கும் நாம் அடியெடுத்துவைக்கும் வழி என்று எடுத்துக் கொள்ளலாமா..

    எனக்கு ஆசையே இல்லை என்று யாராவது சொன்னால் அவரை அடிமுட்டாளாகப் பார்க்கும் சமுதாயம் இதுவல்லவா.. இருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆசையை நாம் இங்கே பார்க்கலாமா?

    மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
    தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
    பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
    காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

    மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
    மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
    வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
    உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

    மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
    ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
    குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
    துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

    கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
    வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
    சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
    அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

    பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
    காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
    தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
    பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

    மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
    நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
    அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
    மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

    ஆஹா இத்தனை ஆசைகளா இவருக்கு.. ஆனாலும் இத்தனை ஆசைகளும் நிறைவேறும்போது இந்த சமுதாயமும் கூடவே அந்தப் பயனில் பங்கு பெறுகிறதல்லாவா.. ஆகையினால் இப்படி ‘வேண்டும் வேண்டும்’ என்று கேட்ட திரு சு. கோபாலன் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில் இந்த வார வல்லமையாளராகவும் தேர்ந்தெடுக்கிறோம்.

    கடைசி பாரா: தேமொழியின் குன்றக்குடி அடிகள் பற்றிய கட்டுரையிலிருந்து:

    ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    கடித இலக்கியம் என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப் பற்றிய ஒரு சில பதிவுகளும் என் வலைப்பூவில் உண்டு. கடிதம் எழுதுவதும் அதை ரசித்துப் படிப்பதுமே ஒரு கலை. ஆதியில் கடிதங்கள் பலவிதங்களாக அனுப்பப்பட்டதைப் பழைய காவியங்கள் பலவகையாக சொல்வதை நாமும் படித்திருக்கிறோம். எத்தனைதான் இக்காலத்தில் மிகப் புதுமையான அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும் உணர்ச்சிகரமான உள்ளத்தோடு, அந்த உணர்வில் பேனா மைகொண்டு கலந்து எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சியோ அல்லது திருப்தியோ, இந்த தற்கால வசதிகளில் கிடைக்காது என்பது என்னவோ வாஸ்தவம்தானே.

    கடிதங்களால் மனத்தின் குறைகளை நம்மால் இறக்கிவைக்க முடியும் என்பதும் கடிதங்களால் உறவுகள் பலமடையும் என்பதும் நாம் அனுபவத்தில் கண்டதுதான். தேவன், குமுதினி போன்ற பெரிய எழுத்தாளர்கள் இந்தக் கடிதங்களைக் கொண்டே பல கதைகள் எழுதியுள்ளார்கள்., ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நீதி சொல்லும்

    கடிதங்களில் காதல் கடிதம் மிகவும் ருசிகரமானவைதான். காதலி எழுதினாலும் சரி, காதலன் எழுதினாலும் சரி, அதன் தனித்துவம் மட்டும் அவர்கள் இருவருக்குமே தெரியும், அதன் மகத்துவமும் புரியும். உணர்ச்சிகளின் இதய ஓட்டத்தை அவர்களால் மிகச் சரியாக வெளிப்படுத்த இந்த கடிதங்கள் எழுதப்படுகின்றன என்பதோடு அவர்கள் காதலையும் கெட்டிப்படுத்துகிறது என்பது கூட உண்மைதான். ஆனால் இன்றைய அதிநவீன உலகில் இக்கடித இலக்கியம் அழிந்துவருவதாகத்தான் தோன்றுகிறது.இப்படி நினைக்கையில்தான் இந்த வாரத்தில் ஒரு தமிழ்மடல் கண்டேன்.. இதோ உங்கள் பார்வைக்கு.

    என் உயிரானவரே…!

    vinmugilalஎப்பொழுது வருவீர்கள், பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள், கதவடைத்த சன்னல்களும், உட்புறம் தாழிட்ட கதவும், நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில். இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டு, மகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும். இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில், தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.

    தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரை, நோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்ததில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.

    மஞ்சள் முகம் தழுவி, குங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.

    கொல்லை புற தென்றல், தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சும் கண்ணீர், கொஞ்சம் ஏக்கம், கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை. உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா? ஓடிவந்து அணைத்துக்கொள்வேனா? முகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனா? பிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ…?

    என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா? உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமா? முத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமா? என்னவளே என்று இதயம் அரற்றுமா? இதழ்கள் காதில் கிசுகிசுக்குமா? மீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில், தேகம் சிலிர்த்தெழுமா?
    இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறது, என் உயிரான நீங்கள் இல்லாமல், தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.

    என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம். எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே”

    உணர்ச்சிகள் இயல்பாகப் பொங்கும் இக்கடித இலக்கியத்தை எழுதியவர் தமிழ்ச்செல்வி அவர்கள். இவரின் தமிழ் இக்கடிதத்தில் சுகமாய் விளையாடி தாலாட்டுப் பாடி நம்மையும் சற்று மயக்கமடையச் செய்கிறதைக் காணலாம். அந்தத் தமிழ் மயக்கத்தைத் தந்த தமிழ்ச்செல்வியை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்!!

    கடைசி பாரா: திரு க. சச்சிதானந்தத்தின் ‘குறவன் பாட்டு”

    துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

    கலவரம் பூணும் கானுருக் கண்டு!

    குலவறம் காக்கும் குறவனின் மனமோ

    இலகுறக் கண்டு கானினை வெல்லும்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பேரா. நாகராசன்

    இந்த வார வல்லமையாளர்  [227\2013 – 28/07\2013

    மெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

    வாராது வந்த மாமணி என்று 20-ஆம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.

    இணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர்.  இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது.  ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்

    சிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை.  இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல்.  மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது

    பெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து  வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்

    photoமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்

    பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது

    முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பேரா. நாகராசன்

    இந்த வார வல்லமையாளர் [15/07/2013 – 22/07/2013]

    தமிழகத்தைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.  வேற்றுமையில் ஒற்றுமை ஒற்றுமையில் வேற்றுமை என்று இரட்டைக் குதிரைச் சவாரி செய்வதில் தமிழர்களுக்கு நாட்டம் அதிகம்.  ஒரே நேரத்தில் இந்த இரண்டு சிந்தனைகளும் வெளிப்படும்போது தமிழன் ஒரு குழப்ப வாதியாகக் காட்சியளிப்பது இயல்பு.

    உலகத் தமிழன் என்று ஒரு புறமும் தனித் தமிழன் என்று இன்னொரு புறமும் ஒருவரே ஒரே நேரத்தில் குரல் எழுப்பி மற்றவர்கள் குழப்பம் அடைவதுபோல் எழுதுவதும் பேசுவதும் சில குறிப்பிட்ட தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் கை வந்த கலை.  தனித்தமிழ், தனித்தமிழன், தமிழன் பெருமை என்று கண்ணைக் கட்டிக்கொண்டு வேகமாகப் பின்னோக்கி நடப்பதும் மேலைநாட்டு நாகரிகப் பண்புக்கூறுகளைக் கண்ணை மூடிக்கொண்டு முன்னெடுப்பதிலும் ஒரு இரட்டை நிலை தமிழ்ப் படைப்பாளர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது

    தமிழ் அறிஞர்கள் பழம்பெருமை பேசுவதையும் ஒரு சிறு வட்டத்தில் தங்களை நிறுத்திக்கொண்டு தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்யும் புதியத் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு தங்கள் சிந்தனையைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியச் செய்யும் ஆர்வமும் திறனும் இல்லாதவர்களாக இருப்பது உண்மை

    புதிய சிந்தனை புதிய படைப்புகள் புதிய வடிவமைப்பு என்று தமிழின் சிறப்புக்கு அணி சேர்க்கும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய தலைமுறைத் தமிழ் இளைஞர்களுக்குத் தமிழை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளார்ந்த உந்துதலுடன் செயல்படும் தமிழறிஞர்கள் வெகு சிலரே.  இணையத் தமிழ்த் தளத்தில் தரமான தமிழில் தற்காலத்துக்குத் தேவையான சிந்தனைகளை எண்ணிம வடிவில் தொடர்ந்து எழுதுவது என்பது எளிதல்ல

    தன் சொந்தக் கருத்துகளையும் இணையத்தில் பரவிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய புதிய தகவல்களையும் தினம் ஒரு மாலையாக மஞ்சரியாகத் தொகுத்துத் தருவதை ஒரு வேள்வியாக நடத்தும் ஒரு கணித் தமிழ் இணையத் தமிழ் அறிஞர் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு பெறுகிறார்

    photo (1)ஈழத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுப்பவர், தனித் தமிழ் வளர்ச்சிக்கு வழி கோலுபவர், இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்பவர், வல்லமை இதழுக்குத் தொடர்ந்து வளம் சேர்ப்பவர் என்று பல வல்லமைகளை நாள்தோறும் வெளியிடும் வல்லமையாளர் திரு. திருவள்ளுவன் இலக்குவனார்

    நெருக்கத்தில் இருப்பவர்கள் பெருமையை அறிந்து பாராட்டுவதைச் சில நேரங்களில் மறந்து விடுவது இயல்பே.  எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் உள்ளூரில் உள்ளவர்கள் அவர் பெருமையை எடுத்தியம்புவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை

    வல்லமை இந்தத் தடையைக் கடந்து இணையத்தில் வல்லமை மின் தளத்தில் தொடர்ந்து தமிழன் சிறப்பு பெருமை உரிமை பற்றி மட்டுமன்றி உலக அளவில் தமிழன் மற்ற இன மொழி மரபுப் பெருமைகளை அறிய வேண்டும் என்ற உணர்வுடன் தன் படைப்புகளைத் தயங்காமல் தளர்வில்லாமல் வெளியிடும் திருவள்ளுவன் இலக்குவனாரை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

    20-ஆம் நூற்றாண்டில் தமிழ் மொழிக் காவலராகத் தமிழனின் சிறப்பை இந்திய அரங்கில் நிலை நிறுத்த மாணவர்களுக்கு ஊக்கமும் உரமும் ஊட்டிய எங்கள் பேராசிரியர் திரு.இலக்குவனார் அவர்களின் புதல்வன் இந்த வார வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்

    வாழ்த்துகள் திரு. திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களே

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

    Sanathkumarகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறிய கிராமம் காக்கங்கரை,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.  கல்வி வசதிகள் ஏதுமற்ற இந்தக் கிராமத்தில் இப்போது மிக அற்புதமான கல்விப் புரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.  மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்ல தன்மையுள்ள மானிடர்களாக மாற்றும் கல்வித் திட்டம் முயற்சிக்கப்படுகிறது.  ஓரளவு வெற்றியும் கிடைத்து வருகிறது.

    நம்முடைய இளைய தலைமுறை, வேளாண்மை பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிளைத்து, ஓரிரு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி அங்கு வேளாண்மை குறித்த பல அடிப்படை ஞானம் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.  வேளாண்மை இப்போது பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குடை பணியை, சனத்குமார் இந்த வாரத்தில் தொடங்கியுள்ளார்.

    தேசிய அளவில் சிறந்த பள்ளிகளில் ஒன்று என்று மதிப்பிடத் தகுந்த அளவில் இந்த கேட்பிரிட்ஜ் பள்ளி இன்று முன்னேறி வருகிறது.

    இந்தச் சாதனைகளை தன்னுடைய சக்கர நாற்காலியின் வேகமான சுழற்சியினால் சாத்தியப்படுத்தி வருகிறார் திரு.சி.டி.சனத் குமார்.

    சிறு வயதில் தவறான சிகிச்சையால் போலியோ நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டு,  சொந்த ஆர்வத்திலும் உழைப்பிலும் வீட்டிலேயே படித்துத் தேறியிருக்கிறார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் அளிக்கும் பெட்ரோல் வழங்கும் நிலையம் இவருக்கு சில ஆண்டுகள் முன்பு அளிக்கப்பட்டது.  சிறிது காலம் அதனை நடத்தி விட்டு, ஒரு பள்ளியைத் துவங்குவது என்னுடைய கனவு. அதற்காக இந்த பெட்ரோல் நிலையத்தைத் திருப்பித் தர முடியுமா என்று கேட்டு, அதில் கிடைத்த தொகையை வைத்து, கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் பள்ளியைத் துவக்கினார்.  பல சாதனைகளைப் படைத்தது கேம்பிரிட்ஜ் பள்ளி.  அதனைத் தொடர்ந்து இப்போது காக்கங்ரையில் உள்ள பள்ளி.  மதிப்பெண்களை வற்புறுத்துவது இல்லை இப்பள்ளி.  மாணவர்களின் தனித்த ஆளுமையைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.  கல்வி மட்டும் அல்லாது, மாணவர்களின் உடல்நலம் குறித்தும் அக்கறை கொண்டு அன்றாடம் பல வகையான முறைகளைக் கையாளுகிறது.  கட்டாய யோகப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அவற்றில் ஒன்று.  அனைத்து  மாணவர்களும் ஏதாவது ஒரு பழம் கண்டிப்பாக மதிய உணவுக்குக் கொண்டு வர வேண்டும்.  இது ஆசிரிய ஆசிரியைககளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறது.  செய்தித்தாள்களில் வரும் முக்கியமான செய்திகள் பற்றிய குறிப்புக்களைப் பள்ளியில் ஆசிரிய ஆசிரியைகள் முன்பு மாணவ மாணவியர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    இவையெல்லாம் இந்தப் பள்ளி கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களில் ஓரிரண்டு உதாரணங்கள்.

    டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.  மொரீஷியஸ் அரசு இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறது.   பல கல்வி நிறுவனங்களில், கல்வி அமைப்பில் இன்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.  வடக்கு வாசல் இதழில் இவர் தொடர்ந்து எழுதிய கல்வித் தொடர் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அக்கறைகளைக் கொண்டு பல அடிப்படையான கேள்விகளை எழுப்பின.  வேர்களாகும் விருட்சங்கள் என்னும் பெயரில் வடக்கு வாசல் வெளியீடாக வந்த அந்த நூலை டாக்டர் அப்துல் கலாம் டெல்லியில் வெளியிட்டார்.

    இப்போது ‘வித்யா தான்’ என்னும் புதிய ஆக்கபூர்வமான கல்வித் திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.

    சீரிய கல்வித் தொண்டினை நோக்கி இவருடைய சக்கர நாற்காலி அல்லும் பகலும் சுழன்றுகொண்டிருக்கிறது.

    கல்வியாளர் சி.டி.சனத் குமார் அவர்களை இந்த வார வல்லமையாளராக அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    இன்றைய கல்வியில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து இவருடன் உரையாடலாம். சனத் குமாரின் மின்னஞ்சல் – sanathkumar5252@gmail.com | தொலைபேசி- 9443207061 | வலைப்பூ- http://sanathkumarkrish.blogspot.in/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.

    மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.

    இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..

     வே.ம.அருச்சுணன்இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப் பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித் தருவோம் மடமையில்
    எதிர்ப்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    மலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.

    கடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை

    எல்லாம்
    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
    நன்றாய் இல்லையே குணத்தில்
    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

    என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.

    சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.

    டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.

    நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.

    பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.

    திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.

    **** **** ****

    கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    Sundarji Prakashசென்ற வாரம்  ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, ‘தம்’மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ஒன்றாவது மாடியில் இருந்து இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் கூட்டை விட்டு அவள் உயிர் போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நமக்கு சம்பந்தமில்லாதவள்தான்.. இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏதோ தகராறு போல.. தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் உயிரைத் தானே இப்படி மாய்த்துக்கொண்ட சோகம் இன்னமும் என் மனத்தை விட்டு விலகவில்லை..

    எத்தனைதான் இருந்தாலும் உயிர் என்ன அத்தனை மலிவா.. சடக்கென்று நினைத்தமட்டில் உதறிக்கொள்ள, அது என்ன அன்னப் பறவையா.. நீரில் வந்ததால் படர்ந்த ஈரத்தை சிறகடித்துப் போக்கிக் கொள்ளுவதைப்போல நினைத்த மாத்திரத்தில் நீக்கிக்கொள்ள முடியுமா.. இறைவன் கொடுத்த உயிரை இறைவனே எடுத்துக்கொள்ளும்வரை பொறுத்திருக்க வேண்டாமா.. நம்முடைய உடலில் உள்ள நம்முயிர்தான் அது.. ஆனாலும் நமக்கென்ன உரிமை அதன் மீது? மனிதனுக்கு அந்த உரிமை இல்லை என்றுதான் பெரியவர்கள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகிறார்கள். உயிர் வரும்போது அதை உணரும் அளவுக்குத்தான் மனிதனுக்கு உரிமை உண்டு என்றுதானே சொல்லி வருகிறார்கள். அந்த உயிர்உள்ள உடல் நீண்டகாலம் நிலைக்கவேண்டும் என்பதால்தானே இந்த உலகமே இத்தனை அல்லாடுகின்றது. உடலிலிருந்து முடிந்தவரை, உயிர் போக விடக்கூடாது என்றுதானே உலகத்து மருந்துகள், மாத்திரைகள், மருத்துவர்கள் என்று கோடிக்கணக்கானவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..

    சென்று போனவள் எப்படியோ போய்விட்டாலும் எத்தனை கேள்விகளை விதைத்துவிட்டுப் போய்விட்டாள். ஆனால் இதற்கான விடையை அன்பர் சுந்தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு மடலில் கவிதையாக எழுதி அனுப்பி இருந்தார். இதோ சுந்தர்ஜியின் கவிதை உங்கள் பார்வைக்கு:

             எறும்புக்கு ஒற்றை விரல்.

    கொசுவுக்கு ஒரு கை.

    ஓணானுக்கும்

    தட்டானுக்கும் ஒரு சுருக்கு.

    குருவிக்கு ஒரு சிறுகல்.

    பாம்புக்கு ஒரு கழி.

    தவளைக்கு ஒற்றை அடி.

    நத்தைக்கு ஒற்றை மிதி.

    நாய்க்கோ கல்லெறி.

    மாட்டுக்கும் பன்றிக்கும்

    ஆட்டுக்கும் கோழிக்கும்

    அதனதற்கேற்றாற் போல்.

    மீனுக்குப் புழு.

    யானைக்குப் பெரும்பள்ளம்.

    மானுக்கு ஒற்றைக் குறி.

    காளைக்கும் கழுதைக்கும்

    பெரும் பாரம்.

    ஒட்டகத்துக்கு

    முடிவில்லாப் பாலை.

    குதிரைக்கோ விதவிதமாய்.

    வாழாதிருந்து சாகிறான்

    மனிதன்.

    சாகாதிருக்க வாழ்கின்றன

    உயிர்களெல்லாம்.

    சுந்தர்ஜியின் கவிதையைப் படித்ததும் எத்தனை அருமையான விவரிப்பு என்றுதான் எனக்குப் பட்டது. மரணம் என்ற ஒன்றைப் பற்றி மனிதனுக்கு மட்டுமே உணர்வு உண்டு. அந்த உணர்வு உணரப்படுவதால் மனிதப் பிறவியை நல்ல விதத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அந்தப் பிறவியைப் பயன்படுத்தி இன்னமும் மேல்நிலை அடையவேண்டும் என்பதுதான் இறைவன் விதித்த விதி. அந்த உணர்வை மதிக்காதவர் அருமையான இந்தப் பிறவியைப் பாழாக்கிக்கொண்டார்களே என்றுதான் வருத்தப்பட வைக்கிறது.

    நல்லதொரு விவரணையைக் கொடுத்த திரு. சுந்தர்ஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவர் மேலும் மேலும் பல கவிதைகள் தரவேண்டும் என்பது என் விருப்பம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத் திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி – (திருமதி பவளசங்கரியின் ‘வெற்றிக் கனியைத் எட்டிப் பறிப்போமா’ என்ற கட்டுரையில் பார்த்தது)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெருக்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாமோ என்னவோ.. ஏனெனில் மனைவி என்பவள் சதா உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாள். கணவனின் சகல பொறுப்புகளையும் தானே சுமந்து குடும்பத்தின் மேன்மைக்குக் காரணமாகிறாள்.

    சமீப காலங்களில்தான் இந்தக் குடும்பப் பெண்களின் வேலைப் பளுவைப் பலர் உணர்ந்து வருகிறார்களோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. வேலைக்குச் செல்லாமல் குடும்ப பாரத்தைச் சுமந்து அதைப் பொறுப்பாகக் கொண்டு போகும் பெண்களை ஹவுஸ் வைஃப் அல்லது ஹோம் மேக்கர் என்ற நயமான பதத்தால் பலர் விளிக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.. காரணம் பொறுப்பான முறையில் குடும்ப பாரம் சுமப்பது என்பது நிச்சயமாகக் கடினமானது. மாறிவிட்ட இந்த மாயமான நவீன வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பித்து அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவதில் அந்தப் பெண்மணியின் பங்கு மிக மிக அதிகம்.

    குடும்பப் பொறுப்பாளர் என்ற பதவியை அடைந்த பின்னர் அந்தப் பெண்ணின் அன்றாட அலுவல்களை நாம் சற்றே அலசினால்தான் தெரியும் அவர்கள் படும் பாடு. சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி வலைப் பூவில் நமக்காக, அந்த குடும்பப் பொறுப்பாளரின் பணிகளை சற்றுப் பட்டியலிட்டிருக்கிறார்.

    இவர்கள்

    அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள்.

    அவர்களுக்குப் பற்பசை

    குளியல் துணிமணி புத்தகப்பை

    ஷூ சாப்பாடு கையில் டிபன்..

    அவருக்கு காலையுதவி

    காப்பி

    அலுவல் புறப்பாட்டுச் சேவை

    சாப்பாடு கையில் டிபன்..

    எல்லோருக்கும் வாசலில் நின்று

    சிரித்துச் சிரித்து

    முகமனும் விடையும் தருகிறார்கள்.

    ஓடியாடி நின்று நடந்து

    எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள்.

    வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள்

    வழியில் காய்கறி

    பால்பழம் மளிகை

    சட்டைப் பித்தான்

    கிழிந்த உடைக்கு ஊசி நூல்

    வாங்கி வருகிறார்கள்

    மொழி பாட்டு நடனம் ட்யூஷன்

    கோவில் மருந்துக்கடை

    என்று தினம் போகிறார்கள்.

    ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்

    எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்

    பெருமூச்சு விடுகிறார்கள்.

    வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்

    தவறான வாக்கெனினும்.

    அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து

    ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று

    புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.

    எல்லோரும் திருப்தியானதும்

    எல்லாம் அடங்கியதும்

    விளக்கணைத்த நள்ளிரவில்

    அமைதி கலைக்காத ஓசையுடன்

    தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.

    தாரியா தொமித்ரொவிச் எழுதிய ‘sad women’ எனும்  கவிதையைப் பதிவாக்கியுள்ள திரு. அப்பாதுரை அந்தக் கடைசி வரிகளில் அவர்களின் உழைப்பு பற்றி கண்ணீர் வரிகளில் கவிதையாய் விவரித்திருக்கிறார். பிறருக்காக, (அவர்கள் தம் கணவர், ,குழந்தைகள் என்றே இருந்தாலும்) உழைக்கும் குடும்பப் பொறுப்பாளர்களுக்கு எமது வந்தனங்கள். உங்கள் உழைப்பு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்குத் தணியாத ஆசை. கவிதையாய் அழகாகச் சொன்ன திரு. அப்பாதுரை அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு எம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

    தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்! – கவிநயா

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒன்றினை இரண்டு நாட்கள் முன்பு படிக்க நேர்ந்தது. பாரத பண்பாட்டையும் அதன் சிற்பக் கலையின் மேம்பாட்டையும் நன்கு உணர்ந்து அதன் உன்னதத்தைப் போற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த சிற்பங்களை பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் இரு மேற்கத்தியவர்கள் ஆற்றிய பணிகள் பற்றிய சிறு வரலாற்றுடன் கூடியது

    சிற்பக் கலையின் பெருமைகளை அறியத் தரும் ஒரு அருமையான தளம், சிங்கப்பூர் விஜய் அவர்களின் கல்லிலே கலைவண்ணம் கண்டான் – பொயட்ரி-இன்-ஸ்டோன், இதன் பதிவுகள் இந்த வாரத்தில் முன்னூறை எட்டியுள்ளன. இந்த முன்னூறாம் பதிவை இந்த வாரம் பதிப்பித்தவர் நம் மதிப்பிற்குரிய எழுத்தாளர் கடலோடி திரு நரசய்யா அவர்கள். இந்தப் பதிவில்தான் நான் மேற்குறிப்பிட்ட பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மதுரை மதன கோபால்சாமி ஆலய கலைச் சிற்பங்கள் பற்றிய முன்வரலாற்றுக் குறிப்பை மிகச் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுத்தின் மூலமாக சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்சியகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது.

    மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான்.

    மேலும் படிக்க சுவையான இந்த இணைப்பைச் சொடுக்குங்களேன்..
    http://poetryinstone.in/lang/ta/2013/05/31/300th-post-connection-of-west-and-east-by-art-poetryinstone-becomes-a-record-of-history-kra-narasiah.html

    நரசய்யா அவர்கள் எனக்கு எப்போதும் எழுத்துலகில் பெரிய வழிகாட்டியாக இருப்பவர். அவர் என்னைப் பாராட்டி எழுதிய எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கைவரப்பெற்றவன்.. ஆனாலும் சிறியனாகிய நான் எப்போதுமே அவரை ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இவரது அனுபவங்கள், தெளிந்த ஆராய்ச்சிகள், நேர்மையான எழுத்துகள், அதற்கும் மேலாக எளிமை, இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்தான் இவை எல்லாமே எதிர்கால எழுத்தாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த முன்னூறாவது பதிவிலும் அவரது ஆராய்ச்சியின் புலமையும் அவரது நினைவாற்றலும் போற்றத்தக்க வகையில் பரிமளித்த விதமும் எங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்த வார வல்லமையாளர் எனும் விருதினை நரசய்யா அவர்களுக்கு அளித்து மகிழ்வது என்பது. . விருதுகள் பல வாங்கியவருக்கு இது பத்தோடு பதினொன்றாக இல்லாமல் எங்கள் இதயங்களின் அன்பையும் சுமந்துகொண்டு கொடுப்பதை அவர் அறிவார். மேலும் பல பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க அவரது எழுத்துப் பணி!

    கடைசி பாரா: பழமை பேசி தன் பெயரை புதுமை பேசியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘அமைதி’ யான கவிதை

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சென்னை தாம்பரம்-பீச் இடையேயான லோகல் ரயிலில் பிஸியான நேரத்தில் பிரயாணிப்பவர்கள் அதுவும் நின்று கொண்டே பிரயாணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்தான். ஆனால் இந்த சிரமத்தைப் போக்கும் மருந்தாக அவ்வப்போது சில பாடல்கள் கேட்கும். கண்ணிழந்தவர் ஓரிருவர் பக்தி பாடலோ அல்லது ஜனங்களுக்கு மத்தியில் புகழ்பெற்ற சோகப்பாடல்களில் ஒன்றையோ பாடிக் கொண்டே பிச்சை எடுப்பார்கள். பிரயாணிகள் அவர்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ அவர்கள் பாடல்களை இவர்கள் உதடுகளும் நிச்சயம் முணுமுணுக்கத்தான் செய்யும். பிரயாணப் பொழுது எத்தனை சிரமமாக இருந்தாலும் மனம் திசை திருப்பப்பட்ட நிலையில் சிரமத்தை பொருட்ப்படுத்தமாட்டார்கள். இப்படி ஆரம்பகால மாணவப்பருவத்தில் இப்படி ரயிலில் நான் கேட்ட ஒரு பாடல் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.. எனும் செவிக்கினிய, மனதுக்கினிய செந்தமிழ்ப் பாடல்.

    நான் வெகு நாட்கள் வரை இது ஏதோ திரைப்படப்பாடல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னொருநாள் நண்பன் கொடுத்த டி.எம்.எஸ் பாடிய.முருகர் பாடல் தனிப்பாடல்கள் மூலம்தான் உண்மையை அறிந்துகொண்டேன். என் மனதைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடல் எத்தனையோ பேருக்கு ஆழ்ந்த ஆறுதலையும் பக்தியையும் கொடுத்திருக்கத்தான் வேண்டும் என நான் எனக்குள்ளேயோ சொல்லிக் கொள்வதுண்டு.. டி.எம்.எஸ் இன் முருகர் பாடல்கள் இன்றளவும் இயற்கையான, எளிமையான பக்தி பாடல்களாகவே இருப்பது மட்டுமல்லாது பாமரர் மத்தியிலும் புகழடைவதென்பது அவருக்கு முருகர் கொடுத்த வரம் போலும். உள்ளம் உருக வைக்கும் முருகைய்யாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக விற்பனையானது ஆச்சரியமல்ல வென்றும், அதன் காரணம் டி.எம்.எஸ் எனும் மக்கள் கலைஞனின் குரல் வண்ணத்தால் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

    இதோ இந்த வாரம் டி.எம்.எஸ் பற்றி அஞ்சலிக் கட்டுரையை சமூக ஆர்வலர் திரு வேணுகோபாலன் உணர்ச்சிகரமாக எழுதி இருக்கிறார்

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    டி எம் எஸ் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றுமே நம் மனதை விட்டு மறையப்போவதில்லைதான். இந்த வேளையில். மனதுக்கு இதமாக இப்படி ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதிய திரு வேணுகோபால் அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். திரு வேணுகோபால் அவர்களுக்கு,, வல்லமையாளருக்கு எம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மலர்சபா அவர்களின் ’நான் அறிந்த சிலம்புப் பாடல்’

    மயக்கத்தையுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    அனைத்துக்கும் பெண்ணே ஆதாரம் என்பதை எத்தனையோ முறை எத்தனையோ புராணங்கள் எத்தனையோ காவியங்கள், எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பெரியோர்கள் நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏராளமாக எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாலும், எப்போதுமே இந்தப் பெண்மையின் பெருமையை நாம் போற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இறைவன் விருப்பமோ என்னவோ..

    ஸ்கந்த புராணத்தில் மன்மதன் சாம்பலாகிப் போனதின் தத்துவத்தை விரிவாகக் கேட்டு அதன் தத்துவத்தின் மகிமையில் வியந்து போனவன் நான். தேவர்களின் தலைவன் இந்திரன் ஆணையை ஏற்று உலகத்தையே ஆக்கி காத்து அழிக்கும் அந்த ஆதி பகவனுக்கே காமத்தை ஏற்படுத்த அம்பு எய்கிறான் மன்மதன். எவரை நோக்கி எய்தானோ அந்தக் காமேசனுக்காக எய்யப்பட்ட அந்த அம்பு உடனடியாக வேலை செய்யாவிடாலும் அம்பை எய்தவனை சாம்பலாக்கிவிட்டது எத்தனை கொடியதோ.. தன் காதலன் அழிந்துவிட்டான் என்றறிந்த அவன் மனைவி கதறுகிறாள். எய்தவன் தன் கணவனே என்றாலும் எய்யப்படும் ஏவல் அவனுடையதல்ல என்று நியாயம் கேட்கிறாள். அவள் கதறலுக்கு இறுதியில் பராசக்தி மூலமாக வெற்றியும் கிடைக்கிறது என்று ஸ்கந்த புராணம் விரிவாக உரைக்கிறது. ஆக இந்திரன் ஆணையை ஏற்று மன்மதன் செய்த தவறு, அதனால் மன்மதனுக்கு ஏற்பட்ட மரணம், மன்மதன் பிரிவால் ரதிக்கு ஏற்பட்ட துயரம், அந்தத் துயரத்தால் எழுந்த ரதியின் போராட்ட நிலை இவையெல்லாம் சற்று நிதானமாக நாம் சிந்தித்தால் அந்த ரதி தேவியானவள் மன்மதனை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் காப்பாற்றி இருப்பது தெரியும்.

    காமன் இல்லாவிட்டால் உலகில் காரியம் இல்லை. காரியம் இல்லாவிட்டால் இந்த உலகின் இயக்கமே கேள்விக்குறியதாகிறது காமன் மறுபடி வந்ததற்கு மூலகாரணம் ரதிதேவிதான். இத்தகைய ரதிதேவியின் சிற்பத்தை குடுமியான் மலையில் கண்டு அற்புதமாக வரைந்திருக்கிறார் திரு சு. ரவி அவர்கள். வல்லமை இதழில் இந்த வாரம் வெளிவந்த அந்த அழகான ரதியின் படமும் அதற்கான விளக்கமும் திரு ரவியின் கைவண்ணத்தில் தந்துள்ளேன்.
    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

     

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    அழகுக்கு இலக்கணம் ரதிதேவிதான் ஆக்கத்துக்கும் அவள்தான் ஆதாரமாகத் திகழ்கிறாள். அப்படிப்பட்ட ஒரு உயிரோவியத்தை நமக்குத் தந்த திரு சு.ரவி அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு ரவிக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மகாகவியை நினைவுபடுத்திய கவிதை வரிகள் என்பதை மறுக்கமுடியாதுதான். கவியின் காதல் எழுதிய புவனேஸ்வரின் கவிதை வரிகள்

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    கல்வெட்டுக் குறிப்புகள் என்பது நாம் கடந்து போன காலத்தின் சுவடுகள், ஆவணங்கள், நம் முன்னோர் தம்மைப் பற்றி விட்டுச் சென்ற செய்திச் சேகரங்கள். நம் தேசம் எப்படியெல்லாம் இருந்தது., எப்படியெல்லாம் புகழ்பெற்றது, எப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொண்டோம், எப்படியெல்லாம் இந்தக் கோயில் குளங்களைக் கட்டினோம், எப்படியெல்லாம் பிறரைச் சாகடித்தோம் அல்லது தண்டனை வழங்கி திருப்தி அடைந்தோம், எப்படியெல்லாம் பாபங்கள் செய்தோம், எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்தோம், யார் யாரைக் கொன்றார்கள், யார் யாரைக் காப்பாற்றினர், எந்தக் கோயிலில் எந்த தெய்வத்துக்கு எத்தனை விதமான ஆபரணங்கள் செய்வித்தோம், எந்த தெய்வத்துக்கு எப்படிப்பட்ட ஆராதனையை எந்த அரசன் தயவில் செய்வித்தோம், இந்த சமாதியில் உள்ள எம் முன்னோர் யாவர்.. என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகளை வருங்காலத்துக்கு எடுத்துச் சொல்ல ஒரு காலப்பெட்டகமாக நமக்கு நம் முன்னோர் ஏற்பாடு செய்ததே இந்தக் கல்வெட்டுகள்.

    திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஒரு கல்வெட்டு புகழ்பெற்ற மகேந்திரபல்லவன் தான் ஏன் சைவத்துக்கு மாறினான் என்று குறிப்பிட்டுள்ளான் என்றால் புவனேஸ்வரில் உள்ள ஒரு கல்வெட்டு எப்படி 113 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த தமிழ் மன்னர் கூட்டத்தை ஒரு கலிங்க மன்னன் சிதறடித்தான் என்பதையும் தெரிவிக்கும். இப்படி எத்தனையோ விஷயங்கள்.. அதுவும் கல்வெட்டுகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த, இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு கல்வெட்டு விஷயம் என்பது காந்த நிலையைப் போன்றதும் அப்படியே கட்டிப் போட்டுவிடும் என்பதும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். விசாகப்பட்டினத்தில் கிடைத்த இரண்டு தமிழ் கல்வெட்டுகள்தான் எனது முதல் நாவல் வம்சதாராவுக்கான அஸ்திவாரம் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டும் உள்ளேன்.

    இப்படிப்பட்ட காலப்பெட்டகம் என்று சொல்லப்படும் ஒரு அரிய விஷயங்கள் இன்னமும் ஏராளமாக மைசூரில் அரசாங்க ஆர்க்கியாலஜி அலுவலகத்தில் படியெடுக்கமுடியாமல் அழிந்து வருகின்றன என்பது எல்லா அறிஞர்களும் அறிந்த விஷயம்தான் என்றாலும், இதில் வேதனைக்குரிய விஷயம் எதுவென்றால் அப்படி அழிந்து போகும் ஆவணங்களில் முக்கால்வாசி தமிழில் வரையப்பட்டவையாகும் என்பதே. இதைப் பற்றி நண்பர் ஷஃபி முன்னா ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையில் எழுதியதை கீழேயுள்ள சுட்டியில் படிக்கலாம்.

    http://news.vikatan.com/index.php

    அதே சமயத்தில் இந்த விஷயத்தினை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் ஒரு பெண்மணி இந்த வாரம் நம் கவனத்தைக் கவர்கிறார். அவர்தாம் பேராசிரியர் சாந்தினி பீ அவர்கள்.

    சாந்தினி பீ அலிகார் பல்கலையில் சரித்திரப் பாடம் புகட்டும் ஒரு தமிழர் என்பதோடு இந்தக் கல்வெட்டு விஷயத்தைப் பலர் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சாந்தினியின் முயற்சி பலனளிக்கவேண்டும், இன்னமும் சேதமாகாத கல்வெட்டுகளாவது படியெடுக்கப்பட்டு காலப்பெட்டகம் சீர் செய்யப்படவேண்டும் என்பது எம்மைப் போன்றவர்களின் விருப்பம். எதிர்கால சந்ததியினர் இன்னமும் சிறப்பாகக் கடந்த காலம் பற்றித் தெரிந்திட இந்தக் கல்வெட்டுகள் உயிர் பெறும் அளவுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செயல்படவேண்டும் என்பதும் நம் அவா. பேராசிரியர் சாந்தினியின் முயற்சிகளுக்கு நம் வாழ்த்தை அள்ளி வழங்குவதோடு அவருக்கு இந்த வார வல்லமையாளர் விருதையும் வழங்கி கௌரவிக்கிறோம்.

    கடைசி பாரா: திரு ஓம் சுப்பிரமணியம் இந்த வார வல்லமையில் எழுதியது:

    சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
    வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

    Share