Tag: – முனைவர் ச. சுப்பிரமணியன்

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 39

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 39

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வலங்கைமான் பெற்ற வரம்!

    அனைவருக்கும் வணக்கம்!

    படுக்கையில் கிடக்கும் இந்த முதியவனுக்குப் பாசத் தொடர்பெல்லாம் முகநூல்தான். சில வேளைகளில் நூல்களைத் தடவிப் பார்ப்பதுண்டு, கண்ணொளி மங்கியதால் கருத்தொளி மங்காமல் போவதற்கான சிறு முயற்சி. . ஒரு அற்புதமான தகவல் தொடர்புச் சாதனமான முகநூலை மூளை அழுகியவர்களும் அறிவின் முனைமழுங்கிப் போனவர்களும் ஊழல் பெருச்சாளிகளும் உதவாக்கரை அரசியல்வாதிகளும் உழைக்காத ஒருவனை உயர்த்திவிடும் திரைப்பட ரசிகர்களும் இயல்பு மாறிய இருபால் இளைஞர் சமுதாயத்தினரும் எப்படியெல்லாம் சிதைத்தும் சீரழித்தும் வருகின்றனர் என்பதை நித்தமும் காணுகின்றேன். கவலைப்படுகின்றேன். நெஞ்சம் பொறுக்கவில்லை. “என்னை மனிதனாக அங்கீகாரம் செய்த இந்த மானுடச் சமுதாயத்திற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிச் செயல்படும் உத்தமர்கள் சிலர் இல்லாமல் இல்லை. அவருள் ஒருவர்தான் வலங்கைமான் திரு வேல்முருகன் அவர்கள். மறைந்த கவிஞர் கம்பதாசனுக்கு நெருங்கிய உறவினர். மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு, தனது பணிக்குச் சற்றும் தொடர்பில்லாத தமிழிலக்கியம், தமிழ்க்கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் முதலியனவற்றைப் படைத்து வருகிறார். விருதளித்துப் பாராட்;டும் விழாக்கள், பரிசு நல்கி ஊக்குவிக்கும் பாங்கு ஆகிய அனைத்தும் ஒருங்கே பெற்றவர் இவர். இவர் படைப்புத் தொழிலாலும சிறந்தவர். நாளும் படிக்கவும் தெரிந்தவர். அப்படி அவர் படித்துப் பதிவிட்ட சில பாக்களின் சிறப்பை நான் உணர்ந்த வண்ணம் பதிவிட்டிருக்கிறேன். பாடல்களை எழுதியவர் வேறாயினும் அவற்றை இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கும் உண்டு என்பதால் ;இந்தக் கட்டுரை ஒரு திறனாய்வாகவும் ஒரு பாராட்டுப் பத்திரமாகவும் வடிவமைக்கப்படுகிறது.

    முகம் மறைத்த முகநூல்

    வணக்கத்திற்குரிய உ.வே.சா. சொல்லுவார். “நான் கொட்டுகிற நெல் மணிகளைக் கண்டு மகிழ்வதில்லை. ஒரு மூட்டை உமியில் ஒரு நெல் மணி கிடைக்காதா என்ற ஏக்கந்தான் எனக்கு வாழ்வு!” என்று.

    திருவள்ளுவர் சொல்லுவார். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பெபாருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று

    “எண்பது வயது நிரம்பிய இந்த அந்திமக் காலத்தில் படிக்க இயலுk; வண்ணம் என்னை வைததிருக்கிறானே?” என்பதுதான் இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றி!.

    அப்படிப் பார்த்துப் படித்துச் சுவைக்கின்ற சிலவற்றை அன்பர்களின் பார்வைக்கு அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். அதில் இதுவும் ஒன்று

    தஞ்சைத் தமிழ்; மன்றத் தலைவராகிய அன்பர் திரு வேல்முருகன் அண்மையில் ஒரு பதிவிட்டிருந்தார். அதனைப் பதிவு என்று சொல்வதைவிட இரண்டு வைரக்கற்களை முகநூல் சந்தையில் கடைவிரித்தார் என்றே சொல்லலாம்.

    காரணம் முகநூல் இன்று சந்தைக்கடை ஆகி வருகிறது என்பதில்லை. சந்தைக் கடையாகவே மாறிப்போனது. இது பற்றிக் கட்டுரையின் முந்தைய பகுதியில் நான் குறிப்பிட்டுள்ளேன்!

    முகநூல்…………..

    சுய அரிப்புக்களைத் தீர்த்துக் கொள்ளவும்,
    வஞ்சப் புகழ்ச்சி வாசகங்களுக்காகவும்,
    அருவெறுப்பான சொல்லாடல்களுக்காகவும்,
    போலிப் புகழ்ச்சிகளை ஆவணப்படுத்துவதற்காகவும்
    வெற்றுச் சொல் எம்பல்களைக் கவிதை என்னும் மோடிமஸ்தான் வேலை செய்வதற்காகவும் ஒரு வடிகாலாகப் போய்விட்டது.

    சென்ற நூற்றாண்டில் முகநூல் போன்ற அறிவியல் சாதனங்கள் வந்திருக்குமேயானால் ஒவ்வொரு துறையும் எங்கோ போயிருக்கும். தமிழும் எங்கோ போயிருக்கும்.

    இன்று அழுகிப்போன தமிழ்ச் சமுதாயத்தில் போலிகளின் கையில் அது சிக்கிக் கொண்டிருக்கிறது,

    இதுபோக, அன்பர் திரு வேல்முருகனோடு நான் பல தளங்களில் முரண்படுகிறவன். யாப்பே கவிதை என்னும் மயக்க நிலைக்கு ஆளாகாமல் இருந்திருந்தால் அவருடைய

    1. கவிப் பேராற்றலுக்கும்
    2. தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் தன்னலமற்ற உயரிய பண்புக்கும்,
    3. நிர்வாகத் திறனுக்கும்
    4. ஆளுமைக்கும்,
    5. சகிப்புத் தன்மைக்கும்
    6. பொறுமைக்கும்
    7. அனைவரையும் அரவணைக்கும் பண்பிற்கும்
    8. எதனையும் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் அறிவியல் அணுகுமுறைக்கும்

    ஒட்டு மொத்த தமிழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழ்க்கவிதை உலகில் பெற்றிருப்பார்.

    என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! கவியரங்கங்களோடு நம் கவிதைக் கனவு முடிந்து போனது என்னைப் பொருத்தவரையில் ஒரு வருத்தமான சேதியே!

    இந்தப் பதிவுக்காக அவரைப் பற்றிச் சில சொன்னேன்.! அவ்வளவுதான்! அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன சொல்வாரோ என்றெல்லாம் நான் கவனிப்பதும் இல்லை! கவலைப்படுவதுமில்லை!

    இதில் மட்டும் நான் கண்ணதாசன்!

    வேல்முருகன் பதிவிட்ட இரண்டு பாடல்கள்

    அந்தப் பதிவில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக்காட்டியிருக்கிறார். அருமையான ஒப்பீடு! அவருள் மறைந்து கிடக்கும் ஒப்பியல் நோக்கினை வெளிடுத்துவதாய் அது அமைந்துள்ளது

    “நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம்.”

    என்னும் ஔவையார் பாடலையும்

    தண்டாமரையின் உடன் பிறந்தும்
    தண்தேன் நுகரா மண்டூகம்!
    வண்டோ கானத்து இடைஇருந்து
    வந்தே கமல மதுவுண்ணும்!
    பண்டே பழகி இருந்தாலும்
    அறியார் புல்லோர் நல்லோரைக்
    கண்டே களித்தங்கு உறவாடித்
    தம்மில் கலப்பார் கற்றாரே.!

    என்னும் விவேக சிந்தாமணி பாடலையும் அவர் இணைத்து மீள்பதிவாக இட்டிருக்கிறார். எந்த மனநிலையில் இவற்றைப் பதிப்பித்தார் என்பது எனக்குத் தெரியாது.
    விவேக சிந்தாமணி பாடலில் முரண்கள் அழகூட்டும் திறன் வியக்கத்தக்கது. தாமரைக்கு அடியில் வாழும் தவளைக்குத் தெரியவில்லை அதன் மணமும் தேனும். ஆனால் காட்டின் நடுவே எங்கோ ஏதேதோ மலர்களுக்கிடையே ரீங்காராமிட்டுக் கொண்டிருக்கும் வண்டுக்குத் தெரிகிறது குளத்துப் பூ அருமை!. என்ன அருமையான சிந்தனை?
    தாமரையின் மணம் அறியாததால் தண் தேன் நுகரா மண்டூகம் என்று வாளா எழுதிய ஆசிரியர் அரிதான கற்றவர்களைக் காணும் பேறு அரிதாகப் பெற்றமையின் அவர்களின் அந்தச் சந்திப்பைப் படிப்படியாக விளக்குகிறார்.

    கற்றார்கள் சந்தித்துக் கொண்டால் எப்படிப் பழகுவார்களாம்? இப்படிப் பழகுவார்களாம்.
    கண்டே களித்தங்கு உறவாடித்
    தம்மில் கலப்பார் கற்றாரே.!

    கவிதையில் தேவையில்லாத ஒரு சொல் கூட இடம் பெறக் கூடாது, பெற்றால் அது கவிதையாகாது.
    1. கற்றவர்கள் முதலில் கண்ணால் காண்பார்களாம்
    2. அடுத்து மனத்தால் களிப்பார்களாம்
    3. நட்பு உறவாகுமாம். உறவுக் கருவியாகக் கல்வி பயன்படுமாம்.
    4. ஒருவர் மற்றவரில் ஒன்று கலந்து விடுவார்களாம்.

    ‘கலந்த அன்பாகி’ என்பார் மணிவாசகப் பெருமான் இவர்களும் கலந்து விடுவார்களாம். இது கற்றாரின் தனிச்சிறப்பாம்.

    பல நாள்களுக்குப் பிறகு இன்று மாலை நான் கணிப்பொறியை இயக்கலாம் என்று நினைத்துத் திறந்தபோது என் கண்ணில் பட்டவை இந்தப் பாடல்களே!
    ஒரு பெரிய இலக்கிய உத்தியை இந்தப் பாடல்கள் எனக்குணர்த்துவதாய் அறிந்தேன். அறிந்ததை இங்கே பதிவு செய்கிறேன்.

    கற்றாரின் பேராளுமையையும் பண்புநலன்களையும் உவம அளவையால் விளக்குகின்ற பாடல்கள் இவை. இந்த இயல்பு பற்றியே திரு வேல்முருகன் ஒத்த இயல்பறிந்து பதிவிட்டிருக்கிறார்.

    என் சிந்தனையைத் தூண்டியது ஔவை பாடலின் சொல்லாட்சியும் சிந்தனையும்!
    புறநானூற்றில் ஒரு பாட்டு. அனைவருக்கும் தெரிந்த பாடல்தான்!

    “உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும், ‘இனிது’ எனத்
    தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
    துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,
    புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,
    உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;
    அன்ன மாட்சி அனைய ராகித்,
    தமக்கென முயலா நோன்தாள்,
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே!”

    இந்த உலகம் உண்டு. எப்போதும் இருக்கும். காரணம் பண்புடையவர்கள் சிலரே ஆயினும் அவர்கள் எப்போதும் இருப்பார்கள். இப்படித் தொடங்கிய புலவர் அந்தப் பண்பு நலன்களைப் பட்டியலிடுகிறார்.

    1. அமுதமாயினும் தனித்து உண்ணார்.
    2. சினங் கொள்ள மாட்டார்.
    3. புகழுக்காக உயிரையும் கொடுப்பார்
    4. பழியொடு வருவதாயின் உலகத்தையே மறுதலிப்பார்! .
    5. மடியற்றவர்
    6. தமக்கென வாழார்
    7. பிறருக்காகவே வாழ்வார்!

    முதல் ஐந்தும் பிறப்பிலேயே அமைந்த பண்புகள். இறுதியிரண்டும் அவற்றை அடியாகக் கொண்டு இவர் அமைத்துக் கொண்ட வாழ்வியல் முறை. அதனால் அவ்வைந்து பண்புகளைத் தொகுத்து ‘அன்னமாட்சி அனையர்’ என்று சுட்டுகிறார்.

    இந்தப் பாட்டில் சொல்லப்பட்ட அத்தனைச் சொற்களையும் அதிகாரத் தலைப்பாக்கியவர் திருவள்ளுவர்.
    இந்தப் பண்புகளைத்தான் வள்ளுவர் தம் நூலில் ஒரே சொல்லால் இப்படி அமைத்திருக்கிறார்!. சுருக்கம் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தியவர் திருவள்ளுவர்!

    “பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்”

    பண்பு என்பது ஒருமையாயினும் அது இனஒருமை. ஒருவர் பண்புடையவர் என்றால் ஒரு பண்பை உடையவர் என்று பொருளாகாது. அவர் பண்புகளோடு கூட்டணி அமைத்திருப்பார். ஆட்டு மந்தை என்பது போல! “குறுகத் தறித்த குறள்” என்பது இதுதான்!

    இந்தக் குறட்பாவில் ஒரு நுண்ணியம் உள்ளது. அதாவது

    “உலகியல் நிலைபெறுவது பண்புடையாரைப் பொருத்தது.! பண்பு இலாதவர் இருப்பின் அது மண்புக்கு மாயும்! “
    “உலகு – ஆகுபெயர்” என்று எழுதுவார் பரிமேலழகர்
    என்ன நுண்ணியம்.? உலகம் என்பது உலகியலைக் குறிக்குமானால்; ‘மண்’ என்பது எதனைக் குறிக்க வேண்டும். அதே உலகியலைத்தானே குறிக்க வேண்டும்! அதுதான் இல்லை.
    பண்புடையவர்கள் இல்லாத இந்த உலகியல் வெறும் மண். அந்த மண் மண்ணுக்குள் போய்விடுமாம்.
    பொருள் தெளிவும் சுருக்கமும் இதுதான்!

    சான்றோர்கள் இருந்தால் மண் உலகமாகும்
    கயவர்கள் இருந்தால் உலகம் மண்ணாகிவிடும்!

    இறைவன் உலகைப் படைத்தான்! நாம் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறோம்!

    உயர்ந்த பொருளைச் சொல்லுகிறபோது உயர்ந்த சொற்கள்!
    தாழ்ந்த பொருளைச் சொல்லுகிறபோது தாழ்ந்த சொற்கள்.
    இது ஒரு இலக்கிய உத்தி!

    இந்த உத்தியை மகாகவி பயன்படுத்தியிருக்கிறார்!

    “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்!”

    புவி உயர்ந்த சொல்! ஞானம் உயர்ந்த சொல்! ஈசன் உயர்ந்த சொல்!
    உயர்ந்தவனாகிய ஈசன் உயர்ந்த பொருளாகிய ஞானத்தைப் பெண்ணுக்குள் வைக்கிறபோது அது புவி!
    மண் தாழ்ந்த சொல்! ஞானத்தை நோக்க அறிவு தாழ்ந்த சொல்! மூடர் தாழ்ந்த சொல்!
    மூடர்கள் பெண்ணுக்கான அறிவைத் தடுக்கிறபோது இந்தப் புவி மண்ணாகிவிடுகிறது,
    இறைவனால் மண் புவியாகும்!
    மூடர்களால் புவி மண்ணாகும்!
    இந்த இலக்கிய நெறியை ஔவையும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாரம்!
    “நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர் -கற்பிலா
    மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
    காக்கை உகக்கும் பிணம். “

    அறிவாளிகள் அறிவாளிகளை இனம் கண்டு இணைவது எதனைப் போன்றது என்றால் தாமரைக் குளத்தை இனங்கண்டு அன்னப் பறவைகள் சேர்வது போன்றது!.

    முட்டாள்கள் பிற முட்டாள்களை இனம் கண்டு சேர்வது எதனைப் போன்றது என்றால் சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை அடையாளம் கண்டு அவற்றைக் காக்கைகள் சேர்வது போல!

    அறிவாளிகள் உயர்ந்தவர்! தாமரை உயர்ந்தது! குளம் உயர்ந்தது! அன்னம் உயர்ந்தது! காமம் உயர்ந்தது!
    முர்க்கர்கள் தாழ்ந்தவர்கள்! காக்கை தாழ்ந்தது! சுடுகாடு தாழ்ந்தது! பிணம் தாழ்ந்தது! முகத்தல் தாழ்ந்தது! உகத்தல் தாழ்ந்தது!
    காமுறுவர் என்பது உயர்ந்த சொல்!
    முகப்பர், உகப்பர் என்னும் இரண்டு சொற்களும் தாழ்ந்த சொற்கள்!

    புறநானூறு, திருக்குறள், ஔவையார் பாரதி, என்னும் நிரலில் இதனைப் பகுத்துப் படிக்கலாம். விளக்கத்திற்காக மாற்றியுரைத்திருக்கிறேன்.

    “தலைதடுமாற்றம்” என்பதும் ஒரு இலக்கிய உத்திதான்!

    இந்தச் சிந்தனையைத் தோற்றுவித்தது வேல்முருகனின் பதிவுகள். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

    “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு”

    யாராயிருந்தால் என்ன? காய்தல் உவத்த்ல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் உவத்தல் கடன்” அல்லவா?

    மரபுக் கவிதை எப்படி இருக்க வேண்டும்? இப்படி இருக்க வேண்டும்!

    “வானம் எனக்கொரு போதிமரம்!” என்பார் வைரமுத்து!

    நாளும் எனக்கொரு சேதி தருவதால்
    முகநூல் எனக்கொரு பல்கலைக்கழகம்!

    இன்றைய சேதியை எனக்குச் சொன்னவர் ஆசான் வேல்முருகன்!

    அன்னார் தொண்டுக்கு வாழ்த்துக்கள்!

    விருப்பத்திற்குரியவர்களைப் பாராட்டுகிறேன்! அல்லாதவரை மறுதலித்து விடுகிறேன்.! மறந்தும் விடுகிறேன்!

    “மானுடரைப் பாடி அவர் மாறியபின் ஏசுவது என் வாடிக்கையான பதிகம்”

    இன்று நான் திரு வேல்முருகனைப் பாராட்டிய நாள்!

    இது என் இயல்பு! “அது உடன் பிறந்தது ஒழியாது!”

    மாறா அன்புடன்
    ச.சுப்பிரமணியன்

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 38

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 38

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    38. இனிமை + எளிமை = தாரமங்கலம்

    முன்னுரை    

    வாய்பாடுகளை முன்னெழுதித் தளைகளைப் பின்னியெடுத்துக் கவிதைகளைச் சிக்கலுக்கும் சிணுங்கலுக்கும் முக்கலுக்கும் முனகலுக்கும் ஆளாக்குபவர் பலர். அவர்களிடம் மூன்று வினாக்களை நான் தொடர்ந்து முன் வைக்கிறேன். பொறுப்பான விடையிறுத்தார் ஒருவரும் இலர்.  வாய்பாடுகளையும் தளைகளையும் மட்டுமே கவிதை என்று நான் கருதிக் கொள்ளலாமா? கவிதையில் இவற்றைத் தேடுவதையே “கவிதை தேடுதல்”  எனக் கருதிக் கொள்ளலாமா? இரண்டும் இல்லை. கவிதையில் கவிஞனைத் தேடுவதைத்தான் கவியனுபவம் எனலாமா? இவைதாம் அந்த வினாக்கள். என் சங்கடம் தீர்ப்பார் இல்லை.  சஞ்சலம் தீர்ந்தபாடுமில்லை. அவர்கள் கவிதை எழுதியபாடுமில்லை. இந்த நிலையில் ‘உள்ளத்து உள்ளது கவிதை’ என்றாற்போல விளைவுகளைப் பற்றி எண்ணாது, எண்ணுவதை எல்லாம் எழுத்தில் வடித்துக் காட்டும் அன்பர்கள் சிலர் அவ்வப்போது முகநூலில் காட்சி தருகிறார்கள். வைத்துக் கொண்டு வஞ்சனை செய்யாத எளிய உள்ளத்தை இயல்பாகவே பெற்றவர்கள். அவர்களுள் தாரமங்கலத் தமிழாசிரியர் கவிஞர் முத்துசாமியும் ஒருவர். ‘உதடு ஒட்டாத குறள் வெண்பா’ என்றும் ‘கட்டளைக் கலித்துறை’ என்றும் ‘கொச்சக ஒருபோகு’ என்றும் ‘மூன்றடிக் குறள் வெண்பா’ என்றும் கவிதைத் தளவாடங்களால் கவிதையையும் என்னையும் கலவரப்படுத்தாமல் எழுதக் கூடிய அன்பர் முத்துசாமி. அன்னாருடைய படைப்புக்களில் நாட்டுப் புற வடிவங்களைக் கொண்ட சில பாடல்களை அறிமுகம் செய்வதையே கட்டுரையின் இந்தப் பகுதி தனது தலையாய நோக்கமாகக் கொள்கிறது. உடல்நிலையும் மனநிலையும் தளர்நிலை காணும் இந்த எண்பது வயதில், அவ்வன்பருடைய கவிதைகளைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ துணையை நான் எதிர்பார்க்கிறேன்.

    நாட்டுப்புறப்பாடல்களின் வரலாற்றுப் பின்புலம்     

    ‘பண்ணத்தி’ என்று தொல்காப்பியர் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்களையே’ என்று அறிஞர்கள் சுட்டுகின்றனர். வேறு சிலர் தொல்காப்பியர் சுட்டும் ‘புலன்’ என்பதையே நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப்பாடல்களைப் ‘பண்ணத்தி’ என்றும் இசை குறைந்த பிற பாடல்களைப் ‘புலன்’ என்றும் கருதும் போக்கும் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து தமிழிசைப் பாடல்கள் உருவாகியிருப்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் செப்பம் செய்யப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் போலவே காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் குரவை, வரிப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றியவை. ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ எனும் மங்கல வாழ்த்துப் பாடலும் நாட்டுப்புறப் பாடல் வடிவைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். ‘கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும். நாயன்மார்களும், ஆழ்வார்களும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகின்றது. ஏராளமான சிற்றிலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. குறவஞ்சி, சிந்து, அம்மானை, ஊசல், பள்ளு, தாலாட்டு, ஏசல், ஏற்றம், தெம்மாங்கு முதலான ஏராளமான நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. மக்களை ஒருங்கிணைத்து, நாட்டுப்புற இலக்கியங்களை ஒரே இலக்கியமாகச் செயல்படுத்த வேண்டும் என்று கருதிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புற இலக்கியங்களைப் பயன்படுத்தி எழுத்திலக்கியங்கள் உருவாக்கப்பட்ட போக்கினை அறியமுடிகிறது. நீதிக் கருத்துகளோ பக்திச் செய்திகளோ, தொன்மக் கதைப்பகுதிகளோ மக்களைச் சென்றடைவதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

    நாட்டுப் புறப்பாடல்களின் தனித்தன்மை

    கவிதையின் தலையாய பணிகள் இரண்டனுள் ஒன்று காட்சிப்படுத்துவது. மற்றொன்று அனுபவத்தை உணர்த்துவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் கவிதை என்பது அனுபவச் சித்திரிப்பு. சொற்களின் சரளி வரிசை அல்ல. பாட்டெழுதுவதாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் நினைவில் கொள்ளாத கருத்து இது. பாசிமணி கோப்பது போலக் கவிதையைக் கோக்க முடியாது. ‘ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! என்று வரிகள் நம்மை ஓடைக்கு அழைத்துச் செல்கிறதா இல்லையா? ‘பருத்தி எடுக்கையிலே என்ன பலநாளும் பாத்த மச்சான்’ என்ற தொடர் காதிலே விழுகிற போது கேட்பவர் மனக்கண்கள் பருத்தித் தோட்டத்திற்குச் செல்கிறதல்லவா? ‘ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே’ என்றவுடன் ஒரு பெண் தனிமையில் படும் விரகதாபம் கண்ணுக்குள் விரிகிறதா இல்லையா? இதுதான் கவிதையின் பணி. இந்தப் பணியினை முழுமையாகச் செய்வதுதான் நாட்டுப் புறப்பாடல்கள். அதனால்தான் அவற்றை நாம் ‘மக்கள் இலக்கியம்’ என்று போற்றுகிறோம்.

    நாட்டுப் புறப்பாடல் தளங்கள்

    தமிழில் யாப்புக்கும் பாடுபொருளுக்கும் தொடர்பு உண்டு. இன்ன  பாடுபொருளை இன்னவகை யாப்பில்தான் பாடவேண்டும் என்ற விதியும் மரபும் தமிழிலே இருக்கிறது. பெரும்பாலும் அந்தாதி கட்டளைக் கலித்துறையில் அமையும். புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை என்னும் நான்கும் மருட்பாவில் அமையும். பாடல் சான்ற புலனெறி வழக்கச் செய்யுட்கள் எல்லாம் கலிப்பா, பரிபாடல் என்னும் பாவகையில் அமையும். (பரிபாடல் என்பது ஒரு பா வகை)  ஆனால் இத்தகைய வரையறை நாட்டுப்புறப் பாடல்களுக்கு இல்லை. குழந்தையின் பெற்றவள் பாடும் தாலாட்டில் தொடங்கி உற்றாரும் உறவினரும் வைக்கும் ஒப்பாரிவரை எந்தப் பாடுபொருளும் அதற்கு இசைந்ததே. ஏனைய இயற்பா வகைகள் மக்கள் வாழ்வியலோடு அந்நியப்பட்டு நிற்க நாட்டுப் புறப்பாடல்கள்தாம் மக்களோடு கைகோத்து நிறகின்றன.  வள்ளற் பெருமான்  தொடங்கி வைரமுத்து வரை யாப்பியலை நான்குணர்ந்தறிந்தோரும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைக் கையாள்வதும் அவை அவர்களுடைய யாப்பியல் பாடல்களைப் பின்னுக்குத் தள்ளி மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்திருப்பதும் யாவரும் அறிந்ததே. எளிமையான மொழியமைப்பு, யதார்த்தமான வண்ணனை, இயல்பான அழகியல் நோக்கு, உயர்நிலை கற்பனைகள், வாழ்வியலோடு இரண்டறக் கலந்து நிற்கும் உணர்ச்சிகள் இவற்றின் ;கலவையாக இருப்பதே நாட்டுப் புறப் பாடல்கள் ஏனைய இலக்கியங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்குத் தலையாய காரணம். சீர்களும் தளைகளும் புலமையின் அடையாளம். நாட்டுப் புறபபாடல்கள் கவிதையின் அடையாளம்.

    கவிதையும் காட்சியும்

    கவிதை, ஒன்றினைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று குறிக்கப்பட்டது. ‘தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்க’ என்னும் கம்பர் பாட்டில் மருதநிலக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதல்லவா? குயில் கூவிக் கொண்டிருக்கும் கோலமிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்’ எனச்  சஞ்சீவி பர்வதத்தின் சாரலைப் பாவேந்தர் காட்சிப்படுத்தியிருப்பதைக் காணலாம். இவைகளெல்லாம் வெறும் காட்சிகள் என்றால் மானுட உணர்வுகளையும் கவிதை காட்சிப்படுத்த வேண்டும். ‘மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்தது’ என இராமன் முகப்பொலிவைக் கம்பர் காட்சிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற எடுத்துக்காட்டுக்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் முத்துசாமி தன் உறவுப் பெண்ணின் புற அழகை விரசம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    “கண்ணுல மைய வச்சுக் கார்குழலைத் தலையில் வச்சு
    மண்ணிலே நடந்து வரும் மங்கம்மா – ஓம்
    மனசுக்குள்ளே நான் வரவா சொல்லம்மா!

    கக்கத்திலே கூடை வச்சுக் காட்டுமல்லி தலையில் வச்சு
    வெக்கத்தை நெஞ்சில் வச்ச வெள்ளையம்மா  – ஓம்
    விருப்பத்துக்கு நான் வரவா சொல்லம்மா!

    ஆசைய மனசில் வச்சு அத்தை மவன நெனப்பில் வச்சு
    பாசங்கொண்ட பைங்கிளியே பொன்னம்மா! – ஓம்
    பக்கத்தில நான் வரவா பொன்னம்மா!

    நெத்தியிலே பொட்ட வச்சு நெடுவிழியில் பத்தவச்சு
    புத்தம் புது மலரான பூவம்மா! ஓம்
    பொடவையாக நான் வரவா பொன்னம்மா!

    “என்னடிமுனியம்மா ஒங் கண்ணுல மையி” என்னும் வெளிப்பாட்டைப் போல அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாட்டுப்புற வடிவத்திள் எளிமையாக அமைந்தாலும் ஒரு பெண்ணின் ஒய்யாரத்தைக் காட்சிப்படுத்திவிடுகிறது. இந்தப் பாட்டின் உள்ளடக்கத்தை யாப்பில் கொண்டுவரலாம். அதில் கவிஞர்களின் இலக்கணத் திறன் வெளிப்படுமே தவிர பெண்ணின் ஒய்யாரம் இருக்காது.

    பாசத்தாலே அள்ளியவள்

    நாட்டுப்புறப்பாடல்கள் தணிக்கைக்கு உட்பட்டதன்று. தற்கால இலக்கணப் புலிகள் நாட்டுப் புறப்பாடல்களுக்கும் தேமாஙகாய் புளிமாங்காய் என இலக்கணம் வகுத்து விருதுகளுக்கு விண்ணப்பம் போடுவார்கள்.  பாமரனுக்கு ஏது இலக்கணம்? அவனுக்குத் தளைகளும் இல்லை. விகற்பங்களும் இல்லை. உணர்ச்சியில் வந்து விழும் மீயுயர் கற்பனைகளும் காதல் பாடல்களில் சற்றே விரசமல்லாத விரசமும் அழகியல் நீரோட்டமும் நிறைந்தவையே நாட்டுப்புறப் பாடல்கள். மாமன் மகள் பாடுகிறாள்.

    “ஆத்துக்கு அக்கரையில்
    அத்த மவன் ஒருத்தனுண்டு
    வாய் திறந்து பேசலையே
    வாட (டை) பட்டுச் சூலானேன்!

    ஒரு முறைப்பெண்ணின் காதலையும் விரகதாபத்தையும் பாமரத்தனமான வெளிப்பாட்டையும் இந்த வரிகள் காட்டுகின்றனவல்லவா? தான் அவனைச் சந்திப்பதற்கு ஆறு தடையாக இருக்கிறதே என்னும் வருத்தம், அத்தைமகன் வாய் திறந்து பேசவில்லையே என்னும் ஏக்கம், தாம்பத்யம் இல்லாமலேயே கருத்தரிக்க வேண்டும் என்னும் விரகதாபம் இத்தனையையும இந்த எழுதா இலக்கியத்தில எழுதப்பட்டிருப்பதைக் காணீர்.  அத்தை மகள் பாடுவதாக முத்துசாமி எழுதுகிறார்.

    “வட்டவட்டப் பாறையிலே
    வந்து நிற்கும் ஆசமச்சான்!
    கிட்ட வந்து பேசினாலே
    கிறுக்குப் புடிச்சுப் போகுதையா!

    அத்தை மகளுக்கு இப்படிக் கிறுக்குப்பிடிக்க  மாமன் மகன் பாடுகிறான்

    ‘வெத்தலைய மடிச்சு கொடுக்க
    வௌஞ்ச கதிர ஒடிச்சு கொடுக்க
    பத்தலேன்னு சொல்லி – என்ன
    பாசத்தாலே அள்ளி
    தூண்டில் போடும் கண்ணு – என்
    துணைக்கு வாடி கண்ணு

    இந்த உறவின் வெளிப்பாடும் துடிப்பும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏக்கமும் இன்றைய இளைஞர் சமுதாயம் இழந்து நிற்கிறது என்பது ஒரு காலத்தின் சோகம். அவள் பாடுகிற பாடலில் வருகிற கிறுக்குப் புடிச்சுப் போச்சு என்கிற வரியைப் பின்னாலே வந்தவர்கள் இலக்கியத் தகுதியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். முருகன் மீது காதல் கொண்ட ஒருத்தி அவனுக்குக் காதல் கடிதம் எழுதுகிறாள். அவன் மீது கொண்ட மையலால் கடிதத்தில் எழுத்து சரியாக அமையாமல் கிறுக்கிவிடுகிறதாம். அதுமட்டுமன்று. அவள் உள்ளமும் கிறுக்காகிவிடுகிறதாம்.

    “மாலை வடிவேலவர்க்கு
    வரிசையாய் நான் எழுதும்
    ஓலை கிறுக்காச்சுதே – கிளியே
    உள்ளமும் கிறுக்காச்சுதே!”

    அம்பா சமுத்திரம் சுப்பராயசாமி எழுதிய இந்த நாட்டுப் புறப்பாடல் சிந்தனையை ஆசிரிய வசனமாகக் கொண்ட பாங்கு இது. சந்திக்க முடியாத அத்தை மகளின் ஏக்கம் இதுவென்றால், ஒரு மாமன் மகளின் ஏக்கத்தைக் கண்ணதாசன் இப்படிப் பாடியிருக்கிறார்.

    “மல்லிகை மலர் சூடிக் காத்து நிற்கவா?
    மாலை இளந் தென்றல் தன்னைத் தூது விடவா?
    நல்லதோர் நாள் பார்த்துச் சேதி சொல்லவா?
    நாட்டோரைச் சாட்சி வைத்து வந்துவிடவா?”

    “நீ வந்து பெண்கேட்டு என்னை மணம் முடிக்கும் வரை எனக்குப் பொறுமையில்லை. நானே வந்துவிடுகிறேன். ‘நான்; என் மாமன் மகனிடம் செல்கிறேன் என்று சான்றோர்களைச் சாட்சி வைத்து வந்துவிடுவாளாம். கண்ணதாசனின் இமாலய வெற்றிக்கு அவருடைய செட்டி நாட்டுப் பின்புலம் இன்றியமையாத ஒன்று.

    தமிழ்நாட்டின் செல்வம் தாய்மாமன் சீர்வரிசை

    தாய்மாமன் சீர்வரிசை என்பது தமிழ்நாட்டின் மரபுவழிப் பண்பாடு. பெண்ணுக்கு உரிமை பூண்டவன் தாய்மாமன். மாற்றானுக்கு அவன் முறைப்பெண் வாழ்க்கைப்படும் போது தாய்மாமன் இசைவு என்பது பின்பற்றப்பட்டு வந்த மரபு. செட்டிநாட்டுப் பாடல்களில் இந்தத் தாய்மாமன் மரபு பரவலாகப் பேசப்படுகிறது. ‘தாய்க்குத் தாயான தாய்மாமன் வாரானடி’ என்றெல்லாம் மாமன் பெருமை பேசப்படும். அவன் தன்பெருமையைச் சீர் வரிசையில் காட்:டுவான்

    “ஒக்காந்து பால் கறக்க முக்காலி பொன்னாலே
    அணைஞ்சிருந்து பால்கறக்க அணைகயிறும் பொன்னாலே”

    எனச் சீர்வரிசையைச் சிம்மாசனம் ஏற்றியவன் தாய்மாமன். அவனுடைய வேட்டியைத்தான் தாய் தன் பேரப்பிள்ளைக்கு முதல் தூளியாகக் கட்டுவாள். செட்டி நாட்டுக் கவிஞர் கண்ணதாசன்

    “தங்க கடியாரம் வைர மணியாரம்
    தந்து மணம் பேசுவார் – மாமன்
    தந்து மணம் பேசுவார் – மாமன்
    தங்கை மகளான மங்கை உனக்காக
    உலகை விலை பேசுவார் !”

    என்று எழுதியிருப்பார். அதற்கு முன்பே காமாட்சி சுந்தரம் அருமையான தாலாட்டில் மாமன் சீர்வரிசை பற்றி எழுதியிருப்பார்.

    “கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
    கோமளத் தாமரைப் பூவே
    கொஞ்சு மொழி சொல்லும் கிளியே – செழும்
    கோமளத் தாமரைப் பூவே – ஒரு
    வஞ்சமில்லா முழு மதியே – இன்ப
    வானில் உதித்த நல்லமுதே

    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

    மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
    வாழ்வளிக்க வருவார் – உனக்கு
    மாமன்மார் மூவர் தம்பி – நல்ல
    வாழ்வளிக்க வருவார் – உன்
    மாம்பழக் கன்னத்திலே – முத்த
    மாரி பொழிந்திட வருவார் – உன்
    மாம்பழக் கன்னத்திலே – முத்த
    மாரி பொழிந்திட வருவார்”

    மாணிக்கப் பாலாடை – பச்சை
    மாமணித் தொட்டிலுடன்
    மாணிக்கப் பாலாடை – பச்சை
    மாமணித் தொட்டிலுடன் – வெள்ளை
    யானையும் வாகனமாய் – மாமன்
    தருவார் சீதனமாய் – உன்தன் மாமன்
    தருவார் சீதனமாய்

    வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
    வைர எழுத்தாணி கொண்டு
    வெள்ளியினால் செய்த ஏட்டில் – நல்ல
    வைர எழுத்தாணி கொண்டு
    தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத – உன்னைப்
    பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்
    அள்ளி அணைத்திட வருவார்

    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
    கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

    இது ஒரு தாலாட்டுப் பாடல்தான். ஆனால் தாய்மாமன் சீர்வரிசை கற்பனைக்கெட்டாத அளவுக்குத் தன் உடன்பிறப்புக்களின் மேல் வைத்த ஒரு தங்கையின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகச் சீர்வரிசைகளின் தொகுப்பாக இருப்பதைக் காண முடிகிறது. அன்பர் முத்துசாமி இந்த மரபுவழி வந்த கவிஞர் அவர் எழுதுகிறார்.

    “பூவொன்று பூத்திருக்க
    புதுமணமும் கலந்திருக்க
    பச்சவோலை பின்னிக்கிட்டுப்
    பயந்த மாமன் பாயஞ்சு வந்தான்!
    ஊரெல்லாம் கூட்டி வந்து
    உறவையெல்லாம் அழைச்சுகிட்டு
    ஆரவார முழக்கோடு
    ஆட்டையுமே ஓட்டி வந்தான்
    தங்கத்தில கொடிசெய்து
    தாய்மாமன் சீராக
    அங்கமெலாம் மின்னும்படி
    அலங்கரித்துப் பார்த்திருந்தான்

    சீர் செய்யாமல் போனாலோ மனம் நிறைவாகச் செய்யாமற் போனாலோ ஊர்ப்பழிக்கு ஆளாகிவிடக் கூடாது என்று பயந்து வந்தானாம் தாய்மாமன். பயந்து பயந்து சீர் செய்தானாம் தாய்மாமன். இது ஒரு அனுபவச் சித்திரிப்பு.

    தாய்மாமன் சீர் வரிசையும் தகப்பன்வீட்டுச் சீர் வரிசையும்

    பொதுவாகத் தமிழ்நாட்டில் செய்யப்படும் சீர்வரிசைகள் தாய்வீட்டுச் சீர்வரிசை மற்றும் தாய் மாமன் சீர்வரிசை. இவற்றுள் தாய் மாமன் சீர்வரிசை பெண் பருவத்திற்கு வரும்போதும் அவள் புகுந்தவீடு செல்லும் போதும் செய்யப்படுவன. இன்றையச் சட்டங்களும் நீதிமன்றங்களும் சீர்வரிசைக்கும் வரதரட்சணைக்கும் வேறுபாடு தெரியாது தடுமாறுவது தனிக்கதை. வரதட்சணை என்பது உயர்சாதி மக்களிடையே நிலவிய ஒரு கொடுமையான  கேவலமான அருவெருக்கத்தக்க பழக்கம். அது போலிச் சமுதாயக் கட்டமைப்பில் எல்லாவகையிலும் தாழ்ந்த மக்களையும் ஊடுருவிப் பற்றிக் கொண்டது காலத்தின் கோலம். தாய்வீட்டிலிருந்து மணமகளாகப் புகுந்த வீடு செல்வதும் புகுந்த வீட்டின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டுப் பிணமாக வெளியே வந்து விழுவதும் ஒரு சமுதாய அவலம். வரதட்சணை தடைச் சட்டத்தை இருபாலாருமே மீறுகிறார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். இதுபோக வரதட்சணை என்பது மந்தணமாகக் கொடுக்கப்படுவது கறுப்புப்பணத்தைப் போல. சீர்வரிசை ஊர் அறிய உலகறிய ஊர்வலமாய்ச் சென்று பெண்ணை வழியனுப்புவது. இரண்டும் ஒன்றல்ல. அந்தச் சீர்வரிசையில் தாய்மாமன் செய்யும் சீர்வரிசையை இப்படிப் பட்டியலிடுகிறது ஒரு பழம்பாடல்.

    “கொத்துபடா நெத்தும் கோதுபடா மாங்கனியும்
    பருவப் பலாச்சுளையும் பக்குவத்து மாங்கனியும்
    அக்கரையில் சர்க்கரையும் அதிமதுரத் தென்னவெட்டும்
    காய்ச்சிய பாலும் கற்கண்டும் செந்தேனும்
    ஏலம் கிராம்பும் இளங்கொடிக்கால் வெற்றிலையும்
    சாதிக் களிப்பாக்கும் சங்குவெள்ளை வெற்றிலையும்

    மாமன் சீர்வரிசையாக வருமாம். தன் உடன்பிறப்பின்மீது அந்தத் தாய்க்கு உள்ள நம்பிக்கை. பிறந்த வீட்டுப் பாசம். இயல்பாக வந்தமையும் தொடைவிகற்பங்களும் எண்ணுதற்கு இனிக்கும் இலக்கிய நயங்களும் அனுபவ முத்திரைகளும் வாழ்வியலின் நிலைத்த உண்மைகளும் பழகுதமிழை மட்டுமே பயன்படுத்திப் பயன்படுத்தப்படும் உவமங்களும் அழகிய சொலலாட்சியும் தடையில்லா நடைப் பெருமையும் நோக்கி இலக்கியங்களை மதிப்பிடுவதுதான் சரியான திறனாய்வு நெறி. இந்தப் பெருமையை இன்னும் தெளிவாக உணர வேண்டுமானால் நிலைபெற்ற ஏனைய இலக்கியங்களோடு நாட்டுப் புறப்பாடல்களை ஒப்பிட்டுக் காணவேண்டும்.

    “ஏலவல்லியும் இருங்கறி வல்லியும்
    கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும்
    தெங்கின் பழமும் தேமாங்கனியும்
    பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
    காயமும் கரும்பும் பூமலிக் கொடியும்
    கொழுந்தாள் கமுகின் செழுங்குலைத் தாறும்
    பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்”

    கொண்டு வந்து கொடுத்து சேரனை வழிபட்டார்களாம் மலைவாழ் மக்கள் என்று ஆசிரியர் ;இளங்கோவடிகள் பாடுகின்றார்.  திருக்குறள் போன்ற உயர் பனுவல்களின் உள்ளீடுகள் எல்லாம் மக்கள் வாழ்வியலில் கண்டவையே. சென்ற விருந்தினை ஓம்பி வருகின்ற விருந்தினை எதிர்பார்க்கும் ஓரு பண்பாட்டுக் குடி தமிழர் குடி.

    “செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு”

    என்னும் திருக்குறளுக்கு மூலம் எங்கேயிருக்கிறது  தெரியுமா?

    “வாழை இலைபரப்பி வந்தாரைக் கையமர்த்தி
    வருந்தி விருந்தழைக்கும் மகராசர் பெயரனோ?
    தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்த்தித்
    தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

    என்ற மக்கள் இலக்கியத்தில் இருக்கிறது. மொழியின் எளிமை இலக்கியத்தை எளிமையாக்கி அழகியலுக்கு ஒளி கூட்டுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி நிரல் படுத்தும் தகப்பன் சீட்டுச் சீதனத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. தாய்வீட்டுச் சீதனம் என்னும் சிந்தனையைக் கொஞ்சம் மாற்றி தகப்பன் வீட்டுச் சீதனமாய்ப் பாடியிருக்கும் மரபு மாற்றத்தைத் தமிழ்க் கவிதையுலகம் தளர்வில்லா பூரிப்போடு வரவேற்கிறது.

    “பெரியப்பன் பொழச்சா என்ன? பெருநெல்லி காச்சா என்ன?
    சித்தப்பன் பொழச்சா என்ன? சிறு நெல்லி காச்சா என்ன?”

    எங்கப்பன் பொழச்சாதான் எனக்கெல்லாம் தேடிவரும்!
    நாலுவண்டி பருப்பு வரும் நாவிரும்பும் பருப்பு வரும்”

    இந்த இரண்டு கண்ணிகளில் இரண்டு உண்மைகளைப் பதிவு செய்கிறார் முத்துசாமி. ஒன்று சித்தப்பன், பெரியப்பன் உட்பட எல்லா உறவுகளும சடங்குகளுக்கானவை. பெத்தப்பன் உறவு ஒன்றுதான் கடைசிக்காலம் வரை தொடரும். அடுத்ததாக இந்தப் பெண் தாயைப் பின்னுக்குத் தள்ளித் தந்தையை முன்னிலைப்படுத்துவதன் மூலம் தந்தைக்கு மகள் மீது இயல்பாகவே இழையும் பாசத்தினைக் குறிப்பாகக் காட்டுகிறார். இன்னுஞ் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னால் தாய்வீட்டுச் சீதனம் என்பதைத் தந்தை வீட்டுச் சீதனமாக மாற்றிக் காட்டுகிறார். நாட்டுப் புறப்பாடல்களிலும் இயல்பான மரபு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை முத்துசாமி உறுதி செய்கிறார்.

    “மளிகைப் பொருளனைத்தும் மற்ககாமல் வீடுவரும்!
    சின்னமனூர் சேலைவரும்! சிலுக்குத்துணி கூட வரும்!
    கண்ணாடி வளையலொடு கால்கொலுசு சிணுங்கவரும்!
    கண்மையும் பவுடரொடு  கழுத்துக்கு ஆரம் வரும்!
    வெள்ளாடு ரெண்டு வரும்! வெடக்கோழி மூணு வரும்!
    மாவாட்டக் கிரைண்டர் வரும்! மிளகரைக்க மிக்சி வரும்!
    பூவாட்டம் இட்ளிசுட்டுப் புதினா சட்னி கூடவரும்!
    மாவு வைக்க பிரிட்ஜ் வரும் மனங்குளிர ஏசி வரும்!
    ஆடலுடன் பாடலுக்கு அறுபது இன்ச்சி டிவிவரும்!
    வண்ணத்திலே பீரோவரும் வகவகையாய் சேர்கள் வரும்!
    என்ன பெத்த கடனுக்கு எங்கப்பா எனக்குத் தரும்!

    மகள் கை நோகுமென்றுதாய்வீட்டிலிருந்தே சமைத்து வருகிறதாம்! மரபு சார்ந்த நாட்டுப் புறப்பாடல்களின்; கற்பனையை விஞ்சியது இது.

    சரி! பாட்டிலே எங்கே கவித்துவம் இருக்கிறது? பாட்டின் இறுதிச் சீரில் இருக்கிறது. என்னப்பா எனக்குத் தருவார் என்றிருந்திருந்தால் பெத்தவனுக்கு மரியாதை கிடைத்திருக்கலாம். நமக்குக் கவிதை கிடைத்திருக்காது. என்றைக்குத் தமிழ்நாட்டில் பெற்றோர்களை ‘நீங்க வாங்க’ என்று அழைக்கப் பழக்கினோமோ அன்றைக்கே பாசம் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது. ‘ஆத்தா சொல்லுச்சு காசு குடு’ என்பதுதான் பண்பாட்டு வெளிப்பாடு. தற்காலத்தில் புழக்கத்தில் இருப்பது போலிப் பண்பாடு. குழந்தையைக் கொஞ்ச வேண்டிய ‘செல்லம்’ என்ற சொல்லால் எருமை மாட்டுக் கணவனை அழைப்பார்கள். சிலம்பிலே இளங்கோவடிகள் குறவர் கொண்டு வந்ததாகச் சொல்லிய சீர்வரிசைகளுக்குக் குறையாத சீர்வரிசை தந்தை கொடுத்தது.  அந்தத் தந்தையைப் பாசம் கொப்பளிக்க ‘தரும்’ என அஃறிணை வினைமுடிபால் முடித்துக்காட்டியிருப்பது இந்த மண்ணின் மணம் வீசும் ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. தமிழில் இறைவனை யாரும் ‘நீங்கள்’ என மரியாதையோடு அழைத்திருப்பதாகப் பதிவுகள் இல்லை. காரணம் இறைவனை அவ்வாறு அழைக்கிறபோது உரிமை பறிபோகிறது. நெருக்கம் குறைகிறது இறைவன் அந்நியப்பட்டுப் போகிறான்.

    மயங்க வைக்கும் மரபு

    அசலைப் பார்த்து நகலெடுப்பது மரபாகாது. திட்டமிட்டு மாற்றுவதும் மரபாகாது. ‘நான் மரபை மீறுகிறேன்’ என்பதெல்லாம் அறியாதவர் புலம்பல். மரபு என்பது தாக்கம். அதன் தாக்குவுறவுக்கு நாம் ஆளாகலாம்.  அல்லது அதற்கு நாம் மயங்கலாம்.  இங்கே சில மயக்கங்களைக் காணலாம். படைப்பொன்றின் சொல், தொடராக்கம், பாடலின் இசையமைப்பு, வடிவத்தில் நிலவும் தாளகதி இவற்றுள் ஏதேனும் ஒன்றில் நம் மனம் லயித்துவிடுமானால் அதனைத் தொடர்ந்து எதிர்வரும் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதும் மரபே.

    1. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்கள் பின்னாலே வந்த படைப்பாளர்களைத் தாக்குறவுக்கு ஆளாக்கின. அவர்களும் ஆளானார்கள். பல பாடல்களை எடுத்துக்காட்ட இயலும்.
    1. ‘சிந்தாமணி படத்தில் பாகவதர் பாடிய ‘ராதே உனது கோபம் ஆகாதடி’ என்ற பாடலின் ;இசை பின்னாளில் குலமகள் ராதையில் சௌந்தரராசனைப் பாடவைத்திருக்கிறது.
    1. 1956இல் வெளியான காலம் மாறிப் போச்சு என்னும் திரைப்படத்தில் வந்த ஏரு பூட்டிப் போவாயோ அண்ணே என்ற நாராயண கவியின் பாடலின் இசை மதுரைவீரன் படத்தில் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் ஜி.இராமநாதனையும் கட்டிப் போட்டது.
    1. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே’ என்னும் மகாகவியின் பாடல் ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே’ என்று கண்ணதாசனை எழுதத் தூண்டியது.
    1. கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களும் வள்ளற் பெருமான் பாடல்களும் பாரதியாரைப் பாதித்திருக்கின்றன என்பது அவருடைய படைப்புக்களிலிருந்து தெரியவரும் உண்மையாகும்.
    1. ‘எந்நாள்?’ என்பதற்கும் ‘எந்நாளோ?’ என்பதற்கும் உணர்ச்சி வேறுபாடுகள் உண்டு. எந்த நாள் என்பதும் எந்த நாளோ என்பதற்கும் இது பொருந்தும். பத்ரகிரியார் புலம்பலை ‘எக்காலக்கண்ணி’ என்றே அழைக்கிறார்கள். இந்த எந்நாள் கண்ணிகள் மரபு வழியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன முத்துசாமி உட்பட.
    1. ‘திருநீலகண்டர்’ என்னும் திரைப்படத்தில் பாபநாசம் சிவன் எழுதி ஜி.இராமநாதன் இசையமைத்த ‘தீனகருணாகரனே நடராஜா! நீல கணடனே” என்னும் பாடலின் தாக்கம் மதுரை வீரன் திரைப்படத்தில் ‘ஏச்சுப் பிழைக்கும தொழிலே சரிதானா என்னைப் பாருங்க’ என்னும் பாடலில் தெரிந்தது.
    1. ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய்போட’ என்று கவச இசையினைக் காதல் பேசும் திரைப்படப்பாடலுக்குப் பயன்படுத்தினார் இளையராஜா.

    இத்தகைய மரபுவழித் தாக்கம் முத்துசாமியின் பாடல்களிலும் இழைவதை ஒரு எடுத்துக்காட்டினால் விளக்க முடியும்.

    தாயுமானவர் – பத்ரகிரியார் – பாரதிதாசன் – முத்துசாமி

    ஏகாரமும் ஓகாரமும் உணர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் எழுத்தொலிகள் ஆகும். ஏகாரம் மொழிக்கு முன்பும் பின்பும், ஓகாம் மொழிக்குப் பின்பும் நின்று இந்தப் பணியைச் செய்கின்றன. பத்ரகிரியாரின் பாடல் வடிவமும் உணர்ச்சியும் தாயுமானவர் பாடலில் இப்படி அமைந்திருக்கிறது.

    “வெஞ்சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை
    அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ?
    அஞ்சு முகம் காட்டாமல் ஆறுமுகம் காட்டவந்த
    செஞ்சரணச் சேவடியைச் சிந்தை வைப்பது எந்நாளோ?”

    பத்ரகிரியார் பாடலின் இந்த நாட்டுப் புற வடிவம் தாயுமானவர் பாடலில் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    “புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
    எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

    “கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
    புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

    “போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
    காக்குமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம்”

    “புல்லாய் விலங்காய்ப் புழுவாய் நரவடிவாய்
    எல்லாப் பிறப்பு மிருளகல்வ தெக்காலம்?”

    “கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவையாய்ப்
    புல்லாய்ப் பிறசனனம் போக்குவது மெக்காலம்”

    போக்கும் வரவும் பிறப்புமுள்ளு மாகநின்று
    காக்கமொரு பொருளைக் கலந்துநிற்ப தெக்காலம் 181

    திருவாசகச் சிவபுராணத்தின் உள்ளடக்கத்தை நாட்டுப் புறப் பாடலின் வடிவ வெற்றி கருதிப் பத்ரகிரியார் இவ்வாறு எழுதியிருக்கலாம். இந்தப் பாடல்களின் சொல்லாட்சியிலும் ஒலி நயத்திலும்  இதயத்தைப் பறிகொடுத்த பாவேந்தர் தமிழ், தமிழினம் இவற்றின் ஆக்கத்தையும் ஆதங்கத்தையும் பாடுகிறபோது பயன்படுத்திக் கொள்கிறார்.

    (தமிழர்கள்)

    உன்னத இமம  லைபோல்
    ஓங்கிடும் கீர்த்தி எய்தி
    இன்புற்றார் என்று மற்றோர்
    இயம்பக்கேட் டிடல் எந்நாளோ,?

    (தமிழர்களைக்)

    கள்ளத்தால் நெருங்கொணாதே
    என வையம் கலங்கக் கண்டு
    துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம
    சொக்கும் நாள் எந்த நாளோ?

    (தமிழர்கள்)

    ஆட்டும்சுட்டு விரல் கண்டே
    ஆடிற்று வையம் என்றே
    கேட்டுநான் இன்ப ஊற்றுக்
    கேணியில் குளிப்பதெந்நாள்?

    என்று பாடுகிறார். ஏக்கத்தை வெளிப்படுத்தும் இந்த ஒலிநயமும் சொல்லாட்சியும் வடிவச் சிறப்பும் முத்துசாமியைப் பாதித்திருக்கிறது. ஆனால் என்ன ஒரு மாற்றம்? ஆன்ம விசாரணைக்காகப் பத்ரகிரியார் கையாண்ட இந்த வடிவத்தை மொழிக்காகவும் இனத்திற்காகவும் கையாண்டிருக்கிறர் பாவேந்தர். இவ்விரு பாடுபொருளையும் தவிர்த்துக் காதல் ஏக்கத்தையும எதிர்பார்ப்பையும் பதிவிட முத்துசாமிக்கு இந்த வடிவம் கைகொடுத்திருக்கிறது.

    “ஒத்தைவிழிப் பார்வையிலே உலகளந்த நாயகியே!
    கத்தைக் குழல்பற்றிக் கரைசேர்வ தெந்நாளோ?

    பாதிமுகம் காணலியே! பாவி உனை மறக்கலியே!
    மாது முகம் காணுதற்கு மறுபிறப்பும் எந்நாளோ?

    தேன்வடியும் பூமுகத்தில் தென்றல் வந்து கிசுகிசுக்க
    நான் புரட்டிப் பார்க்கின்ற நன்னாளும் எந்நாளோ?

    கூந்தல் அலைபாய குதிகாலும் தாளமிடச்
    சேர்ந்து கதைபேசிச் சிலிர்த்திருப்பது எந்நாளோ?

    விடியக் கதைபேசி விடிந்தபின் கண்ணுறங்கும்
    முடியாத பொழுதெனக்கு நீளுவதும் எந்நாளோ?

    முந்தைய பத்தியொன்றில் குறித்தவாறு மரபு என்பது படிவது. ஆற்றில் மணல் படிவது போல. திணிப்பது அல்ல. சென்ற பத்தியிலே குறிப்பிடப்பட்ட கவிஞர்களையோ அவர்தம் படைப்புக்களையோ அவர் அறிந்திருக்கிற வாய்ப்பில்லை. ஆனால் அந்தப் பெருமக்களுடைய கவிதைச் சாயல் அப்படியே இவர் பாடலில் படிந்திருக்கிறது. யாப்பிலே எழுதப்படுவதெல்லாம் மரபுக் கவிதை என்பது மூளைக் கோளாறு உள்ளவர்களின் ‘முதுமை உளறல்’.  பொருள் கட்டமைப்பு, வடிவ நேர்த்தி, உத்திச் சிறப்பு, சொல்லாட்சித்திறன் ;இவற்றில் மரபு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாயின் முகச் சாயல் மகளுக்கு என்றால் அது படிவதேயன்றி வெட்டி ஒட்டுவது அன்று. அப்போதுதான் அது மரபுக்கவிதை. முத்துசாமிக்கு மிக ஆழமான யாப்பறி புலமை  இருப்பதாகக் கருத முடியாது. அவர் கட்டளைக் கலித்துறை எழுதவில்லை. நேரிசை வெண்பாவில் காவியம் படைக்கவில்லை. மடக்கும் தெரியாது. கொச்சக ஒரு போகும் தெரியாது. சிற்றெண் தெரியாது. பேரெண் புரியாது. இருந்தாலும் அவர் கவிதை எழுதுகிறார். அவர் எழுதுவது கவிதையாகப் பரிணமிக்கிறது. காரணம் அவரிடம் கவியுள்ளம் இருக்கிறது. கவிதையை அவர் இனங்கண்டு கொள்கிறார். அதனைவிட யாரிடம் சேரவேண்டும் என்று தடம்பார்த்துக் கவிதை அவரிடம் சேர்ந்து விடுகிறது.

    திரிகூட ராசப்பக் கவிராயர் – கண்ணதாசன் – தாரமங்கலம்

    ஒரு பாட்டு ஏதோ ஒரு வகையில் கற்பவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அவனையும் அது போல எழுதத் தூண்டினாலும் அது மரபின் தாக்கமாகவே கருதப்படும். தொல்காப்பியத்தின் தாக்கத்தினால்  திருக்குறளில் வந்திருக்கும் பதிவுகள் பல. ஒரு இலக்கண நு}லுக்கே இத்தகைய தாக்கம் இயலுமெனின் இலக்கியத்திற்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை. குற்றாலக் குறவஞ்சியில் நாட்டுவளம் கூறும் ஒரு பாடல்.

    ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்!!
    ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்!
    வாடக் காண்பது மின்னார் மருங்குல்!
    வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு!
    போடக்காண்பது பூமியில் வித்து!
    புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து!
    தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி!
    திருக்குற்றாலர்தென் ஆரிய நாடே!

    “குற்றால நாட்டிலிருந்து மக்கள் வெளியேற மாடடாரகள். ஆற்றில் வெள்ளந்தான் வெளியேறுமாம். யோகியரின் உள்ளங்கள் ஒடுங்கும். மக்கள் உள்ளம் விரிவடையும். கன்னியரின் இடை வாடுமே தவிர மக்கள் முகத்தில் வாட்டமில்லை. வருத்தமடைவதெல்லாம் கரு தரித்த சங்குகளேயன்றி மனிதர்கள் அல்லர். போடுவதெல்லாம் மண்ணில் வித்துக்களேயன்றிப் பயனற்றவர்கள் என யாரையும் கழிப்பதில்லை. காதில் அசைவதினால் ஒலியெழுப்பிப் புலம்புவதுபோல் வசப்படுத்துவது கிண்கிணியேயன்றி ஏழைமக்கள் அல்லர். இந்த மக்கள் தேடுவதெல்லாம் நல்ல அறத்தையும் அதனால் வரும் புகழையுமேயன்றி நிலையற்ற செல்வங்கள் அல்ல”

    என்னும் நாட்டுவளத்தைக் கூறும் அரிய பாடல் கண்ணதாசனைக் கவர்ந்திருக்கிறது, இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இந்தப் பாட்டுக்கு முன்னர் ஒரு பாட்டு உண்டு. அது இதனைவிடச் சிறந்தது.

    நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்!
    நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்!
    தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து!
    சுழலக் காண்பது பூந்தயிர் மத்து!
    வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை!
    வெடிக்கக் காண்பது கொல்லையில் முல்லை!
    ஏங்கக் காண்பது மங்கலப் பேரிகை!
    ஈசன் ஆரியர் நாடெங்கள் நாடே!

    என்பது அந்தப் பாடல். இந்தப் பாடல்களில் உள்ள ‘காண்பது’ என்ற சொலலாட்சியில் மனம் பறிகொடுத்த கண்ணதாசன் தான் எழுதிய திரையிசைப்பாடலில் இந்தச் சந்தத்தைத் தனக்குச் சொந்தமாக்கியிருக்கிறார்.

    “ஆடக்காண்பது காவிரி வெள்ளம்
    அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
    ஓடக்காண்பது பருவத்துக் காற்று”

    நகலை அசலாக்கும் முயற்சி என இதனைக் கருதிவிடக் கூடாது. கவிதை மூளையைச் சீண்டிப் பார்க்கக் கூடாது. இதயத்தை அசைத்துப் பார்க்க வேண்டும். பிசைந்து  பார்க்க வேண்டும். திரிகூடராசப்பக் கவிராயரும் கண்ணதாசனும் முத்துசாமியின் இதயத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். மனத்தைக் கொள்ளை கொண்ட இதே சந்தத்தில்  இன்றைய சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

    ஓடக் காண்பது சாலையில் மக்கள்!
    ஒடுங்கக் காண்பது வீதியின் வெளிகள்!
    பாடக் காண்பது பாமரர் வயிறு!
    பழிக்கக் காண்பது பணக்காரர் தொப்பை!
    வாடக் காண்பது ஏழைகள் உள்ளம்!
    வதங்கக் காண்பது மழலைகள் முகங்கள்!
    தேடக் காண்பது தெருக்களில் வெறுமை!
    தெரியக் காண்பது மக்களின் வறுமை!

    ஆடக் காண்பது ஆட்சியர் நோக்கு!
    அடக்கக் காண்பது அதிகார வர்க்கம்!
    சூடக் காண்பது சாலையில் மரங்கள்!
    சுழலக் காண்பது வீட்டினில் விசிறி!
    நாடக் காண்பது நாட்டினில் ஓலம்!
    நடுங்கக் காண்பது நடுத்தர வாழ்க்கை!
    போடக் காண்பது பிச்சையில் சிறிது!
    பொலியக் காண்பது தொழிலாளர் கவலை !

    சந்தத்தையும் சொல்லாட்சியையும் பயன்படுத்திப் பாடுபொருளில் இன்றைய சமுதாயத்தின் அவல நிலையை அழகியல் குறையாமல் அங்கதம் பழுதுபடாமல் நாசுக்காகப் பதிவு செய்திருக்கிறார் முத்துசாமி. பொறுமையாக உட்கார்ந்து இந்தப் பாடல்களை ஒப்பிட்டு நோக்கினால் தொடர்ந்து வரும் கவிதை மரபினை முத்துசாமி எவ்வாறு தன் சமுதாயத்தைப் பாடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்குதடையில்லாத எளிய நடை கவிதையை இனிமையாக்குகிறது.

    கழிந்ததற்கு இரங்கல்

    இறந்த காலத்தை எண்ணி அசைபோடுவது எலலாருக்கும் இயல்பு. பெரும்பாலும் கவிஞர்கள் வாழ்க்கை வறுமையில் தொடங்கி வறுமையில் முடிகிறது. வேறு வாய்பாட்டில் சொன்னால் கவிஞர்களை வறுமை தின்ற போது, கவிதை வளமாக இருந்தது, கவிஞர்கள் வளமாக வாழ்கிறபோது கவிதை வாழாவெட்டியாகிவிடுகிறது. நான் முன்பே கூறியபடி ஒரு கவிதையின் வெற்றி இறுதிவரியில் ஒளிந்திருக்கும். தன் நண்பனை எண்ணி முத்துசாமி பாடுகிறார்.

    “கட்டணத்தில் படிக்கின்ற காலமொன்று இருந்ததாலே
    எட்டாவது மாதத்திலே கட்டுதற்குப் பணமில்லை!

    என்னைப்போல் ;இன்னொருவன் இணைந்திட்டான் என்னோடு!
    புன்னை மரநிழலில் பொழுதெல்லாம் கதைபேசி

    மணியடிக்கும் வேளையிலே படித்து முடித்ததைப்போல்
    தனியாளாய் வீடு வந்த சங்கடத்தை என்ன சொல்ல?

    எப்படியோ பள்ளிக்குள் எடுத்து  அடிவைத்தோம்!
    தப்பாமல் படித்துத் தனித்தனி ஆளானோம்!”

    இதுவரை பள்ளி வாழ்க்கையின் போராட்டத்தைப் பதிவு செய்திருக்கும் முத்துசாமி, இறுதிவரியில் அவர்களுடைய இன்றைய நிலையைப் பதிவு செய்கிறார் இப்படி!

    “அள்ளிவந்த விதியாலே கோடீசுவரன் அவனாக
    எள்ளி நகையாட எளிய கவியானேன்!

    இந்த முழுப்பாடலிலும் பள்ளி நிகழ்வுகளின் ஆழம் வெளிப்பட்;டிருக்க வேண்டும். இதுபோன்ற கடந்த கால நினைவுகளைக் காலத்தால் அழியாக் கவிதையாக்குவது கவிஞர் கடன். முத்துசாமி இதில் போதிய வெற்றியை அடைய முடியாமற் போனதற்குக் கடந்த கால நிகழ்வை ‘அருமையான கவிதைக் கரு’ என அவரால் கருத முடியாமற் போனதுதான். இதே போன்ற ஒரு சாதாரண நிகழ்வைத் “தோழிமார் கதை” என்னும் தலைப்பில் கவிஞர் திரு வைரமுத்து பாடியிருப்பதையும் ‘அளிதோ தானோ யாண்டுண்டு கொல்லோ?” என்னும்  தொடித்தலை விழுத்தண்டினார் வரிகளையும் இங்கே நினைவு கூறலாம். என்றாலும் சமுதாயத்தின் இரக்கத்திற்கு ஆளாகிப் போன ஒரு சாதாரண கவிஞனாக ஆன முத்துசாமி  தன்னுடைய விதியை நொந்து கொள்வது கவித்துவம் நிறைந்த அடியாகும்.!

    சுடுகின்ற நிஜமும் குளிர்கின்ற நிழலும்

    மரணம் இனிக்காது. மரணம் பற்றிய கவிதை இனிக்கும். பிரிவு  இனிக்காது. பிரிவு பற்றிய கவிதை இனிக்கும். நிஜம் சுடும். நிழல் தழுவும். ஒப்பாரி வேறு. ஒப்பாரியைக் கேட்டுக் கலங்கி நிற்பது வேறு. கலையின் வியத்தகு போக்கு இதுதான். தமிழ்க் கவிதைகளின்  சுற்றுவட்டப் பாதை என்பது காதல், மானுடம், சமுதாயச் சிந்தனை, இயற்கை என்னும் சிலவற்றுக்குள் அடங்கி விடும். இவை இணையான பகுப்புக்கள் அல்ல. விகிதாசாரம் மாறுபடும். காதல் தொண்ணூறு விழுக்காடு இடத்தை அடைத்துக் கொள்கிறது. காதலைப் பாடுபொருளாக்காத கவிஞன் மகாகவி பாரதி ஒருவனே. மாறாகப் பாரதிதாசன் அறுபது விழுக்காட்டு இடத்தைக் காதலுக்கு ஒதுக்கியவன். இது தமிழ்க் கவிதையியலின் நீண்ட நெடிய மரபின் பெருந்தாக்கமாக இருக்கலாம். சுற்றுவட்டப் பாதையின் நிறுத்தங்களில் ஒன்றான சமுதாயச் சிந்தனைகளை உள்ளுணர்வோடு பாடுங்கவிஞர்கள் எண்ணிக்கையில் குறைவு.

    சமுதாயம் பாதிப்பது கண்டு மனமுருகிப் பாடுவதும் சமுதாயச் சிந்தனைகளைப் பாடுவதுதான். நேரடியாகத் தன்னைப் பாதிப்பதைக் கவிதையில் வெளிப்படுத்துவதும் அத்தகையதே. 2019 – 2022 ஆகிய மூன்றாண்டுக் காலத்தில் இந்த மக்கள் உலகம் கொரானா என்னும் கொடிய நச்சுக்கிருமி நோயால் பட்ட பாடு பெரும்பாடு. தமிழ்க்கவிதை உலகினைப் பொருத்தவரையில் உதட்டளவில் பேசப்படும் ஈழப்போர் பற்றியும் அவ்வளவாகக் கவிதைகள் இல்லை. கொரானா பாதிப்புப் பற்றியும் அவ்வளவாகப் பாதிப்புக்கள் இல்லை. அன்பர் முத்துசாமி கொரானாவைப் பற்றிய தன் சுய அனுபவத்தை எளிய கிளிக்கண்ணிகளில் வடித்துக் காட்டியிருக்கிறார்.

    “கொரானா வந்ததனால் குதூகலம் போனதடி!
    குடும்பம் குலைந்ததடி – கிளியே
    கூறுகெட்டுப் போனோமடி!

    மாதம் பலவாக மனையடைத்துக் கிடப்பதனால்
    ஏதும் அறியோமடி! கிளியே!
    அறிந்தவர் யாரடியோ?

    சோற்றுக்கு வழியின்றிச் சோம்பிக் கிடந்தோமே!
    மாற்றுவழி காணோமடி! கிளியே!
    மந்தையாடு ஆனோமடி!

    வாழ வழியில்லை! வாழ்க்கை தெரியவில்லை!
    ஏழையாய் போனோமடி! கிளியே!
    எதிர்காலம் எங்கேயடி?

    ‘கிளிக்கண்ணி’ என்பது ஒரு எளிய நாட்டுப்புறக் கவிதை வடிவம்.  கல்லிடைக் குறிச்சி  சுப்பராயலு இதனை  இருபகுதிகளாகப் பாடியிருக்கிறார். ‘உத்தரகோச மங்கை கிளிக்கண்ணி என்று ஒரு நூல் உண்டு. சிவபெருமானைப் பாடும் அந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மகாகவி பாரதியார் முருகனிடம் மையல் கொண்ட தலைவி, கருப்பொருள் சிறக்கக் கிளியைத் தூதுப் போருளாகப் பாடியிருக்கிறார்.

    “அல்லி குளத்தருகே — ஒரு நாள்
    அந்திப் பொழுதினிலே அங்கொர்
    முல்லைச் செடியதன்பால் – வினை
    முற்றும மறந்திடக் கற்றதென்னே  என்று
    சொல்ல வல்லாயோ கிளியே!”

    என்பது பாரதியின் பாட்டு, எல்லாரும் அறிந்து பெரும்புகழ் பெற்ற “நடிப்புச் சுதேசிகள்” என்னும் கவிதை ‘கிளிக்கண்ணி’ வடிவத்தில் அமைந்ததாகும். சமயப் பொருண்மை தழுவியும் சமுதாய மாந்தர் இழிநிலை தழுவியும் பெருங்கவிஞர்களால் பாடப்பெற்ற இந்தக் கிளிக்கண்ணியில் எளிய தமிழ் கொண்டு கொரானாவின் பாதிப்புக்களை உள்ள்ம் நெகிழுமாறு பாடியிருக்கிறார் முத்துசாமி. அவசரமாகக் கவிஞராக முயலும் அன்பர்கள் கொரானாவின் கொடுமைகள் பற்றி எத்தனைப் பேர் பாடியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    கவிதையும் முத்துசாமியும்

    வறட்டு யாப்பிலக்கணத்தையே ‘கவிதை’ என்று எண்ணி மருளும் குருட்டுப் பேர்வழிகளில் ஒருவர் அல்லர் முத்துசாமி. தமிழில் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் கவிதை என்பது உணர்வின் வெளிப்பாடு. உணர்ச்சியின் உந்துதல், இயற்கை ரசிப்பின் எழிலான தோற்றம், இளகிய மனத்தின் அழகிய ஓவியம் என்று எண்ணிக் கவிதை புனைபவர். இந்தப் பொருண்மையில் என்னோடு முழுமையாக அவர் ஒத்துப் போகாவிட்டாலும் கவிதையை யாப்பிலக்கணத்தால் அளவிடுவது தவறு என்பதை நன்கு புரிந்து கொண்டவர்.

    பழம்பெரும் தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை தொகுத்துச் சாகித்திய அகாடமி வெளியிட்டிருக்கும் தமிழ்க்கவிதைக் களஞ்சியத்தில் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுப் பதிவாகியுள்ளன. ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன்; அந்த நூலை மட்டும் படித்தால் போதுமானது. அந்த நூலில் திரைப்படப் பாடல் ஒன்றினை இலக்கியத் தகுதிக்கு உயர்த்திப் பதிவிட்டிருக்கிறார் பிள்ளை. அந்தப் பாடல்

    “மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்
    மணல் கூட சிலநாளில் பொன்னாகலாம்!
    ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
    அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?

    என்ற கண்ணதாசன் பாடல்தான் அது. பொருள் முரண்களையும் வாழ்வியல் முரண்களையும் அழகியல் மேம்பட கண்ணதாசன் பாடிய பாடல் அது. அந்தப் பாடலில் மனம் பறிகொடுத்த முத்துசாமி அதே வாய்பாட்டில் கவிதை எது என்பது பற்றி எழுதிய பாடல் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

    வான்கோழி மயிலாகலாம்!
    வான்மழையும் புயலாகலாம்! வெறும்
    வார்த்தை கவியாகுமா? ‘சீர்’
    வரிசை எனையாளுமா?

    காளான் மரமாகலாம்! – சுவைக்
    கற்கண்டும் கசப்பாகலாம்!
    தேமா கவியாகுமா? – கனிச்
    சீரெல்லொம் கனியாகுமா?

    ஆர்ப்பாட்டம் கொண்டாடுதே! தினம்
    அரைகுறைகள் வென்றாடுதே!
    போர்ப்பரணி என்றாடுதே – குறைப்
    புலமையால் திண்டாடுதே!

    கலைஞர் சங்கத்தமிழ் மக்களிடம் சென்று சேரவேண்டும் எனக்கருதி எழுதியதுதான் சங்கத்தமிழ். அதில் அவர் புறநானூற்றை மீட்டுருவாக்கம் செய்யவில்லை. ஒரு நூறு சங்கப்பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தை வசனகவிதையில் தனக்கே உரிய அழகியல் உணர்வோடும் மொழியுணர்வோடும் புதுக்கவிதைப் போக்கில் எழுதிக்காட்டினார். இதற்கு மாறாக எழுத்தாளர் சுஜாதாவும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் புறநானூற்றையே வேறு வடிவத்தில் எழுதித் தடுமாறினர். வேறு சில பேர்வழிகளும் புறநானூற்றைத் தங்கள் வறட்டு மொழியில் வடிவமைத்தனர். இதில் கொடுமை என்ன வென்றால் அவர்கள் தங்களைக் கலைஞர் என்று எண்ணிக் கொண்டதுதான். அவர்களுக்குக் கலைஞர் என்ன செய்தார் என்பதையும் விளங்கிக் கொள்ளும் திறனும் இல்லை. ஒரு இலக்கியத்தை இன்னொரு வடிவத்தில் படைப்பதால் விளையும் பயனேதும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளும் திறனும் இல்லை.

    விருதுகளுக்காக அலைந்து திரியும் பலருக்குமான களமாகத் தமிழகம் மாறிவிட்டது. எத்தனை ஆயிரம் கவிஞர்கள்?. யாருடைய கவிதை பொதுவெளியில் பேசப்படுகிறது? பேசப்படாமல் போனதற்கு என்ன காரணம். ஆர்ப்பாட்டம் இசையாகாது! வாய்பாடுகளைக் கவிதை என்று எண்ணி மருகும் பரிதாப நிலை நீடிக்கும் வரை இங்கே கருப்பைக் குழந்தையாகவே கவிதை ஒடுங்கிவிடும். சிந்து போன்ற சந்தப்பாடல்களைப் பாட எத்தனிப்போர் தாம் எழுதியதை வாய்விட்டுச் சொல்லிப் பார்ப்பதில்லை. எழுதுகிற கவிதைகளிலும் ஒற்றுப் பிழைகள். வாங்குகிற விருதுகளிலும் வல்லினப் பிழைகள். ‘மலிவுப் பதிப்பு’ என்பதற்குப் ‘பிழை மலிவு பதிப்பு’ என்று பொருள் போலும்

    தண்டியலங்காரமும் தாரமங்கலமும்

    எந்த வகையிலும் தமிழிலக்கணத்திற்கோ, இலக்கியச் பயிற்சிக்கோ தமிழ்க்கவிதைக்கோ எள்ளின் முனையளவும் பயனளிக்காத நூல் தண்டியலஙகாரம். இதுபோன்ற நூல்களே தமிழில் அதுபோன்ற நூல்கள் இல்லை என்னும் போலிக் கருத்தியலை முன்னெடுக்கக் காரணமாகும். எழுத்து, சொல், பொருள் என்பதே தமிழ் நெறி. எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி என்பது வடமொழி மரபு. தமிழ்க்கவிதைகளில் அணியிலக்கணம் ஆராயப்படவில்லை. தமிழ்க்கவிதைகளுக்கும் அணிகளுக்கும் தொடர்பே இல்லை.  உவமம் அணியன்று. அது பொருட்பகுதி. அதனால்தான் தொல்காப்பியர் அதனைப் பொருட்பாலில் வைத்தார். அகப்பொருள் மாந்தர்தம் கூற்றுப் பகுதியே உவமம். உவமம் புறம் சார்ந்ததன்று. அகம் சார்ந்தது. அகப்பொருளுக்குத்தான் உவமம். சங்க இலக்கியம் உட்பட பின்னாலே வந்த இலக்கியங்கள் உவமத்தைப் பொருள் விளக்கத்திற்காகவே பயன்படுத்தியிருக்கின்றனவேயன்றிச் செய்யுளின் அழகுக்காகப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பிறமொழி அறிவும் தள்ளத்தக்கதன்று என்னும் விரிந்து பரந்த மனநிலை தமிழிலக்கணக் கற்றலிலும் நிலைபெற்றது. இதன் விளைவாகவே தண்டியலங்காரம் என்னும் வடமொழி நூல் பல்வகை அணியிலக்கணங்களை முன்னெடுக்கிறது. உவமம் அதில் ஒன்று. இந்தத் தண்டியலங்காரந்தான் உவமத்தை ‘உவமை’ என்று பிழையாகக் கூறியது. உவமம் தமிழ்ச் சொல். ‘உவமை’ உவமத்தின் பண்பைக் குறிக்கும் மையீற்றுப் பண்புப் பெயர்.  இந்த உவமத்துள் ஐயவுவமை என்பதும் ஒன்று. அதற்கான பொருள் பாட்டைத் தண்டியலங்கார ஆசிரியரே எடுத்துக்காட்டியுள்ளார்.

    “தாது அளவி வண்டு தடுமாறும் தாமரை கொல்?
    மாதர் விழி உலவும் வாள் முகம் கொல் – யாது என்று
    இருபால் கவர்வு உற்று இமை ஊசலாடி
    ஒருபடாது என் உளம்”

    இந்தப் பாட்டில் கண்களை வண்டுக்கும் முகத்தைத் தாமரைக்குமாக்கி ஐயப்பட்டது காண்க. இந்த மரபு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் இருந்திருக்கிறது.

    “ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
    அம்மா அரிவையோ அல்லள்!
    தெனாது ஆஅய் அணங்குடைச் சிலம்பில்
    கவிரம் பெயரிய உருகெழு கவான்
    ஏர்மலர் நிறைமலர் உறையும்
    சூரமகள் மாதோ? எனும் என் நெஞ்சே!”

    என்பது அகநூனூற்றில் “அரிவையோ அல்லள்”. என்றும் “சூரமகளிர் மாதோ?” என்றும் தலைவன் ஐயப்பட்டது காண்க. இதனை வழிமொழிந்த திருவள்ளுவர் கண்ட தலைமகன்

    “அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
    மாதர் கொல்? மாலும் என் நெஞ்சு”

    என்று ஐயப்படுகிறான். இந்த நெடிய மரபில் வந்த கவிஞன் ஒருவன் எழுதுகிறான்

    “பூவிடத்தில் வைகும் புதுவித பொன்வண்டோ?
    தாவிஎனைத் தாக்கும் கண் தான் இதுவோ? –ஆவிக்குள்
    சென்று அலைக்கழிக்கச் செய்வ தறியாது
    நின்று தவிக்கின்றேன் நீண்டு!”

    என்று. இந்தப் பாட்டில் கண்ணா? வண்டா என்பதுதான் தலைவனின் ஐயம். தன்னிகரற்ற திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசன் இதனை வேறு வாய்பாட்டில் பதிவு செய்திருக்கிறார்.

    பேசுவது கிளியா? இல்லை
    பெண்ணரசி மொழியா?
    கோவில் கொண்ட சிலையா?
    கொத்துமலர்க் கொடியா?

    பாடுவது கவியா? இல்லை
    பாரி வள்ளல் மகனா?
    சேரனுக்கு உறவா?
    செந்தமிழர் நிலவா?..

    கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா? — இல்லை
    கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?

    வில்லேந்தும் காவலன்தானா?
    வேல்விழியாள் காதலன்தானா?
    சொல்லாமல் சொல்லும் மொழியில்
    கோட்டை கட்டும் நாவலன்தானா?

    மன்னாதி மன்னர்கள்
    கூடும் மாளிகையா?
    உள்ளம் வண்டாட்டம் மாதர்கள்
    கூடும் மண்டபமா?

    செண்டாடும் சேயிழைதானா?
    தெய்வீகக் காதலிதானா?
    செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
    செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

    இங்கே வாய்பாடு மாற்றம் என்பது மரபு மாற்றம். அல்லது மரபின் வளர்ச்சி. அதாவது பெண்ணைத்தான் ஆண் ஐயப்படுவான். தலைவியைத்தான் தலைவன் ஐயுறுவான். தலைவி தலைவனை ஐயுறுவது மரபன்று. இந்த மரபை உடைத்தவர் சேக்கிழார்.

    “முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகொளியால்
    தன்னேரில் மாறனோ? தார்மார்பின் விஞ்சையனோ?
    மின்நேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?
    என்னே? என் மனம் திரிந்த இவன் யாரோ?

    என்று சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்ட பரவை நாச்சியார் ஐயுற்றதாகப் பாடிப் புதுமரபுக்குத் தடம் காட்டியிருக்கிறார். .கண்ணதாசன் பழந்தமிழ் மரபையும் சேக்கிழார் மரபையும் ஒரு சேரத் தழுவியிருக்கிறார். “பேசுவது கிளியா” என்ற இந்தப் பாடலில் தலைவனும் தலைவியும் ஒரே சூழலில் ஒருவொரையொருவர் ஐயப்பட்டுக் கொள்கிறார்கள் என்பது தமிழ்க்கவிதை உத்திக் களத்ததில் ஓர் புதுமை. இந்த மரபைத் தாரமங்கலத்தார் இப்படிப் பாடியிருக்கிறார். .

    “வானில் தவழும் தாரகையோ?இங்கே
    வந்தெனை வாட்டும் மேனகையோ?

    புன்னகை பூக்கும் புதுநிலவோ? இன்று
    புதிதாய்ப் பூத்த பூச்சரமோ?

    கண்ணில் ;இனிக்கும் கற்கண்டோ? – எனைக்
    கவர்ந்தே இழுக்கும் காரிகையோ?

    செவ்விதழ் பதித்த திருமுகமோ? என்
    சிந்தை கவர்ந்த திருக்குறளோ?

    கவ்வத் துடிக்கும் கன்னங்களோ? கனிச்
    சாறு நிறைந்த கிண்ணங்களோ?

    கண்களா? இல்லை மீனினமா? உயிர்க்
    கற்பைக் காப்பதில் மானினமா?

    கரிய கூந்தல் வான்முகிலா? அவள்
    கலைதவழ் முகமொரு வெண்ணிலவா?

    நெளியும் மின்னல் நேர்வகிடா? இவள்
    நிமிர்ந்து நடப்பது தேர்த்தடமா?

    இந்தக் கவிதையில் எதுவும் புதுமையில்லை.  ஆனால் இயல்பாக வந்த மரபின் தாக்கம் இது என்பதைத் தெளிவாக்குகிறது. இது மரபை மீறியதோ மீறுவதோ அன்று.. இயல்பாக அமைவது. மொழியின் எளிமை மரபுக்கு எதிரானது அன்று. உடன்போக்குக்கு உரியது. இதுதான் மரபுக் கவிதை. இரண்டு காய், நாலு கனி, மூன்று விளம், ஐந்து மா என்றெல்லாம் கணித வாய்பாடுகளை எழுதிவைத்துக் கொண்டு கவிதை என்று நம்ப வைக்க முயல்வார் ஏராளம்.  மரபு, மரபு மாற்றம், மாற்றங்களை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல், அதற்கேற்பப் படைத்துக் காட்டுதல் என்னும் சீரான கவிதைத் தொழிலைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் தாரமங்கலம்!

    மாலை மயக்கமும் மது மயக்கமும்

    தமிழ்நாடு எதிர்நோக்கும் சிக்கல்களில் தலையாயது இளைஞர்களிடத்தில் நிலை கொண்டிருக்கும் போதைப் பழக்கமாகும். இது சாராயத்தில் சொடங்கிக் கஞ்சா வரை நீளுகிறது. போதைப் பொருட்களின் பொருள்களுக்கு அகராதிகள் பொருள் தேடிக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான கோடிகள் கள்ளத்தனமாகப் புழங்கும் இந்தத் தொழிலில் இருப்பவர் அதிகார வர்க்கத்துக்கு வேண்டியவர்களாக இருப்பதும் எண்ணிப்பார்க்க முடியாத சிக்கலாகும். எதனையும் அரசியலாகப் பார்க்கப் பழகிப் போன ஒரு அழுகிய சமுதாயத்தில் அந்த ஒட்டு மொத்த சமுதாயமும் அழிவுத் தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அவ்வளவு எளிதாகப் புரிந்து  கொள்ள முடியாது. இளங்குழந்தைகளுக்கு நாளும் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு அரசு எப்படிக் காரணமாக இருக்க முடியும்? அதே நேரத்தில் தெருவுக்கு மூன்று கடை திறந்து வைத்துவிட்டுக் குடிக்காதே என்றால் என்ன பொருள்? எந்த மட்டத்திலும் சமுதாய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சமுதாய இழிநிலைகளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞர்கள் ஈடுபாடு கொள்வதில்லை. பள்ளிமாணவன் பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனிப்பதைக் கூட அரசியல் கட்சிகள் அரசியலாக்கும் ஒரு பரிதாபமான நிலை இங்கே நிலவுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் முத்துசாமி மதுவின் கொடுமையைப் பாடியிருக்கிறார். குழந்தைகளுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    “எதுகுடித்தால் இன்பமெனில்
    மதுகுடித்தால் இன்பமென்பாய் !

    மதுகுடிக்கும் உன்னுயிரை
    மயக்கத்தில் நீயிருப்பாய் ;
    அதுகுடிப்பது உன்னுயிரை
    அடுத்தடுத்து உம்முறவை !

    இதுகுடித்து ஏப்பமிடும்
    எல்லையிலாத் துன்பம்தரும் ;
    மதுகுடித்த போதையிலே
    மயங்குகிற பேதையரீர்!

    சதிசெய்யும் சாத்தானாய்ச்
    சந்ததிக்கே ஊறுசெய்யும் ,
    மதிமயக்கி உமையழித்து
    மானமதைக் கெடுத்துவிடும் !

    விதிமுடிக்க வருமுன்னே
    விழித்துவிடு குடிமகனே !
    அதுவுன்னை முடிக்குமுன்னே
    நீ அதனை முடித்துவிடு!”

    கவிதையின் முதல் வெற்றி பாடுபொருள் தேர்வில் இருக்கிறது, காரணம் கவிஞனை முதலில் பாதிப்பது அதுதான். அந்தப் பொருளுக்கான வடிவம் அதன் முழுவெற்றியைத் தீர்மானிக்கிறது. பாமர வழக்கில் பாமரர்களுக்காகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிமையும் எளிமையும் இணைந்து தாரமங்கலத்தாரின் சமுதாய அக்கறையை வெளிப்படுத்துகிறது. கற்பனை குறைவான கவிதைதான். யதார்த்தங்களைப் பட்டியல் போட்டு மதுவின் கேடுகளை நிரல்படுத்தி எளிய தமிழில் எல்லார்க்கும் புரியும் வண்ணம் பாடியிருக்கும் சதுரப்பாடு போற்றத்தக்கதா, இல்லையா?

    எளிய தமிழில் இன்றைய வாழ்வியல்

    தமிழிலக்கியத்தின் சாரமே சமுதாய வாழ்வியலைப் பாடுவதுதான். வெற்றுச் சொல்லாடல்களை வெறுங் கற்பனைகளோடு கலந்து படைக்கப்பட்ட இலக்கியங்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தமிழின் அமுதவடிவமான ஆழ்வார்ப் பாசுரங்கள் கூட அவ்வளவாக மக்களால் பேசப்படவில்லை. பகதியை மக்கள் உணர்வுப் பூர்வமான நாட்கடமையாகக் கொண்டனரேயன்றி அதனை இலக்கியத்தில் காண்பதற்கு அவர்களுக்குக் காலமில்லை போலும்!. இடைக்கால இலக்கியங்கள் எல்லாம் அந்தப்புர அந்தரங்கங்களைப் பாடுவதாகவே அமைந்து போனதால் அவை இலக்கிய வரலாற்றிலன்றி மக்களின் இதயத்தில் இடம் பெறவில்லை. பழைய கணக்குப்படி அமைந்த தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களில் வெகுமக்கள் செல்வாக்கினைப் பெற்ற இலக்கியம் என்று ஒரு சிலவே இருக்கின்றன. திரையிலே கற்பனைக் கதாநாயகர்களையே பார்த்த மக்கள், பாரதிதாஜாவின் ‘பதினாறு வயதினிலே’ பார்த்த பிறகுதான் தங்களையே திரையில் கண்டார்கள். அந்தப் படத்திற்குப் பிறகு வந்த சிறு நூறு படங்கள் யதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டின. ஒரு வீடு கட்டுவதில் உள்ள நடைமுறைத் துன்பங்களைப் பாலுமகேந்திரா ‘வீட்டில்’ காட்டினார்’ அரசியல் வாதிகளின்  கொடூர மறுபக்கத்தை ‘நிழல்கள்’ காட்டின. மருத்துவமனைகளின் அவலநிலையையும் மருத்துவர்களின் பணத்தாசையையும் ‘ரமணா’ காட்டியது. கற்பனைகளைவிட நடப்பியல் உண்மைகளையே மக்கள் இலககியங்களில் தேடுகிறார்கள் என்பதை இதனால் உணர முடியும்.

    “கையில வாங்கினேன் பையிலே போடல
    காசு போன இடம் தெரியல”

    என்று பட்டுக்கோட்டை எழுதுகிற போது ஒரு தொழிலாளி தன் வாழ்க்கையை  அதில் காண்கிறான்.

    “காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
    கையும் காலுந்தானே மிச்சம்”

    என்று அவன் பாடுகிறபோது ஒரு விவசாயி தன் உருவத்தைத் தானே பார்த்துக் கொண்டான். நடப்பியலைப் பாடுவதுதான் மக்களைக் கவர்கிறது. இதனால் மற்றவைகளை வெறுக்கிறார்கள் என்று பொருளன்று.  முத்துசாமி

    “வெலவாசி ஏறிப்போச்சு! வௌஞ்ச பொருள் கொறஞ்சு போச்சு!
    மழைக்காலம் மாறிப்போச்சு மக்களுக்கு அவஸ்தையாச்சு!
    கலிகாலம் முத்திப் போச்சு! கடமை குணம் வத்திப்போச்சு!
    பிழையாக நடப்பதெல்லாம் பெருமையாக மாறிப்போச்சு!

    பணப்புழக்கம் கொறஞ்சு போச்சு! பாவச்செயல் பெருகிப் போச்சு!
    மனப்புழுக்கம் அதிகமாச்சு! மக்கள் மனம் அழுக்குமாச்சு!
    தினந்தோறும் கவலையாச்சு! திரிஞ்ச வாழ்வு வழக்கமாச்சு!
    அனல் மேல் புழுவுமாச்சு! அழுத கண்ணீர ஆறாச்ச!

    என்று எழுதுகிறார். யாப்பிலக்கணம் அறியாத பாடல் இது. வெண்டளை வெறுந்தளை ஆன தருணம். காய்ச்சீரும் கனிச்சீரும் இல்லாத இந்தப் பாட்டில் கவிதை இருக்கிறது. மக்களின் கவலை இருக்கிறது. கனிச்சீர் விரவி வருவதாலேயே ஒரு பாட்டு இனித்துவிடும் அல்லது இனித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் பிடிவாதம் செய்யாதவர் முத்துசாமி!.

    நிறைவுரை

    யாப்பிலக்கண வாய்பாடுகளே கவிதை என்னும் மயக்க, மாய உலகிலிருந்து இயற்கையிலேயே விடுபட்டவர் முத்துசாமி. இது  மேலே சுட்டப் பெற்றிருக்கும் அவர் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆழமான சிந்தனையுடையவனுக்குச் சொற்களஞ்சியப் பெருக்கம் தேவையில்லை. திருக்குறள் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு, ஆனால் சொற்களைத் தேடும் ஆவேசமும் தீவிர மனநிலையும் இயல்பாக இருப்பவனே கவிஞன். வண்ணமும் து{ரிகையும் கையில் வைத்தவனெல்லாம் எப்படி இரவிவர்மா ஆக முடியாதோ அதுபோல்தான் எழுத்துக்களையும் அசைகளையும் வாய்பாடுகளையும் அறிந்தவனெல்லாம் கவிஞனாகிவிட முடியாது. மனநேர்த்தி பெற்றவனே கவிஞனாக முடியும். அழகான புலக்காட்சிகள் எவனுக்கு இயல்பாகத் தோன்றுகிறதோ அவனே கவிஞன். மனித இனததின் இயல்பையும் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பையும் வெளிப்படுத்தாதவனை நிகழ்காலமே நிராகரித்துவிடும். தாரமங்கலத்தார் கவிதைகளில் இழையும் இனிமையும எளிமையும் சமுதாயச் சிக்கல்களை ஒரு வகை மனிதநேயத்துடன் அணுகும் அணுகுமுறையும் பண்பாடு காக்கும் போர்க்குணமும் கவியுலகத்தால் நிராகரிக்கக் கூடியன அல்ல.  இனிமையும்  எளிமையும் கலந்த கலவையே கவிதை என்பது பாரதியின் தாரகமந்திரம்  அந்தத் தாரகமந்திரத்தைத் தனது கவிதைகளில் இழையவிட்டிருக்கும் முத்துசாமிக்கு வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 37

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 37

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வங்கனூரார் இசைப் பாடலில் வசமிழந்த தருணம்!

    முன்னுரை

    “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்” என்னும் திருக்குறளால் பாடல் என்பது இசையோடு கலந்தது என்பது பெறப்படும். பாடலும் இசையும் பொருந்தியிருக்க வேண்டும் என்பதும் கருதப்பட வேண்டிய ஒன்று. எதுகை மோனை இயைபு என்னும் தொடைகள் சிறந்து நிற்கும் இசைப்பாடல்களை நாம் சிந்துப்பா வகையில் கேட்டு மகிழ்கிறோம். பாவேந்தர் மகாகவியைச் “சிந்துக்குத்தான் தந்தை” என்று அழைக்கிறார். பாரதி நொண்டி சிந்து எழுதிய பிறகுதான் தமிழ் எழுந்து நடந்தது என்பர்.  பாரதிக்கு இணையாக சிந்து பாடியவர் பாவேந்தர். மனித மனம் இசையோடு பின்னிப் பிணைந்தது. முணுமுணுத்தல் என்பது இசைக்குப் பொருந்துகிற அளவுக்குப் பேச்சுக்குப்; பொருந்தி வராது. ஒருவன் தனியாகப் பாடலை முணுமுணுப்பதற்கும் தனக்குத்தானே பேசிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. விருத்தங்களையும் வெண்பாக்களையும் ஹைக்கூகளையும் கண்டு களைத்துப்போன எனக்குக் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவாய் நிற்பவர் எண்பது வயது இளைஞர் வங்கனூர் மோகனன் அவர்கள். முகநூலை இசைவண்ணமாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் முகநூலில் எழுதிய சில பாடல்களைப் பற்றிய என் அனுபவத்தை வெளிப்படுத்துவதையே இந்தச் சிறிய கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது.

    தமிழும் இசையும்

    “குழல் இனிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்று உவம அளவையால் இசைக் கருவிகளை முன்னெடுப்பார் திருவள்ளுவர். “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்பார் திருநாவுக்கரசர்.  “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்” என்று சம்பந்தரைப் பாராட்டுவார் சுந்தரமூர்த்தி நாயனார். “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் இருப்பவன் என்று இறைவனைப் பாடுகிறார் சுந்தரர். “ஓங்கு மனத்து எண் கருவி ஐந்து ஈன்று இடு நூற்று மூன்றான பண்களும் பின் கல்யாணப் பாவையரா” என்பார் தமிழ் விடுதூது ஆசிரியர். “இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்பார் கண்ணதாசன். “இசையாய்த் தமிழாய் இருப்பவனே” என்றும் அவர் பாடுவார். இசைப்பாடல்கள் என்பன மரபுப் பாடல்களே என்பதை அறிதல் வேண்டும். வெறும் யாப்பமைப் பாடல்களை மரபுப் பாடல்களென்றும் அவற்றை எழுதுவாரைப் மரபுப்பாவலர் என்றும் பரவிவிட்ட வெற்றுக் கூச்சலை நான் என்றும் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதற்குத் தமிழ்மரபின் விரிவையும் ஆழத்தையும் புரிந்ததனாலேயே. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை பரிபாடல் முதலியவற்றில் இசைபற்றிய குறிப்புக்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் ஊள்ள வரிப்பாடல்கள் ;இசைப்பாடல்களே. சீவகன் யாழைத் தன் கையில் வாங்கித் தரம் பார்த்து வாசித்த நிகழ்வைச் சீவகசிந்தாமணி விளக்கிக்காட்டுகிறது. குடுமியான் மலை உட்பட்ட பல திருக்கோயில்களில் இசைத்தூண்கள்; இன்றும் இருக்கின்றன.  பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியனவெல்லாம் இசைப்பாடல்களே. பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு பஞ்ச பாரதீயம் பதினாறு படலம், வாய்ப்பியம் என்னும் பெயருடைய இசைத் தமிழ் நூல்களைப் பற்றி அறிய முடிகிறது.  தேவாரத்தில் பண்முறை என்றும் தலமுறை என்றும் இரண்டு தொகுப்புக்கள் உண்டு.  தியாகராசர், சியாமளா சாஸ்திரியார், முத்துசாமி தீட்ஷிதர் ஆகிய மூவருக்கும் முனனாலேயே அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர்  மாரியப்பாப் பிள்ளை ஆகிய மூவரும் 17ஆம் நூற்றாண்டுகளில் இசைத்தமிழ் வளர்த்த போராளிகளாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இவர்களுக்கும் பின்னாலே கோபாலகிருஷ்ண பாரதியார், வள்ளற் பெருமான் முதலியோரும் அவர்களைத் தொடர்ந்து மகாகவி பாரதியாரும் பாவேந்தரும் இசைத்தமிழ் வளர்த்த பெருமக்களாகக் கருதப்படுகின்றனர். “வாழையடி வாழையென வந்த இந்தத் திருக்கூட்ட மரபில் வந்தவர்தான்” வங்கனூரார்.

    இன்றைய தமிழிசையின் நிலை

    முத்தமிழ் என முழங்குகின்ற கவிஞர்கள் கூட ‘இசைத்தமிழ்’ என ஒன்றிருப்பது பற்றிச் சிந்திக்கிறார்களா எனத் தெரியவில்லை. வருத்தமளிக்கும் விருத்தங்களிலும் வாய் நுழையாத ஹைக்கூவிலும் தங்கள் மதிப்புமிக்க காலத்தைக் கடத்திக் கொண்டு விருது கிடைக்கவில்லையே என்னும் வேதனைக் கண்ணீருடன் திரிந்:து கொண்டிருக்கும் பலரை நான் முகநூலில் காணுகின்றேன்.  ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமாரம், குறிஞ்சிப் பண், செவ்வழி , நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய  பண்கள்  முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்ட நாடு இது. பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு  இராகங்களைச்  சிலப்பதிகாரம் கூறுகிறது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றெல்லாம் இசையைச் செழிக்க வைத்திருந்த இனம் தமிழினம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் பேசினால் இசையாராய்ச்சி இசை மழையாகவே பெய்யும். ஆற்றல் மிகு கவிஞர்கள் இசைத்தமிழ் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் திருவையாறு தியாகராசர் பஞ்சரத்தின திருவிழாவை விஞ்சக் கூடிய அளவுக்குத் தமிழிசை வளர்ந்திருக்கும். நாம் குறைசொல்லுவதிலேயே காலம் கழிக்கிறோம்.

    தமிழ் மூவர் பாடிய இசைப்பாடல்கள்

    வங்கனூரார் இசைப்பாடல்களைக் காண்பதற்கு முன் தமிழிசைப் பாடல்களின் முதல் மூவரான முத்துத்தாண்டவர்; மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர்தம் இசைப்பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவது நினைவைச் சுகந்தமாக்கும்.

    “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காணக்
    கண் ஆயிரம் வேண்டாமோ
    நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
    திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்கொண்டார்)

    என்னும் முத்துத் தாண்டவர் பாடலும்

    காலைத் தூக்கி ஆடும் தெய்வமே எனைக்
    கைதூக்கி ஆள் தெய்வமே!

    வேலை தூக்கும் பிள்ளை தனைப்பெற்ற தெய்வமே
    மின்னும் புகழ்சேர் பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

    செங்கையில் மான்தூக்கிச் சிவந்த மழுவும் தூக்கி
    அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கிக்
    கங்கையைத் திங்களைக் கதித்த சடைமேல் தூக்கி
    இங்குமங்குமாய்  தேடி இருவர்  கண்டறியாத (காலை)

    என்னும் மாரிமுத்தாப் பிள்ளை பாடலும்

    “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
    ஶ்ரீரெங்க நாதா!
    ஏன்பள்ளி கொண்டீர் ஐயா?
    ஆம்பல் பூத்த சய பருவத மடுவினிலே
    அவதரித்த இரண்டு ஆற்று நடுவினிலே

    கௌசிகன் சொல் குறித்தற்கோ?
    அரக்கிக் குலையில் அம்பு தெறித்தற்கோ?
    ஈசன்வில்லை முறித்தற்கோ?
    பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

    என்னும் அருணாசலக் கவிராயரின் பாடலும் காலம் உள்ளளவும் நிலைக்கும். நின்று புகழ் பாடும். இந்த மரபு தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு இசைமேடைகள் தமிழிசைப் பாடல்களால் நெகிழ்ந்து போயிருந்திருக்கும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

    இசைப்பாடல்களில் பாரதி — பாவேந்தர் — சுரதா பங்களிப்பு

    இயற்றமிழ் பாடல் வகைகளில் கோலோச்சி நின்ற பாரதியும் பாவேந்தரும் சுரதாவும் பெரியசாமி தூரனும் திருச்சி தியாகராசனும் தங்களால் இயன்ற அளவுக்கு இசைத் தமிழைக் கருத்திற் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகள் உண்டு. யாப்பின் பல பரிமாணங்களையும தன் கவிதைகளில் கொண்டு வந்த மகாகவி, இசைப்பாடல்களாகிய கீர்த்தனைகளிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் அவர் எழுதிய இசைப்பாடல்கள் பலவாயினும் புகழ் பெற்ற இசைப்பாடல்

    “கண்ணன் மனநிலையைத் தங்கமே
    தங்கம் அடிதங்கமே தங்கம்
    கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
    எண்ணம் உரைத்துவிடில் தங்கமேதங்கம்
    ஏதேனிலும் செய்வமடி தங்கமே தங்கம்”

    என்னும் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல் முழுமையும் இசைக்கண்ணிகளால் ஆனது. பினனாலே வருகிறவர்கள் தங்களுக்கு விருப்பமான ராகங்களில் பாடி பாட்டின் இனிமையைக் கெடுத்துவிடுவார்களோ என்னும் அச்சத்தின் காரணமாகவும் கெடுத்துவிடக் கூடாது என்னும் கொள்கை காரணமாகவும் பாட்டுக்கான தாளத்தையும் ராகத்தையும் அவரே பதிவிட்டுச் சென்றிருக்கிறார். “தங்கப்பாட்டு மெட்டு” என்றும் “சிங்காரம் ரௌத்ரம்” என்னும் மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவது என்றும் தெளிவாக்கிச் சென்றிருக்கிறார் பாரதியார். அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன் இசைப்பாடல்களில் தனித்த முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதற்கு அவருடைய இசையமுது தொகுதி ஒன்று மற்றும் இரண்டு  ஆகிய நூல்கள் சான்றாகி நிற்கின்றன.

    துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா?

    என்னும் பல்வியை முன்னிறுத்தி அதனோடு இணைத்து அனுபல்லவியைத் தொடங்குகிறார் பாவேந்தர்.

    நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி
    அலலல் நீக்க மாட்டாயா? கண்ணே
    அலலல் நீக்க மாட்டாயா?

    சஞ்சய் சுப்பிரமணியன் ;இந்தப் பாட்டை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்

    என்பது தகவலுக்காக இங்குப் பதிவு செய்யப்படுகிறது,

    “தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்
    எண்ணம் தந்தவர் திருவள்ளுவர் தேன் போலே

    கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
    கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் (தித்திக்கும்)

    உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது!
    உலகினில் புகழ் இன்றி எதுவுமே நிலைக்காது!
    உயிரினும் மேலாம் மனிதர்க்கு தன்மானம்!
    அதுவே பெருமை தருமென
    அருமையாம் குறளிலே அமுதமெனவே…(தித்திக்கும்)

    இசைப்பாடல்களின் அனுபல்லவி மற்றும் சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இயைந்தால்தான் பொருட் பரிமாணம் கூடும். அதனால்தான் தமிழில் அவற்றை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிறார்கள்.  “கத்தும் கடல் பிறந்த காலத்திலே பிறந்தும் கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் தித்திக்கும் தமிழிலே” என்று இயைத்துப் பாடினால் பாட்டின் பயணம் தரும் இன்பம் பலவாகும். இந்த இசைப்பாடலில் “அருமையாம் குறளிலே அமுதமெனவே என்னும் சரணத்தின் முடிப்பு தித்திக்கும் தமிழிலே” என்னும பல்லவியின் தொடக்கத்தொடு இயைந்தது காண்க.

    வங்கனூராரும் பாடுபொருளும்

    தற்காலக் கவிஞர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் மரபினை விட்டுத் துளியும் விலகாமல் மரபைப் பின்பற்றி வருகிறார்கள். அதனால் வேண்டுமானால் அவர்கள் மரபுக்கவிஞர்கள் என்று போட்டுக் கொள்ளலாம். அது எதுவெனில் காதல் என்னும் பாடுபொருள். பாதிப்புத்தான் கவிதைக்குக் காரணம் என்பதில் முரண்படும் தற்காலக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் ஒற்றுமைப்படும் ஒரே புள்ளி காதல். காதல் உணர்வே சிறிதுமில்லாமல், அங்கங்களைப் பாடுவதையே காதல் என்று யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை.  காதலைப் பாடுவார்கள். ஆனால் அந்தப் பாட்டு பல்லிளிக்கிறபோது கண்டு கொள்ளலாம் இது பாசாங்குக் காதல் என்பதை!. கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? தமீழிலக்கியத்தின் பெரும்பகுதி காதல்தானே! இதனை வைத்துக் கொண்டே காதலையும் காதற் கவிதைகளையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  வங்கனூரார் அறுபதுக்கு நாற்பது என்ற விகிதத்தில் பிற பாடுபொருள்களையும் பாடியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த சேதி. பாடுபொருள் கவிஞன் பாதிப்புக்கு அடுத்தபடியாகத் தேவையைக் கருதி வருகின்றன. பாரதிதாசன் இந்தியை எதிர்த்தார் என்றால் இந்தியால் அவர் என்ன பாதிக்கப்பட்டார்? ஆனால் சமுதாயத்தின் தேவை அதனை எதிர்ப்பது. அதனால்தான் குருதி கொப்பளிக்கும் பாடல்களை அவரால் எழுத முடிந்தது, கவிவன்மை இன்மையால் அல்லது பற்றாக்குறையால் இன்றைய சமுதாயத்தின் தேவைகளைப் பாடுவதில் கவிஞர்கள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். காரணம் பொதுநோக்கின்மை அல்லது பற்றாக்குறை! வங்கனூரார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் கருத்து,

    “நல்ல நினைப்பிருந்தால் – வாழ்வில்
    நலம்பல சேராதோ ?
    அல்லல்கள் மாய்ந்துவிட – உன்றன்
    அவலங்கள் தீராதோ ?

    கொடுமை விளைக்கின்ற – சாதிக்
    கொள்கையை வேரறுப்போம் !
    அடிமைத் தளையறுத்து – நாட்டில்
    அன்பு பயிர்வளர்ப்போம் !

    அருள்வழி நாம்நடந்து – நெஞ்சின்
    ஆணவத்தை ஓட்டிடுவோம் !
    இருள்வழி மாய்ந்திடவே – ஆங்கோர்
    இன்னொளி காட்டிடுவோம் !

    எண்ணங்கள் நன்றானால் – வாழ்வை
    எதிர்த்துநாம் வெற்றிகொள்வோம் !
    மண்ணில் பலநாட்டு – மக்கள்
    மனங்களை நாம்வெல்வோம் !”

    எல்லாருக்கும் தெரிந்த வாழ்வியல் உண்மைகளே! தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுங்கினைத் தீர்மானிக்கின்றன என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பின்னனியில் இந்தப் பாட்டை நோக்க வேண்டும். “நல்ல மனமிருந்தால்” என்னும் ஒரு தொடரைப் பாடலின் ஒவ்வொரு கண்ணியிலும் பொருத்திப் பாரத்தால் பாரதியை மீண்டும் காணலாம். அன்புக் கவிஞர்களே1 உங்களில் எத்தனைப் பேர் இந்த மனநிலையில் இந்த வகை யாப்பில் சமுதாய நலம் சார்ந்த பாடலை எழுத எத்தனித்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள், வங்கனூரார் கவிதைகளின் ;அருமை புரியும்!

    வங்கனூராரின் வருவானடி

    அலங்காரச் சொற்களை இடுவதானாலேயே இசைப்பாடல் சிறந்துவிடாது என்பதைக் கவிஞர் மோகன் புரியாதவர் அல்லர். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதைப் பின்னாலே வந்தவர்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று மாற்றினார்கள். அந்த மாற்றத்தால் கவிதை சிறந்ததா என்றால் இல்லை. எடுப்பு – தொடுப்பு – முடிப்பு என்பதை வங்கனூரார் மொட்டு – மலர் – மணம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். பொதுவாகப் பேராற்றல் உள்ள பெருங்கவிஞர்களுக்குப் பட்டங்கள் தேவையில்லை. பகட்டுக்கள் பயனளிக்காது. வஙகனூரார் ஆற்றல் மிக்க கவி வல்லாளர். இத்தகைய  மாற்றங்களை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.. இந்த மொட்டு, மலர் மணம் என்னும் சொற்களால் கவிதை அல்லது இசைப்பாடல் சிறக்கிறதா என்று பார்க்க வேண்டும். பயனற்ற முயற்சியைத்தான் திருவள்ளுவர் ‘செய்தக்க அல்ல’ என்கிறார். பானை ஓட்டையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கொழுக்கட்டையில் பூரணம் நிறைந்திருக்கிறதா என்று பாருங்கள். இதுதான் என் பணிவான வேண்டுகோள். பல்லவி – அனுபல்லவி – சரணம் என்று இருந்திருந்தாலும் இந்தப் பாடல் சிறந்திருக்கும்1 ஒரு அருமையான பாடல். மரபின் இழையால் பின்னப்பட்டிருக்கும் அருமையான படைப்பு.

    “வருவானடி இன்பம்  தருவானடி!

    அவ்வளவுதான் பல்லவி!. பழந்தமிழ் காதல் மரபு. நம்பிக்கையின் வெளிப்பாடு. பொருள் தேடச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கியிருக்கும் நெய்தல் தலைவியின் ஒரு நீலாம்பரி.

    “வாழ்வென்னும் பயிருக்கு வளம் சேர்க்கவே – உடன்
    மழைமேகம் போல்வந்து துயர் தீர்க்கவே (வருவானடி)

    இது அனுபல்லவி. தலைவனுடைய வருகை நோக்கத்தைத் தலைவி வெளிப்படுத்தும் பாங்கு இது, வாடி நிற்கும் பயிர் தான் என்பதையும் தலைவன் அன்புக்குக் குறைவில்லை என்பதையும் இசைத்தமிழலால் வங்கனூரார் பதிவு செய்யும் பாங்கினை நோக்குவீர்! சங்க இலக்கியத்தின் சாயல் தென்படவில்லையா?

    “சோலைக்குள் எனைக்கண்டு
    தூய நெஞ்சுள் சிறைவைத்தவன் “

    வாயிலிருந்து என்ன சொல்லை இவள் கேட்க வேணடுமாம்? அதனைச் சொல்கிறாள் தலைவி!

    “குயில் பாடும் பாட்டில் உன்
    குரல்தன்னைக் கேட்கின்றேன்” என்று
    நயமாக என் காதில்
    நலம் பாய்ச்சவே!

    தன்னுடையது குயில் மொழி என்று தலைவன் சொல்ல வேண்டுமாம். அவன் வாயில் இவள் குரல் நலம் பெறவேண்டுமாம். அருமை!

    “மதயானை நடையோடு
    வந்தென்னை வளைக்கின்றவன் – ஒரு
    நதிபோலப் பாய்ந்தென்றன்
    மனச்சோலை நனைக்கின்றவன்!”

    என்ன அருமையாகத் தலைவி தலைவனை எண்ணி மருகுகிறாள்? மதயானை நடை என்பது மரபு. இராமனின் அசைவை யானையின் அசைவாகச் சீதை பார்க்கவில்லையா? “போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்” என்பது கம்பராமாயணம்!. “தேக்குமரம் உடலைத் தநதது! சின்ன யானை நடையைத் தந்தது” என்பார் கண்ணதாசன் அவன் நடையால் இவள் வளைந்தாளாம்! அடடா! அவனை எண்ணியே வெப்பத்தால் காய்ந்து போன தன் மனச்சோலையை நனைத்து ஈரமாக்கும் நதியாக தலைவன் வருவானாம். கழிந்ததற்கு இரங்கல்! தன்னுடைய  குரலை அவன் பாராட்ட வேண்டுமாம்! எததனைப் பேர் பாராட்டி என்ன பயன்? தலைவன் பாராட்டினால்தான் தலைவிக்குக் குளிர்ச்சி? “மழைமேகம் போல் வந்து துயர் தீர்ப்பதும், நதிபோல பாய்ந்தென்றன் மனச்சோலை நனைப்பதும்” ஒரே பாடடின் இருவேறு மனச் சூழலை வெளிப்படுத்தும் நுண்ணியம். மழை காலம் நேரம் பாராது வரும். தலைவன் வருகையும் அப்படியே! நதி எப்போதும் ஓடும். அதனால் மனம் ஈரமாகும். முன்னது எதிர்காலம். பின்னது நிகழ்காலம். வெகு நுண்ணியம். இந்தக் காலத்தில எழுதுவார்கள்

    அவள் வருவாளா?
    கண்ணோடு நான் கண்ட
    வண்ணங்கள் போக
    சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
    அவள் வருவாளா?

    என்று அருவெறுப்பான மரபு மீறிய கொச்சையான பாடல்களைக் கேட்டுவரும் இந்த இளைஞர் சமுதாயத்தின் பார்வைக்குச் செல்ல வேண்டிய பாடல். தலைவியைத் தேடித் தலைவன் செல்லுவதுதான் மரபு. அவனைத் தேடி அவள் செல்லுவது மரபல்ல. “சுடிதாரில் மூடாத பாகங்களைப்” பாடுவதுதான் இந்தக் காலத்துக் கவிதை! மூடிய உள்ளத்துணர்ச்சிகளைப் பாடியது மரபு. மூடாத உடற்பாகங்களைப் பாடுவது புதுமை! வெட்கக் கேடு! இசைப்பாடல் என்றால் அதற்குள் ஒரு நாடகத்தன்மை இருக்க வேண்டும் எனவேதான் பழந்தமிழ் இசைப்பாடல்கள் எலலாம நாடகம் என்னும் பெயர் தாங்கி நிற்கின்றன. சீதக்காதி நொண்டி நாடகம்,  திருச்செந்தூர் நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம், திருக்கச்சூர் நொண்டி நாடகம், ஐயனார் நொண்டி நாடகம் கள்வன் நொண்டிச் சிந்து பெருமான் நொண்டி நாடகம திருவனந்தபுரம் நொண்டி நாடகம் யானைமேலழகர் நொண்டிச்சிந்து என்றெல்லாம் இசைப்பாடல்கள் நாடகமாகவே கருதப்பட்டன.

    கண்ணை இமை வெறுக்குமா?

    இசைப்பாடல்களுக்கும் மற்ற வகை இயற்றமிழ்ப் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு இசைபபாடல்களில் எளிதாக வெளிக்கொணரும் முயற்சி மற்ற பாடல்களில் அவ்வளவாக வெளிப்படுவதற்கு வாயப்பில்லை. இசைப்பாடல்களில் பெரும்பாலும் படைப்பாளன் தன்னைப் பாடுகின்ற தலைவியாகவோ தலைவனாகவோ உருவகம் செய்து கொள்வதால் அங்கே பாவனை தவிர்க்க இயலாததாகிவிடுகிறது, திரைப்பாடல்களின் அளவிறந்த வெற்றிக்கு இதுதான் காரணம். “நீ வருவாய் என நான் இருந்தேன் ! ஏன் மறந்தாய் என நான் அறியேன்!”  என்று தலைவி பாடுகிறபோது கேட்கிற ஒவ்வொருவனும் தலைவனாகிவிடுகிறான். படைப்பாளன் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான பாதிப்பை ரசிகர்களிடம் அந்தப் பாடல் ஏற்படுத்திவிடுிறது,  நவரச இசைப்பாடல்களிலும் இந்த நிலை இருந்து வந்திருக்கிறது,

    “கண்ணை இமை வெறுக்குமா ?
    காட்சிக் கிளி பறக்குமா ?
    பெண்ணே உனை மறப்பதா ?
    பேதை இனி இறப்பதா ?

    பொன்னிநதிக் கரையினிலே அன்று – நான்
    பூவிரியும் சோலைக்குள் சென்று
    தன்னைமறைந் திருந்தநிலை யுண்டு! – உன்றன்
    தமிழிசையைச் செவிகுளிர உண்டு!

    மனக்கதவை எனக்கெனத் திறந்தாய்! – அங்கு
    மன்னனெனைக் குடிவைத்தி ருந்தாய்!
    இனப்பெருமை நாம்கெடுத்தல் ஆகா -மண்ணில்
    இழிவுக்குள் இன்பத்தின் பாகா?

    இப்படித் தலைவன் பாடுவது மரபில்லையெனினும் மேடைக் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடுகிறபோது கேட்போர் உள்ளம் உருகிவிடுவர் என்பது உறுதி. ஓர் ஆண் பாடுவதாக அமைத்துக்காட்டும் இந்தப் பாடலில் மரபு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. பொன்னி நதித் தீரத்தில் பூஞ்சோலையில் நடந்த நிகழ்ச்சி நிரலைத் தலைவன் சிந்தித்துப் பாடுகிறபோது ஒரு நாடகப்பாங்கு அரங்கேறுவதைக் காணமுடிகிறது,

    மறந்ததும் ஏனடி தோழி?

    தலைவனும் தலைவியை மறப்பதில்லை. தலைவியும் தலைவனை மறப்பதில்லை. ஆனால் இருவரும் ஒருவரை யொருவர் மறந்துவிட்டதாக எண்ணி மருகுவது ஒரு புலனெறிவழக்கம். இலக்கியம் சுவைப்பது கற்பனையால். அந்தக் கற்பனைக்கு இத்தகைய சூழல் களமாகிறது, துணை செய்கிறது. அவ்வளவுதான். எலலாம் வல்ல தலைவனை எல்லாம் உளள தலைவி எண்ணி ஏங்குவதில் ஒரு தனிச்சுவை இருக்கிறது, சுகம் இருக்கிறது.. தமிழிலக்கியம் இந்த நுண்ணியத்தைப் புரிந்து கொண்டது. பாலை பற்றிய பாடல்கள் தமிழைப்போல பிறமொழிகளில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. வங்கனூரார் இந்த அலைவரிசையில்  இசைப்பாடல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.

    “மறந்ததும் ஏனடி தோழி?, என்னை
    மறந்ததும் ஏனடி தோழி?”

    தோழியிடம் வினவப்படட வினாவிற்கு விடைகிடைப்பதற்கு முன்பே தொடர்ந்து பாடுகிறாள்.

    பறந்துவந்து பாழும் நெஞ்சைப்
    பறித்துக் கொண்ட மன்னன் இன்று!
    மறந்ததும் ஏனடி தோழி?

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தத் தகவலைத் தோழி கேட்கவில்லை. தலைவியின் உள்ளம் எப்படிப் பறிபோனது என்று தோழி கேட்டாளா? வந்தவனிடம் சென்று விட்டதால் வளர்த்த பாசம் தாங்காமல் தன் நெஞ்சைப் பாழும் நெஞ்சு என்று கூறிக் கொள்வது ஒரு வகை கையறுநிலை!. அடுத்த சரணத்தில் ஒரு புதுமை செய்கிறார் பிரிவு தலைவனுக்கு உரியது, பிரிவால் பாதிக்கப்படுபவள் தலைவி. இலக்கியங்கள் அவளுக்காகத்தான் செய்யப்படும். ஆனால்
    என்னைப்
    பாலைப்பயணம் போகவிட்டுப்
    பதுங்கி மறைந்தவன்

    என்று பிரிவைத் தலைவிக்காக்குகிறாள். இவளைப் பயணம் போகவிட்டு அவன் பதுங்கியிருக்கிறானாம். இப்படித் தன்னையும் அறியாமல் மரபு மாறிய தடத்தில் கவியெழுதும் வங்கனூரார் அதே மரபினை அதே பாடலில் பின்பற்றியிருப்பதையும் காணமுடிகிறது, காதலுக்கு நேர்வழி கண்கள். “கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின்” என்பார் திருவள்ளுவர் “கண்ணேறி உயிரேறி கலந்து கொண்டான் என்பார்’ பாவேந்தர். ‘கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மவுனம்?” என்று எழுதுவார் மருதகாசி “கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே! என்பார் கண்ணதாசன். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்பார் வைரமுத்து.

    அமுத ஊற்றைச் சுவைக்குமுன்பே
    அகன்று விட்டவன் என்றன்
    இமைக்கும் விழியைத்தாண்டிச் சென்று
    இமயம் தொட்டவன்”

    “மற்றவர்களெல்லாம் கண்வழியே நுழைந்தவர்கள் .வங்கனூரார் காதலி மட்டும் விழியைத் தாண்டியவள்  காரணம் இவள் இமைத்தாள் அல்லவா? தடை உடைத்து உள்ளே நுழைந்தானாம் என்பது குறிப்பு.

    இனிக்கும் கனவு

    மேற்கண்ட இசைப்பாடலில் ஒரு சரணக் கண்ணியில் அவர் பயன்படுத்தியிருக்கும் ஒரு சொல் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இயல்பான கவிஞனுக்குத்தான் அமைய முடியும். இயல்பாகப் புதுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் முரண்பட்ட இரண்டு சொற்களை இணைத்துப் புதியதொரு படிமத்தை உருவாக்குவார்கள். ஆனால் இங்கே மரபு சார்ந்த இசைப்பாடல் எழுதுகின்ற ஒருவர் பாடலில் இப்படியொரு சொல் பயிலப்பட்டு வந்திருக்கிறது,

    “மணக்கும் மலரை குழலில் சூட்டி
    மகிழந்து நின்றவன்  நாளும்
    இனிக்கும் கனவை எனக்குள் நடத்தும்
    என்றன் மன்னவன்”

    கனவு நாக்குச் சுவைக்குரிய பொருளன்று. கனவு உண்மையில் ஒரு அருவப்போருள். கனவைச் செயப்படுபொருளாக்கித் தலைவன் நாடகம் நடத்துகின்றானாம். மிகவும் பொறுமையாகச் சிந்தித்து அனுபவிக்க வேண்டிய பகுதி. தொடர்.

    காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே!

    சங்க இலக்கியம் இயற்கையின் கண்காட்சி மையம். அதற்குப் பின்னாலே வந்த தமிழிலக்கியங்களில் பெரும்பான்மை இயற்கையை வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் வளர்ப்புப் பிள்ளைகளாகக் கொண்டிருந்தன. அவற்றுக்குப்பின்னாலே நாம் இயற்கையை பாவேந்தர் படைப்பக்களில்தாம் சங்க இலக்கிய அளவுக்குக் காணமுடிகிறது. இடையில் வந்த மகாகவி குயில்பாட்டு; போன்ற ஒரு சில பதிவுகளில் தாம் இயற்கை மீது கொண்ட வற்றாக் காதலைப் பாடியிருக்கிறார். மற்றவர்களுக்கும் வங்கனூராருக்கும் ஒரு வேறுபாடு மற்றவர்கள் எல்லாம் இயற்றமிழ் பாடல்களில் பாடிய இயற்கையை வங்கனூரார் இசைத்தமிழ் பாடல்களில் பாடியுள்ளார்.

    “மாலை நேர மல்லி கையின்
    சிரிப்பைப் பாராடி ! – அதன்
    மணத்தை வாங்க தென்றல் பாடும்
    பாட்டைக் கேளடி !

    கோல நிலவும் வானில் வந்து
    குடும்பம் நடத்துது ! – ஒரு
    கோடி விண்மீன் கூட்டத் திற்கு
    விருந்து படைக்குது !

    சோலைக் குள்ளே அருவி என்னும்
    மங்கை நடக்கிறாள் ! – என்
    தூய நெஞ்சைச் சொந்தங் கொண்டு
    கவிதை வடிக்கிறாள் !

    கால மகளின் நாட்டி யங்கள்
    கண்ணைப் பறிக்குதே ! – அவள்
    காட்டு கின்ற காட்சி மண்ணில்
    அழகை விரிக்குதே !

    பொதுவாக இசைப்பாடலில் முதலில் பண்ணும் அதற்கு அடுத்தபடியாக இயற்றுவார் கருத்தும் பார்வையும்; மனத்தைக் கவரும். இயற்கை வண்ணனை அவ்வளவாகக் கவனத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் வங்கனூரார் இயற்கையைத்  தனியொரு பாடுபோருளாகக் கொண்டு பாடியிருப்பது தனிச்சிறப்புக்குரியது, பிறரால் முடியாதது என்பதன்று முயன்று தோற்றது, தமிழின் இசைப்பாடல் எண்ணிக்கையில் வங்கனூராரின் பங்களிப்பு செம்பாகம் அன்று பெரிது,  தத்துவக் குறிப்போடு நிறைவுற்றிருக்கும் மேற்கண்ட பாடலில்

    1. மல்லிகையின் மணத்தை வாங்கத் தென்றல் படும் பாடு
    2. ஒற்றைநிலா விண்மீன் ;கூட்டத்திற்கு விருந்து படைத்தல்
    3. அருவி என்னும் மங்கை நடக்கிறாள்

    என்றெல்லாம் அழகியல் சார்ந்த கற்பனைகளைத் தொடர்ந்து “காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே“ என முத்தாய்ப்பு வைத்திருப்பது இப்பாடலின் வெற்றியைத் தீர்மானிக்கும் புள்ளியாகும்..

    ஓவியத்தைப் ‘பேசாக் கவிதை’ என்றும் கவிதையைப் ‘பேசும் ஓவியம்’ என்றும் சொல்வது மரபு. கண்வழி ரசிக்கப்படும் ஓவியம் மனத்தைக் கிளறுமானால் அங்கே அந்த ஓவியம் கவிதையாகும்! காரணம் கவிதைக்குத்தான் கிளர்ச்சி பண்ணத் தெரியும்! செவிவழி நுகரப்படும் கவிதைச் சித்திரிப்பு மனம் காண  இயலுமாறு படைக்கப்படுமானால் அந்தக் கவிதை ஓவியமாகும். கவிதைச் சித்திரிப்பு என்பது இதுதான்! இவைதாம் புலன் மாற்றிப் போடுவது என்கிறார்கள்

    பெரியவர் கவிஞர் தமிழாசிரியப் பெருமகனார் வங்கனூரார் இசைத் தமிழ்ப் பாடல்களில் நான் வசமிழந்த தருணங்கள் பல.  எண்சீர் விருத்தங்களில் ஆன இட்டளியையும் தோசையையும் மட்டுமே மாறி மாறிச் சாப்பிட்டு வந்த நான் ஏதாவது மாற்று கிடைக்காதா என ஏங்கிய பொழுது எண்ணில் அடங்காது. பொதுவாகக் காதல் பாடுபொருளை நான் விரும்புவதில்லை. காரணம் அதற்கான உணர்வுகள் பாரதிதாசனோடு முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அப்துல்ரகுமானும் மீராவும் கொஞ்சம் உணர்ந்தார்கள் பாடினார்கள்! வைரமுத்து என்னதான் முயன்றிருந்தாலும் அவர் காமத்தையே காதலாகப் பாடினார்! பிற போலிக்கவிஞர்கள் அசைக்கு ஆடை அணிவித்து அழகு பார்த்தார்கள். அவர்களுக்குக் காதலியும் கிட்டவில்லை! கவிதையும் பிடிபடவில்லை!.  இவர்கள் எழுதிய காதல் பாடல்களுக்கு நான் வடித்த கண்ணீர் அரபிக்கடலில் அரைப்பங்கு இருக்கும்!

    காதல் ஒரு நாடகம். இதுபற்றிய இசைத்தமிழ்ப் பாடல்களில் ஒரு நாடகத்தன்மை இருத்தல் வேண்டும் என்பது முன்பே சுட்டப் பெற்றது. தன்மைக்கும் முன்னிலைக்கும் உரியது. படர்க்கைக்கு உரியதன்று. இந்த  அடிப்படையையே பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை!  வங்கனூரார் உணர்ந்து பாடுகிறார்!

    “விழியோடு விழிசேர்க்கவே – நீ
    விளையாடி உடனோடிவா !
    மொழியற்ற மோனத்திலே – ஒளி
    முத்தான கவிபாடிவா !”

    ஒரு மரபுக் கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதைத் தம்மை அறியாமலேயே பதிவிட்டிருக்கிறார் பெரியவர்! மோனைகள் முந்துகின்றன. இயைபு இடையசைவாய் நெளிகின்றன. பாடுபொருள் காதல்! தலைவன் தலைவியை முன்னிறுத்திப் பாடுகிறான். எல்லாமே எளிமை! எனவே கவிதை தூய்மையாகிவிடுகிறது. “எளிமையுடையோர் பேறு பெற்றார்!”

    “எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம்
    இளநெஞ்சம் இணைந்தாடுமே !
    வழிந்தோடும் பெருவெள்ளமாய் – நம்மை
    மயக்கங்கள் வரவேற்குமே !

    “எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம் இளநெஞ்சம் இணைந்தாடுமே !” இந்த வரியை விருதுக் கவிஞன் யாராவது எழுதியிருந்தால் நெஞ்சத்தை இணைந்தாட வைத்திருக்கமாட்டான்!. வேறொன்றை ஆட வைத்திருப்பான்! காரணம் அவனுக்கு மார்பு, இடை, கண், தோடு, தொங்கட்டான் என்னும் இந்த உறுப்புக்களின் அசைவுகள்தாம் காதல்!  “அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” என்பதெல்லாம் பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்ப் போனவை!

    ‘நெஞ்சம்’ என்னும் ஒருமை தாம் என்னும் பன்மை விகுதியாலும் கலந்தன என்னும் பன்மை வினைமுற்றாலும் பன்மையாவது காண்க. சங்க இலக்கிய நுட்பம் இது. புலவன் நெஞ்சங்கள் என்று எழுதவில்லை என்பதை அறிக. கலக்கின்ற நெஞ்சங்கள் இரண்டாயினும் உயிர் ஒன்றாதலின் நெஞ்சத்திற்குப் பன்மை கிடையாது. நம் போலிக் கவிஞர்கள் ‘கண்ணீர்கள்’ என்றும் எழுதுவார்கள். ‘நன்றிகள்’ என்றும் எழுதுவார்கள். ‘தவறாயிற்றே’ என்றால் கடந்து போய் விடுவார்கள்!

    “மயக்கங்கள் வரவேற்குமே” என்பதற்கு உரையில்லை. உரை கூற முடியாது. இயலாது. பாவேந்தர் எழுதுவார் “வாழ்தலும் சாதலும் அற்ற இடம்” என்று. அப்படியோர் இடம் எங்காவது உண்டா? அது போன்றது இது! எண்ணிப் பார்த்து சுவைக்க வேண்டிய தொடர்!

    “தென்காற்றின் அலைதன்னிலே – நீ
    சிரிக்கின்ற மலரல்லவோ ?
    பொன்னூற்றின் இசையாவுமே – உன்
    வளையோசை தனைவெல்லுமோ ?”

    கடலுக்கு அலையுண்டு! காற்றுக்கு அலையுண்டா? உண்டு! எங்கே? வங்கனூரார் கண்ட தலைவன் பாடலில்! காற்றில் சிரிக்கின்ற மலர் என்றால் காற்றில் தள்ளாடும் மலர். காற்றின் அலைகள் காற்றினும் மென்மையானவை. அதில் ஆடும் மலரென்றால் மலரின் மென்மை எப்படி இருந்திருக்கும்? “மலரினும் மெல்லிது காமம்” என்னும் குறட்பா அடிக்கு இது உரையாகலாம்.

    “கருமேகம் உன்கூந்தலோ ? – உயர்
    கலையாவும் உன்சாயலோ ?
    பருவத்துச் செந்தேனெலாம் – உன்
    பார்வைக்குள் குடிவந்ததோ ?”

    ‘அலைகூந்தல்’ ‘நறுங்கூந்தல்’ ‘இருங்கூந்தல்’ ‘வெறுங்கூந்தல்’ என்று கேட்டுப் புரையோடிப் போன காதுகளுக்குக் ‘கருமேகம் உன் கூந்தலோ’ என்னும் ஐயம் இனிமை சேர்ந்தது. உவமையைப் புறந்தள்ளி உருவகத்தை முன்னிறுத்தும் இயற்கையான கவித்துவம் இங்கே வெளிப்படுவதைக் காணலாம்.

    இரட்டுற மொழிதல் என்றால் காளமேகத்தைத்தான் நாடுவார்கள் தமிழ்நாட்டுப் பாடநூற் குழுவினர். தமிழாசிரியர் பலருக்கும் இரட்டுற மொழிதல் என்றால் தெரியாது. சிலேடை என்றால்தான் சிக்கெடுப்பார்கள். “உயர் கலையாவும் உன்சாயலோ ?” உயர்கலை என வினைத்தொகையாகக் கொண்டு கவிதையை அனுபவிப்பது என்பது ஒன்று. கலையைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு அனுபவிப்பது மற்றொன்று. கலை என்பது ஆகுபெயராய் மானினத்தைக் குறிக்கும்.  “மானென அவளைச்சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை” என்பது நாமக்கல் இராமலிங்கம் எழுதிய அடி.

    “மானினமெல்லாம் இவள் சாயல் பெற்றதாம்!”

    எல்லாக் கலைகளிலும் நீயிருக்கிறாய் என்பது ஒரு நோக்கு! கலைமானின் சாயல் உன்னிடம் இருக்கிறதே என்பது மற்றொரு நோக்கு! இதுதான் இரட்டுற மொழிதல். சிலேடை! கவனித்துப் பாருங்கள்! ‘வா’ என்னும் முன்னிலை வினையையும் இயைபாக்கியிருப்பார். ‘ஓ’ ;ஏ’ என்னும் இடைச்சொற்களையும் இயைபாக்கியிருப்பார்! ஒன்றினைப் பற்றிப் பாடுவது கவிதையாகாது. ஒரு அனுபவத்தின் மொழிவழிப் பகிர்வதுதான் கவிதை.

    பாவேந்தரும் வங்கனூர் கவிஞரும்

    வள்ளற்பெருமான் தொடங்கித் தொடர்ந்துவரும் சாதியொழிப்புச் சிந்தனைகள் ஒவ்வொரு படைபபாளருக்கும் பல உத்திககளைச் சிறக்கச் செய்கிறது.

    “சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
    சாத்திரச் சண்டைகளிலு சமயகோத்திரச் சண்டையிலே
    ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
    அலைந்தலைந்து நீவிர் அழிதல் அழகலவே”

    என்று புலம்பினார் வள்ளற்பெருமான். ஒரு சமயவழிப்பட்ட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை ஒழிக்கும் முனைப்பு வள்ளற் பெருமான் பாடலில் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னாலே வந்த பாரதியார் வள்ளற் பெருமானின் அடியொட்டியே சிந்திக்க முடிந்தது, “சாதிகள் இலலையடி பாப்பா!” என்று அவரும் அதனையொழிக்கும் வழியறியாது குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே பாரதிதாசன்தான் சாதியினை ஒழிப்பதற்குச் சரியான வழி கலப்புத் திருமணமே என்னும் தெளிவு பெற்றிருந்தார்.  தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் அரசியல் மற்றும் சமுதாயத் தளத்தில் அதே கொள்கையில் இயங்கினாலும் இலக்கியமாகிய கவிதைத் தளத்தில் பாவேந்தர் காதலைப் பாடுகிறபொழுதெல்லாம் சாதிமறுப்பைப் பாடினார். விதவைத் திருமணத்தைப் பாடினார் “இதயமலர் நீதான் என்னும் இசைப்பாடலில் பாவேந்தரின் சாரத்தையே காணமுடிகிறது,

    “இனக்கொடுமை கடலலைபோல்
    எழுந்துவந்து மோதும் !
    உனது மனம் தாங்கவேண்டும்
    எதுநடந்த போதும் !

    என்மனத்தை உன்மனத்தில்
    சங்கமித்து விட்டேன் !– இனி
    என்னதுன்பம் வந்தபோதும்
    நான்கலங்க மாட்டேன் !

    சாதியற்ற ஓர்உறவைச்
    சமைப்பதற்குக் கண்ணே ! — நல்ல
    பாதையொன்று அமைப்பதென
    உறுதிகொள்வோம் பெண்ணே !

    பெண் : மனிதயினம் காதலுக்கு
    மதிப்பளிக்கும் போது ! — நம்
    புனிதஎண்ணம் வெல்வதற்குத்
    தடைகள் கிடையாது !

    சமுதாயச் சீர்திருத்தத்தில் முதலிடம் வகிபப்து கலப்பு மணம். அந்தக் கலப்புமணத்தை இசைப்பாடலில வைத்துப் பாட முடியும என்பதை நிரூபித்திருக்கிறார் வங்கனூரார்.  விருத்தங்களிலேயே படிந்து வேதனையைத் தின்ற சில இதயங்கள் இது போன்ற இசைப்பாடலகளில் இளைப்பாறுவதும் தமிழ்த்தாயின் அருளே!

    நெஞ்சையள்ளும் கற்பனை

    கவிதை சிறக்கும் காரணிகளுள் கற்பனை தலையாயது. அணிகளெல்லாம் கற்பனைக்குள் அடங்கும். அடக்கம். இந்தக் கற்பனையோடு உத்தி கைகோக்கிறபோது கவிதை கொடிகட்டிப் பறக்கும்.

    “தாமரையின்இதழ்களுக்கு
    நீ கொடுத்தாய் சிவப்பு – வானில்
    தவழும் அந்த முகில்களுக்கு
    உன்கூந்தல் நினைப்பு”

    வெள்ளி நிலா உன்முகத்தைப்
    பார்க்க வரும் அழகு – அந்த
    வேளையிலே நிலவுக்குநீ
    ஒளி கொடுத்துப் பழகு!

    எத்தகைய கற்பனை பார்த்தீர்களா?  ‘கார்கூந்தல்’ என்பதுதான் மரபுவழிச் சிந்தனை.  இவரே அப்படி இன்னொரு இடத்தில் பாடியிருக்கிறார். இந்தச் சிந்தனை வெளிப்பாட்டினை “அந்த முகில்களுக்கு உன் கூந்தல் நினைப்பு” என்று வெளிப்படுத்தும் கவித்துவம் சிறந்த ஒன்று. நிலவுக்கு ஒளிகொடுப்பது கதிரவன் என்பது அறிந்தது. ஆனால் வங்கனூரார் கதிரவன் செய்ய வேண்டிய பணியைக் கன்னியைச் செய்ய வைக்கிறார் தலைவன் மூலம். இதில் நுண்ணியம் என்னவென்றால் பெண்முகத்தை கதிரவனோடு ஒப்பிடுவது மரபன்று. ஆனால் வங்கனூரார் இந்த மரபை மாற்றுகிறார். “ நிலவுக்கு நீ  ஒளி கொடுத்துப் பழகு”! இவள் முகம் நோக்க நிலவு மங்கித் தோன்றுகிறதாம். இது பாரதி கண்ட மரபு. “மங்கியதோர் நிலவினிலே” என்பார் பாரதியார். காதலிக்கு முன்னால் நிலவொளி குன்றும் குறையும். அதுவரை இது மரபுதான். ஆனால் நிலவுக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்கிறபோதுதான் மரபு மீறப்படுகிறது கவிஞனையும் அறியாமல்! இன்னும் சொல்லலாம்! மேகம் நினைக்கிறதாம் இவள் கூந்தல் போல இல்லையே என்று! அஃறிணையை உயர்திணையாக்கிக் கவலைப்பட வைத்த கவித்துவம்!

    எதனைப் பாடினாலும்இசைப்பாடலே!

    இறைவனையும் காதலையும் தாண்டிப் பாடப்பட்ட இசைப்பாடல்கள் தமிழில் எண்ணிக்கையில் குறைவு. ஒட்டு மொத்த சமுதாயக் கருத்துக்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு வந்து அந்தக் குறையை நீககி நிவர்த்தி செய்திருக்கிறார் வங்கனூரார்.

    “உனக்காக என்எழுத்து
    வளையாது ! – அது
    ஒருபோதும் தலைகுனிந்து
    நெளியாது !
    எனக்கான பாதைவிட்டு
    விலகாது ! – எவர்
    எதிர்வரினும் மனக்கூடு
    கலையாது !”

    என்று தன்னிலைக் கொள்கை முழக்கமாகட்டும்

    “கொடுமை விளைக்கின்ற – சாதிக்
    கொள்கையை வேரறுப்போம் !
    அடிமைத் தளையறுத்து – நாட்டில்
    அன்பு பயிர்வளர்ப்போம் !”

    என்று சாதியொழிப்பு, அடிமைத் தளையறுப்பு முதலியவற்றைப் பாடும் போதாகட்டும்

    “வயல்களில் உழவர்
    தமிழிசை கேட்கும் !
    மாடுகள் எல்லாம்
    மணியோசை கூட்டும் !
    மயக்கிடும் வண்ணம்
    குளங்களில் தண்ணீர்
    மாற்றுக் குறையாத
    தங்கமாய் மின்னும் !”
    முகிலெனும் வேலியிட்டு — அதை
    மூடுவ தாரடியோ ?
    அகிலம் நடுங்கிடவே — மின்னல்
    அதிர்வதும் ஏனடியோ ?

    என்னும் இயற்கை வண்ணனையாகட்டும்

    “விண்ணில் நடம்புரியும்
    மின்னல் கொடியதனைப்
    பெண்உன்னில் காணுகின்றேன் !-உயர்
    பண்ணின் இசைஇனிமை
    பாவைஉன் பேச்சினிலே
    பயில்வதைக் கேட்கின்றேன் “

    என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தாகட்டும் எந்தப் பாடுபொருளானாலும் அதனை இசைவடிவமாகவே காணும் பேராற்றலை இயல்பாகப் பெற்றிருக்கிறார் வங்கனூரார். காய்முன் நேரையும் விளம் முன் நேரையும் வேதனைப் பூங்காவிற்குள் நுழைவுச் சீட்டு இல்லாமலேயே விருந்து வைக்கும் எண்சீர் விருத்தங்களும் மட்டுமே சந்தை மயக்கமாக்கப்பட்டிருக்கும் தற்காலத் தமிழ்ககவிதையுலகில் “என் வழி தனி வழி” என்னும் தனித்தடம் கண்டிருக்கிறார் வங்கனூரார். கோனார் குறிப்பேட்டோடு தமிழையும் பணிக்கால்ததையும் முடித்துக் கொள்ளும் தமிழாசிரியர் இடையே தமிழை இந்த எண்பது வயதிலும் ஊன்று கோலாகக் கொண்டு நடப்பவர் வங்கனூரார். விருத்தங்கள் என்னும் விரைவுச் சாப்பாடடையே உண்டு வந்த எனக்கு வங்கனூராரரின்  இசைபபாடல்கள் தந்த சுகம் இளநீர் சுகம்! இதமான சுகம்

    இன்னும் இனித்திருக்கலாம்

    வங்கனூரார் உட்பட இசைப்பாடல்களை எழுதுகிற பலரும் அதன் நுண்ணிய கூறுகளை உள்வாங்காமல் சொல்லினிமைக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது மரபாகிப் போனது, அப்பெருமக்கள் கவனிக்கத் தவறிய நுண்ணியங்களில் ஒன்று அனுபல்லவிக்கும் பல்லவிக்குமான தொடர்பு, சரணத்திற்கும பல்லவிக்குமான தொடர்பு. இந்தக் கட்டுரையின் தொடக்கப்பத்திகளில் குறிக்கப்பட்ட இசைப்பாடலாசிரியர்கள் இதனை நன்கு கையாண்டுள்ளனர். பொன்னையா பிள்ளை எழுதிய இசைப்பாடல் ஒன்று இப்படித் தொடங்குகிறது.

    “தந்தை தாயிருந்தால் உமக்கிந்த
    தாழ்வெலலாம் வருமோ ஐயா

    இந்தப் பல்லவி தனித்து நிற்காது, அனுபல்லவியின் இறுதிச் சொல்லோடு இணைந்து நிற்பதைக் காணலாம். அனுபல்லவி எப்படி அமைந்திருக்கிறது?

    “அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே!
    அருமையுடனே பெற்றுப் பெருமையுடன் வளர்த்த

    என்று அமைகிறது, ‘வளர்த்த’ என்னும் அனுபல்லவியின் பெயரெச்சம், பல்லவியின் தொடக்கத்தோடு இணைக்கப்பட்டுப் பாடுகிறபோது பாட்டின் கனஅளவு கூடுகிறது என்பதை உணரக்கூடும். “வளர்த்த தந்தை தாய் இருந்தால்” என்று இருக்க வேண்டும். இனி சரணத்தின் இறுதிச் சீரும் பல்லவியின் தொடக்கமும் இணைவதைக் காணலாம். எலலாருக்கும் தெரிந்த பாட்டு. சுரதா எழுதியது.

    அமுதும் தேனும் எதற்கு? நீ
    அருகினில் இருக்கையிலே எனக்கு!

    என்னும் பல்லவியின் தொடக்கச் சொல்லைப் பலரும் வெறும ‘அமுது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாரகள் அவர்களில் பலருக்கும் சரணம் தெரியாத காரணத்தால். சரணம் இப்ப்டி அமைந்திருக்கிறது.

    “நிலவின் நிழலோ உன் வதனம்
    புது நிலைக்கண்ணாடியோ?
    மின்னும் கன்னம்
    மலையில் பிறவா மாமணியே நான்
    கொய்யும் கொய்யா… கனியே
    வா! ன் அமுதும் தேனும் எதற்கு?

    சுரதாவின் பாடலை செரித்துக் கொண்ட இசைமணி சீர்காழி “கனியே! வா! என ஒரு நொடியில் நிறுத்தி வானமுதும் எனத் தொடங்கி முடிப்பார். இப்போதும் கேட்கலாம். எனவே பாட்டின் பல்லவி “அமுதும்” என்பதிலிருந்து “வானமுது” என்ற நிலைக்கு உயர்ந்துவிடுகிறது என்பதை அறிந்து சுவைக்கலாம். பொதுவாகப் பல்லவி, அனுபல்லவி, சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இணைந்து பாடப்படுகிறபோது கிட்டும் இனபம் அலாதியானது, இது போன்ற பாட்டுக் கோவை வங்கனூராரிடம் அருகியே காணப்படுகிறது என்பதும் திறனாய்வு நோக்கில் சுட்டப்படுகிறது

    நிறைவுரை

    வங்கனூரார் இசைப்பாடல்களை நான் படித்துப் பாட எத்தனிக்கிறபோது வானத்தில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு. எழுபதுகளில் வானொலி அலைவரிசைகளைத் தம் இசைப்பாடல்களால் வசப்படுத்திய வல்லாளர். இன்று என் இதய சிம்மாசனத்தில் வழிபடு பொருளாகத் திகழ்கின்றார். எவ்வளவு பெரிய வல்லாளர்! எத்தகைய படைப்பாளி! உண்மைத் தமிழும் ஊராண்ட இசையும் இன்றைக்கு வங்கனூரில் முகாமிட்டிருக்கிறது. அவர் மீது எனக்குப் பாசம் உண்டு. அவர் பாடல்களில் எனக்கு நேசம் உண்டு. இறைவனையும் காதலையும் பாடுபொருள்களாகக் கொண்டிருந்த இசைப்பாடல் களத்தில் அனைத்து வகையான பாடுபொருள்களையும் அறிமுகம் செய்து வைத்ததில் வங்கனூர் மோகனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லத் தமிழ் தயாராயிருக்கிறது, “படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்” தொடரில் இதுவரை என் தம்பிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். இந்தக் கட்டுரையில் என் தமையனை வணங்கி நிற்கிறேன் வாழ்த்துக்களை வேண்டி!

    “வங்கனூரார்இசைப் பாடல் சொன்னால் — சொன்ன
    வாயினிக்கும்! அவர் வாழ்வினிக்கும்!
    தெங்கினிக்கும்! மலை தேனினிக்கும்! — தெற்குத்
    செந்தமிழின் இசை சேர்ந்தினிக்கும்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 36

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 36

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய பெருமாட்டி!

    முன்னுரை

    முகநூல் பதிவுகளில் அதாவது கவிதைப் பகுதிகளுள் மூழ்கிக் கிடப்பது இந்த எண்பது வயது முதியவனின் பணி. பணி செய்து கிடந்தவர் திருநாவுக்கரசர். கிடப்பதையே பணியாகக் கொண்டவன் நான். முகநூல் கவிதைப் பகுதிகள் சிறப்பதற்கான காரணிகளுள் அவற்றுக்கு அளிக்கப்படும்; பின்னூட்டங்களே தலையாயது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. படைப்பாளனுக்கு அது உத்வேகத்தைக் கொடுக்கிறது, இன்னும் படைக்க வேண்டும் என்னும் பேராவலைத் தூண்டுகிறது, எதிர்மறையாக நோக்கினால் தனது பிழைகளை அறிந்து திருத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு. படைப்பாளனுக்குக் கிட்டுகிறது. நடைமுறை அப்படியில்லை. பின்னூட்டங்களைக் கடந்து போய்விடுகிற பெருங்கவிஞர்களும்  ‘அருமை’ ‘வாழ்த்துக்கள்’ ‘செம’ என்னும் பொருளற்ற சொற்களால் போடப்படும் பொருளற்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையிலேயே பிறவிப்பயனை அடைந்துவிடும் படைப்பாளர்களும் நிரம்பி வழிகிறது. இன்றைய முகநூலுக்குஇது ஒரு ‘களைவளர்’ காலமே  படைப்பினைச் சுவைத்து மகிழ்ந்து இடப்படும் பின்னூட்டங்கள் ஒரு சில நேரங்களில் அரிய இலக்கியமாகவே மாறிவிட முடியும் என்பதை நான் அறிந்து கொள்ளும் சூழல் வந்தது. அந்தச் சூழல் எது என்பதையும் அதற்குக் காரணமானவர் யார் என்பதையும் பின்னூட்டத்தை இலக்கியமாக்கிய அந்தப் பெருமாட்டியின் பெருமை பற்றியும் இந்தச் சிறிய கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    அந்தச் சூழல்

    ‘வல்லமை’யால் அறிமுகம் செய்யப்பட்டுப் பெருமை பெற்ற கவிஞர்கள் சிலருள் மாதவரம் கவிக்கோ துரை வசந்தராசனும் ஒருவர். ‘காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசையில் ஒளிந்து கிடந்த’ அவரை ‘வல்லமை அறிமுகம் செய்தது. தொடர்ந்து அவரைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியும் வருகிறது, போலிப் புகழ்ச்சியில் மயங்கிக்; கிடந்த அவருக்குப் பொருள் சேர்புகழ்த் தடத்தினைக் காட்டிய பெருமை வல்லமைக்கு உண்டு. ஆற்றல் மிகு படைப்பாளர். கவிதையைக் கவிதையாகவே கட்டமைக்கத் தெரிந்தவர். கவிதை மாதிரி எழுதத் தெரியாதவர். வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட அவர் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளிவரச் செய்திருக்கிறார். அந்த நூல்களில் ஒன்றுதான் ‘தற்பாவை’ என்பதாகும். தன்னையே பாட்டுடைத் தலைவனாக்கிப் படைத்திருக்கும் அந்தப் பாவை இலக்கியம் தமிழ்க்கவிதையிலக்கிய வரலாற்றில் புதுத்தடம் காட்டியது,  அதே நேரத்தில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கமும் அந்த முப்பது பாடல்களிலும் இழைந்தது, அந்த இலக்கியம் முகநூலில் வெளிவந்தபோது அதற்கு அளிக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்றுதான் திருமதி கிருட்டிணதிலகா அவர்கள் எழுதிய அம்மானை இலக்கியமாகும்.

    கிருட்டிண திலகாவும் வசந்தராசன் அம்மானையும்

    கிருட்டிணதிலகா முறையாகத் தமிழ் படித்தவர். (இனி இந்தக் கட்டுரையில் அவர் ‘திலகம்’’ என்றே அறியப்படுவார்) அறிவார்ந்த பட்டங்களை உண்மையான பல்கலைக் கழகங்களில் பெற்றவர். யாப்பிலக்கணப் பயிற்சியும் கவிதையுள்ளமும் இயல்பாகவே அமையப் பெற்றவர். வாழ்க்கைக் கவலைகளில் இவர் விட்ட பெருமூச்சுக்களால் கவிழ்ந்துபோன கப்பல்கள் எண்ணிக்கையில் அடங்கா. ‘துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை’ எனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வினைகள் இரண்டு. ஒன்று இறைப்பணி. இரண்டு கவிதைப் பணி. கவிதைப் பணி என்றாலும் அதனை ஓர் உள்ளுணர்வு தூண்டவே எழுதிவருகிறார் என்பதற்கு அவருடைய கவிதைகளே சான்று. இவர் கலந்து கொள்ளாத கவியரங்குகள் களையிழந்து நிற்கும். பேசாத பட்டிமன்றங்கள் அஞ்சலிக் கூட்டங்களாய் அமைதியாகும். எவ்வளவோ சொல்லலாம். அத்தகைய சிறப்புக்களைத் தனியுடைமையாகக் கொண்ட திலகம், வசந்தராசன் எழுதிய தற்பாவைக்கு எழுதிய பின்னூட்டத்திற்குப் பெயர் ‘வசந்தராசன் அம்மானை’ என்பதாகும். இது வசந்தராசன் படைப்புக் கிட்டிய பாராட்டு!

    பின்னூட்டப் பதிவுகளில் திலகம் பெறுமிடம்

    பொதுவாகப் பின்னூட்டம் என்பது நட்பு கருதி இடப்படும் கடமை வெளிப்பாடு. விரல் விட்டு எண்ணக் கூடிய அன்பர்களே படைப்பினை உள்வாங்கிச் சுவைத்து நல்ல வரிகளில் ஒன்றிரண்டைச் சுட்டித் தங்கள் சுவைத்திறனை வெளிப்படுத்துவார்கள். வழக்கமான இந்த நடைமுறையை வசந்தராசனின் தற்பாவை முரியடித்திருக்கிறது. அவருடைய பழைய பதிவுகளை நான் நோக்கியபோது தற்பாவை இலக்கியத்திற்குத் தனியாகச் சிலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள் பின்னூட்டம் என்ற பெயரில்! திருமதி திலகம்ம அவர்கள் அம்மானை பாடியும் பாவலர் தென்பசியார் பாவைக்குப் பாவை பாடியும், திரு முருகுபாண்டியன்  வெண்பாக்களாலும் தாரமங்கலம் முத்துசாமி (இவரும் வல்லமையால் அறிமுகம் செய்யப்பட்ட கவிஞர்) கலிவிருத்தத்தாலும்  தங்கள்  பின்னூட்டங்களைக் கவியால் அணி செய்திருந்தனர். அன்பர் திரு செந்தில் குமார் ஒரு அரிய ஆய்வுக்கட்டுரையையே பின்னூட்டமாக இட்டிருந்தார்.

    ஒரு பதிவைப் படிப்பதே பெரிது. அதுவும பொருளுணர்ந்து படிப்பது அதனினும் பெரிது, ஓரசையில் பின்னூட்டம் இடுவதற்குப் பல மணிநேரக் காத்திருப்பு என்ற நடப்பியல் சூழலில்  ஒரு இலக்கியத்தையே பின்னூட்டமாகப் படைக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் பரந்த மனப்பான்மை வேண்டும்! சுவைத்திறன் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட ‘வயிற்றெரிச்சல்’ என்னும் அழுக்காறு இருக்கவே கூடாது, வசந்தராசனின் தற்பாவை இலக்கியத்திற்குக் கிட்டியிருக்கும் பின்னூட்டப் பதிவுகள் எண்ணிக்கையால் அல்ல இதயத்தால் அளக்கப்படுகின்றன. “என் பதிவுக்கு இன்று இருநூறு விருப்பக் குறியீடுகள் வந்தன” என்று வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகின்றவர்கள் நிரலில் வசந்தராசன் அடங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.

    இந்தப் பின்புலத்தில்தான் திலகத்தின் அம்மானைப் பின்னூட்டம் என்னைக் கவரந்தது. கவர்ந்தது என்பதைவிட, ‘ஈர்த்தது’ (FASCINATED) என்பதுதான் பொருத்தமாக இருக்கும்  ‘நான் கவர்ந்து கொண்டேன்’ என்று எழுதலாம். ‘நான் ஈர்த்துக் கொண்டேன்’ என்று எழுத முடியாது. காரணம் அந்தச் சொல் செயப்பாட்டு வினைக்கு மட்டுமே வரும். அதனால் நான் கவரப்பட்டேன் ஈரக்கப்பட்டேன் என்பதுதான் சரி. அதனால்தான் சம்பந்தர் பாடுகிறபோது என் ‘உள்ளங்கவர் கள்வன்’ என்று இறைவனின் வினையாகக் கூறுகிறார். அதாவது கவர்தல் என்ற சொல்லை ‘ஈர்த்தல்’ என்ற பொருளில் கையாள்கிறார். இறைவனை நாம் ஈரக்க முடியாது. அவன் நம்மை ஈர்ப்பான். அவனால் நாம் ஈர்க்கப்பட வேண்டும்.

    மரபார்ந்த ஒரு இலக்கிய வடிவத்தைப் பற்றிய முழுமையான புரிதல் அவரிடம் இருந்திருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் இலக்கிய உத்தியினை அவர் அறிந்திருக்கிறார். கொச்சகக்கலி பற்றிய யாப்பறி புலமையில் தெளிவு பெற்றிருக்கிறார். அம்மானையின் அடியளவு பற்றித் தெரிந்திருக்கிறது.  ஒரு பின்னூட்டத்தை இலக்கியமாகச் செய்தால் என்ன? என்கிற புதுமை நோக்கும் இருந்திருக்கிறது. அந்தப் புதுமையைத் தம்மையொத்த ஒரு படைப்பாளனுக்குச் செய்தால் என்ன பரந்த மனப்பான்மையும் கொண்டிருக்கிறார். தற்பாவைக்கு ஒரு மாற்று இலக்கியமாகவே வசந்தராசன் அம்மானையைப் பாடியிருக்கிறார்.

    அம்மானைப் பாடல்கள் ஒரு சுருக்க விளக்கம்

    பொதுவாக என்னுடைய கட்டுரைகளில் கட்டுரைப் பொருளைப் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் விளக்கம் இடம் பெறச்செய்வதை ஒரு திறனாய்வுக் கொள்கையாக வைத்திருக்கிறேன். அதாவது வசந்ததராசன் அம்மானை பற்றியும் திலகம் பற்றியும் எழுதுகிறபோது அம்மானை பற்றிய புரிதலையும் நான் என் கவனத்திற் கொள்கிறேன். கட்டுரையின் மையப் பொருளுக்குத் தொய்வு தரும் செயலாக இருந்தாலும் இதனை ஒரு இலக்கிய வரலாற்று அறிமுகப் பணியாகவே செய்து வருகிறேன். தற்பாவைக்கு நான் எழுதிய கடடுரையிலும் பாவை இலக்கியம் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்திருக்கிறேன். பாவைக்குத் திலகம் பாடிவைத்த அம்மானையின் வரலாறு பற்றிக் கொஞ்சம் இங்கே சிந்தித்திருக்கிறேன்.

    அம்மானை வந்த கதை

    அம்மானைப் பற்றிய குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வள்ளைப்பாட்டு பற்றிய குறிப்புக்கள் கலித்தொகையில் காணப்படுகிறது, இதற்கும் அம்மானைப்பாட்டுக்கும் தொடர்பில்லையெனினும் மகளிர் விளையாட்டு என்பதிலும் நாட்டார் வழக்கு என்பதிலும் ஒற்றுமைப்படலாம். அம்மானைப் பாட்டுக்கு ‘அம்மானை வரி’ என்றும் ‘பல்வரிக் கூத்து’ என்றும் பெயர் வழக்கு உண்டு, நாடோடிப் பாடல்களை ‘வரிப்பாடலகள்’ என்பதும் தமிழ் மரபே.

    “பவள உலக்கை கையால் பற்றித்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    தவள முத்தம் குறுவாள் செங்கண்
    குவளை அல்ல கொடிய! கொடிய!”

    “சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!
    ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்!”

    “பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசை பாடக்
    காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி
    காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
    நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி.”

    என்னும் சிலப்பதிகார வரிகள் ஓரு உண்மையை நமக்குக் காட்டுகின்றன. அதாவது வரிகள் மடங்கிவரும் தொடைப்பாங்கு தமிழ்க்கவிதைகளில் தொன்றுதொட்டு அமைந்து வந்திருக்கிறது என்பதுதான். மேலே சொன்ன வரியையே அனுவதித்துச் சொல்லுகிற போக்கு அம்மானைக்குத் தொடக்கமாக இருந்திருக்கலாம். முந்தைய அடி ஒரு ஐயத்தைக் கிளப்புவதாகவும் அடுத்த அடி அந்த ஐயத்தைப் போக்கும் விளக்கமாகவும் விடையாகவும் அமைகின்ற போக்கு இருந்திருக்கிறது..  அம்மானைப் பாடல்களின் எழுபத்தைந்து விழுக்காடு திருந்திய வடிவம் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் வந்துள்ளதைக் காணமுடிகிறது. சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழைப் பாடுவதாக அம்மானை வரிப் பாடல்கள் நான்கு உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை ஆடும்போது, ஒரு பெண் ஒரு வினாவைத் தொடுப்பதும்  மற்றொருத்தி அதற்கு விடையிறுப்பதும், மூன்றாமவள் சோழன் புகார் நகரைப் பாடும்படி சொல்வதுமாக அந்தப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    “கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக்
    காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச்
    சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து
    மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை?
    மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை?

    காவியத்தின் பின்பகுதிச் சுருக்கத்தைச் சிலப்பதிகாரம் வாழ்த்துப் பகுதியில் அமைந்துள்ள இந்த அம்மானைப் பாடல் காட்டுகிறது.  மேலும் இதில் ‘அன்னை’ என்ற வழக்கே காணப்படுவதன்றி ‘அம்மானை’ என்னும் வழக்கு பயின்று வந்ததாகத் தெரியவில்லை. அம்மானைப் பருவப் பாடல்களைப்  பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்த வகையில் பெண்பாற் பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் எட்டாம் பருவமாக அமைப்பர். சிலம்பிற்குப் பின்னாலே தமிழ்ப் பிரபந்த வகையுள் ஒன்றாகிய கலம்பகத்தில் அம்மானை என்ற உறுப்பு ஒன்று உண்டு. இந்த வகையில்  புலவர்கள்  சிலர் தனித்தனியே பல அம்மானைப் பாடல்கள் பாடினார்கள்.

    மூவர் அம்மானை

    இரட்டையர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் முதலிய புலவர்கள் ஈற்றடியில் சிலேடை நயம் அமைய அம்மானைப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அத்தகைய பாடல்களையெல்லாம் தொகுத்தமைத்து, ‘மூவர் அம்மானை’ என்ற பெயருடன் ஒரு திரட்டு நூல் வழங்குகிறது. மூன்று பெண்கள் பாடுவதாக இருப்பதனால், அதற்கு மூவர் அம்மானை என்ற பெயர் வந்தது. அதில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றியனவே. சிலப்பதிகாரத்தில் வரும் அம்மானை வரியும், கலம்பகங்களிலும் மூவரம்மானையிலும் வரும் பாடல்களும் கலித்தாழிசை என்னும் பாவினத்தால் அமைந்தவை; தரவு கொச்சகமாகவும் கொள்ளலாம். ‘அம்மானை’ என்று முடியும் மூன்று தொடர்கள் ஒவ்வொரு பாடலிலும் உள்ளன.  .

    வினா விடை கட்டுப்பாடு

    பொதுவாக அம்மானை என்றால் ஒருவர் வினவ மற்றொருவர் வடையிறுப்பதாக அமையும் என்பது நமது பொதுபுத்தியில் பதிந்து போன பொய். மூவர் ஆடாமல் ஒரு பெண்ணே ஆடுவதாகவும் அமைந்த பாடல்கள் உண்டு. திருவாசகத்தில் உள்ள திருவம்மானை என்ற பகுதியிலுள்ள இருபது செய்யுட்களும் இத்தகையனவே. ‘அம்மானாய்’ என்ற முடிவையுடையது  ஒவ்வொரு பாட்டும் ஆறு அடிகளையுடைய தரவு கொச்சகக் கலிப்பாவாகும். இவற்றையன்றி நாடோடிப் பாடல்களில் கதையைத் தழுவி வரும் நெடும்பாடல்கள் பல அம்மானை என்ற பெயரோடு வழங்கி வருகின்றன. புகழேந்திப் புலவர் சோழனால் சிறைப்பட்டிருந்தபோது அல்லியரசாணி மாலை பாடியதாக வழக்கமான ஒரு கதை தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது. அல்லியரசாணி மாலை, பவளக்கொடி மாலை என்பன போன்ற எல்லாக் கதைப் பாட்டுக்களும் அம்மானைப் பாட்டைச் சார்ந்தனவே. அவற்றிற் சில பாட்டுக்களுக்கு ‘அம்மானை’ என்ற பெயரே அமைந்துள்ளது. கள்ளழகர் அம்மானை, வைகுந்த அம்மானை என்பன போல!

    அம்மானை ஒரு மகளிர் விளையாட்டு

    நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு ஊசல், அம்மானை முதலிய விளையாட்டுக்களை பிழையாக ஆடினாலும் என் மகள் நந்திவர்மன் மார்பை அணிசெய்யும் மாலை பாட மறவாளே என்று செவிலி புலம்புவதுபோல் அமைந்த பாட்டு அது.

    “ஊசல் மறந்தாலும், ஒண்கழல் அம்மானை
    வீசல் மறந்தாலும், மெல்லியல் என்பேதை
    பூசல் இலங்கிலை வேல் பொற்கழல் நந்திநின்
    பாசிலை அந்தொண்டை அல்லது பாடாளே’.

    மரபு மாமணிகளே! இதுதான் மரபுக்கவிதை! இந்த நீண்ட நெடிய விளக்கம் எதற்காகத் தேவைப்படுகிறது என்றால் திலகம் எத்தகைய சிறந்ததொரு மரபுக்கவிதை வடிவத்தை இலக்கியமாக்கியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.  இது அவ்வளவு எளிதான பணியன்று. வல்லாரக்கே கைந்த கலை!

    மரபுக்கவிஞர்களில் திலகத்தின் இடம்!

    முகநூலில் பதிவாகும் கவிதைகளை அவை எந்த வடிவத்தில் எந்த பொருண்மை பற்றிதாக இருந்தாலும் என் பார்வைக்கு வராமல் போவதில்லை. அவற்றுள் என்னைக் கரைக்கின்ற பாடல்களோடு நான் கரைந்து போகிறேன் அப்படிக் கரைக்கின்ற பாடல்களை எழுதுகின்ற அன்பர்களில் தம்பி விக்டர்தாஸ், தம்பி வசந்தராசன் ஆகியோர் என் இதயத்தின் இடவலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரகள். தம்பி மீனாட்சிசுந்தரம், தம்பி முருகானந்தம் தம்பி முத்துசாமி ஆகியோர் இனமான மொழியுணர்வை என் குருதிக்குள் வற்றாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரகள்.  ஆய்வை முடித்தவர்களுக்கு மட்டுமன்று ஆய்வுத் தரவுகளுக்காக உழைப்பவர்களும் முனைவர்ப் பட்டத்திற்குத் தகுதியானவர்களே என்பது அறிஞர் தமிழண்ணலின் கருத்து, முன்னவர் இருவரும் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள். பிந்தய மூவரும் தரவுகளைச் சேகரிக்கும் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருப்ப்வர்கள்.

    இவர்கள் அனைவருமே முனைப்பு அறியாதவர்கள். தங்களுக்கு முன்னாலே கவிதை நடை பயின்ற கவிவேழங்களை எப்போதும் கருத்தில் வைத்துக் கவிதை நெய்வதால் .ஆணவம் இவர்களைக் கண்டு அஞ்சி ஓடிவிடுகிறது. தங்கை திலகத்தின் தனித்தன்மையை நான் அறியேன். தம்பி வசந்தராசன் சொலலித்தான் அவர்களைப் பற்றித் தெரியும். ஆனால் வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குத் திலகம் எழுதிய பின்னூட்டத்தால் அவரைப் பற்றி உசாவியது நான்தான். அந்தக் கவிதைப் பின்னூட்டத்தைப் பாரத்தபின் என் மனத்துள் வந்த எண்ணம் இதுதான்! திலகம் தம் கவிதைப் பயணத்தில் பல சாதனைகளைச் செய்திருக்க வேண்டுமே! என்ன ஏமாற்றம்? அவரும் பட்டங்களுக்காகவும் பட்டங்களுக்காகவும் விருதுகளுக்காகவும் ஏங்கிய ஒரு சராசரி கவிஞராகவே வாழ்ந்து முடிந்திருக்கிறார் என்பது காலத்தின் சோகம் இந்த வகையில் தம்பி விக்டர்தாஸ் கொஞ்சம் மாறுபட்டவராக என் கண்களுக்குத் தெரிகிறார். அவருடைய கவிதைகள் அவற்றின் ரசிகர்களை இந்த முகநூலில் தாழ்வாரத்தில் தேடிக் களைத்துப போய்விட்டன. அரிய கருத்து. எளிய சொற்கள். அழகியல் சார்ந்த கற்பனைகள், .எளிதில் யாராலும் கையாளமுடியாத சொல்லாட்சிகள் வழக்கு சார்ந்த வடிவங்கள் இவைகள் எல்லாம் விக்டர்தாஸிற்கு கைவந்த கலை. போகிற போக்கில் கவிநெய்யும் சிலருள் ஒருவர்., சிறந்தவர். அந்த நிலையை என் தங்கை திலகா எட்டுவதற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பத்தியில் கண்ட கருத்துக்கள் எல்லாம் என்னுடையவை. இது என் பார்வை. பிறருக்காக என்பார்வையை நான் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.

    தற்பார்வை பின்னூட்டமும் திலகாவும்

    இந்தப் பின்புலத்தில்தான் தற்பாவை இலக்கியத்திற்குத் திலகம் எழுதிய ஒன்றிரண்டு பாடல் வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டுவது என் கடமைகளில் ஒன்றாகிறது. நல்ல மரபுக்கவிஞர்களாக வரவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் சிவபுராணம். திருவம்மானை, திருச்சாழல், திருவெம்பாவை, திருப்பாவை பெருமாள் திருமொழி, பாவேந்தர் கவிதைகள் பொன்னிவளவன் கவிதைகள், சுரதாவின் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் முருகுசுந்தரத்தின கவிதைகள் வசந்தராசன் கவிதைகள், விகடர்தாஸின் கவிதைகள் முதலியவற்றில் சில நூறு வரிகளையாவது மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கவிதை எழுதவே தெரியாத எனக்கு இவர்களிடமிருந்து தலா நு{று வரிகளாகவது தெரியும்.. தொடைவிகற்பங்களுக்குச் சொற்பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்கும்  உத்திகள் தாமாக வந்து உதவி செய்வதற்கும் இதுதான் வழி.

    தற்பாவையைப் பாராட்டும் தமிழ்த் திலகம்!

    எட்டடிக் கொச்சகத்தில் பாடியிருக்கிறார் வசந்தராசன். ஒப்புமை பற்றி வந்த ஐந்தடிக் கொச்சகத்தால் அவரைப் பாடியிருக்கிறார் திலகம்.. அவரைப் பாடியிருக்கிறார் என்றால் அவர் கவிதைகளைப் பாடியிருக்கிறார் பண்புக்காக வசந்தராசனைப் பாடியிருக்கிறார்.

    “மாதவரம் பால்பண்ணை மாதவத்தால பெற்ற வரம்!
    ஆதவனாய் நற்றமிழை ஆக்குவர்யார் அமமானை?
    சாதனையால் வாழ்வைச் சரித்திரமாய் மாற்ற
    பேதமறி யாக்கவிதான் பேர்சொல்வேன் அம்மானை!
    தீதறியாத் தேன்கவி நம் வசந்தன் அம்மானை!!”

    முதன்மைப் பதிவு  ஒரு தனி இலக்கியம் என்றால் பின்னூட்டமும் ஒரு தனி இலக்கியமாக அமைந்திருக்கிறது. இது பின்னூட்டக்காரரின் ரசிகத்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கவிதைச்சுவையுணர்வு ஆற்றலையும ஒருங்கே காட்டும் கண்ணாடியாம். ‘மாற்ற’ என்னும் எதிர்கால வினையெச்சம் வசந்தராசனும் இன்னும் சரித்திரமாய் மாறவில்லை என்பதையே காட்டுகிறது. விரைவில் வரலாறாய் மாறும் வசந்தராசனின் கவிதைப் பயணம்!

    நான் முதன்முதலில் வசந்தராசனின் கவிதைகளில் ஆழந்தபோது அவரது நடை அதாவது வழக்கமான எண்சீர் விருத்தங்களின் நடை எனக்குப் பொன்னிவளவனை நினைவூட்டியது, எண்சீர் விருத்தங்களில் நிரல்படும் வாய்பாடுகளை விட அறுத்துக் கட்டும் வாய்பாடுகள் சுவையுடையவை. அந்த வகையில் பாவேந்தருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பொன்னிவளவன்.  அவர் நீதிமன்றத்தின் வழங்கிய விருத்த வாக்குமூலம் இதனை உறுதி செய்யும். “மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞசுரத்தால் பார்மிசையில் இவரைப் போல் பாரத்ததுண்டா அம்மானை? என்னும் வினாவிற்கு விடையாக

    “வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்
    பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அமமானை!”

    என்று எழுதுகிறார் திலகம். கவிஞர்களும் மனிதர்களே! எனவே அவர்கள் கவிஞராய்; இருப்பதற்கு முன்னால் மனிதராக இருக்க வேண்டும்.  மனிதனுக்கு இருக்கக் கூடாத அல்லது அவனைத் தாழ்த்தக்கூடிய எதிர்மறைப் பண்புகள் தேங்கி நாறும் குப்பைத் தொட்டியாக அவன் மனம் மாறிவிடக் கூடாது, மானுடச் சாதியை ஆட்டிவைப்போன் மாசடைந்தால் எப்படி? “பேதமறியாக் கவி’ மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சம் என்றெல்லாம் நூலாசிரியரின் பண்பு நலன்களை முன்னிறுத்துவதைக் காணமுடிகிறது.

    பாவலனைப் பாடுவதும் படைப்பைப் பாடுவதும் ஒன்றா?

    பாவை இலக்கியத்தின பாடுபொருள் பலவாகும். ஆனால் அம்மானை இலக்கியத்தின் பாடுபொருள் ஒருவனே. மனிதனைப் பாடுவது கவிதையாகுமா எனின் ஆகாது என்பதுதான் விடை. ஆனால் அந்த மனிதனைப் பாடுகிறபோதே அவனைப் பாடுதற்கான காரணத்தைப் பாடுகிறபோது பாடுபொருளின் பரிமாணம் இன்னும் விரிவடைவதைக் காணலாம். வசந்தராசனைப் பாடி என்ன ஆகப்போகிறது திலகத்திற்கு? அவர் கவிதையைப் பாடுவதால் அவரைப் பாடுகிறார். அவரைப் பாடுவதால் அவர் கவிதையைப் பாடுகிறார்.

    வசந்தராசன் அம்மானையில் தொடை விகற்பங்கள்

    மரபுக்கவிஞர்கள் எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொள்வார் பலர் யாப்பில் செலுத்திய கவனத்தைத் தொடை விகற்பங்களில் செலுத்தியிருக்கிறார்களா என்றால் எதிர்மறை விடையைத்தான் நான் காண்கிறேன். மரபுக்கவிதை என்கிறார்கள். ஆனால்  நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டாமா? அவை தம் கவிதையுள் அமைந்துள்ள பாங்கினை வெளிப்படுத்த வேண்டாமா? அவையெல்லாம் மரபின் கூறுகள் அல்லவா? திறனாய்வு செய்கின்ற அல்லது படைப்பாளர்களைப் பாராட்டுகின்ற அன்பர்கள் அத்தகைய தொடைவிகற்பக் கூறுகளையும அவைதரும் இன்பத்தையும் எடுத்துரைக்க வேண்டாமா? தமிழ்க் கவிதைக் கடடுமானத்தில் அவற்றின் பங்குதான் என்ன? என்பது தெரியாமலேயே போய்விடலாமா? திலகம் பாடியிருக்கும் இந்தப் பின்னூட்ட அம்மானையில் தொடையழகு சொல்லி மாளாது,

    “மார்கழியின் நுண்துளியாய் மாசடையா நெஞ்சுரத்தால்
    பாரமிசையே ஈங்கிவர் போல் பாரத்ததுண்டோ அம்மானை?
    வேர்விடும் சொல்யாவும் வெம்பகையை வேரறுக்கும்!
    பார்காணும் இன்னுமோர் பாவேந்தர் அம்மானை!
    காரிடி தோன்றும் கவிக்கோயில் அம்மானை!”

    என்னும் பாடல் முழுவதும் பொழிப்பு மோனையால் பொலிவு பெறுவதைச் சொல்லுவேனா?

    “கண்ட கனியமுது கற்கண்டு கள்ளுறறு”

    “நாதமாய் நற்றமிழை நாளும நாடுவாரே”

    “வாசகர் வட்டம் வளைய வருவதால்”

    என்றெல்லாம் எழுதிக்காட்டும் முற்றுமோனையை விட்டுவிடலாமா?

    ‘ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றுக்குள் பலவிருக்கும்’
    நன்றென்றே நற்பொருளை நல்குவர்யார் அம்மானை?
    என்றென்றும் ஏற்றிடுவார் எந்தமிழை சொற்றிறத்தால்
    சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்தான் அம்மானை!
    வாழ்வாங்கு வாழ வசந்தராசன் அம்மானை!

    பாடல் முழுவதும் கூழை மோனை பயின்று வந்துள்ளதை நான் வியப்புடன் நோக்க வேண்டாமா? ”சிற்றில் நற்றூண் பற்றி” என கூழை எதுகையைச் சங்க இலக்கியத்தில் படித்தவன் நான்.

    இதயம் கவர்ந்த தரவுகள்

    தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புக்களையும் பெற்றுவருவது கலிப்பா. பலவகையாக் பிரிந்திசைக்கும் கலிப்பாவில் கொச்சகக்கலி என்பதும் ஒன்று. அது ஐந்து வகைப்படும். அவற்றுள் ஒன்று தரவு கொச்சகக்கலிப்பா. அந்தப் பாவகையில்தான் பாவை மற்றும் அம்மானை இலக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.  தரவுகள் மூன்றடிச் சிறுமையாகவும் பதிமூன்றடிப் பெருமையாகவும் அமைக்கப்படுவதால் அவற்றுள் எதுகை, எதுகையாக இலலாமல் வேறு வகையாக அமையும். விகற்பம் என்பது மாறுபாடு. அதற்கு இரண்டு அடிகள் வேண்டும். ஒரு மூன்றடித் தரவில் இரண்டு விகற்பம் என்பது சுவை குன்றும். அது ஒரே விகற்பமாக அமைதல் வேண்டும். இதனைத்தான் ஒப்புமை என்ற சொல்லால் சான்றோர் வழங்கினார். திருவம்மானைப் பதிகத்தில் பார்த்தால் ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவு கொச்சகக்கலிப்பா என்றுதான் இருக்கும். எனவே தரவு கொச்சகக் கலிப்பாக்களில் ஒரே எதுகைதான் நிற்கும் (உண்மையில் இது எதுகை அன்று – ஒப்புமை)

    “திண்ணைத் திருடர்கள் தீய்க்கின்ற பாட்டாளன்!
    எணணம் போல் பாடும் எரிமலை யார் அம்மானை?
    விண்ணப்பம் செய்து விருதுபெறாத் தீரனிவர்!
    விண்ணெ எதிர்த்தாலும் வீழாரே அம்மானை!
    பண்ணைத் தமிழ்ச்சங்க பாக்கடலே அம்மமானை!

    இது மடடுமன்று இந்த அம்மானையில் உளள பெரும்பாலான ஒப்புமை பற்றி வந்த ஐந்தடித் தரவுகளே! இந்தத் தரவுகள் தமிழ்த்தாகம் தணிக்கும் தரவுகள். மரபு இன்னும் மாய்ந்துவிடவில்லை என்னும் நம்பிக்கை நட்சத்திரங்கள்

    சிந்தை குடிகொண்ட செந்தமிழ்த் தொடர்கள்

    “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்பது சிலப்பதிகாரம் தமிழுக்குத் தந்த சீதனத் தொடர். ஒரு மாபெரும் காவியத்தின் மூலமே அந்தத் தொடரில் ஒளிந்து கொண்டிருக்கிறது, ‘இப்படைத் தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” என்று சுநதரம் பிள்ளை தமிழுக்குத் தந்த தொடர் தமிழின் வீரகாவியங்களையெலலாம் தொகுத்துச் சொன்ன சதுரப்பாடு. அதுபோலத் திலகம் தந்திருக்கும் சில தொடர்கள் காலங்கடந்து நிற்கும். நிற்க வேண்டும்.

    1. மின்னல் வரியெடுக்கும் மேகம்”
    2. பொன்புதையல் வேணடாத புத்தர்”
    3. ஏசப் பிறந்தார் எவருமிலர்”
    4. விற்பனைக்கு வாராத வீராப்பு”
    5. பண்ணைத் தமிழ்ச் சங்கம் பாவலரின் தாய்வீடு”
    6. சந்தனத் தென்றலைச் சந்தத்தில் தந்திடுவார்
    7. தீயேந்தும் பாட்டெல்லாம் தெள்ளமுது”
    8. “புத்துணர்வுத் தாள்பாடிப் பூக்களையும் தான்பேசி”
    9. “நாவேந்தி நாத்திகமும் நற்றிமிழில் பாடிடுவார்”
    10. கண்ட கனியமுது! கற்பனையின் கள்ளூற்று!
    11. ஒன்றுக்குள் ஒன்றிருக்கும் ஒன்றில் பலவிருக்கும்”
    12. சூழ்காற்றைச் சூடேற்றும் சூரியன்”
    13. “ஊற்றாகும் கந்தகத்தின் உள்ளம்”
    14. “செங்கவியாய்ச் சீர் தூக்கச் செந்தமிழும் சேர்ந்துழைக்க”
    15. “பாமகளின கைப்பொருளாய்ப் பாவடிப்பார்”

    ஒரு இலக்கியம் வெற்றி பெறுவதற்கு இத்தகைய தொடர்கள் போதாவா? சொல்லிப் பாருங்கள்!  சொர்க்கம் அருகில் வரும்!

    அலைவரிசைக் கவிஞர்கள்

    உள்ளங்கவர்ந்த ஒரு கவிதையின் கட்டுமானமும் உள்ளடக்கமும் உணர்ச்சியும் கற்பனையும் உத்தியும் சொற்பயன்பாடும் தொடர்ந்து மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருமானால் அதுதான் மரபுக்கவிதை.  மரபின் தொடர்ச்சி என்பது யாப்பின் தொடர்ச்சி என்பதல்ல. அது அரைகுறையான கருதுகோள். ஆய்ச்சியர் குரவையில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது,

    பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்,
    விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

    பெண்களெல்லாம் இணைந்து குழுப்பாட்டு பாடுகிறார்கள். இந்தக் குழுப்பாட்டு இடைமடக்காய் அமைந்துள்ளது. பெரியவன், மாயவன், விண்ணவன், கரியவன் என்றெல்லாம் பெருமாளாகிய திருமாலைப் பாடுகிறார்கள். இந்தப் பாட்டின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டோ இயல்பாகவோ மணிவாசகப் பெருமான் பாடுகிறார்

    ஓயாதே உள்குவார்  உள்ளிருக்கும் உள்ளானை
    சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
    நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
    தாயான தத்துவனைத் தானே உலகேழும்
    ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்!

    உள்ளிருக்கும் உள்ளான், சேயான், சேவகன், தென்னன், பெருந்துறையில் மேயான், வேதியன், மாதிருக்கும் பாதியன், நாயகன், தத்துவன் ஆயான் ஆள்வான் என்றெல்லாம் ஆயிரம் திருநாமம் சொல்லித் தேள்ளேணம் கொட்டுகிறார் மணிவாசகர்.

    “கூர்மதியன் நெஞ்சத்துக் குற்றாலப் பேரருவி
    சீர்மனத்தன் நட்புக்குச் சீலப் பெருந்தொகையன்!
    நேர்மறையன்! கொள்கை நிலைமனத்தன்! தோப்பாகி
    ஊருண்ண ஓங்கி வளர்ந்திருக்கும் ஒப்புரவு!
    வார்த்தெடுதத உண்மை! வளர்த்தெடுத்த பேராண்மை!
    நாராகிப் பூககளையே நாளும் இணைக்கின்ற
    பேராளன்!”

    என்று  வசந்தராசன் தன்னுடைய திருநாமங்களைத் தாமே பட்டியிலிடுகிறார்.  வாழையடி வாழையென வந்த திருக்கூட்டக் கவிமரபைச் சார்ந்த திலகம் வசந்தராசன் திருநாமங்களை அடுக்கிக் காட்டுகிறார்.

    “ஈர உளமுடையார் ஈரக்கும் கவிவேந்தர்
    சூரக் கவிபடைக்கும் சுந்தரன்! (யார் அம்மானை)?
    வீர நடையுடையார் வெற்றித் தமிழ்மறவர்!
    மாரன் உருக்கொண்ட மாத்தமிழர் அம்மானை!
    வேராய் விழுதிறக்கும் வேங்கையன்றோஅம்மானை!

    “ஈர உளமுடையார், கவிவேந்தர், சுந்தரன், வீர நடையுடையார், வெற்றித் தமிழ் மறவர், மாத்தமிழர், வேராய் விழுதிறக்கும் வேங்கை” என்றெல்லாம் பாட்டுடைத் தலைவனைப் பரவிப் பாராட்டும் இந்தக கவிதைத் தொடரியில் மரபு மணக்கிறதா இல்லையா? நானும் எவ்வளவோ சொல்லிவிட்டேன். எத்தனையோ முறை எழுதிவிட்டேன். இன்னும் இரண்டு விளம் நாலு காய் மூன்று கனி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர கவிதை எழுதிய பாடில்லை. எப்படித் தமிழ்க்கவிதை சிறக்கும்? வளரும்?

    மணிவாசகர் பாடுவார் என்று இளங்கோவடிகளுக்குத் தெரியாது, வசந்தராசன் பாடுவார் என்று மணிவாசகர் அறியமாட்டார். திலகம் பாடுவார் என்று வசந்தராசன் சிந்தித்திருக்கவே மாட்டார். இளங்கோ திருமாலைப் பாடுகிறார். சிவபெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். தன்னைப் பாடிக் கொள்கிறார் வசந்தராசன். அவரைப் பாடுகிறார் திலகம். இந்த அலைவரிசையின் ஒரு வரி நோக்கமே பாராட்டி மகிழ்தல், பரவிப் புகழ்தல் என்றானதால் கவிதைகளில் அமைந்துள்ள சொற்கள் எளிமை, இனிமை கலந்து இனிக்கின்றன. மீண்டும் வலியுறுத்துகிறேன் இதுதான், இப்படி அமைவதுதான் மரபுக்கவிதை. ஒரு மரபுக்கவிதையின் யாப்பின் பங்களிப்பு வெறும் ஐந்து விழுக்காடுதான். யாப்பு ஒழிபியலைப் பங்காளியாகக் கொண்டதால் மரபுக்கவிதையின் பெருமையில் அதன் பங்கு அவ்வளவு உயர்ந்ததன்று.

    நிறைவுரை

    ‘திலகம்’ என என்னால் அழைக்கப்படும் திருமதி கிருட்டிணதிலகாவை யாரென்றே எனக்குத் தெரியாது, யாரைப்பற்றியும் எதனைப் பற்றியும் எதுவும் தெரியாது என்பது தனிக்கதை. முகநூலைப் பொருத்தவரையில் ஒருவருடைய கவிதைக்கான என்னுடைய பின்னூட்டத்திற்குப் பிறகுதான் படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். வசந்தராசன் உட்பட. வசந்தராசன் எழுதிய தற்பாவைக்குப் பின்னூட்டமாக ஒரு முப்பது கொச்சகக் கலிப்பாக்களில் அம்மானை எழுதிய தற்பாவைக்கு அணி சேர்த்திருக்கிறார். ‘பாவை’ ராசன் எழுதியது. ‘அம்மானை’ திலகம் எழுதியது, உண்மையில் இது தமையனின் தற்பாவைக்குத் தங்கை வைத்த திலகம்! மிகச் சிறந்த திறனாய்வை என்னால் இந்த அம்மானைக்கு எழுத முடியும். காரணம் அம்மானை சிறந்தது. என் உடல் நிலை இடந்தரவில்லை. என் தம்பி எழுதிய பாவைக்கு அம்மானை பாடிய அந்த அம்மாவிற்கு அண்ணன் செலுத்தும் நன்றி! . அதனால் இந்தச் சுருக்கப் பதிவு! இது பெண்ணளித்த பின்னூட்டமன்று. பெண்பாடிய அம்மானை! ஆணைப் பெண் பாடியது. அன்று புனிதவதி பாடினார்! இன்று திலகவதி பாடியிருக்கிறார்.  இதுவும் ஒரு மரபின் தொடர்ச்சியே!

    “வெல்லுஞ்சொல் ஏதுமின்றி வெல்லத்தில் சொல்லெடுத்துக்
    குள்ளக் கவிஞன் குருவையான்மேல் “அம்மானை”
    கள்ளமனம் இன்றிக் கவிபுனைந்தார் யார் தோழி?
    தில்லை நடராசன் செந்தூர் திருமுருகன்
    பல்லாரைப் பாடிப் பழுத்ததமிழ் வாய்மணக்கக்
    கொல்லி மலைத்தேனில் புள்ளிவைத்துப் பாட்டெழுதி
    உள்ளம் உருக உயிருருக நீர்பெருக
    நல்லகவி நூல்செய்தார் நம்திலகம்! ஆம் தோழி!!”

    என்று வல்லமையுடன் இணைந்து நாமும் அவரை வாழ்த்துகிறோம்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 35

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    இன்னிசையில் பண்ணிசைக்கும் பொன்மணியின் வெண்பாக்கள்

    முன்னுரை

    கோட்பாடுகளை முன்னிறுத்தி அவற்றிற்கு இயைய இலக்கியத்தையோ கவிதைகளையோ நோக்குவது ஒன்று. படைப்பிலக்கியங்களில் மூழ்கிப் படைப்பாளன் அனுபவத்தோடு உள்ளார்ந்து ஒன்றி அவற்றினின்றும் பெறப்படும் கோட்பாடுகளை நிரல்படுத்தி நிறுத்துவது வேறொன்று. ஒரு சாதாரண கவிதைத் திறனாய்வாளன் என்ற வகையில் நான் பின்னதையே என் திறனாய்வுக் கோட்பாடாகக் கொள்கிறேன். எனவே யாப்பினை முன்னிறுத்திக் கவிதைகளை நோக்குவதையோ கோட்பாடுகளை முன்னிறுத்தி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதையோ நான் ஆதரிக்கவில்லை. ஆதரிப்பாரை நான் எதிர்க்கவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. ஆனால் கவிதையின் வெற்றி பொதுவானது. வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே நெறிசார் கல்வி பயின்று முகநூலில் விரல்விட்டு எண்ணத்தகும் கவிஞர் சிலருள் ஒருவராகவும் சொல் எளிமை, பொருள் ஆழம், அழகியல் முதலியவற்றைப் புற அழகாகவும் சமுதாயச் சிந்தனைகளை அடிநாதமாகவும் நவரசங்களையும் கவியில் கொண்டு வந்து கவிதையைச் சிறக்கச் செய்த சிறந்தவருள் ஒருவராகவும் திகழ்பவர் நாகை பொன்மணிதாசன். அவர் படைத்துள்ள ‘இன்னிசையில் என் வெண்பா’ என்னும் நூல் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    தலைப்பு – தெளிவுக்காக ஒரு விளக்கம்

    விட்ட ஆகுபெயர் விடாத ஆகுபெயர் என்றெல்லாம் தமிழிலக்கணக்காரர்கள் சொல்வார்கள். ஆகுபெயரின் பொதுவான இலக்கணத்தோடு அவை எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஆராயமாட்டார்கள்., கவலைப்படமாட்டார்கள்.. அது பற்றிய ஆராய்ச்சி இங்கில்லை. ‘இன்னிசை’ என்பது இன்னிசையைக் குறிக்காமல் இன்னிசை வெண்பாவைக் குறித்தது. இன்னிசை வெண்பா என்பதனாலேயே இது ஒரு ராகம் தழுவிச் செவிக்கு இன்பம் நல்கும் என்று பொருளில்லை. நேரிசை வெண்பாவின் இலக்கணக் கூறுகளில் பலவகைகளில் வழுவி வருவனவெல்லாம் இன்னிசை வெண்பாக்கள். அவ்வளவுதான். இந்த வழுவுதலில் எழுபத்தைந்து விழுக்காடு தனிச்சொல் இன்றி வருவது. அதனாலேயே பாட்டெழுதும் பலரும் அதுதான் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் என்று கருதிவிடுகிறார்கள். அது மட்டுமன்று குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் மூவகை வெண்பாக்களின் பெயர்க்காரணம் கொஞ்சம் புலப்படுவது போல ஏனைய நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்பவற்றிற்கான பெயர்க்காரணம் புலப்படுமாறு அமையவில்லை. இவையிரண்டுக்குமான காரணமே புலப்படாத போது நேரிசைச் சிந்தியல், இன்னிசைச் சிந்தியல்களுக்கான காரணம் எப்படிப் புலப்படும்? ‘சிந்தியல்’ என்னும் சொல் மூன்றென்னும் எண்ணைக் குறிப்பதால் கொழு சென்ற நெறியே குத்தூசியும் செல்லுமாறு போல நான்கடியில் அமையும் நேரிசை வெண்பா மூன்றடியில் வந்தால் நேரிசைச் சிந்தியல் எனவும் தனிச்சொல் இன்றி நான்கடியால் அமையும் இன்னிசை வெண்பா மூன்றடியில் வந்தால் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் சொல்வது வழக்கானது. தந்தையின் பெயரே தெரியாத போது தனயனுக்கு நாம் முன்னெழுத்தைப் போட்டுக் கொண்டு வருகிறோம்.

    வெண்பாக்களைப் பற்றி இங்கே பதிவிடப்படும் கருத்துக்களெல்லாம் என் கருத்துக்களோ நானே உருவாக்கிய புத்திலக்கணக் கருத்துக்களோ அல்ல. அளப்பரும் புலமைக்கடல் அமிதசாகரர் எழுதிய யாப்பருங்கலக்காரிகை என்ற நூலையும் அதற்குக் குணசாகரர் என்னும் சான்றோர் எழுதிய உரையையும் அடிப்படையாக வைத்தே பதிவிடப்படுகின்றன. காரணம் பொதுவெளியில் இந்தக் கட்டுரையைக் காணும் அன்பர் பலர், ஒரு பாட்டுக்கான இலக்கண அமைதிக்காக நான்கு நூல்களைச் சான்றாக்குவார்கள். அவர்களோடு இந்த வயதான காலத்தில் நான் மல்லுக்கட்ட முடியாது, எனவே காரிகை அடிப்படையில் இந்தக் கருத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றுள் ஏதும் ஐயமிருப்பினும் எடுத்துரைக்கலாம்.

    அளவடி நான்கும் சிந்தடி ஒன்றுமாக அமைந்து முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்று நாள் என்னும் ‘நேரசை’ வாய்பாட்டானும் ‘மலர்’ என்னும் நிரையசை வாய்பாட்டானும், ‘காசு’, ‘பிறப்பு’ என்னும் குற்றியலுகர வாய்பாட்டானும் நிறைவடைவது நேரிசை வெண்பா எனப்படும். வெண்பாவின் ஈற்றடி பற்றிய மாற்றங்களும் ஆராய்ச்சிகளும் தனி.

    அப்படியானால் இரண்டாவது அடியில் தனிச்சொல் இன்றி வருவதுதான் இன்னிசை வெண்பா என்றால்,

    1. முதலடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    2. மூன்றாவது அடியின் ஈற்றில் தனிச்சொல் வந்தால் அது என்ன பா?
    3. அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்றுவந்தால் அது என்ன பா?
    4. நான்கடிகளுள் எங்காவது கனிச்சீர் வந்துவிடின் அது என்ன பா?
    5. ஒரு விகற்பம் இரு விகற்பம் என்றமையாமல் நான்கடியும் நான்கு வகையாக அமைந்தால் அது என்ன பா?

    நேரிசை வெண்பாவிலிருந்து விலகி நிற்கும் மேற்சுட்டிய ஐந்து வேறுபாடுகளோடு வேறுசில வேறுபாடுகள் இருந்தாலும் அவையெல்லாம் இன்னிசை வெண்பாக்களே. இந்த விரிவாக்கவுரை யாது நோக்கியதோவெனின் யாப்பிலக்கணத்தையோ கோட்பாடுகளையோ அடி நரம்புகளில் தன்மயப்படுத்திக் கொள்ளாமல் கவிதை செய்தால் அந்தக் கவிதையின் செப்பமும் அழகும் கெடும் என்பதை விளக்குவதற்காகத்தான். அது பற்றி இந்தக் கட்டுரையில் அவ்வப்போது  விளக்கப்படும்.

    சந்தத்தைச் சொந்தங் கொண்ட கண்ணதாசனும் பொன்மணிதாசனும்

    யாப்பிலக்கணத்தை ஓரளவு அறிந்தவராயினும் கண்ணதாசன் சந்தத்தை முன்னிறுத்தியே தன் கவிதைத் தொழிலைச் செய்திருக்கிறார். அவருடைய புகழ் பெற்ற காப்பியமான ‘மாங்கனி’ முழுமையான கட்டுமானச் சிறப்பைக் கொண்டதன்று. இதில் என்ன சிறப்பு என்றால் மெட்டுக்குப் பாட்டு என்னும் புதிய தொழில்நுட்பத்திலும் அவர் இந்தக் கோட்பாட்டையே பின்பற்றியிருக்கிறார். “சந்தம் நிறைந்த தமிழ் சங்கீதம் பாடும் தமிழ் சிந்துபல கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்! இந்தத் தேச முற்றும் ஆண்ட கதை சொல்லும்” என்பது கண்ணதாசன் எழுதிய ஒரு திரையிசைப்பாடல் அவர் தமிழைச் சந்தம் நிறைந்த தமிழாகவும் சங்கீதம் பாடும் தமிழாகவுமே நோக்கியிருக்கிறார்.

    “செவ்வரி ஓடிய கண்களில் இரண்டினில்
    சேலொடு வேலாட – இரு
    கொவ்வை இதழ்களும் கொத்து மலர்களும்
    கொஞ்சி மகிழ்ந்தாட”

    பாடலை மேம்போக்காகப் படிப்பவர்கள் இது குற்றாலக் குறவஞ்சியின் சாயல் என்றோ நகல் என்றோ சொல்லிக்கொண்டே கடந்து போய்விடுவார்கள். அவர்கள் பயணங்கள் முடிவதில்லை!.  நல்ல கவிஞனைப் பாராட்ட மறக்கலாம். நல்ல கவிதையை அடையாளம் காணத் தவறிவிடக்கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமாகவும் பொறுப்புடனும் இருக்கிறேன்.

    “என்ன மன வேதனையும் என்ன ளவில் மாறிடுமே
    என்னருகில் மதுவிருந்தால் போதும்!
    உண்ணுகிற இரவி லென்னை ஊக்குகிற மது குடித்தால்
    திண்ண மெனக்கில்லையேது தீதும்!
    முன்னுக்குப் பின் முரணாக மூச்சு வரும் என்றாலும்
    கண்ணுனக்குள் காணுகிறேன் சொர்க்கம்!
    பெண்ணுனக் குள் காணுகிற பெரிதொரு இன்பமிது
    பேசயிலை இதனிடையோர் தர்க்கம்!”

    என்று ஒரு பாடலை எழுதியிருக்கிறார் பொன்மணிதாசன். சந்தத்தை உள்வாங்கி விருத்தம் போல ஒரு நாலடிச் சிந்தினைக் காவடி சிந்து போல் எழுதியிருப்பதைக் காணலாம். ஈரடிக்கு ஓர் இயைபாய் அமைந்த சந்தத்தை நெஞ்சில் நிறுத்தி அவரால் இப்படி எழுதப்படும் கவிதைகள் காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. எனவே பொன்மணிதாசன் கவிதைகளைச் சுவைத்துத் திறனாய்வு செய்து ஆராய்கிறபோது யாப்பிலக்கணம் பின்னிறுத்தப்பட்டுச் சந்தத்தை முன்னிறுத்தும் உண்மையான கவிதைக் கொள்கையே எடுத்தோதப்படுகிறது. இதனால் கவிதைக்கு யாப்பு இன்றியமையாத ஒன்றன்று என்பது பொருளன்று. யாப்புக்குள் கவிதையைத் தேடுவது பிண அறையில் மணமகனைத் தேடுவது போல! கவிதைக்குள் யாப்பமைதியைத் தேடுவது சொந்தத்திற்குள் மாப்பிள்ளை தேடுவது போல!

    இன்னிசையில் என் வெண்பாவின் பாடுபொருள்

    இந்நூற் கவிதைகளை நன்கு உள்வாங்கி உளத்திருத்தி அணிந்துரை அளித்திருக்கும் அன்பர் தமிழ்ச்செம்மல் திரு.இராம.வேல்முருகன் அவர்கள் இதன் உள்ளடக்கத்தைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்க்குப் பேருதவியாக இருக்கிறது, எனக்கும் சேர்த்து.  “நட்பு, காதல், பசி தீர்த்தல், நுண்ணறிவு, நோய்தீர்த்தல், பிணி, சான்றோர் துணை, களவு, வறுமை, இறை நம்பிக்கை, தமிழ்ப்பற்று, உலகப்பற்று, தாய்மை, ஆண்மை, கொடைத்தன்மை, நூல் மற்றும் நூலைப்படித்தல்” என ஒரு கதம்ப மலர்க்கூட்டாக உள்ளது. நகைச்சுவை, இறைப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப்பற்று நீதி நெறிகளைப் போற்றுதல், பெற்றோரைப் போற்றுதல்’ என அறுசுவை உணவை நமக்கு அள்ளித் தருகிறது” என்னும் குறிப்பு பயனுள்ளதாகும். அதே நேரத்தில் பொன்மணியின் வெண்பா ஆற்றலைப் புகழ்வதற்காக “வெண்பா எழுதுவாருடைய வாய்ச்சொல் பலிக்கும்” என்றெல்லாம் இட்டுக்கட்டி உரைப்பது கெட்டிக்காரன் புளுகாகவே முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம் என்பது கூட ஒரு அனுமானமே தவிர வரலாற்று உண்மை கிடையாது. உண்மையாகவே இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பில்லை., வழியில்லை. மக்கள் தொகை குறைப்புக்கு இப்படியொரு வழி இருப்பதாகப் பன்னாட்டு மன்றம் அறிவிக்கவில்லை. நூலின் உள்ளடக்கத்தில் காணும் சில பொருள் பற்றிய சிறப்புக்களை இனித் தொடரலாம்.

    பாடுபொருள் வறட்சியும் காலநிலை மாற்றமும்

    இன்றைய கவிதைகளில் காணப்படும் பாடுபொருள் வறட்சி பொன்மணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கவிதைத் தொகுப்புக்களானாலும் நாளும் வெளிவரும் முகநூல் கவிதைகளானாலும் தன்னைப் பாதிப்பனவற்றைக் கவிதையாக்கும் இயல்பான ஆற்றல் இவருக்கு உண்டு. காலநிலை மாற்றம் என்பதும் அதனால் பெருகும் வெள்ளமும் காயும் வறட்சியும் மக்களைப் பாதிக்கிறது. ஆனால் கவிஞர்களை அவ்வளவாகப் பாதித்ததாகத் தெரியவில்லை. தலைவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து, தங்கள் மணநாள் வாழ்த்து முதலியனவற்றை எழுதிக்கொண்டும் தேடிப் பெறும் கவியரங்கங்களில் எதனையாவது எழுதி அதனைக் கவிதையென்று சொல்லும்படி வற்புறுத்தியும் பொழுது போகவில்லை என்றால் காதல் கவிதை என்ற பெயரில் குறுங்கவிதை எழுதுவதுமாக இன்றைய படைப்பாளர்களின் பொழுது கழிகிறது. அன்பர் பொன்மணிதாசனை இயல்பிலேயே கவித்துவம் துளிர்க்கப் பெற்றவராதலால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவியியல் வறட்சியைப் பாடுபொருளாக்கியிருக்கிறார்.

    “கோடை யிடியில்லை! கொட்டும் மழையில்லை!
    ஓடையில் நீரில்லை! ஓடநீர் ஆறில்லை!!
    தேடிக் கிடையாத் தெளிநீரைத் தேடியினும்
    வாடி அலைய வலி!”

    என்று ஒரு காலத்தில் நடந்த நதியைப் படுத்த நதியாகப் பார்த்திருக்கிறார் பொன்மணிதாசன். இரண்டாவது அடியின் மூன்றாவது சீரான ஓட நீர் என்பதை இரண்டாகப் பிரித்து “நீர் ஓட ஆறில்லை” எனப் படிக்க. கவிதையில் நதி நடப்பதைக் காணலாம். இந்தப் பாடலின் ஈற்றடியைக் கவனித்தால் ‘வாடி அலைய வலி’ என்று யாப்பிலக்கணம் காப்பாற்றப்பட்டு இருப்பதைக் காணலாம். அதாவது இன்னிசை வெண்பாவில் வெண்டளை மட்டுமே வரவேண்டும் என்னும் தவறான புரிதலால் இந்த நிலை. இந்த அடியை வாடி அலைவதே வலி! என்று மாற்றிப் படித்தால் கவிதையும் இனிக்கும்!

    அந்தக் கால இலக்கண ஆசிரியர்கள் நூலுள் வரக்கூடாத குற்றங்கள் பத்து என வகுத்து அவற்றுள் கூறியது கூறலையும் ஒன்றாக்கினர். இன்றைக்கு அறிவியலின் வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே. தட்டச்சுப் பிழை என்பதே இல்லை. இருக்கக் கூடாது. இப்போது அழிதிறன் கூடிய போனைப் பயன்படுத்துகிறோம். கணினியைப் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் கூறியது கூறிவிடுகிறோம். ஆம். இந்த நூலின் எழுபத்தைந்தாம் (76) பாடலாக உள்ள இதே பாட்டு இதே நூலின் நூற்று அறுபத்தேழாவது (167) பாடலாகவும் அச்சேறியுள்ளது. எனின் இந்தத் தவறு கணிப்பொறியின் தவறா? நம்முடைய தவறா? சிந்திக்க வேண்டாமா?  செய்தித் தொகுப்புக்கள் தொலைக்காட்சிக்கு உரியன. கவிஞர்களுக்கு அல்ல. அண்ணாவைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னால் நம் கவிஞர்கள் உடனே தொடங்கிவிடுவார்கள். “காஞ்சியிலே நமதண்ணா பிறந்தார் அன்று”. அண்ணா காஞ்சியிலே பிறந்தாரா? இல்லையா? என்பது காஞ்சி வட்டாட்சியர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் அண்ணாவுக்கு இருப்பிடச் சான்று வழங்கத் தேவையில்லை. இந்தச் செய்தியைக் கவிஞன் எழுதுகிறபோது “நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று” என்று எழுதுவான். அதுபோல ஓடாத நதியைப் பாடிய கவிஞன் அது ஓடுவதற்கான வழியை இன்னொரு பாடலிலே பாடுகிறான்.

    “நல்லனசெய்! மறவாதே! நாம்வாழும் ஊருக்குள்
    உள்ள குளம் வார, ஓடும் வடிகால்கள்!
    செல்ல வழிகாட்டு! சீர்படுத்து ஏரியினை!
    வெள்ளமெனில் வேண்டாம் பயம்”

    தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலனைக் கண்காணிப்பதும் கவலைப்படுவதும் உண்மைக் கவிஞனின் பணி. அந்தப் பணியை வெகு திறம்படச் செய்திருக்கிறார் பொன்மணிதாசன். நூலின் ஆறாவது பாடலாகச் செய்ய வேண்டியனவற்றையும் செழிப்பையும் பாடிய தாசன், எழுபத்தாறாம் பாடலில்தான் வறட்சியைப் பாடியிருக்கிறார். இது ஒரு தொகுப்பு நூல்தான் என்றாலும் இந்தச் சிந்தனையைத் தவிர்க்க இயலவில்லை.

    மரபுத் தடம் பயிலும் பொன்மணிதாசன்

    அறிவைப் பற்றிப் பத்துக்கும் மேற்பட்ட குறட்பாக்களில் ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அதுபற்றிய பொருட்பால் ஆராய்ச்சி போதாதென்று கருதிய அவர், ‘அறிதொறும் அறியாமை கண்டற்றால்’ என உவம அளவையால் காமத்துப்பாலிலும் ஆராய்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அறிவு இரண்டு கூறுகளை உடையது. ஒன்று கற்றறிதல். மற்றொன்று கேட்டறிதல். இவ்விரண்டு சொற்களுக்கும் விகுதியாக அமைந்திருப்பது அறிதல். அறிதல் என்றால் என்ன? கற்றாலும் கேட்டாலும் உன்னுடைய அறிவையே நம்பு என்பதே. நண்பன் தீய வழிகாட்டலும் உண்டு. பகைவன் ஆக்கத்திற்கு வழிகாட்டுவதும் உண்டு. மனிதனுக்கு மூவகைப் பண்புகள் மாறிமாறி வரும். இந்தப் பண்பு மாற்றம் சொல்லின்கண் சோர்வு உண்டாக்கக் கூடும். எனவேதான் யார் எதனைச் சொன்னாலும் அச்சொல்லில் உள்ள மெய்ப்பொருளைக் காண்பது அறிவு என்கிறார். சொல்கிறவன் பொருளைச் சொற்களால் கூறுகிறான். கேட்பவன் சொல்லில் மறைந்துள்ள பொருளைக் காண்கிறான். இந்த நுண்ணியத்தை வள்ளுவரைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்? இந்த ஆழமான மரபினை வழிமொழிந்திருக்கிறார் பொன்மணிதாசன்.

    “சொல்வார் சொல்தன்னைச் சொன்னாலும் நம்பாதே!
    உள்ளாய்ந்த உண்மைகள் உள்ளதா? நோக்கிப்பின்
    நல்லதெனில் நாம் கொள்ளல் நன்மை பயக்குமாம்!
    சொல்லுணர் சொல்லேற்றுச் செய்”

    சொல் கருவி. கருத்து பொருள். சொல்பவன் சொல்லாள்கிறான். கேட்பவன் பொருள் கொள்கிறான். திருவள்ளுவர் சொல்லைக் கருதாது பொருளைக் கருதியவர்.

    “எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு”

    “பயன்கருதிச் சொற்கேள்!” என்னும் பாங்குடைய பொன்மணிதாசன் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரச் சாரத்தை ஒரு இன்னிசை வெண்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “மிக்கதொரு பட்டறிவால் மேன்மை அடைந்தோர்கள்
    தக்க தகஉரைப்பர்! தவறுகளும் நேராவே!
    சிக்கல் தவிர்க்கச் சிறந்தோர்கள் சொல்லுவதை
    ஒக்க உயரலாம் ஓர்!”

    மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஔவை மொழி. மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன் கசக்கும். பின் இனிக்கும் என்பது வழக்கியல் மரபு. இந்த நீண்ட மரபியல் தொடர்ச்சியை பொன்மணிதாசன் பாடலில் காணமுடிகிறது. இதுதான் மரபுக்கவிதை!

    “ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்டு ஒன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
    நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்”

    விதி, முறை, ஊழ், பால், தெய்வம், நியதி என்பன ஒருபொருட் கிளவி. எனவே தெய்வத்தின் பால் நம்பிக்கை வைத்த ஔவை பாடிய நல்வழி பாடல் இது. இந்த மரபு பொன்மணி வாக்கில் எப்படி வந்திருக்கிறது என்றால்,

    “வேண்டாத ஒன்று வேண்டுதல் வேண்டிவரும்
    தீண்டாத ஒன்றுமோர் தீண்டிடவே வேண்டிவரும்
    ஈண்டிடும் கல்வியில் இல்லை பொறாமையும்
    காண்டிடல் வெற்றி கடுகு”

    “ஒன்றை நினைக்கின் அஃதொழிந்திட்டு ஒன்றாகும்” என்னும் ஔவை வாக்கு இப்படிப் பதிவாகியிருக்கிறது. “நல்லோர் மனத்தை நடுங்கச்செய்தனோ!? என்பார் வள்ளலார். அடக்கத்தின் மறு உருவம் வள்ளலார்.

    “மற்றோர் வருந்த மனங்கோணச் செய்தல் ஓர்!
    சிற்றறிவுச் சிந்தை சினமும் செய்யாதே
    உற்றவரும் ஊடே உயரம் மறவா நீ
    கற்றது கைம்மண் அறி!”

    தமிழ்ப் பனுபவல்களின் சாரமே அறம்! அன்பு! அடக்கம்! என்னும் மூன்றுமேயாகும். இந்த மண்ணோடு கலந்த பண்புகள் அவை. அதனால் அவை மரபாயின. இந்த இன்னிசை வெண்பாவில் அடக்கத்தை முன்னெடுக்கும் ஒரு மரபியல் கவிஞரைக் காணுகிறோம்.

    தத்துவத்தில் மிதக்கும் தாசன்

    எந்தப் பாடலை எழுதினாலும் அதனுள் மானுட வாழ்வியல் தத்துவத்தைப் பொதிந்து வைக்கும் மரபினைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். கண்ணதாசனைத் தன் வழிபடு குருவாகக் கொண்டிலங்கும் பொன்மணிதாசன் தான் எழுதும் பாடல்களில் தத்துவத்திற்குத் தனியிடம் கொடுத்தும் பாடல்களில் தத்துவ முத்திரை பதித்து வந்திருப்பதை, வருவதை அறிய முடிகிறது.

    “விடிந்தது போலப் பிறப்பெனச் சொன்னான்
    விந்தையிலையே இறப்பினி லெதுவும்
    நடிக்க வந்த பின் நாணங் கொண்டால்
    நாடக மெப்படி நன்றாய் நடக்கும்?”

    அண்மைக்காலக் கவிஞரிடையே இத்தகைய இயல்பான தத்துவப் பார்வை காண்பது அரிது என்பது என் கருத்து.

    “என்னுள் எனைத்தேடி என்னைநான் காண்கிலனோ?
    என்னுள்ள ஏக்கத்தில் என்றேனும் ஓர்நாளில்
    கண’ணுள வருமந்த காட்சியதில் நிச்சயமாய்
    என்னையே காண்பேன் இனிது”

    “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே – ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” என்பார் வள்ளலார்.

    “மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
    மான் என்று சொல்வதில்லையா? தன்னை
    தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா?”

    என்பார் கண்ணதாசன். இந்த மரபியல் சிந்தனை பொன்மணிதாசனின் பாடல்களில் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

    “நானெழுதும் பாட்டுதனை நானெழுத வில்லையெனில்
    தானெழுதிக் காட்டுகிறான் தம்பிரானும் யாரறிவார்?
    நானெழுதேன் என்னுமுண்மை நானறிந்த போதினிலும்
    நானென்ன சொல்வேன் சொல்!”

    ‘தத்துவம்’ என்பது மானுடத்தை விரக்தியை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளமன்று. மறைந்து கிடக்கும் உண்மையினைத் துல்லியமாகக் காட்டும் தனிப்பார்வை. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்னும் ஒரு வரி மானுடத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது என்பதைப் புரிந்து கொண்டால் நீண்ட நெடிய தமிழ்மரபைப் புரிந்து கொள்ள முடியும்.

    காதலெனும் தீவினிலே

    தற்காலக் கவிஞர்கள் சந்திக்கும் பெரிய சவாலே பாடுபொருள்தான். இராமனைப் பாடுபொருளாக்கிய கம்பனையும் கண்ணகியைப் பாடுபொருளாக்கிய இளங்கோவையும் சீவகனைப் பாடுபொருளாக்கிய தேவரையும் கொஞ்சம் தள்ளிவைத்து அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடுபொருளாக்கிக் காவியம் பாடியவர் சேக்கிழார். இதனை வேறு வகையாகச் சொன்னால் தனிமனித உணர்வுகளைப் பாடுபொருளாக்கிய பழந்தமிழ் கவிதை, அக்கோட்பாட்டிலிருந்து சற்று ஒதுங்கி மக்களுள் சிறந்தாரையும் கடவுளரையும் பாடிய ஒரு நிலை வந்தது. பின்னர் அதனின்றும் விலகிப் பல்லோரைப் பாடுபொருளாக்கிய சூழலுக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. பக்தி இலக்கியக் காலத்துள் பலரும் சேர்ந்து ஒருவனைப் பாடும் நிலை வந்தது. பன்னிரு ஆழ்வார்கள் பெருமாளைப் பாடியதும் நால்வர் பாடிய பதிகங்களும் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலைதான் பெரும்பாலும் வள்ளலார் காலம் வரை நீடித்து வந்தது. அவருக்குப் பின்னாலே தோன்றிய மகாகவி பாரதி நாட்டு விடுதலைக்காகப் பாடினான். இது அவன் விரும்பிப் பாடிய பாடுபொருள். ஆனால் வேறுசில பாடுபொருள்களும்  எட்டையபுரக் கவிஞன் தோட்டத்தில் பதியம் போட்டுக் கொண்டன. அவருடைய தோழர் பாவேந்தர் பகுத்தறிவையும் மொழியையும் இனத்தையும் பாடல் யாத்தார். பாரதியைப் போலவே இவரிடத்தும் பல பாடுபொருள்கள் பதியம் போட்டுக் கொண்டன. அப்படிப் பதியம் போட்டுத் தழைத்த பாடுபொருள்களில் ஒன்றுதான் காதல். பக்குவக் காதலைப் பாவேந்தர்போல் வேறு யாரும் பாடியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அழகியலும் நெகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த காதல் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் பாவேந்தர். பாவேந்தருக்குப் பிறகு, காதலை மென்பொருளாகப் பாடியவர் கண்ணதாசன்.

    “வையம் சிலிரித்தது நற் புனிதை ஏகி
    மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று
    கையலுத்துப் போகுதென்று மரத்தின் வேர் மேல்
    கடிதுவைத்தாள்! “அத்தான் நீர் மறந்தீர் என்று
    மெய்யாக நான் நினைத்தேன்!” என்றாள். அன்னோன்
    வெடுக்கென்றுதான் அணைத்தான் “விடாதீர்” என்றாள்
    கையிரண்டும் மெய்யிறுக இதழ் நிலத்தில்
    கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்

    உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள
    உடலிரண்டின் அணுவனைத்தையும் இன்பம் ஏறக்
    கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில்
    கடையுகமட் டும்பொருந்திக் கிடப்ப தென்று
    நிச்சயித்த மறுநொடியே பிரிய நேர்ந்த
    நிலைநினைந்தார் “அத்தான்” என்றழுதாள்! அன்னோன்
    வைச்சேன் உன்மேல் உயிரைச் சுமந்து போவாய்!
    வரும் என்றன் தேகம் இனிப் பிரியா” தென்றான்

    நீர் மொண்டு வருபவர் நெருங்குகின்றார்
    நினைப்பாக நாளைவா என்று சொன்னான்
    காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்
    காலடி ஒன்றெடுத்து வைப்பாள் திரும்பிப் பார்ப்பாள்
    ஓரவிழி சிவப்படைய அன்னோன் பெண்ணின்
    ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்
    தூரமெனும் ஒரு பாவி இடையில் வந்தான்
    துடித்ததவர் இருவர் நெஞ்சும் இதுதான் லோகம்”

    தலைவி, தலைவன் ஒருசில நிமிடச் சந்திப்பை அழியா இலக்கியமாக மாற்றிக் காட்டும் படைப்பாளுமை பாவேந்தருக்கே இருந்திருக்கிறது என்பதற்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டும்? நம் கவிஞர்கள் இதனை உணரவேண்டும். தாம் எழுதியனவே கவிதை என்று அடம்பிடிக்கக் கூடாது. நீங்கள் எழுதியது கவிதை என்றால் பாவேந்தர் எழுதியதை என்னவென்று சொல்லலாம்.? படைப்பில் கவிஞன் ஒளிந்திருக்கக் கூடாது. மறைந்துவிட வேண்டும். இங்கே பாருங்கள் கண்ணதாசன் செய்யும் அட்டகாசத்தை!

    “சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலை தன்னை முகில்கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைசெல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மைபோலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல் மறைத்தல் போலும்
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே”

    பாவேந்தரும் கண்ணதாசனும் முத்தக்காட்சியைத்தான் சித்திரித்துக் காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு நளினம்? எவ்வளவு மென்மை? எத்தகைய உவமங்கள்? எத்தகைய எளிய சொல்லாட்சி! காட்சி கண்ணுக்குள்! இயல்பாகவே விரிகிறதே காட்சி!    இத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்த காதல் என்னும் பாடுபொருள் தற்காலக் கவிஞர்கள் கையில் கொத்துப்புரோட்டாவாக மாறிப் போயிருக்கிறது என்பது என்ன ஒரு அவலம். இவர்கள் உருவகங்களே காதலை வெளிப்படுத்துவதற்குப் போதும் என்று கருதிவிடுகிறார்கள். யாப்பில் காதலைக் கொண்டு வர இயலாதவர்கள் குறுங்கவிதை, புதுக்கவிதை என்று விரிந்து பரந்து ஆழ்ந்த காதலைக் குறுக்கிவிடுகிறார்கள். “மார்பைத் தா” என்று மனைவி கேட்கிறாளாம்! “மடியைத் தா” என்று மணாளன் கேட்கிறானாம். இது நடப்பியல். ஆனால் கவிதையாகுமா? ராஜபாட்டையாகச் சென்றிருக்க வேண்டிய காதல் இன்றைக்கு ஒற்றையடிப் பாதையில் அஞ்சிக் கொண்டே நடப்பதை நான் காண்கிறேன். இது என் பார்வை. அந்தப் பழைய ராஜபாட்டையில் பயணிக்க எத்தனிக்கும் கவிஞர் சிலருள் பொன்மணிதாசனும் ஒருவர்.

    வெண்பாவில் வைத்த விருந்து

    குறள் வெண்பாவில் காதலைச் சித்திரித்துக் காட்டுவது அரிசியில் செதுக்குவது போல. அந்த வித்தையைத் திருவள்ளுவரைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியவில்லை. பதினெண் கீழ்க்கணக்கில் சில காதல் வெண்பாக்கள். அவை வெற்றிபெற்றனவா என்பது விடைகாண முடியாத வினா. புகழேந்தி நள தமயந்தி காதலைப் பாடிய பிறகுதான் வெண்பாவுக்கே ஒரு வெளிச்சம் வந்தது. என்றாலும் நளவெண்பாவைப்போல ஒரு முழுமையான நூலையோ காப்பியத்தையோ யாராலும் செய்ய முடியவில்லை, பாவேந்தரின் மணிமேகலை வெண்பாவைத் தவிர. உதிரிப்பாடல்களாகவே வெண்பாக்கள் இன்றைக்கும் இயற்றப்படுகின்றன. காரணம் பாடுபொருள் செறிவின்மை, கற்பனை வறட்சி, சொற்களஞ்சிய வறுமை முதலியனவே. இருந்தாலும் ஒரு இருநூற்றுப் பதினாறு இன்னிசை வெண்பாக்களில் பல்வகைப் பாடுபொருளைப் பாடியிருக்கும் பொன்மணிதாசன் கொஞ்சம் வேறுபடுகிறார்.

    “தேனூறும் மாலையிலே தெள்ளமுது பொன்னுடலில்
    நானூர நங்கையவள் நற்றமிழாய்க் கையசைக்க
    பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே
    பூநூறு பூத்திடும் போது”

    பாட்டுக்கு உரைசொல்வது மலரைக் கசக்கி மோந்து பார்ப்பது போல. பூவைச் சூடிப் பார்க்க வேண்டும். வாடிப் பார்க்கக் கூடாது. இந்தக் கவிதை அத்தகையது. “பானூறு பாடுகிறேன் பாவையவள் மேனியிலே” கொஞ்சம் சிக்கலான இடந்தான். மிகக் கவனமாகத் தாண்டியிருக்கிறார். மேனியில் பாடியவர் இவராகத்தான் இருக்க முடியும். இந்தப் பாடலில் உள்ள தொடை விகற்பங்கள் பொறுக்கி எடுத்துப் போட்டவையல்ல. வழிகேட்டு வந்து தங்களுக்கான வாழ்வை அமைத்துக் கொண்டவை. முதலடியில் பொழிப்பு மோனை, அடுத்த மூன்றடிகளிலும் கூழை வந்து நெஞ்சை குளிர்விக்கிறது. சந்திப்பின் இனிமையைப் பொழுதின் மேல் ஏற்றிப் பாடியிருக்கும் கற்பனை வீச்சு அருமை மற்றும் இனிமை!

    இன்னிசையில் நாட்டார் மரபு

    கணக்கிலடங்காக் கம்பர்கள் வந்தாலும் எண்ணிலடங்காக் கவிப்பேரரசுகள் வந்தாலும் பேரரசுகளின் அடுத்த நிலையில் இருக்கும் கவிக்கோக்கள் என்னும் சிற்றரசர்கள் வந்தாலும் மரபுப்பாமணிகள் வந்தாலும் ஒரு சங்க இலக்கிய அகப்பாடலின் சித்திரிப்புக்கு அவர்கள் படைப்பு ஈடாகாது. அந்தச் சங்க யாப்பும் ஒரு நாட்டார் பாடல் கற்பனைக்கு ஈடு கொடுக்க இயலாது. சங்க இலக்கியம் கவிதைப் புனைவு. அன்றிலிருந்து இன்றுவரை நாட்டார் வழக்கு என்பது கவிதைப் புறப்பாடு.

    “அறுபத்தி நாலு மொழம்
    அள்ளி முடிச்ச கொண்டை
    அவுந்த விபரம் பின்னாடி
    ஏகுட்டி வேடுவப் பெண்ணே
    அத எனக்குச் சொல்ல வேணும் வேடுவப் பெண்ணே”

    தலைவி தன் காதலை வெளிப்பட உரைக்கக் கூடாது என்னும் அகத்திணை மரபை உடைத்து நொறுக்கிய பெருமை நாட்டார் மரபிற்கு உண்டு. இங்கே சிலர் எதற்கு மீறுகிறோம் என்று தெரியாமலேயே மீறிக் கொண்டிருப்பார்கள். மீற வேண்டியது எது என்பதும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

    “மாரு படர்ந்தவரே! மனக்கவலை வச்சவரே!
    தேமல் படர்ந்தவரே செல்லையா!
    இப்ப தேத்தாதிங்க எம்மனசச் செல்லையா”

    என்று பாடுகிறாள். என்ன ஒரு எளிமை? ஒப்பனை செய்யாத உணர்ச்சிகளின் ஊர்வலம். மாரு படர்ந்தவரே என்பதில் ஒளிந்திருக்கும் எழுவாய் ஆயிரம் அவையல்கிளவி விதிகளைக் கற்பிக்கிறது. இத்தகைய தூய்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளைப் பொன்மணிதாசன் கவிதைகளில் காணுகிறபோது “துள்ளாத மனமும் துள்ளும்”

    “செப்பு நீ ஈயாவேன் செவ்விதழில் தங்கிடுவேன்!
    ஒப்பினால் தேன்குடிப்பேன்! ஒப்பலையேல் ஓய்வெடுப்பேன்!
    தப்பாது சொல்லுக நீ தாமதமும் வேண்டாமே!
    எப்போது சேதி வரும் எனக்கு?”

    எப்போது சேதி வரும் எனக்கு? என்னும் ஏக்கம் ஆணுக்கு வந்ததுதான் மரபு மீறல். இது மீறப்பட வேண்டும் என்று மீறியதன்று. தானாகவே மீறியது. காதல் தடையுடைக்கும் வெள்ளம் என்பதால். “சென்ற இடம் காணேன்! சிந்தை வாடலானேன்! சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்” என்னும் ஏக்கம் ஆதிமந்திக்குரியது. காதலுக்குப் பால் ஏது? திணை ஏது?

    “கண்ணில் குடியேறிக் காதல்தீ பற்றவைக்கும்
    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்கே!
    என்னாசைத் தீவுக்குள் எண்ணெயையும் வார்ப்பவளே!
    எந் நாளில் என் ஆவாய்ச் சொல்?”

    காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம்பார்!
    சாமம் வருமுன்னே சந்திப்போம் நல்லிரவை!
    ஓமத்தீ நெஞ்சுள்ளே ஓங்குதடி மென்மேலும்
    மாமன் மடி சாய மலர்ந்து”

    வண்ணநிலா வந்தேறும் வாசல் திருவிளக்காம் காதலி. அடடா! நள்ளிரவு அல்ல நல்லிரவாம்! கவித்துவம் வெளிப்படும் மையம் இது. ‘காமனவன் வில்லேந்திக் காத்திருக்கும் நேரம் பார்” கற்பனையின் உச்சம்! கவிதை உத்திகளால் சிறப்பது. காதல் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உட்பட்டதன்று தும்மல்போல் வந்து விக்கல் போல் மறைவது. அதனை எவ்வளவு நளினமாகச் சொல்கிறார் பாருங்கள்!

    பசி பாடிய பாவலர்

    “ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்” என்பதால் திருவள்ளுவர் பசியின் கொடுமையை எதிர்மறையில் பாடியிருக்கிறார். அது தீர்க்க வேண்டிய கடமை என்பதையும் குறிப்பாக உணர்த்தியிருக்கிறார். பசிப்பிணி போக்கிய அறச்செல்வியாக மணிமேகலையைச் சாத்தனர் படைத்துக்காட்டியிருக்கிறார். இவர்கள் வழித்தோன்றலாக வடலூரார் “உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்., அவர் புறவினத்தார் மற்றவர்க்குப் பயிர்ப்புறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக” என்று அருள் செய்திருக்கிறார்.  “பாலென வருவோர்க்குப் பால் தருவோம்! பசுங் கூழென வருவோர்க்குச் சோறிடுவோம்” என்பார் கண்ணதாசன். இது மரபின் தொடர்ச்சி. இதுதான் கவிதை மரபு. இந்த மரபில் வந்த பொன்மணி பாடுகிறார்.

    “உண்ணுதல் கேடில் ஒருவருக் கேனும் நீ
    உண்ணப் பகிர்ந்தினிது உண்ண நலம்பயக்கும்!
    தன்பசி தீருமுன் தாளாப் பசியுடையார்
    வன்பசி தீர்த்தலே வாழ்வு”

    ‘தாளாப் பசி’ என்பதனாலே அது ‘வன் பசி’ எனப்பட்டது. வன்பசி தீர்த்தலே வாழ்வு என்னும் தீர்க்கம் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் கவிஞனின் உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

    நிறைவுரை

    இதுவரை கூறிய சில எடுத்துக்காட்டுக்களால் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெளிவாகியிருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்குப்போல ஒரு முழு நூலையும் இன்னிசை வெண்பாவினாலே யாத்த அரிய முயற்சியைக் கண்டிருக்கலாம். சமுதாய நோக்கும் கவித்துவமும் ஊறிக் கொண்டே இருக்குமானால் பன்முகப் பாடுபொருளும் கவிதையாக்கத்திற்குப் பயன்படும் என்னும் உண்மை அறிந்திருக்கலாம். பொன்மணிதாசனின் படைப்பாற்றல் புலப்பட்டிருக்கலாம். சந்தத்தை உள்வாங்கி இலக்கணம் பிசகாமல் எழுதும் அவரது புதிய முயற்சி புலப்பட்டிருக்கலாம். நாட்டுப்புற அழகியலைக் கவிதையில் கொண்டு வருவதிலும் காதலைப் பாடுவதில் மென்மையான அவரது அணுகுமுறையின் வீச்சையும் அனுபவித்திருக்கலாம். எல்லாவற்றையும் விட மரபு பற்றிய மயக்கம் களையப்பட்டிருக்கலாம். இத்தகைய வல்லமை உடைய கவிஞர் பொன்மணிதாசனை, அவருடைய கவிதைகளை  என்வழி அறிமுகப்படுத்துவதில் வல்லமை பெருமை கொள்கிறது. வல்லமையின் பெருமையில் எனக்கும் பங்குண்டு.

    (தொடரும்………)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34

    படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    தென்பசியாரின் ‘தமிழ்ப்பாவை’ – ஒரு மதிப்பீடு

    முன்னுரை

    தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’ என்பார் பாரதி. தமிழமுதின் சுவை காண்பது காரணம். அமரர் ஆவது காரியம். தமிழ்ச்சுவை கண்டால் தேவராகலாம். காண்பார் குறைந்துவரும் காலம் இது! காரியச் சிறப்பு உழைப்பின் கனஅளவைப் பொருத்தது. புதுக்கவிதைகளையும் ஹைக்கூ கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் படித்தவர்கள் “தமிழமுதின் சுவைகண்டோம்” எனச் சொல்லிக் கொள்வது அவர்கள் உரிமை. பழந்தமிழ் பெருமரபை உள்வாங்கித் தமிழிலக்கியங்களின் சுவையுணர்வது என்பது அவ்வளவு எளிதன்று. அகநானூறு படிப்பதும் ஆனந்தவிகடன் படிப்பதும் ஒன்றன்று. எனவே மரபை இன்னதென்று புரிந்து கொள்வதும் அதனை உள்வாங்குவதும் பாடவந்த பொருண்மையை மரபார்ந்த சொற்களால் கவியாக்குவதும் எல்லாருக்கும் கைவரப்பெறாது. அது யாருக்குக் கைவரப்பெறும என்பதை அவ்வளவு எளிதாக அறிந்து கொள்ளவும் முடியாது. அப்படிக் கைவரப் பெற்ற சிலருள் ஒருவர்தான் தென்பசியார் இராமதாசு.! விழுப்புரத்திற்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூரின் பெயர்தான் தென்பசியார். ஆடுதுறை மாசாத்தானார், ஆலங்குடி வங்கனார், ஆலத்தூர் கிழார் ஒக்கூர் மாசாத்தியார், பிசிர் ஆந்தையார் என்பாரைப் போல இவர் தென்பசியார் இராமதாசு. ஊரால் பெயர் பெற்ற ஓட்டுநர். அன்னார் எழுதிய ‘தமிழ்ப்பாவை’ என்னும் பாவை நூலைப் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    தென்பசியாரும் தமிழ்ப்பாவையும்

    தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற பாவைகள் பலவான காரணத்தால் அவற்றினும் பிரித்துணர்வதற்கு இவர்  தான் எழுதிய தமிழ்ப்பாவை என்னும் நூலைத் “தென்பசியார் தமிழ்ப்பாவை” என ஊரோடு சேர்த்து உணர வைத்திருக்கிறார். தென்பசியார் இராமதாசு எழுதிய தென்பசியார் தமிழ்ப்பாவை எனல் பொருந்தும். தன்னால் முடிந்த வெளிச்சத்தைத் தமிழுக்குத் தர வேண்டும் என்னும் காரணத்தால் தமிழ்ப்பேரொளி எனப் புனைபெயர் வைத்துக் கொண்டுள்ள இக்கவிஞர் கண்ணாடி அணிந்துதான் கவிதை எழுதுகிறார். தமிழால் தனக்கு ஒளி கிடைக்கும் என நம்புகிறார். நம்பினார்க்கு நலிவில்லை. கள்ளமில்லா வெள்ளையுள்ளத்திற்குச் சொந்தக்காரரான இவரின் கடுஞ்சினம் பலராலும் அறியப்பட்டதே. கோபம் இருக்குமிடத்தில்தான் குணமிருக்கும். .இவரிடம் இரண்டும் இணைந்தேயிருக்கும். கவியரங்குகளில் கவிபாடும் தமிழ்ப்பேரொளி விழுப்புரம் – புதுவை தடத்தில் அரசுப் பேருந்து இயக்கும் ஐம்பது வயது இளைஞர். பல்துறைக் கவிஞர்களைக் கண்ட சங்கக் காலத் தமிழ்க்கவி மரபு  தற்போது விழுப்புரம் புதுவைத் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை!

    தமிழ்ப்பாவையின் பாடுபொருள்

    தமிழின் மீது பாடப்பெற்ற அல்லது தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற அத்தனைப் படைப்புக்களும் தமிழின் பெருமையைச் சொல்வதாகவும் தாய்மொழி காக்கத் தமிழினத்தைத் தட்டியெழுப்புவனவாகவே அமைந்திருக்கின்றன.  இதில் என்ன சிக்கல் என்றால் தமிழ்விடு தூது என்னும் நூலுக்குப் பின்னாலே வந்த படைப்புக்கள் எதுவும் தமிழ்விடுதூதினை விஞ்ச இயலவிலலை. இவற்றுள் தனித்தன்மை வாய்ந்தது ஒரே நூல்தான். அது பாவலர் ஐயா பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவை. அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் சிறையில் எழுதப்பட்டது. இந்தி வந்தால் தமிழ் கெடும் இன்னும் ஏன் உறக்கம்? என்று பெண்குலத்தைத் தட்டியெழுப்பிய அருமையான நூல். யாப்புக்கு யாப்பு., கவிதைக்குக் கவிதை, கற்பனைக்குக் கற்பனை, உணர்ச்சிக்கு உணர்ச்சி, கருததுக்குக் கருத்து என்னும் இயைந்த கலவையால் ஆன இதயம் கவர்ந்த நூல் அது. எனவே பாவை இலக்கியத்தின் கருவறை ஆராய்ச்சி காலங்கடந்த ஒன்று. தமிழ்மொழியைத் தாயாக உருவகப்படுத்திப் பாடும் முறைமையும் பழைமையான ஒன்றுதான். இட்டளியின் வடிவ ஆராய்ச்சியும் அதன் அரிசி மாவு மூலத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதில் எள்ளின் முனையளவுப் பயனும் விளையப் போவதில்லை. பாவலர் பெருஞ்சித்திரனார் அவர்கள் கருத்தியலைப் பின்பற்றும் தம்பி பேரொளி இந்தத் தன்னுடைய தமிழ்ப்பாவையில் தமிழ் பாடுவதன்றி மொழி சார்ந்த வேறு சில சமுதாயக் கூறுகளையும் பாடியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைக்கான காரணம். கவிதை அறிவு சார்ந்ததன்று; உணர்வு சார்ந்தது. உணர்ச்சியின் வெளிப்பாடு. தூய நெஞ்சிலிருந்து வெளிப்படும் எந்தத் தூய உணர்ச்சியும் கவிதைக்கான காரணக் களமாகும்.  ஒரு பேருந்து ஓட்டுநருக்குத் தமிழில் மரபுக் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்ததற்கு இந்தத் தூய்மைதான் தலையாய காரணம். தெள்ளிய நீரும் தெளிந்த உள்ளமும் ஒன்று. அது பேரொளிக்குரியது.

    தமிழ்ப்பாவையின் உள்ளடக்கம்

    ‘பாவை’யைத்  தனிப்பட்ட சிற்றிலக்கிய வடிவமாக மரபுக்கவிஞர்கள் கருதுகிறார்கள். உண்மையில் ‘பாவை’ என்பதைத் தனி இலக்கியமாகத் தமிழில் காணமுடியவில்லை. தொடக்கக்காலப் பாவை என்பது ஆண்டாள் பாசுரங்களில் ஒன்றாகவும் திருவாசகத்தின் பதிகங்களில ஒன்றாகவுமே அறியப்படுகின்றன. திருவாசகத்தில் காணப்படும் திருச்சதகமும் ஒரு பதிகமே. அவற்றின் கட்டமைப்பும் மொழிச் செழுமையும் வெளிப்பாட்டு உத்தியும் தனியிலக்கியமாகக் கருதக் கூடிய அளவுக்கு இருந்ததால் அவை தனியிலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கலாம். அகப்பொருள் புறப்பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றுபறறி ஒரு நூறு பாடல்களால் பாடப்பெறும் இந்தச் சதகத்தின பாடுபொருள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு அமைந்திருக்கிறது என்பதைத் தமிழிலக்கிய வரலாறு குறித்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றி மணிவாசகர் பாடினார். நாடுபற்றிப் பாடப்பெற்ற சதகங்கள் பாண்டிமலச் சதகம் சோழமண்டலச் சதகம், கொஞ்குமண்டலச் சதகம், ஈழமணடலச் சதகம், தொண்டமலச் சதகம். முதலியவைகளும் சமயங்கடந்த நிலையில் யாழ்ப்பணாம் சதாசிவப் பிள்ளையால் எழுதப்பட்ட இயேசுநாதர் திருச்சதகம் குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய நந்தீசர் சதகம் முதலியவைகளும் இங்கே உள்ளன. குருபத தேசிகர் எழுதிய குமரேச சதகமும் கொல்லிமலை அறப்பளீசுவரர் மேல் பாடப்பெற்ற அம்பலவாணரின் அறப்பளீசுவரச் சதகமும் இங்கே உண்டு. கட்டமைப்பு உள்ளம் கவர்ந்துவிட்டால் கவிவாணர்கள் ஆதி பாடுபொருளை மாற்றி  தாம் விரும்பிய பாடுபொருளைக் கட்டமைப்புக்குள் அடைக்கலமாக்கிவிடுகிறார்கள்.

    பாவை இலக்கியக் கட்டுமானமும் சதகத்தை ஒத்தே விரிவடைந்துள்ளது. மார்கழிப் பாவையாக இருந்த அது மாதப்பாவையாக மாறியது கண்ணதாசனின் தைப்பாவையில். மாதவரம் துரை வசநதராசனின் கற்பனைக் காதலி தேன்பாவையாகத் தோற்றம் கொணடாள். தானே எழுதிக் கொள்ளும் தன் வரலாற்றைத் (AUTOBIOGRAPHY) தற்பாவையாக்கிக் காடடினார் வசந்தராசன்.  செல்வமீனாட்சி சுந்தரனார் தன்னுள்ளங்கவர் கள்வனைப் பெரியார் பாவையில் நாயகனாக்கியிருக்கிறார். இன்ன பொருளை இன்ன யாப்பில்தான பாடவேண்டும் என்னும் இறுக்கமான தமிழ்க்கவிதைக் கட்டுமானம் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது அலலது மாற்றப்பட்டுள்ளது என்பதை இதனால் அறியக்கூடும்.  அதாவது கட்டுமானத்தில் மரபையும் பாடுபொருளால் புதுமையையும் உள்ளடக்கிய அர்த்தநாரீஸவராக இந்தப் பாவையிலக்கியங்கள் திகழ்கின்றன என்றலும் பொருந்தும்.

    இயல்பிலேயே சமுதாயப் பார்வையும் மொழிப்பற்றும் படைப்பிலக்கிய ஆர்வமும் கொண்ட தமிழப்பேரொளி தமிழ்ச் சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் புரையோடி போயிருக்கின்ற போலித்தனத்தைச் சாடுவதற்கும் மொழிப்பற்றும் இனஎழுச்சியும் பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுவதற்கும் இன்னபிற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பாக இவ்விலககியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஓட்டுநர் எழுதிய இலக்கியம் என்பதற்காக எத்தகைய விதிவிலக்கும் இவருக்குத் தரப்படவில்லை. இலக்கியத்தில் ஏது இட ஒதுக்கீடு? வழக்கமான தரமதிப்பீட்டுக் கருவிகளைக் கொண்டே தமிழ்ப் பாவை அளககப்படுகிறது.

    அவையடக்க மரபு

    பாடுபொருளின் பெருமையையும் பாடுகிறவனின் சிறுமையையும் பாடுகிறவனே வெளிப்படுத்தும் ஓர் இலக்கிய உத்திக்கு அவையடக்கம் என்று பெயர். இது உத்தியே ஒழிய உண்மை ஆகாது. உண்மையில் இராமனை விடக் கம்பன் பெரியவன். கல்வியிற் சிறந்தவன் கம்பன். இராமனைக் கருணை மாக்கடல் என்று அறிமுகம் செய்கிறவனே கம்பன்தான். அறிமுகம் செய்யுமிடத்தில கம்பன் இருக்கிறான். தன்னுடைய படைப்பிலக்கியப் பேராற்றலைத் தானே வெளிப்படுத்திக் கொள்வது அடக்கத்திற்கு முரணாகும் ‘தன்னை வியந்து தருக்கலும் கேடு தரும்’ என்பது தமிழ்நெறி. எனவேதான கம்பனைப் போன்ற பெருங்கவிஞர்கள் அவையடக்கம் கூறிப் பிறரை வணங்கித் தம் படைப்புத் தொழிலைத் தொடங்கினார்கள். ஆனால் கவிஞர் அனைவரும் அவையடக்கம் கூறவில்லை. காப்பியங்கள் எல்லாமும் அவையடக்கம் கொண்டிருக்கவில்லை. சிலப்பதிகார்த்திலே ஏது அவையடக்கம்? பெரிய புராணத்திலே ஏது அவையடக்கம்? இந்தப் பின்புலத்திலேயே

    ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஓர்
    பூசை முற்றவும நக்குபு புக்கென
    ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
    காசில் கொற்றத்து இராமன் கதையரோ

    என்னும் கம்பனின் அவையடக்கத்தைக் காண வேண்டியதிருக்கிறது. பாடுபொருளோடு இரண்டறக் கலந்துவிடும் போது கடவுள் வாழ்த்து தொடங்கிய கவிஞர்கள் கூட அவையடக்கத்தை மறந்துவிடுகிறார்கள். அபிராமியின் பெருமை பாட வந்த அபிராமிபட்டர் அபிராமி அந்தாதிக்கான அவையடக்கத்தை நூலின் இருபததாறாவது பாடலில் பதிவு செய்திருக்கிறார்.

    ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
    காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
    சாத்தும் குழல் அணங்கே.! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
    நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே!

    நூலின் தொடக்கத்தில் நூலுக்கு வெளியே நின்று பாடப்பட்ட அவையடக்கம் நூலுக்கு உள்ளே பல பாடல்கள் சென்ற பிறகு பாடப்பட்டிருக்கிறது என்பதை இதனால் அறியமுடிகிறது. நூலுக்கு வெளியிலும் இல்லாமல் இடையிலும் இல்லாமல் தமிழ்ப்பாவையின் முதற்பாடலிலேயே அவையடக்கத்தை நூற்பகுதியாகவே வைத்துப் புதுமை செய்திருக்கிறார் தமிழ்ப் பேரொளி

    “வார்குழல் பின்னலே வண்ண நிலவே!
    சீர்த்தமிழ் உன்னைச் சிறுவனோ யாதறிவேன்?
    கூர்மதியாள் என்றன் குறைகள் களைந்திடுவாய்!
    நாரோடு பூமணக்கும் நற்றமிழே நீ வாழி!
    கூறான வாளேந்திக் குற்றங்கள் நீ தடுப்பாய்!
    ஆர்த்தென்னை நீ தாங்கு!”

    என்றெல்லாம் பெருந்தமிழ் அன்னையைப் பேதை நிலையிலிருந்து அவையடக்கம் பாடியிருக்கிறார்.  நு{லின் அகவுறுப்பாகப் பாடப்பெற்ற இந்த அவைபயடக்கம் ஏனைய எட்டடிக் கொச்சமாக இலலாமல் பத்து அடிகளைக் கொணடிருப்பதும் ஒரு சிறப்பு.

    கட்டுமானப் பெருமையும் உள்ளடக்க வெறுமையும்

    தென்பசியார் முகநூலில் பயணிக்கும் ஒரு கவிஞர். அவர் கவதையைப் பற்றி அறிவதற்கு முன்பாகவே யாப்பினைப் பற்றி அறிந்திருக்கிறார். அல்லது அறியச்செய்பபட்டிருக்கிறார். கவதை உணர்வைச் சார்ந்தது என்பதையும் கடடுமானம் அறிவைச் சார்ந்தது என்பதையும் அவருக்கு அறிவுறுத்தும் ஆசிரியர் கிடடாமல் போனது தவக்குறையே. மேலும் பாடுபொருளும் கட்டுமானமும் தம்முள் பின்னிப் பிணைந்தவை என்பதை அவர் முற்றும் உணரவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. .இவரை வாழ்த்திப் பாடும் பாடலொன்று “யாப்பேந்தி வாழியவே” எனத் தொடங்கி முடிகிறது, இந்த வாழ்த்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தென்பசியார் வெண்டளை விரவிய கொச்சகக்கலிப்பாவில் இந்தப் பாவையை நிறைவு செய்திருக்கிறார். அதனால் உள்ளடக்கமாகிய பொருளும் அது வெளிப்படுத்தும உணர்ச்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பட்டுப் புடவையை இரவல் கொடுத்த கதை என்பது இதுதான்!

    “தொல்காப்பியம் தந்த தொல்;தமிழே”

    “இரணடடியில் வள்ளுவனும் இவ்வுலகு  நன்னெறியில்
    நிரந்தரமாய்ச் சென்றிடவே நீள் குறள் யாத்தளித்தான்”

    “காவியம் கண்டெடுத்துக் கம்பனவன் நற்றிமிழில்
    ஓவியம் தநதளித்தான் ஒண்டமிழ் தன்னிலே

    “தீவிரமாய்ப் பாடும் தேவாம் தெய்வ நு{லாம்”

    நற்றமிழ் தந்த நறுமணச் சொல்லெடுத்துத்
    தெற்றியில் பாடும திரிகூட ராசப்பர்

    வெற்றுடல் மேனியிலே வெந்தழல் மேலிடும்
    பற்றில்லாப் பட்டினத்தார் பாட்டெல்லாம் பாடிவைததார்”

    குறிஞ்சிப் புகழ்பாடிக் கொற்றவன் நட்பேந்தி
    அறிவோங்கும் பண்ணெலலாம ஆர்த்தளித்தார்

    நம் கபிலர்”

    “நெறிகள் வகுத்தளித்தார் நீதி நூல் ஔவையாரும்”

    “சொற்சிலம்பாடிய சேரன் இளங்கோவன்”

    “கொற்றவனைக் கூடிய ஆண்டாள்”

    பொற்றமிழின் மேகலையாய்ப் பெண்ணணியும் சேர்த்தளித்த சாத்தனார்”

    என்று முந்தைய நூல்களைப் பட்டியலிடுவதை இவர் மரபுவழிச் சிந்தனை என்று எண்ணிக் கொள்கிறார். இத்தகைய தொகுப்புக்களையும் தொன்மங்களில் சித்தரிக்கப்படும் கதைகளையும் பெரியபுராணச் செய்திகளையும் எல்லாம் ஒன்றாக்கி “எல்லாரும் நீயாய் இருந்தமையால்” என்று தமிழ்விடு தூது ஆசிரியர் கவிநயத்தோடு விளித்து எழுதியிருக்கிறார் என்பதை இங்கே சுட்ட வேண்டியது என் கடமையாகிறது.

    தமிழ்ப்பாவையும் தமிழினமும்

    தமிழைப் பற்றித் தமிழில் பலரும் பல வடிவங்களில் பாடியிருந்தாலும் பாவேந்தரை விஞ்ச முடியவிலலை என்பது ஆய்வுண்மை. தமிழைப் பாடுகிறபோது ‘தன்னை யிழந்து தன் நாமம் கெட்டு’விடுவார் பாவேந்தர். ஆனால் தமிழுணர்ச்சி என்பது அவரோடு நின்று விடாதல்லவா? அதனால் அவ்வுணர்ச்சி இன்றுவரைத் தொடர்கிறது. தமிழ் நேற்றும் பாடுபொருள்.இன்றும பாடுபொருள். நாளையும் பாடுபொருள். காரணம் அது ஒரு வினைவேக மாற்றி! தமிழனைத் தூங்காது காக்கும் துணைவன் தமிழே! தமீழனத்திற்குத் தமிழ் என்பது உயிர் வளி!

    தமிழைப் பற்றிப் பலரும் பாவையிலக்கியம் செய்திருப்பதால் பாடுபொருளால் இநத நூல் புதுமை படைக்கவில்லையெனினும் தமிழைப் பாவையிலக்கியத்தால் தானும் பாடவேண்டும் என்னும் கவிஞரின் வேட்கை கொஞ்சம் தணிந்திருக்கிறது. நல்ல கணவனைப ;பெற வேண்டும் என்னும் வேண்டுதலைப் பழந்தமிழ் பாவையிலக்கியத்தின் உள்ளடக்கமாக இருந்தாலும் காலச் சூழலுக்கேற்ப உள்ளடக்க மாறுதல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.  பெருஞ்சித்திரனார் செந்தமிழ்ப் பாவை எழுதியதற்கும்  வசந்தராசன் தேன்பாவையை தீட்டியதற்கும் செல்வமீனாட்சி சுந்தரம் பெரியார் பாவை எழுதியதற்கும் இதுதான் காரணம்.  எனவே கட்டுமானம் ஒன்றாயினும் உள்ளடக்கம் மாறுபடுவது இலக்கிய வளர்ச்சியையே குறிக்கும்.

    “ஒற்றுமையை நாளும் உருக்குலையச் செய்கின்றார்
    கற்றுணரும் நம்மொழியைக் கண்டபடி ஏசுகின்றார்!
    சற்றும் உனக்கதிலே சங்கடங்கள் நேரலையோ?
    வெற்று முழக்கங்கள் வீண்வேலை தானே?
    வற்றும் தமிழ் வேட்கை! வண்டமிழும் வாழுமோ?
    பெற்றுவக்கும் மேன்மையெல்லாம் பேராண்மை செந்தமிழால்!
    குற்றம் குறையிருப்பின் கூடிக் களைந்திடுவோம்!”

    என்ற கவிதையில் ஒரு உண்மைத் தமிழ்க்கவிஞனின் உள்ளத்து ஆதங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படுவதைக் காணலாம்.

    தமிழ்ப்பாவையின் ‘தொடையழகு’

    தமழில் உள்ள் நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களுள் பலவற்றை இந்தத் தமிழ்ப் பாவையில் காண முடிகிறது, தொடைவிகற்பங்கள் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும். தொடைவிகற்பங்களின் இனிமையைப் பாடலைச் சொல்லிக் கேட்கிறபோது உணரலாம்.  எந்தச் சிறப்பும் இல்லாத செந்தொடைப் பாட்டுக்கள் அவ்வளவாகச் சிறக்காது, அவை சிறக்க வேண்டுமானால் பாடுபொருள் மிக நுண்ணியதாக அமைநதிருத்தல் வேண்டும். தமிழ்ப்பாவை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு பாடுபொருளாதாதலின் தொடை விகற’பங்களின் செவிப்பயன்பாடு அதிகமாகவே தெரிகிறது.

    தொடுகிற இடமெல்லாம் தட்டுப்படுகின்ற தொடையழகு! உடம்புக்குத்தான் உயிர் காவல். உயிருக்கு உடம்பு காவல். அல்ல. அருவப் பொருளாகிய உயிரின் இருப்பை உருவப் பொருளாகிய உயிரே உறுதி செய்கிறது. உணர்ச்சியும் கருத்துமாகிய கவிதையின் உயிர்ப்புப் பகுதிகளை எண்ணிக் கவிதை செய்வார் எண்ணிக்கையில் சிலரே! ஆனால் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும் தொடைவிகற்பங்களில் கவனம் செலுத்திக் கவிபுனைவார் எண்ணிக்கையில் பலர். ஒரு நல்ல கவிதையில் கருத்தியலாகிய அகவழகும் புறவழகாகிய தொடைவிகற்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்தால்தான் கவிதை சிறக்கும். காலத்துக்கும் அது வாழும்.! கம்பன் கவிதையின் நிலைப்பாட்டுக்கும் காளமேகத்தின் கவிதை வேடிக்கைப் பொருளானதற்கும் இதுதான் காரணம். சொல்ல வேண்டியவறறைச் சொல்கிற முறையில் சொல்வதுதான் கவிதை!.

    கருத்தியலை உணர்ச்சியோடும் ஏனைய புற அழகுகளோடும் கலந்து கவி செய்வார் சிலருள் தமிழ்ப்போரொளியும் ஒருவர். முப்பது கலிப்பாக்களில் இழைந்தொளிரும் தொடைவிகற்பங்களைச் சுட்டுவது கற்பாருக்கு ஒரு வழிகாட்டியாக அமையக்கூடும்.

    1. “பதிகமெல்லாம் பாடிடவே பற்றுவைத்தேன் பாடிடவே” என்பதில் முற்று மோனையும்
    1. “நாரோடு பூமணக்கும் நற்றமிழே! நீ வாழி என்பதில் பொழிப்பு மோனையும்
    1. “பீடு நடைபோட்டுப் பேராண்மை கூடட்டும்” என்பதில் உயிரெதுகையும்
    1. “அன்னைத் தமிழுக்கோர் ஆலயம் என்றெண்ணி” என்பதில் ஒரூஉ எதுகையும்
    1. “இன்பம் பயக்குமாம் இன்தமிழ் என்றாங்கு” என்பதில் மேற்கதுவாய் எதுகையும்
    1. “சிற்பம் போல் சீத்தலைச் சாத்தனார் சிந்தையிலே” என்பதில் கீழ்க்கதுவாய் மோனையும்
    1. நூல் முழுமையும் அடியெதுகைகளும்

    அமைந்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கவிதைத் திருமகளை நடமாட விட்டிருக்ககிறார் போரொளி. தடங்கண்டு காரோட்டும் ஒரு தமிழ்ப்பிள்ளையின் தடம் மாறா கவிதைச் செப்பம் கவனத்திற்குரியது. பாராட்டுக்குரியது. பாவையே அழகு என்றால் அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் தொடைவிகற்பங்களைப் பற்றி இன்னும் எழுதலாம்.

    இதுதான் மரபுக் கவிதை. இது உருவத்தால் மணிவாசகரையும ஆண்டாளையும் முன்னிறுத்தி உள்ளடக்கத்தால் பெருஞ்சித்திரனாரைப் பின்னிறுத்துவதால் மரபுக் கவிதையே! பாடலைத் தொடங்குவதற்கு முன்பே விளம் விளம் மா என்றும் காய் காய் கனி என்றும் வாய்பாடுகளுக்காகப் பாடல் புனைவோர் கவிதைத் தொழிலுக்கும் போரொளியின் கவிதைத் தொழிலுக்கும் வேறுபாடு உண்டு. வாய்பாடுகளுக்காகக் கவிதை எழுதுவது என்பது வேறு. கவிதைகளுக்குள் அமைந்துள்ள வாய்பாடுகளைக் காண்பது பேறு!. முன்னதில் வாய்பாடுகள் முன்னிற்கும். பின்னதில் கவிதை சிலிர்க்கும்.! வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் பின்னிறுத்தி எழுதியிருந்தால் கம்பன் இன்னும் பாலகாண்டத்தில் பாதியைக் கூட எழுதியிருக்க முடியாது.

    தமிழ்ப்பாவைபயில் கண்ட உத்தி மரபு

    நான் அடிக்கடிக் குறிப்பிடுவதுபோல நூன்மரபில் தொடங்கி மரபியல் முடிய உள்ள தமிழ் மரபுகளே தமிழ்க்கவிதை மரபுமாகும். தொல்காபபியமே ஒரு கவிதையியல் நூலாதலின் அதன் உள்ளடக்கம் அத்தனையும் தமிழ்மரபே. இதனை உணராத பெரும்பாலோர் யாப்பை மட்டுமே அதிலும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முதலியவற்றையே மரபெனக் கருதி மயங்குவர். இதனால் என்ன விளைவு? எனின் கவிதைகளில் யாப்பினைக் கண்டறிவதே ஆராய்ச்சி என்றாகிவிடுகிறது, அறிவு கண்கொண்டு கவிதையை சுவைக்க எத்தனிக்கிறவன் எவனும் கவிதை ரசிகனாக இருக்கவே முடியாது, அப்படி இருந்திருந்தால் நாம் ஒரு டிகேசியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் கவிதை உத்திமரபுகள் தமிழ்ப் பாவையுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காண முடியும்.

    “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

    என்பார் திருவள்ளுவர். இவ்விரண்டனையும் இவராகச் சொல்லாமல் சிலர் சொல்வார்கள் என்று எடுத்துக்காட்டுவதுதான் உத்தி மரபு. கணிதம் என்பார் சிலர். இலக்கியம் ;என்பார் சிலர். நானோ இவையிரண்டுமே மானுடத்திற்குத் தேவையானவை என்பதுதான் என் கருத்து’ என்கிறார் திருவள்ளுவர். “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்னும் பாட்டு திருவள்ளுவர் உத்தி கண்ணதாசன் சிந்தையில் குடிகொண்ட மரபு.

    “தர்மம் என்பார் நீதியென்பார்! தரம் என்பார்!
    சரித்திரத்தைச் சான்று சொல்வார்!
    தாயன்பு பெட்டகத்தைச் சந்தியிலே நிறுத்திவிட்டுத்
    தனமான வீரர் என்பார்!
    மர்மமாய்ச் சதிபுரிவார்! வாய்பேசா அபலைகளின்
    வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்!
    கர்ம வினையென்பார்! பிரம்மன் எழுத்தென்பார்!
    கடவுள் மேல் குற்றம் என்பார்!”

    திண்ணைப் பேச்சு வீரர்களைப் பட்டுக்கோட்டை அடையாளப்படுத்துகிற வெளிப்பாடடு உத்தி மரபு  இது. இதுபோலப் பல பாடல்களைக் ;காட்டலாம். இந்த மரபினை ஒரு அகப்பாடலில் வைத்துக் காடடினார் கண்ணதாசன்.

    “பொன்னென்பேன்! சிறு பூவென்பேன்”
    காணும் கண்ணென்பேன்! வேறு என்னென்பேன்?”

    இயல்பான கவிஞர்களுக்கு இது கைவந்த கலை!.

    “பொன்னெனபார்! பூவென்பார் போற்றிப் புகழ்ந்திடுவார்!
    தன்னையே ஈந்து தமிழென் உயிரென்பார்!
    மன்றம் முழுதும் மணித் தமழ் போலில்லை!
    என்றே முழங்கிடுவார் ஏற்றங்கள பெற்றிடுவார்!
    தொன்மை மொழியென்பார்  தென்றலே வீசுமென்பார்!
    நன்மை பயக்கும் என்பார் நல்லதே செய்யுமென்பார்!
    இன்னல் வரும்போது எங்கேதான் செல்வாரோ?
    நண்ணலே வேண்டாமோ நற்றமிழே எம்பாவாய்!

    என்னும் பாவையுள் இந்த உத்தி மரபு கவிஞரையும் அறியாமல் பதிந்திருப்பதைக் காணலாம்.

    சிறுமை கண்டு பொங்கும் தென்பசியார்

    பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவையில் சில தொடர்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    “வல்லடிமை கொண்டார், வரும்பொருளிற் பங்கெடுத்தார்!
    மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்!
    தொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்”

    “கற்றவரோ செந்தமிழால் காசு பணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்”

    “கோல்வலியால் — ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
    வால்பிடிக்கச் செய்த வடவர் கொடுமொழியை
    மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்”

    இந்த எழுச்சியும் வேகமும் பேரொளியின் பாவையிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. தமிழை அழிப்பதற்குப் பகைவர செய்துவரும் பல்லாண்டு முயற்சிக்கு நம்மவரே துணை செய்யும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, அது பற்றி எழுதப்போனால் அது ஆராய்ச்சிக் கட்டுரையாக மாறிவிடும்.

    மாசு மருவற்ற மாத்தமிழ் போற்றிடவே
    தூசு படியாமல் தூயதமிழ் காத்திடவே
    நேசம் மிகுந்தோராய் நேர்வழி சென்றெங்கும்
    கூசும் வசையறியார்! கூடித்தமிழ் வளர்த்தார்

    இது இருந்தநிலை. ஆனால் இன்றைய நிலைஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ? பாடுகிறார்!

    பேசும் மொழிக்கோ பழி வந்து சேருகையில்
    காசு பணம் யாவும் கண்ணை மறைக்கிறதே!
    சூசகமாய் வெல்லுதற்குச் சூழ்ச்சிவலை பின்னுகின்றார்!
    காசினியில் வீழ்ச்சி கண்டிடுமொ எம்பாவாய்?

    இந்த ஆதங்கம் நூல் முழுமையும் இழையோடுகிறது. “கேடு நினைப்போர்க்குக் கேண்மை வழிசென்று சூடு கொடுத்திடவா!” என்று தமிழையே அழைக்கின்றார்.

    ‘சதிவலைப் பின்னலிலே சாய்ந்திடுமோ? எந்தமிழோ
    விதிவழி என்றே வியன்தமிழை விட்டிடவோ?
    கதியென்று உன்னையே காலமெல்லாம் போற்றி
    துதித்து நிற்கும் கையுடையார் துன்பமற்றோர் எம்பாவாய்!”

    ‘தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்னும் பாவேந்தர் அடி பேரொளியின் பாவையில் ‘துன்பமற்றோர்” என வெளிப்படுகிறது. ‘தமிழ்க்காப்பு’ என்பதை மையப் பொருளாகக் கொண்டு பேரொளி பாடியிருக்கும் இந்தப் பாவையுள் மரபின் கூறுகள் மலரின் மணம் போல இழைந்து பற்றிலாத ஒரு சமுதாயத்தின் மேல் பாடப்பெற்ற பதிகம் போல் நிலவுகிறது.

    நிறைவுரை

    பாவை பாடிக் கோவை பாடியவர் மணிவாசகப் பெருமான். இதற்குப் பின்னால் இவர் என்ன பாடப்போகிறார் என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. முகநூல் கண்ட கவி முத்துக்களில் ஒருவர். என்ன? யாப்புதான் கவிதை என்னும் தவறான போதனைக்கும் வழிகாடடுதலுக்கும் ஆளாகிப் போனவர். எழுபத்தைந்து மதிப்பெண் வாங்க வேண்டிய தமிழ்ப்பாவை வெறும் அறுபது மதிப்பெண்களை மட்டும் பெற்றுத் தேருகிறது. இருந்தாலும் அது முதல் வகுப்பு எனக் கருதி அமைதியடையலாம். அவர் யாப்பேந்தி வாழ்ந்ததெல்லாம் போதும். கற்பனை ஏந்தி கவிபுனையட்டும்! உணர்ச்சிகளைப் பேராறாய் ஓடவிடட்டும். சமுதாயச் சிக்கல்களைப் ;பாடுபொருளாக்கட்டும். பாவை பாடிய வாயால் ஒரு பரணி பாடட்டும்; தமிழ்க்கவிதைகள் நிலைத்திருப்பதற்குக் காரணம் யாப்பே என்னும் மயக்கம் நிலவுகிற வரை தமிழ்நாட்டில் தமிழ்க்கவிதை செழிக்கவோ சிறக்கவோ வாய்ப்பில்லை. அவர்களே எழுதி அவர்களே அச்சடித்து அவர்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். தேவைப்படுகிற நேரத்தில் அவர்களே விருதுகளை அளித்துக் கொள்ள வேண்டியதுதான். கவிதையின் நிலைதான் கவலைப் பட வைக்கிறது, நான் தமிழ்ப்பேராளியிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.

    “பனைமரமும் தென்னை மரமும் கூட முறையே ஓலையையும் கீற்றையும் தாம் இருந்ததற்கு அடையாளமாக ஒரு வடுவை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது. அது மனிதர்கள் கால் பதிந்து மரத்தில் ஏறுவதற்குத் துணையாய் நிற்கிறது. அதுபோல் தாம் வாழ்ந்ததற்கும் அடையாளமாக ‘தமிழ்ப் பாவை என்னும் தன்னிகரற்ற நூலைத் தரணிக்கு அளித்திருக்கிறார்”

    என இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் கூறியதைவிட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்! தமிழ்ப் பேரொளியின் விரல்கள் வெல்ல என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 33

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 33

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசனின் தன்னிரக்கம் பாடும் “தற்பாவை”

    முன்னுரை

    “புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்?” எனக் கம்பராமாயணத்தில் ஒரு வரி வரும். கவிதைகளையே உயிர்மூச்சாகக் கொண்டிருப்பதாலும் அவற்றுள் புதியன காணும் போது பூரிப்படைவதும் புளகாங்கிதம் கொள்வதும் சிக்கெனப் பற்றிக் கொள்வதும் எனக்கு இயல்பு. திருவெம்பாவை, திருப்பாவை கண்ட தமிழுலகில் தைப்பாவையும் செந்தமிழ்ப்பாவையும் மறுமலர்ச்சிக் கவிதைகளாக வெளிவந்தன. கண்ணதாசனும் பெருஞ்சித்திரனாரும் அவர்கள் கண்ட அழகியலையும் கருத்தியலையும் அந்தப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர்கள் நிரலில் வரும் தம்பி வசந்தராசன் தேன்பாவை, கலைஞர் பாவை, தலைமுறைப்பாவை என மூன்று பாவைகளை எழுதியும் தமிழ்த்தாகம் தீராமல் ‘தற்பாவை’ என அருமையான கவிதைப்படைப்பை முகநூலில் எழுதியிருக்கிறார். இன்றைய சங்கப் பலகை முகநூலே என்னும் உண்மை உணர்ந்தவர்கள் சிலராயினும் தக்கமுறையில் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வித்தகக் கவிஞர்கள் சிலருள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் தகுதி தம்பி வசந்தராசனுக்கு உண்டு என்பது அவர் கவிதைகளால் பெறப்படும் உண்மையாகும். ‘காலம் இன்னும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே’ என்னும் ஆதங்கத்தால்  கூட இதனை எழுதியிருக்கக் கூடும். பாவை இலக்கியத்தில் தன்னைப் பாடுபொருளாக்கிப் பாடும் அந்தப் புதுமையான உள்ளடக்கததை இந்தக் கட்டுரை சுருக்கமாகக் காட்சிப்படுத்த முனைகிறது.

    தன்னைப் புகழ்தல் தகுமா?

    இதிகாசங்களின் எதிர்மறைத் தலைவர்களான சூரபத்மன், துரியோதனன், இராவணன் போன்றோர் ஆணவத்தின் காரணமாக அழிவெய்தியவர்கள். ஆனால் அவர்களைப் படைத்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கோ வில்லிப்புதூர் ஆழ்வாருக்கோ கம்பனுக்கோ அழிவில்லை. காப்பியத்தில் அழிவைச் சந்திக்கும் பாத்திரங்களும் அவற்றைப் படைத்தவர்களும் படிப்பவர்கள் மனத்தில் என்றைக்கும் நிலைபெறுகிறார்கள். தற்புகழ்தல் என்பது வாழ்வியலில் ஓர் எதிர்மறைப் பண்பு என்பதில் ஐயமில்லை. வாழ்வியலிலும் கூட அதனை ஏற்றுக் கொண்டு சில விதிவிலக்குகளை இலக்கணமும் இலக்கியமும் ஏற்பளித்திருக்கிறது.  பழம்பெரும் தமிழிலக்கணமாகிய தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு உண்டு. தலைவனுடைய பிரிவினைத் தாங்காது தலைவி புலம்புங்காலத்து பிரிவின்கண் தான் பெறப்போகும் பெருமைகளை நிரல்படுத்தும் தலைவனைக் கண்டு தலைவி பிரிதற்கு ஒப்புவாள் என்பது அதன் கருத்து.

    “கிழவி முன்னர்த் தற்புகழ்க் கிளவி
    கிழவோன் விழைவயின் உரிய என்ப” (கற் – 40)

    “தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று” என்று எழுதுவார் நச்சினார்க்கினியர். இதிலிருந்து ஓர் உடன்பாட்டுப் பயனைத் தருமானால் தன்னைப் புகழ்தலையும் ஏற்றுக் கொளளலாம் என்பதைத் தமிழ் வாழ்வியல் நெறி அனுமதிக்கிறது என்று கொள்ள முடியும்.

    “தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
    கொன்னே வெகுளி பெருக்கலும் முன்னிய
    பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும
    செல்வம் உடைக்கும் படை.”

    என்னும் திரிகடுகத்தை வழிமொழியும் நன்னூல்

    “தோன்றாத் தோன்றித் துறைபல முடிப்பினும்
    தான்தற் புகழ்தல் தகுதி அன்று”

    என ஆணையிடுகிறது. ஆணையிட்ட அடுத்த நூற்பாவிலேயே அதற்கும் விதிவிலக்குத் தருகிறது.

    “மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்
    தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
    மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
    தன்னை மறுதலை பழித்த காலையும்
    தன்னைப் புகழதலும் தகும் புலவோர்க்கே”

    இங்கேதான் இன்றியமையாச் சில சூழல்களைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.  மனறத்து ஓலை கொண்டு செல்லும்போதும், தன்னுடைய ஆற்றல் உணராதவர் இடையிலும், அவையில் வெல்ல வேண்டிய கட்டாயச் சூழலிலும் தன் மானக்கேட்டிற்கு ஆளாகும் நிலையிலும் ஒருவன் தன்னைப் புகழ்ந்து கொள்ளலாம் என்றே விதிவிலக்கு அளிக்கிறது. முதற்காரணத்தைத் தவிர ஏனைய காரணங்களும் சூழ்நிலைகளும் இன்றைக்கும் அப்படியேதான் இருக்கின்றன என்பதோடு இன்னும் வளர்ந்திருக்கின்றன என்றுதான் கருத வேண்டியுள்ளது.  காரணங்கள் நிலைக்கும் வரை காரியங்கள் நடந்தே தீரும். எனவேதான் கவிதைக் களமாடும் உண்மைக் கவிஞர்கள் தங்களுக்குரிய ஏற்பு அளிக்கப்படவில்லையே என்னும ஆதங்கத்தினாலும் தங்களின் கவிதைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றனவே என்னும் கவலையினாலும் கவனிக்கப்பட்டாலும் சரியான தளத்தில் அடையாளம் காணப்படவில்லையே என்னும் விரக்தியினாலும் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டி;ய  நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்வரும் பத்திகள் இதனை விளக்கும் உரைவிளக்கமாகவே கருதப்படலாம்.

    மகாகவி பாரதியும் தற்புகழ்தலும்

    பாட்டுக்கு உரிமைகோரும் பாரதியை வறுமை தத்தெடுத்துக் கொண்டது என்பதை வரலாறு வருத்தத்தோடு குறித்து வைததிருக்கிறது. அந்த வறுமையைப் போக்க எட்டையபுர சமஸ்தான மன்னர் சேதுபதிக்கு உதவி கோருகிறார். அருணாசலக் கவிராயர் முத்துகிருஷ்ண முதலியாருக்கு எழுதிய சீட்டுக் கவி புகழ்பெற்றதொன்று. அவரைப் பின்பற்றியே மகாகவி பாரதியும் எட்டையபுர ஜமீன்தாருக்குச் மூன்று முறை சீடடுக் கவி எழுதினார். அந்த மூன்று கவிதைகளிலும் எந்த ஒரு புள்ளியிலும் அவர் மன்னரிடத்தில் இரந்தார் இல்லை. மன்னரைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற சங்க இலக்கிய புலவர் பெருமக்களை இந்த இடத்தில் பாரதி விஞ்சி நிற்கிறார். இது வரலாறு. எந்த ஒரு சங்கப் புலவனும் தன்பெருமை கூறியதாகப் பதிவுகள் இல்லை.

    “மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
    மன்னரிலை யென்று மாந்தர்
    இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
    புனைந்தபொழு திறந்த தன்றோ?”

    என்று மன்னன் பெருமை சொல்லும் பாரதி அடுத்த அடியிலேயே மன்னனுக்கு இணையாகத் தன்னைத் தானே பாடித் தற்பெருமை சொல்லிக் கொள்ளும் போக்கைக் காணமுடிகிறது,

    “புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
    தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
    கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
    வசையென்னாற் கழிந்த தன்றே?”

    “உன்னால் ஒரு வகை நீங்கியதுபோல என்னால் இன்னொரு வசை நீங்கியது” மன்னனுக்கு இணையாகப் பாடியிருக்கிறார் பாரதி.  இது

    `மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ?
    உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்?– என்னை
    விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
    குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’

    என்னும் மரபின் தொடர்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது. இதனைப் பாட்டை நன்குணர்வோர் அறிந்து கொள்ளலாம். பின்னும் ஒரு சீட்டுக்கவியில் பாரதியின் பெருமிதம் கொடிகட்டிப் பறக்கிறது என்பதைக் காணமுடியும்.

    “பாரிவாழ்ந்திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின்கண்ணே
    ஆரிய! நீயிந் நாளில் அரசு வீற்றிருக்கின்றாயால்!
    காரியங்கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
    நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லாயோ?

    விண்ணள வுயர்ந்த வெங்கடேசு ரெட்ட மன்னா!
    பண்ணள வுயர்ந்த தென்பண்! பாவளவுயர்ந்த தென்பா!
    எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ் கவிஞர் வந்தால்
    அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகிலாயோ?

    கல்வியே தொழிலாக் கொண்டாய்! கவிதையே தெய்வமாக
    அல்லுநன் பகலும் போற்றி அதை வழிபட்டு நின்றாய்!
    சொல்லிலே நிகரிலாத புலவர் நின்சூழலுள்ளால்
    எல்லினைக் காணப்பாயும் இடபம்போல் முற்படாயோ?”

    இந்தச் சீட்டுக்கவியில் உதவி கேட்கின்ற பாரதி, தன்னைத் தேடிவந்து உதவி செய்யாமல் போனது பூபதியின் தவறு என்பதை எவ்வளவு உரிமையுடனும் பெருமிதத்துடனும் பாடுகிறார் பாருங்கள். “ நினைகிலாயோ? விரைகிலாயோ? முற்படாயோ?” என்னும் வினைகளெல்லாம் பூபதி செய்ய மறந்த வினைகளாகப் பாரதி குறிப்பிடுகிறார்.  “நீ மண்ணை ஆளுகின்றாய்! நான் பண்ணை ஆளுகின்றேன்! என்பதுதான் பாரதியின் பிரகடனம்!

    கண்ணதாசனும் தற்புகழ்தலும்

    திரைப்படக் கவிஞனாகவே தமிழ்ச் சமுதாயத்தால் கண்டறியப்பட்ட கண்ணதாசன் தன்னைத் தானே உருப்பெருக்கிக் காட்டும் பாடல்களும் உண்டு. இதனைக் கூட அன்பர் பலரும்,

    “காவியத் தாயின் இளையமகன் நான்
    காதல் பெண்களின் தனித்தலைவன்
    பாமர சாதியில் தனிமனிதன் நான்
    படைப்பதனால் என்பேர் இறைவன்”

    என்னும் திரைப்படப் பாடல் வழியாகத்தான் காண்பார்கள். ஆனால் கண்ணதாசன் மாபெரும் கவிஞனாக வந்திருக்க வேண்டியவன். அவனுடைய படைப்பாற்றலில் ஐந்து விழுக்காடு கூட அவன் கவிதைகளில் வெளிப்படவில்லை.  தன்னைத் தானே வெளிப்படுத்திக் காட்டும் கவிதைகளில் அவன் தன்னைப்புகழ்ந்து பாடிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை.

    “கவிஞன்யானோர் காலக்கணிதம்
    கருப்படுபொருளை உருப்பட வைப்போன்
    புவியில் யானோர் புகழுடைத் தெய்வம்!
    பொன்னினும விலைமிகு பொருளென் செல்வம்!
    இவைசரியென்றால் இயம்புவது என் தொழில்!
    இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை!
    ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்முன்றும்
    அவனும் யானுமே அறிந்தவை அறிக!
    செல்வர்தம் கையில் சிறைப்பட மாட்டேன்!
    பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

    பாசம் மிகுத்தேன பற்றுதல் மிகுத்தேன்!
    ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
    உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்!
    இல்லாயின்எமர் இ;ல்லந் தட்டுவேன்!
    வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்!
    வாய்ப்புற்த் தேனை ஊர்ப்புறம்தருவேன்!
    பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
    சொலலாதன சில சொல்லிட முனைவேன்!
    புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது!
    இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது!

    வளமார் கவிகள் வாக்கு மூலங்கள்!
    இறந்த பின்னாலே எழுதக தீர்ப்பு!
    கல்லாய் மரமாய் காடுமே டாக
    மாறாதிருக்க நான வனவிலங்கல்லன்!
    மாற்றம் என்பது மானிடத்தத்துவம்!
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
    எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
    என்பதறிநதே ஏகுமென் சாலை!
    தலைவர் மாறுவர்! தர்பார் மாறும்!
    தத்துவம் மட்டுமே ஆட்சயப் பாத்திரம்!

    கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க!
    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
    நானே தொடக்கம்! நானே முடிவு!
    நான் உரைப்பதுதான் நாட்டின்சட்டம்!

    வெற்றசைகளே இல்லாத பாடல் இது. ஒவ்வொரு சொல்லும் அசையும் கவிஞனின் பெருமித உணர்வைப், பேருள்ளத்தை, நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டும் அருமையான வெளிப்பாடு. வசந்தராசனின் தற்பாவையைப் படிப்பதற்கு முன் இந்த ஒரு கவிதையையாவது வாசகர்கள் பயின்றுவிட வேண்டும் என்பது இந்தக் கட்டுரையாசிரியனின் பேரவா. பேராசை பெருநட்டமாகிவிடுமா?

    வைரமுத்தும் தற்புகழ்தலும்

    கவிஞர் வைரமுத்தைப் பற்றிய தனிபட்ட இயல்புகள் இங்கே ஆராயப்படவில்லை. ஆனால் ஒரு கவிஞன் என்ற நிலையில் அவருடைய எழுத்துக்கள், படைப்புக்கள் எதுவாயினும் அவை திறனாய்வுக்குரியவை என்பதில் யாருக்கும் ஐயமெழாது. அந்த வகையில் அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டாலும் சரியான தளத்தில் வைத்து அடையாளம் கண்டு கொள்ளாத நிலைகண்டும் தன்னைப் பற்றிய சமுதாயத்தின் குறைந்த மதிப்பீடு கணடும் கொதிக்கிறார்., குமுறுகிறார்.  தன் இரண்டு மகன்களுக்குச் சொல்வது போலப் பல பதிவுகளை அவர் இட்டிருக்கிறார்.

    “எனக்குப் பின்னால்
    என் நண்பர்கள
    நான் தும்மியதெல்லாம்
    சங்கீதம் என்பார்கள்

    எனக்குப் பின்னால்
    என் எதிரிகள்
    என் சங்கீதம் எல்லாம்
    தும்மல் என்பார்கள்

    இரண்டும்இல்லையென்று
    இயம்புக  மக்களே!”

    இந்தச் சொற்கள் எதனைக் காட்டுகின்றன? தும்மல் தும்மலாகவும் சங்கீதம் சங்கீதமாகவும் அடையாளப்பட வேண்டும் என்ற அவருடைய எதிர்பார்ப்பையும் அவற்றின் முரண் தன்னைப் பற்றிய முரணாகிவிடும் என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன.

    இவன்
    பூக்களின் புத்திரன்
    தாவர சிநேகிதன்
    ஆனால்
    சூரியனைச் செரித்தவன்
    என்று சொல்லுங்கள்

    என்னும் பகுதியில் தன்னுடைய கவிதையில் இழையில் இருவேறு பண்புகளைக் குறியீட்டின் வழியாக உணர்த்துகின்ற வைரமுத்து தன்னுடைய கவியாற்றலையும் மறைமுகமாகப பதிவிட்டுக் கொள்வதை அறிந்து கொள்ள இயலும்.

    இவன்தான்
    விமர்சர்களை மதித்தவன்
    விமர்சனங்களை மதிக்காதவன்
    என்று
    வெளிப்படுத்துங்கள்!

    என்னும் வரிகளில் வைரமுத்து வெளிப்படுத்துவது அவருடைய முனைப்பையா? கள விமர்சனங்களின் ஒரு பக்கச் சார்பையா என்பதை அறியக்கூடவில்லை.

    “எல்லோராடும்
    நெருங்கியிருந்தவன்
    ஆனால்
    எப்போதும் தள்ளியிருந்தவன்
    என்று எழுதுங்கள்!

    எந்தத் தேவதையும்
    இவனை
    ஆசீர்வதிக்கவில்லை!
    கண்ணீரிலும்
    ரத்தத்திலும்
    கவிதைக்கு மை தயாரித்தவன்
    என்று எழுதுங்கள்!
    என் கல்லறையில்
    தோற்றம் எழுதுங்கள்
    மறைவு?….
    எழுதாதீர்கள் !

    என்றெல்லாம் எழுதுகிறார் வைரமுத்து. இவற்றைத் தற்புகழ்தல் என்று சொல்லிக் கடந்துபோய்விட இயலாது. தகுதியுள்ளவன் சமுதாயத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்குவது அவன் உரிமை. அதனைச் சமுதாயம் அளிக்க முன்வராதபோதும், தகுதியற்றவருக்கு அது அளிக்கப்படும் போதும் அவன் பொசுங்கிப் போய்விடுகிறான்.

    “என் பிரிய எதிரிகளே!
    நீங்கள் என்மேல் தொடுத்த
    அம்புகளை எடுத்து
    நான் பல்குத்திக் கொள்கிறேன்

    என்னை அழுக்குப் படுத்திவிட
    உம்மால் ஆகாது

    என் வானம் தூசு தொடமுடியாத
    தூரத்தில் இருக்கிறது!

    என் பேனா பிரபஞ்சத்தின் கையில்
    தூரிகையாக இருக்கிறது!

    சமூகத்தின் சம்மதத்தோடு
    நான் கர்வமாயிருக்கிறேன்

    என்றெல்லாம் அவர் எழுதிக்காட்டுவது அல்லது பிரகடனப்படுத்துவது தன் முனைப்பால் அல்ல. ஆதங்கம்! எதிர்பார்ப்பு! ஏக்கம்! ஏமாற்றம் இவற்றின் வெளிப்பாடு. வைரமுத்தின் பதிவு சற்றே நடப்பியல் உண்மையை விட்டு விலகியதுபோல் தோன்றினாலும் அவர் எளிதாக இந்த நிலையை எட்டிவிடவில்லை என்பது மட்டும் உறுதி.

    நானே கவிஞன்

    தன் இயல்பை வெளிப்படுத்துவதன் மூலம் தன் கவிதைச் சமுதாயத்தைப் பாதிப்பதையே தற்புகழ்சசி எனக் கருதினால் வைரமுத்தின் சில வரிகள் பற்றி நாம் என்ன கருத்து: சொலல முடியும் என்பதைச் சிந்திக்கவே முடியவில்லை. நேரடியாகவே தன்னொயொத்த கவிஞர்களை அவர் தாக்குகிறார். தனக்குத் தெரிந்த பிறருக்குத் தெரியாது என்று உறுதிபடப் பதிவிடுகிறார்.

    “உள்ளுறை உவமம் இறைச்சி
    ரியலிசம் – சர்ரியலிசம்
    கட்டளைக் கலித்துறை
    காளமேகம் சிலேடை

    இப்படியாக எதிரிகளே!
    உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
    எனக்குத் தெரியாது

    எனக்குத் தெரிந்த ஒன்று
    உங்களுக்குத் தெரியாது
    அதன்பேர் கவிதை”

    ‘உங்களுக்குத் தெரியாது’ என்பதன் மூலம் எல்லாம் தனக்குத்தான் தெரியும் எனத் தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து. தன்முனைப்பை மையமாக வைத்து யாராவது  கவிதை செய்திருக்கிறார்களா என்று வினவுவோர்க்கு இதுதான் என் மறுமொழி.  இதிலே வேடிக்கை என்னவென்றால் இத்தகைய வைரமுத்தின் கையால் நூல் பரிசுபெறுவதை ஜென்ம புண்ணியம் என்று கருதுபவர்களும் தங்களைக் கவிஞர்கள் என்று கருதுகிறார்கள். உண்மை நிலவரம் என்னவென்றால், தற்காலத்தில் எழுதப்படும் கவிதைகள் பலவும் சொற்கோவைகளாகவே தோன்றுகின்ற சலிப்பின் வெளிப்பாடுதான் வைரமுத்தின் இந்தச் சினத்திற்குக் காரணம். கட்டளைக் கலித்துறை ஒரு அரியவகை யாப்பு என்பதும்  சிலேடை இடைக்கால இலக்கியங்களின் அடையாளம் என்பதும் அவர் அறிந்ததே! ஆனால் கவிதை என்பது இவற்றுக்கு உள்ளேயும் இவற்றைத் தாண்டியும் இழைகின்ற ஓர் உயிருணர்வு. என்பதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார் என்னைப் போல! புகழேந்தியின் வண்ணனைகள் பிறருக்கு அவ்வளவு எளிதாகப் பிடிபட வாய்பபில்லை.  காளமேகத்தின் சிந்திக்க இயலாத சிலேடையைப் பிறர் அவள்ளவு எளிதாக சிந்தித்துவிட முடியாது, ஆனால் கவிதைத் திறமாகக் காட்சியளிக்க வேண்டிய அவையெல்லாம் தற்காலத்தில் கவிஞர்களின் திறமாகக் காட்டப்படுவதைத்தான்  அவர் எதிர்க்கிறார். அலட்சியப்படுத்துகிறர். ‘பிரியமான எதிரிகளே! என்று அவர்களைக் கவிதைக்கு எதிரிகள் என்றும் பிரகடனப்படுத்துகிறார்.

    தற்பாவை ஒரு பொருள் விளக்கம்

    திருவெம்பாவை, திருப்பாவை என்னும் பெருவழக்கிற்கிடையில் தற்பாவை என்னும் ஒலியைச் செவியுள் செலுத்துவது கொஞ்சம் சிரமமே. ஆற்று வெள்ளத்தைக் கடல் அப்படியே உடனே ஏற்றுக் கொள்வதில்லை. புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுகிறபோது, பழைமையில் ஊன்றிப் போன உள்ளங்கள் அவ்வளவு எளிதாகப் புதுமைக்குத்  தங்கள் உள்ளத்துள் நுழையவோ தற்காலிகமாகவோ நிலையாகவோ தங்க இடம் கொடுப்பதில்லை. .மகாகவி பாரதி புதிய வடிவங்கள் எதனையும் அறிமுகம் செய்திருக்கிறான் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆனால் ஆழமான சிந்தனைகளை எளிய சொற்களால் வெளிப்படுத்தியதையே இந்தச் சமுதாயம் ஏற்பளிப்பதற்குப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ‘பாரதி மகாகவி அல்லர்’ என்று கல்கி சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை மோசமாகியிருந்திருக்கிறது. எனவேதான் தற்பாவை பற்றிய ஒரு பொருள்விளக்கம் இங்கே தேவைப்படுகிறது.

    “கையும் காலும் தூக்கத் தூக்கி
    ஆடிப்பாவை போல மேவன செய்யும்”

    என்னும் ஆலங்குடி வங்கனார் பாடல் இங்கே சிந்திக்கத்தக்கது, இன்றைக்கும் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் குழந்தைகள் தங்கள் பொம்மைக்கு ஊட்டிவிடுவதைக் காணலாம். இந்தப் பழக்கம் சிறாஅர்களிடம் அன்றைக்கே இருந்திருக்கிறது என்பதை

    “உண்ணாப் பாவையை ஊட்டுவோளே

    என்று ஐங்குறுநூறு சித்திரித்துக் காட்டுகிறது.

    “பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
    அகலாக் காதலொடு பகல்விளை யாடி”

    என்னும் –பட்டினப்பாலை அடிகளால் பாவை என்பது ஒரு பிள்ளை விளையாட்டே என்பது தெளிவாகிறது. பரணி என்பது தோற்ற மன்னர்களின் பெயரைத் தாங்கியோ அவர்தம் நாட்டின் பெயரைத்தாங்கியோ வருவதனாலேயே தோற்றவரைப் பாடுகிறது என்று பொருளன்று. சிவபெருமானின் வெற்றியைப் பாடுவதுதான் தக்கயாகப் பரணி. ஆனால் பெயர் தோற்றுப்போன தக்கன் மேல். குலோத்துங்கச் சோழன் வெற்றியைத்தான் கலிங்கத்துப பரணி பாடுகிறது, ஆனால் பெயர் தோற்றுப் போன கலிங்கம். வெற்றிபெற்ற இந்தியா மீதுதான் வங்க தேசப் பரணி பாடப்பெற்றுள்ளது. ஆனால் பெயர் தோற்றுப்போன வங்கதேசம். இவைகளெல்லாம் ஒரு மரபின் தொடர்ச்சி. அதனாலேயே இதில் மாற்றம் அமையாது என்றோ அமைத்துப்பாடக்கூடாது என்றோ சொல்வது மொழியிலக்கிய வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவாது. அதுபோலத்தான் மூன்று இலக்கியக் கூறுகளை ஒரே இலக்கியத்தில் கொண்டுவருவது. ஒரு புதிய இலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்கிறபோது இதுபோன்ற புதுமைகள் இயல்பாகவே அமைந்துவிடும். எனவேதான் ‘பாவை’ என்னும் மரபிலக்கியக் கூற்றில் ‘அம்மானை’, ‘சாழல்’ முதலிய இலக்கியக் கூற்று வடிவங்களை வசந்தராசன் செருகிக்காட்டுகிறார். இவ்வாறு அமைத்த காரணத்தால் கவிஞன் சில நேர்வுகளில் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகவும் தோன்ற முடியும் என்பதையும் உறுதி செய்கிறார்.

    தற்பாவையின் புறக்கட்டமைப்பு – பகுப்பாய்வு

    உள்ளடக்கத்திற்கு உறுதுணையாக இருப்பதே புறக்கட்டமைப்பு. சங்கக் கால இலக்கியங்களில் பெரும்பான்மையானவை ஆசிரியப்பாவில் அமைந்ததும் புலனெறிவழக்கம் என்பது கலிப்பா பரிபாடல் வகையில் அமைந்ததும் உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான வடிவக் கோட்பாடேயாகும். இந்த அடிப்படையில்தான் தமிழில் வினாவிடை போக்கில் இலக்கியக் கூறுகள் அமைந்திருக்கின்றன. சான்றாகத் திருவாசகத்தில் அமைந்த திருச்சாழல் என்னும் பகுதி இந்த வகையில் அமைந்த இலக்கியப் பகுதியாகும்.

    “கோயல் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ!
    தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும்
    காயில் உலகத்தும் கற்பொடிகாண் சாழலோ!

    என்பது திருச்சாழல் பாடல்களில் ஒன்று. இதில் முதலிரண்டடிகளில் இறைவனின் புறத்தோற்றத்தை ஒருத்தி எள்ளிநகையாடுவதாகவும் அதற்கான விடையை அடுத்தவள் வாயினின்றும் வெளிப்படுவதாகவும் மணிவாசகப் பெருமான் அமைத்திருக்கிறார். ‘காணேடீ! என்று ஒருத்தி சொல்ல, ‘காண்’ என்று மற்றவள் சொல்ல இறைவன் எல்லா உயிருள்ளும் கலந்திருக்கிறான் என்னும் மறையுண்மை புலப்படுத்தப்படுவதைக் காணலாம்.  ஏறத்தாழ இந்த நெறியில் அமைந்ததுதான் தற்பாவை என்னும் இலக்கியமாகும். வெண்டளை விரவிய கொச்சகமாய் அமைவது பொதுவாகப் பாவை இலக்கியத்தின் யாப்பமைதியாகும். தற்பாவையும் அவ்வாறே அமைநதிருந்தாலும் திருச்சாழலின் வினாவிடை போக்கினை ஒரு புத்தாக்க வடிவமாகச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.திருவம்மானை போல இறைவனின் பன்முகப் பெருமையையும் கூட்டியுரைத்திருக்கிறார்.  ‘சாழல் நான்கடித் தரவாக அமைய தற்பாவை எட்டடித் தரவாக அமைந்திருக்கிறது. சாழலில் முன்னிரண்டு அடிகள் வினாவாய் அமைய பின்னிரண்டு அடிகள் விடையாய் அமைந்துள்ளது.  எட்டடித் தரவு கொச்சகக்கலிபபாவில் அமைந்த தற்பாவையில் தன்னை பற்றிய வினாப் பகுதிகளைச் செம்பாதியாக அமைக்காமல் பல வகையாக அமைத்துக்காடடியிருக்கிறார் வசந்தராசன்.

    “பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
    நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
    காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
    ஆவலால்  மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
    தூவுமழை  வாழ்த்துத் தொடரும் தோழமையான்
    சீவன் உள்ளவரை செந்தமிழே வாழ் வென்று
    ஆவி  நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்?
    தூவுமலர்த்  தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!

    என்னும் பாவையில் ‘ஆவி நிறைந்திருக்க ஆளுவதார் எம்பாவாய்? என ஒரு வரியில் வினாத் தொடுக்க, “தூவுமலரத் தோழன் துரைவசந்தன் எம்பாவாய்!” என ஒரு வரியில் விடைபகரும் நேர்த்தி காணலாம்

    “விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவர்யார்?
    பழுதுகளே இலாஅன்புப்  பாசக்   கடல்மனம்யார்? (2)
    பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு  படுபவர்யார்?  (3)
    வழுக்குமர  வாழ்க்கை   அழுக்காக்கப் பாய்ந்தாலும்
    இழுக்குபடாது இன்றும்   இனிப்பவர்யார்? நெஞ்சில் (4)
    ஒழுக்கம் விழுப்பமென ஓயாது இயங்குவோர்யார்?  (5)
    புழுக்கமிலா உள்ளத்தின் பேர்தான் எதுதோழி?  (6)
    உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! !  “

    என்னும் பாவையுள் அடிக்கு (7) ஒரு வினாவாக ஆறு வினாக்களைத் தொடுத்து ஏழடிகளுக்கான விடையை “உழுது விளைக்கும் உயர்வசந்தன் எம்பாவாய்! என்று ஒரேயடியில் விடையினைப் பதிவு செய்வதையும் காண முடிகிறது. சங்க அக இலக்கியத்தில் ஒரு நுட்பம் உண்டு,  அங்கே தோழி தலைவி என்பனவெலலாம் கற்பனைப் பாத்திரங்கள். தோழிக்குக் காதல் வருகிறபோது தலைவி தோழியாவாள். தோழி தலைவியாவாள். இது பற்றிய ஆழமான ஆய்வை அறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க்காதல் நூலில் காணலாம். இங்கே பாவை தோழியாகிறாள். தோழி பாவையாகிறாள். இது கவியோட்டத்தில் கண்ட பலன்!

    “கோபம் குடியிருந்தும்  கொள்கை வலுவிருந்தும்
    தாபத்தீக் கைநீண்டு தாவி அணைத்திருந்து
    தீபத் திரிதாங்கித்  தித்திப்பு ஒளிவிதைக்கத்
    தாவி வருமோர்   தமிழ்க்கவிஞன் யார்பாவாய்?
    நாப  உறவுக்காய்  நாளும் துடித்தபடி
    சாபக்  களைவிலக்கிச் சாதிக்கும் போதுவரும்
    ஆபத்து வேரின் அடிபிடுங்க  யார்தோழி?
    தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய்!

    என்னும் பாவையில் ‘தமிழ்க்கவிஞன் யார்பாவாய்? என்றும் அடிபிடுங்க யார் தோழி என்றும் இரண்டு முறை வினவி “தூபத்தை ஏற்காத் துரைவசந்தன் எம்பாவாய் என்று நிறைவு செய்திருப்பது இன்னொரு முறை.

    “வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
    மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
    தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்?
    பொய்யே இலாத்தொண்டால்  போற்று மிலக்கியத்தைக்
    கைக்கொண்டே நாளும் களமாடல்   யார்பாவாய்?
    நெய்த்தீபச் சொல்லேற்றி நாளும் ஒளிகொடுக்கச்
    செய்யும் செயல்வீரச்  செந்தமிழ்ப்பா யார்தோழி?
    ஐயன் வசந்தராசன் ! ஐயமென்ன எம்பாவாய் “

    “தொண்டனவன் யார்பாவாய்?” “களமாடல் யார்பாவாய்?” செந்தமிழ்ப்பா யார் தோழி?” என்னும் மூன்று வினாக்களுக்கு “ஐயன் வசந்தராசன் ஐயமென்ன எம்பாவாய்!” என்னும் ஒரே மறுமொழி என்பது வேறொரு முறை. வரையறுக்கப்பட்ட யாப்பில் எழுதப்படும் கவிதையாயினும் கவிஞனின் உணர்ச்சி வேகத்தை அக்கட்டமைப்பு தடுக்க இயலாது என்பதற்கு இவை எடுத்துக்காட்டுக்கள். ‘காயை’க் கவிதைக் கனியாக்க முயன்று கைபிசைந்து நிற்கும் கவிஞர்கள் (?) கவலைப்பட வேண்டிய செய்தி!

    உள்ளடக்கப் பகுப்பாய்வு

    சிவனருள் வேண்டி பொய்கை புக்க பெண்கள் மார்கழி வைகறையில் பாடியது திருவெம்பாவை. அதே மார்கழியில் ஊர் செழிக்கவும் உலகம் தழைக்கவும் நல்ல கணவன் தங்களுக்கு வாய்க்கவும் பாடப்பெற்றது திருப்பாவை. பதிகங்களில் ஒன்றாக முன்னதும் பாசுரங்களில் ஒன்றாகப் பின்னதும் திகழ, வசந்தராசனின் தற்பாவையோ ஆற்றல்சால் கவிஞன் ஒருவனின் நடப்பியல் சார்ந்த உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது, தன்னுடைய இயல்பு இன்னது! தன்னைச் சார்ந்த சமுதாய இயல்பும் போக்கும்  இத்தகையன!, என் நிலை இது!. என் கடமை இது! என்று முழுமையும் தன்னுணர்ச்சி வெளிப்பாட்டின் கவிதைக் கோலமாகவே தற்பாவை அமைந்துள்ளது.

    உள்ளடக்க நுண்மை

    மேம்போக்காகத் தற்பாவை இலக்கியத்தின் முப்பது பாடல்களையும் படிப்பவர்களுக்கு அது ஒரு தற்புகழ்ச்சி இலக்கியமாகவே தோன்றக்கூடும். அத்தோற்றம் இடமாறு தோற்றப் பிழையன்று. உண்மையே. ஆனால் அதனுள்ளும் ஓர் கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது என்பதுதான் இக்கட்டுரையின் சாரம். உட்பகுதியின் கசப்பே நல்ல தேனின் அடையாளம். இந்தச் சமுதாயத்தில் நல்லவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது உண்மையானால் இந்தப் பாவையின் உள்ளடக்கம் சொல்லவரும் கருத்தும் உண்மையே. சருகுகளுக்கு விழாக்கள் எடுப்பதும் மலர்கள் வருத்தத்தோடு கருகி விழுவதும் இன்றைய நிலைப்பாடு. இதனைத்தான் வசந்தராசன் இலக்கிய வடிவில் பதிவு செய்திருக்கிறார். எனவே தன்னைப் பாடுகிறார் என்பதைவிடத் தன்னையே ஒரு பாடுபொருளாக்கியிருக்கிறார் என்பதே சரியான பார்வையாகும் என்பது என் கருத்து. கருத்துக்கள் மாறுபடலாம்.

    “தலைவிற்றுக் கிரீடங்கள் வாங்கு வார்கள்!
    தலைமைகளைத் தாலாலே கழுவு வார்கள்!

    உலைத்துருத்தி மூச்சுவிட்டுத் திரிந்த லைந்தும்
    ஊர்க்காற்றைத் திருடிவந்து விசிறு வார்கள்!
    விலைபோன அடிமைகளாய்த் தேங்காய்ச் சூறை
    விருதுகளைப் போட்டியிட்டுப் பொறுக்கு வார்கள்!
    தலைகனத்துப் பேரறிவாய்ச் செருக்கு வார்கள்!
    தண்டுவடம் விற்றகாசில்   தருக்கு வார்கள்!

    குயில்தோப்பில் காக்கைகளாய்க் கூடு வார்கள்!
    கோட்டானை  நடுவராக்கிப் பாடு   வார்கள்!
    ஒயில்மயிலைப் புறமொதுக்கி வான்கோ ழிக்கே
    ஒய்யாரக்   கொண்டையிட்டு  வாழ்த்து வார்கள்!
    பயிர்மிதித்துக் களைகளையே  அறுத்து வெற்றுப்
    பதர்விளைத்து   மணிகளையே தூற்று  வார்கள்!
    உயிர்கொடுத்துக் காலமெலாம் உழைப்போ ருக்கோ
    ஒன்றுமில்லை என்பதையே  விருதென் பார்கள்!

    என்று வசந்தராசன் மற்றோர் இடத்தில் இலக்கிய உலகின் போலி அலங்காரங்களைச் சாடியிருப்பார். இந்தச் சாடல் போலித்தனத்தைச் சாடல். சமுதாயத்தின் நிலவும் போலித்தனம் — தனது உயர்பண்புகள் — படைப்பில் காட்டும் அசாத்திய திறன் என்னும் முக்கூட்டுப் பரிமாண முரண்பாடுகளின்  முனகல் வெளிப்பாடே தற்பாவை இலக்கியமாகும்..

    நெஞ்சை இனிக்கவைக்கும் தொடர்கள்

    சொல்! தமிழ்ச்சொல்! அதன் பண்புகள்! அது செவிக்கு இனிமையாக இருத்தல் வேண்டும். அறிவுக்குத் தெளிவு தர வேண்டும்! சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் பயன்தர வேண்டும். ஆன்மாவுக்கு அமைதி தர வேண்டும். இதனைத்தான் கம்பன் ‘சீரிய கூரிய தீஞ்சொல்’ என்றான். இத்தகைய சொற்கள் தற்காலக் கவிதைகளில் அரிதா எளிதா என்பதை வாசகர்கள் நன்கு உணர்வார்கள்.

    ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்றால் தொல்காப்பியம் ;நினைவுக்கு வரும். ‘யாதும் ஊரே யாவதும் கேளிர்’ என்றால் புறநானூறு நினைவுக்கு வரும். ‘பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்’ என்றால் கலித்தொகை நினைவுக்கு வரும். ‘செம்புலப் பெயல்நீர் போல’ என்றால் குறுந்தொகை நினைவுக்கு வரும். ‘நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோரே’ என்றால் ஐங்குறுநூறு நினைவுக்கு வரும்.  “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்றால் சிலப்பதிகாரம் நினைவுக்கு வரும். ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தேரே” என்றால் மணிமேகலை நினைவுக்கு வரும். ”படைபெருத்தலின் பார் சிறுத்ததோ?” என்றால் கலிங்கத்துப் பரணி நினைவுக்கு வரும். “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்றால் கம்பன் நினைவுக்கு வருவான். ‘மன்னர் பெருமை மடையர் அறிவரோ?” என்றால் நளவெண்பா நினைவுக்கு வரும். “தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்றால் திருவாசகம் நினைவுக்கு வரும். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்றால் அங்கே அப்பர் நினைவுக்கு வருவார். “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்றால் சம்பந்தர் சொந்தம் கொண்டாடுவார். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றால் வள்ளலார் நினைவுக்கு வருவார். “ஐயே மெத்தக் கடினம்” என்றால் கோபாலகிருஷ்ண பாரதி நினைவுக்கு வருவார். “வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்” என்றால்  என்றால் மகாகவி நினைவுக்கு வருவார். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றால் பாவேந்தர் நினைவுக்கு வருவார். ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே” என்றால் பட்டுக் கோடடை நிழலாடுவார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா” என்றால் சுரதா நினைவுக்கு வருவார். “போற்றுபவர் போற்றட்டும்” என்றால் கண்ணதாசன் நினைவுக்கு வருவார். “நாங்கள நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம் ஆடைவாங்குவதற்காக” என்றால் காமராசன் நினைவுக்கு வருவார். “வரஙகளே சாபங்களானால் தவங்கள் எதற்கு?” என்றால் அப்துல் ரகுமான் நினைவுக்கு வருவார். “தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?” என்றால் மீரா நினைவுக்கு வருவார் ‘அரளிப்பூ அழுகிற’ போதேல்லாம் மேத்தாவின் நினைவு வரும்.. இன்னும் எவ்வளவோ? கவிதை வரிகள் கவிஞர்களுக்கு அடையாளங்கள். விருதுகள் அல்ல. பரிந்துரை இருந்தால் விருதுகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். கவிதைகளைக் கடன் வாங்க முடியாது. வசந்தராசன் கவிதைகளுக்கு உயிரோட்டம் அவரது கற்பனையும் உருவகங்களும் என்றால் பயன்படுத்தும் தொடர்கள் அவற்றின் காலங்கடந்த நிலைப்பேற்றை அளித்திருக்கின்றன என்பது என் கருத்து. தன்னிரக்கம் இழையோடும் தற்பாவையில் தொடர்கள் தரும் இன்பம் தனித்துவமாக உணரப்படலாம். தன்னையே பாடுபொருளாக்கிய புதுமையின் ஓர் விரிவுரையாகவே தற்பாவையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொடர்களும் விளஙகுகின்றன.

    நாராகிப்  பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன்

    “சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்பது வள்ளுவம். அழகு சொற்கள்! அழகியல் ;இழையும் சொற்கள்! இவை தற்பாவையின் பொலிவினைக் கூட்டுகின்றன. தண்மை குறையாத தமிழ்த் தொடர்கள் தற்பாவையைத் திருவம்மானையோடு ஒப்பு நோக்க வைக்கின்றன.

    “நாராகிப் பூக்களையே நாளும் இணைக்கின்ற பேராளன் “

    மேம்போக்காகத் தற்பாவையைப் படிக்கின்ற அன்பர்கள் ஒரு தற்பெருமையின் படப்பிடிப்பாகக் கருதக்கூடும். ஆனால் தொடக்கத்திலேயே தன்னை நாராகக் காட்டி அறிமுகப்படுத்திக் கொள்ளும் அடங்கிக் கிடக்கும் அடக்க உணர்வைக் காணமுடிகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது உலகியல். இங்கே இவர் தன்னை நாராக்கிக் கொள்கிறார்.

    “மின்னல் வரியெடுத்து மேக இடியெழுதித்
    தன்னம்பிக் கையினால் தானே சுயம்புலிங்க
    மன்னும் கவிநெய்யும் மாண்புகளைக் கற்றவர்தான்”

    ஒரு கவிதையை முதல் முறை படிக்கும் போதே அது கோக்கப்பட்டதா? குமுறி விழுந்ததா? குழைந்து நழுவியதா என்பதை அறிந்து கொள்ள முடியம். தற்பாவை இலக்கியம் முழுவதும் அழகியல் குழைந்து விழுந்ததாகவே அமைந்திருக்கிறது. திறனாய்வாளர் பார்வையில் இதன் அளவு முன் பின்னாகலாம். .செல்போனையும எறவாணத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே எழுதப்படுகிற கவிதைகளை (?) அவையே அடையாளம் காட்டிவிடும். வசந்தராசனின் சீர்களும் தொடை விகற்பங்களும் அவை இயல்பானவை என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகின்றன.

    பொழிப்பால் பூரித்து நிற்கும் தற்பாவை

    தொடைவிகற்பங்களில் பொழிப்புக்குத் தலையிடம் உண்டு. ‘எகனை மொகனை’ என்னும் வழக்கில் ‘மொகனை’ என்பது மோனை. ‘எகனை’ என்பது ‘எதுகை’. இந்த எதுகையும்  மோனையும் பொழிப்பாக அமைந்திருந்தால் படிக்கின்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ்க்கவிதைகளில் தொண்ணூறு விழுக்காட்டுத் தொடர்கள் பொழிப்பைத் தோரணமாகக் கொண்டவை புதுக்கவிதைகள் உட்பட.

    சீர்த்தகுடி  மக்கள்தம் சிந்தையினைத் தூரெடுத்துப்
    பார்த்து மகிழ்ந்தவனாம்!

    ‘சீரத்த குடி’ என்பதை சிந்தையினைத் தூரெடுத்து என்பதோடு கூட்டியுரைப்பின் விளையும் இன்பம் கொள்ளையோ கொள்கை! இந்தத் தொடரில் மட்டுமன்று

    “கன்னல் கவிமொழியன் கற்கண்டுச் சொல்லழகன்
    தீபத் திரிதாங்கித்  தித்திப்பு ஒளி விதைக்க”

    “ஆர்க்கும் அருவியின் ஆனந்த நாட்டியம்”

    என்றெல்லாம் கூழையால் கும்மியடிக்கும் பேரழகைக் காணமுடிகிறது.  இலக்கியத்தின் தலையாய நோக்கம் இன்புறுத்துவது. கன்னியோடு ஒத்த இன்பம அது. ‘கன்னி வேண்டுமா? கவிதை வேண்டுமா?” என்று கேட்பதைக் காணலாம். தற்போது கன்னியும் வேண்டாம் கவிதையும் வேண்டாம் என்று நாம் வெறுப்பதற்குக் காரணம் இரண்டும் அளவுக்கு மீறிய ஒப்பனை செய்து கொள்வதுதான். கவிதையின் சொல்லின்பம் பெரும்பாலும் தொடைவிகற்பங்களால் ஆவது. அவற்றுள்ளும் எதுகை மோனைகளால் நிலைபெறுவது. அவையும் பொழிப்பால் அமைகிறபோது சொல்லவொணா இன்பம்.! ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்னும் மகாகவியும் மோனைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறான். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்  மங்காத தமிழென்று சங்கே முழங்கு” எனப் பாவேந்தர்  எதுகைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறார். கவிஞனும் கவிதையும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைப்பட வேண்டும். அவர்கள் கவிஞர்கள். அவர்களையொத்த கவிஞன் வசந்தராசன்.

    “தேள்கொடுக்குச் சொற்களெலாம் தேடி அணைத்தாலும்
    வாள்கொண்டு காலமது  வாழ்நாள் அறுத்தாலும்
    வேள்தமிழ னாயிருந்து வெற்றி படைப்போன்”

    வசந்தராசனின் பெருமையை எடுத்தோதுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. சொற்கள் விழுகின்ற போது அனுபவிக்கும் சுகத்தை எடுத்துகாட்டுவதே என் நோக்கம்.

    ““நடைவண்டிப் பாவலர்க்கும் நங்கூர மாயிருந்து
    தடையில்லா நம்பிக்கைத்  தந்து தமிழ்வளர்க்கக்
    கடையாணி யாயிருந்து காலம்  பதிந்துகொள
    விடையாற்றி வைத்த”

    வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று.

    “பண்ணைத் தமிழ்ச்சங்கம் பாட்டுத் திறமுடையார்
    விண்ணை அளக்கின்ற  வித்தை அறியவைத்த
    கண்ணைத் திறக்கின்ற காலத்தின் தாழ்க்கோலாய்
    வண்ணம் கொடுத்த

    வசந்தராசனைப் பாடுவது நமது நோக்கமன்று கவிதை கட்புலனுக்கானது அன்று செவிப்புலனுக்கானது. “கேட்டால்தான் கிறுகிறுத்துப் போகலாம்” செவியடைத்துப் போனவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். பலரும் தங்களுக்குத் தாங்களே செவிடாகிவிடுகிறார்கள். முகநூல் கவிஞர்களில் நான் எந்தக் கவிதையையும் பொறுக்கி எடுப்பதில்லை. “என்னைப்பார்” என என்னைச் சீண்டும் கவிதைகளையே என் சிந்தனையுள் வைக்கின்றேன். அந்தக் கவிதைகளில் பெரும்பாலனவை வசந்தராசனுடையனவாக இருப்பது காலம் என்மேல் செலுத்துகின்ற கவிதைக் கருணை! எண்ணிப் பாரக்க முடியாத சொல்லாட்சிகளுக்குச் சொந்தக்காரன் வசந்தராசன்! விருதுகளும் பரிசுகளும் தங்கள் தகுதிகளை மறுபரிசீலனை செய்து கொள்ளும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குவன அன்னார் கவிதைகள்

    ஒன்றல்ல இரண்டல்ல தம்பி!

    ஒருவரைப் பாராட்டுகிறபோது அவர் பெருமைகளை நிரல்படுத்திக் காட்டுவது தமிழ்க்கவிதையின் கட்டுமான மரபுகளில் ஒன்று. இதற்குச் சிந்தனை ஆழமும் சொற்களஞ்சியப் பெருக்கமும் வேண்டும். புதுக்கவிதை என்ற பெயரில் ‘நீ” என்னும் ஒரு எழுத்தைச் சீராகக் கொள்ளும் இரக்கத்திற்குரியவர்களுக்கு இது புரியாது. தெரியாது. “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” (260) என்பது திருக்குறள். இது “ஓருயிரையும் கொல்லாதவனுமாய் புலாலையும் உண்ணாதவனை கைகுவித்து எல்லா உயிரும் தொழும்” என்பது இதன் பொருள். இந்தப் பாட்டின் அதிகாரம் புலால் ;மறுத்தல் . கொல்லாமை என்னும் அதிகாரம் இதற்குப் பின்னே வருவது. திருவள்ளுவர் இரண்டு அறங்களையும் இணைத்து ஓரறமாகக்காட்டுகிறார். அதாவது தானே கொன்று தானே தின்னுதல் பிறர் கொன்றதைத் தான் தின்னுதல் தான் தின்னாமல் கொன்று பிறர்க்குக் கொடுத்தல் என்னும் இந்த மூன்றும் ஒரே அறம். ‘கொல்லாமை மட்டும் அறமன்று, புலால் உண்ணாமையும் அத்துடன் இணைந்தால்தான் அதற்குப் பெருமை. மானுடப் பண்புகளும் அப்படித்தான். நற்பண்புகளின் கலவையே ஒருவனை நல்லவனாக்கும் அன்றி தனித்து நிற்கும் ஒரு பண்பால் ஒருவன் நல்லவன் ஆகிவிட முடியாது.  இது இறைவனுக்கும் பொருந்தும். கடவுள் வாழ்த்தில் இறைவனின் பல பண்புகளைத் தொகுத்துக் கூறும் வள்ளுவத்தை நோக்குக. ‘எண்குணமும்’ இருந்தால்தான் இறைவன்.

    “பெரியவனை மாயவனைப் பேருலக மெலாம்
    விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;?

    என்னும் ஆய்ச்சியர் குரவையுள் ஐந்துக்கும் மேற்பட்ட இறைப்பண்புகளை அடிகள் தொகுத்துச் சுட்டுவது காணலாம். மணிவாசகப்பெருமான் தாம் பாடிய திருவமமானை எனனும் மகளிர் விளையாட்டுள்

    “விண்ணாளும் தேவர்க்கும் மேலான வேதியனை
    மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை
    தண்ணார் த்மிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
    பெண்ணாளும் பாகனைப் பேணும் பெருந்துறையிற்
    கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
    அண்ணா மலையானைப் பாடுதுங்கான் அம்மானை”

    என்று பாடுவதைக் காணலாம்

    “கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
    அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!
    மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை
    வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்
    பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

    என்னும் திருத்தாண்டகத்தில் எட்டுவகையான சிறப்புக்களை அப்பர் பெருமான் தொகுத்துக் காட்டியிருக்கிறார்.

    “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்குவள்ளி
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே

    என்பது அருணகிரியார் முருகப் பெருமானின் பெருமைகளையும் பண்புகளையும் தொகுத்துச் சுட்டிய அலங்காரம். இது ஒரு நெடிய கவிதைக் கட்டுமான மரபு. இந்த மரபு வழியாகப் பின்னப்பட்டிருக்கும் பாவைகள் தற்பாவையில் ஏராளம்! ஏராளம்!

    “கொள்கை வழுவானை க் கோட்டை மீறானை
    வெள்ளை மனத்தானை வேளிர் குணத்தானை
    அள்ளி அணைக்கின்ற ஆழ்மனத்து அன்பானைத்
    துள்ளி  வருகின்ற   தூய்மனத்து ஊற்றானை
    கொள்ளும் வகையறிந்து கோலோச்சும்  நெஞ்சானை”

    எனப் பாட்டுடைத் தலைவனாகிய தன்னை வசந்தராசன் படம்பிடித்துக் காடடுகிறார். இங்கே காட்டப்பட்டுள்ள கவிதை வரிகளுள் எத்தனை வரிகள் தற்பாவை ஆசிரியருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. அவர் எழுதுகிறார். நான் படிக்கிறேன். என் நினைவுகளுக்குள் இந்த வரிகள் வருகின்றன. அந்த வரிகள நிழலாட இந்த வரிகள் துணை செய்கின்றன. அவ்வளவுதான். இதுதான் மரபு. இதுதான் மரபுக்கவிதை. மரபு என்றால் படிதல் என்று பொருள், மணற்படிவுகள் போல!

    “ஆவேந்து பால்மனத்தான்! அல்லிவட்டப் பூமனத்தான்!
    சேயேந்தும் தாய்மனத்தான்! சென்னி கனக்காத
    சேவேந்து  செந்தமிழான்! செப்புகனிச் சொல்லாளன்!”

    இந்த அடிகளில் சொல்லப்பட்டிருக்கின்ற பண்பின் தொகுப்புக்கள் ஒப்பீட்டுப் பொருளில் அல்ல என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். தன் இயல்பை அவர் குறிப்பிட்டுக் காடடுகிறார். ‘இவரைவிட பால்மனத்தன்’ என்றோ ‘இன்னாரைவிட பூமனத்தான்’ என்றோ அவரைவிட ‘தாய்மனத்தான்’ என்றோ இவரைப்போல தலைக்கனக்காதவன் என்றோ அவர் பாடவில்லை

    தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்

    கவிதையை ரசிப்பது என்பது கவிஞனின் ஆன்மாவைத் தேடும் முயற்சி. இந்த உண்மையை அறியாமல் கவிதைகளையோ ஏனைய படைப்புக்களையோ படிப்பதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இலக்கியத்தின் உச்சபட்ச நோக்கம் மானுட மேன்மையே!. ஆதலின் எத்தகைய படைப்பானாலும் படைப்பாளன் எந்த நோக்கத்திற்காக அதனைப் படைக்கிறான் என்பதை அறியும் முயற்சி வேண்டும். ‘பொன்னகரம்’ சிறுகதையில் சித்த்ரிக்கப்பட்ட அம்மாளு பாத்திரம் சமுதாயத்தின் அடையாளம் அன்று. ஆனால் அவளைச் சித்திரித்ததன் மூலம் அவளையொத்தவர்கள் தள்ளுபடி வாழ்க்கை வாழ வேண்டியதில்லை என்பதுதான் புதுமைப்பித்தனின் கருத்து, காரணம் அம்மாளுவின் செய்கை வறுமை பற்றியது! அதே ஒழுக்கக் கேடு சமுதாயத்தின் மேல்தட்டில் நாகரிகமாகக் கொண்டாடப் படுகிறது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கவிஞர் வசந்தராசன் தான் மட்டும் கவிஞராக இருப்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர். சமாதானம் அடையாதவர். தன்னையொத்த கவிஞர் பிறரையும் அரவணைக்கும் அன்புள்ளம் கொண்டவர். வந்தவர்களையே வரவேற்கத் தயங்கும் போலிச் சமுதாயத்தில் தேடிச் சென்று வரவேற்கும்  உள்ளம் அவர்க்கு இயல்பாகவே அமைந்தது.

    “மொட்டுக்  கவிஞர்க்கும் மூத்த கவிஞர்க்கும்
    தொட்டிலாய்ப்  பாலமாய்த்  தோளகலம்  ஆக்கிவைத்துப்
    பட்டு அணி வித்தபடி பார்த்து  மகிழ்வதிலே
    தட்டுப்பாடு இல்லாத தாய்மடி ஆனவன்தான்
    எட்டுத் திசையும் எழுதத் துடிக்கின்ற
    கட்டுக்கோப்பான கவிமரபன்  “

    இந்த வரிகளை ஓர் அழைப்பாகத்தான் கொள்ள வேண்டும். வழிகாட்டுவோர் இன்றி பாடிநிற்கும் கவிஞர்களுக்குப் பண்ணைத் தமிழ்ச்சங்கம் ஒரு வழிகாட்டி மரமாகத் திகழ்கிறது. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் ஓர் அரசுக்கு எவ்வளவு கடினமான பணியோ அதே கடினமான பணிதான் ஓர் அமைப்புக்கும். அமைப்பைத் தொடஙகுவதற்கு உணர்ச்சி போதும். ஆனால் அதனை நிலைநிறுத்துவதற்கும் செயல்படுவதற்கும் பொறுமை சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் இருக்க வேண்டும். இவறறுக்கு மேலாகத் தன்னலம் கருதாத தமிழ்நெஞ்சம் இருக்க வேண்டும். ‘தொட்டிலாய், பாலமாய்’ ஒருவன் தான் இருக்கிறேன் என்று பிரகடனப் படுத்துவது தற்புகழ்ச்சியாகுமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

    “பாவலர்க்கே மேடை பரிசளித்துக் கீழமர்ந்து
    நாவலராய் மாற்றுகின்ற நாள்வரைக்கும் பேருழைப்பின்
    காவலனாய் நிற்கின்ற காலப் பெருவிரலான்
    ஆவலால்  மீக்கூற ஆடத் தலைகொடுத்துத்
    தூவுமழை  வாழ்த்துத் தொடரும் தோழமையான்”

    என்னும் அடிகளில் வளர்தமிழ்க் கவிஞர் படையை நடத்துகின்ற தளபதியான வசந்தராசனைக் காணமுடிகிறதே தவிர தற்பெருமை பேசுகின்ற வசந்தராசனைக் காணமுடியவில்லை. இது காணுவார் கண்ணைப் பொருத்த கருத்து. நடப்பியல் தெரிந்த எவரும் வசந்தராசனின் இந்தப் பதிவினை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும்.

    இன்றையக் கவியுலகம்

    பரிந்துரையும் படோடாபமும் பதவிச் செல்வாக்கும் பாசாங்குமே இன்றைய கவியுலகில் கவிஞர்கள், பட்டிமன்றக் குழுக்கள் பிரைவேட் லிமிடெட்டுக்களாகச் செயல்படுவதைப் போலவே தனிப்படட கவிஞர்களும் செயல்படுகிறார்கள். காரணம் இவர்கள் கவிதை எழுத ஆசைப்படுகிறார்கள். அதற்கான மூலக்கூறுகள் இல்லாமலேயே!  மக்கள் வாழ்வியலுக்காகப் பாடப்பட்ட தமிழ்க்கவிதைகளும இலக்கியங்களும் தனிப்பட்ட சிலருடைய பொருளாதாரத்தை மேம்பாடு அடைய பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன அரைகுறையாக.  கவிதை நிலைமை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இங்கே யாப்பு தெரிந்தவர்களெல்லாம் மரபுக்கவிஞர்கள். தெரியாதவர்களெல்லாம் புதுக்கவிதைப் படைப்பாளர்கள். அதுவும் தெரியாதவர்கள் ஹைக்கூ கவிஞர்கள். ஜப்பான்காரன் கட்டளைக் கலித்துறை எழுதுகிறானா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் ;நம்மவர்கள் ஹைக்கூ எழுதுகிறார்கள். பயன்? அமிர்தாஞ்சனத்தின் விலை கூடியதுதான்! பாரசிடாமல் பற்றாக்குறை ஆனதுதான்! திறமை ஓரங்கட்டப்படுகிறது. அங்கீகாரமில்லாமல் அலுத்துக்கிடக்கிறது. இவற்றோடு தன்மானமும் சேர்ந்து கொண்டால் சொல்லவே வேண்டியதில்லை. அத்தகையதொரு கலவைதான் வசந்தராசன். பாடுபொருள் தெரிவு செய்வதில் சில குறைபாடுகளைத் தவிர கவிதையின் எந்தப் பகுதியையும் சிலிர்க்கச் செய்துவிடும் பேராற்றல் அவருடைய கவிதைகளுக்கு இயல்பாகவே உண்டு. அதனைத்தான் இந்தத் தற்பாவை இலக்கியம் முன்னெடுக்கிறது.

    “காலில்  விழுந்ததில்லை! காவலாளி யானதில்லை!
    கோல்நீட்டி  னார்முன் குரங்குபோல் தாண்டலில்லை!
    தால்நீட்டி  வேண்டலில்லை!  தார்மீக மாற்றமில்லை!
    தோல்சுருங்கி ஓயவில்லை!”

    என்னும் வரிகளில் இன்றைய கவியுலக அங்கீகாரச் சூழலைப் படம்பிடித்துக் காடடுகிறார். இதனுள் எங்கே தற்புகழ்ச்சி இருக்கிறது? காலில் விழுந்தவர்களுக்குத்தான் விருதளிக்கிறார்கள். அடிமையாக இருப்பவர்களுக்குத்தான் அனைத்தும்!  கெஞ்சிக் குழைவார்க்கே மஞ்சமும் மதிப்பும்!

    “சொட்டுமையும்  சிந்தாமல்  பேனா வாலே
    சொறிந்துவைத்தல் சொர்க்கமென  நெகிழு வார்கள்!
    பார்வைபடும்  தூரத்தில் வரிசை கட்டிப்
    பாதங்கள் தாங்குதற்கே முந்து வார்கள்!
    போர்வைகளைப் பனியிழையால் நெய்தெ டுத்துப்
    போகையிலும் வருகையிலும் போர்த்து வார்கள்!
    கூர்மதியை அடகுவைத்த   சீட்டைக்   காட்டிக்
    கும்பிடுகள் பதிவேற்றிக்  காட்டு வார்கள்!
    சீர்வரிசை  புன்னகையால் அனுப்பு வார்கள்!
    சிரம்தாழ்த்தி கையுயர்த்தி  வணங்கு வார்கள்!

    சமையலறைத்  தோழமையாய்த் திகழு வார்கள்!
    சந்தர்ப்பம் உருவாக்கிப் புகழு வார்கள்!
    இமயங்கள் இவர்முன்னால் குள்ளமென்றே!
    இளித்தபடி அவர் முன்னால் போற்று வார்கள்!
    சமயம்வரும் போதெல்லாம் அவர்கால் தொட்டுச்
    சடகோபம் போல்சுமந்து  மகிழு வார்கள்!
    நமைச்சலுக்குச் சொறிந்துவிடும் நகமாய் மாறி
    நாள்தோறும் அவரழுக்கில் முழுகு  வார்கள்!
    இவையெல்லாம் நானறியா இலக்க ணங்கள்!
    இயல்பாய்த் தன் மானமென்றன்  இலக்கி யங்கள்!”

    என்று மற்றோரிடத்தில் இவர் மனம் புழுங்கிப் பாடுவதைக் கேட்க முடிகிறது. மாதவரத்தில் தமிழக்கூடல் நடத்திவரும் வசந்தராசன் தன்னைச் சுற்றியுள்ள வட்டத்தையும் படம்பிடித்துக் காடடுகிறார்,

    “நன்றி   மறந்தார்க்கும்   நற்புகழைப்  பேர்த்தார்க்கும்
    கன்றாய்  மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
    நன்று குடித்தபின்னும்  நாவால் உதைத்தார்க்கும்
    ஒன்றாய் உளத்தை  ஒதுக்கியது  யார்தோழி? “

    பாவை இலக்கியம் என்றால் அ;ழகியல் அல்லவா கோலோச்ச வேண்டும்? இங்கே எஙகே இருக்கிறது அழகியல்? பாசத்திற்கு நேசக்கரம் நீட்டிப் பரிதவிக்கும்  ஒரு வாசமலரின் வாட்டத்தையல்லவா நுகர்கிறோம்?

    இருந்தும் பயனில்லை

    என்னதான் உலகியல் தாக்கத்திற்கு ஒருவன் அசைந்து கொடுத்தாலும் அவன் உயிர்க்குணங்கள் மாறுவதில்லை. அது உயிரோடு கலந்தது, அடக்கமும் தன்மானமும் இரட்டைக் குழந்தைகள்

    “ஈர உளமிருக்கும்! ஈர்ப்புவிசை தானிருக்கும்!
    வீர நடையிருக்கும் ! வெற்றித் தமிழிருக்கும்!
    காரின் கொடைதோற்கக் கைகள் தினவிருக்கும்!
    வேரில்  வியர்த்தாலும்  உச்சிக் கனிகொடுக்கும்!
    சூரச்   செயலிருக்கும்! சுற்றிலும்  பேரிருக்கும்!
    மாரன் உருவிருக்கும்   மன்மதவில்   சொல்லிருக்கும்! “

    இருந்தென்ன பயன்?

    “விழுதுகளைத் தாங்குகின்ற வேராய் இருப்பவன்யார்?
    பழுதுகளே இலாவன்புப்  பாசக்   கடல்மனம்யார்?
    பொழுதெல்லாம் செந்தமிழ்க்காய் பாடு  படுபவன் யார்? “

    பாடியென்ன பயன்?

    “வெய்யில் மழையென் றெதுவரினும் தேங்காமல்
    மெய்யாய்த் தமிழ்ச்சங்க மேன்மை நிகழ்வுகளைத்
    தொய்வின்றி யேநடத்தும் தொண்டனவன் யார்பாவாய்? “

    நடத்தியென்ன பயன்?

    “நன்றி   மறந்தார்க்கும்   நற்புகழைப்  பேர்த்தார்க்கும்
    கன்றாய்  மடிப்பால் கவிதை குடித்தார்க்கும்
    நன்று குடித்தபின்னும்  நாவால் உதைத்தார்க்கும்
    ஒன்றாய் உளத்தை  ஒதுக்கியவன்  யார்தோழி? “

    “ஒதுக்கியென்ன பயன்? கண்ணதாசன் பாடுவான்! “

    “தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
    கண்டுகொள்வாய் அவனை ஞானத்தங்கமே!
    அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே! “

    கண்ணதாசன் தான் பட்டுத் தெரிந்த அனுபவங்களைப் படர்க்கையில் பாடிய பாங்கு இது. மனிதன் என்ற அளவிலும் கவிஞன் என்ற நிலையிலும் இயன்றவரைப் பிறர் நலம் பேணும் ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மைதான். ஆனால் தமிழுலுகத்திற்கு அருமையான இலக்கியம் கிட்டியிருக்கிற்து. துன்பியல் இலக்கியத்தின் மூலக்கரு என்பது போல ஏமாற்றமும் மூலக்கருவாகலாம் என்பதத்தான் வசந்தராசனின் தற்பாவை காட்டுகிறதே யன்றித் தற்புகழ்ச்சியை அல்ல என்பதே இக்கட்டுரையின் சாரம்

    நிறைவுரை

    அம்மானையின் பொருண்மையைப் பாவையின் கட்டமைப்பில் பாடியிருக்கிறார் வசந்தராசன். அதே நேரத்தில் எல்லா அம்மானைகளும் வினா விடை வடிவத்தில் அமையவில்லை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. சிலவற்றில் அமைந்த வினாவிடை போக்குகளை வசந்தராசன் தற்பாவையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆற்றல் மிக்க கவிஞன் ஒருவனின் அந்தரங்க முனகல்களாக இந்தப் பாவைகள் கேட்கப்படுமாயின் கண்ணதாசன் கவிதைகளில் இழைவதைப்போல் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதை உணரமுடியும். தற்காலக் கவியுலகம் என்பது  சிதறிக்கிடக்கின்ற முதியோர் இல்லம். புரப்பார் இல்லாத புகலிடம். வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கும் செவியுணரகனிகளே கவிதைகள். இந்தத் தற்பாவை இலக்கியத்தைப்

    “பாடுகின்ற வசந்தராசன் வாயினிக்கப்,
    பதியவைக்கும் வாசகர்தம் மனம் இனிக்கத்
    தோடுசெவி மடுத்தார்கள் செவியினிக்கச்
    சொல்வார்க்கு மனம்,செவி,வாய் இனிக்கும் நாளும் ”

    என்பது இந்த எண்பது வயது கிழவனின் அனுபவம். கவிதையை அனுபவிப்பதற்கு உள்ளம் தேவை. உள்ளத்திற்கு இளமை – முதுமை பேதமில்லை. காதலுக்கும் கவிதைக்கும் பல ஒற்றுமை இருந்தாலும் ஒன்று இன்றியாமையாது. அவையிரண்டும் உள்ளத்தோடு உள்ளமாய் கரைய வேண்டும். அந்தக் கரைசல் நிறைவுற்ற கரைசலாக இருந்தால்தான் இரண்டும் மணக்கும். ஒரு காலத்தில் ஒருத்தியுடன் நான் கொண்டிருந்த காதல் நிறைவற்ற கரைசலாகப் போனது. அதற்குப் பரிகாரமாக வசந்தராசன் கவிதைகளோடு ஒரு நிறைவுற்ற கரைசல் வாழ்வையே நிகழ்த்தி வருகிறேன். கன்னி கிட்டவில்லை! கவிதை கிட்டியது! இது போதாதா  எனக்கு?

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இதழாசிரியர்கள் படைப்பாளர்களாகவும் அமைவது தமிழுக்குப் புதுமையான ஒன்றல்ல. பாரதி, திருவிக. கல்கி, ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், அண்ணா, கலைஞர். கவிஞர் கண்ணதாசன், மணியன், வல்லமை அன்னா கண்ணன் உள்ளிட்ட பெருமக்கள் பலரும் இதழாசிரியர்களாக இருந்து கொண்டே படைப்பாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இந்த நிரலில் தற்காலத்தில் வாழுகின்ற ஆரூர் தமிழ்நாடன் ‘இனிய உதயம்’ இதழின் ஆசிரியர். கல்லூரி காலத்திலிருந்தே திராவிடச் சிந்தனையாளராக இருப்பினும் அழகியல் மீதூரும் கவிதைகளையும் சமுதாயச் சிக்கல்களைப் பாடுபொருளாக்கும் கவிதைப் படைப்புக்களையும் படைத்து வரும் பண்பாளரான இவர் புதிய வடிவங்களைக் கையாள்வதிலும் கைதேர்ந்தவர்!  முகநூலில் இவரது கவிதைகளை நான் பல்லாண்டுகளாகப் படித்து வருகிறேன். மரபு சார்நத கவிதைகளையும் புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ வடிவங்களையும் கையாளும் இவருடைய கவிநேரத்தியை “ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை” என்னுந் தலைப்பில்  இந்தக் கட்டுரை சில கருத்துககளை முன் வைக்க முயல்கிறது.

    பாட்டாக நானிருந்தென்ன? பொருளாக நீ வரவேண்டும்!

    புதிராகத் தொடங்கிப் புரியாமல் நடந்து புலப்படாமலே போவதுதான் காதல் என்று ஆனபிறகு, காதல் நிலையின் எல்லாத் தடுமாற்றங்களும் கவிதையாகத்தான் அமைந்து போகும். ஒரு கனியின் எல்லாப் பகுதிகளும் இனிப்பது போலவே காதலின் பன்முகப் பரிமாணங்களும் இனிக்கும். திணை ஐந்தனுள், கசக்கிற திணை என்று ஏதும் உண்டா என்ன?  எல்லாமே இனிப்புத்தான் இலக்கியங்களில்! காதலில் இனிப்பு கசப்பு இருக்கலாம். காதற் கவிதையில் இனிப்பு மட்டுமே!  கசப்பே கிடையாது. பிரிவையும் சுவைத்துச் சொன்னவன் தமிழன். அப்துல் ரகுமான் பாடுவார்

    “காதல்
    ஒரு வித்தியாசமான சிறை!
    இங்கே
    கைதியாவதற்குத்தான்
    எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்!”

    என்று என்ன ஒரு மென்மை? என்ன ஒரு ஆழம்?  “பூட்டிய இருப்புக் கூட்டின் சிறைக்கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா”  என்று ஒரு கவிஞன் பாடுகிறான். அது மொழியினப் போரில் சிறை சென்றவனுக்கு. இது மொத்தத்தையும் பறிகொடுப்பதற்கு! புறவாழ்வில் சமுதாய நலனுக்காகச் சிறைசென்று விடுதலையாவதில் மகிழ்ச்சி! அகவாழ்வில் சிறைசென்றவன் விடுதலையாகிவிடக்கூடாதே என்னும் கவலையே மகிழ்ச்சி! வாழ்க்கைச் சிக்கலில் கூட சிக்கலிலிருந்து விடுதலையாவதுதான் மகிழ்ச்சி. சிட்டுக் குருவி போலே விட்டு விடுதலையாகத்தான் பாரதி விரும்பினான். அந்தப் பாட்டில் விடுதலையை முன்னாலே சொல்லி உவமத்தைப் பின்னாலே சொல்லுவான்! விடுதலையில் உண்டாகும் மகிழ்ச்சி அப்படி;!

    “விட்டுவிடுதலையாகி நிற்பாய் இந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே”

    “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்றும் பாடுவான். பாரதி உள்ளிட்ட அனைவரும் காதலில் சிறைசெல்லத்தான் விரும்பியிருக்கிறார்கள். எப்படியோ இணைந்தவர்களுக்கு ஏன் இணைந்தோம் என்பது விளங்கவில்லை. காதல் ஒரு விடுகதை  என்றோம். உண்மையில் அது விடுகதை இல்லை வினா விடை!. தலைவன் வினாவானால் தலைவி விடையாகிறாள். தலைவி வினாவானால் தலைவன் விடையாகிறான். தமிழ்நாடன் பாடுகிறார்! அடங்கிய காதலை ஒடுங்கிய மொழியால் சொல்லும் அவர் திறன் காணீர்!

    “கேள்வி பதிலாய் நாம்
    நம்மில்
    கேள்வி யார் ?
    பதில் யார்?
    தெரியவில்லை
    ஆனால் ஒன்று;
    கேள்விக்காகத்தான் பதில்
    பதிலுக்காகத்தான் கேள்வி.”

    உண்டு என்பதை எவ்வளவு எளிமையான வெளிப்பாடு? ஆனால் அழகியலும்  ஆழமும் கொண்ட வரிகள். ‘உனக்காகத்தான் நான் எனக்காகத்தான் நீ” என்றால் உரைநடை! யாருக்கு யார் பதில் என்பதும் யாருக்கு யார் கேள்வி என்பதும் தெரியாத நிலை! இருந்தால் என்ன? கேள்விக்காகத்தான் பதில் பதிலுக்காகத்தான் கேள்வி என்ற உறுதிப்பாடு வந்தபிறகு, கேள்வியாக யார் இருந்தால் என்ன? பதிலாக யார் இருந்தால் என்ன? என்னதான் காதல் என்னும் கற்பனை உணர்வைப் பாடுவதாகக் கவிஞர்கள் சொன்னாலும் அவர்களின் தனிவாழ்க்கை ரகசியத்தைக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்ற சூழல்களும் உண்டு என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. காரணம் காதலை அதனால் பாதிக்காத யாரும் அவ்வளவு சுத்தமான கற்பனையினால் வடிக்க முடியாது, வடித்தால் அதில் காதல் வழியாது. கேட்பவர்கள் காதில் சீழ்தான் வடியும்.

    ஆரூர் தமிழ்நாடனின் மரபியல் தடம்

    மரபு என்பது சிந்தனைத் தொடர்ச்சி. அறியாத பலர் இதனை யாப்பியல் தொடர்ச்சி என்று கருதிவிடுகிறார்கள். எனவேதான் யாப்பு சுத்தமாக எழுதுகிற கவிதைகளை மரபுக்கவிதைகள் என்று வெளிப்படுத்தித் தங்களை ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள். திருவள்ளுவர் பாடுகிறார்.

    “இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து”

    “Her painted eyes have a double effect. One glance pain and other cures.” என்று இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இங்கே சில பேர் தங்கள் நூல் பிறமொழிகளில் பெயரத்தெழுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இங்கிலாந்து நாட்டுக்காரன் இந்த மொழிபெயர்ப்பைப் படித்தால் என்ன செய்வான்? என்ன கருதுவான்? திருவள்ளுவர் தமிழ்மரபியல் சிந்தனையான விழி பரப்பும் காதலை ஒரு அகநோயாகச் சித்திரித்துள்ளார். ஆனால் மொழிபெயர்ப்போ ‘MULTY SPECIALITY HOSPITAL’ ஆக மாற்றிவிடுகிறது. அதனை விட வேடிக்கை கண்ணுக்கு வண்ணம் பூசியதாக மாற்றியிருப்பது. இதனை மொழிபெயர்க்க இயலாது, இயன்றால் தமிழ்க்காதலின் சாரம் பிழியப்படாது, ‘சிறக்கணித்தாள் போன்று’ நகைசெய்ததால் நோய் வந்தது, அந்த நோய் நீங்க வேண்டுமானால் மற்றொரு கண்ணால் காணவேண்டும் என்னும் தலைவன் வேட்கை புலப்படுத்தப்பட்டது. இந்த மரபியல் சிந்தனையைத் தற்கால இளைஞன் ஒருவன் குறும்புத்தனத்தோடு இப்படிப் பாடுகிறான்

    “நீ ஒரு முறை பாரத்தாய்
    என் நெஞ்சில் முள் தைத்தது!
    முள்ளை முள்ளால்தானே
    எடுக்க வேண்டும்?
    எங்கே இன்னொரு முறை பார்!
    இதுதான் மரபுக்கவிதை! இந்த காதல் மரபை ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளில் பரக்கக் காணலாம்
    “உன்னிடம் சறுக்கியதை
    எண்ணும்போது
    நெஞ்சம் முழுதும்
    விரவுகிறது வெட்கம்!
    இந்த வெட்கத்தை
    விலக்க வேண்டும்
    முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்”

    காதலில் ஆண் சறுக்குவதுதான் இயல்பு. தான் சறுக்கியதற்குப் பதிலாகத் தலைவியும் சறுக்கினால் காதல் கைகூடும். இல்லையெனில் அது கனவாய்ப் போகும். அதனால் தலைவன் சொல்கிறான். நான் உன்னிடம் தோற்ற வெட்கத்தை விலக்க வேண்டுமானால் நீ என்னிடம தோற்க வேண்டும்? இயலுமா? என்று வினவுகிறானாம். நுண்ணியமான காதல் என்பது இதுதான். சுழியத்தைச் சுழியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று என்பது போன்றது இது. இந்தக் காதல் வெளிப்பாட்டை அவரே இன்னும் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “பேரிடரும் நீ!
    நிவாரணமும் நீ!”

    தமிழக வெகுமக்கள் அறிந்த இரண்டு சொற்கள் ‘பேரிடர்’ மற்றும் ‘நிவாரணம்’. பேரிடருக்கு ஆளானவனுக்குத்தான் நிவாரணம். நிவாரணத்தின் அருமை அப்போதுதான் அவனுக்குப் புரியும். வெள்ளப் பேரிடரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் இருந்தவனும் நிவாரணம் பெற்றால் அவனுக்கு நிவாரணத்தின் அருமை புரியாது. இங்கே பேரிடருக்கு ஆளானவன் தலைவன். அவன் தடுக்கி விழுந்ததற்கு அவள் காரணமில்லைதான்.  காதல் உள்ளிருந்தே கொல்லும் உயிர் நோய். இவனாகவே நோய்க்கு ஆளாகிக் காரணமில்லாமலேயே தொடர்பில்லாதவளிடத்தில் நிவாரணம் தேடுகிறான். தன்னைப் பார்க்காத தலைவியைத் தலைவன் பாரத்து நோய்கொண்டான் திருக்குறள் தலைவன். தன்னைப் பாரத்ததாக எண்ணிக் கொண்ட மீராவின் காதலன் இதயத்தில் முள் தைத்ததாகக் கதைவிடுகிறான். ஆரூர் தமிழ்நாடனின் தலைவனோ  இவனாகவே தோற்றுவிட்டு அதனை ‘வெட்கம்’ என்று நாணுகிறான். இன்னொரு தலைவன் “உன்னால்தான்  எனக்குத் பெருந்துன்பம்” என்று இயற்கையைச் சாடுவதுபோலத் தலைவியைச் சாடுகிறான். நிவாரணத்திற்கான  விண்ணப்பத்தை அவளுக்கே போடுகிறான்.

    காதலுக்குக் கடன் இல்லை

    காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். நான் சொல்கிறேன் காதலுக்குக் கண்ணிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கடன் கிடையாது. நீண்ட காலத் தவணையிலோ குறுகிய காலத் தவணையிலோ காதல் செய்ய முடியாது. அது உயிரின் ஓரங்க நாடகம். தற்காலத்தில் வெளிவரும் காதல் கவிதைகளை ஒரு முறை படித்தாலும் காதல் உணர்வே ஒரு கசப்பான உணர்வோ என்று எண்ணத் தோன்றுகிறது. தங்கள் அந்தரங்கத்து வக்கிர புத்திகளையெல்லாம் அந்தக்காலச் சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள் என்று பொய்சாட்சியோடு கவிதை புனைகிறார்கள். சங்க அக இலக்கியப் புனைவுகளைத் தொடர்ந்து திருவள்ளுவர் பேசிய ஆன்மீகக் காதலைக் கண்ணதாசன் எழுதினார்.  அப்துல் ரகுமான் பேசினார். மீரா எழுதினார். சில கவிதைகளில் மேத்தாவும் எழுதினார் தற்காலத்தில்  துரை வசந்தராசனும் ஆரூர் தமிழ்நாடனும்  வெளிப்படுத்தி வருகிறார்கள்

    “யார் செய்த சிற்பம் நீ? ஏக்கக் கனவுதரும்
    வேர்வை நிலலா உன்றன் விலாசமெது? பார்வைகளில்
    வார்த்தையைப் பார்த்து வயமிழந்தேன்! மன்மதனின்
    ஊர்வாழும் நீ யார் உறவு?

    என்னும் அடிகள் ஒரு மெல்லிய இதயத்தின் காதல் முனகலை எடுத்துச் சொல்லும் கவிதை. ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ?” என ஐயுற்ற அந்தக் காலத் தலைமகனைப்போல்  ‘யார் செய்த சிற்பம் நீ? உன்றன் விலாசமெது? என்று வினவுதல் ஒரு புதுமைப் போக்கு!

    “திருவிழா காணவந்த தேவதையே! உன்றன்
    தெருவினிலே நானும் திரிந்தேன்! – ஒரு கோடிப்
    பூச்சிறகு பூக்கப் புதுவானில் நீந்துகிறேன்!
    ஆச்சரியம் தானுன் அழகு!”

    தலைவியை நலம் புனைந்துரைக்கிறான் தலைவன்!. “உன்றன் தெருவினிலே நானும் திரிந்தேன்” என்பது அந்தக் கால இளைஞன் அறியாத ஒன்று. அவன் மடலேறுவான். இவனுக்கு அது தெரியாது. அதனால் திரிகிறான். ‘நீ தரையில்தான் நிற்கிறாய் நான்தான் பறக்கிறேன்’ என்பது தலைவனுக்குத் தெரியும்! நமக்குத் தெரியும். நமக்குத் தெரிய வேண்டுமென்றால் நாமும் காதலித்து மிதக்க வேண்டும்.

    “மனசெல்லாம் உன்றன் மழைச்சாரல்! என்றன்
    நினைவெல்லாம் காதல் நெருப்பு – கனவினிலும்
    உன்முகமே வந்து உயிரை  வதைக்குதடி!
    உன்னையே தாயேன் உவந்து”

    மிக நுண்ணியமான உணர்வலைகளை மொழியால் சொல்லுகிற இந்தக் கவிதையில் காதலின் ஆழம் புரிகிறது. மனது கருவி. நினைவு பொருள். கருவியால் பொருள். தலைவியைப் பாரத்தவுடன் மனத்தில் மழைச்சாரல்! சரி! நினைவில் எப்படி நெருப்பு வரும்? வருகிறதே! அதுதான் காதல்! காதல் என்றால் பூவுக்குள் பூகம்பம் வரும்!

    தற்காலக் கவிஞர்களுள் காதலை உணர்வு ரீதியாகப் பாடியிருப்பவர் ஆரூர் தமிழ்நாடன். இதழையும் இதழ் தரும் முத்தத்தையும் இடையையும் காதலின் எடையையும் கண்ணையும் காதையும் கவிதையாக்கிப் படிப்பவர்களை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கின்றவர்கள் இடையில் ஒரு மரபு சார்ந்த மெல்லிய உணர்வுக்கு மொழிவடிவம் கொடுத்திருப்பதில் தமிழ்நாடன் முழுமையான வெற்றியடைந்திருக்கிறார். ‘உயிரைக் கொஞ்சம் உயிர்க்க வையடா” என்று இவரால் எழுதமுடிகிறது. ‘எனது நானே எப்படி யிருக்கிறாய்? உனது உடலும் உள்ளமும் நலமா? என்று வினவும் தலைவனைக் காட்டுகிறார். காதல் படித்து எழுதுவதன்று பட்டதை எழுதுவது தமிழ்நாடன் பட்டிருக்கலாம்!

    தமிழ்நாடன் கவிதைகளில் மரபு

    மரபியல் சிந்தனை என்பது வேருக்குள் நீர் போன்றது. வேரிலிருந்து அடிமரத்துக்குள் வந்து, கிளைகளுக்குள் பாய்ந்து, சினைகளுக்குள் சீராடி, இலைகளுக்குள் எழுச்சியடைந்து பூக்களில் பரிணமிப்பது. மரபு பற்றிய முழுமையான புரிதலும் பார்வையும் அற்றவர்கள் அதனை யாப்பு என மயங்கித் திரிகிறார்கள். தமிழ்க்கவிதைகளின் சாரமே பொதுவுடைமை. இதனை ஓர் ஆய்வுப் பொருண்மையாகவும் கொள்ள முடியும். தாமரை ஒரு மலர். அதனைப் பெரும்பாலும் இறைவனுடைய திருவடி மென்மைக்குப் பண்புவமை ஆக்கியே பழக்கப்பட்டவர்கள் நம்மவர்கள். அதற்கு முன்னாலே தலைவியின் முகத்திற்கு உவமம் சொன்னார்கள். இந்த இரண்டு வகையைத் தவிர அவர்கள மலர்களை வேறு எதற்காகவும எங்கும் பயன்படுததினார்களா என்பது அறியக் கூடவில்லை!. முதன் முதலாகப் பாவேநதர்தாம் அழகியலைச் சமுதாயச் சிந்தனைக்கு மடைமாற்றம் செய்து காட்டுகிறார்.

    “சித்திரச் சோலைகளே உமை நன்கு
    திருத்த இபபாரினிலே இங்கு
    எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தரோ
    உங்கள் வேரினிலே”

    “அழகின் சிரிப்பில் சோலைகளைப பாடியவர்தான் பாவேந்தர். சோலையின் நடுவே சொக்குப்பச்சை படர்க்கொடி முல்லையின் சிரிப்பை ரசித்தவர்தான் பாவேந்தர். இந்த இடத்தில் அவரால் தொழிலாளிகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. பூவிற்குச் செம்மை வந்தது தொழிலாளியின் ரத்தத்தினால் என்பது அவரது தற்குறிப்பேற்றம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய தஞ்சை ராமையாதாஸ் ‘வணங்காமுடி’ என்னும்  திரைக்காவியத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “மலையே! உன் நிலையே நீ பாராய்
    கலைஞன் கை உளியாலே
    காவியச் சிலையான
    மலையே உன் நிலையே நீ பாராய்
    தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே நீ!
    உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே!”

    பாறைகள் கிடக்கின்றன. அவை பாறைகளே! எதுவரைக்கும்? சிற்பியின் உளி படாத வரைக்கும்!. அவன் விரலுக்குத் தெரிந்திருக்கிறது எந்தப் பாறையில் திருவள்ளுவர் இருப்பார்? எந்தப் பாறையில் சிவபெருமான் இருப்பார்? எந்தப் பாறையில் பெரியார் இருப்பார்? எந்தப் பாறையில் பெருமாள் இருப்பார்? எந்தப் பாறையில் தேர் இருக்கும்? எந்தப் பாறையில் யானை இருக்கும்? எந்தப் பாறையில் பாண்டவர்கள் இருப்பார்கள்? எந்தப் பாறையில்  படைகள் இருக்கும்? என்றெல்லாம் அவன் விரல்களுக்குத் தெரிந்து கண்டறிகிறான். கடவுளை வணங்குகிறவன் கல்லை மறக்கிறான். திருவள்ளுவரை வணங்குகிறவன் பாறையை மறக்கிறான். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய ஒரு கவிஞன் மூலத்தை மறப்பதில்லை. சிற்பியின் உழைப்பு இல்லாவிட்டால் பாறை பாதையோரத்துக் கல்லாகியிருக்கும் என்னும் கசப்பான உண்மை பாவலனுக்குத் தெரிந்திருக்கிறது, அதனால்தான் பாடுகிறான்.

    “கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே!”

    பாறை தானாகச் சிலையாகாது. சிற்பியின் கையுளி அதன் மேல் படவேண்டும். பக்தர்கள பகவானைத் தரிசிப்பார்கள். கல்லைப் ;பாடாத கவிஞன் சிலையைப் பாடுகிறான். எதில்? காவியத்தில்! பாவலன் சிற்பியைச் சிந்திக்கிறான். இந்த மரபியல் சிந்தனையை அப்படியே தமீழ்நாடன் வழிமொழிகிறார்!

    “எல்லாச் சிற்பங்களிலும் தெரிகிறது!
    வேர்வை ஒழுகும்
    யாரோ ஒரு சிற்பியின்
    சிந்தனை முகம்!”

    “சிற்பம் என்பது கழித்தல் ஓவியம் என்பது கூட்டல்” என்று பாடினார் அப்துல் ரகுமான். சிதறி விழும் சில்லுகள்தான் சிற்பத்தைக் காட்டுகின்றன. கண்டெடுக்கின்றன. சில்லுகள் தங்களை இழந்துதான் சிற்பத்தைக் காட்டுகின்றன. சிற்பத்தைக் காட்டுவதற்காகத் தங்களை இழக்கின்றன. அந்தச் சிற்பத்தில் மானுட உருவங்களையும் பறவை உருவங்களையும் இறைவன் திருவுருங்களையும் மரபு வழியாகக் கண்டுவரும் கவிதை உலகில் பின்னாலே பாடிய கவிஞர்கள் வழியைப் பின்பற்றி ஒரு சிற்பியின் சாதாரண முகமல்ல “சிந்தனை முகத்தைக்” காணும் தமிழ்நாடனின் கவிதையில் உழைப்பின் உயர்வும் பெருமையும் தென்படுகிறதா இல்லையா?

    மழைவேண்டும் தமிழ்நாடன்

    பெரும்பாலும் மழைவேண்டித்தான் வழிபாடு நடக்கும். சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில் மாரியைப் பாரியோடு ஒப்பிட்டுப் பாடிய புலமைத்திறன் அனைவருக்கும தெரியும். அது மழையின் வண்மை குறித்தது.  வள்ளுவப்பெருமான் திருக்குறள் பாயிரத்தில் வான் சிறபபு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் அதனை வைத்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இருப்பினும் அவ்வதிகாரத்தில் உலகியல் இடையறாது நடப்பதற்கு அது செய்யும் உதவியையும் அறம் பொருள் இன்பங்களுக்குக் காரணமான அதன் பெருமையையும் உணர்த்தினாரேயன்றி  அந்த அதிகாரத்தின் ஏந்தப் பாடலிலும் மழையின் அழகியல் பாடப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அதன் அவசியமே பாடப்பெற்றது,

    “ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
    ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
    ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
    பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
    ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய் “

    என்னும் திருப்பாவையில் பெருமாள் அருளின் தன்மையை உவம வழி விளக்குகிறார் ஆண்டாள். மழையின் பயணம், அதன் உருவம் நிறம், மின்னலின் தனிச்சிறப்பு இடிமுழக்கம் எனத் தொகுப்பாகப் பாடியருளினார் ஆண்டாள். உவமத்தின் பரிமாணத்தை எப்படி நோக்கிக் கவிதை எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் பாசுரம் ஒர் ;சிறந்த எடுத்துக்காட்டு, வெகுமக்கள் ஊடகமாகிய திரைப்படத்தில் மழை, காதலர்கள் நனைவதற்காகவே பெய்தது, கவிஞர் மருதகாசிதான் அந்தப் போக்கைக் கொஞ்சம் மாற்றி சமுதாயச் சிந்தனையோடு மழைப்பொழிவைக் காதல் பாட்டாகவே பாடிக் காட்டினார்.

    “சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே மழை
    கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே -அவன்
    கஞ்சிக்காகக் கலங்கி விடும்
    கண்ணீர்த் துளியைப் போலே  “

    முட்டாப் பயலே மூளை
    இருக்கா என்று ஏழை மேலே…
    துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற வார்த்தை போலே

    இதற்குப் பின்னால் பலர் மழை பற்றி எழுதியிருந்தாலும் “என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்னும் ஒரு மென்மையான ஏக்கக் குரல் வைரமுத்திடமிருந்து வந்தது. அதற்கு முன்போ பின்போ கவிஞர் வசந்தராசன் தனக்கேயுரிய சொற்சிலம்பங்களைக் கைக்கொண்டு மழைக்களம் கண்டார்.

    “அணையுடைந்த மேகநதி மலையு ருட்டும்!
    அருவியென ஆர்ப்பரித்து த்  தரைவி ரட்டும்!
    பனைமரத்தில் பல்துலக்கிப் பசித ணிக்கப்
    பாறைகளைக் கடித்துண்டு துப்பி வைக்கும்!
    முனைமுறியா ஊசிகளின் காதுக் குள்ளே
    முழுப்பகலும்  இரவோடு  முயங்கி நிற்கும்!
    சினைமாட்டின்   மடிபோல  நீர்பெ ருக்கும்!
    சிற்றூரைப்  பேரூரை  ஓரூ ராக்கும்!*

    “பனைமரத்தில் பல்துலக்கும் மழை” எனக் கலிங்கத்துப் பரணியின் களத்தைக்  காட்டிய வசந்தராசன், சினைமாட்டின் மடிபோல நீர் பெருக்கும்! என்னும் நேர்முக வண்ணனையைப் பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் காட்டிய அத்தனையும் பல தளங்களில் கண்ட கவிதைகளே!. இந்தத் தளத்தில்தான் கவிதை தோன்றும் என்பதில்லை. எந்தத் தளத்திலும் கவிதை தோன்றலாம்.  இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாடனின் மழை பற்றிய  கவிதையை நோக்க வேண்டியதிருக்கிறது. மழையின் தீவிரத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் உண்டாகும் நடைமுறைச் சிக்கல்களையும் நீண்ட கால இழப்புக்களையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். பெருமழையின் பாதிப்பை உணர்ந்து பாடுகிறார். அதன் விளைவுகளை விருத்தத்தில் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

    “புன்னகையைத் தொலைத்ததுபோல்  தாவ ரங்கள்
    பொலிவிழந்து நிற்பதெலாம்  உன்னால் தானே?
    தன்கிளையின் காய், கனிகள்  உதிர்த்த தோடு
    தவமரங்கள் வீழ்ந்ததுவும்  உன்னால் தானே?*
    தென்றலுக்கே அதிர்கின்ற  சிற்று யிர்கள்
    திணறியதும் பதறியதும்  உன்னால் தானே?
    இன்புறுத்தும் பறவையெலாம்  சிறகொ டுங்கி
    எங்கெங்கோ பறந்ததெலாம்  உன்னால் தானே?

    கொட்டகையில் கட்டிவைத்த  ஆடும் மாடும்
    குலைநடுங்கித் தவித்ததுவும் உன்னால் தானே?
    கட்டளைக்குக் காத்திராமல் பஞ்சா  ரத்துக்
    கவின்கோழி தப்பியதும்  உன்னால் தானே?
    *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல்
    நலமின்றிச் சரிந்ததும் உன்னால் தானே?
    பட்டணத்து மாமனவன்  சொல்லிச் சென்ற
    பயணமது நின்றதுவும்  உன்னால் தானே?

    பாதையெல்லாம் தொலைந்ததுவும்  உன்னால் தானே?
    பயம்வந்து கவ்வியதும்  உன்னால் தானே?
    வாதையெலாம் பெருகியதும்  உன்னால் தானே?
    வாழ்வியலின் நெருக்கடியும்  உன்னால் தானே?
    கூதல்தரும் வேதனையும்  உன்னால் தானே?
    குறுகுறுக்கும் ஆசைகளும்  உன்னால் தானே?
    ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ!

    இந்த விருத்தங்களில் தொடர்ந்தாளப்பட்டிருக்கும் ‘உன்னால்தானே’ என்பது உலகியல் வழக்கு. “எல்லாம் ஒன்னால வந்த வினை” என்பதைப் பலரும் கேட்டிருக்கலாம். கவிதையைக் கவிஞன் மொழியில் செவிமடுக்க வேண்டும். அவன் சொல்வதுபோல் நாம் பாவனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் பேசினால் அந்தப் பாத்திரமாக வாசகன் மாற வேண்டும். பாத்திரம் பேசுவதையெல்லாம் நூலாசிரியன் கருத்து என மயங்கக் கூடாது. அப்போதுதான் படைப்பாளியின் அனுபவம் வாசகனுக்குக் கிட்டும். மிக நுண்ணிய அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை இது,  பாட்டில் துன்பங்களையல்லவா பட்டியலிடுகிறார்? இதில் அழகியல் எப்படி வரும் எனச் சிலர் வினவக்கூடும்.  துன்பம் மக்களுக்கு, கவிதைக்கு அல்ல. கவிதைக்கு அது பாடுபொருள்.

    1. தாவ ரங்கள் பொலிவிழந்து நிற்பது
    2. தன்கிளையின் காய், கனிகள் உதிர்த்தது
    3. தவமரங்கள் வீழ்ந்தது
    4. சிற்று யிர்கள் திணறியது பதறியது
    5. பறவையெலாம் சிறகொ டுங்கி எங்கெங்கோ பறந்தது
    6. ஆடும் மாடும் குலைநடுங்கித் தவித்தது
    7. பஞ்சா ரத்துக்  கவின்கோழி தப்பியது
    8. *நட்டுவைத்த வாழை நலமின்றிச் சரிந்ததும்
    9. மாமன் பயணமது நின்றது
    10. பாதையெல்லாம் தொலைந்தது
    11. பயம்வந்து கவ்வியதும்
    12. வாதையெலாம் பெருகியது
    13. வாழ்வியலின் நெருக்கடி
    14. கூதல்தரும் வேதனையும்
    15. குறுகுறுக்கும் ஆசைகள்

    என்று நிரல் படுத்திப் படித்தால் பாட்டின் பொருளுணரலாம். இதற்குள்ளேதான் அடங்கிக் கிடக்கிறது கவிதை. அந்தக் கவிதையின் பொலிவினைப்

    1. புன்னகையைத் தொலைத்தது போல் தாவரங்கள்
    2. *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல் நலமின்றிச் சரிந்ததும்

    என்னும் உவமங்கள் மேலும் பொலிவாக்குகின்றன. சங்க இலக்கியத்தின் தலைசிறந்த மாண்பே அடைச்சொற்கள்தாம். அடையில்லாப் பெயர்ச்சொற்களைச் சங்க இலக்கியத்தின் எந்தப் பகுதியிலும் காண முடியாது. அந்த நீண்ட நெடிய மரபு தமிழ்நாடன் கவிதைகளில் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது, பெயர்ச்சொற்களுக்கு அடைச்சொற்கள் என்பது நெற்றிக்குத் திலகம் போல!

    “ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ! “

    கெடுப்பதும் மழை என்று பாடிய வள்ளுவர் எடுப்பதும் மழை என்றும் பாடி வேண்டினார். அந்த வேண்டுதலைத்தான் தமிழ்நாடன் முன்னெடுக்கிறார். “மழையே!  உனக்கு இரக்கம் இல்லையா என்றால் அவன் அரசியல் வாதி! மழையே உனக்கு ஈரம் இல்லையா என்றால் அவன் கவிஞன்.  தமிழ்நாடன் கவிஞன் என்பதற்கு இந்தச் சொலலாட்சி போதும்!

    உள்ளூர் பார்வை

    ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகப் பொங்கல் மலருக்குப் பாட்டு  எழுதியவர்களெல்லாம் கவிஞர்கள் எனப்பட்டார்கள். திருமண அழைப்பிதழ் எழுதிக் கொடுத்தவர்களெலலாம் வரலாற்றாசிரியர் ஆனார்கள். தற்போதும் நிலைமை அப்படியேதான் ;இருக்கிறது. என்ன ஒரு மாற்றம்? கவிதையில் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் செய்த செயல்களைச் சாதனைகளாகக் காட்டி, அவற்றை அப்படியே பல்லாங்குழிக்குள் வைத்த சோழிகளைப் போல, யாப்புக்குள் திணித்து நோபல் பரிசுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அப்படியானால் தனிமனிதனைப் பாடுவது கவிதையாகாதா என்றால் ஆகும். அது கவிதையாக இருக்க வேண்டும். இது வரை நானறிந்த வரை மகாகவி பாரதிக்குப் பாரதிதாசன் எழுதிய பாராட்டினைப் போல் வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அதற்கு அடுத்தபடியாக உ.வே.சாவுக்கு மகாகவியும் அறிஞர் வ.சுப மாணிக்கமும் எழுதிய பாராட்டுக்கள் அற்புதமானவை.

    “தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
    பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”

    என்னென்பேன்?” என வியந்து போற்றிய அந்த உணர்ச்சிப் பாராட்டு இன்றைக்கு இல்லை. காரணம் பொருளைப் பாடுவதற்கான காரணங்கள் உண்மையானவையாக இல்லை.  கவிஞனாகவும் இல்லை. பாடுகிற தலைவனிடமிருந்து எதனையாவது எதிர்பார்த்து எழுதினால் அது பாராட்டாக இருக்கலாமே தவிர, கவிதையாக இருக்காது. எதனையும் எதிர்பார்க்காமல் எழுதுகிறவன் கவிஞனாக இல்லாமல் வாய்பாட்டு வணிகனாக இருந்தால் தளையிலேயே சிக்கித் திணறுவான். எனவே இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.  தமிழ்நாடன்; இரண்டும் சம அளவில் கலந்த கலவை. அதனால்தான் அவர் யாரைப் பாடினாலும்  கலைஞரைப பாடியதுபோல அமையவில்லை. அவரும் இவரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடனின் தந்தையார் கலைஞரின் அருமையுணர்ந்து அவருக்கு நெருக்கமானவர். கவிஞர் பிறர் கலைஞரைப் பாடுவதற்கும் தமிழ்நாடனை ஒத்தவர் கலைஞரைப் பாடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. கவிதை மணங்கமழும் கவிதைகளால் கலைஞரை அவர் பாடியிருப்பன  கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன .

    நீயெழுதும் போதோ நெருப்பெரியும்! உன்கையால்
    நீயெடுக்கும் பூவும் நிறம்மாறும் – நீயெழுப்பும்
    போர்முழக்கச் சொல்லில் புயல்வீசும்! செந்தமிழின்
    வேர்நீ விழுதுகளும் நீ!

    ஒரு நேரிசை வெண்பா எப்படி அமைந்தால் கற்பார் உள்ளத்தைக் கவரும் என்னும் வித்தை தெரிந்தவர் தமிழ்நாடன். அந்த வெண்பாவில் முரண் அமைப்பைக் கையாளும் கலை கற்றவர் அவர். சொல் முரண் பொருள் முரண் என்னும் வகைபாடுகளை நன்கு அறிந்தவர்.அதனால் அந்த முரண்களை மிக இலாவகமாகக் கையாண்டு சில வெண்பாக்களைக் கலைஞருக்குப் பாடியிருக்கிறார் இன்னொரு வெண்பா இப்ப்டி அமைந்திருக்கிறது

    “உன்னிதழ்கள் என்ன ஒளித்தமிழின் தாய்வீடா?
    பொன்சிறகுச் சொற்களெல்லாம் பூக்கிறதே! உன் பேச்சால்
    தேன்பூச்சினுள்ளும் திராவகம் ஊறுவதை
    நான் பார்த்தேன் அன்றொரு நாள்!”

    அரசியல் களம் தமிழிலக்கியக் களம் என்னும் முரண்பட்ட இரு களங்களீலும் மாபெரும் வெற்றிகண்ட கலைஞரை முரண் தொடையினாலேயே பாடியிருப்பது சிலாகிக்கத தகுந்தது. தேர்தலில் கட்சி முழுமையாகத் தோற்றாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் தலைவர் கலைஞர்! காரணம் இலக்கியம்! “நீ என்ன தேனும் பாதரசமும் கலந்த கலவையா?” என்று வைரமுத்து ஒரு முறை கலைஞரைப் பாடியிருந்தார். கலைஞரின் இந்த முரண் தமிழ்நாடனை மட்டுமன்று எந்தக் கவிஞனையும் கவரும்! இந்த முரண்களின் தொகுப்பை இப்படி அமைத்துப் பாரக்கலாம்!

    1. கருவியாக இருக்க வேண்டிய நெருப்பே எரிகிறது
    2. பூக்களுக்குப் பதிலாகச் சொற்கள் பூக்கின்றன.
    3. தமிழ்ச்சொற்கள் கலைஞர்வழி பூக்களாகக் கொட்டுகின்றன
    4. மென்மையான சொற்கள் அனல் வீசும் சொற்களாக மாறுகின்றன
    5. பூக்களில் தேனுக்குப் பதிலாகத் திராவகம் சொட்டுகிறது
    6. தமிழிலிருந்து வந்த கலைஞர் தமிழைத் தாங்குகிற விழுதாகவும் இருக்கிறார்.

    எட்டு அடிகள் கொண்ட இரு நேரிசை வெண்பாக்களில் கலைஞரின் சொற்களின் இருவகை முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் தமிழ்நாடன்! பாடாண் திணைக்குள் கையறு நிலை அடங்காது.  ஆனால் கையறு நிலையில் பாடாண் திணை அடக்கம்! அந்த வகையில் கலைஞருக்குப் பாடிய கையறு நிலைப் பாடல பாடாண் திணைப் பொருண்மைகளை உள்ளடக்கிக் கவித்துவமாகப் பாடியிருக்கும் தமிழ்நாடனின் கவியாளுமை இதனால் புலப்படக் கூடும்.

    உலகப்பார்வை

    உரைநடைக்கும் கவிதைக்கும் எத்தகைய வேறுபாடுகள் உள்ளனவோ அத்தகைய வேறுபாடுகளே சாதாரண மனிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் உள்ளன. சாதாரண மனிதன் நிகழ்வியலைப் பேசுகிறான். கவிஞன் கற்பனையில் மிதக்கிறான். சாதாரண மனிதன் தரையில் நடக்கிறான். .கவிஞன் வானத்தில் பறக்கிறான்.  சாதாரண மனிதன் மனிதர்களிடத்தில் மட்டும் பேசுகிறன். கவிஞனோ மரம், செடி, கொடி என அனைத்து உயிரினங்களோடும் உறவாடுகிறான். சாதாரண மனிதன் உரையாடலில் புனைவுகளே இல்லை. ஆனால் கவிஞன் புனைவுகள் இன்றி எழுதவே முடியாது, சாதாரண மனிதன் அக்கம்பக்கத்து வீட்டாரையும் பகைத்துக் கொள்கிறான். கவிஞனோ மானுடச்சமுதாயம் அத்தனையையும் தன் பார்வையால் தழுவிக் கொள்ளுகிறான். அடுத்த வீட்டுச் சுவற்றையே சாதாரண மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டியும் கவிஞன் சிந்திக்கிறான். உள்ளூர் தகராறு கூட ஒரு சாதாரண மனிதனுக்குத் தெரிவதில்லை!. ஆனால் ஈராக் ஈரான் போரிலிருந்து இஸ்ரேல் போர் வரை கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறது, அவனுடைய மானுடப் பார்வை விசாலமானது. அதனால்தான் சங்கச் சான்றோர்களும் அவர்வழி வந்த புலவர் பெருமக்களும் தங்கள் இலக்கியங்களை ‘வையம்’ என்றோ ‘உலகம்’ என்றோ தொடங்கினார்கள்.

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ

    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ!
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!

    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    நீங்களெல்லாம் கானலின் நீரோ!
    வெறும் காட்சிப் பிழைதானோ!

    போனதெல்லாம் கனவினைப்போல்
    புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ!
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ!
    அங்குக் குணங்களும் பொய்களோ!

    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    என்று மகாகவி பாடுகிறார் என்றால் தன் வாழ்க்கைத் துயரத்தை மறந்து வறுமையைத் துறந்து பாடுகிறார் என்பதை அறிதல் வேண்டும். அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகியவற்றைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளும் ஒரு தனித்திறன் மகாகவிக்கு இருந்திருக்கிறது! அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன்,

    அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
    பிரிவிலை எங்கும் பேத மில்லை!
    உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
    புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
    புவியை நடத்து! பொதுவில் நடத்து!

    உலகு முன்னால் தனிமனிதன் பின்னால் என்னும் சமுதாய நோக்கத்தை முன்னெடுக்கிறார். பாரதிதாசனுடைய கவிதைகள்  தமிழ், தமிழர் என்று தொடங்கித், திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து  விரிந்து செல்லும் இயல்புடையன.இந்த இயல்பு அவர் ஒரு கவிஞர் என்பதால் வந்த இயற்கையமைதி! ஒரு தனிமனிதனிடத்தில் இத்தகைய பரந்துபட்ட விசாலமான மனத்தை அவ்வளவு எளிதாகக் கண்டு விட முடியாது.

    இந்த நீண்ட நெடிய மரபில் வந்தவர்தான் ஆரூர் தமிழ்நாடன். காதலைப் பற்றி எழுதுவது, கண்ணீரைப் பற்றி எழுதுவது, வாழ்வியல் சிக்கலைப் பற்றி எழுதுவது என அவர் பயணம் செய்திருக்கிற களங்கள் பலவாயினும்

    என் கனவென்பது பசியறு உலகம்!
    என் சுகம் என்பது சூதறு மனிதம்!
    என்னிசை என்பது இயற்கையின் பாடல்!
    என் தவம் என்பது வேர்வையின் வெகுமதி!
    என்னூர் என்பது உலகப் பெருவெளி!
    என்னுற வென்பது மானுடக் கூட்ட்ம்!!
    என் மகிழ்வென்பது உலகின் மகிழ்வு!
    என் துயர் என்பது பிறர் படும் துயரம்!!

    என்னுந் தன்னிலை விளக்கம் ஒரு கொள்கைப் பிரகடனமாகவே ஒலிப்பதைக் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும கேளிர்’ என்று தொடங்கிய இந்த மரபின் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்க வேண்டும். மரபியல் சிந்தனைகள் என்பன இவையே. மரபுக்கவிதைகள் என்பனவும் இவையே. மனிதனே ஒரு சமுதாய விலங்கு! அவன் கவிஞன் ஆனால் மானுட நேசிப்பே அவன் பிறவி நோக்கமாகிவிடுகிறது. சமுதாயத்திற்காகத் தலைவர்கள் பாடுபடலாம். உண்மைக்கவிஞனோ சமுதாயத்திற்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான். அப்படி ஒப்படைத்த ஒரு சிலருள் தமிழ்நாடனும் ஒருவர்!

    கவிதையில் புதிய வடிவங்கள்

    பொருளுக்கேற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கோட்பாடு. இது பற்றிய என் ஆய்வு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. சிலப்பதிகாரத்தை விருத்தத்தில் எழுதியிருந்தாலும் கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலும் இரண்டும்; படுதோல்வி அடைந்திருக்கும். இங்கே தொட்டதற்கெல்லாம் “தாக்கம்! தாக்கம்” என்னும் ;கடுமையான பதப்பிரயோகத்தைப் பயன்படுத்தி புதிய வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பற்றிக் கவலைப் பட ஏதுமில்லை. ஜப்பான் நாட்டுக்காரன் சிதைந்துபோன தன் நாட்டை மறுசீரமைப்பு செய்துவிட்டுப் புதுவாழ்வை நோக்கி எழுச்சி நடை போட்டுக்கொண்டிருக்கிறான். இவர்கள் ஜப்பான் மொழி தெரியாமலேயே ஹைக்கூ என்பது ஜப்பானிய தாக்கத்தால் வந்நது என்பார்கள். பாரதிபோல யாரோ ஒருவர் மிகுந்த சிரமப்பட்டுத் தன் பன்மொழிப் புலமையால் அதனையோ அது போன்றவற்றையோ அறிமுகப்படுத்தியிருக்கலாம்.  திரு அப்துல் ரகுமான் அத்தகைய பன்மொழி வித்தகர். மரபு சாராத கவிதைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்கள ;மிகவும் ஆழமானவை. அவருடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடே “புதுக்கவிதைகளில் குறியீடு” என்பதாகும். இவர்கள் சிரமப்படாமலேயே அந்த வடிவத்தைத் தம் சிந்தனைகளுக்கு வடிவமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதுக்கவிதை அதுபோல்தான் கலீல் ;ஜிப்ரான் என்பார்கள். பாப்லோ நெருடா என்பார்கள். எஸ்ராபவுண்டு என்பார்கள். டி.எஸ்.எலியட் என்பார்கள். இவர்களுக்கு உள்ளூரில் எந்தத் தாக்கமும் இருக்காது. வெளிநாட்டு இறக்குமதியால்தான் இவர்கள் தாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு இதுபோன்ற எது பற்றியும் கவலையில்லை. இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக், பழமொன்ரியூ என்றெல்லாம் கவிதைச் சந்தையில் பல பொருள் வணிகம் செய்யப்படுகிறது, இந்த வணிகம் ஒருவகையில் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த மரபுக்கவிதையின் பேரழிவுக்குப் பெருங்காரணமாகவும் அமைந்தது. இத்தகைய வடிவங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நோக்கினால் சிலவற்றில் கவிதைகள் இல்லாமல் இல்லை. இந்த வடிவங்கள் தமிழுக்குப் புதியன என்பதில் எத்தகைய ஐயமோ இவை வரவேற்கப்படவேண்டியவை என்பதில் தயக்கமோ எனக்கு இருந்ததில்லை ஆனால் தள்ளுவண்டி தக்காளியைப போல வணிகத்திற்குப் பயன்படும் போதுதான் கொஞ்சம் நெளிய வேண்டியதிருக்கிறது.

    தமிழ்நாடன் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பாளர். கவிதைப் படைப்பாளர். இயல்பிலேயே கவிஞர். மரபுக்கவிதைகளைச் சரளமாக எழுதும் அவர், புதிய கவிதை வடிவங்களை உள்வாங்குவதற்கு எந்தச் சிரமத்தையும் கொள்வதில்லை. காரணம் கவிஞனுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏதும் வராது. அவன் மனம் எப்போதும் கவிதையையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் வடிவங்கள் அவனை ஆட்கொள்ளுவதில்லை. மாறாக அவனே எல்லா வடிவங்களையும் ஆட்கொள்கிறான். உலகம் யாவையும் தாமுளவாக்கவும் நிலைபெறுத்தலும் நீக்கலும் கொண்ட பரம்பொருளைப் போல கவிதையின் எந்த வடிவத்தையும் ஆக்கவும் நிலைபெறுத்தவும் நீக்கலும் செய்வதற்கான வல்லமையைப் பெற்றவர் தமிழ்நாடன். அவருடைய புதிய கவிதை வடிவங்களிலிருந்;து சில கவிதைகள் இப்படி அமைந்திருக்கின்றன. கவிஞர் சுரதா ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார். இரவு நேரம். நாய் குரைக்கிறது. அடித்துத் துரத்துவதற்குச் சரளைக் கற்களைத் தேடுகிறார். அவை பூமியோடு ஒட்டிக் கொண்டு இவர் கைக்குக் கிட்டவில்லை. உடனே சொல்கிறார். “என்ன இது இந்த ஊரில்? நாயை அவிழ்த்துவீட்டுக் கல்லைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்?” பிறவியிலேயே கவிஞனாக இருந்தவனுக்குத்தான் இது மாதிரி கற்பனைகள் தோன்றும். நாயைக் கட்டிப் போடுவது எல்லாருக்கும் தெரிந்த வினைதான். ஆனால் மண்ணோடு ஒட்டிய சரளைக் கற்களைக் கட்டிப் போட்டிருப்பதாக எல்லாராலும் கற்பனை செய்துவிட முடியாது.

    “என்ன அசதியோ
    அசையாமல்
    படுத்திருக்கிறது
    இரவு;
    நான்தான்
    புரண்டபடியே இருக்கிறேன்.

    மனிதன் அசையாமல் கிடப்பான். அசைந்தபடியும் கிடப்பான். இரவுக்கு அந்த வேறுபாடு கிடையாது. கவிஞனாகையால் உழைத்துக் களைத்த உடம்பல்லவா? இவன் தூக்கம் வராமல் அசைந்து புரண்டு கிடந்து வானத்து இருளை நோக்குகிறான். அந்த இருள் அசையாமல் கிடக்கிறது. இருள் எப்போதுமே அசைவதோ புரள்வதோ இல்லை. கவிஞன் புரண்டதால் வானம் புதிதாகப் புரளாமல் படுத்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்.

    “ வீணை வாசிக்கிறாய் நீ!
    கண்களால் ரசிக்கிறேன் நான்!”

    கல்யாண அகதிகள் என்று ஒரு திரைப்படம் அதில் நாயகன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவன். அவன் காதலி தன் தோழிகளிடம் சொல்லுவாள் “நான் நியூஸ் பாக்கணும்! நான் நியூஸ் பாக்கணும்!” என்று தோழிகள் வியப்படைவார்கள். செய்திகள் செவிக்குரியன. ஆனால் தங்கள் தோழி ‘பாக்கணும்’ என்றல்லவா சொல்கிறாள் என்று. காதலுக்குக் கண்தான் தலைமையாசிரியர். மற்ற எந்த புலனும் குறிப்பாக மூளை பயன்படவே பயன்படாது, ‘நான் மூளைக்கு மூளையாக அவளைக் காதலித்தேன் என்று எவனும் கூற மாட்டான். நான் உயிருக்கு உயிராக அவளைக் காதலித்தேன் என்றுதான் கூறுவான். மூளை அறிவுப் புலன். இதயம் உணர்வுப் புலன்! அதனால்தான் கவிஞனாகக் காதலித்த தமிழ்நாடன் வீணையிசையைக்  கண்ணால் பார்த்து ரசித்திருக்கிறார். நான் அறிந்தவரையில் இசையைப் பாரத்து ரசித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்! கவிதையென்றால் இப்படித்தான் அமைய வேண்டும். ஆறே சொற்கள்! ஒரு பொருள் முரண்! அருமையான வெளிப்பாடு

    “ஒரு சூறாவளியைப்
    போலத்தான்
    என்னை நீ கடந்திருக்கிறாய்;
    சேதத்தின் மதிப்பில்
    தெரிகிறது
    உன் மதிப்பு.”

    நம்முடைய நாட்டுத் தலைவர்கள் மழை பெய்து, வெள்ளம் வந்து, நடப்பியல் வாழ்க்கை சீரழிந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய பிறகுதான் வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்து மதிப்பிடுவார்கள்  காதலும் அது போல்தான்! இந்தக் குறுங்கவிதை தலைவனுக்கும் பொருந்தும் தலைவிக்கும் பொருந்தும். காதலில் “சேதாரம் ஆணுக்கு” என்பது ‘பின் நவீனத்துவம்!”  வளையல் கழண்டு விழுவதும், மேனி பசப்பதும், தோள் துவளுவதும் விழிகள் பஞ்சடைவதும் பழந்தமிழ்க் கவிதைகளில் தலைவனுக்குச் சொல்லப்பட்டதாகத் தகவல் இல்லை. பின்னாலே வந்தவர்கள் இந்த மரபை மாற்றி காதலியைப் பிரிந்த தலைமகன் தாடி வளர்த்துக் கொள்வதுவரைப் பாடித் தீர்த்தார்கள். இழந்த பிறகுதான் இருப்பின் பெருமை புரியும். நம்முள் எததனைப் பேர் பெற்றோரை, மனைவியை. கணவனை வாழுங்காலத்தில் புரிந்து கொள்கிறோம்! காதலுக்கும் இது பொருந்தும்.  தன்னிலை மறந்த காதலில் ஏதும் தெரிவதில்லை. இழந்த பிறகுதான் இழந்தது எது என்பதே தெரிகிறது! புரிகிறது.  வடிவங்கள் எதுவாயினும் கவிதைகளை அவற்றில் வார்த்தெடுக்கும் வல்லமை கொண்டவர் ஆரூர் தமிழ்நாடன் என்பதற்கு இந்தக் கவிதைகள் ஒரு குறைந்த அளவு எடுத்துக் காட்டுக்களே! தன்னைப் பாதித்த அனைத்துப் பொருண்மைகள் பற்றியும் ஆரூர் தமிழ்நாடன் முகநூலில் பாடியிருப்பவனவற்றை என்னால் இயன்ற அளவு திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு அறியப்பட்ட கவிஞனுக்கு அறிமுகம் தேவையில்லை!

    நிறைவுரை

    கவிதையில் வாழ்வதே வாழ்வு என்பது திறனாய்வாளனாகிய என் வாழ்நாள் கொள்கை! நல்ல கவிதைகளையும் அவற்றை எழுதிய உண்மைக் கவிஞர்களையும் அறிமுகம் செய்வதை ஒரு கடனாகக் கொண்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் ‘வல்லமை’ யோடு செய்து வருகிறேன். முகநூலில் நான் கண்ட உண்மைக் கவிஞர்கள் சிலருள் ஆரூர் தமிழ்நாடனும் ஒருவர். தமிழ்மணக்கும் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைப் பற்றிய இந்த என்னுடைய திறனாய்வு இன்னும் பல திறனாய்வுகளுக்கு வழித்தடமாக அமைய வேண்டும் என்பது என் ஆசை. எவ்வளவு சிறந்த கவிஞரானாலும் அவருடைய எல்லாக் கவிதைகளையும் நான் திறனாய்வு செய்வதுமில்லை. பிழைவேட்டையை நான் திறனாய்வாகக் கருதுவதுமில்லை. அரிய பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். திறனாய்வில் பல வகை உண்டு. நடுநிலைத் திறனாய்வு (Standard Criticism), விருப்பு வெறுப்பின் எல்லையில் இருந்து திறனாய்வு செய்வது (accentric Criticism) வரலாற்று முறைத் திறனாய்வு (Historical Criticism). கவிஞனின் வாழ்வை ஓட்டி அமைகின்ற திறனாய்வு (Biographical Criticism) விதிகளின் அடிப்படையில் திறனாய்வு செய்வது (Dogmatic Criticsm) கவிஞனின் உணர்ச்சிவழி நின்று செய்கின்ற திறனாய்வு (impressionistic Criticism) எனப் பலவகைப்படும். அரூர் தமிழ்நாடன் பற்றிய கவிதைகளைப் பற்றிய இந்தத் திறனாய்வு ஒரு உணர்ச்சிவழித் திறனாய்வு. (impressionistic Criticism)  தமிழ்நாடன் ஒருமுறை  எழுதியது போல ‘ஆய்வென்று ஜால்ராவைத் தட்டுகின்றார்’ என்பது போன்றது அல்ல! இந்த எண்பது வயதில் நான் யாருக்கு ஜால்ரா தட்டப் போகிறேன்? ஆரூர் தமிழ்நாடனின் பன்முகப் பரிமாணங்களை உணர்ச்சிவழி நின்று கண்டறிய என்னுடைய மிகச் சிறிய முயற்சி இது.!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 31 [கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் பொன்மணிதாசனின் கவியாளுமை

    முன்னுரை

    கவிஞர்கள் வறுமைக்கு ஆட்பட்டிருந்தபோது கவிதைகள் செழுமையாய் இருந்தன. அவர்கள் கொஞ்சம் வசதியாய் வாழ்கிறபோது கவிதைகள் வாடிப்போயிருக்கின்றன. இது பெரும்பான்மை பற்றிய கருத்து. ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்பது பொருளற்ற தொடர் அன்று. மகாகவி பாரதியைத் தொடர்ந்து பாவேந்தர் தமிழ்க்கவிதையுலகைத் தன்னாட்சிக்கு உட்படுத்தினார். அவருக்குப் பிறகு பெருஞ்சித்திரனார், சுரதா, வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், கம்பதாசன், தமிழ்ஒளி ஆகியோர் தமிழ்க்கவிதையுலகைத் தம் கவிதைகளால் அலங்கரித்தனர். ஆட்சி செய்தனர். அவர்களுக்கும் பின்னாலே அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அப்துல்ரகுமான், மீரா, முருகுசுந்தரம், தமிழன்பன், மேத்தா, சிற்பி, பொன்னிவளவன், தணிகைச் செல்வன், தாராபாரதி வரை இது நீண்டது. கலைஞர் ஆற்றல்மிக்க அரசியல்வாதியாக இருந்து கொண்டே தமிழ்க்கவிதையின் சாரங்களை அவ்வப்போது தாம் தலைமையேற்கும் கவியரங்கங்களுள் பிழிந்து வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் தமிழ்க் கவிதைகளுக்கு அஸ்தமன காலமாகியிருக்கிறது. ஆறு கோடி தமிழர்கள் என்றால் ஏழு கோடி கவிஞர்கள் இருக்கிறார்கள். எட்டு கோடி பட்டங்கள் இருக்கின்றன. ஏழரைக்கோடி விருதாளர்கள் இருக்கின்றன. கவிதைதான் ஒன்று கூடக் கண்டபாடில்லை. “இந்த நிலையை மாற்ற வேண்டும்.  மீண்டும் தமிழ்க்கவிதை மக்கள் இயக்கமாக மாறவேண்டும்” என்று எண்ணுபவர்கள் எண்ணிக்கையில் சிலர். அந்தச் சிலருள் நாகை பொன்மணிதாசனும் ஒருவர். இவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து முகநூலில் படித்து வருகிறேன். அவருடைய கவியாளுமையை ஒரு சில சான்றுகளால் இந்தக் கட்டுரை விளக்க முற்படுகிறது.

    கவிதைகள் அருகிப் போனது ஏன்?

    கவிஞர்கள் அருகிக் கவிதைகள் சிறக்குங்காலம் கவிதைக்கு வசந்த காலம். கவிஞர்கள் பெருகிக் கவிதைகள் அருகிப்போவது நசிந்த காலம். இலக்கணத்தைச் செய்யுள் வழியாகக் கற்ற காலம் ஒன்றிருந்தது, மக்கட்தொகை குறைந்த காலத்து, ஆழ்ந்த படிப்பும் தெளிவான சிந்தனையும் உடையவர்கள் கவிதைகளுக்கான சட்ட வரம்புகளைத் தகுந்த தகுதியான சான்றோர்களிடம் கற்றறிந்த காலம் அது. கவிதைகளுள் செழுமையும், அடர்த்தியும் அழகியலும் ஆழ்ந்த கருத்தும் பன்முக நுண்ணியமும் கலந்து கவிதை மிளிர்ந்ததற்கு அந்தச் சூழல்தான் காரணம். அந்தப் பழக்கம் சிறுகச் சிறுகக் குறைந்து பின்னாலே அதாவது தற்காலத்தில் யாப்பறிந்த சிலபேர் பொருள்நோக்கத்தோடு யாப்பிலக்கணத்தை முழுமையான பார்வையின்றி, விதிவிலக்குகள் பற்றி அறியாது, ஒழிபியலை நோக்காது தங்களுக்குத் தோன்றியவாறே இலக்கணம் என்ற பெயரில் எதையெதையோ கற்பித்து வருகின்றனர். இதனைவிடக் கொடுமை என்றால் யாப்பிலக்கணந்தான் கவிதை அதாவது ஒரு கருத்து யாப்பில் வந்து அமைந்து விடுமானால் அது கவிதையாகிவிடும் என்ற தவறான புரிதல் காழ்கொண்டு விட்டதாகும். யாப்பு ஒரு கருவி என்னும் நிலைப்பாட்டிலிருந்து விலகி அதுதான் மூலப்பொருள் என்ற நிலைக்குச் சென்று விட்டது, படிக்கின்ற பழக்கம் குறைந்து போனது. மலிந்து போன உணர்ச்சிகளைப் பாடுபொருளாக்குவது. தலைவர்களைப் பாடுவதையே பிறவிப்பயன் என எண்ணிவிடுவது இப்படிப் பல காரணங்களால் கவிதைகள் சவலைகளாகிவிட்டன.  இயற்கை அசைவுகளுக்கும கவிதைகளுக்கும் இருக்கும் இசைவை உணர்ந்து அனுபவித்தவர்கள் எண்ணிக்கையில மிகவும் குறைவு என்பதும் ஒரு முக்கியமான காரணம்.  ‘அழகின் சிரிப்பு’ போல ஒரு பாவியத்தை இனித் தமிழில் காணமுடியுமா என்பது விடைகாண முடியாத வினாவாக நிற்கிறது. சிறந்த தத்துவஞானியாக இல்லாதவன் கவிஞனாக முடியாது என்னும் கோட்பாட்டைப் புறக்கணித்ததும், தத்துவப் பார்வையே இல்லாமல் போனதும் கவிதைகள் அருகிப் போனதற்கு இன்றியமையாக் காரணிகள் ஆகும். பட்டினத்தாரையோ, பாரதியையோ பாரதிதாசனையோ, கண்ணதாசனையோ தமிழ்க்கவிதை உலகம் எதிர்காலத்தில் காணும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. எல்லாவற்றையும் விட தலைமைக் காரணம் ஒன்றுண்டு. அது தற்புகழ்ச்சி!. தஙகளைத் தாங்களே புகழ்ந்து கொள்வதும் அல்லது தங்களைப் புகழ்வதற்காகவே முகநூலில் ஒரு குழுமத்தை உருவாக்கிக் கொள்வதும் வெகுசாதாரணம். இவரை அவர் பாராட்டுவதும் அவரை இவர் பாராட்டுவதுமாகப் போய்விடுவதால் கவிதையின் கசடுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தூர்வாராக் கேணிகள் சுரப்பது எப்படி;?

    முகநூலில் பொன்மணிதாசன்

    பொழுதின் பொன்னான நேரங்களைக் கவிதையில் கழிக்கிறார், கவிதைக்காகவே கழிக்கிறார் பொன்மணிதாசன். நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள் பல இருப்பினும் நாளும் முகநூலில் அவர் கவிதைகள் வெளிவருவது தடைபடுவதில்லை. தனக்குத் தெரிந்ததைத் தெரிந்து என்று ஒத்துக் கொள்வதைவிடத் தனக்குத் தெரியாததைத் தெரியாது என ஒத்துக் கொள்வதில் அவரிடம் ஒரு பக்குவத்தைக் காணமுடிகிறது.  மரபுவழியான சந்தங்களையும் புதிய சந்தங்களையும் தமது கவிதையாக்கத்தில் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி வருபவர். யார் தம்முடைய படைப்பினை எப்படித் திறனாய்வு செய்தாலும் மெய்ப்பொருள் காணுகிற தெளிவு இவருக்கே உரிமை. எழுபது வயது நிரம்பிய இந்த இளைஞரின படைப்புக்கள் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இயங்கும் வல்லமை கொண்டவை.

    வித்தியாசமான தமிழ்த்தாய் வணக்கம்

    தமிழ்க்கவிஞர்கள் பொதுவாகப் பாடுவது தமிழ்த்தாய் வணக்கம்! தமிழைக் கன்னித் தமிழ் ;என்றாலும் அவளைத் தாயாக எண்ணிப் போற்றுவதே தமிழ்க்கவிதை மரபு.

    “பொன்னும் ;பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயே! — கேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! — நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    என்பது கவிக்கோ துரை வசந்தராசனின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். தாயும் காதலியும் பெண்ணாக இருந்தாலும் தாயன்பிற்கு முன்னால் அவள் பாசத்திற்கு முன்னால் அவள்மீது கொணட பக்திக்கு முன்னால், அவள் தன்மீது வைத்திருக்கும் நேசத்திற்கு முன்னால் கன்னிப் பெண் கடைக்கண் பார்வை எடுபடுவதில்லை என்பதை அழகியல் மீது{ரப் பாடியிருக்கிறார் துரை.வசந்தராசன். அந்த மரபைப் பின்பற்றி,  மரபு வழிச் சிநதனையாளரான பொன்மணிதாசன

    “ஆசையில் மிதக்குமென் அழகான உள்ளத்தை
    நேசிக்கும் நெஞ்சம் கொண்டாள்
    ஓசைக்கும் நயத்துக்கும் ஓருங்கிய உள்ளத்தில்
    உறையத்தான் ஆசை கொண்டாள்”

    தமிழைப்பாடும் பேரவா கொண்ட தன்னுடைய அழகான கள்ளம் கபடமற்ற உள்ளத்தைத் தமிழ்த்தாய் நேசிப்பதாகவும் சந்த நயமும் பொருள் நயமும் நிறைந்த தம் பாடல்களில் தமிழ்த்தாய் விரும்பி வந்து உறைகிறாள் என்று பாடுகிறார். தமிழைத் தேடிப் பாடிவரும் உலகில், தமிழை முன்னிலைப்படுத்திப் பாடிவரும் உலகில், கவிஞனைத் தேடித் தமிழ்த்தாய் வருகிறாள் என்பது கொஞ்சம் வேறுபட்ட சிந்தனை. “தசைநாறு என்புக்கும் தானமாய் தன்னையே தமிழாளும் தந்து நின்றாள்” என்னும் அடியில் தன் எலும்பிலும் சதையிலும் தமிழே கரைந்து நிற்கிறது என்பதை உணர்ச்சி மேலிடப் பாடுவதைக் காணமுடிகிறது.

    காலந்தோறும் வேண்டும் கவிஞர்கள் 

    பரந்துபட்ட உள்ளம் கொண்ட கவிஞன் இயற்கையை நேசிப்பதிலும் மானுடத்தை மதிப்பதிலும் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். அப்படி வேறுபட்டால்தான் அவன் கவிஞன். அவன் கவிதையில் அவன் உள்ளம் எதிரொளிக்க வேண்டும்.  தனக்கான வேண்டுதலை ஒழித்துச் சமுதாயத்திற்காக வேண்டிக்;கொள்ளும் பரிணாமம் அவனுக்குப் படிப்படியாகக் கிட்டுகிறது, சமுதாயத்தின் கரிசுகளைத் தன்னுடைய பாவங்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அவனுக்கு வந்துவிடுகிறது, குழந்தைக்கு எது தேவை என்பதறிந்து ஊட்டும் தாயைப் போலத் தான் வாழும் சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து கொடுப்பவனே கவிஞனாவான்.  கணவனால் வணங்கப்பட்ட காரைக்காலம்மையார் இறைவனிடம்

    “இறவாத இன்ப அன்பு
    வேண்டிப்பின் வேண்டுகின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும்!”

    என வேண்டுகிறார். இதனைத் தொடர்ந்து வந்து சமரச சுத்த சன்மார்க்கம் கண்ட வளளற் பெருமான்

    “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
    உத்தமர்தம் உறவு வேண்டும் !
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்!”

    என மானுடம் மனமாசினின்று விடுதலையடைய வேண்டும் என்பதைத் தன் விருப்பமாகக் கூறுவதைக் காணமுடிகிறது. பல்லாயிரம் கவிதைகளை எழுதிக் குவித்த மகாகவி பாரதி தனக்கு என்ன வேண்டும் என்பதையும் கேட்கிறான். உலகியல் வாழ்க்கைக்கான

    “மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்!
    நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
    கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;
    தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.
    கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி  வேண்டும்;
    பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்,
    மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்;
    உண்மை நின்றிட வேண்டும்.”

    மனிதன் கவிஞனாக முடியாமல் இருக்கலாம். ஆனால் கவிஞன் மனிதனாக இருந்தே ஆக வேண்டும். மனிதனாகவே ஆக முடியாதவன் கவிஞனாகவே முடியாது. மகாகவியின் கூரிய தீஞ்சொற்கள் ஒவ்வொரு தனிமனிதனின் சமுதாயக் கடமையைப்; பட்டியலிடுவதாகவே கருத வேண்டும்.

    இந்த நெடிய மரபில் வந்த பாவேந்தர்  அவர் காலத்திய சமுதாய நிலை நோக்கி மனம் வருந்திப் பாடுகிறார்.

    “வீழ்ச்சியுறு தமழகத்தில் எழுச்சி வேண்டும்
    விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
    சூழ்ச்சிதனைப் பொறாமைதன்னை வஞ்சகத்தைத்
    தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
    காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
    கடல்போலச செந்தமிழைப் பெருக்க வேண்டும்

    எனத் தன் உள்ளத்து வேணவாவைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். மேலே சுட்டப்பட்ட கவிஞர்கள் மாறுபட்ட சமுதாயச் சூழல்கள நிலவிய காலங்களைச சார்நதவர்கள். அவர்கள் படைப்பின் நோக்கமும் மாறுபட்டது. இருந்தாலும் ஏதோ ஒருவகையில் மானுடம் பாடுவதில் ஒன்றுபட்டு நிற்பதைக் காணமுடிகிறது. இந்த இழைதான் மரபு. இதுதான் மரபியல் சிந்தனை.

    “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் — இங்கு
    இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
    வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை – நீங்கி
    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை”

    தன்னை மனிதனாகவும் கவிஞனாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் மானுடப் பரப்பின் நலம் நோக்கியதே கவிஞனின் பார்வையாக அமைந்திருக்கிறது . அமைய வேண்டும்.  அந்த வழியில் பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உள்ளறை அழுக்கது உறையாது நீக்கிட
    உணர்வினில் தூய்மை வேண்டும்

    கல்லுறை வல்லமை கலவாது இருந்திட
    கனிவுறும் மனமும் வேண்டும்

    முள்ளது தைக்காது மொழிந்திட சொற்களை
    முனைப்போடு தேட வேண்டும்

    வெள்ளமாம் இன்பம் விழல் நீருமாகாமல்
    வினையது ஆற்ற வேண்டும்!

    நல்லதோர் தோழமை நாடியே நாமதன்
    நலமாக நடத்தல் வேண்டும்

    பல்லதும் தெரிந்திடின் பலரதும் போற்றவே
    பணிந்தது கொள்ள வேண்டும்

    உள்ளமா கோவிலில் உறையவே தெய்வமும்
    உத்தமத் தெளிவு வேண்டும்

    நல்லறம் தழைத்திட நமதறம் செழித்திட
    நமக்கென பொறுப்பு வேண்டும்!

    வாழுதற் கரியஓர் வாழ்வினை பெற்றநாம்
    வாழ்வதை வாழ்த்த வேண்டும்

    ஊழ்வினை பயனதை உணர்ந்தது வரமென
    உளமார ஏற்றல் வேண்டும்

    தாயுமானவரின் பராபரக் கண்ணிபோல் அமைந்த இந்த அடிகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்க வேண்டிய பண்பு நலன்களைத் தன்னுடைய வேண்டுதலாகக் கூறும் ஒரு மானுடக் கவிஞனைக் காணமுடிகிறது. இன்றையச் சமுதாயச் சூழலில் எந்த மனநிலையில் கவிஞன் இருந்திருந்தால் இப்படிப் பாடியிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  உணர்வினில் தூய்மை, அறிவினில் தெளிவு, பழக்கத்தில் பணிவு, நல்ல நட்பு, வினைத்தூய்மை, பொறுப்புணர்வு என்பனவற்றையெல்லாம் வற்புறுத்திய கவிஞன்  இந்த வாழ்க்கையை வாழத்த வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறியிருப்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இந்த வாழ்க்கை மிகவும் இனியது என்பது மகாகவியின் பார்வை.  பாரதிக்கு முன்பே அப்பர் பெருமான் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று மானுடத்தின் மகத்துவத்தைப் பாடியிருக்கிறார்.  “மானுடம் வென்றதம்மா” என்பது கவச்சக்கரவர்த்தியின் வியப்பு! தமிழின் நீண்ட நெடிய கவிதை மரபில் மானுடத்தைப் போற்றுவதும் அதன் பெருமை பேசுவதும் அதனை வாழ்த்துவதும் அதனை வலியுறுத்துவதும் ஒரு சங்கிலித் தொடராகத் தொடர்ந்து வருவதைக் காணவேண்டும். தமிழிலக்கியத்தின் சாரம் மானுடம் பாடுவதே! பொன்மணிதாசன் அதனைத்தான் செய்திருக்கிறார்.

    பொன்மணிதாசனின் தத்துவப் பார்வை

    தத்துவஞானி கவிஞனாயிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் கவிஞன் உறுதியாகத் தத்துவஞானியாகத்தான் இருக்க வேண்டும். தத்துவஞானியாய் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. “No man was ever yet a great poet without being at the same time a profound philosopher” – Coleridge)

    குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
    குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்
    தட்டுகெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
    சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்;தம்

    என்னும் வரிகளை ஒரு இருபத்தேழு வயதுடைய இளைஞன் எழுதியிருப்பான் என்பதை எத்தனைப் பேர் நம்புவார்கள்? பிறவியிலேயே கவித்துவமும் தத்துவப்பார்வையும் இணைநதவன் எழுதிய வரிகள் இவை.

    “எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா! என்
    இதயத்தோலை உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா!”

    என்று ஒரு சாதாரண திரையிசைப்பாடலிலேயே மாபெரும் தத்துவத்தைப் பதிவு செய்யும் ஆற்றல் கண்ணதாசனுக்கு இயல்பாகவே அமைந்திருந்தது.  “தொட்டபின் பாம்பு என்றும்  சுட்டபின்நெருப்பு என்றும் பட்டபின் தேறலே” கண்ணதாசனின் பழக்கமென்றானதால் வந்த முதிர்ச்சி அவனை ஒரு தத்துவ ஞானியாக்கியது.

    “எத்தனை பேருக்கு இரவு விடியும்
    இதற்கு விடையேது?
    அத்தனை பேருக்கும் அமைந்த இரவும்
    அதனை அறியாது!”

    எனத் தத்துவம் பேசுகிறார் பொன்மணிதாசன்! விடியலை நோக்கியதுதான் இரவின் பயணம்! ஆனால் வாழ்வியலில் எத்தனைப் பேருக்கு எப்போது விடியும் என்பதே தெரியவில்லை. அது மட்டுமன்று அந்த விடியல் எப்போது வருமென்று பயணிக்கிற இருட்டுக்கே தெரியவில்லை.

    “இறப்பு பிறப்பு இதனதன் மறைப்பு
    இயல்பின் பெருங்கூற்று
    சிறப்பு என்பது இறப்பின் பின்னே
    பிறக்குமொரு ஊற்று!
    மறக்கும் நிலையே மனித குலத்துக்கு
    மருந்தெனில் பொய்யில்லை
    மறக்கா நிலையில் மனிதன் வாழ்வெனில்
    மனிதம் மெய்யில்லை!”

    கடந்த காலத்தை மறந்து எதிர்கால இலட்சிங்களோடு பயணிப்பதுதான் மானுடத் தத்துவம். அந்த மறதி இல்லாவிடின் வாழ்க்கை தடுமாறும். கடந்த காலத்திலேயே உழன்று கொண்டிருந்தால் நிகழ்காலமும் குழம்பும். எதிர்காலமும் விளங்காது.  நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி என்பதை இந்த அடிகள் காட்டுகின்றன. படித்துத் தத்துவம் பேசுவது வேறு. பட்டறிந்து தத்துவம் பேசுவது வேறு. பொன்மணிதாசன் பட்டறிந்து தத்துவம் பேசுகிறார். மானுடத்தின் மீது கொண்ட தான் கொண்டிருக்கும் மாறாக் காதலால் தத்துவம் பேசுகிறார். தத்துவம் பேசுகிற கவிஞனைத் தத்துவக் கவிஞன் என்று அழைப்பதே பொருத்தமற்றது. கவிஞனே தத்துவஞானிதான்.

    சாதிப்பிணக்குகளும் தமிழ்க்கவிஞன் தத்துவமும்

    இனக் குழுக்களே சாதிகளாகப் பிரிந்தன என்பதுதான் ஆய்வாளர் முடிவு. தெளிவாகச் சொன்னால் சமயத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லை. இருந்திருக்குமானால் தொடர்பற்ற பல சாதி மக்கள் எப்படி ஒரே சமயத்தைப் பின்பற்ற முடியும்? சாதிக் கரணைகளைச் சமயச் சங்கிலி பிணைத்திருப்பதன் பின்னனி என்ன? சாதிக்குப் பின்னால்தான் சமயம் ஒளிந்து கொள்கிறது. அகச்சமயங்களில் நிலவிய இந்தக் கொடுமை புறச்சமயங்களிலும் இன்று ஊடுருவியிருப்பதும் பொருளதார மற்றும் வேலை வாய்ப்புக்காகச் சாதிகளையே மாற்றிக் கொள்வதும் மதங்களையே மாற்றிக் கொள்வதும் நேர்மை என்னும் உயரிய பண்பின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும். “சாதிகள் இல்லையடி” என்னும் பாரதியின் வாக்கில் ‘இல்லை’ என்னும் சொல் வெகு ஆழமானது, உள்பொருள்களான மனிதநேயத்தைப் புறந்தள்ளி, இல்பொருளான அதாவது அருவப்பொருளான சாதியை முன்னெடுப்பது ஒரு வளர்நிலைச் சமுதாயத்தின் பின்னடைவுக்குக் காரணமாகும் என்பதுதான் பாரதியின் சாரம்

    ஓரிடம் பிறந்து ஓடும் ஒப்பற்ற நதிகளெல்லாம்
    வேறிடம் சென்றபோதும் சேர்வது ஓரிடந்தான்!
    ஆறுடன் சென்ற நீரும் அதனிலே பிரிந்த நீரும்
    மாறியே நடந்தால் கூடமறவாமல் கடலைக் கூடும்!

    என எல்லாரும் அறிந்த இனிய எளிய உவமத்தால் சாதி வேறுபாடு களைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். சாதி ஒரு வகையான தற்காலிக அமைதியைத் தரலாம். உலகின் எதிர்காலம் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதால் சாதி என்னும் அருவப்பொருள் நடப்பியல் வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்துவிட முடியாது. பாவ புண்ணியம் என்பன மறுமைக்கு உரியது. மகாகவி பாரதி குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றதன் மூலம் அதனை மறுமைக்குரிய பாவமாகவே கருதுகிறான் ஒரு மரபுவழிச் சிந்தனையாளரான பொன்மணிதாசன் அதனை வழிமொழிகிறார் எனலாம்.

    மரணம் மட்டுமே உண்மை!  

    இந்த உலகில் யாராலும மறுக்க முடியாத நடப்பியல் என்பது மரணந்தான். மரணத்தை வென்றவர் எப்படி இல்லையோ அப்படியே மரணத்தைத் தடுத்தவரும் இல்லை. “மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்நதிடலாம் கண்டீர்” எனக் கூறிச்சென்ற வள்ளற் பெருமானும் இளம் வயதிலேயே மறைந்தார் என்பதுதான் வரலாறு. மரணத்தை நிஜமாக்கியதற்குப் பின்னால் புரியாத பல உண்மைகள் உண்டு. ஆனால் அது நிஜமெனத்  தெரிந்தும் மனிதனின் ஆணவம் குறைந்தபாடில்லை. தான் என்னும் அகப்பற்றும் தனது என்னும் புறப்பற்றுமே மானுடச் சிதைவுக்கான காரணங்கள். இந்த இரண்டு காரணங்களையும் அகற்றுவதற்கான ஒரே வழி மரணம் பற்றிய  உண்மையை உணர்வதுதான். காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே எனச் சித்தர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். நந்த வனத்தில் ஓராண்டி அவன நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்று அவர்கள் பாடியதற்கும் அதுதான் காரணம். பத்ரகிரியார், பட்டினத்தார் போன்ற பெருமக்கள் உலகியலைத் துறந்து போனதற்கும் அவர்கள் மரணம் பற்றிய தெளிவைப் பெற்றிருந்தனர். “இருப்பது போய் போவது மெய்”

    “அஞ்சினால் விலகிப்போமோ?  அகற்றவும் செய்யவாமோ?
    நெஞ்சிலே பாரம்கூடும் நினைவிலே மரணம்நின்றால்
    கெஞ்சினால் தரவாக் கூடும்?  கேட்டுயிர் நிலைப்பதற்கு
    விஞ்ஞானம்கூடத் தோற்கும் விந்தையே மரணமென்பேன்!

    மரணமே இல்லாவாழ்வு மண்ணுயிர்க்கேது உண்டு
    பிறப்பது உள்ளமட்டும் இறப்பது இருந்தேதீரும்
    வரவது அறியாவண்ணம் வாழ்க்கையில் சிறப்பே என்றால்
    இறப்பது ஒன்றேயன்று இல்லையே சொல்லுதற்கு!

    நடப்பதை நடத்தத்தானே நாயகன் உள்ளானிங்கு!
    நடைபேறும் நாடகத்தில் நாளுமே முடிவும் உண்டு!
    கிடைத்தது அரியதென்று கிடைத்ததை மகிழ்ச்சியாக்கு
    உடைகின்ற நாளும் வந்தால் பானையும் உடைந்திடாதா?

    நேற்று இருந்தது இன்றைக்கு இல்லை என்பது நிலையாமை அன்று. முற்கணம் பிறந்தது இக்கணம் இல்லாது ஒழிவதுதான் நிலையாமை. இந்த வாழ்க்கையை நீர்க்குமிழி என்றதற்கும் அதுதான் காரணம். ‘இருப்பது போய் போவது மெய்’ என்பார்கள் சித்த்ர்கள். ‘நான்கு விலங்குகளில் நாட்டியமாடுகிறோம்’ எனபார் கண்ணதாசன்! பிறப்பு இறப்பை நோக்கியது என்பது உண்மை இந்த உண்மை தெரிந்த பின்னும் மானுடப் பண்புகள் ஏதுமின்றி, மானுடம் சிறக்க வேண்டிய நோக்கங்கள் இன்றி ‘வெந்தது தின்று விதிவந்தால் மரணம்’ என்பது பொருளுடையது அன்று.  பிறந்த நாள்கள் என்பன கழித்தல். பலபேர் அதனைக் கூட்டல் என்று கருதி மயங்குகிறார்கள். பிறந்த நாள் தெரிந்தவர்களுக்கு இறக்கப்போகும் நாள் தெரியாமல் போனதுதான் இறைவனின் சூத்திரம். அல்லது இயற்கையின் மந்தணம். நீண்ட நெடிய தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கச்சாரமே நிலையாமைதான். பொன்மணிதாசனும் தன் கவிதையில் அந்தச் சாரத்தைப பிழிந்திருக்கிறார

    வாழ்வியல் சூழல்

    மனிதன் ஒரு சமுதாய விலங்கு. இச்சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவும் அது நேர்முகமாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அவனைப் பாதிக்கிறது, படித்த அறிவாலும் பட்டறிவாலும் பக்குவப்பட்ட எவனுக்கும் தானே தனித்துச் செயல்படுத்துவதற்கான ஆக்கப் பூர்வமான நம்பிக்கையான ஒரு வாழ்வியல் சூழல் இங்கே நிலவவில்லை. எதிர்மறைப் பண்புகளை அறிமுகம் செய்து கொள்வதும். அதற்கு நியாயம் கற்பிப்பதும் பின்னால் அதனையே வழக்கமாக்கிக் கொள்ளுவதும் இங்கே வாழ்வியல் நெறி ஆகிப்போனது. பொன்மணிதாசன் பாடுகிறார்

    “உண்ண உணவு உடுத்த உடை
    இன்னும் கிடைக்கல
    எண்ணப்படி இன்னு மிங்கே
    எதுவும் நடக்கல
    கன்னம் சாத்தும் கால மிங்கு
    இன்னும் மறையல
    கண்ணு முன்னே கற்ப ழிப்பு
    ஒண்ணும் தொலையல!”

    “ஆட்கள் வளர்ந்த அளவுக் கின்னும்
    அறிவு வளரல
    ஆளுக்காளு அமுக்க நினைக்கும்
    ஆசை மறையல
    சொல்லும் செயலும் வேறு வேறு
    சொல்ல முடியல
    சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல
    ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    மக்களோடு மக்களாகப் பழகி, பாமரத் தமிழறிவு இருந்தாலே உணர்ச்சியுள்ள எவனும் கவிஞனாகலாம் என்பதை  நிருபித்திருக்கிறார் பொன்மணிதாசன்.!

    “நீ அமுதசுரபியைத்தான்
    கொடுத்துவிட்டுச் சென்றாய்!
    எங்கள் கையில் இருப்பதோ
    பிச்சைப் பாத்திரம்”

    என்பார் மேத்தா. அது புதுக்கவிதை என்பார்கள்.

    “சொல்லப் போனா சுதந்திரப் போர்
    வெல்ல முடியல!”

    என்று இன்னும் ஆழமாகச் செதுக்கியிருக்கும் இந்தக் கவிதை மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

    “நாளுக்கு நாள் சட்டம் போட்டும்
    நாடு விடியல
    நாளைக் கென்ன சட்டம் வரும்
    நமக்கும் புரியல!

    நாடு விடுதலையடைந்ததிலிருந்து அண்ணல் காந்தி அவர்கள் படமும் இந்த நாடும் மட்டுந்தான் சட்டத்திற்குள் இருக்கின்றன. அந்தச் சட்டங்கள் மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்துக்கானது என்றால் இன்னும் சட்டம் ஏன்? எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் சட்டம், நாளையும் சட்டம் என்றால் வாழ்வியலில் அமைதி நிலவுவது எப்போது என்னும் விடைகாண முடியாத வினாவிற்குப் பதில் சொல்லப்போவது யார்? எப்படி ஆள்வது என்று ஆள்வோருக்குத் தெரியவில்லை! எப்படி வாழப்போகிறோம் என்பது மக்களுக்குத் தெரியவில்லை!.

    “ஆளுக்கு ஆள் கட்சி கண்டார்
    ஆளத் தெரியல
    ஆள வந்தார் அதி காரத்தால்
    மீள முடியல!”

    நடப்பியல் அரசியலை இதனைவிடத் தெளிவாக்கிவிட முடியுமா? அதுவும் கவிதையில்! ஆள்வதற்காகக் கட்சி தொடங்கியவர்களுக்கு ஆளத் தெரியவில்லையாம்!. தெரிந்து அதிகாரத்திற்கு வந்து விட்டவர்களுக்கு அந்த அதிகாரப் போதையிலிருந்து விடுபட முடியவில்லையாம்! யோக்கியனாகத்தான் ஒருவன் வாழ எண்ணுகிறான். சூழல் எதிர்மறையாகிப போனது. பத்தினியாகத்தான் வாழ நினைக்கிறாள். சூழல் எதிர்மறையாகிப் போனது. பொதுப்பணி செய்யத்தான் விரும்பி வருகிறான். வந்தபின் அறிந்து கொள்கிறான் சூழல் தனக்கு எதிராக இருப்பதை.

    காலத்தால் அழியாத காதல்

    கவிதையின் பாடுபொருளை அகம் புறம் எனச செம்பாதியாகத் தமிழ்ச் சான்றோர்கள் பிரித்திருந்தாலும் தொண்ணூறு விழுக்காடு இலக்கியங்கள் அகம் சார்ந்ததாகவே அமைந்துள்ளன. அல்லது அது சார்ந்த பாடல்களே கிட்டியிருக்கின்றன. காதல் மிகவும் மென்மையான பாடுபொருள். பிரிவு துன்பம் தரும். ஆனால் அதுபற்றிய கவிதை இன்பம் தரும். மலரினும மெல்லிது காமம் என்பார் வள்ளுவர்.  இங்கே காமம் என்பது பருப்பொருளால் நுகர்கின்ற காம இன்பத்தினையும் உணர்வுகளால் நினைக்கப்படும் காதல் நினைவுகளையும் குறிக்கும். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் பறறித் திருக்குறள் பேசுவதால் அது பருப்பொருளால் நுகரப்படும் இன்பம். ‘நெஞ்சத்து காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து எனத் தலைவி தயங்குவதால் அது ஓர் தனித்த உணர்வு. இரண்டையும் ஒரு சேரக் கலந்து கவிதை படைப்பாரும் உண்டு ஒரு பாடல் கண்டேன்!

    “எங்கே உனைக் கூடடிச் செல்ல?
    சொல்வாய்! என்றன் காதில் மெல்ல!”

    “என் பெண்மையும இளைப்பாறவே
    உன் மார்பில் இடம் போதுமே!”

    உன்னை எங்கே கூட்டிச் சொல்ல வேண்டும் சொல் என்று தலைவன் கேட்கிறான். எங்கேயும் வேண்டாம். என் பெண்மை இளைப்பாற மார்பு போதும் என்று தலைவி விடைதருகிறாள்.  ஆபாசமில்லாமல் காதலைப் பாடுவது சங்கச் சான்றோர்களுக்கு கைவரப் பெற்றதாக இருந்தது. அதற்குப் பின்னால் அந்த நிலை இன்று வரை கைகூடுவதற்கு அருமையாக இருக்கிறது.  ஈர்ப்பு, மோகம், காதல், பக்தி, வழிபாடு, பித்து, மரணம் என்னும் உணர்ச்சிகளின் பரிணாமம்தான் காதல். உண்மைக்காதல்  இப்படித்தான் தொடங்கி இப்படித்தான் முடிகிறது. இத்தகைய பாடல்களைச் சிந்தித்து எழுதுவதற்குப் பொன்மணிதாசன் முயல்கிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது, கொஞ்சம் சிரமமான வேலைதான். ஏனைய பாடுபொருள்களைக் கவிஞன் பாதிக்கிறான். ஆனால் காதல் என்னும் உணர்வுதான் கவிஞனைப் பாதிக்கிறது. அனுபவம்தான் கவிதை என்பது காதலுக்குப் பொருந்துவதைப் போல மற்ற பாடுபொருளுக்கு அவ்வளவாகப் பொருந்துவதில்லை. தொடர்பில்லாத உணர்வுகளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தலைவனாகவும் தலைவியாகவும் தன்னை எண்ணிக் கொண்டு காதல் பாடல்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றன்று.

    “நின்னை நினைக்கும் நினைவை விதைத்தாய்
    நிறைய விளைச்சல் ஏக்கம
    நின்னால் நித்தம் நீங்கிப் போனது
    நிலவில் தானடி தூக்கம்!
    கண்களில் நிறைய கனவுகள் வந்தன!
    கனலாயத் தானே மூசசும்!
    கன்னா பின்னா காதல் மொழிகள்
    கணக்கில் அடங்காப் பேச்சும்!
    தப்பும் தவறும் கூடிப் போச்சு
    தவிப்பில் இப்ப நானும்!
    தப்பித் தவறி உண்ணுகிறேன் என்
    தழைத்த உடலைக் காணோம்!
    எப்போதிருந்து இப்படி என்றே
    என்னை  மருத்துவர் கேட்டார்!
    எப்படிச் சொல்வேன நீதான் என்று
    இடிப்பார் எங்கள் வீடடார்!
    …………………………………………………………………………………………
    இலலையெனக்கு வாழ்வே இலலை
    இதுதான் முடிவு! தோழா!
    கடிதம் இதனைக் கண்ணீர் கசிய
    காணாதாரும் எழுதி
    விடியுமுனே விடுத்தேன் அஞ்சல்
    விடையும் உடனே தருக!
    இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்!

    எனத் தனிமனிதக் காதல் உணர்ச்சிகளை மந்தணமாகவும் மென்மையாகவும் பாடும் திறன் பெற்ற பொன்மணிதாசன் சமுதாய மட்டத்தில் பெண்ணின் பெருமையைத் தூக்கிப் பிடிப்பதில் ஒரு மாபெரும் சமுதாய ஆர்வலராகவே காட்சியளிக்கிறார்.

    “ஆசை வச்சேன் உம்மேலே! அரளி வச்சேன் கொல்லையிலே!
    பாத்தேனடா ஒம்மொகத்த! பகைச்சேனடா எஞ்சனத்தை!”

    என்பது வாய்மொழி இலக்கியம். படைப்பிலக்கியங்களைவிட காதல் உணர்ச்சி சற்று தூக்கலாக இருப்பது நாட்டுப்புற இலக்கியங்களில்தான் என்பது ஆய்வாளர் கருத்து, உணர்வுப்பூர்வமான காதலை வாய்மொழி இலக்கியங்கள் உணர்த்துவதுபோலப் படைப்பிலக்கியங்கள் உணர்த்துவதில்லை. காரணம் படைப்பிலக்கியங்களில் உணர்வுக்கு மொழியின் வரி வடிவம் ஊடகமாகப் பயன்படும் போது, கூச்சமும் தயக்கமும் ஏற்படுவது இயல்பு. அவ்வாறின்றி உணர்வுகளுக்கு ஆடைகட்டாமல் அப்படியே பாடப்படும் வாய்மொழி இலக்கியங்கள் நேராக நெஞ்சுக்குள் சென்று தைக்கின்றன.  எனவேதான் படைப்பிலக்கியக் கரத்தாக்களும் வாய்மொழி இலக்கிய வடிவத்தைத் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்துகிறார்கள். பொனமணிதாசன்

    “இடியாய்ப் பதிலும் இருக்க வேணடாம்!
    இனிப்பாயனுப்பு மகிழ்வேன்!
    ஏறுக்கு மாறாய் இருந்தால் பதிலும்
    இன்றே நானும மடிவேன்”

    என்று வாயமொழி இலக்கியச் சாயலில் பாடுவதற்கு இதுதான் காரணம். பெண்ணைக் காதற் கருவி என்று மட்டும் கருதாமல் வணங்கத்தக்க மானுடத்தின் அடையாளம் என்பதிலும் பொன்மணிதாசன் உறுதியாய் இருக்கிறார்.

    “பெண்ணை நீ போற்றிப் பாடு!
    பெருமையைத் தூக்கிப் பாடு!
    பெண்ணிலா தேசந்தன்னைப்
    பெயர்த்துமே கடலில் போடு!
    பெண்களே நமது கண்கள்!
    பெண்ணின்றேல் ஆண்கள் இல்லை!!
    பெண்களே குடும்பச் சொத்து
    பெண்ணன்றோ இன்ப முத்து!

    பெண்ணின் பெருமையைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைநடையில் பேசியதைப் பொன்மணிதாசன் கவிதையில் பேசுகிறார்.  தனிமனித உணர்ச்சிகளை எளிய தமிழில் பாடும் பொன்மணிதாசன் சமுதாயச் சிந்தனைகளையும் தன்னைப் பாதிக்கும் நிகழ்வுகளையும் கவிதையில் கொண்டுவருவதில் சுணக்கம் காட்டுவதில்லை. அங்கதமும் அழகியலும் காதலும் கடமையுணர்வும் மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் இறையுணர்வும் தத்துவப் பார்வையும் அவருடைய முகநூல் கவிதைகளில்  அங்கிங்கெனாதபடி எங்கும் இழையோடுகின்றன.

    நிறைவுரை

    கவிதை யாப்புக்குள் இல்லை! சமுதாயத்திலிருந்து இதயத்திற்குப் பயணமாவது. பாதிப்பிலிருந்து தன பயணத்தைத் தொடங்குவது. ஒப்பாரிக்கும் தாலாட்டுக்கும் தகுதி தேவைபடாதது போலவே எழுதப்படுகிற கவிதைக்கும் ஏந்தத் தேவையில்லை. தன்னைப் பாதிக்கின்ற அலலது தான் பாதிக்கின்ற பொருண்மைகளைப் பாடுவதுதான் கவிதையின் நதிமூலம். பாதிப்பின்றிக் கவிதை வராது. வந்தால் அது கவிதை இல்லை.  வாசலில் அழகிய கோலம் இடுவதற்கும் அதற்கு அடிப்படையான புள்ளிகளை வைப்பதற்கும் அடிப்படை வரைபடப் புலமை தேவையில்லை. அழகியல் உணர்ச்சி மட்டுமே!.  அளவுகோலை வைத்துக் கொண்டு புள்ளிகளை வைத்தால் கோலம் அலங்கோலமாகும். முகநூல் கவிதைகளும் படைப்பிலக்கிய வகையைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படுதலின் பிழையின்றி எழுதினால் போதும். எந்தப் பொருளைப் பற்றியும் எழுதலாம். இன்றைக்கு முகநூல் வெகுமக்களை இணைக்கின்ற சமுதாய ஊடகமாகப் பெரிதும் பயன்படுகிறது, பொன்மணிதாசனின் கவிதைகள் இணைப்புச் சங்கிலியாகவும் பயன்படுகிறது. தன்னுடைய கவியாளுமை மூலம் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்க்கவிதை உலகிற்கு இவரை அறிமுகம் செய்வதில் ‘வல்லமை’ பெருமைப் பட போதுமான காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 30 [கவிக்கோ துரை. வசந்தராசனின் “சுருக்குப்பை”]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இலக்கணத்திலும் கவிதைகளிலும் பேரார்வம் நிறைந்தது என் வாழ்வு. இந்த எண்பது வயது காலத்தில் கவிதை எனக்கு அமைதியைத் தருகிறது. என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கும் கவிதைகளே தலையாய காரணம். என்னைப் பொருத்தவரையில் அது ஒரு வினைவேக மாற்றியாகவே செயல்படுகிறது. அதனால்தான் கவிதைகளை அடையாளம் காண்பதில் என் மனம் அவ்வளவு எளிதாக அமைதியடைவதில்லை. எந்தக் கவிதையொடும் நான் எளிதாகச் சமரசம் செய்து கொள்வதில்லை.  நூல்களில் படிப்பதைக் காடடிலும் முகநூல் கவிதைகளைக் கண்டு மகிழ்வதில் எளிமையை உணர்கிறேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த முகநூலில் கவிதைப் பணி செய்துவருவோர் பலர். அவருள் என்னுள்ளம் கவர்ந்த படைப்பாளர் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களாவார். படைப்புவழி என்னால் அடையாளம் காணப்பட்டவர். கவிதை மாதிரி எழுதிக் கொண்டு ‘இதுதான் கவிதை’ என்று சாதிப்பவர் அல்லர். கவிஞனாகப் பிறந்ததால் கவிதை எழுதுகிறவர். அண்மையில் முகநூலில் அவர் எழுதி என்னுள்ளம் கவர்ந்த ‘சுருக்குப்பை’ என்னுந் தலைப்பில் அமைந்த கவிதைபற்றிய கலையியல் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.

    பாடுபொருளால் சிறக்கும் ‘சுருக்குப்பை’

    தற்காலக் கவிதைகளில் பெரும்பாலன காதல் சார்ந்தன அல்லது தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்ப்பன. கண்ணாகிய உறுப்பின் தொழில் பார்வை. அது மனத்தோடு இயைந்தவழி நோக்காக மாறுகிறது. ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ என்றுதான் வள்ளுவர் பாடுவார். ‘பார்த்தாள் பார்த்து இறைஞ்சினாள்’ என்று எழுதமாட்டார். பார்வையில் இறைஞ்சுவது தெரியாது. நோக்கத்தில் புலப்படும். கவிஞர்கள் நோக்கிற் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். தான் வாழுகிற சமுதாயத்தை உற்று நோக்காத யாரும் கவிதையாக்கத்தில் வெற்றிபெற முடியாது. ‘சந்திர மணடலத்தியல் கண்டு தெளிவோம் தெரு சந்திப் பெருக்கும் நல்ல சாஸ்திரம் கற்போம்’ என்னும பாரதி வரி அவன் தெருப்பெருக்கும் தொழிலாளியைக் கூட நோக்கியிருக்கிறான் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

    தற்காலக் கவிஞர்களைப்போல் அக்காலக் கவிஞர்களுக்குப் பாடுபொருள் பஞ்சம் வந்ததில்லை. ஐவகைத் திணைகளிலும் உள்ள கருப்பொருள்களை அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். பாரதிதாசன் பூசணிக்காயைப் பாடியிருக்கிறார். சுரதா வாழைத்தண்டைப் பாடியிருக்கிறார். பொன்னடியான் சோப்பைப் பாடியிருக்கிறார். காமராசன் திருநங்கைகளைப் பாடியிருக்கிறார். மேத்தா அரளிப்பூவைப் பாடியிருக்கிறார். சிற்பி கிராமத்து நதியைப் பாடியிருக்கிறார். வைரமுத்து பல்லாங்குழியைப் பாடியிருக்கிறார். கவிமணி சொறிசிரங்கைப் பாடியிருக்கிறார். காளமேகம் நாயைப் பாடியிருக்கிறார். ஔவை எருமை மாட்டைப் பாடியிருக்கிறார். கவித்துவத்தால் பாடுபொருள் சிறப்படைகிறதே தவிர பாடுபொருளால் கவிஞன் சிறப்படைவதில்லை.

    உற்று நோக்குந் திறனை இயல்பாகவே கொண்ட கவிஞர் வசந்தராசன் மூதாட்டியொருத்தியின் சுருக்குப்பையை நோக்கியிருக்கிறார். அவளுக்கும் அந்தப் பைக்குமான உறவை நோக்கியிருக்கிறார். அதற்குள் புதைந்து கிடந்த “புதையலை” நோக்கியிருக்கிறார். அந்த மூதாட்டி கவிஞரின் அப்பத்தாவாக இருக்கலாம். அம்மாச்சியாகவும் இருக்கலாம். உறவுக்காரராகவும் இருக்கலாம். சந்தையில் கண்டிருக்கலாம். சாலையில் சென்றிருக்கலாம். இவரிடத்திலெல்லாம் கவிஞன் அவர்தம் இடுப்பிலிருந்த அந்தச் சுருக்குப் பையைத்தான் நோக்கியிருக்கிறான். இளம்பெண்ணின் இடுப்புச் சுருக்கங்களைப் பாடுகிறவருக்கிடையே இந்தக் கவிஞன்தான் மூதாடடியின் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையைப் பாடியவனாக இருக்க வேண்டும். கவிதையின் வெற்றிக்குப் பாடுபொருள் தேர்வு செம்பாகம் அன்று, பெரிது.

    உத்திகளால் சிறக்கும் சுருக்குப்பை

    இந்தக் கவிதை ‘சுருக்குப்பை தன்வரலாறு எழுதுவதாகப்’ படைக்கப்படவில்லை. மூதாட்டியின் சுயசரிதையாக அமையவில்லை. கவிதைக் களத்தில் படைப்பாளனே முன்னிற்கிறான். இந்தக் கவிதையை வேறு உத்தியில் சொல்லியிருந்தால் ‘இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கும்’ என்னும் உவமம் பயின்றுவந்திருக்காது. ‘மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் என்னும் சுருக்குப்பையின் நுரையீரல் வெளிப்பட்டிருக்காது. என்னதான் சுருக்குப்பையும் மூதாட்டியுமே பேசியிருந்தாலும் படைப்பாளனின் கற்பனைகளையும் உத்திகளையும் படிமங்களையும் சொல் நேர்த்தியையும் கவிதையில் கொண்டு வந்திருக்க முடியாது. வடிவமும் ஓர் உத்திதான். வெளிப்பாட்டு முறையும் ஓர் உததிதான். மூதாட்டியின் உள்ளத்திலும் சுருக்குப்பைக்கு உயிரூட்டிய உள்ளத்திலும் புகுந்துகொணடு பேசுவதைவிட தானே கண்டு வியந்த சுருக்குப்பைக் களஞ்சியத்தைக் கவிஞனே நேரடியாகப் பாடியிருப்பது மிகப் பொருத்தமாகும்.

    உணர்ச்சியின் மொழிவடிவமே கவிதை

    கவிதைக் கூறுகள் நான்கனுள் தற்காலக் கவிதைகளில் உணர்ச்சி தலையாயது. சங்கக் காலத்தில் அதனைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்ளடக்கம் தலையானதாகக் கருதப்பட்டது. பக்தி இலக்கியக் காலத்திற்குப் பின் கவிதை இலக்கியங்களில் உணர்ச்சியே கண்காணிக்கப்பட்டது. வியப்பிடைச் சொற்களே கவிதையாகும் விந்தையைக் கம்பன் செய்து காட்டினான். தனிப்பாடல்கள் சிலவும் இயல்பு நவிற்சியணியால் உணர்ச்சியைக் காட்சிப்படுத்தின. கவிதையாக்கின. பின்னாலே வந்த வள்ளற்பெருமானும் மகாகவி பாரதியும் பாரதிதாசனும் கண்ணதாசனும் உணர்ச்சியின் பிழம்பாகவே கவிதையுலகில் அடையாளம் காணப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் சுருக்குப்பையைக் காணவேண்டியதிருக்கிறது.

    மன்னரின் மணிமகுடத்தைப் பாடுபொருளாக்குவதைவிட ஒரு வீரனின் கைவாளைப் பாடுபொருளாக்குவதில் கவிஞனின் நோக்கு புலப்படும். கவிதையின் வெற்றி உறுதி செய்யப்படும். கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்துள் இராசபாரம்பரியம் என்னும் மன்னரின் வரலாற்றுப் பகுதியைவிட போர்பாடியது, களம்பாடியது என்னும் பகுதிகளே அந்த இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன என்பதை அறியலாம்.

    கவிஞன் இந்தக் கவிதையில் நவநாகரிக மங்கையின் கைப்பையைப் பாடாமல் முடிந்துபோன நீண்ட நெடிய மரபின் இறுதி அடையாளமாகிய மூதாட்டியின் சுருக்குப்பையைப் பாடியிருக்கிறான். அதாவது அவன் நோக்கை அந்தச் சுருக்குப்பை ஈர்த்திருக்கிறது. ‘சுருக்குப்பை’ என்னும் சொல்லே நமக்கு அவலத்தைத் தூண்டுவதாக அமைந்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால் தலைப்பிலேயே அவலச்சுவையை பரிமாறிவிடுகிறார் எனலாம்.

    “அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!”

    சுருவாட்டுக் காசில் வாங்கிய பொடி நகைகளையெல்லாம் அடகு வைக்கும் அவலம். சுருக்குப்பையில் நகையாக இருந்தவை (உண்மையில் அவை நகைகள் அல்ல. மூக்குத்தியைச் சங்கிலிக்கு ஈடாக யாரும் கருதுவதில்லை. பெண்ணுக்குச் சீதனம் கொடுக்கிறபோது கூட கம்மல், மூக்குத்தி, கால்கொலுசு இவைகளைத் தனியாகக் கணக்கிடுகிற பழக்கம் தமிழ்நாட்டில் இல்லை) நகைகள் அடகுச் சீட்டுக்களாக!. அந்த அடகுச்சீட்டுக்களைக் காணுகிறபொழுதெல்லாம் வைத்த நகைகள் அல்லவா நினைவுக்கு வரும்? அவள் எவ்வளவுக்கு வைத்திருப்பாள் சுருக்குப்பைக் காலத்தில்? அதிக பட்சம் ஐம்பது ரூபாய்க்கு வைத்திருப்பாளா? அவ்வளவுதான்! அதனால்தான் கவிஞன் அடகுப் பொருளைக் ‘கல்கம்மல்’ என்கிறான். கல்வைத்த நகைக்கு மதிப்பு குறைவு. கவிஞன் கண்ட கிழவியின் கம்மல் தங்கத்தில் வைக்கப்ட்ட வைரக்கல் நகையன்று. கண்ணாடிக் கல் நகை. எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால் ‘அடகுச் சீட்டாய் கல்கம்மல் மாறியதன் அடையாளங்கள்!’ என்னும் வரியில் அடங்கியிருக்கும் வலியை உணர முடியும்.

    சுருக்குப்பை சுவாசிக்கிறதாம்.

    சுருக்குப்பையின் சுவாசத்தை இப்படிப் பாடுகிறார் கவிஞர். .“மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்” மூதாட்டி திறந்து மூடும் நொடிக்குள் சுவாசித்துத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதாம் சுருக்குப்பை. சுருக்குப்பைக்கு பிராணவாயு தருவதே மூதாட்டியின் விரல்கள்தானாம். “எப்போது திறப்பாள்? என்னும் சுருக்குப்பையின் ஏக்கத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தனக்கு வாழ்வளிக்கும் சுருக்குப்பைக்குத் தான் வாழ்வளிக்கிறாளாம் மூதாட்டி! அருமையான அழகியல் கற்பனை!

    தன்மை நவிற்சி அணி

    புனைந்துரை ஏதுமின்றி உள்ளதை உள்ளவாறே கவிதையில் பதிவு செய்வதனைத் தன்மை நவிற்சியணி அல்லது இயல்பு நவிற்சியணி என்பார்கள் இலக்கணக்காரர்கள். சிலப்பதிகாரத்தில் உயர்வு நவிற்சியணியும் தன்மை நவிற்சியணியும் ஒரே இடததில  இயல்பாக அமைந்திருக்கும் இலக்கிய அதிசயத்தைக் காணலாம்.

    பாண்டியனின் அரண்மனை வாயிற்காவலன் கண்ணகியைக் காண்கிறான். அவன் பார்வைக்கு அவளுடைய தோற்றம் எப்படி இருந்தது என அவன்  பாண்டியனிடத்தில்  காட்சிப்படுத்தியதை அடிகள் இப்படிப் பதிவு செய்கிறார்.

    “அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
    பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
    வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை அல்லள்;
    அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
    ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
    கானகம் உகந்த காளி, தாருகன்
    பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;”

    காளியாகக் காவலனுக்குக் காட்சியளித்த கண்ணகி பாண்டியனுக்கு எப்படித் தோன்றினாள் என்பதை இயல்பு நவிற்சியால் காட்சிப்படுத்துகிறார் அடிகள்.

    மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
    கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும் வையைக் கோன்
    கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
    உண்டளவே தோற்றான் உயிர் ‘

    பாண்டியன் தோற்றத்தில் காணப்படும் கண்ணகியின் வண்ணனையில் அடிகள் எதனையும் புனைந்துரைக்கவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சில நொடிகள் இடைவெளியில் வாயிற்காவலன் பார்வைக்கும் நாட்டு மன்னனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாட்டினை அடிகள் புலப்படுத்து:ம் திறன் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது. சுருக்குப்பையில் புதையுண்ட பொருட்களைக் கவிஞன் காட்சிப்படுத்துகிறான்.

    “பல்குச்சி, வெற்றிலைப்பாக் குச், சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு, பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! “

    நோக்கின் சிறப்புப்பற்றி முன்னரே கூறப்பட்டது. இங்கே கவிஞன் சுருக்குப்பையின் அடைக்கலப் பொருள்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடைச்சொற்களை நோக்கினால் அவனுடைய கவிநோக்கு புலப்படும்.

    பல்குச்சி, வெற்றிலை சுண்ணாம்பு” என்கிறார். வெற்றிலை என்பது வெற்றிலை பாசிலையைக் குறித்ததன்று. வெற்றிலைச் சருகைக் குறித்தது. சுண்ணாம்பு என்பது சுண்ணாம்பு கரண்டவத்தைக் குறித்தது. தகரத்தினால் ஆன மிகச் சிறிய குழல்வடிவத்தில் இருப்பதுதான் சுண்ணாம்பு கரண்டவம். இந்தத் தெளிவு இல்லாமல் போனால் கவிதையை உள்வாங்கிச் சுவைக்க முடியாது. .

    ‘புகையிலையின் சிறுதுண்டு’ என்கிறார். ஒன்றரை அங்குல புகையிலைத் துண்டை ஒருவாரம் வைத்துப் பயன்படுத்துகிறவர்தான் அந்த மூதாட்டி. புகையிலைக்குத் தேய்பிறை உண்டு. வளர்பிறை கிடையாது. அந்தத் தேய்பிறைப் புகையிலையைத்தான் சிறுதுண்டு என்கிறார். ஊக்கைக் கூட ‘பழைய ஊக்கு’ என்கிறார். சுருக்குப்பையின் கயிறு இற்று அறுந்துவிடுமானால் அந்த ஊக்கு கயிறாக அவதாரம் எடுக்கும். கீழே கிடந்த ஊக்காகவும் இருக்கலாம். மூதாட்டி தமிழச்சியாதலாலும் சுருக்குப்பை தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் ஆனதாலும் பாடுபொருளோடு அனைவரும் ஒன்ற வேண்டும் என்பதாலும் தாக்குறவுக்கு ஆளாகவேண்டும் என்பதாலும் HOOK  என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார் என்று அமைதியடையலாம். .

    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி! அந்தச் சுருக்குப்பையில் இருந்ததாம். KEY CHAIN அறிந்த இன்றைய சமுதாயத்திற்குச் சாவிக்குத் தாலிகட்டிய அந்தச் சடங்கு தெரியாது.

    உயிர்பெற்று எழுந்துவரும் இறந்தகாலம்

    இறந்து போன காலத்திற்குத்தான் இறந்தகாலம் என்று பெயர். மூதாட்டியின் உடைமைகளும் அவைசார்ந்த சிந்தனைகளும் வரலாறுகளும் இறந்த காலம். ஆனால் அவை அந்தச் சுருக்குப்பையில் இருப்பதால் நிகழ்காலம்.

    “முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!”

    இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பையோடு முந்தானை முடிச்சையும் துணையாக்குகிறார் கவிஞர் அந்த முடிச்சில் காசுகள் இருக்கலாம். சாவிகள் தொங்கலாம். சில நேரம் நோட்டுக்களும் இருக்கலாம். அந்தச் சுருக்குப்பையும் இந்த முந்தானை முடிச்சும் மூதாட்டிக்குப் பெடடகங்களாகத் தோன்றுகின்றன. சுருக்குப்பை காணாமல் போனாலோ, முந்தானை முடிச்சவிழ்க்கப்பட்டிருந்தாலோ மூதாட்டியின் உயிர் போய்விடும். அவற்றுக்குள் இருக்கும் பொருள்கள் அவருடைய உயிர். எனவே அந்தப் பெட்டகங்களில்தாம் அவள் உயிர் இருக்கிறது. அவள் உயிரை அந்தப் பெட்டகங்கள் பூட்டிவைத்துக் கொண்டிருக்கிறது.

    கீழடியாய் மாறிய சுருக்குப்பை

    படைப்பாளனுக்குச் சமகாலச் சமுதாயப் பார்வையும் சமுதாயச் சிந்தனையும் வரலாற்று நோக்கும் இயல்பாகவே இருத்தல் வேண்டும். வரலாற்று நோக்கில் இன்று இந்தியாவை அசைத்துக் கொண்டிருப்பது தமிழ்நாடடில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகள். கீழடி முதலிய இடங்களில் கிடைக்கும் சில பொருள்கள் ஒரு பழைமையான நாகரிகத்தை வரலாற்றின் முன் கிடத்திக்கொண்டிருக்கின்றன. மூதாட்டியின் சுருக்குப்பை இறந்த காலப் பெட்டகம். இறந்த காலச் செல்வங்களைத் தன்னுள் மறைத்துக் கொண்டிருக்கும் கீழடியாய்த் தோன்றுகிறது கவிஞனுக்கு.

    “உடைமைகளின் கீழடிகள்!”

    மூதாட்டியின் சுருக்குப்பையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கீழடி. அதனால்தான் கவிஞன் கீழடிகள் எனப் பன்மையில் கூறுகிறான்.

    “தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்! “

    இந்தக் கவிதையைக் காலத்துக்கும் தூக்கி நிறுத்தும் தொடர் இது. மிக இலாவகமாகக் கவிஞர் கையாண்டிருக்கிறார். வேறுவகையாகச் சொன்னால் அவரையும் அறியாமல் வந்து விழுந்த சொற்கள்.

    பொதுவாகத் தோண்டுதல் என்ற சொல்லை இரண்டு இடங்களில்தாம் பயன்படுத்துவார்கள். ஒன்று ஏதாவது ஒன்றினைப் புதைக்கத் தோண்டுவார்கள். இரண்டு ஏதாவது ஒன்றினைக் கண்டெடுக்கத் தோண்டுவார்கள்.  தெளிவாகச் சொன்னால் பிணத்தைப் புதைக்கத் தோண்டுவார்கள். புதையல் இருக்குமிடத்தைக் கண்டறியத் தோண்டுவார்கள். கீழடியில் இறந்து போன எச்சங்களைத் தோண்டுகிறார்கள். ஆனால் அங்கே கிடைக்கும் பொருள்கள் உயிருள்ள ஒரு நாகரிகத்தின் அடையாளங்கள். என்ன அதிசயம்? இறந்த காலத்தை அறியத் தோண்டுகிறார்கள். நிகழ்காலமல்லவா கிடடுகிறது? இறந்து போய்த்தான் அவை கிடந்தன. தோண்டுவதனாலே உயிர் பெற்றனவாம். :தோண்டத் தோண்ட உயிர்பெற்று எழுந்தது”! நிலச்சரிவில் சிக்கி மாண்டுபோயிருப்பான் என நம்பப்பட்ட ஒருவன் மண்ணை அப்புறப்படுத்தும்போது உயிரோடு வந்தால் என்ன அனுபவம் கிட்டுமோ அந்த அனுபவமல்லவா நமக்கு? கவிதை இப்படி இருக்க வேண்டும்!

    “படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்! “

    எல்லாராலும் கைவிடப்பட்ட மூதாட்டி எதிர்காலத்தின் திசையறிய முடியுமா என்ன? நடப்பது நடக்கட்டும் என்னும் நம்பிக்கையோடு நாள்களைக்; கடத்துகிறாள். கடத்துகின்ற நாள்களுக்கு அவளுக்குத் துணையாக வருவது அந்தச் சுருக்குப்பையாம். வாழ்க்கைக் கவலைகளில் அவள் விட்ட பெருமூச்சுக்கள் கடற்கரைக்குப் போயிருந்தால் கப்பல்கள் கவிழ்ந்திருக்கும்!. அந்த வாழ்க்கைக் கவலைகள் எல்லாம் எதிர்நாட்டுப் படைகளாம். இவள் தனனந்தனியே அவற்றை எதர்க்கிறாளாம். கையில் ஆயுதம் வேண்டுமல்லவா? அந்த ஆயுதம்தான் ;இந்தச் சுருக்குப்பையாம்! அதனுள் பள்ளிகொண்டிருக்கும் பொக்கிஷங்களாம். அவை தருகின்ற நம்பிக்கைகளாம்! அச்சுறுத்தும் எதிர்காலமாகிய எதிரியைத் தனியொருத்தியாகக் களம் காண்பதற்கு அவளுக்குத் துணையாக இருப்பது இந்தச் சுருக்குப்பை தரும் நம்பிக்கையாம்! எவ்வளவு அழகான படிமம்?

    “கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் !

    ஜீபூம்பா என்பது கடந்த கால நினைவுகளுக்கான குறியீடு. அந்நினைவுகள் நேர்முகமாகவோ எதிர்மறையாகவோ மகிழ்ச்சியைத் தருவனவாகவோ வருத்தத்தைத் தருவனவாகவோ அமைந்திருக்கலாம். அத்தனையையும் பூட்டி அந்தப் பைக்குள் கட்டி வைத்திருக்கிறாளாம். மூதாட்டியின் வாழ்நாள் டைரியே அதுதான் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    அங்கத்தின் உறுப்பில் ஒன்று

    வாழ்க்கையின் அவலப் பகுதிகளைப் பாடுகிறபோது அழகியலும் கற்பனையும் சற்று தூக்கலாக அமையும் அமையவேண்டும். . சிலப்பதிகார மதுரைக்காண்டத்தின் இறுதிப்பகுதியும் கம்பராமாயணத்தின் யுத்தகாண்டமும் இந்தக் கருத்தினை உறுதி செய்யும். விரிப்பின் பெருகும். முதுமை வாழ்க்கையின் இறுதிப் பருவம். சுருக்குப்பை அதன் அடையாளம். இவை அவலப்பகுதிகள். அவலக்கூறுகள். இவற்றைப் பாடுகிறபோது அங்கே கற்பனையும் அழகியலும் கவிஞனுக்குத் தெரியாமலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்  அது நல்ல கவிதையாக இருந்தால்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!

    உலகத்தை உறறு நோக்கியிருக்கிறார் வசந்தராசன்! ‘கையறி மடமை’ என்பார்கள். சமையல் செய்யும் போது மற்றவர்களிடம் பேசிக்கொண்டே சமையற் பொருளுக்கான அளவைப் பார்க்காமலேயே எடுத்துப் போடுவதைப் பாரத்திருக்கலாம். கண்ணின் துணையிலலாமலேயே கை செய்யும் பணி அது. ஓட்டுநர் கண் சாலையில் இருக்கும். அவருடைய கால்கள் பிரேக்கில் இருக்கும். அது தானாகச் செயல்படும். தட்டச்சு செய்வர்கள் திரையைத்தான் பார்ப்பார்கள். விசைப் பலகையை விரல்கள்தாம் பார்க்கும். பூக்கடடுகிற பெண்களைப பார்த்திருக்கலாம். விரல்கள தொடுக்கும். விழிகள் அலைபாயும். இவைபோலவேதான் மூதாட்டி சுருக்குப்பையின் திறப்புவிழா நடைபெறுகிறது. ‘கைவிரலே கயிறவிழ்க்கும்! விரல்கள் கண்ணாய் மாறும்! சுருக்குப்பையின் திறப்புவிழாவில் நேரில் கலந்து கொள்ளாதவர்கள இந்த வரியை அவ்வளவாகச சுவைக்க முடியாது.

    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!

    தேடிவைத்த செல்வங்கள் இருக்கின்ற சுருக்குப்பை அது!. மயிலிறகு குடடிப் போடுகிறதா என்று பார்க்கும் குழந்தைகள் போல அந்தப் பையை அடிக்கடி திறந்து மூடுதற்குக் கவிஞன் ஒரு காரணத்தைச் சொல்கிறான். அவள் உயிர் அதற்குள் இருக்கிறதாம். பைக்குள் இருக்கிற உயிரைப் பாதுகாக்கிறாளாம் மூதாட்டி. உயிர் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல திறக்கிறாளாம். பாரக்கிறாளாம் மூடுகிறாளாம். தற்குறிப்பேற்ற அணியை விளக்கம் ஆசிரியப் பெருமக்களின் கவனத்திற்கு வரவேண்டிய வரிகள்.

    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ் வெல்லாமே அதனுள் வாழும்!

    தூக்கத்தில் கூட தன்னையறியாது தன்னருகில் தன் குழந்தை படுத்திருக்கிறதா என்று கைதடவி அறிந்து கொள்ளும் தாயைப் போலச் சுருக்குப்பையைத் தடவிக்கொண்டு உறங்குகிறாளாம் மூதாட்டி! இறந்தகாலத் துக்கமும் நிகழ்கால் மகிழ்ச்சியும் அந்தப் பைக்குள்ளே வாழுகிறதாம். மூதாட்டியின் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சுருக்குப்பையின் புதையல்கள் அடையாளப்படுத்துகின்றனவாம். ‘துக்கமகிழ்வெலலாமே அதனுள் வாழும்!

    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!
    என்னும் வரிகளில் சுருக்குப்பையின் உள்ளீட்டை அடிபபடையாகக் கொண்டு அதனை அருங்காட்சியகம் என்கிறார். ‘அருங்காட்சியகம் என்னும் சொல் ஏதோ மோனைக்காககப் போடப்பட்டதன்று. பொருள் பொதிந்த சொல். அருங்காட்சியகம் என்பது கழிந்தவைகளின் மண்டபம். பழைமைப் பெட்டகம். இன்று கரண்டவம் கிடையாது. வெற்றிலைச் சருகு கிடையாது. புகையிலைக் காம்பு கிடையாது. எட்டாக மடிக்கப்பட்ட நோட்டு கிடையாது. சிலலரைக் காசுகள் கிடையாது. ஊக்கு கிடையாது. பல்குச்சி கிடையாது. சுருக்குப் கிடையாது இவ்வளவு ஏன்? மூதாட்டிகளே கிடையாது. இருப்பார்களேயானால் அவர்கள முதியோர் இல்லத்தில் அல்லது காப்பகத்தில்! எனவேதான மேற்கண்டவற்றைப பார்க்க வேண்டுமென்றால் எங்கோ ஓர் மூதாட்டியிடம் தான் காணமுடியும். அதனால் அது அருங்காட்சியகம். கீழடிக்கு நாம் சென்றுதான் பார்க்க வேண்டும் கீழடி நம்மை நோக்கி வராது.

    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    என்னும் இரண்டு வரிகளும் முதல் விருத்தத்தில் இருந்தாலும் மாலை மாற்று என்பதுபோல இறுதி வரியாகவும் கொள்ளலாம். இங்கே ஒரு வித்தையைச் செய்து காட்டுகிறார் கவிஞர். கூட்டலின் சுருக்கம்தான் பெருக்கல். பெருக்கலின் சுருக்கம் கூட்டல் அன்று. ஆனால் பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை போடுகிற கிழ முதுமை” என்கிறார்.  இளமை முதுமையாகும். ஆனால் முதுமை இளமையாகாது. சுறுசுறுப்பாகச ;செயல்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று அது பின்னமாகி நிற்கிறது. சில நொடிகளில் திறக்க வேண்டிய சுருக்குப்பையைத் திறக்க இரண்டு நிமிடம் தேவைப்படுகிறது. ஒரு வெற்றிலைச் சருகின் காய்ந்து போன காம்பினைக் கிள்ள சில நிமிடம் தேவைப்படுகிறது. கரண்டவத்தைத் திறந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பு தடவிக்கொள்ள சில நிமிடங்கள். இப்படி முதுமையில் ஒவ்வொரு நொடிச்செயலையும் நிமிடக்கணக்கில் நிகழ்த்துகிறார் மூதாட்டி. இங்கே பெருக்கல் கூட்டலாகிறது. நிமிடங்கள் நொடிகளாவது இளமை. நொடிகள் நிமிடங்களாவது முதுமை. அதனால்தான் பெருக்கலின் சுருக்கம் கூட்டல் ;என்று முரணமைத்துக் காட்டுகிறார் கவிஞர்!. அழகான ஆழமான சிந்தனையல்லவா? எண்ணிப் பார்க்கத் தூண்டும் கற்பனையல்ல்வா? என்னதான் திறனாய்வு என்றாலும் கத்தியால் அறுக்கப்பட்ட மாம்பழத் துண்டைவிட பற்களால் கடித்துத் தின்னும் மாம்பழத்தின சுவையே தனி. வாசகர்கள் சுருக்குப்பை பற்றிய இந்த நான்கு விருத்தங்களையும் படித்து உணர வேண்டும். உணர்ந்து படிக்க வேண்டும். உள்ளத்தில் இருத்த வேண்டும். கவிதையைச் சுவைப்பது பசு அசைபோடுவதைப் போல!

    சுருக்குப்பை வாய்திறந்தால் வேர்வை வாசம்!
    சுண்டுகிற ‘நாணயங்கள்’ நின்று பேசும்!
    கருக்கல்வாய்த் தாம்பூலப் புதையல் கொஞ்சம்
    இருட்டுக்கடை அல்வாபோல் இனிக்கும் நெஞ்சம்!
    சுருக்கிவைத்த செலவினத்தின் எச்சம் மிஞ்சும்!
    சுற்றளவில் இடைசிறுத்து இடுப்பில் தொங்கும்!
    பெருக்கலுக்கே கூட்டலெனும் குறுக்குப் பாதை
    போடுகிற கிழமுதுமை மாங்கல் யப்பை!

    பல்குச்சி வெற்றிலைப்பாக் குச்சுண் ணாம்பு
    புகையிலையின் சிறுதுண்டு பழைய ஊக்கு
    பல்திறத்துப் பைநிறைந்து வீழ்ந்து விட்ட
    பழங்கலம்போல் உள்ளிருப்பு! அடகுச் சீட்டாய்
    கல்கம்மல் மாறியதன் அடையா ளங்கள்!
    கயிறணிந்து பதுங்கியுள வீட்டுச் சாவி!
    மெல்லவிழ்ந்து சுவாசிக்கும் சுருக்குப் பைகள்
    மூவுலகை முடக்குகின்ற திறவு கோல்கள்!

    முடங்கினாலும் தன்னுயிரைப் பூட்டி வைக்கும்
    முந்தானை முடிச்சிடுப்புப் பெட்ட கங்கள்!
    உடைமைகளின் கீழடிகள்!தோண்டத் தோண்ட
    உயிர்பெற்றே எழுந்துவரும் இறந்த காலம்!
    படைவரினும் இதுவொன்றே வாளென் றென்னும்
    பாசாங்கே இல்லாத நம்பிக் கைகள்!
    கடந்தகால ஜீபூம்பா பூதம் தன்னைக்
    கட்டிவைத்த சிறைக்கூடம் ! சுருக்குப் பைகள்!

    கயிறவிழ்க்கும் கைவிரலே கண்ணாய் மாறும்!
    கைநகத்தின் நுனிபுதையல் எடுத்து மீளும்!
    உயிரவிழ்த்து பத்திரமாய் அதனுள் பொத்தி
    வைத்ததுபோல் அடிக்கடியே திறந்து மூடும்!
    துயில்நடுவே கைதடவத் தானாய்ப் போகும்!
    துக்கமகிழ்ச்சி எல்லாமே அதனுள் வாழும்!
    அயலல்ல அங்கத்தின் உறுப்பி லொன்று!
    அருங்காட்சி யகம்தோற்க வெல்லும் நின்று!

    நிறைவுரை

    பாடுபொருளின் தேர்ச்சியும் ஒரு கவிதை வெற்றி பெறுவதற்கான காரணிகளில் ஒன்று என்பதை இந்தக் கவிதை உறுதி செய்திருக்கிறது. அகம் புறம் என்னும் பழந்தமிழ்க் கவிதைப் பாகுபாட்டிலும் முதுமை ஒரு பாடுபொருளாக இருக்கவில்லை. நீதிகளை மையமாக வைத்த காப்பியங்களிலும் முதியவர்கள் பாத்திரங்களாக வந்து போனார்களே தவிர, முதுமையின் அவலம் பாடுபொருளாகவில்லை. இடைக்காலத்திற்குப் பிறகுதான் பருவநிலைகள் பாடுபொருளாக்கப்பட்டன. நல்குரவு என்று ஒற்றைச் சொல்லில் வள்ளுவர் பாடினார். இளமையின் பரப்பினைப் பாடிய அளவுக்கு முதுமையின் சுருக்கங்களைத் தமிழ்க்கவிதையுலகம்  பாடவில்லை.  சிலம்பு, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சிந்தாமணி என்று மங்கையின் உறுப்பணிகளைப் பெயர்களாக வைத்த புலவர் பெருமக்கள் பார்வையில் சுருக்குப்பை படவேயில்லை! அவர்களுக்கு இடுப்பின் மேகலை தெரிந்தது. சுருக்குப்பை தெரியவில்லை. அவலம் என்பது இந்தச் சுருக்குப்பையின் படிமம்.  “கிழ முதுமையின் மாங்கல்யப் பை’ என்னும் படிமத்தில் சுருக்குப்பையை மணமகளாகவும் கயிற்றை மாங்கல்யமாகவும் காடடியிருக்கும் கவித்திறன் எண்ணி வியக்கத்தக்கது. கற்பனை, உணர்ச்சி, கருத்து என்னும் கவிதைக் கூறுகள் நான்கனுள் எண்சீர் விருத்தம் என்பது மிகச் சாதாரணமான வடிவம். ஏனைய மூன்று கூறுகளிலும் முழுமை பெற்று நிற்கும் இந்தக் கவிதையில் கவிஞனின் கூரிய நோக்கும் புதுமை பாடும் போக்கும் சமுதாய தாக்குறவும் கலந்த நிலையில் ஓர் அழகியல் தன்னையே ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதைக் காணலாம்.

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 28

    முனைவர். ச. சுப்பிரமணியன்

    அழகு மழலைக்கு ஆயிரம் கவிதைகள்

    முன்னுரை

    ஏதாவது ஒரு கவிதையையோ கட்டுரையையோ நாம் படிக்கிறபோது அவற்றை முன்பு எஙகோ படித்த நினைவு நமக்கு வருவது இயல்பு. யாரோ சொல்லியிருந்த நினைவு! இத்தகைய நினைவு எல்லாப் படைப்புக்களுக்கும் வருவதில்லையென்றாலும் ஒரு சில படைப்புக்களைப் படிக்கிறபோது வருவதை நாம அனைவரும உணர்ந்திருக்கிறோம். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களைப் படிக்கிற எவருக்கும் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகாது. சான்றோர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இலக்கிய அளவில் எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உண்டு. முகநூல் கவிதைகளைப் படிக்கிற சில பொழுதுகளில் அத்தகைய அனுபவத்தை நான பெற்றிருக்கிறேன்.! தம்பி தாரமங்கலம் முத்துசாமியின் கவிதையொன்றினைப் படிக்கிறபோது எழுந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதையே இந்தக் கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    விவேக சிந்தாமணியும் திருக்குறளும்

    விவேக சிநதாமணியில் ஒரு பாட்டு. ஒரு பெண்ணின் வால் எயிறு ஊறிய நீர் அதாவது எச்சில் எத்தகையது என்பதை விளக்குகிற பாட்டு அது. அந்தப் பாட்டு இப்படி அமைந்திருக்கிறது

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி வாயின் ஊறல்
    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?
    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    யாருடைய எச்சில் ஊறியதோ அவளைப் பற்றிய தோற்ற வண்ணனையைப் பாட்டின் முதல் இரண்டடிகளில் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார் புலவர். அவள் கூந்தல் வண்டுகள் கூடுகட்டினால் எப்படியிருக்குமோ அப்படிருக்குமாம்.

    “வண்டுமொய்த்தனைய கூந்தல்”

    மதன் மன்மதன்! பணடாரம் பொக்கிஷம். அதாவது கருவூலம்.  வல்லி கொடி! காமக்கருவூலமாய்க் கொடி போன்றவள்

    மதன பண்டார வல்லி!

    அவள் கண் கெண்டை மீனை ஒத்திருந்ததாம். பெண்களின் கண்களுக்குக் கெண்டை மீனை உவமிப்பது ஓர் இலக்கிய மரபு. இது பற்றிய இன்னொரு பாடலை இங்குச் சுட்டுவது பொருத்தமாக இருக்கலாம்!.

    “தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
    மொண்டு நீரை முகத்தருகேந்தினள்!
    கெண்டைகெண்டை எனக் கரை ஏறினள்
    கெண்டை காணாமல் நின்று தயங்கினள்!”

    பெண்ணொருத்தி நீரிலே குனிந்து பார்த்திருக்கிறாள். இவள் கண்ணிழல் நீரிலே படிந்திருக்கிறது. அவற்றைக் கெண்டை மீன் என மயங்கிய  அந்தப் பெண் தன் உள்ளங்கையால் ஒரு கை நீரை மொண்டு அந்தக் கெண்டைமீனைப் பார்க்க முனைந்திருக்கிறாள். குளத்தில் தோன்றிய கண்ணிழல் உள்ளங்கையில் தோன்றுமா என்ன? உடனே கெண்டையைக் காணோம் என்று அரற்றி மயங்கினாளாம்!, புலவர் என்ன சொல்ல வருகிறார்? அவள் கண் கெண்டை மீனைப் போல இருந்தது என்ற செய்தியைத்தான்! இப்படிச் சொல்வதும் ஒரு இலக்கியச் சுவைக்காகவே!

    “கெண்டையை ஒத்த கண்ணள்”

    காதல் மயக்கத்தில் பெண்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்! பறவைகளில் பேசுகிற பறவை கிளி!. கிளி பேசுமா என்றால் பேசாது! அது வளர்ப்பவர் சொல்வதையே திருப்பிச் சொல்லும்! இந்தப் பெண் காதல் மயக்கத்தில் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லுவாள் ஆதலின் கிளியைப் போல் பேசுகிறளாம்!

    கிளிமொழி!

    இப்போது அந்தப் பெண்ணின் உருவத்தை வண்ணனைச் செய்யும் சொற்களை இணைத்துப் பார்த்தால் அவளின் புற அழகு புலப்படும்.

    வண்டுமொய்த் தனைய கூந்தல்
    மதனபண் டார வல்லி
    கெண்டையோடு ஒத்த கண்ணாள்
    கிளிமொழி!

    இத்தகைய பேரழகையுடைய அவள் வாய் எச்சில் எத்தகைய இனிமை பயக்குமாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் புலவர்! “கற்கண்டாக இருக்குமோ? சர்க்கரையாக இருக்கலாமா? மலைத்தேனாக இருக்கலாமா?  முக்கனிச் சாற்றோடும் கலந்த பாலாக இருக்கலாமா?  என்றெல்லாம் ஐயப்படுகிறார்!. எச்சிலுக்கு இது மாதிரியான வேதியல் பண்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காதல் மயக்கமல்லவா?  எனவேதான் தலைவள் உளறுகிறான்.

    கண்டுசர்க் கரையோ தேனோ?
    கனியொடு கலந்த பாலோ?

    அமுதத்தை உண்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தார்களாம் தேவர்களும் முனிவர்களும். அவ்வளவு சிரமம் ஏன்? தேவையில்லை. இவள் வாயில்  ஊறும் இந்த எச்சில் அமுதமாகாதா? அதனைக் கொடுத்தால் போதாதா? என்று வினவுகிறார் புலவர்!

    அண்டமா முனிவர்க் கெல்லாம்
    அமுதம்என் றளிக்க லாமே!

    தேவர்கள் அமுதம் உண்டார்கள் என்பது கற்பனை! யாரும் அனுபவிக்க முடியாதது. தலைவியின் எச்சிலாகிய அமுதத்தை உண்பது யாருக்கும் கைகூடுவது. உண்மை!. அதன் சுவைதான் காதலர்களுக்கேற்ப மாறுபடுமே தவிர உண்டலாகிய வினை உண்மை! இந்தப் பாடலைப் படிக்கின்ற போது எனக்குத் திருவள்ளுவர் பாட்டு நினைவுக்கு வந்தது. திருக்குறள் காமத்துப்பால் நாடகப் பாங்கில் அமைக்கப்பட்ட இலக்கியம். அந்தப் பாலின் இருபத்தைந்து அதிகார்களும் தலைவன், தலைவி தோழி கூற்றாகவே அமையும். திருவள்ளுவர் ஒதுங்கிக் கொள்வார்.

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர் (1121)

    என்று தலைவியின் எச்சிலை உண்ட தலைவன் கூறுவதாகத் திருக்குறள் கூறுகிறது!  எயிறு ஊறாது. எயிறு என்னும் இடத்தில்  எச்சில்தான் ஊறும். குளம் நிறைந்தது என்றால் குளம் நிறையாது. நீர்தான் நிறையும். குளம் இடம். நீர் அவ்விடத்து ஊறுகின்ற நீர்.  பாலோடு தேன்கலந்தற்றே என்னும் இருசொற்களின் விரிவுரையை விவேக சிந்தாமணி விரித்துக் காட்டியிருக்கிறது.  திருக்குறளில் தலைவியின் எச்சிலை உண்ட தலைவனின் இந்த அனுபவத்தைப் படித்த ஒருவன் விவேகசிந்தாமணியைப் படித்தான் என்றால் திருக்குறள் நினைவுக்கு வராமல் போகுமா என்ன? இன்னொரு அனுபவததையும் நான் பகிர விரும்புகிறேன்.

    ‘மரகதம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு! அது காவியம் ஆயிரம் கூறும்” எனத் தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலின் சரணத்தில்

    ‘இன்பத்தின் எல்லையில் கூடுகட்டி இன்னிசை பாடும் பறவைகள் நாம்’

    என்று ஒரு வரி சரணத்தில் வரும். இந்த வரியைக் கேட்போர் அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஒரு வரி அப்படியே அசை பிசகாமல் தமிழ்த் திரைப்படப்பாடலில விழுந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்சசிக்குக் காரணம்.  “WE ARE THE NEST OF THE SINGING BIRDS” என்பதுதான் அந்த ஆங்கில வரி. பாடல் எழுதிய பாலு என்பவர் ஆங்கில இலக்கியம் படித்தவரா என்பது நமக்குத் தெரியாது. படம் வந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆசிரியர் குறிப்பு கிட்டவில்லை. என்ன ஒரு வியப்பு? இங்கிலாந்தில் இருந்த ஒரு கவிஞனின் சிந்தனை எப்படி இங்கே இருக்கிற ஒருவனுக்கு வந்திருக்கிறது? சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரிதான சிந்திக்கிறார்கள். இது சவலைக் கவிஞர்களுக்குப் புரியாது!.

    சத்தியக் கவிஞர் முத்துசாமி

    மகாகவி பாரதிபோல், கண்ணதாசனைப் போல் கள்ளங் கபடில்லாத உள்ளந்தான் கவிஞர்களுக்கு அடிப்படைத் தகுதியாகும் என்பது என் கருத்து. இது இயற்கையிலேயே அமைய வேண்டும். காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்னும் இனிய பண்புகளின் தொகுப்பாக இருப்பவனே கவிஞன். தம்பி முத்துசாமி அத்தகைய இயல்புடைவராகவே இருக்க வேண்டும். இது அவருடைய படைப்புக்களிருந்து அறிந்து கொள்ள முடிகிற உண்மையாகும்.

    பாவலர் முத்துசாமியும்  பாவேந்தரும்

    முததுசாமி எழுதி முகநூல் பதிவில் நான் கண்ட ஒரு கவிதைதான் இந்தக் கட்டுரைக்கு மூலம். முன்பே சொன்ன படி சத்தியக் கவிஞர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கிறார்கள். மானுடம் தாண்டிய நேச மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாரதி பாடியதற்கும் “ஓடையும் தாமரைப்பூக்களும்” பாவேந்தரிடம் பாசம் காட்டியதற்கும் மனித நேயத்தைத்தாண்டிய இந்த அருட் பண்பே காரணம். அததகைய பண்பாளராக இந்தக் கவிதையில் முத்துசாமி எனக்கு விளங்குகிறார்.

    சூரியனைச் சொந்தம் கொணடாடும் முத்துசாமி

    இயற்கையை ரசிப்பதும் அதனோடு உறவாடுவதும் அதனை உற்று நோக்குவதும் உண்மைகளை அறிவதுமே கவிஞர்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டும் கோடுகளாகும். இயற்கையை ரசிக்கத் தெரியாதவன் கவிஞன் என்றால் விழியே இல்லாதவன் நிலவைப் பாடினான் என்பது போலாகும்.

    “காலைக் கதிரவன் கவினுற நின்று
    கவிதை பாடுக என்றான் – மலர்ச்
    சோலை வண்டு சொந்தம் கொண்டு
    சொல்லுக கவிதை என்றது !”

    நிலவுக்குச் செல்வதற்கு இஸ்ரோ முயன்று கொண்டிருக்கும்போது முத்துசாமியின் இருப்பிடம் தேடிக் கதிரவன் வந்ததாம். அருமை! வெப்பக் கோளமான கதிரவன் கவிஞரைத் தன்னைப் பாடுக என்று வேண்டுகோள் விடுத்ததாம். வெப்பத்தோடு கதிரவன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிஞருக்குக் குளிர்ச்சியைத தர எண்ணிய வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டே அவரிடம் வந்ததாம். இந்த வண்டைப் பாட வந்த கவிஞர் மலர்ச்சோலை வண்டு என்று அடைகொடுத்து எழுதுகிறார். வண்டு என்று எழுதாமல் சோலை வண்டு என்று எழுதுகிறார். சோலை என வாளா கூறாமல் மலர்ச்சோலை என்றும் எழுதுகிறார். இது மரச்சோலை அல்லவாம். மலர்ச்சோலையாம். மலர் குளிர்சசி! சோலை குளிர்ச்சி! வண்டு குளிர்ச்சி! அதனால் அதன் குரலும் குளிர்சசி. ஒரு சிறிய கண்ணியல் பொருள் முரணால் கவிதை மிடைந்திருக்கிறார் முத்துசாமி.

    குரலெடுத்துக் கேட்ட குயிலும் மயிலும்

    கவிஞர் எழுதத் தொடஙகுகிறார். முதலில் கதிரவன் வந்தது. வண்டு இடைமறித்தது. இப்போது வானத்து முறை. வானத்து நிலவு பூமிக்கு வருவதைக் கவிஞர்கள் கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால் தம்பி முத்துசாமி வானமே பூமிக்கு வந்து தன்னைப் பாடுக என்றதாம். அடடா! என்னவொரு கற்பனை? எல்லாரும் நிலவையும் கதிரவனையும் மண்ணுக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். நான வானத்தையே வரச்சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதப்பட்டதல்ல இந்தக் கவிதை. இயல்பாக அமைந்த கவிதை. இந்தக் கற்பனை வந்த கற்பனையேயன்றி வரவழைக்கப்படட கற்பனை அன்று.

    “நீல வானம் நிலத்தில் வந்து
    நீண்ட கவிதை கேட்டது – புதுக்
    கோல மயிலும் கொஞ்சும் குரலில்
    கூறிடு கவிதை என்றது !”

    என்னும் இந்தக் கண்ணிகளில் மயிலும் வந்து தன்னைப் பாடுக என்றதாம். அது சாதாரணம்தான். ஆனால் கொஞ்சும் குரலில் கெஞ்சியதாம் என்பதுதான் அழகிய கற்பனை. மயிலுக்குச் சாயல் பேசப்படுகிற அளவுக்கு அதன அகவல் ஒலி பேசப்படுவதில்லை. கவிஞரின் கவிதையில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்னும் ஆவல் அதற்கும் வந்ததாம்.

    விண்மீன் கூட்டமும் விரிந்த மலைத்தொடரும்

    வானம் நிலத்துக்கு வந்து கவிதை கேட்டது பகலில். இப்போது அந்தி வந்துவிட்டது. “வானம் கேட்டு எழுதுகிற கவிஞர் நமக்குத் தானம் அளிக்க மாட்டாரா? என்று தவித்துப் போனதாம் விண்மீன் கூட்டம்.

    “விண்மீன் கூட்டம் விருந்து வைத்து
    வேண்டும் கவிமழை என்றது – உயர்
    பொன்னிற மலையும் பொங்கி வழிந்து
    பூந்தமிழ்க் கவிமலர் கேட்டது !”

    இல்லாத  வானத்தில் இருக்கின்ற உடுக்களும் கவிஞரை நோக்கிப் பயணப்பட்டபோது மலை அமைதியாக இருக்குமா என்ன? அதுவும் இருந்த இடத்தில் இருந்தே ஒரு விண்ணப்பத்தைப் போடுகிறதாம். ‘பொங்கி வழிந்து’ என்று ஒரு தொடர் வருகிறது. மலை எப்படிப் பொங்கும்? அது என்ன எரிமலையா? இல்லையே!. பொங்கி வழிந்து என்னும் தொடர் மலையின் அருவியைக் குறித்தது. அருவியொலி மலை பேசுவதாகக் கற்பனை செய்கிறார். அருவிமொழியால் மலையும் கவிஞரின் கவிதைப்பொருளாக வேண்டும் என்று விரும்பியதாம்.

    அன்னமும் மின்னலும்

    தொடர்ந்து கற்பனை செய்கிறார் கவிஞர். பறவைகளில் மயில் கேட்டதை அறிந்த அன்னப்பறவை அருகில் வந்ததாம். வானமும் விண்மீனும் தன்னைவிடடுச சென்றுவிட்டதை அறிந்த மின்னலும் கவிஞரிடம் போனதாம். இரண்டும் ஒரு கூட்டு விண்ணப்பத்தைக் கொடுத்ததாம்

    “அன்னப் பறவை அசைந்து வந்து
    அழகினைப் பாடுக என்றது – விண்
    மின்னற் கீற்று மிரட்டியே என்னை
    முழங்கிடு கவிதை என்றது !”

    மின்னல் இடிக்கு வாழ்க்கைப்பட்டது. மின்னல் முன்னால் வரும் இடி பின்னால் வரும் ஒளியின் வேகம் முன்னால் ஒலியின் வேகம் பின்னால். அதற்கு இடியோசைதான் இன்னோசை. மின்னலுக்கு இடியோசைதான் பின்னணி இசை. அதனாலே அது கவிஞரிடம் அமைதியாகப் பேசாமல் இடிபோல் பேசியதாம்.  அப்படிப் பேசுவது தன்னை மிரட்டியது போல இருந்ததாகக் கவிஞர் கற்பனை செய்கிறார்.

    கவிஞரைக் கெஞ்சும் மாலையும் சாலையும்

    இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த அந்தி வானம் தன்னையும் பாட வேண்டுமென்று கேட்டதாம்.  ‘தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ?  என்று பாரதி பாடியும் அதற்கு அடங்கவி`ல்லையாம்.

    தேன்செய்யும் மலரும் தீயும்!
    செந்தீயும் நீறாய்ப் போகும்!
    கான், செய், ஊர், மலை, கா, ஆறு
    கடலெலாம் எரிவ தோடு
    தான்செய்த தணலில் தானும்
    எரிகின்றான் பகலோன்! அங்கு
    வான்செய்த வெப்பத் தால்இவ்
    வையத்தின் அடியும் வேகும்!
    உச்சியில் இருந்த வெய்யோன்,
    ஓரடி மேற்கில் வைத்தான்,
    நொச்சியின் நிழல்கி ழக்கில்
    சாய்ந்தது! நுரையும், நீரும்,
    பச்சையும், பழுப்பு மான
    பலவண்ண முகில்கள் கூடிப்
    பொய்ச்சான்று போல, யானை
    புகழும் பின் மலையைக் காட்டும்!.

    என்று பாவேந்தர் பாடியும் போதவில்லையாம். “ மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து வெற்று நீறாகாமல் இருப்பதொரு வியப்பே” என்று அவர் பாடியது பசிக்குப் போதவிலலையாம்! “வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்” என்று வைரமுத்து பாடியும் அதற்கு மகிழ்ச்சி இல்லையாம்;

    “பைங்கிளி ஒன்று பறந்து வந்து
    பழந்தமிழ்க் கவிதைக் கேட்டது – குளிர்
    தங்கிடும் நிலத்தில் தவழ்ந்து நடந்து
    தந்திடு கவிதை என்றது !”

    “மாலைப் பொழுதும் மயக்கும் மொழியில்
    மணித்தமிழ் கவிதைக் கேட்டது – நீள்
    சாலை மரங்கள் சரமாய்க் கவிதை”
    சமைத்துத் தருக என்றன !

    முத்துசாமி பாடலை மாலை கேட்டதாம். அதனால் சாலையும் கேட்டதாம்.  ஆனால் அவர் மயங்கவில்லையாம்!.

    மானும் முயலும்

    மானைப் பாடாத புலவரில்லை என்பது மானுக்குத் தெரியாதா என்ன? ஆனால் முத்துசாமி இதுவரை தன்னைப் பாடவில்லை என்னும் மனக்குறை அதற்கு இருந்ததாம். அதனால் அவரை வந்து தன்னைப் பாடும்படி வேண்டியதாம்.  “தூமயிர் குறுந்தாள் நெடுஞ்செவி குறுமுயல்” என்று சங்கப்புலவ்ன் பாடியிருக்கிறான் என்பது முயலுக்குத் தெரியும். வீரத்திற்கு அழகில்லை என்பதற்குத் திருவள்ளுவர் தன்னை உவமமாகப் பயன்படுத்திக் கொணடார் என்பதும் முயல் அறிந்ததே!. வேகமாக ஓடி ஓய்வெடுத்துத் தோல்வி கண்ட கதையில் தான் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது முயலுக்கும் தெரியும். அதனைவிட ஆமைக்குத் தோற்ற அவமானத்தை அது இன்னும் மறக்கவே இல்லை.

    “மான்க ளிரண்டு மகிழ்ச்சியில் திளைத்து
    மாத்தமிழ்க் கவிதைக் கேட்டன – அடர்
    கானக முயல்கள் காதினை நீட்டி
    கவிதை என்றெனைக் கேட்டன !

    ‘மான்கள் இரண்டும் மகிழ்ச்சியில் திளைத்தபின்” என்பதால் ஆண்மானும் பெண்மானும் என்பதைக் குறிப்பாகக் காடடுகிறார் கவிஞர். மான் இணையாக வந்தது போலவே முயல்களும் கூட்டமாகவே வந்தனவாம்.

    குழந்தையின் புன்னகை கோடி பெறும்

    சூழ்நிலை கவிஞனை உருவாக்குகிறது. கவிதை பிறக்கிறது. தன் பிள்ளையின மழலையில் மனம் பறிகொடுத்தவர் முத்துசாமி. கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்த அவரை வானம் கேட்டது!  இடி இறைஞ்சியது. மின்னல் வேண்டியது! அன்னம் அழுதது! மானும் மண்டியிட்டது! முயலும் முயன்று பாரத்தது! கிளி பேசியும் பார்த்தது! மாலையும் கேட்டது! சாலையும் கேட்டது! அப்பொழுதெல்லாம் இளகாத கவிஞர் மனம் தன் மழலைக்கு இளகியதாம்! இரங்கியதாம். எவ்வளவு மென்மையான கற்பனை! “குழலையும் யாழையும் புறந்தள்ளும் மழலை” என்பார திருவள்ளுவர். “கொஞ்சும் மழலை கேட்கையிலே குழலும் யாழும் பொய்யன்றோ?” என்பார் மருதகாசி!. பொருள் புரியாத மழலைக்கு மயங்கினாராம் முத்துசாமி கவிஞர்.

    “அத்துணைப் பேரும் அனுதினம் கேட்டும்
    அகத்தின் கதவு திறக்கல – என்
    புத்தெழில் மழலைப் புன்னகை சிந்திட
    புலர்ந்தது ஆயிரம் கவிதை !”

    மேலே சொலலப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பல நாள் வந்து கேட்டும் பயனில்லை என்பதை இறுதி வரியிலே சொல்கிறார் கவிஞர். பலநாளும் விடடு விட்டு இலலையாம். “அனுதினம்” கேட்டும் என்கிறார். இடையீடு இல்லாமல் கவிஞரின் கவிதையில் பாடுபோருளாகிவிட வேண்டும் என்னுந் துடிப்பால் வந்து அலைந்தனவாம்! அஃறிணை உயிர்களோடு கவிஞரின் உறவு நிலையைப் புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவுகின்றன. கவிஞனின் மனம் இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். கவிதை பிறக்க வேண்டும். பலபேர் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

    மருதகாசியும் முத்துசாமியும்

    திரைக்கதையில் அறக்கருத்துக்களையும் சமுதாய நீதிகளையும் கலை நயம்பட எடுத்துக் கூறுவதில் மருதகாசி தனித்து விளங்குபவர். “மனமுள்ள மறுதாரம்” என்று ஒரு திரைப்படம் ஐம்பதுகளில் வெளிவந்தது. அந்தப் படத்தில் மருதகாசி எழுதிய பாடல் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்ககிறது.

    “மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!
    வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்!
    மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
    மார்மீது உதைப்பதிலே கிடைபபதுதான் இன்பம்”

    மழலைகளைப் பாரத்தவுடன் முத்துசாமிக்கு ஆயிரம் கவிதைகள் மலர்ந்ததாம். மருதகாசியின் உள்ளம் இடமாறியிருக்குமோ?

    தமிழினக் கனவும் பாவேந்தரும்

    இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடியவர் பாவேந்தர். பாரதி ஒளியில் பாவேந்தர் பாடிய உலகப் பார்வை ஒளியிழக்கச் செய்யப்பட்டது.

    எனையீன்ற தந்தைக்கும் தாயக்கும் மக்கள்
    இனமீனும் தமிழ்நாடு தனக்கும் என்னால்
    தினையளவு நலமேனும் பயக்கு மென்றால்
    செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”

    என்று பாடியவர் அவர். ஒரு நாள் கவிதை எழுத உட்கார்ந்தாராம். தாளை எடுத்ததுதான் தெரியுமாம்.  ஒரு எழுத்துக் கூட வரவிலலையாம்! எழுத இயலவில்லையாம்!

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட”

    என்ன ஆனது? எதுபற்றி எழுத ஏட்டினை எடுத்தார்? ஏன் எழுத இயலவில்லை?  என்பதையெலலாம் பாட்டின் இறுதி வரியில் பதிவு செய்கிறார். வந்த தடைகளை வரிசைப்படுத்துகிறார்.

    1. வானம் தன்னை எழுதென்று சொன்னதாம்.
    2. ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களைப் பற்றி எழுதுக என்றனவாம்.
    3. அடர்ந்த காடும் பசிய வயலும் கருத்த மேகமும் தங்களை எழுதக் கூடாதா என்று கெஞ்சினவாம்.
    4. சாயலில் மயிலையொத்த மங்கையர் அருகில் வந்து தங்களைப் பாடுக என்றனராம்.
    5. சோலை தந்த குளிர்ச்சியோடு தென்றல் வந்ததாம்.
    6. தோகையுடைய மயிலும் மருண்ட மானும் வந்தனவாம்
    7. மாலைக் கதிரவன் தன் மாணிக்க ஒளியினைக் காட்டியதாம்.
    8. களங்கண்ட தமிழ் வீரன்; மலையினை யொத்த தன்தோளை வரைக என்றானாம்.
    9. இத்தனை அழகும் தங்கள் பாடுக என எத்தனித்தனவாம்! வற்புறுத்தினவாம்!

    ஆனால், ஆண்ட தமிழினம் அடிமைப்படட்டுக் கிடக்கின்ற காட்சியினைக் கண்டவருக்குக் கவிதை வரவில்லையாம். கவலை வந்ததாம். அந்தக் கவலைக்கு மூல காரணம் தாய்மொழிவழிக் கல்வி இல்லாததுதானாம். உண்மைதானே! உலகிலேயே தாய்மொழி வழி கலலாத ஒரு கீழினமாக இருப்பது தமிழினமே. “மொழி வளர்ந்தால் இனம் வளரும். இனம் வளர்ந்தால் நாடு வளரும். இது ஒரு பரிணாமம். எனவே தாய்மொழிவழிக் கல்வி பெற்றுவிட்டால் துன்பங்கள நீங்கும் சுகம் வரும் நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். விரம் வரும்”. இனத்தைப் பற்றித்தான எழுத நினைத்தாராம்! இனந்தான் எழுந்திருக்க முடியாமல் இப்படி இடுப்பொடிந்து கிடக்கிறதாம்! அதற்குக் காரணம் தாய்மொழிப் பற்றின்மைதான் காரணமாம். பாவேந்தர் எழுதுகிறார்.

    ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட — என்னை
    எழுதென்று சொன்னது வான்
    ஓடையும் தாமரைப் பூக்களும் — தங்களை
    ஓவியம தீட்டுக என்றுரைக்கும்
    காடுகழனியும் முன்னே வந்து
    கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
    ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்
    தங்கள் அன்பினைச் சித்திரம் செய்கவென்றார்

    சோலைக் குளிர் தரு தென்றல் வரும் — பசுந்
    தோகை மயில் வரும்! அன்னம் வரும்.!
    மாலைப பொழுதினில் மேற்றிசையில் — வரும்
    மாணிக்கப் பரிதி காட்சி தரும்!
    வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் – “உயர்
    வெறபென்று” சொல்லி வரைக என்னும்
    கோலங்கள் யாவும் மலைமலையாய்
    கூவின என்னை! இவற்றிடையே

    இன்னலிலே தமிழ்நாட்டிலே — யுள்ள
    என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
    அன்னதோர் காட்சி இரக்கமுணடாக்கி — என்
    ஆவியில் வந்து கலந்ததுவே!
    இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்

    இவ்வளவு சிக்கல்களில் தன் இனம் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஏடுதான் என்ன செய்யும்? எழுதுகோல்தான் என்ன செய்யும் என்பது பாவேந்தர் சிந்தனை. உலகத்து இன்பங்களையெல்லாம் தன் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் கொள்ளை கொள்ளும் மழலையின் சிரிப்புக்கு முன்னே உலகத்து உயிர்களைக்கவனிக்கவே நேரமில்லை முத்துசாமிக்கு! தாய்மொழிவழிக்கல்வி பாவேந்தர் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டதைப்போல மழலையின் சிரிப்பு முத்துசாமியின் இதயத்தை ஆட்கொண்டது. கவிஞர்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள்.

    நிறைவுரை

    நகல் எடுப்பது என்பது வேறு. தாக்கம் என்பது வேறு. முன்னது போலித்தனம். பின்னது மரபுவழிப் பயணம். முன்னது அறிந்து செய்வது. பின்னது தானே படிவது!. சமுதாய நிகழ்வுகளிலும் இயற்கை அசைவுகளிலும் மனம் பறி கொடுக்காத எவரும் கவிதையாக்கத்தில் வெற்றி பெற இயலாது. பாவேந்தரும் முத்துசாமியும் இயற்கையில் மனம் பறிகொடுத்தவர்கள்.  அவருள் ஒருவருக்கு இனப்பற்று மிகுந்திருந்த காரணத்தால் இயற்கையின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலவில்லை. மற்றவருடைய மனம் மழலையில் இலயித்துப் போனதால் இயற்கையைக் கவனிக்க நேரமில்லை. இரண்டு கவிஞர்களும் இயற்கையை முன்னிறுத்தித் தாம் சொல்ல வந்த கருத்துக்களைக் கவிதையாக்கியருப்பதுதான் சிந்திக்க வேண்டியது. இயற்கை சங்க இலக்கியங்களைப் பாதித்தது. பின்னாலே பாவேந்தரைப் பாதித்தது. அதற்கும் பின்னாலே முத்துசாமியைப் பாதித்திருக்கிறது!. இந்தப் பாதிப்புக்களைப் பாவேந்தர் சமுதாயச் சிக்கலோடும் முத்துசாமி மழலையோடும சார்த்திப் பாடியிருக்கிறார்கள். முத்துசாமியின் முகநூல் பதிவு  என்னைப் பாவேந்தர் பக்கம் அழைத்துச் சென்றது. இயற்கை அவர்களை அழைத்தும் அவர்கள் கவனிக்கவில்லை. இயற்கையைப் போற்றிப் பாடினாலும் இனிக்கிறது! அதனை மறுதலித்துப் பாடினாலும் இனிக்கிறது!  கனத்த இதயத்திற்குக் கருணை காட்ட இவற்றைவிட வேறு என்ன வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! –  27

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

    மாதவரத்தார் நனைத்த மழை!

    முனைவர் ச.சுப்பிரமணியன்

     

    முன்னுரை

    வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல்  பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள்.  அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழிலக்கணத்தில் மழை

    நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது.  கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.

    1. ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”

     

    1. ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)

    இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.

    பத்துப்பாட்டில் மழை

    அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம்.  சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத்  தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை  கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம்  கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.

    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)

    கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.

    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
    கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    எட்டுத் தொகையில் மழை

    எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை.  நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

     

    முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ

    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

    “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
    “பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.

    பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்

    என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

    பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்

    என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

    என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது.  கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.

     

    சிலப்பதிகாரத்தில் மழை

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக  அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

    மேல் நின்று தான் சுரத்தலான்!”

     

    என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.

    பாவை இலக்கியங்களில் மழை

    மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

    “ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
    ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய்”

    எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.

    மகாகவியும் மழையும்

    தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்

    “திக்குகள் எட்டும் சிதறி தக்கத்

    தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

    பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட

    தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்

    சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு

    தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட

    தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட

    வெட்டியடிக்குது மின்னல் – கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

    கொட்டியிடுக்குது மேகம் – கூ

    கூவென்று விண்ணைக் குடையுது காற்று

    சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

    தாளங்கொட்டிக் கனைத்தது வானம்

    எட்டுத் திசையும் இடிய மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

     

    அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான்.  ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன்.  சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.

    புதுக்கவிதைகளில் மழை

    மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    நீ இல்லாத இடத்தில்
    கருகி போயின விவசாயம்..
    நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
    விவசாயம்!
    நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”

    என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.

    “அடைமழையைக் கண்டு

    ஆனந்தம் கொள்ளாமல்

    தவிக்கிறது

    அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”

     

    கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!

    “கண்ணாடிப் பூக்களாய்

    மண்மீது உடைகின்றாய்!

    கண்மூடித் திறக்குமுன்னே

    காணாமல் மறைகின்றாய்!”

     

    என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.

    “இப்போதெலலாம்

    எப்போதாவது பெய்யும் மழையால்

    காளான்கள் கூட முளைப்பதில்லை

     

    விளைச்சலுக்குப் பயன்படாமல்

    வீணே கொட்டித் தீர்க்கும்

    மழையில்

    ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன

    கவிதைகள்!

     

    அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்

    பொருள் போல

    மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது

     

    பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது

    மழையின் பயணத்திட்டத்தில்

    அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”

     

    திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து  கொள்ளலாம். அருமை!

    மருதகாசி நனைந்த மழை

    மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.

    1. “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே

    துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”

    1. “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
    2. “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”

    மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

    அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்

    அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான்  பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.

    “காற்றுக்குக் கண்ணில்லை! அது

    புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!

     

    மேலே வந்தவுடன்

    புகைக்குத் தலைகால் புரியவில்லை!

    அது சூரியனையும் சந்திரனையும்

    கர்வத்தோடு பார்த்தது!

     

    நானும் உங்களைப் போன்றவன்!

    இனிமேல் உங்கள் ராஜவீதியில்

    நானும் பவனி வருவேன் என்றது

     

    அது  மேகத்தைப் பாரத்துச் சொன்னது!

     

    “உன்னைப் போலவே உயரம்!

    உன்னைப் போலவே நிறம்!

    உன்னைப் போலவே உருவம்!”

    இனிமேல் நானும் மேகந்தான் என்றது

     

    புகையை மேகம் என்று நம்பிய

    சில முட்டாள் மயில்கள்

    தோகை விரித்தாடின!

     

    மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு

    மழையாய் இறங்கியது!

     

    நனைந்து சிலிர்த்த பூமி  சொன்னது!

    பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!

    கீழே இறங்குவதிலே இருக்கிறது!

     

    மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

     

     

     

    வசந்தராசன் கவிதைகளில் இயற்கை

    கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார்.  எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

    வானத்தைச் சுருட்டி

    முற்றத்தில் விரித்தேன்

    வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!

     

    என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!

    வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?

    வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?

    மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?

    மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?

    வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?

    பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “

     

    என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.

    மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்

    முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்

    தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே

    தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!

    சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!

    சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!

    நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்

    நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”

     

    என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து.  இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான  ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    காம்பணிந்த வெளவால்கள்

    ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும்கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும்நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும்  மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலைவசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க

     

    மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம்.  கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.

     

    ‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’

     

    குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,

     

    “கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”

     

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.

    முகம் திருத்தும் செடிகொடிகள்

     

    புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான்.  ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும்.  செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.   

     

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

     

     

    என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்!  எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.

     

    தசைப்பிடிப்பும் மின்னலும்

     

     

    இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்

     

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

     

    மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.

     

    மண் செய்த மாதவம்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிதுஎன்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.

     

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”

     

    மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.

     

    மழை நனைந்த மண்மகள் கோலம்

     

    மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு.  மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “

     

    என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்

     

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது.  மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர்.  “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!

     

    கற்பனைக் களஞ்சியம்

    பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த  நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

     

    மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!

     

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

     

    மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது.  காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

     

    தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

     

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

     

    அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

     

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

     

    மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்  சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “

     

    ‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!

     

    நிறைவுரை

     

    மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு   கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில்  தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 26

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    கவிஞர் சுப. வீரபாண்டியனின் ‘எதுவாக இருக்கும்?’ – கவிதை நூல் பற்றிய திறனாய்வு

    சமுதாயப் போர்க்களத்தில் எதிர் நீச்சல் போடுவது அவ்வளவு சாதாரணமானதன்று. சிலருக்கு அதுவே பிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.. அவர்களிடத்தில் மறைந்து கிடக்கும் பிற ஆற்றல்கள் அவ்வப்போது தோன்றி மறையும் அல்லது வந்து போகும். பேரறிஞர் அண்ணாவின் உள்ளம் கவிதை உள்ளம்;. யாராவது ‘கவிஞர் அண்ணா’ என்று கூறியதுண்டா? இது அவர் எழுதிய எழுபத்தோரு கவிதைகளிலிருந்து அறியக் கூடிய உண்மையாகும். ‘காதல் ஜோதி’ என்னும் திரைப்படத்தில் “உம்மேல கொண்ட ஆசை உத்தமியே மெத்த உண்டு” என்ற பாடல்தான் அண்ணா எழுதிய ஒரே திரையிசைப்பாடல். அந்தப் பாடலில் அவருடைய மென்மையான உள்ளத்தைக் காணலாம். கண்ணதாசன், கலைஞர், ஜீவா முதலியோரும் இந்த நிரலில் வருவார்கள். அவர்கள் ஓய்வெடுக்கிற மண்டபமாக அல்லது சோலையாக இருப்பது கவிதைப் பணியே. இந்த நிரலில் அண்மைக்காலத்தில் இணைந்திருப்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள். அவர் எழுதித் தொகுத்த ‘எதுவாக இருக்கும்?’ என்னும் சிறு கவிதை நூலை நான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நூல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது இந்தக் கட்டுரை.

    நூல் கட்டுமானம்

    அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள், வாழ்க்கைச் சிக்கல்கள். தனிமனிதக் காதல் உணர்வுகள் முதலிய பாடுபொருள்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மூன்று பகுப்புக்களைக் கொண்டது. 1972 தனியாகவும் 2002 முதல் 2006 வரை அடுத்த பகுதியாகவும். 2006க்குப் பிறகு இறுதிப் பகுதியாகவும் அமைந்துள்ளது:.. பாரதிதாசன், கண்ணதாசன் முதலியோர்தம் பதிவுகளில் காணப்படும் முரண்களையும் அவற்றிற்கான காரணங்களையும் புரிந்து கொள்வதுபோல் இந்தக் காலமுறைப் பகுப்புக்கள் உதவும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் இவர் மாணவப் பருவத்திலிருந்தே முரண்படாத பகுத்தறிவுச் சிந்தனைவாதியாகவே வளர்ந்து வந்துள்ளார். மொழிநடை, பாடுபொருள் களம், கட்டுமானப் பரிமாணம் மற்றும் உத்திகளில் அமைந்திருக்கும் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்தப் பகுப்புக்கள் கொஞ்சம் உதவக்கூடும். உத்தி சிறக்காத எந்தக் கவிதையையும் நான் பொதுவாகத் திறனாய்வு செய்வதில்லை. காரணம் அவை என்னை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. எனவே பொதுவாக அமைந்த சில கவிதை வெளிப்பாடுகள் பற்றிய திறனாய்வு பின்வரும் பத்திகளில் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது..

    எதுவாக இருக்கும்?

    ‘எதுவாக இருக்கும்’ என்பது இந்த நூலின் இறுதிக் கவிதையாகக் கோக்கப்பட்டுள்ள்து.

    எதுவாக இருக்கும்
    என் கடைசிப் பயணம்?
    எதுவாக இருக்கும்
    என் கடைசி மேடை?
    எதுவாக இருக்கும்
    நான் படிக்கப் போகும் கடைசிப் புத்தகம்?
    சொல் தோழி!
    எதுவாக இருக்கும் நம் கடைசிச் சந்திப்பு?

    கவிஞர் அனைவரையும் போலவே சுபவீ அவர்களையும் காதல் அலைக்கழித்துத்தான் உள்ளது. ‘சீதையைக் கண்டேன்’ என்றால் அது உரைநடை. ‘கண்டணன் கற்பினுக்கு அணியைக கண்களால்’ என்றால் அது கவிதை. தொடரில் அமையும் ஒரு எளிய மாற்றம் இந்த ரசவாதத்தைச் செய்துவிடும். இந்த மாற்றம் இயல்பாக அமைதல் வேண்டும். இறுதியில்  நிற்கவேண்டிய வினை முன்னால் நின்று செயப்படுபொருள் தொடர்ந்து வந்தால் உரைநடை கவிதையாகி விடும்.. ‘சொன்னது நீதானா?’ என்றால் அது கவிதை. ‘நீதான் சொன்னாயா?’ என்றால் அது வினாத் தொடர். ‘நான்’ என்பது வேற்றுமையில் ‘என்’ என்று வேறுபடும். உவமங்களாக நின்று பொருளுணர்த்த வேண்டியவைகளை உணர்ச்சிவழி ஏக்கங்களாக வெளிப்படுத்தும் உத்தியினால் சிறக்கின்ற தொடர்கள். புத்தகங்களும் பயணங்களும் மேடைகளுமே வாழ்க்கையாகிப் பழகிப்போன  ஒருவனுக்குக்  கைகாட்டியாக எப்போதாவது தோன்றுவதுதான் காதல். அதனால்தான் பாட்டு தோழியைப் பார்த்துத்தான் அமைந்திருக்கிறது. மூன்று ஏக்கங்களைத் தன்னுள்ளே செறிததுக் கொண்டு கேட்க வேண்டிய இறுதி வினாவைத் தோழியைப் பார்த்துக் கேட்பதாக அமைந்துள்ளது. எதுவாக இருக்கும் ‘நம் கடைசிச் சந்திப்பு?’ என்பது எங்கே நடக்கும் அது என்பதையும் உள்ளடக்கி நிற்கிறது. ஒருமையில் மற்றவற்றைக் கேட்ட கவிஞன் ‘எதுவாக இருக்கும் என் சந்திப்பு? என்னாமல் ‘எதுவாக இருக்கும் நம் சந்திப்பு?’ என்பதால் காதல் உள்ளத்தின் பரிமாணம் புலப்படுகிறது. ‘நான்’  என்பது ‘நாம்’. ஆவதுதானே காதல்? ‘கடைசி’ என்பதனாலேயே இந்தப் பாட்டும் நூலின் கடைசியில் வைக்கப்பட்டிருக்குமோ?

    உம்மையும் உத்திதான்

    கவிதை இயற்கை. செயற்கையன்று. இயற்கை ஒரு புதிர் ஆதலின் நுண்ணியம் அதன் இயல்பு. இயல்பாக அமைந்துவிடும் கவிதைகளில் எல்லாமே நுட்பமாக அமைந்துவிடும். அறிவு நிலையிலிருந்து முற்றுமாக விலகி உணர்வு நிலையில் இருந்து படைக்கப்படும் எல்லாக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகன் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். அந்தத் ‘தாய்மொழியில் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் சுபவீ

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    அன்றைக்குத் தன்னைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலை எண்ணி மருகுகிறாள். அந்தத் தாய். ஒரு வேளை பணிக்குச் சென்றிருந்த காலத்தில் அவள் பாடிய  ‘அவசரத் தாலாட்டு’ அவள நினைவுக்கு வந்திருக்கலாம். அதனைத் தற்போது எண்ணிப் பார்க்கிறாள். தனக்கு ஒரு நியாயம் தன் மகனுக்கு ஒரு நியாயம் எனக் கருதுவதற்கு அவள் மனம் ஒப்பவில்லை. இரண்டையும் ஒன்றாக்கித் தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்கிறாள். புதுக்கவிதையாக இருந்தாலும் வாய்விட்டுச் சொல்லிப் பாரத்தால் கவிதைக்குள் தாயின் வேதனை ஒடுங்கிக் கிடப்பதைக் காணலாம்.

    இந்தப் பாட்டில் ‘உம்’மை விடுபட்டுப் போனது அவலத்தின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. தொடர்வினைகள் கவிதைகளில் இடம்பெறும்போது உம்மைகள் வெளிப்பட நிற்பதுதான் முறை. கவிதையுள் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சி அப்போதுதான் முழுமையாக வெளிப்படும். சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவியைக் காணும் தலைவன் பாடுவதாக அமைந்தது.

    “நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப்
    போதர விட்ட நுமரும் தவறு இலர்

    நிறைஅழி கொல்யானை நீர்க்குவிட் டாங்கு

    பறையறைந்து அல்லது செல்லற்க என்னா
    இறையே தவறுடையான்’”

    இந்தப் பாட்டில் தலைவியோ அவள உறவினரோ தவறு செய்யவில்லை. மதம் கொண்ட யானை தெருவில் நடப்பதை எச்சரித்துச் ‘செல்ல வேண்டாம்’ எனச் சொல்லாத மன்னனே தவறுடையான் என்று குறிப்பிடப்பட்டுள்ள்து. ‘நீயும்’ என்ற உம்மையும் ‘நுமரும்’ என்ற உம்மையும் பாட்டின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதைக் காணலாம். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பன் தமிழ். ‘அண்ணலும் அவளும் நோக்கினர்’ என்று எழுதியிருந்தால் காட்சி கவிதையாகியிருக்காது.

    தந்தை பெரியாரைப் பற்றிய கவிதையொன்றில் பாவலர் பாலசுந்தரம் ஆதங்கத்தோடும் ஆர்வத்தோடும் இந்த உம்மைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

    “சங்குகள் நிறமும் மாறி
    சந்தனம் மனமும் மாறி
    செங்கதிர் திசையும் மாறி
    தெங்குநீர் குளிரும் மாறி
    திங்கள் தண் நிலையும் மாறி
    தெவிட்டமு தினிப்பும் மாறி
    சங்கமும் மாறி னாலும்
    தந்தை சொல் வாளும் நாளும்

    பின்னாலே வந்த திரையிசைப்பாடலில் இவற்றைத் தழுவி கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை”

    இப்படி அமைந்தால்தான் கவிதையின் உயிர்ப்பு நிலைக்கும். இதனை உன்னைச் சொல்லியோ என்னைச் சொல்லியோ குற்றமில்லை என்றால் வெறுந்தொடர்தான் நிற்கும். எனவே

    “அன்று
    உன் தொட்டிலை ஆட்ட
    எனக்கும்
    நேரமில்லை!
    இன்று
    முதியோர் இல்லத்தில்
    வந்து பார்க்க
    உனக்கும்
    நேரமில்லாமல் போய்விட்டது”

    என்று அமைந்திருந்தால் இன்னும் சிறந்திருக்கும். இப்படிச் சொல்வது  படைப்பாளனின் படைப்புரிமையில் தலையிடுவதாகாது. கரும்புச் சாறு பருகுகிறபோது கோது பல்லிடுக்கில் குத்தக்கூடாது அல்லவா? எளிய மக்கள் பேறு பெறுவதைப் போலவே எளிய கவிதைகளும் பேறு பெறுகின்றன. எதிரது தழுவியது, இறந்தது தழுவியது என்றெல்லாம் இலக்கணத்தில் குறியிடப்படும் இந்த உம்மை கவிதையில் ஏக்கத்தைத் தழுவி நிற்கும்.

    கவிதை நோக்கு

    எது பற்றிக் கவிதை வரும்? கொடுமுடியைப் பற்றியும் வரும். குண்டூசியைப் பற்றியும் வரும். கவிதை பொருளிலே இல்லை. பொருளைக் காண்பவனின் உள்ளத்தில் இருக்கிறது. ‘உள்ளத்தில் உள்ளது கவிதை’ என்பதன் பொருள் இதுதான். பலாப்பழத்தைப் பற்றிக் கசப்பான கவிதைகளும் உண்டு. பாகற்காய் பற்றி இனிப்பான கவிதைகளும் உண்டு.

    “சிறைகளைத் தாங்கும் ஆயுதம் கவிதை!
    சிறுகை அளாவிய கூழும் கவிதை!
    காதலைச் சொல்லும் கண்களை விடவும்
    சாதியைக் கொல்லும் காதல் நற்கவிதை!
    பிழைக்க வந்தவர் பொன்னிற மன்று
    உழைத்துக் கறுத்தவர் உடலே கவிதை!
    யாழின் இசையும் கவிதை என்றாலும்
    வாளும் வேலுமே களத்தில் கவிதை!
    கண்ணீர் கவிதை! புன்னகை கவிதை!
    கண்ணகி கொண்ட கோபமும் கவிதை!
    சின்ன ஊரின் அழகு மட்டுமா?
    சென்னை நகரின் நெரிசலும் கவிதை!
    கூடி வாழும் குடும்பமும் கவிதை!
    தேடிக் கொள்ளும் தனிமையும் கவிதை!
    கொஞ்சிப் பேசும் மொழியைக் காடடிலும்
    நெஞ்சில் தைக்கும் சொற்கள் கவிதை!
    அடிமைப் படாத வாழ்க்கை கவிதை!
    அடிமை வேண்டா மனம் உயர் கவிதை!
    நெஞ்சில் ஈரம் எதுவுமில் லாமல்
    வஞ்சக மாக வாழ்ந்து வாழ்ந்தே
    ஆகும் வரையில் அனுபவிப் போர்க்குச்
    சாகும் வரையில் கவிதை வராது!”

    கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்பதுதான் இந்தக் கவிதையின் உள்ளடக்கம்.. கவிதை உத்தியால் சிறப்பது. இலக்கிய வடிவங்களுள் கவிதை தனித்து நிற்பதற்கு இந்த உத்திச் சிறப்பே தலையாய காரணம். படைப்பாளனைப் பொருத்தவரையில் “வஞ்சகமாக வாழ்ந்து ஆகும் வரையில் அனுபவிப்போர்க்குச் சாகும் வரையில் கவிதை வராது” என்று சொல்லுவது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை. ‘எது கவிதை’ என்று யார் யாரோ எத்தனையோ நூல்களில் எதையெதையோ எழுதியிருக்கிறார்கள். இந்தக் கவிதை அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி ஓர் ஆராய்ச்சிக் கவிதைபோல் அமைந்துள்ளது. கவிதை என்பது யாப்புக்குள் அமைவது என்னும் நெறியற்ற புரிதலைப் புறந்தள்ளிச் செழுமையான கவியுள்ளத்திலிருந்து பிறப்பதே கவிதை என்னும தெளிவை இந்தக் கவிதை தந்திருக்கிறது. ‘தேமா புளிமா வாய்பாட்டுக்குள் தேங்கி நிற்பது கவிதையாகும்” என்று சுபவீ சொல்லாதது எனக்கு சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!

    இந்த வாழ்க்கைதான் என்றைக்கும் உரிய்து .

    மரபுக்கவிதை என்றால் மரபார்ந்த சிந்தனைகளின் தொடர்ச்சியே. அது வெறும் யாப்புத் தொடர்ச்சியன்று. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சிலருள் சுபவீயும் ஒருவர். ‘இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்பது பழந்தமிழர் பண்பாடு.  இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” என்பது வள்ளுவம்.

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை. !
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”

    என்பது வாழ்வைப் பற்றிய கண்ணதாசன் பார்வை. இதுதான் மரபுக்கவிதை. ‘வாழ்வியல் துன்பங்களை இயல்பென்று உணர்வதும்’ அவற்றை மனஉறுதியால் புறங்கண்டு வெல்லுவதும் முள்ளுக்குள் மலராக வாழ்வைச் சுவைக்க முயல்வதுமான சிந்தனையே தமிழர் சிந்தனை. இந்தச் சிந்தனையை மீட்டுருவாக்கம் செய்து சுபவீ எழுதியிருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

    வாழ்க்கை முழுவதும்
    துன்பத்தின் சாயல் படிந்தே கிடக்கிறது!
    வாழ்நாள் முழுவதும்
    வலிகள் நிறைந்தே இருக்கின்றன!
    உறவுகள் சூழ வாழ்ந்தும்
    ஒரு தனிமை உள்ளே நிலைக்கிறது!
    வெளிச்சக் காட்டிலும்
    இருளின் அச்சம் இருக்கவே செய்கிறது.!
    இருந்தாலும் என்ன
    இந்த வாழ்க்கையைப் போல்
    இன்னொரு வாழ்க்கை உண்டா
    நாம் கொண்டாடுவதற்கு?

    இது ஆன்மீகத்தைப் பினபற்றும் ஒரு சனாதனக் கவிஞர் எழுதியதன்று.  நடப்பியலைப் புரிந்து கொண்டு எந்தத் தனிமனிதச் சிக்கலுக்கும் சமுதாயச் சிக்கலுக்கும்  போராடுவதுதான் ஒரே வழி என்னும் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்ட திராவிட இயக்கக் கவிஞர் ஒருவரின் அருமையான கவிதைப் பதிவு.

    விடைகளால் நிரம்பியிருக்க வேண்டிய இந்த வாழ்க்கை புதிர்களால் நிரம்பியிருக்கிறது.  முப்பத்திரண்டு பற்களால் சிரிப்பதைவிட இரண்டு கண்களால் அழுகிற நாள்களே அதிகம். நமக்கு நன்றி செலுத்துபவர்களைவிட நம்முடைய நன்றிக் கடன்களே அதிகம். இதயத்தில் நான்கு அறைகள்தாம். ஆனால்  நாலாயிரங்கோடி ஆசைகள். சுபவீ எழுதுகிறார்.

    “விடை தெரியாத கேள்விகளோடும்
    நிறைவடையாத ஆசைகளோடும்
    எழுதி முடிக்காத எண்ணங்களோடும்
    அடைபடாத நன்றிக் கடன்களோடும்தான்
    முடியப்போகிறது நம் வாழ்க்கை!
    இன்னும் பல்லாண்டுகள்
    இம்மண்ணில் நாம் வாழ்ந்தாலும்!

    தொடுவானமாய் வளரும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் தேவைகளும் ஆசைகளும் கடமைகளும் பிறவும் வரையறுக்கப்பட்ட வாழ்நாளை எகிறியடிக்கின்றன. எல்லா வினாக்களுக்கும் விடையெழுதிய மாணவன் இல்லை. எல்லா ஆசைகளையும் அனுபவித்தவனும் இலலை. துறந்தவனும் இல்லை. இதயத்து எண்ணங்களையெல்லாம் அப்படியே எழுத்தில் கொட்டிய எழுத்தாளன் எவனும் கிடையாது. விடுபட்டுப்போன நன்றிக் கடிதங்கள் எத்தனையோ? இந்த வாழ்க்கை முரண்களின் தொகுப்பு.

    “நாளது சின்மையும் இளமையது அருமையும்
    தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும்
    அன்பினது அகலமும் அகற்சியது அருமையும்
    இன்மையது இளிவும உடைமையது உயர்ச்சியும்
    ஒன்றாப் பொருள் வயின் ஊக்கிய பாலினும்”

    என்பார் தொல்காப்பியர். இந்த முரண்களுக்கிடையே ‘வந்து பிறப்பதும் வாழ முயல்வதும் வாழக் கற்றுக் கொள்ளுவதும் அவற்றுக்கான காரணங்களைத் தேடிய களைப்பிலேயே முடிந்துபோவதுமே வாழ்க்கை’ என்னும் இந்த வரிகளில் ஒருவகை ஏக்கமும் ஏமாற்றமும் தென்படுகிறது. ஒரு போராளி மனத்துள் புதைந்து கிடக்கும் ஆயிரம் எண்ணங்களுள் இதுவும் ஒன்று போலும்! போராளிக்கும் இதயம் உண்டுதானே!

    போய் வா மகளே!

    கண்ணதாசன் எழுதிச் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஒரு திரையிசைப் பாடலின் பல்லவி ‘போய் வா மகளே போய் வா’ எனத் தொடங்குகிறது.. அது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒருத்தியை வழியனுப்புவதாக அமைந்தது, அந்தப் பல்லவியில் மனம் பறிகொடுத்த கவிஞர் அதனைத் தான் எழுதிய ஒரு பாட்டுக்குத் தலைப்பாக வைத்துள்ளார்.

    சங்க இலக்கிய அகப்பாடல்கள் இலக்கியத் துறைகளை அடியொட்டித் திட்டமிட்டு எழுதப்பட்டன. ஆனால் புற இலக்கியங்கள் அவ்வாறின்றி வரலாற்று நிகழ்வுகளையும் சமுதாயத்து அன்றாட நிகழ்வுகளையும் சித்தரிக்கும் பான்மையுடையவை. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்றால் அது கற்பனையன்று. பறம்பில் நடந்த ஒரு சோக நிகழ்வு. ‘வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே!’ என்றால் அது கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

    இந்த நெடிய மரபில் வந்தவர் கவிஞர் சுபவீ. அதனால்தான் பொடா தடைச் சட்டத்தில் அவர் சிறையிலிடப்பட்டபோது தன்னைப் பார்க்கப் பேரனோடு வந்த மகளை வழியனுப்பி வைத்த நிகழ்ச்சியைக் கவிதையாக்கியிருக்கிறார்.

    கவிதைக்காக அந்த நிகழ்ச்சியன்று. நிகழ்ச்சி கவிதையாக வெளிப்பட்டுள்ளது.

    போய் வா மகளே புறப்படு மகிழ்ச்சியாய்!
    சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் போதுதான்
    கைக்குழந்தையாய்க் கண்டேன் உன் மகனை!
    வெளியில் நான் வருவதற்குள்
    நீங்கள் வெளிநாடு புறப்படுகின்றீர்கள்!

    நீ பெற்றிருக்கும் காதல் பரிசைக்
    கணவருக்குக் காட்ட வேண்டுந்தானே!

    இங்கே மகளைப் பிரியும் பெற்றோரைக் காட்டிலும்
    அங்கே மகனை எதிர்பார்த்திருக்கும்
    தந்தையின் தவிப்பு தனித்துவமானது

    என்னதான்
    உலகை நேசிக்கும் உள்ளம் விரும்பினாலும்
    என் பேரன், என் பேத்தி, என் சதை, என் இரத்தம்
    என்னும் உணர்வுகள்
    எம்மை ஆட்டித்தான் படைக்கின்றன
    போய் வா மகளே! புறப்படு மகிழ்ச்சியாய்!

    ஆழமான உணர்வுகளைக் கடினமான சொற்களால்தாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நியதி இல்லை. எளிய சொற்களும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்த்லாம் ஏழையின் கண்ணீர்போல!. இதற்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. உறவுகளில் ஊசலாட்டம் சமுதாயப் போராளிகளுக்கும் உண்டு என்னும் இயற்கையைப் பாடியிருக்கும் சுபவீ ஒரு சோக ராகத்தையே மீட்டியிருக்கிறார். மீண்டும் பதிவு செய்கிறேன். ஒரு திராவிட இயக்கக் கவிஞரின் படைப்பு வளையததிற்குள் வராத பாடுபொருள் இது. காரணம் அது மரபு சார்ந்து அமைந்ததுதான்.

    சிறைச்சாலையில் கவிதை எழுதியவர்கள் உண்டு. வரலாற்று நூல்கள் எழுதியவர் உண்டு. நிரம்பப் படித்தவர்கள் உண்டு. தன்னைச் சந்தித்தார் பற்றிய சரித்திர நிகழ்வுகளை சுபவீ போலக் கவிதையாக்கியிருப்பவர் சிலரே. கல்லுக்குள் ஈரம் என்பதைப் போலச் சொல்லுக்குள் சோகம் பாடியிருக்கிறார் சுபவீ. ஒரு நிமிடம் அந்தச் சிறைச் சூழலை எண்ணிப்பாருங்கள்! நொறுங்குவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு இதயம் சுக்கு நூறாகிவிடும். போராளிகளின் புலம்பல் என்று புரியாதவர்கள் சொல்லக்கூடும். காரணம் அவர்கள் கவிஞனின் இதயத்தோடு உறவாடத் தெரியாதவர்கள்!

    மகள் வயிற்றுப் பேரனை வழியனுப்பிய கவிதை அப்படி அமைந்தது என்றால் இன்னொரு சிறைச் சூழலில் தன் மகன் வயிற்றுப் பேத்தியைக் கொஞ்சும் பேறும் அவருக்குக் கிட்டியது. தன பாட்டனைச் சிறையில் காணும் பேறுபெற்றவர்கள் அந்தப் பேரப்பிள்ளைகள். மெய்யால் தீண்டுதலும் இன்பம் மழலையர் சொல் செவியால் கேட்பதும் இன்பம் என்பதற்கேற்ப அவ்விரண்டையும் சில நொடிகள் சிறைவாசலில் அனுபவித்த கவிஞன் எழுதுகிறான்.

    கறுப்பென்ன வண்ணத்தில் தப்பா? – நீ
    கறுப்பில்லை என்பான் உன் அப்பா!
    கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்! – கட்டிக்
    கரும்பென்றே உன்னை அள்ளிக் கொள்வோம்!

    தாத்தாவைச் சிறைவந்து பார்த்தாய்! – என்
    தனிமையினைச் சில நிமிடம் தீர்த்தாய்!
    மூத்தாலும் வயதினிமேல் குறையும் – உன்
    முத்தத்தில் என் நெஞ்சம் கரையும்”

    இவ்விரண்டு கண்ணிகளும் முழுக்கவிதையின் பகுதிகள் ‘கறுப்புத்தான் அழகென்று சொல்வோம்!’ என்று தன் கொள்கைக் குண்டூசியைக் குழந்தைக்கு வலிக்காமல் குத்தியிருக்கிறார்.  குழந்தை என்றவுடன் யாப்பில் சிந்து முன் நிற்பது வள்ளலார் மரபு. பாரதியும் பாரதிதாசனும் வெற்றிபெற்றது மழலைச் சிந்துகளால். பெரும்பண்டிதர்கள் எழுதிய பிள்ளைத் தமிழ் எலலாம் படுதோல்வி அடைந்ததற்குக் காரணம் பிள்ளைகளுக்கே அவை புரியாமல் போனதுதான்!

    உப்பா? சர்க்கரையா?

    தனிமனிதக் குடும்ப வாழ்வின் அனுபவங்கள் வேறு. பொதுவாழ்வின் அனுபவங்கள் வேறு.  முரண்களால் முடையப்படடவையே அவ்விரண்டும்.  ‘இருவேறு உலகத்தியற்கை’ என்பது வள்ளுவம். முரண்கள் இயற்கை. செயற்கை அன்று. இந்த முரண்களில் ஒற்றுமையைப் பார்க்கிறவன்தான் கவிஞன். சிரிப்பவர் சிலர். அழுபவர் சிலர். இரண்டும் முரண்கள். ஆனால் கவிஞன் சிரித்துக் கொண்டே அழுகிறான். அல்லது அழுதுகொண்டே சிரிக்கின்றான். பொதுவாழ்க்கையிலும் முரண்களே முன்களப் பணியாளர்கள். பதவி வரும்., போகும். போராட்டத்தில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு.  எனவேதான போராளிகள் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் களப்பணி ஆற்றுவதையே கடமையாகக் கொள்கிறார்கள். பலமுறை பல காரணங்களுக்காகச் சிறை சென்றவர் சுபவீ. ஒரு காரணமும் சொந்தக் காரணம் அல்ல. சமுதாயக் காரணமே. சிறை தந்த சில அனுபவ முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் இந்த நூலில்.

    “சிறையிலும் உண்டு
    சுதந்திர நாள் கொணடாட்டம்!

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    ஒரு புறம்
    பிரிவு, தனிமை, முடக்கம்!
    மறுபுறம்
    படிப்பு எழுத்து சிந்தனை!
    சிறை உப்பா சர்க்கரையா?”

    சுதந்திரத்திற்கு எதிர்ச்சொல் சிறை. ஆனால் சிறையிலும் சுதந்திரத் திருவிழா கொணடாடுகிறார்கள். எத்தகைய முரண்? புனல்கடந்து பொருள தேடச் செல்வான் தலைவன். ஆனால் பாலைத்திணை தலைவிக்குத்தான்!. தலைவியை எண்ணித் தலைவன் புலம்புவதாக ஒருபாடல் கூடத் தமிழில் இல்லை.

    என் மனைவிக்கு எழுதினேன்!
    சிறை எனக்கு!
    தண்டனை உனக்கு!

    என்றெழுதுகிறான் கவிஞன். மரபின் வேர் என்பது இதுதான். இதனையே சங்கப் புலவன் எழுதியிருந்தால்

    பிரிந்தவன் நான்!
    அழுதவள் நீ!

    என்றல்லவா எழுதியிருப்பான்? ஒரு புறம் தனிமனிதனை வாட்டும் தனிமை, பிரிவு, முடக்கம். மறுபுறம் ஒரு போராளியைச் செதுக்கும் படிப்பு, சிந்தனை, எழுத்து.  இந்த முரண்களால் ஆனது சிறை. இரண்டு வகை அனுபவங்களும் சிறை தருகிறது. இறுதியாக வினவுகிறார்

    “சிறை உப்பா? சர்க்கரையா?”

    படித்தவர்கள்தாம் சொல்ல வேண்டும், இந்தக் கவிதை உப்பா? சர்க்கரையா? என்று!

    நிறைவுரை

    எதுவாக இருக்கும்? என்னும் தலைப்பில் ஐம்பது கவிதைகளைக் கொண்ட இந்த நூலில் என்னைக் கவர்ந்த அத்தனைக் கவிதைகளையும் நான் இங்கே சுவைத்து ஆராய்ந்து பதிவிடவில்லை. கட்டுரையின் அளவு கருதியும் காலம் கருதியும் ஒரு சிலவற்றைப் பற்றி மிகச்சுருக்கமாகவே பதிவு செய்திருக்கிறேன். இவருடைய நூல்கள பலவற்றையும் நான் படித்து அவருடைய பன்முக ஆற்றலையும்  ஆழங்கால்பட்ட அறிவுத் தெளிவையும் அறிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய இரண்டாவது கவிதை நூலாகிய இதனை நான் மேலெழுந்த வாரியாகப் படித்தபோது ஒரு போராளிக் கவிஞனின் மறைவிடத்தை அறிந்த கொண்ட மன திருப்தி எனக்கு. எப்போதும் வருவது கவிதை அல்ல! எப்போதாவது வருவதுதான் கவிதை!. அவை கவிஞர் சுபவீயிடமிருந்தும் வந்திருக்கின்றன. பேராசிரியர் சுபவீ விருப்ப ஓய்வு பெற்றவர்.  கவிஞர் சுபவீக்கு விருப்ப ஓய்வு கிடையாது. காரணம் முன்னது பதவி. விருப்பம் போல் துறந்துவிடலாம்  பின்னது படைப்பு. அது ஒருவகைப் பாசப்பிணைப்பு. துறக்க முடியாது படடினத்தாரைப் போல!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 25

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசன் கவிதைகளில் வடிவக் கோட்பாடுகள்

    ஆய்வு முன்னுரை

    கவிதைகளின் யாப்பமைதியை அவற்றின் வடிவம் என்று கூறலாம். தொடைகளும் அவற்றின் விகற்பங்களும் வடிவத்தை நிர்ணயிக்கும் கூடுதல் காரணிகளாகப் பணியாற்றுவதும் உண்டு. இது பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர் பலரும் தங்கள் நுண்மாண் நுழைபுலத்தால் நுண்ணிய செய்திகளையும் கண்டு கூறுவர். பாடலொன்றை எடுத்துக் கொண்டு அதன் பெயர் இனம், தொடை, விகற்பங்கள் முதலியவற்றையெல்லாம் விரித்துக் கூறுவர். இந்தக் கட்டுரையில் அத்தகைய நுட்பமான ஆய்வு முறை மேற்கொள்ளப்படவில்லை. பண்ணை கவிக்கோ வசந்தராசன் அவர்கள் அவ்வப்போது முகநூலில் எழுதி வரும் கவிதைகளின் யாப்பமைதியைப் புதிய நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    1.0. இலக்கிய வடிவங்களும் கவிதையும்

    இலக்கியத்தின் வடிவங்கள் பல. செய்யுள், நாடகம், சிறுகதை, புதினம், புதுக்கவிதை என அவை விரியும். இறக்குமதியான வடிவங்களும் கவிதைகளில் இடம் பெறுவதுண்டு. தமிழைப் பொருத்தவரையில் கவிதையே தலைசிறந்த வடிவமாக எல்லாராலும் ஏற்பளிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில்கூடப், ‘புதுக்கவிதை’ என்னும் வழக்கைப்போல் ‘புதுச்சிறுகதை’, ‘புதுநாடகம்’ என்னும் வழக்கின்மை நோக்குக. புதுமையானதை ஏற்றுக் கொள்ளும் பாங்கும் ஆழந்த உணர்ச்சிகளையும் ஒன்பான் மெய்ப்பாடுகளையும் குறைந்த சொற்களில் வெளிக்கொணரும் சிறப்பும் கவிதைக்கு இருப்பதே ஏனைய வடிவங்களைவிடவும் இது சிறப்பாகக் கருதப்படுவதற்கான காரணங்கள் எனலாம். எனவேதான் கற்பனை, உணர்ச்சி, வடிவம், கருத்து என்னும் இலக்கியக் கூறுகள் பற்றி ஆராயும் ஆய்வாளர்கள் கவிதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

    1.1. கவிதை வடிவங்கள்

    “கலையின் வடிவமே கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்பு படுத்தும் கருவியாகும்” வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா அவற்றின் இனங்கள் எனப் பல்கிப் பெருகிய தமிழில் சிந்துகளும் வந்து கலந்த வரலாறு உண்டு. இவற்றுள் எதிலும் அடங்காத நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் சிலப்பதிகாரம் முதல் இன்றைய புதுக்கவிதை வரை தங்கள் இலக்கிய உரிமையை நிலைநாட்டியிருக்கின்றன. யாப்பே மரபு என்பார் உள்ளத்து இருத்த வேண்டிய இன்றியமையாத செய்தி இது.

    1.2. வடிவத்தின் வரையறை, பயன், இன்றியமையாமை

    உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதை என்பது உண்மையே. ஆனால் அழகான கற்பனையும் பொருத்தமான வடிவமும் அமையாவிடின் கவிதையின் படைப்பு நோக்கம் முழுமை பெற இயலாது. படைப்பவனின் உணர்ச்சியனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு சேர்க்கும் தனித்ததொரு ஊடகமாகச் செயல்படுவது வடிவமே.

    கவிஞர் தன் எண்ணத்தையும் உணர்ச்சியையும் பிறருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சிகளே வடிவமாகும்இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்

    என்பார்கள் அறிஞர்கள். உணர்ச்சிக்கும் கருத்துக்கும் இசைந்த வடிவம் அமையாவிடிலோ அவை தம்முள் மாறுபட அமைந்துவிடிலோ கருச்சிதைவைப் போலப் படைப்புச் சிதைவும் தடுக்க இயலாமற் போய்விடுவதோடு இலக்கியத்தின் வெற்றியும் பெருமளவுக்குப் பாதிப்புக்கு ஆளாகும். “ஓர் இலக்கியம் சிறந்ததா இல்லையா என்பது அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது, ஓர் இலக்கியம் நன்கு அமைந்ததா இல்லையா என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது” மகாகவி பாரதி அனைத்து கவிதை வடிவங்களையும் அறிந்தவர். ஆனால் அவர் பாஞ்சாலி சபதத்தைக் குறிப்பிட்ட வடிவத்தில் எழுதாமல் விருத்தம், சந்த விருத்தம், சிந்து முதலிய வடிவங்களைக் கையாண்டு நிறைவு செய்திருப்பதற்குக் காரணம் உணர்ச்சிக்கேற்ற வடிவம் தர தன்னை இழந்ததுதான்.

    1.2.1. யாப்பின் மந்தணம் ஓசை ஒழுங்கே

    யாப்பு என்பது இயற்றமிழ் இலக்கணம். இசைத்தமிழ் இலக்கணமன்று. எனினும் அதன்கண் நுட்பமாக அமைந்துள்ள ஓசையொழுங்கே அதன் கொடுமுடியாகும். ‘இன்ன சீர்கள் இன்னவாறு அமைந்தால் இன்ன தளைகள் தோன்றும். தோன்றவே இன்ன ஓசை புலப்படும்’ என்பது யாப்பறி கல்வியின் தொடக்க நிலையாகும். குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த பாடல்கள் பலவற்றைப் பலகாலும் பயின்று ஓசையொழுங்கின் அடிப்படையில் பாடல்கள் படைக்கப்படின் அப்பாடல்களில் முறையான தளையும் வரவேண்டிய சீரும் தாமாகவே அமையும் என்பது யாப்பறி கல்வியின் இறுதி நிலையாகும். “யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதையாகும்” என்னும் சுரதாவின் வரிகள் காட்டும் கவிதை அரிச்சுவடி இதுதான்.

    1.2.2. யாப்பும் படைப்பும்

    கலத்தையும் காரிகையையும் மட்டும் கற்றுப் பாடல் எழுதுகிறவர் வெறும் சொற்களைப் பின்னுகிறவராகத்தான் இருப்பர். ஒலி நயத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து கருப்பொருள் பாடுகிறவர் ‘கவிஞராக’ ஒளிர்வர். தமிழ்க்கவிதை உலகைப் பொருத்தவரையில் இலக்கியத்தின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்கக் காலம் தொடங்கிப் “புதுக்கவிதை”யின் பொற்காலம் எனப் புகழப்படும் தற்காலம் வரை இவ்வடிப்படையில் அமைந்த படைப்புக்களே காலத்தை வென்று நிற்கின்றன. இன்றைய கவிதைப் படைப்பாளர் பெரும்பாலோர் மரபுவழி வந்த யாப்பமைப் பாடல்களைப் பாட எத்தனிக்கும்போது அவர்கள் கொள்கிற அச்சமே இதற்குப் போதிய சான்றாகும்.

    பொங்கிவரும் உணர்ச்சிகளைக் கவிதைப் படைப்பாக மாற்ற முயலும் படைப்பாளனுக்கு யாப்புப் பற்றிய தெளிந்த அறிவும், உணர்ச்சிகளுக்கேற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை உணர்வும் பெரிதும் தேவைப்படுகின்றன. நிதானம், பொறுமை, தெளிந்த அறிவு, நிறைந்த பயிற்சி முதலியவை ஒருங்கிணைந்தாலேயொழிய இந்தக் கவிதை வித்தையில் அர்ச்சுனர் ஆவது கடினம்.

    1.2.3. உணர்ச்சியும் வடிவமும்

    யாப்பு உணர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பவர் தமிழ்க்கவிதை மரபையும் வரலாற்றையும் துளியும் அறியாதவரே. புகழேந்திப் புலவர் நளவெண்பாவை நேரிசை வெண்பாவில் பாடினார். அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியை ‘யாப்பின் பாசக்கயிறான’ கட்டளைக் கலித்துறையில் பாடிக்காட்டினார். ஆண்டாள் கலிவிருத்தத்திலும் கொச்சகக்கலியிலும் பாசுரங்களையும் பாவையையும் பாடினார். ‘பாவை பாடிய வாயால் கோவை’ பாடிக் கொச்சகக்கலியிலும் கட்டளைக் கலித்துறையிலும் கொடி நாட்டினார் மணிவாசகப்பெருமான். இந்த இலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பதை ஒருமுறை ஓதுபவரும் உணர்ந்து கொள்ளலாம். வடிவமோ அதற்கான காரணியாகிய யாப்பும் கவிஞனின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குத் தடையாக இருந்ததே இல்லை. தற்காலத்திய இத்தகைய புலம்பலுக்குக் காரணம் உணர்ச்சியற்றவர்களெல்லாம் கவிதை புனைய எத்தனித்ததே. மேற்சொல்லப்பட்ட பல்வகை யாப்புக்களும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியப் பொருண்மைகளும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. உணர்ச்சிக்கேற்ற யாப்பு என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கொள்கையாகும். “என் உணர்ச்சி என்னைப் பிசைந்து பிசைந்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது” என்பார் வைரமுத்து.

    1.2.4. வெண்பாவின் தோல்வியும் விருத்தத்தின் வெற்றியும்

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் ஏற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைக் கொள்கை. வடிவத்தை வைத்துக் கொண்டு உணர்ச்சியைக் கொட்ட முடியாது. வடிவத்தை வைத்துக் கொண்டு கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. அவையிரண்டும் முன்னவை. யாப்பு பிந்தியது. மைசூர் பாகு முன்னால். அதற்கான அச்சு பின்னால். கடினமான யாப்பு என்பதாலேயே அதனால் செய்யப்படும் இலக்கியங்கள் வெற்றி பெற்றுவிடும் என்பது ஒரு மாயை. உண்மை நிலைக்கு மாறானது. பாரதக் கதைக்கு வில்லிப்புத்தூராழ்வாரின் உணர்ச்சி விருத்தத்தைத் தேர்ந்தெடுத்தது. அதே பாரதக்கதைக்குப் பெருந்தேவனார் கொண்டிருந்த உணர்ச்சி வெண்பாவைத் தேர்ந்தெடுத்தது, என்ன ஆனது? எளிமையான விருத்தத்தால் வில்லியார் பெற்ற இலக்கிய வெற்றியை, மிகக் கடினமான வெண்பாவினால் எழுதிய பெருந்தேவனார் பெற முடியவில்லையே? யாருக்காவது பெருந்தேவனார் பாரதம் தெரியுமா? “புறநானூற்றுப் பாடல்களை விருத்தங்களில் எழுதியிருந்தாலும் உலகப்பன் பாட்டைக் கலிப்பாவில் எழுதியிருந்தாலும் என்றோ இரண்டும் அழிந்து போயிருக்கும்” என்பார் பெருஞ்சித்திரனார். கவிதைகளை அவற்றின் அழகும் செப்பமும் குறையாமல் வார்த்தெடுக்கும் ஆற்றலும் நுட்பமான ஆய்வு நோக்கும் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் கண்ட உண்மை, நம் கருத்துக்குப் போதிய அரணாகும். பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற வடிவம் என்பது வைரத்தைத் தங்கத்தில் வைத்துப் பார்ப்பதுபோன்ற அனுபவமாகும்.

    2.0 தொல்காப்பியச் செய்யுளியலும் வடிவக்கோட்பாடும்

    தற்காலத் திறனாய்வாளருள் பலரும் தொல்காப்பியச் செய்யுளியல் இன்றைய இலக்கிய நுகர்ச்சிக்கோ திறனாய்வுக்கோ பயன்படாது என்று விடாது கூறிவருகின்றனர். ஆனால் உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவெல்லாம் செய்யுளின் கூறுகளாதலின் தொடையும் தொடை விகற்பங்களும் வடிவத்துள் அடங்கும் என்பது பெறப்படும். பெறவே தொடை விகற்பங்களைப் பற்றிய தொல்காப்பியச் சிந்தனை வியப்பளிப்பதாக உள்ளது.

    மெய்பெறு மரபின் தொகை வகை தாமே
    ஈர் ஆயிரத்து ஆறு ஐந்நூற்றொடு
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃதென்ப உணர்ந்திசி னோரே!”

    ஈர் ஆயிரம்                                   10000
    ஆறு ஐந்நூறு                                     3000
    தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூறு        699

    ஆக 13699. எப்படி? மோனை 1019. எதுகை 2473. முரண் 2. இயைபு 182. அளபெடை 159. பொழிப்பு 654. ஒரூஉ 654. செந்தொடை 8556 ஆக தொடை விகற்பம் 13699. இலக்கியத்தை அனுபவித்தல் அக்காலச் சமுதாயத்தினருக்கு இல்லையென்றால் தொடை வகைகளை இவ்வாறு வகைப்படுத்தித் தொகைப்படுத்தி விளக்கங்களைத் தந்து கூற முடியாது. அதனால் இலக்கியத்தை நன்றாக அனுபவித்தவர்கள் தமிழர்கள் என்பதுடன் அதற்குரிய இலக்கணமும் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. வடிவமே கவிதையாகாது. ஆனால் வடிவமே கவிதை என்னும் கருத்துடையார் குறைந்த அளவு இத்தனை தொடை விகற்பங்களில் தாம் எழுதும் கவிதைகளில் இடம் பெற்றவை எத்தனை எனச் சிந்திப்பதற்கு உரியாரே.

    2.1. நோக்குமிடமெல்லாம் யாப்பன்றி வேறில்லை

    ‘வடிவக்கோட்பாடுகள்’ என்பது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தொடைவிகற்பங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே. இவற்றினும் தனித்து நிற்பது யாப்பு. யாப்பினால் உருவாகும் செய்யுட்கள் அல்லது கவிதைகளில் முன்னவை பெறும் இடம் இன்றியமையாதன என்பதை அறிதல் வேண்டும். வெண்பா என்று தனித்து ஒன்றில்லை. ஆசிரியப்பா எனத் தனித்து ஒன்றில்லை. கலிப்பா என்று தனித்து ஒன்றில்லை. வஞ்சிப்பா என்று தனித்து ஒன்றில்லை. நாம் ஏதேனும் பாடல் எழுதுகிறோம் என்றால் அவற்றின் வகைகளில் ஏதேனும் ஒன்றைத்தான் எழுதுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, நேரிசையாசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக்கலிப்பா, கலிவெண்பா, வெண்கலிப்பா, குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என்னுமாறு கிடந்த பாவகையினுள் (கலிப்பாவின் விரிகள் தனி) தற்காலக் கவிஞர் பெருமக்கள் எத்தனை யாப்பினைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதும் பாக்களிலிருந்தே அறிந்து கொள்ள இயலும்.

    இவை வெறும் பாக்கள் மட்டுமே. இனி இனம், தாழிசை, துறை, விருத்தம் என நான்கு வகைப்பாக்களுக்கும் கூட்டி உறழத் தோன்றுபவை கடல்போலக் காட்சிதரும். வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கலி விருததம், வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம் என்னுமாறு கிடந்த பாவினங்களுள் எத்தனைப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பதைச் சிந்திக்க வேண்டாமா? இந்த மாபெருங்கடலுள் ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தில் இரண்டினை மட்டும் எழுதிக் கொண்டு தன்னை ஒரு மரபுப் பாவலர் என்று கூறிக் கொள்வாரை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

    3.0. வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி

    தமிழை முறையாகப் பயின்றவர் வசந்தராசன். யாப்பினைப் பொருத்தவரையில் வசந்தராசன் பாக்கள், பாக்களின் இனங்கள் ஆகிய அனைத்தையும் கையாளவில்லை என்பதை முன்னமே சொல்லிவிட வேண்டியதாகிறது. அவரும் தன்னை யாப்பியல் வல்லார் என்றும் கூறிக் கொண்டதில்லை. நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணைக் கொச்சகக்கலிப்பா, சிந்து முதலிய பாவகைகளையும் எண்சீர், அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்களையும் மட்டுமே எழுதியுள்ளார். அவர் எழுதியிருக்கும் புதுக்கவிதைகளுக்கு வெளிப்பாட்டு உத்தியே வடிவமாகலின், வடிவத்திற்குத் தனி இலக்கணமுடைய தமிழ் மரபுகளுக்கு உகந்ததாக அது கருதப்படவில்லை. எனவே அது பற்றிய ஆராய்ச்சியும் இங்கு எழவில்லை. எனவே வடிவத்தைப் பொருத்தவரையில் தமிழ்க்கவிதை வடிவங்களைப் புதுக்கவிதை வடிவத்தோடு ஒப்பிடுவது எள்ளின் முனையளவும் ஆய்வுப் பயனை நல்காது என இக்கட்டுரை உறுதிபடக் கருதுகிறது.

    3.1. எண்சீர் விருத்தமும் இலக்கண அமைதியும்

    பாக்களுக்கு இருப்பது போன்ற சீர் கட்டுப்பாடுகள் விருத்தங்களுக்கு இல்லை. சான்றாக எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றால் அடிக்கு எட்டுச்சீர்களாக நான்கடியில் அமையவேண்டும் என்பது மட்டுமே விதி. இன்னும் தெளிவாகச் சொன்னால் அளவொத்த நான்கடிகள் அமையுமாயின் அது விருத்தம். இதில் அடிக்கு நான்குசீர் என அமைந்தால் அது கலிவிருத்தமாய்விடும். ஐந்து சீர் என்று அமைந்தால் அது கலித்துறை ஆகிவிடும். எனவே ஆறுசீர்களும் அதற்கும் மேலும் அமைந்து நான்கடியாய் அமைவதே கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். எனவே எட்டுச்சீர் கொண்ட அடிகள் நான்காய் அமைந்தால் அது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். ஏனை வெளிவிருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என இருப்பினும் தமிழ்க்கவிதைகளின் பெரும்பரப்பு முழுவதையும் பட்டா போட்டுக் கொண்டிருப்பது இவ்விரண்டு விருத்தங்களே.

    அம்மாமித் தமிழெழுதி ஆகா என்பார்!
    அறிவில்லாத் தமிழரதை வாங்கிக் கற்பார்!
    செம்மை சேர் இலக்கியத்தின் சீரைக் கொன்றே
    சிறப்பாரும் தனித்தமிழை வேண்டாம் என்பார்!
    கைம்மைசேர் புலைமொழியைக் கொச்சைப் பேச்சை
    மடமையினால் காதலிப்பார்! காதைத் தீய்ப்போம்!
    நம் மறைமலையார் கொள்கை போற்ற
    நலனில்லாத் தமிழ் வளர்ப்போம் நன்மை செய்வோம்!”

    எண்சீர் விருத்தங்களுள் இது ஒரு வகை. காய் காய் மா மா என்பது அரையடிக்கான இலக்கண மரபு. நினைவிற் கொள்ளவேண்டும். இலக்கணமன்று. இலக்கண மரபு. இந்த அரையடியில் 3,4 சீர்கள் மாவில் வரலாம் என்று இருந்தாலும் 3வது சீரில் தேமா வரலாம் புளிமா வரலாம். ஆனால் 4வது சீரில் தேமா மட்டுமே வரவேண்டும். இதில் இது யாப்பு வல்லாண்மை என்றால் 3 மற்றும் 4வது சீர்கள் அனைத்திலும் தேமாவாகவே வைத்துக் கோப்பது. மேலே காட்டப்பெற்ற பாடலுள் நான்கடியுள் அமைந்த 16 சீர்களும் தேமாவாகவே இருப்பது காண்க. இவ்வாறு அமைவது அரிதினும் அரிது. ஒரு விருத்தத்திற்கு இத்தகைய 16 சீர்களும் தேமா என்பது அரியதாயினும் 15, 14, 13, 12 என தேமா பயின்று வருமாறு விருத்த வல்லாளராகவே வசந்தராசன் திகழ்கிறார்.

    சேர்ந்தெழுந்தால் வானிறங்கிக் கால்பி டிக்கும்!
    செதுக்கிவைத்த காலமது கால்கி டக்கும்!
    வேர்மேடை அரங்கத்தை ஊர்நி றைக்கும்!
    விசிறிவைத்த நிழல்வீட்டில் தேர்ந டக்கும்!
    ஊர்கூடி நடந்தாலே போதும் அந்த
    வெற்றிமங்கை எதிர்வந்து கொண்ட ழைக்கும்!
    யார்கூற்று மல்லவிது! இயற்கை காட்டும்
    கூர்கூற்று! உணர்ந்தாலே ஞானம் பேசும்!”

    வான்பரப்பைச் சிறகளந்து வளைத்து வைத்தேன்!
    வட்டநிலா தொட்டிலுக்குள் போட்டு வைத்தேன்!
    தேன்சிந்தும் செந்தமிழில் பாட்டெ டுத்துத்
    தென்றலாலே தொட்டிலாட்டித் தூங்க வைத்தேன்!
    நான்நடிக்கும் நாடகத்தை நானே பார்த்தேன்!
    நாக்குவழி சுவாசித்துக் காலம் யாத்தேன்!
    தோன்றுமிட மெல்லாமே என்னைப் பார்த்தும்
    தொலைந்துவிட்டேன் உன்னிடம்நான்! தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தங்களுள் 15 தேமாக்கள் வந்து சந்த கம்பீரத்தை உயர்த்துவதைக் காணலாம். இத்தனைத் தேமாக்கள் என எண்ணிக் கொண்டு எழுதியதனால் அமைந்ததல்ல இவை. கவிஞன் உணர்ச்சியைக் கொட்டுகிறான். கொட்டுவது கவிதையாகிறது. கொட்டப்பட்ட கவிதையில் கிடந்த சீர்கள் இவை. அவ்வளவுதான்.

    சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்!
    சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்!
    பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று
    படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!
    சரசரக்கும் சேலையிழை மடிப்பில் நின்று
    சாய்ந்தாடி அத்தனையும் தின்று பார்த்தேன்!
    திறமைகளின் பேரழகுத் தீவே! உன்னில்
    தொலைந்துபோய் கிடக்குமெனைத் தேடித் தாயேன்!”

    என்னும் விருத்தத்துள் 14 தேமாக்கள் அமைந்திருக்கின்றன என்றால் பின்வரும் விருத்தத்தில் 13 தேமாக்கள் அமைந்துள்ளதைக் காணலாம்.

    ஈக்கடிக்கும் கொசுக்கடிக்கும் எறும்பி னோடும்
    எக்கடிக்கும் உனைக்காத்த என்னை யின்று
    நீகடித்துப் பார்க்கின்றாய்!தாய்ப்பால் வற்ற
    நெஞ்சார ரத்தத்தால் பசித ணிப்பேன்!
    நாகடித்துக் கொள்ளாதே அவச ரத்தில்!
    நானிருப்பேன் பொறுமையாக! என்னை மட்டும்
    சாகடிக்கும் பழியுனக்கு வேண்டாம்!நானே
    செத்துபல நாளாச்சு! போய்வா!போய்வா!”

    வசந்தராசனின் இத்தகைய எண்சீர் விருத்தங்களால் சாதாரணமாக, மிக மிகச் சாதாரணமாக யாப்பியல் மரபினைப் பேணும் இயல்பை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அமைதல் வேண்டும் என்று எண்ணிக் கணக்கெடுத்து அவர் எழுதவில்லை. அவர் எழுதுகிற பாட்டில் அப்படி அமைந்துவிடுகிறது. இதுதான் யாப்பின் இரகசியம். தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்றிருந்த அரையடி யாப்பு, தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்றும் புளிமாங்காய் தேமாங்காய் புளிமா தேமா என்றும் இன்னும் பலவாகவும் விரிந்து காட்சியளிக்கிறது. இருப்பினும் எந்த நிலையிலும் எட்டுச் சீர்களில் 4 மற்றும்  8 ஆகிய சீர்களில் புளிமா வரக்கூடாது என்னும் மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. எல்லாரும் அறிந்த இன்னொரு வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது.

    கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுவம்வகை கிடைத்த
    குளிர்தருவே! தருநிழலே! நிழல்கனிந்த கனியே!
    ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே!
    உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே!
    மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே!
    மென்காற்றில் விளைசுகமே! சுகத்திலுறும் பயனே!
    ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!”

    வள்ளற்பெருமான் உள்ளங்கவர்ந்த யாப்பு இது. அவருடைய அருள்விளக்க மாலை, அருட்பிரகாச மாலை, இங்கித மாலை முதலியனவெல்லாம் இந்த யாப்பில் அமைந்தனவே. பாவேந்தர் பாரதிதாசனுக்கும் இந்த யாப்பு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் அதிகமான பாடல்களை இந்த யாப்பில் அவர் எழுதவில்லை.

    “தென்திசையைப் பார்க்கின்றேன்! என்சொல்வேன்? என்றன்
    சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடடா!
    அன்றந்த இலங்கையினை ஆண்டமற வேந்தன்
    ஐயிரண்டு திசையனைத்தும் தன் புகழை வைத்தோன்!
    குன்றெடுத்த பெருந்தோளான்! கொடைகொடுத்த கையான்!
    குள்ளநரி செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
    என்தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்!
    இராவணன்காண்! அவன்பெருமை இவ்வுலகம் அறியும்”

    என்பது போன்ற ஒருசில பாடல்களையே எழுதியிருக்கிறார். இவ்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் அரையடி காய் காய் காய் என மூன்று சீர் அமைந்து (அதாவது தேமாங்காய் புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்) எனக் கலந்தமைந்து) நான்காவது சீர் தேமா, புளிமா முதலிய வாய்பாடுகளில் அமையும். ஆனால் அவை கூவிளம், கருவிளம் வாய்பாடுகளில் அமைவதில்லை. இது மரபு. இப்படி அமைவதற்கு எந்த நூலிலும் இலக்கணம் இல்லை தாங்களாகவே இலக்கணம் செய்து கொண்டவர்களைத் தவிர. வசந்தராசன் இத்தகைய யாப்பிலும் தன் ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார்.

    பொற்கால ஆட்சியின் பூபாளம் வாழ்க!
    பொன்னிநதி தோற்கவரும் பெருந்தாய்மை வாழ்க!
    சொற்கோலம் தினம்வரையும் செந்தமிழே வாழ்க!
    சோராத பேருழைப்பின் சூத்திரமே வாழ்க!
    நற்பேறே! தமிழகத்தின் நாயகனே வாழ்க!
    நடந்துவரும் ஓய்வறியா சூரியனே வாழ்க!
    வற்றாத தமிழ்நாட்டு வரலாறே வாழ்க!
    வசந்தங்கள் பூப்பெய்ய வாலிபமாய் வாழ்க!”

    என்னும் விருத்தத்தில் அரையடி ஈறு ‘வாழ்க’ என்னும் தேமாவில் முடிந்திருப்பது காண்க. பலரும் அறியாத வேறொரு வகை எண்சீர் விருத்தத்தை மணிவாசகப் பெருமானும் மகாகவி பாரதியும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் இருவரைத் தவிர பிறர் எழுதியிருக்கிறார்களா என்பது கட்டுரையாசிரியருக்குத் தெரியாது. பின்னூட்டம் இடும் அன்பர்கள் காட்டினால் நன்றியுடையேன். மணிவாசகப் பெருமானின் திருப்பள்ளியெழுச்சி இப்படி அமைந்திருக்கிறது.

    கூவின பூங்குயில்! கூவின கோழி!
    குருகுகள் இயம்பின! இயம்பின சங்கம்!
    ஓவின தாரகை ஔிஒளி உதயத்து
    ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
    தேவநற் செறிகழல் தாளினைக் காட்டாய்!
    திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
    யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்!
    எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!”

    மணிவாசகப் பெருமானின் இந்தப் பாடலில் உள்ளத்தைப் பறிகொடுத்த மகாகவி பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியை இதே யாப்பில் எழுதியிருக்கிறார்.

    பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
    புன்மை இருட்கணம் போயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
    தொழுது வாழ்த்தி வணங்குதற்கு இங்குன்
    தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்!
    விழிதுயில் கின்றனை இன்னும் எம்தாயே!
    வியப்பிதுகாண் பள்ளி எழுந்தரு ளாயே!”

    வழக்கமான காய் காய் மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த விருத்தங்களை எழுதித் தாங்களே படித்துக் கொள்ளும் மரபுக் கவிஞர்களுக்கு ஒரு சேதி! மணிவாசகப் பெருமான், மகாகவி இவர்கள் எழுதியிருக்கும் இந்த எண்சீர் விருத்தங்கள் தம்முள் அளவொத்து அமைந்த நான்கடியாய் அமைந்தனவேயன்றிச் சீர் வரையறையில்லை என்பதை அருள்கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். காரணம் விருத்தத்திற்குச் சீர், தளை வரையறை கிடையாது. இதில் என்ன வியப்பு என்றால் மணிவாசகரும் மகாகவியும் பயன்படுத்தாத யாப்பே இல்லை என்பதுதான். பெரும்பாலும் இவற்றை நிலைமண்டில ஆசிரியப்பா என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு வியப்பும் உண்டு. அதாவது மரபுக்கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வார் யாரும் இந்த வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தைக் கையாண்டு கவிதைத் தொழில் செய்துள்ளனரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    3.2. அரையடி இலக்கணமும் அறுசீர் விருத்தமும்

    எண்சீர்க் கழிநெடிலடி மற்றும் ஒருசார் அறுசீர்க் கழிநெடிலடி விருத்தங்களுக்கு இலக்கணம் சொல்வார் முழுமையான அடிக்குச் சொல்லாமல் அரையடிக்கு இலக்கணம் சொல்வார். காரணம் இவற்றுள் முற்பாதி போலப் பிற்பாதி அமைவதில்லை. தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா என்று முதல் அரையடி இருக்கும். புளிமாங்காய் கருவிளங்காய் புளிமா தேமா என்று அடுத்த அரையடி இருக்கும். இந்தக் குழப்பத்தைச் சீர் செய்ய வேண்டுமானால் அரையடி இலக்கணமே சரி என்று அவர்கள் கருதியிருக்கிறார்கள்.

    வெள்ளம்போல் தமிழர்க் கூட்டம்
    வீரங்கொள் கூட்டம் அன்னார்
    உள்ளத்தால் ஒருவ ரேமற்
    றுடலினால் பலராய்க் காண்பர்
    கள்ளத்தால் நெருங்கொ ணாதே
    எனவையம் கலங்கக் கண்டு
    துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் 
    சொக்கும் நாள் எந்த நாளோ?”

    பாவேந்தரின் இந்தப் பாட்டில் முதலடியின் முற்பாதி ‘தேமாங்காய் புளிமா தேமா’ என்றும் பிற்பாதி ‘தேமாங்காய் தேமா தேமா’ என்றும் அமைந்திருத்தல் காண்க. அடுத்த அடியோ முந்தைய அடியினும் மாறுபட்டு தேமாங்காய் புளிமா தேமா என்றும் கருவிளம் புளிமா தேமா என்றும் அமைந்திருப்பதைக் காணலாம். கம்பன் முதல் அத்தனைப் பேருக்கும் இதுதான் நிலை. எனவே விருத்தங்களில் சீர் வரையறை இல்லாத காரணத்தால் ஒரு முழுமையான அடிக்கு இலக்கணம் இல்லை என்பது பெறப்படும். இது கட்டளைக் கலித்துறைக்கும் பொருந்தும்.

    செம்பிட்டுச் செய்த இஞ்சித்
    திருநகர் செல்வந் தேறி
    வம்பிட்ட தெரியல் எம்முன்
    உயிர்கொண்ட பகையை வாழ்த்தி
    அம்பிட்டுத் துன்னம் கொண்ட
    புண்ணுடை நெஞ்சோ டைய!
    கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்

    முதல் அரையடியைத் “தேமாங்காய் தேமா தேமா” என்றமைத்துக் கொண்ட கம்பன் அடுத்த அரையடியைக் கருவிளம் தேமா தேமா என்றமைத்துக் கொள்வதைக் காண்க.

    எய்திய நிருதர கோனும்
    இராமனை இறைஞ்சி எந்தாய்!
    உய்திறன் உடையார்க் கன்றோ
    அறன் வழி ஒழுகும் உள்ளம்
    பெய்திறன் எல்லாம் கொண்டு
    பேசினேன் பெயரும் தன்மை
    செய்திலன் குலத்து மானம்
    தீர்ந்திலன் சிறிதும் என்றான்

    இதுவும் கம்பன் எழுதிய அறுசீர்க் கழிநெடிலடி விருத்தமே! சென்ற பாட்டில் மூவசைச்சீரில் தொடங்கி எழுதியவன் இந்தப் பாட்டில் நான்கடிகளின் தொடக்கத்தையும் கூவிளம் என்னும் வாய்பாட்டிலேயே அமைத்திருப்பது காண்க. இந்த மரபைத்தான் வசந்தராசன் பின்பற்றி எழுதுகிறார். அதனால் இது மரபுக்கவிதை.

    புயலிலே பிறந்த பூவே!
    பூமணத் தமிழின் நாவே!
    வயலெலி தின்னும் நெல்லும்
    வயிறுகள் காணா நம்மை
    இளமையில் வறுமை தின்னும்
    இடுக்கிலே துளிர்த்து வந்தோம்
    வளமையைக் கனவு காணும்
    வயதில்நீ மறைந்த தென்ன?”

    “கருவிளம் புளிமா தேமா
    கூவிளம் புளிமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் தேமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா
    கருவிளம் புளிமா தேமா”

    என்னும் வாய்பாடுகளில் வைத்துப் பாடுகிறார் வசந்தராசன். இளமையில், வளமையில் என்பன மகரக் குறுக்கங்கள். வயதில்நீ என்பதில் ஒற்று அலகு பெறாது ஒலிநோக்கி. இன்னொருவகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இருக்கிறது. அதில் அரையடியின் ஈற்றுச்சீர் மூவசைச்சீராகப் பெரும்பாலும் காய்ச் சீராக வரும். முதல் இரண்டு சீர்களும் மாச்சீர்கள் வரும்.

    தேமா தேமா தேமாங்காய்!
    புளிமா தேமா புளிமாங்காய்!
    தேமா புளிமா புளிமாங்காய்!
    புளிமா தேமா தேமாங்காய்!

    என்னுமாறு அரையடி இலக்கண வாய்பாடுகள் அமையும்.

    கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரால்?
    வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனா?
    ஊடி ஊடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு
    ஆடி ஆடி ஆனந்தம் அதுவே யாக அருள் கலந்தே

    என்பது திருவாசகம். ‘தேமா தேமா கூவிளங்காய்’ என்பது முற்பகுதி இலக்கணம். ‘புளிமா புளிமா புளிமாங்காய்’ என்பது பிற்பகுதி இலக்கணம். இரண்டாவது அடி மாறுபட்டுத் தேமா தேமா புளிமாங்காய், தேமா புளிமா தேமாங்காய் என அமைந்திருப்பதைக் காணலாம். தமிழ்க்கவிதை யாப்பு என்பது நெகிழ்ச்சி உடையது என்பதும் இதனாற் புலனாகலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்த யாப்பில் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.

    கம்ப மதத்துக் களியானைக் காவற் சனகன் பெற்றெடுத்த
    கொம்பும் என்பால் இனிவந்து குறுகினள் என்றகம் குளிர்ந்தேன்!
    வம்புசெறிந்த மலர்க்கோயில் மறையோன் பெற்ற மாநிலத்தே
    தம்பியுடையான் பகையஞ்சான் என்னும் மாற்றந் தந்தனையால்!”

    என்பன இந்த யாப்பில் அமைந்த புகழ்பெற்ற பாடல்கள். பெருமக்கள் கையாண்ட இந்தக் கவிமரபு தம்பி வசந்தராசன் கவிதைகளில் வெகு சாதாரணமாக இழையோடுவதைக் காணலாம். வாய்பாடுகளைப் படித்து மனப்பாடம் செய்து கொண்டு எழுதுகிற எவரும் இந்தக் கலையில் வெற்றிபெற முடியாது. ஓசையொழுங்கை உள்வாங்கி உணர்ச்சிகளை அவ்வொழுங்கில் அடுக்கி வைப்பதே கவிதையாகும். வசந்தராசன் எழுதுகிறார்.

    எவரின் வாயாய் அசைகின்றாய்?
    எவரின் விசையால் நடக்கின்றாய்?
    சுவராய் நிற்கும் தமிழ்நாட்டின்
    சுண்ணாம் பாய்நீ ஒட்டியவன்!
    தவறாய் நாக்கை நீட்டாதே!
    தலையில் கல்நீ சுமக்காதே!
    உவர்நீ ராக வயலுக்குள்
    வந்தால் வரப்புகள் விடமாட்டோம்!”

    என்றெழுதும் வசந்தராசன் வேறொரு வழக்கான அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தையும் எழுதியிருக்கிறார். இது காய் காய் காய் காய் மா மா என்னும் வாய்பாடுகளைக் கொண்டது. வில்லி பாரதம், கம்பராமாயணம். பாரதிதாசன் முதலியோர்க்குச் சர்க்கரைப் பொங்கலாக இனித்த யாப்பு இது.

    “வெம்மடங்கல் வெகுண்டனைய
    மனமடங்க செயலடங்க
    வினையம் வீய
    தெம்மடங்கு பொருதடக்கைச்
    செயலடங்க மயலடங்க
    ஆற்றல் தேய
    தம்மடங்கு முனிவரையும்
    தலையடங்க நிலையடங்கச்
    சாய்த்த நாளின்
    மும்மடங்கு பொலிந்தனஅம்
    முறைதுறந்தான் உயிர்துறந்த
    முகங்கள் அம்மா!”

    என்று இராவணனின் மரணப் பொலிவைப் பாடுவான் கம்பன். சொரணையற்ற தமிழர்களுக்குச் சொரணை வரவேண்டும் என்பதற்காய்ப் பாவேந்தர் பாடிய தமிழியக்கம் என்னும் நூல் முழுமையும் இதே யாப்பில் அமைந்தது.

    “ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
    முன்னேற்றம் ஒவ்வொன்றும்
    உன்முன் னேற்றம்!
    கண்டறிவாய் எழுந்திரு நீ!
    இளந்தமிழா! கண்விழிப்பாய்!
    இறந்தொ ழிந்த
    பண்டைநலம் புதுப்புலமை
    பழம்பெருமை அனைத்தையும்நீ
    படைப்பாய்! இந்நாள்!
    தொண்டு செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
    துடித்தெ ழுந்தே!”

    கம்பனையும் வில்லிப்புத்தூராரையும் பாரதிதாசனையும் கவர்ந்த இந்த அறுசீர் விருத்த யாப்பு நம் வசந்தராசனையும் கவர்ந்திருக்கிறது. சொற்களின் கம்பீரம் குறையாமல் கையாள்வதற்கு இந்த வகை யாப்பு இடந்தரும். இந்தக் கவிஞர்களின் விருத்தங்களுக்கும் சிலர் எழுதும் ஜிகினா விருத்தங்களுக்கும் வேறுபாடுகள் உண்டு.

    “போனவனே திரும்பிவந்தான்! திரும்பிப் போனான்!
    போகாத இன்னொருவன் சேர்ந்து வந்தான்!
    நானும்தான் போனவுடன் திரும்பி வந்தேன்!
    நடுச்சாலை வந்தவுடன் திகைத்து நின்றேன்!”

    என்று எழுதுவதற்கு யாப்பருங்கலமோ காரிகையோ தேவையில்லை. இலக்கணம் மட்டுமே கவிதையாகாது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தற்காலத்தில் பாட்டெழுதத் தெரிந்தவர்கள் மரபுக்கவிஞர்கள் எனப் பறைசாற்றிக் கொள்வதற்கு இந்த விருத்தங்களே போதுமானவை என்னும் கருத்து நிலவுகிறது. உண்மையில் ஒலியை உள்வாங்கிய யாரும் விருத்தத்தை எழுதிவிட முடியும். இன்னும் துணிந்து சொன்னால் யாப்பறிவு இல்லாமலேயே விருத்தங்களை எழுதலாம். ஒலியமைதி பிடிபட்டால் போதும். அப்படியானால் விருத்தங்களை எழுதியவர்கள் அனைவரும் இவ்வாறுதான் எழுதினார்களா என்றால் இல்லை. யாப்பு செறிவுக்குச் சொல் பயன்பாடு தலையாய காரணம். சொற்செறிவு இருந்தாலேயொழிய விருத்தத்தில் அடர்த்தி அமையாது. அடர்த்தி குறையா விருத்தங்களை எழுதியவர்கள் கம்பர், சேக்கிழார், வில்லிப்புத்தூராழ்வார், பாவேந்தர், சுரதா, முடியரசன், முருகுசுந்தரம், தமிழன்பன், பொன்னிவளவன், நன்னியூர் நாவரசன், நம் வசந்தராசன் முதலியோர்.

    புதுமைகளின் புன்னகையே!
    பொற்றுகளின்  நாக்கிடங்கே
    இளமைக் காவே!
    முதுமைக்கே வழியடைத்து  
    மொட்டுமல ராய்ச்சிரிக்கும் 
    மூத்த நாவே!
    எதுவந்து நின்றாலும்
    எதிர்வந்து பொருதாலும்  
    வாகை ஒன்றே
    நிதம்சூடும் செந்தமிழே 
    நெஞ்செல்லாம் நீயாகும்
    நெற்றிப் பொட்டே!”

    செந்தமிழ்த்தாயைத் தம் சித்தம் நிறைய அவள் சிந்தை குளிர வாழ்த்தும் இந்தப் பாடல் யாப்பு, மரபின் தாக்கம் என்பது சொல்லாமலேயே புலப்படும். எளிய யாப்பு எனப் பாரதி கூறுவது இதனைத்தான். இந்த எளிய யாப்பினை அழகான கற்பனையால், ஆழமான உணர்ச்சியினால் விழுமிய கருத்தினால் அலங்கரிக்கத் தெரிந்தவனே கவிஞன். நம் வசந்தராசன் ஒரு கவிஞன். அது ஒரு தனி ஆய்வு.

    3.3. சந்த விருத்தம் தரும் தமிழ்க்கவிஞன்

    இலக்கண வரம்புடைய பாடல்களைக் கவிஞர்கள் தம் சொல்லாற்றலின் காரணமாகச் சந்தச் சுகத்தைத் தரும் கவிதைகளாக மாற்றும் வித்தையால் நம்மைக் கவர்ந்து விடுகிறார்கள். அத்தகைய பாக்கள் இயற்றமிழ்ப் பாக்களாகவும் இருக்கும். சந்தப்பாக்களாகவும் இனிக்கும்.

    தத்திவரும் முத்துமொழித் தத்தையென முத்தமிடும்
    சித்திரம்போல பூஞ்சிவப்பு சிந்திநின்றஅத்தைமகள்
    பூப்பெய்தி விட்டாளாம்!. பூமகளின் காலடியில்
    பூப்பெய்தேன் என்னவியப் பு?”

    இப்படியொரு நேரிசை வெண்பாவை எழுதியிருக்கிறார் வைரமுத்து. முதல் இரண்டு அடிகளில் உள்ள எட்டுச் சீர்களும் வெண்பா உரிச்சீர்களாக நின்று, வெண்டளை பிறழாது உள்ளன என்பது உண்மையே. ஆனால் ஓசை சந்தமாகியிருக்கும் ரகசியத்தை உணர்தல் வேண்டும்.! பாட்டை ஒருமுறை வாய்விட்டுப் படித்தால் செப்பலோசை மறைந்து சந்தம் பிடிபடும். இலக்கணத்தில் வழுவாத இந்த நேரிசை வெண்பா எப்படிச் சந்த வெண்பாவாகியிருக்கிறதோ அதுபோலவே வசந்தராசன் எழுதிய சில பாடல்கள் விருத்தயாப்பில் இருந்தாலும் சந்த விருத்தங்களாக மலர்ந்திருக்கின்றன.

    புலிநகத்தைக் கடிப்பதற்கு எலிகள் கூட்டமா?
    பூஞ்சகாளான் முகம் வெளுத்தால் இடிநடுங்குமா?
    அலிபுணர்ந்தால் ஆண்குழந்தை அடைய முடியுமா?
    அரைஞாணில் ஆனைகளை அடக்க முடியுமா?
    சிலைவடிக்கச் சிற்பியின்றி உளிகள் போதுமா?
    சீழ்பிடித்த சிந்தனையால் ஈழம் மலருமா?
    அலைகடலைத் தோற்கடிக்கும் மறவர் கூட்டமாம்!
    அணிவகுப்போம்! அடையுமட்டும்! ஈழம் வாழ்த்துவோம்!

    தமிழில் அருகிவரும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் என்று இதனைச் சொல்வது எளிது. ஆனால் பாட்டின் ஒலியமைப்பு ஒரு சந்தவிருத்தமாகவே அமைந்துவிடுவதற்குக் காரணமாகிவிடுவதைக் காணலாம்.

    4.0. வெண்பாவைத் தன்பாவாய் ஆக்கிக் கொண்ட வசந்தராசன்

    இந்தக் கட்டுரை தமிழின் முழுமையான மரபியல் யாப்பினை முன்னெடுக்கும் மூன்று நூல்களில் ஒன்றான யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலை அடியொட்டி எழுதப்படுகிறது. அதன்படி வெண்பாவின் வகைகளை நிரல்படுத்துகிறபோது குறளடி, சிந்தடி, அளவடி, பலவடி என்னும் நிரல்படுத்தாமல் குறளடி, அளவடி சிந்தடி, பலவடி என்று நிரல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது குறள் வெண்பாவிற்கு அடுத்ததாகச் சிந்தியல் வெண்பா வரவேண்டும். அதற்குப் பிறகே நேரிசை வெண்பா அமைய வேண்டும். ஆனால் குறள் வெண்பாவிற்குப் பிறகு நேரிசை வெண்பாவை அமைத்து அதன் பிறகே சிந்தியல் வெண்பா அமைகிறது. காரணம் குறள் வெண்பாதான் அடிப்படை. குறள் வெண்பா தெரிந்த ஒருவன் எந்த வெண்பாவையும் எழுத முடியும். இரண்டு குறள் வெண்பா இணைந்தால் ஒரு நேரிசை வெண்பா. எனவே நான்கடி. நான்கடியின் திரிபெல்லாம் இன்னிசை வெண்பா. நான்கடி மூன்றடியானால் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் அமையின் அது பஃறொடை வெண்பா.

    பாரதவெண்பா, நளவெண்பா, மணிமேகலை வெண்பா முதலியனவெல்லாம் நேரிசை வெண்பாவினால் கட்டமைக்கப்பட்ட நூல்கள். தமிழில் ஒரு இலக்கண நூலையே வெண்பாவினால் எழுதியிருக்கிறார்கள். அதற்குப் பெயர் புறப்பொருள் வெண்பா மாலை. புறத்திணைச் சிந்தனைகளைக் கூறும் இந்த நூலில் அமைந்துள்ள  நேரிசை வெண்பாக்களுக்கு மின்னல் வெண்பாக்கள் என்று பெயர். காரணம் செப்பலோசையைத் திகட்டத் திகட்டத் தருவதனால் மின்னலாய்த் தோன்றி மறைந்துவிடும் என்பதாம். இருபதாம் நூற்றாண்டில் வெண்பாப் புலியைப் பூனைக்குட்டியாக்கியவர் கவிமணி.

    முத்து பவளம் முழுவயிரம் மாணிக்கம்
    பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் சித்தன்
    சிரங்கப்ப ராயன் சிந்தை யிரங்கித்
    தரங்கண்டு தந்த தனம்

    தன் உடம்பு முழுவதும் வந்திருந்த சிரங்கைப் பாடிய கவிமணி கையறு நிலையை வெண்பாவில் இறக்கி வைக்கிறபோது கல் நெஞ்சும் கரையும்.

    கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச செக்கிழுத்து
    மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்றஐயன்
    சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல் இன்று
    சுதந்திரம் காண்பாயோ சொல்!”

    என்னும் அவருடைய வெண்பாவில் ஒரே தொடரை ஒரு நேரிசை வெண்பாவாக ஆக்கியிருக்கும் சதுரப்பாட்டை அறியலாம். வெண்பாவைத் தளை கொண்டு அளப்பவர் பலர். தமிழ் கொண்டு அளந்தவர் சிலர். அந்தச் சிலருள் நம் வசந்தராசனும் ஒருவர்.
    விண்ணிருந்து கலைஞர் விண்ணப்பம் நீட்டினரோ?
    மண்ணிருந்து போகின்றாய் மன்னவனே!-சண்முக
    நாதனே! அன்பின் சுருக்கெழுத்தே! நம்கலைஞர் 
    சாதனைக்கு நீயன்றோ சான்று!”

    என்பது ஒரு கையறுநிலை வெண்பா. கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதனின் மறைவுக்காக எழுதியது. ஒரு முழுமையான நேரிசை வெண்பா எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான வெண்பா இது. பாட்டில் இருக்க வேண்டிய பதினைந்து சீர்களில் பத்து வெண்பா உரிச்சீர்கள். ஐந்து ஆசிரிய உரிச்சீர்கள். எட்டு வெண்சீர் வெண்டளை. நான்கு இயற்சீர் வெண்டளை. முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் பொழிப்பு மோனை. மூன்றாம் அடியில் ஒரூஉ மோனை. முதலடியில் பொழிப்பெதுகை. இரண்டாம் அடியில் மேற்கதுவாய் எதுகை. நான்கடி வெண்பாவில் இரு விகற்பங்கள். ‘சண்முக நாதனே!’ என்பதில் வகையுளி. சுருக்கெழுத்தராய் வாழ்வைத் தொடங்கியவரைச் ‘சுருக்கெழுத்தே!’ என்று அழைக்கும் கவிதை நயம்! இத்தனையும் நிறைந்த பாடல் இது. தங்கு தடையின்றிப் பொங்கி வரும் உணர்ச்சியை யாப்புக்குள் இறக்கி வைக்கிறபோது கட்டுமானம் சிதைவதற்குக் காரணமில்லை. இலக்கிய நயமும் குறையாது. தொடை விகற்பங்களுக்கும் சேதாரம் இல்லை.

    4.1. வெண்பா அந்தாதி

    சோதனை முயற்சி என்பது அறிவியலுக்கு மட்டுமன்று. கவிதைக்கும் பொருந்தும். அந்தாதி என்பது யாப்பு முறை அன்று. தொடையழகு. எந்த யாப்பிலும் அந்தாதி எழுதலாம். இலக்கியம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் மாலை, சதகம், அந்தாதி, கலம்பகம் முதலிய இலக்கியங்களே அந்தாதித் தொடையில் அமையும். நால்வர் நான்மணிமாலை, திருச்சதகம், அபிராமி அந்தாதி, நந்திக் கலம்பகம் முதலியன அவ்வாறு அமைந்தவற்றுள் சில. நம் வசந்தராசன் வெண்பாவில் அந்தாதி பாடியிருக்கிறார். அதாவது அந்தாதி இலக்கியத்தை வெண்பா யாப்பில் பாடியிருக்கிறார். மரபு காக்கும் மாண்பால் மறக்காமல் அதற்கு அந்தாதி மாலை என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். வெண்பாவில் அமைந்த நூல்கள் உண்டு. ஆனால் அந்தாதி உண்டா என்பது தெரியவில்லை.

    பார்போற்றும் எங்கள் பகுத்தறிவுத் தந்தையெனக்
    கூர்சொற்கள் தேர்ந்தே கொடைசெய்தார்! —சீரசையால்
    மாலைகட்டி  நம்மின் மனமாளும் சந்தனப்பாச்
    சோலையெனத் தந்தார் சுடர்! (1)

    என்று தொடங்கி அந்தாதியால் நடத்திச்,

    சீர்தந்து பாட்டால் சிறைசெய்யும் பேராற்றல்
    ஆர்தந்தார் ஆனந்தா? பேரன்பே! –நேர்தந்த
    வேர்முகத்தில் கார்மழைபோல் வெற்றி பேர்கொடுக்கும்!
    பார்பெறுவாய் பாட்டுக்குப் பார்!”

    என்னும் இறுதிப்பாட்டை நூலைத் தொடங்கிய சீராலேயே முடித்தும் காட்டியிருக்கிறார். வடிவத்தில் புதுமை காணும் முயற்சி இது. பொதுவாகப் பாட்டுக்குத்தான் தொடையழகு. ஆனால் அந்தாதி நூல் முழுமையும் விரவிக் கிடப்பதால் நூலுக்கே அழகாக அமையும். ஏனைய தொடைவிகற்பங்களுக்கு இல்லாத பெருமை இது.

    4.2. எவரும் அறியாத இன்னிசை வெண்பாக்கள்

    “நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி அமைந்தால் அது இன்னிசை வெண்பா” என்றே பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. ஆனால் படைப்புக்கள் கவிஞனின் சிந்தனையோடு தொடர்புடையதேயன்றி இலக்கணத்தோடு தொடர்புடையது அன்று. அந்த அடிப்படையில் சிந்தித்தால் சில வினாக்கள் தோன்றும். ஒரு நேரிசை வெண்பாவில் இரண்டாம் அடியில் அமைய வேண்டிய தனிச்சொல் மூன்றாம் அடியில் அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியின் இறுதியிலும் முதற்சீருக்கு ஏற்ப ஒரூஉத்தொடை பெற்றமைந்தால் என்ன செய்வது? இரண்டு எதுகைக்குப் பதிலாக நான்கு எதுகையாக அமைந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்தால் என்ன செய்வது? ஒரு நேரிசை வெண்பாவின் ஒரு சீர் கனிச்சீராக அமைந்து போனால் அந்த அருமையான பாட்டைத் தள்ளிவிட முடியுமா? இந்த வினாக்களுக்கு விடை காணும் முயற்சியை இதுவரை எழுதிய எந்த மரபுக்கவிஞரும் தம் சிந்தனையில் கொள்ளவில்லை. ஒன்றும் பலவும் ‘விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை துன்னும்’ என்ற யாப்பருங்கலக்காரிகை இலக்கணத்தில் அமைந்த ‘துன்னும்’ என்ற மிகைச்சொல்லால் (விதப்புக்கிளவி) உரையாசிரியர் மேற்சொன்ன ஐயங்களைக் கிளப்புகிறார். அவ்வாறு அமைந்த வெண்பாக்களையெல்லாம் இன்னிசை வெண்பாவிலேயே அடக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு தரமான விதிவிலக்கையும் எடுத்து மொழிவதை மரபுக்கவிஞர்கள் மறக்காமல் நினைவிற் கொள்ள வேண்டும். வசந்தராசனும் இதற்கு விதிவிலக்கல்லர். ஆனால் அவர் எல்லா யாப்பையும் படைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒருசில யாப்புக்களையே பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. யாப்பே மரபு என்னும் கருத்துடையோர் கொள்ள வேண்டிய கவலை இது.

    தமிழ் மரபியல் யாப்பு நெகழ்ச்சியுடையது. சான்றாக வெண்பாவை எடுத்துக் கொள்ளலாம். எப்படி எண்சீர் விருத்தம் தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா என்னும் அரையடிக் கட்டுமானத்திலிருந்து காய் காய் மா மா என்னும் கட்டுமானத்திற்கு இறங்கி வந்து நின்றதோ அதுபோல் தான் வெண்பாவும். இப்பொழுது எந்தக் கவிஞரும் வெண்பாவிற்கு உரிய செவ்வையான கட்டுமானத்தில் எழுதுவதில்லை.

    ‘தன் சீர் தனதொன்றின் தன் தளையாம்’ என்றால் காய்ச்சீர் நின்று மற்றொரு காய்ச்சீர் வந்து அதன் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. அதாவது தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நின்று வருகின்ற தேமாங்காய் கூவிளங்காய் என்னும் மூவசைச்சீர்களின் முதலசையோடு ஒன்றுவதுதான் வெண்சீர் வெண்டளை. இவ்வாறு கட்டமைக்க இயலாத நிலையில் நின்ற சீருக்குத் தளை பார்த்தால் போதும் என்று தளர்ச்சி கண்டதுதான் தமிழ்யாப்பு. வெண்பா அந்தணர் பா என்கிறார்கள். வெண்பாவிற்கென்று வெண்பா உரிச்சீர் இருக்கிறபோது வெண்பாவிற்கென்று உரிய தளைதானே அதில் வரவேண்டும்? ஆனால் நிலைமை அவ்வாறு இருக்கிறதா? இல்லையே! கட்டிக் கொள்கிறவன் ஒருவன் கலந்து கொள்கிறவன் இன்னொருவனா? காய்ச்சீர் நான்கும் நின்று வருஞ்சீர் எதுவாயினும் அவற்றின் முதலசையோடு ஒன்றினால் அது வெண்சீர் வெண்டளையாம். பொருந்துமா? அதனைவிடக் கொடுமை ஆசிரிய உரிச்சீர்களின் உறழ்ச்சியிலிருந்து பெறப்படும் தளைக்கு இயற்சீர் வெண்டளையாம். வெண்சீரில் வெண்டளை என்றால் இயற்சீரில் இயற்றளைதான் வருமேயன்றி வெண்டளை வருமா? ஆனால் அது இயற்சீர் வெண்டளையாம். அந்த இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வெண்பாவில் வரலாமாம். இதனைத் தான் நாம் நெகிழ்ச்சி என்கிறோம். கொச்சையாகச் சொல்லப் போனால் நம்முடைய இயலாமையையெல்லாம் இலக்கணமாக்கிவிட்டோம்.

    இதே நிலைதான் பாக்களின் வகைகளுக்கும். தமிழ் யாப்பின் நெகிழ்ச்சித் தன்மையைக் குறிப்பதற்குப் பாக்களின் வகைகளின் பாகுபாடே போதிய சான்றாகும். குறள் வெண்பாவிற்கு மட்டுமே இலக்கணம் உண்டு. இரண்டு குறள் வெண்பா இணைந்தால் அது நேரிசை வெண்பா. நாலடியாலான நேரிசை வெண்பா தனிச்சொல் இன்றி வந்தால் அது இன்னிசை வெண்பா. தனிச்சொல்லோடு மூன்றடியால் நடந்தால் அது நேரிசைச் சிந்தியல் வெண்பா. தனிச்சொல் இல்லாமல் மூன்றடியால் நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. பல அடிகளால் வந்தால் அது பஃறொடை வெண்பா. “தட்டிப் போட்டால் வடை. உருட்டிப் போட்டால் போண்டா” என்ற கதைதான் தமிழ்க்கவிதைகளின் யாப்பு நெறி என்பதை உயத்துணர வேண்டும். குறள் வெண்பா மட்டும் எழுதத் தெரிந்தவனுக்கு எந்த வெண்பாவும் எழுத முடியும் என்பதுதான் நடப்பியல் உண்மை. ஒரே சிலப்பதிகாரத்தை வைத்துப் பல பட்டங்களைப் பெறுவது போன்றது இது.

    இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதியிருக்கும் சில இன்னிசை வெண்பாக்களின் கட்டுமானத்தை ஆராயலாம்.

    ஊற்றுப் பெருக்கெடுக்கும்ஓடி கடல்குடிக்கும்!
    சேற்று வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்!
    காற்றின் வியர்வைக்கும் கைவிசிறி யாகுமதை
    ஆற்றுப் படுத்துவ தார்?”

    காய்ந்தாலோ மேகம்கவிழ்ந்தால் மழை!காற்றில்
    சாய்ந்தால் புயலாகும் சாட்டை! சுழன்றே
    ஓய்ந்தபின்னும் சொட்டுக்குள் ஓர்வான வில்வளைத்துப்
    பாய்ந்து உளம்திருடும் பார்!”

    மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு இவ்வெண்பாக்கள் நேரிசை வெண்பாவிலிருந்து மாறுபட்டுத் தனிச்சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து எழுதப்பட்டதாகத் தோன்றலாம். உண்மை அதுவன்று, கவிஞன் எழுதுகிறபோது சீர்கள் தன்னிச்சையாக அமைகின்றன. அவை தனிச்சொல்லாகவும் தோன்றலாம். தொடரில் அமைந்த சீராகவும் தோன்றலாம். ‘தனிச்சொல்’ என்னும் சொல்லாட்சி பாட்டுக்குத் தொடர்பில்லாத ஒரு சொல் என்னும் கருத்தியலைத் தாங்கி நிற்பதன்று. இடத்தால் பெயர் பெற்ற சொல். சான்றாகச் ‘சேற்றில் வயல்புரண்டு செம்மை பசிதணிக்கும்’ என்பது ஒரு தொடர். மேலே காட்டிய நேரிசை வெண்பாவில் அமைந்த ‘மன்னவனே சண்முக நாதனே! என்பதும் அவ்வாறு விழுந்த சீர்களேயன்றிப் பதிந்த சீர்கள் அல்ல. ஒன்று முதலடியின் முதற்சீருக்குகந்த எதுகையாக அமைய மற்றொன்று அவ்வாறு அமையவில்லை. அமைந்தால் நேரிசை! அமையாவிடின் இன்னிசை! வேறு எந்த இலக்கண மாற்றமும் இல்லவே இல்லை!

    வானைத்தன் கால்விரலில் வைத்திருக்கும் பேரண்ட
    மோனப் பெருவெளியின் முன்முட்டை ஓடதனைத்
    தானே உடைத்துவந்த தன்மானத் தாய்த்தமிழே!
    கூனல் சிறிதின்றிக் குத்தீட்டி போல்நிற்கும்
    மானத் தமிழ்மறவர் மன்றம் வருபவளே!
    சீனப் பெருஞ்சுவரைச் சின்னதாய்க் காட்டுகின்ற
    ஞானச் செருக்குகளின் நாற்றங்கால் ஆனவளே!
    ஏனமாய்ப் பூவிருந்து ஏந்தியுனைப் பரிமாற
    மோனையாய் முந்துகின்ற முத்தமிழே! சங்கத்தின்
    மானத் தமிழ்மடியாய் மல்லர்கள் தோள்நின்று
    நாணச் சுரப்பிகளின் நாவிருந்த காதலுக்கு
    மோன மொழிகொடுத்து முத்தமழை பெய்தவளே!
    ஊனம் சிறிதுமின்றி உயிர்ப்பாட்டில் தீவளர்த்து
    கான மொழிமழையில் காதல் நனைத்தவளே!
    வீணர் விரலெழுத்தில் விற்கத் துடிக்கையிலும்
    பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே எழுந்துவந்து
    ஆனமட்டும் கீழடியின் ஆழப் புதையலெனக்
    காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!
    கோணல் உலகத்தின் கோடாய் உயர்ந்தவளே!
    நாணல் உலகின் நரம்பறுத்து நிற்பவளே!
    வீணில் விருந்தாக்க வேற்றுமொழி தான்கலந்து
    வானில் பருந்தெனவே வாய்பிளந்து நிற்போரைத்
    தேனில் விடம்கலந்து திண்ணைகளில் விற்போரைச்
    சாணைப் பிடிநீ! எமக்குச் சங்கத்தமிழாய்
    வாநீ! தமிழே!வளர்பிறை மட்டுமினி!
    ஆணை! தமிழே! அறி!”

    என்பது அவரெழுதிய பஃறொடை வெண்பாக்களில் ஒன்று. வெண்பாக்களுக்குரிய சீர், தளை, அடி வரையறை, இறுதி நிலை வாய்பாடு ஆக அத்தனையும் அமைந்து செப்பலோசை குன்றாது அமைந்த பஃறொடை வெண்பா இது. இந்தப்பாட்டின் தொகைவிகற்பங்களைச் சுட்டி எழுதப்போனால் அது தனிக்கட்டுரையாக விரியும் என விடுக்கப்படுகிறது. “மோனையாய் முந்துகின்ற முத்தமிழே!”, வீணர் விரலெழுத்தில் விற்க”, “வீணில் விருந்தாக்க வேற்றுமொழி”, “பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே என்றெல்லாம் அமைந்திருக்கும் கூழையும் காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!” என்னும் முற்றும் பொங்கலில் முந்திரியாய்ப் புன்னகைக்கும் பொழிப்பும் ஆகிய தொடைவிகற்பங்களோடு வசந்தாராசன் பாராட்டு சொந்தம் கொண்டாடுகிறது.

    5.0. மரபார்ந்த வடிவமும் மாற்றமும்

    கலிப்பா ஒத்தாழிசைக்கலி, கொச்சகக்கலி, வெண்கலி, கலிவெண்பா என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக்கலி மூன்று வகையாகவும் கொச்சகக்கலி ஐந்து வகையாகவும் அமைந்து, ஏனைய இரண்டும் இணைய கூடுதல் கலிப்பா பத்து வகைப்படும். கலிப்பாவின் இனங்கள் தனி. இவற்றுள் கொச்சகக்கலி தரவு கொச்சகக்கலி, தரவிணைக் கொச்சகக்கலி, மயங்கிசைக் கொச்சகக்கலி, சிஃறாழிசைக் கொச்சகக்கலி, பஃறாழிசைக் கொச்சகக்கலி என ஐவகையாக அமையும். அவற்றுள் தரவு கொச்சகக்கலிப்பாவில் வசந்தராசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். மணிவாசகப்பெருமான், ஆண்டாள், பெருஞ்சித்திரனார் முதலியோர் தரவு கொச்சகக்கலியை எட்டடித் தரவாகவே எழுதியிருக்கின்றனர். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆரும் அறிந்ததனால் பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப்பாவையிலிருந்து ஒரு பாடல் காட்டப்படுகிறது.

    கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்? மான்விழியே! நாட்டுநலம்
    உற்றசிலர் நின்றே உரிமைதரக் கேட்டாலோ
    கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
    குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையில் தள்ளுகின்றார்!
    முற்றும் தமிழரினம் மூங்கையதா போகுமுனம்
    பெற்ற குலத்தோரே! பேருரிமை காக்கவல்லார்!
    பொற்றொடியே துஞ்சல் புரையேலோர் எம்பாவாய்!”

    வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வந்த இந்தக் கொச்சகக்கலிப்பா எட்டடித் தரவினைக் கொண்டது. வசந்தராசன் இதே கொச்சகக்கலிப்பாவைப் பத்தடித் தரவைக் கொண்டு அமைத்திருக்கிறார்.

    ஊரின் இருபுறமும் ஓய்ந்த இருகுளங்கள்!
    தேரின் வடமாய்த் தெருக்கள்இவைநடுவே
    சீராய்ப் பிரித்தபடிச் செல்லும் நடுச்சாலை!
    நாரின்பூக் கட்டெனவே நன்றிணைந்த வீடுகள்முன்
    பேரின்பம் பேசும் பெருந்திண்ணை! சூழ்ந்திருக்கத்
    தூரெடுத் தூட்டும்  துணைதொடக்கப் பள்ளி !ஆங்குப்
    பேரெடுத்தப் பேர்கள் பெருங்கூட்டம்!காலையிலே
    ஏரின் கலப்பைக் கெழுந்தூதும் சங்குகள்!
    நீரின் நிலைதேடி நீளும் இடைகுடங்கள்!
    சேரக் கிடைப்பதுகாண் செந்தமிழூர் எம்பாவாய்!”

    பாவை இலக்கியம் படைப்பதிலும் அதனை வெண்டளை விரவி வரும் கொச்சகக்கலியால் பாடுவதிலும் மரபினைப் பின்பற்றும் வசந்தராசன், அதனைப் பத்தடித் தரவாகப் பாடி மரபில் மாற்றம் செய்வதைக் காணமுடிகிறது. இந்த மரபு மாற்றத்தை அவ்வளவு எளிதில் யாரும் கண்டறிய முடியாத வண்ணம் பாட்டின் கட்டமைப்பு அமைந்துவிடுவதை உணர்தல் வேண்டும்.

    6.0. சந்தச் செல்வங்களான சிந்துகள்

    சிந்து இலக்கியம் பற்றிய இலக்கண விதிகள் பிற்காலத்திய வீரசோழியம், பஞ்சமரபு முதலிய நூல்களில் காணக்கிடக்கின்றன. சிந்தினை இயற்றமிழ்ச் செய்யுட்களாகக் கொள்வாரும் நாட்டுப்புற இலக்கிய வடிவமாகக் கொள்வாரும் என இருதிறத்தார் உளர். மக்கள் வழக்கின்றிச் செய்யுள் வழக்கு அமையாதாதலின் எல்லா இலக்கிய வழக்கும் மக்களுக்குக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் சிந்து பெரிதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எழுத்து வடிவ இலக்கியங்களைப் பாவெனக் குறித்த தொல்காப்பியம் எழுத்து வடிவம் இல்லாத மக்கள் இலக்கியங்களைப் பண்ணத்தி என்னும் சொல்லால் குறித்தது என்பதை அறிதல் வேண்டும்.

    “பாட்டிடைக் கலந்த பொருளவாகிப்
    பாட்டின் இயல பண்ணத் திய்யே”

    என்பது தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவாகும். இதற்கு உரையெழுதிய பேராசிரியர்,

    இஃது எழுதும் பயிற்சியில்லாத புறஉறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்பஎன்பது நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும் முதலாயின

    என்று விளக்கிக் காட்டுகிறார். தொல்காப்பியம் குரவை, வள்ளை முதலிய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைக் கூறுகிறது. ஏர்மங்கலம், முகவைப்பாட்டு, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை, கொடிச்சியர் பாடல், வேலன் பாணி, வள்ளைப் பாட்டு, உழவர் ஓதை, கழங்காடு மகளிர் பாணி என்பனவெல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் ஆகும். இவற்றை நோக்க, புலவர் பெருமக்கள் ஒருபுறம் செவ்வியல் இலக்கியங்களை வளர்க்க, மக்கள் தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளில் இத்தகைய இலக்கியங்களை வளர்த்து வந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். செவ்வியல் இலக்கியங்களில் திருவாசகத்தில்தான் எண்ணற்ற நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை மணிவாசகப் பெருமான் பயன்படுத்தியிருக்கிறார். பதின்மூன்றாம் நூற்றாண்டில் திருவாழி பரப்பினான் கூத்தன் என்பார் எழுதிய பெயர் தெரியாத சிந்து இலக்கியமே தமிழின் முதல் சிந்து இலக்கியமாகும் என்பது அறிஞர் மு.அருணாச்சலனார் அவர்கள் ஆய்வு முடிவு. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுள் ஒன்றான சிந்தின் இலக்கணத்தைப் பின்வருமாறு வரன்முறை செய்யலாம். வரன்முறை விதியாகாது. விதிக்குக் கவிதை உட்படாது.

    1. சொற்களோ அடிகளோ மடங்கி வருதல்
    2. தனிச்சொல் பெறுதல்
    3. எதுகை மோனைகளுடன் இயைபும் பொருந்தி வருதல்
    4. கண்ணிகளாக அமைதல்
    5. ஒலிநலன் உடைமை
    6. உறுப்புக்கள் உடைமை
    7. தாளகதியில் அமைதல்
    8. எளிய நடை

    என்னுமாறு அமைந்தவையெல்லாம் சிந்துகளே. புலவர் குழந்தை முதலிய யாப்பறி வல்லார்கள் சிந்துகளை வளையல் சிந்து, வழிநடைச் சிந்து, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, தெம்மாங்கு என்றெல்லாம் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அப்பெருமக்கள் எல்லாம் பாடிய இலக்கியத்திற்குத்தான் வடிவம் அமைத்திருக்கிறார்களேயன்றி இப்படித்தான் பாடவேண்டும் என இலக்கணவிதிகளை வகுக்கவில்லை என்பதைக் கற்பார் உணர்தல் நலம். வகுக்க இயலாது என்பது நடப்பியல். சிந்து பற்றிய விரிவான ஆராய்ச்சி செய்திருக்கும் புதுவை திருமுருகனார் சிந்துகள் இலக்கண வரையறைக்குள் உட்பட வாய்ப்பில்லை என்பதைத் தாம் எழுதிய சிந்து இலக்கியம் என்ற நூலில் குறிப்பாகக் கூறியிருக்கிறார். தற்காலச் சிந்துகளுக்கு வடிவ மூலம் வழங்கியவர்கள் சித்தர்களே! அவருக்குப் பின்னால் சிந்துக்குப் பேரரசர் என்னும் உண்மையான பட்டம் கட்டிக் கொண்டவர் அண்ணாமலை ரெட்டியாரே. இந்தப் பின்புலத்தில் வசந்தராசன் எழுதிய சிந்துகளின் அமைப்பை ஒப்பீட்டு வகையால் ஆராய்வது படைப்பாளியின் உணர்ச்சிக்கும் படைப்பின் வடிவத்திற்குமான உறவைப் புரிந்த கொள்ள ஏதுவாகும்.

    பாலைவனங்களும் பட்டுடுத்த இனி
    பாட்டுத் தறியினை நெய்திருப்போம்!
    நாளைச் சரித்திரம் நாம் படைப்போம் அதை
    நல்ல சரித்திரம் ஆக்கி வைப்போம்

    என்று எழுதியிருக்கும் வசந்தராசன் இன்னொரு சிந்தினை இப்படி எழுதியிருக்கிறார்.

    எள்ளில் கிள்ளலில் என்னைப்படி! எனை
    ஏற்பதில் ஏனின்னும் தயக்கமடி? தினம்
    முள்முடி சுமக்கவா மூளையடி நான்
    மீண்டும் உயிர்த்திட வேண்டுமடி!”

    இந்தச் சிந்தில் அளவொத்த இரண்டடிகள் அமைந்து ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் பெற்று வந்திருப்பதைக் காணலாம். மேலே காட்டிய சிந்தில் கண்ணிக்கு ஒரு தனிச்சொல். இங்கே ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல். கவிஞனின் உணர்ச்சிக்கு ஏற்பவே வடிவம் அமையுமேயன்றி எந்த இலக்கணமும் அவனைக் கட்டுப்படுத்தாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்டால் அது கவிதையாகாது.

    கன்னத்தில் கனிமுத்தம் தந்து உடல்
    கட்டிவிட்டான் கவிதை கைப்பந்து எந்தன்
    எண்ணத்து எழுங்கவிதை
    எழிலாக்கிப் பாடிடுவான்
    வந்து வண்டின் சிந்து!”

    என்றெழுதப்பட்டிருக்கும் சிந்து அண்ணாமலை ரெட்டியாரின்,

    “பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
    பக்கத்தில் வந்து மேவிப் – பஞ்ச
    பாதகன் ஒரு பாவி – சிறு
    பாவையை மெள்ளக் கூவி — கையைப்
    பற்றிக் கொண்டேகினான், பதை
    பதைக்குதே என்றன் ஆவி!”

    என்னும் சிந்தினை எண்ணத் தூண்டுகிறது. சித்தர்கள், வள்ளற் பெருமான், பாரதி, பாரதிதாசன் முதலிய எவராயினும் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச் சிந்தின் குறைந்த அளவு வடிவக் கோட்பாட்டைக்கூடப் பின்பற்ற இயலவில்லை என்பது அவர்களுடைய படைப்புக்களிலிருந்து தெளிவாகும் உண்மையாகும். இன்று கிட்டியிருக்கும் இருபத்து நான்கு பாடல்களிலேயே சந்தத்தின் அத்தனைப் பரிமாணங்களையும் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரெட்டியார். சந்தச் சிந்துகளுக்கு உயிராக அமைவன எதுகை, மோனை. இவற்றையும் விட இயைபு.

    சிந்தி வைத்தநம் குருதித் துளியெலாம்
    சேர்ந்து ஒன்றென ஆகுது! – தினம்
    வெந்த சோற்றுக்கே நொந்து வாழ்கிற
    வேதனை எல்லாம் தீருது!”

    என்னும் வசந்தராசன் எழுதியுள்ள சிந்தில் எதுகை, மோனை, இயைபு ஆகிய அனைத்தும் இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். பொழிப்புச் சந்தங்களை நிரல்படக் கோத்து ஒரு புதிய வகைச் சிந்தினை வசந்தராசன் எழுதியிருக்கிறார்.

    பொன்னும் பொருளுமொரு மண்ணில் வைரமலை
    என்னை மயக்கவில்லை தாயேகேள்!
    பண்ணும் பரதமொடு இன்னும் பலவிருந்தும்
    என்னை மயக்கவில்லை தாயே! – அட
    மின்னல் விழியிரண்டில் கன்னல் மொழியிருந்தும்
    பெண்ணும் மயக்கவில்லை தாயே! – நீ
    தன்னந் தனியே வந்து என்னை ஈர்த்துவிட்டாய்!
    தாள்களிலே நான் பணிந்தேன் தாயே!”

    கவிதைகளின் மென்மையை மெல்லினங்கள் மேலும் மென்மையாக்கும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு.

    கடல் சுருங்கி அலையாக மாறும் உன்றன்
    காலடியில் வால்சுருட்டி வீழும்!
    மடலெழுதிச் சூரியக் கை நீளும் உன்றன்
    மலர்ப்பாத விரல் சொடுக்கிக் காயும்!
    நடைபாதை மணற்பூக்கள் விரியும் நீ
    நடனமிட நண்டு வனம் சிரிக்கும்!
    கடன் வாங்கி மேகம் குடை பிடிக்கும் உனைக்
    கண்டதுமே அடிவானம் சிவக்கும்!”

    ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்னும் சிந்தில் ஒவ்வொரு வரியிலும் தனிச்சொல் வரும். வசந்தராசனின் இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் வந்து சந்தம் நிறைப்பதைக் காணலாம். முதலிரண்டின் அடிகளின் ஈற்றியைபு தேமாவில் அமைய இறுதியிரண்டடிகளின் ஈற்றியைபு புளிமாவில் முடிந்திருப்பது காண்க. வசந்தராசன் எழுதியுள்ள அனைத்துச் சிந்துகளும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் அறிக.

    கட்டுரைச் சாரம்

    பண்ணைக் கவிக்கோ துரை.வசந்தராசனின் கவிதைகள் சிலவற்றை ஆய்ந்து அவற்றில் கண்ட வடிவக் கோட்பாடுகள் பற்றிய கருத்துக்கள் பின்வருமாறு தொகுத்துரைக்கப்படுகின்றன.

    • அசை, சீர், தளை ஆகியவற்றின் முறையான அமைப்பு ஒலிவகை தோன்றுவதற்குக் காரணமாயினும் நுட்பமான ஒலியமைப்பை உள்வாங்கிக் கொண்டு படைக்கும் கவிதைகளிலேயே மேற்சுட்டிய செய்யுட் கூறுகள் அமைந்திருக்கும் என்னும் யாப்பியல் நுண்ணியத்தை அவருடைய கவிதைகள் காட்டுகின்றன.
    • கவிதையின் பாடுபொருளுக்கும் உணர்ச்சிக்கும் இவற்றை வெளிப்படுத்தும் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அவருடைய கவிதைகள் உறுதி செய்கின்றன.
    • தொல்காப்பியத் தொடைவிகற்பம் பதின்மூன்றாயிரத்து அறுநூற்று தொண்ணூற்றொன்பது (13699) என்பது தமிழ்மக்களின் கவிதைச் சுவையுணர் திறத்தினைக் காட்டும் அளவுகோலாகும்.
    • வசந்தராசனின் கவிதைகளில் நான்குவகை ஆசிரியப்பாக்களைத் தவிர, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, பல்வகை ஆசிரிய விருத்தங்கள் கையாளப்பட்டுள்ளன.
    • கொச்சகக்கலியைப் பாவைக்கு உரித்தாக்கியிருக்கும் இவர் ஆசிரிய விருத்தங்களில் அமையும் பல்வகை வடிவங்களையும் கையாண்டிருக்கிறார்.
    • எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் மற்றும் அறுசீர் விருத்தங்கள் மட்டுமே ஒருவரை மரபுக்கவிஞர் எனச் சுட்டுவதற்குப் போதுமானவையாகா என்னும் கருத்து அவர்க்கு உடன்பாடே.
    • ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி யாப்பு கொண்ட எண்சீர் விருத்தத்தில் மூன்றாவது சீரைப் பெரும்பாலும் புளிமாவில் அமைக்காமல் தேமாவிலேயே அமைத்துக்காட்டும் திறன் கண்டறியப்பட்டுள்ளது.
    • சீருக்குள் வாய்பாட்டையும் வாய்பாட்டுக்குள் சீரையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பின்னிப் பிணைத்து நோக்கும் பெருங்கவியாற்றல் இவர்க்கு இயல்பிலேயே கைவரப்பெற்றிருக்கிறது என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.
    • “சிறகுகளின் இறகெழுத்தில் என்னைப் பார்த்தேன்! சிற்றிடையுன் வளைவிருந்து நாணம் பார்த்தேன்! பரபரக்கும் இமையிரண்டின் விளிம்பில் நின்று படும்பார்வை தூரம்வரை நின்று பார்த்தேன்!” என்றவாறு ஓர் அடியை ஒரு தொடராக்கியும் ஈரடியை ஒரு தொடராக்கியும் தங்குதடையில்லாமல் சீர்கோக்கும் பேராற்றல் இவர்க்கு இயல்பு.
    • எதுகை நோக்கி முதற்சீரை அமைக்காமல் எந்தச் சீரையும் தொடக்கச்சீராக அமைத்துத் தொடர்ந்து வரும் சீர்களைப் பொருத்தமாக அமைத்துக் காட்டும் ‘சீராளி’யாகவே இவர் விளங்குகிறார்.
    • எதுகைக்காக இறவாணம் பார்க்கும் இயல்பு இவர்க்கு இல்லை என்பதும் எழுதிய பாக்களிலோ இனங்களிலோ எந்த வகைச் சீரையும் இயல்பாக அமைத்துக் காட்டும் குற்றால அருவியாகவே இவருடைய கவிதைகள் இவரைக் காட்டுகின்றன என்பதும் அறியத்தக்கன.
    • புதிய சொல்லாட்சிகளையும் பழைய சொல்லாட்சிகளையும் தேவை கருதி அளவு நோக்கிப் பயன்படுத்தும் கவி பக்குவம் இவர்க்கு உண்டு.
    • இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை என்னும் கொள்கையைப் பாவேந்தரைப் போலவே இவரும் உடைத்தெறிந்திருக்கிறார்.
    • கவிதைத் திடலில் சிந்துப் பந்துகளை உருட்டி விளையாடுவதில் இவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே காட்சி தருகிறார்.
    • தொடைவிகற்பங்களைக் கணக்கெடுத்துக் கொண்டு கவிதை செய்யாமல், எழுதுகிற கவிதைகளில் அவை தாமாக விரும்பி வந்து அமரும் காந்தத் திறனை இவருடைய கவிதைகள் பெற்றிருக்கின்றன.

    நிறைவுரை

    வாழுகின்ற கவிஞன் ஒருவன் தானறிந்த யாப்புக்களைக் கையாளும் செவ்வியல் பற்றிச் சுருக்கமாக ஆராய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டது. தமிழின் மேற்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களாலும், கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் வெண்பா வகைகளாலும் ஆனவை என்பதையும் விருத்தங்கள் மிகவும் பிற்காலத்தவை என்பதையும் தற்கால ‘மரபுக்கவிஞர்கள்’ உணர வேண்டும். ஓரளவு யாப்பு மரபைப் பின்பற்றியவர்களில் வள்ளற்பெருமான், பாரதி, பாரதிதாசன் ஆகியோர் முக்கியமான இடத்தைப் பெறுகின்றனர். எந்தக் கவிஞனும் எல்லா யாப்புக்களையும் கையாண்டுவிட முடியாது என்பது நடப்பியல். யாப்புக் கட்டுமானமும் தொடைவிகற்பங்களும் பின்னிப்பிணைந்தவை. வடிவமாகிய புறஉறுப்பை அகவுறுப்பாக மாற்றுவதே கவித்திறன். அவையிரண்டும் தம்பி வசந்தராசனின் கவிதைகளில் அரவப்புணர்ச்சிபோல் அங்கம் வகிக்கின்றன என்பதை இக்கட்டுரையால் ஓரளவு தெளிந்து கொள்ளலாம்.

    (தொடரும்…….)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 24

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 24

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    வசந்தராசனின் ‘வானவில் குதிரைகள்’

    அன்புள்ள எழில்!

    மருந்தும் நானும் நலம். மருந்தால் நான் நலம். மருந்து விற்பனையாவதால் கடைக்காரனும் நலம். நீயும் உன் வீட்டாரும் நலமா? கடிதம் எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டதால் இதனை எழுதுகிறேன். கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவருண்டோ? என்பார் சுரதா. அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு அவருடைய ‘வித்தை கர்வம்’ நன்கு தெரியும். உண்மையில் தொடர்கல்வி என்பது அன்றாட நடைப்பயிற்சி போன்றதாகும். கசடாகிய களிம்பு படராமல் இந்த உள்ளம் தெளிந்த நீர்போல் இருப்பதற்குத் தொடர் கல்வி பெரிதும் உதவக்கூடும்.

    கல்வி என்பது கல்வி நிலையங்களில் ஆசிரியரால் கற்றுத்தரும் பாடங்கள் என்பது அதுபற்றிய கிட்டப் பார்வையே. தொலைத்தூரப் பார்வை ஒன்றுண்டு. ‘கண்டது கற்கப் பண்டிதன்’ ஆவான் என்பது. அதே நேரத்தில் ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில!’ என்பதையும் நான் மறந்துவிடக் கூடாது. சல்லாத் துணிபோல் வாழ்க்கை. போலிச் சரிகைபோலப் புத்தகங்கள். இவற்றுள் நீ எதனைப் படித்தால் இதயத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி நீதான் முடிவெடுக்க வேண்டும்.

    நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். நாளும் படிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரையில் சிறுகதை நம்மை ஓடவைக்கும். நாவல் நடக்க வைக்கும். கவிதை பறக்க வைக்கும். நமக்கும் ஓடிப்பழக்கம் உண்டு. நடந்தும் பழக்கம் உண்டு. ஆனால் பறந்துதான் பழக்கமில்லை. கவிதைகளால் பறப்பதையே என் மனம் விரும்புகிறது.

    உனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்குத் தெரியாது. தெரியாது என்பது தெரிந்தும் கவிதை நூல் ஒன்றினை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். நீ படித்து உன் கருத்துக்களை உன் பதிலில் எனக்கு எழுதினால் எனக்கும் தெளிவாகும். இதயமும் நலமாகும்.

    ‘வானவில் குதிரைகள்’ என்ற நூலை என் அன்புத் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கிறார். உண்மையில் அவருடைய பாடல்கள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வேறு சில நண்பர்களுடைய பாடலும் இடம் பெற்றிருக்கின்றன. எனவே இது ஒரு தொகுப்பு நூல்.

    எனக்குத் தெரிந்து எந்தக் கவிஞனும் தொகுப்பு நூல் வெளியிடுவதில்லை. காலைவாரிவிடும் அரசியல் வாதிகளுக்குள்ள பண்பு தற்காலத்தில் கவிஞர்களுக்கும் வந்துவிட்டது. நாற்பது பக்கங்களில் இரண்டு நூல்களைத் தன் பணத்திலேயே அச்சடித்துக் கொள்கிறவன் லெட்டர் பேடை அடித்த பிறகுதான் நூலையே அச்சடிக்கிறான். இவன் எழுதியதை அச்சுக் கோப்பவன் கூடப் படிப்பதில்லை. அது கூட இவனுக்குத் தெரிவதில்லை. தன்னையொத்த கவிஞர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது ஓர் உயர்ந்த பண்பு. பிறர் வளர்ந்தால் தன் வளர்ச்சி பாதிக்குமே என்று நினைப்பவன் கவிஞனாவது இருக்கட்டும்; முதலில் மனிதனாவது எப்போது? ‘அறிஞர் சிலர்’ இருக்கிறார்கள். தங்கள் நூல்களைக் கூட அரசுடைமையாக்க அனுமதி தருவதில்லை. எழுத்துக்களைக் காசாக்கும் உரிமையைத் தந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

    தன்னையொத்தவர்களைத் தன்னோடு அரவணைத்துச் செல்லும் பண்பு, அறிமுகப்படுத்தும் உயர்குணம் தம்பி வசந்தனிடத்தில் உண்டு என்பதற்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.

    வானவில்லின் வண்ணங்கள் ஏழு. அந்த ஏழு வண்ணங்களைப்போல் ஏழு நண்பர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள்.

    நூலைப் பற்றிய புறவுரை இதுதான். நிரம்ப எழுதிவிட்டேன். இனி நூலைப் படித்து உனக்குப் பிடித்தமான வரிகளை அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, எழுதிய கவிஞரையும் பாராட்டும் வகையாக இரண்டு வரிகள் எழுது. உனக்குத் தெரிந்த அளவில் ஏதேனும் குறையிருந்தால் அதனையும் குறிப்பிடு. அது எனக்கும் கவிதையை எழுதியவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். உன் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    *********

    அன்பு மறவா மணிக்கு! வணக்கம்!

    இங்கு நானும் என் குடும்பத்தாரும் நலமே. கடிதம் எழுத முடியவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு. நீ அனுப்பிய கடிதமும் நூலும் வரப்பெற்றேன். என்னைச் செவ்வழிப்படுத்துவதில் உனக்குள்ள ஆர்வத்தையும் நேசத்தையும் நான் சிறிய வயதிலிருந்தே அறிவேன்.

    உன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க இந்த நூலை என்னால் அவ்வளவு எளிதாகப் படிக்க முடியவில்லை. கவிதையைப் படிப்பதற்கும் படித்து உணர்வதற்கும் உணர்ந்து உள்வாங்குவதற்கும் ஒரு தனி முயற்சி தேவைப்படுகிறதோ என்ற ஐயம் வந்துவிட்டது எனக்கு.

    முழுநூலையும் நான் படிப்பதைவிட யாராவது ஒருவருடைய கவிதையைப் பற்றிய என் கருத்தினைப் பதிவிடலாம் என்றே எண்ணி இதனை எழுதுகிறேன். தொடர்ந்த உன் கடிதங்களைக் கண்டு கவிதை கற்கும் கலையை நான் முழுமையாகக் கற்றுக் கொள்வேன் என்றே நம்புகிறேன்.

    தஞ்சை மயிலரசன் சில கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை எல்லாமே என்னைக் கவர்ந்தன என்று பொய்சொல்லி உன்னையும் என்னையும் ஏமாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. இதற்குக் காரணம் கவிதை பற்றிய ஆழமான புரிதல் எனக்கு இன்மைதான். எனக்குப் புரிந்த வகையில் எழுதுகிறேன். பிழையிருந்தால் என்னைத் திருத்தும் முழு உரிமை உனக்குண்டு.

    மயிலரசன் எழுதிய கவிதைகளில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ‘வெளிச்ச வாசல்’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையாகும். அது எந்த பாட்டிலக்கணப்படி எழுதப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் படித்தால் ஓசைஒழுங்கு பிடிபடுகிறது. யாப்பைவிட ஓசை ஒழுங்குதான் கவிதையைத் தூக்கி நிறுத்தும் என்று நீ பல முறை சொல்லியது நினைவுக்கு வருகிறது. கற்பனை குறைவானாலும் உணர்ச்சியும் ஓசையொழுங்கும் இந்தக் கவிதை நூலின் முதற்கவிதையாக இருக்கும் தகுதியை உறுதி செய்கிறது.

    கவிதை கவலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. கண்ணீருக்கு ஊற்றாகிவிடக் கூடாது. சிலபேர் கவிதை எழுதி அவர்களும் அழுகிறார்கள் படிப்பவரையும் அழ வைத்துவிடுகிறார்கள். இருவருக்கும் ஒரே நேர்கோட்டில் விதி விளையாடிவிடுகிறது. “கவிதை கவலையைப் போக்க வேண்டும். நம்பிக்கையைப் பதிய வேண்டும். போராடும் குணத்தைத் துளிர்க்கச் செய்ய வேண்டும்” என்றெல்லாம் நீ சொல்லுவாயே, அந்தப் பணியை இந்தக் கவிதை செய்கிறது.

    சோகத்தின் வரவுகள் காத்திருக்கும் நீ
    சோராதிருந்தால் சுகம் மலரும்!
    காலத்தின் முகவரி மாறுமடா! – உந்தன்
    கரங்களால் துன்பங்கள் தீருமடா!”

    என்று எழுதியிருக்கிறார் மயிலரசன். இந்தப் பாட்டில் சோகத்தின் வரவுகள் என்னும் தொடர் சிந்திக்கத்தக்கது. சோம்பல் உள்ளவனுக்கு வாட்டம் வரிசைகட்டி நிற்குமாம்.

    எரிமலை போலே நீயிருந்தால் அந்த
    இமயமும் உனக்குத் தலைவணங்கும்!
    வானின் வில்போல் நீ வளைந்தால் இந்த
    வையகம் உன்றன் கையடக்கம்!”

    என்னும் பகுதியில் கவித்துவம் களிநடனம் புரிவதை உணர முடிகிறது. கவிதை வெற்றி பெறுவது உத்தியால். கூனிக்குறுகுவது என்பது வேறு. வளைவது என்பது வேறு. உள்ளத்தால் சிறுத்து உடலால் வளைவதுதான் கூனிக்குறுகுவது. கர்ப்பத்தில் குழந்தை அப்படிக் கூனிக்குறுகி அமர்ந்திருக்கும். சத்திமுத்தப் புலவரும் தேரடிக்குக் கீழ்க் கூனிக் குறுகி அமர்ந்திருந்தார் என்று நான் படித்திருக்கிறேன். ‘மனம் கூசவில்லையா?’ என்னும் வழக்கு நோக்குக. மூங்கில் வளைவது அத்தகையதன்று. ‘முடத்தெங்கு’ என்று தென்னையைச் சொன்னாலும் அது நிமிர்ந்து கொண்டே வளைந்து செல்லுமேயன்றிக் குனியாது. அவைபோல மனிதனின் பணிவுக்கு வானவில்லின் வளைவை உவமமாக்கும் அழகியல் சுவைத்து மகிழத்தக்கது.

    சிலர் சிந்தனை நம்மைச் சிந்திக்க வைக்கும். பாம்பு சட்டையை உரிக்கும் என்பதை அறிவோம். பாம்புக்குச் சட்டைபோடுவதை யாராவது அறிவோமா? மயிலரசன் அறிந்திருக்கிறார். இராவணன் போல அவர் எப்போதும் பொதுப்பணித்துறை சாலைகளையே பார்த்து நடப்பவர்போல் தெரிகிறது. போட்ட சாலையைப் பெயர்த்தெடுத்துவிட்டுப் புதிய சாலை போடுவது மேல்நாட்டார் வழக்கம். சாலைமேல் எற்கனவே மாட்டியிருக்கிற தார்ச்சட்டையைக் கழட்டிவிட்டுப் புதிய சட்டையைப் போடுவது நம்மவர் பழக்கம். நெளிவுகள் என்ற குறுங்கவிதையில் இந்த அங்கதத்தை அற்புதமாகச் சித்திரித்துள்ளார் மயிலரசன்.

    நெளிந்து போகும்
    பாம்புக்குச் சட்டை போடுவதுபோல்
    சாலைக்குத் தார்போடுகிறார்களே,
    உரிப்பதற்காகவா?”

    ஆண்டுதோறும் வரவேண்டிய ‘முறை’ முன்னதாகவே வந்து, மீண்டும் தார் போட்டுக் கமிஷன் பெறுவதற்காகவே என்பதை “உரிப்பதற்காகவா?” என்னும் சொல்லில் வைத்துக் காட்டும் அங்கதம் போற்றத்தகுந்தது. பாம்பு உரித்த சட்டையிலிருந்து அதற்குச் சட்டையை மாட்டுவது பற்றிய கற்பனை பெரிதும் போற்றத்தக்கது.

    மனிதனிலிருந்தே மனிதன் தோன்றுவதால் மனிதன் ஒரு மரபுப் பிறவி. எனவே மரபார்ந்த பண்புகளைப் பெற்றிருப்பது, பெற்றிருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். தமிழினம் பல பெருமைகளைப் பெற்றிருந்தது. உலகின் ஆதி மொழி தமிழ் என்பர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைப் பண்பாடென்பர். ‘செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே’ என்பதை அறக்கோட்பாடு என்பர். எல்லா உயிரிகளுக்கும் உணர்வுண்டு என்னும் இருபதாம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்பை மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரையும் தந்தவர்கள் அறிந்திருந்தார்கள். மணிமேகலை அறச்செல்வியாக விளங்கினாள். புலிகூட இடப்பக்கம் வீழ்ந்ததை உண்ணாத வீரம் நம்முடையது. ‘தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே அறம்’ என்பது நமது கொள்கை. ஆனால் இவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்ட கொடுமை எண்ணிச் சில கண்ணிகள் பாடியிருக்கிறார்.

    சங்கத்துப் பரம்பரையில் செந்தமிழன் சேர்த்து வைத்த
    தங்கப்பண் பாட்டெங்கே? தரணிக்கோர் முகமெங்கே?
    தட்டானின் பட்டறையில் தகரத்தின் அடிமைகளாய்
    சுட்டாலும் சுரணைகெட்ட விட்டில்களாய்த் தொண்டர் கூட்டம்!
    வெட்டாட்டுக் கொட்டகைக்கு வெள்ளாட்டு ஊர்வலம் போல்
    முட்டாளாய்த் தன்தலையில் முடிசூட வாக்களிப்பார்!
    பஞ்சத்தைப் பாய்விரித்துப் படுத்துறங்கும் பாவிமக்கள்
    லஞ்சப்பேய் நெரிசலுக்குள் லட்சியத்தை மறந்துவிட்டார்!
    சாதிகளை நட்டுவைத்துச் சமத்துவத்தைப் பேசுகின்ற
    சூதர்களின் ராச்சியத்தில் சொக்கிவிட்ட தமிழகமே!
    நாற்காலி வெறிபிடித்து நலங்காத்த நண்பனையும்
    ஆள்காட்டும் நரிகளெல்லாம் அருந்தமிழர் சந்ததியா?
    புத்தொளியே பிறக்கட்டும்! புத்துணர்ச்சி பெற்ற தமிழ்ச்
    சத்தியங்கள் வருமுன்நான் செத்தாலும்; தமிழனல்ல!”

    என்று உணர்ச்சி மேலிட எழுதியிருக்கிறார். கவிஞனும் மனிதன் தான். விருப்பு, வெறுப்பு என்பன அவனுக்கும் உண்டு. இருந்தாலும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் அதனையும் தன் சமுதாயத்திற்காக எழுதுவதற்கும் எல்லாருக்கும் மனம் வராது. இவருக்கு வந்திருக்கிறது. ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதற்கான காரணங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். பாரதிதாசன் சொல்வதைப் போல இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்’ அவ்வாறு மீட்டெடுக்கும் வரைத் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன் என்னும் இந்தக் கவிஞரது உணர்ச்சி எல்லாருக்கும் வருமா?

    இறுதியாக அவர் விபத்து என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் ஒரு சொல்விளையாட்டாகவே இருந்தாலும் பல நல்ல கருத்துக்களைத் தொகுத்துரைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு சொல்லையே தொடரில் பயன்படுத்தி எழுதுவது இடைக்காலத் தமிழ்க்கவிதைக் கோட்பாடுகளில் ஒன்று. அது இன்றும் தொடர்கிறது.

    இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
    உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவதுண்டோ?
    மைவண்ணத்து அரக்கிப் போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்
    கைவண்ணம் அங்குக் கண்டேன்! கால்வண்ணம் இங்குக் கண்டேன்!”

    என்று கம்பன் பாடுவான். அதனை வள்ளற் பெருமானும் பாவேந்தரும் சுரதாவும் கண்ணதாசனும் வைரமுத்தும் பின்பற்றி எழுதியிருக்கிறார்கள்.

    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
    வீணைக்கு மேலா..டை நரம்புகளின் கூட்டம்.!.
    கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்!
    கனவுக்கு மேலா..டைதொடர்ந்து வரும் தூக்கம்!..
    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்!
    மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்!
    மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு!
    மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு!
    பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
    பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்!”

    என்ற சுரதாவின் பாடல் காலத்தால் அழிக்க இயலாத கற்பனை வளம் சார்ந்தது. உன்னைப்போல் அவரும் குணத்தால் கெட்டழிந்தவர். பணிவு என்பதே உங்கள் இருவருக்கும் கிடையாது. அவர் சமரசம் செய்து கொண்டிருந்தால் தமிழ்த் திரையுலகின் முடிசூடா கவிமன்னர் அவராகத்தான் இருந்திருப்பார்.

    என்பிறப்பு இவ்வுலகில் விபத்து என்றால்
    இறைவனுக்கே நன்றிசொல்வேன்! அடடா! அன்று
    என்னவளைக் கண்டெடுத்த காதல் கூட
    இருவிழிகள் மோதி நின்ற விபத்தால் இன்பம்!
    வண்டொன்று மலர்மடியில் விழுந்து விட்டால்
    வாழ்த்துப்பா பாடுகின்ற மலர்கள் கூட்டம்
    வஞ்சிதரும் எதிர்பாரா முத்தம் ஒன்றை
    விபத்தென்று சொல்லிவிட்டால் விரும்பார் உண்டா?
    கரும்புக்கு விபத்தென்றால் வாயி னிக்கும்!
    கல்லுக்கு விபத்தென்றால் கலையினிக்கும்!”

    என்றெல்லாம் மயிலரசன் எழுதிக்காட்டுகிறார். மரபுக்கவிதை என்பது இதுதான். விருத்தத்தில் எழுதுவதனாலே இது மரபுக்கவிதை என்பது அறியாமை. முன்னோர்களைப் பின்பற்றி எழுத வேண்டும்.

    நூல் அனுப்பினாய். படிக்க முயன்றேன். முடிந்ததை எழுதினேன். உன்னைப்போல் நுட்பமாக எனக்கு படிக்கத் தெரியாது. எனவே எழுதவும் தெரியாது. வழக்கம் போல என்னை வழிநடத்து. அடுத்த மடல் இன்னும் சிறப்பாக எழுத முயல்வேன். உன் மடலை எதிர்பார்க்கிறேன்.

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு! வாழ்த்துக்கள்!

    மலையரசன் கவிதைகள் பற்றிய உன்னுடைய அழகான அருமையான திறனாய்வைக் கண்டேன். இந்த அளவுக்கு உனக்குக் கவிதைச் சுவை அறிய இயலும் என்பது உறுதியாக எனக்குத் தெரியாமற் பேனாதற்கு வருந்துகிறேன்.

    கவிதையைச் சுவைப்பது பற்றிய கோட்பாடுகளைத் தனியாக அறிந்து கொள்ள வேண்டுமோ என்று நீ எழுப்பிய ஐயம் நியாயமானதே! ஆனால் அந்தக் கோட்பாடுகளை எழுதி வைத்துக்கொண்டு நாம் கவிதையைச் சுவைக்க முடியாது. ஒரு கவிதை படிப்பவனுடைய உள்ளத்தில் சலனத்தை உண்டு பண்ண வேண்டும். அந்தச் சலனத்தின் பரிமாணங்களை வைத்தே கோட்பாடுகளை உருவாக்க வேண்டும். அவன் உள்ளத்தைக் கவிதை திருட முயல வேண்டும். படிப்பவன் பாதித்த கவிதை, அவனைப் பாதிக்க வேண்டும். அந்தப் பாதிப்பும் கவிஞனின் பாதிப்பும் ஒரே அலைவரிசையில் இயங்க வேண்டும்.

    கவிதையால் உண்டாகிற சலனம் கற்பனையால் உண்டாகலாம். யாப்பால் உண்டாகலாம். உணர்ச்சி வெளிப்பாட்டால் உண்டாகலாம். கருத்தினால் உண்டாகலாம். தமிழ்க்கவிதைக் கொள்கை கருத்துக்கு முதலிடம் தருவதாக இருப்பதினால் ஏனைய கவிதைக் கூறுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் நிற்பது கருத்தே!, ஒரு இசைக்கச்சேரியில் வாய்ப்பாட்டு போன்றது அது. ஏனைய பக்க வாத்தியங்களே!

    இந்தக் கோட்பாட்டினை நண்பர் வெண்முகிலன் கவிதையில் வைத்துக் காணலாம். நான்கு எண்சீர் விருத்தங்களும் முப்பத்து மூன்று அறுசீர் விருத்தங்களுமாக எழுதியிருக்கும் அவருடைய கவிதைகளில் மையக்கருத்தாக இழையோடுவது ‘தமிழின அடையாளம்’ மற்றும் எழுச்சி என்பதே ஆகும்.

    பொதுவான பாடுபொருள்தான். ஆனால் சிறக்கப் பாடியிருக்கிறார் வெண்முகிலன். கவிதைச் சிறப்பதற்குப் படைப்பாளனின் உத்திகளே காரணம். ‘நெஞ்சினில் நேயம் வைப்பீர்’ என்னுந் தலைப்பில் பதினான்கு அறுசீர் விருத்தங்களை எழுதியிருக்கும் வெண்முகிலன் கருத்திசைவுக்கேற்ப இறுதிப்பாடலை எண்சீர் விருத்தமாகப் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது.

    பலகோடிப் புற்றீசல் பறந்தால் என்ன?
    பகலவன் கதிர்பட்டால் மண்ணில் வீழும்!
    பலகாலம் மடமைகள் வாழ்ந்தால் என்ன?
    பகுத்தறிவு நெருப்பானால் சாம்பலாகும்!”

    என்றெழுதும் வெண்முகிலன் அடுத்த பாட்டைச் ‘சிறியன சிந்தியாதீர்’ என்னுந் தலைப்பில் ஒன்பது அறுசீர் விருத்தங்களை எழுதி முதல்பாட்டைப் போலவே கருத்திசைவுக்கேற்ப மூன்று எண்சீர் விருத்தங்களை இறுதிப்பாடல்களாக எழுதியிருக்கிறார். தமிழனின் கடமை பற்றி மயிலரசன் சொன்ன கருத்துக்களையே வெண்முகிலன் வழிமொழிந்திருந்தாலும் உத்தியினால் வேறுபடுகிறார்.

    மனக்கதவைத் திறப்பதும் அன்பி னாலே!
    மரக்கதவைத் திறந்திடலாம் கருவியாலே!
    சினப்பாம்பை அடக்கிடலாம் அறிவினாலே!
    சிந்தனையைத் தூண்டுவதோ கல்வியாலே
    தனக்கெனவே வாழ்வார்பே ராசையாலே!
    தன்மானம் இழந்திடுவார் அச்சத்தாலே!
    எனக்கெதற்கு வம்பென்று இருந்திடாமல்
    இன்தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வார்!”

    எனப் பல எடுத்துக்காட்டுக்களை உவமமாகச் சொல்லித் ‘தமிழுக்குழைப்பவரே என்றும் வாழ்வர்’ என முத்தாய்ப்பாய் முடித்திருப்பது போற்றத்தகுந்தது.

    கூர்மதி நல்காக் கல்வி குறிக்கோளைக் காட்டா நட்பு
    நேர்வழி செல்லா எண்ணம் நிம்மதி நல்கா வாழ்க்கை
    ஊர்நலம் நாடி நாளும் உழைத்திடா உழைப்பு யாவும்
    பார்மிசை சான்றோர் போற்றும் பாராட்டைப் பெறுவதில்லை

    எனப் பொதுவாழ்க்கைக்கும் தனிவாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் வெண்முகிலனின் இந்தப் பாடல்

    ஆபத்துக் குதவா பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்
    தாகத்தைத் தீராத் தண்ணீர் தரித்திர மறியாப் பெண்டிர்
    கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
    பாவத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே

    என்னும் தனிப்பாடலை நினைவூட்டுகிறது. மூன்று பாடலை மட்டுமே இந்தத் தொகுப்பில் எழுதியுள்ள வெண்முகிலன் மொழிநடை இயல்பானது. எளியது. எவருக்கும் புரியக்கூடியது.

    என்னுடைய இந்தக் கடிதம் உனக்கு இன்னும் தெளிவினை உண்டாக்கக் கூடும். எனக்கு விடையிறுக்க வேண்டும் என்னும் ஆர்வமும் அடுத்த கவிதை பற்றி என்னிடம் கலந்துரையாட வேண்டும் என்னும் துடிப்பும் உன்னிடம் மிக்கிருக்கும் என்றே நம்புகிறேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    **********

    அன்பு மறவா மணிக்கு, வணக்கம்!

    உன்னுடைய மடல் கண்டேன். மகிழ்ச்சி கொண்டேன். பாடல்களின் மையத்தைக் கண்டறிவதிலும் பாட்டின் மையத்தைக் கண்டறிவதிலும் உனக்கு நிகர் நீயே. வெண்முகிலன் கவிதை மூன்றாயினும் சிறந்தவை என்னும் உன்னுடைய கருத்து எனக்கும் உடன்பாடே. இந்த அடிப்படையில் நான் நாவரசன் எழுதியுள்ள புதுக்கவிதைகள் பற்றி உன்னுடன் கலந்துரையாடலாம் என்றே இந்த மடலை எழுதுகிறேன்.

    ஒருபக்கம் கவிதையின் புதிய உத்தி என்று புதுக்கவிதையைக் கூறுகிறார்கள். மற்றொரு பக்கம் இதுதான் புதுக்கவிதை என்று அச்சமூட்டுகிறார்கள். புதுக்கவிதை ஒரு இறக்குமதிப் பண்டம். அதற்காக அதனைத் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்பது பொருளல்ல. ஆனால் என்ன நடக்கிறது இங்கே?

    மனத்தினும் விரிந்து அதாவது மனத்தால் உள்வாங்க முடியாத கற்பனைகளைத் திணிப்பது எப்படிக் கவிதையாக முடியும்? இல்லாத பொருளை உவமமாகச் சொன்னாலே அதனை இல்பொருள் உவமமென்று தள்ளிவிடுவது தமிழ்க்கவிதை மரபு. ஆனால் இவர்கள் பொருத்தமில்லாத இரண்டு சொற்களைப் பொருளே தெரியாமல் இணைத்துவிட்டு அதனைப் புதுக்கவிதை என்று நம்பச் சொல்கிறார்கள். போதாத குறைக்குப் புதுக்கவிதைக்குப் பிதாமகர் பாரதிதான் என்று கவிதையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள்.

    பாரதிமீது வேண்டாத புகழைத் திணிப்பதையே ஒருசாரார் திட்டமிட்டுச் செய்து வருகிறார்கள். அவர்கள் உண்மையில் பாரதியின் நோக்கத்துக்கு எதிரானவர்கள். எளிய பதம், இனிய நடை, உள்ளத்தை உருக்கும் இசை இதுதான் பாரதியின் கவிதைக் கோட்பாடு. இதற்கு எதிரானவர்கள் பாரதிக்கும் எதிரியே!. இந்தப் பின்புலத்தில்தான் நான் நாவரசன் கவிதைகளை நோக்குகிறேன்.

    கவலைப்பட்டதற்காகக் கவலைப்பட்டேன்!
    சஞ்சலப்பட்டதற்காகச் சஞ்சலப்பட்டேன்!
    ஆம்!
    வாழ்வின் பரிணாமங்களுக்கும்
    வாழ்வியல் வினாக்களுக்கும்
    கவலைப்படுவதும் சஞ்சலப்படுவதும்
    ….
    பரிணாம ஊற்றோ?”

    என்னும் கவிதையில் ஒரு சாரம் இருப்பதை உணர முடிகிறது. ‘இன்னாது அம்ம இவ்வுலகம்! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே’ என்னும் சங்க இலக்கிய வரிகளின் எதிர்மறைப் பதிவு இது. இதிலிருந்து அதுவும் அதிலிருந்து மற்றொன்றுமே வாழ்வின் பரிணாமம் என்பதைப் புரிந்து கொள்வதற்குள் வாழ்வு முடிந்துவிடுகிறது என்பதை மிக அருமையாகப் பதிவிட்டிருக்கிறார் நாவரசன்!

    ஒளியை வரைந்தேன்! பசிக்கு —- இருளைக் கேட்டது!
    மீனை வரைந்தேன்! பசிக்குப் —– புழுவைக் கேட்டது!
    பறவையை வரைந்தேன்! பசிக்குத்தானியம் கேட்டது!
    மிருகத்தை வரைந்தேன்! பசிக்கு இரையைக் கேட்டது!
    மனிதனை வரைந்தேன்! அவன் என்னையே கேட்டான்!”

    என்று ‘மனிதன்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள சிந்தனைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்றை விழுங்கித்தான் மற்றொன்று என்னும் தத்துவத்தையும் மானுட வாழ்வியல் உண்மையையும் அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். இனிய சொற்கள்! எளிய நடை! அருமையான கவிதை!

    தாஜ்மகாலை வெறுக்கிறேன் என்று எழுதியிருக்கிறார் நாவரசன்! எதற்காக வெறுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. உருவாக்கிய தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட்டன என்னும் சேதியின் அடிப்படையில் இதனை எழுதியிருக்கிறார். அப்படி நடந்திருந்தால் வெட்டுக்கு ஆளான கைகளைத்தான் இவர் பாடியிருக்க வேண்டும். மேலும் இது போன்ற வரலாறுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. வெறுப்பதற்காகக் கட்டப்பட்டதன்று தாஜ்மகால். ஏதோ யாருக்கும் தோன்றாத புதிய சிந்தனையைப் பதிவிடுவதாகக் கருதிக் கவிஞர் நாவரசன் எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது. ஒன்றன் பின்புலத்தை அறிந்து கொள்வதும் தவறன்று. அதற்காகப் படைக்கப்பட்ட ஒரு பொருளை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை மிக அருமையாகப் படம்பிடித்துக் காட்டுவார் பாவேந்தர்.

    சித்திரச் சோலைகளே! உமை நன்கு
    திருத்த இப்பாரினிலே முன்னர்
    எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
    உங்கள் வேரினிலே!”

    என்றுதான் பாடினாரே தவிர, தொழிலாளர்கள் ரத்தம் சொரிந்ததற்காகச் சோலையை வெறுக்கவில்லை. தாமரைத் தடாகத்தைப் பாடுகிறபோதும்,

    தாமரை பூத்த தடாகங்களே!
    உமைத்தந்த அக்காலத்திலே
    எங்கள் தூய்மைச் சகோதரர்
    தூர்ந்து மறைந்ததைச்
    சொல்லவோ ஞாலத்திலே

    “தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே” என்று பாடிய பாரதிதாசன், “தாமரை பூத்த குளத்தினிலே முகத்தாமரை தோன்ற முழுகிடுவாள்” என்றுதான் பாடுகிறார். அதாவது தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைவதற்குக் காரணமான குளத்தில் குப்பனின் காதலியைக் குளிக்க வைத்து அழகு பார்க்கிறார் பாவேந்தர்.

    மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடுகளில் ஒன்று. வெற்றசை என்பதை மரபுக்கவிதையில் இணைத்துக் கொள்ள முடியும். சாரியை புணர்த்து எழுதிக் கொள்ள முடியும். வலித்தல் மெலித்தல் விகாரங்களை அனுமதிக்கலாம். இது போன்ற சலுகைகள் புதுக்கவிதையில் நடக்காது. சொற்செட்டு என்பது கவிதைச் செறிவுக்கு மற்றொரு பெயர். இந்தச் செறிவில் புதுக்கவிதை சங்க இலக்கியத்தை ஒத்திருக்க வேண்டும். அடைச்சொற்களைக் கூடக் காரணத்தோடுதான் புணர்ந்து எழுதியிருப்பார்கள். இந்த ஆழமான நெறிமுறை தெரிந்திருந்தால் நாவரசனின் புதுக்கவிதைகள் வெற்றி பெற்றிருக்கக்கூடும். உண்மையில் மரபுக்கவிதையைவிடப் புதுக்கவிதைக்கான சிந்தனைக் களம் பெரியது. புதுக்கவிதை எழுதுவது அரியது என்பதை அவர் உட்பட இன்னும் பலரும் புரிந்து கொண்டனரா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

    நிரம்ப எழுதிவிட்டேன். உன் மடல் கண்டு

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு எழுதிக்கொண்ட அன்பு மடல்.

    உன் கடிதம் கிடைத்தது. செறித்து வைக்கப்பட்டிருந்த உன் இலக்கிய ரசனை நெகிழ்ந்து நீட்சியாகி வருகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். வாழ்க்கைத் துன்பங்களில் சோர்ந்திருக்கும் எவருக்கும் இலக்கியம் குளிர்தருவாக, தருநிழலாக, நிழல் கனிந்த கனியாக’த் திகழ்வதை நீ தற்போது உணர்ந்து கொண்டிருப்பாய் எனற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

    கவிஞர் நாவரசன் எழுதிய புதுக்கவிதைகளைப் பற்றிய உன் கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடே. உலகத்தை ஆளப்போகிறான் எனச் சொல்லிக் கொண்டு பிறந்தவன் ஒரு ஊராட்சித் தலைவராகக் கூட ஆகமுடியாததுபோலத்தான் இன்றைய புதுக்கவிதை நிலை வந்திருக்கிறது. அதற்காக மரபுக்கவிதைகள் மண்ணாளுகின்றன என்று பொருளில்லை. அது புதைகுழிக்குள் போகாமல் காக்கின்ற சிலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் புதுக்கவிதைக்குப் புவியரசு, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், சிற்பி முதலியவர்களையே எடுத்துக்காட்டுக்களாக்கிக் கொண்டிருப்பது ஒன்றே அது வளரவில்லை என்பதற்குப் போதுமான சான்றாகும். விதைகளின் வெளிச்சம், வெற்றிடங்களின் வீரியம் என்ற இரண்டு சொற்களில் என்ன குறியீடு இருக்கிறது? என்ன இலக்கியச் சுவை இருக்கிறது என்பது விளங்கவில்லை. நான்கே வரிகளில் எழுதவேண்டிய தாஜ்மகால் கவிதையைச் சாண்டில்யன் கதையைப் போல நாற்பது வரிகள் நீட்டிக் கொண்டு செல்வது புதுக்கவிதை பற்றிய தெளிவின்மையையே காட்டுகிறது.

    நண்பர் தெட்சணாமூர்த்தி சில பாடல்களை எழுதியிருக்கிறார். பிறந்து நான்கு நாள்களில் மறைந்த தன் அருந்தவப்புதல்வனை எண்ணி அவர் உருகியிருப்பது நெஞ்சு வெடிக்கும் உண்மையாகும். இழந்த சோகத்தை எழுத்தில் இறக்கி வைத்திருக்கிறார். அந்தச் சோகச்சுமை சரியான தளத்தில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி விவாதிக்கப் பாடுபொருளும் அந்தச் சூழ்நிலையும் இடங்கொடுக்கவில்லை.

    ‘நெசவாளிகள்’ என்னுந் தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு ஏழுவரி கவிதைதான் அவரைக் கவிஞர் என்று அடையாளப்படுத்துகிறது.

    மானுட நிர்வாணத்தை
    மறைப்பதற்காய்
    நாங்கள் மானத்தை நெய்கிறோம்!
    இடுப்பில் ஆயிரம் கண்ணுடைய
    அரைமுழத் துண்டணிந்து

    இதுதான் புதுக்கவிதை. உத்தியால் வேறுபடும் புதுக்கவிதை. இந்த முரண்தான் இதற்கு அழகு. பிறருடைய மானத்தைக் காக்க நெசவாளர்கள் நெய்கிறார்கள். ஆனால் அவர்கள் இடுப்பில் இருப்பதோ அரைமுழத் துண்டு. அதில் ஆயிரம் கிழிசல்கள். அங்கதம், முரண். குறியீடு, படிமம் என்னும் நான்கு உத்திகளில் பெரும்பான்மையாகச் சிறந்து வருவதே புதுக்கவிதை!. இதனைப் புரிந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

    நாங்கள்
    நிர்வாணத்தை விற்பனை
    செய்கிறோம்!
    ஆடை வாங்குவதற்காக!”

    முரணும் குறியீடும் கலந்ததே இந்தக் கவிதையின் வெற்றிக்குக் காரணம்.

    அவன் ஒரு பட்டு வேட்டி
    பற்றிய கனாவில் இருந்தபோது
    கட்டியிருந்த கோவணமும்
    களவாடப்பட்டது

    என்னும் அங்கதம் புதுக்கவிதைளைக் கற்பார் உள்ளத்தில் நங்கூரம் பாய்ச்சுவதை உணரவேண்டும். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதை என்று எவனோ ஒரு கோமாளி சொன்னதைக் கேட்டதன் விளைவுதான் சொற்குப்பைகள் எல்லாம் இன்று புதுக்கவிதைக் கிடங்கில் கொட்டிக்கிடக்கின்றன கொளுத்துவதற்கு ஆள் போதாமல்!. இவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் பாருங்கள். இலக்கணம் இல்லாதது புதுக்கவிதையாம். அருத்தாபத்தியால் இலக்கணம் உள்ளது மரபுக்கவிதையாம்! என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.? ஒன்றினை நினைவுபடுத்தவேண்டியது எனக்குக் கடமையாகிறது. புதுக்கவிதையில் வாகை சூடியவர்கள் எல்லாம் மரபின் எல்லை கண்டவர்கள். மரபிலக்கிய, இலக்கணப் பயிற்சியில்லாதவர்கள் புதுக்கவிதையில் வெற்றி பெற முடியாது. அப்படிப் பெற்றாலும் அது நத்தையின் எழுத்துப் போல் தோன்றுகிறபோதே மறைந்துவிடும்! இந்தக் கடிதத்தை இத்துடன் நிறுத்துகிறேன்.

    உன் மடல் கண்டு மீண்டும் எழுதுவேன்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    மாறா அன்புடன்
    மணி

    **********

    அன்புடைய மணிக்கு எழில் அன்புடன் எழுதிக் கொண்ட அன்பு மடல்.

    சென்ற உன் கடிதத்தில் கவிதையைப் பற்றிய பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை பற்றிய நுண்ணிய கருத்துக்களை நீ எளிமையாக எடுத்துச் சொன்னது எனக்குத் தெளிவையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.

    எதனைப் பற்றியும் கவிதை எழுதலாம். ஆனால் பொருளைப் பற்றிய கவிதைப் பார்வையும் கவியுணர்வுமின்றி எழுதினால் அது வெற்றி பெறாது.

    தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே
    துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
    நாவால் நக்குது வெள்ளைப் பசு பாலை
    நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

    என்னும் கவிமணியின் கவிதை மிக எளிய காட்சிப் பொருளைப் பற்றியதுதான். ஆனால் அதில் கவிதைப் பார்வையும் கவியுணர்வும் கலந்திருப்பது காண்க. மேய்தல், நக்குதல் ஆகிய பசுவின் இரண்டு வினைகளும் குதித்தல், குடித்தல் ஆகிய குட்டியின் இரண்டு வினைகளும் கவிமணிக்குக் கவியுணர்வைத் தூண்டியிருக்கின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில் தேனீ தமிழ்ச்சிம்மன் கவிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நடந்து போன காவிரியின் நின்று போன கதைபேசும் தமிழ்ச்சிம்மன், நிற்பதற்குக் காரணமான அரசியல் வாதிகளைக் கடிந்து கொள்கிறார்.

    காவிரியில் நீரோட்டத்தைக் கைது செய்துவிட்டுத்
    தேசிய நீரோட்டத்தில் நீந்துவது எப்படி?
    தஞ்சை வயல்களில் கொஞ்சி
    விளையாட வேண்டிய காவிரியைக்
    கண்ணம்பாடியில் கட்டிப் போட்டது ஏன்?”

    என்று கவி நயத்துடன் பாடும் தமிழ்ச்சிம்மன், காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்தியதன் இன்றைய சமுதாய நிலையை அங்கதச் சவையுடன் பாடியிருப்பது சிறப்பாக உள்ளது. அவர் எழுதுகிறார். பெண் விடுதலை, பெண்ணியம் என்றெல்லாம் மேடைகளில் கதையளக்கும் அரசியல் வாதிகளே!

    ஒரு நதிப்பெண் கூட
    இந்த நாட்டில்
    சுதந்திரமாக நடக்க முடியவில்லையே?”

    என்று வினவியிருக்கிறார். தொடர்ந்து எழுதுகிறார்.

    நீர் ஆதாரத்தையே
    நிர்மூலப்படுத்திவிட்டு
    நீர் என்ன ஆதாரத்தோடு
    தேசியம் பேசுகிறாய்?”

    காவிரிக்கரையில் எல்லாரும் நடக்கிறார்கள். பேசுகிறார்கள் போகிறார்கள் வருகிறார்கள். இளங்கோவடிகள் நடந்தாய் வாழி காவேரி என்று பாடினார். விடுதலை இந்தியாவில் நதிகளுக்கும் விடுதலை இல்லை என்பதை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். புதுக்கவிதை எளிமைக்கு எடுத்துக்காட்டு என்னும் படைப்புண்மையை நான் அறிந்து கொள்ள இந்தக் கவிதை எனக்குத் துணை புரிந்தது.

    இனம், மொழி, நாடு இவை பற்றிச் சிந்திப்பது மரபுவழிச் சிந்தனையே. இவை பற்றிப் பாடுவதும் மரபுவழிக் கவிதைகளே. ஆனால் இதே பாடுபொருளைப் புதுக்கவிதைப் பாடுபொருளாக மாற்றித் தமிழ்ச்சிம்மன் பாடியிருப்பது சிந்திக்கத்தக்கது. முன்னாலே மரபு என்பது அவற்றின் பெருமைகளை. இங்கே புதுமை என்பது இன்றைய நிலையை. இன்றைய நிலை மரபாகாது. எனவேதான் அவர் புதுக்கவிதையில் பதிவிடுகிறார்.

    தமிழா!
    பல ஆண்டுகளுக்கு முன் பர்மாவில் அகதியானாய்!
    சில ஆண்டுகளுக்கு முன் ஶ்ரீலங்காவில் அகதியானாய்!
    இன்று இந்தியாவில் அகதியானாய்!!
    நாளை தமிழ் நாட்டில் அகதியானால்
    நீ வாழப் போவது எங்கே?”

    என்ன பொருள் பொதிந்த வினா! மொழித் திணிப்பும் பிறமொழி மக்கள் குடியேற்றமும் சொந்த நாட்டிலேயே மக்களை அகதியாக்கிவிடும். ஒரு மொழிக்கு உயர்வளிக்கும் ஒன்றிய அரசினைக் கண்டிப்பதைவிட உள்ளூர்த் தமிழர்கள் உண்மை நிலை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். வெற்று அரசியல் கூச்சல்களை நம்புவோரின் எதிர்காலம் விடையில்லாத வினாவாகிவிடும்.  நியாயங்கள் தண்டிக்கப்படுவதும் குற்றங்கள் விடுதலையாவதும் இந்திய நீதி மன்றங்களில் காணமுடியாத காட்சிகள் அல்ல என்பதைக் காமராசன் தனது ‘கறுப்பு மலர்களில் இப்படிச் சித்திரித்திருப்பார்.

    உன் விசாரணையே கூண்டுகளில்
    தொடங்குகிறபோது
    தீர்ப்புக்கள் சிறைக்கம்பிகளில் முடிவதில்
    வியப்பேதும் இல்லை!”

    இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிம்மன் இதே உணர்வுகளை வேறு வாய்பாட்டில் பாடியிருப்பது உத்தி மாற்றத்தால் பெறும் கவிதை வெற்றியைக் காட்டுவதாக அமைகிறது. சிம்மன் எழுதுகிறார்.

    , நீதி தேவனே!
    உன் மயக்கமென்ன?
    கஞ்சிக்கு இல்லாத பசி மயக்கமா?
    இல்லை கள்ளச் சாராயத்தின்
    போதை மயக்கமா?”

    பாடுபொருள் பாடலில் சிறக்கலாம். உணர்ச்சி கவிதையில் சிறக்கலாம். பாதிப்பின்றிப் பாடல் எழுத முடியும். பாதிப்பின்றிக் கவிதை எழுத முடியாது. வராது. இங்கே பொங்கல் வாழ்த்துக்களைக் கூடக் கவிதை என்று மயங்கித் திரிவது ஒரு இரங்கத்தக்க நிலை. தேனீ தமிழ்ச்சிம்மனைப் பாதித்தவைகள் நம்மையும் பாதித்திருக்கின்றன. அவர் எழுதுகிறார். நம்மால் எழுத முடியவில்லை. காரணம் அவர் படைக்கப் பிறந்தவர். நாம் படிக்கப் பிறந்தவர்கள். அவ்வளவுதான்!

    தொடர்ந்து செயராமன் எழுதிய கவிதை தொகுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் சிலவே எனினும் அன்னை தெரசாவைப் பற்றிய கவிதை ஈர்க்கிறது. இணையத்தில் சறுக்கிய இணைப்புத் தகராறால் செய்தி தவறாக ஒலிபரப்பாகிவிட்டது என்ற அங்கதச் சுவையோடு அவர் தந்திருக்கும் கவிதை இப்படி அமைகிறது.

    தேசிய நீரோட்டம் செல்லும் பாதையில்
    அண்டை மாநில கர்நாடக
    வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில்
    உடைப்பு ஏற்பட்டு, உரியவர்களின்
    உரிய நடவடிக்கையால்
    மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!
    இத்தேசிய நீரோட்டப் பாதை
    ஐம்பதாண்டு பழைமை உடையது என்பதால்
    மீண்டும் உடைப்பு ஏற்படலாம் என
    அஞ்சப்படுகிறது.
    எனவே……………………….
    ஆங்காங்கே இருக்கும் தமிழர்கள்
    விழிப்புடனும் எச்சரிக்கையுணர்வுடனும்
    இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!”

    காவிரி நதி நீர்ச்சிக்கலால் இரு மாநிலங்களுக்கிடையே புகைந்து கொண்டிருக்கும் பகை, கலவரமாகத் தெரிந்த நிலையில் எழுதப்பட்ட கவிதை இது. கோலார் முதலிய மாவட்டங்களில் பணியாற்றும் தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் சாதுரியமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. வந்தார்க்குப் புகலிடமாகத் தமிழகம் விளங்கினாலும் தமிழர்க்குப் புகலிடமாக இந்தியாவில் ஏதுமில்லை என்பதையும் பிற மாநிலங்களில் தமிழர்கள் ஒரு வகை அச்ச உணர்வோடு வாழவேண்டியதிருக்கிறது என்பதையும் அங்கதச் சுவையோடு செயராமன் எழுதியிருப்பது நூலின் பரிமாணத்தைக் கூட்டுகிறது.

    உடல்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. என்றாலும் இந்த நூலில் நான் படித்துணர்ந்த கருத்துக்களும் சமுதாய நிலைப்பாடுகளும் உன்னுடைய விளக்கங்களும் என் எதிர்கால இலக்கியப் பார்வைக்கு ஒளி தந்திருக்கின்றன.

    மீண்டும் உன் மடல் கண்டு

    அன்பு மறவா
    எழில்

    **********

    அன்புடைய எழிலுக்கு மணி எழுதிக்கொண்ட அன்பு மடல்.

    நான் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறேன். மருத்துவச் செலவும் மனக்கவலையும் ஏறி வருகின்றன. என்னால் முடிந்தவரை என் கடமைகளை நான் செய்து முடித்திருக்கிறேன். சாதிக்கப் பிறந்தவர்கள் சந்திக்கும் சிக்கல்களால் தடுமாறுவது இயல்பு. நானும் அப்படி தடுமாறியவனே. போலித்தனத்தை அறவே வெறுக்கும் என் இயல்பு நீ அறிந்ததே. வெற்று ஆரவாரங்களிலும் விளம்பரங்களிலும் விருதுகள் பெறுவதிலும் நான் ஆர்வம் காட்டுவதில்லை. பொய்ச்சிரிப்பிலும் புனைசுருட்டிலும் நான் அருவெறுப்படைகிறேன். ஒரு காட்டு மூலிகையாகவே இருந்துவிட்டாலும் பரவாயில்லை. ஜிகினா மாலையாக ஆகிவிடக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருக்கிறேன். இந்த இயல்புகளே எனக்குப் பகையைப் பெருக்கியது. நட்பைக் குறைத்தது. சொல்லப் போனால் எனக்கு நண்பர்களே இல்லையோ என்ற நிலைதான் நிலவுகிறது. இதனால் நான் வருந்துகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரவார உலகில் அமைதியால் ஒன்றும் செய்ய இயலாது. இத்தனைக்குப் பின்னாலும் நான் படிக்கிறேன். எழுதுகிறேன். உன்னைப் போன்ற நண்பர்களுக்குச் சில நூல்களை அறிமுகம் செய்கிறேன். அதனை ஒரு தொண்டாகவே செய்து வருகிறேன். இதனால் நான் இழக்கப்போவது ஏதுமில்லை. ஆனால் மன அமைதியைப் பெறுகிறேன்.

    இந்த நூலின் இறுதியாகத் தொகுக்கப்பட்டிருப்பவை தம்பி வசந்தராசன் எழுதிய சில கவிதைகள். இன்றைக்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டுத் கோக்கப்பட்ட இந்த நூல் கவிதைகளில் இவருடைய கவிதைகள் தனித்துவம் மிக்கிருக்கின்றன என்பதை அவரது கவிதைகளால் அறிந்து கொள்ளலாம்.

    கவிஞன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவனே தன்னை ‘இன்னான்’ என்று அறிமுகம் செய்து கொள்வது. இரண்டு அவனுடைய படைப்புக்கள் வழி அவனை யார் என்று பிறர் அடையாளம் காண்பது. இந்த இரண்டும் ஒத்திருக்குமாயின் அவன் உண்மைக் கவிஞன். பெரும்பாலான கவிஞர்களின் சுயரூபத்தை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர்களுக்குப் பலமுகங்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். கவிதைகளில் ஒன்றுமிருக்காது. பாரதிக்கு ஒத்திருந்தது. பாவேந்தருக்கு ஒத்திருந்தது. கண்ணதாசனுக்கு ஒத்திருக்கவில்லை. தம்பி வசந்தராசனுக்கு ஒத்திருக்கிறது. அதனால்தான்,

    ஆடையல்ல எழுத்தெனக்குக் கழற்றி மாட்ட!
    அணிந்திருக்கும் நகையல்ல அழகு பார்க்க!!
    கூடவந்த எலும்பின் தோல்! எலும்பைப் போர்த்திக்
    கொண்டிருக்கும் என்னுயிரை, உடலைக் காட்ட!
    மேடைதரும்! விழிவெளிச்சப் பாதை தன்னில்
    மெருகேற்றி வருவதுதான்! மீண்டும் சொல்வேன்!
    ஏடடைந்த சொல்வேறு நான்வே றல்ல!
    எனைப்பிரியா என்தோல்தான் என்னெ ழுத்து!”

    என்னும் அறிமுகக் கவிதைக்கேற்ப அவரது படைப்புக்கள் அமைந்து போயிருக்கின்றன. ‘எழுத்துக்களைத் தோல்’ என்பதற்கு என்ன பொருள் என்றால் தன்னைப் பாதிக்கும் பொருள் பற்றிய தனது கருத்துக்கள் மாற்றத்திற்குரியன அல்ல என்பதாகும். அரசியல்வாதிகளைப் போல் பொதுக்கருத்து என்றும் சொந்தக்கருத்து என்றும் தனித்தனி வசதிகள் கவிஞனுக்குக் கிடையாது. பாத்திரங்களுக்காக மாறுவானே தவிர தனக்காக மாறமாட்டான். தன்னை என்றும் மாற்றிக் கொள்ள மாட்டான். கற்பனையால் அவரது கவிதைகள் அழகுபெறும் என்பதை ‘எலும்பைப் போர்த்திக் கொண்டிருக்கும் உடல்’ என்னும் தொடரால் குறிக்கிறார். பாதிக்காத பொருண்மையைப் பற்றிய கவிதைகள் எடுபடாது. கவிஞனையும் கவிதையையும் பிரித்துப் பார்க்க முடியாது. கவிஞன் கவிதையைப் படைக்கிறான் என்பது பொதுவான கருத்து. கவிதை கவிஞனிடத்திலிருந்து பிறக்கின்றன என்பதே உண்மையான கருத்து.  குழந்தைக்கும் தாயக்குமான உறவுதான் கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவு என்பதை வசந்தராசன் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

    தரையில் நடந்த தாடிச் சூரியன்
    தத்துவம் முளைக்கும் புத்தக வயல்வெளி!
    தடியால் பூமியைத் தட்டி எழுப்பி
    விடியலைக் காட்டிய சூரிய விழிகள்!”

    என்னும் நான்கு வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவர் எழுதிய நிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு வைத்திருக்கிற பெயர் ‘பெரியார்’ என்பதாகும். என் எழுத்து, என் தாகம், தமிழா நலந்தானா? மீண்டும் ஒரு தொடக்கம், பூக்களின் தேசத்தில் புயல், உழுது….உழுது, எப்படித் தவறினாய் கணக்கு என்பன அவர் இந்த நூலில் கோத்திருக்கும் பிற கவிதைகளின் தலைப்புக்கள். இது ஒரு நூலைப் பற்றிய அறிமுகம் ஆதலின் அத்தனைக் கவிதைகளையும் திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வருவது இயலாத செயல். எனவே உன்னைப் போலவே ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்.

    மேலே காட்டிய தந்தை பெரியாருக்கான ‘தரையில் நடந்த தாடிச் சூரியன்’ என்னும் உருவகத்தில் கற்பனையின் அத்தனைப் பரிமாணங்களும் அமைந்துள்ளன. அரிதாக தோன்றுகிற கற்பனைகளில் இதுவும் ஒன்று. சூரியன் வானத்தில் இருக்கும். பெரியார் நம்மிடையே தோன்றினார். விண்வெளியில் பவனி வருவது சூரியன். பெரியார் தரையில் நடந்தார். சூரியனுக்குத் தாடி இல்லை. தடியும் இல்லை பெரியாருக்குத் தடியும் உண்டு. தாடியும் உண்டு. சூரியனின் கதிரொளி பரப்பில் மண்ணகம் அடங்குவது போலப் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை வீச்சில் மானுடம் அடங்கும் என்பது கருத்து. பேரறிஞர் அண்ணாவைக் கவிஞர் வைரமுத்து ‘நான்கடி இமயம்’ என்று உருவகப்படுத்தியிருப்பார். அண்ணாவின் குட்டையான தோற்றத்திற்கும் அறிவின் உயரத்திற்கும் தொடர்பில்லை என்பதை இமயத்தின் உயரம் நாலடி’ என்று சுருக்கிக் காட்டுவார்.

    இந்தப் பாட்டில் தடியால் பூமியைத் தட்டி எழுப்பி என்னும் தொடர் மரபு வழிச் சிந்தனையாகும். தடியால் பூமியைத் தட்டி எழுப்ப முடியுமா? இங்கே பூமி என்பது தூங்கிக் கொண்டிருந்த தமழினத்தைப் பெரியார் எழுப்பிய பிறகுதானே நம்மவரில் பலர் தூங்கியதையே தெரிந்து கொண்டார்கள்! அது தனி. ஆனால் பாத்திரம் பூமியைத் தட்டி எழுப்புகிற அல்லது மயக்கத்தைத் தெளிவிக்கின்ற கற்பனை தமிழுக்குப் புதியதன்று.

    சிலம்பில் ஒரு காட்சி. பதினாறு ஆண்டுக்காலம் கழித்து மனைவியின் நினைவு வந்த கோவலன் வீடு திரும்பியவுடன் தன் மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு பிழைப்பதற்காக மதுரை நோக்கிச் செல்கிறான். புறஞ்சேரியில் தங்கியிருக்கும் சூழலில் தன் கணவனுக்குத் தன் கையறி மடமையால் சமைத்து விருந்து படைக்கிறாள் கண்ணகி. இலைபோட்டு நீர் தெளிக்கிறாள். எப்படித் தெரியுமா?

    மண்ணக மடந்தையை மயக்கொளிப்பனள் போல்
    தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி

    எனக் குறிக்கின்றார். இருந்த நிலையையும் எதிர்வரும் துன்பத்தையும் அறிந்து கொண்டு மண் மடந்தை மயங்கியதாகவும் இனம் பற்றிய இரக்கத்தால் மண்ணக மடந்தையின் மயக்கத்தைக் கண்ணகி நீர் தெளித்துத் தெளிவித்தாள் எனவும் உரையாசிரியர்கள் நயம் காண்பர். ‘நிலமடந்தைக்கு நீர் தெளித்ததைப் போல்’ என்னும் உவமம் முறையான தமிழ்க்கல்வியைப் பெற்றுள்ள கவிஞர் வைரமுத்தையும் அவரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டதைத்,

    தாமரைப் பூவில் உறங்கிக் கொண்டிருக்கும் சரஸ்வதியின்
    முகத்தில் தண்ணீர் தெளிப்பதாக இருக்கின்றன

    என்னும் உவமத்தால் அறியமுடிகிறது. பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தேர்வு கிடையாது என்னும் நடுவண் அரசின் சேதி, உறங்கிய கலைமகளின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதைப் போல் இருந்ததாம். “தடியால் பூமியைத் தட்டி எழுப்பிய பெரியார்” என்னும் உவமம் மரபின் தாக்கமாக இருந்தாலும் இலக்கியம் வளம் பெறுமேயன்றித் தரம் குறையாது என்பது உண்மை. கண்ணகி மண்மகளின் மயக்கம் தீர்த்தது அன்று. ஒன்றிய அரசு கலைமகளின் மயக்கம் தீர்த்தது நேற்று! பழைமை மயக்கத்தில் இருந்த  தமிழர்களைப் பெரியார் விழிக்கச் செய்தது இன்று!

    ‘புகாரில் மாநாய்கன் மகளாகப் பிறந்து செந்தமிழ்ச் செல்வியாக வளர்ந்த அவளுடைய புறஞ்சேரி நிலைகண்டு மண்ணக மடந்தை மயக்கமடைந்தாளாம். அந்த மயக்கத்தைப் போக்குவதற்காகக் கண்ணகி நீர் தெளித்தாளாம். கற்பனை என்றால் இதுதான். நம்முடைய சம்பளச் சாதித் தமிழாசிரியர்கள் அரசு விதிகளின்படி இதனையும் ஓர் அணியில் இரண்டு மதிப்பெண்ணுக்காக ஒதுக்கிவிட்டுக் கடந்து போய்விடுவார்கள். தமிழுக்கும் அவர்களுக்குமே தொடர்பில்லாது போய்விட்ட பிறகு கவிதைக்கு எப்படித் தொடர்பிருக்க முடியும்? எனவேதான் உரத்தொழிற்சாலை தொழிலாளர்களும் மேலாளரும் தமிழுக்குக் கவிதை உரம் ஏற்றுகிறார்கள் போலும்!

    பெரியாரைப் பற்றிப் பாவேந்தரும் கண்ணதாசனும் எழுதிய கவிதைக்குப் பிறகு பொருள் ஆழத்தோடும் கற்பனை வளத்தோடும் எழுதப்பட்ட கவிதை இது. இடைநிலைக் கல்வியில் மனப்பாடப் பகுதிக்குக் கவிஞரின் ஒப்புதல் இல்லாமலேயே பாடமாக வைக்க வேண்டிய வரிகள்.!

    “கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது. ஆனால் அது எல்லா மனிதர்களாலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்பதே அதன் கவலையாக இருக்கிறது.”

    தன்னையுமறியாமல் முன்னுணர்ந்த சிந்தனைப் பதிவுகளை இடுவது கவிஞனுக்கு இயல்பு. ‘பட்டுக்கோட்டை அன்றைக்கே பாடினான்” என்று சொல்வதில்லையா அது போல!  இன்றைக்குத் தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒன்றிய அரசு நிறுவனங்கள் ஆனாலும் சரி, தமிழக அரசுப் பணிகளானாலும் சரி, வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு பேரளவு கூடியிருக்கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வட மாநில மாவட்டங்களுள் ஒன்றாகவே காட்சியளிக்கிறது. இதற்குத் தமிழர்களே காரணம் எனலாம். தமிழக இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மையும் தவறான வாழ்க்கை நெறிகளுமே காரணம். தமிழகம் மெல்ல மெல்லப் போதைக்கு அடிமையாகி வருகிறது. கிடைத்த பணியை நன்கு பற்றிக் கொண்டு அதிலிருந்து முன்னேறலாம் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. படிப்புக்குத் தகுந்த வேலைதான் வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு பக்கம். எல்லாவற்றையும் விட நியாயமான பணியிடங்களுக்கே கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை.

    சொந்தநாட்டில் அகதிகளாகிச்
    சோற்றுக் கலைவதே பிழைப்பாச்சா? – இங்கு
    வந்தவனுக்கு வால்பிடிப்பதுதான்
    வழக்கம்போல் உன் தொழிலாச்சா?”

    என்னும் நான்கு வரிகளில் தமிழகத்தின் இன்றைய நிலையை இருபது ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருக்கிறார் வசந்தராசன். சத்திய எழுத்துக்கு இது இயல்பே. சம்பிரதாய எழுத்துக்கு இது பிடிபடாது.

    உலகத் தமிழனை நாடு பிரிக்கும் இங்கு
    உலவும் தமிழனைச் சாதி பிரிக்கும்
    இலைமறை காய்மறை இந்தியத் தமிழனை
    இங்குள்ள மதங்கள் சேர்த்துப் பிரிக்கும்

    என்றெழுதுகிறார் வசந்தராசன். ஒற்றுமை என்பதையே தமிழன் அறியமாட்டான் என்னும் பேருண்மையை மூன்று முறைகளில் விளக்கியிருக்கிறார். சிங்கப்பூர் தமிழன், மலேசியா தமிழன், இலங்கைத் தமிழன் என்று நாட்டால் பிரிந்து நிற்பான். சரி. உண்மையான உள்ளூர்த் தமிழன் என்ன ஆவான்? இவன் சாதியால் பிரிந்திருப்பான். “தமிழன் முட்டாள்” என்றால் எவனுக்கும் கோபம் வராது. ஒரு சாதிக்காரனை முட்டாள் என்றால் அந்தச் சாதிக்காரனுக்குக் கோபம் வரும். காரணம் அவன் தன் சாதியை இனம் என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான். போகட்டும். நாடும் வேண்டாம். சாதியும் வேண்டாம் என்றிருக்கும் ஒன்றிரண்டு தமிழர்களை மதம் பிரித்து விடும். கிறிஸ்தவ உடையார், கிறிஸ்தவ வேளாளர் என்பது போல. இருப்பவனை மட்டுமல்ல வந்தவனையும் சாதி பிடித்தாட்டுகிறது. நடப்பியலைக் கவிதைச்சுவை குன்றாமல் கவிதையாக்கும் கலை இது.

    பள்ளியிலே தமிழுண்டா? பள்ளிக்குப்பின்
    பணியிடத்தில் தமிழுண்டா?பணி தொடர்ந்த
    இல்லறத்தில் தமிழுண்டா? இல்லறத்து
    இனியபிள்ளை பெயர்சூட்டல் தமிழில் உண்டா?
    சொல்லவரும் பெயரதும் தமிழே தானா?
    தொண்டு செய்யும் கோயிலிலே தமிழ்தான் உண்டா?
    கல்லறையில் தமிழுண்டா? நீத்தார் ஆண்டு
    காரியத்தில் தமிழுண்டா? எதிலே உண்டு?”

    என்னும் விருத்தத்தில் போலித் தமிழ்ப்பற்றையும் பிறமொழி மயக்கத்தையும் ஒருசேரக் கண்டிக்கிறார். மாநிலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குகிற பெண்ணின் பெயர் கூட வடமொழியில். வன்ஷிகா, மன்ஷிகா, வருஷணி, தர்ஷணி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். மகேஷ், சுரேஷ் பெருவழக்கு. தமிழாசிரியர்களின் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பேராசிரியர் பிள்ளைகளுக்கும் வடமொழியில்தான் பெயர் வைக்கிறார்கள்.

    மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பு எனக் குறிப்பிட இயலாவிடினும் பாடவேண்டியதைக் காலமறிந்து பாடியிருக்கிறார்கள். கடமை அறிந்து தொகுத்திருக்கிறார் வசந்தராசன். புதுக்கவிதை பற்றிய புரிதல் பற்றாக்குறை காரணமாக அந்த வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் இந்த நூலைப் பொருத்தவரை அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்பதை நீயும் அறிவாய். நம் இருவரின் பார்வையும் இப்படியிருப்பதால் எல்லாருடைய பார்வையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனவே வாசகர் வட்டத்தில் இது போன்ற நூல்களை மையப்படுத்திக் கருத்துரைகளைத் தொகுக்க வேண்டும். இத்தகைய கருத்துரைகளின் அடிப்படையில் படைப்பாளர்களைச் சிறப்பிக்க வேண்டும். ஒரு கவிஞன் பிற கவிஞர்களின் பாடல்களைத் தேடித் தொகுத்தளித்த வசந்தராசன் உள்ளம் வள்ளல் உள்ளம் என்பதில் நமக்கு ஐயமில்லை. எழுதிய கவிஞர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் எங்கே இருந்தால் என்ன? அவர்களின் முகவரியாக அவர்தம் கவிதைகள் இருக்கின்றன! அவை போதும் நமக்கு! கவிதைகள் நமக்கு நல்ல நண்பர்கள்! மீண்டும் அடுத்த கடிதத்தில்!

    மாறா அன்புடன்
    மணி

    **********

    Share