Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே-  31

    க. பாலசுப்பிரமணியன்

    முன்னேற்றத்தின் ஏணிப்படிகள்

    ஒரு  கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதனுடைய முதலாளி சற்றே மேற்பார்வைக்காக உள்ளே நுழைந்தார். அங்கு அந்த வண்டிகளைப் பழுது பார்க்கும் தொழிலாளி ஒருவர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த முதலாளி “தம்பி,  நீ எதற்க்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கின்றாய்? எதைத் தேடிக்கொண்டிருக்கின்றாய்”  என்று வினவினார். உடனே அந்தத் தொழிலாளி ‘”அய்யா அந்தக் கார் கீழே சென்று உள்ளே சற்றே பழுது பார்க்கவேண்டும்.  கீழே படுத்துக்கொண்டு வேலை பார்க்கும்பொழுது போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடுப்புகள் அழுக்காகி விடும். எனவே கீழே போட்டுக்கொள்ளுவதற்காக ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றேன்.” என்று பதிலளித்தார். “அப்படியா, அந்த வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என மீண்டுக் கேட்க அவரோ “ஒரு பத்து நிமிடங்களில் முடித்து விடலாம்.” என்று பதிலளித்தார். முதலாளி  சிரித்துக்கொண்டே “ஒரு பத்து நிமிட வேலைக்காக நீங்கள் இருபது நிமிடத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேலை பார்ப்பதற்காக இந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட் உடுப்புத்தானே.இது.” என்று சிரித்துக்கொண்டே தன்னுடைய கோட் மற்றும் டை ஆகிவைகளைக் கழட்டிவிட்டு அந்தக் காரின் கீழே தானே உள்சென்று பழுது பார்க்க ஆரம்பித்து விட்டார். அதைக்கண்ட அந்தத் தொழிலாளி சற்றே திகைத்து செய்வதறியாமல் நின்றார்.

    பல நேரங்களில் நாம் செய்ய வேண்டிய தொழில்களின் தேவை, தரம், அவசியம், மற்றும் நேரம் ஆகிவற்றைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேலை செய்வது மாட்டும் முக்கியமானதல்ல. அதைத் திறன்படவும் புத்திசாலித்தனமாகவும் செய்தல் அவசியம். தற்காலத்தில் தொழில்களை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள மூல மந்திரம் ” திறன், அளவு, வேகம்.’ ( SKILL, SCALE AND SPEED)

    எந்த ஒரு வேலையை நாம் செய்யும் பொழுதும் அதைத் திறனுடன்( SKILL)  செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். திறனில்லாமல் செய்கின்ற வேலைகள் சிறப்பாக இல்லாதது மட்டுமின்றி அவை பல சமயங்களில் எவ்வ்ளவு நேரம் அதற்குத் தேவையோ அதைவிடப் பல மடங்கு நேரத்தை விழுங்கி விடும்.  நாம்  வழக்கத்தில் கேட்ட கதை இதுதானே:

    மரங்களை வெட்டுகின்ற ஒரு தொழிலாளி பல வருடங்களாக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒரு நாள் வேளையில் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மரங்களை வெட்டிக்கொண்டிருந்தான். நாள்பட, அவன் உற்பத்தித்திறன் குறைந்ததும். அந்தத் தொழிற்கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவன் மிகச் சிறப்பிப்பாகவும் அதிக உற்பத்தித்திறனுடனும் வேலை செய்துகொண்டிருந்ததை முதலாளி பாராட்டிய பொழுது அந்தப் பழைய தொழிலாளிக்கு மனவருத்தமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. காரணம்? அந்தப் புதிய தொழிலாளி தினம் வேலைக்கு வரும் பொழுது தன்னுடைய கருவிகளை சீர்படுத்தி வேலைக்கு உகந்ததாக கொண்டுவந்து கொண்டிருந்தான். பழைய தொழிலாளியின் கருவிகள் பல மாதங்கலாகச் சீர்படுத்தப்படவில்லை.

    நாம் வேலைக்குச் செல்லும் பொழுது நமது கருவிகள் வேலைக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று நாம் சிந்திக்க வேண்டும் . அந்தக் கருவிகள் – சிந்தனைகளாக இருக்கலாம், வேலையைப் பற்றிய புதிய தேடல்களாக இருக்கலாம், வேலை செய்யும் சூழ்நிலைகள், அதைச் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது புதிய செயல்முறைகளாக இருக்கலாம். அவைகள் நமக்குத் தெரியுமா? அதை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

    கற்றல் என்பது  வாழ்க்கையின் ஒரு தொடர் நிகழ்வு. அறிவுசால் சமுதாயத்தில்  அறிவையும் திறன்களையும் வளர்க்கும் உள்ளீட்டுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும் மேம்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. ஆகவே அந்த அறிவு நுணுக்கங்களையும் அவைகளின் பரிமாணங்களையும் அவைகளின் தாக்கங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது மட்டுமின்றி அவைகளைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் வெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாற்றும் நடப்பதல்ல. அறிவு உள்ளீட்டுக்களின் வேகங்களும் பரிமாணங்களும் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவற்றிக்குத் தகுந்தாற்போல் நம்முடைய தொழில்சார்ந்த கற்றல் திறன்களையம் வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருத்தல் அவசியம். அதற்கு ஈடு கொடுக்காதவர்கள் வேகத்தின் விளையாட்டில் தோற்றுப்போவது மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகமானவர்களாக இருக்கமாட்டார்கள்.

    நம்மில் பல பேர்கள் நம்முடைய படிப்புக்கள் கல்லூரி அல்லது பள்ளியிலேயே முடிந்து விட்டது என்ற தவறான கருத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .அது நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே அடித்துக்கொள்ளும் சாவு மணியாகும். விடுகின்ற ஒவ்வொரு காலையும் ஒரு புதிய சந்திப்பு. அது புதிய கருத்துக்களோடும் புதிய எதிர்பார்ப்புக்களோடும் விடுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நாம் இது வரை கற்காலத்திலேயே இருந்து கொண்டிருப்போம்.

    நான் ஒரு நிறுவனத்தின் தலைவரின் அறையிலே பார்த்த ஒரு சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்த வாசகம் இதுதான்:

    “ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு மானும் தினசரி காலையில் கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும் என்ற  உறுதியோடு எழுந்திருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இன்று ஏதாவது ஒரு சிங்கத்திற்குத் தான் இரையாக வேண்டும் என்ற எண்ணமே !

    ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு சிங்கமும் தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும்” என்ற உறுதியோடு  எழுந்திருக்கின்றது, அவ்வாறு இல்லாவிட்டால் இன்று தனக்கு இரை கிடைக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே !

    நீங்கள் மானாக இருந்தாலும் சரி, சிங்கமாக இருந்தாலும் சரி, தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது  நேற்றை விட இன்று சிறப்பாகச் செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் கண்விழிக்க வேண்டும்.:

    என்ன உன்னதமான கருத்து!

    பல நேரங்களில் பல இடங்களில் சிலருக்கு வேலை கிடைத்தவுடன் “இனிமேல் நமக்குக்  கவலையில்லை. நம்முடைய ஓய்வு காலம் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது ” என்ற தவறான கருத்தோடு தங்கள்  தொழில் சிறப்பை இழந்து நிற்கின்றார்கள். .இன்னும் சிலரோ “நான் என்னதான் சிறப்பாக வேலை பார்த்தாலும்

    எனக்கு இன்னும் பத்து வருடங்களுக்கு வளர்ச்சி இல்லை . செய்தேன்ன பயன்? ” என்று தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். .மற்றும் பலர் “எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். நான் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்.?” என்ற சிந்தனையில் வாழ்கின்றார்கள். இன்னும் சிலர் “என்னுடைய வேலை ஒப்பந்தத்தில் நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லையே” என்று விளையாட்டாகப் பேசி வளர்ச்சியைத் தவற விடுகின்றார்கள்.

    வளர்ச்சியும் முன்னேற்றங்களும் காலமும் இவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை. திறன் – அளவு – வேகம் (SKILL, SCALE AND SPEED): இவைதான் நம்முடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏணிப்படிகள்.

    சற்றே முயன்று பார்க்கலாமே !

    தொடரும்…

    Share
  • உளவியல் பேசும் – ரமேஷ் பிரேதனின் ஐந்தவித்தான்

    முனைவர் சு. செல்வகுமாரன்

    ரமேஷ் பிரேதனின் ஐந்தவித்தான் புதினம், சமூகத்தில் ஒரு மனிதனை காலப்போக்கில் இயல்பாக பற்றிக் கொள்ளும் மனநோயினையும் அதன் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தினை புனைவின் வழியாகப் பேச முயல்கின்றது. ஐந்தவித்தான் உளவியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி தனது உரையாடலை நிகழ்த்துகின்றது. புனைவின் கதையாடலை ரமேஷ் தொடர்புடைய, தொடர்பறுந்த நிலையில் நகர்த்திச் செல்வதும், யதார்த்த, மிகையார்த்தங்களைக் கடந்த பின்நவீனத்துவ, பின்காலனியக் கூறுகளையும், மாய ஜாலங்களையும் நிகழ்த்துகின்ற குறுக்கு வெட்டுத் தன்மையுடையதாக விளங்கச் செய்வதும் கதையை  ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சேர்ப்பதாக அமைகின்றது.

    புதினம் முற்றிலும் மனவியல் சார்ந்ததாகக் கொண்டு செல்லப்பட்டாலும், உறவுகள் குறித்த இழப்புகள், ஏக்கங்கள், காதல், காமம், கடவுள், மதம், மொழி, சாதி, வர்க்கம், வரலாறு, கதை தொன்மம், பெரியாரியம், மார்க்சியம், ஈழம், அறிவியல், புதுவை குறித்த வரலாறு, வரலாற்றை மீட்பது எனப் புனைவுக்குள் புனைவாக ஏராளமான விஷயங்களை மிக நுட்பமாகத் தருக்கத்தின் மூலம் முன்வைத்துச் செல்வதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

    மழை என்பது ஒரு சொல் அன்று அது மழைதான் என்ற அழுத்தமான ஒரு காட்சிப்படுத்தலோடு புதினத்திற்குள் அழைத்துச் செல்கிறார் ரமேஷ் பிரேதன். நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த மாதவன் என்ற முதன்மைப் பாத்திரம் மூலமாக எளிமை, ஏமாளித்தனம், உறவுக்காக அலைந்து திரியும் ஒரு தந்தையைப் பற்றியான பதிவுகளோடு, உயர்சாதித் திமிர், ரிக்சாக்காரனோடு தவறான தொடர்பு, யாரையும் கொலை செய்யும் துணிச்சல், சர்க்கஸ் கூடாரத்தில் பீயள்ளினாலும் சிங்கத்தின் பீயைத்தானே அள்ளுகிறேன் எனப் பெருமிதம் கொள்ளல் என்பதோடு இந்தச் சமூகத்தோடு பெரிதும் முரண்படுகின்ற ஒருதாய் பாத்திரத்தோடும் கதை முன் நகர்த்தப்படுகின்றது. இன்னும் கதைசொல்லி சந்திக்கும் சக பயணிகளான தாமரை, தேவகி, கொன்றை, பூமிதா, ழகரி என்னும் சகப் பாத்திரங்களோடு புதினம் இயக்கப்படுகிறது.

    புதிய அம்சங்களை நிரம்பக் கொண்டிருக்கும் இந்தப் புதினத்தை ரமேஷ் பிரேதன் ஓர் ஆய்வேடு போல முக்கியமான இரு பகுதிகளாகப் பிரித்தளித்துள்ளார். இது புதினத்தைத் திசைமாறாமல் பயணிக்கவும் வாசிக்கவும் செய்யும் இரயில் தண்டவாளங்களாகவே எனக்குப்படுகிறது. முதற்பகுதி மனநோயின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பை மையப்படுத்துகின்றது. இரண்டாம் பகுதி மனநோயின் வளர்சிதை மாற்றத்தை மையப்படுத்தியும் விவாதிக்கின்ற ஒரு புனைவாக விளங்குகின்றது. ஐந்தவித்தான் புதினம் பொதுவான ஒரு ஜனரஞ்சகமான வாசகத்தளத்தைத் தாண்டிய தீவிர வாசகனை நோக்கிய பின் நவீனத்துவ, உளவியல் எழுத்து வகையைச் சார்ந்த ஒரு புதின வகை என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படியெனில் நாம் புதினத்துக்குள் ஓர் அறிவார்ந்த வாசகனாக அல்லது மனநோய் பிடித்த ஒரு வாசகனாக பாத்திரங்களின் மொழி, கருத்தியலோடு யதார்த்தம், மிகையதார்த்தம் கடந்த மாய உலகைத் தரிசிக்கவும், பயணிக்கவும், தருக்கம் செய்யவும், புரிந்து கொள்ளவும் எளிதில் முடியும்.

    காமம் – பாலியல் – மனங்களின் தொடர்பினை முன்னிலைப்படுத்தி, பின்காலனியத்தின் குரலாய் வரலாற்றை மீட்டெடுத்தல் என்பதாகக்  கதைசொல்லும் புதினம் ஐந்தவித்தான். மாதவனின் தாய் தான் பருவமடைந்து வீட்டிலிருக்கும் காலத்தில் ஒருவனோடு புணர்ந்து கருத்தரித்து விடுகிறாள். உயர் சாதிய சமூகத்தைச் சேர்ந்த மாதவனின் தாய் தன்னை அதிலிருந்து காத்துக்கொள்ள நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த மாதவனின் தந்தையை விரும்புவதாகப் பாவனை செய்து அவரை கணவனாக்கிக் கொள்கிறாள். இதனால் சாதிய ரீதியில் ஏற்படுகிற குழப்பங்களும் மரணமும் ஒருபுறம். இன்னொரு நிலையில் மாதவனின் தந்தை அவளுக்குப் போதாமையாய் மாற அவள் சமூக யதார்த்தத்துக்கு மாறாக மாற்று, எதிர்கலாசாரத்தை விரும்புகின்ற ஒரு பெண்ணாக ஒரு ரிக்சாக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்கிறாள். இதனால் மாதவனின் தந்தைக்கும் தாய்க்குமான இடைவெளி விரிசலடைகிறது.

    இதனை யதார்த்த மனநிலையில் வளரும் மகன்  மாதவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு பள்ளி விடுமுறை நாளில் ரிக்சாக்காரனை கொலை செய்வது பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதாக புனைவு எழுதிச்செல்கிறது. எதிர்ப்பையோ, தனது நலனையோ, அறிவுறுத்தலையோ கண்டுகொள்ளாத மாதவனின் தாயின் சுதந்திரமான பாலியல் வேட்கை அல்லது மாற்றுக் கலாசார வாழ்வை யோசிக்கும் அவளின் மனதை ஒரு சம்பவம் பெரிதாக கலைத்துப்போடுகிறது. தனது பைத்தியக்கார மகளை தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ரிக்சாக்காரன் அவளின் எதிர்ப்பையும் மீறிப் புணர்ந்து விட அதனை ஏற்றுக் கொள்ள இயலாமையிலேயே தனது அக்காள் இறந்து விட்டாள் என்ற மாதவனின் கூற்றில் ஒரு கணம் அதிர்ந்து போய் விடுகிறாள். “அடிவயிற்றில் ஓங்கி உதைத்ததைப் போல மாதவா எனக் கத்தினாள்” (ப-20) பின்னர்ப் பொறுமையாக ரிக்சாக்காரனை சந்தித்துப் பேச்சுக் கொடுத்து அவனை ஓர் இரவில் வீட்டிற்கு பிராந்தியுடன் வரவைத்து ஊற்றிக் கொடுத்து மகிழ்விக்கிறாள். போதையின் உச்சத்தில் ரிக்சாக்காரன் குடைசாயும் நேரத்தில் விரிக்கப்பட்ட சாக்குத்துணிக்கு கீழே மடிக்கப்பட்டுக் கிடந்த சவரக்கத்தியை எடுத்து ஒரே வீச்சில் அவனது ஆண் உறுப்பை வெட்டி வீழ்த்தி விடுகிறாள். இது புதினத்தின் போக்கில் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகின்ற இடமாக அமைகின்றது.

    மாதவன் அறுபட்ட ஆணுறுப்பை செத்த எலியைப் போல தூக்கி பாலித்தீன் கவரில் போட்டு தூக்கித் திரிவது, ஓரிரு நாள் கழித்து அதனை தோட்டத்தில் புதைத்து விடுவது, ரிக்சாக்காரன் சிலநாள் கழித்து பிணமாக குளத்தில் மிதப்பது எனத் தொடரும் நிகழ்வுகள் முடிவுக்கு வருவதற்குள்ளாகவே மாதவனின் அம்மா மீண்டும் சில நாட்களில் அப்பாவுடன் முடிவெட்டுகிற கடையில் வேலை செய்கிற ஓர் இளம் வயதுக்காரனோடு சென்று விடுகிறாள். இது நமக்குப் புதிராகவே இருக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வேலை செய்வதான தகவல். பின்னர் ஒரு தளர்ந்த நிலையில் அப்பாவின் அழைப்பினை ஏற்று இரவில் சிறிதுகாலம் வீட்டில் வந்து படுக்கை கொள்கிறாள்.

    இறுதியாக ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு இறங்கி இரவு நேரத்தில் வெளியில் கடற்கரைக்குச் சென்று கடலில் விழுந்து இறந்து போக முயற்சிப்பதும் செல்லும் வழியில் இருவர் மது அருந்திவிட்டு அவளை பாலியல் சுரண்டலில் ஈடுபட முயற்சிப்பதும் விருப்பமில்லாத அவள் அவர்களில் ஒருவனை இடுப்பில் செருகியிருந்த மடக்குக்கத்தியை வீசி கொன்றுவிட்டு கடலில் விழுந்து செத்துவிடுவதாக புனைவு பதிவு செய்கிறது. இங்கு மாதவனின் அம்மா பாலியல் விஷயத்தில் மிகு ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் பல முரண்களைக் கொண்டிருப்பதும் முதன்மை பெறுகின்றது. இதனை ஒருவரின் மனநோயின் தன்மையாகப் பார்க்கமுடிகிறது. புனைவின் இப்போக்கு  பின்காலனியம் என்ற கோட்பாட்டு எழுத்தை தாண்டிய ஒரு மனவியல் புதினமாகவே பார்க்க இடமளிக்கிறது.

    புதினத்தில் எவ்வளவோ விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் இன்னொரு பரப்பு ஒருவருக்கொருவர் உயிராய்க் காதலித்துக் கொண்டிருந்த மாதவன் தேவகி வாழ்வில் ஒரு கட்டத்தில் தேவகி மாதவனிடமிருந்து விலகி வீட்டிலுள்ளோர் அறிவுறுத்தலின்படிக் கொன்றையைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  நாட்களின் நகர்வில் அவர்களுக்குக் குழந்தையின்மை நிலை ஏற்பட  தேவகி கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் சக தோழிகளிடம் தான் மாதவனை ஏமாற்றிய பாவம் என்பதான ஓர் இரங்கற்பா கருத்தைத் தெரிவிக்கின்ற செய்தி மாதவனை எட்டுகிறது.

    மாதவனோ படித்தவர்களிடம் கூடக் காதலுக்குச் சாதியும் வர்க்கமும் தடையாய் உள்ளதைத் தன் சிற்றப்பாவிடம் விளக்கித் தனக்குத் திருமணமே வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தான். மாதவனின் அதிர்ஷ்டம் அவன் வீடுகட்டக் குழிதோண்ட தனது அக்காள் ஒரு மழைநாளில் இறந்த இடத்தில் இருந்து ஒரு சிறிய தாழி  கிடைக்க அதில் தொப்புள்கொடியில்லாத அழகிய ஒரு  பெண் குழந்தை கிடைக்கிறது. குழந்தைக்கு அவள் பூமிதா என பெயரிட்டு வளர்த்து வருகிறான். “ஏவாளுக்குப் பிறகு பூமியில் தோன்றிய தொப்புள் இல்லாத இரண்டாவது பெண் தன் மகள் பூமிதா என மாதவன் பெருமைப்பட்டுக் கொள்கிறான்.

    இதற்கு இடையில் தனக்குக் குழந்தை இல்லை எனப் புலம்பிய தேவகிக்கு மாதவன் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாக உறுதியளிக்கிறான். தேவகி தன் அகம் மகிழ்ந்து தன் கணவனிடம் சொல்ல அவன் மாதவனை அணுகி இது குறித்துப் பேசியிருக்கிறான். தன் மகள் பிறந்த கதையை நம்பும்படி தேவகியின் கணவனிடம் மாதவன் கேட்டுக் கொண்டான். தேவகிக்கு ஒரு நல்வழி காட்டினான். தினமும் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து வந்தால் ஆயிரத்து முந்நூற்றி முப்பதாம் நாள் ஒரு குழந்தை பிறக்கும் என நம்பிக்கை அளிக்கிறான். மாதவன் காட்டிய திசையில் பயணித்த தேவகிக்குக் குழந்தை ஒன்று சித்திக்கிறது. கொன்றை மாதவனை கையெடுத்து வணங்கினான். பிறந்த குழந்தைக்கு மாதவனின் மகள் பூமிகா ழகரி எனப் பெயர் சூட்டினாள்.

    ஒரு கட்டத்தில் பூமிதா வளர்ந்து பருவமடைகிறாள். அவளுக்கு ஒரு தாய் தேவைப்படுகிறாள். மகளுக்கு ஒரு தாயின் சேவை தேவை என்பதை உணர்ந்து தவித்த மாதவனுக்கு தேவகி உதவிக்கு வர பின்நாளில் அடிக்கடி தேவகி இங்கு வந்து போவதும் இங்கே தங்கிவிடுவதுமாய் ஒரு கட்டத்தில் தேவகி கொன்றையைப் போல ஓர் ஆண்மகன் தனக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தது மாதவன் பெற்ற வரம் என பேசிக் கொள்ளும் படியாகவும் அமைகிறது. இது மன ரீதியாக வேறுபட்ட அர்த்தப்பாடுகளை தருவது கவனத்திற்குரியது. சில நேரங்களில் பூமிதாவே தன் தந்தையை விட்டு விலகி தனக்கான பாதையில் செல்லும் போது தேவகி ஏன் மாதவனைச் சுமந்து கொண்டு திரிகிறாள் என்ற கேள்வி கொன்றையை குடையும்.  இந்நாட்களில், தன் இயல்பை விட்டு விலகி மது அருந்துவான். அந்தச் சமயங்களில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எழும் செம்புகையானது வீடெல்லாம் நிறைந்து ழகரிக்கு மூச்சுத் திணறலை உண்டாக்கும் என்பதாகவும் கதை பதிவு செய்கிறது.

    இன்னோரிடத்தில் மாதவன் தேவகி பல நேரங்களில் நான் உன்னை ஒரு புனைவு உயிரியோ என சந்தேகிக்கிறேன். நீ இல்லாத நேரங்களில் இந்த வீட்டில் நான் மட்டும் இருக்கும் போது என்னுடன் உண்மையாகவே நீ வாழ்ந்து வருகிறாயா? அல்லது இதுவும் எனது கற்பனையா என்ற கேள்வி எழுகிறது என்பதான மாதவனின் கேள்விகளும், மேலும் பாலியல் புணர்ச்சி, ஆண் பெண்  உறவு, உடலுறவு எனும் மையத்தைச் சுற்றியே கதை நகர்வதும் இவை தொடர்பான வரையறைகளும், மீறல்களும் பாத்திரங்களில் ஒருவருக்கொருவர் ஏற்படும் ஐயங்களும், உடன்பாடுகளும், ஆசைகளும் ஒரு நேர்கோட்டு வரிசையினதாக இல்லாமல் குறுக்கு வெட்டுத் தோற்றங்களாய் அமைவது மனநோயின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் சிதைவாகப் பார்க்க முடிகிறது.

    மேலும் ஒருமுறை கதைசொல்லி ழகரி கிடைத்தது தொடர்பாகத் தேவகியிடம் பேசிக் கொண்டிருக்கிறபோது இருபதாம் நூற்றாண்டில் தனக்கு ஒரு மகள் கிடைத்ததாகவும் அவள் பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு தனது இருபத்தியோராம் அகவையில் தன்னைத் தேடி வந்தாள் என்றும் அவள் தனக்கு பிறந்த மகள் என்றும் குறிப்பிடுகிறார். அவளின் முகச்சாயல் பற்றி சொல்லுகின்றபோது எனக்கு பெண் வேடமிட்டது போல ஒரு பிரான்கோ – தமிழ்ப் பெண் அவள் என்கிறார். வெள்ளைத் தோலுமில்லாமல் கறுப்புத் தோலுமில்லாமல் தேன் நிறத்தில் இருந்தாள் என்கிறார். இப்பெண்ணின் பெயராக பூமிகா மாதவன் எனக்குறிப்பிடுவது கதையின் மைய ஓட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. புனைவில் ஓர் இனக்கலப்பை அடையாளப்படுத்துகின்றார். மேலும் இந்நிகழ்வின் மூலமாகப் பாலினக்கவர்ச்சி புணர்ச்சி என்பவை சாதி, வர்க்க, நிற, இன வேறுபாடுகளைக் கடந்தவை என்பதும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

    புனைவில் இடம்பெற்றுள்ள சபீன்துய்ஷாம்ப் மெர்ஸ்ஸியோ துய்ஷாம்ப் பொந்திஷேரியில் (பாண்டிச்சேரி) ஐந்தாண்டுகள் தந்தையாக இருந்தவர். அப்போது இவர்களுக்கு சமையல் வேலை பார்த்த கதை சொல்லியோடு சபீன் துய்ஷாம்ப் விரும்பிப் புணர்ந்ததில் பிறந்த பெண்ணே – இந்த பிரான்கோ தமிழ்ப் பெண். ஐந்தாண்டு பதவியை முடித்து பிரெஞ்சு தேசத்துக்கு புறப்பட்டுச் சென்றபோது மெர்ஸ்ஸியோ கப்பலில் வைத்துப் பலமுறை சபீனை புணர்கிறான். குழந்தை பிறக்கும் தருணத்தில் தான் தந்தையாகப் போகும் சந்தோஷத்தில் இருந்த மெர்ஸ்ஸியோவுக்கு குழந்தை வெள்ளைக்கு மாற்றாக பிறக்க தலையிடி ஏற்படுகிறது. மருத்துவமனையிலேயே இருவரையும் கொலைசெய்ய முயற்சிக்கிறான் மெர்ஸ்ஸியோ. சபீன் பாரீசிலிருந்து மர்ஸெய் வழியாக கதூலூப் தீவுக்குத் தப்பிச் செல்கிறாள். மர்ஸெயில் உள்ள துறைமுகத் தொழிலாளி ஒருவன் சபீனுக்கு உதவி செய்கிறான். பூமிகாவை துறைமுகத் தொழிலாளியிடம் அடைக்கலப்படுத்தி விட்டுச் செல்கிறாள்.

    எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மர்ஸெய் திரும்பிய சபீன் தன் மகளுடன் இணைகிறாள். அந்தத் தொழிலாளியை மறுமணம் செய்து கொள்கிறாள். பின்னர் தன் மகள் பூமிதாவை கதைசொல்லி்யென அவளின் தந்தையர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் அவளின் மூலம் கதைசொல்லி இந்த கதைகளைத் தெரிந்து கொண்டு வரலாற்று வெளியில் திக்கற்று அலைந்து கொண்டிருந்த எனது வாழ்க்கைக்குப் புதிய அர்த்தம் கிடைப்பதாக மகிழ்வதும் உணர்வுகள், மனங்கள் சார்ந்த பல யதார்த்தங்களை நமக்கு வெளிச்சப்படுத்துவதாக அமைகிறது. இங்கு மாதவனின் தாயின் முரண்பட்ட செயல்பாடுகள். சபீன் கதைசொல்லியோடு புணர்தல் – துறைமுகத் தொழிலாளியோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல், மாதவன் –  தேவகி – சபீன் உறவுகள், வளர்ந்த பிறகு மாதவனிடம் இருந்து விலகி இருக்க விரும்பும் பூமிகாவின் செயல் என எல்லாமே ஒருவித மனநோயின் வெளிப்பாடே என்பதை பிராய்டு உள்ளிட்ட உளவியலாளர்களின் கருத்துப்படி புதினத்தில் உறுதிப்படுத்துகிறார் ரமேஷ்.

     மேலும் புனைவில் முடிதிருத்தும் நாவிதர்களின் தொழில் அல்லது சேவை குறித்துப் பேசுகின்ற போது முடிதிருத்தி முகம் மழித்து குளிர்நீரைப் பீய்ச்சித் துடைத்து பவுடர் பூசி, கைவிரல்களுக்கு நெட்டி முறித்து, அக்குள் முடிநீக்கி எனப் பதிவு செய்யுமிடத்தில் யாரோ ஒருவனின் தாயோ தாரமோ கூட இப்படித் தொட்டு துடைத்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிடுவது நம்மை ஒருகணம் மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்ற இடமாக உள்ளது. இங்கு இத்தகையதான ஒரு சமூகத்துக்கு நாம் கொடுக்கின்ற மரியாதை என்ன என்பதே முக்கியம்.

    மாதவனைப் பார்த்து அவனது தந்தை குறிப்பிடுகிறபோது நீ ஒரு நாவிதன் நாய்க்குக் கூட குரைப்பதற்கு நாக்கு இருக்கிறது. உனது நாக்கு பிறக்கும் போதே அறுக்கப்பட்டு விட்டது. நாவற்றவன் தான் நாவிதன் என்பதோடு கல்வி உன்னை விடுதலை செய்யும் என்று குறிப்பிடுவதன் மூலம் ஒடுக்குதல் மற்றும் விடுதலையின் வரலாறும் உணர்த்தப்படுகிறது. இன்னோர் இடத்தில் வறுமையை மாதவனின் தாய் மூலம் பதிவு செய்கிறபோது அரசு மருத்துவமனைக்குச் சென்று மாதம்தோறும் ரத்தத்தை பணத்திற்கு விற்று அந்த காசில் சமைத்து சாப்பிடுபவள்.  ரிக்சாக்காரனுக்கு   மட்டும் உடம்பையும் விற்பவள் என்பதான பதிவு விளிம்பு நிலை சார்ந்த ஒரு யதார்த்தப்பதிவாக விளங்குவதும் கவனிக்கத்தக்கதாகின்றது.

    மாதவன் தன் அக்காவின் இறப்புக்கு பிறகு அவனது வகுப்பு ஆசிரியர், வகுப்புத் தோழி உள்ளிட்ட பலரிடம் அக்காவின் சாயலைத் தேடுவதென்பதும் தெளிவான மனநோயின் பிரதிபலிப்பாக புனையப்பட்ட வார்த்தைகளாகின்றன. அக்கா செத்த நாளைப் பற்றி பேசுகின்றபோது திதியன்று அவளுடைய அறைக்குள் எப்படியோ எங்கிருந்தோ மூத்திரவாடை கமழத் தொடங்கி விடுகிறது. பெருங்காயமிட்ட மாங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்ந்த சாம்பாருக்கு இளம் மூத்திரத்தின் மணம் வந்து விடும் என்பதும், மாதவன் அக்காவின் இறப்பின் போது அவளின் சாம்பலிலிருந்து வேகாத ஒரு எலும்புத்துண்டை எடுத்து வைத்துக் கொள்வதும், பின்னர் பூமிதாவுக்கு முதல் பல் விழுந்தபோது அதை எடுத்து பத்திரப்படுத்துவதும், அது போலவே மாதவனின் அக்காள் தாயின் இறப்பினை மையப்படுத்தி மழை, கடலை கொலைக்கான ஒரு காரணியாகப் பார்ப்பதும் மனநோயின் வளர்நிலையாகவே பார்க்க முடிகிறது.

    பழைய நினைவுகளைப் பகிரும்போதும் அத்தோடு ஒப்பிட்டுச் சமகால நிகழ்வுகளை பேசுகின்றபோதும் வெட்டுக்கிளி, தும்பி, தொட்டால் சுருங்கி, பெடிக்காய், பாம்பு, பேய்கள் முற்றாக அழிந்து விட்டன என்பதான பதிவும் ஆனால் இன்று போலீஸ் என்ற புதிய பேய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனும் கூற்றும் சில காவல்துறையினரின் மக்கள் விரோதச் செயல் சார்ந்த விமர்சனமாக அமைகிறது.

    மேலும் புனைவில் ஓர் அப்பா ஓர் அம்மாவின் இறப்புக் குறித்த பதிவு அவர்கள் சாகும் முதிர் தறுவாயில் உயிர் போவதற்கு முன்பாகவே அப்பாவை தீயிலிட்டேன் என்பதும், அம்மாவை தூக்கிப் புதைத்துவிட்டேன் என்பதும் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்தேன். நானூறு  ஆண்டுகள் வாழ்ந்தேன் என்பது போன்ற பல வினோத சித்தரிப்புகளும், புனைவில் இடம்பெற்றுள்ளன. ஆக யதார்த்தம், விளிம்புநிலை, பின்நவீனத்துவம், பின் காலனியம், மாய உலகங்களை எழுப்புதல், புனிதங்களைக் கட்டுடைத்தல், மாற்றுக் கலாச்சாரத்தை முன்நிறுத்துதல் குடும்ப அமைப்பு என பன்மைத்துவமான விஷயங்களை அருமையான மொழிவளத்தோடு ரமேஷ் பிரேதன் இப்புனைவின் கதைகளின் வழியே நமக்குள் கடத்த முயன்றுள்ளார் என்பதே உண்மை.

    *****

    கட்டுரையாளர் – தமிழ் உதவிப் பேராசியர்
    அரசு கலைக்கல்லூரி
    பரமக்குடி – 623701

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 120

    நிர்மலா ராகவன்

     

    வாழ்க்கை எனும் மிதிவண்டி

    “சௌக்கியமா?” ஒருவரைச் சந்திக்கும்போது கேட்கப்படுகிற உபசார வார்த்தை.

    சிலர் புன்சிரிப்புடன் தலையாட்டுவார்கள். வேறு சிலர், “என்னமோ இருக்கேன்!” என்று வேண்டாவெறுப்புடன் பதிலளிக்க, ”ஏனடா இவரைக் கேட்டோம்!’ என்று ஆகிவிடும்.

    இவர்கள் அனைவரும் உடலைத்தான் குறிப்பிடுகிறார்கள். உண்மையில், பிறருடன் சுமுகமாகப் பழகுவதும், திருப்தியும்கூட ஆரோக்கியத்தில் அடங்கும். மனநிறைவு இருந்தால் ஆரோக்கியமும் தொடர்ந்து வருமே!

    “உனக்கு ரொம்பத்தான் சுயநலம். உன்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறாய்!” என்று பழிப்பவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. நம்மை நாமே சரிவர கவனித்துக் கொள்ளாவிட்டால், பின் யாரை நோவது? அத்துடன், நாம் நன்றாக இருந்தால்தானே பிறரது நலனில் அக்கறை செலுத்தமுடியும்? தெளிவான, உறுதியான மனத்திற்கு தன்னைத்தானே கவனித்துக்கொள்வது முக்கியமில்லையா!

    ஒருவரது சிந்தனை, கூறும் வார்த்தைகள், நடத்தை எல்லாமே செம்மையாக இருக்கவேண்டும். நாம் சொல்வதால் பிறரும் மகிழ்ந்து சிரிப்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

    ஆக்ககரமான சிந்தனை, அடுத்த நாள் செய்யவேண்டியதைப்பற்றிய திட்டங்கள் ஆகியவை உடல், மனம் இரண்டையும் உற்சாகப்படுத்த வல்லவை.

    பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் சிந்திக்கிறார்கள், `நாளைக்கு ரவி என் சிநேகிதனாக இருப்பானோ?’ என்று. இருவரும் இன்று நட்புடன் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இருந்தாலும், இரவு தூங்கப்போகுமுன், நாளையைப்பற்றிய கவலையும் எழாமல் இராது.

    நமக்கும் இதுபோல்தான் வேண்டாத கவலைகள் எழுகின்றன. நமக்கு நடப்பது 20% என்றால், அவை நல்லபடியாக நடக்குமோ என்றெல்லாம் நாம் அநாவசியமாக யோசிப்பது 80%!

    கதை

    “நான் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன், ஆன்ட்டி” என்று குறைப்பட்டாள் சுகந்தா. அவளுக்கு நாற்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

    “அதில் என்ன தவறு? உனக்கு மகிழ்ச்சியுடன் பெரிதாகச் சிரிக்கவும் தெரிந்திருக்கிறது, பிறருக்காக வருந்தவும் முடிகிறது. இரண்டும் இல்லாமல், ஜடம் மாதிரி இருக்கப்போகிறாயா?”

    அவள் முகம் மலர்ந்தது. “அதானே!” என்றாள், நிம்மதியுடன்.

    சிறு வயதில் நிறைய கஷ்டங்கள் அனுபவித்திருக்கும் சுகந்தா அவைகளால் தளர்ந்துவிடாது, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்திருக்கிறாள். குடித்துவிட்டு முகத்தில் கத்தியால் கீறிய தந்தை, அருமையாகப் பேசிப் பேசி, வேலைக்காரிபோல் நடத்திய உறவினள், சிறு வயதிலேயே பாலியல் வதை! அவள் அனுபவிக்காத துயரமே கிடையாது எனலாம்.

    கடந்துபோனதையே எண்ணி வருந்தி, அல்லது `மீண்டும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ!’ என்று பயப்படாது, உறுதியுடன் எல்லாவற்றையும் ஒதுக்கி நடந்திருக்கிறாள் சுகந்தா.

    “வாழ்க்கை என்பது மிதிவண்டி போன்றது. கீழே விழாமலிருக்க நகர்ந்தபடி இருத்தல் அவசியம்,” என்று சரியாகத்தான் சொல்லிப்போனார் ஐன்ஸ்டீன்.

    ஆரோக்கியம் கெட்டபின்தான் அதன் அருமை புரிகிறது.

    “மனுசனாப் பிறந்தா, என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு!” என்று ஒரு மாது சலித்துக்கொண்டதைக் கேட்டேன், அண்மையில். அறுபது வயதில் உடல் நலம் குன்றிப்போக, நாள் தவறாது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்ததில் எழுந்த சலிப்பு அது.

    கவலையை அகற்ற ஏதேதோ வழிகள். `எனக்கு ஏதாவது கவலை வந்தால், சாப்பிட்டால் அது குறைந்துவிடும்!’ என்பார்கள் சிலர்.

    வருத்தத்திற்கு மாற்றுமருந்து உணவா! எடை கூடிக்கொண்டே போகிறதே என்ற கவலையில் இன்னும் அதிகமாகச் சாப்பிடத் தோன்றாதா? உடற்பயிற்சி அதைவிட நல்ல பலனளிக்குமே!

    ஆனால், எல்லாருமே சாப்பிடுவதில் நிறைவு கண்டுவிடுவதில்லை.

    கதை

    வேலை நிமித்தம் மலேசியாவிற்கு வந்திருந்தவள் அனிதா. “என் ஒருத்திக்காக என்ன சமைப்பது! தினமும் கடையில்தான். இல்லாவிட்டால், நூடுல்ஸ்! எனக்குக் கறிகாய்கள் பிடிக்காது!” என்றாள்.

    அவள் கொள்ளை அழகு. இப்போது உடல் இளைத்து, சக்தி குன்றி இருந்தவளைப் பார்த்து, “தினமும் என்ன சாப்பிடுகிறாய்?” என்று முகத்தைச் சுளித்தபடி நான் கேட்ட கேள்விக்குப் பதில் அது.

    “உன் கணவர் வீட்டில் சாப்பிட மாட்டாரா?” என்று மேலும் துளைத்தேன்.

    “நல்லவேளை, அவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துவிட்டது! இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்!”

    திருமணமாகி இரண்டு வருடங்களுக்குள்ளேயே இல்வாழ்க்கை அலுத்துவிட்டதா!

    “அவர் கூட இருந்தவரை, நான் வெளியில் எங்கும் போகக்கூடாது. யாருடனும் பேசக்கூடாது. அவருக்கு நண்பர்களே கிடையாது. நானும் அப்படி இருக்க முடியுமா?” என்று பொரிந்தாள். “வேலை முடியும் சமயம் வந்துவிடுவார், என்னை அழைத்துப்போக. எப்பவும் வீட்டிலேயேதான்! வீட்டிலேயேதான்!” அனிதா அழாதகுறை.

    மெல்லச் சிரித்தேன். “நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான்! இப்போது என்ன செய்கிறாய்?”

    “சிநேகிதிகளுடன் ஊர் சுற்றுகிறேன். பேசிக்கொண்டே வெளியில் சாப்பிடுவோம்! தினமும் கூப்பிட்டுக் கேட்கிறார், இன்று என்ன செய்தாய் என்று!”

    கசப்பான மருந்துகள் பலனளிப்பதைப்போல, நம்மை வெகுவாகச் சோதிக்கும் அனுபவங்கள்தாம் நம்மைப் புடம் போடும். அவைகளிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதில்தான் நம் வெற்றி தோல்வி அடங்கியிருக்கிறது.

    “வாழ்க்கை எளிதாக இருக்கவேண்டும் என்று கடவுளைத் துதிக்காதே. கடினமானதைத் தாங்கும் சக்தி வேண்டும் என்று வேண்டிக்கொள்!” (ப்ரூஸ் லீ)

    திருமணத்திற்குப்பின் சில பெண்களின் உடல்நிலை கெட்டுவிடும். பிறந்தகத்தில் கிடைத்த சலுகையை புக்ககத்தில் எதிர்பார்க்க முடியுமா!

    புதிதாக ஓர் உத்தியோகத்தில் அமர்ந்த பின்னரும் வித்தியாசமான நபர்களுடன் பழக முதலில் கஷ்டமாக இருக்கும். அவர்களால் உண்டான பாதிப்பையே நினைத்துக்கொண்டிராது, நமக்குப் பிடித்ததை, நம்மால் இயன்றதை, சரிவர செய்துவந்தால் நாளடைவில் புதிய சூழல் பழகிப்போகும்.

    இரு பெண்கள், ஒரே கதை

    சுவேதா வசதி குறைந்த பெற்றோருக்கு மூன்றாவது மகள். நாளேட்டில் வந்த `மணமகள் தேவை’ விளம்பரத்தைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். கணவர் அரசாங்க உத்தியோகத்தில் பெரிய பதவியில் இருந்தார். வரதட்சணையும் கேட்கவில்லை.

    வேறு என்ன தடை! அதிகம் விசாரிக்காமல் அக்கல்யாணத்தை முடித்தனர்.

    சுவேதாவுக்கு வாய்த்தவரோ மனநிலை சரியில்லாதவர். உத்தியோகம் பார்க்கமுடியுமே தவிர, பிறருடன் பழகத் தெரியாது. எப்போதும் தனிமைதான். `நீ பைத்தியம்!’ என்று வார்த்தையாலேயே மனைவியை வதைத்தார்.

    கணவரை விட்டுப்போவது பெற்றோருக்கு வருத்தத்தைத் தரும் என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டாள் சுவேதா.

    அவருக்குச் சரியாக எதிர்த்து வாதாடினால் தானும் அவரைப்போலவே ஆகிவிடும் அபாயம் என்று புரிந்து, அவருக்கு நேர் எதிராக இருக்க ஆரம்பித்தாள். அதாவது, அமைதியைத் தன் ஆயுதமாக ஆக்கிக்கொண்டாள். அவர் என்ன ஏசினாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள். `நான் அவருடைய ஓர் அங்கமல்ல. எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது!’ என்று துணிந்தாள். சிரிப்புடன் வளையவந்தாள். ஆரோக்கியம் குன்றவில்லை.

    கிட்டத்தட்ட அதேபோன்ற ஒருவரை மணந்த கமலா படித்தவள். பரம சாது. தனக்கென எதைக் கேட்கவும் அவளுக்கு உரிமை இல்லை. உத்தியோகம் பார்க்கக்கூடாது, பிறருடன் பழகவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள். `கணவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!’ என்று நம்பியவள் தானும் அவரைப்போலவே பித்துப்பிடித்தவளாக ஆனாள்.

    இயற்கை மருத்துவம்

    நமக்கு ஏதாவது உடற்கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரைத் தேடிப்போகிறோம். அவசியமே இல்லை. “ஆறு சிறந்த மருத்துவர்கள்: நீர், காற்று, சூரிய ஒளி, சத்தான உணவு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி,” என்கிறார் திரு.அனுபவசாலி.

    ஓய்வு ஒழிச்சல் இல்லாது வேலை செய்யும்போதும், அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து குருட்டு யோசனை செய்யும்போதும் மனம் தளர்ந்து, வேண்டாத கவலைகள் சூழ்ந்துகொள்கின்றன.

    “ஆச்சு! ரிடையர் ஆக இன்னும் பதினைஞ்சே வருஷம்தான் இருக்கு!” என்ற அற்ப திருப்தி அடைந்துவிடுவார்கள் சிலர். வாழ்க்கையில் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுபோல் வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

    எந்த வயதானாலும், ஒத்த மனதினருடன் பழகுவது, இசை, நடனம், படிப்பது என்று பிடித்தது எதிலாவது மனத்தைச் செலுத்தினால் புத்துணர்ச்சி பிறக்குமே!

    நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிறரது கட்டாயம் நம்மைப் பாதிக்க விடலாமா?

    தொடருவோம்

    Share
  • கீதாரி நாவலில் விளிம்புநிலை மக்கள்

    -கி. ரேவதி

    முன்னுரை:

    இடையர் சமூகப் பிரிவின் ஓர் இனக் குழுவைக் கதையாடலாகக் கொண்ட இந்நாவல் சாதாரண சம்பவ விவரிப்புகளின் ஊடாக இனத்திற்குரிய அடையாளங்களான நாடோடியம், இருப்பிடம், தொழில்முறை, பழமொழி கதை, பாடல் போன்ற வழக்காறுகள், அவர்களுக்குரிய நம்பிக்கை, சடங்கு, தெய்வம், வாழ்க்கை முறைமைகளான திருமணமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறைமை போன்றவை குறித்த அழுத்தமான பதிவாக வாசிப்பை முன்நகர்த்துகிறது.

    விளிம்புநிலை மக்கள்:-

    பெண்கள், உழைக்கும் களங்கள், இயற்கைத் தொடர்பு இவற்றை வட்டார மொழி நடையில் யதார்த்தத்துடன் கீதாரி நாவல் அமைத்துள்ளது. ஒரு சமூகப் பிரிவினரின் வாழ்வியல் முறைமைகளை வட்டார மொழி நடையில் தொடர்ந்து அடையாளப்படுத்தும் ஆளுமையாக விளங்குபவர் சு. தமிழ்ச்செல்வி. கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் அமைந்தன அவர் படைப்புகள். ‘இடையர் தலைவன்’ என்பது வட மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து நாடோடியாக வாழும்முறையை நடத்தும் விளிம்புநிலை இடையர் சங்கத்தைக் கதைப் பொருளாகக் கொண்டுள்ளது.

    விளிம்பு நிலையிலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் நிலையான வாழ்க்கை முறைமையுடன் கூடிய நிலவுடைமை, பொருளாதாரம், சமூக மதிப்பீடு போன்ற புறக்காரணிகளின் அடிப்படையில் தங்களை மேல்நிலையாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவது இன்றளவில் காணப்படுகிறது.

    சமுதாய நிலை:-

    ஒவ்வோர் இனக்குழுவிற்கும் சமூகப்பிரிவு, வாழிடம், தொழில்முறை, இயற்கையோடு உள்ள தொடர்பு ஆகியவை சார்ந்து நம்பிக்கைகளும், சடங்குகளும் வெவ்வேறானவையாக இருக்கும். இடையர்குல இனக்குழுவிடம் தொழில்முறை சார்ந்து சில நம்பிக்கைகள் இருப்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. ஆடுகள் மேய்க்கும்பொழுது முயல் சிதறி ஓடுவது தீய சகுனமாக நம்பப்படுகிறது. (ப-127)

    சடங்குகள்:-

    பொங்கலன்று ஆடுகளைப் பெட்டை கிடா என்று தனித்தனியாக அலங்கரித்து பின் தளுவை போடும் இடத்தில் தெப்பம் கட்டி ஆட்டுக்குட்டியின் காதை அறுத்துச் சடங்கு செய்வது (ப-114) போன்ற சடங்கு முறைமைகளும் கதையோட்டத்தின் ஊடே நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கைகள் சடங்குகள் நிறுவனமயமாக்கப்பட்ட சமயப் பின்புலத்தில் இல்லாமல் இனத்திற்கேயுரிய, இயற்கையோடு இயைந்த, நாட்டார் தன்மைக் கொண்டனவாக உள்ளன. உணவுமுறையைப் பார்க்கும் பொழுது நெல்லரிசி சோறு, குழம்பு, புலம்பெயர் இடத்தில் கிடைக்கக்கூடிய தானிய வகைகள் போன்றவையும் ஆடுகள் இறந்தால் அதன் கறியை வற்றல் போட்டு வைத்துக் கொண்டு உண்பதும், மிளகாய் சாந்து அரைத்து வைத்துக் கொள்வதுமான உணவுமுறைகள் கூறப்படுகின்றன. புழங்கு பொருட்கள் பெரும்பாலும் மண்ணாலான பானை, சட்டிகள், தொழில்முறை நாடோடியாக சார்ந்து அம்மி முதலிய கல்லாலான புழங்கு பொருட்கள் விலக்கப்படுவதையும் (ப-119) இந்நாவல் பதிவு செய்கிறது.

    திருமணச் சடங்கு:

    திருமண முறையைப் பார்க்கும்போது சித்தப்பா முறையில் திருமணம் செய்துகொள்ளுதல் (ப-98), அண்ணன் இறந்தால் அவன் மனைவியைத் தம்பி திருமணம் செய்துகொள்ளும் முறையும் (ப-134) திருமணச் சடங்கில் மாப்பிள்ளைக்குப் பதிலாக அவன் ஆடு மேய்த்த தடிக்கம்பை வைத்து திருமணம் செய்யும் போக்கையும் (ப-101) திருமணத்திற்குச் சீதனமாக ஆடுகளும் (ப-52) பாத்திரப் பண்டங்களுடன் மாளிகை சாமான்களையும் சீதனமாய்க் கொடுப்பதும் ஆட்டுக்கார இடையர்களின் வழக்கமாயிருந்தன என்பதை இந்நாவல் விளக்குகிறது. இது தொழிலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைக்கும் தன்மையைக் காட்டுகிறது.

    இறை நம்பிக்கை:-

    இடையர்கள் வணங்கும் தெய்வங்களாக நல்லமுனி, நெறஞ்சாயி, மகமாயி, மாரியம்மன் போன்ற நாட்டார் மரபுசார்ந்த தெய்வங்கள் கூறுகின்றன. இவை மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகனை வணங்குவது நிறுவனமயமாக்கப்பட்ட ஸ்கந்தன் மரபும் நாட்டார் தெய்வம் சார்ந்த வேலன் மரபும் கலந்த நிலையைக் காட்டுகிறது.

    தொழில்:-

    இடையர் சமூகத்தை அடையாளப்படுத்தும் இந்நாவல் அச்சமூகத்தின் தொழில்முறை குறித்த நாட்டார் வழக்காற்றுக் கதையாடல் ஒன்றை முன்வைக்கிறது. இக்கதையில் இடையர்கள் ஆடுமேய்த்து நாடோடிகளாகப் பிழைப்பதற்கான வழக்காற்றுக் கதையாடல் கூறப்படுகிறது. தொழில்களாக ஆடு மேய்த்தல், இடை கட்டுதல் போன்றவை கூறப்பட்டுள்ளன. தொழில் முறையில் ஆண், பெண் வேறுபாடில்லை. ஆடு இல்லாத இடையர்கள் ஆடு வைத்திருப்பவர்களிடம் வாடகைக்கு (ஓராண்டிற்குப் பிறகு ஓர் ஆட்டிற்கு இரண்டு ஆடாகத் திருப்பித் தருவதாகக் கூறி) வாங்கி அதன் புழுக்கைகளை விற்று பிழைப்பை நடத்துகின்றனர்.

    இவற்றைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை. கேட்டாலும் தெரியாது என்பது மாதிரியான விடைகள்தாம் வரும் (பக்.165) இவர்கள் தொழில் ரீதியாக நிலவுடைமைச் சமூகத்தினரை அண்டி ஆதரவுச் சமூகமாகத் தங்களுடைய வாழ்வை முன்நகர்த்தக் கூடியவர்களாக உள்ளனர். வழக்காறுகளாகப் பழமொழி, கதை, பாடல் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. நாவல்முழுக்கத் தங்கள் சாதியம் குறித்த பழமொழிகள் (ப.132) பொதுவான வாழ்முறை குறித்த பழமொழிகள் (பக்.137) எனப் பல்வேறு பழமொழிகள் கூறப்பட்டுள்ளன. கிடைகட்டும் பொழுது தூக்கம் வராமல் இருக்கப் பாடும் தெம்மாங்குப் பாடல் (பக்.208) சக்களத்தி சார்ந்த பாடல்களும் இயல்பாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அவர்களுடைய கலையாகவோ பொழுதுபோக்காகவோ கொள்ள முடியாது.

    இடையர்களின் கதை:-

    இடையர்கள் ஏன் மழையிலும் தண்ணீரிலும் கிடந்து வருத்தப்படுகிறார்கள் என்பது இந்நாவலின் வழியாக அறிய முடிகின்றது. அவர்களின் கதையை கரிச்சா வாயிலாக வெள்ளைச்சாமி அறிந்து கொள்கிறான். மழைபெய்து வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது ஓர் ஆட்டுக்காரன் மட்டும் தனியாக காட்டிற்குள் தங்கியிருந்தான். ஆட்டிற்குத் தண்ணீரிலேயே கிடையைப் போட்டு வேலியில் படர்ந்து இருந்த பிரண்டை கொடிகளை எடுத்து மெத்தையாக விரித்துக் கொண்டான்.

    தென்னைக் கீற்றால் பின்னிய கீற்றை மேலே வைத்துச் சுகமாகத் தூங்கியிருக்கிறான். அவ்வாறு தூங்கும்போது என்ன சுகமாக இருக்கிறது. தன் மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். இந்த சுகமானது ஆண்டவனுக்குக் கூட கிடைத்திருக்காது என்று எண்ணும்போது பார்வதியும் பரமசிவமும் படி அளப்பதற்காக வரும்போது அவன் கூறியதை கேட்ட இவர்கள் நம்மைவிட நன்றாக இருக்கும் ஒருவனுக்கு நம்மால் என்னசெய்ய முடியும் என்று எண்ணி அவனை பார்க்காமல் நீ இப்படியே இரு என்று வரம் கொடுத்தார்களாம். அதனால் தான் ஆடு மேய்ப்பவர்கள் இன்னும் மழையிலும் தண்ணீரிலும் இருந்து வேதனைப்படுகிறார்கள். ஆடு மேய்ப்பவர்களின் கதையானது பழைய மரபுபோல் பின்பற்றப்படுகிறது. இன்றளவும் அவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது.

    இடையர்களின் பிரிவுகள்:-

    தமிழ்ச் சமூகத்தில் நாடோடி வாழ்முறை சங்ககாலம் தொட்டுத் தொடர்ந்த ஒன்றாக, காலச் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிலைகளில் தம்மைத் தகவமைத்துக் கொள்பவையாக உள்ளன.

    “நிலையான ஆதரவுச் சமூகங்களுக்கிடையில் இடம்விட்டு இடம் செல்லும் நாடோடிச் சமூகமானது வெவ்வேறு பங்கு பணியாற்றும் மிதவைச் சமூகமாக இணைப்புச் சமூகமாக இயங்கி வருகின்றது”என்ற பக்தவத்சல பாரதியின் நாடோடிச் சமூகம் குறித்த கருத்தும் நினைவுகூறத் தக்கது.

    தற்காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்ட இடையர் சமூக ஒரு பிரிவினரின் வாழ்வியலை இயல்பாகப் பதிவுசெய்யும் இந்நாவல் அவர்களுக்கென நிலையான இருப்பிடம் எதையும் பதிவு செய்யவில்லை ‘மேமங்கலம்’ என்ற ஊர் சொந்த ஊராக இருந்தாலும் தொழில்முறை சார்ந்து புலம்பெயர் வாழ்க்கையே மேற்கொள்கின்றனர். மாவட்டங்கள் விட்டு மாவட்டங்களுக்கும் மாவட்டத்திலே ஊர்விட்டு ஊர்களுக்கும் சென்று நிலையான இருப்பிடம் இல்லாமல் வாழிடம் சார்ந்து கூண்டோ, வளசையையோ அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான எண்ணம் நிலவுவதையும் நாவல் பதிவுசெய்கிறது. இவை காலச்சூழல் பொருளாதாரம் இவற்றின் பின்புலத்தில் நடுத்தர வர்க்கச் சிந்தனை தோற்றம் கொள்வதை உணர்த்துகின்றது. (பக்.120)

    இடையர்கள் கோனார், நைனார், நம்பியார், பிள்ளை, மந்திரி, கரையாளர், யாதவர் எனப் பல பெயர்களில் வழங்கப்படுகின்றனர். இப்பெயர்கள் குலப்பிரிவு, வட்டாரம், பொருளாதாரம், சமூக மதிப்பீடு சார்ந்து உருவானவையாகக் கொள்ளலாம். இடையர் சமூகத்தில் பெரும்பாலான பிரிவுகள் இரட்டைத் தொழில்முறை கொண்ட நிலவுடைமைச் சமூகமாக, வைணவ சமயத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்களாக, யாதவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

    ஆடு மேய்ப்பவர்களின் சிக்கல்கள்:-

    ஊர்விட்டு ஊர்வந்து நாடோடிகள் போலப் பிழைப்பு நடத்தும் ஆடு மேய்ப்பவர்களின் நிலையானது ஊமைகளாகவெ எங்கும் இருக்கிறார்கள். கோபம் அவமானம் என்பதையெல்லாம் இவர்கள் ஒருபோதும் நினைப்பதேயில்லை. கூலியைக் கூப்பிட்டு இவர்களை எவ்வளவுதான் அடித்து உதைத்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். எவ்வளவு கீழ்த்தரமாக திட்டினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு வாய்திறக்காமல் போகும் இயல்புடையவர்களாகவும் இவர்களின் இந்தப் பரிதாபமான நிலையைக் கண்டு இரக்கப்பட்டு யாராவது இவர்களிடம் விசாரித்தால் அதற்கு இவர்கள் சொல்லும் பதில் இன்னும் பரிதாபமாக இருக்கும். “யாரும் எங்கள சும்மா அடிக்க மாட்டாக போன வருசம் மொத வருசத்துல அவுக கொல்ல பயிறு பச்சியில எங்க ஆடுக மேஞ்சிருக்கும். அந்த கோவத்துல அடிக்கிறாக. அவுக அடிக்கிறது ஞாயந்தானே? நம்மமேல தப்புருக்கு, பட்டுக்கிட்டுத்தானே போவனும்” (கீ.ப.111)

    என்று மிக இயல்பாக பதில் கூறுவார்கள் இவ்வாறு இடையர்களின் வாழ்க்கை நிலையானது படம்பிடித்து காட்டப்படுகிறது.

    முடிவுரை:

    விளிம்புநிலை இடையர் சமூகத்தினருள் ஒரு குழுவை மட்டும் அடையாளப்படுத்தும் இந்நாவல், அவர்களின் சமூக உறவுகள், மதிப்பீடுகள் பண்பாட்டு அசைவியக்கங்கள் சதா தங்கள் வாழ்வைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும் தொழில் முறைமைகள், நம்பிக்கை, சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கீழைத் தஞ்சை வட்டார மொழி நடையில் சாதாரணச் சம்பவ விவரிப்புகளின் ஊடாக வலி, துயரம், மரணம் இவற்றின் பின்னணியில் பதிவு செய்கிறது.

    துணை நூல்கள்:-

    1. எனது படைப்பு மொழியும் அனுபவங்களும், ப.24 கவிதாசரன் இதழ் டிசம்பர் -2006.
    2. தமிழ்ச்செல்வி.சு கீதாரி நியு சென்சுரி புக் ஹவுஸ் சென்னை 2010

    *****

    கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ‘மந்திமனம் எம்பியெம்பி முட்டுது எட்டெழுத்தை(ஓம்நமோநாராயணாய)
    பந்தி திருட்டினில் பங்குபெற -சந்திர
    வம்ஸ சிசுபாலர், வானரத்தைக் கேட்கின்றார்,
    ’கம்ஸன் அனுப்பினானா கூறு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180811 -Mahabharata Trio-strathmore 160gsm 9”x12 “ wcol charcoal100dpi lr

    கதைபா ரதத்தின், விதைநா ரணராம்,
    இதையே வியாசர் இயற்ற -புதைதந்தம்

    வேருடன் கிள்ளி வினாயகர் தந்திட

    போருடன் பூபாரம் போச்சு….!

     

    அசல மனத்துள்(வேத வ்யசர்) அவதரித்து அன்பாய்

    குசலம் விசாரிப்பான் கண்ணன் -வசன –

    திரைக்கதை பாகவதன் ,திவ்யப்ர பந்தன் –

    சிறைக்கதவை விட்டகன்ற சேய் “….கிரேசி மோகன் ..

    Share
  • 2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++

     

    பூகோள வடிவம் கணினி யுகத்தில்
    பொரி உருண்டை ஆனது !
    ஓகோ வென்றிருந்த உடல் மேனி இன்று
    உருமாறிப் போனது !
    பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
    பூச்சரித்துக் கந்தை ஆனது !
    மூச்சடைத்து விழி பிதுக்க இன்று
    சூட்டு யுகப்போர் மூளுது !
    நோய் தொத்தும் சூழ்வெளியைக்
    தூயதாக்கத் தொழில் நுணுக்கம் தேவை !
    காலநிலை மாறுத லுக்குக்
    காரணிகள் பல்வேறு !
    கரங் கோத்து பூமி காக்க யாவரும்
    வாரீர் என விளிப்பீர்  !
    ஓரிடத்தில் எரிமலை கக்கி
    உலகெலாம் பரவும்
    பெரும்புகை மூட்டம் !
    துருவப் பனிமலைகள்
    உருகி, உருகி ஓடி
    உப்பு நீர்க் கடல்தான் உயரும் !
    பருவக் காலநிலை சீறித்
    தாளம் தடுமாறி
    தானியப் பயிர் விளைச்சல் குறையு ம்,
    வேனிற் காலம் நீடிக்கும்,
    குளிர்காலம் குறுகிப் பனிமலைகள்
    வளராமல்
    சிறுத்துப் போகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !
    உணவுப் பயிர்கள் சேத மாகும் !
    மனித நாகரீகம் நாசமாகி
    புனித வாழ்வு மோசமாகி
    வெறிபிடித் தாடும்
    வெப்ப யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++++

     

    பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை  விளைவிப்பதால்,  அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது.   அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது.   உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி,  அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.

    ஜான்  கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]

    https://youtu.be/nauLAZCKU0U

    https://youtu.be/vjRnTkgubdc

    https://youtu.be/XZwWMWQ7Tmw

    வெப்பக்கனல் அடைப்பக வாயுக்கள் தீவிர எழுச்சி மிகையாதல்
    2017 ஆண்டில் பூகோளச் சூடேற்ற வெப்பக்கனல் அடைப்பக வாயுக்களின் [Greenhouse Gases] சேமிப்பு பேரளவு மிகையாகி உள்ளது என்று  2018 ஆகஸ்டு முதல் தேதி அமெரிக்காரிவின் முக்கிய அறிவிப்பு ஒன்று ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது.   துருவப் பகுதி களில் சூடேற்றத்தால் பனிக்குன்றுகள் பேரளவு உருகி  கடல் மட்டம் ஏறி வேனிற் காலத்தில் பேய்மழை பெய்கிறது.  அந்த பருவகால ஆண்டறிக்கை 60 நாடுகளின் 450 உலக விஞ்ஞானிகள் கூடித் தயாரித்து  2017 சிறப்பு வெளியிட்டது.  அதே ஆண்டில்தான் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் “பாரிஸ்  சூடேற்றக் குறைப்பு உடன்படிக்கையை “ முறித்துக் கொண்டார். அந்த உன்னத உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு 190 உலக நாடுகள் கரிவாயு புகைமூட்டத்தைக் குறைப்பதாக உறுதி கூறியுள்ளன.  உலகிலேயே சைனாவுக்கு அடுத்தபடியாக சூழ்வெளி மாசு மூட்டம் நிறைந்த நாடு அமெரிக்காதான்.   கடந்த அதிபர் பரோக்கபாமா கையெழுத்தை முறித்து புதிய அதிபர் டிரம்ப்  வெளிவந்து விட்டார்.

    2017 ஆண்டு முடிவில் கண்டது : கரிவாயு [கார்பன்டையாக்சைடு] திரட்சி சராசரி ஆண்டுக்கு 405 ppm [ parts per million] ஏறிவிட்டது.  அந்த அளவு கடந்த 800,000 ஆண்டுகளின் உச்ச உயர்வு என்பது  தெரிய வருகிறது. உச்ச உஷ்ண அளவு 110 டிகிரி F [43.4 டிகிரி C]  [அர்ஜென்டைனா ஜனவரி 27, 2018] .  1980 ஆண்டு முதல் பனிக்குன்றுகள் உச்சியிலிருந்து 70 அடிக்குக் [22 மீடர்] கீழாக உருகித் தணிந்துள்ளன.  1993 முதல் கடல் மட்டம் 3 அங்குலம் [7.7 செ.மீ  உயர்ந்துள்ளது.   இந்த பெருத்த மாறுதல்களால் சில இடங்களில் பெரு வறட்சி !  சில இடங்களில் பேய்ழை !  வட அமெரிக்க, கனடா நாடுகளின்  வனங்களில் பெருந்தீ மயம் !  ஆயிரக் கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின !  லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து புலப்பெய்ர்ச்சி !

     

    2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million]  என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டு  உள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள்.   அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது.  அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன.   கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !

    ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]

    Global ocean mean temperature

    World sharing of gas emiissions

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Arctic Ice Retreat

    Antarctica

    “கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”

    ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

    “கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”

    கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

    Pollution groups

    “55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

    ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

    “மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

    டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    Global Warming Effects

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    Impacts of Global Warming

    What Global Warming does

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

    Global warming family tree

    பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

    பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.

    Deaths due to Natural Disasters

    Fig 3 Gore's Presentation

    சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

    சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

    பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

    1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

    2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    Green gas Emissions

    Impacts

    3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

    4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.

    மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

    1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

    2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

    3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

    Earth'a Axis wobbles

    Earth’s Axis Wobbles

    4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.

    5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

    6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.

    சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !

    Save the Earth

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)

    2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
    7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html  [July 31, 2013]

    10.  http://www.livescience.com/topics/global-warming/  [August 6, 2013]

    11. http://www.nrdc.org/globalwarming/  [August 14, 2013]

    12.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [August 15, 2013]

    13.  http://www.answers.com/topic/global-warming

    14.   http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming   [August 9, 2013]

    15. http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to_Earths_atmosphere_999.html  [August 14, 2013]

    16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html  [August 14, 2013]

    17. https://www.eurekalert.org/pub_releases/2018-07/mpif-aii072718.php [July 30, 2018]

    18.    https://knowridge.com/2018/07/carbon-leak-may-have-warmed-the-planet-for-11000-years/  [

    19.  https://www.yahoo.com/news/greenhouse-gases-surge-highs-worldwide-2017-us-report-150304629.html  [August 1, 2018]

    20.  http://www.spacedaily.com/afp/180801174819.ezkhypci.html  [August 1, 2018]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@tgmail.com] August 11 2018 (R-1)

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 13

    -மேகலா இராமமூர்த்தி 

    நல்ல நட்பினால் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். அதேவேளை கூடாநட்பினால் அவன் அடையும் இன்னல்களோ அதனினும் ஏராளம். ஒருவனை நல்லவனாக்கி வாழ்வில் உயர்த்துவதிலும் தீயவனாக்கி அவன் வாழ்வையே சீரழிப்பதிலும் நண்பர்களுக்கு இணை யாருளர்?

    ”Keep company with the wise and you will become wise. If you make friends with stupid people, you will be ruined” என்று விவிலியம் சொல்லும் வேதவாக்கை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

    ”நுட்ப உணர்வுடையாரோடு கலந்து பழகி இன்புறுதல் விண்ணுலக இன்பமே போலும் விரும்பப்படும் மேன்மையினையுடையது; நுண்ணிய நூலுணர்வும் இல்லாதவராகிய பயனிலாரொடு கேண்மை கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்” என்பது நட்பு குறித்த நாலடியாரின் பார்வை. 

    நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
    விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் – நுண்ணூல்
    உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
    புணர்தல் நிரயத்து ளொன்று. 
    (நாலடி – 233)
     

    இப்பாடலில் நுண்ணுணர்வென்று முதலடியிலும் நுண்ணூல் உணர்வென்று இரண்டாம் அடியிலும் நாலடியார் கூறியிருப்பது இருவகைப்பட்ட பண்பினரைச் சுட்டுவதாகும். இவர்களை வேறு வார்த்தைகளில் விளிப்பதாயின் நுண்ணறிவினார், நூலறிவினார் எனலாம். நுண்ணறிவும் நூலறிவும் மிக்காரை நண்பராக்கிக் கொள்க என்பதே இந்நாலடியார்ப் பாடல் நமக்குணர்த்தும் செய்தியாகும்.

    ஒரே குளத்து நீரில் தோன்றி ஒன்றாகவே வளர்ந்தாலும் மணம் வீசும் குவளை மலரின் இயல்பை ஆம்பல் ஒருநாளும் ஒத்திருப்பதில்லை. அஃதொப்ப, பெருந்தன்மையும் நற்பண்புகளும் வாய்ந்தோரின் நட்பைப் பெற்றாலும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் மாறுபட்டே இருக்கும்.

    நாம் தலைகீழாய் நின்றாலும் நாய்வாலை நிமிர்த்த முடியுமோ?  அதுபோன்றதுதான் கூடாநட்பினரைத் திருத்த முயலுதலும்! ஆகலின், அவர்களோடு நேயங்கொள்ளாமலிருத்தலே நன்று என்று நவிலும் நாலடியாரின் புத்திமதி மதித்துப் போற்றத்தக்க ஒன்றாகும். 

    ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
    கருமங்கள் வேறு படும்.  
    (நாலடி – 236)
     

    புல்லறிவினாரின் நட்பு எத்தகையது என்பதை எளிய சான்றுகளுடன் நம் மனங்கொளத்தக்க வகையில் விளக்குகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்!

    ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
    வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
    நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
    புல்லறிவி னாரொடு நட்பு.  
    (நாலடி – 239)

    தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே! இனியதறியும் பேரறிஞரது நட்பினின்றும் நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பானது, பசுவினிடத்தில் உண்டாகும் நெய்யைப் பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவிட்டு வேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்ற தன்மையதாகும். குணத்திலும் மணத்திலும் பசுவின் நெய்யை எவ்விதத்திலும் ஒவ்வாத வேப்பெண்ணையை விரும்புவது போன்றது நல்லறிவினாரை நீக்கிப் புல்லறிவினாரோடு பொருந்துவது என்று நமக்கு அறிவு கொளுத்துகின்றது நாலடி.

    எடுத்த முயற்சிகளில் வெற்றிபெற ஒருவனுக்கு அடிப்படைத் தேவையாயிருப்பது அறிவுடைமை. 

    அதனாலல்லவோ,

    ”அறிவுடையார் எல்லாம் உடையார்  அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்”
    என்று எடுத்தோதினார் பொய்யில் புலவர்.
     

    ”புத்தியே சகல சக்தியும்” என்றது தீஞ்சுவைத் தமிழ்ப் பனுவலான மனோன்மணீயம். 

    எத்தகு சூழ்நிலையிலும் தம் அறிவு திரியாதிருக்கும் அறிவுடையாரின் மாண்பினைப் பேசும் நாலடியார்ப் பாடலொன்று! 

    வேம்பின் இலைக்குள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் மாறுபடாது; அதுபோல், தமக்கு நேர்ந்த நட்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந்தீயதாய் மாறும் வகை அரிதே. 

    வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
    தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
    இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
    மனந்தீதாம் பக்கம் அரிது.  
    (நாலடி – 244)
     

    அறிவுடையார் மாட்டு அறிவென்னும் அரண் இருக்கையில் முரண்கொண்டோரின் தீநட்பும் அவரைக் கெடுக்க இயலாமல் ஒடுங்கிப்போகும் என்பது நாலடி ஆசிரியர்களின் துணிபு. 

    நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூருணர்வுடையாரை நட்புச் செய்தால் இன்பம் நம்மைப் பொருந்தும்; நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவில்லாதாரை நட்புச் செய்யாமற் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற் பிரிந்திருக்கும். 

    உணர உணரும் உணர்வுடை யாரைப்
    புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
    தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
    பிரியப் பிரியுமாம் நோய்.  
    (நாலடி – 247)
     

    ”குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்” என்று கூர்மதியாளாரைப் போற்றிய குறளாசானும்,

    ”பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்” என்றும்  பகடியாய்ச் சாற்றியிருப்பதை ஈண்டு நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

    ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புலவர் பூங்குன்றனாரின்  பொன்மொழி. அதனையே சற்று விரிவாக விளக்கி வழிமொழிகின்றனர் நாலடியின் ஆசிரியர்களும்! 

    நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்.  
    (நாலடி – 248)
     

    நன்னிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வானும், தனது முந்தைய நிலையையுங் குலையச்செய்து தன்னைக் கீழ்நிலைக்கண் தாழ்த்திக்கொள்வானும், தான் முன்னிறுத்திக்கொண்ட சிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்திக் கொள்வானும், தன்னை அனைவரினும் தலைமையுடையோனாகச் செய்து கொள்வானும் தானேயாவன்.

    ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்” என்று இதே கருத்தை நறுக்கென்று சொன்னது முப்பால். சொல்லுதற்கு என்ன இருக்கின்றது இதற்கும் அப்பால்?

    ஆதலால், நம் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நாமே காரணம் என்பதையுணர்ந்து அறிவுடையோராய் நடந்துகொண்டால் வாழ்வில்வரும் சோதனைகளைத் துணிச்சலோடு எதிர்கொண்டு சாதனை படைக்கலாம். 

    உலக வாழ்வில் பொருள்வரவுக்கு வகைசெய்யும் தொழில் முயற்சியில் ஈடுபட்டு, அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந் துய்த்து, மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கு அறமுஞ் செய்து, இம்மூன்றும் பிறவியிற் கடைசிவரையிற் தடையின்றி ஒரே தன்மையாய் நிறைவேறுமாயின், அப்பேறு, தன் பட்டினத்தை மீண்டு(ம்) வந்தடைந்த வாணிகக் கப்பலை ஒக்கும் என்று அறிஞர் கூறுவர். 

    கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
    தருமமுந் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
    முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.   
    (நாலடி – 250)

    தளராத முயற்சியில் ஈடுபட்டுப் பொருளீட்டி, உலகியல் இன்பங்களைத் துய்த்து, மறுமையின்பத்துக்கு வழிகோலும் அறச்செயல்களையும் செய்து வாழ்தலே அறிவுடைமையாகும் என்பதே இப்பாடல்வழி நாலடியார் நமக்குக் காட்டும் வாழ்வியல் நெறியாகும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், யாதவக்
    குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
    பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
    வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)…. 2 !

     

    சர்கம் -2
    ————-

    அந்த சமயம், அசுரனாம் தாரகனால்
    நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர்
    முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும்
    கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60)….8-10-2010

    சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு
    போததி காலை புலப்படும் -ஆதவன்போல்
    வாடிய வானவர்முன் கூடிய வாசலில்
    பாடிடும் நூலோன் பிறப்பு….(61)….8-10-2010

    நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை
    தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து
    தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010
    (OR)
    வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் வைத்தவனை
    நான்முகனை நற்கல்வி நாயகனை -தேனமிழ்த
    தேவர்கள் சூழ்ந்து திருமுகத்தில் தோத்திரமாய்
    தூவினர் சொற்பூ தொழுது….(62)….8-10-2010

    தத்துவமே, தோன்றல்முன் தேகநாமம் அற்றவரே
    சத்துவமே ராஜஸமே தாமஸமே -முத்தவமே (OR)முத்தொழிலே
    மூர்த்திகள் மூன்றான மூலமேவுன் காலில்கைக்
    கோர்த்தோம் சரணா கதிக்கு….(63)….8-10-2010

    தண்ணீர் பயனளிக்கத் திண்ணமாய் சக்தியாய்
    நண்ணிய நான்முகனே நின்னருளால் -மண்ணில்
    அசையும் உயிர்கள், அசையா பொருட்கள்
    விசையுறச் செய்யுமுன் வித்து….(64)….8-10-2010

    கற்பித்த முக்குண காரணத்தால் கொண்டீர்கள்
    உற்பத்தி, காத்தருளல், உய்யுமுயிர் -தப்பித்தல்
    என்றமுச் சக்திகளாய் இன்றுநீர் நின்றாலும்
    அன்றசை(வு) இல்லா அயன்….(OR)
    அன்றிருந்தீர் ஏகம் அடைந்து….(65)….8-10-2010

    பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க
    உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ
    தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய்
    விந்தை புரிந்தாய் வகுத்து….(66)….8-10-2010

    ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை
    காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ்
    ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு
    வாழி விரிஞ்சன் விறல்….(67)….8-10-2010

    காரணனே பாருக்கு, காரணம் பாராத
    பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும்
    தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய்
    இல்லை உமக்கிங்கே ஈடு….(68)….9-10-2010

    தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே
    காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக
    தீயாக, மண்ணாக, தண்ணீர் வளியாக
    ஓயா(து) உழைத்திடும் ஓய்வு….(69)….9-10-2010

    திரவப் பொருளாய், திடமாய், உருவாய்
    அருவம் நிகர்த்த அணுவாய் -கருவத்து
    பாரமாய் லேஸாய், புலனுணர்வாய், பூதமாய்
    ஏராள மானஏ கா….(OR)
    ஏராளம் உந்தன் எடுப்பு….(70)….9-10-2010

    ஓங்கார மூன்றுசுர உச்சரிப்பால் தோன்றிடும்
    ரீங்கார வேத ரகசியத்தால் -ஆங்காங்கு
    செய்திடும் யாகமும் சொர்காதி பேறுகளும்
    பெய்திடும் தேவரீர் பாங்கு….(71)….10-10-2010

    காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி
    சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு)
    அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே
    சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)….10-10-2010

    விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும்
    தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து)
    அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக்
    குயவன் களிமண் கரம்….(73)….10-10-2010

    யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும்
    தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர்
    தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர்
    நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74)….10-10-2010

    வரஸ்துதியாய் வேண்டாது வாக்கில் பொருளில்
    சுரஸ்துதியின் சீரால் சிலிர்த்து -சரஸ்வதி
    ஆசை மணாளன் ஆர்வம் மிகவுற்று
    பேசப் புகுந்தான் பதில்….(75)….10-10-2010

    வேதம் வடித்ததால் ஆதிகவி ஆனவன்
    போது கமலமெப் போதும்வாழ் -நாதனுரை
    நான்கு முகத்தினால் நான்கு முகமாக
    வான்குவிந்தோர் காதில் விருந்து….(76)….11-10-2010

    வண்டி நுகத்தடியாய் வாய்த்தநீள் கைகளும்
    அண்டர் பதவியும் ஆளுமையும் -கொண்டிருந்தும்
    கூடியிருந்து இங்கு குறைவற்ற நீங்களென்
    வீடடைந்தீர் வாழ்க வரவு….(77)….11-10-2010

    காயும் முழுநிலவும் கண்சிமிட்டும் தாரகையும்
    மேயும் பனித்திரையால் மங்குதலாய் -நீயுமுன்
    கூட்டமும் கொண்டஇவ் வாட்டமேன் வஜ்ஜிரா
    பாட்டன் எனக்குப் பகர்….(78)….11-10-2010

    விருத்திரன் மாய வரைகள் சாய
    நிறத்தினால் வானவில் நாண -கரத்திருந்த
    வச்சிரம் வாடி வளைந்துமுனை தேய்ந்துவெறும்
    குச்சியாய் ஆனதேன் கோன்….(79)….11-10-2010

    மந்திரத்தால் கட்டுண்ட மாசுணமாய்க் கைப்பாசம்
    தன்திறம் விட்டுத் தவழ்வதேன் -உன்தரப்பு காரணம் என்னவோ கார்முகில் காவலா
    வாருணா கூறுவாய் விட்டு….(80)….11-10-2010

    சுபாவமாய் கையிருக்கும், சத்ருவைக் கொல்லும்
    அபார கதாயுதம் அற்ற -குபேரா
    கிளையிழந்து கொம்பாய் கரதலம் கூனி
    களையிழந்தீர் கூறும் கலி….(81)….11-10-2010

    துள்ளிக் குதித்தவுணர் தொல்லை தகர்த்தவரைக்
    கொல்லும் தண்டத்தை கேலிசெய்தல் -கொள்ளித்
    தடியால் தரைதனில் கோடிடுதற்(கு) ஒத்த
    படியாம் எமனேன் பயம்….(82)….11-10-2010

    வீசுமொளி போனதால், தேசு குறைந்ததால்
    கூசிடாது பார்க்க குளிர்ச்சியாய் -பூசிய
    சீலையின் ஓவியமாய் சூரியர்காள் பன்னிருவர்
    வேலையற்றுக் கொண்டதேன் வேர்ப்பு….(83)….11-10-2010

    துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில்
    செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும்
    வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும்
    சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84)….12-10-2010

    ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை
    தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும்
    விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது
    கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85)….12-10-2010

    பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே
    இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள்
    உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம்
    முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86)….12-10-2010

    தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால்
    தேற்றுவிக்கும் தாங்களேன் தேர்ந்தெடுத்தீர் -சாற்றிடுவீர்
    உள்ளதை உள்ளபடி பிள்ளைகாள் போட்டுடைப்பீர்
    தெள்ளத் தெளிவாகத் தான்….(87)….12-10-2010

    அண்டிய தென்றலால் ஆடிடும் முண்டகம்போல்
    கொண்டகண்கள் ஆயிரத்தால் அண்டர்கோன் -விண்டினன்
    தேவ குருவிடம் தக்கபதில் தோலுரித்து
    பூவன் பழமாய்ப் பெற….(88)….12-10-2010

    இந்திரன்தன் ஆயிரம் கண்களைக் காட்டிலும்
    தன்திறனாய் தர்மார்த்த தேசுற்ற -மந்திரன்
    தேவ ப்ரஹஸ்பதி சேவித்துச் செப்பினார்

    நாவன் அயன்முன் நடப்பு (OR) நிகழ்வு….(89)….12-10-2010

    ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே
    எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே
    தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம்
    தீங்குளத் தோரால் தவித்து….(90)….12-10-2010

    விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது
    தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி
    உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால்
    பொம்மையாய் ஆனோம் பயந்து….(91)….12-10-2010

    பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன்
    வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான
    வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க
    கையினால் பொத்துகிறான் கண்….(92)….12-10-2019

    பாராது பக்ஷங்கள் பாரபக் ஷத்தோடு
    தாரா சுரனூரில் தொண்டாற்றும் -தாரகேசன்
    தாரு வனமழித்த தாணு தலையெழுத்தால்
    சேரும் கலைக்கில்லை ஊறு….(93)….13-10-2010

    மாற்றானாம் தாரகன்தன் மாளிகைத் தோட்டத்தில்
    நேற்றலர்ந்த பூவுக்கும் நோவின்றி -காற்றானான்
    வேர்வைக்கு மட்டும் வளியாகி வீசுதலால்
    பார்வைக்குக் கைவிசிறி பார்….(94)….13-10-2010

    ஆறு ருதுக்களும் வேறு வழியின்றி
    தாருகன் தோட்டத்தில் தொங்கிடும் -நூறுவகைப்
    பூக்களைக் காத்துப் பராமரிப்பு செய்திடும்
    ஆட்களாய் ஆயினர் அங்கு….(95)….13-10-2010

    முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள்
    நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும்
    கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி
    அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96)….13-10-2010

    வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால்
    நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென
    தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே
    பாபமென் செய்தோம் புகல்….(97)….13-10-2010

    கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும்
    அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம்
    இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட
    தந்தருளி ஆனான் தொழும்பு….(98)….13-10-2010

    காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன்
    வாட்டு கிறான்மூ உலகத்தை -போட்டு
    அடியாத மாடு படியாதாம் என்று
    முடிவாகச் சொன்னான் முனி….(99)….14-10-2010

    இந்திர லோகத்து சுந்தரிகள் வாஞ்சையாய்
    வந்து தளிர்களுக்கு வேதனை -தந்திடாது
    நேசமொடு கொய்திடும் நந்தவனம் தாரகனின்
    நாசத்தால் நாணுது நைந்து….(100)….14-10-2010

    மூச்சுவிடும் காற்றளவு வீச்சடக்கி, தம்கண்ணீர்
    பூச்சொரிய தேவகுலப் பாவையர் -கூச்சமொடு
    தாமரைக் கைகளால் தாரகன் தூங்கிட
    சாமரம் வீசி சளைப்பு….(101)….14-10-2010

    இரவிதன் தேரின் புரவிக் குளம்பு
    உரசுமம் மேரு சிரசை -கருவியவன்
    பேர்த்தெடுத்து மாளிகைப் பூங்காவில் குன்றுகளாய்ப்
    பார்ப்பதவன் கேளிக்கைப் போக்கு….(102)….14-10-2010

    அட்டதிக் கஜங்களின் கொட்டும் மதஜலம்
    மட்டுமே கொண்டதால் மாகங்கை -குட்டையாம்
    பொற்றா மரைப்பயிர் போகமவன் வாவியில்
    குற்றப்பேர் மந்தா கினிக்கு….(103)….14-10-2010

    அமானுஷ் யமாக அவன்வந்தால் போகும்
    சமாச்சாரம் ஆகுமே சோகம் -விமானத்தில்
    ஆதலால் தேவர்கள் பூதலம் சுற்றிடும்
    காதலுக்கு வந்ததாம் கேடு….(104)….14-10-2010

    தீயவன் மூலம் தருமவிர் பாகத்தை
    தீயவன் தாரகன் தேவரெம்முன் -மாயமாய்
    வேள்வியில் அக்கினிக்கு வாரிசாய் வந்துண்டு
    தோல்விக்(கு) அளிப்பான் தபஸ்….(105)….14-10-2010

    மிச்சைஸ்வர் யத்தோடு மந்தரம் சுற்றுங்கால்
    இச்சையாய் இந்திரன் ஈட்டிய -உச்சைச்
    ரவஸ்ஸை அபகரித்த ராட்ஷஸனால் காப்பு
    கவஸம் இழந்தாற்போல் கோன்….(106)….14-10-2010

    கபவாத பித்தம் கலந்திடத் தோன்றும்
    அபவாத மாய்சன்னி பாதம் -உபவேதம்
    தீராப் பிணியென்ற தொல்லை யிதற்கீடாம்
    தாரா சுரன்செய்யும் தீங்கு….(107)….15-10-2010

    வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி
    புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில்
    மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய்
    க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR)
    பாதகன் கொண்டான் புனைந்து….(108)….15-10-2010

    அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை
    எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய்
    வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில்
    ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109)….15-10-2010

    கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க
    தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம
    பலமுடைய தாரகன் பாதகம் தீர
    தளபதியை தேவர்க்குத் தா….(110)….15-10-2010

    பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய
    வெற்றித் திருமகளை விண்ணரசன் -பெற்றிடவோர்
    ஆணைப் படைத்திடுவீர் சேனைத் தலைவராய்
    வானை வலுப்படுத்து வீர்….(111)….15-10-2010

    முனிவனது பேச்சு முடிந்தது கண்டு
    கனிவுடன் மேலே கமலன் -தணிவுடன்
    கூறியது மேகத்தின் கர்ஜனைக்குப் பின்வரும்
    மாரியதை வெல்லும் மகிழ்வு….(112)….15-10-2010

    நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென
    ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய்
    சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது
    தானல்ல என்றான் தாழ்ந்து….(OR)
    நானல்ல என்றான் நகைத்து….(113)….15-10-2010

    நட்ட மரமது நச்சுமர மாயினும்
    வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன்
    தாரகன் பெற்ற வரமளித்த நானவன்
    தீரவழி செய்தல் தவறு….(114)….15-10-2010

    மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை
    தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம்
    என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட
    அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115)….17-10-2010(விட்டுப் போன வெண்பா)

    போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும்
    தாரா சுரன்திகைக்கும் தோள்வலியன் -வேறாள்
    தரணிமிசை உண்டோ, திருநீல கண்டன்
    பரமசிவன் மூலம் பிறப்பு….(116)….16-10-2010

    அறியாமைக்(கு) அப்பால் அறிவுக்(கு) அரணவ்
    இறையொளியை ஆரறிவர் இங்கு -அரியோடு
    அடநானும் அவ்வீசர் ஆழமுச்சி தேடித்
    தொடயேகி அன்றடைந்தோம் தோற்பு….(117)….16-10-2010

    காந்தம் இரும்பைக் கவருதலாய், கைலாச
    சாந்தனை யோகத்தில் சார்ந்தனைஏ -காந்தனை
    பார்வதியின் தோற்றப் பொலிவதால் ஈர்த்திருவர்
    சேர்வதில்தான் தேவர்க்கு தீர்வு….(118)….16-10-2010

    நாங்கள் வெளிப்படுத்தும் நல்லாக்க ஆற்றலை
    தாங்கி வளர்க்கும் திறனுடையோர் -ஈங்கிருவர்
    சம்புவதன் சக்தி சதியேற்க வல்லவள்
    நம்புவது நான்படைப்பில் நீர்….(119)….16-10-2010

    நெற்றி விழியோனின் நீலக் கழுத்தனின்
    வெற்றிப் புதல்வனே வானமகளிர் -கற்றைக்
    சிகைவிரித்துக் கொண்ட சிறையிருந்து மீட்டு
    பகையழிக்கும் சேனை பொறுப்பு….(120)….17-10-2010

    பகர்ந்த படைக்கும் பிரமன் மறைந்து
    நகர்ந்தான் சுரர்களை நீங்கி -தகுந்த
    உபாயம் கொடுத்த உறுதியில் சொர்க
    அபாயம் அகன்றது அன்று….(121)….17-10-2010

    சம்புவை ஈர்த்திடும் சாமர்த் தியமுற்ற
    அம்புவில் மாறன் அதிசியத்தை -நம்பியகோன்
    இந்திரன் நெஞ்சால் இருமடங்கு வேகத்தில்
    வந்திடச் சொன்னான் விரைந்து….(122)….17-10-2010

    ரதிவளையல் காயம் பதிவுசெய்த காயம்,
    நதிவளைவாய் சேர்ந்திருக்கும் நங்கை -நுதல்வளைவாய்
    மன்மதன் வில்லேந்தி மாம்பூ வசந்தனுடன்
    விண்முதலோன் முன்பு வரவு….(123)….17-10-2010

    சர்கம் இரண்டு சுபம்

    Share
  • கலைஞர் அஞ்சலி

    கலைஞர் என்றோர் ஓவியம்
    கலைந்தது இன்று அறிவீரோ ?
    கண்ணீர் சுரக்கும் வேளையிலே
    கவிதை வழியுது உள்ளத்திலே

    தமிழகம் தவிக்குது துயரிலே
    தமிழன்னை மைந்தன் மண்ணிலே
    குறளமுதம் தந்த தமிழ்த் தலைவன்
    குரல் இன்னும் மனதிலே மறையாமல்

    அரசியல் பார்வையில் பார்க்கவில்லை
    அன்னைத் தமிழைத் தாலாட்டிய
    தமிழுக்குச் சொந்தக்காரனாய் இந்தத்
    தனயன் எத்தனை அழகுற மொழி செய்தான்

    தமிழை நான் அறிந்த நாள் முதல்
    தரணியில் நானின்று வாழும் வரை
    செந்தமிழ் விளையாடும் விளைநிலமாய்
    செம்மொழி தந்த கலைஞர் துயில்கிறார்

    அறிவுக்களஞ்சியம் அறிஞர் அண்ணாவின்
    அன்புத் தம்பியாய் , புரட்சித் தலைவரின்
    அருமை நண்பராய் கவியரசர் கண்ணதாசனோடு
    அடிப்படை நட்புக் கொண்டவராய்

    பல இலட்சம் தமிழ் மக்களின் தலைவராய்
    பன்னாடு வாழ் தமிழர்களின் காவலராய்
    பல்வேறு கோலப் பதவி கொண்டு வாழ்ந்த
    பராசக்தித் தமிழன் ஓய்வெடுத்தான்

    சங்கத்தமிழ் தந்த எங்கள் கலைஞசரிடம்
    சரித்திரம் படைக்கும் இனிய தமிழ் எமக்கு
    இனிப்பாய்க் கிடைக்குமென்று காத்திருந்தோம்
    இனியுமக்கில்லை என்றே ஈசன் அழைத்துக் கொண்டான்

    கலைஞரே ! தமிழ்ப் புரவலனே ! போதுமய்யா!
    கனவேகத்தில் உருளும் பொல்லாத உலகத்தில்
    கனமான இதயத்தொடு வாடவேண்டாம்
    இனமான உணர்வு காத்தேனென்று துயில் கொள்வீர்

    மறைந்து விட்ட தமிழ்த் தனயன் எம்
    மகத்தான கலைஞர் கருணாநிதிக்கு
    மனத்துயரத்தோடு தமிழன் எந்தன்
    மெளன அஞ்சலிகள்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • SOCIAL IMPACT OF INTERNET OF THINGS( IoT)– BOON or BAN

    -K. HARINI

    Impact of IoT in Financial Services – Insurance Industry                   

    Introduction:

    Nearly Two billion people are connected to the internet.  During the last twenty years, the technology revolution had an intense and irreversible impact on Human life.  We all are aware of the internet.  IoT is the advancement of the internet.  IoT allows virtually endless connections and operations to take place. “Anything that can be connected, will be connected “by IoT.  The Primary objective of this research paper is to analyze the impact of IoT in the insurance Industry which is a major part of financial services.  The IoT made financial service available to more customers and eliminated geographical barriers.  This paper also discusses the origin of IoT, IoT in different types of Insurance and the application of IoT in the insurance industry by foreign Nations.

    What is IoT?

    IoT is the network or system of an interrelated computing device, sensors, living creatures or objects that have unique identifiers and can communicate with another device on the internet.  These objects or “things “are capable of transmitting data.  In other words, in IoT real, physical and virtual world interact with each other.  It is independent communication between objects that helps optimize operation, reduce cost, boost productivity and improve lives.

    “ IoT “ started life as the title of a presentation made by “Kevin Ashton”, an American scientist at European Union conference held at  “Proctor & Gamble   ( P & G )” in 1999.  According to Kevin Ashton, we need to empower computers with their own means of gathering information, so they can see, hear, smell the world for themselves, in all its random glory.  If we had computers that knew everything there was to know about things use data they gathered without any help from us.  We would be able to track and count everything and greatly reduce waste, loss and cost.  We would know when things needed replacing, repairing or recalling and whether they were fresh or past their best.

    Role of Iot in Insurance Industry:

    According to Robert mehr,” Insurance is a social device for reducing risk by combining a sufficient number of exposures to make their individual losses collectively predictable.  The predictable loss is then shared proportionately by all those in the combination”.

    Insurance is a  contract between two parties namely, the Insured and the Insurer.  Insured is the person who insures his life or property and insurer is the company which undertakes to compensate the loss incurred by the insured for a consideration called premium.  The contract of Insurance is also called a contract of indemnity except for life insurance, as the insured is only compensated and not allowed to  earn  any profit from the contract.

    As the Internet of Things begins to deliver gains in productivity and savings on everything from appliances and automobiles to turbines and pipelines, new opportunities have emerged in the realm of finance. The networks of sensors and Big Data analytics that help prescribe more efficient maintenance schedules and predict potential system failures can also deliver new levels of transparency to those who provide loans and insurance to these industrial and infrastructure investments.

    The  IoT plays an efficient role in house, life, vehicle, fire and marine insurance.

    1. A. Wearable or personal technology
    2. Sensors on objects
    3. Location Sensors
    4. Geographical information system (GIS) 
    1. AWearable or personal technology:

    Sometimes monitoring heart rate, steps walked and other health-related metrics. This technology is rapidly developing, with prototype patches already performing blood work and ECGs and automatically administering drug doses.

    2. Sensors on objects:

    It includes personal and commercial vehicles and shipping containers, that measure distances traveled, speeds and frequency and level of braking.

    3. Location Sensors:                

    Such as those in  sensors, including “smart thermostats,” security technologies, such as alarms and cameras, and industrial control systems.

    4. Geographical information system (GIS):

    As well and that may include drone and satellite imagery While this data is directly accessible by or streams to insurers via sensors or mobile devices, third-party organizations may also play a role in owning, aggregating, and distributing to insurers. All of these data types are potentially useful for the full range of products and lines of business, from commercial (which was an early adopter and has been an advanced user of such data for many years), to life, property and casualty and health.

    IoT in Life Insurance:

    Sensory devices such as wearables, nearables and Hearables have unique advantages, each with an aim of simplifying the human lifestyle.

    1. Wearables: 
    • Using body sensors for health monitoring to stay fit and guard against any health hazards.
    • Remotely manage equipment such as machinery on an assembly line, making the work place safer for employees.
    • Hands free access to data via smart glasses or a smart watch.
    1. Nearables: 
    • When entering a movie theatre for eg: beacons could be automatically silencing your phone.
    • Nearables deployed on a laptop send information regarding Laptop sense information laptop excess heating to smart phones.
    • Will remind the user through smartphone if he forgets the laptop at any place. 
    1. Hearables: 
    • It reelects light off to blood vessels near the skins surface to track heart rate, temperature, speed and distance while allowing the user to enjoy music simultaneously.
    • A user’s fitness data, including calories burned, can be sent to a smart phone through Bluetooth.

    Iot in House Insurance (Smart Homes):

    What do you get if you combine the Internet of Things with the business of home insurance? U.K. startup Neos is hoping the answer is prevention rather than (just) payouts.

    Its home insurance product is intended to lean on sensor tech and wireless connectivity to reduce home-related risks — like fire and water damage, break-ins and burglary — by having customers install a range of largely third-party internet-connected sensors inside their home, included in the price of the insurance product. So, it’s a smart home via the insured backdoor, as it were.

    Customers also get an app to manage the various sensors so they can monitor and even control some of the connected components, which can include motion sensors, cameras and smoke detectors.

    The Neos  app is also designed to alert users to potentially problematic events — like the front door being left open or water starting to leak under their kitchen sink — the associated risk of which a little timely intervention might well mitigate.

    It sees additional revenue opportunity there too — and is aiming to connect customers with repair services via its platform. So, the service could help a customer who’s away on holiday arrange for a plumber to come in and fix their leaky sink, for example (there are no smart locks currently involved in the equation, though — Neos customer can name trusted keyholders to be contacted in their absence).

    “The vision really is about moving insurance from a traditional claim, payout type solution… to one that’s much more preventative, and technology’s really the enabler for that,” says co-founder Matt Poll. “We also think that customers get quite a raw deal from their insurance company… for being a really good customer and not claiming… And no value.

    “So, what we’re trying to do is to provide value to customers throughout the term of their policy — allowing them to monitor their own homes, using our cameras and the devices that we give them. If there is an issue, they’ll get alerted. Most importantly they or us through our monitoring center and assistance service can put the things right… In that sense, both the customer and us benefit if we’re successful.”

    On the insurance cover front, Poll claims there’s no new responsibilities being placed on customers’ shoulders — despite all the sensor kit that’s installed as part of the package. “There’s no responsibility placed on the customer. We’re really clear about that,” he tells TechCrunch. “Customers do ask this question — oh what if I don’t arm the alarm, does that mean I’m not covered? And our answer is simply of course you’re covered.”

    The startup was founded 18 months ago by Poll, an ex-insurance guy, combining with a more technical co-founder. The team market tested their proposition last year in and around London, partnering with Hiscox on the insurance product offering for that trial. They’re now launching their own branded insurance offering nationwide.

    Neos is actually offering a range of home insurance products, including a combined content plus buildings insurance offering (or either/or) across three pricing tiers — aiming to support different levels of coverage and different types of customers, such as flat versus house dwellers, for example, or homeowners versus tenants.

    While it’s generally aiming to be tech agnostic when it comes to which smart home sensors can be used — supporting a range of third-party devices — Neos has developed its own smart water valve, for example, as Poll says it couldn’t find an appropriate existing bit of IoT kit in the market for that.

    “It uses machine learning to monitor an individual’s water signature within their property over a period of a couple of weeks and then we can identify from that if there’s any leaks — small or large.

    Impact of Iot in Insurance Industry:

    The IoT’s impact within insurance is coming fully into focus. At the highest level, better use of IoT and sensor data means insurers have the opportunity to:

    • Establish direct, unmediated customer relationships
    • Gain more granular and precise understanding of who their customers are and how their needs    change over time
    • Individualize offerings of products, features and access options For insurers that have relied on agents and brokers,

    customer data represents enormous change. Historically, much customer data was unavailable, and the information insurers could access was often subjective or inaccurate. Consider the common misrepresentation of data around certain behaviors driven per week) on insurance applications. The IoT opening up new possibilities in many functions. Coupled with advanced analytics capabilities, new data streams and sources have set the foundation for entirely new business models. Usage-based insurance (UBI) — so-called “pay-as-you-live” or “pay-as-you-drive” business models — have quickly moved out of pilot phases and proved their viability and value around the world. In fact, there are an estimated 5 million active UBI policies in 35 different countries. From this relatively low base,

    EY estimates that UBI policies will reach 15% market penetration by 2020 in Europe, Asia and the Americas. 

    Conclusion: 

    IoT made close relationship between insurer and customer.  This helps the insurer to understand their customers well and in an expansion of the business.  Through the service rendered by the insurance company, customers able to lead a safe and comfortable life.  Thus, IoT creates a positive impact on both the customer and insurer’s life.

    REFERENCES:

    1. RFID journal
    2. IoT – enabled Banking services – INFOSYS
    3. Wearable Devices and their Applicability in the Life Insurance Industry –  CAPGEMINI Consulting.
    1. The Internet of Things in insurance – EYGM Ltd., Article.
    2. Financing the internet of Things: An early Glimpse of the potential – HARVARD,   Kennedy School.
    1. Financial Services (Indian Financial system) – Mr. Santhanam – Margham  Publications, 24, Rameswaram Road, T. Nagar, Chennai-17.

    *****

    The writer is an II – B.Com., student                                                                 Theivanai Ammal College for Women.

     

    Share
  • அண்ணாவின் படைப்புகளில் சமுதாய மாற்றங்கள்

    -ஆறு. செல்வமணி 

    ஒரு சமுதாயச் சிந்தனையாளனின் சிந்தனை வன்மைக்கும், வெளிப்பாட்டு மென்மைக்கும் அவன் வாழும் சமுதாயத்தின் நிலை, காலம், சூழல், மன உணர்வு, வரலாறு, கல்வி, இயக்கங்கள் ஆகியவை காரணங்களாக அமைகின்றன. இவை மட்டுமின்றி மொழி, பண்பாடு, இலக்கியங்கள் என்பனவும் ஒரு சமுதாயச் சிந்தனையாளனின் இன எழுச்சிக்கு வாயிலாக அமையும் என்பதனை அறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகள் உணர்த்துகின்றன. அறிஞர் அண்ணா தனது படைப்புகளில் பழைய மதிப்புகளை மாற்றத்திற்குள்ளாக்குகின்றார். சமுதாயத்தில் நிலவும் எண்ணற்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் மாற்றத்தைக் கூறுகிறார்.

    சமய விழிப்புணர்வு

    மனிதனைப் பண்படுத்தி நன்னெறியில் செலுத்துவது சமயம் ஆகும். மனிதனை மனிதன் கடவுளின் பெயரால் சுரண்டுவதற்கு ஏற்ற களமாகவும், சுகமான வாழ்வுக்குத் தக்க நெறியாகவும் இத்தகைய சமயத்தைத் தூய்மையான சமயச் சான்றோர்கள் எண்ணுவதில்லை. இதனால் மனிதனின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இன்பமான வாழ்வை மேற்கொண்டு வரும் போலிச்சமயவாதிகளையும், சமயத்தின் நோக்கத்தையும் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறும் விதமாக அண்ணா தம் படைப்புகளைப் படைத்துக்காட்டினார். இந்து சமயத்தில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளைத் தமது படைப்புகளில் காட்டியுள்ளார். இப்பிரச்சினைகளிலிருந்து மக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் தம் படைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களையும் கூறியுள்ளார். இந்தவகையில் இந்து சமயத்தில் பின்பற்றப்படுகின்ற வேதம் ஓதுதல் மக்களைப் பிரிக்கும் செயல் எனக் கூறுகிறார்.

    சாதி ஒழிப்பு

    சமுதாயத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஆணி வேராக இருப்பவை சாதிப் பிரிவினைகள். சாதிப் பிரிவுகளும் சமயப் பிரிவுகளும் இருக்கின்ற வரையில் சமுதாயத்தில் மூடப்பழக்க வழக்கங்களும் இருக்கவே செய்யும். புத்தர் முதல் பெரியார் வரை தோன்றிய சீர்திருத்த அறிஞர்கள் பலரும் சாதிப் பிரிவினைகளைச் சாடியே வந்தனர். காந்தியடிகள், இராஜாஜி போன்றோர் இத்துன்பங்கள் நீங்கச் சிறந்த வழி கலப்புத் திருமண முறைதான் என்று பேசியதோடு செயலிலும் காட்டினர்.

    ‘‘ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால், பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக வேண்டும். ஆனால் இந்த நாட்டிலே, ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம். மனத்திலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை. எனவேதான் பேதமற்ற சமுதாயத்தை – சமத்துவத்தை – சமதர்மத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகின்றது.’’ என்ற அண்ணாவின் பேச்சு சாதியச் சமுதாயத்தில் இருந்து மக்களை விடுவிக்கும் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றது.

    கலப்பு மணம்

    சமுதாய நலன் நாடுவோர் திருமணத்தில் ஆதிக்கங் கொண்டிருந்த சாதிச் சிக்கலை வீழ்த்துவதற்குக் கலப்பு மணத்தைச் சிறந்ததொரு படைக்கலனாகக் கண்டறிந்தனர். திரு.வி.கல்யாணசுந்தரமும், ‘சாதி நோயை அறவே நீக்கவல்ல மருந்து தேவை என்று நினைந்தேன் நினைந்தேன் பன்னெடுநாள் நினைந்தேன். என்கின்றார்’.

    ‘‘கலப்பை மூலம் நிலத்தில் நாம் உண்டாக்கும் கலப்பை மாந்தர் நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோமாயின் கலப்பு மணம் உருவாக வழியுண்டாகும் கலப்பு மணத்தால் சாதி செத்தே போகும்’’ என்பர் கவிஞர் சுரதா. சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சாதியும், பொருளாதார வேறுபாடுகளும் மறையக் கலப்பு மணம் தேவையென்பதை அண்ணா தம்முடைய பல படைப்புகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

    பகுத்தறிவுச் சிந்தனைகள்

    ‘சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு’ என்பார் பெரியார். ‘குருட்டுத்தனமாக மனிதனையோ, மதத்தையோ, பின்பற்றுவது மானங்கெட்ட செயல். பகுத்தறிவுப்படி நடப்பது மிகவும் கண்ணியமானது’ என்பது அறிஞர் இங்கர்சாலின் கருத்தாகும். ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவினைச் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கைப் பாதைக்கு ஒளிபாய்ச்ச வல்லது பகுத்தறிவு என்பதனை,

    ‘‘பச்சை விளக்காகும் உன் பகுத்தறிவு தம்பி
    பச்சை விளக்காலே   நல்ல பாதை பிடி தம்பி”

    எனப் பாரதிதாசன் பாடுகின்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் இருந்த அண்ணாவும் தமது பகுத்தறிவுக் கருத்துக்களைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளார். தமது படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பெரிதும் இடம்பெறச் செய்துள்ளார். இதன்மூலம் இச்சமுதாயத்தில் உள்ளவர்களின் மனங்களில் இருந்து அறியாமை இருளை அகற்றிப் பெரியார் கண்ட கனவை நனவாக்கத் தம் இலக்கியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

    தாம் வாழ்ந்த காலத்திலேயே புதுமையைப் புகுத்தி வெற்றி கொண்ட புதுமையாளர்களுள் அறிஞர் அண்ணாவும் ஒருவர் என்பதற்கு சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகம் சான்றாகும். இதில், “மாடா போ, மரமா போ, புழுவாகப் போ என சாபம் கொடுக்கிற காலமா? இது இல்லே நம்ம கையில அக்கினி இருக்குன்னு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும்.” என வரும் உரையாடல் காலத்தால் நிகழ்ந்துள்ள மாற்றத்தை உணர்த்தும். விழிப்புணர்வு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது படைப்புகளை அறிஞர் அண்ணா படைத்துள்ளார் என்பதை உணர இயலும்.

    வரலாறு என்பது உண்மைகளின் உறைவிடமாக இருக்க வேண்டுமே தவிர, பொய்களின் கூடாரமாக விளங்கக்கூடாது. தமிழில் உள்ள புராணங்கள் அனைத்தும் பல பேருடைய கனவுகள் என்கிறார் அண்ணா. இந்தக் கருத்தைப் பள்ளியறையில் பரமசிவன் என்ற கதையில் புலப்படுத்துகிறார். இக்கதையில் வரும் வீரன், பரமசிவனும் பார்வதியும் உரையாடுவதைப் போல கனவு காணுகிறான். அதைத் தன் நண்பனிடம் கூறுகிறான். அக்கனவில் வரும் பரமசிவன், பார்வதி ஆகிய இருவரின் உரையாடல் மூலமாகப் பல்வேறு விழிப்புணர்வுச் சிந்தனைகளை அளிக்கின்றார் அண்ணா. இறுதியாக வீரனின் வாயிலாகப் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகிறார்.

    இருபதாம் நூற்றாண்டிலும் பிள்ளைபெற வேண்டி நடக்கும் மூடப்பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டி அவையெல்லாம் வைதீகர்கள் தங்களது பிழைப்பிற்காக ஏற்பாடு செய்தவை இந்தக் கருத்து சமுதாய மாற்றத்திற்கான அண்ணாவின் குரலாக  அமைந்துள்ளது.

    மூடநம்பிக்கை ஒழிதல்

    மக்களுக்கு வரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் கிரக பலன்களால் தான் ஏற்படுகின்றன என்ற கருத்து பழங்காலத்தொட்டே நிலவிவருகிறது. இதனைச் சோதிடத்தால் யார் யாருக்கு எப்பொழுது கிரக பலன்கள் எப்படி இருக்கின்றது என்பதை கணித்துக் கூறமுடியும் என்ற கருத்தும் உள்ளது. இதில் முன்கூட்டியே வரும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்குப் பரிகாரம் செய்தால் நமக்கு வராது என்பது போன்ற பல நிலைகள் உள்ளன. இதுபோன்ற செயல்களை அண்ணா மூடப்பழக்கவழக்கங்களாகக் கருதுகிறார். இம்மூடப்பழக்கத்தைத் தன்னுடைய பல படைப்புகளிலும் சாடியிருக்கின்றார்.

    மக்கள் புரட்சி

    பொதுமக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் வர்க்கத்தினரை அடையாளம் கண்டு மக்களே அவர்களைத் தண்டிக்கும் புரட்சி ஏற்பட வேண்டும் என்ற கருத்தை அண்ணா தம்முடைய படைப்புகளில் பதிவு செய்துள்ளார். மக்கள் புரட்சியினால் மட்டுமே எந்தச் செயலும் சாத்தியமாகும் என அண்ணா உணர்ந்திருந்தார். உலகத்தில் நிகழ்ந்த மக்கள் புரட்சிகளைக் கருவாகக் கொண்டும் படைப்புகளைத் தந்துள்ளார் அண்ணா. இதயம் இரும்பானால், மக்கள் கரமும் மன்னன் சிரமும், அரசாண்ட ஆண்டி ஆகிய குறும் புதினங்கள் உலக வரலாற்றில் நடைபெற்ற மக்கள் புரட்சியைக் கொண்டு எழுதப்பட்டவையாகும். மக்கள் புரட்சியைக் கூறும் இவ்வரலாற்றுப் படைப்புகள்மூலம் தாம் சார்ந்திருந்த சமுதாயத்திலும் ஒரு புரட்சி தோன்ற வேண்டும் என்ற அண்ணாவின் எண்ணம் பிரதிபலிக்கின்றது.

    முதலாளித்துவம் ஒழிதல்

    ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழும் முதலாளிகளின் பிடியில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட அண்ணா, முதலாளிகளின் வளர்ச்சி தொழிலாளிகளின் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டுமே ஏற்படுகின்றது என்பதைத் தன்னுடைய இலக்கியங்களில் பதிவுசெய்யத் தவறவில்லை. ஆனால் அந்த உழைப்பாளிகளை முதலாளிகள் தங்கள் அடிமைகளாகக் கருதி இழிவாக நடத்தும் செயலை அண்ணா மிகக் கடுமையாகச் சாடுகின்றார்.

    செவ்வாழை என்னும் சிறுகதையின் மூலம் உழைப்பவர்படும் துன்பம் உணர்த்தப்படுகிறது. பாடுபட்டும் பலனை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதை எண்ணி மனவருத்தப்படும் செங்கோடனின் நிலை அன்றைய கால உழைக்கும் வர்க்கத்தினரின் நிலையாக இருப்பதை, ‘‘பாடுபட்டோம், பலனைப் பெறப்போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் – பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக்கூடாது என்று சொல்லும் காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான்.” என்னும் கூற்று உணர்த்தும். அதோடு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற செங்கோடனின் மனத்தில் தோன்றும் சிந்தனை வழியாக உழைப்பவர்களுக்குக் காலத்தால் ஏற்பட வேண்டிய மாற்றத்தின் வித்தை விதைக்கின்றார் அறிஞர் அண்ணா.

    அரசியல் மாற்றங்கள்

    நாட்டில் நிலவும் இருவேறு காட்சிகளின் தன்மையை எடுத்துக்கூறுவதாக அமைவது இரு காட்சிகள்… என்னும் சிறுகதையாகும். ஒரே நாட்டில் மன்னர் வாழ்க்கையும் சாதாரண மக்கள் வாழ்க்கையும் இருக்கும் நிலையை எடுத்துக்கூறுகிறது இச்சிறுகதை. வசதியின் உச்சத்தில் இருக்கும் மன்னர், அமைச்சர்கள் அவர்தம் உறவினர்கள் போன்றோரது நிலையையும் அதே நாட்டில் வாழும் மக்களின் நிலையையும் ஆராயும் விதமாக அண்ணாவால் எழுதப்பட்டது. மக்களுக்கான அரசியலையும் சட்டங்களையும் உருவாக்குவதற்கான மாற்றத்தின் வித்தை அண்ணா இச்சிறுகதையின் வழியாக மக்கள் மனத்தில் விதைத்துச் செல்கின்றார்.

    நீதித்துறையில் மாற்றம்

    சட்டத்தைக்கூடத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஏழைகளை அல்லல்படுத்தும் ஆதிக்கக்காரர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றி நீதியை நிலைநாட்ட நீதிபதி வக்கீலாகும் கதையைச் சமுதாய மாற்றமாக அண்ணா படைத்துக்காட்டியுள்ளார். ‘‘உங்களுக்காக ஆம் உண்மை ஆனால், நீங்கள் குற்றம் செய்துகொண்டே இருக்கவும், நான் வாதாடவும் அல்ல நீதிக்காக உமக்கும், உம்மை அடக்கிஅழிக்க எண்ணும், ஆதிக்கக்காரருக்கும், நீதியை மதித்து நடந்திடும் மனப்போக்கு, செயல்முறை ஏற்பட நான் வக்கீலானேன்.” என நீதிபதியாக இருந்து வக்கீலாகும் பாதிரியப்பன் கூறுவது ஏழைகளின் துயர்துடைக்க நீதித்துறையில் நிகழும் மாற்றத்தை அண்ணா தனது நீதிபதி வக்கீலானார் என்ற சிறுகதையில் காட்டியுள்ளார்.

    பெண் விழிப்புணர்வு

    அரசியலில் பெண்களும் ஈடுபட வேண்டும், தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் துடைத்தெறிந்துவிட்டுத் துணிச்சலுடன் போராடி வாழவேண்டும் என்ற கருத்தையும் பார்வதி என்ற பாத்திரத்தின் வாயிலாகப் புலப்படுத்துகின்றார். ஆடவரால் ஏமாற்றப்படும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்து மேற்கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம் என்ற வழிமுறையையும் உத்தமி என்ற பாத்திரத்தின் மூலம் சொல்கின்ற தன்மை பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அண்ணா தரும் அறிவுரையாகவும் உள்ளது.

    சுயமரியாதைத் திருமணம்

    தமிழரும், ஆரியரும் நேர்எதிர்ப் பண்பாட்டினர். தமிழர் களவு, கற்பு நெறியைப் போற்றிவர ஆரியரோ பிரமம், பிரசாபத்தியம் முதலான எண்வகை மணமுறையை வகுத்து வளர்த்தனர். இதில் ஆண் பெண்ணை விரும்புவது என்பதற்கோ அன்றிப் பெண் ஆணை விரும்புவது என்பதற்கோ சிறிதும் இடம் இல்லை. ஏனெனில் அத்திருமண முறைகளில் மணப்பெண் பருவம் அடையாதவளாக – குழந்தையாக – இருக்க வேண்டும் என்பது விதி. ஒரு பெண், தன்னைப் பெண் என்று உணர்வதற்கு முன்பே அவள் ஒருவனின் மனைவியாக்கப்பட்டாள். விருப்பம் ஒத்த இணையரே வாழ்வில் இணைவர். பெண் தான் விரும்பியவனும் தன்னை விரும்புவனுமான ஆணையே களவு முறையிலோ அன்றிக் கற்பு முறையிலோ துணைவனாக ஏற்பாள். அதனால்தான் ஆரியரின் காந்தர்வ மணமுறை ஓரளவு தமிழர் மணமுறையோடு ஒத்துள்ளது என்கிறார் தொல்காப்பியர். தமிழரின் மணமுறைகளின் வளர்ச்சி வாழ்வியல் நடைமுறைகளுக்கு ஏற்ப அமைந்தது.

    முடிவுரை

    அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் சமுதாய மாற்றம், வீறுகொண்ட சமுதாயம் அமைதல் போன்றவை அடிக்கருத்தாக அமைந்துள்ளன. மக்களால் தோன்றும் புரட்சி, முதலாளித்துவம் ஒழிந்து மக்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடுதல், மக்களைக் கவனிக்காத அரசியல்வாதிகள் குறித்த மக்களின் மனமாற்றம், நீதித்துறையில் நீதியை நிலைநாட்ட நீதிபதி வக்கீலாகும் நிலை போன்ற மாற்றங்கள் அண்ணாவின் படைப்புகளில் காட்டப்பட்டுள்ளன.

    துணைநூற்பட்டியல்

    1.அண்ணா பரிமளம் (தொ.ஆ), பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி, ப.888
    2.இரா.சேது, அண்ணாவின் படைப்புத்திறன், ப.74
    3.திரு.வி.க, திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முதல் தொகுதி), பக்.145-146
    4.சுரதா, தேன்மழை, ப.87
    5.அறிஞர் அண்ணா, வேலைக்காரி, ப.95

    *****

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    Sweetselva87@gmail.com

     

    Share
  • கலைஞர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி

    முத்துவேலர் பெற்ற முத்தே – நீர்
    முத்தமிழ்க் காவலர் ,
    முத்தமிழ்க் கலைஞர்,
    முத்தமிழ் அறிஞர் ,
    முத்தமிழ்க் களஞ்சியம்

    எத்தனை பட்டங்கள் ,
    எத்தனை பதவிகள் ,
    எத்தனை பொறுப்புகள்
    எத்தனை படைப்புகள்
    அத்தனையும் முடித்து
    நித்திரை கொண்டாயோ ?

    பெரியார் , அண்ணா வழியினிலே
    பகுத்தறிவாளராய் உருவெடுத்தாய்
    மூட நம்பிக்கைகள் ஒழித்திடவே
    முழுமூச்சாகக் குரல் கொடுத்தாய் .

    இந்திய அரசியல் வரலாற்றில்
    இந்தியத் தலைமைகள் உருவாக்க
    இன்றியமையாத தலைவனாய்
    இருந்தது உன்போல் யாருமிலர் .

    சட்ட மன்ற உறுப்பினராய்
    தோல்வியே காணாது
    சாதனை படைத்தாய் -இன்று
    சரித்திரமானாய்

    தமிழன் பெருமையும் ,
    தமிழின் பெருமையும்
    தரணியெல்லாம் பரவ
    தமிழ் வளர்க்கத் துறைகள் அமைத்தாய்
    தமிழ் மாநாடுகள் நடத்தி வைத்தாய் .
    தமிழறிஞர்களை கௌரவித்தாய் .
    தமிழே எந்தன் மூச்சென உரைத்தாய் – தன்
    தலை மகனை இழந்தாள் தமிழ்த்தாய் .

    அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்தாய் – இன்று
    அண்ணாவின் அருகினில் இடம் பிடித்தாய்.
    தங்கத் தலைவா நீ உறங்கு – உன்னை
    வங்கக்கடலலை தாலாட்டும்.

    உன்னிடம் இருந்த திறமையினால்
    உன்னதத் தலைவனாய் உருவெடுத்தாய் .
    உன் இடம் இனிமேல் வெற்றிடமே .
    உன்னை மறவாது தமிழினமே .

    கண்ணீருடன் ,
    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
    07.08.2018

    Share
  • அழகில் தியானம்!

    பவள சங்கரி

     

    கீச்சிடும் புள்ளின் தேனோசையின் அதிர்வு
    துயில் கலைத்ததும் கனவின் சொச்சமும்
    விழியில் காட்சியாகி விரியும் கணமும்
    பனியில் பூத்த சிறுமொட்டின் அழகியலும்

    துள்ளித் திரியும் சிறுமுயலின் பரவசமும்
    வஞ்சமும் காழ்ப்பும் வசவுமில்லா நேசமும்
    தஞ்சமென சிறுவங்கும் மாடமாளிகை போகமும்
    அன்றையப் பொழுதை இதமாய் தன்வசமாக்கி

    என்றனையும் ஆட்கொண்டு ஆழ்மன தியானமாக்கி
    அல்லல் யாவையும் அசட்டையாய் நீக்கி
    தொல்லைகள் இல்லா புவியை உருவாக்கி
    அழகில் தியானம் அறிவில் தெளிவு மனதில் உறுதி!

    மங்கும் மாலையிலும் மயக்கமில்லை மனதுக்கு
    என்றுமில்லை நிரந்தரத் துயில் சூரியனுக்கு
    இன்றுபோய் உதயமாகி வருவாய் நாளை
    பணிந்திருந்து பக்குவமாய் இயங்குவாய் ஆக்கப்பூர்வமாய்!

    —————————————–

    Share