கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கதைபா ரதத்தின், விதைநா ரணராம்,
இதையே வியாசர் இயற்ற -புதைதந்தம்
வேருடன் கிள்ளி வினாயகர் தந்திட
போருடன் பூபாரம் போச்சு….!
அசல மனத்துள்(வேத வ்யசர்) அவதரித்து அன்பாய்
குசலம் விசாரிப்பான் கண்ணன் -வசன –
திரைக்கதை பாகவதன் ,திவ்யப்ர பந்தன் –
சிறைக்கதவை விட்டகன்ற சேய் “….கிரேசி மோகன் ..