Blog

  • புது வாழ்க்கை!

    -த.ஆதித்தன் 

    கனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.

    மருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.

    ஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா?” என்றாள் திலகா.

    “நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா? இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.

    “நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171228 - Krishna anubhava -Tiruppavai 13 -wm watercolour #KrishnaforToday (Pullin vay keendanai —Kulirakkudainthu neeradu)
    171228 – Krishna anubhava -Tiruppavai 13 -wm
    watercolour #KrishnaforToday
    (Pullin vay keendanai —Kulirakkudainthu neeradu)

     

    ”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி(சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!

    ’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
    தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
    மேனியர் லீலையை முன்னமே உண்டவராம்:
    தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    ”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ் -கோதைபோல் கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு)….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -13

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருத்தஞ்சை மாமணிக்  கோவில்

    thanjai-Maamani-kovil-copy

    பாற்கடலில் கடைந்தெடுத்த நல்லமுதைப் பராசரனும்

    பக்குவமாய் மணிமுத்த நதியிலே தெளித்துவிட்டே

    பார்வியக்கும் தவத்தினில்  பக்தியுடன் அமர்ந்திருக்க

    பார்த்திருந்த வானவரும் பராசரனைப் பணித்தனரே !

     

    தஞ்சகனும் தாரகனும் தண்டகனும் ஆணவத்தில்

    தவத்தோனின் நிலைகுலைக்கத்  தயங்காமலே முயன்றிடவே

    தவம்காக்கத் திருமாலும் முன்வந்தார் முக்கோலம்கொண்டு

    தஞ்சகனைத் தாரகனைத் தாடகனை வென்றிடவே !

     

    கனல்பறக்கும் சினத்தோடு கருடன் மேலமர்ந்தே

    கண்ணனும் வந்தான் கதைமுடிக்க வீரநரசிம்மனாய் !

    களமிழந்த தஞ்சகனும் தலைகுனிந்து வேண்டிடவே

    தஞ்சையெனப் பெயரெடுத்துத் தானமர்ந்தான் தயாளனே !

     

    கலக்கமுற்றுக் கடலினிலே மறைந்திட்ட தண்டகனும்

    களமிழக்கச் செய்தான் கண்ணனும் காட்டுப்பன்றியாய் !

    காளியுடன் போரிட்டுக் கலையிழந்தான் தாரகனும்

    தவத்தோனின் அன்பினிலே கண்ணனும் கட்டுண்டான் !

     

    வீரத்திலே  ஈடில்லா விவேகன் வீரநரசிம்மன்

    திருமகளைத் துணைகொண்ட இலக்குமிநரசிம்மன்

    நீர்வண்ணன் கார்மேகன் நினைவாளும் நீலமேகன்

    பார்போற்றும் பராசரனின் முன்வந்தே அருள்தந்தான் !

     

    நிலமகளும் அலைமகளும் அன்போடு துணையிருக்க

    நினைவெல்லாம் அடியார்கள் கொண்ட துயர்துடைக்க

    நிலையில்லா வாழ்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கே !

    நீலமேகா ! நித்தியமே ! சத்தியமே ! போற்றுகின்றேன் !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Manathukkuniyan. Ramayati iti Ramah— priority of Service - Bharata - The grace to Ravana in the battlefield when he was unarmed and his chariot broken.
    Manathukkuniyan. Ramayati iti Ramah— priority of Service – Bharata – The grace to Ravana in the battlefield when he was unarmed and his chariot broken.

    ”இன்றுபோய் நாளைவா என்றதற்கு ராவணன்
    சென்றன்று நாளையில் ஜானகிக்காய் -கொன்றமால்
    கார்முகில் கண்ணனாய், காதலித்தக் கோதையாய்
    மார்கழி நன்நாளில் மாறு’’…..கிரேசி மோகன்….!

    Share
  • விலகுமோ வன்மம்?

    நிர்மலா ராகவன்

    தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கிஅந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவுகாலமாகிவிட்டது!’ 

    அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?”

    `சேஇந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோநல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டுஅதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்ததுவந்ததிலிருந்து இதே பாடம்தான்!

    ரமா எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர் பாராதவளாகதனது கேள்விக்குத் தானே பதிலும் அளித்தாள் அம்மாஒரு மட்டமான ஆசிரியையை ஒத்தவளாக. “நன்றி கொல்றதுதான்பாவத்திலேயே பெரிய பாவம்!”

    மகளின் முகம் இறுகியது கண்டுதாய்க்கே பரிதாபம் எழுந்திருக்க வேண்டும்அல்லதுஇவளை இப்படியெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால்சற்றுமுன் காட்டிய மிரட்டலிருந்து மாறினாள்.

    புவனா சித்தி ஒனக்கு சாப்பாடு போட்டுபடிக்க வெச்சிருக்காங்கஇப்ப அவங்க ஒடம்பு முடியாம கெடக்கறப்போநீ பாக்கப் போகாட்டிநல்லாவா இருக்கு?” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

    ஒருவழியாக வாயைத் திறந்தாள் ரமா. “சித்தி ஒண்ணும் என்னைப் படிக்க வைக்கலேநான் புத்திசாலிஅதனால உபகாரச்சம்பளம் குடுத்தாங்க அரசாங்கத்திலேபாட்டி சமைச்சுப்போட்டாங்க!”

    அம்மாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீறல்.

    இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்று மகள் எரிந்துவிழ, “ரமாஒன்னோட திமிர் இருக்கேஅது அப்படியே சித்திகிட்டேயிருந்து வந்திருக்கு!” என்றாள்புன்னகை விரிந்தது.

    ரமாவுக்கு எரிச்சலும்அவமானமும் ஒருங்கே எழுந்தனசித்தியைப்போலவா ஆகிவிட்டோம்சீதலையை அதீதமாகக் குனிந்துகொண்டவளின் கை சோற்றை அடைபோல்தட்டிக்கொண்டிருந்தது.

    சாப்பாட்டுமேல கோவிச்சுக்கிட்டு என்ன புண்ணியம்இப்பவாச்சும் நல்லாநிதானமா சாப்பிடுஅங்கேதான் வெந்ததும் வேகாததுமா நீயே ஆக்கிக் கொட்டிக்கறே!” தாய்க்கே உரிய பரிவுடனும்கரிசனத்துடனும் வந்தது குரல்ஆனால்ரமாவின் காதிலோ வேறொரு குரல்தான் ஒலித்தது.

     

    சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடிஎப்பப் பாத்தாலும்பாட்டிகூட என்ன கதை?”

    அவளக்குப் பதினெட்டு வயதாகி இருந்தபோது கேட்ட வசவுஅதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டனஇன்னமும் அந்தக் குரல் அப்போதுதான் ஒலிப்பதுபோல் கேட்டுஅதேபாதிப்பை ஏற்படுத்தியது.

    `இவளையும் என்னைமாதிரி ஒரு டாக்டரா ஆக்கிடறேன்காஎனக்கு ஒரு மக இருந்தா செய்ய மாட்டேனா?’ என்று புவனா அவளைத் தன்னுடன் கோலாலம்பூர் அழைத்துப் போனபோது ரமாதான்எவ்வளவு சந்தோஷப்பட்டாள்!

    அதே மூச்சில் அவள் சொன்னதோ! `இந்த தோட்டப்புறத்திலே இருந்தாஒன்னைமாதிரி பால்மரம் வெட்டத்தான் போகணும்!’

    அம்மாவை அவள் மட்டம் தட்டிப்பேசியது ரமாவுக்கு என்னமோபோல் இருந்ததுஆனால் அம்மா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லைபெரிய படிப்பு படித்துதான் எட்ட முடியாதஉயரத்துக்குப் போய்விட்ட தங்கை எது சொன்னாலும்செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கைமகளும் இந்தப் பட்டிக்காட்டில் அல்லல் படவேண்டாம் என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

     

    இந்தாடிபட்டிக்காடுஇப்படி கைலியைக் கட்டிட்டு நிக்காதேஒனக்காக மூணு ஹவுஸ்கோட் வாங்கிட்டு வந்திருக்கேன்பாரு!” அவள்மீது வீசாத குறையாக எறியப்பட்டது ஒரு பிளாஸ்டிக் பை.

    பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தாள் ரமாஎப்போதும் கைலியும்மேலே தொளதொளவென ஒரு சீட்டிச் சட்டையும் அணிந்தவளாகத்தானே பாட்டி வளையவருவாள்ஒருவேளை, `பட்டிக்காடு’ என்று அவளை மறைமுகமாகத் தாக்குகிறாளோ?

    `ஒங்க சித்திக்கு நாக்கிலே விஷம்!’ என்று பாட்டி அடிக்கடி சொல்வது லேசாகப் புரிய ஆரம்பித்தது.

    யாருக்காவது ஏதாவது நல்லது செய்தால்அது தன்னைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடுமோ என்று அஞ்சியவள்போல்வார்த்தைகளிலேயே நஞ்சைக் கலந்துயாரையாவது மட்டம்தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் புவனாவுக்குபிறரைத் தாழ்த்துவதால் தான் உயர்ந்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிற சிறுபிள்ளைத்தனம்.

    குழந்தைகளின் மருத்துவர் ஆனதால்அவர்களுடனேயே பழகிப் பழகிசித்தியும் அவர்களைப்போல் ஆகிவிட்டாள் என்று அனுமானித்தாள் ரமாபல ஆண்டுகள் கழித்து.

    புவனாவின் பெரிய படிப்போவாயோஎதுவோ ஆண்களை மிரள வைத்ததுஎதற்கும் அஞ்சாத மகளின் போக்கு பாட்டிக்கு அச்சத்தைத்தான் விளைவித்தது.

    இந்த ராத்திரியிலே தனியா எங்கம்மா போறே?” பயந்துபயந்து அவளைத் தடுக்கப்பார்த்தாள் ஒரு முறை.

    படத்துக்குதனியா என்ன! அதான் ரமாவையும் கூட்டிட்டுப் போறேன்ல?” வீறாப்பும்எரிச்சலும் கலந்து வந்தன அக்குரலில்தன்னை ஒருத்தர் — அது அம்மாவே ஆனாலும் — தட்டிக்கேட்பதா!

    சின்னப்புள்ளஅதெல்லாம் ஒரு துணையாஆம்பளைத்துணை இல்லாம..!” பாட்டி முணுமுணுத்தாள்.

    ஆம்பளை என்னபெரிய ஆம்பளைஒங்க காலத்திலே பொம்பளைங்களுக்கு சோத்துக்கு வழியில்லேஅதனால்புருஷன்காரன் எப்படி அடிச்சு ஒதைச்சாலும்ஒங்களை என்ன கேவலமாபேசினாலும் பொறுத்துப்போனீங்க!” என்று நேரிடையாகவே தாக்கிவிட்டு,  “நான் கைநிறைய சம்பாதிக்கறேனே!” என்று தலையை நிமிர்த்திக்கொண்டாள்.

    படம் முடிய சில நிமிடங்களே இருந்தனரமாவின் யோசனை, `தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டாவது இப்படி ஒரு பாடாவதிப் படத்தைப் பார்க்காவிட்டால் என்ன!’ என்று போயிற்று.

    திரைப்பட கதாநாயகன் தன்னைவிட இருபது வயது இளையவளாக இருந்த கதாநாயகியைக் கண்ட கண்ட இடங்களில் தொட்டுக் கொஞ்சியதைவிட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ததாகத்தெரியவில்ல.

    சித்தி மட்டும் எப்படி இந்தக் கண்ராவியையெல்லாம் இவ்வளவு ரசிக்கிறாள்ரகசியச் சிரிப்புடன்?

    ஒரு வேளைதன்னையே அந்த கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொண்டாளோ?

    இந்த நரகத்திலிருந்து கொஞ்சநாட்களாவது விடுதலை பெற வேண்டும்.

     

    லீவு வருதேஅம்மாவைப் பாக்கப் போகட்டுமாசித்தி?”

    அங்கே போய் என்ன கிழிக்கப்போறேகாலை நீட்டி படுக்கக்கூட எடம் கிடையாதுஒங்கம்மாவுக்கும் சாப்பாடு மிச்சம்!” என்று, தான் வளர்ந்த சூழ்நிலை என்றும் பாராமல் பழித்துவிட்டு, “இங்கேயே இருந்தாலைப்ரரிக்குப் போய் படிக்கலாம்!” என்று புவனா சொன்னதை வாய்திறவாது ஏற்றுக்கொண்டாள் ரமாசித்தியுடன் யாரால் தர்க்கம் பண்ண முடியும்ஆண்களே அவளிடம்எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்கள்!

    இரண்டு நாட்கள் கழிந்ததும், “பஸ் காசு செலவழிச்சுக்கிட்டுநாள் தவறாம வெளியே போகாட்டி என்ன!” என்றாள் புவனா.

    நீங்கதானே சித்தி,” என்று ஆரம்பித்தவளை, “எதிர்த்துப் பேசாதேஒனக்காக எவ்வளவு செலவுதெரியுமாஇந்த ஒலகத்திலே எதுவுமே இலவசமா கிடைக்காதுதெரிஞ்சுக்கவீட்டைக் கூட்டிசுத்தம் பண்ணுபாட்டிகிட்ட சமைக்கக் கத்துக்கமல்லிகனகாம்பரம்கத்தரிஎல்லாச் செடிங்களையும் கொத்திவிட்டுதினம் ரெண்டு வேளையும் தண்ணி விடு,” என்று அடுக்கினாள்வேலைக்காரி நிறுத்தப்பட்டாள்.

    ரமா முதலில் விழித்துக்கொண்டது அப்போதுதான்சித்திக்கு தன் காலில் விழுந்துகிடக்கபோட்டு மிதிக்கயாராவது வேண்டும்தான் வசமாக மாட்டிக்கொண்டோம்!

    மீண்டும் கல்லூரி திறக்கும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

    அன்று கல்லூரி முடிந்ததும் நல்ல மழைஇரண்டு பஸ்களைத் தவறவிட்டுஇருட்டியபின் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

    முகமெல்லாம் இறுகிப்போய்இடுப்பில் கைவைத்துவாசலிலேயே காத்திருந்தாள் புவனா. “எவனோட சுத்திட்டு வரே?”

    ரமா வாயடைத்துப்போனாள்இப்படி ஒரு சொற்கணையை எதிர்பார்த்திராததால்.

    சொல்லேண்டி!”

    மழை..பஸ்..!” என்று குழறினாள்.

    என்ன அளக்கறேநீ எவனோ ஒருத்தன்கூட ஹோட்டலுக்குள்ளே நுழைஞ்சதைப் பாத்ததா யாரோ சொன்னாங்களே!”

    பன்னிரண்டு பிராயம் வந்ததும், `இனிமே ஆம்பளைப் பசங்களோட விளையாடாதேஅனாவசியமா பேசவும் கூடாது!’ என்ற அம்மா விடுத்த எச்சரிக்கையின் அர்த்தம் புரியாதுபோனாலும்இன்னமும் ஆண்களைக் கண்டாலே அஞ்சி விலகும் தன்னைப் பார்த்துஇப்படி ஒரு பழிச்சொல்

    வீட்டின் வெளியிலேயே நின்றபடி ரமா அழ ஆரம்பித்தாள்திரும்பவும் மழை பொழிய ஆரம்பித்துஅதில் தான் நனைவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை.

    அவளடைந்த திருப்தி முகத்தில் வெளிப்படையாகவே தெரியஉதடுகளை வெற்றிச்சிரிப்புடன் இறுக்கிக்கொண்டுஉள்ளே நடந்தாள் புவனா.

    எங்காவது ஓடிவிடலாமா?

    எங்கு போவது?

    மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த அண்ணன் ரமாவின் நினைவில் எழுந்தான்.

    `அத்தை எங்கிட்ட தப்பா பழகப் பாக்கறாங்கரமா!’ என்று அவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டுமீண்டும் தோட்டப்புறத்துக்கே வந்து ஒளிந்துகொண்டானே!

    `அண்ணன் செய்த தவற்றை நானும் செய்ய மாட்டேன்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ரமா. `சித்தியைவிட வாழ்வில் உயர்ந்து காட்டுகிறேன்!

    இறுதிப் பரீட்சைக்குச் சில மாதங்களே இருக்கபடிக்கும் சாக்கில்சித்தியுடன் பேசுவதைத் தவிர்த்தாள்பரீட்சை முடிந்தபின் எங்கு வேண்டுமானாலும் தொலையலாம்சுதந்திரமாகஇருக்கலாம்.

    பாட்டிபரீட்சை முடிஞ்சிடுச்சுஅம்மா,  மத்த எல்லாரையும் பாக்கணும்போல இருக்குகாலையிலே போறேன்!” என்று யாருக்கோ அறிவிப்பதுபோல்பெரிய குரலெடுத்துச் சொன்னாள்.

    `இவ்வளவு செஞ்சிருக்கேன்கொஞ்சமாவது நன்றி இருக்காபாரு!’ என்று சித்தி முணுமுணுத்ததை லட்சியம் செய்யவில்லை.

    நன்றியாமேநன்றி!

    பாட்டி சமைத்துப்போட்டுஆதரவாக இருந்தாள்திட்டியதையும்மிரட்டி வேலை வாங்கியதையும் தவிர சித்தி என்ன கிழித்துவிட்டாள்!

    அதற்குப் பிறகு அமெரிக்காவில் மேலும் இரண்டு பட்டங்கள் பெற்றுஅங்கேயே வேலையும் தேடிக்கொண்டு விட்டாள்அன்பான கணவரும் அவளுக்கு வாய்த்திருந்தார்சித்திபோல்படங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியதில்லை. 

    நீண்ட காலத்துக்குப் பிறகு மலேசியா திரும்பியபோதுஅனைத்துலக விமான நிலையத்தின் அருகேகோலாலம்பூரிலேயே இருந்த சித்தியைஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கத்தோன்றவில்லை ரமாவுக்கு.

    அதுதான் அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. `நன்றிகொன்றவள்’ என்று வசைபாடுகிறாள்.

    அந்த புவனா சித்தி — நாவிலேயே தேளின் கொடுக்கை வைத்துக்கொண்டிருந்தவள் — இன்று சாகக் கிடக்கிறாளாம்.

    `செத்துத் தொலையட்டுமேஇந்த மாதிரி ஒருத்தி போய்ச்சேர்ந்தாஒலகத்துக்கு என்ன நஷ்டம்?’ என்றுதான் எண்ணத் தோன்றியது ரமாவால்கூடவேபாட்டி உயிருடன் இல்லாத நிலையில்தனியாக என்ன பாடுபடுகிறாள் அந்த ராட்சசி எனபதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு குரூரமான எண்ணமும் அவளுக்கு உதித்தது.

    நாளைக்கு கே.எல் போகணும்மாஅங்கே எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க!” என்ற மகளைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் தாய்.

    `சித்தியைப் பார்க்கப் போகிறேன்,’ என்று உண்மையை ஒத்துக்கொண்டால்மதிப்பு குறைந்து விடுமோ!

    அப்படி என்ன வன்மம்?

     

    `இந்த பரிதாபகரமான ஜீவன்மேலா இத்தனை காலமும் வன்மம் வைத்துக்கொண்டிருந்தேன்!’ அதிர்ச்சியாக இருந்தது ரமாவுக்கு.

    இதுவா சித்தி?

    மூன்று வயதுக் குழந்தை படுத்திருந்ததுபோல் இருந்ததுமுழு நீள அங்கி அந்த சொற்ப உடலையும் மறைத்திருந்ததுஒட்டிய கன்னம்நீளமான முடி கழுத்தளவே கோணல்மாணலாகவெட்டப்பட்டிருந்ததுஇடுப்புக்குக்கீழ் மட்டும் சற்றுப் பருமன்டயபர் கட்டியிருக்க வேண்டும்.

    `உலகமே என் காலடியில்!’ என்று இறுமாப்பாக இருந்தவள் தனது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் அவல நிலை!

    `எனக்கு யார் நிகர்!’ என்று எல்லாரையும் அலட்சியமாகப் பார்த்த கண்களில் இப்போது எந்தவித ஒளியோசலனமோ காணப்படவில்லை.

    புவனா அம்மாவால பேசத்தான் முடியாதுஆனாநாம்ப சொல்றது எல்லாம் விளங்குது,” என்று தெரிவித்தாள் தாதி. “பெரிய வேலையிலே இருந்தவங்களாமே!”

    ரமாவின் நினைவு எங்கோ தாவியது.

    ஒரு நாள் பாட்டி தன் கையாலேயே சோற்றை எடுத்து சித்தியின் தட்டில் போட, `அசிங்கம்கரண்டியால போடாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’ என்றுஆங்காரமாகக் கத்தியவள்தட்டை பாட்டியின்மேல் வீசினாள்.

    பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமா விறைத்துப்போனாள். `வெளியிலே வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியபடியே அன்பையும்கவனத்தையும் செலுத்திகுனிந்து நிமிர்ந்தால்வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடி  பாட்டி சமைத்திருந்ததை அவள் அறிவாள்.

    சோறு பாட்டியின் கைலியில் படிந்ததுஆனால்பாட்டி அதைப் பொருட்படுத்தவில்லை. “நாள் பூராவும் ஒழைச்சுட்டு வந்திருக்கேடிகண்ணுஒன் கோபத்தை சோத்தின்மேலே காட்டாதே!” என்றுதரையில் கிடந்ததைக் கையால் திரட்டியபடி அழுதது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இன்றோதிரவப்பொருட்கள்தாம் சித்திக்கு ஆகாரமாம்அதுவும்கைப்பிள்ளைக்கு ஊட்டுவதுபோலசொட்டுச் சொட்டாகஒரு சிறு ஸ்பூனால்.

    `தெய்வம் நின்று கொல்லும்!’ என்று இதைத்தான் சொல்லிவைத்தார்களோ?

    `நல்லவேளைநானும் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகவில்லை!’ தன்னை விரட்டிய அம்மாவின்மேல் நன்றிகூட எழுந்தது.

    சித்தி ஆக்கிரமித்ததுபோககட்டிலில் நிறைய இடம் இருந்ததுஅவள்மேல் இடிக்காத குறையாக அதன்மேல் உட்கார்ந்துகொண்டாள் ரமா.

    எதனாலேயோ உந்தப்பட்டவள்போலசித்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்துஅண்மைக்காலம்வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள்ஒவ்வொரு வார்த்தையாலும் அவளுடைய மனத்தடியில் படிந்திருந்த கசப்புஅதனால் எழுந்திருந்த வன்மம்விலகியதுபோல் ஒரு நிம்மதி.

    அசைவே இல்லாதுபடுக்கையே கதியென்று இருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியதுஏதோ சொல்ல முயன்றாள்கரடுமுரடான ஓசைதான் வெளியே வந்தது.

    அவளுடைய நிலையைப் பொறுக்காது, “ஒங்களுக்கு நல்லா ஆயிடும்சித்தி!” என்று அவசரமாகச் சொன்ன ரமா,  கைகளைச் சிறகென விரித்து சித்தியின் தோளில் போட்டுதன் தலையை அவள்மார்பில் பதிய வைத்துக்கொண்டாள் — மிக மிக லேசாக.   

    (2008-ல் மலாயா பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றது)விலகுமோ வன்மம்?

    Share
  • தனிமையில் ஒரு தமிழ்க்குரல்

    நிர்மலா ராகவன்

    `நீங்க மட்டும் தனியா எதுக்குப்பா இங்க இருக்கணும்? வீணா கஷ்டப்படாம, எங்களோட வந்துடுங்க!’ ரகு கேட்டபோது, கிருஷ்ணனுக்கும் அது சரியான யோசனை என்றுதான் தோன்றியது.

    மனைவி இருந்தவரை சமையலறைப்பக்கமே போகாதிருந்தவர். இப்போது தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் குக்கரை உடனே திறந்து, நீராவி முகத்தில் அடித்ததும், `கத்தி என்ன,இவ்வளவு மொக்கை!’ என்று ஒரேயடியாகத் தீட்டி, முருங்கக்காயை நறுக்கும்போது விரலையும் சேர்த்து நறுக்கி, ரத்தம் கொட்டியதும் நினைவில் எழுந்தது. அப்போது, `உங்களுக்கு ஏன் இந்த வேலையெல்லாம்!’ என்று ஆறுதலாக ஓடி வர எவரும் இல்லை என்று உரைத்தபோது, தான் ஏன் இப்படித் தனித்துப்போனோம் என்று அழுகை வந்ததே!

    இருபதாண்டு மண வாழ்க்கைக்குப்பின் மனைவியிடம் என்ன பேசுவது என்று புரியாது, தான் ஒரு பக்கம், மனைவி சமையலறையில் என்று வாழ்ந்த சராசரி தம்பதிகள் அவர்கள். ஏதோ, அவள் இருந்தவரை சாப்பாட்டுக்காவது கஷ்டமில்லாது இருந்தது.

    இருக்கிற சொத்தை ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதிவிட்டு, மகனுடன் ஒரேயடியாக வெளிநாட்டுக்குப் போய்விடலாம். மருமகள் ஒரு வேளை சோறு போடமாட்டாளா, என்ன! பேரனுடன் பொழுதை ஆனந்தமாகக் கழிக்கலாம்.

    ஆனால் ரகு ஒப்பவில்லை. `வீட்டை விக்க வேண்டாம். நாம்ப இங்க வராமலேயாவா போயிடுவோம்? அம்மா தன்னோட நகையையெல்லாம் வித்து, எவ்வளவு ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கினாங்கன்னு எனக்குத் தெரியும்,’ என்று சொன்னபோது, அவருக்கு மறுத்துப்பேசத் தோன்றவில்லை.

    அயல்நாட்டில் அக்கம்பக்கத்தில் யாருமே தமிழ் பேசவில்லை என்பது முதல் அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு ஏன், பேரனுக்கே தமிழ் புரியவில்லை.

    இரண்டு வயதிலிருந்தே தன் அருமைப்பிள்ளை தொலைகாட்சியிலிருந்து ஆங்கிலம் பயின்ற பெருமையை ரகு கூறியபோது, அவருக்குப் பாராட்டத் தோன்றவில்லை.

    “இங்கிலீஷ் என்னடா, இங்கிலீஷ்! நம்ப பாஷையைக் கத்துக்குடு மொதல்லே!” என்றார் அலட்சியமாக.

    ரகு சுற்றுமுற்றும் பார்த்தான், அவர் கூறியது எங்காவது மனைவி காதில் விழுந்து தொலைத்துவிடப் போகிறதே என்று பயந்தவன்போல்.

    “தமிழிலே பேசினா, இங்க அவன் வயசுப் பசங்களோட பழகவே முடியாதுப்பா,” என்று அவர் வாய்க்கு ஒரு பூட்டு போட்டான்.

    அவர் முகம் போனபோக்கைப் பார்த்து, “அதான் தேவாரம் கிளாசுக்குப் போறானே!” என்றான், சமாதானப்படுத்தும் விதமாக.

    கிருஷ்ணன் மென்று விழுங்கினார். `தேவாரம்’ என்ற பெயரில், என்ன சொல்கிறோம் என்றே புரியாது, அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இன்ன மொழி என்றுகூட நிர்ணயிக்க முடியாது இருந்ததை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்!

    தான் வாழ்ந்த சிற்றூரில், சாயங்கால வேளைகளில் காய்கறி வாங்கிவரும் சாக்கில் மார்க்கெட்டுக்கும், அதன்பின் கோயிலுக்கும் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் அவர்.

    “இங்க.. பக்கத்திலே கோயில் எதாவது இருக்கா ரகு?” என்று கேட்டபோது, “கோயிலுக்குப் போக இருநூறு மைல்! மலைமேலே, ரொம்ப அழகா இருக்கும். எப்பவாவது லீவு நாளிலேதான் போகமுடியும். அதான் வீட்டிலே முருகன் படம் மாட்டி வெச்சிருக்கேனே!” என்றபோது, அவன் குரலில் சிறு எரிச்சல் இருந்ததோ?

    முன்பு அவரையொத்த நண்பர்களுடன் கூடி, அரசியல், சினிமா, சமூகம் என்று அலசியதை எண்ணினார். எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. முன்பிருந்ததைவிட இன்னும் தனித்துவிட்டதைபோல் இருந்தது. யாரோ தன்னை ஏமாற்றிவிட்டதுபோன்ற உணர்வு.

    `ரகு என்ன, என் கையைப் பிடிச்சு இழுத்தானா? நானேதானே வந்தேன்!’ தன் முட்டாள்தனத்துக்காக வருத்தம் ஏற்பட்டது.

    “அப்பா! கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வர்றீங்களா?”

    `இவனுக்கு நான் எடுபிடியா!’ எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மகன் நீட்டிய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இப்போதெல்லாம் பசிகூட மந்தமாகியிருந்தது.

    “குளிரும்பா. மஃப்ளர் கட்டிட்டுப் போங்க!” என்ற குரலை அலட்சியம் செய்தார்.

    அங்குதான் சந்தித்தார் தேவியை.

    “யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க ஸார்?” தமிழ்க் குரல் கேட்டு மெய்சிலிர்த்துப்போனார் கிருஷ்ணன்.

    அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. `என்ன நாகரிகமோ!’ என்று மனதுக்குள் ஒரு சிறு வெறுப்பு.

    மரியாதையை முன்னிட்டு சிறிது நேரம் பேசிப் பிரிந்தார்கள். இல்லை, அவளேதான் பேசினாள் — தான் படிப்புக்காக இருபது வயதில் வந்தது, கல்யாணம் செய்து ஒரு வருடத்துக்குள் கணவர் இறந்தது – என்று பல தகவல்களை மூச்சுவிடாமல் சொன்னாள். `தமிழ் பேசுகிறவர்களைப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது,’ என்றாள், தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்தவளாக.

    விதவை, பாவம்! இவளைப்போய் திட்டி வைத்தேனே! தன்னைத்தானே வைதுகொண்டதில், அவள்மீது ஏதோ பிடிப்பு ஏற்பட்டது போலிருந்தது.

    அடுத்த முறை, “எங்க வீட்டுக்கு வாங்களேன். பக்கத்திலேதான். நான் ஃபில்டர் காபி போட்டுத் தரேன்,” என்று தேவி சிரித்தபோது, “வரேன். ஆனா, சர்க்கரை வேண்டாம்,” என்றபடி அவரும் அவள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

    `இந்தப் பெண்ணுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறதே!’ பிறர் சொல்லக்கூட கூச்சப்படும் விஷயங்களைக்கூட அறிவுபூர்வமாக, தைரியமாக, தேவி பேசியபோது பிரமிப்புதான் எழுந்தது.

    `எனக்கும் ஒன்று வாய்த்திருந்ததே! வடிகட்டின முட்டாள்! எதைப்பற்றியும் எதுவும் தெரியாது!’

    `தேவியும் தன்னைப்போல் தனிமையில் வாடுகிறவளோ? அதுதான் இவ்வளவு சீக்கிரத்திலேயே என்னுடன் நெருங்கிவிட்டாளோ?’

    மனைவிக்கும் தேவிக்குமாக அவர் மனம் தாவியது.

    இப்படி ஒரு படித்த பெண்ணை மணந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் என்று ஓர் எண்ணம் எழ, அதை அடக்க முடியாது பாடுபட்டார். குற்ற உணர்ச்சி மிகுந்தது.

    மகனது வீட்டில் தொலைகாட்சியைத் தவிர வேறு துணை இல்லாதவராக இருந்தபோது எழுந்த விரக்தி சிறிது சிறிதாக மறைந்தது. முன்பு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தபோது எழுந்திருப்பதுகூட பெரும் பிரயத்தனமாக இருந்தது. இப்போதோ, தினமும் காலார நடந்துபோனார்.

    வழியில் தேவியைப் பார்க்க முடியுமா என்று மனம் துடிக்க, ஏதோ குற்றம் செய்வது போலிருந்தது. மனைவிக்குத் துரோகம் செய்கிறோமோ?

    அந்த மனமே சமாதானப்படுத்தியது: மனைவிதான் போய் சேர்ந்துவிட்டாளே! இன்னும் எத்தனை காலம்தான் தனிமையிலேயே கிடந்து தவிப்பது!

    அவரிடையே தோன்றியிருந்த மாறுதல்களை மகன் கவனிக்கத் தவறவில்லை. புன்னகையுடன், “யாருப்பா ஒங்க புது ஃப்ரெண்ட்?” என்று கேட்டான்.

    விழிகள் விரிய, “தமிழ் பேசறாங்க!” என்று அவளைச் சந்தித்ததுபற்றி விவரித்தார்.

    ரகு யோசனையுடன், “பொண்ணா! எத்தனை வயசிருக்கும்?” ன்று கேட்டான்.

    அவருக்கு என்னமோ போலிருந்தது. அவனது கேள்விக்கு நேரிடையாகப் பதிலளிக்காது, “போடா! நான் என்ன, சின்னப்பையனா?” என்று தன் தடுமாற்றத்தை மறைக்கப்பார்த்தார்.

    அன்று சாயந்திரம் வீடு இரும்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. வீட்டுக்குள் நுழைய இருந்தவர், மருமகளின் குரல் உரக்க ஒலிப்பது கேட்டுத் தயங்கி நின்றார்.

    “ஆனாலும், ஒங்கப்பாவுக்கு இந்த வயசிலே புத்தி இப்படிப் போகவேண்டாம். அவளோட அப்படி என்ன பேச்சும், சிரிப்பும்! என்னடா, தினமும், `கடைக்குப் போறேன். ஒனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’ன்னு கரிசனமா கேக்கறாறேன்னு பாத்தேன். இந்த சாக்கிலே அவ வீட்டுக்குப் போறாருன்னு இப்பத்தானே தெரியுது!”

    கிருஷ்ணன் திகைத்துப்போனார். யார் இவளிடம் ஒன்றுக்குப் பத்தாக வத்தி வைத்திருப்பார்கள்?

    `இந்நாடு நாகரிகத்தின் உச்சம்!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சிலருடைய மனப்போக்கு பின்தங்கியே இருக்கிறது!

    இனியும் தான் இங்கு இருப்பதோ, தேவியுடன் பேசிப் பழகுவதோ தனக்குத்தான் கேவலம்.

    தேவி!

    சின்னப்பெண், பாவம்!

    அவளுடைய எதிர்காலம் தன்னால் பாழாகக் கூடாது.

    “எதுக்குப்பா இவ்வளவு அவசரமா திரும்பப் போகணும்னு துடிக்கறீங்க? எனக்கு லீவு வருது. ஒங்களைக் கோயிலுக்குக் கூட்டிப்போகலாம்னு இருந்தேனே!” மகனது குரலில் உண்மையான ஆதங்கம் இருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய முடிவால் ஏற்பட்ட நிம்மதியை மறைத்துக்கொள்ள அப்படிச் சொல்வதாகத்தான் நினைத்தார். கசப்பு ஏற்பட்டது.

    “நம்ப ஊருக்குப் போனா, தினமுமே கோயில் குளம்னு இருக்கலாம். பாக்கறவங்ககிட்டே எல்லாம் தமிழிலே பேசலாம்,” என்றவரின் குரலில் ஆதங்கம். “அங்கே வயலும், மரமுமா பச்சைப்பசேலுன்னு எப்படி இருக்கும்! இந்த கான்க்ரீட் காட்டிலே என்னால இருக்க முடியாது, ரகு!” என்றவரின் குரலில் தீர்மானம்.

    தான் செய்த காரியத்துக்கு அவன் மனம் நோவானேன் என்ற அலுப்புடன், “நல்லவேளை, நம்ப வீட்டை விக்கக்கூடாதுன்னு நீ சொன்னே!” என்று சப்பைக்கட்டு கட்டினார் கிருஷ்ணன்.

    Share
  • இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

    சுப்ரபாரதிமணியன்

    சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.

    – இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.

    இலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. –

    – யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்

    – துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது

    துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன

    துரோகத்தின் சாட்சியம் : 1

    கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.

    – கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்

    – சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர் தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்

    – கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.

    – கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது

    பிறரின் கண்டனம் 3

    முல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.

    ..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்

    – இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்

    – ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்

    – கொழும்பு காலி கடற்கரை.தூர

    -இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.

    – அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp

    பாதித்தது :

    கிளினொச்சியில் சந்தித்த தாய்மார்கள்:

    – இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.

    இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

    16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    லங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp

    – இலங்கை வவுனியா.பண்டாரவன்னியன் சிலை..இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ரொம்ப சுமாராய்..முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில்

    – யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்

    – துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது

    – துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன

    துரோகத்தின் சாட்சியம் : 1

    கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.

    – கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்

    – சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர்

    தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்

    – கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.

    – கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது

    பிறரின் கண்டனம் 3

    முல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.

    ..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்

    – இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்

    – ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்

    – கொழும்பு காலி கடற்கரை.தூர எல்லையில் 14மில்லியன் டாலர் செலவில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா.99 ஆண்டு ஒப்பந்தம்.இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்.வி.புலிகளை ஏன் அழிக்க உதவினோம் என்று நொந்து கொள்ளும் இந்தியா.

    – வவுணியா..உணவுப்பட்டியலில் மிதிவெடி என்ற பலகாரம் உள்ளது

    – அரசு ஆணை போர்டில் கொழும்பு.நீண்ட சுத்தமானக் கடற்கரை.அசுத்தப்படுத்தினால் குறைந்தது 4 மில்லியன் அபராதம்.அதிகபட்சமாய்15 மில்லியன்.யோசிக்க..திருப்பூர் நொய்யல்..

    – இன்று கொழும்பு தமிழ்ச் சங்க நூலகத்திற்கு என் நூல்களை அன்பளிபபாக வழங்கியதைப் பெற்றுக் கொண்ட இலக்கிய பிரிவு பொறுப்பாளர் சுகந்தியுடன்..

    – யாழ்ப்பாணம் சந்தித்தேன் .போர்க்காலத்தில் பாதிக்கப்படடவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் தன்னார்வலர் அன்பு ராசாவின் இலக்கியப் பதிவுகள் நூல்களாய்..

    – போர்க்காலத்தில் கை.கால் சேதமடைந்தவர்களுக்கு செயற்கை உறுப்பு வழங்கும் தன்னார்வக்குழு வருடம் 300 பேருக்கு வழங்குகிறது.

    – வவுணியா டு யாழ்ப்பணம்.150கிமீ அதிகமான வெகு நேரான a 9 நெடுஞ்சாலை பல பல ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டு..இருபுறமும் பச்சை பசேல் வயல்கள்.ஒரு காலததுப் போர்க்கால பூமி

    – வவுணியா.முகநூலிலிருந்து வாசிப்பிற்கு புதிய தலைமுறை நகரவேண்டும்.லண்டன் உதயணன் உரையில்..

    – இலங்கை கவிஞர் யோ.புரட்சி.1000கவிதைகள் தொகுப்பு. 1000 கவிஞர்கள் 420 தமிழகக்கவிஞர்கள்.யோவ் புரட்சிதான் தம்பி

    – வவுனியா.தமிழ்உதயாவின் 5கவிதைநூல்கள் ஒரே நாளில் வெளியீடு.இத்தொகுப்புகளின் ஆக்கத்தில் முருகதீட்சண்யா.தம்பி.இளம்பரிதியின் முத்திரைகள் அபாரம்

    – கொழும்பில் மேமன்கவியுடன்..பின்நவினத்துவம்.பொதுவுடமைக்கட்சிகளின் பலவீனம்..தமிழ்ஈழம் அழிப்பின் முன்னணி..என்று தொடர்ந்த உரையாடல்

    இலங்கை.சு.சுழலை மாசு படுத்தினால் 4 மில்லியன் அபராதம் .விபத்து இன்சுரன்ஸ்4 மில்லியன்.இலங்கையில் 4மில்லியன் சாதாரணத் தொகையா

    -யாழ்ப்பாணம். கீரி மலை. இராணுவ ஆக்கிரமிபில் இருந்து விலகியதால் மக்கள் நடமாட்டம் இப்போதெல்லாம். போர்க்காலங்களில் வீடுகளைக் கைவிட்டுப் போனதால் அவை சிதைலமடைந்து கிடப்பது துயரமான காட்சி.நூற்றுக்கணக்கான வீடுகள். இன்னும் யாழ் விமான நிலையம் கூட இராணுவ ஆக்கிரமிபில் தான்.்ாயாழ்ப்பாணம்.கீரிமலை .கேணி புண்ணியஸ்தலமாக உள்ளது.அழகிய கடற்கரை… நீர் உள்ளே வந்து ..

    யாழ்ப்பாணம் . நல்லூர் கந்தசாமி கோவில்.மேல் சட்டை போடாமல்தான் உள்ளே போகவேணும். தேங்காய் தட்டு இல்லாமல் போனால்… ஒரு தேங்காய் விலை ரூ 150. தென்னை மர நோய், உற்பத்தி குறைவு . 75 ரூபாய்க்கு மேல் தேங்காயை விறகக் கூடாது என்று அரசு உத்தரவு மீறி….இலங்கை இடியாப்பம் தேங்காய் சட்டினி இன்றி தொண்டையில் இறங்குமா . கந்தா கருணை வை.

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். மார்சிய விமர்சன அணுகுமுறையை வளப்படுத்திய அமரர்கள் கைலாசபதி, சிவத்தம்பி முதல் பலரின் நினைவைக் கிளப்பியது. போர்க்காலத்தில் முக்கிய களம் இது

    -யாழ்ப்பாண நூலகம். முழுக்க எரிக்கப்பட்டு அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டதைப் பார்த்துமார் அடைப்பு ஏற்பட்டு இறந்த பாதிரியார் படம் இது. பின் புணரமைக்கப்பட்டுள்ளது.சுஜாதா அது எரிக்கப்பட்ட அடுத்த வாரம் அதுபற்றி எழுதியிருந்த ஒரு கதை : ஒரு லட்சம் புத்தகங்கள்

    – யாழ்ப்பாணம் தமிழ் நூல்கம். ,

    துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்

    முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

    பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .

    ——————————————————————————————-

    இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.

    அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.

    இதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு

    – உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் முறிவு நாவலுக்கும். தெளிவத்தை ஜோசப்பின் ஈழ நாவலுக்கும் கொழும்பில் பரிசளிக்கப்பட்டன.தெளிவத்தை ஜோசப் முன்பு விஷ்ணுபுரம் விருது பெற்றதால் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர்

    Share
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்க இலக்கியம் கற்பித்தல்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    நவீன உலகில் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருக்கும் கருவியாகத்  தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குவது மனிதனின் ஆறாம் விரலாகக் கருதப்படும் தொலைபேசி. தொழில்நுட்பங்கள்  நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்குத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாத் துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன.  இத்தகைய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கமும் ஒருபுறமிருந்தாலும் அவ்வளர்ச்சியில் பங்குபெறாத, கண்ணேறிட்டுப் பார்க்காத சமூகமும் நம்மைச் சுற்றி காணப்படத்தான் செய்கின்றது.  தொழில்நுட்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கல்வித்துறையும் இத்தொழில்நுட்பங்களுடன் இணைந்து பல எட்டாக்கனிகளைத் தனதாக்கியுள்ளன. மொழிதவிர்த்த ஏனைய கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் வேரூன்றிக் காய்காய்த்துக் கனியத் தொடங்கிய நிலையில் தமிழ்மொழியும் இதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பழம்பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம் அப்பழமையான இலக்கியங்களைப் பழமையான கல்விமுறையிலேயே கற்றும் கற்பித்தும் வருகின்றோம். பழமையான இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் என்பது கசப்பான உண்மையாகும்.  இக்கட்டுரை சங்க இலக்கியத்தை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எடுத்தியம்புகிறது.

    மரபுசார்ந்த  கல்வி முறைகள்

    கல்வி முறைகளில் சிறந்திருந்த ஆதிமனிதன் குருகுலக் கல்வி முறையை மேற்கொண்டான்.  மன்றங்களில் தொடங்கிய கல்வி முறையில் சாதியம் புகுந்து கோயில்களில் வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டது.  எல்லாருக்குமாக இருந்த கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எனச் சுருங்கியது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இது ஒழிக்கப்பட்டு எல்லாரும் கல்வி கற்கும் முறை உருவானது.  நன்னூல் கூறும் கல்வி முறையைப் பார்க்கும்போது( நன் 40, 41 )  சோழர் காலத்துக் கல்வி முறை இதில் பதிவாகியுள்ளது என்பது உறுதி.  அதாவது, வினாவை எழுப்பி அதற்கு பதில்கூறும் ஒருவகைக் கல்வி முறையே இருந்தது.  சான்றாக  மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள் என்னும் தம் நூலில் ( 1996:6,7) மேற்கோளாகக் காட்டும் உரைப்பகுதி இதற்குத் தக்க சான்றாக அமையும். “கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதவள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன்போக அவன் வரைவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று வினவலாமோ? இஃது அங்ஙனம் ஆயின் குறி என்பது பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று இவளும் பொய் கூறினாள் அல்லள்”  என்னும் திருக்கோவையார் பேராசிரியர் உரையைப் பார்க்கும்போது கேள்வி கேட்டு விடையளிக்கும் கல்வி முறையே அன்றைய சமூகத்தில் இருந்தது எனத் தெரிகின்றது.

    மேலும் நன்னூலில் இடம்பெரும் “செவி வாயாக நெஞ்சு களனாக” பாயிரம் 49 என்னும் தொடர், காதால் கேட்டு மனத்தில் நிறுத்தும் முறையை உணர்த்துகிறது. அதாவது மனப்பாடம் செய்யும் முறை வழக்கில் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்ததையும் இதற்கான காரணத்தையும் சீனி வேங்கடசாமி பின்வருமாறு விளக்குகிறார். “கணக்காயரிடம் பொருள்அறியாது மனப்பாடம் செய்த மாணவர்கள் பிறகு தகுந்த புலவரிடம் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடம் செய்த நூல்களுக்கு உரை கேட்பர்.  அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில்  இம்முறை ஏற்றதாக இருந்தது. மாணவர்கள்  உருப்போட்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னூல், நிகண்டு போன்ற  நூல்களைக் கற்றனர்” என்று குறிப்பிடுகிறார்.  (2001:51) மாணவர்கள் ஆசிரியனிடம் பாடம் கேட்கும்போதும் ஒருவகையான கசப்பு உணர்வை பெற்றனர் என்பதை உ.வே.சா தமது என்சரிதம் என்னும் நூலில் ’அம்பலவாண முனிவரிடம் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தைப்          ( 1956:44) பதிவாக்கியுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சியில் பல கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின.  அச்சுநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இதனால் மனப்பாடக் கல்வி மறைந்தது. சமய எல்லைகளைக் கடந்து பலவகையான இலக்கண இலக்கியங்களைப் பயிலவும் அவற்றைப் பிற இலக்கியங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் கல்வி முறையும் நடைமுறைக்கு வந்தது.

    கல்வித்துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

    பழங்காலக் கல்விமுறை ஆசிரியனை மையமிட்ட கல்விமுறையாக இருந்தது.  நவீனக் கல்வி முறை  ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும்போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், ஆசிரியரின் இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம். மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகைகளும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனத்தில் பதியவைக்க முடியாத நிலையில் கரும்பலகையும் வெண்கட்டிகளும் பயன்பாட்டில் வந்தன.  இந்நிலை தற்காலம்வரை தொடர்கிறது. ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர்ப் பயன்பாட்டுக்கு வந்தன.

    இன்று கற்றல் கற்பித்தலில்  தொழில் நுட்பக்கருவியான  கணினி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இக்கணினி வகுப்பறைகளில்  புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை இலகுவாக்குவதோடு கற்பித்தல் உத்தியையும் மாற்றி மாணாக்கர்களின் கற்றல் முறையையும் மாற்றிவிடும் கருவியாகவும் செயல்படுகிறது.

    ஓர் ஆசிரியன் ஒரு மடிக் கணினியையும் தனது பயன்பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), தகவல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக்கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்துவிட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பிவிடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

    அது மட்டுமல்லாமல் இப்போது கற்பித்தலில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம்கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம். தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாடமாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றிவிட்டால், அவரது இன்மைக்குப் பின்வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும்.

    கற்பித்தலின் மற்றொருகூறு சக்தி மையம் அல்லது பவர் ஆகும். இது கறபித்தல்-கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப்போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண்திரையில் வழங்கலாம். தேவையான காலஅளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.  இத்தகைய தொழில் நுட்பங்களை நாம் எட்டிவிட்டோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். 

    தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியத்தைக் கற்றல்

    தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வித்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்டோம்.  இனி இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கற்கலாம் என்பதைக் காண்போம். இன்று இணையம் வழியாகக் கல்வி கற்கவும் தேர்வு எழுதவும் பட்டம் பெறவும் உதவும் வழியில் பல திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவ்விணையம் வழியாகப் பாடம்கேட்கும்போது ஆசிரியர் ஒருவர் நின்று பாடம்எடுக்கும் முறை காணப்படுகிறதே ஒழிய நாம் மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு வகுப்பைக் காண்பது இயலாத ஒன்றாகப் காணப்படுகிறது.. அதாவது அவ்விணையம் வழியாகவும் மரபுசார்ந்த கல்வி முறையே புகுத்தப்படுகிறது. ஆசிரியர் தகவலாளராகவும் மாணவர்கள் தகவல் பெறுபவர்களுமாகவே காணப்படுகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய வகுப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அரசின் உதவித்தொகையில் பல ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று அரசு கல்லூரிகளில் பள்ளிகளிலும்  நிறுவப்பட்டிருப்பினும் அது பயன்படுத்துவாரின்றியே காணப்படுகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.  இதற்குக் காரணம் முறையான பயிற்சி இல்லாமையும் ஆங்கிலப் புலமை இல்லாததுமே காரணமாகும்.

    கான்பூசியசின் கருத்துப்படி “நான் கேட்கிறேன் மறக்கிறேன், நான் பார்க்கிறேன் நம்புகிறேன், நான் செய்கிறேன் புரிந்து கொள்கிறேன்” மாணவர்கள் கண்டு, கேட்டு, உணர்ந்து கற்கும் ஒரு கல்வி முறை அவசியமாகிறது.  அத்தகைய ஒரு கல்வி முறையைக் கொடுக்க நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவிற்கு உதவிசெய்கின்றன. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்க இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை இங்குக் காண்போம்.சங்க இலக்கியப் பாடல்களை இசையோடு பாடி மாணவர்களைக் கேட்க வைக்கலாம்.

    • சங்கப்பாடல்களில் வரும் காட்சிகளை வரைந்து ஓவியங்களாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
    • இணைய நூலகம் வழியாகச் சங்க மொழியை, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் காட்சிகளை மாணவர்களை வைத்தே நடித்துக் காட்டலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் வரலாற்றுப் பதிவுகளைக் கதை போன்று கூறி மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் பயின்று வரும் அணி, உவமைகளை எடுத்துவிளக்கி தொடர்களில் பயின்றுவரும் இலக்கண அமைதிகளையும் அக்கால மொழி அமைப்பையும் எடுத்துரைத்து விளக்கலாம்.
    • சங்கப்பாடல்களில் பயின்றுவரும் மரம், செடிகொடிகள், பூ வகைகள் விலங்குகள் இவற்றைக் காட்சிப்படுத்தி கற்பிக்கலாம்.
    • சங்கப் பண்பாடுகளையும் கலைகளையும் நிகழ்த்திக்காட்டலாம்.

    இம்முறைகளைப் பயன்படுத்தினால் சங்கப்பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதோடு அப்பாடல்களின் பொருளும் காட்சிகளும் மாணவனின் மனத்தைவிட்டு நீங்காமல் என்றும் நின்று நிலைக்கும் தன்மையோடும் காணப்படும் என்பதில் ஐயமில்லை.

    தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபு நிலையில் கற்பித்தல்

    மரபு முறையாகக் கற்பித்தலில் சங்க இலக்கியப் பாடல்களைக் கூறி அதன் திணை, துறை ஆகியவற்றை விளக்கி சிறப்புக்கூறுகளான முன்னம், உள்ளுறை, இறைச்சி, அணிநயம் போன்றவற்றை எடுத்தியம்பி இலக்கியத்தின் ரசனையைப் பெருக்கலாம். 

    முன்னம்

    சங்க அகத்திணைப் பாடல்களுக்கு யார் கூற்று, யாரிடம் கூறியது என்ன காரணத்திற்காகக் கூறியது என்பனவற்றை விளக்கிக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பே முன்னம் எனப்படுகிறது. இதைத் தொல்காப்பியர்,

    இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று
    அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பதை முன்னம் (தொல் 1463)

    என்று விளக்கியுள்ளார். குறுந்தொகையில் வரும் பாடல்கள் அனைத்தும் கூற்றுகளாக வருவதால் ‘முன்னம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கற்பித்தல் மிக மிக அவசியமாகிறது.  குறுந்தொகையில் தலைவன் கூற்றாக 61 பாடல்களும் தலைவி கூற்றாக 180 பாடல்களும் தோழி கூற்றாக 141 பாடல்களும்  நற்றாய் கூற்றாக 9 பாடல்களும் பரத்தை கூற்றாக 5 பாடல்களும் பிறர் கூற்றாக 5 பாடல்களும் அமைந்துள்ளன. முன்னம் பற்றிய அடிக்குறிப்புகள் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் எழுதி இருக்கலாம். பாடலைப் படிக்கும்போது யார் யாரிடம் கூறியது என்ற முன்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    எ.கா:

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
    கழல் தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. ( குறு.1)

    போர்களத்தில் இரத்த வெள்ளம் பெருக அவுணர்களைக் கொன்றழித்த, குருதிதோய்ந்த அம்பினையும் குருதிபடிந்த கொம்புகளுடைய யானையையும் உடைய முருகன் இருக்கும் குன்றம் இரத்தம் போன்ற காந்தள் பூக்கள் நிறைய உடையது என்று கூறி தலைவனிடம் தோழி கையுறை மறுத்தது என்று துறை வகுத்தனர் சான்றோர்கள். இப்பாடலின் காட்சிகளைக் கண்களுக்குப் புலப்படும் காட்சிகளாகக் காட்டலாம்.

    இதே பாடலுக்கு நச்சினார்க்கினியர் ‘இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’  என்ற துறை வகுத்துள்ளார்.  அதாவது முருகனது குன்றின் மேல் குருதிபோலப் பூக்கும் காந்தள் பூக்கள் நிறைய உள்ளன.  நான் அப்பூக்ளைப் பறித்துவரச்செல்கிறேன் நீ இங்கேயே இரு” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிகிறாள்.  எனக் கூறியிருப்பதும் பொருத்தமே ஆகும்.  இவ்வாறு ஒவ்வொரு பாடலையும் வேறுபட்ட முன்னத்தின் அடிப்படையில் கற்பித்தால் பாடலின் நயம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பல உரையாசிரியர்களின் உரைகளைக் கொண்டு ஒரேஇடத்தில் இவ்வுரைகளைக் கண்டும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.

    உள்ளுறை

    உள்ளுறை என்பது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறுத்துக் கூறும் உவமையாகும்.  அதாவது புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாக வைத்து வெளிப்படையாக உவமையை மட்டும் கூறுதலாகும். குறுந்தொகையில் பல பாடல்களில் இதுபோன்ற உள்ளுறை உவமம் வந்துள்ளமையைக் காணலாம்.

    வேரல் வேலி வேர்கோட் பலவின்
    சாரனாட செவ்வியை யாகுமதி
    யாரஃ தறிந்திசி னோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. ( குறு.18)

    சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல இத்தலைவியின் உயிர் மிகச் சிறுமையை உடையது காமநோய் மிகப் பெரியது. அதனை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை. இவள் உயிர்விடுதல் நேரவும் பெறும் அல்லாமல் பிறர் வரைந்தும் கொள்வர் என்ற உள்கருத்தை மிகத் சாதுரியமாகச் சொல்லிச் செல்கிறார் புலவர்.  இதேபோன்ற குறுந்தொகைப் பாடல் ஒவ்வொன்றிலும் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கும் உவமைகளுக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து கற்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இறைச்சி

    இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய ஆடு, மாடு, மான், மயில் முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பதாகும்.

    எ.டு:

    நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்க வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின் தோழி அவர் சென்ற ஆறே. (குறு: 37)

    தலைவன் சென்ற வழியானது யானை தன் பிடியின் பசியை நீக்குவதற்காக யாமரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தும் காட்சிகளை உடையது.  என்று கூறுவதன் மூலம் தலைவன் அந்தக் காட்சிகளைக் கண்டு தலைவியின் நினைவு ஏற்பட்டு விரைவாக வந்து சேர்வான் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இப்பாடலில் வரும் யாஅ மரத்தின் தன்மைகளை விளக்கியும் அதன் சிறப்புக்களைத் தொழில்நுட்பம் வாயிலாக எடுத்துரைத்தும் இப்பாடலைக் கற்பிக்கலாம்.

    இன்று வளர்ச்சி அடைந்துள்ள பல துறைகளின் அடிப்படையிலும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.  இலக்கியக் கல்வியின் நோக்கம் மாறுபடுவதற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைத்தரம் சமூக உறவுநிலை பொருளாதாரம் நாடுகள் பற்றிய செய்திகள் போன்ற சமூகவியல் செய்திகளும் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    எ.டு:

    கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
    பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
    ஈங்கிவ ணுறைதலும் உய்குவமாங்கே. ( குறு: 11)

    என்ற பாடலில் வடுகர் பற்றிய செய்திகளும் கட்டி என்ற மன்னன் பற்றியும் மொழிதெரியாத நாட்டின் குறிப்புக்களும் பொருள்தேடி வேற்று நாட்டிற்குச் செல்லும் குறிப்பும் உள்ளன.  மேலும் இப்பாடலில் முல்லைநில மக்களின் சமூக வரலாற்றுச் செய்திகளும் பதிவாகியுள்ளன.  நிலவியல் அமைப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கலாம்.

    உளவியல்

    இலக்கியங்களை உளவியல் அடிப்படையில் அணுகி பல முடிவுகளைக் கண்டறிந்து கூறுவது புதிய ஆய்வு முறையாகும். குறுந்தொகையில் மனித உணர்வுகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பல பாடல்கள் உள்ளன.  நீண்ட நாள் பிரிவு கழிந்து தலைவன் வந்துவிட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அந்த இன்ப அதிர்ச்சியை ஒரு தலைவி எப்படி வெளியிடுகிறாள் என்பதை மிக அருமையாக இப்பாடல் காட்டுகிறது.

    நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ?
    ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
    வெண்கோட் டியானை சோணை படியும்
    பொன்மலி பாடலி பெறீஇயர்
    யார் வாய் கேட்டனை காதலர் வரவே.  (குறு: 75)

     நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் கூறக் கேட்டாயா? யாராயிருந்தாலும் அவர்களுக்கும் பாடலிபுரத்தைப் பரிசாக அளிப்பேன் என் காதலர் வரவை யார் கூறினார்கள் என்று ஒரு பெண் ஆர்வமாகக் கேட்கும் வடிவில் அமைந்துள்ளதைக் காணலாம்.  தலைவியின் மன நிலையைக் காட்சிகளாக எடுத்துரைக்கலாம்.

    தொழில் நுட்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தி விளக்குவதால் சங்க இலக்கியத்தைக் கற்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வுபெறும். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதில் கற்கலாம். சங்கத்தமிழின் மொழி நடையையும் எளிதில் புரிந்துகொள்ள இவை வழிசெய்யும். பழமையான இலக்கியங்களைக் கற்பிப்பதற்குத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதன் சாத்தியங்கள் விரிவடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    பயன்பட்ட நூல்கள்

    1. உ.வே.சா- குறுந்தொகை, உவேசா நூல் நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன். நா – சங்ககால வாழ்வியல், நீயூ சென்சுரி புக் , சென்னை.
    3. ராமசாமி. அ – தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -12

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவானவண்டூர் – அருள்மிகு கோசாலப்பன் பெருமாள்

    madhava-Perumal1o

    வாழ்க்கைப் போரின் வசந்தங்கள் முடிய

    வந்தனர் பாண்டவர் வனங்களைத் தேடி

    வேதவன் கண்ணன் காட்டிய வழியில்

    விடுதலை பெற்றிட வாழ்வை வென்றிட !

     

    கோவினம் காத்த கோவிந்தன் நினைவில்

    கோவிலைக் கட்டினான் பம்பையின் கரையில்

    கோமகன் நகுலனும் கோசாலக் கண்ணனனை

    கோவிலில் வைத்துக் குறைகள் சொல்லிட !

     

    பம்பையின் கரையில் பாம்பணை அப்பனாய்

    பண்டரிபுரத்திலே பாசத்தில் புண்டரி காட்சனாய்

    பாதங்கள் போற்றிட கயையிலே விஷ்ணுவாய்

    பாலங்கள் அமைத்தாய்  பக்தர்கள் நெஞ்சுடன் !

     

    கண்களில் நிறைந்ததோ கருணையின் கடலே

    சொற்கள் படைத்ததோ அமுதெனும் கீதை

    கைகளில் அபயம்  காலங்கள் காத்திடும்

    கண்ணனின் நெஞ்சமோ காதலின் சுரங்கம் !

     

    வெம்பிய நெஞ்சங்களின் வேதனை களைந்திட

    நம்பிய உள்ளங்கள் நலமுடன் வாழ்ந்திட

    மங்கிய பாதைகளில் மங்களம் பெருகிட

    மறவாமல் வணங்குவோம் மாதவன் மலரடி !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 41

    க. பாலசுப்பிரமணியன்

    நானும் அவனும் ஒன்றா அல்லது வேறா?

    திருமூலர்-1-1

    நம் உள்ளத்துக்குள் இறைவனைத் தேடி அமர்த்துவதோ அல்லது உள்ளததுக்குள்ளேயே ஒளிந்திருக்கும் அவனைக் கண்டுபிடித்து வசப்படுத்தி அவனை ஆராதிப்பதோ மிகவும் கடினமான செயலாகத் தோன்றுகின்றது. அவன் உள்ளத்துக்குள்தான் இருக்கின்றானா  என்ற சந்தேகம் பலமுறை நமக்கு ஏற்படுகின்றது. ஆனால் பூசலாருக்கோ அந்தச் சந்தேகம் துளிகூட ஏற்படவில்லை. அதனால் தான் தன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கின்ற இறைவனுக்கு அங்கேயே கோவில்கட்டி மகிழ்ந்தார். அதனால்தான் இறைவன் அவருடைய உள்ளத்துக்கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தான். ஆனால் நம்மில் பலருக்கும் இறைவன் நம்கூட இருப்பானா வருவானா என்ற பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

    ஒருமுறை இறைவன் தன்னுடைய ஒரு பக்தனுக்கு அவனுடைய பக்தியைப் பாராட்டும் வகையில் எவ்வாறு தான் பக்தனின் கூடவே இருக்கின்றேன் என்பதை காட்சியாகக் காட்டினார். அந்தப் பக்தனுக்கு  மட்டற்ற மகிழ்ச்சி. அவன் பிறப்பிலிருந்து அவன் கூடவே அவர் நடந்து வந்ததற்கு அடையாளமாக இவனுடைய பாதச்சுவடுகளுக்கு  இணையாக இறைவனின் பாதச்சுவடுகளும் தென்பட்டன. ஆனால் ஒரு கட்டத்தில் ஒரே ஒருவருடைய பாதச்சுவடுகள் மட்டும் தென்பட்டபோது அந்த பக்தனுக்கு அதுதான்  அதிகமான துயரில் இருந்த காலம் என்று  தெளிவாகின்றது.

    “ஆஹா! நமக்கு அதிகத் துயர் இருந்த நேரத்தில் இறைவன் நம்மைத் தனியாகத் தவிக்க விட்டுச்சென்றுவிட்டானே” என்ற எண்ணம் ஏற்பட்டு இறைவனிடம் சென்று கேட்கின்றான் “நீங்கள் இவ்வாறு என்னைத் துயருள்ள காலத்தில் தனியாகத் தவிக்க விட்டுச் செல்லலாமா”?

    இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் இறைவன் சிரித்துக்கொண்டே சொல்லுகின்றான் “மகனே, அங்கு நீ பார்க்கும் பாதச்சுவடுகள் என்னுடையதே. அந்தத் துயர் இருந்த நேரத்தில் உன்னால் நடக்க முடியாமல் இருந்ததால் உன்னை நான் என் தோள்களில் சுமந்து கொண்டு சென்றேன். ஆகவே, அந்தப் பாதச்சுவடுகள் என்னுடையவை.”

    உண்மை நிலை இதுவே. நாம் நம்மையும் இறைவனையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கின்றோம். நம்முள் ஒருவனாய் அவன் மறைந்து இருக்கின்ற அந்த இறைவனைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் அவன் நமக்குத் துணையாக இருப்பதை உணருதல் அவசியம். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்:

     நானென்றுந் தானென்றும் நாட்டின் நாடலும்

    தானென்றுத தானென் றிரெண்டில்லை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்ற நானும் நினைப்பொழிந் தேனே.

    நான் வேறு இறைவன் வேறு என்ற பிரித்துணர்கின்ற கருத்தை ஒதுக்கித் தன்னுள்ளேயே இறைவனின் அருளாட்சியைக் காண்பதற்குத் துடித்த அடியார்கள் பலர்.  இந்த நிலையைப் பெறமுடியாமல் தங்கள் இயலாமையை நினைத்து வருந்தி அவர்கள் வேதனைப்பட்ட காலங்களும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.  இந்த நிலையில் வாடும் பத்திரகிரியாரோ தன் மனக்குறையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் தெரியுமா ?

    என்னை யறிந்துகொண்டே னெங்கோமா னோடிருக்கும்

    தன்மை யறிந்து சமைந்திருப்ப தெக்காலம் ?

    தன்னுள் இறைவனைக் காணாமல் தனித்துப் பார்க்கும் மாந்தர்களுக்கு அறிவு புகட்டும் வண்ணம் திருமூலர் கூறுகின்றார்

    தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவந்

    தான் என்று அவன் என்று இரண்டற்ற தன்மையைத்

    தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்

    தான் இன்றித் தான் ஆகாத தத்துவ சுத்தமே

    தன்னில் தன்னையும் தன்னுள் தலைவனாகிய இறைவனையும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அப்பர் பெருமானும் தன்னுடைய பாடலில் எடுத்து விளக்குகின்றார்.

    தன்னில் தன்னை யறியுந் தலைமகன்

    தன்னில் தன்னை அரியத் தலைப்படும்

    தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடின்

    தன்னில் தன்னையுஞ் சார்தற் கரியனே

    இதே போன்று இறைவனை நாடாது வெறும் காம உணர்வுகளுக்கு இரையாகி தன்னுடைய உண்மை நிலையை அறியாமலும் தன்னுடைய முயற்சியை முழுவீச்சாக மேற்கொள்ளாமலும் மாயையில் சிக்கித் தவிக்கின்ற மனத்தைப் பார்த்து பட்டினத்தாரும் கோபத்தில் ‘அது பித்து பிடித்த மனது” என்று சொல்கின்றார்

    நாடிக்கொண் டீசரை நாட்டமுற் ற்றாயிலை நாதாடி

    தேடிக்கொண் டாடித் தெளிந்தா யிலைசெக மாயைவந்து

    மூடிகொண் டோமென்றுங் காமாயு தங்கண் முனிந்தவென்னும்

    பீடிப்பை யோநெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தர்களே.

    தன்னுள் அவனைக் காணவும் அறியவும் செய்கின்ற முயற்சியே தன்னை அறியும் முயற்சியோ ?

    (தொடருவோம்)

    Share
  • தேயிலைத் தோட்டத்தைத் தேடி…..

     

    புல்லின் மீது பனித்துளி தூங்க
    புள்ளினம் எல்லாம் கீதம் இசைக்க
    கல்மலை யிடையே கதிரவன் உதிக்க
    துள்ளித் திரிய மந்திகள் விரைந்தன!

    தோட்டத் தொழிலுக்கு செல்வோர் எல்லாம்
    வீட்டில் பொழுது புலருமுன் எழுந்து
    தாட்டைக் கட்டி ஆயத்தம் ஆகி
    ஓட்டமும் நடையாய்ப் பணியிடம் சேர்ந்தனர்!

    ஓங்கி யுயர்ந்த மலையிடை எல்லாம்
    எங்கும் நிறைந்த தேயிலைத் தோட்டம்!
    தங்கிய பனித்துளி இலைகளை நனைக்க
    சங்கு ஒலித்தது பணிகளைத் துவங்க!

    கிளைகள் படர்ந்து வளர்ந்த செடியில்
    வளைக்கரம் கொண்ட மகளிர் எல்லாம்
    இலைகளைப் பறித்து தாட்டில் நிறைக்க
    சிலைபோல் நின்று துரையும் பார்ப்பான்!

    செடியில் பறித்த கொழுந்து எல்லாம்
    மடியில் கட்டிய தாட்டில் நிறைய
    நெடிய சாலுக்கிடையே சுமந்துச் சென்று
    எடையைப் பார்க்க சாக்கில் தினிப்பர்!

    சாக்கில் நிறைத்த கொழுந்தை எல்லாம்
    சரியாக நிறுத்தி எடையைப் பார்த்து
    சாலையில் நிற்கும் வண்டியில் ஏற்றி
    ஆலைக் கனுப்பி பக்குவம் செய்வர்!!!
    -ஆ. செந்தில் குமார்

    குறிப்பு :-

    தாட்டு – பறித்த தேயிலைக் கொழுந்தை நிரப்புவதற்காக அணிந்து கொள்ளும் சாக்கினால் தைக்கப்பட்ட உடை

    சாக்கு – கோணிப்பை

    துரை – மேளாளர், ஆங்கிலேயர் காலத்தில் துரை , ஐயா என்று சொல்லப்பட்ட பழக்கம் இன்றும் சில இடங்களில் தொடரப்படுகிறது.

    சங்கு – இராட்டையில் ( தேயிலை ஆலை ) நேரத்திற்கு ஒலிக்கப்படும் Hooter சப்தம்.

    சால் – தேயிலைச் செடி வரிசையாக நடப்பட்ட ஒழுங்குமுறை.

    Share
  • மனத்திற்கிட்ட கட்டளை..?

     

    பெருவை பார்த்தசாரதி

    ====================

     

     

    மனத்திற்கிட்ட கட்டளைகள் மலைபோல் குவிந்தாலும்..

    ……….மனமதையேற்று மகிழ்வுடன் செய்வததன் கடமையாம்.!

    மனவலிமை பெற்றிட வேண்டுமென்றால் அடங்காத..

    ……….மனப்பேயையொரு கட்டுக்குள் வைக்க வேண்டுமாம்.!

    மனமொரு சேவகனெனில் மூளையதன் அரசனாகும்..

    ……….மனம்மூளை இரண்டும் ஒன்றுவதே இயற்கைவிதியாம்.!

    மனப்புரவி அடக்குதற்கு மனக்கடிவாளம் அவசியம்..

    ……….மனம்போன போக்கில் மனிதன் ஓடாவழியெதுவாம்.?

     

    வனவாசம் செய்தாலும் மனம்நோகும் செயலைத்தன்..

    ……….வசமாகாது திண்ணம் கொண்டவர்களே பாண்டவர்கள்.!

    தனக்கெதிரே தன்மனைவி பாஞ்சாலியாடை யுரித்ததும்..

    ……….தமக்கிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மாண்புகாத்தார்.!

    தனஞ்செயனின் மனதில் பெருங்குழப்பம் இருந்தபோதும்..

    ……….தமக்கெதிர் வந்தவரை வில்லால் தகர்த்ததுமெதனால்.!

    தனக்குநிகர் தானேயென ஆனவர்கள் அனைவருமே..

    ……….தன்மனத்திற்கிட்ட கட்டளையைத் தவறாமல் செய்தவரே.!

     

    மந்தையாடுகள் குவிந்ததைப் போலெங்கும் போரிலே..

    ……….மாவீரர்கள் அம்படிபட்டுக் கிடந்தபாரதப் போர்க்களம்.!

    சிந்தையிலே சிகரமாக கொடைக்குணம் கொண்டவனும்..

    ……….சீறிப்பாய்ந்த கூரம்பால் சிறகொடிந்த பறவையானான்.!

    அந்தப்போதிலும் அந்தணனாக வந்து தானம்கேட்ட..

    ……….இந்திரனுக்குத் தானமீயாதே? தந்தையும் எச்சரித்தான்.!

    தந்தைதன் மனத்திற்கிட்ட கட்டளையேற்க மறுத்தகர்ணன்..

    ……….தர்மத்தையே குருதியில் தாரைவார்த்துக் கொடுத்தான்.!

     

    பல்வேறருஞ் செயலுக்கும் சாதனைக்கும் புகழுக்கும்..

    ……….பலமான மூளையும் மனதுமே மூலக்காரணமாகும்.!

    வில்லம்பு தொடுக்கும் வேடன்கண் வேற்றுநோக்கின்..

    ……….வைத்தகுறியும் தப்பிவிடும்!..வனவிலங்கும் நழுவிவிடும்.!

    சொல்லடுக்கும் கவிஞனின் சிந்தனைகள் சிதறினாலும்..

    ……….சொற்களங்கே உருவாகாது?சொல்லவந்ததும் புரியாது.?

    மெல்லநம் மனத்திற்கிட்ட நற்கட்டளை யாவையுமறுப்பு

    ……….மில்லாச் செய்யின்?..செயல்களனைத்தும் சாதனையாம்.!

     

    ======================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

    தன்வந்திரி பீடத்தில்

    சிவலிங்க ரூபமாக உள்ள

    468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும்

    ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.

    ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :

    சிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில் ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.

    ஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும் வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது. வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே மேலானது ருத்ரஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ (நமசிவாய).

    நமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து மேலானது. மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்து தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும் இருக்கிறது.

    ருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள் என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ர ஹோமம் நடைபெற்று 468 சித்தர்களுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர்கள் அருள்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171226 - Tiruppavai 11 -wm - watercolour  (kattrukkaravaiganangaL pala karandu..the guru gathers knowledge from various sources and the essence is taught to the disciple)
    171226 – Tiruppavai 11 -wm – watercolour
    (kattrukkaravaiganangaL pala karandu..the guru gathers knowledge from various sources and the essence is taught to the disciple)

    ’’எங்கேனும் போகணும் ! ஏதேனும் செய்யணும் !
    திங்கா ததைத்தின்று, தீர்த்தத்தில் -முங்கணும்!,
    சங்கூதும் வாயனை ஸேவித்து ஸ்ரீவில்லி,
    இங்கிழுப்பாள் காதல் இசைத்து(திருப்பாவை)’’….கிரேசி மோகன்….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -11

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கள்வனூர் – அருள்மிகு ஆதிவராகப் பெருமாள்

    1_zQxYKJoG2QvBGV0U4XNLIg

    கள்வனாய்ப் பிறந்தாய் கம்சனே சிறையிட

    கள்வனாய்ச் சென்றாய் காரிருள் நேரத்தில்

    கள்வனாய் வளர்ந்தாய் கோபனின் வீட்டினில்

    கள்வனே! கண்ணனே! கருணையின் மன்னனே !

     

    கோபியர் வீடுகளில் வெண்ணையைத் திருடி

    கோபியர் நெஞ்சங்களைக் குழலினால் திருடி

    கோதையின் உள்ளத்தை அரங்கத்தில் திருடி

    கோலங்கள் ஆயிரம் கொண்டாய் கள்வனே !

     

    மண்ணுண்ட வாயினிலே மாயைகள் காட்டினாய்

    மழலைப் பொழுதிலே மாமனை அழித்தாய்

    மதுராவில் ஆயிரம் கண்ணனாய் ஆடினாய்

    மாலனே! மாயனே ! மனங்கவர் கள்வனே !

     

    அட்டமியில் பிறந்தாலும் அகிலமெல்லாம் காப்பவனே

    நவமியில் பிறந்தாலும் நிறைநிலவாய் வந்தவனே

    அடியார்கள் உள்ளத்திலே அனுதினமும் பிறப்பவனே

    அழிவில்லா உனக்கெதற்கு பிறப்பெடுக்கும் கள்ளத்தனம்?

     

    மறைந்திருந்து பார்ப்பவனே மறைந்திருந்து காப்பவனே

    மறைவழியில் வாழ்ந்திடவே மறைசொன்ன சாரதியே !

    மலைதன்னில் நின்றாலும் மடையெனவே அருள்பெருக்கி

    மனமெல்லாம் நிறைந்தவனே மங்கலமே வளர்த்திடுவாய் !

    Share