கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

watercolour #KrishnaforToday
(Pullin vay keendanai —Kulirakkudainthu neeradu)
”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி(சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!
’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
மேனியர் லீலையை முன்னமே உண்டவராம்:
தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!
(OR)
”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ் -கோதைபோல் கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு)….!