Blog

  • எதைக் கொடுத்து, எதை வாங்க

     

       ரா.பார்த்தசாரதி

     

     

    நாடகமே   உலகம் என்று கவிஞன் சொல்வதுண்டு

    நாமெல்லாம் அதிலே நடிக்கும் பொம்மைகளாய் இருப்பதுண்டு

    இன்று  வியாபாரிகள்  கையில் பொம்மையாக  சுழல்வதுண்டு

    இன்று எதுவுமே  சும்மா கிடைப்பதில்லை !

     

    இலவசம் என்றாலே மக்களுக்கு  பரவசம்

    ஏமாறாமல்  இருப்பதே  நம்  வசம்

    எதை வாங்க, எதை விலையாய் கொடுக்கின்றாய்

    இலவசப் பொருளின்  விலையும் இதில் அடங்குமே

     

    வேலியே பயிரை மேய்வது  தெரிகின்றது

    அரசும் வரிகளால் மக்களை பிழிகின்றது

    பாதிக்கப் படுவதோ நடுத்தர வர்க்கமானதே

    மக்கள் அவதியுறுவது வரிச்சுமை என தெரிந்ததே!

     

    மகிழ்ச்சியை  தொலைத்து சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம்

    ஆடம்பரத்தில் வீழ்ந்து  மடிகின்றது   ஒரு கூட்டம்

    ஆடையையும், ஆபரணத்தையும் குவிக்கின்றது ஒரு கூட்டம்

    பொன்னிலும்,மண்ணிலும் பற்று கொண்டு அலையுது ஒரு கூட்டம் !

     

    தொலைக்காட்சியில், வியாபார முறையில்  ஆயிரம் விளம்பரம்,

    வேண்டாததை, வாங்கி குவிக்கும் இளைய தலைமுறை கூட்டம்,

    அன்பை ஆராதிக்கவும்,  வளர்க்கவும் இவர்களுக்கு தெரியவில்லை

    பாசம், மனித நேயம்,  இவைகளை பொருட்படுத்தவில்லை !

     

    உண்மையான பாசத்தையும், நேசத்தையும் அடைய பார்

    அதற்காக  அன்பையும், நல்லதையும்  செய்து பார்

    மனமகிழ்ச்சியும், நிம்மதியுமே  உன் வரவு

    உன் மேன்மையையும்,  புகழினையும் வளப்படுத்தும் உறவு !

     

     

    Share
  • பேரெழில் தீயடி

     

    – ராஜகவி ராகில் –

     

    நீர்க் குமிழியுடையாமல் அதனுள்ளே உனை

    அழைத்துச் செல்வேன் பார்

    பேரெழில் சிதையாமல் எனக்குள்ளே உனை

    இழுத்துண்பேன் பார்

    தேர்க் குடையாய்க் கார்மேகம் வரச் சொல்லி

    உன் கைதான் பிடித்து நடப்பேன் நானடி – செல்லம்மா

    தேநீர்க் குவளைக்குள் பேரெழில் தனை இறக்கி

    உன் கண்ணால் குடித்துக் கிடப்பேன் நானடி

     

     

    Share
  • தூரத்தில் கேட்குது..!

    பெருவை பார்த்தசாரதி

     

    hearing sound

     

     

     

     

     

     

     

     

     

     

    மண்ணில் உதித்த மாமணியேயென் ரத்தினமே..

    …..மணமுடித்த கையுடனே நீயுந்தான் வந்துபிறந்தாய்.!

    கண்ணில் உருளும் கண்மணியாயுனை காத்தாலும்..

    …..காலதேவன் அழைப்பால் நீள்வாழ்வு கிட்டவில்லை.!

    மின்னிடுமுன் முகத்தைத்தான் சட்டென மறப்பேனா..

    …..மனதைப் பின்னிடுமுன் நினைவலைகள் நீங்கிடுமா.!

    புண்ணிய உலகுக்கு பிறந்தவுடனே சென்றுவிட்டாய்..

    …..புரண்டழுமென் பேய்ச்சத்தம்…தூரத்தில் கேட்குதா.?

     

    பட்டால்தான் துயரமென்பது தெரியுமென்பார் நான்…

    …..பட்டகடன் எத்துணையோயுனை மகவாய்ப் பெறுதற்கே.!

    சுட்டால் வரும்தழும்பு வாழ்நாளிலழியா தென்பாருனை

    …..சுருட்டிக் கொண்டுசென்ற யமனுக்கே இதுதர்மமா.?

    கட்டழகு குலையாத கண்ணே நீயென் கண்ணைவிட்டு

    …..காததூரம் போய்விட்டாய் காலனுனை அழைத்ததால்.!

    மொட்டவிழ்ந்து மலராகுமுன் யமனுனுலகுக்குச் சென்றாலும்

    …..எட்டாத தூரத்தில்கூட கேட்குமென் அலறல்சத்தம்.!

     

    எரிகின்ற எரிதழலில் வேகின்றயுன் மென்னுடல்

    …..எந்தன் வயிற்றையும் சேர்த்தெரிப்பதை யாரரிவார்..!

    கரியாக நீமாறும் காட்சியைக் காணுமுன்னென்

    …..கண்ணையும் பிடுங்கியுன் கையாலே எறிந்துவிடு.!

    புரியாத மொழிபோலயான் புலம்புமதைக் கேட்டுப்

    …..புரிந்து கொள்வோர்..! வானுலகில் இருக்கிறாரா.?

    தெறிக்கு மொலிமீண்டும் எதிரொலியாய் கேட்பதுபோல்

    …..புத்திரசோக கடுந்துக்கம் நெடுந்தூரத்தில் கேட்குதா..?

     

    எப்போதும் இன்பமொன்றையே நாடுவர் மனிதர்கள்

    …..என்றாலும் துன்பமொன்று வரும்போது தாங்கிடாரதை.!

    தப்பேதும் செய்யாத தாய்க்கொரு தண்டணையாய்

    …..தன்மகவை ஈன்றவுடன் பறிகொடுத்த நிலைகொடுமை.!

    இப்படி ஆகுமென மனிதராரும் நினையாரில்லை

    …..இதைப்போலத் துன்பமாருக்கும் வாராது அருள்வாயா.!

    எப்படித் தாங்குமென்பலகீன இதயமிந்தப் பேரிடியை..

    …..இனிவாழ்ந் தென்னபயன்.! என்னுயிரையும் எடுத்துவிடு.!

    இறைவா..!

     

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::24-07-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்..

    Share
  • ”ஹாஸிய கீதம்’’….!

     

    கிரேசி மோகன்
    —————————————–

    ‘’மரணத்தின், ஜனனத்தின் மாயையில் தேவா -ஆன்
    மனை மறந்தாய் ஜீவா
    அய்யய்யோ, அய்யய்யோ, அய்யய்யோ
    அய்யய்யய்ய அய்ய அய்யய்யோ….!

    அஞ்சுபுலன்களின் ஆசையினாலே
    பஞ்செனப் பறந்தது பிராணன்
    வந்த சுகங்களில் வாழ்ந்ததனாலே
    வீரன் ஆன்மனை இழந்தாய்….

    அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
    அய்யா அம்மா அம்மம்மா(அடியேன் எழுதி காத்தாடியால் பிரபலமான நாடகம்)….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 120-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    kiddrawingkolam

    புள்ளிகளால் பாலங்கட்டி எழிற்கோலந் தீட்டும் சிறுமியைப் புகைப்படம் எடுத்துவந்துள்ளார் திருமிகு. ஷாமினி. படக்கவிதைப் போட்டிக்கு உகந்த படமிது  என்று இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    சிறுவயதிலேயே பயின்று தேரவேண்டிய அற்புதக் கலை கோலக் கலை! விரல்களுக்கு நல்ல பயிற்சியாகவும், கற்பனைக்கு உரமூட்டும் வாய்ப்பாகவும் அமையக்கூடியது இக்கலை எனில் மிகையில்லை. மனமொன்றிக் கோலம் தீட்டுவதுகூட ஒருவகை தியானந்தான்!

    வண்ணக்கோலங்களை மிஞ்சும் வகையில் நம் கவிஞர்கள் தீட்டியுள்ள வார்த்தைக் கோலங்களை சுவைத்தின்புறும் தருணமிது! வாருங்கள்!

    *****

    ”பாவையர் இடுவது இழைக்கோலம்; பாவியர் இடுவது பிழைக்கோலம்; வீரன்கொள்வான் போர்க்கோலம்; அவன் வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்” என்று வரிசையாய்க் கோலங்களின் வகைகளைப் பட்டியலிட்டு நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றார் திருமிகு. சாய்ரேணு.

    கோலம்

    வாசலில் இடுவது மாக்கோலம்
    வார்த்தையில் இடுவது பாக்கோலம்
    பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்
    பாரிது கொண்டது களிக்கோலம்

    பாவையர் இடுவது இழைக்கோலம்
    பாவியர் இடுவது பிழைக்கோலம்
    வானகம் கொண்டது மழைக்கோலம்
    கானகம் பெற்றது தழைக்கோலம்

    மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவை
    மேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்
    வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்
    வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்

    தீயவர் இடுவது அவக்கோலம் – உளத்
    தூயவர் கொள்வது தவக்கோலம்
    மேதையர் இடுவது மதிக்கோலம் – எங்கள்
    மாயவன் இடுவது விதிக்கோலம்

    பாவலர் எழுதுவர் கவிக்கோலம் – நம்
    பரமன் செயலோ புவிக்கோலம்
    பக்தியில் வருவது இசைக்கோலம் – நல்ல
    பகலவன் தந்தது திசைக்கோலம்

    அருமையாய் செழிக்கும் பயிர்க்கோலம் – வா!
    அன்பிலே தழைக்கட்டும் உயிர்க்கோலம்
    வழுவிலாதெழுதுங்கள் அகக்கோலம் – பின்
    வாழ்வினில் எல்லாம் சுகக்கோலம்!

    *****

    திரு. பழ. செல்வமாணிக்கத்தின் கவிதையும் கோலங்களின் வகைகளையும் அவற்றின் பயன்களையும் பரக்கப் பேசுகின்றது.

    எண்ணக் கோலங்கள்:

    புள்ளி வைத்து கோலம் போடும் சின்னப் பெண்ணே !
    உன் போல்,கோலமும் அழகு, செல்லப் பெண்ணே !
    அன்புக் கோலம் உறவை வளர்க்கும் ஆசைப் பெண்ணே!
    கல்விக் கோலம் அறிவை வளர்க்கும் சமத்துப் பெண்ணே!
    கருணைக் கோலம், மனிதம் வளர்க்கும் வண்ணப் பெண்ணே !
    புன்னகைக் கோலம், அழகை வளர்க்கும் சிட்டுப் பெண்ணே!
    அமைதிக் கோலம், அகிலம் காக்கும் அருமைப் பெண்ணே!
    ஒற்றுமைக் கோலம், உலகை உயர்த்தும் சுந்தரப் பெண்ணே!
    உழைப்பு கோலம், வெற்றியைக் கொடுக்கும் புதுமைப் பெண்ணே !
    முயற்சிக் கோலம், நினைத்ததைக் கொடுக்கும் இனிமைப் பெண்ணே!
    அகந்தைக் கோலம், நம்மை அழிக்கும், உணர்வாய் பெண்ணே!
    சாதிக் கோலம், சாவைக் கொடுக்கும், அறிவாய் பெண்ணே!
    போதைக் கோலம் நாட்டை அழிக்கும், தெளிவாய் பெண்ணே !
    போரின் கோலம், உலகை அழிக்கும், புரிவாய் பெண்ணே!
    வண்ணக் கோலம் போட விழையும் தங்கப் பெண்ணே!
    எண்ணக் கோலம் போட்டால், நன்மை பயக்கும் பெண்ணே!

    *****

    ”துள்ளிச்செல்லும் பள்ளிச்சிறுமி இட்ட இந்த சிங்காரக்கோலம் காண்போர் உள்ளம் கொண்டது; பரிசை வென்றது” என்று குதூகலிக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    கோலமிடும் பாவாய்!

    சின்னச் சின்ன கோலம்!
    சிங்காரக் கோலம்!
    வெள்ளை மாவில் அணியாய்ப்
    புள்ளிகள் போட்டு
    பள்ளிச் சிறுமி
    துள்ளிப் பாடி
    வரைந்த கோலம்!
    அம்மா எழுவதற்கு முன்பு
    முற்றம் பெருக்கி
    பளிச்செனப் போட்ட கோலம்!
    அம்மா கோலம்
    சும்மா தோற்றுப் போகும்!
    அக்கா போட்ட கோலம்
    தப்பா போச்சுடி பார்!
    தங்கிச் சிரிக்குது
    தங்கை போட்ட கோலம்
    மங்க வில்லை மாலை!
    இறுதியில்
    தெருப் போட்டிப் பரிசு
    சின்னக் கோல மிட்ட
    சிறுமிக்கே!

    *****

    ”விண்ணில் புள்ளிவைத்த வானம் கோலமிடத்தெரியாமல் விழித்திருக்க, மண்ணில் தோன்றிய மங்கையர் எழிலார் கோலங்களால் வீதியை வனப்பாக்குகின்றனர்” என்று வனிதையரைப் புகழ்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.  

    அங்கும் இங்கும்…

    விண்ணில்-
    வீதியெல்லாம் புள்ளிவைத்துவிட்டு,
    விரிவானக் கோலமிடத்
    தெரியாமல்,
    விழிக்கிறது வானம்..

    மண்ணில்-
    எண்ணம்போல் புள்ளிவைத்து,
    எழிலோடு
    எழிலாகக் கோலமிட்டு,
    வீதியை வனப்பாக்கும்
    எங்கள் செல்வங்கள்…!

    *****

    ”வீதியில் போடும் கோலங்களில் பெண்ணின் கைத்திறமை மிளிர்கின்றது; வாழ்வில் அவள் போடும் கோலங்களில் மானுட வாழ்வே ஒளிர்கின்றது! ஆதலால் பெண் குழந்தை பெறுவதே பெருமை” என்று பெண்ணின் பெருமை பேசுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பெண்குழந்தை பெறுவதே பெருமை..!

    விழிப்புறுவாள் அதிகாலை மார்கழி நன்னாளில்..
    …….விடியுமுன்னே வீடனைத்தையும் சுத்தம் செய்வாள்.!
    விழிமூடா நிலையினிலே இயங்கிடுவாள் தரையினிலே
    …….விரல்நுனியில் வேகமாய் புள்ளியினை இட்டிடுவாள்.!
    மொழிகூடப் பேசு மவள்போட்ட மாக்கோலம்..
    …….விழிதிறந்து பார்க்கையில் வியப்பில்நமை ஆழ்த்தும்.!
    அழியாத கோலமாக அவளிட்ட கோலம்தான்..
    …….ஆழமாக மனதினிலே பதிந்தவள் திறம்சொல்லும்.!

    துள்ளித் துள்ளி ஓடிவரும் சின்னஞ்சிறுமியவள்
    …….துடிப்புடனே செயல்படு மாற்றல் கொண்டவள்.!
    பள்ளி செல்லுமுன் வாசலிலே கோலமிடுவாள்
    …….பள்ளிமுடிந்ததும் படிப்பினிலே நாட்டம் வரும்.!
    அள்ளியவளை அணைத்தே பெற்றோரும் மகிழ
    …….அன்றாடம் அவள் செய்யுமருமைச் செயலினாலே.!
    கிள்ளிச் செல்வாள் மனதையெலாம் தன்குறும்பாலே
    …….கவர்ந்திடுவாள் படித்திடுவாள் பள்ளியிலே முதலாக.!

    ஆண்மகவே வேண்டுமென்று விரும்புவது அன்று..
    …….ஆணுக்கு இணையாக பெண்பேசப்படும் நிலையின்று.!
    பெண் மகவொன்றை முதலாகப் பெற்று விட்டால்..
    …….பெரிதென நினைத்து பெருமைப்படும் காலமுமிதுதான்.!
    தூண்போல நின்று வாழ்வில்வரும் துயரெல்லாம்..
    …….துடைத்து குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பவளவளே.!
    நாண்போன்று நற்குடும்பமதைக் கட்டிக் காப்பாளவள்..
    …….பெண்ணென்று வெறும்பேச்சு சொல்ல அனுமதியாள்.!

    *****

    பிஞ்சுவிரல்களால் நெஞ்சைக் கவரும் கோலம் வரைந்த சிறுமியின் பெருமையை, அவள் வாழ்வில் கொள்ளும் பல்வேறு கோலங்களோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    *****

    காலம் போடும் கோலம் விசித்திரமானது. கணித்துரைக்க இயலாதது. ஆதலால் எத்தகைய கோலத்தைக் காலம் பெண்ணுக்குப் பரிசாய்த் தந்தாலும் அச்சங் கொள்ளாமல் அகந்தையில்லாமல் மரபுதனைப் பேணி தரணி வெல்வதே பெண்ணின் கடன் எனும் அரிய கருத்தை எளிமையாய்ச் சொல்லும் பாடலிது!

    அறிவுரை

    சின்ன சின்ன விரல்கள் கொண்டு
    சிறு கோல மிடும் பைங்கிளியே
    சிறிய தொரு அறிவுரையைச்
    செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

    இன்று,
    உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
    வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
    வாசல் கோலம் நிறைவு செய்து
    வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

    ஆனால்
    வாழ்க்கைக் கோலம் என்னவென்று
    வஞ்சி உனக் கெடுத் துரைக்க
    நாளை எனும் நாட்கள் கொண்ட
    வருங் காலம் காத்திருக்கு!!

    தாயாக ஒரு கோலம்,
    தாரமாக மறு கோலம்,
    வன்மம் கொண்ட கயவர் காணின்
    வீறு கொள்ளும் சினக் கோலம்…

    நெடுந் தூரப் பயணங்கள்
    உனக்காகக் காத்திருக்கத்
    தடம் புரண்டு செல்லாமல்
    தரணியதை நீயும் வெல்லு!

    வாழ்க்கை செல்லும் பாதையிலே
    பின் தொடர்ந்து போவதிலே
    வழித்தடத்தைத் தொலைக்கின்றோம்
    நம் மரபுகளை மறக்கின்றோம் !!

    சின்னச் சின்ன மகிழ்ச்சிகளைச்
    சிறைப் படுத்தி வைக்கின்றோம்
    நம்மை நாமே மறக்கின்றோம்
    மாற்ற மதில் கலக்கின்றோம்

    ஆதலால்

    ஓலம் பல வரினும்,
    ஞாலம் எது தரினும்;
    உன்னை நீயே தொலைக்காமல்
    உன் தனித்துவத்தை இழக்காமல்

    உன் காலம் உள்ள அதுமட்டும்
    உயிர்க் காற்று உள்ள அதுமட்டும்
    இன்று போல என் றென்றும்
    கோல மிட்டு மகிழ்ந்து இரு !!

    பயங்கொண்டு சுயமிழக்காது வாழ்வில் சயங் காணப் பெண்களை வலியுறுத்தும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. இராஜலட்சுமி சுப்ரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (2)

     

    “வாஸ்த்தாவான் வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
    தோஸ்த் தாவான் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
    ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பான் –
    பூவைத்து வைப்பான்செம் பொன் “….கிரேசி மோகன் …..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170724 -Yashoda- lr

    ’’முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
    கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
    அந்நஞ்சை காளியன்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து’’….!

    ”கருத்தவர், ஆனால் கதிரொளி வீசும்
    நிறத்தவர், நிர்மால்ய நீலம் -தரித்தவர்,
    வண்ணமவர்,கேசவ்தன் எண்ணமவர், ஆய்ச்சியின்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (121)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20370784_1387539944633534_1998301548_n
    20289992_1387552644632264_1584092665_nதினமுரசு புகைப்பட பத்திரிக்கையாளர் திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (232)

    செல்வன்

    இந்தவார வல்லமையாளர் விருது! – கமலஹாசன்

    இவ்வார வல்லமையாளராக கலைஞானி கமலஹாசன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாரம் அதிகம் அடிபட்ட பெயர்களில் கமலஹாசன் பெயரே முதன்மையானது என்பதில் ஐயமில்லை. அரசியலுக்கு நடிகர்கள் வருவது புதிதல்ல எனினும் கமலஹாஸம் வருவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அவரும் இதுவரை “அரசியல் எனக்கு தெரியாதத் துறை” என்றே கூறிவந்தார். ஆனால் தமிழகத்தில் ஊழல் நிலவுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக தமிழக அமைச்சர்கள் அவர் மேல் கண்டனக்கனைகளை பொழிந்தவுடன், தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியை பொதுவெளியில் இட்டு ஊழல் நிலவுவதற்கான சான்றுகளை அம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக்கோரினார்.

    இம்மாதிரி ஊழல் புகார்களை வரவேற்க வேண்டிய தமிழக அரசு அதற்கு மாற்றாக அச்சத்தினால் மின்னஞ்சல் முகவரிகளையே வலைதளத்திலிருந்து அகற்றியது சர்ச்சையை உண்டாக்கியது. இத்தகைய ஊழல் குறித்த மிகப்பெரும் விவாதத்தை பொதுமக்கள் சார்பில் எழுப்பிய காரணத்தால் கமலஹாசன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம்.

    1

    தமிழகத்தில் இன்று நிலவும் மிகப்பெரும் கொள்ளை ஊழலின் விளைவாக இயற்கை வளங்களான ஏரிகள், குளங்கள், ஆற்றுமணல் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது, இயற்கை வளங்கள் கொள்ளை ஆகியவை நிற்கப்போவது கிடையாது. ஆக இதுகுறித்த விவாதங்கள் எழுந்து ஆளும், எதிர்கட்சிகள் இரண்டும் பொதுமன்றத்தில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய சூழல் உருவாவது நல்லதே. கமலஹாசன் போன்ற அறிஞர்கள் இதை எழுப்புவது பாராட்டுக்குரியது.

    நடிகர் கமலஹாசன் பன்முகத்தன்மை கொன்ட கலைஞர். சிவாஜிக்குப்பின் தமிழகம் கண்ட சிறந்த நடிகக்கலைஞர்களில் முதன்மையானவர். இவரது படங்கள் மிக முற்போக்கான கருத்தைக்கொண்டவை. பகுத்தறிவு, மூடநம்பிக்கையைத் தொலைத்த ஆன்மிகம், சாதி,மத வாதம் கடிதல் ஆகிய முற்போக்கு கருத்துக்களை இவர் படங்களில் காணலாம். நாயகன், மகாநதி, அன்பே சிவம், குணா ஆகிய படங்கள் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றவை.

    இத்தகைய மகா கலைஞனை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • INDIA / X – Fleeting thoughts

     
    விரைந்தோடும் எண்ணங்கள்

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    சூரியனும் சந்திரனும் அன்றாடம்
    தோன்றியும் மறைந்தாலும்

    அவையிரண்டும் என்றும் ஒன்றுபோலில்லை – அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை.

    இப்புவியில் வாழ்தல் பொருட்டு
    தோன்றியவை அனைத்தும் மறைந்துவிடுகின்றன.
    எவ்வாழ்வும் நித்தியமில்லை – அனைத்தும் மாறுநிலையில் உள்ளவை.

    நான் நிற்கும் இடத்திலிருந்து
    காற்று உயர்ந்து மேகச் சில்லொன்றை
    விரட்டியடிக்கிறது.
    தற்போது நெருங்கி நெருங்கி வருமோர்
    பிரார்த்தனை மணியோசையைக் கேட்கிறேன்.

    தற்பெருமையையும் வெறுமையையும்
    அவ்வளி திரும்பப் பெற்ற தருணமதில்
    புதிய புல்லின் நறுமணம் மறைகிறது.

    Share
  • வாழ்த்துக் கூறுவோம் !

     

         (  எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்

    கால மதை மாற்றுவோம்

    கன்னித் தமிழில் பாட்டுப்பாடி

    கலகலப்பை ஊட்டு வோம்

    அம்மா பாலில் எமக்குதந்த

    அன்னைத் தமிழைப் பாடுவோம்

    அன்னியத்தை அணைத்து நிற்கும்

    அவலம் அதைப் போக்குவோம் !

     

    கேக்கை வெட்டி விளக்கணைக்கும்

    கேளிக்கையை விரட்டு வோம்

    நாக்கில் இனிமை சொட்டசொட்ட

    நல்ல தமிழைப் பாடுவோம்

    வீட்டில் உள்ள பெரியவரை

    வீழ்ந்து வணங்கி நின்றுமே

    வாழ்த்து வாங்கி ஆசிபெற்று

    வளமாய் தமிழில் பாடுவோம் !

     

    அப்பா அம்மா அருகணைத்து

    அக மகிழ்ந்து பாடுவோம்

    அக்கா அண்ணா தம்பியோடு

    அழகு தமிழில் பேசுவோம்

    பக்குவமாய் இனிப்பு வழங்கி

    பலரும் மகிழப் பாடியே

    செப்பமாகப் பிறந்த நாளை

    சிறப்பாய் செய்து மகிழுவோம் !

     

    ஆங்கிலத்தில் பாடும் பாட்டை

    அகத்தை விட்டு அகற்றுவோம்

    அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி

    அகம் மகிழச் செய்குவோம்

    இனிய பிறந்த நாளையென்றும்

    எங்கள் தமிழால் வாழ்த்துவோம்

    எங்கள் தமிழின் இனிமையெங்கும்

    பொங்க வாழ்த்துக் கூறுவோம் !

     

     

    வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்

    உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்

    கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்

    கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 87

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் தன்னம்பிக்கையும்

    education-1

    கற்றலைப் பற்றிய சிந்தனைகள் தோன்றி அதன் குறிக்கோள்களையும் வளர்முறைகளையும் பற்றி ஆராய்ச்சிகள் நடக்கும் காலம் தொட்டே கற்றலுக்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்புகள், இணைப்புகள் பற்றிய சிந்தனை ஆரம்பித்தது. “கற்றலின் நோக்கமே வாழ்வில் வளம்பெருக்க’  என்ற ஒரு கருத்தும், கற்றலின் நோக்கம் ‘ஒரு தனிமனிதனின் தேவைகளை பெருக்குதல் ‘என்றும், கற்றலின் நோக்கம் ‘சமுதாயச் சிந்தனைகளை வளர்த்துப் போற்றுதல்’ என்றும், “கற்றலின் நோக்கம் பொருளீட்டு அதற்கான திறன்களை வளர்த்தல் ‘ என்றும் பல விதமான கருத்துக்கள் பல காலக் கட்டங்களில் கூறப்பட்டு, ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு சமுதாய காலகட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டும் பின்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டும் விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் எல்லா காலகட்டங்களிலும் ஒரு வளரும் குழந்தையின் ‘தன்னம்பிக்கைக்கு’ கற்றல் ஒரு விதையாகக் கருதப்பட்டது. ஆகவே எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் எந்த மொழியிலோ, எந்த சமூக சூழ்நிலைகளில் அது உருவகிக்கப்பட்டாலும் கற்றலின் உள்நோக்கம் அந்த மாணவனின் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி, அந்தத் தன்னம்பிக்கையின் உள்ளூற்றை வளப்படுத்தி சிறப்படையச் செய்வதாக அமைந்தது.

    எந்த ஒரு பொருளைப் பாடமாக எடுத்துக்கொண்டாலும், எந்த ஒரு மொழியின் அடிப்படையில் கற்றல் ஏற்பட்டாலும், எந்த மாறுபட்ட கற்றல் சூழ்நிலைகளில் கற்றலின் வளர்ச்சி ஏற்பட்டாலும் அது தன்னம்பிக்கையையும் அதன் சார்ந்த அறிவு, உணர்வு மற்றும் கைத்திறன்கள் சார்ந்த தன்னம்பிக்கையை விதைக்கவும், வளர்க்கவும், போற்றவும் சார்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துக்கு எந்த காலகட்டத்திலும் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை. ஆயின், இந்த தன்னம்பிக்கையை உணர்த்துவதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான போதிக்கும் முறைகள், அதனைச் சார்ந்த உள்ளீட்டுக்கள் சமுதாயத்தின் அரசியல் மற்றும் கலாச்சார முறைகளுக்கு ஏற்றவாறும் அவைகளை போற்றியவையாகவும் அமைந்திருந்தன. பொதுவாக அத்தனை முறைகளுக்கும் அடிப்படையாக இருத்த கருத்துக்களில் சில கீழ்க்கண்டவை.

    1. தன்னைப் பற்றிய அறிவு

    நான் யார் என்ற அறிவு தன்னம்பிக்கைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இந்த அறிவு தன்னைப் பற்றிய ஒரு சிந்தனையில் தன் திறன்கள், தன் குறைகள், தன்னுடைய குறிக்கோள்கள், தன்னுடைய நடந்து செல்லும் பாதையின் சிறப்புக்கள், தடங்கல்கள் ஆகியவற்றை அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுப்பதற்குத் தேவையாகவும் உதவியாகவும் இருக்கும். ஆனால், இந்த விவாதங்களில் தன்னைப்பற்றிய குறைவான தாழ்ந்த எண்ணங்களை ஊன்றவோ அல்லது வளரவோ  அனுமதித்தால் அது எதிர்மறையான பலன்களை அளிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. ஆகவே, தன்னை ஒரு ஆக்க சக்திக்கு உள்ளீட்டப்பட்ட பொருளாகக் கருதி ‘முன்னோக்கான பார்வைகளை’ வளர உதவி செய்ய வேண்டும். எனவே, கற்றலின் உள்ளீடுகள் ஆக்கப்பூர்வமான  சிந்தனைகளை வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைதல் வேண்டும்.

    2, முயற்சி

    தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஏணிப்படியாக இருப்பது “முயற்சியே’. “என்னால் முடியும்” என்ற எண்ணத்துடன் எந்த ஒரு அறிவையும் திறனையும் பெற்றுக்கொள்ள முதல் அடி எடுத்துவைத்தல் தன்னம்பிக்கையின் அறிகுறியாகும். ஏணிப்படிகளில் ஏறும்பொழுது தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதிலிருந்து தவறி கீழே விழுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு.  ஆனால்  ஆங்கில மேதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் கூறியது போல் “ஒரு மனிதனின் மேன்மை ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கின்றது.” என்ற கருத்தை நினைவில் கொள்ளுதல் அவசியம். எவெரெஸ்ட் சிகரத்தை  எட்மண்ட் ஹில்லாரி என்ற வீரர் முதன் முறை முயற்சியில்  தோல்வி அடைந்த போது அந்த  சிகரத்தின் அடிவாரத்தில் நின்று கொண்டு மீண்டும் ஒரு முறை பார்த்துச் சொன்னாராம் “ஏ சிகரமே! இந்த முறை நான் தோற்றிருக்கலாம். ஆனால் மீண்டும் உன்னை வெல்ல நான் வருவேன். ஏனென்றால் இதற்கு மேல் உன்னால் வளர முடியாது. என்னால் வளர முடியும் “. இது அவருடைய நிகரற்ற தன்னம்பிக்கைக்கு உதாரணமாக  விளங்குகின்றது. கற்றலின் உள்ளீடுகளுக்கும்  போதிக்கும் முறைகளும், கற்றலுக்கான சூழ்நிலைகளும் இந்தத் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருத்தல் மிக்க அவசியம். ஆயின், பரீட்சைகள் என்ற போர்வைக்குள் கற்றலை மூடிவைத்து அதை மூச்சு விட முடியாமல் திணற வைப்பதாக பல  பாடத் திட்டங்கள் அமைந்துள்ளது வருந்தத்தக்க  நிலை. கற்றலின் பொழுது  நடக்கும்   மதிப்பீடுகள் கற்றலின்ஆர்வத்தை  மேம்படுத்துவதாகவும் கற்றலின் வேகத்தையும் அது சார்ந்த திறன்களையும் வளப்படுத்துவதாகவும் அமைத்தல் மிக்க அவசியம்

    1. தோல்விகளின் பொறுப்பேற்றல்

    நம்முடைய போராட்டங்களில் வெற்றி தோல்வி என்ற இரு பகுதிகள் உண்டு. இரண்டையும் சம நோக்குடன் பார்த்துப் போற்றத் தெரிந்துகொள்ள வேண்டும்.   தோல்விகளை பொதுவாக ஒரு முயற்சியின் முற்றுப்புள்ள்ளிகளாகக் கருதும் நோக்கம் பரவலாக இருக்கின்றது. மாணவர்களிடமும் நாம் பழகும்போதும் பேசும்பொழுதும் தோல்விகளால் வாழ்க்கை இடிந்து பாழாகிவிடுவது போன்ற ஒரு கருத்து உருவகத்தை முன் வைக்கின்றோம். இது மிகவும் தவறான போக்கு. தவறான குறிக்கோள்கள், தவறான பாதைகள், வழிகள்,   பாதைகளில் வரும் இடைச்செருகல்கள், கவனக்குறைவுகள். கவனச் சிதறல்கள், போட்டி மனப்பான்மைகளால் ஏற்படும் நோக்கத் தடுமாற்றங்கள் போன்ற பலகாரணங்கள்  தோல்விக்கு வழிவகுக்கும்  உள்ளீடுகளாக  அமைகின்றன.ஆகவே, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்கின்ற  திறன்களை கற்றலின் ஒரு பகுதியாக அமைத்தல் அவசியம். பொதுவாக சிறு வகுப்புகள் முதற்கொண்டே பள்ளிகளில் ‘தவறுகளைச் சுட்டிக்காட்டும் ‘ பழக்கம் இருக்கின்றதே தவிர, அந்தத் தவறுகளுக்கான காரணங்களை அலசி அறியும் முறைகள்  சொல்லிக்கொடுப்பது  இல்லை. “Error Analysis” என்று சொல்லப்படும் தவறுகளை அலசி ஆராயும் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும்.  மேலும்  தவறுகளுக்கான முழு பொறுப்பேற்றும் பழக்கத்தையும் அதைத் தன்   குறையாகக்  கருதி தன்னம்பிக்கையை இழக்கவோ அல்லது தன்னை துன்பங்களுக்கு வித்தாக ஆக்கிக்கொள்ளவோ கூடாது. சில நேரங்களில் தேர்வுகளில் தோற்றுப் போனதாக அறிவிக்கப்படும் மாணவர்கள், தங்கள் தகுதிக்கோ அல்லது எதிர்பார்ப்புக்களுக்கோ குறைவாக மதிப்பீட்டும் மாணவர்கள் தங்கள் வாழ்கையையே முடித்துக்கொள்ளும் பரிதாபகரமான நிகழ்வுகளைப்பார்க்கும் பொழுது நமது கல்விமுறைகள் செயல்படும் நடைபாதைகளில் உள்ள தவறுகள்  போட்டுக் காட்டப்படுகின்றன.

    (தொடரும் )

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (65)

    நிர்மலா ராகவன்

    பணக்கார வீட்டுக் குழந்தையா! ஐயோ, பாவம்!

    நலம்

    எங்கள் தெருவில் நாலைந்து வீடுகள் தள்ளி இருக்கிறாள் மிஸஸ் வாங். பெரிய படிப்பு, அதற்கேற்ற உத்தியோகம். கணவன், மனைவி இருவரும் கைநிறைய சம்பாதித்தார்கள். பெரிய வீடு இல்லாமலா! ஆனால், தம்பதியர் வீட்டிலிருப்பதே அபூர்வம்.

    அவர்களுடைய மூன்று குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?

    வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதற்காக இருக்கிறார்கள்!

    “எங்கள் வீட்டில் மூன்றுபேர் வேலை செய்கிறார்கள்,” என்று என்னிடம் சாதாரணமாகத் தெரிவித்தாள். பெருமை என்றில்லை. வேறு என்ன செய்வது என்ற தொனி. “மாடியைச் சுத்தப்படுத்த ஒருத்தி, கீழே ஒருத்தி. இவர்களிருவரும் இந்தோனீசியர்கள். குழந்தைகளைக் கவனித்து, அவர்களுக்குப் பிடித்ததை சமைத்துப்போட ஃபிலிப்பீனோ!” என்றாள்.

    ஃபிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால், மலேசியாவில் அவர்களுக்குச் சம்பளம் அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு பணிப்பெண் கணக்காய்வாளராக இருந்தவள்!

    `வீடு என்றால் ஓய்வெடுக்கத்தான்!’ என்பதுபோன்ற மனப்பான்மை கொண்ட மிஸஸ் வாங் பருமனாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

    சுமாரான வருமானம் உடையவர்கள்கூட வீட்டிலேயே விளையும் மரவள்ளிக்கிழங்கையும், உருளைக்கிழங்கையும் சாப்பிட்டு குண்டாக இருக்கையில், தானும் அவர்களைப்போல் இருப்பதா என்று அவள் நினைத்திருக்க வேண்டும். பொழுதைக் கழிக்க கோல்ஃப் ஆடும் பழக்கத்தை மேற்கொண்டாள். அதோடு, லைன் டான்ஸ் என்ற நாட்டியப்பயிற்சி வேறு.

    “மிகவும் ஷேப்லியாக (shapely) ஆகிவிட்டீர்களே!” என்று நான் பாராட்டியபோது, மகிழ்ந்துவிட்டாள். உடனே அவள் முகம் மாறியது. “என் மகள் யென் யென்னையும் (Yen Yen) இதையெல்லாம் கற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறேன். ஆனால் அவளுக்கு எதுவுமே வணங்குவதில்லை,” என்றுவிட்டு, “எப்போதும் சாப்பாட்டில்தான் கவனம்!” என்று பிரலாபித்தாள்.

    எனக்கு ஆச்சரியம் எழவில்லை.

    சமைப்பதற்கென்றே அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண். சிறுமிகள் தம் காலைச் சுற்றி வராமலிருக்க தின்பண்டங்கள் ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பவள்.

    தாய், தந்தை இருவருடைய கவனிப்பும் இல்லாது, என்ன செய்வது என்று புரியாது, தொலைகாட்சி பார்த்தபடி எதையாவது கொறிக்கும் பழக்கம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும்.

    அது மட்டுமா? ஏதாவது ஒரு விளையாட்டிலோ, படிப்பிலோ சற்றே தோல்வியுற்றால் அதிர்ந்து போகும் பெற்றோர். தம்மைப்போன்று தாம் பெற்ற குழந்தைகளும் வாழ்க்கையில் பெருவெற்றி அடையவேண்டும் என்ற `நல்லெண்ணத்துடன்’ அவர்களை அளவுக்கு மீறிக் கண்டிப்பவர்கள்.

    இதனால், தான் எதையாவது செய்யப்போய், அதில் தோல்வி அடைந்து எப்போதோ பார்க்கும் பெற்றோரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமே என்று பயந்து புதிதான எதிலுமே ஆர்வமில்லாமல் போயிருக்கிறாள் அப்பெண், பாவம்! குமுறி எழும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தெரியாது, உணவால் அதை மறக்க முயற்சிக்கிறாள். விலையுயர்ந்த ஆடைகளும், ஆளுக்கொரு கணினியும் இருந்தாலும் யென் யென் ஏழைதான் என்றே தோன்றியது.

    வாழ்க்கையில் பிடிப்போ இலக்கோ இல்லாது, சாப்பிடுவதில் மட்டும் ஆர்வம் காட்டிக்கொண்டு, எப்படியோ பொழுது போனால் சரி என்று காலத்தை ஓட்டுகிறவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்தானே?

    என்னிடம் படிக்க வந்த ஒரு மலாய் பையனும் இப்படித்தான்.

    “இந்தக் கணக்கைப் போடு,” என்று நான் சொல்ல வேண்டியதுதான், நாற்காலியில் சரிந்து உட்கார்ந்துவிடுவான். நாம் இவனுடன்தான் பேசுகிறோமா என்ற சந்தேகம் நமக்கே வந்துவிடும். அப்படி இருக்கும் அவனுடைய தோரணை.

    `என்ன சொன்னால் சுறுசுறுப்பாக மாறுவான்?’ என்ற குழப்பத்துடன் தாய் ஓயாமல் விரட்ட, மேலும் அடங்கிப்போயிருந்தான்.

    `திட்டினால், குழந்தைக்கு அவமானம் அளிப்பதுபோல!’ என்று சிறு வயதில் எந்த தவறு செய்தாலும் கண்டிக்காது விட்டதில், பதின்ம வயதில் மனம் போனபடி நடக்கும் இப்படிப்பட்ட சிறுவர்கள் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பாரமாகி விடுகிறார்கள்.

    நான் இப்படி ஒரு பையனைப்பற்றி அவனுடைய தாயிடம் புகார் செய்தபோது, “வீட்டிலும் இப்படித்தான்! எதிர்த்து எதிர்த்துப்பேசுவான். என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றாள் வருத்தத்துடன். உரிய காலத்தில் கண்டிக்காது விட்டது யார் தப்பு?

    கதை

    அது கூட்டுக்குடும்பம். ஆனாலும், ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அநாவசியமாகத் தலையிடாது சுமுகமாக இருந்ததால், வீட்டில் அமைதியும், சிரிப்பும் நிலவின.

    தாய் வேலைக்குப் போனால், பார்த்துக்கொள்ள தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். தனிமை தெரியாது குழந்தைகள் வளர்ந்தார்கள்.

    மூன்று வயதாக இருந்த ராணியை ஒரு நாற்காலியின்மேல் ஏறவைத்து, அவளுடைய தோய்த்த துணிகளை உலர்த்தச் செய்தார் தந்தை. அன்று பூராவும், `நானே செய்தேன்!’ என்று பெருமையாக எல்லாரிடமும் சொல்லி மகிழ்ந்தாள். எவ்வளவு சிறிய குழந்தையானாலும், ஒரு காரியத்தை அதன் வயதுக்கேற்ப செய்து முடித்தால், தன்னம்பிக்கை வளருமே!

    அடுத்த ஆண்டு பாலர் பள்ளியில் விளையாட்டு விழா. ராணிக்கு எல்லாவற்றிலும் முதல் பரிசு.

    ஒரு விளையாட்டில், சிறிது தொலைவு ஓடி அருகிலிருந்த வாளியிலிருந்து துணியை எடுத்து உலர்த்துவது.

    மற்ற குழந்தைகளெல்லாம், `இது நம் வீட்டு வேலைக்காரியின் வேலை அல்லவா?’ என்று திகைத்து நின்றார்கள்.

    `இதற்கெல்லாமா போட்டி வைப்பார்கள்!’ என்று பெற்றோர் அதிருப்தியுடன் முணுமுணுத்தார்கள்.

    `போகட்டும், சிறு குழந்தைகள்தானே!’ என்கிறீர்களா?

    தமிழ்நாட்டில் எங்கள் உறவினர் வீட்டுப்பையன். இருபது வயது.

    “இன்னிக்கு ரெண்டு வேலைக்காரியும் மட்டம் போட்டுட்டா. கொஞ்சம் துணியை உலர்த்துப்பா,” என்று நான் கெஞ்சலாகக் கூற, “எப்படின்னே தெரியாது,” என்று அலட்சியமாகக் கூறியபடி அப்பால் போய்விட்டான். அவன் ஒரு குறிப்பிட்ட துறையில் மேதாவி. ஆனால், அதுமட்டும் போதுமா?

    `களவும் கற்று மற’ என்று எதற்காகச் சொல்லி வைத்தார்களோ! வாழ்க்கைக்குத் தேவையான பலவற்றையும் அரைகுறையாகவாவது கற்றிருந்தால் எங்கு சென்றாலும், எப்படியாவது பிழைக்கலாம். எல்லாவற்றிற்கும் பிறர் கையை நாட வேண்டியதில்லை.

    கடந்த நூற்றாண்டின் பிரபல அமெரிக்க வயலின் விற்பன்னர் யஹூதி மெனுஹின் ஒரு முறை கூறியிருந்தார், “நான் என் மாணவர்களுக்கு வயலின் வாசிக்க மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. தம் விரல்களை இழந்தாலும், அவர்களால் பிழைத்துக்கொள்ள முடியும்!”

    தொடருவோம்

    Share
  • தமிழ் சமுதாயம் 2077 [7] ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

     

    unnamed (2)

    இன்னம்பூரான்

    ஜூலை 22, 2017

    பிரசுரம்:

    இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் நன்றாக அமையவில்லை என்பது எல்லாருடைய ஏகோபித்தக் கருத்து. அதை நல்வழிப்பாதையில் இயக்க முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 1942 ல் இன்றைய ஜெர்மனியைப் பற்றி கனவு கூட கண்டிருக்க முடியாது. எனவே, ‘தமிழ் சமுதாயம் 2077’ பற்றிய என் கனவுகளையும், வரலாற்று அலசல்களையும், எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் பதிவு செய்கிறேன். இன்றைய சூழ்நிலையில், நான் கூறுவது பலருக்கு பிடிக்காது, உள்ளதைச் சொன்னால், உடம்பு எரியும் என்பதால்.

    நம்மை பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முதன்மை இடம் வகிப்பது:

    ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’.

    இன்றைய சட்டசபையில் அங்கம் வகிப்பவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். திருமங்கலம், தஞ்சாவூர், ஆர்.கே.நகர் என்ற ஊர்கள், தமிழ் நாட்டில் பிரதிநிதித்துவம் ஒரு கேலிக்கூத்து என்பதை நிரூபித்து விட்டதாலும், அமரராகி விட்ட ஜெயலலிதாவின் ஆசாபாசங்கள் பொது மேடைக்கு வந்து விட்டதாலும், அவரின் மரணத்தை பற்றிய முடியா வழக்குகளும், திகில் மர்மங்களும், அ.தி.மு.க. தாயாதி சண்டைகளும், வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்வுகளும், தடாலடி வருமானவரி ஆய்வுகளும், அதருமமிகு சென்னையைப் பற்றி வெளி வரும் தகவல்களும் நம்மை தலை குனிய வைக்கின்றன. ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் துன்பம், மருத்துவர்களின் தகுதிக்கு உரிய இடம் கொடுப்பது, மீனவர்கள் படும் இன்னல்கள் என்ற பொது நல சேவைகளைப்  பற்றி தமிழ் சமுதாயமும், அரசும் ‘ஏனோ தானோ சமாதானமாக’த்தான் நடத்திருக்கின்றன. சென்னைக்கு வடக்கே எங்கு சென்றாலும் கேலிக்கு இடம் கொடுக்கிறோம்.

    இன்று தமிழ் சமுதாயத்தைப் போற்றிப் பாதுகாப்பது, தற்கால முதல்வரா? வந்து போய்வரும் மாஜி முதல்வரா? நிழல் மனிதரா? அல்லது நிழல் மனிதர்களா? என்ற வினா ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டால், எல்லா விடைகளும் பொருந்தும்/பொருந்தாது. எதிர்கட்சிகள் கலங்கிய நீரில் மீன் பிடிக்கின்றன. மக்கள் நலனில் யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்று கேட்டால், மாண்புமிகு. (அந்த விருதுக்கு உரிய ஒரே மனிதர்) இரா.செழியன் அவர்கள் அமரராகிவிட்டாரே என்கிறார்கள். இது நிற்க.

    ஒரு விஷயத்தில் பல்லாண்டு பல்லாண்டுகளாக சட்டசபை மரபு ஒன்று இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அது போற்றத்தக்க மரபு அல்ல. அரசை நடத்துபவர்கள் மனித குலம்.   சுயநலம், சொத்து சேர்ப்பது, கையூட்டு, மக்களுக்கு விரோதமான செயல்கள் (உயிர் வாழ்பவர்களுக்கு மரண சான்று அளிப்பது, குட்கா கொடை, கலப்பட கொலைகள் போன்றவை) தழைத்து வருகின்றன. காசை தூசாக்குவதில், சட்டத்தை மட்டம் தட்டுவதில் பல்கலைக்கழகம் முதல் பல அரசியல் துறைகள் தலைமை தாங்குகின்றன. அப்படிப்பட்ட அரசை கண்காணிக்கும் தணிக்கை ஆவணங்களை சட்டசபை கதவுகளை மூடுவதற்கு அரை வினாடி முன்னால் தாக்கல் செய்யும் இந்த மரபு மக்களால் நிந்திக்கப்படவேண்டும். ஆடிட் ரிப்போர்ட் சான்றுகளுடன் பேசும். அவலங்களைக்  கோடிட்டுக் காட்டும்.  ஜூலை 19, 2017 அன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்க நேரம் இல்லாததால், அனாதையான ஆறு ஆடிட் ரிப்போர்ட்கள் என்ன சொல்கின்றன? யாரும் படிக்கமாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால், ‘தணிக்கைத்துறை ஒரு முட்டுக்கட்டை’ என்ற தொடரை பதிவு செய்து வந்தேன். நான் ஒருவனே அதை படிப்பது தெரியும்!

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://www.govint.org/typo3temp/pics/443fdd967a.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • குறளின் கதிர்களாய் …(176)

     

     

    விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி                                             

    னோட்டன்றோ வன்கண் ணவர்க்கு.

           -திருக்குறள் -775(படைச்செருக்கு)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைவரைப் போர்க்களத்தில்

    சினங்கொண்டு நோக்கிய

    கண்கள் நோக்கி

    வேலெறிந்தாலும்,

    கண்ணிமைத்தல் களங்கமென்று

    எதிர்நோக்குவர்,

    படைச்செருக்குமிக்க வீரர்…!

     

    குறும்பாவில்…

     

    சினந்த கண்கள் நோக்கிவரும் வேலுக்காகக்     

    கண்மூடார் களங்கமென்று,       

    படைத்திறன் மிக்க போர்வீரர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    சினந்து களத்தில் போராடும்

         சிறந்த வீரர் கண்ணோக்கி

    கனத்த வேல்தான் வந்தாலும்,

         கண்ணை மூடுதல் களங்கமென்றே

    மனத்தில் நிறைந்த வீரத்துடன்

         மானம் காக்கும் செருக்குடனே

    தனது கண்ணை மூடாத

         திறமை தன்னைக் காண்பீரே…!

     

    லிமரைக்கூ..

     

    வீரச்செருக்கைப் பாரீர் போரில்,

    சினந்தகண்ணைச் சிறிதும் மூடாவீரர் 

    எறிந்தவேல் வந்தாலும் நேரில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    பாருபாரு படச்செருக்கப்பாரு,

    பட்டாளத்து வீரனோட

    படச்செருக்க நல்லாப்பாரு..

     

    கோவத்தில தெறந்தகண்ண

    கோல்லப்போற வேல்வந்தாலும்

    கொஞ்சமா மூடுனாலும்

    கொறச்சலுண்ணு,

    கொஞ்சங்கூட மூடாத

    தெறமிக்க வீரனப்பாரு..

     

    பாருபாரு படச்செருக்கப்பாரு,

    பட்டாளத்து வீரனோட

    படச்செருக்க நல்லாப்பாரு…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share