Blog

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 30

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (3)

    திருஞானசம்பந்தர் திருப்புகலூர், வர்த்தமானிச்சுரம் ஆகிய தலங்களை வணங்கச் சென்றார். முருக நாயனார் எனும் அடியவர் வர்த்தமானச்சுரத்துப் பெருமானை நாளும் பூவும், பட்டும் கொண்டு அலங்கரித்து, அகில் கொண்டு புகைத்து ஐயன் அழகில் அவர்தம் அடி பரவும் அத்திருத்தொண்டர் வழிபடும் திருக்கோயில் வர்த்தமானிச்சுரம் எனப் போற்றிப் பாடியருளினார். முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஞானப்பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் திருப்புகலூரில் உள்ளார் என்ற செய்தியறிந்த அப்பரடிகள் ஆரூர்ப் பெருமானின் ஆதிரைப் பெருவிழாவினைக் கண்டு களித்து திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

    அப்பர் பெருமான் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் ஆராத அன்புடன் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரைத் திருநாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து விழா கண்ட ஆரூரைத் தொழுது வருவதாகக் கூறி திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர் காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு, வழியிடையே பனையூரைத் தொழுதுப் பின்னர் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத்தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன் வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து செல்லலானார். அதைக்கண்ட அப்பர் பெருமான் இறைவன் அளித்த சிவிகையில் வராமல் நடந்து வரும் வகையில் அதைப் புறக்கணிப்பது தகாது என்றும், தன்னுடனேயே பல்லக்கில் பவனி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள எண்பதாண்டு முதியவரான அப்பர் பெருமானை நடக்க வைத்துத் தாம் மட்டும் சிவிகையில் செல்வது சரியாகாது என்று எண்ணிய  ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார்.

     

    இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். அங்கு குங்குலியக்கலய நாயனார் அவர்களை வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை எனும் திருத்தலத்தை வந்தடைந்தனர். அப்பரடிகளும் ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் வீழிமிழலைப் பெருமானை வணங்கி அங்கு தங்கியிருந்தார்கள். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது, காழிப்பதியை விட்டு வந்து வெகுநாட்கள் ஆகிறது, தங்களோடு சீர்காழிக்கு வந்து சில நாட்கள் தங்கியருள வேண்டுமென விண்ணப்பித்தனர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி, அவர்களைத் திருமடத்தில் தங்க வைத்துத் தாமும் துயில் கொண்டார்.

     

    பெருமான் அவர் தம் கனவில் தோன்றி, தம்மைத் திருமால் வணங்க, இந்திரனால் இங்கு வரவழைக்கப்பட்ட விண்விழி விமானத்தே தாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை வீழிமிழலையிலேயே காட்சியளிப்பதாகக் கூறக் கேட்டு பெருமான் கருணை வெள்ளத்தை நினைந்து மகிழ்ந்து அதிகாலை விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக்காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடி வியந்தார். காழி மக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

    ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த சமயம் அங்கு மழையின்றி, நீர்வரத்தும் குன்றி, நதிநீர் குறைந்து, வளம் இன்றி நாடு வறட்சியுற்றதால் பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தி குறைந்து வறுமையுற்றதால் உயிர்களெல்லாம் பசியால் வாடின. மக்களோடு அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் பெருமானை எண்ணியவாறு இருவரும் கண்ணயர்ந்தனர்.

     

    உறங்கிய பெருமக்களின் கனவில் பெருமான் தோன்றி நாட்டின் பஞ்சம் நீங்கும் காலம் வரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும் பொற்காசு அளிப்பதாகக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பரடிகளுடன் ஆலயம் சென்றார். கனவில் கண்டதுபோல் கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமான் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிப்பதாக பறை அறிவித்துச் செய்தியளித்தனர். அடியவர்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்ந்தும் உணவளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், பணியாளர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும், நாவுக்கரசர் அளிக்கும் காசு நல்ல காசு என்பதையும் அறிந்தார். அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாமதம் ஏற்படுதலையும் அறிந்தார் ஞானசம்பந்தர். அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

     

    வாசி தீரவே, காசு நல்குவீர்

    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

     

    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

     

    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

     

    நீறு பூசினீர், ஏற தேறினீர்

    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

     

    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

     

    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

     

    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

     

    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

     

    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

     

    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

     

    காழி மாநகர், வாழி சம்பந்தன்

    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

     

    சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு வரவேற்க, தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிற திருமறைக்காடு சென்று அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகியபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததையும் மக்கள் மற்றொரு புறத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருவதையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டும் என்று எண்ணி அப்பரடிகளிடம், அத்திருக்கதவுகள் திறக்க வேண்டி திருப்பதிகம் பாடியருள வேண்டுமென வேண்டினார். அப்பர் பெருமானும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அப்பதிகப் பொருட் சுவையில் ஈர்க்கப்பட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் மகிழ்வுடன் ஆலயத்தினுள் சென்று மறைக்காட்டுறையும் இறைவனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமெனவும் வேண்டினார்.
    ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாட, அந்த முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொள்ள ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமடம் சேர்ந்தனர்.

     

    அப்பர் திருமடத்தைச் சார்ந்து தான் 10 பாடல்கள் பாடி அரிதில் திறக்கவும், முதல் பாடல் சம்பந்தர் பாடிய உடனே மூடியதையும் நினைத்துப் பார்த்து இறைவன் திருவருள் குறிப்பை உணராது திருக்கதவந் திறக்கப் புகுந்தது தவறெனக் கருதி அம்மடத்தின் ஒரு பால் துயில் கொண்டார். அவர்தம் மனக்கருத்தை அறிந்த சிவபெருமான் அவர் எதிரே சைவ வேடத்துடன் தோன்றி, `நாம் வாய்மூரில் இருப்போம். நம்மைப்பின் தொடர்ந்து வருக` எனப் பணித்தார். அப்பர் பெருமான் கை, தலை குவித்து பின் தொடர்ந்து சென்றார். அப்பெரியவர் அண்மையில் இருப்பது போலக் காட்டி மறைந்தார். சண்பை வேந்தர் எழுந்து அப்பரடிகள் பற்றி வினவ, அடியார்கள் அப்பர் வாய்மூர் சென்றமையைத் தெரிவித்தனர். அப்பரடிகளை அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.

     

    ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பரடிகள் அகமகிழ்ந்து தாம் திருக்கதவம் திறக்கப் பாடிய திருப்பதிகத்தினினும் சிறப்புடைய செந்தமிழ் பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வருகையைக் கூறி அவருக்காக திருக்காட்சி நல்க வேண்டினார். வாய்மூர் பெருமான் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல் காட்சியைக் காட்டியருள ஞானப்பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்ட அப்பரடிகளும் பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்தவர்கள் மீண்டும் திருமறைக்காடு சென்று சேர்ந்தனர்.

     

    பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்த காலம் அது. பல்லாயிரம் சமணத் துறவிகளைத் தோற்றுவித்து  ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். சைவத் திருக்கோயில்கள் அனைத்தும் சமணப் பாழிகளாக மாற்றமடைந்தன. அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டிய மன்னனையும் சமண சமயத்தில் சேர்த்தனர். மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத் தலைப்பட்டனர். பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைபிடித்து காத்து வந்தனர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் இறையருள் பெற்ற அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து பரிசனங்களை அனுப்பி வணங்கித் தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் மறைக்காட்டீசர் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் விருப்பத்தை அப்பரிடம் தெரிவிக்க, அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக்கோர் அளவில்லை. அதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆயினும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது` எனத் தடுத்தருளினார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் பரவுவது நம் பெருமான் கழல் ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். பாடல் கேட்டு வந்த அப்பரடிகள் தானும் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டார். சம்பந்தர் அவரது வயது கருதி அவரை சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபட்டு இருந்தருள வேண்டினார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்கள்.

     

    திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் அமர்ந்து அகத்தியான்பள்ளி, கோடிக்குழல் முதலிய தலங்களை வணங்கிச் சோழ நாட்டிலிருந்து தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றத்து இறைவனைப் பணிந்து மதுரை மூதூர் மருங்கணைந்தார். மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து குலச்சிறையாரை ஊர் எல்லையில் அவரை வரவேற்குமாறு பணித்திருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி, மங்கையர்கரசியாருக்கும் அமைச்சருக்கும் திருவருளால் நன்மைகள் விளைய வேண்டும் என வாழ்த்தினார். குலச்சிறையாரும், சம்பந்தப் பெருமான் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையவராவோம் என்றார். தங்கள் நாட்டில் இனி திருநீற்றொளி விளங்குவது உறுதி எனவும் முகமனுரை கூறியவர் மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதையும் தெரிவித்தவர், மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவாலவாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

    மங்கையர்க்கரசியார் ஆலவாய் இறைவர் திருக்கோயிலில் வழிபாடு முடித்தவர், கோயில் முன்றிலில் திருஞானசம்பந்தரைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் தம் மலர்க்கரங்களால் அவரை எடுத்தபோது தாங்கள் செய்த தவப்பயனால் சம்பந்தப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பேறு பெற்றதாகக் கூறினார். ஞானசம்பந்தரும் புறச்சமயச் சூழலிலும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் அவர்களைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பியவர், திருக்கோயில் புறத்தில் சென்று குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தவர்களுக்கு அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் நல்விருந்தளித்து உபசரித்தார்.

    பகற்பொழுது கழிந்து இரவு வந்த நேரத்தில் ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர்கள், அந்தணர்களின் வருகையை அறிந்த சமணர்கள் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டவர்கள், தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்கவும் அனுமதி பெற்றனர்.

    ஆனால் சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை என்பதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். அந்த மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். `இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்தது என்பதால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறை என்றாலும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகட்டும் என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
    பொழுது விடிந்து, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியதைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் பேரச்சம் கொண்டனர். இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானை வரவழைத்த குற்றத்துக்குத் தாங்கள் இறப்பதே சரியான தண்டனையாக இருக்கும் என்று எண்ணினர். ஆனாலும் திருமடத்தில் இடப்பட்ட தீயால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாததால் மன ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதை அறிந்து அச்சமுற்று அரசனைக் காணச் சென்றனர். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் அந்த வெப்பு நோயைக் குணப்படுத்த இயலவில்லை.
    அப்போது அமைச்சர் குலச்சிறையார் அரசனை அணுகி, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளதால் அவர் வந்தால் இந்நோய் தீரலாம்` என்றார். பாண்டிய மன்னனும் ஞானசம்பந்தர் என்ற திருநாமத்தைக் கேட்ட உடனேயே அவருடைய அயர்வு நீங்கியதை உணர்கிறார். அதனால் அவரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால் சமணர்கள் அரசனிடம் சென்று அவருடைய இந்த நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் சமணர்களாகிய தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நடுநிலை பிறழ முடியாது என்று மறுத்தான்.

     

    குலச்சிறையாரும் அரசியாரும் ஞானசம்பந்தரை தரிசித்துத் திருமடத்திற்குத் தீயிடப்பட்ட செயலுக்கு மிகவும் வருந்தியதோடு, வெப்பு நோயால் வாடும் மன்னன் பற்றி எடுத்துரைத்து சம்பந்தப்பெருமான் எழுந்தருளி மன்னனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று  விண்ணப்பித்துக் கொண்டனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக்கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் பாடிப்பரவினார்.  சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

    தொடரும்

    Share
  • பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    பாகிஸ்தான் மத்தியஸ்தம்: இந்தியாவின் தோல்வியா?

    அண்ணாகண்ணன்

    அமெரிக்கா – இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து போர்நிறுத்தம் செய்தது, வியப்புக்கு உரியது; பாராட்டுக்கும் உரியதே. ஆனால், இதை இந்தியாவின் தோல்வி என்று சிலர் எழுதியதைப் பார்க்கிறேன். பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான, பொறுப்பான செயலைக் கண்டு இந்தியாவும் மகிழ்வே அடையும். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மட்டுமே இந்தியா எதிர்க்கிறது. இதர முனைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளே.

    இந்தியா எதிலாவது வெற்றி பெற்றால், அது பாகிஸ்தானின் தோல்வியாகக் கருதப்படுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சம வலிமை பெற்ற நாடுகளும் இல்லை. எனவே எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை.

    கிரிக்கெட்டிலும் இதர விளையாட்டுகளிலும் இதே போல், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதினால் பரம வைரிகள் என்று வர்ணிக்கிறார்கள். விளையாட்டில் நாம் அவ்வாறு கருத வேண்டியதில்லை. கருதவும் கூடாது.

    பாகிஸ்தானைப் போல் இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்திருக்கக் கூடாது என்று சிலர் கேட்கலாம். இதே கேள்வியைச் சீனம், ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல நாடுகளையும் நோக்கிக் கேட்கலாம். இதில் சீனமும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஹார்மஸ் நீரிணையைத் திறக்கும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானத்தை முறியடித்தன. இரானுக்கு அருகில் இருக்கும் வளைகுடா நாடுகளைப் பார்த்தும் கேட்கலாம். அமெரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதே இப்போதைக்குப் பாகிஸ்தானின் வலிமை. அமெரிக்கா சொல்வதைத்தான் பாக் செய்யும். இந்த மத்தியஸ்தம் கூட, அமெரிக்காவின் மறைமுக முன்னெடுப்பாக இருக்கலாம்.

    எனவே, இப்படி எல்லாம் ஏன் நடக்கவில்லை என்று பேசுவதை விட, நடந்ததைக் குறித்துப் பேசுவதே பொருத்தமானது. பாகிஸ்தான் பொறுப்புடன் நடப்பதை நாம் வரவேற்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். இது அரிதாகத்தான் நடக்கிறது.

    Share
  • அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அனுபவம் என்பது அனைவர்க்கு மவசியம்
    அனுபவம் அனைத்துக்கும் அடிப் படையாகும்
    அனுபவ மற்றார் ஆற்றும் அனைத்தும்
    ஆக்கமாய் அமைவது அரிதே யாகும்

    மூத்தோர் யாவரும் அனுபவம் மிக்கவர்
    வீழ்ந்து எழுந்து நிமிர்ந்து நின்றவர்
    துன்பமும் தெரிந்தவர் இன்பமும் தெரிந்தவர்
    சுகமும் துக்கமும் தாங்கியே நின்றவர்

    விரைவாய் எதனையும் செய்யும் வேளை
    அனுபவ மற்றார் அவசரப் படுவார்
    அனுபவ மிக்கவர் விரைவாய் செயினும்
    அவசரப் படாமல் சிறப்புடன் செய்வார்

    இளமை என்பது துடிப்பான பருவம்
    அனுபவம் தொடங்கும் ஆரம்பப் பருவம்
    இளமை முதுமையை எய்திடும் காலம்
    பற்பல அனுபவம் பாங்காய் இணையும்

    அனுபவம் முதுமையின் ஆளுமை யாகும்
    ஆளுமை வழியில் நடப்பது அவசியம்
    இளமையில் ஆளுமை மிக்கவ ராயினும்
    முதுமையின் அனுபவம் இளமையை உயர்த்தும்

    இளமையில் இமயம் தொட்டவர் இருக்கிறார்
    இமயம் தொட்டிட பயிற்சிகள் அவசியம்
    பயிற்சிகள் என்பதே அனுபவ மாகும்
    பயிற்சியை வழங்குவோர் முதிர்ச்சியில் இருப்பார்

    போட்டிகள் நடுவர் அனுபவம் மிக்கார்
    அனுபவம் மிக்கார் இளமையில் நிற்கார்
    அறிவுரை வழங்க அனுபவம் அவசியம்
    அறிவுரை வழங்குவார் முதியோர் ஆகிறார்

    மூத்தோர் வார்த்தை அமுதம் என்பது
    காலம் காலமாய் காதிலே ஒலிக்குது
    அதனுடை அர்த்தம் அனுபவம் என்பதை
    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம் !

    Share
  • டி.ஐ.அரவிந்தன்: ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சில சிக்கல்கள்

    டி.ஐ.அரவிந்தன்: ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் சில சிக்கல்கள்

    அண்ணாகண்ணன்

    அரவிந்தன் குறித்து ஜெயமோகன் எழுதிய அஞ்சலிக் குறிப்பில் வேறு சில சிக்கல்களும் உள்ளன.

    தார்ஷியா என்ற பெயரில் ஆனந்த விகடனில் எழுதிக்கொண்டிருந்த டி.ஐ.அரவிந்தனின் தந்தைதான் எனக்கு முதலில் அறிமுகம் என்ற முதல் வாக்கியமே மயக்கம் கொண்டது. தார்ஷியா என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவர் டி.ஐ.அரவிந்தன் என்ற பொருளும் இதில் வருகிறது. எழுத்துத் துறையில் அதிக அனுபவம் கொண்ட ஜெயமோகன், இப்படி மயக்கம் தரும் சொல்லாட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

    ஒரு நாள் சில கதைகளை என்னிடம் அளித்தார். அவற்றை செம்மை செய்து வெளியிட்டேன் என்று சொன்னதன் மூலம், அவை செம்மை செய்ய வேண்டிய நிலையில் இருந்தன என்று சொல்கிறார். நான் செம்மை செய்யும் இடத்தில் இருந்தேன் என்றும் சொல்கிறார்.

    அச்சகங்களில் வெட்டிப்போட்டபின் மிஞ்சும் விளிம்புத்தாள்களை சேகரித்து குறிப்பேடுகள் தயாரிப்பவர்களிடம் விற்கும் தொழிலை அன்று செய்துகொண்டிருந்தார் என்று சொல்வதில் தவறில்லை. எந்தத் தொழிலும் தாழ்வானதோ இழிவானதோ இல்லை. அந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார் என்றும் வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து அவர் எப்படி மேலெழுந்து வந்தார் என்றும் தனது படைப்பியக்கத்தை எப்படித் தொடர்ந்தார் என்றும் எழுதியிருக்க வேண்டும். சக படைப்பாளியாக அவரது இடம் எது என்றாவது எழுதியிருக்கலாம்.

    கடுமையான உடலுழைப்புக்கு இயலாத சிறிய உடற்குறைபாடு கொண்டிருந்தாலும் அன்று மிகக்கடினமான அப்பணியைச் செய்யவேண்டியிருந்ததது என்பது தேவையற்ற குறிப்பு. உடற்குறைபாடு இருந்தாலும் சவாலான பணிகளைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்ட வேண்டும். இயன்றால் உதவ வேண்டும். ஆனால், கழிவிரக்கம் கொள்வதும் உடற்குறையைச் சுட்டிக் காட்டுவதும் உயர்ந்த பண்பு இல்லை.

    /அவரும் அவர் தமையனும் அவருடைய தந்தை உருவாக்கிய மூன்று குடும்பங்களின் பொறுப்பையும் ஏற்று உழைத்து முன்னெடுத்துக்கொண்டிருந்த காலம் அது/

    அவருடைய தந்தை, மூன்று குடும்பங்களை உருவாக்கியது இங்கே எதற்காக? ஒருவேளை அது உண்மையெனில், மூன்று குடும்பங்களின் பொறுப்பை ஏற்று உழைத்து முன்னெடுத்த அரவிந்தனும் அவர் தமையனும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவர்கள். எழுச்சி மிகுந்த வீரர்களாக அவர்களை முன்வைத்திருக்க வேண்டும். ஜெயமோகனோ, இதையும் ஐயோ பாவம் எனக் கழிவிரக்கம் கொள்ள வைப்பது போலவே எழுதியுள்ளார்.

    எழுத்துத் துறையில், இதழியல் துறையில் 30 ஆண்டுக்காலம் பணியாற்றிய பிறகும் ஒருவரின் முந்தைய தொழில்தான், ஜெயமோகன் நினைவுக்கு வருகிறது. அவரது உடற்குறை, நினைவுக்கு வருகிறது. மாணவராக அவர் இருந்தது நினைவுக்கு வருகிறது. மிக இளைஞராக அவரைச் சந்தித்த முகம்தான் நினைவில் எழுகிறது. அவர் தந்தையாரின் மூன்று குடும்பங்கள், நினைவுக்கு வருகின்றன.

    ஓர் ஐந்தாண்டுக்காலம் அவருடன் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்தது எனச் சொல்லும் ஜெயமோகன், அது குறித்து விரிவாகச் சொல்லியிருக்க வேண்டும். அந்த உரையாடலில் இருவரின் நிலைப்பாடு என்ன? முன்வைத்த கருத்துகள் எவை? என்று பேசியிருந்தால், அரவிந்தனைப் பற்றிய நல்ல சித்திரம் உருவாகியிருக்கும்.

    ஐந்தாண்டுகள் அணுக்கமான நட்பும் உரையாடலும் இருந்த காலத்திலும் ஜெயமோகனுக்கு இவையே நினைவில் அழுத்தமாக மேலோங்கியிருக்கும் என்பது கசப்பான நிஜம். அரவிந்தன் தானும் ஓர் அறிவுஜீவியாக உரையாடியிருப்பார். ஜெயமோகனோ, மேட்டிமை எண்ணத்துடன் அரவிந்தனை அந்தக் கால வட்டத்திலேயே வைத்திருப்பார். இது இயல்பான, ஆரோக்கியமான உரையாடலுக்கு உகந்த சூழல் இல்லை.

    /இந்தியா டுடேயில் அன்றைய நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார்/

    இதில் ஜெயமோகன் என்ன சொல்கிறார்? அரவிந்தன், தன் திறமையால், தகுதியால் இந்தியா டுடே இதழில் சேரவில்லை. நண்பர் மகாதேவன் வழியாக ஆசிரியராகச் சேர்ந்தார் என்பது ஏதோ சிபாரிசில் சேர்ந்தது போல் எழுதுகிறார்.

    காலச்சுவடு அணியில் இணைந்த பின், என் மேல் அவர் முழுமையான ஓர் எதிர்மனநிலையில் நீடித்தார் என ஜெயமோகன் சொல்வதைக் கவனிக்க வேண்டும். காலச்சுவடு அணியில் இணைந்துவிட்டால், அவர் எதிர்மனநிலைக்குச் சென்றுவிடுவார் என்பது உண்மையில் அரவிந்தனுக்குச் சொந்தமான சிந்தனை இல்லை என்று கூறுவதாக உள்ளது. காலச்சுவடு மீதான விமர்சனமாகவும் இதைக் கருதலாம்.

    ஒருவரது வாழ்க்கையில், வரலாற்றில் எத்தகைய விவரங்களுக்கு ஜெயமோகன் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது, இதிலிருந்து புலனாகிறது. உண்மையில், ஜெயமோகனின் மனச் சித்திரமே இதில் அதிகம் வெளிப்படுகிறது.

    அரவிந்தன் இலக்கியத் தடம் என்ற நூல் வெளிவர வேண்டும். அதுவே, இத்தகைய அக்கப்போர்களுக்கு உரிய பதிலாக இருக்கும்.

    Share
  • அஞ்சலி: எழுத்தாளர் அரவிந்தன்

    அஞ்சலி: எழுத்தாளர் அரவிந்தன்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர், காலச்சுவடு பதிப்பாசிரியர் அரவிந்தன் (D.i. Aravindan) மறைந்த செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் 25 ஆண்டுகளாக என் நண்பர். 2001 – 2003 காலக்கட்டத்தில் உலகத் தமிழ் மின்னிதழில் அவர் ஆசிரியராக இருந்த போது, அவரை நேர்கண்டேன். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் எம்.பில். ஆய்வேட்டிலும், அதே பெயரில் பின்னர் வெளியான புத்தகத்திலும் அந்த நேர்காணல் இடம்பெற்றது. அதன் பிறகு பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்து வந்தோம்.

    அமுதசுரபியில் (2003 – 2005) நான் ஆசிரியராக இருந்தபோது, சுந்தர ராமசாமி குறித்த விமர்சனங்களை ஓர் இதழில் வெளியிட்டோம். வெங்கட் சாமிநாதன், கிருஷ்ணன் வெங்கடாசலம் Krishnan Venkatachalam உள்ளிட்டோர், சு.ரா.வை விமர்சித்து எழுதினர். அதற்குப் பிறகு, சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சாம்பர்) ஒரு முறை சுந்தர ராமசாமி பேசினார். அவர் பேசி முடித்து அரவிந்தனுடன் வெளியே வந்தார். அப்போது, எதிரே நான் வந்தேன். சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன், இவர்தான் அண்ணாகண்ணன் என அறிமுகப்படுத்தினார். ஓ, நீங்கள்தானா என்று சு.ரா. சற்றே கடுமையாக ஏறிட்டுப் பார்த்தார். நீங்கள் நன்றாகப் பேசினீர்கள் என்றேன். நான் எப்போதுமே நன்றாகப் பேசுவேன் என்றார். நான், சுந்தர ராமசாமியைச் சந்தித்ததற்கு இருந்த ஒரே சாட்சியான அரவிந்தனும் இப்போது இல்லை.

    புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புத் திரையிடலுக்கு அழைப்பார்கள். அவற்றில் அரவிந்தனுடன் இணைந்து திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். பிஆர்ஓ நிகில் முருகன், அவரை நல்ல கிரிட்டிக் (விமர்சகர்) என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்துவார்.

    அரவிந்தன், அழுத்தமான விமர்சனப் பார்வை கொண்டவர். ஆனால், மென்மையான, அமைதியான, கனிவான இயல்பு கொண்டவர். அரவிந்தன், இந்தியா டுடே, இந்து தமிழ் திசை போன்ற வணிக இதழ்களில் இருந்தாலும், தீவிரமான நடையிலேயே எழுதி வந்தார். மீண்டும் அவர் காலச்சுவடு நிறுவனத்துக்குத் திரும்பியது, ஒரு வகையில் வீடு திரும்பலே. ஆண்டுதோறும் சென்னைப் புத்தகக் காட்சியில் சந்தித்து வந்தோம்.

    எப்போதும் மழித்த முகத்துடன், சிரித்த முகத்துடன் இளைஞராகவே வலம் வந்தார். பெரிதாக எதற்கும் உணர்ச்சிவசப்பட மாட்டார். அவர் மனைவி ஸ்ரீதேவியும் அதே போன்று புன்னகை மாறாமல் இருப்பவர். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவரும் குழந்தைகளும் பெற வேண்டும். அரவிந்தன், நினைவுகளால் வாழ்வார். நித்தியத்தில் தோய்வார்.

    நெஞ்சார்ந்த அஞ்சலி.

    Share
  • வானவில் ரவியின் உன்னோடு நான் காட்டும் உள்ளக்கிடக்கை

    வானவில் ரவியின் உன்னோடு நான் காட்டும் உள்ளக்கிடக்கை

    முனைவர் கி. ராம்கணேஷ்
    உதவிப்பேராசிரியர் – தமிழ்த்துறை,
    பி. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் – 641 014

    முன்னுரை

    உலகில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை ஏதேனும் ஒரு தேடலை மையமாகக் கொண்டே செல்கிறது. தேடலுக்கான ஒவ்வொரு முயற்சியும் ஆழ்மனதின் அடியில் சிறு விதையாக விழுந்து பின்னர் விருட்சமாகி விழுதாகி நிலைபெறுகிறது. பாரதியின் வாழ்க்கையும் விடியலுக்குப் பகலவனாய் பல்வேறு கருத்துக்களை கருவாகச் சுமந்து பிரசவித்திருக்கிறது. கவிஞர் ரவியின் படைப்பும் பாரதியின் தீட்சண்யமான பார்வையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. கவிதையின் ஒவ்வொரு வார்த்தையும் அணுவைத்துளைத்து கடலைப் புகுத்துவதாய், மிகச்சிறந்த சொல்லாடல்களால் எட்டாத தொலைவில் இருக்கும் பலவற்றை நம்மிடையே ஈர்த்து வந்து பேசவைக்கிறது. இயற்றமிழும் நாடகத்தமிழும் எண்ணிலா அனுபவத்தைக் கொண்டு விளங்குகிறது. அவ்வகையில் கவிஞர் வானவில் ரவியின் ‘உன்னோடு நான்’ படைப்பை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    சொர்க்கத்தைக் காட்டுகிறேன்

    “அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்” என்பது தமிழ்ச்சமூகம் கண்ட மெய்ந்நெறியாகும். வீடடைதல் சொர்க்கத்தை அடைதல் எனச் சொல்லப்படுகிறது. நான்காவது நிலையாகிய வீட்டின்பத்தை அடைதலே மாந்தருக்குரிய இறுதி நிலையாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வீடுபேற்றினை அடைவதற்கு கவிஞர் ரவி தன்னுடைய கவிதையின் வாயிலாக நல்லதொரு வழியைக் காட்டிச் செல்கிறார். சிற்றின்ப நிலையினின்று நீங்கி பேரின்ப நிலையை அடைவதற்கான் வழிமுறைகள் கவிதையில் வெளிப்படுகின்றது. கவிதை எழுதினால் மட்டும் போதாது. அதை ரசிக்க ரசிகனோ, ரசிகையோ கட்டாயம் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் கவிதை முமுமைபெறாது என்பதை ரசிகனிடம் பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார் கவிஞரிடம் ரசிகன் அனுபவச்சூழலில் பங்கேற்க அனுமதி கேட்கிறான். அதற்குக் கவிஞர், “அனுமதியா? உனக்கா? நீ இல்லாமல் எந்தக் கவிதையும் முழுமை பெறாது ரசிகா! என் கவிதைகளை முழுமை செய்ய வந்த முழுநிலவே என்று வரவேற்கிறேன்” என்கிறார். அனுபவத்தை ரசிகன் அடைய தன்னுடைய சொற்களோடு பயணிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார் கவிஞர்.

    “என்
    சொற்களுக்குள் ஏறிக்கொள்
    சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
    கற்பனைப் புரவியை உன்
    கண்களில் பூட்டுகிறேன்”

    என்ற  வார்த்தைகளில் தன்னோடு பயணிக்க வேண்டுமென்றால் சொற்களுக்குள் ஏறிக்கொள்ள வேண்டும் என்கிறார் கவிஞர். சொற்கள் புரிந்தால்தான் அதனுடைய பொருள்கள் புலப்படும். கவிஞர் தான் பெற்ற அனுபவத்தை ரசிகனுக்கு புலப்படுத்த முடியும். கவிதையும் ரசிகனும் துலாக்கோலின் இரண்டு தட்டுகள் போன்று என்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே மேற்கண்ட கவிதையின் பொருளை உய்த்துணர முடிகின்றது.

    உலகில் படைப்பது மட்டுமே இயற்கை, கவிஞரின் வேலை. அதனை அனுபவிப்பதும் பயனடைவதும் ரசிகரின் வேலை. கற்பனை என்ற ஒற்றைச்சொல் உண்மையை மேலும் பட்டைதீட்டும் மகத்தானதொரு பணியை செவ்வனே செய்கிறது. கண்ணில் கண்டதையும் காணாததையும் ஒப்பனை செய்து முன்னிறுத்துகிறது. சொற்களுக்குள் மூழ்கி அதனோடு பயணித்தால் ரசிகனால் பரவசநிலையினை அடைய முடியும். “ நீ எதை  நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கு ரசிகனின் மனநிலையைச் சான்றாகக் காட்டலாம்.

    மனிதர்கள் எல்லாமும் உடனே கிடைக்க வேண்டும் என்ற மனநிலையை உடையவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானவர்களுக்கு இஃது சாத்தியமில்லை. பல துன்பங்களைக் கடந்த பின்னரே இன்பஊற்றை அறிய முடியும். இதைப் புரிந்து உணர்ந்தவர்கள் வெகுசிலரே. கவிஞர் இக்கருத்தை பின்வரும் வரிகளில்,

    “அதோ! அந்தக்
    கானல் நீரைக் கடந்து சென்றால்
    கற்பகச்சோலை வரும்”

    என இயல்பாக எடுத்துரைத்துள்ளார்.

    கவிஞனின் மனைவி

    கவிஞன் இறந்தாலும் அவனது கவிதை சாகாவரம் பெற்ற சிறப்பினை உடையது. காலங்கள் பல கடந்தாலும் உணர்வோடு ஒன்றி இருப்பது. கவிஞனது உடலுக்கு அழிவுண்டு. அவனது ஆன்மா கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கவிதை உலகில் அழிவென்ற பேச்சுக்கே இடமில்லை. தன்னால் நேரில் பார்க்க முடியாத, உணரமுடியாத ஒன்றை கவிதையின் மூலமாக உயிர்ப்படையச் செய்யும் ஆற்றல் தலைசிறந்த கவிஞனுக்கு உண்டு. இக்கருத்தை கவியரசர் கண்ணதாசனின் கவிதை வழியாக கவிஞர் ரவியால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை”

    – கவியரசர் கண்ணதாசன்.

    கவிஞன் இறந்துவிட்டான். அவனது உற்றார், உறவினர் அனைவரும் கதறித்துடிக்கின்றனர். அவனது பிணத்திற்குச் சடங்குகள் செய்யவும்,  அவனது உடலை எடுத்துச் செல்லவும் தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றன. இழவு வீட்டிற்கு தொடர்பில்லாதவள் போல் பெண்ணொருத்தி அமர்ந்திருக்கிறாள். அவளிடமிருந்து ஒருதுளிக்கண்ணீர் கூட புலப்படவில்லை. இத்தனைக்கும் அவள் வேறு யாருமில்லை. கவிஞனின் மனைவி. அவள் கவிஞனின் கவிதைகளில் அவனை உயிர்ப்புடையவனாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சலனமில்லாமல் கவிதைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அங்கிருப்பவர்கள் பிணத்தை அப்புறப்படுத்த வழி கேட்கின்றனர்.

    “புதைப்பதா எரிப்பதா
    அழுகிப் போகும் சடலத்தைத்தான்
    அப்புறப் படுத்த வழிகேட்கின்றார்
    அவள் மட்டும் அழவே இல்லை
    காரணம் அவளந்தக் கவிஞனின் மனைவியாம்”

    கவிஞனின் மனைவி அவன் இறந்ததாகக் கருதவில்லை என்பதைக் கவிதை பறைசாற்றியுள்ளது.

    சமுதாய உணர்வு

    கவிதைகள் வெறும் ரசனைக்கானது மட்டுமல்ல; வாழ்க்கைக்கானது, சமுதாயத்துக்கானது என்பதை நன்முறையில் கவிஞர். ரவி எடுத்துரைக்கிறார். “ சமுதாய உணர்வில்லாத கவிதைகள் உயிரற்றவை” என்ற பொதுவுடைமைத் தோழர் ஒருவர் சொன்ன கருத்தை மனதில் வைத்துக் கவிதையைப் புனைந்துள்ளார்.

    “சோத்துப் பஞ்சம் தனியுடைமை
    சாதி என்னும் பழங்கொடுமை
    பாத்துப் பாத்துப் புளிச்சுப் போச்சு
    பாடங்கேட்டுச் சலிச்சுப் போச்சு”

    பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுதல் நமது நாட்டிற்கே சிறப்பாக உண்டு என்பதைச் சான்றோர்கள் பல இடங்களில் காட்டியுள்ளனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உலகப் பொதுமறையை சிந்தித்துப் பார்ப்பவர்கள் குறைந்து விட்டனர். பஞ்சம், சாதி போன்ற பெருங்கொடுமைகள் சமுதாய வேர்களைச் செல்லரித்துப் போகச்செய்யும் சாபக்கேடுகள் இத்தகைய கொடுமைகளை கவிஞர் தம் கவிதை வழி  சாடியுள்ளார். “சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்ற திருநாவுக்கரசர் கருத்திற்கு ஒப்பானதாகக் கவிஞரின் கவிதை அமைந்துள்ளது. “எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்” என்ற பாரதியின் கருத்தில் ஆழங்கால் பட்டவரான கவிஞரின் மனதில் ஏற்பட்ட துயரநிலையைக் கவிதை புலப்படுத்துகிறது.

    “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்”

    என்ற வள்ளுவரின் கருத்தை மெய்ப்பிப்பது போல சாதியை ஒழிக்கிறேன்; பஞ்சத்தை போக்குகிறேன் என்ற சொற்கள் வலம் வருகின்றன. சொல்லியபடி நடப்பதில்லை. அந்த சலிப்புணர்வை கவிஞரின் வரிகள் வலிகளாய் உணர்த்துகின்றன.

    கவிதை என்னும் கலங்கரைவிளக்கம்

    கவிதை என்னும் நீருற்று, அருவியாய் கொட்டி ஆர்ப்பரிக்கும் தன்மை கொண்டது. மண்ணிலிருந்த வண்ணமே எட்டாத உயரத்தைத் தொடும் வல்லமை வாய்ந்தது. மனித மனத்தின் மகிழ்;ச்சியையும் ரணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. எப்படிப்பட்ட கருப்பொருளையும் கண்ணிவைத்துப் பிடிக்கும் ஆற்றல் கொண்டது. கண்கள் உறங்கிய போதும் உறங்காத தன்மை கொண்டது. மிகப் பெரிய சுதந்திரப்போராட்டத்தில் பாரதியின் மனதில் அக்கினிக்குஞ்சாய் விழுந்து நாடெல்லாம் பரவியது. அப்படிப்பட்ட கவிதையின் சிறப்பை கவிஞர் நன்முறையில் புனைந்துள்ளார்.

    “மனிதனை தெய்வமாக்கும் மகத்துவம்! நெஞ்சில்
    புனிதமே உயிர்க்க வைக்கும் புண்ணியம் கவிதை! உள்ளத்
    தனிமையைத் தகர்த்து வாசல் அமைப்பதும் கவிதையன்றோ
    இனியுமேன் தயங்கு கின்றாய் எழுந்துவா கவிதை சொல்வோம்”

    பூமிக்குள் இருக்கும் விதை போன்றது கவிதை. “விதைத்தவன் உறங்கலாம்; விதை உறங்காது” என்பதைப் போல உறங்காத தன்மை கொண்டது. கவிஞன் உறங்கவேண்டும் என்று நினைத்தாலும் கவிதை உறங்காது என்பதைக் கவிஞர் தெளிவுபட எடுத்துரைக்கிறார். உள்ளத்தில் இருக்கும் தனிமையை  விரட்டி வாசல் வைப்பது போன்றது என்ற வரி மகத்துவம் கொண்டது. காலமென்னும் கடலில் தத்தளிக்கும் மனமான படகுகளுக்கு கலங்கரை விளக்கமாய் கவிதை இலங்குகிறது.

    “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
    வாக்கினிலே ஒளி உண்டாகும்”

    என்பார் பாரதி. உள்ளத்தின் உண்மை  கவிதை வாயிலாக உலகை நல்வழிப்படுத்தும் தன்மை கொண்டது. வோர்ட்ஸ்வொர்த் கூறுவது போன்று “ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை” என்பதற்கிணங்க கவிஞர் ரவியின் கவிதை அவரது உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டுகிறது. “பணியுமாம் பெருமை” என்ற வள்ளுவத்தின் மெய்ம்மையை கவிஞர் ரவி நூலின் வரவேற்புரையில், “ தன்னைத் தானே ரசித்துக் கொள்வதற்காக என்னைக் கருவியாக்கி அன்னை பெய்த அமரவரிகளின் அணிவகுப்பை ‘என் கவிதைகள்’ என்று அழைக்கவும் கூசுகிறேன்” எனக் கூறுவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

    சமுதாய அவலம்

    காலங்கள் பல கடந்தும் விஞ்ஞான வளர்ச்சியடைந்தும் இன்னும் மனித மனங்கள் பல மூடப்பழக்கவழக்கங்களைக் கைக்கொண்டிருக்கின்றன. பெண்ணடிமை, ஜாதகம் போன்ற செயல்பாடுகளால் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். செவ்வாய் தோஷம், கைம்பெண் போன்ற கொடுமைகள் சமூகத்தில் தலைவிரித்தாடுகின்றன.

    “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்”

    எனப் பாடியுள்ளார் நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலாவான பாரதியார். மூடர்கள் பெண்ணுக்கான அறிவை மட்டும் கெடுக்கவில்லை, வாழ்க்கையையும் கெடுத்துள்ளனர் என்பதை பாரதியின் மனத்தின் அடிநாதம் போல கவிஞர் ரவி தம் கவிதையில் குறிப்பிட்டுக் காட்டிள்ளார். உமா என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடந்த கொடுமையை,

    “நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்
    நேர்மை முகப்பொலிவும்
    செவ்வாய் தோஷம் அவளுக்குத் தந்த
    சீர்வரிசை யன்றோ”

    என்ற வரிகளின் வாயிலாக எள்ளி நகையாடுகிறார்.

    “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்”

    என்ற பாரதியின் பெண்ணாளுமை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ளவில்லை என்பதை செவ்வாய்தோஷம் என்ற  ஒற்றை வார்த்தையின் வாயிலாக கவிஞர் உணர்த்தியுள்ளார். கடைசியாக பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை “ ஆண்மையற்ற சமுதாயத்தின் அவலப்பெருமூச்சு” எனக் குறிப்பிடுகிறார்.

    “எண்ணெய்க்கு பதில் அமிலம் ஊற்றி
    தீபம் ஏற்றுவதா”

    என்ற கவிதைவரிகளில் சிறப்பானதொரு உவமையைக் கையாண்டு ரணமான மனநிலையை மனக்கண் முன்னே  நிலைபெறச்செய்கிறார்.

    பாரதிக்காக அழக்கூடாதா!

    மனித வாழ்க்கையில் துன்பத்தை வெளிப்படுத்தி, ஆறுதல் தேட அழுகை சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. மனிதனின் முதல் மொழி அழுகை எனக் கூறினாலும் சாலப் பொருந்தும். தாய் கற்றுக் கொடுக்கும் தாய்மொழிக்கும் முன்னதாக, பிறந்த குழந்தை தன் உணர்வை வெளிப்படுத்த மூலமாக அழுகை விளங்குகிறது. அன்பின் வெளிப்பாடாகவும் அழுகை வெளிப்படுகிறது. பாரதி என்னும் வைரம் மண்ணுக்குள் புதைந்த தருணம் கவிஞர் ரவியின் மனதில் நிழலாடுகிறது.

    “அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா
    புதைமண லில்சில விதைகள் தூவப்
    புறப்பட் டானே
    போகும் வழியி லெல்லாம் நெஞ்சு
    மிதிபட் டானே…”

    இந்தியா சுதந்திரம் பெறவும், மக்களின் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும் பல இன்னல்களை அனுபவித்த பாரதியின் இறப்புக்காக கவிஞரின் மனம் பதைக்கிறது.

    விரக்தியெனும் வேதனை

    வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துன்பம் என்ற இரண்டு முனைகளைக் கொண்ட படகு போன்றது. பகலும் இரவும் போல மாறி வரும் இயல்பு கொண்டது. பருவ வயதில் பல்வேறு சிந்தனைகள் ஆட்டிப்படைக்கின்றன. பொருளாதாரம் என்ற நிலையைக் கடந்து இளமைப்பருவத்துக்கேயுரிய பல்வேறு உணர்வுகள் மனதை பல வழிகளில் செலுத்தி விடுகின்றது. இளமையில் காதல் என்னும் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் நேரத்தில் பல்வேறு எண்ணங்கள் உள்ளத்தில் ஏற்படுகின்றன என்பதை கவிஞர் ரவி தனக்கேயுரிய இரசனையோடு கவிதையில் கொடுத்திருக்கிறார்.

    “உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான்
    உற்றுப் பார்க்கிறேன்
    உருத்தெரி யாமல் நான்தான் அங்கே
    உதிர்ந்து கிடக்கிறேன்”

    மனதைத் திறந்து பார்த்தால் மட்டுமே நம்முடைய உரு உதிர்ந்து கிடப்பதை உணர முடியும். காதல் வரும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படும் உணர்வு அலாதியானது. காதலாகிய காற்று வரும் போது சிலநேரங்களில் படபடக்கும், சிலநேரங்களில் மனம் சிலிர்க்கும். காதல் விலகும் போது மரணமாகிய பெருவலி மூச்சைப் பிடிக்கும். வாழ்க்கையே வெறுத்து விடும். “ வாழ்வாவது மாயமிது ; மண்ணாவது திண்ணம்” என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் மனநிலைக்கு உள்ளம் வந்து விடுகிறது.

    “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை”

    என்ற  கவிஞர் கண்ணதாசன் வரிகளை காதல் உள்ளம் ஏற்பதில்லை. விரக்தியும் நம்பி;க்கையும் மாறி மாறி வந்து நிற்கும். இத்துடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற மனநிலை ஏற்பட்டு விடும். அதைக் கவிஞர் ரவி,

    “தூள்தூ ளான பாறைத் துகள்களாய்த்
    துடி துடிக்கிறேன்
    நாள்ஒவ் வொன்றும் நானே பலவாய்ப்
    பிரிந்து தேய்கிறேன்”

    என்ற வரிகளில் குறிப்பிடுகிறார். வாழ்வே மாயம் என்ற நிலையை காதல் வலி உணர்த்துகிறது.

    ஞாபகத்தை சுமக்க வேண்டுமா?

    ஞாபகம் என்பது மிகச்சிறந்த சக்தியாகவே பெரும்பாலானவர்களால் சொல்லப்படுகிறது. ஆனால், ஞாபகமானது துன்பத்தை நினைவிற்குக் கொண்டு வருவதில் முதலிடம் வகிக்கிறது. மறதி என்பது சாபம் அல்ல; வரம் என்பதை காதலித்துத் தோற்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால் புலனாகும். வாழ்வின் பல்வேறு சூழல்களில் துன்பமான ஞாபகங்கள் எதிர்காலச் சிந்தனைச் சிறகுகளை வெட்டி வீசிவிடுகின்றன.

    “காதல் என்ற கானகத்தில்
    கால்க டுக்க ஓடினேன்
    வார்த்தை நூறு கோத்து வைர
    மாலை என்று சூடினேன்”

    என்ற வரிகளின் வாயிலாக காதலால் ஏற்பட்ட வலியினை கவிஞர் ரவி புலனுணர்வின் வழி வெளிப்படுத்துகிறது. காதல் வெற்றியென்றால், அதைப் போன்ற சொர்க்கம் இல்லை ; தோல்வியென்றால் அதைப் போன்ற பாழ் நரகம் இல்லை எனக் கூறிவிடலாம்.

    மகாகவி பாரதியாரும் காதலினால் ஏற்பட்ட வலியை,

    “காதல் காதல் காதல்
    காதல் போயின்
    சாதல் சாதல் சாதல்”

    இவ்விதம் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்.

    காதலைப் பற்றி வேறொரிடத்தில்,

    “விழிகளாலே பாலமிட்டு நம்
    உணர்வுக ளைப் பரி மாறிக் கொள்வோம்
    சொற்க ளாலே முத்த மிட்டுச்
    சொப்ப னத்தேர் ஏறிச் செல்வோம்”

    என்ற வரிகளில் காதல் உணர்வைப் போன்றது; உயிரைப் போன்றது எனத் தெளிவுபடுத்துகிறார்.

    எதிர்காலத்தை நோக்கி

    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு கவிஞனின் பார்வை எதிர்காலத்தை நோக்கியதாக இருக்கும். ஏதிர்காலத்தைப் படைக்கும் படைப்பாளனாக கவிஞன் விளங்குகிறான். மகாகவி பாரதியாரின் கவிதைகளில் இதனைக் காணலாம்.

    “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

    என்ற உன்னத வரிகள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடப்பட்ட கவிஞரின் சிந்தனை. பாரதி மறைந்து விட்டாலும்  அவரது சிந்தனை நிலைத்துவிட்டது; நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பாரதியின் மேற்கண்ட பாடல் இந்தியா முழுவதும் ஒலித்தது. கவிஞன் எதிர்காலத்தைக் கணிக்கும் காலக்கணிதன் என்பதை உய்த்துணர முடிகிறது.

    கவிஞர் ரவியின் சிந்தனையிலும் எதிர்காலச் சிந்தனையை அறியமுடிகிறது. கவிஞர் ரசிகனிடத்தில் பேசுமிடத்தில் , “ இன்றைய புவிக்காலத்திலிருந்து பல ஆண்டுகள் முன்னேறி எதிர்காலத்துக்கு வந்து விட்டோம்” எனக் கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. எதிர்காலம் என்பது நம் தேவையை, எதிர்பார்ப்பை நிறைவேற்றச் செய்கின்ற ஓரிடமாக  அமைகிறது. கற்பனையும் சில நேரங்களில் எதிர்காலத்தை உருவாக்குகிறது.

    “ நெருங்கி விட்டான் நிமிர்கிறேன் – அட
    எத்தனை முறையிவனைச் சந்தித் துள்ளேன்
    எத்தனை முறையிவன்
    என்னைத் தேடி வந்துள்ளான்
    என்னைக் கூட்டிச் சென்றுள்ளான்
    ஒருமுறை கூடப் பேசிய தில்லை
    ஊர்பேர் எதையும் கூறியதில்லை”

    என்ற வரிகளில் கவிஞர் ரவியுடன் முகம் தெரியாத ஒரு மனிதர் பயணிப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. கவிஞருக்கென ஓருலகம் உண்டு. அங்கு கவிஞரே முடிசூடா மன்னர் என்பதை கவிதைகளில் காண முடிகிறது.

    முடிவுரை

    கவிஞன் என்பவன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். எதிர்காலத்தை படைக்கும் வல்லமை கொண்டவன் என்பதைக் கவிஞர் ரவியின் வரிகளின் வாயிலாக உய்த்துணர முடிகிறது. கவிதையின் நோக்கம் இரசிப்புத் தன்மையை மட்டும் எதிர்நோக்கியதல்ல. அஃது தேவையை ஒட்டியது என்பதைக் கவிஞர் பலவிடங்களில் பறை சாற்றியுள்ளார்.

    குறிப்புதவி நூல்கள்

    1. திருக்குறள்
    2. பாரதியார் கவிதைகள்
    3. தேவாரம்
    4. கண்ணதாசன் கவிதைகள்

    Share
  • அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியில் ஆண்டவன் பூமியைப்  படைத்தான்
    அங்கே பற்பல உயிர்களைப் படைத்தான்
    மனிதனும் அதற்குள் வந்துமே அமைந்தான்
    மண்ணினை ஆண்டிடும் வளர்ச்சியும் பெற்றான்

    பற்பல உயிர்களைப் படைத்திட்ட ஆண்டவன்
    சிந்திக்கும் திறனை மனிதற்கே கொடுத்தான்
    சிந்திக்கும் திறனால் முந்தினான் மனிதன்
    முந்திய மனிதன் ஏந்தினான் அறிவை

    ஐந்தறி  வுடையவை அஃறிணை என்று
    ஆறறி    வுடையன உயர்திணை என்று
    சொன்னவன் மனிதன் சொல்லிய படியே
    தனக்குக் கீழே அனைத்தையும் வைத்தான்

    வைத்தவன் அறிவைத் தனக்குரித் தாக்கினான்
    விண்ணைத் தொட்டான் விதம்விதம் செய்தான்
    அறிவால் அனைத்தையும் ஆள்கிறான் அவனியில்
    அறிவுடன் அன்பை அணத்திடல் அவசியம்

    அன்பும் அவசியம் அறிவும் அவசியம்
    அன்பொரு கண்ணாய் அறிவொரு கண்ணாய்
    இப்புவி பெற்றவர் மனிதரே ஆவார்
    இரண்டும் இணைந்தால் எல்லாம் சிறக்கும்

    அறிவுளார் அனைவரும் அன்பினைப் பேணார்
    அறிவினால் அனைத்தும் பெருகிடும் என்குவார்
    பிறரது துன்பினை அறியா அறிவினால்
    பயனது உண்டா நினைத்துமே பாருங்கள்

    அன்புடன் இணையும் அறிவே சிறந்தது
    அன்பின் உருவமாய் ஆண்டவ  னிருக்கிறான்
    அன்பே சிவமென ஆன்றோர் மொழிந்தார்
    அறிவு தெளிந்திட அன்புதான் அவசியம்

    அறிவைக் கொண்டு அனைத்தும் பெறலாம்
    அறிவுக்குள் ஆண்டவன் அகப்பட மாட்டான்
    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்
    அன்புக்குள் ஆண்டவன் அகப்பட்டு  நிற்பான் !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 29

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (2)

     

    திருஞானசம்பந்தர் எனும் அந்த அருட்குழந்தையை சீர்காழியின் மக்கள் அனைவரும் திரண்டெழுந்து வந்து வரவேற்று அவருடைய இல்லம் சேர்ப்பித்தனர். ஏழாவது வயது தொடங்கியது அக்குழந்தைக்கு. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து `மறை நான்கும் தந்தோம்` என்று மந்திரங்கள் மொழிந்தனர் மறையோர். ஆனால் ஏதும் ஓதாதுணர்ந்த அந்த அருட்குழந்தை வேதங்களையெல்லாம் எடுத்து இயம்பினார். வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்களுக்கு இருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, அந்தி நேரத்தில் அந்தணர்கள் ஓத வேண்டிய மந்திரம் வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, `துஞ்சலும் துஞ்சல்` என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி அருளினார். ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியில் தங்கியிருந்த நாட்களில் மொழி மாற்று, மாலைமாற்று முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய இலக்கியங்களாகப் படைத்து சீர்காழி இறைவனைப் பாடி இன்புற்றார். திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை யாழில் இணைத்து இசைத்து மேலும் சிறப்பு செய்து வாழ்ந்து வந்தனர்.

    அருட்குழந்தையின் அற்புத அருளிப்பாட்டினைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அத்தவச் செல்வனை காணப் பெரிதும் விரும்பி சீர்காழி நோக்கிப் புறப்பட்டார். உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கியிருக்கும் பொழுது, கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்தவர் அவர் தன்னைக் காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு பூசிய பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதுமைக் கோலத்தில் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசரும் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் மலர்க்கையால் எடுத்து `அப்பரே` என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைக்க, இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணியப்பரை வழிபட திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சில நாட்கள் சீர்காழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பெருமான் பிரியா விடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டார்.

    திருஞானசம்பந்தர் தன் தந்தையாரான சிவபாதஇருதயரிடம் மீண்டும் தமது பயணத்தைத் தொடரும் விருப்பத்தைத் தெரிவிக்க, தமது பிள்ளையைப் பிரிய மனமில்லாத தந்தை சில தலங்கட்கு உடன் வருவதாகக் கூறி தாமும் அவரோடு உடன் செல்ல திருப்பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது.

    திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில், புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார். பண்டைய நாளில் மழவ நாடு என்று அழைக்கப்பட்ட, திருப்பாச்சிலாச்சிரமம் எனும் அழகிய ஊர், தற்போது திருச்சி மாவட்டத்தில் திருவாசி என வழங்கப்படுகிறது. குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்த அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் தம் முன்னோர் வழி ஈசனடியவராக இருந்தவர். வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியுள்ள அவனது மகள், பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்த வேளையில் உணர்வுகள் இருந்தும், உணர்ச்சிகள் இல்லாததொரு மயக்க நிலையை எட்டியிருந்தாள்.

     

    தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் கொல்லிமழவன் அவளை பாச்சிலாச்சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தி நம்பிக்கையுடன் பெருமானை அனுதினமும் வேண்டி நின்றார். இந்நிலையில் .திருஞானசம்பந்தர் திருத்தலப் பயணமாக அங்கு வந்ததை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தின் கொடிமரத்தின் முன் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு மன்னனை அழைத்து அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி அறிந்து ஈசனருளை வேண்டிப் பணிந்து, `துணிவளர்திங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

     

    துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்     

            சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்    

        பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ     

            வாரிட மும்பலி தேர்வர்    

        அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி     

            லாச்சிரா மத்துறை கின்ற    

        மணிவளர் கண்டரோ மங்கையை வாட     

            மயல்செய்வ தோஇவர் மாண்பே.  

     

    அப்பெண் மயக்கம் தெளிந்து நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவனும் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கினான்.

    திருப்பாச்சிலாச்சிராமத்துப் பரமனைத் தாள்பணிந்துப் போற்றிய ஞானசம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான பல தலங்களையும் வழிபட்டுத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு எனும் திருத்தலத்தைச் சென்று சேர்ந்தார். அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து மாதொருபாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் என்பதால் அப்பகுதியில் தோன்றும் பனி நோய் என்னும் குளிர் சுரம் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீலகண்டப் பெருமானைப் போற்றி `அவ்வினைக்கு இவ்வினை` என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்களுக்கு மட்டுமின்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

     

    அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
    உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
    கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
    செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

    சம்பந்தப்பெருமானின் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டிய இடமான, அந்நாட்களில் அப்பெருமான் தங்கியிருந்த அத்திருமடம் இன்றும் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

     

    திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டு, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்tகூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக்கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்த அந்த காலம் இளவேனிற் பருவம் தொடங்கிய காலம். திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் திருத்தலம் வந்தடைந்தார். அந்த உச்சிப் பொழுதில் கடும் வெப்பம் தாக்க அதனைச் சற்றும் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடங்கினார்.

     

    அப்போது இறையருளால் சிவபூத கணங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு `எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர்` எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக்கொள்ளத் தகுவது எனக்கூறிப் பணிந்தார். ஞானசம்பந்தப் பெருமான் இறைவனது பெருங் கருணையை வியந்தவாறு `பாடல் மறை` பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் வழிபட்டுத் திருவாவடுதுறையைச் சென்று சேர்ந்தார்.

     

    வழிபாடு செய்து தங்கியிருந்தபோது சிவபாத இருதயர் அன்பு மகனைக் காண வந்தவர், தான் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.

     

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே

     

    சிவபூதம் ஒன்று ஆயிரம் பைம் பொற்காசுகள் நிரம்பிய உலவாக்கிழியை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழியனுப்பி வைத்தவர், இப்பதிகத்தை நம்பிக்கையோடு ஓதும் அடியவர்களுக்கும் வழித்துன்பம் நீங்கி, இன்பம் பெருகும் என்பதையும், சம்பந்தர் வாக்கு சத்தியவாக்கு என்பதையும் விளங்கச் செய்கிறார்.

    ஞானசம்பந்தரும், அடியார்களும் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் எனும் அருட்பதியை அடைந்தனர். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர் என்பதால் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர்.

     

    பாணர் தம் உறவினர்களோடு உரையாடுகையில் பிள்ளையாரின் திருப்பாசுரங்களை யாழில் வாசிக்கும் பெரும்பேறு பெற்றமையை சிந்தை மகிழச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசைச் சிறப்புக்கு பாணரின் யாழ் வாசிப்பே காரணம் எனக் கூறினர். அதைக் கேட்டு பதைபதைத்த பாணர் மனம் பொறாது சிந்தை நொந்து ஞானசம்பந்தரைப் பணிந்தவர், யாழ்க்கருவியில் அடங்காத திருப்பாசுரத்தை பாடியருள வேண்டும் என விண்ணப்பித்தார். ஞானசம்பந்தரும் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத,  இசைக் கருவிக்கு அப்பாற்பட்ட கூறுடைய `மாதர் மடப்பிடியும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

     

    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்  

        நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 

    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்  

        அவர் படர் சடை நெடு முடியதோர் புனலர் 

    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை  

        இரைந்து தாழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந்து தாழிவினி 

    கரை மலர்ச்சிறை வண்டறை  

        எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

     

    யாழ்ப்பாணர் எப்போதும் போல அப்பாடலைத் தம் கருவியில் வாசிக்கத் தொடங்கியவர், அப்பாடல் யாழ்க்கருவியில் அடங்காததை உணர்ந்து நடுக்கமுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தவர், அதனை உடைத்தற்கும் ஓங்கினார். ஆனால் ஞானசம்பந்தர் ஓங்கிய கையைப் பிடித்து, அதனைத் தடுத்து, இறைவன் திருவருட்கருணையெல்லாம் இவ்யாழில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் சிந்தையில் அளவுபடாப் பதிக இசை, செயலிலும் எய்தாதலின், இந்த யாழ் கொண்டே இறைவர் திருப்பதிக இசையினை இயன்றவாறு வாசிப்பீர், ஏழிசையாய் உள்ள எம்பெருமான் திருப்புகழை எவ்வாறு கருவியால் கட்டுப்படுத்த இயலும் என்று கூறினார். பாணரும் பின்னர் அப்பாடலை யாழில் இட்டு வாசித்தார். சில நாட்கள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து `போகமார்த்த பூண் முலையாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்று ஈசனை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

     

    சாத்தமங்கை என்பது சோழ நாட்டுத் திருத்தலம். தற்போது நாகப்பட்டிணம் தாலுக்காவில் அமைந்துள்ள தலம் இது. சீலமிக்க நீலநக்கர் எனும் அந்தணர் ஒருவர் அங்கு வாழ்ந்து வந்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள பெருமானையும், அடியவர்களையும், தம் குருநாதரான பிள்ளையாரையும் போற்றிப் பரவும் பெற்றியர் அவர். ஞானப்பிள்ளையார் தம் ஊர் நோக்கி வரும் செய்தியறிந்து பெருமகிழ்வுற்றவர், அவரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். இறைவனை வழிபட்டவர், அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தையும் பாடினார். அவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருநாகைக் காரோணமுடையாரைப் பணிந்து, பின்னர் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று `பைங்கோட்டு மலர்ப் புன்னை` எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார். திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.

     

    ஊரே ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து விடியும்வரை அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஞானசம்பந்தர் அதிகாலை எழுந்து புனித நீராடி ஆலயம் செல்லும் வழியில் அழுகுரல் வந்த திக்கு நோக்கிச் சென்றார். அங்கு ஒரு பழைய மடம் இருந்த்து. அங்கு அவர் கண்ட காட்சி மிக அவலமானதாக இருந்தது. அம்மடத்தின் ஒரு புறத்தே ஒரு மனிதன் இறந்து கிடக்க மற்றொரு புறத்தே ஒரு பெண் ஆறாத்துயரத்தோடு கதறியபடி இருந்தாள். சம்பந்தப் பெருமானைக் கண்ட அந்தப் பெண் அவர் திருப்பாதங்களில் விழுந்து கதறினாள். தன் விவரமும் கூறினாள். வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த தாமன் செட்டியார் என்பவரின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவனுக்கு மகளிர் எழுவர்.  இறந்து கிடக்கும் அவன் தன் மாமன் மகன் என்றும் கூறினாள்.

     

    வணிகனான அவன் முறைப் பெண்ணான தன்னை உடன் அழைத்துக் கொண்டு தனது ஊருக்குச் செல்லக் கிளம்பியிருந்தான். மாலை நேரம் ஆனதால் மேலும் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் ஆலயத்தின் அருகிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கியுள்ளார்கள். இரவில் அவள் மாமனை நாகம் தீண்டிவிட, அதன் விடம் தலைக்கேறி மயங்கிச் சரிந்துள்ளான் அவன். அவளோ மணமாகாத நிலையில் அவனைத் தொடவும் முடியாதவளாய் செய்வதறியாது குழம்பி நிற்கிறாள். பெற்றோருக்கும் கூடத் தெரியாமல் அவனுடன் வந்தவள் என்பதால் மேலும் திகைப்புற்று அழுது அரற்றினாள். அவளுடைய தந்தை அவனிடம் பெரும் பொருளைப் பெற்றுக்கொண்டு அவளுடைய தமக்கைகளைத் தருவதாகக் கூறிவிட்டு, அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஒவ்வொருவரையும் வேறு ஒரு மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டதால், தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அவனை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறாள். அவன் மீது கொண்ட காதலால் அவள் தன் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினாள்.

     

    ஞானசம்பந்தரும் அவள் கதையைக் கேட்டு மனம் நெகிழ்வுற்றாலும், இறந்தவர்களையெல்லாம் எழுப்புவது தன் பணியல்ல என்று நினைத்தாலும் ஆண்டவனையே சரணடைந்து சத்தியத்தைக் காக்க வந்த அடியவளுக்கு இது நேர்ந்திருக்கலாகாது என்று கருதி மருகல் பெருமானைப் பணிந்து அம்மங்கைக்கு நீதி நல்க வேண்டி நின்றார். `சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞானசம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
    திருஞானசம்பந்தர் திருமருகலில் பெருமான் திருவருளில் சிலநாள் மூழ்கியிருந்தபோது, சிறுத்தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். திருமருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து `அங்கமும் வேதமும்` என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத்தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச்சுரத்தை வழிபட்டுக் கொண்டு, பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் எனும் அருட்தலத்தை சென்றடைந்தார்.

    தொடரும்

     

     

    Share
  • பெண் கவிஞர்களின் கவிதைகளில் சமூகப் பிரச்சனைகள்

    முனைவர் ரா. திவ்யா
    உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
    என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி.
    dhivyaudhithr@gmail.com

    முன்னுரை

    ஒரு மொழியின் செல்வாக்கை அம்மொழியின் இலக்கிய வளத்தால் அறியலாம். பல்வேறு காலங்களில் காலத்தின் தேவைக்கேற்ப இலக்கியங்கள் தோன்றின. அவ்விலக்கியங்களில் ஒன்றான கவிதை நடைமுறையில் அரசியல், பொருளாதாரம், கல்வி, திருமணம், உடல் மொழி, தாய்மை, உழைப்பு மக்களின் வாழ்வியல் போன்ற உண்மைகளை வெளிப்படுத்துகிறது. பெண் என்றாலே அவள் தாயின் கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரை பிறர் சுமைகள் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளையும் சந்திப்பவளாகவே திகழ்கின்றாள், மேலும் பிரச்சனைகளை கவிதைகளில் பார்ப்பதோடு உலகத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் பெண் கவிஞர்கள் தங்கள் கவிதையில் முன் வைக்கின்றனர். இதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணின் வாழ்க்கை என்பது காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற மாறுபட்டு இருந்துள்ளன. பெண்ணின் அறிவிற்கும் அவரது விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாழ்க்கை அமையும் கவிதை தனக்கான இடத்தை கட்டமைக்கிறது.  நிதர்சனங்களை பேசி வருகிறது கவிதை இன்பம் மட்டுமல்ல ரத்தமும் சதையுமாக நம்மோடு கலந்திருக்கும் ஒன்றென உருமாறி விட்டது.  இவ்வாறு மாற்றத்தை தன் கவிதைகளில் ஏற்படுத்தியவர்களின் பெண்ணிய கவிஞர்களின் பங்கானது முக்கிய இடத்தை வைக்கிறது .

    பெண்கல்வி

    தமிழ்ச் சமுதாயத்தில் ஆண்கள் கற்கத் தடையில்லை. பெண்கள் கற்பதில் வீட்டிலும், வெளியிலும் தடையேற்படுகிறது. வரதட்சணை அதிகமாகக் கொடுக்க வேண்டுமெனவும் கருதிப் படிப்பைப் பாதியிலே நிறுத்தி விடுகின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும். கடிதம் எழுதுவதற்கும், ஊர்ப்பெயரை அறிந்து பேருந்தில் பயணம் செய்வதற்கும் போதுமான அளவு படித்தால் போதும் என்ற குறுகிய மனநிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறுகிய எண்ணம் கொண்ட பெற்றோர்களின் செயலை கவிதையின் காண முடிகிறது.

    “அப்பா மேலே படிக்கவேணும் என்றேன்
    தப்பாப் பேசாதே மாப்பிள்ளை பார்த்தாச்சு என்றார்
    அம்மா வகுப்பிலே நான் தான் முதல் என்றேன்.
    சும்மா இரு சமையல் தெரியுமா என்றான்
    அண்ணனாவ கைகொடுப்பான் என்றால்
    வண்ணக் கனவில் மூழ்கியிருந்தான்
    அடுத்தது அவன் முறையாயிற்றே”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    பெண்கள் பிறக்கும் பொழுதே அவர்களின் திருமண வயதைப் பெற்றோர்களே நிர்ணயித்து விடுகின்றனர்.

    “அம்மா நான் மிக நலம்
    அடிக்கடி வர வேண்டாம்
    அழுவதை நான் நிறுத்திவிட்டேன்
    அடுத்தமுறை அங்கே
    வரும்போது
    ஒரு சிநேகிதியை அழைத்து
    வருவேன்…
    முடிந்தால் அவளையும்
    மகளே என்று விளி…”    (தாமரை-ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    படிப்பிற்காக விடுதியில் தங்கியிருக்கின்ற நிலையில் அம்மா அப்பாவின் பிரிவினை தாங்கியிருக்க முடியாத சூழலில்  யாழ்ப்பாணத்துக்கார பெண் கூறிய கதைகளில் நான் அழுவதை நிறுத்தி விட்டேன் என்று கூறியிருக்கின்ற கதை மற்ற பெண்கள் படிப்பின் சூழலைக் கண்டு வேதனையை கவிதை வெளிப்படுத்துகிறது. ஒரு புறம் படிக்கும் சூழல் பெண்களை பாதிக்கும் நிலையினை  காணமுடிகிறது.

    திருமணம்

    ஆணும், பெண்ணும் இணைந்து ஒருமித்து வாழும் நிகழ்ச்சியே திருமணமாகும். ஆனால் திருமணம் என்ற நிகழ்வானது இன்றைய குழலில் குடும்பம் என்ற அமைப்பின் பொருளாதாரத்தைச் சார்ந்தது ஆகும். கைப்பிடிக்க வேண்டிய கணவனே, பெண்ணைப் பொருளீட்டும் கருவியாகப் பார்ப்பதை காணலாம்.

    ‘மூக்கும் முழியும் சுமார் தானாம்
    எனக்கு முத்தும் வைரமுமாய்
    மூக்குத்தி நேர் செய்து விடுவோம்
    கணக்கு அப்பாவின் வங்கி இருப்பு
    முழுதும் துடைத்தாயிற்று ஸ்கூட்டர்
    கேட்ட வாயை அடைத்தாயிற்று”

                        (தாமரை ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    ஆண் தன் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளக் கிடைத்த வாயிலாகவே பெண்ணைக் கருதும் நிலை வெளிப்படுகிறது. இன்றை நிலையில் திருமணம் தன் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஆண் தேடிக்கொள்ளும் பண முதலீடாக நினைக்கின்ற அவல நிலை சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டே  இருக்கிறது.

    “அப்பா சொன்னாரென
    பள்ளிக்குச் சென்றேன்
    தலைசிவினேன், சில
    நண்பர்களைத் தவிர்த்தேன்
    சட்டைபோட்டுக் கொண்டேன்,
    பல்துலக்கினேன், வழிபட்டேன்,
    கல்யாணம் கட்டிக்கொண்டேன்
    காத்திருக்கிறேன்
    என் முறை வருமென்று… ” (கனிமொழி – கருவறை வாசனை)

    கற்பதில் வேகமாகக் நிறுத்தி செல்தற்கும் பயணம் குறுகிய பெண்கள் தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் இருப்பதும், பெற்றோர்களின் விருப்பத்திற்காக மனதிற்குப் பிடிக்காத வரை திருமணம் செய்து கொள்ளுதலும், தானே தன் வாழ்க்கை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்ள முடியாத அடிமை நிலையில் ஏற்படும் சிக்கலான வாழ்க்கையையும் உரிமையற்ற நிலையையும் இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

    கற்புநிலை

    ஆண்வர்க்கம் போலியான கதைகளைக் கற்புக்குச் சொல்லி வந்ததம் தான் இன்னும் கற்பில் சிறந்தவர்கள் யார் என்னும் கேள்வி தேட வந்து கொண்டிருக்கிறது.

    “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?
    நூறாண்டுகள் ஓடியும்
    மக்களுக்கு சந்தேகம் தீரவில்லை”

                                                      (தாமரை – ஒரு சுதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

    என்று கவிஞர் சமுதாய மக்களின் அறியாமையைக் காட்டுகிறார்.  பாலியல் ரிதியான கொடுமைகளையும், தீராத ரணங்களையும், உணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுத்துகின்றனர். ஆணாதிக்கம் பெண் உடலில் மறைக்கப்பட்ட இடங்களின் அசைவுகளைக் கண்களால் இமைக்காமல் பார்க்கின்றனர்.

    “உடலின் அசைவுகளில்
    மறைக்கப்பட்ட பகுதிகளில்
    இமைகளே யற்று
    பதியும் கண்கள்” (சல்மா – பச்சை தேவதை)

    ஏதும் அறியாச் சிறுமியைப் பாலியல் வன்முறை செய்வதைச் சுட்டுவதாக இக்கவிதை அமைகிறது. தங்கள் விடுதலையை விட்டுக் கொடுக்கவும், தங்கள் தேவைகளை அடக்கிக் கொள்ளவும், தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொள்ளவும், எல்லாவற்றிலும் தங்களைப்  பழகியவர்கள் இந்தியப் பெண்கள். எனவே அவர்கள் தனி உரிமை என்பது தங்களுக்குத் தேவையில்லை என்று ஒரு தவறான தத்துவத்தின் கீழ் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவிஞர் பிரேமா,

    “வளர வேண்டிய வேர்கள்
    வரையறுக்கப்பட்ட தொட்டியில்
    இந்தியப் பெண்கள்” (இரா.பிரேமா 2000) எனும் கவிதையில் இந்தியப் பெண்களின் அவலமான நிலையினை சித்தரிக்கிறார்.

    தாய்மை

    ஒரு பெண் தாய்மையில் தான் முழுமையடைகிறாள். இது பெண்ணின் உரிமை எனவும், தாய், சேய் உறவு என்பது பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கிடையிலும் இயற்கையாக அமைந்த உயிரியல் அம்சமாகும்

    “எனக்குள் இருந்த குமிழ்
    இன்று
    எல்லாம் நிறைந்த பிரபஞ்சம்”  (மாலதிமைத்ரி – சங்கராபரணி)

    வளமைச் சமூகத்தின் குறியீடாக அமைந்தது தாய்மை இந்த யதார்த்தத்தைப் பதிவு செய்துள்ள கவிஞர்கள், கரு சுமப்பது பெண்களால் மட்டுமே இயலக்கூடிய அற்புதமான ஒரு நிகழ்வாகும். ஆனால் இன்றை தாய்மை என்பது சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

    “குன்றும் சரிவுமாய் உருமாறி வரும்
    என் நிலத்தின் பிரசவத் தழும்புகள்” (சுகிர்தராணி -இரவு மிருகம்)

    அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்  பெண்ணை, பிள்ளைப் பெற்றுத்தரும் இயத்திரமாக மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள் நிறைய பேர் பத்து மாதக் காலம் அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், துயரங்களையும் பெரும்பான்மையோர் மனதளவில் கூட உணர்வதில்லை.

    உழைக்கும் பெண்களின் நிலை

    பெண்கள் வீட்டில் இருப்பதால் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய கணவனை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இதைச் காரணமாக வைத்து பெண்களை அடிமைப்படுத்துகின்றனர் என்று ஒரு காலத்தில் கூறினார்கள். ஆனால் இன்று கல்வி கற்று பாதிக்கு மேல் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு வேலைக்குச் சென்றாலும் தங்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யக் கணவனிடமும் மாமனார், மாமியாரிடமும் கேட்சு வேண்டியிருக்கிறது இதனை கவிஞர்

    “அலுத்துக் களைத்து
    உள்ளே நுழைந்தால்
    அதட்டல் அவர்தான்”

                   (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    என்று மனைவியைத் திட்டும் கணவனின் செயலை சுட்டிக் காட்டுகிறார்.

    ஆணாதிக்கச் சமூகம்

    சில ஆண்கள் மனைவியை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து உல்லாசமாக வாழ்வர். மனைவியோ கைம்பெண்ணாக வாழ்வாள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெண்கள் அல்லல்படுவர் பிற பெண்ணுடன் தொடர்புடைய தந்தை தங்களுடன் இருந்த செயலை அங்கதச் சுவையுடன் கவிஞர் குறிப்பிடுகிறார்.

    “அந்த மாலை நாள் இரவை
    எங்களால் மறக்கவே முடியவில்லை
    அன்று தான் அப்பா எங்களுடன் இருந்தார்
    அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்”

                                                                (தாமரை – ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்)

    பெண்களின் எதிர்வினை

    பெண்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுவிட்டனர் அடிமைத்தனத்திலிருந்து ஓரளவு மீண்டு வந்துள்ளனர். நீ அன்பு செய்தால் நான் அன்பு செய்வேன். நீ கொலை செய்யத் துணிந்தால் நாள் அமைதியாக இருக்க மாட்டேன் என்று பெண்கள் எதிர்க்கின்றனர்.

    தொகுப்புரை

    ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கிய மரபை, கட்டுப்பாட்டை அடக்கு முறையை மீறி, சுய உணர்வோடு யதார்த்தமாக, பெண்ணின் பிரச்சனைகள் அவளின் சிக்கல்களை மட்டுமே அதிகமாக மையப்படுத்தி கவிதைப் புனைந்துள்ளனர் பெண் கவிஞர்கள் உரிமையை நிலை நாட்டுதல் விழிப்புணர்வூட்டல், ஊக்கப்படுத்துதல், வேட்கையை வெளிப்படுத்துதல் பெண்ணின் எதிர்வினைகள் போன்ற நிலைகளிலும் பெண்ணியக் கருத்துக்களோடு கவிதை வெளிப்படுத்துகிறது. பெண்மையின் வலிமை, சமூகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பு, உடல் சார்ந்த அரசியல், தன்னுணர்வு மற்றும் சம உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு வெளிப்படுகின்றன.

    துணைநூற்பட்டியல்

    1. கவிஞர் தாமரை      –   ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்  குமரன் பதிப்பகம், சென்னை-17 பதிப்பு ஆண்டு: 1999
    2. கவிஞர் கனிமொழி – கருவறை வாசனை, வ.உ.சி பதிப்பகம், சென்னை. பதிப்பு-2004
    3. கவிஞர் சல்மா – பச்சைத் தேவதை, காலச்சுவடு பதிப்பகம்
    4. மாலதி மைத்ரி  – சங்கராபரணி, காலச்சுவடு பதிப்பகம் . ஆண்டு 2013

    Share
  • போர் கொடுக்கும் பரிசு !

    போர் கொடுக்கும் பரிசு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    யாரோடும் பகைகொள்ளல் இல்லென்றால்
    போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
    போரினால் வரும் பொருந்தா நிலையென்ன
    ஊரழியும் உயிரழியும் உண்மையும் அழியும்

    எங்கும் பிணமும் இரத்த வாடையும்
    இடிபாடும் ஓலமும் ஒப்பாரியும் நிறையும்
    தங்கு தடையின்றி பஞ்சமும் பெருகும்
    தானமும் தர்மமும் தானழுது நிற்கும்

    போரிலே மடிகின்ற வீரர்களும் உயிர்தானே
    எதிரியாய் எண்ணி எறிகணைகள் வீசி
    மடிகின்ற மக்களும் மனித உயிர்தானே
    எண்ணியே பார்க்கா இந்தப்போர் ஏனோ

    புராணக் கதைகள் போர்பற்றிச் சொன்னது
    போர்நடந்த வேளை நாமங்கு இல்லை
    கதையிலே போர்பார்த்தோம் கற்பனையி லேற்றினோம்
    நிஜமான போரிப்போ கண்முன்னே காண்கிறோம்

    வெற்றிக் கொடியில் வீரம் இருக்காது
    அற்பத்தனும் அநியாயமும் நிறைந் திருக்கும்
    உயிர்களின் ஓலமும் ஊரெரியும் காட்சியும்
    வெற்றிக் கொடியாய் கம்பத்தில் பறக்கும்

    மனிதம் மடியும் மாண்புகள் அழியும்
    மாநிலமே மயனமாய் ஆகியே இருக்கும்
    பேயாட்சி நடக்கும் பிணமெங்கும் நிறையும்
    போர் கொடுக்கும் பரிசு இப்படித்தானிருக்கும் !

    Share
  • சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    நீரும் வேண்டும் நெருப்பும் வேண்டும்
    மழையும் வேண்டும் பனியும் வேண்டும்
    இருளும் வேண்டும் ஒளியும் வேண்டும்
    எல்லாம் இணைவதே இயற்கையின் ஒழுங்கு

    ஒழுங்காய் அமைந்தால் உலகம் செழிக்கும்
    ஒழுங்கு குலைந்தால் வளங்கள் மறையும்
    இயற்கை என்றுமே இன்னல் விளைக்கா
    இன்னல் விளைக்கவே மனிதன் வந்தான்

    காட்டில் வாழ்ந்தான் கடும் உழைப்பாலே
    வீட்டைக் கட்டினான் வீதிகள் அமைத்தான்
    நுண்மாண் அறிவால் விண்ணைத் தொட்டான்
    மண்ணை விண்ணை தன்வச மாக்கினான்

    மாநிலம் எங்கணும் மனிதனின் சாதனை
    பல்கிப் பெருகி பேருரு வானது
    இயற்கையின் போக்கை வளைத்திட  முனைந்தான்
    ஒழுங்குகள் தவறி விபரீதம் விளைந்தது

    எல்லை என்பது தொல்லை அல்ல
    தாண்டா திருந்தால் தவறுகள் நிகழா
    தவறெனத் தெரிந்தும் தாண்டியே நின்றால்
    தாங்காத் தண்டனை வந்துதான் சேரும்

    இயற்கை அமைப்பு ஒழுங்காய் அமைந்தது
    சமநிலை என்பதே இயற்கையின் ஒழுங்கு
    நுண்மாண் அறிவினால் உயர்ந்தோ மென்று
    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    Share
  • மேட் இன் கொரியா

    “மேட் இன் கொரியா” (2026) மார்ச் 12, 2026 அன்று வெளியான இப்படம், தனது கலாச்சாரங்களுக்கிடையிலான கதைக்களத்தின் காரணமாக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. ரா. கார்த்திக் எழுதி இயக்கிய ஒரு திரைப்படம். ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ பதாகையின் கீழ் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், பார்க் ஹே-ஜின், சி-ஹன் பேக் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் வசனங்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில், சியோலில் தனது கனவுகளைத் துரத்தும் ஒரு பெண்ணாகப் பிரியங்கா மோகன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப், தரண் குமார் மற்றும் சைமன் கே. கிங் ஆகியோர் இசையமைத்துள்ளனர்; ஒளிப்பதிவை பிரசன்னா குமார் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணியை அந்தோணி கையாண்டுள்ளார்.
    ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12, 2026 அன்று நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் நேரடியாக வெளியானது.
    பார்த்த மாத்திரத்தில் உடனடியாக நம் மனதைத் தாக்காவிட்டாலும், பார்த்து முடித்த பிறகு மனதில் தங்கிவிடும் ஒரு சுவையான படம். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் ஏதும் இன்றி, வாழ்க்கையின் உண்மையான போராட்டங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் யதார்த்தமான கதை. எளிமையான, நேர்மையான, அமைதியான சக்தி வாய்ந்த ஒரு கதை என்றால் அது மிகையில்லை.
    என்னுடைய, ‘செம்பவளம்’ புதினத்தின் ஆழமானக் கருவை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்துள்ள அற்புதமான கதை இது. கன்னியாகுமரி துறைமுகத்திலிருந்து கிளம்பிச் சென்ற செம்பவளம் எனும் தமிழ்நாட்டு இளவரசி கொரியா சென்று அந்த அரசனை மணமுடித்து, 150 ஆண்டுகள் வாழ்ந்து ஐந்து தலைவர்கள் ஆண்ட அந்த மண்ணை ஒரு சிறப்பு வாய்ந்த நாடாக உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறாள். இந்த வரலாற்று கதையை பள்ளியில் நாடகமாக அமைத்து அதில் கதாநாயகியாக நடித்த அந்தச் சிறுமி தன் வாழ்நாள் இலட்சியமாக தென்கொரியாவிற்குச் சென்று செம்பவளத்தின் நினைவிடத்தை ஒரு முறையேனும் தரிசித்து வரவேண்டும் என்பதுதான். வளர்ந்து பருவ மங்கையான பின் கொரியா செல்லும் வாய்ப்பைப் பெறுபவளின் வாழ்வியல் போராட்டமே இத்திரைக்கதை.
    நாடகத் தன்மையாலோ, திடீர்த் திருப்பங்கள் மூலமாகவோ நம்மைக் கவரும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை இப்படத்தில். வாழ்க்கையை அதன் இயல்பான அமைதியான போக்கிலும், சிக்கலான நேரங்களையும் வெகு இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ள படம். கதாபாத்திரங்கள், தாங்கள் தேர்ந்தெடுக்காத, எதிர்பார்க்காத சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய உண்மையான மனிதர்களைப் போல உணர்த்துகிறார்கள். அந்த வகையில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அவசரமாகக் கடந்து செல்லாமல், அவற்றைப் புரிந்துகொள்ள நேரம் அளிக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத சில இனிய தருணங்களும். கருத்தாக்கங்களிலிருந்தே இதன் தாக்கம் அதிகமாகிறது எனலாம். கதாநாயகர்கள் வில்லன்களை அடித்து நொறுக்குவதையும், காவல்துறை இறுதிக் காட்சியில் வந்து கதாநாயகியைக் காப்பாற்றும் படங்களையேப் பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு இப்படம் மெதுவாக ஊர்ந்து செல்வது போன்று தோன்றலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருவேளை அந்த மகிழ்ச்சியான முடிவைத் தராமல் போகலாம்! ‘மேட் இன் கொரியா’ என்ற இந்தப் புதிய தொடர் பிரியங்கா அருள்மோகன், ரிஷிகாந்த், ஹியூன் பின், ஜங் வூ – சங் போன்றவர்களின் நடிப்பில், வூ மின் – ஹோ வின் இயக்கத்தில் சிறப்பாக அமைந்துள்ள படம். வாழ்க்கை என்பது முடியப்போகிறது என்று அதிரும் நேரத்தில், அப்படியல்ல அதுதான் வாழ்க்கையின் ஒரு புதிய ஆரம்பம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு அருமையான படம்!
    Share
  • பல்லழகன் – பகுதி 25 (நிறைவுப் பகுதி)

    திவாகர்

     

    “உனக்கு யாருடா சொன்னா இது.. அதுவும் நான் அன்னிக்கு எப்பவோ செஞ்ச காரியத்தை உனக்கு இப்போ வந்து யாருடா சொன்னாங்க?”

     

    ““சொல்லு.. உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் சேர்த்துக் கொன்னதையும் பாட்டி எனக்கு எப்பவோ ஒரு கடிதத்துல எழுதி என் பழைய புத்தகத்துல வெச்சிருந்தாங்க.. அதுலேர்ந்துதான் கண்டுபிடிச்சேன்.. அப்போ நீ செஞ்ச கொலையை ஒப்புக்கற இல்லையா?”

     

    “ஆமாண்டா.. ஆமாம்.. நான் பாவம் பண்ணேன்னு யார்கிட்டய்யாவது ஒப்புக்கணுமில்லே.. உன் கிட்டே சொல்லறேன்.. நான் என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் கொன்னது வாஸ்தவம்தான்..”

     

    “எதுக்காக அவங்களைக் கொலை பண்ணினே..எப்படி கொலை பண்ணினே”

     

    கந்தசாமி முனகினார்.. பேச்சு வரவில்லை.. மறுபடி கேட்டான்.

     

    சொல்லு..”

     

    “ஆமாண்டா.. நான் என் தம்பி பொண்டாட்டி மேல ஆசப்பட்டுக் கூப்பிட்டேன். அந்தத் தம்பி பார்த்துட்டு அண்ணன்னு கூட மரியாதை கொடுக்காம என்னைப் பெரிய கம்பாலே அடி அடின்னு அடிச்சான். அந்தக் கோபம் தாங்காம அவங்க வீட்டுல தூங்கறச்சே ரெண்டு பேர் கழுத்தையும் ஒண்ணா கட்டி அதே துணியாலே நெறிச்சுக் கொலை பண்ணி அப்படியே தூக்குல மாட்டி விட்டேன். இதை எங்கம்மா.. உங்க பாட்டி பார்த்தது கூட வாஸ்தவம்.. அது கோபத்துல ஒரு ஆவேசத்துல செஞ்சதுடா.. அதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு ஏன் பழி வாங்கணும்டா.?”.

     

    சட்டென அவன் ஃபோனைத் தன் கையில் எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.

     

    “உனக்கு நீ செஞ்சதே ஒரு குற்றமா கூட தெரியலே இல்லே.. உனக்கு சாவு வரக்கூடாதுடா.. இப்போ மார்புல வலதுபக்கம் ஓரமா பாய்ஞ்ச குண்டோட அவஸ்தைப்பட்டு நீ உயிர் வாழணும். நீ யார்கிட்டே போய் கம்ப்ளெயின் பண்ணினா கூட என்னை உன்னால குற்றம் சாட்ட முடியாது.. நான் நாளைக் காலைல வருவேன். ஆஸ்பத்திரில வந்து பார்ப்பேன். உன்னை அப்பப்போ வந்து இப்படியெல்லாம் துன்புறுத்தப் போறேன்.. நீ பண்ண ஒவ்வொரு பாவத்துக்கும் நீ அனுபவிக்கணும்.. உனக்கு சாவு மட்டும் வரக்கூடாதுன்னுதான் வலது மார்ல அதுவும் ஓரமா சுட்டேன்.. அடுத்த தடவை இப்படி வருவேன்.. யாருக்கும் தெரியாம உன் கையை வெட்டுவேன்.. அந்தக் கைதானே இ[ப்படி ஒரு கோரத்தைப் பண்ணினது.. இன்னொரு விஷயம் நீ சொன்ன விஷயத்தை வீடியோ ரிகார்ட் பண்ணியிருக்கேன்.. எப்போ எங்கே யூஸ் பண்ணனுமோ அப்போ அங்கே யூஸ் பண்ணப் போறேன்”

     

    துப்பாக்கியை தன் கைக்குட்டையால் நன்றாகத் துடைத்து விட்டு மறுபடியும் அதை பீரோவில் வைத்துவிட்டுக் கிளம்புகிறான்.. கந்தசாமி மயக்கமாகப் பார்க்கிறார்..

     

    “டே,, கொஞ்சம் தண்ணி குடுடா.. தண்ணி வேணும்டா…”

     

    “இப்படித்தான் அவஸ்தைப்படணும்.. வெறி நாயா நீ செஞ்ச அந்தக் காரியத்துக்கும் நீ அனுபவிக்கணும்.”

     

    “தண்ணீ.. தண்ணீ வேணும்டா. தண்ணீ. “ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்…

     

    அவன் முகத்தில் ஒரு திருப்தி. அவன் பீரோ ஹேண்டிலைத் துடைக்கிறான்.. பிறகு உள்கதவு தாழ்ப்பாளையும் தன் கைகுட்டையால் துடைக்கிறான். தன் கை எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் துடைத்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்புகிறான். தன் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். கிளம்பிப் போய்விடுகிறான்.

     

    மறுபடியும் கோம்டியின் கிலினிக்கில்

     

    “எங்கம்மா எப்படி செத்தாங்கன்னு பெரியம்மா சொன்னதா ஏன் சொல்லலைன்னா அந்தம்மா பேருல இனிமேயும் எந்தக் கறையும் படக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். அதனால் செத்துப் போன பாட்டி சின்னதா எழுதிப் பழைய புத்தகத்துல வெச்சிருந்தத மாத்திரம் சொன்னேன். அதனாலதான் அவனும் என் பாட்டி இவன் கொலை செஞ்சதை நேரா பார்த்ததை ஒப்புகொண்டான்.”.

     

    “புரியறது.. உங்க பெரியப்பாவுக்கு நீங்கதான் பழி வாங்கறீங்கன்றது நல்லாத் தெரியணும். அதே சமயத்துல அது செஞ்சதே நீங்கதான்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இத்தனை ரிஸ்க் எடுத்துச் செஞ்சீங்கங்கிறது எனக்கு நல்லாவே புரியுது!”

     

    “என்னோட ஒரே திட்டம் அவன் குண்டடி படணும். ஆனா சாகக்கூடாது. அவனைப் பயமுறுத்தி அவன்கிட்டே ஸ்டேட்மென்ட் வாங்கணும்.. மறுபடியும் இப்படி ஏதாவது அலிபியோட போய் அவனைத் துன்புறுத்தணும்.. அந்த ஸ்டேட்மென்ட் எனக்கு ஒரு பாதுகாப்புக்காகத்தான் வாங்கினேன். எனக்கு முரளியும் சுந்தரும் அந்த நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பாங்கன்ற விஷயம் கூட நல்லதாப் போச்சு. அப்படியும் ஏடாகூடமா ஏதேனும் ஆகிடுச்சுனா எனக்கு ஒரு புரொடெக்‌ஷன் வேணும். அவ்வளவுதான். அவன் சாகக்கூடாதுங்கிற விஷயத்துல ரொம்பக் கவனமா இருந்துதான் யோசிச்சு சுட்டேன்.. என் திட்டமும் கூட அப்படித்தான். அதனாலதானே நான் ரயில் வண்டி திட்டத்தையே ரெண்டு நாள் யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தேன். அடுத்த நாள் காலையிலே அப்பதான் ட்ரெயின்ல வந்தது போல அவனை ஆஸ்பத்திரியிலே பார்க்கணும்.. நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும்.. அவன் அவஸ்தையை ரசிக்கணும்.. இவ்வளவுதான்.. எனக்கு இன்னொருத்தரைக் கொலை பண்ணனும்னு தோணலைங்க.. சினிமாவுல வேணா உணர்ச்சிகரமா பேசி அவனை அடி அடின்னு அடிச்சுக் கொல்லலாம். இது நிஜ வாழ்க்கைல நடந்த கோரம். ஆனா அவன் துன்பத்தை அவன் அனுபவிக்கணும். வாழ் நாள் பூரா தான் பண்ண பாவத்தை தானே சிந்திக்கணும்.. அவ்வளவுதான்.. சிம்பிள்.”

     

    “புரியுது இப்போ.. இன்னொண்ணு.. கொலை செஞ்சுட்டு டிரெயினுல நீங்க வந்திருந்தீங்கன்னா உங்களாலே ரொம்ப கேசுவலா என்னோட விஜயவாடாவுல டிரெயின்ல எப்படி பேசியிருக்கமுடியும்?  ஆனா அவன் சாவான்னு நீங்க எதிர்ப்பார்க்கலே இல்லையா?” மெதுவான குரலில் சொன்னாள். முகத்தைத் துடைத்துக் கொண்டான் கல்யாண்.

     

    “நான் எதிர்பார்க்கலைதான். அவன் இதுக்கெல்லாம் அஞ்சமாட்டான்.. கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்கமாட்டான்னுதான் எதிர்பார்த்தேன்.. ஆனா கடவுள் வேற விதமா நினைச்சிருக்கணும்.. அதனாலதான் சீக்கிரமாவே அவனைக் கொண்டு போய்விட்டார். எப்பவுமே நம்ம திட்டம் சக்ஸஸ் ஆகுமா என்ன?.. பாருங்க.. வேற வழியில்லாம மெதுவா எழுந்து பீரோவைத் திறந்து துப்பாக்கியை எடுத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். எனக்கு நீங்க சொல்லறவரைக்கும் சுந்தர் விஷயமோ முரளி விஷயமோ எதுவும் தெரியாது. கந்தசாமியைப் பொருத்தவரை ரெண்டு விஷயம் அந்த நேரத்துல உறுத்தியிருக்கணும். ஒண்ணு எனக்குத் தெரிஞ்சுபோன எங்கப்பா அம்மா கொலை விஷயம் அதனால அடிக்கடி என்னாலே பழிவாங்கப்படுவோம்ங்கிற பயம், இன்னொண்ணு இவன் அந்த விஜயா விஷயத்துல சுந்தர்கிட்டே ஒரு மிகப் பெரிய ஆதாரம் இருக்குங்கிறது அதுவும் தெரிஞ்சு போச்சுன்னா தன்னை யாரும் சும்மா விடமாட்டாங்கன்னு புரிஞ்சுதான் அவன் பீரோ வரைக்கும் நடந்து போய் துப்பாக்கியை எடுத்துத்  தற்கொலை பண்ணியிருக்கான். அதான் பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறையும் தரையில கூட ரத்தக் கறையும் படிஞ்சிருக்கு.. நான் துப்பாக்கியை நல்லா துடைச்சி பீரொவுல வெச்சுட்டுப் போனேனே.”

     

    கல்யாண் தன் ஃபோனைத் திறந்து மறுபடியும் ஒரு வீடியோவைக் காண்பிக்கிறான். அதில் கந்தசாமி தன் தம்பியையும் தம்பி பெண்டாட்டியை எப்படிக் கொன்றேன் என்று மெதுவாக சொல்லி அழுகிறார். அவருடைய முகம் மட்டுமே இருக்கிறது.

     

    கோம்டி தலையை அசைக்கிறாள்.

    “அன்னிக்கு சாயங்காலம் 5.27க்கு சென்னை ஏர்போர்ட்ல இண்டிகோ கௌண்டர்ல உங்க பேருல விஜயவாடாக்கு உங்க ஃப்ளைட் போர்டிங்க் பாஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்குன்னு எனக்கு தகவல் வந்தது. சாந்திதான் பார்த்துக் கொடுத்தா. நிச்சயமா நீங்க 5.20 மணிக்கு ஏர்போர்ட்ல் இருந்தீங்கன்னா மினிமம் பதினைந்து இருபது நிமிஷம் முன்னாடியே பெரியப்பா வீட்லேர்ந்து கிளம்பியிருக்கீங்க. ஸோ, நெத்திப் பொட்டுல போட்ட ரெண்டாவது குண்டு அஞ்சறை மணிக்குப் பாயறச்சே நீங்க அங்க இல்லேன்னு ஆதாரம் சொல்லறது. இதையும் நானும் யோசிச்சேன். கொல்லணும்னு இத்தனை பிளான் போட்டவர் ஏன் கொல்லாமல் வலது மார்புல மட்டும் காயப்படுத்திட்டுப் போறார்னு எனக்கு சந்தேகம் இருந்தது. அதை நிவர்த்தி பண்ணிட்டிங்க..”

     

    “அவ்வளவுதாங்க.. எங்கம்மாவுக்கும் எங்கப்பாவுக்கும் நேர்ந்த மரணம் மட்டுமல்லாம சுமதிக்கு நேர்ந்த அவமானங்கள், விஜயாவுக்கு ஏற்பட்ட கொடுமை இதெல்லாம் காரணத்துக்கு வலு சேர்த்திடுச்சு.  இப்படி ஒரு கொடூரமான மனுஷன் கூட வாழ்ந்திருக்கேன்னு நினைச்சுப் பாக்கறச்ச மனசு வலிக்கறதுதான். முரளிக்கு நேர்ந்த அவமானம்லாம் எனக்குப் பெரிசா படலே. அதுபோல சுந்தருக்கு ஏற்பட்ட கவலைங்க கூட என்னைப் பெரிசா அஃபெக்ட் பண்ணலே.. ஆனா சுமதி ஒரு விதத்துல, விஜயா இன்னொரு விதத்துலன்னு நிறைய பேருங்க இவனோட கொடுமைக்கு ஆளாகி இருக்காங்க.. இவங்களைக் காப்பாத்தற பொறுப்பையும் எடுத்துக்கணும் இல்லையா.. அத்தோட எனக்குள்ள இருக்கற மனசாட்சி என்னைக் கொலை பண்ற அளவுக்குக் கொண்டு போய்விடாதுங்க.”

     

    ரவியும் தலையை அசைத்தான். ‘‘ஆமா கோம்டி! கல்யாண் எங்கிட்டே முன்னமேயே இப்படித்தான் செய்யணும்.. இப்படி செஞ்சாதான் கந்தசாமி தன் வாழ்நாள் பூரா தண்டனை கிடைக்கும்னு சொன்னான். அவன் சாகக்கூடாதுடான்னு எங்கிட்டே சொல்லியிருக்கான். அப்படிப்பட்டவன் செத்துட்டான்னு அடுத்த நாள் மார்னிங்க் கல்யாண் ஃபோன் செஞ்சவுடனே நான் இங்கே வந்தேன்.. ஆனா நாம் இந்த கேஸுல உள்ளே போகப்போக இந்த சுந்தர் பேருல சந்தேகம் ரொம்ப டீப்பா போச்சு இல்லையா.. நானும் கல்யாணுமே இந்தமாதிரி இவங்களை அதான் இந்த ரெண்டு கஸின் கதைங்களை எதிர்பார்க்கலே.. ஒரு கட்டத்துல இந்தக் கொலையை சுந்தரே கூட ரெண்டாவதா வந்து பண்ணியிருக்கலாம்னுதான் நாங்களே நினைச்சோம். அதாவது ரெண்டாவது குண்டு கந்தசாமி நெத்தியில சுட்டதைச் சொல்லறேன். ஆனா அவன் பண்ணலேங்கிறது அவன் மகாபலிபுரத்துல இந்த கொலை நடந்த சாயங்காலம் இருந்த ரிசார்ட் பார், அவன் அதுக்கு பே பண்ணின பில்லிங்க் டைம் எல்லாமே சாட்சியா இருந்தது.’ ரவி ஆச்சரியமாக பேசினான்.

     

    திடீரென கோம்டி ஒரு சந்தேகம் கேட்டாள். ‘ஒருவேளை உங்க ஃப்ளைட் டிலே ஆகி விஜயவாடால வண்டியை தவறவிட்டீங்கன்னா என்ன செஞ்சிருப்பீங்க?’

     

    “நான் அதையும் யோசிச்சுப் பார்த்தேன் கோம்டி. அப்படி விமானம் டிலே ஆச்சுன்னாலும் வைசாக்’ல  டிரெயின்ல நான் ஏறியது அலிபியாக இருக்கணும்ங்கிறதுதான் என்னோட பிளான். ஒருவேளை விஜயவாடால ஹவுரா மெயில மிஸ் பண்ணிட்டா கூட நான் அடுத்த டிரெயினைப் பிடிச்சு சென்னை வந்திருப்பேன். நான் கொண்டு வந்த பெட்டில கூட அவ்வளவு துணில்லாம் இல்லே. அதனால அந்தப் பெட்டி போனா கூட எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லைதான். அப்படியே ஏன் ஹவுரா மெயில்ல பெட்டியைத் தவற விட்டு வேற வண்டில வந்தீங்கன்னு போலீஸ் துருவித் துருவிக் கேட்டா கூட வழில விஜயவாடா ஸ்டேஷன் பேரைச் சொல்லி டிஃபன் சாப்பிட இறங்கி வண்டியை தவறவிட்டு அடுத்த வண்டி சர்க்கார் எக்ஸ்பிரஸ் பிடிச்சு வந்தேன்னு சொல்வேன். விஜயவாடால  ஒரு செகண்ட் கிளாஸ் ஆர்டினரி டிக்கெட்  கூட வாங்கி ரெடியா வெச்சிருப்பேன். ஆனா ஹவுரா மெயில்ல வந்தாதான் பக்கா அலிபியா இருக்கும். ஏன்னா ஸ்டேஷனுக்கு முரளியும் சுந்தரும் வந்து மீட் பண்ணனும் இல்லையா.. நாங்க ஏற்கனவே திட்டமிட்டபடி எல்லாக் காரியத்தையும் முடிச்சுதான் வந்தேன். சங்கல்பம் பண்ணித்தானே இந்தக் காரியத்தைப் பண்ணினேன். நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு ஒரு நம்பிக்கை’.

     

    கோம்டி அவனை வருத்தத்தோடு பார்த்தாள்.

     

    “அடுத்து என்ன உங்க திட்டம்..?”

     

    “அடுத்து என்ன திட்டம்.. ஒண்ணுமில்லேங்க.. ரவிகிட்டே என் வைசாக் பிஸினஸை முழுசுமா கொடுத்துட்டேன். அவன் வேண்டாம்னு சொன்னாலும் அவனுக்கு கிட்டதட்ட வரதட்சிணை மாதிரி இருக்கட்டுமேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்..

     

    ‘வரதட்சிணையா?’

     

    ரவி கொஞ்சம் வெட்கப்பட்டுப் பேசினான்.

     

    ‘அப்படி எல்லாம் இல்லை கோம்டி.. நான் சுமதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். சுமதியை அடிக்கடி வந்து பார்த்துண்டேன் இல்லையா.. அப்போவே அவளோட நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவகிட்டயே கேட்டேன். கல்யாண் அண்ணாவோட ஃப்ரெண்டாச்சே. .. என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு சம்மதம்னு சொன்னா. சுமதியும் சம்மதிச்சவுடனேதான் கல்யாண்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டான். அத்தோட கல்யாண் விடாப்படியா இந்த பிஸினஸ் பூரா என்னதுன்னு சொல்றான். ஆனா இவனைத் தனியா எல்லாம் நான் விடமாட்டேன்’.

     

    ‘இருக்கட்டுமே கோம்டி. இன்னும் சுமதிக்குச் சேரவேண்டிய சொத்தையும் பணத்தையும் ஒழுங்கா சேர்க்கணும். விஜயாவை சுமதி இனிமே நல்லா பார்த்துப்பா.. முரளிக்கும் சுந்தருக்கும் ஏதாவது பணம் ஏற்பாடு பண்ணனும்.. இதுக்குல்லாம் எப்படியும் ஒரு வாரம் டைம் தேவைப்படும். அவ்வளவுதான்..’

     

    ரவி அவனை அணைத்துக்கொண்டான். ‘ஒண்ணு சொல்றேன் கோம்டி! ஒருவேளை நீயே இவன் கேஸை எடுத்துண்டு போலீஸ்கிட்ட போனாலும் நான் அவனுக்காக எப்படியும் போராடி வெளியிலே கொண்டுவந்துடுவேன். பலமான சாட்சிகளா நான், சுமதி, சுமதியோட அம்மா எல்லாத்துக்கும் மேலே கல்யாண் கந்தசாமிகிட்டேயிருந்து வாங்கிய வாக்குமூலம்.. இவ்வளவு ஏன்.. இவங்கப்பா அம்மா கொலையையும் திரும்ப எடுத்து அது தற்கொலை இல்லே, கந்தசாமி செஞ்ச கொலைன்னு அங்க திருச்சியிலும் கேஸ் போடலாம்னு எனக்கு ஒரு திட்டம் இருக்கு.’

     

    கல்யாண் அவனைக் குறுக்கிட்டான். ‘ஆனா அதை கோம்டி’யே தீர்மானிக்கட்டும் ரவி. நாம் எல்லாத்தையும் இப்போ சொல்லிட்டோம்.’ என்றவன் கோம்டியைப் பார்த்தான்.

     

    “சரிங்க.. இப்ப எல்லாமே தெரிஞ்சுகிட்டீங்க.. எத்தனைதான் நான் செஞ்சதை நியாயப்படுத்தினாலும் சட்டப்படி நான் பண்ணினது கூட ஒரு குற்றம்தான்.. ஆனா நான் சொன்ன கடமைங்க ஒருவாரத்துல முடிஞ்சவுடனே நீங்க சொல்றபடி கேட்கிறேன்.. அதுக்கப்பறம் என்னை என்ன பண்ணப் போறீங்களோ உங்க இஷ்டம்..!”

     

    மறுபடியும் அவனைப் பார்த்தாள்.

     

    “உங்களை நான் என்ன பண்றது? ம்.. சரி, இன்னிக்கு ராத்திரி போகட்டும். நாளைக்குக் காலைல இதுக்கு ஒரு வழி சொல்லறேன்.. நானும் யோசிக்க வேணாமா?”

     

    அவன் அவள் கிலினிக்கிலிருந்து எழுந்து செல்கிறான். அவன் போனவுடன் தன் மொபைலில் இருந்து சாந்தியைக் கூப்பிடுகிறாள்.

     

    “ஹேய் சாந்தி. அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ்க்குத்தானே நாம போகணும்.?”.

     

    “ஓ.. அப்ப நீயும் வர்றே இல்லையா. ஸோ ஹேப்பிடி! அமெரிக்கால இருக்கற எங்க சொந்தக்காரங்களுக்குச் சொல்லி கிலினிக் ஏற்பாடு பண்ணச் சொல்றேண்டி.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிஞ்சவரைக்கும் அமெரிக்காவில இருக்கற அத்தனை பேர் பல்லையும் பிடுங்கலாம். பில்லையும் நிறையப் போடலாம். நாளைக்கே ரெண்டு டிக்கெட் சொல்லிடறேண்டி..”

     

    “ரெண்டு இல்லடி.. மூணு டிக்கெட் சொல்லு..”

     

    “மூணாவது யாருடி?”

     

    “வேற யார்? நம்ம பல்லழகர்தான்..”

     

    “தெத்துப்பல்லனா.. அவன் எதுக்குடி?”

     

    “எப்படியும் நமக்கு அங்கே ஒரு நர்ஸோ இல்லை கம்பவுண்டரோ வேணும்டி.. பல்லழகர்தான் கம்பவுண்டர்..”

     

    ஒருமாதம் கழித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீட்டின் முன்னறையில் ‘டெண்டல் கிலினிக்’ என்ற போர்ட் இருக்கிறது. கல்யாண் அந்த வீட்டுக்கு வெளியே ஒரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கையில் ஒரு வெள்ளைக்காரன் அங்கு வருகிறான். ஆங்கிலத்தில் பேசுகிறான்.

     

    “எனக்கு இன்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க.. டாக்டர் கோ..ம்..டீ உள்ள இருக்காரா?”

     

    கோம்டி இல்லே.. கோமதி..

     

    நோ நோ.. டாக்டர் கோம்டி.. கோம்டி.. டெண்டல் சர்ஜன்.

     

    “உங்களுக்கு என்ன கம்ப்ளெயிண்ட்?” என்றவுடன் அவர் வாயைத் திறக்கிறார். அவருக்கும் ஒரு தெத்துப்பல் இருக்கிறது. அவரைத் தனியாக அழைத்துச் செல்கிறான்..

     

    “தெத்துப்பல்லை எடுக்கணுமா?”

     

    “ஆமாம்”

     

    “ஏன்?”

     

    “என் பார்ட்னருக்கு பிடிக்கலே..”

     

    “இதோ பார்.. பார்ட்னர்னா பெண்ணா இல்லை ஆணா.. கோவிச்சுக்காதே..

     

    ஹேய்,, பெண்தான்.. கேர்ள் ஃப்ரெண்ட். பியூடிஃபுல் கேர்ல்.

     

    இப்போ புரியுது. நான் எதுக்குக் கேட்டேன்னா இந்தப் பெண்களுக்கு எப்பவுமே தன் பார்ட்னர் தன்னை விட அழகா இருக்கறதுப் பிடிக்காது, அதுவும் ஆம்பிளைக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் வருதுன்னா பிடிக்கவே பிடிக்காது.. தெத்துப்பல் இருந்தாதான் அதிர்ஷ்டம் அதிகமா இருக்கும்.. தெத்துப்பல்லை அப்படியே வெச்சுண்டு அட்ஜுஸ்ட் பண்ணிண்டே போகக் கத்துக்கணும். உனக்கு ஒரு அதிர்ஷ்டம்தான்.. ஆனா என்னைப் பாரு எனக்கு ரெண்டு அதிர்ஷ்டம்.. ரெண்டு தெத்துப்பல்லு. புரியுதா? உனக்கு ஒண்ணுதானே இருக்கு. அப்படியே வெச்சுக்கோ..”

     

    ‘ஓ.. எக்ஸெல்லென்ட். புரியுது.. தெத்துப்பல்லுன்னா ப்யூடின்னு சொல்லறே.. நன்றி!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகிறான்.

     

    பின்னால் நின்று இதைக் கேட்கும் கோம்டி அவனைப் பார்க்கிறாள். திடீரென கத்துகிறாள்..

     

    “சாந்தி.. சீக்கிரம் வா இங்கே..”

     

    சாந்தி ஓடி வருகிறாள்.

     

    “என்னடி ஏன் கத்தறே?” என்றவளிடம் காதில் ஏதோ சொல்ல அவள் தலையாட்டுகிறாள். உள்ளறைக்குள் சென்று வந்து எதையோ அவள் கையில் மறைவாகக் கொடுக்க அவள் வாங்கிக் கொள்கிறாள்.

     

    “கொஞ்சம் உள்ள வர்றீங்களா கல்யாண்..?”

     

    கல்யாண் என்னவென்று புரியாமல் உள்ளே செல்கிறான்.

     

    உள்ளே சென்றவுடன் அவன் பக்கத்தில் ஆசையாக வருவது போல வந்த கோம்டி அவன் கையைப் பற்றுகிறாள். அவன் வெட்கப்படுகிறான்.. அவன் கையை மெல்லத் தடவிக்கொண்டே இருந்தவள் அவன் கண்ணை மூடி ரசிக்கும்போது சட்டென அவன் மேல்கையைப் பிடித்து இன்னொரு கையில் இருந்த இஞ்செக்ஷன் ஊசி மூலம் மயக்கமருந்து செலுத்துகிறாள். இதனை எதிர்ப்பார்க்காத அவன் அவள் மேலேயே சாய்கிறான்..

     

    “சாந்தி சீக்கிரம் வா.. சக்ஸஸ்..” என்று மறுபடியும் சாந்தியைக் கூப்பிட சாந்தி வருகிறாள். அவன் அவள் மேல் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து அங்கிருந்து போகிறாள்.

     

    “ஓ.. சாரி, ராங்க் டைம்ல வந்துட்டேனா?”

     

    “ஏய்.. ச்சீ.. முதல்ல நான் சொல்றதைச் செய்யுடி!” என்று அவள் சாந்திக்கு சில ஆணைகளைப் போடுகிறாள்.

    “நீ என்ன செய்யு.. முதல்ல அந்த டென்டல் சேரை இவன் சைஸுக்கு சரிபண்ணு.. அதுக்கப்பறம் இவனோட தெத்துப்பல்லை பிடுங்கி எடுக்கறதுக்கான டூல்ஸ் எடுத்து வெச்சுக்கோ.. அப்பறம் இப்போ ரிசெண்டா வந்த அமெரிக்கன் டெக்னாலஜிப்படி பல்லு பிடிங்கின சூட்டோடு சூடா புதுப்பல்லும் பொருத்திடலாம். என் ஹேண்ட்பாக்ல இவன் சைஸா பார்த்து ரெண்டு புது பல்லு வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவர்ல வெச்சிருக்கேன். அதையும் எடுத்துக்க”

     

    “ஏய்.. எல்லாம் எதிர்பார்த்துதான் ஏற்பாடு செஞ்சு கொண்டு வந்திருக்கியா.. பெரிய ஆளுடி!”

     

    “சரிடி.. நான் சொன்னதைச் செய்யேன்.. இவன்கூட நாலு ஊர் போகறதா இருந்தா இந்த தெத்துப்பல்லோட எப்படிப் போவேன்? இன்னிக்கு சான்ஸ் கிடைச்சுடுச்சு.. விடுவேனா? சரி.. சரி.. இவனை எங்கிட்டேயிருந்து விலக்குடி..”

     

    “இத்தனை நேரம் சுகமா அனுபவிச்ச இல்லே.. அப்படியே கிடக்கட்டும்.. நான் டூல்ஸ் கொண்டு வர வரைக்கும் அனுபவி..”

     

    கண்ணடித்து விட்டுச் செல்கிறாள். சிறிது நேரத்தில் எல்லா டூல்களையும் தயார் நிலையில் வைக்க கல்யாண் அந்த டெண்டல் சேரில் உட்கார வைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குள் தெத்துப் பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லும் பொருத்தப்படுகிறது.. கொஞ்ச நேரத்தில் அவன் கண் விழிக்க, வாயில் வலி சற்றே உணர, அவனுக்குக் கண்ணாடியைக் காண்பிக்கிறாள் கோம்டி.

     

    திடுக்கிடுகிறான். அவன் தெத்துப்பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லுடன் பார்க்க அவன் முகம் சோகமாகிறது.

     

    “ஆஹா.. என் அதிர்ஷ்டப் பல்லு போயிடுச்சா?” அவன் சோகத்தைப் புரிந்து கொள்கிறாள் கோம்டி.

     

    “இப்போதுதான் கல்யாண் உங்கள் முகத்தின் அழகு எடுப்பா இருக்கு.. நீங்க என் க்லினிக்ல அன்னிக்கு ராத்திரி உங்க பெரியப்பா எப்படி கொலையானார்ங்கிற உண்மையைச் சொல்லறச்சே ஒரு விஷயம் சொல்லிட்டு ஆரம்பிச்சீங்களே.. நினைவிருக்கா?”

     

    தலையை அசைத்து ‘இல்லை’ என சொன்னான்.

     

    “நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க..”

     

    “எதுவும் ஞாபகம் இல்லை கோம்டி..”

     

    “அன்னிக்கு ராத்திரி ரொம்ப சீரியஸ்ஸா என்னைப் பாராட்டிட்டு நீங்க சொன்னீங்களே..”

     

    “என்ன சொன்னேன்”

     

    “உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறவரு ரொம்ப அதிர்ஷ்டக்காரன்னீங்க.. ஞாபகமில்லே?..”

     

    “ஆமாம். சொன்னேன்.. இப்பவும் சொல்வேன்.. அதுக்கென்ன இப்போ?”

     

    “அந்த அதிர்ஷ்டக்காரர் நீங்கதான் கல்யாண்.. பார்த்தீங்களா.. உங்க தெத்துப்பல்லு போச்சு.. நான் அதிர்ஷ்டமா உங்களுக்குக் கிடைச்சிருக்கேன்.. உங்களுக்குக் கிடைச்ச தெத்துப் பல்லு அதிர்ஷ்டமா இல்லே.. நான் அதிர்ஷ்டமா”

     

    “கோமதி.. இல்லல்ல.. கோம்டி.. நிஜம்மாவா சொல்லறீங்க?”

     

    “நிஜம்தான் கல்யாண்.. எப்போ நான் யூ எஸ் வர முடிவு செஞ்சு உங்களையும் கூட வரணும்னு சொன்னேனோ அப்பவே நீங்கதான் என்னோட புருஷன்னும் முடிவு செஞ்சுதான் உங்களை அழைச்சிட்டு வந்தேன்.. உங்க மரமண்டைக்குதான் இன்னும் புரியலே..”

     

    “நிஜம்மாவே நான் இவ்வளோ அதிர்ஷ்டக்காரனா? அப்போ அந்த வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியன் சொன்னது கரெக்ட்தான், கொஞ்ச நாள்ல எனக்கு அதிர்ஷ்ட தேவதை தானாத் தேடி வரும்னு சொன்னான். ஆனா அது அவுராமெயில்ல ஆரம்பிச்சு அமெரிக்கா வரை தொடர்ந்து என்னோடு அப்படியே இருக்கும்னு சொல்லலே..”

     

    அப்போது “நான் உள்ளே வரலாமா?” எனும் குரல் கேட்க அங்கே சாந்தி நிற்கிறாள்.

     

    “இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த அந்த ஆள் வெளியே வெயிட்டிங்க். அந்த தெத்துப் பல்லோட வந்தா அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இனிமே தொடர்பை கட் பண்ணிடலாம்னு சொன்னாளாம்.. அது அதிர்ஷ்டம் இல்லயாம்.. எப்படியாவது எடுத்துடுங்கன்னு அங்க வெளில வெயிட்டிங்க் பண்றான்.. நாம   இப்போ ஆரம்பிக்கலாமா இல்லே கொஞ்ச நேரம் ஆகுமா..”

     

    சாந்தி சிரிக்கிறாள். கோம்டி புன்னகைத்துக் கொண்டே கல்யாணிடம் சொல்கிறாள்.

     

    “பார்த்தீங்களா.. தெத்துப்பல் போன அதிர்ஷ்டம்.. கையை விட்டுப் போன கேஸ் திரும்ப வந்திடுச்சு..”

     

    சிரிக்கிறாள்.. அவன் அவளை முறைக்கிறான். பின் அவனும் சேர்ந்து சிரிக்கிறான்.. தெத்துப் பல்லு போன சிரிப்பாக இருப்பதை அவனும் உணர்கிறான்.

     

    “என்ன இருந்தாலும் ஒரு தெத்துப்பல்லின் அழகான கதை முடிஞ்சு போச்சு இல்லே..”

     

    சாந்தியும் கூடவே சிரிக்கிறாள்.

     

    சுபம்.

    Share
  • பல்லழகன் – பகுதி – 24

     

     

    திவாகர்

     

    ‘ஒரு நாள் உங்கம்மா எங்கிட்டே வேகம் வேகமா ஓடிவந்தா.. என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்குதான் சொன்னா.. நிறைய தடவை கந்தசாமி தன்கிட்டே ஆசை வார்த்தை கூறி அடைய வர்றதாகவும் அவனைத் தடுக்கறது எப்படின்னு தெரியலன்னு அழுதா.. எனக்கு அதிர்ச்சிதான். நான் சொன்னேன். எப்படியாவது கந்தசாமியை நான் கல்யாணம் பண்ணிண்டு போயிடுவேன். கொஞ்ச நாள் பொறுத்து அவளைக் கணவனோடு தனிக்குடுத்தனம் போயிடுன்னேன்.. என்னவோ தெரியலே. அடுத்த ரெண்டு நாள்ல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே அங்க ஓடினேன்.. எனக்கு ஏதோ புரிஞ்சது.. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் போன பிறகுதான் கந்தசாமி எங்கிட்டே வந்தான். தான் ஏதோ வாழ்க்கைல தோத்துப் போயிட்டதா நாடகம் ஆடினான். நானே கேட்டேன்.. ‘ஏன்யா.. என் ஃப்ரெண்ட் உன் மேல புகார் சொல்லிச்சு.. அது உண்மையா’ன்னு பச்சையா கேட்டேன், அவன் மழுப்பிட்டான்.. ஆனா நான் நம்பலே.. அவனை நான் எங்கிட்டே பழகவே அனுமதிக்கலே.. இப்படி இன்னும் ஒரு வருஷம் கழிச்சுதான் எங்கிட்டே  அழுது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வசியம் பண்ணி அவன் வலைல நானும் விழுந்து ஒரு குழந்தையும் கொடுத்துட்டு தப்பிச்சுப் போயிட்டான் மகாபாவி. பெண்களை ஏமாத்தி மோசம் பண்றதுக்குன்னே இவன் பொறந்திருக்கான்பா..” பெரியம்மா அழுதாள்.

     

    “ஐய்யோ அம்மா… எப்படிம்மா எங்கம்மா அப்பா அவங்க செத்தாங்க?” தன் தலையில் கை வைத்து அடித்துக் கொண்டான் கல்யாண்.

     

    “ஆனா உங்கம்மாவுக்கும் உங்கப்பாவுக்கு நேர்ந்த கொடுமை ரொம்பப் பெரிசுன்னு அப்பவே தெரிஞ்சுண்டேன். என் கையிலே சுமதி ஒரு வருஷக் குழந்தை. இனிமேலும் இந்த வம்பு பேசும் ஊர்ப் பேச்சைக் காது கேட்க வாழ முடியாதுன்னு வேற வழியில்லாம உங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு கைக்குழந்தை சுமதியோட வந்தேன்பா. வீட்டுக்குள்ளே உங்க பாட்டிதான் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஓ’ன்னு அழுதாரு.. என் குழந்தை சுமதியைத் தூக்கி வெச்சிண்டாரு.. ‘ஆனா நீ இங்கே இருக்காதடி.. உன் தோழிக்கு நேர்ந்த அதே கொடுமை உனக்கு வேண்டாம்’னு அழுதாங்க.. பெரிய மவனே தன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கழுத்தை  நெறிச்சுக் கொன்னு போட்ட கொடுமை உனக்கும் வரவேண்டாம்னு சொன்னாங்கப்பா.. ‘அவன் கொன்னுட்டு தூக்குல போட்டுட்டாண்டி.. எங்கடி போய் சொல்லி நான் அழறது, நீ போடி.. நீ போடி இங்க இருக்காதடி..’ன்னு சொன்னாங்க.. எனக்கு அதிர்ச்சியா இருந்தது.. அப்பதான் அந்த கந்தசாமி வந்தான். என் குழந்தையை பாட்டி வெச்சிருந்ததைப் பார்த்துப் பிடுங்கி எங்கிட்டே தந்தான்.. என்னையும் கழுத்தைப் பிடிச்சு வெளியே துரத்திட்டான்பா.”

     

    பெரியம்மா அழுதாள். ‘அப்புறமா என்னைத் தேடி உங்க பாட்டி எங்க வீட்டுக்கு வந்துதுப்பா. ஒரு டைரிய எங்கிட்ட கொடுத்தாங்க. இந்த டைரில்லாம் நீ படிக்காதடி.. இந்த கல்யாண் பெரிய பையனா ஆனதுக்கப்பறமா இதை எப்படியாவது அவன்கிட்டே சேர்த்துடும்மா.. அப்ப வரைக்கும் உங்கிட்டயே பத்திரமா வெச்சுக்க.. கல்யாண்க்குத் தெரியட்டும்மா.. இப்படி ஒரு ராட்சஸன் இருக்கான்னு அவன் தெரிஞ்சுக்கணும். அவனுக்காக இந்தக் கையாலாகாத பாட்டிக்கிழவி கடைசி காலம் வரை அழுதுண்டேதான் இருந்தான்னு நீ சொல்லு.  இந்த உதவியை நீ செஞ்சாலே போதும்மா.. அவனையும் உங்க ரெண்டுபேரையும் தெய்வம் காப்பாத்தும். கவலைப்படாதீங்க.. அப்படின்னு சொல்லிட்டு அழுதுண்டே போயிட்டாங்க.’

     

    பெரியம்மா ஒரு பெட்டியைத் துழாவி ஒரு பழைய டைரியை எடுத்து வந்தாள். ‘நான் ஒவ்வொருதடவை நீ வரச்சே இந்த டைரியைக் கொடுக்கணும்னு நினைப்பேன்பா.. ஆனா இந்த டைரில என்ன எழுதியிருக்காங்க அந்தம்மான்னு எனக்கு அப்பவே ஒரு ஆசை.. அதுல படிச்சுப்பார்த்தேன். பயந்துட்டேன்பா.. உன் அப்பா அம்மாவை தூங்கறச்சே கழுத்தை நெறிச்சு அவங்களை தூக்குல மாட்டினதை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..நு’ எழுதியிருக்காப்பா.. நான் துடிச்சுப் போயிட்டேன். என்னோட உயிர்த்தோழியை இப்படி கொலை பண்ணவன் எங்களையும் இப்படி பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்?  யார்கிட்டயாவது சொன்னா உங்க பாட்டி குடும்பம் பாழாகும்.. எங்களுக்கும் அந்த நிலைமைதான் வரும்.. பாட்டி சொல்லறா மாதிரி ஆண்டவன் எப்பவாவது உன்னை என்னைப் பார்க்க அனுப்பினா அப்போ உனக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன்பா.. அத்தோட சுமதிக்கு இந்த விஷயம் தெரியாது. ஏற்கனவே இப்படிப்பட்ட அயோக்கியனை அப்பாவா அடைஞ்சிருக்கோம்னு அவளுக்குக் கோபம். அவன் பெரிய கொலைகாரன்னு தெரிஞ்சா அவ தற்கொலையே பண்ணிப்பாப்பா.. இதோ இன்னிக்கு ஒரு அவகாசம் இப்படி கிடைச்சுது. பலவருஷமா எங்கிட்ட இருந்த இந்த டைரியை பாட்டியோட ஆசைப்படி உங்கிட்டே சேர்த்துட்டேன்.  ஆனா இப்போ நீ ஆவேசப்படாதே.. அவசரப்படாதே.. உனக்கு வாழ்க்கை நல்லா அமையணும்னு ஒரு அம்மாவா எனக்கு ஆசை இருக்கு. நிதானமா எடுத்துக்கோ. உனக்கு உண்மை தெரியணும்னுதான் கொடுத்தேன். ஒருவேளை இதைப் போலீஸ்ல கொடுத்து அவனைப் பிடிச்சு தூக்குல போட்டா கூட உனக்கு சாட்சி சொல்ல இந்த அம்மா உன் பக்கத்துலேயே இருப்பாப்பா.. அவன் செத்தா சந்தோஷப்படற முத ஆளும் நான்தான்பா.. அவன் எப்படியும் என் கண்முன்னே துடிதுடிக்க சாகணும்னு அம்மனுக்கு காசு கூட முடிஞ்சு விட்டுருக்கேன்பா” அழுதாள்.

     

    மறுபடியும் தன் நிலைக்கு வந்தான் கல்யாண். கோம்டியின் கிலினிக்கில் கோம்டியைப் பார்த்தான்.

     

    “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லே கோம்டி.. தன்னோட தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கொன்னுட்டு நிம்மதியா ஒத்தன் ஊர்ல இருக்கற பெண்களையும் வசியப்படுத்திண்டு தன் இஷ்டத்துக்கு ஜாலியா வாழறதுங்கிறது யாராலதான் பொறுத்துக்க முடியும். இதை ரவிகிட்டே சொன்னதும்  உடனே உடனடியா அவனைக் கொலை பண்ணனும்ன்னு ஆவேசம்லாம் அவனுக்கு வந்தாலும் எனக்கு என் பாட்டி என் கண் முன்னால வந்தாங்க..  போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துத் தண்டனை வாங்கித் தர முடிஞ்சா அவங்க எப்பவோ இல்லே செஞ்சிருப்பாங்க.. சாட்சியையெல்லாம் சுத்தமா அழிச்சுட்டான் ஆனா அதுக்குள்ளே பாட்டியைய்யும் கொலை பண்ணிட்டா?’

     

    ரவி அவன் தோளைத் தட்டிக்கொடுத்தான். ‘அப்படியும் நான் சொன்னது அவங்கிட்டே போலீஸ்கிட்ட போகச் சொல்லித்தான். ஆனா ரொம்பநாள் கழிஞ்ச கேஸ் இல்லையா?’ போலீஸ் எப்படி டேக்கிள் பண்ணும்னு தெரியாது.’ ரவி சொல்லியதும் கல்யாண் ஆரம்பித்தான்.

     

    ‘இப்போ பாட்டியோட டைரியும் சாட்சி சொல்ல பெரியம்மாவும் இருக்கறச்சே இவனுக்குத் தண்டனை அதுவும் சட்டப்படி தூக்குத் தண்டனை வாங்கித் தரலாம்தான். ஆனா ஏற்கனவே பழைய கேஸ் ஆகி ஆறி அவலாகிப் போன இந்தக் கேஸை நிச்சயமா அஞ்சு வருஷமாவது இழுத்தடிப்பாங்க.. நமக்கு மனக்கஷ்டம்தான் மீறும்.  கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். இல்லே.. இவன் பண்ணின குற்றத்துக்கு இவனுக்குக் கொலை தண்டனை உடனே வாங்கித் தரதை விட அவன் சுயமா அனுபவிச்சு சாகணும்…. அதுவும் என் கையால நான் சுயமா அவனைத் தண்டிக்கணும்.. அப்பதான் என்னோட அம்மாவும் அப்பாவும் அவங்களோட  என்னோட பாட்டியோட ஆத்மாவும் நிம்மதியாகும்னு தோணிச்சு.”

     

    கோம்டி அவனை வருத்தத்துடன் பார்த்தாள். அவன் பார்க்காமல் தன் கண்ணில் வந்த நீரையும் துடைத்துக் கொண்டாள்.

     

    “கோம்டி.. நான் அன்னிக்கு வைசாக் டிரெயின் ஏறினதும் சென்னையில் இறங்கினதும் நான் போட்ட திட்டப்படிதான் நடந்தது. என்னை சென்ட்ரல் ஸ்டேஷன்லயே பார்க்க முரளியும் சுந்தரும் வருவாங்கன்னு நான் எதிர்பார்த்து நடந்ததுதான். ஆனா நான் எதிர்பாராதது நடந்தது எதிர்வீட்டுல இருக்கற உங்களை, அதுவும் சாந்தியின் ஃப்ரெண்டான உங்களை வைசாக் ஸ்டேஷன்ல பார்த்ததுதான். முதல்ல கூட வரும் சாதாரண ரயில் பாஸஞ்சர் மாதிரிதானே பழகினோம். நீங்களே எதிரிவீட்டுல குடியிருக்கீங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனாலும் அதுவும் நம் நன்மைக்கேன்னு விட்டுட்டேன்.. என் கூட பயணம் செஞ்ச ஒரு காரணத்துக்காகவே என் மேல சந்தேகம்கிறது ஒரு துளி கூட வராதுன்னு புரிஞ்சுண்டேன். அத்தோட நான் பண்ணப் போகறது ஒரு மங்களகரமான காரியம். முடிஞ்சவரைக்கும் நம் உணர்ச்சிகளை காமிக்காத மாதிரிதான் இருக்கணும்.. சரி கோம்டி!, உங்களுக்கு என் மேல சந்தேகம் எங்க வந்தது?.. அதைச் சொல்லுங்க.. மீதியையும் நான் சொல்லறேன்..”

     

    “நான் நேத்துக் காலைல போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை, அதான் உங்க பள்ளி நண்பர், அவரை எதேச்சையா பார்த்தேன்.. தன் வண்டி ஒண்ணு காணாமப் போனதுக்காக போலீஸ் கம்ப்ளெயின் பண்ண வந்தார்.. அவரான்னு கொஞ்சம் சந்தேகம்தான்.. ஆனா கால் நொண்டி நொண்டிப் போனதால அவராகத்தான் இருக்கும்னு நினைச்சு அவர் வெளியே வந்ததும் அவரோட முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிட்டேன், அவருக்கு அதுல பயங்கர சந்தோஷம்.  அவர்தான் நீங்க ஹவுரா மெயில்ல அவர் இருந்த எஸ் 1 கோச்சுக்கே வரலைன்னும் வண்டி கிளம்பின கொஞ்ச நேரத்துல தான் தூங்கிட்டதாகவும் விஜயவாடால எழுந்து தன் கையில கொண்டு வந்த டிபனைச் சாப்பிட்டு மறுபடி தூங்கிட்டதாகவும் சொன்னாரு.. அனகாபள்ளி ஸ்டேஷன்ல நீங்க இறங்கிட்டிங்கன்னு நினைச்சேன். அப்பதான் இன்னொண்ணு ஞாபகம் வந்தது..’.

     

    ‘என்னது அது?’ ரவி கேட்டான்.

     

    ‘நீயும் இவரும் என்னை வண்டில வைசாக் ஸ்டேஷன்ல டிராப் பண்ற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அனகாபள்ளி போகணும் அனகாபள்ளி போகணும்’னு அடிக்கடி சொன்னீங்களே..’ அதுக்கு இப்போதான் விடை கிடைச்சுது. அப்போ வைசாக்லேர்ந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள அனகாபள்ளி ஸ்டேஷன் வெளில நீ கல்யாண்க்காக வெயிட் பண்ணி அவன் இறங்கினவுடனே  அனகாபள்ளிலேர்ந்து  வைசாக் ஏர்போர்ட் வரை அழைச்சிண்டு போகணும். ஏன்னா வைசாக் அனகாபள்ளி நடுவுல ஏர்போர்ட் இருக்கறது இல்லையா.. ரவி ஒருவேளை அனகாபள்ளில காத்திருந்து உங்களை அழைச்சுட்டுப் போயிருக்கணும். இந்த விஷயம் நடந்திருக்கணும்னு ஊகிச்சவுடனே சாந்திக்கு ஃபோன் போட்டு கொஞ்சம் தகவல் கேட்க வெச்சேன். சரியா கிடைச்சுது.. எல்லாம் லிங்க் பண்ணறச்சே நீங்க அனகாபள்ளிலேர்ந்து ரவியோட காருல வைசாக் ஏர்போர்ட் போயி அங்க உடனே இருக்கற ஃப்ளைட் ஏறி சென்னை வந்து உடனடியா கிண்டி வந்து பெரியப்பாவோட துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுட்டு நீங்க மறுபடியும் ஃப்ளைட் பிடிச்சு விஜயவாடா வந்து டாக்ஸி பிடிச்சு ஹவுரா மெயில்ல பிடிச்சு வழக்கப்படி வந்துட்டீங்க.. என்ன ஆச்சரியம்னா இந்த பிளேன் டைம், ட்ரெயின் டைம் எல்லாமே உங்க பிளானுக்கு ஏதுவா வகையா அப்படி அமைஞ்சுது.. அப்படித்தானே?”

     

    “யெஸ்! அனகாபள்ளிக்கு ஹவுரா மெயில் 2.50 க்கு வருது.. ஏற்கனவே அனகாப்பள்ளி ஸ்டேஷன்கிட்டயே ரவி வெயிட் பண்ணினான். அங்கிருந்து பதினைஞ்சு நிமிஷத்துல ஏர்போர்ட் போயாச்சு. ஏற்கனவே போர்டிங்க் பாஸ் செக்கின் பண்ணி போர்டிங்க் பாஸ் பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சதாலே ஸ்ட்றெயிட்டா செக்யூரிடில நுழைஞ்சு சென்னை விமானத்துல ஏறியாச்சு.. ஃப்ளைட் 4.40க்கு சென்னை போகுது.. அஞ்சு மணிக்கு கிண்டில மாமா வீடு.. அதே சமயத்துல சென்னை விஜயவாடா விமானம் 6.15க்கு கிளம்பி 7.15க்கு விஜயவாடா கன்னாவரம் ஏர்போர்ட் வரும். ஹவுரா மெயில் விஜயவாடா வரும் நேரம் சரியா 7.50க்கு வந்து 8 மணிக்கு கிளம்பும். இந்த அஞ்சு மணி நேரத்துல என்னால அனகாபள்ளிலேர்ந்து கிளம்பி சென்னையில வேலையையும் முடிச்சுண்டு திரும்பவும் விஜயவாடா வரமுடியுமான்னு கணக்குப் பார்த்தேன். எங்கம்மாவை மனசுக்குள்ள வேண்டினேன். ஏதோ உத்வேகம்.. செஞ்சுடலாம்னு தோணிச்சு.. ஆனா ரயிலும் விமானமும் சரியா வந்தாலும், ரோடுலதான் பிராப்ளம்.. டிராஃபிக் ஜாஸ்தின்னாலே சரியா எட்டு மணிக்குதான் விஜயவாடா ஸ்டேஷன் நுழைய முடிஞ்சது.. வண்டி நல்ல காலமா ஒண்ணாம் நம்பர் பிளாட்ஃபார்ம்லதான் கிளம்பற நேரத்துலதான் ஏதோ ஒரு கோச்ல ஏறி உங்க கோச்க்கு வந்துட்டேன்.”

     

    அவன் பெருமூச்சு விட்டான். கோம்டி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

     

    “ஆமா.. நீங்க வந்த அவசரமும் என்னோட சாப்பாட்டை காணாததைக் கண்டா மாதிரி கபகபன்னு தின்ன விதானமும் இன்னும் மனசுலேயே ஞாபகமிருக்கு. சரி, எத்தனை மணிக்கு உங்க பெரியப்பாவைப் பாத்தீங்க.. என்ன பேசினீங்க? அவர் எப்படி இருந்தார். உங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சிருப்பாரே.. உங்க ரியாக்ஷன் என்ன?”

     

    “எத்தனை கேள்விங்க.. சரிதான்.. நான் சென்னை ஏர்போர்ட்லயே கையில லக்கேஜ் இல்லாதபடியாலே உடனடியா வெளியே வந்தேன்.. அன்னிக்கு ஃப்ளைட்டே பத்து நிமிஷம் சீக்கிரமா வந்ததாலே 4.40க்கு நான் வெளில வந்தாச்சு. ஒரு டாக்ஸியை உடனடியா பிடிச்சு ரிடர்ன் ஜர்னிக்குமா சேர்த்துப் பேசிட்டேன். அவன் காரை நம்ம வீதி முனைலே நிறுத்திக்கச் சொன்னேன். அஞ்சு மணிக்குள்ளயே கிண்டில வீட்டுக்கு  வந்துட்டேன்.. வீட்ல திடீர்னு வந்த என்னைப் பார்த்துட்டு பயங்கரமா அதிர்ச்சியாகிப் போனார்தான் பெரியப்பா..

     

    கந்தசாமியின் வீடு

     

    பெரியப்பாவின் கண்களில் அதிர்ச்சி.. கல்யாணை எப்படியும் அப்போது எதிர்பார்க்கவில்லை அவர். கல்யாண் தங்கள் வீட்டின் உள் கதவைத் தாள் போட்டுக்கொண்டான்.

     

    “அட கல்யாண்.. நீயாடா.. டிரெயின்ல இல்லே வருவேன்னு சொன்னே.. ஃப்ளைட்ல வந்துட்டியா.. நல்ல வேலை செஞ்சே..’

     

    கல்யாண் எதுவும் பேசாமல் கந்தசாமியின் பீரோவைத் திறந்தான். அவரின் துப்பாக்கியை எடுத்தான். அவர் அருகே வந்தான்.. துப்பாக்கியை அவர் மார்பு அருகே கொண்டு போனான். அவர் பயந்து போனார்.

     

    “கல்யாண்.. வந்ததும் வராதுமா.. என்னடா இது.. என்னை.. என்னை என்னடா பண்ணப்போறே?”

     

    ஒன்றும் பேசாமல் அவர் வலது மார்பில் சுட்டான். உடனடியாக அவர் கீழே விழுந்தார். தரையில் கிடந்தபடியே அதிர்ச்சியோடு மெதுவாகப் பேசினார்..

     

    “கல்யாண்.. அந்த துப்பாக்கியை எங்கிட்டே கொடு.. இதோ பார்.. உனக்கு எதுக்குடா வீண் பழி.. நானே சுட்டுக்கறேன்..”

     

    “இல்லே.. எங்கம்மா அப்பாவைக் கொலை பண்ணியே…  அதுக்காகத்தான் உன்னைச் சுட்டேன்.. எனக்கு அந்த உண்மையைச் சொல்லு.. ஏன் சுட்டே?”

     

    அவர் கையை மார்பருகே பிடித்துக்கொண்டார். அவர் வாயருகே தன் ஃபோனை வைத்து ரிகார்ட் செய்தான்.

     

    “உனக்கு கடைசி சந்தர்ப்பம் தர்றேன்.. அதாவது பாவமன்னிப்பு மாதிரி.. எங்கம்மா அப்பாவை எப்படிக் கொன்னே.. அத மாத்திரம் சொல்லு..”

     

    தொடரும்

    Share
  • அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீல வானத்தில் நெருப்புக் கோளம்
    வெடித்துச் சிதறி வெந்தணலாய் வீழ்கிறது
    நிலமெங்கும் நெருப்பாறு நீண்டோடி நிற்கிறது
    சிதறிய உடல்கள் பரவியே கிடக்கிறது

    ஓலமிடும் குரல்கள் உலுக்கியே நிற்கிறது
    வானிருந்து குண்டுமழை பொழிந்தபடி இருக்கிறது
    வட்டமிடும் கழுகாக வந்துவிழும் எறிகணைகள்
    மனிதவுயிர் பாராமல் பலியெடுத்து நிற்கிறது

    நீள்கடலும் வானும் நீண்டநிலப் பரப்பும்
    போர்முழக்கம் கேளா செய்துவிடல் வேண்டும்
    போரரக்கன்  ஓட  பேரெழிச்சி  கொண்டு
    சமாதானச் சங்கெடுத்து ஊதிவிட வேண்டும்

    மண்ணாசை பொன்னாசை மாறாத ஆசை
    வாய்பேசாக் குழந்தைகளை வதைக்க வருகிறதே
    பள்ளிகள் மீதெல்லாம் அள்ளியே வீசி
    பாலகர்கள் மடிவதனை  வேடிக்கை பார்க்கிறதே

    ஊரெல்லாம் பற்றியே எரிகின்ற வேளை
    உப்பரிகை உல்லாசம் ஒருகாலும் நிலைக்கா
    பிணந்தின்னும் பேய்களாய் மாறுகின்ற மனங்கள்
    பிணமாகப் போவதை அறியாத தேனோ ?

    ஓலமிடும் குரல்கள் ஓய்ந்துவிட வேண்டும்
    நீள்நிலத்தில் அமைதி  நிறைந்து விடவேண்டும்
    ஆரழுதும் நிற்கா ஆறுதலே வேண்டும்
    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    Share