“மேட் இன் கொரியா” (2026) மார்ச் 12, 2026 அன்று வெளியான இப்படம், தனது கலாச்சாரங்களுக்கிடையிலான கதைக்களத்தின் காரணமாக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. ரா. கார்த்திக் எழுதி இயக்கிய ஒரு திரைப்படம். ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ பதாகையின் கீழ் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், பார்க் ஹே-ஜின், சி-ஹன் பேக் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் வசனங்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில், சியோலில் தனது கனவுகளைத் துரத்தும் ஒரு பெண்ணாகப் பிரியங்கா மோகன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப், தரண் குமார் மற்றும் சைமன் கே. கிங் ஆகியோர் இசையமைத்துள்ளனர்; ஒளிப்பதிவை பிரசன்னா குமார் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணியை அந்தோணி கையாண்டுள்ளார்.
‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12, 2026 அன்று நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் நேரடியாக வெளியானது.
பார்த்த மாத்திரத்தில் உடனடியாக நம் மனதைத் தாக்காவிட்டாலும், பார்த்து முடித்த பிறகு மனதில் தங்கிவிடும் ஒரு சுவையான படம். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் ஏதும் இன்றி, வாழ்க்கையின் உண்மையான போராட்டங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் யதார்த்தமான கதை. எளிமையான, நேர்மையான, அமைதியான சக்தி வாய்ந்த ஒரு கதை என்றால் அது மிகையில்லை.
என்னுடைய, ‘செம்பவளம்’ புதினத்தின் ஆழமானக் கருவை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்துள்ள அற்புதமான கதை இது. கன்னியாகுமரி துறைமுகத்திலிருந்து கிளம்பிச் சென்ற செம்பவளம் எனும் தமிழ்நாட்டு இளவரசி கொரியா சென்று அந்த அரசனை மணமுடித்து, 150 ஆண்டுகள் வாழ்ந்து ஐந்து தலைவர்கள் ஆண்ட அந்த மண்ணை ஒரு சிறப்பு வாய்ந்த நாடாக உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறாள். இந்த வரலாற்று கதையை பள்ளியில் நாடகமாக அமைத்து அதில் கதாநாயகியாக நடித்த அந்தச் சிறுமி தன் வாழ்நாள் இலட்சியமாக தென்கொரியாவிற்குச் சென்று செம்பவளத்தின் நினைவிடத்தை ஒரு முறையேனும் தரிசித்து வரவேண்டும் என்பதுதான். வளர்ந்து பருவ மங்கையான பின் கொரியா செல்லும் வாய்ப்பைப் பெறுபவளின் வாழ்வியல் போராட்டமே இத்திரைக்கதை.
நாடகத் தன்மையாலோ, திடீர்த் திருப்பங்கள் மூலமாகவோ நம்மைக் கவரும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை இப்படத்தில். வாழ்க்கையை அதன் இயல்பான அமைதியான போக்கிலும், சிக்கலான நேரங்களையும் வெகு இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ள படம். கதாபாத்திரங்கள், தாங்கள் தேர்ந்தெடுக்காத, எதிர்பார்க்காத சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய உண்மையான மனிதர்களைப் போல உணர்த்துகிறார்கள். அந்த வகையில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அவசரமாகக் கடந்து செல்லாமல், அவற்றைப் புரிந்துகொள்ள நேரம் அளிக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத சில இனிய தருணங்களும். கருத்தாக்கங்களிலிருந்தே இதன் தாக்கம் அதிகமாகிறது எனலாம். கதாநாயகர்கள் வில்லன்களை அடித்து நொறுக்குவதையும், காவல்துறை இறுதிக் காட்சியில் வந்து கதாநாயகியைக் காப்பாற்றும் படங்களையேப் பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு இப்படம் மெதுவாக ஊர்ந்து செல்வது போன்று தோன்றலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருவேளை அந்த மகிழ்ச்சியான முடிவைத் தராமல் போகலாம்! ‘மேட் இன் கொரியா’ என்ற இந்தப் புதிய தொடர் பிரியங்கா அருள்மோகன், ரிஷிகாந்த், ஹியூன் பின், ஜங் வூ – சங் போன்றவர்களின் நடிப்பில், வூ மின் – ஹோ வின் இயக்கத்தில் சிறப்பாக அமைந்துள்ள படம். வாழ்க்கை என்பது முடியப்போகிறது என்று அதிரும் நேரத்தில், அப்படியல்ல அதுதான் வாழ்க்கையின் ஒரு புதிய ஆரம்பம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு அருமையான படம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.