Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 79

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 79

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    79. நட்பு

    குறள் 781:

    செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு

    சேக்கயா (நட்பா) இருக்கது போல ஒசந்த செயல் இல்ல. அதுகணக்கா பாதுகாப்புக்கு ஏத்த செயலும் வேற இல்ல.

    குறள் 782:

    நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு

    அறிவுள்ளவங்கள சேக்காளிய வச்சிக்கிடதது வளர் பிறை கணக்கா. கூறுகெட்டவங்க கூட சேக்காளியா இருக்கது தேய்பிறை கணக்கா தேஞ்சுக்கிட்டே போவும்.

    குறள் 783:

    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு

    நல்ல புத்தகங்களப் படிக்கிதப்போயெல்லாம் சந்தோசம் உண்டாகுதது கணக்கா நல்ல கொணம் இருக்கவங்க கூட எப்பம் பழகினாலும் மகிழ்ச்சி உண்டாவும்.

    குறள் 784:

    நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென் றிடித்தற் பொருட்டு

    ஒருத்தங்கூட சேக்காளியா இருக்கது எப்பமும் சந்தோசமா இளிச்சுக்கிட்டே இருக்கதுக்கு இல்ல. அவன் வேண்டாத வேலை செய்யுதப்போ கண்டிச்சு திருத்துததுக்குத் தான்.

    குறள் 785:

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்

    ஒருத்தங்கூட சேக்காளியா ஆவுததுக்கு ஒட்டுஒறவா இருக்கதோ கூடிக்குலாவுததோ அவசியமில்ல. ரெண்டுபேரோட நெனப்பும் ஒண்ணுபோல இருந்தாப் போதும்.

    குறள் 786:

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
    தகநக நட்பது நட்பு

    நேர்ல பாக்குதப்போ மொகத்துல மட்டும் சிரிப்பாணிய வச்சிக்கிட்டு மேலோட்டமா பழகுதது நல்ல சேக்க இல்ல. மனசார நேசத்தோட பழகுதது தான் நல்ல சேக்க.

    குறள் 787:

    அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு

    சேக்காளிய கெட்ட வழில போகவிடாம தடுத்து நல்ல வழியக் காட்டி கேடு வருத நேரம் அவன்கூட சேந்து சங்கடப்படுதது தான் உண்மையான சேக்க.

    குறள் 788:

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

    உடுப்பு அவுந்து போவுத நேரம் கை எங்ஙன வெரசலா சரி செய்யுமோ,அது கணக்கா சேக்காளிக்கு சங்கடம் வருதப்போ வெரசலோ ஒதவுதவன் தான் உண்மையான சேக்காளி.

    குறள் 789:

    நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

    சேக்கைக்கு ஒசந்த நெல எதுன்னா எப்பமும் வித்தியாசமில்லாம தன்னால ஏலுத நேரமெல்லாம் சேக்காளிக்கு ஒதவி அவனத் தாங்குதது தான்.

    குறள் 790:

    இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு

    இவரு எம்மேல இத்தன பாசம் வச்சிருக்காரு. நானும் அப்டித்தான்னு ஒருத்தருக்கொருத்தர் அலங்காரப் பேச்சு பேசினாகன்னா சேக்க அல்பமா போயிடும்.

    (அடுத்தாப்லையும் வரும்…

    Share
  • பூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி ?

    பூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி ?

    சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    சூட்டு யுகம் புவியைத் தாக்கி
    வேட்டு வைக்க மீறுது !
    நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !
    பேய் மழைக் கருமுகில் சூழுது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    விரைவில் சிதைக்கப் போகுது !
    கடல் மட்டம், வெப்பம் ஏறி
    கரைகள் மூழ்கப் போகுது !
    மெல்ல  நோய்கள் பரவி, நம்மைக்
    கொல்லப் போகுது !
    நில்லா திந்த கலியுகப் போர் !

    ++++++++++++++++

    1. https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/
    2. https://oilprice.com/Energy/Coal/China-Adds-Wave-Of-New-Coal-Fired-Power-Plants.html
    3. https://www.carbonbrief.org/mapped-worlds-coal-power-plants
    4. https://www.npr.org/2019/04/29/716347646/why-is-china-placing-a-global-bet-on-coal

    Image result for carbon dioxide buildup

    Related image

    புவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்

    சுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று  பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார்.   மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது.  இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை  ஆய்வகம் [National Oceanic and   Atmospheric Administration’s Mauna  Loa Observatory, in Hawaii].  1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.

    Image result for carbon dioxide buildup

    Global Coal Power Plants :

    Year:  2018

    Operating: 2,024,100 MW

    Related image

    Image result for carbon dioxide buildup

    https://qz.com/1638096/the-story-behind-the-worlds-first-large-direct-air-capture-plant/

    There is a set of technologies, scientists say, without which the world is unlikely to avert climate crisis. These so-called “negative-emissions technologies” have been discussed by climate scientists in academic journals for many years. But now, entrepreneurs at three startups—one each in the US, Canada, and Switzerland—are vying to bring the most promising of those technologies to market. They will potentially offer the world a new set of tools to stave off climate catastrophe—a reverse gear on a car headed for the cliff.

    The startups have each been developing a technology called direct air capture. The idea is to build machines that can filter the air and capture only carbon dioxide molecules. If those molecules aren’t released into the atmosphere, the result is negative emissions. So far every startup has showed the technology works. The next hurdle is to scale the technology and lower its cost.

    First out of the gate was Climeworks. In 2017, with the help of small grants from the EU, the Swiss startup installed a machine in Iceland that captured carbon dioxide from the air, mixed it with water, and injected it underground. There, thanks to geology, the gas reacted with minerals to become stone. The machine captures about 50 metric tons each year, which is the annual emissions of one household in the US—or about 10 in India.

    But to hit the more ambitious climate goals set under the Paris climate agreement, annual negative emissions need to reach more than 1 billion metric tons by mid-century. That’s why an announcement made last month in Jackson Hole, Wyoming was especially interesting. Canadian startup Carbon Engineering is pairing with US oil giant Occidental Petroleum to build a plant by 2022 that will capture and bury 500,000 metric tons each year. The plant is expected to cost hundreds of millions of dollars.

    State of Climate 2018

    Here’s how the plant works: A large fan sucks in huge volumes of air and passes it over corrugated sheets. A chemical solution, which reacts with carbon dioxide in the air, is poured onto the sheets. The carbon-rich solution is then transported to a container where it’s brought in contact with quicklime (or calcium oxide) that reacts with the mixture to form pellets of limestone (or calcium carbonate). In a third container, these limestone pellets are heated to about 1000°C to create quicklime that can be reused and release carbon dioxide as a pure stream of gas. The greenhouse gas can then be injected underground in depleted gas fields or converted into something useful.

    (To heat the kiln to 1000°C, natural gas is burned in pure oxygen and the carbon dioxide produced in the process is also captured. There are also plans to use renewable electricity to heat the kiln, cutting out the use of any fossil fuels.)

    In June 2018, Keith published a peer-reviewed study in the journal Joule that described the process in great detail. It’s the only direct-air-capture (DAC) company to offer its work for peer review so far. The main point of the paper, however, was to correct a misconception about the technology that it’s necessarily expensive.

    According to a 2011 study by the American Physical Society, DAC technology could cost more than $600 per metric ton. For context, the highest global price on carbon emissions—as a tax or a tradable credit—is around $200 per ton. But Keith showed that Carbon Engineering’s technology could capture carbon dioxide for between $100 and $250 per metric ton.

    Within months of the paper’s publication, Steve Oldham, who Keith and Holmes had brought in to be CEO of Carbon Engineering, found himself in a meeting with Vicki Hollub, CEO of Occidental Petroleum. She wanted access to more carbon dioxide. He wanted to raise capital to scale up the technology to capture hundreds of thousands of tons each day.

    இம்முறை போக அடுத்துப்  பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள்  சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு  200 ppm என்று  அறிந்தது.  தற்போதைய பனியுகச் சேமிப்பு  அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது.  அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம்  1.8 டிகிரி F  [1 டிகிரி C ] ஏறியுள்ளது.  இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார்.  பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது,  கடல் மட்டம் 65 அடி [20 மீடர்]  உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது.

    http://www.chicagotribune.com/92378906-132.html

    Added Arctic data shows global warming didn't pause

    Added Arctic data shows global warming didn’t pause

    November 20, 2017

    உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை

    22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.  பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது.  இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K].  இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள்.  இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள்.  பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை.  இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.

    இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே.   இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி  ஸெயின்ட் ஜேக்ஸ்.   அவர் கூறுவது :  கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான்.  அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.

    2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன.  அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன.  பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன.  சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர,  எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது !

    An Argo float is deployed into the ocean

    3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

    Image result for oceans are warming rapidly

    கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

    Image result for oceans are warming rapidly

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

    “எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

    Icebergs in the Sea

    கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

    21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

    கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

    Greenland Ice melting

    Image result for oceans are warming rapidly

    http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    Image result for oceans are warming rapidly

    கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.
     
    ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]
     
    பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.
    டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]
    Image result for oceans are warming rapidly
     
     
    நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
     
    1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ?
     Image result for oceans are warming rapidly
    கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    Image result for oceans are warming rapidly
    இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.
    Greenland Rivers -2

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

    Image result for oceans are warming rapidly

    2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    Image result for oceans are warming rapidly

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

     

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

     

    Image result for oceans are warming rapidly

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Greenland Iceberg

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    Greenland homes

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.   [11 Facts About Global Warining ]

    7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

    8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

    9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

    10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

    11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

    15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

    16.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148   [May 12, 2014]

    17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

    18.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

    19.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

    20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html   [August 27, 2015]

    21.  http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html  [August 26, 2015]

    22.  https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017]

    22(a)  http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017]

    23.   https://phys.org/news/2017-06-oceans-rapidly.html  [June 30, 2017]

    24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html  [July 3, 2017

    25.  https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053  [July 6, 2017]

    26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html  [July 7, 2017]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html  [July 10, 2017]

    28.  https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html?  [July 12, 2017]

    29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html  [October 11, 2017]

    30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191  [October 13, 2017]

    31.  https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html  [November 23, 2015 – 2017]

    32.  //www.livescience.com/19481-ice-age-carbon-dioxide-orbit.html  [April 12, 2012]

    33. https://www.livescience.com/35635-climate-change-health-countdown.html  [April 22, 2019]

    34. https://www.livescience.com/64535-climate-change-health-deaths.html  [January 17, 2019]

    35. https://public.wmo.int/en/media/press-release/state-of-climate-2018-shows-accelerating-climate-change-impacts  [March 28, 2019]

    36.  https://www.livescience.com/65469-highest-carbon-dioxide-levels.html  [May 14, 2019]

    ++++++++++++++++++++

    Share
  • குறளின் கதிர்களாய்…(276)

    குறளின் கதிர்களாய்…(276)

    செண்பக ஜெகதீசன்

    பண்புடையார் பட்டுண் டுலக மதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.
    -திருக்குறள் -996 (பண்புடைமை)

    புதுக் கவிதையில்…

    பண்புடையாரோடு
    பொருந்தி இருப்பதால்தான்
    நிரந்தரமாய்
    நிலைபெற்றிருக்கிறது உலகம்..
    பொருந்தாதிருப்பின்,
    வருந்தி
    மக்களெல்லாம்
    மண்ணினுள் புதைந்து
    மாண்டுபோவது உறுதி…!

    குறும்பாவில்…

    பொருந்தியிருப்பதால் பண்பாளர் தம்மொடு,
    புவியது நிலைத்திருக்கும், இல்லையேல் மக்கள்
    மாய்ந்திடுவர் மண்ணில் புதைந்து…!

    மரபுக் கவிதையில்…

    பெருமை மிக்க பண்புடையோர்
    பக்கம் நன்றாய்ப் பொருந்தியேதான்
    இருக்கும் தன்மை ஒன்றினால்தான்
    இவ்வையம் நின்று நிலைக்கிறதே,
    உருவினில் பெரிய உலகமதில்
    உய்யும் மாந்தர் எல்லோரும்
    ஒருங்கே மண்ணில் புதைந்தழிவர்
    ஒப்பிலாப் பண்பது இலையெனிலே…!

    லிமரைக்கூ..

    நின்றிடும் உலகமது நிலையாய்
    பண்புடையோ ருடன்பொருந்தி, இலையெனிலழிவர்
    மண்ணினுள் மக்கள் விலையாய்…!

    கிராமிய பாணியில்…

    பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
    மனுசனுக்கு பண்பிருக்கணும்,
    ஒலக வாழ்க்கயில
    நல்ல பண்பிருக்கணும்..
    நெலயா ஒலகம்
    நிக்கக் காரணமே
    அது
    பண்புள்ளவங்கக் கூட
    பொருந்தியிருப்பதனால மட்டும்தான்,
    இல்லன்னா
    ஒலகத்து மக்களெல்லாம்
    மண்ணுல பொதஞ்சி
    மாண்டு போயிருவாங்க..
    அதால
    பண்பிருக்கணும் பண்பிருக்கணும்
    மனுசனுக்கு பண்பிருக்கணும்,
    ஒலக வாழ்க்கயில
    நல்ல பண்பிருக்கணும்…!

    Share
  • ஏடுகாத்த ஏந்தல் – சி. வை. தாமோதரனார்

    ஏடுகாத்த ஏந்தல் – சி. வை. தாமோதரனார்

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழ்நூல்கள் பதிப்புக் குறித்த காலத்தைக் கணித்திருக்கும் ஆய்வாளர்கள், 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியை உ.வே. சாமிநாதையர் காலம் என்றும் மூன்றாய்ப் பிரித்துள்ளனர்.

    பதிப்புத்துறைக்குத் தொண்டாற்றிய இம்மூன்று அறிஞர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பும் இருந்திருக்கின்றது. உ.வே.சா. தம்முடைய 33ஆவது அகவையில் தாமோதரம் பிள்ளையைச் சந்தித்திருக்கின்றார். அப்போது அச்சுத்துறை அவருக்கு மிகவும் புதிது. தாமோதரம் பிள்ளையின் சந்திப்புதான் தமக்கு அச்சிடும் ஊக்கத்தை அளித்தது என்பதை உ.வே.சா.வே 1887இல் வெளியிட்ட தம்முடைய சீவக சிந்தாமணி முதற்பதிப்பு முன்னுரையில் பின்வருவாறு குறிப்பிடுகிறார்:

    ”சீவகசிந்தாமணி நூலையும் உரையையும் பின்னும் இரண்டொருமுறை பரிசோதித்தற்கு விருப்பமுடையேன் ஆயினும் இவற்றை விரைவில் பதிப்பித்து பிரகடனம் செய்யும்படி யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் பலமுறை என்னைத் தூண்டினமையால் விரைந்து அச்சிடத் துணிந்தேன்” என்கிறார்.

    இவ்வாறு பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவராய்த் திகழ்ந்த பெருமைக்குரியவரான சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதப் பிள்ளை, பெருந்தேவி இணையரின் திருமகனாய், 1832ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.

    தம் தந்தையாரிடத்திலேயே வாக்குண்டாம், நன்னெறி முதலிய நீதி நூல்களையும், திவாகரம், உரிச்சொல் நிகண்டு போன்ற ஏனைய நூல்களையும் பயின்றார். அதே காலக்கட்டத்தில் தமிழ் மீதிருந்த விருப்பத்தால் தம் இருப்பிடத்துக்கு அருகிலிருந்தவரும் அக்காலத்துச் சிறந்த தமிழ் வித்துவான்களில் ஒருவருமான  முத்துக்குமார நாவலரிடத்து நைடதம், இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய நூல்களுக்குப் பாடம் கேட்டும், இலக்கணப் பயிற்சியில் ஈடுபட்டும் வந்தார். தம் ஆசான் முத்துக்குமார நாவலரிடத்துத் தாம் கொண்ட பெருமதிப்பின் காரணமாகப் பிற்காலத்தில் தாம் பதிப்பித்த தொல்காப்பியத்தின் ஆசிரிய வணக்கத்தில்,

    ”கற்றறி வில்லாக் கடையனேன் தனக்கு
    நற்றமிழ் கொளுத்திய நாவலன் சுன்னை
    முத்துக் குமார வித்தகன் அடியிணை
    சித்தத் திருத்தி…”
    என்று போற்றியிருப்பது தாமோதரனாரின் குருபக்திக்கு அருஞ்சான்றாய்த் திகழ்கின்றது.

    தமிழ்க்கல்வியோடு, மேனாட்டு ஆங்கிலக் கல்வியிலும் புலமைபெற விரும்பிய தாமோதரனார் தெல்லிப்பளை(Tellippalai) அமெரிக்க மிஷன் பள்ளியில் சேர்ந்து பயின்றார். சைவராகப் பிறந்த சி.வை.தா., ஆங்கிலக் கல்வி பெறுவதற்காகக் கிறித்தவராக மதம் மாறினார். மேனாட்டு கல்வி அக் காலத்தில் கிறித்தவர்களுக்கே கற்பிக்கப்பட்ட நிலையில், தாமும் மதம் மாறி அக்கல்வியைப் பெற்றிருக்கின்றார். கிறித்தவராக மாறியபோது அவருடைய பெயர் C.L.W. Kingsbury என்பதாகும். பின்னர், ஆறுமுக நாவலரின் செல்வாக்கால் மீண்டும் சைவ சமயத்துக்கு மாறி, தாமோதரம் பிள்ளையாகவே நிலைத்தார் என்று அறிகின்றோம்.

    ஆங்கிலத்தில் உயர்கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அங்குக் கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம், தருக்கம் போன்ற பாடங்களில் முதல் மாணவராய் விளங்கினார் அவர். தம்முடைய 20ஆவது வயதில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கோப்பாயிலிருந்த பள்ளியில் பிள்ளையவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அக்காலத்திலேயே குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கம்’ எனும் நூலின் உரையை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னையிலிருந்த பெர்சிவல் பாதிரியார் தாமோதரம் பிள்ளையின் தமிழ் அறிவைக் கேள்விப்பட்டு அவரைச் சென்னைக்கு அழைத்து தினவர்த்தமானி எனும் இதழின் ஆசிரியராக்கினார். அவ்விதழைச் சிறப்பாக நடாத்திய தாமோதரனார், அதில் தனித்ததொரு வசனநடையைக் கையாண்டார். ஆங்கிலேயர்கள் சிலருக்கும் அச்சமயத்தில் அவர் தமிழ்க்கல்வி கற்பித்துவந்தார். அதனையறிந்த ஆங்கில அரசு, இன்று மாநிலக் கல்லூரி என்றழைக்கப்படும் அன்றைய சென்னை இராஜதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக அவரை நியமித்து மகிழ்ந்தது.

    பிறகு கள்ளிக்கோட்டை அரசினர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது தாமோதரம் பிள்ளைக்கு. அப்பள்ளியில் பணியாற்றியபோது அவர் பல சீர்திருத்தங்கள் செய்து நிர்வாகத் துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் அவருக்கு அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளர் (Auditor) பதவியும், அப்பதவியில் காட்டிய திறமையினால் விசாரணைக்கர்த்தர் (Superintendent) பதவியும் வந்துசேர்ந்தன.

    எப்பணியை மேற்கொண்ட போதினும் தமது ஓய்வு நேரங்களில் பழைய நூல்களை ஓலைச்சுவடிகளில் விடாது பயின்றுவந்தார் தாமோதரம் பிள்ளை. அச்சுவடிகள் ஓரம் சிதைந்தும், இதழ் ஒடிந்தும், சீரழிந்து மிருந்தன. அச்சுவடிகளைச் சீராக்கி அச்சேற்றிப் பதிப்பிக்க வேண்டியது தம் தலையாயப் பணி என்று கருதினார் பிள்ளை. ஏற்கனவே தம் இருபதாம் அகவையில் நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டு வெளியிட்டிருந்தமையால், அவருக்கு இப்பணி சுமையாகத் தோன்றவில்லை. எனினும் எந்நூலையும் நாவலரவர்கள் பரிசோதித்தலே நன்றெனக் கருதி அவருக்கே பிள்ளை உதவிசெய்து வந்தார்.

    இந்த நெருங்கிய தொடர்பால் நாவலர் பரிசோதித்தளித்த தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைத் தம் பெயரில் 1868இல் வெளியிட்டார் தாமோதரம் பிள்ளை. தொல்காப்பியத்தைத் தாம் பதிப்பித்த காரணத்தை விளக்கவந்த தாமோதரம் பிள்ளையவர்கள்,

    ”பன்னீராயிர வருஷ காலத்தின் மேற்பட நிலைபெற்றோங்கித் தமிழுக்கோர்த் தனிச்சுடர்போலப் பிரகாசித்துவரும் தொல்காப்பியமும், தற்காலத்து இலக்கணம் கற்போர் அனைவரும் அதன் வழித்தோன்றிய சிற்றிலக்கணங்களையே கற்று அம்மட்டோடு நிறுத்திவிடுதலால், எழுதுவாரும் படிப்பாருமின்றிப் பழம் பிரதிகளெல்லாம் பாணவாய்ப் பட்டும், செல்லுக் கிரையாகியும் சிதைபட்டுப் போக, யாவராயினும் ஒருவர் வாசிக்க விரும்பியவழியும் கிடைப்பது அருமையாகி விட்டது. தமிழ்நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச்சிலவே. அவையும் மிக்க ஈனஸ்திதி அடைந்திருப்பதால் இன்னும் சில வருடத்துள் இறந்துவிடுமென்று அஞ்சியே அதனை லோகோபகாரமாக அச்சிடலானேன்” என்று குறிப்பிடுகின்றார்.

    1871ஆம் ஆண்டு பி.எல் தேர்வில் வெற்றிபெற்றார் தாமோதரம் பிள்ளை.

    1879இல் ஆறுமுக நாவலர் காலமானார். அன்னாரின் மறைவு தாமோதரம் பிள்ளையவர்களைப் பெரிதும் பாதித்தது என்பதை நாவலரைப் போற்றி அவர் எழுதியிருக்கின்ற இரங்கற்பா நமக்கு, அங்கை நெல்லியென, அறியத்தருகின்றது.

    ”நல்லைநகர் ஆறுமுக நாவலர்பி றந்திலரேற்
    சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்துபுரா ணாகமங்க ளெங்கேப்ர சங்கமெங்கே
    ஆத்தனறி வெங்கே யறை.”

    நாவலரின் மறைவுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிள்ளையவர்கள் அரசுப்பணியிலிருந்து விலகி முழுநேரமும் தமிழ்ப்பணிகளுக்கே செலவிடலானார்.

    வீரசோழன் என்றழைக்கப்பட்ட விக்கிரம சோழன் காலத்தில் அவனுடைய கீழ்ப்பொன்பற்றியூரைச் சிற்றரசு புரிந்த புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்தைப் பெருந்தேவனார் உரையோடு, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, 1881ஆம் ஆண்டு தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரது சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார்.

    வீரசோழியத்தைப் பதிப்பித்து அறிஞர் பலரின் பாராட்டைப் பெற்ற தாமோதரம் பிள்ளை, அதற்கு அடுத்த ஆண்டான 1882இல் தணிகைப் புராணத்தின் மூலத்தைப் பதிப்பித்தார். திருவாவடுதுறை ஆதினத்துக் கச்சியப்ப முனிவர் அருளிச்செய்த இப்புராணம், திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிகரின் அனுமதியோடு பிள்ளையவர்களால் அச்சிடப்பட்டது. அதே ஆண்டிலேயே இறையனார் அகப்பொருளை நக்கீரர் உரையுடன் பதிப்பித்தார் தாமோதரனார். இந்நூலின் உரை மிகவும் அழகுடைத்தாய்ப் பண்டைக்கால உரைநடைக்குச் சிறந்ததொரு சான்றாய்த் திகழ்ந்துவருகின்றது.

    சென்னையிலிருந்து திருக்குடந்தை நகருக்கு 1885ஆம் ஆண்டு சென்று, தமிழ் நூல்களைச் சேகரித்தும் பரிசோதித்தும் வந்த சி.வை.தா., தொல்காப்பியப் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு, பல்வேறு பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து, சென்னை ஸ்காட்டிஷ் அச்சகத்தில் அதே ஆண்டு பதிப்பித்தார்.

    பொருளதிகாரப் பதிப்புரையால் தாமோதரம் பிள்ளையவர்களுக்கு அதிக அளவில் பொருளிழப்பு ஏற்பட்டிருக்கின்றது. அதனை ஈடுகட்ட எண்ணி, இந்து நாளேட்டிலும் மற்றொரு விண்ணப்பப் பத்திரத்திலும் ஆங்கிலத்தில் விளம்பரம் செய்தார் அவர். அவற்றைக் கண்ணுற்ற தமிழறிஞர் பலர், தாமோதரம் பிள்ளையவர்களுக்குப் பொருளுதவி புரிய முன்வந்தனர். இதனால் ஊக்கமடைந்த அவர், மேலும் சில நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். தொல்காப்பியப் பரிசோதனைக்காகப் பிரதிகள் தேடியபோது ஆறுமுக நாவலரின் கலித்தொகை பிரதியொன்று அவர் கைக்குக் கிட்டியது. அதன் பெருமையினை யுணர்ந்து எவ்வாறாயினும் அதனைப் பதிப்பிக்க எண்ணியிருந்தார்.

    தொண்டைமான் புதுக்கோட்டை மகாராஜாவின் மந்திரியாகிய அ. சேஷைய சாஸ்திரியவர்கள், தாமோதரம் பிள்ளை பழம்பெரும் நூல்களைப் பதிப்பிப்பதில் மேற்கொண்டுள்ள இடர்களையும் பொருளிழப்பையும் கண்டு அவரிடம் மிக்க அன்புடையவராய், சங்ககாலப் பேரிலக்கியங்களுள் ஒன்றைப் பதிப்பிக்கப் பொருளுதவி செய்வதாக ஒப்புக்கொண்டு  அவ்வாறே உதவினார். அதனடிப்படையில் ’கற்றறிந்தார் ஏத்தும் கலி’யை, பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து ஸ்காட்டிஷ் அச்சகத்தில் பதிப்பித்தார் சி.வை.தா. 

    ’குட்டித் தொல்காப்பியம்’ என்று சிறப்பிக்கப்பட்ட, திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்ட ’இலக்கண விளக்கம்’ எனும் நூலை 1889ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார்.

    ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றாய்க் கருதப்படும் தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியை 1889இல் பதிப்பித்தார் தாமோதரனார்.

    பிள்ளையின் அரிய பதிப்புப் பணிகளால் கவரப்பட்ட அன்றைய சென்னை அரசு, 1875இல் அவருக்கு ’இராவ்பகதூர்’ எனும் உயரிய பட்டமளித்துச் சிறப்பித்தது.

    1897ஆம் ஆண்டு அகநானூற்றைப் பதிப்பிக்கும்பொருட்டுப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது தாமோதரம் பிள்ளையவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆகையால் அந்நூலின் இரண்டாம் பகுப்பான ’மணிமிடைபவளம்’ வரையே அவரால் பரிசோதித்துப் பதிப்பிக்க முடிந்தது.

    தாமோதரம் பிள்ளையவர்கள் பல அரிய பெரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்ததோடல்லாமல் தாமும் சில நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

    கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், ஆறாம் வாசகப் புத்தகம், ஏழாம் வாசகப் புத்தகம், நட்சத்திர மாலை, ஆதியாகமக் கீர்த்தனம், வசன சூளாமணி, விவிலிய விரோதம், காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி முதலியன அந்நூல்கள்.

    தமிழறிஞர் உலகம் தாமோதரம் பிள்ளையின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது. பதிப்புச் செம்மலாக மட்டுமன்றித் தமிழாசிரியராக, நீதியரசராக இன்னும் தாம் தோன்றிய துறைகளிலெல்லாம் புகழொடு தோன்றிய சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் 1901ஆம் ஆண்டு சனவரி முதல்நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

    “பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் இன்று மறக்கப்பட்ட போதினும், பனை ஓலையில் இருந்த பழந்தமிழ் ஏடுகளைப் பெருமுயற்சியுடன் படித்து முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறக்கப்படவில்லை” என்று தமிழறிஞர் மு. வரதராசனார், தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப்பணியைப் போற்றியுள்ளமை நினைவுகூரத்தக்கது.

    “பதிப்புப் பணியிலும், அதனையொட்டிய மூலப்பாடத் திறனாய்விலும் (Textual Criticism) சி.வை.தாமோதரம்பிள்ளை மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

    “பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து, நிலையம் கோலியவர் உ.வே.சா.” எனத் தமிழ்ச் சான்றோர் இம்மூவரின் தொண்டையும் மதிப்பீடு செய்திருப்பது பொருத்தமாகவே இருக்கின்றது.

    தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்ற எவர்
    தாமோ தரம் உடையார்” என்று அவருடைய தமிழ்ப்பணியைச் சுவைபடப் பாராட்டியுள்ளார் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்.

    பண்டைய இலக்கிய நூல்கள் பலவற்றை மீட்டெடுத்துத் தந்த பெரும் பேராசிரியரும், தென்னகக் கலைச்செல்வருமான உ.வே.சா.வை நாம் மறவாமல் போற்றுவதுபோலவே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம் முதலிய அருமையான இலக்கண நூல்களையும், கற்றறிந்தார் ஏத்தும் கலி, சொற்சுவைமிகு சூளாமணி, அகமினிக்கும் அகநானூறு என அற்புதமான இலக்கிய நூல்களையும் முதன்முதலில் பதிப்பித்து, தமிழ் ஏடுகாத்த ஏந்தலான ஈழத்துத் தாமோதரனாரின் அரும்பணியையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் தமிழ்மாந்தர் தம் கடனாகும்.

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. சி_வை_தமோதரம்_பிள்ளை_வாழ்வும்_பணியும்.pdf
    2. https://ta.wikipedia.org/wiki/சி._வை._தாமோதரம்பிள்ளை
    3. https://www.dinamani.com/editorial-articles/2009/jul/05/பதிப்புச்-செம்மல்-சிவைதாமோதரம்-பிள்ளை-35204.html

     

     

    Share
  • (Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்)

    (Peer Reviewed) தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் காட்டும் மரக்காயர்கள் (தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்)

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர் – 613010

    சங்க காலம் தொட்டே கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட தமிழக கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த பகுதிகளாகும். இடைக்காலத்தில் சோழர், பாண்டியர், பிற்கால பாண்டியர், நாயக்கர் ஆகியோர்களும் இக்கடற்கரைப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் சிறப்புற்று விளங்கினர் என்று இப்பகுதியிலுள்ள கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப் பட்டினம், வட்டானம், கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளிலுள்ள இசுலாமியக் கல்வெட்டுகளின் வாயிலாகவும், இராமநாதபுரம் வட்டாரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட மரக்காயர் கல்வெட்டிகளின் வாயிலாகவும், குறிப்பாக தென் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மரக்காயர்களின் வரலாற்றுப் பதிவுகள் வாயிலாகவும் இக்கட்டுரை ஆராய்கிறது.

    மரக்காயர்கள் கி.பி.17-18ஆம் நூற்றாண்டுகளில் கடற்சார் வணிகத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தனர். குறிப்பாக இடைக்காலத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசிய ஆவணங்கள் இவர்களைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடுகின்றன.1 கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகக் கடற்கரைப் பகுதியில் குறிப்பாக பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் மரக்காயர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதைத் தொண்டியில் கிடைக்கப்பெற்ற, கி.பி.1795இல் வெளியிடப்பட்ட மருது பாண்டியரின் கல்வெட்டில் காண முடிகிறது.2 இக்கல்வெட்டில் தொண்டியின் ஆபூப் சகா மரக்காயர் என்பவர் அதிகாரமிக்கவராகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, மரக்காயர்களின் செல்வாக்கைக் காட்டுகிறது. மரக்காயர்கள் எப்பொழுது தமிழக வணிகத்தில் ஈடுபட்டனர், எப்பொழுது செல்வாக்குப் பெறலாயினர் போன்றவற்றைச் சரியாக கணக்கிடுவது அரிதாக இருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இடைக்காலத்தில் அஞ்சுவண்ணம் என்ற பிரிவில் இசுலாமியர்கள், குறிப்பாக சோனகர் எனப்பட்ட அரேபிய வணிகர்கள், தமிழகக் கடற்கரையில் இருந்ததை அறிய முடிகிறது. மரக்காயர்கள் என்ற தனிக் குழு அஞ்சுவண்ணத்திலிருந்து தோன்றியவர்களாகவும் இசுலாம் மதம் சார்ந்த மரக்காயர்கள் முதலில் வணிகத்தில் ஈடுபடாமல் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாகச் செயல்பட்டதாகவும் கருத வேண்டும். மரக்காயர் என்ற சொல் ‘மரக்கலநராயர்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும். அவ்வாறாயின், இவர்கள் முதலில் கப்பல் மாலுமிகளாகத் தங்களது தொழிலைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது என பா.ஜெயக்குமார் கருதுகிறார்.3

    பாரூசு துறைமுகத்தைப் பற்றிக் குறிப்பிடும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள கி.பி.1088ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய தமிழ்க் கல்வெட்டில்4 ‘மரக்கலநாயன்’ என்ற சொல் காணப்படுவது மேற்சுட்டிய கருத்துடன் ஒத்து வருவதால் மரக்கல நாயர்களாக இருந்த மரக்காயர்களின் தாக்கம் வணிகத்தில் இடைக்காலத்திலேயே இருந்ததாகக் கொள்ளலாம். இவ்வாறு, மரக்கலத்தை (கப்பல்களை) இயக்கிய இவர்கள் இடைக்காலத்தில் தாங்களே வாணிபத்தையும் முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்.

    மரக்காயர்களின் செயல்பாடுகள்

    கிழவன் சேதுபதி (1678-1710) பெரிய கோட்டையையும் அரண்மனையையும் கட்டி, சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரிலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் கீழக்கரை ‘சீதக்காதி மரைக்காயர்’ ஆவார்.5 கீழக்கரையிலுள்ள ஓடக்கரை மசூதிக் கல்வெட்டு ஒன்று இசுமாயிலெவை மகன்கள் கவீது முகம்மது மரைக்காயரும், அவுதில்க் காதிறு மரைக்காயரும் சேர்ந்து பள்ளிவாசல் ஒன்றை கட்டியமையைக் குறிப்பிடுகிறது.6

    அதே போன்று கீழக்கரை மற்றும் வேதாளை பள்ளிவாசல்களில் காணப்படுகிற கல்லறைக் கல்வெட்டுகளில் மார்த்தாண்ட மரக்காயர், செல்லக்குட்டி மரைக்காயர், மழமரைக்காயர், பெரியதம்பி மரக்காயர் என்றும் குறிப்பிடுகின்றது7. இவை அங்கிருந்த இசுலாமியர்களின் பெயர்களாகும். பெரும்பாலும் இசுலாமியப் பெயர்களின் பின்னொட்டில் மரக்காயர் என்றும் மரைக்காயர் என்றும் வருவதைக் காண முடிகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உள்ள வீட்டின் திண்ணைச் சுவரில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1812ஆம் ஆண்டு கல்வெட்டில்  நாகூர் நூர் முகம்மது மரைக்காயர் மகன் முகம்மது அலி மரைக்காயர் என்பவர் வீடு, கடை, திருவாசல், குளம், தோட்டம், ஆகியவற்றைப் பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளமையைச் சுட்டிக் காட்டுகிறது.8

    மேலும், கி.பி.1873 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டுகளின் வாயிலாக குஞ்சு மரைக்காயர் என்பவர் பீர் மண்டபம் கட்டியதையும், நாச்சிக்குளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் என்பவரும் நாகூர் தர்காவில் அமைந்துள்ள வடக்கு மினார் கட்டியதை அறிய முடிகிறது.9

    மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள்

    மேலும், இவ்வாய்வுக்கு வலுசேர்க்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, திருவாடானை வட்டத்திலுள்ள வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.10 இக்கல்லறைக் கல்வெட்டுகள் இவ்வூரின் வடக்குப் புறத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளன. கி.பி.1497ஆம் ஆண்டைச் சார்ந்த முதல் கல்வெட்டானது 62 செ.மீ அகலமும், 56 செ.மீ உயரமும், 16 செ.மீ கனமும் கொண்ட அமைப்புடைய கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் பின்புறத்தில் திருக்கோயில் கட்டமைப்புகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள வட்ட வடிவத் தாமரையிதழ் வேலைப்பாடு இருப்பதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டின் மேல்பகுதி இசுலாமியக் கட்டடக் கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1503ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டாவது கல்வெட்டு 59 செ.மீ அகலமும், 66 செ.மீ நீளமும், 15 செ.மீ கனமும் கொண்டுள்ள இக்கல்லில் ஒன்பது வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.1506ஆம் ஆண்டைச் சார்ந்த மூன்றாவது கல்வெட்டு 62 செ.மீ அகலமும், 185 செ.மீ நீளமும், 16 செ.மீ கனமும் உடைய இக்கல்லில் எட்டு வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் அனைத்துமே இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த மரக்காயர்கள் இறப்புக்குப் பின் அவர்களுக்கு நினைவாக துயில் கொண்ட இடத்தில் வைக்கப்பட்ட கல்லறைக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டகளின் பாடம் பின்வருமாறு:

    கல்வெட்டு : 1

    படம் : 1. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497)

    காலம் : ஹிஜிரி 902, பிங்கல = ஜூலை 11, கி.பி.1497 வெள்ளிக்கிழமை. (படம்:1)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 901 ஆவது
    3. பிங்கல வருஷம் ஆ
    4. டி மாதம் 13 தியதி
    5. நயினா மரக்காயர்
    6. செகு பூவக்கர் நயினா
    7. வெள்ளிக்கிழமை நா
    8. ளில் மரித்தார்.

    கல்வெட்டு : 2

    படம் : 2. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1497) பின்புறம் தாமரை இதழ் வேலைப்பாடு

    காலம் : ஹிஜிரி 902, ருத்ரோத்காரி, கி.பி.1503 ஏப்ரல் 20, வியாழக்கிழமை (படம்:3)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 908 வது
    3. உதிரொர்காரி வதுஷ
    4. ம் சித்திரை மாதம் 24
    5. தியதி செகுத்துமார் மர
    6. க்காயர் செகுநயினா
    7. வான அரிராசராம
    8. மரகுகாயர் வியா
    9. ழக்கிழமை நா.

    கல்வெட்டு : 3

    படம் : 3. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1503)

    படம் : 4. மரக்காயர் கல்லறைக் கல்வெட்டு (கி.பி.1506)

    காலம் : ஹிஜிரி 911, க்ஸய (Kshaya) கி.பி.1506, வியாழக்கிழமை. (படம்:4)

    1. முகம்மது நவிக்கு
    2. யாண்டு 911 ஆவ
    3. து கிஷய வருஷம் அர்
    4. பசி மாதம் 290 செகு
    5. த்துமான மரக்காய
    6. ர் பீருகுட்டியார் வி
    7. யாழக்கிழமை நா
    8. ளில் மரித்தார்.

    மேற்குறிப்பிட்ட கி.பி.1497ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘நயினா மரக்காயர் செகு பூவக்கர்’ என்றும் கி.பி.1503ஆம் ஆண்டு கல்வெட்டில் ‘செகுநயினாவான அரிராசராம மரக்காயர் பீருகுட்டியார்’ என்றும் பெயரின் பின்னொட்டில் மரக்காயர் எனும் சொல் சேர்த்து குறிப்பிடுவதைக் காண முடிகிறது. இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மரக்காயர் என்ற சொல், ஆட்பெயரின் பின்னெட்டாக வருவதால் இசுலாம் சமூகத்தினரின் ஒரு பிரிவினராக மரக்காயர்கள் இருப்பர்.

    மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையில் இசுலாமியச் சமயத்தைச் சார்ந்த மரக்காயர்கள், தமிழர்களாகவோ அல்லது தமிழ்மொழி பேசுபவர்களாகவோ இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. ஏனென்றால் தமிழகத்தின் தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலுள்ள இவர்கள், தற்போதுவரை தமிழையே தாய் மொழியாகக் கொண்டு பேசி வருகின்றார்கள் என்பதைக் கள ஆய்வுகளின் வாயிலாக அறிய முடிகிறது.

    இடைக்காலத்திலேயே மரக்காயர்கள் கடல்சார் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று, அதன் வாயிலாக பல்வேறு நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும். இன்றையளவிலும் மரக்காயர்கள் இசுலாமிய சமூகத்தில் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னவென்று நோக்கும்போது இவர்களின் முதன்மையான தொழிலாக வாணிபம் இருந்து வருகிறது.

    மேற்சுட்டிய இசுலாமியர்கள் நவீன காலத்திலும் மரம் வியாபாரம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பது சிறப்புக்குரியதாகும். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்திய கல்வெட்டில் குறிப்பிடப்படுகிற மரக்கலநாயர்கள் கி.பி.11ஆம் நூற்றாண்டில் மரக்கலங்களைச் செலுத்துகின்ற மாலுமிகளாக இருந்தமையால் அவற்றை தொடர்ந்து வந்த மரக்காயர்கள் அந்த மரம் சார்ந்த பொருட்களை வியாபாரம் (மரபுசார்ந்த தொழிலாக) செய்து வருவதைத் தற்காலத்திலும் காண முடிகிறது என்பதே சிறப்பு. மேலும், இவர்கள் துணிகள், பட்டுத் துணிகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்கள் போன்றவற்றையும் வியாபாரம் செய்யும் தொழிலையும் செய்து வருகின்றனர் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவர். இவர்கள் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலிருந்த நகரங்களில் பிரதானமாக வணிகம்சார் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆதலால்தான் மரக்காயர்கள் இன்றளவிலும் கடற்கரையோரப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதைக் காண முடிகிறது.

    கி.பி.14-15ஆம் நூற்றாண்டுகளில் மரக்காயர்கள் இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் குடியேற்றங்களை அமைத்திருந்தனர் என்பதை இப்பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அதேபோன்று கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகூர், நாகப்பட்டினம், சுந்தரபாண்டியப்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மரக்காயர்களின் குடியேற்றங்கள் இருந்துள்ளன. இவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, அரேபியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளிலும் கடல்சார் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் வாயிலாக மரக்காயர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தூண்டுகிறது. இவர்கள் வாழ்வின் மேம்பாட்டிற்கு மூலதனமாக அமைந்த வணிகத்தை தங்களின் முதன்மை வாழ்வாதாரமாக கொண்டிருக்க வேண்டும். ஆகவே இனி வரும்காலங்களில் கூடுதலான கள ஆய்வு மேற்கொள்வதன் மூலம் மரக்காயர் சார்ந்த ஆவணங்களைக் கண்டறியும்போது, இவர்களின் குடியேற்றங்கள், செயல்பாடுகள், வணிகம் ஆகியவை குறித்து மிகுதியாக அறிய வாய்ப்பு அமையும்.

    சான்றெண் விளக்கம்

    1. Jayaseela Stephen, Portuguese in the Tamil coast, Navaijothi, publishing house, Pondicherry, 1998, PP.116-124.
    2. செ.இராசு, மருதுபாண்டியரின் தொண்டிக் கல்வெட்டு, ஆவணம் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992,ப.16 மற்றும் செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.51.
    3. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், ப.192.
    4. எ.சுப்பராயலு, சுமத்ராவில் தமிழ்க் கல்வெட்டுகள், ஆவணம் 4, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1994,பக்.116 – 124.
    5. செ.இராசு, தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, 2007, ப.98.
    6. மேலது, ப.155.
    7. மேலது, பக்.165-167.
    8. மேலது, பக். 54-55
    9. மேலது, பக்.76-78.
    10. வீ.செல்வகுமார், ஆ.ராஜா, சு.இராசவேலு, வட்டானம் கல்வெட்டுகள், ஆவணம் 23, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2012, பக்.162 – 163.

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கடல் கடந்து வணிகத்தில் ஈடுபட்ட இசுலாமியர் பற்றிச் சில தமிழ் கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. இவை இவர்கள் தமிழகப் பகுதியில் இருந்து வணிகம் செய்ததற்குச் சான்றாகும். இதில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள் மரக்காயர்கள். ஆனாலும் மரக்காயர் பற்றிய கல்வெட்டுகள் மிகக் குறைவே.
    மரக்காயர்களை பற்றி அதிகக் கல்வெட்டுச் செய்தி இல்லாமையைப் போக்கும் வகையாக திருவாடானை வட்டத்தில் வட்டானம் என்ற இடத்தில் மூன்று மரக்காயர் கல்லறைக் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள செய்தி இதற்குப் புதிய ஒளியைப் பாய்ச்சுவதாக உள்ளது.
    இவருடைய இந்தக் கட்டுரை இது காறும் இசுலாமியர் பற்றி  அறியப்படாத செய்திகளை நமக்கு வழங்குவது சிறப்பு. ஆனாலும் ஒரு குறை இசுலாமியர் சோழர் ஆட்சியிலேயே  தமிழகத்தில் இருந்திருந்தாலும் ஆசிரியர் முன்வைக்கின்ற செய்திகள், சான்றுகள், இசுலாமியரை தென் தமிழ்நாட்டவராகவே குறிப்பாக பாண்டிய நாட்டவராகவே அடையாளப்படுத்துகிறது. ஏன்? இது மதுரையில் இசுலாமியர் ஆட்சி சில காலம் நிலைபெற்று இருந்ததனால் ஏற்பட்ட விளைவா?

    மரக்காயர்களின் தாய்மொழி தமிழ் எனக் கொள்வதற்கான தரவுகள் எங்கே? இது தொடர்பான கள ஆய்வு விவரங்கள், ஆய்வு நிகழ்த்தியோர், ஆய்வுக்கு உட்பட்டோர், ஆய்வுக் காலம் போன்ற தரவுகள், சான்றுகளைத் தருதல் வேண்டும். ஆய்வாளர் பல இடங்களில் தம் கணிப்புகளை உரிய சான்றுகள் இல்லாமல் அளித்துள்ளார். முன்வைக்கும் ஒவ்வொரு செய்திக்கும் சான்று அளிப்பது, சீரிய ஆய்வு நடைமுறையும் நெறிமுறையும் ஆகும்.

    மரக்காயர்களின் வணிகத் தொடர்புகள் பற்றிய பகுதியில் சில நாடுகளை ஆய்வாளர் சுட்டுகிறார். நியூசிலாந்தில் தமிழ் எழுத்தில் இசுலாமிய வணிகர் பெயர் பொறித்த மணி கிடைத்துள்ளதை ஆய்வாளர் கவனித்திருக்கலாம். சுட்டி – https://www.booksfact.com/history/600-years-old-tamil-bell-new-zealand.html

    =================================================================
    Share
  • எங்கே வந்தாய் சந்நியாசீ?

    எங்கே வந்தாய் சந்நியாசீ?

    ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

    எங்கே வந்தாய் சந்நியாசீ?
    எங்கே போகிறாய் சந்நியாசீ?
    ஓடும் ஆறும், வீசும் காற்றும்,
    விரிந்த விண்ணும், பறக்கும் புள்ளும்
    உந்தன் தோழர்கள் சந்நியாசீ.

    உதிரும் இலைகள் உன் உணவானால்
    ஓடும் நதியும் உன் நீராகும்.
    அமர்ந்த இடமே ஆசனமாய்,
    அயர்ந்த இடமே சயனமதாய்
    உருளும் வாழ்க்கையில் ஒட்டாமல்
    மருளும் போக்குகள் தட்டாமல்,
    வேடிக்கை பார்த்துப் போவாய் நீ!
    வினோத உலகிது சிரிப்பாய் நீ!

    நண்பர்கள் இல்லை
    பகைவர்கள் இல்லை
    ஞாயிறு தருகின்ற பாடம் இது.

    புன்மைகள் இல்லை
    பொறாமைகள் இல்லை
    நீலவானத்தின் நீதி இது.

    விருப்பும் இல்லை
    வெறுப்பும் இல்லை
    வீழும் மழையின் அன்பு இது.

    போகின்றவரையில் போய்க்கொண்டே இரு.
    போகின்றபோது வருவது எது?

    எங்கே வந்தாய் சந்நியாசீ?
    எங்கே போகிறாய் சந்நியாசீ?

    ————————————————————————

    படத்துக்கு நன்றி – https://www.maxpixel.net

    Share
  • வலி

    வலி

    பாஸ்கர் சேஷாத்ரி

    நான் அந்த பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த போது ஒரு சின்ன கார் வந்து நின்றது. உள்ளிருந்து வெளியே வந்தவர் பக்கத்தில் பாதை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்றார். அப்போது ஒரு பழைய முகம் நிழலாடியது.

    நடராஜனா அது? உடனே, ‘நட்டு’ எனக் குரல் கொடுத்தேன்.

    அவன் செவியில் கேட்டதோ இல்லையோ திரும்பி பார்க்காமல் பாட்டியிடம் என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பினும், அருகே சென்று நீங்கள் நடராஜனா என வினவினேன்.

    ‘ஆமாம்’ நீங்க… என்றார்.

    ‘டேய் .. நான் பாஸ்கர் ’. உடனே, ‘பாச்சு’ என்றேன்,

    ‘டேய் கடன்காரா. எப்படிடா இருக்கே?

    ம்…. என்றேன்.

    நீ எங்கே இங்கு வந்த?

    ‘சேத்பட்’ போறேன். பஸ்சுக்கு நிக்கிறேன்.

    ‘பாட்டி… எதனா சாப்பிடறயா?’ அவள் வாயை திறந்து பல் இல்லை என்றாள். அழகாய் இருந்தது அந்த சிரிப்பு.

    ‘அப்ப பால் குடிக்கறயா?’

    வேண்டாம்…. ‘ஒரு பால் கோவா வாங்கி தா’ என்றாள்.ஆனால் சுற்றிலும் கடை ஏதும் இல்லை.

    ‘சாரிடா. உங்க கிட்ட பேசணும்’

    என்னோடு வரயா?

    எங்கே?

    என் வீட்டுக்கு. சிம்ப்சன் பின்னாடி.

    நட்டுவின் காரில் அமர்ந்தேன் .வண்டி மிக மெதுவாக சென்றது.

    ‘என்ன நட்டு’. இந்த அமைதி கொஞ்சம் கலவரமா இருக்கே?

    ஒன்னுமில்லை. அந்த பாட்டிக்கு வண்டிய நிறுத்தி பால்கோவா வாங்கிக் கொண்டான்.
    ‘உனக்கு’ எனக் கேட்டான்.

    ‘வேண்டாம்’ என்றேன்.

    ‘எப்படிடா இருக்கே? பார்த்து நாப்பது வருஷம் இருக்குமா?’

    ‘கிட்டத்தட்ட.’

    ‘நீ என்ன பண்ற?’

    ‘ஹிக்கின்பாதம்ஸ்ல’ இருந்தேன். இருபது வருஷம். அப்புறம் வெளிய வந்துட்டேன்
    ஏன்?

    அனுப்பிட்டாங்க. இனி கம்ப்யூட்டர் தான் எல்லாம் என்றார்கள். அம்பது வயசை தாண்டியாச்சு.         சீ ஆர் எஸ்

    ‘இப்ப லாரி கம்பனில எல்லார் போடறேன்.’

    என் கல்லூரி படிப்பு, பேச்சு திறமை எதுவும் உதவலை .

    குழந்தைங்க?

    இரண்டு பொண்ணு. ‘ரெண்டும் லவ் மாரேஜ்.’

    அப்பாவுக்கு மறைமுக உதவி. ‘என் பணத்துல ஒரு மண்ணும் செய்ய முடியாது.’ தங்கமான மாப்பிள்ளை. ஆனால் பெரிசா படிக்கல.

    சட்டென வண்டி நின்றது .

    என்னடா….

    ஒண்ணுமில்லை. ‘போலாம்’ என்றான்

    வீடு வந்தது. பெரிய வீடு

    ‘என்ன பிசினஸ் பண்ற?’

    ‘ஃபினான்ஸ்’ என்றான்.

    யாரும் இல்லை? வீட்டில்.

    ‘எங்கடா உன் ஒய்ப்.’

    ‘போய் நாலு மாசம் ஆச்சு.’  படத்தைக் காட்டினான்.

    ‘டேய் இவ ரேணு இல்லை!’

    ஆமா. உனக்கு ஞாபகம் இருக்கா?

    ‘லேசா இருக்கு.’

    அறைக்கு சென்று கதவை மூடி ஏசி-யை போட்டு என்னிடம் வந்தான் .

    ‘நட்டு’ – என சொல்லும்போதே கண்கள் கலங்கின .

    ‘டேய் பீ ரிலாக்ஸ்ட்.’

    சொல்லும் போதே என்னை கட்டி பிடித்து அழத் தொடங்கினான் .

    என்ன நட்டு? குழந்தை மாதிரி. ‘வாட்ஸ் ராங்’ என்றேன்.

    ‘ரொம்ப நாள் துக்கம்டா . நீங்களெல்லாம் காலேஜுக்கு போய் படிச்சீங்க. என்னால எஸ் எஸ் எல் சியை கூட தாண்ட முடியல. நாலு முறை எழுதினேன் …பெயில்.’

    அழுதான்.

    டேய். நீ இப்ப வெற்றிகரமான முதலாளி ‘அத பார்ரா.’

    அட போடா. என் கஷ்டம் உனக்கு புரியாது. ‘படிக்கலைன்ற குறை எனக்கு கொஞ்சம் கூட போலட. தூங்கி எழுந்தவுடன் அந்த பழைய காலிகோ எஸ் எஸ் எல் சீ புஸ்தகம் தான் நினைவுக்கு வருது.’

    ‘டேய் . அது உன் காம்ளெக்ஸ்.’

    உன் வசதி வாழ்க்கையைப் பார்.

    ‘ரெண்டையும் என்னால ஒண்ணா பாக்க முடியல டா.’ ஒரு குற்ற உணர்ச்சி என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    ‘சாரிடா. ஏதோ ஒரு அழுத்தம் . உன்னை பார்த்து வெளிய வந்துட்டுது.’

    ‘இட்ஸ் ஒகே’ என்றேன்.

    ‘உன்னை எங்கே இறக்கி விடனும்’

    ‘ஹௌசிங் போர்டு’ என்றேன்.

    ‘போகும் போது ஒரு காபி குடித்து விட்டு பாட்டியிடம் பால் கோவா கொடுத்தோம்
    வர்ற சண்டே என்னை கூப்பிடு . ஒரு செல் வாங்கிக்கோ’ என உபாயம் சொன்னான் .

    ‘சரி’ என்றேன்.

    கண்ணாடி கதவை மூடும்போது ‘ டேய் அந்த விஷயத்தை அடியோடு விட்டுடு.’

    படிப்புக்கும் ஒரு எல்லை உண்டு. நீ ரொம்ப கலங்காதே என்றேன்.

    ‘போடா.. இது நாப்பது வருஷ வலி. உனக்கு இது புரியாது.’

    என்ன சொல்ல வர்ற?

    ‘டேய். இது வடு. சுட்ட வடு. புத்தியில்லாதவனின் அவஸ்தை. எங்க போனாலும் தள்ளியே வக்கிறான். தீண்டாமை போல.’

    அப்ப உன் வசதி எல்லாம்?

    ‘அப்பன் சொத்து.’

    ‘நீ என்ன பண்ண?’

    ‘ஒரு பையனை பெத்தேன்.’

    ‘அவ்வளவுதான்.’ இது இனி அவர்கள் உலகம். அவன் உன்னை ‘தாண்டுவாண்டா பாரு’ என்றேன்.

    ‘நிறுத்துடா?’

    ‘ஏண்டா நட்டு, இப்படி கத்தறே?’

    ‘அவனும் என்னை போலவே படிக்கல.’ அது தான் சொன்னேன் ‘வலின்னு’ .

    Share
  • அருள் வேட்டல்

    அருள் வேட்டல்

    ஏறன் சிவா

    வற்றாத கற்பனை வேண்டும்  நாளும்

    வளமான சிந்தனை வேண்டும் — கவிச்

    சொற்சுடர் மதிதனில் வேண்டும் அவை

    சோர்வுறாப் பயன்தரல் வேண்டும் — கருத்து

    முற்றிய கவிதைகள் வேண்டும்  அவை

    முடிவிலா  இசைபெறல் வேண்டும் — அதற்கு

    நற்றமிழ் துணைவரல் வேண்டும் நெஞ்சின்

    நடுவமர்ந் தருள்செய வேண்டும்!

     

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 233

    படக்கவிதைப் போட்டி – 233

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (24.11.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 232-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீலவானப் பின்னணியில் கருங்கோட்டில் அமர்ந்திருக்கும் கோலவெண் பறவைகளின் கவின்காட்சி கண்ணைப் பறிக்கின்றது. மூவண்ணங்காட்டி எண்ணங்கவரும் இவ்வொளி ஓவியத்தை எடுத்திருக்கும் புகைப்பட நிபுணர் திருமிகு. கீதாமதிக்கும், இவ்வழகிய படத்தைப் படக்கவிதைப் போட்டி 232க்குத் தெரிவுசெய்து தந்துள்ள தேர்வாளர் திருமிகு. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள்!

    இயற்கையின் படைப்பில் பறவைகள் வியப்புக்குரியவை. வானவெளியெங்கும் சுற்றித் திரியும் சுதந்தரமும், அந்திவந்தால் குடும்பத்தோடு கூட்டிலிணைந்து பாட்டிசைத்து மகிழும் பாக்கியமும் பெற்றவை அவை. கொலைத்தொழில் புரியும் புள் வேட்டுவனிடம் சிக்காதவரை பறவைகளின் கலைவாழ்வுக்குப் பங்கமில்லை.

    பார்த்தாலே பரவசமளித்துக் கவியுள்ளத்தைத் தட்டியெழுப்பும் இவ் எழிற்படத்தைக் காணுகையில் பாமழை பொழியாது விடுப்பரோ நம் பாவலர்கள்?

    ஆதலால், போட்டியில் கலந்துகொள்ள வாரீர்! உம் கவிதைகளைத் தாரீர்! எனக் கவிஞர் குழாத்தைக் கரங் குவித்து அழைக்கின்றேன்!

    *****
    ’பட்ட மரமும் பறவைகளாலே அழகுறுதலைப் போல் கெட்ட குடும்பமும் கூடியிருந்தால் கேடது நீங்கிப் பொலிவு பெறும்’ என நம்பிக்கை விதைகளைத் தம் பாவில் தூவியிருக்கின்றார்  திரு. செண்பக ஜெகதீசன்.

    தழைக்க…

    பட்ட மரத்தில் பறவைகள் அமர்ந்தால்
    பளிச்சிடும் மரமும் பெற்றிடும் புத்துயிர்,
    கெட்ட குடியென ஒதுங்கிச் செலாதே
    கேடது நீங்கிடக் கூடிடு குடும்பமாய்,
    தொட்டதற் கெல்லாம் வேண்டாம் சண்டை
    தொடர்ந்திடு உறவை உதவிகள் செய்தே,
    எட்டிடும் தூரமே இன்ப வாழ்க்கை
    என்றும் செலாதே உறவைத் துறந்தே…!

    *****

    ”மதிமுகம் மலர்ந்த மரங்களெல்லாம், மலடாய் மாண்டது மானிடனாலோ?” என வருந்தி, பட்டமரம் மீண்டும் பசுமைபெறப் பறவைகள் நிகழ்த்தும் பிரார்த்தனைக் கூட்டமிது என்கிறார் திரு. ராவணா சுந்தர்.

    பட்டமரம் பசுமை பெற,
    பறவைகளின் பிரார்த்தனைக் கூட்டம்.
    உச்சிவெயில் உயிரைக் உருக்கையில,
    உல்லாசமாய் உன்மடியில் ஊசலாடினோமே!
    இரைதேடி இறைஞ்சும் இதழ்களுக்கு,
    இளைப்பாற இளங்கனி இழைத்தாயே!
    சிற்றின்பச் சிந்தனைகள் சிலிர்ப்பூட்டும்போது,
    சிரங்களில் செவ்வண்ணமே சீராட்டினாயே!
    முத்தத்தின் முதல்கருவை முட்டையிடும்போது,
    முக்கிளையினை முதல்மடியாக முகமலர்ந்தாயே!
    தாய்மடி தீண்டாத் தருணமும்,
    தன்மடியில் தழைத்துத் துயிலெழுப்பினாயே!
    மூடர்களின் முன்னேற்ற முன்னுரையில்,
    முல்லையின் மூச்சுதான் முதல்பலியோ?
    மதிமுகம் மலர்ந்த மரங்களெல்லாம்,
    மலடாய் மாண்டது மானிடனாலோ!
    அன்னைகளின் ஆருயிர் அரும்ப,
    அழுகுரல் அறிந்து அருள்வாயா…!
    இறைவா….?

    *****

    ”பருவங்கள் மாறும்; பட்ட மரமும் பூத்துக் குலுங்கும்! காலங்கள் மாறும்
    கண்ட கனவு நனவாகும்; அதுவரை காத்திருக்க கற்றுக்கொள்!” என்று பொறுமையின் பெருமையைப் பறவைக்கும் மானுடர்க்கும் சேர்த்தே போதிக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    மாற்றம் மனமாற்றம்

    இலைகள் உதிர்ந்து
    கிளைகள் மட்டும் இருக்க
    பட்ட மரமும் பறவைகளுக்குப்
    புகலிடமாய் மாறும்
    உடைந்த கிளைகள் கூட
    விறகாய்ப் பயன்படும்!
    பயனற்ற பொருளாய்
    அவன் படைப்பில் ஏதும் இல்லை!
    அத்தனையும் இழந்தாலும்
    அது முடிவல்ல, ஆரம்பம்!
    முடியும் என்று முயன்றிடு
    துறந்தவை யாவும் திரும்பக் கிட்டும்
    வாழ்க்கை ஒரு சக்கரம் என்று
    அது உனக்கு என்றும் உணர்த்தும்!
    பருவங்கள் மாறும்
    பட்ட மரமும் பூத்துக் குலுங்கும்
    காலங்கள் மாறும்
    கண்ட கனவு நனவாகும்
    அதுவரை காத்திருக்கக் கற்றுக்கொள்
    நம்பிக்கையோடு
    நல்ல காலம் பிறக்கும் என்று!
    சூழ்நிலைகளும் துயரங்களும்
    அள்ளும் பாத்திரங்களின்
    உருவம் கொள்ளும்!
    நீர்நிலை போல்
    பார்ப்பவரின் பார்வையைப் பொருத்திச்
    சிறுது பெரிது என மாறும்
    சூழ்நிலைகளை மாற்ற இயலாது!
    நம் சிந்தனையை மாற்ற முடியும்
    இதுவும் கடந்து போகும்
    என்று உன் சிந்தனையில்
    விதைத்திடு!
    வெற்றிக்கனி தரும் செடி
    தானாய் முளைத்துவிடும்!

    *****

    பட்டமரமும் அதனை விட்டகலாப் பறவைகளும் நம் கவிஞர்களின் சிந்தனையைக் கிளறி, ”இன்மை நிரந்தமன்று!” எனும் நன்மொழியை உதிர்க்க வைத்திருக்கின்றன. பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    வேடந்தாங்கிய பறவைகள்!

    இயற்கையன்னை தானளித்த
    இன்பபுரி இவ்வையகத்தை
    நகரமயமாக்கி வைத்து
    நரகமதை உருவாக்கினோம்!
    நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
    நிலமடந்தை வளமொழித்தோம்
    கால் வைக்கும் இடமெல்லாம்
    கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!
    பச்சைநிறத் தாயவளின்
    கச்சைமலை முகடழித்து
    மிச்ச மீதம் ஏதுமின்றி
    தாய்ப்பாலை வீணடித்தோம்!
    வான்பொய்த்து மழையில்லை
    கதிரவனால் அதிவெப்பநிலை
    நில அதிர்வால் வீடில்லை – எனக்கூறி
    அப்பாவிப் பறவையென்ற
    வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!
    இயற்கை வளமழித்து
    கான்க்ரீட் மரக்கிளையில்
    வண்ணமெல்லாம் தானிழந்து
    வாட்டமுற்று வீற்றிருப்போம்!

    ”நீர்வளத்தைக் கெடுத்து, நிலவளத்தை அழித்ததனால் வான்பொய்த்து மழையில்லை; நிலஅதிர்வால் வீடில்லை என்றானபின் கான்கிரீட் மரக்கிளையில் வாடி அமர்ந்திருக்கும் வேடப்பறவைகள் நாம்!” என்று மக்களின் மதியீனத்தால் விளைந்த சீர்கேட்டைச் சிறப்பாகப் பாட்டில் பதிவுசெய்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • தோழிப் பாட்டு!

    ஏறன் சிவா

    மலரென் றழைத்தாரடி — உன்றன்
    மனத்தைக் குழைத்தாரடி — தோழி
    வலிமை யிழந்தாயடி!

    அழகைப் புகழ்ந்தாரடி — உன்றன்
    அறிவை யிகழ்ந்தாரடி — தோழி
    ஆற்றல் குறைந்தாயடி!

    நிலவும் முகிலுமென்றே — உன்றன்
    நினைவை மறைத்தாரடி — தோழி
    நிழலாய்ச் சரிந்தாயடி!

    வலையை விரித்தாரடி — உன்றன்
    வாழ்வைப் பறித்தாரடி — தோழி
    மருண்டு விழித்தாயடி!

    தென்றல் எனவுரைத்தே — உன்றன்
    திண்மை யழித்தாரடி — அதைத்
    தெரிய மறந்தாயடி!

    கனவைக் கலைத்தாரடி — அதில்
    கல்லை விடுத்தாரடி — தோழி
    காய மடைந்தாயடி!

    காதல் மறுத்தாரடி — உன்றன்
    கண்ணீர் பழித்தாரடி — தோழி
    கனவுக்குள் வாழ்ந்தாயடி!

    ஓதும்உன் சொல்லைத் — தீயில்
    உதறி எறிந்தாரடி — தோழி
    ஊமையாய் நின்றாயடி!

    வஞ்சி உனக்கெதிராய் — இங்கு
    வளருங் களைபிடுங்க — உளத்தில்
    மாற்றங்கள் காண்பாயடி!

    நெஞ்சு நிமிர்வாயடி — தோழி
    நெருப்பாய் இருப்பாயடி — உன்றன்
    நிலையை உயர்த்துதற்கே!

    Share
  • தேசத் துரோகியின் கதை

    தேசத் துரோகியின் கதை

    நியாண்டர் செல்வன்

    “என்னடா சோதனைமயமான வாழ்க்கை இது, இத்தனை கடினமாக இருக்கிறது? இதில் இருந்து எப்படி மீண்டு வருவது?” என நினைக்கும் சூழல் வந்தால் அலெக்சாண்டர் சோல்சென்ஸ்டைனை (Aleksandr Solzhenitsyn) நினைத்துக்கொள்ளவும்.

    அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்:

    ஹிட்லர் ஆட்சியில் துன்புறுதல்

    ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து போரிடுதல்

    அதன்பின் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு எட்டாண்டுகள் உலகின் மிகக் கொடிய சிறைவாசம்

    நிர்ப்பந்த விவாகரத்து..மனைவியை பிரிந்து 15 ஆண்டுகள்

    அதன்பின் உள்நாட்டுத் தனிமைச் சிறையில் அடைபடுதல்

    அதன்பின் கான்சர்

    சொந்த நாட்டை விட்டுக் குடியுரிமை பறிக்கப்பட்டு, துரத்தி அடிக்கப்படுதல்……”

    இத்தனையும் ஒரு மனிதனுக்கு நிகழ்ந்தால் அவன் அதன்பின் என்ன ஆவான்?

    அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ஓர் எளிய ரஷ்ய வீரர். அவரது நாட்டை ஹிட்லர் படையெடுத்துப் பிடிக்க, ரஷ்ய ராணூவத்தில் சேர்ந்து வீரப் போர் புரிந்தார் அலெக்சாந்தர். இருமுறை விருது பெற்றார்.

    அவரது துரதிர்ஷ்டம்… போர் சமயம் ஸ்டாலினை விமர்சித்து அவர் எழுதி வைத்திருந்த சில குறிப்புகள் ராணுவ அதிகாரிகள் கையில் கிடைக்க, தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உலகப் போரில் ஜெர்மனி தோற்றதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் சிறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

    தேசத் துரோகிகளுக்கு 10 ஆண்டுகள் குலாக் எனப்படும் வதைமுகாமில் தண்டனை கிடைக்கும். போருக்கு முன் அவர் மணந்த மனைவியை நாட்டுக்காக, திருமணம் ஆன ஒரே ஆண்டில் பிரிந்து போருக்குச் சென்றார் அலெக்சாந்தர். ஆனால் தேசத் துரோகி ஆகிவிட்டதால் அவர் மனைவியின் ரேசன் கார்டு ரத்தாகும் நிலை வர, இருவரும் வேறு வழியின்றி விவாகரத்து பெற்றனர்.

    அதன்பின் குலாகில் 10 ஆண்டுகள் கடுமையான சித்திரவதை அனுபவித்தார். அதன்பின் விடுதலை பெற்றாலும் அவரை அவர் பிறந்த பகுதியை விட்டு, கசாகஸ்தானுக்கு நாடு கடத்தினார்கள். அங்கே அவருக்குக் கேன்சரும் வந்தது.

    இதுதான் அவரது வாழ்வின் மிகச் சோதனையான கட்டம். இங்கிருந்து தான் அவர் மீண்டெழுந்தார்.

    தன் சிறை அனுபவங்களை வைத்து ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி, ஒரு நாவல் எழுதினார் (One Day in the Life of Ivan Denisovich). கடும் பத்திரிக்கை தணிக்கை இருந்த ரஷ்யாவில் அதை எப்படி வெளியிட முடியும்? ஆனால் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. ஸ்டாலின் இறந்து குருசேவ் அதிபரானார். குலாக் முறையைக் கடுமையாகச் சாடி வந்த குருசேவ் அரசின் தணிக்கைத் துறையிடம் இந்த நூல் அனுமதிக்குப் போனது.

    “நூல் எழுதியதற்குத் தன்னைக் கைது செய்ய மீன்டும் போலிஸ் வரும்” என நினைத்திருந்த அலெக்சாந்தர் சோல்சென்டைன் வீட்டுக்கு நூலை வெளியிட அனுமதி அளித்துக் கடிதம் வந்தது.
    நூல் வெளியானது… இரும்புத் திரை நாட்டிலிருந்து அரசை விமர்சித்து இப்படி ஒரு நூலா என உலகமே ஸ்தம்பித்தது.. ஒட்டுமொத்த உலகிலும் ரஷ்யாவில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக ஒரு பிம்பம் கட்டமைக்கபட்டிருந்த 1960களில் இப்படி ஒரு நூல் ரஷ்யாவிலிருந்தே வெளியானது உலகையே வியப்பில் ஆழ்த்தியது…

    ஆனால் அதற்குள் குருசேவ் இறக்க, சோல்சென்ஸ்டைனுக்கு வேறு எந்த நூலை எழுதவும் அனுமதி கிடைக்கவில்லை. அவரை போலிஸ் கைது செய்ய முனைகையில் அந்தச் செய்தி வந்தது… அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைனுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது என…

    அதன்பின் அவரைக் கைது செய்யும் முயற்சியை சோவியத் அரசு கைவிட்டது. ஆனால் வீட்டுக் காவலில் அதிபயங்கரமான ஒரு நூலை அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன் ரகசியமாக எழுதிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு தாளாக எழுதி, தன் மகள் மூலம் நூலை ரகசியமாக ஒவ்வொரு தாளாக வெளியே கொண்டு போனார்.

    அதில் இருந்தது, குலாகுகளின் விவரம், அதில் அடைபட்டுக் கிடந்த 256 கைதிகளின் பேட்டி, அங்கே நடந்த கொடுமைகள், ரஷ்ய மக்களின் வாழ்க்கை விவரம் ஆகியவையே.

    எஸ்தோனியாவில் இருந்து இலக்கிய ஆர்வலர்கள் மூலம் நூல் பாரிசுக்குச் சென்றது. நூல் பதிப்பும் ஆனது. சோவியத் அரசுக்குப் பேரதிர்ச்சி… தன் உயிரே போனாலும் பரவாயில்லை எனக் கடும் வீட்டுக் காவலில் இருந்து அந்த நூலை எழுதினார் அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன்.

    The gulag archipelago என அழைக்கப்படும் அந்த நூல் வெளியாகி, உலகெங்கும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது. அவரை என்ன செய்வது எனக் குழம்பிய சோவியத் அரசு, அதன்பின் அவரது குடியுரிமையைப் பறித்து நாடு கடத்திவிட்டது.

    1974இல் நாடு கடத்தப்பட்ட அலெக்சாந்தர் சோல்சென்ஸ்டைன், அதன்பின் 1994இல் சோவியத் அரசு வீழ்ந்த பின்னர்தான் ரஷ்யா திரும்பினார். அவரது குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டது மாத்திரமின்றி அவர் ரஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளராக அறிவிக்கப்பட்டு, ரஷ்ய மாணவர்களுக்கு அவரது நூல் பாடப் புத்தமாக வைக்கப்பட்டது.

    2008ஆம் ஆண்டு அவர் ரஷ்யாவில் இறந்தபோது, ரஷ்ய அதிபர் மெட்வடேவ் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    முதல் பத்தியை இப்போது மீண்டும் படிக்கவும்.

    Photo courtesy: Wikipedia

    Share
  • சேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)

    சேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ———————————————————

    திருவாரூரில் பரவை நாச்சியாரைச் சந்தித்த சுந்தரர், அம்மங்கையைத் திருமணம் புரிந்துகொள்ளும் அவாவினைப் பெருமானிடமே தெரிவித்தார். பரவையார் தம் முன் திருமணக் கோலத்துடன் திகழ்ந்த சுந்தரரைப் பற்றிய செய்திகளைத் தம் தோழியரிடம் உசாவித் தெரிந்துகொண்டார். அவர் ஆதி சிவனடியார் என்பதறிந்து அவர்பால் பெருங்காதலுற்றார். திருவாரூர்ச் சிவனடியார்களிடம் இறைவன், இருவரைப் பற்றியும் அவர்கள் கனவில் கூறி, அவர்கள் திருமணத்துக்கு உரிய செயல்களைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே சுந்தரர் கனவிலும், பரவையார் கனவிலும் அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளத் திருவருள் புரிந்தார். ஆகவே சுந்தரர், பரவையார், அடியார்கள் ஆகிய அனைவருக்கும், இறைவன் இருவர் திருமணத்தை உறுதி செய்தார்.

    இறைவன் திருவருளால் தம் உள்ளத்தால் பரவையாருடன் இணைந்த சுந்தரர், தாமே , பரவையாருடன் இணைந்து, பெற்ற சிற்றின்பத்தையே பேரின்பமாக்கிக் கொள்ளும் வகையில், அவருடன் யோக வாழ்வில் இணைந்து வாழத் தொடங்கினார். இந்த வாழ்வு, இறையருளின் திறம் பெற்ற திருமண மக்களின் வாழ்வில் உண்டாகும்.

    இதனைக் கம்பர் தம் இராமாயணத்தில் ,

    ‘மன்றலின் வந்து மணத்தவி சேறி
    வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
    இன்றுணை அன்னமும் எய்திஇருந்தார்
    ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்’

    என்று பாடுகிறார்.

    இராமனும் சீதையும் கொண்ட காதல், கருங்கடற்பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடிய தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அவ்வாறே திருக்கயிலையில் உள்ளம் ஒன்றிய சுந்தரரும், பரவையாரும் திருவாரூரில், போகம் ஒன்றிய தெய்வீக யோக வாழ்வை நடத்தினர். திருவாரூர்த் தேவர்பிரான் திருவருளால் அழகிய நாவலூர் மன்னனாகிய சுந்தரர், பரவையாரின் திருமார்பாகிய மலைமேல் தவயோகம் பயின்றார்.

    இரண்டு ஆன்மாக்களின் கூட்டத்திலே சிற்றின்பம் எனப் பேர்பெறும். நாயகன் நாயகி பாவனையில் ஆன்மாவாகிய நாயகி உயிர்த்தலைவனாகிய ஈசனைக் கூடுதல் பேரின்பம் எனப் பெறும். அவ்வாறே, பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனையின் வழியே பிரமரந்திரத்திற் செலுத்தித் துவாதசாந்தத்திலே விந்துச் சோதியாகிய ஒளியைத் தரிசித்து அக்காட்சியிலே அழுந்தி அதன்மயமாய் நிற்றல் சிவயோகம் எனப்பெறும்.

    சீவன்மாக்களும் இவ்வாறே சிவயோகம் பயில்தல் வேண்டும் என்பது குறிப்பு.

    திருமார்புகளின் சார்வே யோகமாயிற்று; அது பரம்பரை விருப்பமாய் விளைந்ததேயன்றி வேறு செயலுக்குக் காரணமாகவில்லை என்பது.

    ‘பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் அங்கு
    முற்ற வரும் பரிசு உந்தீபற,
    முறையாதும் மாயைஎன்றுஉந்தீபற’

    என்ற திருவுந்தியாரால் விளங்கும் .

    திருமார்புகள் பரஞானம், அபரஞானம் இரண்டையும் குறிக்கும் என்பது லலிதா சகஸ்ர நாமம்!

    திருக்கயிலாய மின்னல்கள் வந்து சாரும் இடை , பரவையாரின் இடை என்பதை , ‘மின்னாருங் கொடிமருங்குல் பரவை எனும் மெல்லியல்’ என்ற தொடர் விளக்கும். மேலும் அவர்தம் திருமார்புகள் பொன்மலையாகிய கயிலாயத்தின் சார்பு பெற்றதை , ‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே’ என்ற தொடர் விளக்கும். இந்தக் கயிலை மலையில் செய்யும் தவமே , சிவ பரம்பரையினர் பலகாலமும் மேற்கொண்டு பயிலும் யோகம் ஆகும். இதனையே சேக்கிழார் பெருந்தகை,

    ‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே சார்வாகப்
    பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்!’

    என்று பாடினார்.

    இனி முழுப் பாடலையும் பயில்வோம்!

    தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளான்
    மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
    பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
    பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்!

    இப்பாடலில் தெய்வத்தின் திருவருளால் இந்தப் பூமியில் வரும் உயிர்களின் செயல்கள் யாவும் தெய்வச் செயல்கள். ஆதலால், அதே தெய்வத்தின் கருணையினால் பூமியில் தோன்றும் நம் செயல்களும் தெய்வச் செயல்களாக அமைய வேண்டும். அவ்வகையில் நம் வழிபாடும் வாழ்க்கையும் அமைதல் வேண்டும். திருஞான சம்பந்தரின் திருமணம், அனைவர்க்கும் சிவலோகப் பேற்றை அருளியது இதனால்தான்.

    ‘காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
    யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
    நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
    வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே.’

    ‘என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
    உன்செய லேஎன் றுணரப்பெற் றேன்!’

    என்ற பட்டினத்தடிகள் பாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

    ஆகவே நாம் தெய்வத்தின் திருவருளாகவே அனைத்தையும் நினைக்கப் பழகிக் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் நடவடிக்கை ஒவ்வொன்றும் சிவன் திருவருளாகவே அமையும்; நாம் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும் சிறப்பினை நாம் பெறலாம். சேக்கிழார் தம் நயம் மிக்க பாடலால் நாம் அடையும் பயன் இதுவே!

    (தொடரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    78. படைச் செருக்கு

    குறள் 771:

    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கல்நின் றவர்

    போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.

    குறள் 772:

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது

    காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.

    குறள் 773:

    பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு

    பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.

    குறள் 774:

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்

    போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.

    குறள் 775:

    விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
    ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

    எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.

    குறள் 776:

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் நாளை எடுத்து

    ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.

    குறள் 777:

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து

    உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.

    குறள் 778:

    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினுஞ்சீர் குன்றல் இலர்

    போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.

    குறள் 779:

    இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்த தொறுக்கிற் பவர்

    சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?

    குறள் 780:

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
    டிரந்துகோட் டக்க துடைத்து

    தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share
  • குறளின் கதிர்களாய்…(275)

    செண்பக ஜெகதீசன்

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பா டரிது
    -திருக்குறள் -1049 (நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    அனைத்தையும் எரித்துவிடும்
    அணைக்கவியலா நெருப்பினிலும்,
    அதற்கான மருந்து மந்திரங்கள்
    துணையுடன்
    அமைதியாய்த் தூங்கிடலாம்..
    வாழ்வில்
    வறுமை வந்தக்கால்,
    வழியே இல்லை
    மன அமைதியுடன்
    உறங்கிடவே…!

    —————————————————————————-

    குறும்பாவில்…

    எரியும் நெருப்பிலும்
    ஏதோ வகையில் தூங்கமுடிந்தாலும்,
    முடியாது வறுமையில்…!

    —————————————————————————-

    மரபுக் கவிதையில்…

    எல்லாம் எரிக்கும் நெருப்பதுதான்
    எரிந்திடும் போதே அதன்மேலே
    வல்லமை மிக்கோர் மருந்துமாய
    வழியது கொண்டே தூங்கிடலாம்,
    எல்லாம் இழந்து வாழ்வினிலே
    எதுவு மில்லா வறுமைவந்தால்,
    சொல்ல முடியாச் சோதனையாய்ச்
    சொற்பமும் தூங்க முடியாதே…!

    —————————————————————————-

    லிமரைக்கூ…

    நெருப்பினிலும் தூக்கமது வரும்,
    நடைமுறை வாழ்வில் வரும் வறுமை
    தூக்கமிலாத் துன்பமே தரும்…!
    —————————————————————————-

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    வறும கொடியது,
    வாட்டி வதைக்கும்
    வறும கொடியது..
    எரியிற நெருப்புல படுத்தாலும்
    எப்புடியாவது தூக்கம் வந்து
    எடஞ்சலு இல்லாமத் தூங்கிடலாம்,
    கேடுகெட்ட வறும வந்தா
    வாழ்க்கயில
    கொஞ்சங்கூடத் தூக்கம் வராதே..
    தெரிஞ்சிக்கோ
    கொடியது கொடியது
    வறும கொடியது,
    வாட்டி வதைக்கும்
    வறும கொடியது…!

    (தொடரும்…………

    Share