Blog

  • விசுவரூபம்

    கிரேசி மோகன்

    crazy

    சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
    கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
    அப்பப்பா போதும் அகந்தையின் ஆர்பாட்டம்;
    எப்பப்பா ஞானம் எமக்கு”….கிரேசி மோகன்….

    ஆரணம் -வேதம்….

    Share
  • மார்கழி மலர்கள் – ஒரு மனம் (பாடல்)

    இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/[/mixcloud]

     

    Mylapore-Kapaleeshwar-Temple-Tank

     

    ஒருமனம் உன்னைப் பாடும்200px-karpagambalkapaleeswrar1
    ஒருமனம் உலகை நாடும்
    இருமனம் என்னும் அவலம்
    என்று தீரும்?
    என்று தீரும்?

    திருவளர் மயிலைக் குடிலில்
    தினம் வளர் அழகே தேனே
    கருவளர் முன்பே உன்னைக்
    கண்டும் மறந்தேனே (ஒருமனம்)

    ஒன்றும் அறியாத கன்று
    ஊரெங்கும் தாயைத் தேடும்
    நின்று யாரைக் கேட்கும்?
    நெஞ்செலாம் துன்பம் தாக்கும்

    கன்றும் தாயைப் பிரிந்தால்
    தாயும் மறந்திடப் போமோ?
    இன்றும் வருவாய் என்றே
    என்றும் உருகி நின்றேனே! (ஒருமனம்)

    19.12.2014 / வெள்ளி / கபாலீஸ்வரர் கோயிலில் / காலை 10.30?

    Share
  • யாவரும் கேளீர்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    சாதி மத பேத மின்றி
    சரி சமமாய் மனிதர் நாம்
    மேதினியில் ஒரு குடியாய்                                 friendship
    மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்….!

    சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
    சேர்ந்து இனிதே வாழ்கையில்
    அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
    அழிவுப் பாதை செல்வதா….?

    உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
    ஓடும் குருதி ஒரே நிறம்
    கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்
    காட்டு விலங்கின் இழி குணம்…..!

    பிறப்பில் மனிதர் எவருமிங்கு
    பெரிது சிறிது இல்லையே
    சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
    சிந்தையாலே உயருவார்….!

    பலிகள் செய்து பாவியாகப்
    பாரில் வாழ்வோர் சிறியவர்
    தெளிந்த அறிவு அன்பினோடு
    சேர்ந்து இனிது வாழுவோம்……!

     

    Share
  • எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    நெஞ்சுவலி என்று சொல்லி
    நீர் கேட்டு அருந்தியவர்
    அரை நிமிடம் பேசிவிட்டு
    அப்படியே தூங்கி விட்டார்!

    தூங்கியவர் எழும்ப வில்லை
    துக்கத்தைக் கொடுத்து விட்டு
    ஏங்கி நின்று அழுதிடவே
    எமனுலகை சென் றடைந்தார்!

    தாயோடு பிள்ளைகளும்
    தலைதலையாய் அடித்திட்டு
    சஞ்சலமாம் கடலினுள்ளே
    தாம் மூழ்கிக் கிடந்தனரே!

    மூத்தபிள்ளை மணியாக
    குடும்பத்தில் இருந்தமையால்
    முழுப்பேரும் மணியினையே
    முதலாகக் கொண்டுநின்றார்!

    தந்தையில்லாக் குடும்பமதில்
    தங்கைமார் ஐவருடன்
    தாயுமே சேர்ந்து அவன்
    தயவினையே பார்த்திருந்தார்!

    மணிகுடும்ப நிலைகண்டு
    மாதவனும் மனமிரங்கி
    மருந்துக் கடைதன்னில்
    மணிக்கு வேலைகொடுத்தனனே!

    மணிவீட்டில் யாவருமே
    வயிராற உண்பதற்கு
    மருந்துக் கடைவேலை
    மாமருந்தாய் ஆகியதே!

    மணியனது வேலைகண்டு
    மலைத்து நின்ற மாதவனும்
    மானேஜர் பதவியிலே
    மணியையுமே அமர்த்தினரே!

    மணியறிவு மணியழகு
    மாதவனைக் கவர்ந்தமையால்
    மாப்பிள்ளை ஆக்கிவிட்டான்
    மணிதன்னை மாதவனும்!

    மணியினது மனத்தினிலே
    பணத்தாசை பிடித்ததனால்
    மனம்போன போக்கினிலே
    பணம்பண்ணத் தொடங்கிவிட்டான்!

    மருந்துக்கடை இப்போது
    மணிவசத்தில் வந்தமையால்
    கலப்படத்தைக் கையாண்டு
    காசுழைக்கத் தொடங்கிவிட்டான்!

    காசுவந்த காரணத்தால்
    கடவுளையே மறந்தான்
    கஷ்டப்பட்டு வந்ததையும்
    கவனத்தில் கொள்ளவில்லை!

    கலப்பட மருந்தினாலே
    கணக்கின்றி நுடங்கிவிட்டு
    கவலைப்பட்டு நிற்போரை
    கருத்திலும் கொள்ளவில்லை!

    நாட்பட்ட மருந்தையெல்லாம்
    நல்லமருந்த தோடிணைத்து
    மேல்பட்ட விலைக்குவிற்று
    விரைவாகப் பணம்சேர்த்தான்!

    பப்பாளிவிதை தன்னை
    பக்குவமாய் பதப்படுத்தி
    மிளகோடு சேர்த்துஅவன்
    வெகுலாபம் ஈட்டிநின்றான்!

    நாட்பட்ட பால்மாவை
    நல்லமாவுடன் கலந்து
    நம்பவைத்து எல்லோர்க்கும்
    நயமாக விற்றுவந்தான்!

    பணம்பணமாய் அவன்குவித்தான்
    பண்பையவன் இழந்துநின்றான்
    பத்துமாதம் சுமந்ததாய்
    பதைபதைத்து நின்றிருந்தாள்!

    பெண்கொடுத்த மாதவனும்
    பித்துப்பிடித்து நின்றான்
    கைபிடித்த மனையாளும்
    கதிகலங்கி அங்குநின்றாள்!

    காசுகாசாய் உழைத்தவனின்
    கண்களிலே வியாதிவந்து
    ஏறாதபடி இடமெல்லாம்
    இறைத்தானே காசையெல்லாம்

    சத்திரசிகிச்சை செய்தால்
    சரியாக வருமென்றெண்ணி
    முத்திரைபதித்த டாக்டர்
    மூலமாய் செய்துநின்றான்!

    சிகிச்சையின் போதுஅங்கு
    கொடுத்திட்ட மருந்துயாவும்
    சிக்கலை உண்டுபண்ணி
    சிதைத்ததே வாழ்வுதன்னை

    காசுழைத்தை மணிகண்கள்
    காட்சிகாண மறுத்ததனால்
    காசுகளை மணிகண்கள்
    காணவே முடியவில்லை!

    முத்திரை பதித்தடாக்டர்
    மூச்சுவிடும் இடத்திலெல்லாம்
    மணியினது கலப்படமே
    மலிந்துமே இருந்ததுவே!

    கலப்படத்தை கைக்கொண்ட
    மணியினது மருந்திப்போ
    கலப்பட மன்னனது
    கண்களையே கலக்கியது!

    மணியினது குடும்பத்தார்
    மனம்நொந்து டாக்டரிடம்
    மணிபார்வை வருவதற்கு
    வழியுண்டா எனக்கேட்டார்!

    கலப்பட மருந்தெல்லாம்
    கண்டபடி உலவுவதால்
    சிகிச்சையின் போதுஅது
    சிக்காலாய் போச்சுயிங்கே!

    இப்படி மருந்துவிற்கும்
    எளியவரின் கூட்டத்தை
    இறக்கும்வரை தூக்கிலிட
    வேண்டுமென்றார் டாக்டருமே!

    வீட்டிற்கு வந்தவுடன்
    விவரத்தைச் சொன்னார்கள்
    மெளனமாய் அவனிருந்தான்
    மனமங்கே அழுததுவே!

    கலப்படத்தால் கண்ணிழந்தோர்
    காதிழந்தோர் எத்தனைபேர்
    கலப்படத்தால் காலனிடம்
    கட்டுண்டார் எத்தனைபேர்!

    நாளாந்தம் கலப்படங்கள்
    நாட்டில் உலாவருவதற்கு
    நல்லதொரு பாடத்தை
    நானறிந்தேன் எனநினைந்தான்!

    மணிபோல எத்தனைபேர்
    அணிவகுத்து நிற்கின்றார்
    இனிமேலும்பொறுக்காமல்
    எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

     

    Share
  • தேவமைந்தன் பிறந்தான்!

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணியம் மிக்க மேய்ப்பனைக்                 Jesus_012
         கன்னி மரியாள் சேய்தனை,
    புண்படச் சிலுவை சுமந்த
         புனித வெள்ளிச் சுடரதை,
    உண்மைப் பொருளதை உணர்த்திட
         உயிர்த்தே எழுந்த பிதாவினை,
    விண்ணின் மைந்தன் தேவனை
         வழிபட, வந்திடும் நலமதே…!

    Share
  • தமிழுக்கு விடுதலை தா!

    -சி. ஜெயபாரதன், கனடா

    புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே, அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …

    சொல்லவும் கூடுவ தில்லை! அவை
    சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….
    என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
    செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

    மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)

    தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
    தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
    தேனால் செய்த என் செந்தமிழ்தான்
    திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
    பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)

    மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

    உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாசாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

    தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லையானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப்போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    தூய தமிழரும், தூய தமிழும்

    ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றை அறவே புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

    அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசியிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடியவில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

    2500 ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ் மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படியென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

    தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

    நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

    தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் பயன்பாடு, செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாசாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

    பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.

    புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே, அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
    சொல்லவும் கூடுவ தில்லை! அவை
    சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
    மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
    என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
    சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
    செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

    ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரிய வித்தியாலயா உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரிய வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு. இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

    இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

    போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

    தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ்நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

    தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப்பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாபில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ்நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

    இரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்தபோது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

    சலுகை போனால் போகட்டும்! என்
    அலுவல் போனால் போகட்டும்!
    தலைமுறை ஒருகோடி கண்ட, என்
    தமிழ் விடுதலை ஆகட்டும்!
    என் உயிர் போனால் போகட்டும்!
    என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
    தேனால் செய்த என் செந்தமிழ்தான்
    திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

    என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘ என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

     

    Share
  • நீ.. இயக்குனர் சிகரம் மட்டுமல்ல.. இயக்குனர்களில் சிகரம்!

    காவிரி மைந்தன்

    நீ..

    இயக்குனர் சிகரம் மட்டுமல்ல..

    இயக்குனர்களில் சிகரம்!

     k.balachander

    அகரமுதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பிக்கும் உன் திரைப்பட ஒலி..

    ஆண்டுகள் பலவாய் தமிழகத்தில் வலம்வந்த திருப்பெயர் பாலச்சந்தர்!

    சூப்பர் ஸ்டாரையே உருவாக்கிய பிரம்மா நீதான்!

    உலக நாயகனின் விஸ்வரூபத்திற்கு மூலம் நீதான்!

    மனதில் உறுதி வேண்டும் என்று எங்கள் மனதில் விதைத்தவன் நீதான்!

    வறுமையின் நிறம் சிவப்பு என்று திரையில் கவிதை எழுதியவன் நீதான்!

    மன்மதலீலை என்னும் திரைப்படத்தை மறக்கத்தான் முடியுமா?

    சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொன்னால் அங்கும் நீதான்!

    நினைத்தாலே இனிக்கும் என்கிற பல்லவி உனக்கல்லவா பொருந்தும்!

    அவள் ஒரு தொடர்கதை என்று ஒரு பெண்ணின் அவலத்தைத்

    திரையில் சொன்னவன் நீயல்லவா?  மூன்று முடிச்சு .. அவர்கள்

    என்று எதிர்நீச்சலிட்டவன் நீதானே!  நாடகத்துறையில் தடம்பதித்து

    திரைத்துறையில் சாதனைகளை எட்டியவன் நீ!  தமிழ்த்திரையில் ஒரு இயக்குனருக்காக ரசிகர்கள் உருவானது முதலில் உனக்குத்தானே!

    பாமா விஜயம்.. தில்லுமுல்லு என்று நகைச்சுவையோடு நல்லபடங்கள்

    தந்தவன் நீ என்பதால் .. எங்களுக்குத் தீபாவளி உன் படம்வந்தால்தான்!

    சிந்துபைரவி முதலான முத்திரைபதித்த படங்களின் மூலகர்த்தாவே..

    உன் அனேக கதைகள் அபூர்வ ராகங்கள்.. தப்புத்தாளங்கள் என்றாலும் அரங்கேற்றம் ஆனவுடன் அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே!

    ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில்  எழுதத் தொடங்கிய திரைச் சரித்திரமே!

    நீர்க்குமிழியில் தொடங்கிய உன் இயக்குனர் பயணம்..  வெற்றிகளின் விலாசம் என்றால் கவிதாலயா என்றும்.. அதற்கு முன்னர் கலாகேந்திரா என்றும்தானே அறியப்பட்டது!  நெற்றிக்கண் வரை நீ தொட்ட பாத்திரங்கள் இன்றும் எங்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டிருக்க.. இந்தச் சமுதாயத்தில் பிறர் சொல்லத் தயங்குகிற விஷயத்தையே கதையின் கருவாக்கி.. அதையே திரைப்படமாய் உருவாக்கி நிழல்களை எல்லாம் நிஜமாய் காட்டியவனே!

    உனது பயணத்தில் மிளிராத நடிகரும் இல்லை.. நடிகையும் இல்லை..

    எத்தனையோ பேர்களை அறிமுகம் தந்தாய்.. இல்லை அவதாரம் தந்தாய்! அதில் ஒருவர்கூட சோடைபோனதில்லை!  எங்களின் பிதாமகன் நீ என்றுதான் இயக்குனர்கள் வரிசையில் நின்று உன்னை தரிசித்தனர்!

    கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

    இருவருமே உனக்கு இரு கண்கள்.. இவர்களோடு கூட்டணியமைத்து

    எத்தனை முறை மக்கள் சபையில் அமோக வெற்றி பெற்றாய்!

    தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு முதல் வான் நிலா..நிலா.. அல்ல..

    உன் வாலிபம் நிலா வரை நீங்கள் தொட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்!

    சிப்பியிருக்குது முத்துமிருக்குது.. பாடல் இசையும் கவிதையும் எப்படி இணைசேருகின்றன என்பதை பாமரனுக்குப் புரியவைத்ததும்..

    அபூர்வ ராகங்களில் இறுதிக்காட்சியையே பாடலாக்கித் தந்ததும்

    அடுத்த பிறவியிலா இனி நீ செய்துகாட்டப் போகிறாய்?

    நீ வாழ்ந்த நாட்களில் உனது ரசிகனாக திரைக்கொட்டகையில் அமர்ந்து கைதட்டி ரசித்து.. அறிவுபூர்வமான இயக்குனர் ‘டச்’களை அனுபவித்தோமே.. எதை எண்ணி இன்று அழ! இன்று உன் இறுதிமூச்சு அடங்கியது என்றார்கள்..

    balachanderதமிழ்திரையில் நீ போட்டுவைத்திருக்கும் கோலங்கள் சினிமா என்பது இருக்கும்வரை பேசப்படும்! நாளைய இயக்குனர்களுக்கு பாதைவகுத்தவன் நீ என்பதை வரலாறு எழுதிவைத்திருக்கிறது! விண்ணுலகம் செல்லும் நீ கவியரசோடு கலந்து கதை சொல்லிக் காட்டு! அவர் கவிதையெழுதி நீட்டுவார்!

    உம்மை நாங்கள் நடத்திய இருபெரும்விழாக்களில் பங்கேற்கச் செய்த பெருமை இப்பிறவியில் யாம் பெற்ற பேரின்பமாய் கருதுவோம்! (1994 & 2003)..

    கவியரசு கண்ணதாசன் விருது உங்களுக்கு யாம் தந்ததும் உண்டு.. 1994..

    உன் கையால் கே.ஜே.யேசுதாஸுக்கும்.. சரோஜாதேவிக்கும்..

    டி.ஆர்.பாப்பாவிற்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கியதும் உண்டு (2003)

    இதுவெல்லாம் தெய்வ சங்கல்பம்!  இறைவனின் விருப்பம்!

    இமைகளை நனைக்கிற விழிநீரை நிறுத்திட இன்று இயலவில்லை..

    திரைமொழி எங்களுக்குச் சொல்லித்தந்தவனே.. உன் ஆன்மா நிம்மதியின் சன்னதியில் சேரட்டும்!  ஆத்மதிருப்தியுடன் விடைபெற்றாய்.. இந்த உலகில் பிறந்ததன் பயனை பொன்னெழுத்துக்களில் எழுதிவிட்டு!!

    அன்புடன்

    காவிரிமைந்தன்   எம்.கே.மணி.. ஏ.கே. நாகராஜன்   அ.நாகப்பன்

    ந.கோபி..  அப்துல்சலாம்  செ.ரவீந்திரன்..  வே.முரளி.. கே.ஜெகன்னாதன்

    வித்யா ஜெகன்னாதன்.. கண்ணன் சேகர்.. கே. சுந்தர்

    மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் (பம்மல்)

    சென்னை 600 075

    Share
  • நீ எங்கே என் நினைவுகள் அங்கே..

    காவிரி மைந்தன்

    அன்பின் பரிவர்த்தனை காதல் எனச் சொன்னால்… அங்கு நினைவின் அலைகளுக்கு என்றைக்கும் ஓயவில்லை. தன்னை நினைந்துருகும் இன்னொரு நெஞ்சத்திடம் தஞ்சம் அடைவதையே என்றும் விரும்பி நிற்கும்!  யுகங்கள் பல மாறினாலும் இதயங்கள் இடம் மாறி இப்படித் துடிப்பது காதலிலே மட்டும் என்பதில் மாற்றமில்லை!

    என்னை நினைத்தீர்களா என்று அவள் கேட்டதற்கு .. மறந்தால்தானே நினைப்பதற்கு என்று கவிஞர்கள் வரிந்துகட்டி வென்று விடுவார்கள்!  திரைப்பட்டிலே சொல்வதென்பதும்  இசையமைப்போடு சொல்ல வருவதும் சுகமானது அல்லவா?  நெஞ்சத்தின் வலியோடு பிரிவைத் தாளாமல் காதலன் பாடுவதோ.. காதலி பாடுவதோ நம்  உள்ளத்தைத் தொடாமல் எப்படிப் போகும்?  ஒரே பாடல் நான்கு வகையான மேட்டுக்களோடு ஒரே திரைப்படத்தில் இடம்பெற்ற வரலாறு  இப்பாடலுக்கே உண்டு..  ஆம்.. கவிஞர் வாலி  அவர்கள் இயற்றி அமரர் எஸ்.எம்.சுப்பையா நாய்டு இசை அமைத்த மன்னிப்பு.. திரைப்படப் பாடலிது!

    டி எம்.எஸ்.  பி.சுசீலா குரல்களில் தனித்தனியாக நம் அடிமனதை வருடிச் செல்லும் ஜீவனுள்ள பாடலாய் காலங்களை வென்று நிற்கிறது…

    mannippu

    பாடல்: நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    திரைப்படம்: மன்னிப்பு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
    ஆண்டு: 1969

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில்
    நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
    பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
    ஆயிரம் காலம் ஆனபின்னாலும் வாழும் காதல் உறவல்லவா?

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
    நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
    ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே
    நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
    நீ எங்கே என் நினைவுகள் அங்கே

    http://www.youtube.com/watch?v=Nmbx3CADL8I

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy9

    ஏனிந்த மாயை, எதற்கெப் படியென்னுள்
    நானென்(று) அகந்தை நிலைப்பாடு, -வானன்று
    ஓங்கி உலகளந்த உத்தமன் போலளவில்,
    வீங்கிய வா’மனனின்’ வீம்பு ….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மலர்கள் – இதுதான் இதுதான் அதுவா (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

     

    இசைக்கவியாரின் இசையில் இலயிக்க இதோ..

    https://soundcloud.com/vallamai/mp3

     

    sivan
    இதுதான் இதுதான் அதுவா
    இதயம் முழுதும் மதுவா
    இகமும் பரமும் சுகமா
    இதற்கொரு பெயர்தான் சிவமா

    உருவில் மயங்கிடும் உள்ளம், அதை
    உருவால் மயக்கும் கள்ளம்
    அருவே அறியா நெஞ்சம், அதன்
    அருமை கவிதையில் கொஞ்சும்

    அகமும் புறமும் ஆனந்தம், அது
    அலையலையலையாய்ப் புரளும்
    உருவும் அருவும் பிரியும் தருணம்
    ஒருவித மர்மம் புரியும், அங்கு
    உமையின் உயிரின் ஒளிமுகம் விரியும் (இதுதான்)

    இளமை நிலையாய் வளரும், சிறு
    இதயம் லஹரியில் இளகும்
    உளமுழுதும் ஒரு புளகம், அதில்
    உயரிய நிலைபல குலவும்
    குளமாய் விழிகள் பொங்கும், ஒரு
    துளியில் உலகே தங்கும்
    சிவமே லயமே உயிரே எனவே
    சின்னச் சின்ன வார்த்தைகள் மிளிரும், அந்தச்
    சித்திரக் கணங்களிலென் சிவன்முகம் ஒளிரும் (இதுதான்)

     
    22.12.2014 / 8.40 / ஹைதராபாத் விமான நிலையம்

    Share
  • தாமரைக் கன்னங்கள்..

     காவிரி மைந்தன்

    எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது! அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை!  இது மொழியின் நாகரீக அடையாளம்!  வரம்பில்லாத உச்சம்!  காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம்! அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது!  சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை! அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது!

    vaali nagesh

    பெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத கவிஞர்களுக்கு மத்தியில் பல்லவியிலேயே ‘தாமரைக் கன்னங்கள்’ என்று அசத்தியிருக்கிறாரே.. வாலி!  தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி!  எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை! ஆழ்மனதிலும் அடிநாதமாய் அற்புதத் தமிழ்ச்சுரங்கம் கொண்டுவிளங்கிய கவிஞரின் கைவண்ணத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!

    balachander

    இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படமும்.. இப்பாடலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்தவை! அன்றைக்கே கறுப்பு வெள்ளையில் கிராபிக்ஸ் யுக்தியைக் கொண்டு பதிவான படப்பாடல்!!

    ஆ..ஆ… ம்ம்….ம்ம்ம்ம்…
    ஆ…ஆ… ம்ம்… ம்ம்ம்ம்….
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்
    மாலையில் சந்தித்தேன்…..

    ethirneechalllகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ…
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…
    கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
    ஆ..ஆ..ஆ..
    முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
    ஆ..ஆ…..ஆ..
    துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
    துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

    மாலையில் சந்தித்தேன் மையலில்  சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்

    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
    நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
    சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
    உடை கொண்டு மூடும்போது ..
    உறங்குமோ உன்னழகு..

    தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
    எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
    பொங்கிடும் எண்ணங்கள்..
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
    மங்கை நான் கன்னித்தேன்
    காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
    கைகளை மன்னித்தேன்

    வி.குமார் இசையில் கவிஞர் வாலியின் பாடல்!  பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் ஒரு தேனமுதம்!!

    http://www.youtube.com/watch?v=PzQ-ICRm3h4

    Share
  • யாருடைய எலிகள் நாம் ?

    எஸ்.வி. வேணுகோபாலன்

    அன்பானவர்களுக்கு

    மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார்.

    நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.

    யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின் ரூ 300/-

    நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.

    ஞாநி பேசியவற்றிலிருந்து:

    என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால், சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது. அது இன்னும் தழைக்கவேண்டும்.

    படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது. படைப்பாளிகளுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.

    ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.

    இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.

    அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.

    விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம். அவரோடு பணியாற்றுவதில் இருந்த நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை ‘கன்வின்ஸ்’ பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.

    பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.

    வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.

    நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.

    அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் – நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மை கறாராக வழிநடத்தும்.

    ஏற்புரை: சமஸ்:

    இந்தப் புத்தகம் கொண்டுவரும் தகுதி உண்டா என்று யோசித்தேன். ஆனால் இது வந்திருப்பதன் பின்னணி, பல அன்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்து வைத்திருக்கிறோம். எத்தனை நாள் முடியும், தொகுப்பாகக் கொண்டு வாருங்களேன் என்றனர். முதல் புத்தகம், சாப்பாட்டுப் புராணம் வந்தபோது உடனே விற்றுப் போனது. அதற்காக வெளியீட்டு விழா எல்லாம் நடத்தவில்லை.

    இந்த தொகுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். வாசகரும் அதிக விலை கொடுக்கக் கூடாது. நமக்கும் கையைக் கடிக்கக் கூடாது. என் மனைவியே வெளியிட முன்வந்தார். நண்பர் வேடியப்பன் இந்த விழாவை நடத்தலாம் என்றார்.

    இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. ஆனால் எப்போதும் பொருத்தப்பாடு உடையவை என்று தொகுத்திருக்கிறோம். தமிழ் இதழியலில் உள்ள சாதியம் குறித்து ஞாநி சொன்னார். குறிப்பிட்ட துறைக்குள்ளும் சாதியம் உண்டு. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதக் கூடத் தெரியாது. இங்கே உயரம், நிறம், அது, இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. எழுதி எழுதிக் கொடுத்தாலும் குப்பைக் கூடைக்குத் தான் போகும் செய்திக் கட்டுரைகள். ஆனாலும் நான் சளைக்காமல் தொடர்ந்தேன். என் நண்பன் கேட்பான், ஏண்டா மாப்ள, அவனுங்க போடமாட்டாங்க என்றாலும் எதுக்கு ஓயாம எழுதிக் கொடுக்கிறன்னு. நடக்கற விஷயங்களைப் பார்த்தா என்னால் எழுதாம இருக்க முடியாது. என் இயல்பு அப்படி. எங்கும் பிரச்சனை. எல்லா இடத்திலும் கலகம். கேள்வி கேள்வி. ஒண்ணு நான் இதையெல்லாம் எழுதணும், இல்ல செத்துப் போயிரணும். என் மனைவிக்குத் தெரியும். இப்படி பல இதழ்கள் மாறி வந்தாயிற்று.ஞாநி சார் கிட்ட ஆலோசனை கேட்பேன்.எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். அவரும் ஒருவர். அப்படித் தான் வளர்ந்து வந்திருக்கிறேன். அவர் ஒருமுறை சொன்னார். இடம் மாறிப் போகும்போது, புதிய இடத்தில் கூடுதல் சம்பளம் கிடைத்தால், இப்போ வாங்கற சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பழகிக்கணும். கூடுதல் தொகையை சேமிக்கக் கத்துக்கணும். ஏன்னா உன்ன மாதிரி, நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எப்போ வேலை போகும் என்பது தெரியாது. அப்போ அவஸ்தைப் படக் கூடாது என்றார். இப்போது வரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

    இந்தத் தொகுப்பு பல்வேறு கட்டங்களில் எழுதியது. அந்தந்த ஆண்டு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அவை பொருத்தம் உள்ளவை. உதாரணமாக, இதில் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் ஓட்டத் தடை கொண்டுவந்ததைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. எந்த விமர்சனமும் இன்றி இருப்பதை அப்படியே கொடுத்திருந்த கட்டுரை. திருணாமூல் என்றால், புல்லின் வேர்-அடிப்பாகம் என்று பொருள். அப்படி கடைசியில் உள்ள மனிதருக்கான இயக்கம் என்று பேரை வைத்துக் கொண்டு, சாதாரண மனிதர்கள் சைக்கிள் ஓட்டத் தடை, மீறினால் அது வேக வாகனங்கள் செல்ல பிரச்சனை ஏற்படுத்துகிறது என்று அதற்கு ரூ 500 அபராதம் என்று ஓர் அரசு சொல்லுமானால் என்ன ஜனநாயகம் இது?

    ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.
    வந்திருந்தோர் .பேசலாம் என்றனர். முதல் பார்வையாளராக எனது கருத்துக்களை அங்கே தெரிவித்தேன்:

    அதன் சுருக்கம்:

    அழகிய பெரியவன் கவிதை ஒன்று, மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி குறித்துப் பேசுகிறது. அவள் சாவு வராது இழுத்துக் கொண்டிருப்பதை,

    காலப் பூனையிடம்
    சுண்டெலி போல
    ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது
    பாட்டியின் உயிர்

    என்று தொடங்குகிறது. பிறகு,
    பாட்டியிடம் கற்றுக் கொள்கிறோம்
    அடங்க மறுத்தலை…

    என்று முடிகிறது. சம காலத்தில் என்ன நடக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல், சம்மதத்தை உற்பத்தி செய்ய வைக்கின்றனர். (MANUFACTURING THE CONSENT ). நாமே ஏற்றுக் கொள்வதுபோல் அத்தனை அநியாயங்களும் நடக்கின்றன. அடங்க மறுப்பது, எதிர்ப்பது, கேள்விகளை எழுப்புவது இவற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

    சுதேசி இயக்கத்தில் முகிழ்த்தது இந்தியன் வங்கி. பாரதி நவம்பர் 1906ல் இந்தியா பத்திரிகையில் செட்டி நாட்டு சீமான்களே என்று தொடங்கி உள்நாட்டு முதலாளிகள் ஏன் வங்கி தொடங்கக் கூடாதென்றார். 1907 ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி பிறந்தது. இன்று எல்லாவற்றையும் விற்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்றார் மகாகவி.

    சொத்துக்களை மட்டுமல்ல, விழுமியங்களை, பண்பாட்டின் கூறுகளை, கருத்துக்களை, எத்தனையோ அம்சங்களைப் பறிகொடுக்கும் அபாயமான காலம் இது.

    மக்களுக்கு செய்தி சொல்பவர்கள் மட்டுமல்ல, புலம்புவது அல்ல, எதிர்ப்பின் குரலை எழுப்பும் செய்தியாளர்கள் தேவை. அரிதான வரிசையில் சமஸ் அற்புதமாக நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்னும் இன்னும் பரந்துபட்ட தளங்களில் மேலும் மேலும் கூர்மையான எழுத்துக்களை எதிர்பார்ப்போம் என்று சொல்லி வாழ்த்தி மகிழ்கிறேன்.

    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    ***************

    சமஸ் எழுதும் வலைப்பூ முகவரி:

    http://writersamas.blogspot.in/

    ***********

    யாருடைய எலிகள் நாம்
    நூலுக்கு ஜெயமோகன், ஞாநி, எஸ் வி ராஜதுரை, அ முத்துலிங்கம் நால்வரும் அணிந்துரை எழுதி உள்ளனர்.

    சமஸுடைய மொழிநடை அபூர்வமானது……
    அ முத்துலிங்கம்

    இந்தத் தொகுப்பு வெளிவந்ததும் பல நோக்கிலிருந்து எதிர்வினைகள் வரலாம். ஆனால் கட்டுரைகளில் உள்ள தரவுகளின் ஆதாரங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது – எஸ் வி ராஜதுரை

    சாமர்த்தியமான எழுத்தினால் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று நினைப்பவர் அல்ல சமஸ். மெய்யாகவே எது சரிஎன்று தான் நம்புபவரோ
    அதன் பக்கம் நிற்பவர்.
    – ஞாநி

    மேலும் மேலும் வணிகமயமாகி நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற கேள்வியையும், ஐயத்தையும் எழுப்புகின்றன சமஸின் கட்டுரைகள் – ஜெயமோகன்

    Share
  • ஆனந்த விகடன் – நான் படித்த பள்ளிகளுள் ஒன்று

    பி. சுவாமிநாதன்

    abs

    1987-ல் துவங்கி 2009 வரை 22 வருடங்கள் இங்கே பணி புரிந்தேன் என்பதை விட பயின்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரூஃப் ரீடராக பணியைத் துவக்கி, இதழாசிரியர் வரை நான் இங்கே உயர்ந்தேன் என்றால், அதற்கு ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னை அடையாளம் கண்டு, என் உயர்வுக்கு வித்திட்டவர் அவர்.

    அத்தகைய பள்ளியின் ஆசான் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் இறை ஜோதியில் கலந்து விட்டார்.

    திறமை உள்ள பலரையும் கண்டுபிடித்து அவரை மென்மேலும் ஊக்குவிக்கும் குணம் கொண்டவர் திரு. பாலசுப்ரமணியன். அந்த வகையில் விகடன் பட்டறையில் ஜொலித்தவர்கள் அதிகம்.

    விகடன் பவழ விழா மலர் (1926-2002), விகடன் தீபாவளி மலர் 2003, அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் போன்ற சவால் நிறைந்த மலர்களைத் தயாரிக்கும் மாபெரும் பொறுப்பை ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் எனக்கு வழங்கினார். இந்த மூன்று மலர்களையும் அவரது மேற்பார்வையில் தயாரித்தேன்.

    இதில் குறிப்பாக பவழ விழா மலர் மற்றும் அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் தயாரிப்புகளின்போது ஆசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த மலர் தயாரிப்புப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது பற்றி அவருக்கு நான் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

    abs3

    அமரர் எஸ்.எஸ். வாசன் மலர் தயாரிப்பின்போது சில பேட்டிகளைத் தயார் செய்ய ஆசிரியரின் அனுமதியின்பேரில் மும்பை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல இந்தி நடிகர் திலீப்குமார், இயக்குநர் ராமானந்த் சாகர், டாக்டர் சுசீலா ராணி படேல் (‘மதர் இந்தியா’ இதழின் ஆசிரியர் பாபுராவ் படேலின் மனைவி), எடிட்டர் உமாநாத் போன்ற பிரபலங்களை மும்பையில் பேட்டி கண்ட நாட்கள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.

    பிரபல இந்தி நடிகர் திலீப்குமாருடன் அப்போது நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளேன். எங்களுக்கென ஸ்பெஷலாக சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை வரவழைத்து விருந்து தந்தார்.

    அமரர் எஸ்.எஸ். வாசன் மலரில் வெளியாவதற்கென்று பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை தந்திருந்தார். பிரபல எழுத்தாளரான அவர் தந்த கட்டுரை ஆசிரியர் தீர்மானித்திருந்த பக்க அளவைத் தாண்டி விட்டது. அந்தக் கூடுதல் பக்கங்களை நானே எடிட் செய்து ஆசிரியரிடம், ‘சார்… இந்தக் கட்டுரைக்கு இத்தனை பக்கம் என்று தீர்மானித்துள்ளோம். ஆனால், இது ஒரு சில பக்கங்கள் கூடுதலாகப் போகிறது. எனவே, இதை எடிட் செய்துள்ளேன்’ என்றேன் பவ்யமாக.

    ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. ‘பிரபலமான அந்த எழுத்தாளரின் எழுத்திலே நீங்கள் எப்படிக் கை வைக்கலாம்? மிகவும் சீனியர் அவர். அவருடைய எழுத்தை எடிட் செய்யக் கூடாது’ என்று சொன்னவர் அடுத்த விநாடி என்ன தோன்றியதோ தெரியவில்லை… ‘அந்த ஆசிரியரின் எடிட் செய்யாத பேட்டியையும், நீங்கள் எடிட் செய்த பேட்டியையும் எனக்குக் கொடுங்கள்’ என்றார்.

    abs1

    ஆசிரியர் சொன்னபடியே அவற்றை அவரது டேபிளுக்கு அனுப்பினேன். இரண்டு மணி நேரம் கழித்து என்னை அழைத்தார். ‘நீங்கள் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறீர்கள். இப்போது இந்தப் பேட்டி நன்றாக உள்ளது’ என்று என்னைப் பாராட்டினார்.

    கோபத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் கோபத்தைக் காட்டினாலும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டத் தயங்காதவர் எங்கள் ஆசிரியர் – ஆசான் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள்.

    அவரது மறைவைக் கேட்டதும் அவருடன் பழகிய நாட்கள் நினைவுக்கு வந்து, பல சம்பவங்கள் என் நெஞ்சில் நிழலாடின.

    மனிதருள் ஒரு மாணிக்கமாக விளங்கியவர் அவர்.

    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    திருப்பாவை

    புள்ளுக்கும் தோழனவன், பாம்புக்கும் காவலவன்,
    சொல்லுக்(கு) அடங்காத சித்திரம், -வில்லுக்(கு)
    இரையாக நூறை இரதம் செலுத்தியவன்,
    இறையவன் தாளில் இரு’’….கிரேசி மோகன்….

    Share
  • முடி

    ன்னும் சில நாட்களில் மொத்தமாய்க் கொட்டித் தீர்ந்துவிடும்.

    ஏற்கனவே பின்மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது. முன்மண்டை தற்காலிகமாகத் தப்பி நிற்கிறது. தற்போது எனக்கிருக்கும் தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த முடிப்பிரச்சினை தான். முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது. இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. எனக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பவர்களிடம் என் வயதைக் கேட்டால், ‘இருபத்தைந்து இருக்கும்’ என்று கூறுவார்கள். மாறாக எனக்குப் பின்னால் இருப்பவர்களிடம் கேட்டால் ‘நாற்பதுக்கு மேல் இருக்கும்’ என்று உறுதியாகக் கூறுவார்கள்.

    சொன்னால் நம்ப மாட்டீர்கள். கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன். பி.எஸ்.என்.எல், சென்னை சில்க்ஸ், ஃபான்டா, அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் பி.எஸ்.என்.எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன். மற்ற விளம்பரங்கள் அனைத்திலும் கூட்டத்தில் எங்காவது நின்று கொண்டிருப்பேன். கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதுவும் ஃபான்டா விளம்பரத்தில் எனது பின்னந்தலை மட்டுமே தெரியும். அந்தத் துணிக்கடை விளம்பரத்தில் முக்கியமான இரண்டு மாடல்களில் நானும் ஒருவன். துணிக்கடையினர் கெல்லீசில் ஒரு மாபெரும் விளம்பரப் பலகை ஒன்றை வைந்திருந்தார்கள். அந்த விளம்பரத்திலும் என் முகம் தெரியாது. இன்னொரு மாடல் இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு அவனுடைய துணிகளனைத்தையும் எடைக்கு போடுவது போன்ற ஒரு விளம்பரம். நான் எடைக்கு துணிகளை எடுக்கும் ஆசாமியாக லுங்கி கட்டிக்கொண்டு, பனியன் அணிந்து, தராசை தூக்கிப்பிடித்தபடி, பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன். அந்தப் படத்தில் என் தலைமுடியின் நீளத்தையும், அடர்த்தியையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.

    இப்போது அதே விளம்பரத்தை மீண்டும் எடுத்தால் நிச்சயம் என்னைக் கூப்பிட மாட்டார்கள். ஜடை போட்டுப் பின்னும் அளவுக்கு அடர்ந்த முடி குடிகொண்டிருந்த இந்த முன்னாள் மாடலின் பின்மண்டை இப்போது மின்னிக் கொண்டிருக்கிறது – பிளாஷ் பிரச்சினைகள் வரும் அளவிற்கு.

    அவ்வளவு தூரம் எதற்குப் போக வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்பு பெல்ஜியத்திற்கு வந்த போது கூட தலையில் முடி பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் என் தங்கை எடுத்த புகைப்படமே அதற்கு சாட்சி. என்னை விட்டு இத்தனை வேகமாக என் தலைமுடி விலகி ஓடிக்கொண்டிருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.

    கவலை அதிகம் இருந்தால் முடி கொட்டும் என்கிறார்கள். கடன் அதிகம் இருந்தாலும் கொட்டும். ஏழரை வருடங்களுக்கு முன்பு வாங்கிய வீட்டுக்கடனை இப்போதுதான் கட்டி முடித்தேன். சென்னையில் இருந்த போது, வாங்கிய சம்பளத்தில் பாதிக்கு மேல் மாத தவணை கட்டுவதற்கே சரியாக இருந்தது. நான்கு வருடங்கள் செவ்வனே கட்டிவந்தும் அசல் மாறாமல் அப்படியே அய்யனார் சிலைபோல் இளித்தபடி அமர்ந்து கொண்டிருந்ததைக் கண்டபோதுதான் முடி கொட்ட ஆரம்பித்திருக்க வேண்டும்.

    சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். உணவுக்கா பஞ்சம் இந்த தேசத்தில்? நமக்குத்தான் எதையும் செய்யத் தெரிவதில்லை. சாம்பார் செய்ய நினைத்தால் ரசமாகிறது. வெஜிடபிள் பிரியாணி செய்ய நினைத்தால் தக்காளி சாதமாகிப் போய்த்தொலைகிறது. சமைப்பது கூட கடினமில்லை. ஆனால் அதற்குப் பிறகு வரும் பாத்திரங்களைக் கழுவும் படலத்தை நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் வருகிறது. இதனாலேயே பெரும்பாலும் தயிர் சாதத்துடனும், ரொட்டியுடனும் ஓடுகிறது வண்டி. அவ்வப்போது ரெடிமிக்ஸ், ஃபுரோசன் ஃபுட் எடுத்துக்கொள்வதும் உண்டு.

    உள்ளூர் இந்தியக் குடும்பஸ்தர்கள், அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி விருந்துக்கு அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளையெல்லாம் மறுப்பதே கிடையாது. அந்த நாட்களில் மட்டும்தான் நல்ல சாப்பாடே! ஓட்டலுக்கும் போக முடியாது. அதுவும் நான் வசிக்கும் லூவன் நகரின் பேருந்து நிலையத்திற்கு எதிரிலுள்ள ஹிமாலயன் ரெஸ்டாரண்டில் தினந்தோறும் சாப்பிடவேண்டும் என்றால் இன்னொரு முறை வங்கியில் கடன் வாங்கி, வட்டி கட்ட வேண்டியது தான்..

    பெல்ஜிய நாட்டில் தண்ணீரின் கடினத்தன்மை அதிகம் என்கிறார்கள். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை நாட்களாக எனக்குத்தான் அது தெரியாமல் போயிருக்கிறது. இப்போது தண்ணீர் வரும் இடங்களில் எல்லாம் பில்ட்டர் மாட்டி வைத்திருக்கிறேன். கடினத்தன்மை கொண்ட தண்ணீரில் குளிப்பதற்கென்றே சிறப்பு ஷாம்பு ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். சரி. திருமணம் என்கிற ஒன்று நடக்கும் வரையிலாவது இருப்பதைக் காப்பற்றிக்கொள்வது நல்லது.

    எனக்கென்னவோ இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணமாகப்படுவது – ‘பார்ட் போலன்’ என்னும் ஆசாமி தான்! பார்ட் என்னுடைய மேலதிகாரி. அவர் ஒரு தொட்டால் விரிஞ்சிக் கண்ணன். தொட்டதற்கெல்லாம் கோபம் பொத்துக்கொண்டு வந்து கண்கள் விரிந்து, கன்னம் சிவந்து, வாய் கூப்பாடு போட ஆரம்பித்துவிடும். என் வாழ்நாளில் இத்தனை பதற்றம் நிறைந்த மனிதனை நான் பார்த்ததில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் இந்த மனிதரின் பதற்றம் அவரோடு இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், அது என் தலைமுடி வரை அல்லவா நீண்டிருக்கிறது. என் சொட்டைக்கு நிச்சயம் இந்த மனிதர் தான் பிரதான காரணம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

    எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் அவரது முன்னுரிமைகள் என்னை முழி பிதுங்க வைக்கும். ‘பிரசல்சு நகரில் உள்ள அலுவலகத்தில் சில பிரச்சினைகள். நீ உடனே அங்கு செல்லவேண்டும். அவர்களோடு அமர்ந்து இந்த வார இறுதிக்குள் பிரச்சினைகள் தீர்த்துவிட்டு வர வேண்டும்’ என்று கூறி அனுப்பி வைத்த இரண்டு நாட்களில் அவரிடமிருந்து அழைப்பு வரும். ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது தெரியுமா? நீ அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் இஷ்டம் போலெல்லாம் நடந்துகொண்டால், அப்புறம் நான் எதற்கு?’ என்று கத்துவார்.

    வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிவாக்கில் அழைத்து, ‘இது அதிமுக்கியமான வேலை. திங்கள்கிழமை காலைக்குள் முடித்துவிடு!’ என்பார். வேறு வழியே இல்லாமல் வார இறுதி முழுவதும் அமர்ந்து வேலை செய்யவேண்டும். இது போன்ற செயல்களை, இந்தியாவில் தங்கள் பெயரைத் தாங்களே சுருக்கி வைத்துக்கொள்ளும் ஐ.டி பிராஜக்ட் மானேஜர்களான என்.கே-கள், விஷி-கள், ராண்டி-கள் செய்து பார்த்திருக்கிறேன். வெள்ளிகிழமையானால் மூன்று மணிக்கே கிளம்பி விடும் சுதந்திர விரும்பிகளான ஐரோப்பியர்களில் இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.

    என்றைக்காவது ஒருநாள் சற்று முன்னதாக கிளம்பினால் போதும். நான் பையைத் தூக்கிக்கொண்டு நடந்து போவதை ஓரக்கண்ணால் பார்ப்பார். சில சமயங்களில், ‘ஏன் அடிக்கடி சீக்கிரம் கிளம்பிவிடுகிறாய்?’ என்பார். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதுபோல் சென்றிருப்பேன். அவருடைய போலி அழுத்தங்களின் காரணமாக இரவு வரை நான் வேலை பார்த்த நாட்களும், அவர் கொன்றழித்த என் வார இறுதிகளும் எப்போதுமே அவர் நினைவில் தங்குவதில்லை. அவருக்கென்ன? அவர் மட்டும் செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் யாருக்கும் சொல்லாமல் சீக்கிரமாகவே காணாமல் போய் விடுவார். நமக்குத்தான் சிரமம்.

    ‘இவர் ஒரு ரேசிஸ்டா?’, ‘நான் ஒரு இந்தியன் என்பதால் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாரா?’ என்றால் அதுவும் இல்லை. எங்கள் அணியில் இருக்கும் யோஹான் டி வொல்ஃப்-பிற்கும் இதே நிலைமைதான். அலுவலக நேரத்தில் அடிக்கடிப் புகைப்பிடிக்க வெளியே செல்கிறான் என்று அவனுடைய லைட்டரை ஒருமுறை பிடுங்கி வைத்துக்கொண்டார். யோஹான் இந்த மனிதரின் செயல்களை எந்த நிலையிலும் மதித்தாகவே தெரியவில்லை. அவன் வேறொரு லைட்டரை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் வெள்ளிகிழமை மாலை வேலைகளை ஒதுக்குவார். அவன் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ‘டாட் வோல்கன்ட வீக்’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டிவிடுவான். திங்கள்கிழமை எப்படி இருந்தாலும் கத்துவார். குதிப்பார். அதைப்பற்றியெல்லாம் அவனுக்கு கவலை இருந்ததில்லை. ஆனால், அதை அவன் வேறுவிதமாகவும் சமாளித்தான். வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் அமர்ந்திருக்கும் லூவன் அலுவலகத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். கென்டு நகரில் இருக்கும் எங்களின் கிளை அலுவலகத்துக்குச் சென்று விடுவான்.

    எங்கள் நிறுவனத்தில் வாரத்திற்கு ஒருநாள் வீட்டிலும், ஒருநாள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அலுவலகத்திலும் வேலைப் பார்க்கலாம் என்கிற சலுகை இருந்தது. இந்தச் சலுகைகளையெல்லாம் நான் அவ்வளவாக அனுபவித்ததே இல்லை. பார்ட் என்னை அனுபவிக்கவிட்டதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதன் உண்மையான காரணம் வீட்டிலிருந்து வேலை பார்த்தால் நாளொன்றுக்கு இருபது யூரோ ஃபுட் அலவன்ஸ் கிடைக்காமல் போய்விடும். எல்லாவற்றுக்கும் பார்ட்டின் மேல் வெறுமனே பழிசுமத்த எனக்கு விருப்பமில்லை.

    யோஹான் திங்களன்று வீட்டிலிருந்தும், வெள்ளியன்று கென்டிலிருந்தும் ‘வேலை செய்வான்’. ‘வீட்டிலும், கென்டிலும் இருப்பான்’ என்று தான் சொல்லவேண்டும். புதன்கிழமை எங்கிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. புதன்கிழமைகளில் என்ன காரணத்தினாலோ பார்ட் வேலைக்கு வருவதில்லை. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே எங்கள் நிறுவனத்திற்கு வேலை பார்க்கிறார். மீதம் ஒருநாள் அவருடைய சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறாரோ என்னவோ? இங்குள்ள பெரும்பாலானோர் அவர்களுடைய சொந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

    பெல்ஜியத்தில் பள்ளிகூடங்கள் புதன்கிழமை அன்று அரைநாள் மட்டுமே இயங்குகின்றன. குழந்தைகளை பார்த்துக் கொள்ளவதற்காக வேண்டி, பெண்கள் பெரும்பாலும் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் அல்லது அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விடுவார்கள். குழந்தைக் காப்பகங்களுக்கு பெருஞ்செலவு செய்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பார்ட் வராமல் இருப்பதற்கான காரணம் இதுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    எவரையும் விட்டுவைத்ததில்லை இந்த மனிதர். ஆறுமாதங்களுக்கு முன்பு டெய்சி நெவென் என்கிற அழகிய இளம் பெண் எங்கள் அணியில் சேர்ந்தாள். ஏனோ யோஹான் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அமோரியை அவளுக்கு பட்டியாக நியமித்து இருந்தார் பார்ட். அவளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், காபி அருந்துவதலிருந்து, உணவு வரை அத்தனை நேரமும் அவளுடனேயே இருந்தான் அமோரி. அவனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவனுக்கு முடி நீளம். தன்னுடைய குதிரைவால் முடியால் என்னுடைய பொறாமையை மட்டும் சம்பாதித்து வைத்திருந்தவன், நான் புறமுதுகு காட்டியபடி நின்றுகொண்டிருந்த போட்டோவை என்னைக் கேட்காமலேயே பேஸ்புக்கில் போட்ட நாளில் இருந்து என் ஜன்ம எதிரியாகி விட்டான்.

    டெய்சியால் பார்ட்டின் நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் அவருடன் கைபேசியில் பேசிமுடித்துவிட்டு, ‘ஹீ ஈஸ் எ மேல் சாவினிஸ்ட்!’ என்று கத்திவிட்டு தடாலென கைபேசியை மேஜை மீது வீசி எறிந்தாள். சாவினிஸ்ட் என்பதை விடுங்கள். இவரைப் பார்த்து ஒரு சாடிஸ்ட் என்று கூட சொல்லமுடியாது. சாடிஸ்டுகள் பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவர்கள். இந்த மனிதர் சந்தோஷப்பட்டே நான் பார்த்ததில்லையே. வரையறுக்கவே முடியாத ஒரு பிறவி. டெய்சிக்கு சாவினிஸ்ட், அமோரிக்கு சாடிஸ்ட் என்று இன்னும் எத்தனை பேரிடம் எத்தனை இஸ்டுகளை வாங்கிக் குவித்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

    கடைசியில் டெய்சி, காரல் வாண்டர்கோட்டனிடமே முறையீடு செய்துவிட்டாள். காரல் எங்கள் டைரக்டர். அவரோ அவள் விரும்பியபடியே அவளை மட்டும் வேறு டிபார்ட்மென்டுக்கு மாற்றினாரே தவிர, பார்ட்டின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாய்த் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவருடைய எல்லா ப்ராஜக்டுகளும் சிறப்பாக போய்க் கொண்டிருப்பதனால் இருக்கலாம். எல்லாவற்றையும் என் தலையில் தாங்கிக் கொட்டவைத்துக் கொண்டிருக்கிறேனே! என் எதிரி அமோரியே என்னை பார்ட்டின் ‘ரெக்டராண்ட்’ என்று கூறுவான். டச்சு மொழியில் ‘வலதுகை’. இப்படியும் கூறிவிட்டு, ‘நல்ல வேலை இடதுகை இல்லை. இந்தியாவில் இடதுகையை வேறு சில விஷயங்களுக்கு உபயோகிப்பார்கள்’ என்று சொல்லிச் சிரித்து வெறுப்பேற்றுவான். காரலுக்கு நான் செய்துகொண்டிருப்பவைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. பார்ட் சொன்னாரோ இல்லையோ. நேரடியாகவே பாராட்டத் தெரியாத மனிதர், காரலிடம் பெரிதாக அப்படி என்ன சொல்லியிருக்கப் போகிறார். கண்டிப்பாக என்னுடைய உழைப்பைக் காட்டி இவர் நல்ல பெயர் வாங்கியிருப்பார்.

    இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இத்தகைய சர்வாதிகார மனப்போக்குடைய, நரம்புக்கோளாருடைய, எதிர்மறையான, பிடிவாதமிக்க ஒரு மனிதருடன் மூன்று வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் முடி கொட்டக்கூடாது?

    இவருக்கு அடுத்து எனக்கு அதிக மன உளைச்சலைத் தருவது, எங்கள் அலுவலகத்திலேயே எனக்கு அறவே பிடிக்காத இந்த எலிவேட்டர். ஆனால் என்ன செய்வது, ஆறாவது தளத்தில் இருக்கும் என்னுடைய இருக்கைக்கு அதில் தானே சென்று வரவேண்டியிருக்கிறது. அந்தப் பாழாய்ப்போன எலிவேட்டரின் உள்ளே மூன்று புறங்களிலும் கண்ணாடிகள் இருக்கும். மூன்று கண்ணாடிகளிலும் முன்னூறு சொட்டைகள் தெரியும் போது மனதில் தோன்றுவதை விவரிக்க முடியாது. அங்கேயே அமர்ந்து அழுதுவிடலாம் போல் இருக்கும். இதனாலேயே எலிவேட்டரில் ஏறியவுடன் கதவைப் பார்த்தபடி நின்றுகொள்வேன்.

    முழுச்சொட்டையுடையோரைப் பார்க்கும் போதெல்லாம், இவர்களுக்கு நம் நிலைமை பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டாலும், முன்னூறு சொட்டைகள் காட்டும் இந்த லிப்டும், எரிச்சலூட்டும் முகபாவங்கள் காட்டும் இந்த பார்டும், குதிரைவால் கொண்டையான் அமோரியும் என் முடி கொட்டுவதை இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    நான் வேறு தளத்திற்குச் சென்று விடவேண்டும் அல்லது வேறு அலுவலகத்துக்குச் சென்று விட வேண்டும். ஆனால் ஏனோ எனக்கு பார்டை விட்டு வேறு பிராஜக்டிற்கோ, வேறு டிபார்ட்மென்டிற்கோ சென்றுவிட வேண்டும் என்று தோன்றவில்லை. நான் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு தற்காலிக ஒப்பந்த பணியாளனாகத்தான் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். பார்ட் தான் எனக்கு நிரந்தரப் பணியிடம் பெற்றுத் தந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நிறுவனத்தில், ஒரு இந்தியனுக்கு வேலை பெற்றுத் தருவதென்பது அத்தனை எளிதான காரியமில்லை. என்னதான் கடுமையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தாலும், வெளிநாட்டான் வெளிநாட்டான் தான். அவனுக்கு என்று சில எழுதப்படாத வரம்புகள் இருக்கின்றன. அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கூட இவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கும் செனோஃபோபியாவையும், இவர்கள் காட்டும் சட்டில் ரேசிசத்தையும் சகித்துக் கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.

    அனைத்திற்கும் மேலாக, மொழிப்பிரச்சினை. வேறு அணிக்கு மாறிச் சென்றால் ஆங்கிலத்தை மட்டும் கட்டிக்கொண்டு பிழைக்க முடியாது. மொழியறியாதவன் என்கிற கவலையெல்லாம் சிறிதும் இல்லாமல், பாவம் பார்க்காமல் டச்சு மொழியில் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆங்கிலத்தைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆட இது என்ன தமிழகமா?

    என் மன உளைச்சலுக்கான முதல் காரணகர்த்தாவாக எனக்கு பார்ட் தென்பட்டாலும், மேலே கூறிய இந்த இரண்டு விஷயங்களில், பார்ட் தனித்தே நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால் எல்லா விஷயத்திலும் இந்த மனிதர்களைக் காட்டிலும் அவர் முரண்பட்டவராகவே தெரிகிறார்.

    முடி உதிர்ந்தது உதிர்ந்தது தான். திருமணம் ஆகி இருந்தால் இவ்வளவு கவலைப்படமாட்டேன். சத்தியமூர்த்தி மாமா தான் எனக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். இதற்காகவே இந்தியாவிற்கு வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை சென்று வருகிறேன். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போதும் அவர் சொல்வது – ‘இவனுக்கு முழுக்க முடி கொட்றதுக்குள்ள ஒரு பொண்ண பாத்து முடிக்கணும். எனக்கே இந்த வயசிலே இவ்ளோ முடி இருக்கு. இவனுக்கு ஏன் இப்படி?’

    அவர் மட்டுமா? நான்கு வருடங்கள் கழித்து தற்செயலாக என்னை பார்த்த நண்பரொருவர், ‘என்ன பயங்கரமா மாறிட்டீங்க?’ என்று கேட்டார்.

    சொட்டை! எவ்வளவு பயங்கரமான ஒரு வார்த்தை!

    என் கல்லூரி நண்பர்கள் அதற்கு மேல் சென்று, ‘என்ன மச்சான் மாடி காலியாகிட்டே வருது!’ என்பார்கள். தோற்றத்தை வைத்து பகடி செய்வதில் நம் மக்களை யாரும் விஞ்சிவிட முடியாது. இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே எதையாவது செய்ய வேண்டியிருந்தது. அலோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, பலவித எண்ணைகள், அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எர்வாமாட்டின் என்று அத்தனையும் முயன்றாகி விட்டது. அவ்வப்போது ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்ஃபி-கள் எடுத்தது தான் மிச்சம்.

    சமீபத்தில் கூட கபோக்கி என்கிற அமெரிக்க ப்ராடக்ட் ஒன்றைப் பற்றி இணையத்தில் பார்த்தேன். இலவச சாம்பிளுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். சிப்லா கூட டுகெயின் என்கிற ஜெல்லைத் தயாரித்திருக்கிறது. தடவிய ஆறுமாதங்களில் முடி வளர்ந்து விடுகிறதாம். டாக்டர் ரெட்டி லேப்சின் மின்டாப்பை பற்றி அங்கு வேலைபார்க்கும் நண்பன் மிலிந்தனிடமே கேட்டுவிட்டேன். அவனோ, ‘மின்டாபும் வேண்டாம். டுகெயினும் வேண்டாம். இரண்டிலும் மினாக்சிடில் இருக்கிறது. அது மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டான். எதற்கு இந்த வேண்டாத வம்பு என்று விட்டுவிட்டேன்.

    இவற்றாலெல்லாம் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதிர்காலத்திற்குத் தயாராவது மட்டுமே சிறந்த வழி. எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொள்வது பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். விக் வாங்கலாமா என்றால் அதெல்லாம் ஊரறிந்த வித்தை. அதற்குச் சொட்டையே மேல். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பாலு மகேந்திராவைப் போல் எப்போதும் தொப்பி அணிந்துகொண்டிருப்பார். அது அவருக்கான பாணி. சொட்டை உள்ள சிலர் மொட்டை அடித்துக்கொள்கிறார்கள். அது போல் செய்யலாம். எனக்கென்னவோ சொட்டையை விட மொட்டை சற்று மேலானதாகத் தோன்றுகிறது. அது அவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய வார்த்தை இல்லை. பயங்கரமாயும் இல்லை. ‘மொட்டை, இங்க வா’ என்பதற்கும், ‘சொட்டை இங்க வா’ என்பதற்கும் நிச்சயம் கடலளவு வித்தியாசமிருக்கிறது. எனவே நிச்சயம் முன்மண்டையில் முடி முழுவதுமாகக் கொட்டிவிட்டால், நான் நிச்சயம் மொட்டை அடித்துக்கொள்வேன்.

    இருப்பினும் இப்போதெல்லாம் முடிக்குத் தேவையான அத்தனை உணவுகளையும் ஒழுங்காக எடுத்துக்கொள்கிறேன். வாரத்தில் ஒருமுறைதான் தலைக்குக் குளிக்கிறேன். அதுவும் தலைக்கு மட்டும் பாட்டில் வாட்டர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்கிறேன். அலுவலகத்திலும் அதிகமாக வேலை பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து வருகிறேன். பார்ட்டின் வலதுகை என்கிற பட்டமெல்லாம் எனக்குத் தேவையில்லை.

    அன்றைக்கு வெள்ளிக்கிழமை. பத்தரை மணியாகியும் பார்ட் வரவில்லை. வழக்கமாக எட்டரை மணிக்கெல்லாம் வந்துவிடுபவர் ஆயிற்றே. குறுஞ்செய்தி அனுப்புவார். அதுவும் இல்லை.

    யோஹான் கைபேசியில் அழைத்தான். “மோஹான்’, என்று எப்போதும் போல் விளித்தான். அது மோஹான் இல்லை மோகன் என்று பலமுறை சொல்லியும் அவனுக்கு ஏறவில்லை. அவன் பெயர் யோஹான் என்பதால் அவன் பெயரில் இருக்கும் ‘J’-இற்கு பதிலாக ‘M’ இருப்பதால் அப்படி அழைக்கிறான்.

    ‘ஒரு வருத்தமான செய்தி!’ என்றான்.

    ‘ஏன் இன்றைக்கு பார்ட் கென்ட் அலுவலகம் வந்துவிட்டாரா?’ என்றேன் சிரித்துக்கொண்டே.

    ‘ஜோக்ஸ் அபார்ட், பார்ட்ஸ் வைப் பாஸ்ட் அவே’.

    ‘வாட்?’

    பார்ட்டின் மனைவி இறந்து விட்டார் என்றா கூறினான்? எப்படி இவனால் இதைக் கூட எந்தவித உணர்ச்சியுமின்றிக் கூற முடிகிறது. அவன் தொடர்ந்தான்.

    ‘ஆமாம். இப்போதுதான் காரல் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார்.’

    ‘என்ன காரணம்?’

    ‘தெரியவில்லை. நாளைக்கு இறுதிச் சடங்கு! காரல் இன்று மாலை பெரு நாட்டிற்குச் செல்வதால் என்னால் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நீ அவருக்கு நெருங்கியவன் என்பதால், உன்னையும் கண்டிப்பாக போக முயற்சி செய்யச் சொன்னார்.’

    நான் எப்போது அவருக்கு நெருங்கியவன் ஆனேன்?..

    ‘நிச்சயம் வருகிறேன் யோஹான். ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா? ‘

    ‘என்ன காரணம் என்று தெரியவில்லை, மோஹான். காரல் ஏதோ அவசரமாகத் தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாலை புறப்படுவதற்கு முன்பு அழைக்கிறேன் என்றார். ஆனால், அமோரி ஒருமுறை பார்டின் மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறான். நான் சரியாக கவனிக்கவில்லை. அவன் சைப்ரசில் இருந்து வந்துவிட்டானா என்று தெரியவில்லை. போன் செய்து பார்க்கவேண்டும். இறுதிச்சடங்கு நடக்குமிடத்தின் முகவரியை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.’ என்றான்.

    அதற்கு மேல் எனக்கு வேலையே ஓடவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? இந்த ஆசாமி வீட்டிலும் இதே போன்று நடந்து கொள்பவரோ? இப்படி இருந்தால் யாருக்குத்தான் உடன் வாழப் பிடிக்கும்? விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருப்பாளா? இருக்காது. இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவார்களே. அந்த முடிவுக்கெல்லாம் போக மாட்டார்கள். ஆக்சிடண்டாக இருக்குமா? ஆனால், அமோரி அவருடைய மனைவிக்கு ஏதோ பிரச்சினை என்று கூறியிருக்கிறானே? பிரச்சினை என்றால்? மனநலம் குன்றியவளா? இருக்காது. அமோரிக்கு பார்ட்டை சுத்தமாகப் பிடிக்காது. அவன் ஏதேனும் உளறியிருப்பான். சொல்ல முடியாது. உண்மையாகவும் இருக்கலாம். இந்த யோஹான் சரியாக கேட்டிருக்கவேண்டும். ஜடம். இவர்கள் சக மனிதர்களின் சொந்த விஷயங்களில் மூக்கையும் நுழைக்க மாட்டார்கள்; அக்கறையும் கொள்ளமாட்டார்கள். அப்படியே ஓரிருவர் அக்கறை காட்டினாலும் ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்றும் முறைத்துக்கொள்வார்கள்.

    பார்ட்டை தொலைபேசியில் அழைக்கலாமா? அவர் எப்போதும் போல் எரிந்து விழுந்தால் என்ன செய்வது? நமக்கெதற்கு வம்பு! இதையெல்லாம் யோஹானைப் போலவே ஒதுங்கி நின்று பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். இந்நேரம் அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பான். பார்ட் இருந்தால் போன் செய்துவிடுவார். இப்போது அவனுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அவன் என்னமாதிரியான மனநிலையில் இருப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பார்ட் இன்னும் சில நாட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற எண்ணம் தோன்றியபோது என்னுடைய மனமும் லேசாக இன்புற்றது. உதடுகள் என்னை அறியாமல் விரிந்து புன்னகைத்த அடுத்த கணம், ‘என்ன மாதிரியான சாடிஸ்ட் நான்?’ என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்து என் வக்கிர எண்ணங்களை ஒடுக்கியது. மனம் உடனே துக்கமடைவதற்கான காரணங்களைத் தேடியது. அவரில்லாமல் இந்த வேலை கிடைத்திருக்குமா? கடனை அடைத்திருப்போமா? ஏதோ பாவம் கோபப்படுகிறார், திட்டுகிறாரே ஒழிய, முதுகுக்குப் பின்னே என்னைப் பற்றி யாரிடமாவது தவறாகப் பேசியிருக்கிறாரா? பதட்டக்காரர். ஏதோ ஒரு விஷயத்தில் இயலாமையோ அல்லது மனப்பிறழ்வோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ எல்லாவற்றுக்கும் பதற்றம் கொள்கிறார். இப்போது பாவம் மனைவியை இழந்துவிட்டு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ?

    அடுத்த நாள் காலை காரை எடுத்துக்கொண்டு ஹெயிஸ்ட்-ஆப்-டென்-பெர்க் சென்றேன். எவ்வளவு நீண்ட பெயர் இந்த நகருக்கு? மலை-மேலமைந்த-ஹெயிஸ்ட் நகரம். லூவன் நகரிலிருந்து நாற்பத்தைந்து நிமிட தூரம். பார்ட்டின் வீடு இந்த நகருக்கு அருகே உள்ள இட்டெகெம் என்கிற கிராமத்தில் இருக்கிறதாம். இறுதிச் சடங்கு ஹெயிஸ்ட்லுள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் நடக்கிறதாம். வழக்கமாக இதுபோன்ற சடங்குகள் தேவாலயத்தில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்ட் ஒரு நாத்தினாக இருக்க வேண்டும்.

    ஈமச்சடங்கு மண்டபம் இருந்த இடம் ஒரு குட்டித் தீவைப்போல் காட்சியளித்தது. சுற்றிலும் தண்ணீர். அமைதியான இடம். யோஹான் அந்தத் தீவுக்குச் செல்லும் குறுகிய பாலத்தின் மீது நின்று கொண்டிருப்பது தெரிந்தது. காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றேன்.

    மண்டபத்திற்கு வெளியே இருந்த புல்வெளியில் கோட்டு போட்ட கனவான்களும் நன்கு உடையணிந்த பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் தாள்கள் இருந்தன. அந்தப் பெண்மணியைப் பற்றி இவர்கள் அனைவரும் எழுதிக்கொண்டு வந்துள்ளதை இன்னும் சில நேரத்தில் வாசிப்பார்கள் என்று யோஹான் கூறினான். காரலிடம் தான் முந்தைய நாள் மாலை பேசியவற்றைப் பற்றியும் மெதுவாக சொல்லிக்கொண்டே வந்தான்.

    இருவரும் மண்டபத்திற்கு உள்ளே சென்றோம். வரவேற்பறையில் ஒரு இளம் வயது பெண்ணின் புகைப்படம் வைக்கப்பட்டு, அதற்கருகே விதம் விதமான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருந்தார்கள். பார்ட்டின் மனைவி தனது இளம் வயதில் எடுத்த புகைப்படமாக இருக்க வேண்டும். பார்ட்டுக்கே நாற்பத்து ஐந்து வயதாகிறது. அவரது மனைவிக்கு ஒரு ஐந்து குறைவாக இருக்கலாம். ஆனால், அந்தப் புகைப்படத்தில் வசீகரமான புன்னகையுடன் காணப்பட்டார்.

    வரவேற்பறையைக் கடந்து ஹாலுக்குள் நுழைந்த போது, பார்ட்டும் அவருக்கு அருகே மூன்று குழந்தைகளும் நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எட்டிலிருந்து, பதினைந்து வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். அவர்களுடைய கண்களை ப் பார்த்தேன் – சிவந்திருந்தன. முந்தைய இரவு முழுவதும் நிறைய அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது. பார்ட் ஏன் இத்தனை நாளாய் இவர்களைப் பற்றியெல்லாம் பேசவேயில்லை. யார்தான் பேசுகிறார்கள்!

    பார்ட்டை நெருங்கினேன். அவருக்குக் கைகொடுத்து ஆறுதல் சொல்ல நினைத்த அடுத்தகணம், என்னைக் கட்டிக்கொண்டு கதற ஆரம்பித்தார். பார்டின் இந்த செயல் நான் இதுவரை கண்டிராதது. குழந்தைகள் ஓடிவந்து அவரின் முதுகைப் பற்றிக் கொண்டார்கள். என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. பேரமைதி நிலவிய அந்தக் கூடத்தில் அவரது கதறல் என்னை நிலைகுலைய வைத்தது.

    “கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னென்னவோ செய்த பார்த்துவிட்டேன். தீவிரமான சிகிச்சை! இருந்தும் காப்பாற்ற முடியவில்லை. எங்களை விட்டு நிரந்தரமாகப் போய்விட்டாள்.’ என்று உடைந்துபோன குரலுடன் பேசினார்.

    கூடத்தின் மையத்தில் அவரது மனைவியின் உடல் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது. யோஹான் அதற்குள் அங்கே சென்று மலர் வளையத்தை வைத்துவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான். பார்ட் என் கைகளைப் பற்றி, ‘உன்னிடம் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துவிடு!’ என்றார்.

    எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது. எனது வலதுகையை இறுகப் பற்றிக்கொண்டிருந்த அவரது கைகளை தட்டிக்கொடுத்தவாறு, என் கண்ணீரை அடக்கத் திணறிக்கொண்டிருந்தேன்.

    அவரது மனைவியின் உடல் வைக்கப்படிருந்த இடத்துக்குச் சென்றேன். மேஜைக்கருகே கீழே அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். எல்லோரும் மலர்வளையங்களை அங்கே வைத்திருந்தார்கள். நான் மட்டுமே பூச்செண்டு கொண்டு வந்திருந்தேன். சலனமின்றி படுத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் முகத்தைப் பார்த்தேன். நீண்ட நாளைய வலி நீங்கி, களைப்புடன் அமைதியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

    அவரது தலையைப் பார்த்தேன். ஒரு முடி கூட இல்லை.

    Share