நீ எங்கே என் நினைவுகள் அங்கே..
காவிரி மைந்தன்
அன்பின் பரிவர்த்தனை காதல் எனச் சொன்னால்… அங்கு நினைவின் அலைகளுக்கு என்றைக்கும் ஓயவில்லை. தன்னை நினைந்துருகும் இன்னொரு நெஞ்சத்திடம் தஞ்சம் அடைவதையே என்றும் விரும்பி நிற்கும்! யுகங்கள் பல மாறினாலும் இதயங்கள் இடம் மாறி இப்படித் துடிப்பது காதலிலே மட்டும் என்பதில் மாற்றமில்லை!
என்னை நினைத்தீர்களா என்று அவள் கேட்டதற்கு .. மறந்தால்தானே நினைப்பதற்கு என்று கவிஞர்கள் வரிந்துகட்டி வென்று விடுவார்கள்! திரைப்பட்டிலே சொல்வதென்பதும் இசையமைப்போடு சொல்ல வருவதும் சுகமானது அல்லவா? நெஞ்சத்தின் வலியோடு பிரிவைத் தாளாமல் காதலன் பாடுவதோ.. காதலி பாடுவதோ நம் உள்ளத்தைத் தொடாமல் எப்படிப் போகும்? ஒரே பாடல் நான்கு வகையான மேட்டுக்களோடு ஒரே திரைப்படத்தில் இடம்பெற்ற வரலாறு இப்பாடலுக்கே உண்டு.. ஆம்.. கவிஞர் வாலி அவர்கள் இயற்றி அமரர் எஸ்.எம்.சுப்பையா நாய்டு இசை அமைத்த மன்னிப்பு.. திரைப்படப் பாடலிது!
டி எம்.எஸ். பி.சுசீலா குரல்களில் தனித்தனியாக நம் அடிமனதை வருடிச் செல்லும் ஜீவனுள்ள பாடலாய் காலங்களை வென்று நிற்கிறது…
பாடல்: நீ எங்கே என் நினைவுகள் அங்கே
திரைப்படம்: மன்னிப்பு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1969
நீ எங்கே என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே
நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
ஆயிரம் காலம் ஆனபின்னாலும் வாழும் காதல் உறவல்லவா?
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
http://www.youtube.com/watch?v=Nmbx3CADL8I