காவிரி மைந்தன்

எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது! அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை!  இது மொழியின் நாகரீக அடையாளம்!  வரம்பில்லாத உச்சம்!  காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம்! அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது!  சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை! அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது!

vaali nagesh

பெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத கவிஞர்களுக்கு மத்தியில் பல்லவியிலேயே ‘தாமரைக் கன்னங்கள்’ என்று அசத்தியிருக்கிறாரே.. வாலி!  தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி!  எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை! ஆழ்மனதிலும் அடிநாதமாய் அற்புதத் தமிழ்ச்சுரங்கம் கொண்டுவிளங்கிய கவிஞரின் கைவண்ணத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!

balachander

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படமும்.. இப்பாடலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்தவை! அன்றைக்கே கறுப்பு வெள்ளையில் கிராபிக்ஸ் யுக்தியைக் கொண்டு பதிவான படப்பாடல்!!

ஆ..ஆ… ம்ம்….ம்ம்ம்ம்…
ஆ…ஆ… ம்ம்… ம்ம்ம்ம்….
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்…..

ethirneechalllகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ…
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ..
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…..ஆ..
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்

மாலையில் சந்தித்தேன் மையலில்  சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது ..
உறங்குமோ உன்னழகு..

தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

வி.குமார் இசையில் கவிஞர் வாலியின் பாடல்!  பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் ஒரு தேனமுதம்!!

http://www.youtube.com/watch?v=PzQ-ICRm3h4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *