Blog

  • Om Shanthi

    Vedaravishangar

    Mobile: 09442318219

    Email: vedaravishangar@gmail.com

    Freelance Vedanta trainer & Research service provider

    In

    Steel will,  Alert, Aware & Awaken, Empower with In.

     

    Objective:

    Be Alert, Be Aware, Be Awake with IN & Society through Vedanta, Upanishad, Yoga & Spiritual.

    Key Skills:

    Empower human Shakti, Control with balance, channelize these emotion in constructive, positive way for empower, self-realization,  six emotions/Maya like Kama (desire), krodha (anger), Loba (miserliness), Moha (avariciousness), Matha (ego), and. Macharium (jealousy). Once we have Vairagya/ Dispassion, detachment & Vivekam/Discrimination or Discernment.

    We are create new innovative clear perfect methods in yoga like Shiva Yoga/Man, Shakthi Yoga/Women, Arthanariswara/Third gender, Brahmana Yoga, Kshatrya Yoga, Vaisya Yoga & Sutra Yoga.  Everything happens through man manipulating but need to  make statistic plan  to counter file against the negative mind for universe peace.

    This is teaching totally based on ancient Gurukula methods based on present time. We use energy analysis, mind astrology, Soul astrology and etc.,

    “Give me 100 men of steel will and I will change the world”.  Brave, bold men, these are what we want. What we want is vigor in the blood, strength in the nerves, iron muscles and nerves of steel, not softening namby – pamby ideas……
    What our country now wants are muscles of iron and nerves of steel, gigantic wills which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe, and will accomplish their purpose in any fashion even if it meant going down to the bottom of the ocean and meeting death face to face…. Ref. The Complete Works of Swami Vivekananda…Volume 3     [  Page : 278 ] …THE WORK BEFORE US (Lecture in Madras- 1897

    Visit other country to analysis & research the energy of the place through vedic hypnosis methods through atharva veda & srividya. After we start to suggest to concern people to improve the positive vibration through our ancient text with Human Positive Power.

    Carrier Experience:

    Past 15 years Gurukula learning from H.H.Sri.Sri.Sri.Ramakrishnananda Saraswathi Swamiji, Atharva veda Sankaracharya of Srividya Peetam/Riskesh.

    Gurukula learning is highest methods of divine, spiritual knowledge with energy. Guru never teach directly, before teach, he gives severe test based on the test result start to teach indirectly so we need to be alert, aware, awake. This teaching is transforming his energy to us. Gurukula teaching is Watch & Learn. Even we are not learning Sanskrit, Vedanta knowledge but we get through Guru blessings based on time and requirements. With this experience we perform pooja, prayer, lecture, workshop, research in every subjects. There are 64kala/arts is there for human empower. We are service to every things based on our experience. All modern skill developments, psychology & all science come from our Vedanta. So we use our knowledge in every matter for empower with In & Society.

    R.Ravisankar      Project Co Investigator  & Research Support Service Provider (RSSP)

    1. i) Co – P.I. for DIPR, DRDO Project “EFFECT OF RHYTHMIC SOUNDS ON PSYCHOLOGICAL , PHYSIOLOGICAL PARAMETERS”   (2007-08)
    2. ii) Co – P.I for ER/IPR, DRDO Project “ VEDIC METHODS ON

                                  ENVIRONMENT PROTECTION” (2008-09)

    iii)   RSSP for  for ASP – ISRO Project  “ KNOWLEDGE MINING IN

                                ATMOSPHERIC SCIENCE & VALIDATION USING

                                            MODERN    TOOLS “ (2009-2011)

    1. iv) for DIPAS, DRDO Project “ EFFECT OF SPIRTUALITY

                               FOR GOOD HEALTH” ( Science & Spirituality training

                                        for DRDO Labs in South India)(2012-2013)

    Mind Management & Stress Management Trainer

    1. i) Indian Army – a . 666 Army Aviation Squadron b. 403 LT AD Regt    14th Corps OP Sig Regt  ( Leh, Ladak, Jammu & Kashmir)
    2. ii) ITPB – Indian Tibet Border Police  ( Leh, Ladak, Jammu & Kashmir)

    iii)   INI                  – Institute of  National Integration (College of Military Engineering-Pune)

    1. iv) ASI – Army Sports Institute – Pune
    2. v) DRDO & ISRO Research Establishments vi) Universities, Colleges & Schools in India & Abroad

    Ref:

    www.vsrf.org.in

    http://www.mind-yoga.de/english/

    https://www.youtube.com/user/vedaravishangar

    https://www.youtube.com/watch?v=aZ_PSpFtH0s&feature=youtu.be Our Mission & Vision

    Linkedin: https://www.linkedin.com/pub/vedaravi-shangar/6/7b6/924

    Namaskar,
    God with in us and guide every second.

    As per telephone discuss we share some higher thoughts to you. We born for self, family and society empower. so keep relax, do based on your shakthi. your born already designed by God, but most of them not know so most of them search here and there. all in your own hand just drive your own car and reach your goal very simple.

    so today fear is major role for every things as per our research. so hope you understand. kindly visit you tube type vedaravishangar you get many video on mantra, small lecture and etc., we attached our vedanta bio data. visit website, video and all. Modern tools is my best friend so it connect best people for us like you.

    Our focus subject is Mind Management. Manage ME called Management. Self manage only to make others mind management. Mind & Heart is interlink between each others. today most of them not get synchronize this both. Once it not happens, out put result zero only.

    Our ancient days our family teach very simple methods 1. pure prana 2. spend self practice 3. mixing with family 4. eat healthy food and etc., In this kalliyuga most of them have six emotions/Maya like Kama (desire), krodha (anger), Loba (miserliness), Moha (avariciousness), Matha (ego), and. Macharium (jealousy). First most of them want to accept this, value this emotion, respect this emotion then automatically Vairagya/ Dispassion, detachment & Vivekam/Discrimination or Discernment will balance this six emotion. Today most of them doing different type of training, counselling and etc., but all comes under this six emotion only. Once this six emotion balance with control then promote to mind management. All have interlink connection. Today the situation not allow to teach the truth. Day by day situation going very worst. Some of negative mind seriously working against the dharma. 1. They pollute the prana 2. pollute the food 3. pollute family relation 4. pollute five elements 5. pollute the humanity. This is their duty, they are doing with very well perfect planned. But this positive mind watching only, no counter file on this because there is no UNITY. Lord krishna told in Gita. Those who watch adharma with positive mind also punishable. no mercy. Lord krishna is best person for mind management. first he start to make unity between positive minds then he strengthen their minds based on their mind status. But today still situation not come to make unity between positive mind, most of positive mind human just watching very very rare try to make counter file but still they have FEAR, No Steel will. Fearless human only spread dharma, feel the god, experience the god. Still most of them Hide with IN.

    Today we have very big challenge is there but ready to fight with challenge with smart and intelligent way.

    Life is very beautiful, lot of challenge, never back from challenge, Challenge gives empower the life. We are limitless Shakthi. Just focus with IN. Go deep with IN. Take out our Shakthi for Wisdom & Peace. Veda.

    Pray for smile, happy and peace.
    Om shanthi
    Vedaravishangar
    09442318219

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (2)

    இதிகாசமும்- சரித்திரமும் காட்டும் பெண்மை

    பாரினில் பாரதம்

    வேதசாரமான இதிகாச புராணங்களில் வரும் பெண்மணிகளையே இந்திய பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாக வழிகாட்டுகின்றனர். இந்து சமயம் சார்ந்தோர் இராமாயணமும் மகாபாரதமுமே இந்தியாவின் இந்து மதத்தின் பெருங்காவியங்கள். சீதா தேவியும் கெளசல்யா சுமித்திரை கைகேயி, ஊர்மிளா, அனுசூயா அகலிகை, பக்த சபரி முதலியோர் வனத்தில் வசித்து தவ வாழ்வு வாழ்ந்தவர்கள். சபரி அம்மையைத் தவிர்த்து ஏனையோர் ரிஷி பத்தினிகள். இராமனைப் பெற்ற கவுசல்யா தேவி பதிபக்தி உடையவர்களாகவும் புத்திர பாசம் மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

    இலக்குவனின் தாய் சுமித்திரை பெரும் ஞானியாக இருக்கின்றாள். வனவாசம் செல்லும் இராமனைப் பின் தொடரும் தன் மகனுக்கு அவள் கூறும் அறிவுரைகள் சமயச் சொற்பொழிவாளர்களால் இன்றும் பேசப்படுகின்றது. இராமனே உன் தந்தை, சீதையே உன் தாய். அவர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்றால் அது உன்னைக் கடந்தே அவர்களை அணுக இயலுமாக இருத்தல் வேண்டும். இவ்வாறெல்லாம் கடமையின் கண்ணியத்துடன் பேசுகிறாள்.

    சீதாதேவி தன் அன்பிற்குரிய ராமரை வனவாசத்தில் 10 மாதங்கள் பிரிந்திருந்தார். அவளின் சகோதரிகள் ஊர்மிளை சுருதி கீர்த்தி மாண்டவி முதலியோர் 14 வருடங்கள் தம் தம் கணவரை பிரிந்தே வாழ்ந்தனர். ஊர்மிளையாவது இரண்டொரு இலக்கிய கர்த்தாக்களால் பரிவுடன் பேசப்படுகின்றாள். மற்ற இருவரின் பிரிவு அனேகமாக பேசக்கூட படவில்லை எனத் தோன்றுகிறது. போற்றி புகழப்பட்ட பெண்களிடையே பழி சுமந்த பெண் கைகேயி காவியம் நகர வேண்டும் இராமர் கானகம் சென்றே ஆக வேண்டுமென்ற சூழலில் அவள் அதை செய்திருக்கலாம். கூனி என்ற குண சித்திர கைகேயின் செயலில் இருக்கிறது.

    இராமர் வாயிலாக நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை என்று ஆரம்பித்து விதியின் பிழை என்கின்றனர். கெளதம முனிவரின் பத்தினி அகலிகை. சரீர வனப்பு மிக்கவள். தேவேந்திரனின் சூழ்ச்சிக்கு இரையாகி முனிவரின் சாபம் பெற்றவள். இராமனின் பாதத்துளி படும்வரை கல்லாக இறுகிப்போய் கிடந்தவள் இன்றும் சமயம் சார்ந்த சொற்பொழிவுகளிலும், பட்டிமன்றங்களிலும் இவளின் வாழ்வு பேசப்படுகின்றது. தவறுக்கான தண்டணை அனுபவித்ததுடன் முனிவர் மறுபடியும் அவளை மனமாற ஏற்கிறார்.இந்திரனின் அருகாமையில் இவன் என் பதி அல்ல என உள்ளுணர்வு உணர்த்தாமல் ஜடமாக இருந்ததால் உணர்வற்று கல்லாகவே கிடக்க குமிடிமுனி புங்கவர் தண்டனை தந்தாரோ எனத் தோன்றுகிறது. ஆனாலும் தண்டனைக் காலம் முடிந்தபின் அகலிகையை தன் பத்தினியாகவே ஏற்றுக் கொண்டது பழமையான காவியத்தில் புதுமையான முற்போக்கு பெண்மையை போற்றுதலைக் காண்கின்றோம்.

    காவியத்தில் பெண்மையின் மாண்பு பெற்ற மண்டோதரி ஏழு பத்தினியரில் ஒருவள் எனும் சிறப்பை பெற்றவள். சிறந்த சிவ பக்தனை கலை நுணுக்கம் மிக்க வீரனை கணவனாகப் பெற்றவள்.கண்ணியமற்ற கணவனின் செய்கையால் துன்ப உணர்வையே அடைந்தாள். அவள்தான் வணங்கத்தக்க ஏழு சிறந்த பத்தினியரில் ஒருவராக வைத்து சிறப்பிக்கப்பட்டிருக்கின்றாள்.

    பக்த சபரி வேட்டுவக் குலத்தில் பிறந்த பெண்மணி. பிறந்ததில் இருந்தே உலகின் மாயைகள் ஒன்றிலும் சிக்கிக்கொள்ளாமல் ஆன்மீக ஆன்ந்தத்திலேயே திளைத்தவள் பக்த சபரி. இயல்பாகவே இந்த நிலை அம்மையாருக்கு அமைந்திருந்தது. இளம் வயது முதலே குருவினுடைய பணிவிடைகளிலேயே வாழ்ந்தவர். குருவின் சொற்படியே இராமரின் வருகைக்காகவே தவமியற்றி இராமரின் தரிசனம் பெற்று நற்பேறு பெற்றவரானார். எக் குடியில் பிறப்பினும் அப்பிறவியிலேயே இறைவனை அடைய தடையேதும் இல்லை என பெண்குலத்தின் சார்பாக நிரூபித்தவர் இவ்வம்மையார். வியாச முனிவரால் சொல்லப்பட்டு ‘ஓங்காரமூர்த்தியான’விக்னேஷ்வரரால் எழுதப் பெற்ற சிறப்பை உடைய மகாபாரதம். இதில் வருபவர்களான வனிதா மணிகளில் மூத்தவள் வியாஸ பகவானுடைய மகளாகும். பெரும் பேறு பெற்றவள் மச்சகந்தி எனும் பரிமளகந்தி. இவளின் மீது மகாராஜா சந்தனு கொண்ட மோகத்தின் விளைவாக அரசியானவள்.

    ஆனால் விரைவிலேயே வேதனையை வெகுமதியாகப் பெற்றாள்.வம்சத்தை வளர்க்கும் பெறும் பொறுப்பு அவள் தலையில் சுமக்க
    வேண்டியவளானாள். வேறு வழியின்றி பராசர முனிவர் மூலம் தனக்குப் பிறந்த வியாசரையே தம் வம்சம் வளர வரம் கேட்க வேண்டியவள் ஆனாள்.வம்சமும் வளர்ந்தது.சகோதரர்களுக்கு இடையே வன்மமும் வளர்ந்தது அதன் விளைவாக மகாபாரதம் எனும் மகா காவியம் பிறந்தது.அடுத்த ராஜமாதாக்களான குந்திக்கும் காந்தாரிக்கும் கிட்டதட்ட அவளின் நிலையே ஏற்பட்டது. புத்திர பாசத்தினால் மன அலைச்சலும் உளைச்சலுமே மிச்சமாயிற்று.காந்தாரி கண் அற்ற கணவனின் பொருட்டு திருமணத்திற்கு முன்பே கண்களைக் கட்டிக்கொண்டு கணவன் அனுபவிக்காத கட்புலனினின்பத்தை தானாகவே உதறினாள்.குந்தி போஜனின் புத்திரியான குந்தி தேவி ,தனக்கு வரமாககிடைத்த மந்திரத்தையே சாபமாக மாற்றிக் கொண்டாள்.,என்கிறார்கள்.அவளின்
    அந்த கன்னிப்பருவத்தில் ஆராயும் அறிவு இன்மையினால் என்கின்றனர்.ஆனால் அரசகுமாரன் பாண்டுவை மணந்த பின்பு சூழ்நிலையின் உந்துதலில் அந்த மந்திரமே வாழ்விற்கு வரமாக மாறி அவளுக்கும் பாண்டுவின் இன்னொரு மனைவி மாந்திரிக்கும் மக்கட் பேற்றை நல்கியது.இருந்தாலும் தன் திருமணத்திற்கு முன்பே பிறந்த சூரிய புத்திரன் கர்ணனும் குந்தியும் பட்ட மனவேதனையும் கர்ணனுக்கு நடந்த அவமானங்களும் இன்றும் கேட்டவர் மனம் உருகும் தன்மையை உடையதாக இருக்கிறது.

    இந்த ஒரு காரியத்திலேயே இரண்டு பிறவிகளைப் பார்த்துவிட்ட சிகண்டி எனும் பூண்ட பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறு தவறு செய்யாத பெண் பீஷ்மரால் சிறை பிடிக்கப்பட்டு அங்கும் இங்குமாக அலைந்து அவதியுற்று முடிவு காணாமல் பின் தவம் புரிந்து தன் துன்பத்திற்கு காரணகர்த்தாவான பிதாமகன் பீஷ்மர் முடிவுக்கு தானே காரணமாக வேண்டும் எனும் வரத்தை வேண்டிப் பெற்றவள் மகாபாரதத்தில் இந்த பகுதியை தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அனைவரும் அறிந்ததே ஆனால் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது.காந்தர்வமணமும் சுயவரமும் நடைபெற்றுக் கொண்டிருந்த அக்காலத்தில்தான் ஆணின் ஆதிக்கத்தையே காட்டுகிறது .பெண்மை எனும் பெறும் உண்னமக்கு காவியத்தில் கதாநாயகனான கண்ணனே பெருமதிப்பளித்து பல விதத்திலும் அபயம் அளித்து ஆறுதல் அளிக்கின்றார்.திரொளபதியை காத்தது ஒரு விதம் எனில் குந்திதேவிக்கு பல விதத்திலும் துன்பத்திற்கு ஆளான அவளுக்கு ஞானம் எனும் அருட்செல்வத்தை வழங்குகின்றார். கண்ணா எனக்கு துன்பத்தையே தா அப்பொழுதாவது நான் உன்னை மறவாமல் இருப்பேன்.ருக்மணி தேவிக்கும் அடைக்கலம் அளித்து ப்ரேம பாவத்திற்கும் தெய்வாம்சம் பொருந்திய இராமரின் மனைவியாக இருப்பினும் சரி ஒரு சலவைத தொழிலாளியின்
    மனைவியாக இருப்பினும் சரி நெருப்பில் தோன்றிய நெறி மிகுந்த தங்கையாக இருப்பினும் பாண்டவர் ஐவரின் பத்தினியாக இருப்பினும் சரி அவளின் மான ம் மரியாதைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

    மூத்தோர்கள் நிறைந்த சபையில் ஆண் ஒருவனாக பெண் ஒருத்தியின் ஆடை பகிரங்கமாக பல வந்தமாக பறிக்கப்பட்டது என்பதே காவியத்தில் காணப்படும் உண்மையாக இருக்கின்றது.பாதிப்பிற்கு உள்ளானவள். நெருக்கமான உறவினர்களைப் பார்த்தாள் ,குலத்தின் மூத்தோர்களைப் பார்த்தாள்.பார்த்தாள் பார்த்துக் கொண்டே இருந்தாளே தவிர பலன் ஒன்றுமே இல்லை. கதியற்றவள் என்று உணர்ந்தபின்பு தான் கடவுளை அழைத்தாள்.பரிதவித்தப் பின்புதான் பரமனைக் கூவினாள்.படைத்தவன் பாராமல் இருப்பானா?ஆண்டவன் அருளால் மட்டுமே அவமானத்தில் இருந்து காப்பாற்றப்பட்டாள்.அனைத்து ஜீவன்களுக்குமே இதுதான் கதி
    இதுவே விதி.ஆனாலும் ஒரு உண்மை தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.தெய்வாம்சம் பொருந்திய அரசன் முதல் அதே மன்னில் வாழும் சலவைத் தொழிலாளி வரை அவன் தன் மனைவியை ,துனைவியை ,அரசனானால் தன்னுடைய அரண்மனையை விரட்டும் அல்லது வெளியேற்றும் உரிமையை பெற்றிருந்தான்.

    இது நம் வீடு .அதாவது எனக்கும் கூட இதுதான் வீடுஎனும் உண்மையின் உரிமையை நடைமுறைப்படுத்த அந்த நாட்டின் ராணியாலும் முடியவில்லை. நாட்டின் குடிமகளாலும் இயலவில்லை.என்பதுதான் உண்மை.வீட்டை விடு வெளியில் நடந்தே ஆகவேண்டும். வெளிஉலகம் எனும் வெய்யிலில் காய்ந்தே ஆக வேண்டும். அசோக வனத்தில் சீதாபீராட்டியை அனுமன் பார்க்கின்றார்.தாயே நான் உன்னை இங்கிருந்து கொண்டு சென்று ஸ்ரீராமனிடம் சேர்ப்பேன் வருவீர்களாக என்று வேண்டும் பொழுது பிராட்டியானவர் அனுமனே மூவுலகங்களையும் ஒரு சொல்லினால் சுடுவேன்.ஆனால் அது ஸ்ரீராமருடைய வில்லுக்கு புகழ்
    அன்று என்று பொறுமையுடன் இருக்கின்றேன் என்று தன் சக்தியைகணவனின் வீரத்திற்கு பின்னே வைத்தே பேசுகின்றார். கம்பராமாயத்தில் இப்படிபட்ட சீதாதேவி வனத்தில் வால்மீகியின் ஆஸ்ரமத்தில்தங்கியிருந்து தன் மக்களை பெற்றெடுக்கின்றாள். சூழ் நிலைக்காரணமாக ஆஸ்ரமத்தில் வளர நேரிட்டது.அவதாரமே ஆனாலும்

    ஏக பத்தினி விரதனாக இருந்தும் ராஜாராமந்தான் முதலில் நிற்கின்றார்.சீதாராமன் ராஜாராமனின் பின்னால்தான் நிற்கின்றார். இன்னும் வரிசைகரமாக சொல்லப்போனால் தசரதராமனான,தாசரகி தான் முதலில் பித்ரு வாக்கிய பரிபாலனத்திற்குப் பிறகு தான் இராஜாராமன் அதன் பிறகுதான் சீதாராமன்.

    சீதை துயருற்றுதலுக்கு இனையாக இராமனும் துயருற்றாலும் கூட நம் அனுதாபம் என்னவோ பிராட்டியாரின் பெயரில்தான்.பூமித்தாயின் புதல்வியாக கருதப்படும் சீதாதேவி,ஞானியான் ஜனக மகாராஜனால் வளர்க்கப் பெற்றவள். மகாராஜாவான தசரதனின் மூத்த புதல்வனான மனித வாழ்வின் ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டான இராமபிரானை மணந்தும் ஒரு நிலையில் கருவுற்ற நிலையில் கானகத்தில் தனியே விடப்பெற்றாள்.என்பதுதானே என் கண்முன்னிற்கும் காட்சி நம் கண்களும் கலங்கும் காட்சியுங்கூட.

    எந்த நிலையிலும் எந்த சூழலிலும் பெண்மை எனும் தன்மை ஆண்மையின் ஆளுமைக்கு அடங்கி நடந்தது, தன்னுள் இருக்கும் சக்தியை யும் அடக்கி வைத்துக் கொண்டது.இந்தியாவில் ஹிந்து சமயம் சார்ந்தே பெரும்பாலும் அரசுகள் அமைந்து அரசு புரிந்தன.மன்னன் சார்ந்த சமயமே அனேகமாக மக்கள் பின்பற்றும் சமயமாகவும் இருந்தது.வடக்கில் ராணி ஜீஜாபாய் தன் மகன் சிவாஜியை ஒரு நல்ல ஹிந்து சமயம் சார்ந்த அரசனாக வளர்த்திருந்தார்.தேவி பவானி யை தன் வழிபடும் கடவுளாகக் கொண்டிருந்த சாம்ராட் சிவாஜிதான் பிறந்த நாட்டையும்பெற்றெடுத்த தாயையும் தெய்வமாகவே போற்றி வணங்கினார்.அவரிடம் அமைந்திருந்த மனித நேயமிகுந்த ஒழுக்க உணர்விற்கு மூலகாரணம் அன்னை ஜீஜாபாயே ஆவார்.முகமதியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த அக்காலத்தில் இந்து முஸ்லிம் வேற்றுமை உணர்வு சகஜமாக இருந்து வந்தது.

    அதன் அடிப்படையில் பகை வெறுப்பு முதலிய மாறுபாடான குணங்கள் மனிதர்களை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தன.ஒரு சமயத்தை சார்ந்த மங்கையர் மற்ற சமயத்தை சார்ந்த அரசனையும் குடி படைகளையோ கண்டால் மானம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டி அஞ்சி விலகி ஒடினர்.இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிவாஜியின் சிப்பாய்களுள் பேரளகியான ஒரு முகமதியப் பெண்ணை சிறை பிடித்தனர். அவளை கொண்டு வந்து தங்கள் தலைவன் முன் நிறுத்தினர் .அவளின் பேரளகைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.அவளின் அழகை வியந்து கேட்ட சிவாஜி அவளின் முகத்திரையை சற்றே விலக்கி அவளை அவளுடைய பேரழகின் பிராகசத்தை ஒரு கணம் நோக்கினார்.மறுகணம் தாயே உன் மகனுக்கு உன் பேரளகில் ஒரு துளியாவது
    வாய்க்கும் அல்லவா என்று புனிதமான பொருள் பொதித்த வார்த்தைகள் அவரின் வாய்மை வாய்ந்த வாயின் வழியே வந்தன.அடுத்த தன் சிப்பாய்களுக்கு அவர் அளித்த உத்தரவானது,அந்த முகமதியப் பெண்ணின் பெண்மைக்கு மரியாதைக்கு வேதங்களின் சாரம் எனப்படுகின்றது. அவர் அளித்த உத்தரவாதமாகியது இந்த தாயை அவளுடைய இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்து விடுங்கள். இந்த சம்பவம் சத்ரபதி சிவாஜியின் சாண்றாமைக்கும் பேராமைக்கும் சான்றாக சரித்திரத்தில் பதிவாகியுள்ளது.இந்த சரித்திர புருஷனின் சான்றாமைக்கு அடிநாதமாக அமைந்திருப்பது அன்னை ஜிஜாபாயின் அருமையான
    வளர்ப்பு அன்பு மகனுக்கு அமுது ஊட்டும்பொழுது எல்லாம் நல்லறிவையும்சேர்ந்து ஊட்டிய தாய்மையின் பக்குவம் வாய்ந்த பண்பட்ட மனம் ஒரு தாயின் தவிர்க்கமுடியா கடமையை செவ்வனே ஆற்றிய பெண்ணின் பெருஞ்சிறப்பு.

    தாய் நாட்டிற்கு தன் கடமையை ஆற்றி புரவியே போர்களத்தில் புகுந்த ஜான்சிராணி லக்ஷ்மிபாய் திரைபோட்டு முகமலர் மறைத்து அகத்தின் உள்ளேயே வாழ்ந்த அந்நாளில் இன்றுநான் ஆணாகவும் செயல் புரிகின்றேன் என புகன்ற வீரமணி ஜான்சியின் ராணி.தந்தையையும் தகமை வாய்த்த கணவனையும் போர்க்களத்தில் பலியிட்டபின்பும் தன் பால் மனம் மாறா பாலகனை வாழ்த்துக் கூறி போருக்கு அனுப்பிய தமிழகத்தின் தாய்மார்களை தமிழ் இலக்கியங்கள் அறிமுகப்படுத்துகின்றன.தேசப் பிதா மகாத்மா காந்திக்கு கிரியா ஊக்கியாக தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து ஒளி வீசிய மங்கையர் திலகமாம் தில்லையாடி
    வள்ளியம்மையை அந்த தமிழ்ச் சுடரின் ஒளியை தரிசனம் செய்பவர்கள் எத்தனை பேர்கள்? வங்கம் தந்த தங்கம் வேதாந்த சிங்கம் உலகின் அனைவருக்குமுரிய ஆன்ம தத்துவர் எனும் ஞான ஓளி அது இந்திய மண்ணிலேயே இருப்பதைக் கண்டு உலகிற்கே வாரி வழங்கிய வள்ளல் சுவாமி விவேகானந்தர்.துறவும் தொண்டுமே இரு கண்களின் ஒளியாகக் கொண்டவர் அவரை பெற்ற பெரும் பாக்கியம் கொண்ட அன்னை புவனேஸ்வரி தேவி.தன் தாயின் சிறப்பை ச்வாமி விவேகானந்தரே கூறுகின்றார். என்னிடம் இருந்து எதெல்லாம் நல்லவையாக வருகின்றதோ அவையெல்லாம் என் அன்னை எனக்கு அளித்த வைகள் ஆகும்.இந்தியாவில்
    பெண்மை என்பது தாய்மைஎன்ற நிலையிலேயே பெரிதும்வெளிப்படுகின்றது.அடுத்து தங்களின் பவித்தரத்தை காப்பாற்றிக் கொள்ள வலிய உயிர் தியாகம் செய்தவர்கள் எத்தனை அயிரம் பேர்கள்.அந்நிய நாட்டில் இருந்து வந்து புகுந்தவர்கள் மண்ணை தொட்டதோடு அல்லாமல் பெண்ணையும்தொடும் கேவலமான எண்ணம் கொண்ட பொழுது பசுங்கிளி போன்ற பரம அழகிகள்துஉயிரை துச்சமாக மதித்து தங்களின் மானத்தைக் காத்து பண்பாட்டை க்காக்கவும் உயிர்த் தியாகம் செய்தனர் .அந்த புனிதவதிகளை இன்னும் பாரதமே கை கூப்பி த் தொழுகின்றது.

    அந்நியனை சொந்த மண்ணை விட்டு ஒட்டவேண்டும் என்று தானே புரவியேறி போர்க்களம் புகுந்த ஜான்சியின் ராணி லஷ்மிபாய் .வாரிசு இல்லாத நாட்டை அந்நிய அரசாங்கம் தனக்கே உடமை ஆக்கிக் கொண்டது.ஜான்சியிலும் அவ்வாறு நடக்க முடியாதவாறு முடிந்தவரை எதிர்த்து போராடினார். அந்த வீர மங்கைதாய் மண்ணிற்காக தனது தத்து புதல்வனுடையே போர்க்களம் புகுந்தார்.அதே போன்று தெற்கிலும் வீரமங்கை வேலுநாச்சியார் .அந்நிய அரசை அடியோடு எதிர்த்தவர்களில் ஒரே பெண்மனி.இவர்கள் எல்லாம் சின்னஞ்சிறு பிரதேசத்திற்கு உரிமையான அரசிகள்.சூரியன் அஸ்தமிக்காத புகழையுடைய பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரத்தை மிகுந்த துணிவோடு எதிர்த்து நின்றார்கள்.எவ்வளவு பெரிய சக்கரவர்த்தியே ஆனாலும் அவர்களுடைய நாடு பிடிக்கும் பேராசையை பெருந்துணிச்சலோடு எதிர்த்து நின்றார்கள். அதுவும் இந்தியாவில் பெண்கள் நிலை என்ன? ஆணின் தோழுக்கு பின்னே நின்றே வெளிஉலகை எட்டிப் பார்க்கும் நேரம் ஆடவர் முன்பு பெண்வருவதே அரிதான சமயம் தாய் நாட்டுப்பற்று அவளுக்கும் இரத்தத்தில் கலந்திருந்தது.தேசப்பிதா என்ற புகழை அடைந்த மகாத்மா காந்தி அடிகளுக்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் ஒரு பெண்ணே அந்த சின்னஞ்சிறுமி தமிழ் நாட்டில் உள்ள தில்லையாடி என்ற ஊரை சேர்ந்த வள்ளியம்மை எனும் தமிழ்ப் பெண்ணே.சுதந்திர போராட்ட வீரர்களுக்கு த் துணையாக அவர்களின் பின்னால் நின்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.தாயாக மனைவியாக சகோதரியாக ஆணுக்கு பல உறவாக இருக்கும் பெண்மை தாய் நாட்டிற்காக அதன் சுதந்திரத்திற்காக தன் உடமைகள் அனைத்தையும் கொடுத்தாள்.அதுவன்றி தன் சுகங்களையும் உரிமையையும் தியாகம் செய்தார்.தமிழ் நாட்டில் இதற்கு சரியான எடுத்துக்காட்டு கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி அவர்களின் துணைவியார் அவருடைய சகதர்மினியாக மிகுந்த மகிழ்வுடன் அவருடைய தீரமிக்க செயல்களுக்கு உறுதுணையாக கூடவே இருந்தார் என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.

    கொடிபிடித்த குமரன்மனைவியார் இன்னும் தெரிந்ததும் தெரியாததுமாக எண்ணற்ற பெண் மணிகள் பின்னணியில் இருந்திருக்கின்றனர்.பொதுவாக இந்திய பெண்கள் இந்திய பண்பாட்டுடன் இயல்பாகவே ஒன்றியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

    பாரதத்தின் பண்பாடு இந்திய கலாசாரம் என்பது இந்தியர்களால் மட்டும் அன்றி மற்ற நாட்டாரும் மதிக்கத்தக்க உயர்வு பெர்றது.அது தூய்மையும் தியாகமும் தாய்மையும் மட்டுமே அதிகமாக மிளிர்கின்றது.இந்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண் மணிகள் இந்தியாவில் இருக்க இந்தியாவில் இல்லாதது ஒன்றுமில்லை .அப்படிபட்டவர்களுக்கு அன்பும் நன்றியும் கலந்த வண்க்கங்கள் உரித்தாகுக.எல்லாம்வல்ல இறைவன் பாரத பெண்களுக்கு அதன் பண்பாட்டை உயிரோடு உயிராக கலப்பாராக.உலக நாடுகளில் பாரதத்தினுடைய உயர்வு என்றுமே உயர்வாகவே இருக்கும்.

    தொடரும்

    தட்டச்சு உதவி : உமா சண்முகம்

    Share
  • அமரந்தா …

    கவிஜி.

    இரவு தன் கண்களை நன்றாகத் திறந்திருந்தது தன் சிறகுகளைத் திறந்திருந்தது போலவே. சாலையெங்கும் பகலின் சாயல் தன்னை ஒரு இளைப்பாறலாய் அணத்துக் கொண்டிருந்தது. இரவு எதையோ தேடுவதாகப் படுகிறது. அமரந்தா தன் இருசக்கர வாகனத்தில் இலைமறை காயாய் விசும்பலைப் பார்வையாக்கி வெறித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தாள். இரவின் தேடலுக்குள் தொலைவது அவளின் தேடலாக இருக்க வேண்டிய சூழலாய் ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது அவளின் ஆழ் மனம். உடல் முழுக்க பூத்திருந்த வியர்வைத் துளிகளில் நள்ளிரவைத் தொடும் வெளிர் காற்று ஒத்தடம் தந்து பறித்துக் கொண்டிருந்தது அவளின் பகலின் இயந்திரத்தை.

    அவள் வண்டியை இன்னும் வேகமாக்கினாள். காற்றோடு குழல் சொல்லும் குதியாட்டத்தில் நாலரை மணிக்கு எழுந்து விடும் தொண்டையடைக்கும் து(தூ)க்கம் தப்பியோடிக் கொண்டிருந்தது. நீண்டு பின் சரிந்து பின் சரியாகி பின் வளைந்து நெளியும் சாலையில் வெறி கொண்ட சர்ப்பமென விழி மூடா கோபங்களைத் துப்பிக் கொண்டே சென்றாள். சாலையோரக் கடைகளின் தூக்கம் கதவடைத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.

    பெருமூச்சு விட்டாலும் தேநீர் போட்டு, இட்லி அவித்து, மதியத்திற்கு சாதம் வடித்து, அதற்குத் தேவையான சட்னி சாம்பார் குழம்பு பொறியல் என டிபன் டிபனாய் அடுக்கி, பெரியவனை எழுப்பி, சின்னவளை அதட்டிக் குளிக்க வைத்து, குளித்து, இஸ்திரி செய்து, கணவனை அனுப்பி விட்டு, மாமனார் மாமியாரை சாப்பிட வைத்து, குழந்தைகள் இருவரையும் பள்ளிக்குச் சரியான நேரத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு, பின் அரக்க பறக்க இரண்டு இட்லிகளை நின்று கொண்டே வயிற்றுக்குள் போட்டு (சிலபோது தேநீரோடு காலைக் கதை முடியும்) வண்டியில் விரைந்து, பின்னால் முன்னால் சரி செய்து கொண்டே அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தும் போது பத்து நிமிடம் தாமதமாகி இருக்கும். அதற்கென்றே பிரத்யேக சிரிப்பொன்றை வளர்த்துக் கொண்டே மேலாளரின் அறை திறக்கச் செய்யும் அன்றைய வேலை அப்போது தான் தன் பீரங்கி கதவைத் திறக்கும்.

    உறக்கத்தின் உச்சியில் சாலையோர வாசிகள் கொசு கடித்தாலும் தூங்கி விடும் வரம் பெற்ற புண்ணியவான்கள். கண்கள் நிறைய கண்டு கொண்டே இன்னும் வேகமாய் வண்டியை ஓட்டினாள் அமரந்தா.

    ஆசுவாசப் படாத அத்தனை உணர்வுகளும் கலங்கிய கண்களை காட்சியோடு பிழையாகிக் கடக்கச் செய்து கொண்டிருந்தன. ஏனோ அழுகை மட்டும் வரவில்லை. அழுது விடக் கூடாது என்பதிலும் தீவிர சிந்தனையை தேடலாக்கினாள். வண்டியின் காதோரங்களில் தன்னை பின்னோக்கி நீட்டிக் கொண்டே ஒரு பகலின் தீவிரத்தை விழுங்கிய மலைப் பாம்பாய் மெர்க்குரி விளக்கின் வெளிச்சத்தில் சுருண்டு கொண்டிருந்தது சாலை. ஆங்காங்கே தப்பித்து வாழும் சில மரங்கள் “போகாதே போகாதே” என்பது போல தலையாட்டி, உடல் ஆட்டி, உயிராட்டிக் கொண்டிருந்தன. இனம் புரியாத பயத்தை இடம் பொருள் அறியாமல் தன் மீது யாரோ விதைப்பதாக ஒரு உறுமல் அவளை தப்பிக்கச் சொல்வதாக இருந்தது அமரந்தாவின் வேகம்.

    வேகம் … வேகம்… வேகம் … அந்த ஃபோன் இந்த ஃபோன் … அந்த பில் இந்த பில் …

    “ஓ … அந்த விஷயமா? அது அமரந்தாவுக்குத் தெரியும்”

    “அமர் சார் கூப்பிடறார் “

    “அமரந்தா மேடம் நீங்கதானே?”

    வைத்த தேநீர் பாலாடை பூத்து பட்டுப் போன பின் எடுத்து ஒரே மடக்கில் குடித்து விட்டு, நேரம் காலம் தெரியாமல் வழிய வலிய வலிய வழிய வந்து நிற்கும் சக ஊழியனிடம் ஜாடை காட்டி கொஞ்சம் இளைப்பாற ஓய்வு அறை செல்கையில், அவனின் நமட்டுச் சிரிப்பு அவனுக்கு எதுவுமே வராது என்பது போல இருக்கும். அமரந்தாவுக்கு என்னவோ போல் இருக்கும்.

    அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி இரவு ஏழை நெருங்க நெருங்க …

    நெருங்கி வந்து ஹே… ஹே… என்று கத்திப் போகும் இருசக்கர வாகன இளைஞர்களைப் பார்த்து அவளும் “ஹே” வெனக் கத்தினாள். அவர்களை இன்னும் வேகமாய் விரட்டினாள். அவளின் இதயத் துடிப்பின் வேகம் இன்னும் … இன்னும் … வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த குருதியின் நிறத்தி, கரப்பான் பூச்சியின் குருதியை கொட்டி விட்டது போல் சிறகு முளைக்கத் தொடங்கி கோபங்களின் எண்ணமாய் சாலை கடந்தது.

    எண்ணம் செயலானாலும் “அது சரியில்லை இது சரியில்லை” என்று புலம்பும் மாமியார். “இந்த காலத்து புள்ளைங்க மதிக்கறதே இல்ல” என்று புலம்பும் மாமனார். குழந்தைகளின் வீட்டுப் பாடம், இரவுச் சோறு, அவர்கள் சண்டை இவர்கள் சண்டை, நாத்தனாரின் நகைப் பிரச்சினை, அடுத்த மாத தவணைப் பிரச்சினை என்று யோசித்து, ஒரு வழியாக சமாளிப்பதற்கான முடிவெடுத்து, பின் பாத்திரம் கழுவி, துணி துவைத்து, அடுக்களை சுத்தம் செய்து, படுக்கையில் வந்து விழும் போது கை வந்து விழும் கணவன் என்ற கொம்பனாய். ஈடுபாடு இல்லை என்ற முகச் சுளிப்போடு முகம் திருப்பும் கணவனை சமாதானம் செய்யக் கூட வழியின்றி வலிமையின்றி கண் மூடுகையில் மணி 11 தாண்டியிருக்கும்.

    “ஏன் 11 மணிக்கு பொம்பள வெளிய வரக் கூடாது?” கேள்விக்கு இடமே இல்லை இங்கு. எல்லாமே பதில்தான். புரிந்தும் புரியாதது போல் புரிந்து கொள்ளும் பதில். அசைவற்ற முகத்தில் அத்து மீறும் கனத்தோடு நின்றாள் அமரந்தா.

    “என்ன வழக்கம் போல. கோபமா?” வேர்த்து பூத்து வாசல் வந்த ஜீவா, பிரிந்து கிடந்த தலை முடியை வளைத்து நெளித்து கொண்டை போட்டபடியே கேட்டாள். சிரிக்கவே முடியாத உதடு கன்னிக் கிடந்தது. அவள் உடல் மீது சாராய வாடை.

    “வர்றவனுங்க எல்லாருமே குடிச்சிட்டு தான் வர்றானுங்க” அமரந்தாவின் வெற்றுப் பார்வைக்கு பொட்டு வைத்து பூ சூடியது ஜீவாவின் விளக்கம்.

    “என்ன செய்ய. இது பத்தாவது ஆள். அம்மா கீழ விழுந்து கால உடைச்சுகிச்சு. காலைல ஒரு ரெண்டாயிரமாவது அனுப்பனும் அதான்” என்றாள் ஜீவா அவளின் கண்கள் சிரித்தது குரூரமாய். அவளின் கண்களில் கண்ணீர் பழைய கதையை பழையதாகவே வடித்துக் கொண்டிருந்தது குரூர சிரிப்பின் மறு அசைவாய்.

    11வது ஆள் வீட்டுக்குள் போக ஜீவாவைத் தடுத்தாள் அமரந்தா.

    ஜீவாவின் கேள்விப் பார்வைக்கு அமரந்தாவின் பதில் இப்படி இருந்தது

    “ஜீவா இருடா. நான் போறேன்”

    Share
  • பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    பொன்னான வாழ்வுபொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா …

    தமிழ்த்திரையுலகில் பாட்டு சாம்ராஜ்ஜியத்தை தனக்கென படைத்துக் காட்டிய கவியரசு கண்ணதாசன் அவர்கள் காட்சிகள், திரைக்கதை, இவற்றின் ஓட்டம்எதிர்மறையாய் அமையும் போதிலும் நேர்மறை வார்த்தைகளை இட்டுநிரப்பிய பாடல்களால் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்!

    ஆம், அன்றைய காலக்கட்டத்தில் சோகக் காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்று பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா… உலகம் இதுதானா…    அருமையான பாடல்! ஆழ்ந்த சோகத்தை பிரதிபலிக்கும் இனிமையான இசை! இவற்றை நம் இதயங்களில் கொண்டு சேர்க்கும் குரல்! இவற்றின் கூட்டுக்கலவையில் கவிஞர் கா.மு.ஷெரீப்.

    இந்த எதிர்மறை வார்த்தைகளை மாற்றி தன் பாணியில் இதே போன்றசூழலுக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ என்று ஆனந்த ஜோதியில் எழுதி வைத்தார் கண்ணதாசன்!

    அவரது பாணியைப் பின்பற்றி கவிஞர் வாலி, ‘உறவு என்றொருசொல்லிருந்தால்’ என்று அதே சூழ்நிலைக்கு பாடல் எழுதி தன் பங்கினைஅளித்தார். இந்தச் செய்தியை அண்மையில் மறைந்த கவிஞர் வாலி என்னுடன் பகிர்ந்தது இன்னும் மனதில் பசுமையாக!!

    இன்னும் சுவையாக சொன்னதெல்லாம், அட … இந்தப் பாடலைவெள்ளிக்கிழமைகளில் விவிதபாரதியில் காலையில போட்டால், யாரும்மாஅது… அந்த ரேடியோவை சப்தம் குறைச்சு வைம்மா… வெள்ளிக்கிழமையும் அதுவுமா… என்று குரல் வரும்.

    அதே நேரத்தில் நினைக்கத்தெரிந்த மனமே… உறவு என்றொருசொல்லிருந்தால்… போன்ற பாடல்கள் ஒலிபரப்பானால், கொஞ்சம் சப்தம்கூட்டிவைங்களேன் என்று அந்தக் குரல் எழும் என்றார்.  என்றாலும் இந்தப் பாடல் காலத்தை வென்று நிற்கிற பாடல்களின்வரிசையில் நமக்கு மிக நெருக்கமான தோழிபோல நெஞ்சிற்கு அருகில்நிற்கிறது!!

    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

    பண்போடு முன்னாளில் அன்பாக
    என்னோடு வாழ்ந்தாரே
    பண்போடு முன்னாளில் அன்பாக
    என்னோடு வாழ்ந்தாரே
    வீணான பாலாய் விரும்பாத பூவாய்
    என்றெண்ணி விடுத்தாரே
    வீணான பாலாய் விரும்பாத பூவாய்
    என்றெண்ணி விடுத்தாரே
    என்னன்பை மறந்தாரே …

    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

    பண்பாடு இல்லாமல் மண்மீது
    பாழாகி நொந்தேனே
    பண்பாடு இல்லாமல் மண்மீது
    பாழாகி நொந்தேனே
    தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
    நிம்மதி இழந்தாச்சு
    தேனான வாழ்வு திசைமாறிப் போச்சு
    நிம்மதி இழந்தாச்சு
    தீராத பழியாச்சு …

    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

    பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
    என் மீது பழி சொல்வார்
    பெண்ணென்றும் பாராமல் எல்லோரும்
    என் மீது பழி சொல்வார்
    உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே
    ஊராரும் அறிவாரோ?
    உள்ளன்பு கொண்டேன் அவர்மீது நானே
    ஊராரும் அறிவாரோ?
    என் வாழ்வை அழிப்பாரோ?

    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?
    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா
    துயரம் நிலைதானா உலகம் இதுதானா?

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: டவுன் பஸ்
    பாடலாசிரியர்: கவி கா.மு.ஷெரீப்
    இசை : கே.வி.மகாதேவன்
    பாடியவர்கள்: எம். எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
    காணொளி: https://www.youtube.com/watch?v=Yn6uMEOg-sk

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share
  • படக்கவிதைப் போட்டி 16-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ஜபீஷுக்கும், இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எங்கள் நன்றி.

    monkey

    இரும்புக் குழாயைத் தன் இருப்பிடமாக்கி, அதன் முனையை இவ்வானரம் தன் வாயால் ஊதுவதேன்? குழாயின் வழியே வரும் நீரைப் பருகும் தாகமா? இல்லை… குழாயையே ஊதுகுழலாக்கி இசைமழை பொழியவேண்டும் எனும் மோகமா?

    பொதுவாகவே குரங்குகளின் செய்கைகள் பலவகையிலும் மனிதர்களை ஒத்திருப்பதை அறிவியல் அறிஞர்கள், இலக்கியம் படைத்த புலவர்கள் எனப் பலரும் உறுதி செய்துள்ளனர். இசைக்கருவிகளை இசைப்பதிலும் குரங்குகள் மனிதர்களை ஒத்திருக்கின்றன என்பதை ஏணிச்சேரி முடமோசியார் எனும் சங்கப் புலவரின் புறநானூற்றுப் பாடல் 128 நமக்குத் தெரிவிக்கின்றது.

    படத்திலுள்ள குரங்காரின் செய்கையைக் கண்ட நம் கவிஞர்களுக்கு எவ்வாறெல்லாம் கற்பனை ஊற்று உடைப்பெடுத்திருக்கின்றது என்று அறியும் ஆவல் என்னுள்ளும் பீறிட்டு எழுகின்றது.

    முதற்கண், நெஞ்சைத் தொடும் கவிதை வரிகளை படித்துவிடுவோமே!

    ***

    திரு. பிரகாஷ் சுகுமாரன் எனும் புதிய கவிஞர் நிறைய கவிதைகளை இவ்வாரப் போட்டிக்கு ஆர்வத்தோடு அனுப்பியிருக்கிறார். அவரின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!

    ’வானை அளந்தவனுக்கு புவிநீரைக் காக்கவேண்டியதன் அருமை புரியவில்லையே!’ எனும் தன் ஏக்கத்தைக் கவிதைவழியே கசியவிட்டிருக்கின்றார் அவர்.

    வானமேறி
    கிரகங்களை
    பிடிக்க
    தெரிந்தவனுக்கு
    தெரியவில்லை
    பூமி நீரின்
    அருமை!

    ***

    ”என்னைத் தேக்கி வைக்கும் வழிபற்றிச் சிந்தியாது மரங்களைத் தாக்கி அழித்த நீ, என்னிடம் நீரை எவ்வாறு எதிர்பார்க்கலாம்?” என்று ’நீர்’ மனிதனிடம் சினந்துபேசுவதைச் சுவையான கவிதையாக்கியிருக்கிறார் திரு. கனவு திறவோன்.

    என் கண்ணீரைக் கேட்கிறாய்
    எனக்காக நீ என்ன செய்தாய்?

    மலையில் பிறந்து
    நிலத்தில் ஊர்ந்து
    கடலில் விழுகிறேன்
    இடையில்
    மரமும் மனிதர்களும்
    பருகிய மிச்சமாய்!
    உன்னை நனைக்கும்
    என்னைப் பாதுகாக்க
    நீ மண்ணையாவது
    கூட்டினாயா?
    […]
    என்
    கண்ணீரை வரவழைக்க
    நீ இன்னும் யாரை
    சித்திரவதைச் செய்வாய்?
    மரத்தை வெட்டுகிறாய்
    மனிதத்தைப் புதைக்கிறாய்
    என் அழுகையின் ஆன்மா
    ஆக்ஸிஜனற்றக் காற்றுதான்
    வெப்பச் சலனமல்ல
    என்பது தெரியாமல்!

    உன் மாய்மால
    ஆட்டங்களில் மயங்கி
    அழுவேன் என்று நினைத்தாயோ?

    ***

    ’மண்திணி ஞாலத்தில், நீரின்றி நிலம் காய்ந்தால் மனிதம் மரிக்கும்; விலங்கினம் மாயும்; பயிரினம் காயும்’ எனும் தன் நியாயமான கவலையைக் கவினுறப் பதிவு செய்திருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

    உண்டி கொடுத்தோர்
    உயிர் கொடுத்தோர் ஆயினும்
    மண்டினி ஞாலத்தில் பருகப்
    புனித நீர் இன்றேல் 
    மனிதம் மரிக்கும் ! 
    விலங்கினம் மாயும் !
    பயிரினம் காயும் !
    உயிரினம் தேயும் !
    குழாயில் சொட்டிய நீருக்குத்
    தவிக்கும் வானரம்
    துளி நீரின்றி மயங்கி
    விழப் போகுது !…

    ***

    நீரின் முகங்களைத் தத்துவ விசாரணைக்கு உட்படுத்தி நம்மை சிந்திக்கவைக்கிறார் திரு. கவிஜி தன் கவிதையில்.

    நான் கழற்றிக்
    கொண்டேயிருக்கிறேன்
    கழன்று,
    உடைந்து கொண்டே
    இருந்த முகத்தில்
    கடைசியாக
    கழன்ற
    முகம்தான் எனது முகம்..
    சற்று யோசித்த
    பொருளில்
    தத்துவ முதல்வாதமென
    இப்போது
    மாட்டிக் கொண்டேயிருக்கிறேன்
    பொருத்தமில்லாத
    ஒன்றை…
    அதுவும் எனது
    முகம்தான் என்பதே
    உடைய எத்தனித்த எனது
    முந்தைய முகம் சொன்ன
    வாதம் மற்றும்
    பிரதிவாதமென நீரும்… பரிணாமமும்…

    ***

    குறிஞ்சி நிலத்தில் குதூகலமாய்த் தாவித் திரிந்த மந்தி, இன்று குடிக்க நீரின்றித் தவிக்கும் அவலத்தைப் பாடியிருக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    குறிஞ்சி நிலமும் பாலையாச்சோ 
    குடிக்கும் நீரும் வற்றிடுச்சோ 
    குன்ற மெங்கும் காய்ந்திடுச்சோ
    குட்டைக் குளமும் வறண்டிடுச்சோ
    குதித்துத் தாவ மரமுமில்லை 
    குடலின் பசிக்கு கனியுமில்லை 
    குழாயு மிருந்தும் பயனுமில்லை 
    குடிக்கத் தண்ணீர் வரவுமில்லை 
    குரங்கின் தாகம் தீராதோ 
    குடிநீர் கொஞ்சம் கிடைக்காதோ ….!!!

     ***

    குடிக்கத் தண்ணீரின்றிக் கண்ணீர் சிந்தும் இந்தக் குரங்கு, ”பாட்டில்(bottle) தண்ணீரையாவது என் கண்ணில் காட்டக்கூடாதா?” என்று மனிதர்களிடம் இறைஞ்சுவதை நம் இதயம்தொடும் பாடலாக்கியிருக்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    திருகி திருகி  பார்க்கிறேன்
    திடீரென
    இரண்டு சொட்டு  நீர்
    அது
    தண்ணீர்  அல்ல
    என்
    கண்ணீர்
    […]
    மூடாமலே
    கிடக்கும் குழாய்
    இப்போது
    திறந்தே கிடந்தாலும்
    காற்றுகூட
    வரவில்லை
    நாக்கு
    வரளுகிறது கண்கள் இருளுகிறது
    யாராவது
    அம்மா பாட்டில் தண்ணியாவது
    தாருங்களேன்
    குடியிருப்புகளில்
    உள்ள
    தண்ணீர்
    டாங்குகளில் மூடியை
    தூர
    வீசிவிட்டு
    உள்ளேகுதித்து குதுத்து
    கும்மாளமிட்டு நீரை
    சிந்தினேன்
    இன்று கண்ணீரை
    சிந்துகிறேன்
    என்னிலிருந்து
    பிறந்தவன் தானே
    மனிதன்
    அவனுக்கும் என் புத்திதானே?

     ***

    ’மரத்தை வெட்டி மழைவரத்தைக் கட்டியதாலன்றோ அப்பாவிக் குரங்கும் நீரின்றி வாடி நிற்கிறது’ என்று விளம்புகிறார் திரு. செண்பக ஜெகதீசன். உண்மைதானே?

    மரத்தை யெல்லாம் வெட்டிவிட்டார்
    மழையின் வரவைக் கட்டிவிட்டார்,
    வரவாய் ஆற்றில் நீருமில்லை
    வறண்டா லங்கே மணலுமில்லை,
    தரையில் நீரையும் மாசாக்கினர்
    தண்ணீர் இருப்பதைக் காசாக்கினர்,
    குரங்கு குடிக்கவும் நீரிலையே
    குழாயதும் ஏங்குது பெருமூச்சிலே…!

    ***

    குரங்கின் இயல்புகளை வேடிக்கையாய் விவரிக்கும் திரு. எஸ். பழனிச்சாமி, தண்ணீர்ப் பஞ்சம் தீர, புவியெங்கும் பசுமை செழிக்கச் செய்வதே முறை என்கிறார்.

    வலது பக்க உடலைக்கூட
    வலது கையால் சொறியும்
    வனத்துக் குள்ளே மரத்திலேறி
    தாவித் தாவித் திரியும்
    […]
    குதித்து
    வந்து வாழைப்பழத்தை
    பறித்துக் கொண்டு விரையும்
    பல்லைக் காட்டி சீறும்வாயும்
    காதை நோக்கி விரியும் 
    காசுக்காக ஆடச் சொல்வான்
    மனிதன் என்று அறியும்
    […]
    வழியும் துளியாம் குடிநீரை
    வாயை வைத்து உறியும்
    நிலமை வந்து சேருமென்று
    நமக்கும் கூடத் தெரியும்
    […]
    குரங்கு தரும் எச்சரிக்கை
    புரிந்தால் வாழ்வு சிறக்கும்
    பூமியெங்கும் பசுமை யானால்
    புதிய வாழ்வு பிறக்கும்

    ***

    குழாயின் உள்ளிருந்து வரும் ‘உஸ்’ சத்தம், ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா? வனங்கள் அழிந்ததால் இயற்கைவிடும் எரிச்சல் மூச்சா? என்று வினாக்களை அடுக்கியிருக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    நீர்த்தேடி நித்தமும்
    நீண்ட குழாயின்
    குமிழ் திறந்து பார்க்கிறேன்
    உஸ்ஸென்று சத்தம் மட்டுமே
    உள்ளிருந்து வருவது ஏன்

    உழைத்து வியர்த்தும்
    உயரம் அடையாத
    உழைப்பாளியின்
    உஷ்ண மூச்சா
    […]
    ஆறு
    குளம்  ஏரியென
    அத்தனையையும் கட்டிடங்களாக்கி
    வனங்களோடு வளங்களையும்
    இரக்கமின்றி அழித்ததால்
    இயற்கை விடும் எரிச்சல் மூச்சா

    […]
    என்னவென்று நீங்களே
    உடன் வந்து பாருங்கள்
    அப்படியே
    பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால்
    எனக்கொன்று கொடுங்கள்
    நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

    ***

    அறிவிலா மனிதன் இயற்கையை அழித்தான்; நீராதாரத்தை ஒழித்தான்; ’ஆகவே இத்தரணியை விட்டே ஓடிப்போவதே உனக்கு நல்லது!’ என்று குரங்கிடம் குமுறுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    உருகிய பனிமலை ஓடி மறைய 
    ==
    உலகமே பாலை வனமாய் நிறைய 
    பருகிட நீர்த்துளி தேடி அலைந்து 
    ==
    பார்வையில் பட்டதோர் குழாயி னுள்ளே 
    குறுகிய அறிவை கொண்டேத் தேடும் 
    ==
    குட்டிக் குரங்கே வாயை எடு நீ  
    அறிவிலா மனிதன் செய்த தவறால் 
    ==
    அழிந்த காட்டின் கல்லறை அதுவே

    கட்டிடம் கட்டும் அனுமதி பெற்றுக் 
    ==
    காட்டிடம் காட்டும் அவமதிப் பிற்கு 
    வட்டியும் முதலுமாய் வாங்கியே கட்டும் 
    ==
    வாட்டமும் வருவதை உணரா மனிதன் 
    திட்டியும் திருந்தா திருக்கும் நிலைக்கு 
    ==
    திட்டமும் வகுத்து இயற்கை மூலம் 
    பட்டயம் போட்டு பகிர்ந்து அளிக்கும் 
    ==
    பரிசே வற்றிடும் நீரால் மரணம்.
    […]
    மனிதன் போக்கில் மாற்றம் தோன்றி  
    ==
    மண்ணில் மரங்கள் காடாய் வளர்ந்து
    புனித பூமி உதிக்கும் போது 
    ==
    பூக்கள் சொட்டும் தேனில் குளித்து 
    இனிக்கும் இன்பம் காண வேண்டி 
    ==
    இன்னொரு பிறவி எடுத்து நீயும் 
    தனித்து வமாகவே தாகம் தீரு 
    ==
    தரணியை விட்டு அதுவரை ஓடு!

    ***

    வாரமொருமுறை மட்டுமே சிறிதுநேரம் நீர்தரும் விந்தை அருவிகண்டு சிந்தைநொந்த குரங்கின் நிலை கூறுகின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    தித்திக்கும் நீர் பொங்க
    குதித்தாட்டம்
    போட்ட ஆறும்|
    வற்றித்
    தான் போனது !
    தொங்கித்
    தாவிய
    ஆற்றங்கரை
    மரமும்
    வெட்டுண்டு
    தான் போனது !
    வசிப்பிடம்
    பறிபோக
    வாழ்வாதாரம்
    தேடி
    ஊரினுள்
    படையெடுத்தேன்
    […]
    அருவி
    கண்டு பழகிய
    எனக்கு –
    இக்குழாயும்
    அருவியெனவே
    தோன்றவே
    கொட்டும்
    அருவியில்
    நீரெடுக்க
    ஏனிந்த வனிதையருள்
    இத்தனை
    போராட்டமென்றே
    எண்ணினேன் !
    […]
    மனதினுள்
    பதிலறியா
    கேள்விகள்
    தலைதூக்க
    சுற்றும்
    முற்றும் பார்க்கிறேன் –
    ஒரு
    பெண்மணி
    சொல்லிச்
    செல்கிறார் –
    அதற்குள் நிறுத்தி விட்டார்களே !
    அதற்குள்ளாகவா
    மூன்று மணி
    நேரமாகி
    விட்டது ?”

    அந்தோ !
    இப்போதல்லவா
    புரிகிறது –
    இந்த
    அருவியில் வாரமொருமுறை
    அதுவும்
    மூன்று மணி நேரமே
    நீர்வரத்து
    என்று !

    ***

    ’மரங்களை வெட்டிக் கட்டடங்கள் கட்டி மழைவளத்தையும் உயிர்க்குலத்தையும் சேர்த்தே அழிக்கிறதே மானுடத்தின் மடமை!’ என்று வேதனையுறுகின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

    …கட்டிடம் கட்டிட பெயர்த்த மரங்கள்
    விட்டுச் சென்றிட்ட நீள் பெரு வெளிகள்
    கொட்டும் வானத்து தூவான மழையை
    மீட்டுக் கொடுக்காமலே கட்டிடங்கள்!

    அரக்கர்கள் போல பூமியெங்கும்
    நிரைக்கு நின்றன கட்டிடங்கள்
    விரைந்து விலைக்கு வாங்கிய
    புரையோடிய புது மாந்தர் மடமை

    மழை அவை தாரதென்றறியார்
    விழைந்து தறித்த மரங்கள் மொண்டு
    குழைகள் தேக்கித் தரும் வான் நீரை
    கோழைகள் தொலைத்தனர் பூமியில்
    […]
    ஊகமான மந்திக் குரங்கார் இங்கு
    வேகமாக நீர்க் குழாயாயைத் திருப்பி
    சொட்டும்
    சிறிய நீர்த் திவலைகள்
    எட்டி நாக்கால் ஏக்கமாய் நக்கிறார்- மனிதரோ
    வெட்டிய மரங்களின் வேர்கள் பதிய
    விட்டு வைக்கவேயில்லை சிறுதுளி நீரையும்…

    ***

    ”நீர்நிலைகளைத் துடைத்தெடுத்த மனிதன், விரிசல் விழுந்த பூமியின் கிழிசலைத் தைத்துக்கொண்டிருக்கட்டும்! நீ எங்காவது ஓடிபோய் பிழைத்துக்கொள்!” என்று மந்திக்கு புத்திசொல்கிறார் திருமிகு. கார்த்திகா.

    …நீர்நிலைகளை துடைத்தெடுத்து
    அதன் கரைகளை சொந்தம் கொண்டாடியோர்
    விரிசல் கண்ட புவிக்கு கிழிசல்
    ஆடை தைத்துக் கொண்டிருப்பரோ?

    தகிக்கும் வெப்பச் சூட்டில்
    சொட்டு நீரையும்
    அனல் உண்டுவிட
    இரும்புக் குழாய் பற்றியிருக்கும்
    உன் கால்களை பலமாக்கிக் கொள்!
    […]
    நீரின் வறட்சியும்
    விலங்கினத்தின் அழிவும்
    அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

    தாகம் கொண்டால்
    செவ்வாயில் தீர்த்துக் கொள்வான் மனிதன்,
    நர மாமிசம் நல்வழிபடுத்தும்”என்று
    சொன்னாலும் அது மிகையாகாது..
    எங்காவது
    தப்பி ஓடிவிடு மந்தியே..
    உன் இனத்தின் வேர்கள்
    தீக்கிரையாக்கப்படுவதற்குள்..

    ***

    (மழை)மேக அண்ணனோ வானிலே மறைந்துவிட்டார்; மீன் மாமி குடியிருந்த குளமும் ஆடுகளமாகிவிட்டது. எங்கள் இனம் பிழைக்க வழிதான் என்ன? என்று மடல் வரைந்து விடை தேடும் குரங்கை நமக்கு அறிமுகம் செய்கிறார் திருமிகு. லட்சுமி.

    அடுக்குமாடி வரவுகளினால்
    தொலைந்த மரங்களைத் தேடி
    மேக அண்ணா மறைந்துவிட்டார்!
    மீன் மாமி குடியிருந்த குளம்கூட
    மட்டைப் பந்துக் களமாகி
    வெகுநாளாகிவிட்டது!
    […]
    ஆறிலிருந்து ஒன்றுதான் குறைவெனக்கு!
    ஆனால் ஆறறிவுபோல செய்கை
    அளந்து தந்தது யாரோ!
    சஞ்சீவிநீர் அருந்த
    நான் எங்கே செல்வது? 

    ***

    சிந்திக்கவேண்டிய நல்ல கருத்துக்களைக் கவிதைகளாய் அள்ளித் தந்திருக்கும் கவிஞர்குழாத்திற்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைப் பார்த்துவிட்டு வருவோம்!

    ’நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யில் புலவரின் வாய்மொழி. காடுகளில் கனிபறித்து உண்டு காட்டாற்றிலே கட்டுப்பாடின்றி ஓடித்திரிந்த வானரமொன்று, வனங்கள் அழிந்ததனால் மனிதன் படைத்த காங்கிரீட் காட்டிலுள்ள ஒற்றைக்கம்பியில் சிக்கி உயிர்வாழ நீர்தேடி ஊசலாடும் கொடுமையைக் கவிநயத்துடன் நம் கண்முன் நிறுத்துகின்றது ஓர் கவிதை…

    அடர்வனக் காடுகளின் பசுமைபோர்த்த
    வெளியெங்கும் கவிந்த இருள்கிழித்து
    கிளைதுளைத்துப் பாயும் சூரிய விசிறிக்கீற்றில்
    கொடிபற்றி கிளைதாவி குதூகலித்த
    நாட்கள்…
    ஈரமண் வாசத்தில் வண்டுகளின் ரீங்காரத்தில்
    கொழுத்த மரக்கிளை தனிலே
    பழுத்த பலகனிச் சுவைதேடித் திரிந்த பொழுதுகள்…
    முப்பொழுதும் பசுமையோடு காட்டாற்றுக் கரைதிரிந்து
    கூட்டுக் குடும்பத்திலே குறையற வாழ்ந்தே
    கூடிக் கழித்த சலிக்காத நினைவுகள்…
    பொய்யாய் பழங்கதையாய் போனதோ இமைப்பொழுதில்
    பசுமைதொலைத்த காங்ரீட் காடுகளில்
    கதறியழும் தனிமை சூழ
    பழுத்தகனி கிளைபற்றிய கரங்களில்
    வாழ்வா சாவா போராட்டம் நிகழ்த்தி
    ஒற்றைக் கம்பியில் ஊசலாடும் உயிர்வாழ்க்கை…
    வாழத்தான் யாசிக்கிறேன்
    பற்றுக்கோள் ஏதுமின்றி யோசிக்கிறேன்…
    எந்திரங்களின் பூமியில்
    உயிர்வாழ்க்கை அவ்வளவு வசப்படவில்லை!

    ’பொய்யாய்ப் பழங்கதையாய்’ப் போன வானரத்தின் வசந்தகாலத்தையும் இப்போதைய கசந்த காலத்தையும் எழிலுற இயம்பியிருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சாசலின் பிரிசில்டாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    அதுபோல், ’உமிழ்நீரை ஊற்றியாவது மரக்கன்று வளர்ப்போம்; எழுதுகோலை முட்டுக்கொடுத்தாவது மரித்துப் போகாது மரங்களை நிமிர்த்துவோம்!’ என்று ஆவேசக் குரலெழுப்பும் திரு. இரா. சந்தோஷ் குமாரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய் அறிவிக்கின்றேன்.

    …மேகத்தாயின் கருவறையிலும்
    ஈரக்கரு சிதைக்கப்பட்டதுவாம்.
    என்ன செய்யப் போகிறீர்கள் ?
    மரங்களை கொன்ற பாவத்திற்கு
    தலைமூழ்கி பரிகாரம் தேட
    கூவத்திலும் புனிதச்சாக்கடை ஓடாதே?
    என்ன செய்யப் போகிறீர்கள்?
    நாளை தலைமுறைக்கு
    ஒன்று செய்வீர்களா?
    உங்கள் உமிழ்நீரை ஊற்றியவாது
    ஒரு மரக்கன்றையேனும் வளர்த்துவிடுவீர்களா? 

    ஓ ! உலக கவிஞர்களே !
    கொஞ்சம் அவசரமாய்
    உங்கள் பேனாவின் முனையை
    மரித்துப்போகும் மரங்களுக்கு
    முட்டுக்கொடுப்பீர்களா ?
    உங்கள் பேனாவின் மையினால்
    மரத்துப்போன மானிடர்களின்
    முகத்திலாவது
    விழிப்புணர்ச்சியினை தெளிப்பீர்களா?
    இதோ…!
    உங்கள் மீதுதான் குற்றஞ்சாட்டி
    ஒரு மரண வாக்குமூலம் பதிவிட்டவாறே
    உலகின் கடைசி நீர்த்துளியினை
    உறிந்து கொண்டிருக்கிறேன்.

    ***

    போட்டியில் கலந்துகொண்ட அனைத்துக் கவிஞர்கட்கும் என் நன்றியும் பாராட்டும்!

     

    Share
  • பூகோளப் பருவ மாறுதலின் எதிர்காலக் கணிப்பீடுகளை விளக்கமாக இப்போது நாசா வெளியிடுகிறது

    NASA Projections

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://climate.nasa.gov/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Mmh9mbVhh08

    http://climate.nasa.gov/vital-signs/carbon-dioxide/

    http://climate.nasa.gov/faq/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=feVlzneZeew

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=7OgQBlJimS8

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=MmoYStB-Rzw

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=SY6XSsF4CCo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-nI8MByIL8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=B4Q271UaNPo

    +++++++

    Picture -10

    நாசாவின் நெக்ஸ்  திட்டம்  காலநிலைப் பருவ ஆராய்ச்சி, தீர்வு முடிவுகள் பல்வேறு சமூகப் பயன்பாடுகளுக்கு அடிப்படை தகவல் தொகுப்புக் கணிப்பீடுகளாய் [Dataset Simulations] உதவி செய்யும்.  விஞ்ஞான கூட்டுழைப்பு, கூட்டறிவுப் பகிர்வு, ஆய்வு, விருத்தி ஆகியவற்றின்   நெக்ஸ் பீடத்தின் மீது [NEX NASA Earth Exchange] சமூக அடிப்படைக் கணிப்பீடுகள் எழுப்ப, சமூகத் தொடர்புள்ள அரிய சாதனங்களைத் தயாரித்து வருகிறது.

    ராமகிருஷ்ண நெமானி  [NEX Project Scientist, Ames]

    விண்வெளியிலிருந்து  நமது பூகோளத்தை அறிந்து கொள்ளும் வணிகத் துறை ஈடுபாட்டில், எதிர்காலப் பாதுகாப்புத் தேவைக்குப் புதிய சாதனங்கள் தயாரிக்கிறது நாசா.  இத்தகைய உலக ரீதியான தகவல் கணிப்பீடுகள் மூலம், பூகோளச் சூடேற்றத்தை எதிர்கொள்ள, மக்கள் புதிய கருவிகளைப் பயன்படுத்த ஏதுவாகிறது.

    எல்லென் ஸ்டோஃபன் [நாசா பிரதம விஞ்ஞானி]

    NASA Climate Change Release

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xcVwLrAavyAhttp://science.howstuffworks.com/environmental/global-warming-videos-playlist.htm

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ-urKdAsvs

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GyZDf3kMvwo

    http://video.nationalgeographic.com/video/101-videos/global-warming-101

    http://video.nationalgeographic.com/video/greenhouse-gases

    http://study.com/academy/lesson/greenhouse-gases-and-the-enhanced-greenhouse-effect.html

    http://study.com/academy/lesson/fossil-fuels-greenhouse-gases-and-global-warming.html

    http://study.com/academy/lesson/global-warming-atmospheric-causes-and-effect-on-climate.html

    +++++++++++++

    Picture -9

    சூட்டு யுகம்  வருகுது

    சூடு காலம் வருகுது !
    நமக்குக்
    கேடு காலம் வருகுது !
    நாடு, நகரம், வீடு, மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    புயல் எழுப்ப வருகுது !
    பூத மழை பொழியப் போகுது !
    நீரை, நிலத்தை, குளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    முடக்கிப் போட வருகுது !
    கடல் வெப்பம்,
    கடல்நீர் மட்டம் ஏறி
    கரை நகர் மூழ்க்கப் போகுது !
    மெல்ல மெல்ல ஏறி
    உஷ்ணம்,
    எல்லை மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    வீட்டை, நாட்டைத் தாக்குது !
    உன்னை, என்னை,
    உலகின் கண்ணை ஒன்றாய்ப்
    பிதுக்கப் போகுது !

    +++++++++++++

    NASA CO2 LEVELS

    பூகோளப் பருவ மாறுதல் கணிப்பீடு பற்றி  நாசாவின் புதிய வெளியீடு

    பூகோளத்தில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூழ்வெளியில் பேரளவு சேர்ந்து, எப்படி உஷ்ண ஏற்ற இறக்கம், மழைப்பொழிவு நிகழ்வு முறைகள் 2100 ஆண்டுவரை மாறப் போகின்றன என்று நாசா ஒரு புதுத் தகவலை ஜூன் 9, 2015 இல் வெளியிட்டுள்ளது.  புவி மாந்தருக்குக் கிடைத்துள்ள இந்த தகவல் தொகுப்பு, 21 பருவக் காலநிலைகள் தூண்டி மிகுந்து சேமிப்பாகும் கரியமில வாயு அளவைக் கணினி மூலம் போலிக் கணிப்பீடுகள் [Computer Simulation Projections] செய்து எதிர்பார்க்கும் பல்வேறு எதிர்காலப் பாதிப்புக் காட்சிகளை விளக்கியுள்ளது.

    உலகில் தனிப்பட ஒரு நகருக்குக் கால அளவு அடிப்படையில் துல்லியமாகத் தெரிவித்து, அந்நகர்த் திட்ட விஞ்ஞானிகள் [Climate Risk Assessments] நீர்வளப் பஞ்சம், வறட்சி, பேய்மழை வெள்ள அடிப்பு, வேளாண்மை விளைச்சல் இழப்பு, வெப்பப் புயல் அடிப்பு போன்ற உள்நாட்டுச் சூழ்வெளிப் பாதுகாப்பு பாதிப்புகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    இப்புதிய கணிப்பீடுத் தொகுப்புகள் [Dataset : NEX – NASA Earth Exchange] நாசாவின் புதிய முயற்சியில் கிடைத்த ஆராய்ச்சி விளைவுகள்.  இவை காலிஃபோர்னியா ஆமெஸ் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தமது மேம்பட்ட அசுரக் கணினியில்  [NASA Advanced Supercomputing Center, Ames, Simulations] வடித்த போலிக் கணிப்பீடுகள்.  இவ்விளைவுகள் உலக நாட்டு மெய்யான கணக்கீடுகளோடு இணைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நாசா 1950 ஆண்டுமுதல் 2100 ஆண்டுவரை தயாரித்த இப்புதிய காலநிலைக் கணிப்பீடுகள், உலக நாடுகளுக்கு 15 மைல் [25 கி.மீ.] தூரத் துல்லிமத்தில் பாதிப்புகளை எடுத்துக் காட்டி இருக்கிறது.  அவற்றில் உலக அரங்குகளின் உஷ்ணம், மழைப் பொழிவுகளின் ஏற்றம், இறக்கம், உச்ச நீச்ச, சராசரி அளவுகள் கிடைக்கின்றன.

    Picture -11

    2013 ஆண்டில் அமெரிக்கா வெளியாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2  வாயுவின் கொள்ளளவு

    சமீபத்திய அறிவிப்பின்படி தொழில்துறைகள் மிகுந்த அமெரிக்க நாடு 2013 ஆண்டு வெளியேற்றிய கிரீன்ஹவுஸ் வாயுக்களில் CO2 வாயுவின் நிறை மட்டும் 6,673 மில்லியன் டன் என்று தெரிகிறது.  பெரும்பான்மை வாயுக்கள் உயிரினத் தொடர் வசிப்புக்குப் பூமியில் சூரிய வெப்பத்தை உள்ளடக்கி உதவினாலும்,  அளவு அதிகமானால், வெப்ப அடைப்பு மிகையாகி, உயிரின அழிவுக்கும் வழி வகுக்குகிறது.   அப்படி அடைபடும் வாயுக்களில் பாதகம் மிகையாகச் செய்பவை மூன்றுவித வாயுக்கள் : கார்பன்டையாக்சைடு [CO2], மீதேன் [CH4], நைட்டிரஸ் ஆக்சைடு. [N2O]. இன்றைய சூழ்வெளி வாயுக் கோளத்தில் தொழிற்துறை யுகத்துக்கு [1840] முன்பு இருந்ததை விட, தற்போது 32% மிகையாக CO2 வாயு பரவி யுள்ளது.  அரை மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இருந்ததை விட உச்ச நிலையில் உள்ளன CO2, CH4 வாயுக்கள் என்று அறியப்படுகிறது. கியோடோ ஒப்பந்த வரையறைக் [Kyoto Protocol] குறிக்கோளின்படி, ஒவ்வொரு நாடும் 2012 ஆண்டுக்குள், ஆறுவித கிரீன்ஹவுஸ் வாயுக்களின் [ CO2, CH4, N2O, Hydrofluorocarbons, Perfluorocarbons, Sulphur Hexafluoride], ஓரளவு வெளி விடுவிப்பைக் குறைக்க வேண்டும்.  அதைச் சில நாடுகள் ஏற்றன, சில நாடுகள் புறக்கணித்தன. மறுபடியும் 2015 இல் புதிய உலக வரையறைகள் மீண்டும் 2020 ஆண்டு எல்லைக்குள் விதிக்கப்படும். இவற்றில் N2O வாயு மட்டும்  CO2 விட 300 மடங்கு சூழ்வெளியைச் சூடாக்கும் வல்லமை வாய்ப்புள்ளது.

    Picture -6

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    ajay

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலைப் பேரவை [World Meteorological Organization (WMO)]

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Picture -7

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Picture -12

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது.

    2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center]

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காது கொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Picture -8

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன் ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சி யால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Pollution groups

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத் தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடர் இயக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

     Al Gore Book

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Picture -1

    Picture -2

    Picture -3Picture -4Picture -5(தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.  http://www.extension.iastate.edu/agdm/articles/others/TakMar08.html  [March 2008]

    6.(a) http://news.yahoo.com/nasa-data-blow-gaping-hold-global-warming-alarmism-192334971.html  [July 27, 2011]

    7. http://www.epa.gov/climatechange/ghgemissions/gases.html  [2013]

    8. http://www.epa.gov/climatechange/science/index.html  [March 18 2014]

    9.  http://www.epa.gov/climatechange/science/causes.html  [March 18, 2014]

    10. http://www.epa.gov/climatechange/science/indicators/ghg/ghg-concentrations.html [July 2, 2014]

    11. http://www.epa.gov/climatechange/wycd/  [April 13, 2015]

    12.  http://www.epa.gov/climatechange/index.html  [April 15, 2015]

    13.  http://www.davidsuzuki.org/issues/climate-change/science/climate-change-basics/greenhouse-gases/  [2014]

    14.  https://saferenvironment.wordpress.com/2008/10/31/global-warming-greenhouse-gases-and-their-harmful-effects-%E2%80%93-urgent-reduction-of-these-are-essential-to-save-our-environment/

    15. http://www.livescience.com/37821-greenhouse-gases.html  [February 10, 2015]

    16.  http://en.wikipedia.org/wiki/Kyoto_Protocol   [April 18, 2015]

    17.  http://www.ecology.com/2010/04/27/managing-climate-change-five-innovative-solutions-for-nyc/  [April 27, 2010]

    18. http://www.spacedaily.com/reports/NASA_Releases_Detailed_Global_Climate_Change_Projections_999.html   [June 10, 2015]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  June 14, 2015

    Attachments area
    Preview YouTube video NASA Climate Predictions Show Serious Threat To Humanity

    NASA Climate Predictions Show Serious Threat To Humanity

    Preview YouTube video NASA | Ask a Climate Scientist: Climate Change and Humans

    NASA | Ask a Climate Scientist: Climate Change and Humans

    Preview YouTube video NASA | Ask a Climate Scientist: CO2 and Temperature

    NASA | Ask a Climate Scientist: CO2 and Temperature

    Preview YouTube video NASA | Ask a Climate Scientist: Global Warming Pause?

    NASA | Ask a Climate Scientist: Global Warming Pause?

    Preview YouTube video NASA | Ask A Climate Scientist – Extreme Weather and Global Warming

    NASA | Ask A Climate Scientist – Extreme Weather and Global Warming

    Preview YouTube video NASA | IPCC Projections of Temperature and Precipitation in the 21st Century

    NASA | IPCC Projections of Temperature and Precipitation in the 21st Century

    Preview YouTube video The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    The Scientific Case for Urgent Action to Limit Climate Change

    Preview YouTube video Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Discovery Channel – Global Warming, What You Need To Know, with Tom Brokaw

    Preview YouTube video Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)

    Why Greenhouse Gases Cause Global Warming: Carl Sagan on the Environment (1990)

    Preview YouTube video Global warming is caused by ozone depletion not greenhouse gases

    Global warming is caused by ozone depletion not greenhouse gases
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ‘தயிர்வெண்ணை உண்டு, தளதள வென்று,
    மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால
    தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
    மோகமா மோட்சமா சொல்”….

    ”பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
    கொல்லவந்த, கண்ணனைக் கண்டதும், -இல்லம்
    புகுந்து, முலைதிணித்துப் பார்த்திட, வாயில்
    முகுந்தனுக்கு முப்பத்தி மூணு”(பற்கள்)….கிரேசி மோகன்….
    ”பஞ்சா யுதன்கையில் பஞ்சாய்ப் பறக்குது,
    பஞ்சபாண்டு பிள்ளைகள் பட்டராய், -பிஞ்சான
    போதே பழுத்தவன், பூபாரம் போக்குதற்கு,
    தோதான வெண்ணையஞ்சு தேர்வு’’….கிரேசி மோகன்….

     

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

     

    Asiva

    வெள்ளிப் பனிஉருவில் வெள்ளீசா !

    விரைந்து உருகிவர கங்கேசா !

    அள்ளி வரமளிக்கும் அருளீசா !

    அமரர் தினம்போற்றும் யோகீசா !

    புள்ளி மான்பிடித்த நடராஜா !

    பொதுவாம் சுடலைக்கு நீராஜா !

    வள்ளி மாமனெனும் கர்வேசா !

    வளரும் அறநெறியே சர்வேசா !

     

    (அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, காய்,காய் )
    (14.06.2015)

    Share
  • உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் போன்று பல்வேறு தினங்களைக் கொண்டாடி மறந்து விடும் விசயங்களில் இதுவும் ஒன்றுதான் என்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் மறக்கக் கூடிய விசயமன்று. தொழிலாளர் தினம் இன்றளவிலும் கம்யூனிச சிந்தாந்தத்தைப் போற்றுபவர்களால் மட்டும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் ‘லேபர்ஸ் டே’ என்றும், ஆசியக் கண்டத்திலும் இந்தியாவிலும், மே தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த மே தினமும் கொண்டாட்டத்தோடு முடிந்து உள்ளது. எந்த அரசுகளும் அரசியல் கட்சிகளும், இந்த ஒரு நாளில்கூட தொழிலாளர்களுடைய நலவாழ்வைப் பற்றி சிந்திப்பதாகத் தெரியவில்லை. இது இப்படியிருக்க நேற்று, வெள்ளிக்கிழமை 12- 06 – 2015, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் கையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றி பெரியவர்கள் எழுதிக்கொடுத்த பதாகைகளுடன் ஊர்வலம் போகவிட்டு அதோடு அந்த தினத்தை முடித்துவிட்டோம். நேற்று தமிழக அரசு மற்றும் நடுவண் அரசிடமிருந்தோ இது பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.

    மத்திய ஒன்றிய பகுதியான பாண்டிச்சேரியில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற பாராட்டிற்குரிய செய்தி ஆறுதலிக்கிறது. உலகளவில் 21.5 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளதும், இதில் 11 கோடி குழந்தைகள் பாதுகாப்பற்ற சிரமமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகக் கருதப்படுகிறது. அதோடு 2016ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா 12 வது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்கம், தீப்பெட்டித் தொழிற்சாலை. செங்கல் சூளை, துணிக்கடை, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறைந்த ஊதியத்தில், வார விடுமுறையின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் குழந்தைகள் வேலை செய்கின்றனர்.

    வறுமை, பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இல்லாத சில காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் வேலைக்குச் செல்ல வேண்டிய வேதனையான நிலைக்கு ஆளாகிறார்கள். பல நேரங்களில் தாங்கள் செய்வது குற்றம் என்று அறியாமலே போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று இந்தியாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் ஐந்தில் ஒரு பகுதியினர் உத்திரப் பிரதேசத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மிகவும் பின் தங்கிய மாநிலமான பீகாரைவிட குழந்தை தொழிலாளர்களுடைய எண்ணிக்கை உத்திரப் பிரதேசத்தில் அதிகமாக இருப்பது வெட்கப்படவேண்டிய விசயம். அனைவருக்கும் கல்வி, குறைவற்ற உணவு என்ற நிலையை என்று அடைகிறோமோ அன்றுதான், நம் நாடு வல்லரசு ஆவதற்கான பயணத்தில் நாம் முதற்படி வைத்தவர்களாக ஆகிறோம். இதைவிடுத்து வெற்று கோசங்களால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியாது. கல்வித் துறையிலும், தொழில் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மிகுந்த மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது நடுவண் அரசிற்கு காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த நேரத்தில், ‘கிரை’ என்ற சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (Child Rights and You)அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. ஆண்டுதோறும் 2.2 என்ற விகிதத்திலேயே குழந்தைத்தொழிலாளர் முறை குறைந்து வருவதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகவும் இந்த அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது ஆண்டு தோறும் 2.2 என்ற விகிதத்தில் மட்டுமே குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy
    ”மீனாமை ஏனமாய், தூணாளும் சிங்கமாய்,
    வானேறும் வாமன விக்ரமாய், -மூணுவித
    ராமனாய்க்,கண்ணனாய், ராட்ஷசரைக் கொன்றபரந்
    தாமனவன் பத்தைப் பணி’’….கிரேசி மோகன்….

    ஏனம் -வராகம்….

    டோங்க்ரே மகராஜ் பாகவதத்திலிருந்து….
    —————————————————-

    அங்கை படுக்கையாய் அதரம் தலையணையாய்
    செங்கமலக் கண்ணிமைகள் சாமரமாய் -தொங்குமெழில்
    புல்லாக்கு மேல்குடையாய், புல்லாங் குழல்,கேசவ்,
    இல்லாங் குழலாய் இரு’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    “அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
    சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
    கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
    நம்பாள் நரநார ணன்”….கிரேசி மோகன்….

    ”வலம்புரி சங்கேந்தி, வாத்ஸல் யமாக,
    களம்புகா பார்த்தனுக்கு கீதை -நலம்புரி,
    அம்பாள் சகோதரர் அல்லியூர் ஆலயத்தில்,
    கும்பா பிஷேகக் களிப்பு”…..கிரேசி மோகன்….
    ———————————————————————————————————-

    ”மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு”….

    பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வாழும் ”அழகிய சிங்கர்”….
    ——————————————————————————————————–

    ”பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே
    பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே
    அழகிய சிங்கா அருள்”….

    திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
    ———————————————————————-
    ”வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
    பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
    ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
    சாதகனென் சிந்தையில் சேர்…
    (பொது)
    ——————
    ”என்னத்தைக் கண்டேன்நான் உன்பித்தம் கொண்டதால்
    கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே -உன்னொத்த
    தெய்வமிங்(கு) இல்லையென்ற தற்பெருமை தேவையா
    தொய்வுறுமுன் தற்பரமே தோன்று”….கிரேசி மோகன்….

     

     

    Share
  • வளவன் கனவு – 2

    புதிய வானம், புதிய பூமி

    சு.கோதண்டராமன்

    நர்மதாயை நமப் ப்ராத: நர்மதாயை நமோநிசி

    நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹி மாம் விஷஸர்ப்பத:

    -வடமர்களின்  சந்தியாவந்தன மந்திரம்

    (நர்மதையே உன்னைப் பகலும் இரவும் வணங்குகிறேன். விஷப்பாம்புகளிடமிருந்து என்னைக் காப்பாயாக.)

    vallavan kanavu

    ஒவ்வொரு படகிலும் இருந்த மக்கள் நர்மதை நதியின் இரு கரையிலும் உள்ள பல வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்.  அவர்கள் கற்ற வேதமும், சோழ மன்னனின் அழைப்பும் அவர்களை இன்று இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

    எல்லோரும் வெளிப்பார்வைக்கு உற்சாகமாகத் தோன்றினாலும் அனைவர் மனதிலும் உள்ளூர ஒரு அச்சம் இருந்து வந்தது. ‘புதிய தேசத்துக்குப் போகிறோம். அது எப்படி இருக்குமோ, தெரியவில்லை. அங்கு மலையே இல்லையாம், கங்கைக்கரை போல சமதரையாக இருக்குமாம். அங்குள்ள தட்ப வெப்பம் வித்தியாசமாக இருக்குமாம். குளிரும் குறைவு, வெய்யிலும் குறைவு என்கிறார்கள். மழைக்காலத்தில் மழை பெய்யாமல் சரத் காலத்தில் பெய்யுமாம். காவிரியில் சில மாதங்கள் தான் தண்ணீர் ஓடுமாம். தண்ணீருக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்குமோ’ என்றெல்லாம் பல வகையான சந்தேகங்கள்.

    ‘எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளலாம். மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு நம்மை அழைக்க வந்தவர்களைப் பார்த்தால் நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது. சோழ தேசத்தில் எல்லோரும் அப்படியே இருப்பார்களா? சரி, பசுபதிநாதனும் நர்மதை நதியும் நமக்கு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் துணை இருப்பார்கள். அவர்களிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டுக் கவலையற்று இருப்போம்’ என்று சமாதானம் செய்து கொண்டார்கள்.

    ‘பிறந்த மண், உறவினர்கள், பழகிய மனிதர்கள் இவர்களைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது? ஒரு தேசத்தின் நன்மைக்காக ஒரு ஊரையே பலியிடலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இங்கு நாம் சோழ தேசத்தின் நன்மைக்காகச் செல்கிறோம். பிறந்த மண், உறவினர் என்ற அற்ப ஆசைகளைப் பலியிடத் தான் வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டார்கள்.

    ‘நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நமக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் நம் சௌக்கியத்தை மட்டும் பார்த்தால் போதுமா? லோகக்ஷேமம் தானே பிராமணனின் தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது? சோழ தேசத்தைப் புனருத்தாரணம் செய்ய நம் உதவி தேவை என்று சொல்லும் போது என் சௌக்கியம் தான் பெரிது என்று சொல்ல முடியுமா?

    ‘சோழதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி அவந்தி அரசர் பறையறைந்து அறிவிக்கும்போது பல நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தார். வேதம் கற்காதவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுள்ளவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் வரக்கூடாது என்று விதித்திருந்தார்கள். ஒரு தாய்க்கு ஒரு மகனாக இருப்பவர்களும், மூத்த மகனாக இருப்பவர்களும் பெற்றோரை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்றும் கூறினார்கள். இதில் ஒரு சிலர்தான் தேற முடியும். அவர்களும் தன் சொந்த சௌக்கியத்தைக் காரணம் காட்டி வரவில்லை என்றால் அது தர்மமாகாது.

    ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வேலி நிலம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேலி என்றால் எவ்வளவு பெரியது என்று தெரியவில்லை. ஜீவனத்துக்குத் தேவையானது கொடுப்பார்கள் என்று நம்பலாம். அங்கு சோழ தேசத்தில் விவசாயம் செய்வது மிகச் சுலபமாம். மண் மிருதுவாக இருக்குமாம். மலைப் பிரதேசம் போலக் கடினமான தரை இல்லையாம். அந்த விவசாயம் கூட நாம் செய்ய வேண்டியது இல்லையாம். யாரோ பயிரிடுவார்கள், பாடுபடுவார்கள். விளைவில் ஆறில் ஒரு பகுதி நமக்கு வந்துவிடுமாம். வேதத்தை ஓதிக்கொண்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் இருப்பது தான் நமது வேலை என்கிறார்கள். பார்ப்போம். துணிந்து வந்துவிட்டோம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். எல்லோரையும் காப்பாற்றும் ஈசன் நம்மை மட்டும் காக்காமல் இருந்து விடுவானா’ என்று பேசிக் கொண்டார்கள்.

    ஒவ்வொரு படகிலும் ஒரு சோழியப் பிராமணர் இருந்தார். நயினார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள் அவர்கள். கார்வான் பிராமணர்கள் தாங்கள் போய்ச் சேரும் இடம் பற்றிப் பல கேள்விகள் அவர்களிடம் கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சோழ நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறி வந்தனர்.

    “புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை வேண்டாம். தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பு உள்ளவர்கள். உங்களை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.”

    “புதிய இடங்களுக்குப் போய்க் குடி அமர்வது எங்கள் சமூகத்திற்குப் புதியது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்கள் மிச்ர (எகிப்து) தேசத்தில் நீலநதிக்கரையில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட ஒரு கலவரத்தின் விளைவாக நாங்கள் கடல் கடந்து கொங்கணக் கடற்கரையில் குடியேறினோம். அங்கு நாங்கள் வேதம் கற்றுக் கொண்டோம். அது முதல் நாங்கள் சித்த பாவனர்கள் (தூய்மையான மனம் உடையவர்கள்) என்று அழைக்கப்பட்டோம். மீன் பிடித்தல் எங்களது குலத் தொழில். 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு சமணம் பரவிய போது மக்கள் மீன் உண்பதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். எங்கள் தொழிலுக்கு ஆதரவில்லாமல் போயிற்று. எனவே எங்கள் முன்னோர்கள் உள்நாட்டில் பற்பல வேலைகளில் அமர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்டார்கள். அவர்களை நர்மதை நதிக்கரையில் குடியேற்றி உஜ்ஜயினி அரசர் ஆதரித்தார். இப்பொழுதும் அந்த வேதம்தான் எங்களைச் சோழநாட்டுக்கு அழைத்துப் போகிறது. எல்லாச் சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் பண்பு எங்களிடம் உண்டு. அதனால்தான் இந்தக் குடியேற்றத்துக்குச் சம்மதித்தோம். சரி, உங்கள் பூர்விகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

    “நாங்கள் சோழியப் பிராமணர். சோழநாட்டின் பூர்விகக் குடிகள். பாண்டிய நாட்டிலும்  எங்களவர்கள் உண்டு. எங்களில் பல குழுக்கள் உண்டு. செந்தூர் என்னுமிடத்தில் திருசுதந்திரர் என்றும் மதுரையில் பட்டர் என்றும் ஆனைக்காவில் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் என்றும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர் உண்டு. சோழர் தலைநகரமான ஆரூர்ப்பகுதியில் வாழ்பவர்களில் நயினார், பிரமராயர் என்று இரு குழுக்கள் உண்டு. பிரமராயர்கள் பெரும்பாலும் அரசுப் பதவிகளில் இருப்பார்கள். நான் நயினார் குலத்தைச் சேர்ந்தவன். கோயில், விண்ணகரங்களில் பூஜை செய்வது தான் எங்களுக்கு முக்கிய தொழில்.”

    “கோயில் என்றால் என்ன? விண்ணகரம் என்றால் என்ன?”

    “விஷ்ணுவை வழிபடும் இடத்துக்கு விண்ணகரம் என்று பெயர். காளி, மாரியம்மன் போன்ற கிராமிய தெய்வங்களை வழிபடும் இடத்துக்குப் பொது இல் என்று பெயர். வீரர்கள் இறந்தால் அங்கு ஒரு கல் நட்டு வருஷத்துக்கு ஒரு முறை பூஜை செய்வார்கள். அரசர் இறந்தால் அவர் நினைவாக நடப்பட்ட கல்லைச் சுற்றிச் சுவர் எடுத்து மேல் கூரை அமைப்போம். இது கோ இல், அதாவது, அரசரின் வீடு எனப்படும். இந்த நடு கல்லிற்குத் தினமும் எண்ணெய் தடவி நீர், பால் அபிஷேகம் செய்து உணவு படைப்பது வழக்கம்.”

    “சோழநாட்டின் நீர்வளம் பற்றிச் சொல்லுங்கள்.”

    “அங்கு உங்கள் ஊரில் வர்ஷ ருதுவில் மழை பெய்வது போல குடகு நாட்டிலும் பெய்யும். அது எங்கள் காவிரியில் வெள்ளத்தைக் கொண்டுவரும். அது முடிந்தவுடன் சரத் ருதுவில் எங்களுக்கு மழைக் காலம். ஆகவே எங்கள் நீர் வளத்துக்குப் பஞ்சம் இல்லை. காவிரி கொண்டுவரும் வண்டல் மண் எங்கள் வயல்களில் எல்லாம் படிந்து அதை வளப்படுத்துகிறது. சிறு முயற்சியிலேயே ஏராளமாக விளையும்.  உணவுக்குப் பஞ்சமே இல்லை. சோழநாடு சோறுடைத்து என்றும் சோற்றால் மடை அடைக்கும் சோழ நாடு என்றும் சொல்வார்கள்.”

    “உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள்? நாங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது  எப்படி?”

        “நாங்கள் பேசுவது தமிழ். அது தவிர அங்கு ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முற்காலத்தில் வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர்கள் ஸம்ஸ்கிருதமும் பிராகிருதமும் மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இணைப்பு மொழியாக இருந்தது ஸம்ஸ்கிருதம்தான். முன்பு அறிஞர்கள் மத்தியில் மட்டும் இருந்த ஸம்ஸ்கிருதம், சமணம் பரவியதால் இப்பொழுது சாதாரண ஜனங்கள் வரை பரவி விட்டது. எனவே நீங்கள் என்னுடன் பேசும் ஸம்ஸ்கிருதத்தைக் கொண்டே சமாளித்துக் கொள்ளலாம். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளவும் முடியும்.”

    கேட்ட விஷயமாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பதில் அலுப்பு ஏற்படவில்லை. இதுவரை பார்த்திராத ஒரு புதிய வானம் புதிய பூமியைப் பற்றிய மனச் சித்திரம் முழுமையாகும் வரை இந்த மாதிரியான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றன.

    சினோரிலிருந்து பாருகச்சம் துறைமுகம் ஐந்து காத தூரம். எதிர்த்துச் செல்லும் போது இதே தூரத்துக்கு மூன்று நாள் ஆயிற்று. இப்பொழுது நீரின் போக்கில் வந்ததால் ஒரே நாளில் பாருகச்சம் வந்துவிட்டன படகுகள். இரவு அங்கே தங்கினார்கள்.

    இனி கடல் பயணம் தான். படகின் பாய்கள் விரிக்கப்பட்டன. காற்று சாதகமாக இருந்தது. கரையை ஒட்டியே பயணம் செய்தனர். பகல் முழுவதும் பயணம். மாலையில் நீர் வசதி உள்ள இடத்தில் தங்கி உணவு சமைத்து உண்டு, உறங்கி, மறுநாள் விடியற்காலையில் எழுந்து ஆண்கள் அனுஷ்டானங்களைச் செய்ய, பெண்கள் அன்றைய பகலுக்கான உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர். உணவும் நீரும் படகில் ஏற்றப்பட்டன. மீண்டும் பகல் முழுவதும் பயணம். இப்படி ஒரு மாதம் போக வேண்டும்.

     தொடரும்

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    தேனின் மகத்துவம்!

    honey’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்றார்கள் முருக பக்தர்கள். ’முருகன்’ என்ற சொல் போலவே ‘தேன்’ என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றது. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில் ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார் போலும். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லை…அதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ குணங்களும் நிறைந்த அருமருந்து தேன்!

    தேனுக்கு நீண்ட மருத்துவ வரலாறு இருக்கின்றது. என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதான் உண்மை. தேனின் மருத்துவ மகிமையை வெகு காலத்திற்கு முன்பே மாந்தகுலம் உணர்ந்துகொண்டுவிட்டது.

    பண்டைய எகிப்தில் கடவுளருக்குத் தேனைப் படையல் செய்ததோடு அல்லாமல், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் மேல்பூச்சு மருந்தாக (topical medicine) அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தேனை உண்டால் நீண்டநாள் உயிர்வாழலாம் எனும் நம்பிக்கையை அன்றைய கிரேக்க மக்கள் கொண்டிருந்தனர். தேனின் பெருமையை இஸ்லாமிய மறைநூலான குரானும், கிறித்தவர்களின் மறைநூலான விவிலியமும்கூடப் பேசுகின்றன.

    இன்றைய நவீன அறிவியல் தேனின் நற்குணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கண்டு, பண்டைய மக்களின் நம்பிக்கைகளை உறுதி செய்துள்ளது.

    நுண்ணுயிரிகளை, குறிப்பாக நாமுண்ணும் உணவிலிருந்து தோன்றும் e-coli, Salmonella போன்ற நுண்ணுயிரிகளை அழிப்பதில் தேனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோல் உடலில் ஏற்படும் அழற்சிகளுக்கு எதிராகவும் (anti-inflammatory) தேன் வலிமையோடு செயல்படுகின்றது.  

    சளித் தொல்லை, இருமல் போன்றவற்றை நீக்குவதில் தேன் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது என்கிறார் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் (family physician) அரியேன் கொமோட்டா (Ariane Cometa).

    இருமலால் அவதியுற்ற குழந்தைகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினருக்கு மருந்துக்கடைகளில் கிடைக்கும் டெக்ஸ்ட்ரோமெதார்ஃபன் (Dextromethorphan) எனும் இருமல் தடுப்பானையும் (cough suppressant) மற்றொரு பிரிவினருக்கு பக்வீட் (buckwheat) எனும் (புல்வகையைச் சேர்ந்த) ஒரு செடியின் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனையும் கொடுத்து ஆய்வு செய்ததில், அதிசயிக்கத்தக்க வகையில் தேனுண்ட குழந்தைகள் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும் விரைவில் நிவாரணம் பெற்றது கண்டறியப்பட்டிருக்கின்றது. இஃது இருமலைப் போக்குவதில் தேனின் அளப்பரிய ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது எனலாம்.

    தேனைத் தொடர்ந்து உண்டுவந்தால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எளிதில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மிகும். தேனுடன் எலுமிச்சம் சாற்றைக் கலந்து பருகிவர வாந்தி, தலைவலி போன்றவை குணமாகும்.

    வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து (வெறும் வயிற்றில்) பருகிவரப் பருத்த உடல் மெலியும். மெலிந்த உடலை பருக்கச் செய்வதற்கும் தேனே உதவுகின்றது. ஆம்! காய்ச்சிய பாலில் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து பருகிவர உடல் பூசினாற்போல் மாறும். இவையெல்லாம் மக்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.

    எவ்வளவு நாள் ஆனாலும் கெடாத தன்மை கொண்டது தேன். அதனால்தான் சித்த மருந்துகள் பலவற்றிற்கும் தேனே ஆதாரப் பொருளாய்த் திகழ்கின்றது. சூரணங்கள் பெரும்பாலும் தேனில் குழைத்துச் சாப்பிடும் வகையிலேயே சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்படுவதை நாம் அறிவோம்.

    மருந்துப் பொருளாய் மட்டுமின்றி அழகுசாதனப் பொருளாகவும் தேன் பயன்படுகின்றது. பாலும் தெளிதேனும் இறைவனுக்குப் படைப்பதற்கு மட்டுமல்லாமல் நம் முகத்துக்கும் ஏற்றவையே. பாலோடு தேனைக் கலந்து பூசுவதால் முகம் மிருதுத்தன்மை பெறும். தேனோடு சிறிது கடலைமாவு கலந்து முகத்துக்கு பேஸ்பேக் (face pack) போட்டுவிட்டு, பதினைந்து நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் கண்ணாடிபோல் பளபளக்கும். வெயிலினால் கருத்த சருமத்தை மாற்றச் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து தடவி இளஞ்சூடான நீரில் கழுவி வர நல்ல பலன் தெரியும்.

    இவ்வாறு, சர்வரோக நிவாரணியாக, சிறந்த அழகு சாதனப் பொருளாகத் திகழ்ந்துவரும் தேனை அன்றாடம் பயன்படுத்துவோம். நோய்களை வென்று நல்வாழ்வு பெறுவோம்!

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வேல்குத்தின் காணியின் குத்தே வலிது

     

    தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
    பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
    பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
    பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
    பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ?-வேல் குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    பொருள் விளக்கம்:
    தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்றப் பகைவரை, பொருள் கொண்டு அழித்தலே சரியான நடவடிக்கை. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையானப் பொருளைக் கொடுத்தால் பகையை நீக்கத் தயங்குபவர் யாராவது உள்ளார்களா? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடிப்பதே வலிமையானது.

    பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது என்பதால் செல்வதைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும்.

    காணி என்பது பெருஞ்செல்வத்தில் ஒரு சிறு பகுதி, அதனைப் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும். இந்தப் பழமொழி கூறும் பொருளில் உள்ள திருக்குறள்,

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

    பகைவரின் செருக்கை அழிக்கத் தகுதியான கூர்மையான ஆயுதம் செல்வம் போன்று வேறொன்று இல்லை என்பதால் செல்வத்தை ஈட்டுவது தேவையாகிறது என்று அறிவுறுத்துகிறது.

    இந்தப் பழமொழியின் கருத்தை ஒத்த பல பழமொழிகள் தமிழில் உண்டு. ஈட்டி எட்டியவரைப் பாயும், பணம் பாதாளம் வரை பாயும். பணம் பத்தும் செய்யும். குரைக்கும் நாய்க்குப் போடும் எலும்புத்துண்டு நாயை அமைதிப்படுத்தும். இக்காலத்து அரசியலில் எதிரியை ஒழிக்க அல்லது விலைக்கு வாங்கிவிட உதவுவது பணம். இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “A golden dart kills where it pleases”, “A golden hammer breaks an iron gate” ஆகியன.

    Share
  • தண்ணீரில் தத்தளிப்பவன்

     மாதவன் ஸ்ரீரங்கம்.

    என் நிலையைப் புரிந்துகொள்வது உங்களுக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் இதுதான் நிஜம். அவனை ஒரு அடகுக்கடையில்தான் சந்தித்தேன். நான் யார் என்ன என்னும் வியாக்கியானங்களெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் சாத்தியப்பட்டால் விளக்குகின்றேன். இப்போது அடகுக்கடை.

    அவன் ஆள் ஒரு மார்க்கமாக இருந்தான். என் மனைவியின் தாலியை அடகுவைக்க சென்றிருந்தேன். பொதுவாக நகைகளை அடகுவைப்பவர்களை புழுபூச்சிகள் போலத்தான் பார்ப்பார்கள். கொத்தாக நெக்லஸ் ஒட்டியானம் மாதிரி பெரிய ஐட்டங்களாக அடகு வைப்பவர்கள் பேங்கிற்குத்தான் செல்வார்கள்.

    இது தாலியாயிற்றே. அங்கெல்லாம் செல்ல நேரமோ விருப்பமோ வாய்க்கவில்லை எனக்கு. தாலியை வாங்கி பார்த்துவிட்டு அல்ரெடி இங்கு வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள். இல்லையென்றதும் யாரேனும் தெரிந்தவர்களை அழைத்துவா என்று சொல்லிவிட்டார்கள். செய்வதறியாமல் தாடையைச் சொறிந்து கொண்டிருந்தபோதுதான் அவன் அங்கு வந்தான்.

    அவன் பிறகு, முதலில் தாலி. ஒருவன் தாலியை அடகு வைக்கின்றான் என்றால் அதைவிட அவன் ஏழ்மையைப் பறைசாற்ற வேறு எதுவும் தேவையில்லை. வறுமை என்று சொல்ல மனம் ஒப்பாததால் ஏழ்மை என்கிறேன். அவன் உள்ளே நுழைந்து என்னருகில் உட்கார்ந்துகொண்டான். கடை சற்று பிஸியாக இருந்தது.

    நான் எழுந்துகொண்டேன். வெளியே வந்து அருகிலுள்ள டீக்கடையில் டீ சொல்லி சிகரெட் பற்றவைத்துக்கொண்டேன். கையிலிருந்த இருபது ரூபாய் காலி. நீங்கள் நினைக்கலாம், இந்த சிகரெட் சமாச்சாரத்தையெல்லாம் விட்டுவிட்டால் நிறைய சேமித்து உருப்பட்டுவிடலாம் என்று.

    இருப்பதே அந்த ஒரு பழக்கம்தான். அதுவும் பொறுக்கவில்லையா? பக்கத்திலிருந்த ஒரு கோவில் திண்ணையில் நிழலில் ஒன்றிரண்டு ஆடுகள் படுத்திருந்தன. அருகில் நான் உட்கார்ந்தபோது அவை என்னைத் தடைசெய்யவில்லை. இந்த ஆடுகள் மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேலை காசு பணம் அடகு கல்யாணம் வீட்டுவாடகை பால்பணம் குழந்தைவளர்ப்பு பள்ளிக்கட்டணம் மொய்கள் எதுவும் தேவையில்லை.

    கிடைத்த கிளையில் இலைதின்று கிடைக்கும் நிழலில் அசைபோட்டு நிம்மதியான வாழ்வு. அருகில் நிழலாட அவன் நின்றிருந்தான். என்ன என்பதுபோல் பார்த்தேன். அவன் எனக்கருகில் மெலிதாக என்னை உரசியபடி உட்கார்ந்துகொண்டான். நான் எதுவும் பேசும் மனநிலையிலில்லை. அடகு வைப்பதற்குக்கூட தெரிந்தவர்கள் யாரேனும் வேண்டுமாம். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தெரிந்துகொள்ளவில்லை.

    எதற்கு அங்கே உட்கார. அதுதான் எழுந்து வந்துவிட்டேன். எனக்கு அழவேண்டும்போலிருந்தது. வாய்விட்டு மனம்விட்டு அழவேண்டும். அதற்கு தனிமை வேண்டும். அதற்குக்கூட வழியில்லாமல் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் எவனோ ஒருவன். எனக்கு எல்லையில்லாத கோபம் வந்தது.

    “என்ன பிரச்சனை உனக்கு”? என்றான்.

    “அத தெரிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க ? போங்க சார். உங்க வேலையப்பாருங்க”

    “ஏன் இவ்ளோ வெறுப்பா பேசுற”?

    எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவேயில்லை. என் பாக்கெட்டிலிருந்த பேப்பர் சுருளை எடுத்து அவனிடம் காண்பித்தேன்.

    “இது என்ன தெரியுமா ? என் பொன்டாட்டி தாலி. இதான் என் வீட்ல இருந்த கடைசீ தங்கம். இத அடகு வச்சா ரெண்டாயிரம் ரூவா கெடைக்கும். அதவச்சுத்தான் ஒருத்தனுக்கு வட்டி கட்டணும். அப்பவும் பத்தாது. புள்ளைக்கி பால்பணம் கட்டாம ரெண்டிநாளா நிப்பாட்டிட்டான். ஊட்ல அரிசி காலி. இதான் என் நெலமை. கோவப்படாம?”

    “புரியுது”…

    “என்ன புரியுது ? அதெல்லாம் ஒன்னும் புரியாது. வார்த்தையா புரியறது இல்ல. வாழ்க்கை புரியணும்” என்றபடி பாக்கெட்டில் அணைத்துவைத்திருந்த பாதி சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். அவன் என்னையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

    “உனக்கு ஒரு கதை சொல்றேன்” என்றவனை சற்றே அசூசையாகப் பார்த்தேன். யாரிவன் ? எதற்காக என்னுடன் வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான் ? என்றெல்லாம் யோசித்தபடி சிகரெட்டை இழுத்தபடியிருந்தேன்.

    “என்ன கதைவிடப்போறீங்க?”

    “தண்ணீரில் தத்தளிப்பவன் கதை”

    நான் என் மொபைலை எடுத்துப்பார்த்தேன். இன்னும் நேரமிருக்கிறது. அவன் சொல்லும் கதையைக் கேட்க பெரிதாக ஆர்வமில்லை எனக்கு.

    “ஒன்னு சொல்றேன் கோவிச்சுக்காதீங்க பாஸு. நீங்க சாப்ட்டீங்கன்னு நெனைக்கிறேன். நா இன்னும் சாப்பிடல. வீட்ல அரிசிக்கிக்கூட வழியில்ல. கதை கேக்கணும்னாகூட காதுல பசியடைஞ்சிருக்கும்போது சாத்தியமில்ல”

    “நீ மொத உன் பிரச்சனைகளை சரியா பார்க்கக் கத்துக்கோ. என்னமோ உனக்கு மட்டுந்தான் உலகத்துல பிரச்சனை இருக்கிற மாதிரி?”

    “ஹஹ்ஹ்ஹ்ஹா நா அப்டீன்னு சொன்னனா உங்ககிட்ட ? ஒடனே அட்வைசுக்கி கெளம்பிருவீங்களே”

    “அட்வைஸ்ங்கிறதை ஏன் தப்பா நெனைக்கிற ? அது தகவல்கள்தான். அதோட அடிப்படைல இருக்கிறதுகூட அன்புதான்”

    நான் சிகரெட்டினை முழுதாக இழுத்து வீசியெறிந்துவிட்டு ஒரு கொட்டாவி விட்டேன்.

    “இந்த உலகத்துல எல்லாருக்குமே பிரச்சனைகளும் வருத்தங்களும் இருக்கத்தான் செய்யுது”

    “பாஸ் பாஸ்.. போதும் நிறுத்திக்கங்க. நானே மூச்சுவிடாம மூனுமணிநேரம் பாஸிட்டிவ் ஆட்டிட்யூட் பத்திப் பேசுவேன். பிராக்டிக்கலா செட்டாவற மாதிரி எதாவது இருந்தா சொல்லுங்க. இல்ல கெளம்புங்க”

    அவன் இப்போது விசித்திரமான ஒரு காரியம் செய்தான். சட்டென்று தான் கட்டியிருந்த லுங்கியை விலக்கி தன் இடதுகாலை காட்டினான். அங்கே தொடைக்குக்கீழே மரக்கால் இருந்ததைப்பார்த்து மிரண்டுவிட்டேன்.

    “என்னாச்சு” ? என்றேன் அவனிடம்.

    “கார்கில் வார்ல ஒரு தோட்டா பாஞ்சிருச்சி மொழங்கால்ல. ரிமூவ் பண்ணமுடியாம உள்ளயே இருந்து கொஞ்சகொஞ்சமா அரிச்சு முழு காலையும் எடுக்கவேண்டியதா போயிடுச்சி”

    சட்டென்று எனக்கு அவன் மீது ஒரு பரிவும் மரியாதையும் வந்தது. அவனை நன்றாகக் கவனித்தேன். ஷேவ் செய்யப்படாத நரைமீசை தாடி முகம். மெலிதாக தலையில் வழுக்கைத்தொடங்கியிருந்தது.

    “காலை எடுத்தது தெரிஞ்சப்ப எனக்கிருந்த மனநிலை கொடுமை. என் கர்னல் ஒருத்தரு. ஹிந்திக்காரரு. அவருதான் என்னை மீட்டுக் கொண்டுவந்தாரு”

    நான் அமைதியாக இருந்தேன்.

    “ஒலகத்துல தீராத பிரச்சனைன்னு ஒன்னு இல்லவேயில்ல. சிலதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும் அவ்ளோதான். தேவையெல்லாம் பொறுமையும் காத்திருப்பும்தான்”

    “ஹஹ்ஹ்ஹா அந்த டைம் நம்மகிட்ட இல்லைன்றதுதான் பிரதர் பஞ்சாயத்தே”

    இப்போது அவன் சிரித்தான்.

    “தி டைம் இஸ் அன் இல்யூஷன். இட்ஸ் ஆல்வேஸ் டிப்பென்டிங் ஆன் அவர் விஷன். நாம இருக்குறவரைதான் நமக்கான டைமும் இருக்கும். டைமை உருவாக்குறதும் அழிக்கிறதும்கூட நம்ம கைலதான் இருக்குன்றது நமக்கு தெரியாததுதான் பிரச்சனை. பொறுமைதான் இல்ல நம்மகிட்ட”

    “இன்னும் அரைமணி நேரத்துல என் கடன்காரன் வீட்டுக்கு வந்துருவான் வட்டிப்பணம் வாங்க. பொறுமை எனக்கிருந்து என்னா செய்ய ? அவுருக்கு இல்லியே?”

    “சும்மா கடன் குடுத்தவன் மேல பழிபோடாத. ஒன்னு: எந்த கடன்காரனும் நம்மளை வற்புறுத்தி நமக்கு கடன் தரதில்ல. ரெண்டு: அவன் சொல்ற தவணைக்கு முன்னாடி நிச்சயம் அவன் நம்மளை தொந்திரவு தரதும் இல்ல. நாம லேட் பண்ணிட்டு அவங்களை திட்டி என்ன செய்ய?”

    எனக்கு அவன் லாஜிக்கில் இருந்த நியாயம் புரிந்தது.

    “உன் தேவைக்கு நீ கடன் வாங்குற. உன்னால திருப்பமுடியுமா முடியாதான்னு நீதான் யோசிச்சிருக்கனும். உன்னால முடியாமப்போனதுக்கு கடன் குடுத்தவன் என்ன செய்வான்”?

    “ஆமாம் பாஸு. பொண்டாட்டிக்கி ஒடம்புக்கு முடியாம ஆப்பிரேஷனுக்கு படுத்திருக்குறப்ப, நமக்கு திருப்பித்தரமுடியுமான்னா யோசிக்கமுடியும்? இல்ல செலவுகள் எல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டுத்தான் வருதா?”

    “பாரேன் மறுபடி இப்ப சூழ்நிலைமேல பழிபோடுற. இதையெல்லாம் நீதானே முன் கூட்டியோசனை பண்ணி சேமிச்சு வச்சிருக்கனும். வாழ்க்கையப்பத்தின சரியான திட்டமிடலோ, வாழ்வதற்கான புத்திசாலித்தனமோ வளத்துக்காம யாரையாவது எதையாவது பிளேம் பண்ணியே வாழப் பழகிட்டோம்”

    ஒருவகையில் அவன் சொன்னது உண்மை. அலட்சியமாகவே வாழ்க்கையை எதிர்கொண்டது என் பிழைதான்.

    “உனக்கு இருக்குற பிரச்சனைகள் தீரவே தீராதுன்னு இல்ல. அது தீரதுக்கு கொஞ்சம் டைமெடுக்கும். அதுக்கு நீ புத்திசாலித்தனமா யோசிச்சாலே போதும். கோடிக்கோடியா கடன் வச்சிகிட்டு சிரிச்சுக்கிட்டே சுத்துறவங்க பலபேர் இருக்காங்க நாட்ல. மொத, பிரச்சனைகளை சரியாப் பாரு. அந்த வளையத்துல இருந்து எப்டி வெளிய வரலாம்னு யோசி. நியாமா நேர்மையா குறுக்கு வழியில்லாம நடக்குறது லேட்டாகத்தான் செய்யும். ஆனா கண்டிப்பா ஒருநாள் கரைசேரலாம். காத்திருக்கனும். ரொம்ப பொறுமையா காத்திருக்கனும்.”

    எனக்கு தலையை தண்ணீருக்குள் முக்கிமுக்கி எடுப்பதுபோலிருந்தது. தலையை உதறிக்கொண்டேன்.

    “ஒருத்தன் தண்ணீயில தத்தளிச்சிக்கிட்டிருந்தான். அந்த பக்கமா பரிசல்ல போயிட்டிருந்தாரு கடவுள். கடவுளை பார்த்ததும் அவன் சத்தமா கத்த ஆரம்பிச்சுட்டான். யோவ் கடவுளே. நா இங்க சாவக்கெடக்கேன் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டான். கடவுள் சிரிச்சுக்கிட்டே,

    “மொத நீ எப்புடி இங்க வந்து மாட்டிக்கிட்ட?” என்றார்.

    “யோவ் அதெல்லாம் எனக்கு ஞாபகமில்ல. அதுக்கு நேரமுமில்ல. எப்டியாச்சும் என்னியக் காப்பாத்து”

    கடவுள் மறுபடி சிரித்தார்.

    “யோவ் சிரிக்காதய்யா. எனக்கு நீச்சல்கூடத் தெரியாது. ப்ளீஸ் கொஞ்சம் கைதூக்கிவிடு”

    “நீ மொத எந்திரிச்சு நில்லு” அப்டீன்னாரு கடவுள்.

    “யோவ் லூசாய்யா நீ ? தண்ணி ஆழம்யா. நின்னா முழுகிருவேன்”

    கடவுள் கேவலமான ஒரு வசவு வார்த்தையை அவன்திசையில் வீசினார்.

    “எந்திரிச்சு நில்லு. அதான் ஒரே வழி” அப்டின்னு சொல்லிட்டு துடுப்பை போட்டு நவுந்து போயிட்டாரு. அவன் கடவுளை கன்னாப்பின்னான்னு திட்டினான். இனிமே உன்னை கும்பிடுறனா பாருன்னு சபதம் எடுத்துக்கிட்டான்.

    கை கால் எல்லாம் பயங்கரமா டயர்டாயிருச்சி அவனுக்கு. மூக்கு வாயெல்லாம் தண்ணி பூந்திடுச்சி. கிட்டத்தட்ட தான் சாகப்போறம்னு அவனுக்கு தெரிஞ்சிருச்சி. செத்துபோன தாத்தா பாட்டியெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சாங்க. சுத்திலும் பார்த்தான் ஒரு காக்கா குருவிகூட இல்ல. ரொம்ப நொந்துபோயி அழ ஆரம்பிச்சான். டக்குன்னு என்னமோ தோனுச்சி அவனுக்கு. கடவுள் சொன்ன மாதிரி எந்திரிச்சு நின்னுதான் பார்ப்பமேன்னு காலை தரையில ஊனி முயற்சி பண்ணான். காலுக்கு கீழ மண்ணு வழவழன்னுச்சு. இப்ப தண்ணி அவன் கழுத்துவரை இருந்துச்சி. அப்பத்தான் அவன் யோசிச்சான், அட மடப்பயலே இத்தனைநேரம் ஆழமில்லாத தண்ணியிலயா தத்தளிச்சு அழுது ஒப்பாரி வச்சம்னு சிரிப்பு வந்திடுச்சி அவனுக்கு. நடந்து கரையேறிப்போயிட்டான்”

    நான் கதை சொன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு இதுமாதிரி நிறைய நம்பிக்கை கதைகள் முன்பே கேட்டிருந்தாலும், இது கொஞ்சம் தெம்பாகத்தான் இருந்தது.

    “நம்ம பிரச்சனைகள் எல்லாமே இப்டித்தான். நாம எந்திரிச்சி நிக்கிறவரை தத்தளிப்பாத்தான் இருக்கும். போயி எல்லா பிரச்சனைகளையும் எப்புடி சமாளிக்கலாம்னு யோசி” என்ற படி அவன் எழுந்துகொண்டான். பிறகு ஒருபக்கமாக சாய்ந்துகொண்டபடி நடக்கத்தொடங்கினான்.

    “பாஸு உங்க பேரு”?

    “கடவுள்னு வச்சிக்கயேன்” என்றபடி அவன் திரும்பி என்னைப்பார்த்துச் சிரித்தான்.

    நானும்தான்.

    Share