கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘தயிர்வெண்ணை உண்டு, தளதள வென்று,
மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால
தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
மோகமா மோட்சமா சொல்”….
”பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த, கண்ணனைக் கண்டதும், -இல்லம்
புகுந்து, முலைதிணித்துப் பார்த்திட, வாயில்
முகுந்தனுக்கு முப்பத்தி மூணு”(பற்கள்)….கிரேசி மோகன்….
”பஞ்சா யுதன்கையில் பஞ்சாய்ப் பறக்குது,
பஞ்சபாண்டு பிள்ளைகள் பட்டராய், -பிஞ்சான
போதே பழுத்தவன், பூபாரம் போக்குதற்கு,
தோதான வெண்ணையஞ்சு தேர்வு’’….கிரேசி மோகன்….