crazy

“அல்லிக் குளக்கரையான், அர்ஜுனர்க்கு கீதையை,
சொல்லிக் களம்புகுத்தும் சாரதியின், -பள்ளிக்கு(கோயிலுக்கு),
கும்பா பிஷேகமின்று, கட்டாயக் காப்புண்டு,
நம்பாள் நரநார ணன்”….கிரேசி மோகன்….

”வலம்புரி சங்கேந்தி, வாத்ஸல் யமாக,
களம்புகா பார்த்தனுக்கு கீதை -நலம்புரி,
அம்பாள் சகோதரர் அல்லியூர் ஆலயத்தில்,
கும்பா பிஷேகக் களிப்பு”…..கிரேசி மோகன்….
———————————————————————————————————-

”மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு”….

பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வாழும் ”அழகிய சிங்கர்”….
——————————————————————————————————–

”பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலே
பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே
அழகிய சிங்கா அருள்”….

திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார் சன்னிதியில்….
———————————————————————-
”வேதவல்லித் தாயே வினைதீர்க்கும் செங்கமலப்
பாதவல்லி பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி
ஏதமில்லா ஞானத்தை ஏதுமில்லா மோனத்தை
சாதகனென் சிந்தையில் சேர்…
(பொது)
——————
”என்னத்தைக் கண்டேன்நான் உன்பித்தம் கொண்டதால்
கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே -உன்னொத்த
தெய்வமிங்(கு) இல்லையென்ற தற்பெருமை தேவையா
தொய்வுறுமுன் தற்பரமே தோன்று”….கிரேசி மோகன்….

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.