Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எழுத்தாளர் வையவன் அவர்கள் 

    வையவன் படம்

     

    வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் வல்லமையின் நலம்விரும்பிகளில் ஒருவரும், இந்த வாரம் தனது பவளவிழாவைக் கொண்டாடவிருக்கும் எழுத்தாளர் திரு.வையவன் அவர்கள். இவரை வல்லமை விருது தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் அறிவியல், இலக்கிய எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    எழுத்தாளர் வையவன் என்ற பெயரில் அறியப்படும் திரு. எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். இவரது முத்தாத்தா முருகையா அவர்களின் பெயரை வைக்குமாறு அவரே ஆசீர்வதித்ததன் காரணமாக ‘முருகேசன்’ என்று அழைக்கப்பட்டார். எழுத்துலகில் இவர் நுழையும்பொழுது இவர் தானே விரும்பிச் சூட்டிக்கொண்ட வையவன் என்ற பெயரில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது தந்தையிடம் இருந்து படிக்கும் பழக்கத்தையும், தாயிடம் இருந்து கதை சொல்லும் கற்பனைத் திறத்தையும் பெற்றார்.

    பள்ளி நாட்களில் “தமிழொளி” என்ற இதழின் ஆசிரியப்பொறுப்புகளை ஏற்று அந்த இதழில் கட்டுரைகளும், சிறுகதைகளும், தலையங்கங்களும் எழுதினார், தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இவரது முதல் சிறுகதை 1956 ஆம் ஆண்டு ‘அமுதசுரபி’ இதழில் வெளியானது. இவரது முதல் புதினம் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்பதில் தொடங்கி, ஜமுனா, ஜங்க்ஷனிலே ஒரு மேம்பாலம், மணல்வெளி மான்கள், கன்னியராகி நிலவினிலாடி என்று தொடர்ந்து பத்து புதினங்களையும், பத்து குறும்புதினங்களையும், வெளியிட்டுள்ளார். அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான அவரது படைப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டு எழுதியும் வந்துள்ளார். இவரது படைப்புகளில் இவர் கையாண்ட சமுதாயக் கண்ணோட்டதிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டவருமாவார். இவரது ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற முதல் புதினம் தமிழக அரசின் பரிசையும், இரண்டாவது புதினம் ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருதையும் வென்றன.

    தனது பதின்ம வயதில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து சற்றொப்ப 60 ஆண்டுகளாக எழுதுவதை தனது கடமையாகக் கொண்டு வருகிறார். இதுவரை 1000 த்திற்கும் அதிகமாக படைப்புகளை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் உருவாக்கியுள்ள வையவன் அவற்றில் நூறு படைப்புகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார். இவருடைய படைப்புகள் தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளான குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் படைப்புகளில் மாணவர்களுக்காக இவரெழுதிய நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும், கவிதைகளும் அடங்கும்.

    பற்பல தொழிலில் அறிமுகம் கிடைத்து பற்பல வேலைகளைச் செய்தாலும், மலேரியா ஒழிப்பு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, இவரது மேலாளர் இவரது எழுத்துப்பணிக்கு கண்டனம் தெரிவித்த பொழுது, தனது எழுத்தார்வத்திற்கு ஆசிரியத் தொழிலே ஆக்கபூர்வமாக உதவும் என்று எண்ணி ஆசிரியப்பணியில் சேர்ந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ள வையவன், ஆசிரியப்பணிக்கான பட்டங்களும் பெற்று சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் 33 ஆண்டுகள் ஆசிரியப்பணியாற்றினார். பணி ஓய்விற்குப் பிறகு தனது முழு நேரத்தையும் இலக்கியப்பணிக்காக அர்ப்பணித்துள்ளார். மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிகளும் நன்கறிந்த வையவன் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வைக்கம் முகம்மது பஷீரின் நாவலை ‘ஒரு காதல் டைரி’ (2001) என்றும், பிற மலையாள எழுத்தாளர் படைப்புகளையும் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “மகாபலியின் மக்கள்”(1982) என்ற கேரளாவையும், கேரளமக்களையும் பற்றிய கட்டுரைத்திரட்டு நூல், பிற மாநிலம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல் என்ற பிரிவில் தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.

    வையவன் படம்0

    சிறந்த இலக்கிய விமர்சகரான வையவன் அவர்கள் ‘ஜெகசிற்பியன் ஒரு பார்வை’ (1987), ‘மகாகவி’ (1993) என்ற இலக்கிய விமர்சக நூல்களையும் எழுதியுள்ளார். இவரது மகாகவி நூல், பாரதியைப் பற்றிய பல புதிய பரிமாணங்களை முன் வைத்ததால் ஒரு சிறந்த நூல் என்று தேர்வு செய்யப்பட்டு அமுதசுரபி-ஸ்ரீராம் அறக்கட்டளையின் விருதையும், பாரதியின் மீது எழுதப்பட்ட சிறந்த நூல் என்று ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் பாரதி பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து வழங்கிய விருதையும் பெற்றது. இவரது “Nation builder Nehru” மற்றும் “Loving Animals” ஆகிய ஆங்கிலநூல்கள் ‘இந்திய அரசின் கரும்பலகைத் திட்டம்’ (Blackboard Scheme of Government of India) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. லவ்விங் அனிமல் நூல் விலங்குகளின் நலத்தினைப் பேணும் முக்கியத்துவத்தை முன்வைத்ததால் அத்துறை அமைச்சரின் பாராட்டையும் பெற்றது. “நிசப்த கோபுரம்”(1995), “வெடி வாழைப்பூ”(1999) என்ற கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

    வையவன் படம் 01

    ‘ஆனந்த பவன்'(1998) , ‘இடிபாடுகள்'(2001) என்ற நாடங்களையும் இவர் எழுதியுள்ளார். ஆனந்தபவன் நாடகம் ஸ்டேட் வங்கியின் சிறந்த நாடகம் என்றப் பரிசினைப் பெற்றது. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்று சோழா கிரியேஷன் தயாரித்த ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற குறும்படத்திற்கு கதை வசனத்தையும் எழுதியுள்ளார் வைரவன். இவ்வாறு தமிழ், ஆங்கிலம், பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, கவிதை, கதை, கட்டுரைகள், புதினங்கள், பல இணையதளங்களில் வலைப்பூ கட்டுரைகள் என எழுதி வரும் வையவன் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு,  இளநிலை, முதுநிலை ஆய்வுக்கட்டுரைகளும், முனைவர் ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனது பணியைப் பற்றிய பெருமைகளையும் விருதுகளையும் பொருட்படுத்தாத வையவன் அவர்களின் கருத்து:

    ‘Fruits I prefer; not fanfare and fireworks. When compared to the pioneers and literary personalities I am nothing; just another beginning. That’s all.’

    Manavaalan.pmd

    அரசின் “அறிவொளி” திட்டத்தின் செயல்பாடான மாற்றுக்கல்வி வளர்ச்சியில் பங்குபெற்று பலமாநிலங்களுக்கும் சென்று மாற்றுவழிக்கல்வி பற்றிய நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பணியில் தன்னை உட்படுத்திக் கொண்டமைக்காக “மால்கம் ஆதிசேஷய்யா” விருது பெற்றுள்ளார். கல்விப் பணிக்காக ‘ஐக்கியா டிரஸ்ட்’ (‘Aikya’ – Amalgamaetion of Indigenous Knowledge for Youtful Action) என்ற அறக்கட்டளையை உருவாக்கி பள்ளிப்படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதில் உதவி வருகிறார். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியும், பணிகளும் செய்து வருகிறார். அவரது மகளின் பெயரில் துவக்கப்பட்ட “தாரிணிப் பதிப்பகம்” என்ற பதிப்பகம் மூலம் நூல்களை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    நமது வல்லமை மின்நிதழுடன் இணைந்து சிறுகதைகள் போட்டியொன்றை 2013 ஆண்டு நடத்தி, வெற்றிபெற்ற சிறுகதைகளை “வல்லமைச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவரது தாரிணிப் பதிப்பகம் மூலம் நூலாக வெளியிட்டு, வல்லமையாளர்களுக்குப் புத்தகப் பரிசுகள் அனுப்பி வளரும் பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

    பொதுத்தொண்டில் உள்ள ஆர்வம் காரணமாக கவிஞர் ஜி. ஜே. தமிழ்ச்செல்வி அவர்கள் துவக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் “ஹார்ட் பீட் டிரஸ்ட் அறக்கட்டளை” வளரவும் உதவி வருகிறார். அந்த அறக்கட்டளையின் “இதயத்துடிப்பு” என்ற செய்தி மடலை அறக்கட்டளையின் சார்பாக வெளியிடவும் உதவி வருகிறார்.

    இடையீடின்றித் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் திரு. வையவன் அவர்களின் பணிகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்திப் பாராட்டி, பவளவிழா கொண்டாடும் இவ்வார வல்லமையாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறோம்.

    வல்லமையாளரைத் தொடர்பு கொள்ள தகவல் …
    திரு. வையவன்
    தாரிணி பதிப்பகம்
    பிளாட் எண்: 4-ஏ, ரம்யா பிளாட்ஸ்
    32/79, காந்தி நகர் 4ஆவது பிரதான சாலை
    அடையாறு, சென்னை – 600020
    மின்னஞ்சல்: vaiyavan.mspm@gmail.com
    தொலைபேசி: 9940120341
    வலைப்பூ “இணையவெளி “: http://innaiyaveli.blogspot.com/
    கூகுல் ப்ளஸ்: https://plus.google.com/102825432314914852934/about

    தகவல்கள் வையவன் அவர்கள் பற்றிய சாகித்திய அகாடமி வெளியிட்ட ஆங்கிலக்குறிப்புகள் கொண்ட வலைப்பூவிலிருந்தும், வையவன் அவர்களின் வலைத்தளப் பதிவுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டன.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 15, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருவாளர் கே.ரவி அவர்கள் 

    ravi

     

    கடந்த இருபதாண்டுகளாக வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21-ஆவது பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. பாரதிவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடத்திவரும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம்.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி அவர்களை கவிஞர் ரவி  என்றழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதை வல்லமை வாசகர்கள் அறிவார்கள். வல்லமையில் இதுவரை எண்பதுக்கும் அதிகமான பதிவுகளை ரவி எழுதியுள்ளார். அவற்றில் 50 பதிவுகளுக்கும் மேற்பட்ட “காற்று வாங்கப் போனேன்” என்ற தன்வரலாற்றுப் பகுதியும், சற்றொப்ப முப்பது கவிதைகளும் அடங்கும். ரவி அவரது சுயசரிதையை பொதுவான கோணத்தில் வழங்காமல் இந்தப் பிரபஞ்சத்திற்கும் அவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாக அமைத்ததை, “சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது” என்று விளக்குகிறார். “கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!” என்றும், “என் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை,” என்று தன்னைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவ்வாறு கவிதைகள் மீதும், மகாகவி பாரதியிடம் இவர் கொண்ட ஈடுபாட்டை பாரதி பற்றி அவர் எழுதிய கவிதை மூலமாகவே அறியலாம்.

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
    காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
    தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே
    தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே
    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

    கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது
    காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது
    தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது
    தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது
    நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

    இந்த ஆண்டின் பாரதி திருவிழா ஜதிபல்லக்கு அழைப்பையும் ரவி கவிதையாக வடித்தே வல்லமை வாசகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

    மான்தாங்கிக் கையில் மழுதாங்கி நிற்கும் மஹேஸ்வரனும்
    தேன்தாங்கு செந்தா மரைதாங்கு நாபனும் மாகாளியும்
    வான்தாங்கு தேவரும் வாழ்த்தவே யாவரும் பாரதிசீ
    மான்தாங்கி யாய்ஜதி பல்லக்கை ஏந்த வருவீர்களே
    — கே.ரவி

    இவரது பேரார்வத்தின் காரணமாக வானவில் பண்பாட்டு மையம் 1994-ல் பிறந்து, ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடி வரப்படுகிறது. முதலாமாண்டு விழாவில், திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சிறப்புரையும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிக்கூறுகள்.  ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டு வருகிறது.

    007008

    0090010

    குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் பெருமைமிகு விஞ்ஞானியாக அனைவராலும் பாராட்டப்பட்ட காலத்திலேயே அவருக்கும் பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி அம்மையார் 2008 க்கான பாரதி விருதை வாலிபக் கவிஞர் மறைந்த கவிஞர் வாலி அவர்களுக்கு வழங்கியதும் நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாகும். பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் ஆகியோர் பாரதி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    வானவில் பண்பாட்டு மையம் 1994 தொடங்கி ஆண்டுதோறும் நடத்தி வரும் பாரதி திருவிழா பற்றியும் அதில் இடம்பெறும் சிறப்புமிகு ஜதிபல்லக்கு நிகழ்ச்சி பற்றியும் ரவி கீழ்வருமாறு கூறுகிறார்:

    முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது.

    எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

    உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்து வந்திருக்கிறார். ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி இடம் பெறும். அதில் சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இந்த ஆண்டு விழாவில் பாரதியாருக்கு சால்வை, பொற்பை ஆகியவற்றை சமர்ப்பித்து ஜதிபல்லக்கை காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைக்க, திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் “வருவாய் கண்ணா’ ஓவியக் கண்காட்சியை நடிகர் சிவகுமார் தொடங்கி வைக்க, மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார். பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ’சேக்கிழார் அடிப்பொடி’ என்றழைக்கப்படும் தமிழறிஞர் முதுமுனைவர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். தொடர்ந்து வந்த மூன்று நாட்களிலும் கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பாரதியாரைப் போற்றும் வகையில் அமைந்தன.

    ravi1
    கவிதை இலக்கியத்திலும், சட்டத்திலும் சிறந்து விளங்கும் ரவி ஒரு பல்துறை வித்தகராகப் பன்முகம் கொண்டவர். இவரது கல்லூரி மாணவப் பருவத்தில் இதழியளாராகாவும் உருவெடுத்து, 1972-ஆம் ஆண்டு ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகையை நடத்திஇருக்கிறார்.

    திரைத்துறையிலிம் நுழைந்து ‘ஸ்பரிசம்’ என்ற படம் தயாரித்துள்ளார். இசைமைப்பாளராகவும் உருமாறி திரைப்படங்களுக்கும், இசைப்பேழைகளுக்கும் இசையமைத்துள்ளார். இவரது இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது இனிய குரலில் பாடி ‘தெய்வ கானாம்ருதம்’ என்ற இசைப்பேழை 1994 இல் வெளியானது. ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையை 1980-களில் வெளியிட்டுள்ளார்.

    பார்வைக்கு என்ன பொருள்” என்ற மேடை நாடகத்தை எழுதி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

    இயல்பியல்” என்னும் தலைப்பில் பல புதிய தனித்தமிழ்க் கலைச் சொற்களோடு ஓர் முன்னோடி வழிகாட்டிப் பாட நூலையும், “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற அறிவியில் நூலையும் எழுதி வெளியிட்ட ரவி, ஆங்கிலத்தில் இரு சட்டநூல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, சமீபத்தில் மறைந்த நீதியரசர் திரு.வி.ஆர். கிருஷ்ணய்யர் அது ஒரு சிறந்த குறிப்புதவி நூலாக அவருக்கு உதவும் எனப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

    மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

    பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை தற்பொழுது “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற நூலாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கவிஞராக தான்னை முன்னிறுத்திக்கொள்ள விழையும் ரவி, “நமக்குத் தொழில் கவிதை” “உன்னோடு நான் என்ற கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவரது ‘உன்னோடு நான்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற …

    அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை
    அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை
    வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்
    வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்

    என்ற கவிதையை அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள் பாராட்டி இவரை வாழ்த்தியுள்ளார்.

    திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாணராமன் அவர்களின் மகன் என்பதும், தொலைகாட்சி புகழ் ஷோபனாரவியின் வாழ்க்கைத் துணைவர் என்பதும் இவரது மற்ற வியக்கவைக்கும் சிறப்புகள். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் ரவி அவர்கள் தமிழுக்கு ஆற்றி வரும் பங்கினைப் பாராட்டி வல்லமையாளராக சிறப்பு செய்து வல்லமைக் குழுவினர் மகிழ்கின்றோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
    படம் உதவி: http://www.dinamani.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 8, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு சமூகசேவகி அனுராதா கொய்ராலா அவர்கள் 

     

    Anuradha Koirala

     

    சென்ற மாதம் (நவம்பர்) “2014 ஆம் ஆண்டின் சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு உலகவிருது” (The Mother Teresa Memorial International Award for Social Justice 2014) வழக்கப்பட்டோரில் நேப்பாளத்தைச் சேர்ந்த அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) வும் ஒருவர். கடந்த இருபதாண்டுகளில் நேப்பாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வரப்பட்ட 12,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அனுராதா கொய்ராலா. இவரை இவ்வார வல்லமையாளராகத் அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியியல், இலக்கிய எழுத்தாளரான திரு. சி. ஜெயபாரதன் அவர்கள்.

    அறுபத்தைந்து அகவையை எட்டிய அனுராதா கொய்ராலா தனது இளமையில் வன்முறைகள் நிறைந்த மணவாழ்க்கையில் சிக்குண்டு துன்புற்று இறுதியாக அந்த வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக்  கொண்டவர். தன்னைப் போன்றே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தொண்டு நிறுவனம் அமைத்து உதவ முடிவு செய்தவர். இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பற்ற நிலையில் வாழும் நேப்பாள பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் வன்முறைகள் நிகழும் குடும்ப சூழ்நிலையில் இருந்து அடைக்கலம் தரும் தற்காலிகப் புகலிடம் ஒன்றினை வழங்குவது இவரது முதல் நோக்கம். அதற்காக நேப்பாளத்தின் காட்மண்ட நகரில் அரசு சாரா மறுவாழ்வு மையமாக “மைத்தி நேபாள்” (Maiti Nepal)  என்ற அமைப்பை நிறுவினார். மைத்தி என்றால் நேப்பாள மொழியில் “தாய்வீடு” என்பது பொருள். திக்கற்றபெண்களுக்கு  உதவம் மையமாக வளர்ந்தது மைத்தி.

    Anuradha Koirala3  Anuradha Koirala4

    அடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பதின்மவயது சிறுமிகளும், இளம்பெண்களும் பணிவாய்ப்புகள் தருவதாகக் ஆசைகாட்டப்பட்டு, பொய்யுரைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இந்தியாவிற்குக் கடத்தப்படுவதை அறிந்து மனிதர்களைக் கடத்துதும் இந்தத் தொழிலை முறியடிக்க முனைந்தார். காவல்துறையின் உதவியுடன் பாலியல் தொழிற்கூடங்களில் இருந்து பெண்கள் அதிரடியுடன் மீட்கப்பட்டு மைத்தி அமைப்பிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். இந்திய நேப்பாள எல்லையில் குடிமக்கள் மற்றும் காவல்துறையின்  உதவியுடன் எல்லை கண்காணித்தலிலும் மைத்தி தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். மீட்கப்படும் பெண்களை பெற்றோருடனும் குடும்பத்துடனும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை பெரும்பாலும் அவர்கள் குடும்பமே நிராகரிக்கும் பொழுது கதியற்று மனமுடைந்த நிலையினை அடையும் பெண்களுக்கு உளவியல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் கைக்குழந்தைகளுடனும், கர்ப்பிணிகளாகவும் இருக்கும்பொழுது அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாலியல் தொழில் காரணமாக எயிட்ஸ் நோயாலும் தாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழகப்படுகிறது. பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவதற்காக கைத்தொழிலும் கல்வியும் வழங்கப்படுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்களுக்காக சட்ட ஆலோசனையும், சட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையிலும் உதவிகள் புரிந்து, தொழிலும், கல்வியும், மன ஆறுதலும் பெற்று வாழ்வதற்கு உதவும் மைத்தி அதன் பெயருக்கு ஏற்றார்போல, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு தாய்வீடாகவே அமைகிறது .

    அனுராதா கொய்ராலாவின் தொண்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்ததால் சி. என். என். செய்தி நிறுவனத்தின் 2010 ஆண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அனுராதா கொய்ராலா பரிந்துரைக்கப்பட்டார். சி. என். என். செய்தி நிறுவனம் இவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வு செய்து பாராட்டி 25,000 பரிசு வழங்கிய பொழுது இவரது சேவை நாடுகளில் எல்லைகளைக் கடந்து உலக அளவில் அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது சமூகப்பணிக்காக மேலும் நிதி உதவிகள் பல இடங்களில் இருந்தும், அமெரிக்க அரசிடம் இருந்து அரை மில்லியன் டாலர்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவராற்றும் நற்பணிகள் தொடர்ந்து பாராட்டப்பட்டும் வருகின்றன. சி. என். என். வழங்கிய புகழ் பெற்ற விருது போன்றே இதுநாள் வரை முப்பதிற்கும் மேற்பட்ட அகிலஉலக அளவில் வழங்கப்பட்ட விருதுகளையும் பெற்றவர் அனுராதா கொய்ராலா. ஜெர்மனி 2007 ஆண்டு வழங்கிய யூனிஃபெம் விருது (German UNIFEM Prize 2007), அரசி சோபியாவின் 2007 ஆம் ஆண்டிற்கான வெள்ளி விருது (Queen Sofia Silver Medal Award 2007) மற்றும் பீஸ் ஆபி வழங்கும் சமாதனப் பரிசும் (The Peace Abbey, Courage of Conscience 2006) அவற்றில் குறிப்பிடத்தக்கன.

    சென்றமாதம் நல்லிணக்கம் சேவை மையம் (The Harmony Foundation ) தனது ஏழாமாண்டுசமூக நீதி பரிசு விழாவை நடத்தியது. நல்லிணக்கம் சேவை மையம் உலகளாவிய சமூகநீதி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் அரசுசாரா சேவை அமைப்பு. சமூகநீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டு அதனை ஒட்டிய விழாவும் கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா துவக்கிய சேவை மையம் அங்கீகரித்து ஒப்புதல் அளித்த ஒரே விருது என்பது இதன் சிறப்பு.

    Anuradha Koirala1

    விருதினைப் பெற்றுக் கொண்ட அனுராதா கொய்ராலா தனக்கு சமுதாயத் தொண்டில் பற்றுதல் ஏற்பட அன்னை தெரசாவின் பணிகள் முன்மாதிரியாக அமைந்தது என்றும் எனவே அவர் நினைவாக வழங்கப்படும் விருதைப் பெறுவதில் பெருமை மிகக் கொள்வதாகவும் கூறினார். உடன்வாழும் மனிதர்களின் துயர்களை உணர்ந்து இரங்கி உதவும் வகையில் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனுராதா கொய்ராலா கூறினார். இவர் அன்னை தெரசாவின் பெயர் தாங்கிய அனாதைக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றையும் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சென்ற மாதம் இந்தியா டுடே நடத்திய பெண்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்ட அனுராதா கொய்ராலா கூறிய பெண்ணின முன்னேற்றக் கருத்துரைகள் சிந்தித்து செயலப்டுத்தப்பட வேண்டியவை.

    Anuradha Koirala2பெண்கள் தங்கள் துயர் துடைக்க அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காது தாங்களே தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி முன்னேறுவது அவர்கள் கையில்தான் இருக்கிறது. நாம் கைவிடப்பட்டவர்கள் என்று தன்னிரக்கம் கொள்ளும் எண்ணம் பெண்களால் கைவிடப்படவேண்டிய ஒன்று. பெண் ஆட்சியாளர்களும் பெண்கள் நலனை சீர்குலைக்கும் செயல்களை தடுத்து, இதுவரை பெண்களுக்கு உதவும் சரியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பெண்கல்விக்கு எதிரான நடவடிக்கைகள் தடுத்து தண்டிக்கப்பட வேண்டும். வரதட்சினை கொடுமையே நேப்பாள பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்குக் காரணம். பெண்களுக்காக ஒதுக்கப்படுவதாகக் கூறப்படும் 33% ஒதுக்கீட்டிலேயே பெண்கள் மனநிறைவு கொள்ளக்கூடாது. பெண்களுக்கான ஒதுக்கீடு ஐம்பது விழுக்காடாகவோ அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வண்டும். இந்த இட ஒதுக்கீடு என்ற கருத்து ஏன் ஆண்களுக்கு நடைமுறையில் இல்லை? பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற நிலையில் பெண்கள் வாழ்க்கை அமைவது சரியான நிலையல்ல.

    பெண்களுக்காகன சமூகப்போராளியாகவும் சமூக சேவகியாகவும் கடமையாற்றி வரும் அனுராதா கொய்ராலாவை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமையின் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தகவல் தந்து உதவிய தளங்கள்:
    Mother Teresa Award conferred on Koirala
    http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Mother+Teresa+Award+conferred+on+Koirala+&NewsID=433154

    Mother Teresa Memorial International Award for Social Justice held on Sunday
    http://www.dnaindia.com/mumbai/report-mother-teresa-memorial-international-award-for-social-justice-held-on-sunday-2033914

    Mother Teresa global awards for Anuradha Koirala, Amte
    http://www.firstpost.com/fwire/mother-teresa-global-awards-for-anuradha-koirala-amte-1795003.html

    Nepal actor and Everest climber at India Today Global Roundtable: No gender bias in Mother Nature
    Women should ask for 50 per cent reservation: Anuradha Koirala
    http://indiatoday.intoday.in/story/india-today-global-roundtable–no-gender-bias-hina-rabbani-khar-anuradha-koirala-meenakshi-lekhi/1/403699.html

    Anuradha Koirala
    http://en.wikipedia.org/wiki/Anuradha_Koirala
    http://ta.wikipedia.org/s/n13

    Maiti Nepal

    Home


    http://en.wikipedia.org/wiki/Maiti_Nepal
    http://ta.wikipedia.org/s/o5e

    Picture:
    http://www.omfood.kr/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 1, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள்

    எஸ். கணேசன்

    இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சமூகசேவகர் திரு. எஸ்.கணேசன் அவர்கள். இவரது பொதுநலத் தொண்டை வியந்து பாராட்டி வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான திரு. துரை அவர்கள்.

    புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த அறுபத்திஇரண்டு வயது மூத்தக்குடிமகனான திரு. எஸ். கணேசன் அவர்களது தொண்டு சமீபத்தில் ஹிந்து செய்திதாளில் வெளியானது. பிறர் துயர் கண்டு வருந்தும் உள்ளம் கொண்ட ஒரு சிலரில் கணேசனும் ஒருவர். ஆனால் பரிதாபப்படுவதுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சென்று  துயர் களையும் நடவடிக்கையையும்  எடுப்பதினால் இவர் மற்றவர்களில் இருந்து மாறுபட்டவராகவும் இருக்கிறார்.

    நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமான காரை இறந்தவர் உடலை மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்  உதவிக்காகப்  பயன்படுத்துகிறார். அதுவும் வாடகை வசூலிக்காமல் அவரே ஓட்டிச் சென்று உதவியும் வருகிறார். இவரால் இவ்வாறு உதவப்பட்ட இறந்தவரின் குடும்பங்கள் ஐயாயிரத்திற்கும் மேல். அத்துடன் ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவி தேவையானவர்களும் இவரால் உதவப்பட்டு அவசர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்கள். பிரசவங்களுக்கு இலவச சேவை, விபத்தில் சிக்குண்டோருக்கு அவசர உதவி போன்றவை இந்த உதவிகளில் அடங்கும்.

    எஸ். கணேசன்2பழைய இரும்பு வியாபரத் தொழிலில் ஈடுபட்டிருந்த திரு. கணேசன் ஒருமுறை இறந்தவர்களின் உறவினர்கள் உடலை இல்லத்திற்குக் கொண்டு செல்ல வசதியின்றி ஒரு கைவண்டியில் வைத்து தள்ளிச் சென்றதைக் கண்டு மிகவும் வருந்தியிருக்கிறார். ஊரில் இருக்கும் வாடகை வண்டிகள் பிணத்தை அப்புறப்படுத்த உதவுவதில்லை. எனவே இவர் தனது இரும்பு வியாபாரத்தின் மூலம் சேமித்த பதினேழாயிரம் ரூபாய்களைக் கொண்டு கார் ஒன்று வாங்கி அவசரத் தேவைக்கு உதவுவதற்கு மட்டுமே அந்த காரைப் பயன்படுத்துவது என்றும், அதுவும் வாடகை வாங்காமல் உதவுவது என்ற லட்சியத்தைக் கொண்டார். இவரது வாடகைக் காரின் பதிவு எண் 515 என்பதால் ‘515’ கணேசன் என்று அழைக்கப்படலானார்.

    இறந்தவர் உடலை கொண்டுச் செல்வதுடன், சிலமுறை அவரே குழிவெட்டி உடலை அடக்கம் செய்வது வரை உதவியும் இருக்கிறார். ஆனால் காசு மட்டும் வாங்குவதில்லை. ஒரு சிலர் டீசல் நிரப்பும் பொழுது அதற்கான தொகையைக் கொடுத்து உதவியதுண்டு என்கிறார் கணேசன்.  இவரது தொலைபேசி எண் புதுக்கோட்டை காவல் நிலையங்கள் அனைத்திலும் ‘அவசர உதவிக்கு உதவும் எண்’, என்ற குறிப்பில் உள்ளது. அவ்வாறு இவர் அவசர உதவி வழங்கியதால் ஏறத்தாழ 2000 பேர் பிரசவநேர உதவி பெற்றவர்களும், 1000 பேர் அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்களும் உள்ளனர்.

    தனக்கென்று இதுவரை எந்த சொத்தும் சேர்க்காது தனது இரும்பு வியாபாரத்தில் ஈட்டும் தொகையைக் கொண்டே காரைப் பராமரிப்பதற்கு செலவழித்தும் வருகிறார். ‘இத்தைகைய தொண்டு மனநிறைவை அளிப்பதால் இறக்கும்வரை இல்லாமையில் உள்ளவர்களுக்கு இவ்வாறே உதவுவேன், அதுவே மனதிற்கு மகிழ்ச்சி தருவது’ என்று கூறும் திரு.கணேசனின் தொண்டுள்ளத்திற்கு நன்றி கூறியும், அவர் தொண்டு தொடர வாழ்த்துகள் கூறியும் அவரை  வல்லமையாளராகப்  பாராட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம்.

    தகவல் மற்றும் படம் உதவி: கே.சுரேஷ், தி இந்து நாளிதழ்

    அவசர உதவிக்கு ஓடும் ஆபத்பாந்தவன்: 44 ஆண்டில் 5 ஆயிரம் உடல்களை காரில் ஏற்றிச்சென்று சேவை – தி இந்து
    http://tamil.thehindu.com/opinion/reporter-page/article6493473.ece

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 24, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்கள்

     

    Geetha-Ilangovan-267x300

     

     

    இந்தவார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால்  பாராட்டப்படுபவர் ஊடகவியலார் கீதா இளங்கோவன் அவர்கள். இயக்குநர் கீதா இளங்கோவன், பலராலும் பாராட்டப்பட்ட “மாதவிடாய்’’ என்ற ஆவணப்படத்தை இரு ஆண்டுகளுக்கு முன்னர் (டிசம்பர் 2012) வழங்கியவர். அந்தப் படம் பெற்ற வரவேற்பைக் கண்டு மேலும் பல சமுதாய நலன் கருத்துக்களைக் கொண்ட ஆவணப் படங்களை தொடர்ந்து வழங்குவதாக ஊக்கத்துடன் உறுதி அளித்தார். மாதவிடாய் படத்தைத் தொடர்ந்து அவர் உருவாக்கியிருக்கும் “நம்பிக்கை மனுஷிகள்’’ என்ற குறும்படம் சென்ற சனிக்கிழமையன்று (நவம்பர் 22, 2014) ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இம்முறையும், ஒரு சமூக அக்கறை கொண்ட படமாக “மஸ்குலார் டிஸ்ட்ரோபி” (தசைச்சிதைவு நோய்) என்றக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்ற இரண்டு சகோதரிகளின் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்வையும், நோயினால் துவண்டுவிடாது தங்களைப் போன்று பாதிக்கப்பட்டப் பிறருக்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவும் அச்சகோதரிகளின் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை முறையைத் தொகுத்து குறும்படமாக்கியுள்ளார். இப்பட வெளியீட்டிற்காக கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய பத்திரிக்கைத் தகவல் அலுவலகத்தில் ஊடகத் தகவல் அலுவலராகப் பணியாற்றும் கீதா இளங்கோவன் சமூகநல அக்கறை கொண்ட ஓர் இயக்குனர். இவரது புதிய வெளியீடான நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படமும், மற்ற இரு படங்கள் பற்றிய தகவல்களும் அவரது சமூக அக்கறையைத் தெளிவு படுத்துகின்றன.

    கீதா இளங்கோவன் இயக்கிய சமூகச் சிந்தனைக் குறும்படங்கள்:
    [1]
    நம்பிக்கை மனுஷிகள் குறும்படம் (2014 வெளியீடு)
    http://youtu.be/svH7fYOOnE4

    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்னும் இரு சகோதரிகள் தசைச்சிதைவு என்ற கொடிய நோயினால் தாக்கப்படவர்கள். தசை செல்களின் புரதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபணுவில் ஏற்படும் கோளாறால் தசை நாளடைவில் தனது செயல்பாட்டை இழந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு புதிய தசை செல்கள் உருவாக்கப்படாது இருக்கும் தசைகளும் அழியும் நிலை ஏற்பட்டு நோய் உடலை உருக்குலைக்கிறது. மனிதர்களின் தன்னிச்சை செயல்களான நடமாடுதல், தனது செயல்களைத் தானே செய்தல் போன்றவற்றை முதலில் பாதிக்கும் இந்த நோய், காலப்போக்கில் மோசமடைந்து உயிர்வாழ உதவும் அனிச்சை செயல்களான சுவாசிக்கும் நுரையீரல்கள், இரத்த ஓட்டத்திற்குக் காரணமான இதயத் தசைகளின் நிலையையும் பாதித்து உயிரிழப்பில் முடிவடைகிறது. மரபணுக் கோளாறால் உருவாகும் இந்நோய்க்கு இன்று வரை மருத்துவம் இல்லை. தொடர்ந்த உடற்பயிற்சியினால் சிறிது காலம் நடமாட்டத்தை நீட்டிக்கலாம் என்பதே இன்றுவரை இந்நோயின் நிலை.

    மூத்த சகோதரி வானவன் மாதேவி ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் பாதிக்கப்பட்டார். நடப்பதற்கே சிரமப்படும் நிலையை அடைந்த சகோதரிகளிடமும், இவர்களது பெற்றோர்களிடமும் மருத்துவர்கள் நோயின் நிலையையும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க வழியில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இருப்பினும், நோயினால் மனம் தளராது தங்கள் பெற்றோரைத் தேற்றியதுடன், பத்தாம் வகுப்புவரை பள்ளி சென்று கல்வியை முடித்துள்ளார்கள் இந்தச் சகோதரிகள். பிறகு தனிப்பட்ட முறையில் ப்ளஸ் டூ மற்றும் அஞ்சல் வழியில் டிசிஏ படித்திருக்கிறார்கள்.

    the great sisters2the great sisters

    கொடிய நோயினால் மனம் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடும் இந்தச் சகோதரிகள், தங்களைப் போன்றே தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக “ஆதவ்” என்ற அறக்கட்டளையைத் துவக்கி அவர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை அளித்து உதவி வருகிறார்கள். தற்பொழுது அவர்களது நோக்கம் தசைச்சிதைவு நோயாளிகளுக்காக மருத்துவமனை ஒன்றை அமைத்து சிகிச்சைக்கு வழி செய்வது. இந்த தளரா உள்ளம் கொண்ட சகோதரிகளின் தன்னம்பிக்கையையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் கீதா இளங்கோவன் “நம்பிக்கை மனுஷிகள்” என்ற குறும்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படம் சகோதரிகளைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் தன்னம்பிகையுடன் வாழ்வை எதிர் கொள்ளவும், பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்து அதன் மூலம் இச்சகோதரிகளின் அறக்கட்டளைக்கும், மருத்துவமனை அமைக்கும் நோக்கத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. அதற்கும் மேலாக, குறையற்ற ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்தாலும் வாழ்க்கையைப் போற்றத் தெரியாதவர்களின் அறிவுக் கண்களையும் இக்குறும்படம் திறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

    ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்களை கட்டுரையின் இறுதிப் பகுதியில் காணலாம்.

    [2]
    மாதவிடாய் குறும்படம் (2012 வெளியீடு)
    படத்தின் ஒரு சிறு பகுதி
    http://youtu.be/9JI_G7NuUR8

    பெண்களின் உடலின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக, பருவமடைந்த பிறகு இயற்கையாக அவர்கள் எதிர்கொள்ளும் `மாதவிடாய்’ எனப்படும் மாதாந்திர உதிரப்போக்கு என்பது பற்றிய ஒரு சரியான புரிதலின்றி, அதுவே பெண்களை ஒடுக்கி வைக்கும் செயலாக நம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த அறியாமையை, 40 மணித்துளிகளில் செய்தி தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓர் ஆவணப்படமாக கீதா இளங்கோவன் தயாரித்தார். “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்ற அறிமுகத்துடன் வெளியாகி மக்களின் கவனத்தைக் கவர்ந்தது. பல சமூக நிலைகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கருத்துக்களை அதில் பதிவு செய்தனர். மாதவிடாய் என்பது ஒரு விவாதத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தக்க வசதியை செய்துதராமல், அவர்களை கீழ்மைப்படுத்தும் தீண்டாமை செயலாக மட்டுமே மக்கள் எண்ணியிருப்பதை அப்படம் வெளிக்கொணர்ந்தது.

    Geetha-Ilangovan-1Geetha-Ilangovan-11

    மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் ஒழித்து பெண்கள் சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்ள பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை என்பது கீதா இளங்கோவன் அவர்களின் கருத்து. “பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி பாலியல் கல்வி” என்று கீதா இளங்கோவன் வலியுறுத்துகிறார். மேலும், ”இந்த ஆவணப்படம், பெண் உலகின் சிரமங்களை, ஆண்கள் புரிந்துகொள்ள நிச்சயம் ஒரு கருவியாக இருக்கும்!” என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

    [3]
    லிட்டில் ஸ்பேஸ் (2011 வெளியீடு)
    http://youtu.be/oiB6oeGb2t8

    ‘லிட்டில் ஸ்பேஸ்’ என்ற மிகச்சிறிய படம் ஓர் ஐந்து மணித்துளிகள் கால அளவில் தொடர்வண்டி பயணத்தில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் எதிர் கொள்ளும் நிகழ்வுகளைத் தொகுக்கிறது. இதில் கீதா இளங்கோவனும் நடித்துள்ளார். உரையாடல்களற்ற, இசைப் பின்னணியில் மாற்றுத்திறனாளிகளின் தேவையை எடுத்துரைக்கிறார். இப்படம் பல பரிசுகளையும், ஹைதராபாத்தில் நடந்த, உலக சிறுவர்களுக்கான படவிழாவிலும் திரையிடப்பட்ட சிறப்பையும் பெற்றது.

    ஊடகங்களினால் சமுதாயப் போக்கையையே மாற்றியமைக்க முடியும் என்பது உலகறிந்த உண்மை. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை, ஆனாலும் பெரும்பாலும் விவாதத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் செய்திகளை சிறப்பான குறும்படங்களாக உருவாக்கி மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பணியைத் தொடர்ந்துவரும் இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டி, வாழ்த்தி அவரது அடுத்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

    ***

    கீதா இளங்கோவன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி: geetaiis@gmail.com
    வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகளிடம் பேசுவதற்கான எண்: 99763 99403

    ஆதவ் அறக்கட்டளை நிர்வாக அலுவலக முகவரி:
    ஆதவ் அறக்கட்டளை
    489-B, வங்கி அலுவலர் குடியிருப்பு
    அஸ்தம் பட்டி, சேலம் -636007
    தமிழ் நாடு, இந்தியா
    தொடர்பு எண் :00919976399403

    ஆதவ் ட்ரஸ்ட்

    நன்கொடைகளை “Aadhav Trust” என்ற பெயருக்கு (Cheque / DD) அனுப்பலாம்.
    Bank Name : Canara Bank
    SB Account Name: Aadhav Trust
    Branch : Suramangalam
    Name : A/c No : 1219101036462
    IFSC Code: CNRB0001219
    MICR Code: 636015005
    வழங்கும் நன்கொடைகளுக்கு வருமானவரி கணக்கு பிரிவு 80G ன் கீழ் வரிவிலக்கு உண்டு.

    சகோதரிகள் வானவன் மாதேவி, இயலிசை வல்லபி ஆதவ் அறக்கட்டளை பற்றிய தகவல்கள் அறிய:
    [1] http://www.aadhavtrust.org/
    [2] https://www.facebook.com/pages/Aadhav-Trust/185118278177615?sk=photos_stream&ref=page_internal
    [3] https://aadhavtrust.wordpress.com/2013/10/25/aadhav-trust-inauguration-of-home-computer-center-library/

    கட்டுரைக்கான படங்கள் உதவி:
    http://www.thehindu.com/
    http://www.penniyam.com/

    தகவல்கள் உதவி:
    [1] http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/why-is-it-the-dirty-word/article4405543.ece
    [2] http://www.thehindu.com/features/cinema/why-is-it-the-dirty-word/article4386137.ece
    [3] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/uneasy-attitude-towards-menses/article4503438.ece
    [4] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/documentary-that-brings-to-light-issues-faced-by-women/article4325003.ece
    [5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1121126
    [6] http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=27656
    [7] http://news.vikatan.com/article.php?module=news&aid=35198
    [8] http://puthu.thinnai.com/?p=26556
    [9] http://www.tamilnewstime.com/ta/content/4675
    [10] http://www.penniyam.com/2014/04/blog-post.html
    [11] http://tamilamudam.blogspot.in/2014/11/blog-post_22.html

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 17, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  சமூகசேவகி சீதாலட்சுமி அவர்கள் 

    DSC_0021

     

    சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் இவ்வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் பாராட்டப்படும் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் எண்பது வயதைக் கடந்த சீதாலட்சுமி அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் மற்றும் இலக்கிய எழுத்தாளரும் வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவைகளைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

    இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே.

    எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரை பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்ர துளஸிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன.

    ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றதையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை.

    இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கணும் சினிமாவிற்குச் சென்றிருக்கணும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு.

    drama-5drama-10

    இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. மின்தமிழ்க் குழுமத்தில் எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    காலங்கள் மாறுகின்றன
    ரசனைகள் மாறுகின்றன
    மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
    மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
    சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
    சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
    மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
    காலம் ஆற்றிவிடும்
    இதுதான் வாழ்க்கை

    என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா.

    என் குணங்களில் “தேடல்“ உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்படும் சீதாம்மாவை வல்லமையாளராக பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 10, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  டாக்டர் ஆர்த்தி பிரபாகர் அவர்கள்

    Arati_Prabhakar-660x731

    சென்ற அக்டோபர் 28, 2014 அன்று தொழில் நுட்பத்தில் உலக சாதனையாக மிக விரைவாகச் செயலாற்றும் மின்னணு மைக்ரோச்சிப் ( the fastest microchip ever made) உருவாக்கப்பட்டதற்கான கின்னஸ் விருது வழங்கப்பட்டது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டதிற்குக் காரணமான “டாக்டர் ஆர்த்தி பிரபாகர்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்வதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்சி அடைகிறோம்.

    அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (United States Department of Defense) ஒரு பிரிவான, “பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை” (Defense Advanced Research Projects Agency – DARPA) என்பது அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகத் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது பெண்ட்டகானின் மிக முக்கிய ஆய்வுப்பிரிவு. அந்நாள் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவரினால் 1958 இல் இரணுவத்தின் தொழல்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவப்பட்டது. Advanced Research Projects Agency (ARPA) என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த நிறுவனமே இன்றைய உலகளாவிய இணையத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், தொலைதொடர்பு தகவல் பரிமாற்ற வளர்ச்சிக்கும் மூல காரணமாகும்.

    கடந்த இரண்டாண்டுகளாக இந்த ‘டார்ப்பா’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பவர் ஆர்த்தி பிரபாகர் (Arati Prabhakar). தனது ஐம்பத்தைந்து அகவையில் தொழில்நுட்பத்தில் ‘கின்னஸ்’ சாதனைக்குக் காரணமான ஆர்த்தி, மூன்றாவது வயதில் அவரது பிறப்பிடமான டெல்லியில் இருந்து இவரது அன்னையின் மேற்படிப்பின் பொருட்டு பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார். இவரது அன்னை கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இளம் வயதிலேயே பொறியியல் படிப்பையும், முனைவர் படிப்பையும் முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கால்டெக்’ (California Institute of Technology – Caltech) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் செயல்முறை இயற்பியலில் (applied physics)  முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்குண்டு.

    இது போன்ற பல “முதன்முதல் சாதனை” என்ற பெருமைகளை ஆர்த்தி நிகழ்த்தியிருக்கிறார். இவர் தனது 34 வயது முதலாகவே பல பெரிய அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் (National Institute of Standards and Technology (NIST), U.S. Venture Partners, Raychem போன்றவற்றில் ) தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியவர். NIST நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த முதல் பெண்மணியும் இவரே, அத்துடன் டார்ப்பாவின் முதல் இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்ட தலைவரும் ஆர்த்திதான். டார்ப்பாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் ஓராண்டு நிதியான ஏறத்தாழ 3 பில்லியன் டாலர்கள் ஆர்த்தியின் நிர்வாக முடிவின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறது.

    ஐந்தாண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை விருதுக்குக் காரணமான இந்தப் புதிய மின்னணு நுண்சில்லின் ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பானது, மின்சமிக்கைகளைப் பெருக்கி ஒரு வினாடிக்கு ஒரு டிரில்லியன் சுழற்சி (அல்லது ஒரு டெஹ்ராஹரட்ஸ்) என்ற முறையில் விரைவுபடுத்துகிறது (the new microchip, or integrated circuit, is a type of “amplifier” for signals, and operates at 1 trillion cycles per second, or 1 terahertz). இந்த விரைவான செயல்திறன் கொண்ட மின்னணு நுண்சில்லு, இரண்டாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மின்னணு நுண்சில்லின் 150 பில்லியன் சுழற்சிகள் கொண்ட 850 கிகாஹர்ட்ஸ் திறன் என்னும் சாதனையை முறியடித்துள்ளது. இதன் விரைவுத் திறனை சராசரி மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு ஊர்தியில் மணிக்கு 32,000 மைல் வேகத்தில் பயணம் செய்வதற்கு ஒப்பான வேகம் எவ்வாறிருக்கும் என ஒப்பிட்டு அறியலாம்.

    Arati_Prabhakar 3

    ஒரு குண்டூசியின் தலைஅளவே உள்ள மிக நுண்ணிய, அதிகத் திறன் கொண்ட புதிய மின்னணு நுண்சில்லுகள், மிக விரைவான தகவல் தொலை தொடர்பிலும், மிகநுண்ணிய தெளிவான படங்களை உருவாக்குவதிலும், மிகத் துல்லியமான கணினித் திரைகளை தயாரிப்பதிலும்,  நச்சுப்பொருட்களையும், வெடிமருந்துகளையும் கண்டறியும் கருவிகளின் செயல்திறனிலும், மருத்துவச் சிகிச்சை முறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

    உலகின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனத்தை திறம்பட நிருவகிப்பதுடன், தொழில்நுட்பத்தில் கின்னஸ் விருது பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள திட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளரான டாக்டர் ஆர்த்தி பிரபாகரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகழ்ச்சி அடைகிறோம்.

     

     

    படம் உதவி:
    Photo courtesy of SRI International and http://www.wired.com/images_blogs/dangerroom/2012/07/Arati_Prabhakar-660×731.jpg
    http://i.livescience.com/images/i/000/071/575/original/darpa-world-record.JPG?1414606185
    http://2.vsr.veooz.com/assets/images/cached/XHfyMzK-360.jpg

     

    தகவல்கள் பெற்ற தளங்கள்:
    Pentagon scientists win first Guinness World Record, by Tanya Lewis, October 29, 2014 –
    http://www.livescience.com/48518-worlds-fastest-microchip.html?cmpid=558431

    Pentagon scientists win first Guinness World Record, By Colby Itkowitz October 29, 2014 –
    http://www.abreakingnews.com/politics/pentagon-scientists-win-first-guinness-world-record-h260587.html

    Exclusive: Darpa Gets a New Boss, and Solyndra Is in Her Past, By Noah Shachtman –
    http://www.wired.com/2012/07/darpa-solyndra/

    Arati Prabhakar –
    http://en.wikipedia.org/wiki/Arati_Prabhakar

    ComputerHistory: DARPA Director Arati Prabhakar in Conversation with The New York Times’ John Markoff
    [https://www.youtube.com/watch?v=JQMhS0oOloc]

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 3, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ‘திரு. இன்னம்பூரான்’ அவர்கள்

    innamburan

     

    சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, கடந்த மாதம் அக்டோபர் 2014 இல், சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கிய, ‘திரு. இன்னம்பூரான்‘ என்று அன்புடன் அழைக்கப்பெறும் மூத்த இளைஞரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் எழுதி வருபவர். இவர் வல்லமை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. வல்லமை இதழின் நலம் விரும்பியாக, வல்லமை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராகப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். வல்லமையாளர் விருது தேர்வுகள் செய்து வந்த திரு. திவாகர் அப்பணியில் இருந்து விடுப்பு பெற்ற காலங்களில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்று விருது வழங்குதலை தொய்வின்றி நடத்திச் சென்று, வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சற்றொப்ப 150 பதிவுகளை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ அளித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும்.

    பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கபூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    வல்லமையில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் திரு. இன்னம்பூரான்.

    innamburan3

    தமிழின் மீது தணியாத  ஆர்வம் கொண்டவர். இவரது தமிழார்வத்தின் காரணமாகதமிழிற்கான  மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுற சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். வல்லமையில் மாணவர் தளம்: தமிழார்வம் என்றும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

    innamburan2ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் எனப் மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராக பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்கு பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு.

    எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம்காரணமாக  திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலை பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா ” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்களை வல்லமையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்துப் பராட்டுவதன் மூலம் வல்லமை விருதும், வல்லமை இதழும் பெருமை அடைகிறது.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  27, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  திரு. வெ. திவாகர் அவர்கள்

    V. Dhivakar

    இந்த மாதம் அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய புயலை, விசாகையில் வசிக்கும் திரு. திவாகர் அவர்கள் அந்தப் பேரிடரிலும் தனது சிரமத்தைப் பொருட்படுத்தாது தொகுத்து வழங்கிய மேன்மையான செயலைப்பாராட்டி அவரை வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான திரு. திவாகரை அறியாத வல்லமை வாசகர்களே இருக்க வழியில்லை. வல்லமை வாசகர்களுடன் தனது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்த “வல்லமையாளர் விருது” வழங்கிப் பாராட்டும் பொறுப்பையும் ஏற்று ஒரு நூறு வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்தவரே அவர்தான். அடுத்தவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் செயலை மேற்கொண்ட சிறந்த வல்லமையாளர்களில் ஒருவரான திவாகர், அப்பணியின் காரணமாகவே காலந்தாழ்த்தி இப்பொழுது வல்லமையாளராகப் பாராட்டப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் திவாகர் ஆந்திராவைக் குறிப்பிடும் பொழுது அடுத்தவீடு என்றே குறிப்பிடுவார். “அடுத்த வீடு – நம் தமிழகத்தின் அடுத்த வீடு இந்த ஆந்திரதேசம்தானே.. ஆந்திரதேசத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…” என்று ஆந்திர அனுபவங்களை “அடுத்தவீடு” என்ற வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். தமிழ்மக்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாளர் போன்று ஆந்திர செய்திகளை ஆறு ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்திருக்கிறார் திவாகர்.

    “ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ” என்று ஆந்திரம்-தெலுங்கான பிரிவினைக்கு முன்னிருந்தே ஆந்திரா தெலுங்கானா சர்ச்சைகளை “அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் தெலுங்கானா பிரச்னை” எனக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பதிவு செய்து வந்திருக்கிறார். மார்கழியில் ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிப்பது, ஆந்திர மாநிலக் கோயில்கள், திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை, காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சி, தெலுங்கு எழுத்தாளர்கள் பற்றி, ஆந்திர உணவு, விசாகப்பட்டின தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் எனப் பல தகவல்களை இதுவரை பகிர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு இதுவரை பதிவு செய்து வந்த அவரது அனைத்து அடுத்த வீட்டுப் பதிவுகளையும் ஒப்பிடும்பொழுது ஹூட் ஹூட் புயலினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது அவருக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் தனது நேரடி அனுபவங்களை அவருடைய அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலங்களை” “ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் – ஒரு நேரடி அனுபவம்”   என்று தமிழ் வெப்துனியா செய்தித் தளத்திலும், கூகுள் தமிழ்க் குழுமங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டது தொழில்முறை செய்தியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிய செயலாகும்.

    மிகச் சிறந்த எழுத்தாளரான திவாகரை பலர் வரலாற்று புதினங்கள் எழுதுபவராகவும் நன்கறிவர். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் வரலாற்றுப் புதினம் “வம்சதாரா” இவர் எழுதிய முதல் வரலாற்று நூல். தொடர்ந்து, சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்பட்ட “திருமலைத் திருடன்” என்ற பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் புதினம், மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914”  என்ற வரலாற்று நூல், “விசித்திர சித்தன்”, “தேவன் நூறு”, “நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்”, “ஆனந்த விநாயகர்” என்ற தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல், சோழ மன்னன் குலோத்துங்கனின் காலக் கதையான “அம்ருதா” என்ற சமீபத்திய வரலாற்று நூல் வரை பலநூல்களை வெளியிட்டுள்ளார்.

    V. Dhivakar3

    திவாகரின் தமிழ்ப்பணி இலக்கியபபடைப்புகள் என்ற வட்டத்தில் அடங்கியதல்ல. அவர் தேவாரத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறார். அங்கு தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலை நிறுவிய பணியிலும் பெரும் பங்காற்றினார். “வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?…..இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்” என்று நகைச்சுவையாக தனது தமிழ்ச்சங்க பணிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் திவாகர்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்த பொழுது இவர் வாசித்ததமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற ஆய்வுக்கட்டுரை நல்ல பல ஆலோசனைகளை முன் வைத்தது. அக்கட்டுரையின் முக்கியக் கருத்துகள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது:

    […]

    இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும்.

    V. Dhivakar2
    […]
    இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.
    [ http://www.aduththaveedu.blogspot.com/2010/06/blog-post.html ]

    கவியரங்கில் பங்கு கொண்டு கவிதை வாசிக்கும் திவாகர் ஒரு கவிஞரும் கூட, பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது என்று விளக்கமுறைத்து “பிரிவு நிரந்தரமே” என்று இவர் வழங்கிய இவரது கவிதையில் ஒரு பகுதி …

    ஒன்றா இரண்டா
    ஐம்பது வருட பந்தம்
    உன்னோடு என் உறவு
    இனியும் வேண்டுமோ

    எப்படியெல்லாம் இருந்தோம்
    எண்ணிப்பார்க்கிறேன் நான்
    அழுகை வருகிறது எனக்கு
    அன்பான அந்தக் காலகட்டம்

    பல்லின் முழு முறையிடலையும் (முழுக்கவிதையும்) இங்கு காணலாம் – http://www.vamsadhara.blogspot.com/2009_03_18_archive.html

    இந்த நகைச்சுவைக் கவிதையைப் போன்றே, இவரது தொலைபேசி உரையாடல் வழி நிகழ்வுகளை விவரிக்கும் நகைச்சுவைக் கதைகளும் திவாகரின் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்று நூல், வலைப்பதிவுகள், நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்ச்சங்கப் பணிகள் என தமிழுக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்தி வல்லமைக் குழுவினர் எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  20, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  மருத்துவர் சி. வீரப்பன் அவர்கள்

    Dr Chithambaram Veerappan

    இங்கிலாந்து மான்செஸ்டரில் மருத்துவராகப் பணிபுரியும் சி. வீரப்பன் அவர்கள் “மதிப்புமிகு உறுப்பினர்” (Honorary Member) என்று செப்டம்பர் 2014 இல் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய தீவிர சிகிச்சை மருத்துவக் கழக (European Society of Intensive Care Medicine) மாநாட்டில் விருது பெற்றவர்.  இந்நாள்வரை இவ்விருது பெற்றோர் பதின்மூவர் மட்டுமே, இவ்விருது பெற்ற முதல் ஆசியர்/இந்தியர்/தமிழர் என்பது கூடுதல் சிறப்புச் செய்தி. மருத்துவர் வீரப்பன் சிறப்பு விருது பெற்றமையைப் பாராட்டியும், மருத்துவத்துறை அறிவியல் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பாராட்டியும் வல்லமைக் குழுவினர் அவரை வல்லமையாளர் என்று அறிவிப்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம்.

    awardto_Dr.veerappan02-600x450

    தமிழகத்தில் பிறந்து தேவக்கோட்டை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை நகர்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, 1974 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் மருத்துவர் வீரப்பன் அவர்கள். இங்கிலாந்திற்கு 1977 இல் குடிபெயர்ந்த வீரப்பன் முதியோர் நல மருத்துவம்,  உணர்வகற்றும் மருத்துவம் (geriatric medicine & anaestheticmedicine) ஆகிய துறைகளில் பணியாற்றிய பிறகு, 1985 ஆம் ஆண்டு முதல் தீவிர சிகிச்சை  (Intensive Care Medicine) மருத்துவத் துறையில் பணியாற்றத் துவங்கினார். வெகு விரைவில் அத்துறை மருத்துவத்தின்  பயிற்சியாளராகவும்  உயர்ந்து ராயல் ஓல்தாம் மருத்துவமனையில் ( Royal Oldham Hospital) அரும்பணியாற்றி வருகிறார்.

    தான் பணியாற்றும் இடர்நல மருத்துவத்துறையின் சிறந்த சிகிச்சை முறைகள் யாவையும் அத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் மருத்துவத்துறை பயன்பெறும் என்ற நோக்கில் 2004 ஆண்டில் தனது சொந்த முயற்சியில் ஒருநாள் கருத்தரங்கு (Annual Critical Care Symposium) ஒன்றை நடத்தினார்.  அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து கருத்தரங்கு நிகழ்சிகளை இருநாட்களுக்கு விரிவுபடுத்தி இன்று வரை கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார். முதலில் சிறு முயற்சியாக துவக்கப்பட்ட கருத்தரங்கங்கள் நல்ல வரவேற்பு பெற்று, பத்தாவது கருத்தரங்கில் உலகளாவிய மருத்துவர்கள் பங்குபெறும் கருத்தரங்காக,  அதில்  425 மருத்துவர்களும், 50 வல்லுநர்களும் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. இந்தக் கருத்தரங்கை 2010 ஆம் ஆண்டில் வீரப்பன் சென்னையில் கூட்டினார். இவ்வாறு நடத்தப்படும் கருத்தரங்கங்கள் நடத்தும் செலவிற்கு போக மிஞ்சிய தொகையை  தான் பணிசெய்யும் ஓல்தாம் மருத்துவமனைக்கு தனது நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

     12

    இவரது கல்விநோக்கம் கொண்ட இடர்நல மருத்துவக் கருத்தரங்கங்கள் நடத்தும் முயற்சியைப் பாராட்டி, 2013-இல் பிரிட்டனின் தீவிர சிகிச்சை மருத்துவக்கழகம் இவருக்கு “சிறப்புமிகு உறுப்பினர்” (Distinguished Member of the Intensive Care Society of UK) என்ற விருது வழங்கியது. இதுவரை இந்த விருது 2006-ஆம் ஆண்டு வரை 11 உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதும், பிறகு  7 ஆண்டுகளுக்குப்பின் வீரப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது இவரது சிறப்பிற்குச் சான்று.

    மருத்துவத் துறையில் பயிற்சியாளர் என்ற அனுபவத்தில் இக்கால மருத்துவத் துறை மாணவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகள்:

    – தொழில் நுட்பத்தையும் மின்னணுக் கருவிகளின் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்யும் மருத்துவத்தைத் தவிர்த்து, நோயாளியின் உடற்பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சோதனை முடிவிற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும்

    – நோயாளி உங்கள் உறவினர் என்ற கோணத்தில் அவரை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும்

    – சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளைச் செய்வது சிறந்தது என்ற எண்ணத்தையும், தற்கால தொழில்நுட்பம் வழங்கும் கருவிகளைப் பயன்படுத்தி வழங்கும் மருத்துவமே சிறந்தது என்ற எண்ணத்தைக் கைவிடுதல் நல்லது

    இடர்நல மருத்துவக்கல்வியை முன்னிட்டு மருத்துவத்துறையில் சீர்மையாளராக (Vocational Excellence) பணியாற்றிவரும் வீரப்பன் அவர்களுக்கு வல்லமையாளர் விருது வழங்கிப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

     

     

    Info From:
    http://gmccn.org.uk/
    http://www.esicm.org/upload/542e6aa7a1d48-citations-chithambaram.pdf
    http://www.akaramuthala.in/
    http://www.devakottainagarathar.org/newsctv.php

     

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!

    தேமொழி.

     

    675px-Eclipse_Chistophe_Colomb

     

    கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய  ஒரு புதிய கடல்வழித்தடத்தை கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார்.  பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார்.  ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார்.  இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் போர்ச்சுகீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.

    இருப்பினும்  ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்கு கொலம்பஸ் செய்த உதவியே காரணம்.  அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழி.   கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில்  கொண்டாடப்படுகிறது.

    கொலம்பஸ் தினமான அக்டோபர் 12, 2014 க்கு சில தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 8, 2014 அன்று நிகழ்ந்த முழுச்சந்திரகிரகணமும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததில் பலருக்கு சந்திரகிரகணத்தையும்  கொலம்பசையும் இணைக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சியையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.

    Columbus_Before_the_Queenதனது இந்தியப் பயணங்களில் மூன்று முறை தோல்வியடைந்திருந்த கொலம்பஸ் தனது கடலோடிக் குழுவினரையும், பழங்குடி மக்களையும் கொடுமைப்படுத்திய காரணத்திற்காக கைகால்களில் விலங்கிடப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.  கரீபிய தீவுகளில் ஆளுநர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மன்னரும் அரசியும் மனமிரங்கி  அவரை மன்னித்து மீண்டும் ஒருமுறை பயணம் செய்து இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்க உதவ முன் வந்தனர். நான்காவது  முறையாக தனது  கடற்பயணத்தை 1502 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் துவக்கினார் கொலம்பஸ். இப்பயணத்தில் அவருடைய சகோதரேகள் பார்த்தலோமோ, டியாகோ மேண்டேஸ், கொலம்பஸின் 13 வயது மகன் ஃபெர்னாண்டோ ஆகியோரும் உடன் பயணித்தனர்.

    ‘காப்டியானா’, ‘கல்லீகோ’, ‘விஸ்கைனா’, ‘சாண்டியாகோ டி பாலோஸ்’ என்ற நான்கு கப்பல்களில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தனர்.  கடற்புழுக்கள் கப்பலின் மரத்தை கரையான் போல அரித்துவிட இரு கப்பல்களில் துளைகள் விழுந்து நீர் உள்ளே வரத் துவங்கிய காரணத்தினால் கொலம்பஸ் அந்தக் கப்பல்களைக் கைவிட நேர்ந்தது. கரீபியன் கடல் பகுதியை அடைந்து, அங்கு தீவுகளையும் மத்திய அமெரிக்க பகுதிகளையும் சுற்றிவரும்பொழுது கியூபா நாட்டின் பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கி அடுத்த இரு கப்பல்களும் சேதமடைந்து 1503 ஆம் ஜூன் மாதம், ஜமைக்காவின் வடகரையில் ‘செயின்ட் ஆன்’ வளைகுடாப் பகுதியில் கரைதட்டி நின்றன.  சென்ற முறை அங்கு வந்திருந்த பொழுது ஏற்படுத்திய ஸ்பானிஷ் குடியிருப்புகளின் உதவியை நாடித்  தகவல் அனுப்ப சிறு படகொன்றில் சிலரை அனுப்பிவிட்டு தனது குழுவினருடன் ஜமைக்காவில் கொலம்பஸ் காத்திருந்தார். இவ்வாறு சற்றொப்ப ஓராண்டு காலம் போல அப்பகுதியில்தங்கும் நிலை ஏற்பட்டது.

    அப்பகுதியில் வாழ்ந்த  ‘அராவாக்’ (Arawak Indians) பழங்குடியினர் நட்புள்ளம் கொண்டவர்கள் என்றாலும், கொலம்பஸும் அவர் குழுவினரும் செய்யும் அடாவடிகள், கலவரம், கொள்ளை ஆகியவற்றில் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்கள்.  முதலில் அன்புடன் உதவியவர்கள், பின்னர் கொலம்பஸ் கேட்ட அளவிற்கு அவர்குழுவினருக்கு உணவு அளித்துப் பராமரிக்க மறுத்துவிட்டனர். கடற்பயணிகள் வழங்கிய பண்டமாற்றுப் பொருள்கள் யாவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இல்லாமல் (தகர ஊதுகுழல்கள் போன்றவை) அவர்கள் ஆர்வத்தையும் கவரவில்லை.  இதன் விளைவாக கொலம்பஸ் குழுவினர் பசி பட்டினியில் நொந்து போனார்கள்.  தங்களுக்கு உதவி வரும் வரை எப்படித் தாக்குப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த கொலம்பஸிற்கு, நூல்களைப் புரட்டியதில் ஒரு யோசனையும் கிடைத்தது.

    regiomontanusஅக்காலத்தில் கடற்பயணம் செய்பவர்கள் மிகத் தடித்த வானியல் குறிப்புக்கள் கொண்ட நாட்குறிப்பு நூல்களை தங்கள் பயணத்திற்குத் துணையாகக் கொண்டு செல்வார்கள்.   இது ‘அல்மனக்’ (Almanac) என்றழைக்கப்படும்.  இந்திய மக்கள் வானின் கோள்களைக்  கணித்துப் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றே சூரியன், சந்திரன், மற்ற பிற கோள்களின் நிலையையும், பயணத்திற்கு வழிகாட்டி உதவும் விண்மீன் கூட்டங்களையும், தட்பவெட்ப நிலைக் குறிப்புகளையும்  கொண்ட நிரல்களும் அட்டவணைகளும் கொண்டது இந்த அல்மனக். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் நாட்டு கணிதமேதையும் வானியல் வல்லுனருமான ‘ரிஜியோமாண்ட்டனஸ்’ கோள்களைக் கணித்து வழங்கிய நாட்குறிப்பில் (Ephemeris of the German astronomer Regiomontanus) கொலம்பஸிற்கு ஒரு தகவல் கிடைத்தது.  அந்த1504 ஆம் ஆண்டு, பிப்ரவரி  மாதம் 29 ஆம் நாள் ஜமைக்கா பகுதில் முழுசந்திரகிரகணம் தோன்றும் என்ற குறிப்பு அந்நூலில் அவருக்குக் கிடைத்தது.

    இத்தகவல் தெரிந்ததும் கொலம்பஸ் அராவாக் பழங்குடியினருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். தங்களை வெறுத்து சரிவர நடத்தாமல், உணவும் வழங்காத பழங்குடியினர் மீது அவருடைய கிறிஸ்துவக் கடவுள் மிகக் கோபமான இருக்கிறார்.  தான் கோபம் கொண்டதை உணர்த்த இரு நாட்களில் நிலாவை மறையச் செய்து அதனை செந்நிறமாக்கி தனது கோபத்தை பழங்குடியினருக்கு உணர்த்துவார்.  அவர்களது நடவடிக்கை மாறாவிட்டால் பழங்குடியினருக்கு  கேடு காலம்தான் என்று   மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கொலம்பஸ் கதைகட்டினார்.  பழங்குடியினர் அதை நம்பவில்லை, சிலர் பகடி செய்தும் நகர்ந்தனர்.  ஆனால் கொலம்பஸ் குறிப்பிட்ட நாளில் கீழ்வானில் நிலா வழக்கம் போலத் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கிரகணம் துவங்கி, இருள் சூழத் துவங்கியது.  பழங்குடியினர் அச்சமடைந்து கொலம்பஸ்ஸிடம் ஓடிவந்தார்கள்.

    “பழங்குடியினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பல திசைகளில் இருந்தும் கப்பலை நோக்கி ஓடிவந்தார்கள்.  தங்களுக்காக கொலம்பஸ் கடவுளிடம் பேசி கடவுளை அமைதிப்படுத்த வேண்டும், இனி தவறாது உணவு தர சம்மதம் என்று உடன்பட்டார்கள்” என்று கொலம்பஸின் மகன் ஃபெர்னாண்டோ தனது குறிப்பில் எழுதியுள்ளார்.  கொலம்பஸ் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மணற்கடிகாரத்தை நிமிர்த்தியும்  கவிழ்ந்தும்  காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.  கிரகணம் முடியும் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து கடவுள் இனி அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார், தனது கோபத்தை மறந்து அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யப்போவதில்லை என்பதற்கு அடையாளமாக நிலா சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அறிவித்தார்.  பின்னர் பழங்குடியினர் ஒத்துழைப்பு அவருக்குத் தவறாது கிடைத்தது.

    கொலம்பஸ் ஜமைக்கா பகுதியில் வந்து சேர்ந்த ஓராண்டு கழித்து 1504 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு உதவிக்  கப்பல் வந்து சேர்ந்தது.  அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் திரும்பினார், பின்னர் தனது 54 ஆவது வயதில், முடக்குவாதம் கொடுத்த மூட்டுவலியின் காரணமாகவும், உணவு ஒவ்வாமையின்  காரணமாக இரு ஆண்டுகளில் (மே 20, 1506) அவர் மரணமடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவரவர் பின்னணியின் காரணமாக கொலம்பஸ் செய்தது புத்திசாலித்தனம் என்றும், அவர் செய்தது அறநெறிக்கு மீறிய சூழ்ச்சி, பழங்குடியினரை ஏமாற்றியது சரியல்ல என்றும் கருத்தில் வேறுபடுவர்.  ஆனால் இது அறிவிப்பது ‘அறிவே சக்தி’ (Knowledge is Power) என்பதைத்தான். ஆர்வமூட்டும் இந்த நிகழ்வு சில எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர, இதை அடிப்படையாக வைத்து கதைகள் எழுதத் துவங்கினர். சிலர் சூரியகிரகணம் என்று மாற்றியும் கதைபுனைந்தனர்.  அவற்றில் குறிப்பிடத்தக்கன, எச். ரைடர் ஹாகர்ட் எழுதிய  ‘கிங் சாலமான்ஸ் மைன்ஸ்’ (H. Rider Haggard’s King Solomon’s Mines) என்ற கதையும், மார்க் டுவைன் எழுதிய  ‘எ கனிக்ட்கட் யாங்கீ இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்’ (Mark Twain’s A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற கதையும், டின் டின் படக்கதையான, ‘ப்ரிசனர்ஸ் ஆஃப் தி சன்’ (Hergé’s Tintin adventure Prisoners of the Sun) என்ற கதையுமாகும்.  தங்கள் கதைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் எந்த கிரகணமும் நிகழவில்லை என்பதையும் சில ஆசிரியர்கள்  கவனமின்றி கையாண்டும் உள்ளார்கள்.

     

     

    படங்கள் உதவி:
    http://en.wikipedia.org/wiki/File:Emanuel_Gottlieb_Leutze_-_Columbus_Before_the_Queen.JPG
    http://en.wikipedia.org/wiki/File:Eclipse_Chistophe_Colomb.jpg
    http://zoroastrian.ru/files/star2/regiomontanus%20(6).jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Tablas_alfonsies.jpg/1024px-Tablas_alfonsies.jpg

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  13, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பேராசிரியர் பிரியம்வதா நடராஜன் அவர்கள்

    Prof. Priyamvada Natarajan

    சென்ற வாரம் உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், எதிர்காலத்தில் இவருக்கும் நோபல் பரிசு வழங்கப் பெறும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்  நம்பிக்கை நட்சத்திரம் ஒருவர் இவ்வார வல்லமையாளர் என வல்லமை குழுவினரால் பாராட்டப்படுகிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற  “ஐவீ லீக்” பல்கலைக் கழகமான யேல் பல்கலைக் கழகத்தில், வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் பிரியம்வதா நடராஜன் அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்திருப்பவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    பேராசிரியர் பிரியா கருத்தைக்கவரும் கல்வி மற்றும் ஆய்வுப் பின்னணியைக் கொண்டவர்.  இந்தியத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிரியா கோயம்புத்தூரில் பிறந்தவர்.   பெற்றோருடனும் உடன்பிறப்புகளுடனும் டெல்லியில் வாழ்ந்து கல்வி பயின்றவர்.  பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் எம்.ஐ.டி (M.I.T – Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA)  பல்கலைகழகத்தில் பயின்று இயற்பியலிலும் கணிதத்திலும் என இரு இளநிலைப் பட்டங்கள் பெற்றுள்ளார்.

    தொடர்ந்து மேல்நிலைக் கல்வியையை மற்றொரு உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகமான இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  (Institute of Astronomy, University of Cambridge in England) பயின்றார். வானியற்பியல் கோட்பாடுகளில் (Theoretical Astrophysics ) முதுநிலைக் கல்வி மற்றும் முனைவர் ஆய்வை மேற்கொண்டார்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியாகப் பொறுப்பேற்கும் முன்னர், கனடாவின் டொரோண்டோவிலும் முதுநிலை முனைவராக (Postdoctoral Fellow at the Canadian Institute for Theoretical Astrophysics in Toronto, Canada) பயிற்சி பெற்றுள்ளார்

    வானியற்பியல் பேராசிரியர் பணியுடன் தொடர்ந்து வானியற்பியல் கோட்பாடுகள், விண்மீன்கள் கூட்டம், பால்வெளி மண்டலம் அதன் கருந்துளைகள் ஆகியவற்றினைப் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார்.  இத்துறையில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான ஆய்வறிக்கைகளையும் பிரியா வெளியிட்டுள்ளார்.

    இவருடன்  இணைந்து  ஆய்வு மேற்கொண்ட  ‘எசிக்குயல் ட்ரைஸ்ட்டர்’  (Ezequiel Treister) என்பாருடன் இவர் வெளியிட்ட  ஆய்வின் முடிவு இயற்பியல் துறையில் ஓர் இன்றியமையாத்  திருப்புமுனையாகும்.  “தொடர்ந்து வளரும் பெரும் கருந்துளைகளின் நிறைக்கும் அவற்றின் வளர்ச்சியில் ஓர் உச்ச வரையறை உண்டு” என்ற இவரது கண்டுபிடிப்பு கருந்துளைகள் பற்றிய புதிய, இயற்பியல் துறைக் கண்டுபிடிப்பாகும். விண்மீன் கூட்டங்களின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு பெரும்பங்கு அளித்துள்ளது இவரது இந்தக் கண்டுபிடிப்பு. இவரது  “கருந்துளை நிறையின் உச்சவரையறைக் கோட்பாடு” சர் சி வி இராமனின் “இராமன் விளைவு”, சந்திரசேகரின் “சந்திரசேகர் வரையறை” ஆகியவற்றிற்கு ஒப்பானது.

    இவர் ஆய்வின் சுருக்கமான விளக்கம்: விண்மீன் கூட்டங்களின் மையத்தில் இருக்கும் கருந்துளை தனது ஈர்ப்பு விசையின் காரணத்தினால் அதனருகில் அகப்படும் சக்திகுறைந்த விண்மீன்களையும், கோள்களையும் தன்னுள் விழுங்கி வளர்கிறது.  தொடர்ந்து வளரும் கருந்துளையின் நிறையின் உச்ச எல்லையானது  அந்தகோள்களின் கூட்டத்திலிருக்கும்  சூரியனின் நிறையைப் போன்று பத்து பில்லியன் மடங்குவரைதான் அதிகரிக்கும், இந்த நிறையின் அளவு  கருந்துளை இருக்கும் விண்மீன் கூட்டத்தின் மொத்தநிறையின் ஒரு விழுக்காடு ஆகும் (the ultra-massive black holes, which lurk in the centers of huge galaxy clusters, seem to have an upper mass limit of about 10 billion times that of the Sun or about one percent of the total mass of the giant galaxies in which these black holes are found).  இவ்வாறு வளரும் கருந்துளை புதிய விண்மீன்கள் தோன்றும் அண்டமாகவும் விளங்குகிறது.

    இந்த வானியற்பியல் கோட்பாட்டின் திருப்புமுனையான கண்டுபிடிப்பின் காரணத்தினால் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று கணிக்கப்பட்டு, அப்பரிசு பெறத் தகுதியானவர் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றும் வருகிறார்.   இவரது அறிவியல் சாதனையின்  முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டு  இவருக்கு எதிர்காலத்தில் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று வல்லமைக் குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Contact Info:
    Professor Priyamvada Natarajan
    Departments of Astronomy & Physics
    Yale University
    New Haven, CT 06511
    phone: +1-203-436-4833 (office)
    email: priyamvada.natarajan@yale.edu
    webpage: http://www.astro.yale.edu/priya

    கட்டுரைக்கான சான்றுகள்:
    Professor Priyamvada Natarajan’s Research Articles
    http://arxiv.org/find/astro-ph/1/au:+Natarajan_P/0/1/0/all/0/1
    Showing results of 115 total for all:natarajan

     

    Priyamvada Natarajan
    http://www.astro.yale.edu/priya/index.html
    http://en.wikipedia.org/wiki/Priyamvada_Natarajan

     

    நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண் – தி இந்து
    http://tamil.thehindu.com/general/education/article6411847.ece

     

    இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி
    http://jayabarathan.wordpress.com/first-indian-tamil-woman-scientist/

     

    Astronomers Discover Upper Limit for Mass of Giant Black Holes
    http://www.ifa.hawaii.edu/info/press-releases/Treister9-08/UMBHs.html

     

    Astrophysics: Is there an upper limit to black hole masses?
    Priyamvada Natarajan, Ezequiel Treister
    (31 Aug 2008)
    http://arxiv.org/abs/0808.2813
    http://arxiv.org/pdf/0808.2813v2.pdf

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  6, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  இந்திராணி அவர்கள்

     

    indhirani

    பொதுவாக, ஒரு மேம்போக்கான கோணத்தில் அணுகுவோமானால் ஆன்மிகம் என்ற அடிப்படையில் நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது என்பதை யாவரும் அறிவோம். இருப்பினும் இக்கொலுவிற்குப் பற்பல பரிமாணங்கள் உண்டு.  பொம்மைகள் செய்பவர்களின் வாழ்வாதாரத்தில் தொடங்கி  பொருளாதார அடிப்படையில் விழாவினை முன்னிட்டு   நாட்டின் செல்வ வளம் பரவுதலை  ஊக்குவிக்கும் செயலாக இவ்விழா அமையும் என்பதும், கலைகளின் வளர்சிக்குத் தூண்டுகோலாக அமைவதற்காகவும், இளையதலைமுறைக்கு நாட்டின் காலாச்சார பின்னணியை கொண்டுசெல்லும் முயற்சியாகவும் பலவகைகளின் நாம் நவராத்திரி கொலுவினைப் போற்றலாம்.  அதற்கும் மேலாக மேலும் சில பரிமாணங்களை அறிமுகப்படுத்துகிறார் இவ்வார வல்லமையாளர் இந்திராணி. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மறுசுழற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கொலுவைப்பதுடன் அத்துடன்  கல்வி, தொண்டு ஆகியவற்றையும் இணைத்து புதுமை செய்திருக்கும் இந்திராணி அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும்  74 அகவையை நெருங்கிய இந்திராணி அவர்களுக்கு சிறு வயது முதலே கொலுவைப்பதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலோர் புராணக்கதைகள், தசாவதார பொம்மைகள் என்பதுடன் கொலு வைக்கும்  நிலையில் இருக்கும் பொழுது,  பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏதேனும் ஒரு கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு கொலு அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் இந்திராணி.  பொங்கல்,விவசாயம்,கிராம திருவிழா என்பது போன்ற பல பின்னணிகளில்  தனது கற்பனையைக் கட்டவிழ்த்து கொலுவைத்தவர்.  மிகவும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய கொலுக்களில் ஒன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இருபது அம்சத்  திட்டத்தை விவரிக்கும் இவரது கொலுவாகும்.  இதன் சிறப்பைக் கண்டவர்கள், இது பள்ளிச்சிறார்களுக்கு  நல்ல தகவலைக் கொடுக்கும் கொலு எனக் கருதி மேலும் சிலநாட்களுக்கு கொலுவை நடத்த கோரிக்கை வைத்துள்ளார்கள் என்ற செய்தி அக்கொலுவின் சிறப்பைக் காட்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக இவர் சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு குப்பைகளாக நாம் எறிந்துவிடும் காகிதக் கோப்பைகள், மருந்து புட்டிகள், தினசரித்தாள்கள், கெட்டியான அட்டைகளைக் கொண்ட வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள்,  பரிசு பொருட்களைச் சுற்றப் பயன்படும் காகிதங்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் அவற்றில் பொம்மைகள் செய்கிறார்.

    காகிதக் கோப்பைகளால் உருவாக்கிய தோரணங்களுடன் இந்திராணி
    காகிதக் கோப்பைகளால் உருவாக்கிய தோரணங்களுடன் இந்திராணி

       gallery1gallery2

    ஆண்டின் துவக்கத்திலேயே திட்டமிட்டு பொருட்களை சேகரித்து, ஒரு நாளில் ஆறுமணி நேரமாவது செலவழித்து அவற்றைக்கொண்டு  தோரணங்கள், துளசிமாடங்கள், நாட்டியப் பெண்கள், பூந்தொட்டிகள் என்று பலப்பலவகையில் பொம்மைகள் செய்கிறார். இவரது  கைத்திறமையால் குப்பைகள் கருவூலமாக மாறுகின்றன என்று சொல்வோமானால்  மிகைபடுத்துதல் கிடையாது.  சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் வடிவமையக்கப்படும் இந்தப் பொம்மைகளை வியக்கவைக்கும் வகையில் தொண்டு செய்யும் நோக்கிலும் பயன்படுத்துகிறார்.  இந்த பொம்மைகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை மாணவியர் கல்விக்காக வழங்கி உதவியும் செய்து வருகிறார்.

    தொன்றுதொட்டு வரும் விழாவில் சுற்றுச்சுழலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் குப்பைகளின் மறுசுழற்சி, மாணவியரின் கல்விக்கு பொருளுதவித் தொண்டு எனப் புதிய உயரத்திற்கு கொலுவை உயர்த்திய வல்லமையாளர் இந்திராணி அவர்களுக்கு வல்லமை குழுவினர் பாராட்டுகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தகவலும் படங்களும் வழங்கியவர்: தினமலர் செய்தியாளர் – எல்.முருகராஜ்
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1074201

    இந்திராணி அம்மையாரைப் பாராட்டவும், பொம்மைகள் பற்றிய தவலறிய தொடர்பு கொள்ளவும் அவருடைய தொலைபேசி எண்: 9940146233.

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 29, 2014

    இவ்வார வல்லமையாளர்கள்
    வல்லமைமிகு  இஸ்ரோ அறிவியலாளர்கள்

    mars news 4a

     

    செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில் பங்கு பெற்று, சென்ற வாரம் (2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று) செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் முதல் முயற்சியிலேயே நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணமான இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களையும், அவர் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து இஸ்ரோ அறிவியலாளர்களையும் இவ்வார வல்லமையாளர்கள் எனப்  போற்றிப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    சென்ற வாரம் இந்திய வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வாரம், உலக அரங்கையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையை நிகழ்த்தினார்கள் நம் இஸ்ரோ அறிவியலாளர்கள். செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள், அங்குள்ள கனிம வளம் ஆகியவற்றை  கூர்ந்தாய்வு செய்வதற்கான கருவிகளுடன்  ஆளில்லாத விண்கலமான மங்கல்யான், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5ம் நாளன்று செலுத்தப்பட்டது. இந்த மங்கல்யான்    வெற்றிகரமாக முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கோளின் சுற்று வட்டப் பாதையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதியன்று  துல்லியமாக  நிலைநிறுத்தப்பட்டது. பல அயலகச் செய்தித்தாள்களும் சலிப்பின்றி மீண்டும் மீண்டும் தவறாமல் தங்கள் செய்திகளில்  குறிப்பிட்டது இந்தியாவின்  இந்த செவ்வாய் திட்ட விண்வெளிச் சாதனையை.

    முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் இந்தியாவின் மங்கல்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது  விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இந்த அரிய சாதனையைப் புரிந்ததன் மூலம்  முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற  நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்குக் கிட்டியுள்ளது. “இச்செயல் பங்களூரில் இருந்து ஒரு கோல்ஃப் பந்தை லண்டனில் இருக்கும் ஒரு குழியில், அதுவும் முதல் வீச்சிலேயே விழச்செய்யும் அளவிற்குத் துல்லியமானது,” என்றும் ஒரு அறிவியலாளர் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்ய அறிவியலாளர்களாலும் கூட  முதல் முயற்சியிலேயே இச்செயலில் வெற்றி பெற இயலவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இச்சாதனை இந்திய அறிவியலாளர்களின் தொழில்நுட்பத் திறனை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஒரு குறிப்பிடத்தக்க செயலாக அமைந்ததுவிட்டது.

    அத்துடன், செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் செயற்கைக்கோளை நிலை நிறுத்திய  நான்கு விண்வெளி நிறுவனங்களில் ஒன்று இந்தியாவின் இஸ்ரோ. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளன.  ஆசிய நாடுகளில் முதன்முதலில் வெற்றிபெற்ற  நாடு இந்தியா என்பதும், சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களை இம்முறை இந்திய ஆய்வாளர்கள் இந்தப் போட்டியில் விஞ்சிவிட்டார்கள் என்பதும் மற்றொரு சாதனை.

    வரலாற்றிலேயே, உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம், உள்நாட்டிலேயே இந்திய அறிவியலாளர்களால்  உருவாக்கப்பட்டு செவ்வாயின் சுற்றுப் பாதையில்  மிகக் குறைந்த செலவில்  நிலைநிறுத்தப்பட்ட ஒரே செயற்கைக்கோளும்  மங்கல்யான்தான்.  திட்டசெலவின்  அடிப்படையில் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் எனவும்  இது புகழ்பெற்றுள்ளது. இந்தச் சாதனையை,  ஹாலிவுட் படத்தயாரிப்பின் செலவினும் மிகக் குறைந்தது என்றும், இந்த மாதம் அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் அனுப்பிய துணைக்கோளான மேவன் (Maven) திட்டத்தின் பத்தில் ஒரு பங்கு செலவு இது என்பதையும் ஒப்பிடாது இச்செய்தியை அளிக்க எந்த செய்தி நிறுவனத்தினாலும் இயலவில்லை.

    இந்த சாதனைகளுடன் உலக செய்தியாளர்களைக் கவர்ந்ததும்,  யாரும் எதிர்பாராத வகையில்  வியந்து போனதுமானது என்றால் அது இந்திய விண்வெளித்துறையில், செய்வாய் கோளின் மங்கல்யான் திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் ஆய்வாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் பங்கு பெற்று இருப்பதேயாகும்.  இஸ்ரோ தனது வெற்றிகரமான வேளையைக்  கரவொலி எழுப்பிக் கொண்டாடியதைப்  படம் பிடித்த செய்தி நிறுவனங்கள் அவற்றை  வெளியிட்ட பொழுது, டுவிட்டர் சமூக வலைத்தளம் புதுவகையில் உற்சாகம் கொண்டது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் கைகுலுக்கிப் பாராட்டிக்கொண்டும், வாழ்த்துகள்  தெரிவித்துக் கொண்டுமிருந்த பெண்களை, மலர் சூடிய கூந்தலுடனும் இந்தியக் கலாச்சார உடையுடனும் கொண்டாடிய அறிவியலாளர்களைக் கண்ட உலக ஊடகங்கள் அனைத்தும் எதிர்பாராத  வியப்பில் மூழ்கியது தெளிவாக விளங்கியது.

    isro scientists

    “இது போன்று பெண்களின் பங்களிப்பை நாசா படங்களில் பார்த்ததில்லையே”, “இந்தியாவின் மார்ஸ் திட்டத்தின் முகங்கள் இப்பெண்மணிகள், இவர்கள்தான் உண்மையான முன்மாதிரிகள்” என்ற செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. “கடைசியாக இத்தனை பெண்கள் விண்வெளி ஆய்வில் பங்கு பெற்றதை நாம் எப்பொழுது பார்த்திருக்கிறோம்?” என்று வியந்தார் எகிப்திய  ஊடகவியலார் மோனா எல்ட்டாஹவி (@monaeltahawy).

    கார்டியன் , நியூஸ்வீக் , பி ஆர் ஐ , பி பி சி , நியூ யார்க் டைம்ஸ் என உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் யாவும் மங்கல்யான் வெற்றிச் செய்தியுடன் இந்தியப் பெண் அறிவியாலாளர்களின் படங்களைத்தான் வெளியிட்டன.

    இஸ்ரோவின் சற்றொப்ப 14,000 பணியாளர்களில் 20% பெண்கள் என்பது ஒரு வியப்பான செய்தியாகப் பரவியது.  மினால் சம்பத், நந்தினி ஹரிநாத் போன்ற இஸ்ரோ அறிவியலாளர்களைப் பற்றி இந்தியர்கள் முன்னரே அறிந்தவர்கள்தான் என்றாலும், அவர்களும் இந்த அளவிற்கு  பெண் அறிவியலாளர்கள் கட்டுப்பாட்டறையில் பங்கு பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதை முதன் முதலாக அறிந்து வியந்ததை  டுவிட்டர் செய்திகள் காட்டின.

    கீழே குறிப்பிட்ட படம் ஆயிரத்திற்கும் அதிகமுறை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

     

    #Mangalyaan, #IndiaAtMars, #marsorbitormission, #MarsMission, #Isro  மற்றும்  #Martian முதன்மை செய்திப்  பரிமாற்றச் சொற்களாக டுவிட்டரில் உருவெடுத்தன. @MarsOrbiter முகவரியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கைத் தொட்டது.

    Behind every successful space mission lies a team of hard working and hardly sleeping scientists. These are the brains behind Mangalyaan:

    ISRO Scientists/Engineers:
    K Radhakrishnan: The Chairman of ISRO and Secretary in department of space.
    M Annadurai: Programme Director of Mars Orbiter Mission.
    S Ramakrishnan: Director of Vikram Sarabhai Space Centre and Member Launch Authorisation Board.
    SK Shivakumar: Director of the Isro Satellite Centre.
    P Kunhikrishnan: Director of the PSLV programme.
    Chandradathan: Director of the Liquid Propulsion system.
    AS Kiran Kumar: Director of the Satellite Application Centre.
    MYS Prasad: Director of the Satish Dhawan Space Centre and Chairman of the Launch Authorisation Board.
    S Arunan: The Project Director of Mars Orbiter Mission and was responsible for leading a team to build the spacecraft.
    B Jayakumar: Associate Project Director of PSLV project.
    MS Pannirselvam: The Chief General Manager of range operation director at Sriharikota Rocket port.
    V Kesava Raju: Mission Director of Mars Orbiter Mission
    V Koteswara Rao: ISRO scientific secretary
    &
    Their Team of Scientists and Engineers

     

    செவ்வாய்க் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் மங்கல்யான் இணைக்கப்படும் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தை ஒரு மாபெரும் இந்திய வரலாற்று நிகழ்ச்சியாக மாற்றி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பெருமை கொள்ளச் செய்த அறிவியலாளர்களை பாராட்டாத இந்தியர் இல்லை எனலாம். முன்னர் ஒருமுறையும்  தொடர்ந்து 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனையை செய்தவர்கள்தாம் நம்  இந்திய இஸ்ரோ அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்க மற்றொரு செய்தி.  ரஷ்யாவை 8 தொடர் வெற்றிகரமான செயற்கைக் கோள் நிறுவிய நாடு என்ற இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய இந்திய விண்வெளி ஆய்வாளர்களின் சாதனைகளைக்  கண்டு இன்றைய உலகம் வியக்கிறது.

    இதற்கும் மாறாக வளரும் நாட்டிற்கு விண்வெளி ஆராய்ச்சி தேவையா, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கலாமே  என்று முணுமுணுத்தவர்களை பொருட்படுத்தாது “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற மழலையர் பாடலையும்  கீழ்வருமாறு மாற்றியமைத்து பாடி இந்தியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள்.

    “Twinkle, twinkle, little star
    World’s envious; we’re on mars!
    Up above the world so high,
    We’ve made it in a single try!”

    செவ்வாயை அடைந்த இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் “Howdy @MarsCuriosity? Keep in touch. I’ll be around.” என்று அனுப்பிய டுவிட்டர் செய்தியையைத் தொடர்ந்து  “Namaste @MarsOrbiter” என்று நாசாவின் ‘மார்ஸ் கியுரியாசிட்டி’ தனது  டுவிட்டர்  செய்தி ஒன்றை  அனுப்பி வரவேற்க,   விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் சாதனையின் அடையாளமான இச்செய்திப் பரிமாறல், அதனைப்  பார்த்த அனைவரையும் பெருமிதம் கொள்ள வைத்தது.

    கீழே சென்னையில் பள்ளி மாணவர்கள் இஸ்ரோ அறிவியலாளர்களைப்  பாராட்டிய படமொன்று.  இச்சிறார்கள் அனைவருக்கும் இஸ்ரோ அறிவியலாளர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி.

    mars news 6

    அறிவியல்  மற்றும்  தொழில்நுட்ப வளர்ச்சிகள்  ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் திறனுக்குச் சான்றுகள். இது இளைய தலைமுறையை அத்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் இந்தியர்கள் சாதித்துவிட்டோம், மென்மேலும் பல சாதனைகள் புரியப்போகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையையும் அவர்கள் மனதில் விதைத்த இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

    ஜெய்ஹிந்த்

     

    ——————-

    தகவல்களும் படங்களும் பெற்ற வலைத்தளங்கள் :
    http://www.vallamai.com/?p=50937- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான் – சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.
    http://www.theguardian.com/science/2014/sep/24/india-mars-satellite-successfully-enters-orbit?CMP=ema_565
    http://www.newsweek.com/how-india-achieved-cheapest-ever-interplanetary-mission-mars-273588
    http://www.pri.org/stories/2014-09-26/women-are-face-indias-mars-mission-theyre-still-exception
    http://www.bbc.com/news/world-asia-india-29357472
    http://www.bbc.com/news/world-asia-india-29339555

    http://www.bbc.com/news/world-asia-india-29357438
    http://www.firstpost.com/india/live-meet-the-masterminds-behind-isros-mangalyaan-success-1726461.html

     

     

     

    **************************************************************************************
    வல்லமையாளர்களுக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள்

     

    selvakumar2

     

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடங்களை விரைவில் தமிழ் விக்கிபீடியா வழியாக தமிழர்கள் யாவரும் பெற்று பயன்பெறும் வகையில் இடம்பெற முயன்று வருகிறார்  கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் (C.R.Selvakumar) அவர்கள். சென்ற புதனன்று (செப்டெம்பர் 17, 2014) சென்னையில் நடந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கு பெற்ற பயிலரங்கில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விக்கிபீடியா என்பது கலைக்களஞ்சியம் மட்டுமல்ல, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம்.  அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கூறி இத்திட்டத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவராக அயராது செயலாற்றித்  தமிழை இணைய உலகத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில் இப்பணியைச் செய்து வரும் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யலாம்,  இருந்த இடத்தில் இருந்து கொண்டே அயல்நாட்டிலும் வேலை பார்க்கலாம் என்ற வசதி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிகளில் அறிவியல் கதைகளில் மட்டும்தான் கற்பனையில் எழுத முடிந்திருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் குறுகிவிட்ட இன்றைய உலக அரங்கு, இந்த நூற்றாண்டில் மொழிகளின் வளர்ச்சிக்கு மற்றொரு சவாலை வைத்திருக்கிறது.   உலகப் பொதுமொழியாகப் பல்கிப் பரவிவிட்ட ஆங்கிலம் இணையத்தில் செயலாற்றுவதற்கு இன்றியமையாத மொழியாக மாறிய நிலையினால் இக்கால இளைஞர்கள்,  நடப்புலகின் நிலையை அனுசரித்து ஆங்கிலவழியில் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர்.

    தேவையானால் ஆங்கிலம் பயன்படுத்திவந்த சென்ற தலைமுறையினர் போல அல்லாது, சமூகவலைத்தளம் மூலம் உலக நட்புகளுடன் உறவாடுவதில்  குறுக்கிடும் மொழி என்ற தடையைக் களைய  வேண்டிய இன்றியமையாத்  தேவையினால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்துள்ள காலமிது.   இத்தகையப் போட்டியில் பல உலக மொழிகளும்  வளரும் களம் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மாறிவிட்டிருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், உலக  மொழிகள் யாவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு   ஈடுகொடுத்து தகவல்களை மொழியாக்கம் செய்து வழங்கவும்; இதுவரைப் பயன்பாட்டில் இருந்து வந்த மொழித் தரவுகளை எண்ணிம வடிவில் மாற்றி உடனே தேடி அடையும் வண்ணம் சேமித்து வைத்து வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையை… அதையும் குறுகிய காலத்தில் தங்கள் மொழி மக்களுக்கு வழங்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.  முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டே வரும் தொழில் நுட்பக்கருவிகளைக்   கையாளும் தொழில் வல்லுனர்கள்  தமிழுக்குக் கிடைத்திருப்பதும், அவர்கள் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு  தமிழ் வளர்ச்சிக்குப்  பணி செய்வதும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.  கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கணிம உலகின் எண்ணிம வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான செயல்களும், தனிமனிதர்களின் தன்னார்வ முயற்சிகளும்  அளவிலடங்காது.  அத்தகையப் பணியில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்  பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள்.

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து,  இப்பொழுது கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரியும்  செல்வக்குமார்  மின் மற்றும் கணினி இயல் துறையில் வல்லுநர்.  குறைகடத்திகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  அத்துடன் நிறுத்திவிடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியும், இருபதாயிரம் தொகுப்புளும் செய்திருக்கிறார். தமிழகராதியான  தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களித்த முதல் ஐவர் வரிசையிலும் இடம் பிடித்து இருக்கிறார். தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவர் இவர்.

     

    selvakumar3“தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். “

    ….

    “அனைவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தினாலும், பலர் தாங்களும் பங்கேற்று தரவுகள் வழங்கலாம் என்பதை உணர்வதில்லை.  உணர்ந்தவர்களும் அவ்வாறு பங்களிப்பதால் தங்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகிறார்கள்.  குழுவாகப் பணிபுரிவதும், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உறவாடுவதும், புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்வதும், மேலும் பல அறிந்துகொள்வதும் பலனாகக் கிடைக்கிறதே, அது சிறந்த பயனல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் செல்வக்குமார்.

    தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டதுடன், தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார். பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்ளும் “தமிழ்மன்றம்” என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். மின்னூலாக்கம் வகையிலும் முன்னோடியாக, மதுரைத்திட்டத்திற்கும் முன்னரே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் வெளியிடும் பணியில் அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை தமிழில் வெளியிடும் வகையிலும் பெரும்பங்கு அளித்துள்ளார்.

    மலேசியா வாழ் தமிழர்,  திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன் அவர்கள் “தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில்  ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார். தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த – செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று,” என்று இவரது தமிழ்க்கணிமைத் துறை பங்களிப்பைப் பாராட்டுகிறார்.

    தன்னார்வப் பணியாக தமிழ்க்கணிமைத் துறையில் பங்களிப்பைச்  செய்து வரும் இவருடைய முயற்சிக்காக பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

     

     

     

    தொடர்புத் தகவல்:
    C.R. Selva (Selvakumar)
    Faculty of Engineering, E&CE Department
    University of Waterloo
    200 University Avenue West
    Waterloo, Ontario, Canada N2L 3G1

    Email:- selvakumar@uwaterloo.ca
    Phone:- (519) 888-4567 ext.3978
    Linkedin :- http://ca.linkedin.com/pub/c-r-selvakumar/1b/a54/15
    Google + :- https://plus.google.com/111751091024415944844/
    தமிழ் விக்கிப்பீடியாவில் செல்வா: http://ta.wikipedia.org/s/1lo

    வலைப்பக்கங்கள்:
    https://ece.uwaterloo.ca/~selvakum/
    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html
    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

    வலைபதிவுகள்:
    தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு: http://tamilwikipedia.blogspot.com/
    தமிழ்வெளி: http://tamilveli.blogspot.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share