Author: கவிஞர்.காவிரிமைந்தன்

  • கண்போன போக்கிலே கால் போகலாமா?

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஐம்புலன்கள், ஆறாம் அறிவு என மனித ஜாதியை மகத்துவமாய் படைத்த இறைவன் ‘மனம்’ என்கிற ஒன்றையும் மறைமுகமாய் சேர்த்தனுப்பிவிட்டனன்றோ? பகுத்தறியும் குணும் மனிதனுக்கு இருந்தும் ‘ஆசை’ என்னும் வலைதனில் அகப்பட்டு அவன் படும் அவஸ்தைகள் பலவன்றோ?

    கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நம்மில் வாழும் மனிதர்களைக் காணுகின்றோம். அனுபவ ரீதியாக ஒருவன் பட்டுத் தெரிந்து கொள்கிற பகிரங்க விஷயங்கள் பல உண்டு! அந்தப் பாடங்கள் அவன் மட்டுமே அறிந்தவையாகின்றன! ஆனால், திரைப்பாடல்களில் – கவிஞர்கள் தங்கள் சொல்லாற்றலால், இதுபோன்ற அனுபவ முத்திரைகளை, வாழ்க்கைப் பாடங்களை மெட்டுக்குள் கட்டிவைக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மக்களின் இதயங்களில் இமயமாய் வீற்றிருந்த எங்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுகின்ற போது இதுபோன்ற முத்தான வரிகள் வந்து கொத்துக் கொத்தாக விழுந்தனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது! தத்துவத்தின் தடாகமாய்..இப்பாடல் காட்சியளிக்கிறது! பணம் படைத்தவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இசை தலைமை தாங்குகிறது. டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் நடித்த இந்தக் காட்சி – ஒரு நாகரீக விடுதியில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் போது இப்படிக் காட்சியமைப்பு வெற்றி பெறுமா என்கிற வினாவிற்கு இப்பாடலில் உள்ள வரிகளின் வீரியம், வார்த்தைகள் தாங்கி வரும் அர்த்தங்கள், பின்னணி இசை என்கிற கூட்டணி மந்திரம் வெற்றியை விண்முட்டச் செய்திருக்கிறது. மகாத்மா காந்திஜி கையில் தடியடன் ஒற்றைப் பாதையில் நடந்துசெல்வதை நினைவூட்டிப் பாடல் தொடங்குகிறது!

    இந்தப் பாடலை பெரும்பாலோர் கவியரசு கண்ணதாசனின் பாடல் என்றே கருத.. அந்தக் கருத்தை ஆச்சி மனோரமா அவர்கள் கவிஞர் வாலி அவர்களை முன்னிறுத்திய மேடையிலேயே எடுத்தியம்ப.. பின்னர் நிறைவுரை ஆற்றிய கவிஞர் வாலி அவர்கள்.. கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நான் இயற்றியது.. ஆச்சி கூட.. இந்தப் பாடலை கண்ணதாசன் பாடல் என்றே கருதியிருக்கிறார்கள்.. அதிலே எனக்குள்ள சந்தோஷம் என்ன தெரியுமா.. என் பாடலைத் தங்கத்தட்டோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர, தகரத்தட்டோடு அல்ல என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.

    கண்போன போக்கிலே கால போகலாமா..
    கால் போன போக்கிலே மனம் போகலாமா..
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

    நான்கு வரிகளுக்குள் இங்கே சொல்லப்படாத இலக்கியம் என்ன என்றே அறைகூவலிடத் தோன்றுகிறது!

    நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
    நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
    ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
    உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிடவா எவரும் சொல்லிவிட முடியும்? எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இந்த வரிகளில் உள்ள பொருள் மாறிவிடக்கூடுமா?

    புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
    புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
    முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

    நாகரீகத்திற்கு அர்த்தம் தெரியாத மனிதர்களுக்கான சவுக்கடி இந்த வரிகள்! இன்னும் என்ன சொல்ல என்று நினைத்த கவிஞர் அடுத்தவரிகளில் மேலும் சொல்லாட்சி நடத்துகிறார்!

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

    இதுபோல பாடல் புனைந்தோர்.. எல்லோருக்கும் பொருந்தும் இந்தவரிகள்.. கதையின் நாயகன்.. மக்கள் திலகத்தின் வரலாற்றில் பொன்னாய் மின்னுகிற வரிகளில் சேர்ந்து காட்சியளிக்கின்றன!

    3 Attachments

    kanpona pokkile.jpg

    kanpona.jpg

    MGR & Sowckar Janaki – Kanpona Pokkile – Panam Padaithavan

    Share
  • என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே….

     
    கவிஞர் காவிரி மைந்தன்

     

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! காதல் மன்னன் ஜெமினி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாட்டு! கற்பனைச் சிறகை விரித்து காதலின் சாம்ராஜ்ஜியத்தைத் தன்னாலும் கட்டியாள முடியும் என்று பட்டுக்கோட்டையார் எழுதி வைத்த பாட்டு! சமுதாய புரட்சிகர கம்யூனிஸ சித்தாத்தங்களை உள்ளடக்கிய பாடல்களின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உள்ளக்கண் திறந்த பாடலிது என்று கூட சொல்லத்தோன்றுகிறது!

    பெண்ணை உவமையிட்டு போற்றி மகிழும் தமிழ் உலகம்! இம்மண்ணில் சொல்லப்பட்ட உவமைகளுக்கு நிகராக வேறெந்த மொழியிலும் பெண் பாராட்டப்படவில்லை. எங்கோ இருந்தாலும் எம் கண்ணில் நிறைவதால், குளிர்ச்சி தருவதால், இரவில் வருவதால், உறவுகளுக்கு உடனிருப்பதால், உனைத் தூதுவிடவும் வைத்தனரே நிலாவே! எழுத்தாணி கொண்டு உனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கற்பனை புலவர்களுக்கு முற்றிலுமாய் கை கொடுக்கிறதே! காலகாலமாகத் தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்ந்து வானில் வலம் வரும் முழுமதியே.. எங்கள் மக்கள் கவிஞன் மனதில் பொழிந்த மகரந்தப் பாடல் வரிகளிதோ..
    சந்தனத் தமிழெடுத்து சந்தங்கள் சேர்த்து சதிராட வைத்தபோது சுந்தரமாய் பாடலொன்று பிறந்திடுமே! அதிலும் நிலவைத் துணைக்கழைத்து அருமைக் காதலிக்கு உவமை சொல்லி வரைந்த பாடலிதை இனிமை என்பதன்றி வேறென்ன சொல்ல முடியும்? டி.எம்.செளந்திரராஜன் குரலில் டி.ஜி. லிங்கப்பா இசையில் பட்டுக்கோட்டையார் வடித்துவைத்தப் பட்டுக்கம்பளம்!!

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    பாடல்: என்னருமைக் காதலிக்கு
    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960

     

    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw
    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw

     

    Share
  • கண்ணே கலைமானே..

    கவிஞர் காவிரி மைந்தன்
    ‘க’ என்கிற எழுத்திற்கும் கண்ணதாசனுக்கும்தான் எத்தனை எத்தனை நெருக்கம்!
    கண்ணதாசன் என்கிற புனைப்பெயரைத்தவிர.. காரைமுத்துப்புலவர்..
    கண்ணதாசனை சுவீகாரம் எடுத்த ஊர் காரைக்குடி..
    கண்ணதாசன் முதலில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி!
    கண்ணதாசன் முதலில் எழுதிய பாடல்.. கலங்காதிரு மனமே!
    கண்ணதாசன் மிகவும் விரும்பிய கடவுள் ‘கண்ணன்’
    கண்ணதாசன் மிக நெருங்கிப்பழகிய அரசியல்வாதி, இலக்கியவாதி.. கலைஞர் கருணாநிதி!
    கண்ணதாசன் அவர்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் கர்மவீரர் காமராஜர்!
    கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசிப் பாடல்.. கண்ணே கலைமானே!!

    ஒரு சகாப்தம் நிறைவு பெறுகிற நிலையில் ..
    மூன்றாம் பிறையில் விளைந்த முத்தான பாட்டல்லவா?
    இது தாலாட்டா?
    கனிவான காதலா?
    பேதமையின் தவிப்பா,
    மென்மையின் மேலாண்மையா?
    அன்பின் ஆர்ப்பரிப்பா?
    அரவணைப்பின் பரிணாமமா?
    கண்ணிலிருந்து விழும் நீர்த்துளியின் காதலின் அடர்த்தியா?
    இல்லை.. இல்லை…கவியரசர் தனது கோடிக்கணக்கான
    ரசிகர்களுக்கு எழுதி வைத்துச்சென்ற ரகசியக் குறிப்பா?
    சொல்லாமல் சொல்லிச் சென்ற குறிப்பேடா?
    காலதேவனின் அழைப்பிற்கு கவிஞர் எழுதிய மடலா?
    கண்ணதாசன் – இளையராஜா – பாலுமகேந்திரா – யேசுதாஸ்
    கூடி எழுதிய தேவ கானமா?
    கமலஹாசன் – ஸ்ரீதேவி – நடித்துத் தந்த காவியமா?

    பொதுவாக மூன்றாம் பிறைக்குப் பின்னர் முழுநிலா தோன்றும் என்பார்கள்.. எங்கள் கண்ணதாசனே! மூன்றாம் பிறையோடு முடிவுரை எழுதிவிட்டாயே!!

    ஆண் : கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே

    ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதிலொரு அமைதி
    நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது
    பேதை போல விதி செய்தது

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
    உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னிதி

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM

    Share
  • ஒரு தரம்.. ஒரே தரம்.. -கவிஞர் வாலி….

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு தரம்.. ஒரே தரம்..

    ஒரு தரம் ஒரே தரம் .. என்று தொடங்குகிறது.. பல்லவி.. சுமதி என் சுந்தரிக்காக.. காதல் சுகம் என்னவென்று அறியவிரும்புவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்! ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள்.. அது சரி .. காதல் என்பது எந்தக் கலை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்குத் தெரியாத பந்தம் வளர்த்து.. கணநேரப் பிரிவைக்கூடத் தாங்கமுடியாமல் வலிக்கிறதே.. அது எப்படி? இருவேறு உடல்களுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இதயங்கள் இடம்மாறித் துடிக்கிறதே அது எப்படி? சுகமான வேதனை இது என்றுகூட துணிவோடுக் கூறிவிடலாம்! மனதுக்குள் தென்றல் வீசுகிறதா? புயல்வீசுகிறதா? கேட்டுச்சொல்லுங்கள் சிலநேரம்!!

    எத்தனை எத்தனையோ காதல்பாடல்கள் கணக்கின்றி வந்து கொண்டுதானிருக்கின்றன! கவிஞர்கள் எழுதிக்கொண்டு தானிருக்கிறார்கள்! காலங்களைக் கடந்து சிலபாடல்கள் மட்டும்தானே முணுமுணுக்கப்படுகின்றன. அந்த ரகம்.. ஒரு தரம்.. ஒரே தரம்.. மெல்லிசை மன்னர் இசையின் அணுக்களை சுகம்பிரித்து நம் இதயங்களுக்கு ஏற்றுமதி செய்துவைத்த பாடல்! டி.எம்.எஸ். பி.சுசீலா கூட்டணியில் கொள்ளையின்பம் கொண்டுவரும் பாடல்!

    இந்தத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் கவியரசு கண்ணதாசன்.. இந்த ஒரு பாடல் மட்டும் கவிஞர் வாலி!!
    காதல் சுகத்திற்கும் மயக்கத்திற்கும் தகுந்த பாடலிது!!
    முதல் முறை மட்டுமே முன் அனுமதி வேண்டும்
    பின் உன் முனகல்கூட முழுஅர்த்தம் தந்திடும் என்று நான் எழுதிய கவிதை நினைவில்..

    அன்பின் ஆலாபனையா இது? காதலின் உச்சக்கட்டமா? காமதேவன் வாசல் திறப்பு விழாவா? கற்பனைக் கொடிகட்ட.. கவிஞரின் எண்ண ரதத்தில் எழுத்துப் படையல்! பெண்மை லாவகம் காட்ட.. ஆண்மை அதை ஆமோதிக்க.. வண்ணக் கவிதை வந்துவிழுகிறது!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்? (2)
    ஒருதரம்.. ஒரே தரம்..
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    பெண்மை என்றால் கண்மறைவாய்
    மூடிவைத்தால் சுவை இருக்கும்
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    உள்ளதெல்லாம் அள்ளித்தந்தால்
    காலமெல்லாம் சுவையிருக்கும்!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உறவு தேடும் கண்கள் பாவம்
    தனிமையில் உருகிடும்
    பார்வையின் என்னென்ன பாவம்
    உதவி செய்தால் என்ன பாவம்

    வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
    கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
    தொட்டுக் கொள்ள தடை செய்வாளோ
    தத்தித் தத்தி மெல்ல செல்வாளோ..
    தங்க வளைத் தளிர் கையோடு
    வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
    முத்துப் பந்தல் நகை தன்னோடு
    மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு..

    சித்திரத்தின் முகம் கண்டேனே..
    செம்பவளம் நிறம் என்றேனே..
    உண்ண உண்ண இதழ் செந்தேனே..
    உன்னிடத்தில் என்னைத் தந்தேனே..
    இல்லை எனும் இடை தள்ளாட
    மெல்ல மெல்ல உன்னை மன்றாட
    சொல்லச் சொல்ல தொட வந்தாயோ
    என்ன என்ன சுகம் கண்டாயோ

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்?

    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ
    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ

    திரைப்படம் – சுமதி என் சுந்தரி (1971)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்கம் – சி.வி. இராஜேந்திரன்
    நடிப்பு – சிவாஜி, ஜெயலலிதா
    பாடல் – கவிஞர் வாலி

    ஒரு தரம் ஒரே தரம் – Oru tharam ore tharam

    Share
  • ஆயிரம் நிலவே வா…

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் புலவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது.. கவிஞர் கண்ணதாசனைவிட ஆயிரம் மடங்கு நான் படித்தவன் என்று சொல்ல.. ஜனங்களின் சலசலப்பு அடங்கும் முன்பாக.. என்னைவிட ஆயிரம் மடங்கு அவன் படைத்தவன் என்று சொன்னதும் கைத்தட்டல் அடங்கிட சில நிமிடங்கள் ஆனது என்றார்.

    திரைப்பாடல்கள் இலக்கியமாகுமா என்கிற வினாவிற்கு இந்த ஒரு பாடல் போதுமே எடுத்துக்காட்ட என்றே சொல்லலாம்!  புலவர் பெருமகனாரின் பூங்கவிதை இது!  பொங்கிடும் தமிழ்நதி புறப்பட்டு வந்தது காண் என்று சொல்வதே சரியாகும்!  பெண்ணை உவமைப்படுத்த ‘நிலா’வை இழுக்காத கவிஞர்களே இல்லை!  அட.. இவரென்ன.. ஆயிரம் நிலவே வா’ என ஒரு ஆனந்தப் பல்லவி தருகிறார்.  அகத்துறை பாடலென்பதால் மனசுக்குள் ஒரு மகரந்த மழை பொழிய வைக்கிறார்.  தலைவனும் தலைவியும் தழுவிடும் கோலங்களில் கிட்டிடும் சுகமத்தனையும் மொத்தமாய் அள்ளித்தருகிறார்.  கற்பனையில் கன்னித்தமிழைக் கட்டி ஆளத் தெரிந்தவர் என்பதால் சொற்சுகம், பொருட்சுகம் என சுகங்களின் ராஜபவனியில் நம்மையும் கலந்திடச் செய்கிறார்.

    AdimaiPenn

    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

    நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
    இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
    என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

    மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
    கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
    இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
    அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

    பொய்கை எனும் நீர்மகளும் பாவாடை போர்த்திருந்தாள்
    தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
    என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ?
    அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

    மக்கள் திலகத்திற்காக முதன் முறையாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்கிற வரலாறும் இதற்கு உண்டு! எனினும் அதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபின் உடல்நிலைக் குறைவால் ஒலிப்பதிவு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இவருக்கு பதிலாக இன்னொருவரை பாட வைக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்ட போது,பொன்மனச்செம்மல்.. புதிய பாடகன்.. எம்.ஜி.ஆருக்காக பாடுகிறேன் என்று தன் நண்பர்களிடமும் உறவினிர்களிடமும் சொல்லியிருப்பான்.  அவனுக்கு ஏமாற்றம் தர வேண்டாம்.. இன்னும் காத்திருக்கலாம் என்றாராம்.  திரையுலகில் புதிதாக நுழைகின்ற கலைஞனையும் அவன் மனப்பாங்குவரை யோசித்து ஆதரித்த புரட்சித்தலைவரைப் போல் இன்னொருவர் இனி வருவாரோ?

    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சரித்திரப் பின்னணி கொண்ட படம்!  ஜெய்ப்பூர் அரண்மனையின் கதவுகள் புரட்சித்தலைவருக்காகவே திறக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதையும் மறக்க முடியுமா?

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

     

    பாடல்: ஆயிரம் நிலவே வா

    திரைப்படம்: அடிமைப்பெண்

    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

    இசை: கே.வி. மஹாதேவன்

    ஆண்டு: 1969

    Share
  • அத்திக்காய் காய் காய்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கண்ணதாசன் என்கிற திரையுலகக் கம்பன் – தன் முன்னோர்கள் – தமிழ்ச் சான்றோர்கள் – புலவர் பெருமக்கள்தம் படைப்புகளில் ஆழ்ந்து உணர்ந்து, அப்பாடல்களின் பொருளுணர்ந்து, புளகாங்கிதம் அடைந்தது மட்டுமின்றி, பலரும் புரியும்வண்ணம் அச் செய்திகளை உள்வாங்கி, தமக்கே உரிய பாணியில் திரைப்பாடல்களில் வழங்கியிருக்கும் பல பாடல்கள் கவிஞரின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

    காய் என்கிற சொல்லை அடுக்கடுக்காய்வைத்து பல்வேறு காய்களைச் சுட்டிக்காட்டி தன் அத்தை மகள் சமைத்த சமையலைப் பாடும் காளமேகப் புலவரின் பாடல் ஒன்று..

    ‘கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயை தீர்த்தாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்’ என்று காய் அடுக்கு நான்கு முறை கூறப்பட்டு நயமுற அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் வியந்த கண்ணதாசன், 25 முறை காய் என்னும் சொல்லை வைத்து விளையாடுகிறார். அத்திக்காய் காய் காய் காய் ..ஆலங்காய் வெண்ணிலவே.. என்கிற பாடலில் கேட்பவர் நெஞ்சம் மகிழும்படி பாடுகிறார்..

    காளமேகப் புலவரின் இருபொருள் நயங்களில் மயங்கி இலை மறை காயாகப் பலமுறை இவரும் வார்த்தைகளை வடித்தெடுத்துத் தருகிறார்.

    பலே பாண்டியா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாட்டு,எழுதப்பட்ட போது இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் ‘என்னய்யா? கொத்தவால் சாவடியையே பாடலில்கொண்டு வந்திருக்கீரே.. என்று சொல்ல.. கண்ணதாசன் அவரிடம் எவ்வளவோ பாடல்கள் நீங்க கேட்கிறமாதிரி எழுதித் தருகிறேன்.. இதுமாதிரி ஒருசில பாடல்கள் எனக்காக இருக்கட்டும் என்று சொல்லி இடம்பிடித்த பாட்டு இது..

    அந்த திக்காய் காய்.. என்று வெண்ணிலவை கவியரசர் இருபொருள்பட .. ஒவ்வொரு வரியிலும் வார்த்தை விளையாட்டு நடத்தியிருக்கிறார்.

    தமிழின் அழகு கொட்டிக்கிடக்கும் திரைப்பாடலைக் காணுங்கள்! பொருளின் சுவையும் அறிந்தபடி இசையில் கொஞ்சம் மயங்குங்கள்!!

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
    நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
    இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
    அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
    (கன்னிக்காய்..)
    மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

    இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
    நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
    (இரவுக்காய்..)
    உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

    ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
    ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
    (ஏலக்காய்..)
    சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
    என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
    (அத்திக்காய்..)

     
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8
    http://www.youtube.com/watch?v=2yjVzhSK_t8

     

    காவிரிமைந்தன்

    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்

    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

    சென்னை 600 075.

    தற்போது – அபுதாபி  (அமீரகம்)

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

     

    Website: thamizhnadhi.com

    அத்திக்காய் காய் காய் – Athikkaai kaai kaai aalankaai vennilave
    Share
  • ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    கவிஞர் காவிரி மைந்தன்

    கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை.

    புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள வெற்றி!! அனைத்துப் பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா!!

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு அத்தை மடி மெத்தையடி..
    மன்னவனே அழலாமா? பக்கத்துவீட்டு பருவமச்சான்..

    2004ஆம் ஆண்டு கவிஞர் வாலி அவர்களுக்கு பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் விருது வழங்கி பாராட்டு நடத்தியபோது இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட செய்தியை இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவிஞர் வாலியின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட நேரமில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.. ஒன்று தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. மற்றொன்று கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

    என்ன சொன்னார் தெரியுமா.. இந்தக் கவிஞர் ஒருவர்தான்.. பாட்டுவரியின் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு அதன் அடுத்த வார்த்தையை சொல்லாமல் .. ஆனால் அந்த வார்த்தையையே நினைக்க வைத்தவர்.. என்றார். ஆம்.. இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் .. விளக்கம் கிடைக்கும்!

    முதல் இரவின் முன்னதாக நடக்கும் இந்தக் காட்சியில் நாயகியைத் தோழி துவள வைக்கிறாள்.. இன்பத்தை எண்ணித் துடிக்க வைக்கிறாள்.. வஞ்சியின் நெஞ்சம் வெட்கத்தில் தவித்திருக்க.. வேடிக்கை அல்லாமல்.. அனுபவக் கதையைப் பாட்டில் வைக்கிறாள்.. இன்பத்தின் அரிச்சுவடி இது என்று சொல்லி வைக்கிறாள்.. அதையும் முழுதாய் சொல்லிவைக்காமல்.. அங்கங்கே புள்ளிவைக்கிறாள்.. கேளுங்களேன்..

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் இரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் உறவு

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    வயதில் வருவது ஏக்கம்
    அது வந்தால் வராது….
    வந்ததம்மா மலர் கட்டில்
    இனி வீடினில் ஆடிடும்…..

    ஆயிரம் …

    வருவார் வருவார் பக்கம்
    உனக்கு வருமே வருமே ஊஹும்
    தருவார் தருவார் நித்தம்
    இதழ் தித்திக்க தித்திக்க….
    ஆயிரம் …

    யாரோ சொன்னார் கேட்டேன்
    நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
    நானாய் சொன்னது பாதி
    இனி தானாய் தெரியும் மீதி
    ஆயிரம் …

    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM
    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – Aayiram iravugal varuvathundu

    Share
  • இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தஞ்சை ராமையாதாஸ் – பாடல் 

     

    கோபதாபங்களின் உணர்ச்சிக் குவியலாக மனித மனம்! அதுவும்கவிஞர்கள் உணர்வுகளின் சூறாவளியோடு தங்கள்வெளிப்பாடுகளை தருகின்றவர்களாக! வால்மீகிராமாயணத்தை வாசித்த கம்பன் – அதனைத் தமிழில்மொழிபெயர்க்கிறான் என்றால் அதுவும் 12000 செய்யுள்களாக..அவன் அந்தந்தப் பாத்திரங்களாய் மாறி அல்லவா சந்தக்கவிதைகளாக தந்த தமிழ் அமுதம் கம்பனின் உள்ளத்தைஉணரவைக்குதன்றோ?

    பாட்டுக்கொரு புலவன் பாரதியார் – வெகுண்டெழுந்துவெஞ்சினம் கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திர கீதமுழக்கங்களைத் தந்தானே.. அதுவும் உணர்வுகளின்உச்சக்கட்டம்தானே!

     

    பாவேந்தர் பாரதிதாசன் – தூங்கிக்கிடந்த தமிழினத்தைத்தட்டியெழுப்பி புரட்சிக் கருத்துக்களை உத்வேகத்துடன்ஊட்டிவளர்த்து மொழி, இன உணர்வுகளின் முன்னணித்தூதுவனாய் காட்சி தந்தானே – மறுப்பவர் உண்டோ?

     

    மலைக்கள்ளன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதத்தொடங்கிய போது.. இசையமைப்பாளருக்கும்பாடலாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் தஞ்சைராமையாதாஸ் இயற்றிய பல்லவி மட்டுமே நமக்குக் கிடைக்கப்பெற, வேற்று வழியின்றி அங்கிருந்த கோவை ஐயா முத்துஎன்னும் மற்றொரு கவிஞரைக் கொண்டு சரணங்கள்வரையப்பட்டதை என்ன சொல்வது? முன்னர் அமைந்த பல்லவிஇதோ..

    தொடரும் சரணங்கள் பாணி தனி..

     

    இரண்டையும் இணைத்து இசையமைக்கப்பட்ட பாடல்!

     

    காலங்கள் மாறி வந்த போதும் இந்தப் பாடலில் உள்ளகருத்துக்கள் சோடை போகாமல்.. அதுவும் பல்லவி இந்தசமூகத்தின் புரையோடிக்கிடக்கும் அயோக்கியர்களின் மீதுசாட்டையடியாய் விழுகிறது!

     

    அரசியல் செய்யும் கபளீகரங்களைப் பட்டவர்த்தனமாய் கேட்கும்கேள்வி.. காலங்களைத் தொடர்ந்து எதிரொலியாய் நம்காதுகளில் விழுகிறது!

     

    அடுத்து எழுதிய ஐயா முத்து அவர்களின் வரிகள்ஆட்சியிலிருப்பவர் செய்ய வேண்டிய திட்டங்கள் எவை என்றுபட்டியலிட்டுக்காட்டுகிறது! தேர்தல் அறிக்கையைநினைவூட்டும் சரணங்கள்.. எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில்..கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெற்றிபெற்ற திரைப்படம் -மலைக்கள்ளன்!

     

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்……

    படம : மலை கள்ளன்
    இசை : SM. சுப்பையாஹ் நாய்டு
    பாடல் : ராமையாஹ் தாஸ்
    பாடியவர் : T.M.S.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) –
    கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) –
    குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) –
    அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

     
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec

     
     
     
     
     
     
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
    Share
  • பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் – கவியரசு கண்ணதாசன்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

     

    தென்றல் என்கிற சொல்கூட மென்மையானதுதான். தென்கோடி தென்றல் தரும் ராகங்களே என்று கிருஷ்ணகானத்தில் கண்ணதாசன் அழைக்கிறார்! திசைகள் எட்டு இருந்தாலும் தெற்கிற்கென பெருமைகள் அதிகம்தான்! வாடைக்காற்று என்று வடக்குப் பக்கமிருந்து வரும் காற்றை அழைப்பதுண்டு! ஆனால் வர வேண்டும் என நினைப்பது தெற்கிலிருந்து வருகின்ற தென்றல் ஒன்றைத்தான்! வருடவரும் அந்தக் காற்று வரவேண்டும் என நெஞ்சம் வரவேற்புக் கொடுப்பது தென்றலுக்கு மட்டும்தான்!!

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்று கூட ஒரு பல்லவி தந்தார் கண்ணதாசன்!

    காலகாலமாகக் கவிஞர்களின் பாடுபொருளாய்.. நிலா, தென்றல் என விட்டுவிட இயலாத சொல்லாய், காற்றாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது! காற்றினிலே அவள் தென்றல் என்று இன்னும் காலங்களில் அவள் வசந்தம் பாடலில் அணி சேர்க்கிறார்! நீக்கமற நிறைந்திருக்கம் இத் தென்றலைப்பற்றி – பிரத்யேகமாக ஒரு காதல் பாடலில்.. அதுவும் தலைவியுடன் தலைவன் தனிமையிலிருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த தென்றல் பற்றி.. லாவகமான கவிதை யுக்தி ..கண்ணதாசனுக்கே கைவந்த கலை

    !

    விழிகள் தழுவிக்கொள்ளும் வேளையில், இருவருக்கும் இடையில் விளையாட வருகிறதாம் இந்த சாசகசத் தென்றல்! கற்பனையால் இப்படி கவிதை படைக்க முடியும் எனும்போது – அதைத் திரையிசையமைத்து இன்னும் கெளரவப்படுத்த தன்னால் முடியும் என்று நிருபித்திருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. குரல் தந்திருக்கிறார்கள் பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலா.

    தென்றல்வரும் வீதியெல்லாம் செந்தமிழர் மாண்பையெல்லாம் காட்டுகின்றார் கவியரசர். நாதஸ்வர ஓசையுடன் இணைந்த இசையில் தொடங்கும் பாடலிது! மங்கல நாதம் பொங்கிடும்போது.. இன்பத்திற்கு இங்கு எல்லைகள் ஏது? இழைந்தோடும் குரல்களில் இந்தத் தென்றல் பிறந்த இடம் முதல் புகுந்த இடம் என.. தன் வரலாறு சொல்கிறது கேளுங்கள்

    !

    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் – எஸ். ஜானகி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: கே.வி. மகாதேவன்
    திரைப்படம்: திருவிளையாடல்

    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
    பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் – வண்ண
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் – அது
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
    Podhigai Malai Uchiyile – Thiruvilayadal – Muthuraman & Devika

    Share
  • பேரறிஞர் அண்ணா

    காவிரி மைந்தன்images

    கனிந்த நல் இதழ்களில் தவழ்ந்திடும் புன்னகை 

     

    கவிதையில் சொன்னால் அண்ணா ஒரு  பாற்கடல்!

     

    பொதிகையும் புதுவையும் கலந்துவந்த கலவையவர்!

     

    தமிழ்க் கதிரவன் உதயமாகக் காரணம் ஆம்  அவர்!!

     

    கடற்கரையில் நிரந்தரமாய் காட்சிதரும் பொருளானார்!

     

    காலங்கள் உள்ளவரை காவியமாய் அவரானார்!!

     

    எளிமையில் இவரிருந்தும் ஏழ்மையை அகற்ற வந்தார் 

     

    எண்ணத்தால் உயர்ந்துநின்று இவ்வுலகைத்தான் அளந்தார்!

     

    சமுதாய அவலங்களைக் களைப்பின்றி சாடிநின்றார்!

     

    சாதிப் பேயொழிய பெரியாரின் வழி நடந்தார்!!

     

    முதல்வர் பதவியிது முள் வைத்த கிரீடமென்றார்!!

     

    முழுமூச்சாய் நாட்டிற்கே தன்னையே அர்ப்பணித்தார்!

     

    ஆங்கிலத்தில் புலமையுண்டு.. அனைவரையும் திகைக்க வைத்தார்.

     

    அண்ணாவின் பேச்சாற்றல் அனைத்துலகும் அறிந்த ஒன்று!

     

    கலைஞர் முதல் தலைவர்களை உருவாக்கிய களமவர்!

     

    கண்ணதாசன் முதலான கவிஞர்களை நேசித்தப் பேரறிஞர்

     

    புடம்போட்டு வைத்த தங்கம்!  புன்னகையால் நமை இழுக்கும்!

     

    பொடிபோடும் பழக்கமுண்டு!  புரட்சிக்கு அது நெருக்கம்!!

     

    ஒய்வுறக்கம் ஏதுமின்றி ஒர்தலைவர் யாரென்றால் – அது 

     

    காஞ்சியிலே தோன்றிய நம் தலைவர் அண்ணாவே!! 

     

    படத்துக்கு நன்றி

    http://www.mysixer.com/?p=13237

    Share
  • ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

     

    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

     

    ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

     

    முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

     

    எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

     

    இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

     

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று

    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

    தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

    பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

    எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

     

    http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

     

     

    ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai
    Share
  • செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!

    காவிரி மைந்தன்

    வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!

    அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!

    அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!

    அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!

    ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?

    அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!

    Share
  • ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்

     கவிஞர் முத்துக்கூத்தன்

     

    ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும்

    · ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-

    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..

    · இந்தப்பல்லவிஎழுதப்பட்டதுகவிஞர்ஆலங்குடிசோமுஅவர்களால்! அவர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர்தம் நண்பர் முத்துக்கூத்தன் அவர்கள் கண்ணில் இந்தப்பல்லவிபட.. அண்ணே.. ரொம்பநல்லாயிருக்கு.. இதைநான்எடுத்துக்குறேன்..என்றார்.

    · கழைக்கூத்தாடியாய் தன்வாழ்க்கையை ஓட்டிவந்த முத்துக்கூத்தன் அவர்களை இந்தப் பல்லவி உந்தித்தள்ள.. அவர் உள்ளத்திலிருந்து பொங்கியவரிகள் சரணங்களாகின!

    · அரசகட்டளையில் தமிழ்த்திரையில் முதன்முறையாக .. சண்டைக்காட்சியில் திரைப்பாடல் ஒன்று இடம்பெற்றது அன்றுதான்!

    · மக்கள்தீர்ப்புக்கு எதிராக எவரும் அரசாள முடியாது என்கிற அருமையான வரியையும்.. அவர் மேற்கோள் காட்டிய அனைத்துவரிகளுமே புரட்சித்தலைவருக்குப் பிடித்துப்போக.. அரசகட்டளையில் இடம்பெற்ற பாடலானது. அன்றும் இன்றும் இந்தவரிகள் நெஞ்சில் மனனமானது!

    · ஆடிவா …

    ஆயிரம்கைகள்மறைத்துநின்றாலும்

    ஆதவன்மறைவதில்லை
    ஆணைகள்இட்டேயார்தடுத்தாலும்
    அலைகடல்ஓய்வதில்லை

    ஆடிவா..ஆடிவா.. ஆடிவா..

    · ஆடப்பிறந்தவளேஆடிவா
    புகழ்தேடப்பிறந்தவளேபாடிவா
    ஆடிவாஆடிவாஆடிவா

    இடைஎன்னும்கொடியாடநடமாடிவா
    இசைகொண்டுஅழகேநீதேராடிவா
    தரைமீதுபோராடசதிராடிவா
    செந்தமிழேநீபகைவென்றுமுடிசூடிவா
    (ஆடிவா )

    மயிலாடவான்கோழிதடைசெய்வதோ
    மாங்குயில்பாடகோட்டான்கள்குறைசொல்வதோ
    முயல்கூட்டம்சிங்கத்தின்எதிர்நிற்பதோ
    அதன்முறையற்றசெயலைநாம்வரவேற்பதோ
    (ஆடிவா )

    உயிருக்குநிகர்இந்தநாடல்லவோ
    அதன்உரிமைக்குஉரியவர்கள்நாமல்லவோ
    புயலுக்கும்நெருப்புக்கும்திரைபோடவோ
    மக்கள்தீர்ப்புக்குஎதிராகஅரசாளவோ
    (ஆடிவா )

     

    புரட்சிக்கும் தலைவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியபாடல் என்றுகூடச் சொல்லலாம்! நாட்டுப்பற்று, நமக்குள்ள உரிமை, எதிரிகளை எள்ளாடல், நமது வீரம் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு படைத்துள்ள பாட்டுப் படையலிது! எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான கொள்ளைவிருந்து.. நாட்டிய மயிலாய் திரையில் தோன்றிநடைபோட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் கூட்டணியில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்வழங்கிய இசையில் உணர்வுகளை மீட்டிடும் பாட்டு!! உள்ளம்எழும்இதைக்கேட்டு!!

    Share
  • சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் – கவியரசு கண்ணதாசன்

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்

    1967ல் வெளியான தங்கை திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் பி.சுசீலாவின் சுகமான பாடலிது!

    புன்னகைஅரசி கே.ஆர்.விஜயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் இயக்கம் தந்திருக்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்.

    இந்தப் பாடல் இடம்பெறும் இடத்தில் ஒரு இறுக்கம். அந்த இடத்தில் எப்படி இப்படி ஒரு பாடல் என்று எண்ணாதோர் இருக்க முடியாது!

    நாயகன் தவறான வழியில் செல்ல.. அதை தடுக்கிற நாயகியின்மீது கோபத்தின் கணைவீசி சொற்களை அள்ளிவீச.. அங்கே இருவருக்கும் இடையில் அனல் பறக்கிறது.

    மெல்லிசை மெதுவாக குரல் தருகிறது.. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் .. கனிவான பெண்ணால் எந்தச் சூழ்நிலையையும் வென்றெடுக்க முடியும் என்று காட்டியிருக்கும் காட்சியிது!

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    பாடலின் பக்கபலம் இசை.. அதை நம்மிடம் சேர்க்கும் பொறுப்பில் குரல்.. திரையில் இடம்பெறும் பாத்திரங்கள் நம் மனதில் இடம்பெறுவதில் வியப்பில்லையே!

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    உணர்வுபூர்வமான கதையமைப்பில் உள்ளம்தொடும் பாடலுக்கு வழியுண்டு என்பதை நிரூபிக்கும் பாடல்! வரிகளில் உள்ள சுகம் நாயகனை தன்வழிப்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு நாயகி பாடும் பாவமென்ன? நளினமென்ன? சுகமான குரல் என்றால் சுசீலாவின் குரல் என்று சும்மாவா சொன்னார்கள்?

    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

    P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

    திரைப் படம்: தங்கை (1967)
    நடிப்பு: சிவாஜி, K R விஜயா
    இசை: M S விஸ்வனாதன்
    இயக்கம்: A C திருலோகசந்தர்

    http://www.divshare.com/download/16924027-d85

    Share
  • ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
    ஆயிரம் இருக்குது சுப தினம்

    சுபதினம் என்கிற திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிக்கொடுத்த மங்கலச்சீட்டு.. வரிக்கு வரி சுபதினம் என்று எழுதுவது என்பது அந்த வரிகள் எல்லாம் சொல்கின்ற சேதியைப் பொறுத்து பெருமை பெறுகின்றது. வாழ்த்திப்பாடும் மங்கலங்களை அந்நாள்முதல் அரசர் முதல் ஆண்டி வரை அனைவரும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அதுவும் கற்றறிந்த புலவர்தம் திருவாயில் கிட்டும் அமுதமொழியது என்பதால்தான்! நான்கே வரிகளில் நல்வாழ்த்து கிடைத்தாலும் கிடைத்தற்கரிய பேறு என்பது உண்மைதானே!
    திரைப்படத்தின் பெயரில் உள்ள சுபதினத்தைப் பற்றி கவிஞரின் எண்ணரதம் ஊர்வலம் வருகிறது! எழுதிக்குவித்த அனைத்துவரிகளிலும் சுபதினத்தைத் தருகிறது!

    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    இதைவிட வேறென்ன சொல் வேண்டும் நண்பர்களே.. எண்ணம்போல் வாழ்வு என்பார்கள்.. நல்லன எண்ணி நாளும் பொழுதும் வாழும் உள்ளங்கள் ஒருநாளும் அல்லலுறுவதில்லை. தானும் வாழ்வதுடன் இத்தரணியில் எல்லா உயிர்களும் நலம்பெற வாழவேண்டும் என்கிற எண்ணம்தானே உயர்ந்தது. அதுவும் அடுத்தவர் நலத்தை நினைப்பவர்களுக்கு ஆயுள்முழுவதும் சுபதினம் அமையவேண்டும் என்று கவிஞர் வாழ்த்தியிருக்கிறார்.

    தன்னலம் மறக்கச் சொல்லவில்லை.. பொதுநலம் எண்ண வேண்டும்.

    தன்னைப் போல பிறரையும் எண்ணுதல் தவத்தினும் பெரியதாம்.

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    எதார்த்தங்களைக்கூட இந்தப் பட்டியலில் இட்டு சராசரி மனிதனையும் தட்டி எழுப்புகிற யுக்தி வாலியினுடையது. மொத்தத்தில் வெண்கலக் குரலோன் தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத பாடல்களுள் இதுவும் ஒன்று!

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
    புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

    காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
    உரிமைக்கு அதுதான் சுப தினம்

    ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
    உலகுக்கு அதுதான் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
    ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்
    உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
    அறுவடை நாளே சுப தினம்

    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
    கிடைத்தவருக்கு அது சுபதினம்
    வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
    எளியவர்க்கெல்லாம் சுப தினம்

    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
    அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

    Share