கவிஞர் காவிரி மைந்தன்
‘க’ என்கிற எழுத்திற்கும் கண்ணதாசனுக்கும்தான் எத்தனை எத்தனை நெருக்கம்!
கண்ணதாசன் என்கிற புனைப்பெயரைத்தவிர.. காரைமுத்துப்புலவர்..
கண்ணதாசனை சுவீகாரம் எடுத்த ஊர் காரைக்குடி..
கண்ணதாசன் முதலில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி!
கண்ணதாசன் முதலில் எழுதிய பாடல்.. கலங்காதிரு மனமே!
கண்ணதாசன் மிகவும் விரும்பிய கடவுள் ‘கண்ணன்’
கண்ணதாசன் மிக நெருங்கிப்பழகிய அரசியல்வாதி, இலக்கியவாதி.. கலைஞர் கருணாநிதி!
கண்ணதாசன் அவர்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் கர்மவீரர் காமராஜர்!
கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசிப் பாடல்.. கண்ணே கலைமானே!!

ஒரு சகாப்தம் நிறைவு பெறுகிற நிலையில் ..
மூன்றாம் பிறையில் விளைந்த முத்தான பாட்டல்லவா?
இது தாலாட்டா?
கனிவான காதலா?
பேதமையின் தவிப்பா,
மென்மையின் மேலாண்மையா?
அன்பின் ஆர்ப்பரிப்பா?
அரவணைப்பின் பரிணாமமா?
கண்ணிலிருந்து விழும் நீர்த்துளியின் காதலின் அடர்த்தியா?
இல்லை.. இல்லை…கவியரசர் தனது கோடிக்கணக்கான
ரசிகர்களுக்கு எழுதி வைத்துச்சென்ற ரகசியக் குறிப்பா?
சொல்லாமல் சொல்லிச் சென்ற குறிப்பேடா?
காலதேவனின் அழைப்பிற்கு கவிஞர் எழுதிய மடலா?
கண்ணதாசன் – இளையராஜா – பாலுமகேந்திரா – யேசுதாஸ்
கூடி எழுதிய தேவ கானமா?
கமலஹாசன் – ஸ்ரீதேவி – நடித்துத் தந்த காவியமா?

பொதுவாக மூன்றாம் பிறைக்குப் பின்னர் முழுநிலா தோன்றும் என்பார்கள்.. எங்கள் கண்ணதாசனே! மூன்றாம் பிறையோடு முடிவுரை எழுதிவிட்டாயே!!

ஆண் : கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிராரஓ..ராரிரோ..
ராரிராரோ..ஓ..ராரிரோ..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே

ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிராரோ..ஓ..ராரிரோ..
ராரிராரோ..ஓ..ராரிரோ..
ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரிராரோ..ஓ..ராரிரோ..
ராரிராரோ..ஓ..ராரிரோ..
http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM
http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.