பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் – கவியரசு கண்ணதாசன்!

3

கவிஞர் காவிரி மைந்தன்

மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

 

தென்றல் என்கிற சொல்கூட மென்மையானதுதான். தென்கோடி தென்றல் தரும் ராகங்களே என்று கிருஷ்ணகானத்தில் கண்ணதாசன் அழைக்கிறார்! திசைகள் எட்டு இருந்தாலும் தெற்கிற்கென பெருமைகள் அதிகம்தான்! வாடைக்காற்று என்று வடக்குப் பக்கமிருந்து வரும் காற்றை அழைப்பதுண்டு! ஆனால் வர வேண்டும் என நினைப்பது தெற்கிலிருந்து வருகின்ற தென்றல் ஒன்றைத்தான்! வருடவரும் அந்தக் காற்று வரவேண்டும் என நெஞ்சம் வரவேற்புக் கொடுப்பது தென்றலுக்கு மட்டும்தான்!!

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்று கூட ஒரு பல்லவி தந்தார் கண்ணதாசன்!

காலகாலமாகக் கவிஞர்களின் பாடுபொருளாய்.. நிலா, தென்றல் என விட்டுவிட இயலாத சொல்லாய், காற்றாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது! காற்றினிலே அவள் தென்றல் என்று இன்னும் காலங்களில் அவள் வசந்தம் பாடலில் அணி சேர்க்கிறார்! நீக்கமற நிறைந்திருக்கம் இத் தென்றலைப்பற்றி – பிரத்யேகமாக ஒரு காதல் பாடலில்.. அதுவும் தலைவியுடன் தலைவன் தனிமையிலிருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த தென்றல் பற்றி.. லாவகமான கவிதை யுக்தி ..கண்ணதாசனுக்கே கைவந்த கலை

!

விழிகள் தழுவிக்கொள்ளும் வேளையில், இருவருக்கும் இடையில் விளையாட வருகிறதாம் இந்த சாசகசத் தென்றல்! கற்பனையால் இப்படி கவிதை படைக்க முடியும் எனும்போது – அதைத் திரையிசையமைத்து இன்னும் கெளரவப்படுத்த தன்னால் முடியும் என்று நிருபித்திருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. குரல் தந்திருக்கிறார்கள் பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலா.

தென்றல்வரும் வீதியெல்லாம் செந்தமிழர் மாண்பையெல்லாம் காட்டுகின்றார் கவியரசர். நாதஸ்வர ஓசையுடன் இணைந்த இசையில் தொடங்கும் பாடலிது! மங்கல நாதம் பொங்கிடும்போது.. இன்பத்திற்கு இங்கு எல்லைகள் ஏது? இழைந்தோடும் குரல்களில் இந்தத் தென்றல் பிறந்த இடம் முதல் புகுந்த இடம் என.. தன் வரலாறு சொல்கிறது கேளுங்கள்

!

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் – எஸ். ஜானகி
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
திரைப்படம்: திருவிளையாடல்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் – வண்ண
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் – அது
வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

Podhigai Malai Uchiyile – Thiruvilayadal – Muthuraman & Devika

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் – கவியரசு கண்ணதாசன்!

  1. பாட்டில் மேலும் இரண்டு சரணங்கள் உள்ளனவே, விட்டு விட்டீர்களே சார்.

  2. Sir, Pl. correct the line….
    தான் பறந்து ஆட்சி *செய்யும்* தளிர்மணித் தென்றல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *