சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் – கவியரசு கண்ணதாசன்

0

சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்

1967ல் வெளியான தங்கை திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் பி.சுசீலாவின் சுகமான பாடலிது!

புன்னகைஅரசி கே.ஆர்.விஜயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் இயக்கம் தந்திருக்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்.

இந்தப் பாடல் இடம்பெறும் இடத்தில் ஒரு இறுக்கம். அந்த இடத்தில் எப்படி இப்படி ஒரு பாடல் என்று எண்ணாதோர் இருக்க முடியாது!

நாயகன் தவறான வழியில் செல்ல.. அதை தடுக்கிற நாயகியின்மீது கோபத்தின் கணைவீசி சொற்களை அள்ளிவீச.. அங்கே இருவருக்கும் இடையில் அனல் பறக்கிறது.

மெல்லிசை மெதுவாக குரல் தருகிறது.. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் .. கனிவான பெண்ணால் எந்தச் சூழ்நிலையையும் வென்றெடுக்க முடியும் என்று காட்டியிருக்கும் காட்சியிது!

நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

பாடலின் பக்கபலம் இசை.. அதை நம்மிடம் சேர்க்கும் பொறுப்பில் குரல்.. திரையில் இடம்பெறும் பாத்திரங்கள் நம் மனதில் இடம்பெறுவதில் வியப்பில்லையே!

உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
பூவாகிக் காயாகி கனியானது
நீயாகி நானாகி நாமானது

உணர்வுபூர்வமான கதையமைப்பில் உள்ளம்தொடும் பாடலுக்கு வழியுண்டு என்பதை நிரூபிக்கும் பாடல்! வரிகளில் உள்ள சுகம் நாயகனை தன்வழிப்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு நாயகி பாடும் பாவமென்ன? நளினமென்ன? சுகமான குரல் என்றால் சுசீலாவின் குரல் என்று சும்மாவா சொன்னார்கள்?

சுகம் சுகம்
சுகம் சுகம்
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது

நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது

உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
பூவாகிக் காயாகி கனியானது
நீயாகி நானாகி நாமானது

சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

திரைப் படம்: தங்கை (1967)
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: A C திருலோகசந்தர்

http://www.divshare.com/download/16924027-d85

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *